

Written by London Swaminathan
Post No. 16,102
Date uploaded in London – 18 August 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx

1
மலைபடு கடாம் நூல் எந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது? அதை எழுதியவர் யார்?
2
இப்படி தடா புடா கடா முடா என்று பல்லை உடைக்கும் தலைப்பைக் கொடுத்து இருக்கிறாரே ! அதன் பொருள்தான் என்ன ?
3
இவர் யாரை வைத்து இந்த நூலினை இயற்றினார் ? அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ?
4
இந்த நூலுக்கு வேறு பெயரும் உண்டாமே! அது என்ன ?
5
இந்த நூலின் ஆசிரியரை உலகப்புகழ்பெற்ற ஒரு கவிஞருடன் ஒப்பிடுகிறார்கள்.ஏன் ?
6
இவர் நூலில் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்பது கூத்தர் ஆற்றுப்படை என்பதிலிருந்து புலனாகிறது ; அதற்கு ஆதாரம்/ சான்று என்ன ?
7
“காரியுண்டிக்கடவுள்” என்று புலவர் பாடியுள்ளார் ; யார் அது ? அப்படி ஒரு கோவில் உள்ளதா ?
8
மலைகளில் எழும் ஓசையை இவர் 40 வரிகளில் கொட்டி முழக்கியுள்ளாராமே! கொஞ்சம் சாம்பிள் கிடைக்குமா?
9
கார்த்திகை நட்சத்திரம் பற்றியும், பெண்களின் தழை உடை, நகை நட்டுகள் குறித்தும் பாடிய புலவர் குழந்தை பிறந்தால் பெண்கள் வளையல் அணிய மாட்டார்கள் என்கிறாரே ! இது என்ன புது வழக்கம் ?
10
புலவர் சரியான பத்தாம் பசலி ஆள். ஏனெனில் ஆடல்- பாடல் மாக்களிடம் சகுனம் பாத்துப் புறப்படு என்கிறார் வேறு என்ன பொன்மொழிகளை உதிர்க்கிறார் ?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


விடைகள்
1.சங்க இலக்கியத்தில் 18 மேல் கணக்கு நூல்கள் உண்டு; அதாவது பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும் 10+8= 18 ; அந்த 18 ல் பத்துப்பாட்டில் ஒரு நூல் மலைபடு கடாம். இதை எழுதியவர் ஒரு பிராமணர் ; அந்தப் பார்ப்பானின் பெயர் இரணியமுட்டத்துப் பெருங் கெளசிகனார் . அந்த அந்தணன் கெளசிக கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
***
2.மலைகளிலிருந்து ஒழுகும் ஓசை; அதாவது மலை என்பது யானைக்கு உவமை; ஆகவே யானையிலிருந்து ஒழுகும் மதம்.
***
3.நன்னன் என்ற மன்னனைப் பாராட்டி இந்த நூலினை யாத்தார் ; ஆவர் ஆண்டது திருவண்ணாமலைக்கு அப்பாலுள்ள நவிர மலைப்பகுதி. சேயாறு பாயும் ஊர் நன்னன் நகர்.
***
4.ஆமாம் கூத்தர் ஆற்றுப்படை என்றும் பெயர் ; ஏனெனில் கூத்தர் என்னும் நாடக / ஆடல் மக்களை மன்னனிடம் போய் பரிசுபெறுங்கள் என்று வழிப்படுத்தலால் — ஆற்றுப்படுத்துவதால் — கூத்தர் ஆற்றுப்படை என்றும் சொல்லுவார்கள்.
***
5.ஆங்கிலத்தில் ஏராளமான இயற்ககைக் கவிதைகளை யாத்த புலவன் WILLIAM WORDSWORTH வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் . அவரைப்போல பெருங் கெளசிகனாரும் இயற்கையைப் பாடியுள்ளார் . ஆகவே இவரை தமிழ் வோர்ட்ஸ்வொர்த் என்பார்கள் பாடலில் மொத்த வரிகள் 583. அதில் 400 வரிகள் இயற்கையைப் பற்றியது .
***
6.பாடலின்/ நூலின் முதல் 10, 15 வரிகளில் இசைக்கருவிகளின் பெயரை அடுக்கி , நூலினைத் துவக்குகிறார். கூத்தர் பலவகை இசைக்கருவிகளைப் பையில் போட்டுக் கொண்டு போகிறார்கள்
திருமழை தலைஇய இருள் நிற விசும்பின்
விண் அதிர் இமிழிசை கடுப்ப பண் அமைத்துத்,
திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு, 5
கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை,
கடி கவர்பு ஒலிக்கும் வல்வாய் எல்லரி, 10
நொடிதரு பாணிய பதலையும் பிறவும்,
கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப,
நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர்; (1 – 13)—மலைபடுகடாம்
(பிறவும் = பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திர வளையம், மொந்தை, முரசு, கண் விடு தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப் பறை, துடி, பெரும்பறை, கிணைப் பறை)
**
பேரியாழின் இயல்பு
தொடித் திரிவு அன்ன தொண்டுபடு திவவின்,
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்,
குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின்,
அரலை தீர உரீஇ வரகின்
குரல் வார்ந்தன்ன நுண் துளை இரீஇ, 25
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி,
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப்,
புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப்,
புதுவது போர்த்த பொன் போல் பச்சை
***
7.விஷத்தை உண்டவன் என்ற பொருள்படும்படி சிவபெருமானை காரி உண்டிக்கடவுள் என்று பாடிப் பரவியுள்ளார். இப்போதும் காலகண்டீஸ்வரர் கோவில் உள்ளது .தமிழகத்தில் அடையபுலம் காலகண்டீஸ்வரர் கோயில் (திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகில்) மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் நாவலூர் உள்ளிட்ட சில இடங்களில் காலகண்டீஸ்வரர் (சிவன்) கோயில்கள் உள்ளன. இவர் பாடியது திருவண்ணாமலை மாவட்ட கோவிலாக இருக்கலாம்
நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேர் இசை நவிரம் மேஎய் உறையும்
காரி உண்டிக் கடவுளது இயற்கையும்,
பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும்
ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும்,
***
8. மலையில் தோன்றும் பலவித ஒலிகளைக் கேட்டல்
கலை தொடு பெரும்பழம் புண் கூர்ந்து ஊறலின்
மலை முழுதும் கமழும் மாதிரம் தோறும்
அருவி நுகரும் வான் அர மகளிர்,
வருவிசை தவிராது வாங்குபு குடைதொறும் 295
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை;
இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர்
புலம் புக்கு உண்ணும் புரிவளைப் பூசல்;
சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின் 300
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை;
கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தற் கொடிச்சியர் பாடல்;
தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை 305
மலைமார் இடூஉம் ஏமப் பூசல்;
கன்று அரைப்பட்ட கயந்தலை மடப்பிடி
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்,
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென கிளையொடு,
நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல், 310
கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி
அருவிடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை உற்ற களையாப் பூசல்;
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை 315
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அருங் குறும்பு எறிந்த கானவர் உவகை;
திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என,
நறவு நாட் செய்த குறவர் தம் பெண்டிரொடு, 320
மான்தோற் சிறு பறை கறங்கக் கல்லென,
வான் தோய் மீமிசை அயரும் குரவை;
நல் எழில் நெடுந்தேர் இயவு வந்தன்ன
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை;
நெடுஞ்சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து, 325
உரவுச் சினம் தணித்துப் பெரு வெளிற் பிணிமார்
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை;
ஒலி கழைத் தட்டை புடையுநர் புனந்தொறும்
கிளி கடி மகளிர் விளிபடு பூசல்;
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு 330
மலைத் தலைவந்த மரையான் கதழ் விடை,
மாறா மைந்தின் ஊறுபடத் தாக்கி,
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப,
வள் இதழ்க் குளவியும் குறிஞ்சியும் குழைய,
நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை; 335
காந்தட் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி,
வண் கோட் பலவின் சுளை விளை தீம் பழம்
உண்டுபடு மிச்சில் காழ் பயன் கொண்மார்,
கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை
மழை கண்டன்ன ஆலைதொறும் ஞெரேரெனக் 340
கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும்,
தினைகுறு மகளிர் இசைபடு வள்ளையும்,
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர்
பன்றிப் பறையும், குன்றகச் சிலம்பும்,
என்று இவ் அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி, 345
அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன்
அலகைத் தவிர்த்த எண் அருந் திறத்த
மலைபடு கடாஅம் மாதிரத்து இயம்பக், (292 – 348)
Various Sounds Heard in the Mountains
Male monkeys dig out jackfruits and their oozing
juice sprays in the wind, spreading fragrances in
all directions.
There are sweet sounds from waterfalls, that rise
when celestial women catch the rapidly flowing
water in their hands and play in the waterfalls,
sounding like those produced by your musical
instruments.
There are sounds of forest dwellers sitting on high
platforms chasing a stray bull elephant with raised
tusks, that has strayed from his herd and entered
their millet field, and laments of those from whom
a porcupine with sharp quills, that resides in a cave,
escaped.
A mountain woman with wavy hair sings songs,
believing that it will heal the deep chest wounds
of her husband who was attacked by a tiger with curved
stripes. Women who want to wear fresh vēngai flowers
shout ‘tiger’ ‘tiger’ without fear.
In the tall mountains, the painful roaring trumpets of a
naive, tender-headed pregnant cow elephant and her herd
are heard, since she was attacked by a tiger when her strong
mate went to get her food. An uproar was caused by a
black-fingered female monkey and her troop who feed on
sprouts, when her untrained young child fell off the
mountains since she did not hold it tight.
In the tall mountains, the painful roaring trumpets of a
naive, tender-headed pregnant cow elephant and her herd
are heard, since she was attacked by a bright-colored, mighty
tiger when her strong mate went to get her food. An uproar
was caused by a black-fingered female monkey and her troop
who feed on sprouts, when her untrained young child fell
off the mountains since she did not hold it tight.
Climbing on bamboo ladders on the tall mountains where
even male monkeys are unable to climb, forest dwellers
gather honey collected by bees from huge honeycombs,
and celebrate happily since they have destroyed forts
of their enemies, and that the loot got will serve as
gifts to Nannan with perfect spears. The men drink
liquor and celebrate with kuravai dances in the sky-high
mountain, with their women, to the accompaniment of
small, loud deer hide parai drums.
There are roaring sounds produced by rivers with rocks
as they enter rocky crannies,
appearing like beautiful chariots riding in a row.
There are clamors of elephant trainers who speak mixing
languages, who bind their fierce elephants to tall posts,
reducing their great rage, after saving them when they fell
into huge whirlpools, and there are the sounds of bamboo
gadgets used by women to chase parrots from millet fields.
A bull with a moving hump, that strayed from its herd and a
marai stag that came from the mountains, fine males, fought
with each other with strength without backing down, causing
wounds to each other,
and ruining thick-petaled kulavi flowers and kurinji plants,
and cattle herders and mountain dwellers raised uproars.
There are noises made by children who thresh the
seeds of sweet, mature jackfruits that grow in clusters,
dropped on the ground by many who ate the fruits, using
calves that they control with ladle-like clusters of fragrant
kānthal flowers.
There are loud noises of machines which crush sugarcane
rapidly in factories, where crushed juice pours like pouring
rain.
Vallai songs are sung by women pounding millet grains.
There are roars of parai drums beat by those who grow
turmeric and chēmpu yam, beaten to chase marauding pigs.
All these and other sounds, countless in numbers, are
heard in the canyons and mountain peaks in all directions.
The sounds join together and ooze from the mountain like
musth flowing from a bull elephant.
(Vaidehi Herbrrt’s translation is given;thanks)
***
9.உண்மைதான். குழந்தைக்குப் பாலூட்டும்போது வளையல் சத்தம் கேட்டல் அது பால் குடிப்பதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கும்; மேலும் வளையல்களில் துருசு, தும்பு, பாக்டீரியா, வைரஸ் ஒட்டியிருந்தால் ரெசிஸ்டன்ஸ் பவர் குறைவாக உள்ள குழந்தைகளுக்குத் தொற்று நோய் வரக்கூடும். மேலும் அந்த காலத்தில் மலைவாழ் மக்கள் அணி ந்தது கண்ணாடி அல்லது சங்கு வளையலாக இருக்கலாம் அவை உடைந்தாலோ குழந்தைகள் அதைக் கடித்தாலோ ஹெல்த் ரிஸ்க் அதிகம் ; இன்ன பல காரணங்களால் புலவர் புதுமைச் செய்தியை மொழிகிறார் .
புள் கை போகிய (253) – நச்சினார்க்கினியர் உரை – பிள்ளையைப் பெற்றால் பெண்கள் வளையல் இடார். ஆதலின் வளை போதற்குப் பிள்ளைகள் காரணமாயினார். பொ. வே. சோமசுந்தரனார் உரை – வளையல் தம் தாயர் கையினின்றும் அகலுதற்கு காரணமான மகார் என்றவாறு.
***
10.
பொன்மொழிகள் , உவமைகள்
ஞமலி நாவின் அன்ன
துளங்கு இயல் மெலிந்த கல்பொரு சீறடிக் நாக்கு (நாயின் போன்ற சிற்றடி)
****
வரையர மகளிர் இருக்கை காணினும், 190
உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர்;
பல நாள் நில்லாது, நிலநாடு படர்மின்(தெய்வீகப் பெண்கள் இருக்கும் மலை )
***
பராவு அரு மரபின் கடவுட் காணின், 230
தொழாநிர் கழியின் அல்லது வறிது (போகும் வழியில் உள்ள கோயிலில் கடவுளைக்கும்பிட்டு விட்டுச் செல்லுங்கள் )
***
கயம் கண்டன்ன அகன் பை அம் கண்
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் 260
துஞ்சு மரங் கடுக்கும் மாசுணம் விலங்கி,
(யானைகளை விழுங்கும் மலைப் பாம்புகள் வழியில் இருக்கும்; பார்த்தால் காய்ந்த மரம் போல இருக்கும்; ஜாக்கிரதை; உஷார்! உஷார் !)
***
பாடு இன் அருவிப் பயங் கெழு மீமிசைக்
காடு காத்து உறையும் கானவர் உளரே;
நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் 280
புனல்படு பூசலின் விரைந்து வல் எய்தி,
(மலை வாழ் மக்கள் உதவுவதற்குத் தயாராக இருப்பார்கள்; ஆற்றில் விழுந்த ஒருவனை நாம் எவ்வளவு விரைவாகக் காப்பாற்றச் செல்வோமோ அந்த வேகத்தில் உதவி செய்வார்கள்!)
***
ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
ஒன்னார்த் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட,
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே;
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத் 390
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனைமின்; (376 – 391)
***
புதியவர்களுக்கு வழி தெரிய, புல்லை முடிந்து
இட்டுச் செல்லுதல்
பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர்
சந்து நீவிப் புல் முடிந்து இடுமின்; (392 – 393)
(கானகத்தில் செல்லுவோர், வழி தவறுவது மிகவும் அதிகம்; ஆகையால் பாதையின் இருபுறங்களிலும் உள்ள செடிகளில் புதர்களில் முடிச்சுப் போடுவார்கள்; இதைப்பார்த்து எல்லோரும் நடப்பார்கள்; அருமையான செலவில்லாத உத்தி).
***
செவ்வீ வேங்கைப் பூவின் அன்ன
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த, 435
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ்
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட,
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய
புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர்;
(போகும் வழியில் உங்களுக்குத் புளியஞ்சாதம் கிடைக்கும்; அதில் நல்ல விதைகள், அவரை முதலியன போட்டு வழங்குவார்கள் ((நாக்கில் உமிழ்நீர் சுரக்கிறது). இதற்கு முன்னர் மாமிச உணவு கிடைப்பது பற்றியும் புலவர் பாடியுள்ளார் )
****
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு, 465
(முள்ளை அகற்றிய மீன்களோடு சோறும் கிடைக்கும்)
***
இழை மருங்கு அறியா நுழை நூற் கலிங்கம்
எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ,
முடுவல் தந்த பைந்நிணத் தடியொடு,
நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது,
தலைநாள் அன்ன புகலொடு வழி சிறந்து, 565
பல நாள் நிற்பினும் பெறுகுவிர்; நில்லாது
செல்வேம் தில்ல எம் தொல் பதிப் பெயர்ந்து என,
மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள்,
தலைவன் தாமரை மலைய விறலியர்
அருமையான மெல்லிய ஆடை ; நல்ல மாமிச உணவு; எல்லாம் கொடுப்பான் நன்னன் ; முதல் நாள் விருந்து போல எத்தனை நாள் தங்க்கி னாலும் கிடைக்கும் . பழைய பழமொழி:
(முதல் நாளில் தலை வாழை இலை விருந்து ;
இரண்டாம் நாள் கையில விருந்து;
மூன்றாம் நாள் தரையில விருந்து– என்பது நன்னனிடம் கிடையாது )
***
உணவு வகைகள் பற்றியும் , இசைக்கருவிகள் வகைகள் பற்றியும் , கானகத்தில் பின்பற்ற வேண்டிய எச்சரிக்கைகள் பர்றியும் அங்கே காணப்படும் விலங்குகள், தாவரங்கள் பற்றியும், வரிக்கு வரி காணலாம் !!
–subham—
Tags- மலைபடு கடாம் , 10 கேள்விகள், இரணியமுட்டத்துப் பெருங் கெளசிகனார், கூத்தராற்றுப்படை ,தமிழ் வோர்ட்ஸ்வொர்த்