HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91 (Post.16,044)

Written by London Swaminathan

Post No. 16,044

Date uploaded in London – 2 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

91HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 91; இந்து மத கலைச்சொல் அகராதி-91

English version was posted yesterday. Here is the Tamil version.

சகுந்தலா

சகுந்தலா என்றால் பறவைப் பெண் என்று பொருள்; அதாவது கானகத்தில் பறவைகளால் வளர்க்கப்பட்டாள். இதிலிருந்துதான் நாம் பயன்படுத்தும் சகுனம் என்ற சொல் பிறந்தது. விஸ்வமித்திரனுக்கும் தேவ லோக அழகி மேனகாவுக்கும் பிறந்த பெண் குழந்தையை அவர்கள் காட்டில் விட்டுச் செல்லவே, கண்வர் என்ற முனிவர் அவளை வளர்த்து வந்தார். ஒரு நாள் துஷ்யந்தன் என்ற மன்னன் அவளைக் கண்டு கானகத்தில் அவளை கந்தர்வ முறையில் மணந்து கொண்டு நாட்டுக்குப்  போய்விட்டான் அவள் கர்ப்பமுற்று உலகத்தையே ஆண்டு இந்தியாவுக்குப் பாரதம் என்ற பெயரைத் தந்த பரதனைப் பெற்றுக்கொடுத்தாள்; அவளது முழுக் கதையை சாகுந்தலம் நாடகத்தில் காணலாம் 

சாகுந்தலம்

உலகப்புகழ்பெற்ற ஸம்ஸ்க்குக நாடகத்தை அபிக்ஞான சாகுந்தலம் என்ற பெயரில் காளிதாசன் எழுதி உலகையே வியக்க வைத்தான்;  இதை சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் ஜோன்ஸ், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதால் ஐரோப்பா முழுதும் பாரதத்தின் பெருமை பரவியது; சாகுந்தல நாடக சகுந்தலாவைக் காப்பி அடித்து ஷேக்ஸ்பியர் டெம்பஸ்ட் என்னும் நாடகத்தில்  மிராண்டா என்ற கானகப் பெண்ணை உண்டாக்கினார். கானகத்தில் சகுந்தலாவை கர்ப்பவதியாக்கிவிட்டு நாட்டுக்குத் திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விடுகிறான்; கண்வ முனிவர் சீடர்கள் புடை சூழ, அவளை அனுப்பிவைத்தபோது, அவளை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகிறான் துஷ்யந்தன்; அவன் கொடுத்த மோதிரமும் ஒரு அசரீரியும் அவளை உண்மைபெண் என்று காட்டியவுடன் ஏற்கிறான் என்பது சாகுந்தல நாடகத்தின் கதை ; இதில் பறவைகள் , மான்களுடன் அவள் வாழ்ந்த அப்பாவிப் பெண் வாழ்க்கையும் குடும்பப்பெண் எப்படி நடக்க வேண்டும் என்ற கண்வ மஹரிஷியின் வசனமும், ஆஸ்ரம அழகும் அக்கால பாரதத்தின் அழகினை வருணிக்கிறது ; ஐரோப்பாவின் அறிஞர்கள், கவிஞர்கள் அனைவரும் காளிதாசனுக்குப் புகழாரம் சூட்டியதோடு சம்ஸ்க்ருத மொழியையும் பயிலத் துவங்கினார்கள்.  

சால்மலி த்வீபம்

புராணத்தில் பூமியை அல்லது அவர்கள் அறிந்த நிலப்பரப்பினை ஏழு தீவுகளாக , அதாவது கடல் சூழ்ந்த பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் அங்குள்ள தாவரம் அல்லது பறவையின் பெயரைச் சூட்டினார்கள்; அதில் ஒன்று சால்மலி த்வீபம் .சால்மலி என்றால் இலவம் பஞ்சு மரம்; அது பல நாடுகளில் காணப்படுவதால் இந்த இடத்தைக் கண்டு பிடிப்பதில் குழப்பம் நிலவுகிறது; இதைச் சுற்றி கரும்புக் கடல் உள்ளதாகவும் புராணங்கள் செப்புகின்றன ; சிலர் இதை ஆஸ்திரேலிய பகுதி என்றும் வேறு சிலர் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதி என்றும் எழுதியுள்ளார்கள் .

எனது கருத்து

புராணத்திலுள்ள இடங்கள் பெரும்பாலும் ஆசிய கண்டத்தையே குறிக்கிறது; ஒருவேளை ஆப்பிரிக்காவின்  கிழக்குப்பகுதியும் அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம் ; அமெரிக்கா , ஆஸ்திரேலியா போன்றவைகளை அவர்கள் பாதாள லோகங்களில் சேர்த்துவிட்டனர்; ஆகவே இவைகளைக் கண்டுபிடிப்பதில் நேரத்தைச் செலவழிப்பதை விட அவர்கள் ஏன் இப்படிப்பிரித்தார்கள் என்று ஆராய்வது நல்லது ; புராண பூகோளம் என்று ஆங்கிலத்தில் புஸ்தகங்களை எழுதியோரிடையேயும் ஒருமித்த கருத்து இல்லை ; சம்ஸ்க்ருத புராணங்களிடையேயும் ஒரே கருத்து இல்லை .

சாலாதூரா

உலகப்புகழ் பெற்ற, உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதி , உலகையே வியப்பில் ஆழ்த்திய சம்ஸ்க்ருத இலக்கண வித்தகன் பாணினிபிறந்த ஊர் இது இப்போது பாகிஸ்தானில் லாகூர் நகருக்கு அருகில் உள்ளது . பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னால் நூலை எழுதினார் ; அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் வந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்ரீகனும் பாணிணிக்கு சாலாதூரா நகரில் ஒரு சிலை நிறுவப்பட்டிருந்ததைக் குறிப்பிடுகிறான்

Xuanzang’s Record: Writing in CE 646, Xuanzang recorded visiting the town (calling it Suoluoduluo), noted that it was the birthplace of Pāṇini (the author of the Vyākaraṇa or Qingming-lun), and stated that a commemorative statue of Pāṇini still existed there during his visit.

***

சாம வேதம்

நான்கு வேதங்களில் சாம வேதம் மூன்றாவதாக வைக்கப்பட்டுள்ளது. ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் என்பதை நான்மறை என்று சங்கப்புலவர்களும் போற்றியுள்ளனர் . பாரத நாட்டில் இசையை தோற்றத்தை மெய்ப்பிக்கும் நூல் இது; இதை இசையின் ஓதுவார்கள் வேத பண்டிதர்கள்; இதை அப்படியே காப்பி அடித்து புத்த பிட்சுக்களும் பாலி மொழி கிரந்தங்களை ஓதி வருகின்றனர்  ஒவ்வொரு யாக யக்ஞத்திலும் வேத பாண்டிதர்கள் சாமத்தை இசைப்பார்கள்; அந்த அளவுக்கு இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் இந்துக்கள்த்திலுள்ள மந்திரங்கள் முக்கால் வாசி ரிக்வேத மந்திரங்களே நூற்றுக்கும் குறைவான மந்திரங்களே புதியவை; ஆகையால் ரிக்வேத காலத்தையே இதற்கும் சூட்ட வேண்டும்; அதாவது 3500 முதல் 6000 ஆண்டு வரை பழமையானவை

ரிக் வேதத்தின் எட்டாவது ஒன்பதாவது மண்டல பாக்கள் இதில் இடம்பெறுகின்றன

மொத்தமுள்ள துதிகள் -1,771.

சாம வேதத்தில் பாரம்பரியமாக 1,000 சாகைகள் (கிளைகள்) இருந்ததாகக் கூறப்பட்டாலும், தற்போது கிடைத்து, புழக்கத்தில் உள்ள முக்கிய சாகைகள் மூன்று மட்டுமே ஆகும். அவையாவன: கௌதம சாகை, ரணாயனிய சாகை, ஜைமினி சாகை (தலவகார சாகை)

ஒவ்வொரு வேதத்திலும் சாகைகள் என்ற கிளைகள் உண்டு; அதாவது அந்தந்த ஆசிரியரின் பாணி அல்லது ஸ்டைல் அல்லது உத்தி என்று சொல்லலாம் அவ்வகையில் குஜராத்தில் கெளதும சாகாவும் மகாராஷ்டிரத்தில் ராணாயணீய சாகாவும் தமிழ்நாட்டில் ஜைமினீய சாகாவும் பயிலப்படுகின்றன 

Regional Schools (Sakhas): Preserved through oral traditions across different parts of India, notably the Kauthuma tradition in Gujarat, Ranayaniya in Maharashtra, and Jaiminiya in Southern India.

சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம்  ஆகிய இரண்டும் இந்த  வேதத்தைச் சேர்ந்தவை

***.

ஷம்பு

Śaṃbhu (शंभु).—a. சிவபெருமானின் பெயர்களில் ஓன்று; இன்பத்தை மகிழ்ச்சியை அளிப்பவர் என்பது பொருள்; சம்போ சங்கரா என்ற கோஷங்களை பஜனைகளில் கேட்கலாம் 

***

சமிதி – கமிட்டி

ரிக் வேதத்தில் காணப்படும் இந்தக்குழு அமைப்பினை நம் இப்போதும் கமிட்டி என்று சொல்லி வருகிறோம்; உண்மையான உச்சரிப்பு சமிதி; அதை ஆங்கிலத்தில் க உச்சரிப்புடன் சொல்லி வருகிறவம்; ரிக் வேதத்தில் சபா (அவை) சமிதி என்ற இரண்டு அமைப்புகளையும் பயன்படுத்தினர் 

இரண்டு குழுக்களிலும் உள்ள உறுப்பினர்கள் வேறுபட்டனர் . தமிழில் எண்பேராயம் ஐம்பெருங்குழு என்று இருந்ததைப் போல.

***

சாமுத்திரிகா லக்ஷணம்

உடலின் உறுப்புகள் எப்படி அமைந்துள்ளன என்பதைக்கொண்டு அவர்களின் குண நலன்களை, ஆரோக்கியம் , திறமை ஆகியவற்றைக் குறிக்கும் இந்துமத சாஸ்திரம் சாமுத்ரிகா லக்ஷணம்  என்று அழைக்கப்படுகிறது. தாமரை இதழ் போன்ற கண்கள், மீன் போன்ற கண்கள் , தாள் தோய் தடக்கை (ஆஜானுபாஹு) என்றெல்லாம் இலக்கியங்களில் காணலாம். ஆயினும் இவைகளின் பலன்களை சாமுத்ரிகா லட்சண நூல்களில் மட்டுமே காண முடியும் ; ஆளைப்பார்த்தால் ராஜா போல இருப்பான் என்று நாம் சொல்லும்போது நம் உள்ளத்தில் ராஜ களை என்பது ஊன்றியிருப்பது தெரிகிறது ; இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி நூல்கள் உண்டு ;பத்மினி வகைப் பெண்களுக்கு உடலில் இயற்கை மணம் உண்டு என்ற திருவிளையாடல் புராண வசனம் போன்றவை சாமுத்ரிகா லட்சணத்தின் ஒரு பகுதியே  

அகத்தியர் பெயரிலும் ரதி ரஹஸ்யம் என்ற பெயரிலும் நூல்கள் இருக்கின்றன ; உலகத்தில் பெண்கள் படிப்பதற்கு முதல் முதலில் சிலபஸ் போட்டவர்கள் இந்துக்களே ; அவள் கற்க வேண்டிய 64 கலைகளை வாத்ஸ்யாயன மகரிஷி காம சூத்திரம் என்னும் சம்ஸ்க்ருத நூலில் பட்டியலிட்டுள்ளார் அதில் ஒரு கலை- சாமுத்ரிகா லக்ஷணம் ஆகும் .

***

சந்தனம்

சந்தன மரம்—( Santalum album)—இந்த மரத்தின் எல்லா பகுதிகளும் மனம் நிறைந்தவை; இதன் எண்ணெய் , பொடி,  அரைத்த விழுது ஆகிய அனைத்தும் இறைவன் பூஜைகளில், அபிஷேகத்தில், குளிர்ச்சி தருவதற்காக மனித உடலில் பூசுவது வளாகம்; ஆயுர்வேத சிகிச்சைகளிலும் பயன்படும்; இறைவன் சிலைகளில் சந்தன விழுதை அப்பி பூஜை செய்வார்கள் மணம் தரும் இந்த மரக்கட்டைகள் தென்னிந்தியாவில் அதிகம் கிடைக்கிறது

***

சந்தான லட்சுமி

சந்தானம் என்றால் புத்திரப் பேறு ; அஷ்ட லட்சுமி என்னும் எட்டு லக்ஷ்மிக்களில் ஒருவர் சந்தான லக்ஷ்மி; அஷ்ட ஐசுவர்யங்களையும் வேண்டும்   துதிகளில் இவள் பெயரும் இடம்பெறுகிறது .

அஷ்ட லக்ஷ்மிக்களும் என்ன என்ன தருவார்கள் என்பது அவர்களுடைய பெயர்களிலேயே உள்ளது

•  ஆதி லக்ஷ்மி: ஆன்மீக செல்வம்; எதிலும் முன்னேற்றம்;

•  தன லக்ஷ்மி: செல்வம்; நீங்காத சம்பத்து;

•  தான்ய லக்ஷ்மி: அளவற்ற தானியம், உணவு, அமோக விளைச்சல்;

•  கஜ லக்ஷ்மி: ராஜ போகம் , அந்தஸ்து ;

•  சந்தான லக்ஷ்மி: குழந்தை பாக்கியம்;

•  தைர்ய லக்ஷ்மி (வீர லக்ஷ்மி): வீரம், பலம், துணிவு,

•  விஜய லக்ஷ்மி: வெற்றி;

•  வித்யா லக்ஷ்மி: கல்வி, அறிவு, புத்தி;

………

Tags- சந்தான லக்ஷ்மி, சகுந்தலா, பகுதி 91, Hindu Dictionary, அஷ்ட லக்ஷ்மி.

Leave a comment

Leave a comment