WRITTEN BY S NAGARAJAN
Post No. 16,037
Date uploaded in London – 31 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
சேர்ந்து ஒரே எண்ணம் கொண்டு உயர்வோம்!
ச. நாகராஜன்
விதி உதவாத நேரம்!
சம்பதா சுஸ்திரம் மன்யோ பவதி ஸ்வல்பயாபி ய: | க்ருதக்ருத்யோ விதிர்மன்யே ந வர்தயதி தஸ்ய தாம் ||
எவன் ஒருவன் தனது குறைவான செல்வத்தைக் கொண்டு திருப்தி அடைகிறானோ, அவனுக்கு விதி அவனது செல்வத்தை அதிகரிக்காது, ஏனெனில் அவனே திருப்தியுடன் இருப்பதால்!
செல்வம் வரும், போகும்!
கோபவாத: ஸ்துதிபதே யத்ஷீலேஷு சஞ்சலா: | சாதுவ்ருத்தானபி க்ஷூத்ரா விக்ஷிபந்த்யேவ சம்பத: ||
செல்வவளமானது சஞ்சலமானது என்பதால் கெட்டவரிடமும் பிரபுக்களிடமும் அது அவர்களைக் கைவிட்டுவிடும். ஆகவே அதைப் புகழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை.
சேர்ந்து ஒரே எண்ணம் கொண்டு உயர்வோம்!
சமானி வ ஆக்ருதி: சமானா ஹ்ருதயானி வ: | சமானமஸ்து வோ மனோ யதா வ: சுசஹாசதி ||
நம் இருவருக்கும் ஒரே விதமான உணர்ச்சிகள் உள்ளன; நாம் ஒரே சிந்தனையைப் பகிர்ந்து கொள்கிறோம். ஆகவே சேர்ந்து வளமாக இருப்பதற்கு நாம் ஒரே மாதிரியாக எண்ணுவோம்.
ஒரு சகாவுக்கே பழக்க வழக்கம் நன்கு தெரியும்!
சஹவாசி விஞ்ஞானாதி சஹவாசிவிசோஷ்டிதம் | பக: கோ வண்யர்ஸே ராம யேனாஹம் நிஷ்குலீக்ருத: ||
சேர்ந்து வாழும் ஒருவருக்கு சகாவின் பழக்கவழக்கம் தெரியும். ஓ, ராமா! எனது குடும்பத்தை அழித்த கொக்கை நீ புகழ்கிறாய்.
முழுவதையும் இழப்பதை விட பாதியை இழப்பதே மேல்!
சர்வநாசே சமுத்பன்னே ஹார்தம் த்யஜதி பண்டித: || அர்தேன குருதே கார்ய சர்வநாஷோ ஹி து:சஹ: ||
எல்லாவற்றையும் இழக்க வேண்டிய நிலையில் புத்திசாலியான ஒருவன் பாதியை இழக்கவே முன்னுரிமை அளிப்பான். அவன் மீதி பாதியை வைத்து தனது இலக்குகளை அடைவான், ஏனெனில் முழுவதும் நஷ்டமாவதானது பொறுக்கவே முடியாது.
நண்பனின் உதவியே காரியத்தை முடிக்க உதவும்!
சப்ரதிபந்தம் கார்யம் ப்ரபுரதிகந்து: சஹாயவானேவ | த்ருஷ்யம் தமஸி ந பஷ்யதி தீபேன வினா சச்க்ஷுரபி ||
ஒரு எஜமானனானவன் முட்டுக்கட்டைகள் அவனை குழப்பமடையச் செய்யும் போது ஒரு நண்பனின் உதவியைக் கொண்டு அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வான். கண்கள் இருந்தாலும் கூட ஒரு விளக்கின் உதவியுடன் தான் அனைத்தையும் பார்க்க முடியும்.
**