நல்ல மனைவி யார்? (Post No.16,175)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,175

Date uploaded in London – 8 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சுபாஷிதச் செல்வம்! 

நல்ல மனைவி யார்? 

ச. நாகராஜன் 

அறிவு, தர்மம். செல்வம் வளரும் விதம்! 

ஜலதிபிந்துநிபாதேன க்ரமஷ: பூர்யதே கட: |                                ஸ ஹேது: சர்வவித்யானாம் தர்மஸ்ய ச தனஸ்ய ச ||

ஒவ்வொரு துளியாக விழும் போது பானை நிரம்பி வழிகிறது. இதே போலத்தான் அறிவும், தர்மமும், செல்வமும் துளித்துளியாக சேர்ந்து வளர்கிறது. 

அறிவாளியின் தொடர்பு மந்தனையும் அறிவாளியாக்கும்!

மந்தோப்யமந்ததாமேதி சம்சர்கேன விபஷ்சித: |                       பங்கச்சித: பலஸ்யேவ நிகஷேணாவிலம் பய: ||

ஒரு அறிவாளியுடன் தொடர்பு கொள்வதால் ஒரு மந்த புத்தி உள்ளவன் கூட கற்றவனாகிறான். சகதி நீரையும் தனது தொடர்பினால் சுத்தமாக்கும் ஒரு நல்ல பழம் போலத் தான் இதுவும்.

 பெரியோரின் தொடர்பு தரும் நன்மைகள்!

நிதானம் சர்வரத்னானாம் ஹேது: கல்யாணசம்பதாம் |                  சர்வஸ்யா உன்னதேர்மூலம் மஹதாம் சங்க: உச்யதே ||

 ரத்னங்களின் அடிப்படை, வளத்திற்கான காரணம், எல்லா முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைவது ஆகியவை எல்லாம் பெரியோருடைய தொடர்பால் வருவதேயாகும்.

தர்மசாரிணி – நல்ல மனைவி – யார்?

 வஷ்யபாவேன சுமனா: சுவ்ரதா சுசமாஹிதா |                        அனன்யசித்தா சுமுகீ பர்த்து: நா தர்மசாரிணி ||

 எந்த அழகிய மனைவி புண்யவதியாகவும் கணவனுக்குக் கட்டுப்பட்டவளாகவும் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் அமைதியான மனதுடனும் இருக்கிறாளோ அவளே நல்ல மனைவி.

லோகாசாரமே முக்கியம்!

 யத்யபி ஸ்யாத்ஸ்வயம் ப்ரஹ்மா த் ரைலோக்யாகர்ஷணக்ஷம: | ததாபி லௌகிகாசாரக் மனஸாபி ந லங்கயேத் ||

மூன்று உலகங்களையும் கவரும் ஆற்றல் கொண்டவனாக இருந்தாலும் கூட ஒருவன் லோக ஆசாரங்களை – உலகின் அன்றாடப் பழக்கவழக்கங்களை மனதால் கூட மீறக்கூடாது.

நல்ல காரியத்திற்காகவே செல்வம் சேர்க்கப்பட வேண்டும்!

 சந்த: குர்வந்தி யத்னேன தர்மஸ்யார்தே தனார்ஜனம் | தர்மாசாரவிஹீனானாம் த்ரவிணம் மலசஞ்சய: ||

 நல்ல காரியங்களுக்காகவே மகான்கள் செல்வத்தைச் சேர்க்கிறார்கள்.  புண்ணிய காரியங்களுக்காக செலவழிக்கப்படாத ஒருவனின் செல்வம் மலக்குவியலுக்குச் சமானமாகும்.

விதியே அனைத்திற்கும் காரணம்!

 குணோபி தோஷமாயாதி வக்ரீபூதே வித்யாதரி |                  சானுகூலே புனஸ்தஸ்மிந்தோஷோபி ச குணாயதே ||

ஒருவனுக்கு விதி எதிராக இருக்குமானால் குணங்களும் கூட தோஷமாகி விடும். விதி அநுகூலமாக இருக்குமானால் தோஷங்களும் கூட நற்குணங்களாகிவிடும். (அதாவது நல்லதைச் செய்யும்.)

**

Leave a comment

Leave a comment