பல்லவர் செப்பேடுகள் பற்றி ஐந்தாவது 10 கேள்விகள் (Post.16,200)

Written by London Swaminathan

Post No. 16,200

Date uploaded in London – 15 September 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கடந்த 4 நாட்களில் 40 கேள்விகளையும், பதில்களையும் கண்டோம் ; இதோ மேலும் பத்து கேள்விகள்

41

பல்லவன்மன்னன் தோற்றவுடன் கம்போடியா நாட்டில் பெண்கள் ஆடிப் பாடியது ஏன் ?

42

சமுத்திர குப்பதன் கைது செய்த பல்லவ மன்னன் யார் ?

43

காளிதாசன் உரகபுரமும் பல்லவர் உரகபுரமும் கூறுவது என்ன ? 

44

பாரத்வாஜ கோத்ர, மதுரைப் பார்ப்பான் , உச்சி மேற் புலபவர் கொள் நச்சினார்க்கினியர் சொல்லும் நாக கன்னிகை – தொண்டைக்கொடி – திரையன்  -இளந்திரையன் கதைக்கு ஆதாரம் உள்ளதா?

45

பிராமணர்கள் ஆராய்ச்சிக்கு பல்லவர்  செப்பேடுகளில் என்ன உள்ளது ?

46

வரலாற்று அறிஞர்கள் ஆராய பல்லவர் செப்பேடுகளில்  இன்னும் என்ன இருக்கிறது ?

47

ஊர்ப்பெயர்களை ஆராய்வோருக்கு பல்லவர்  செப்பேடுகளில் என்ன இருக்கிறது ?

48

கூரம் செப்பேடுகளில் பரமேச்வர வர்மனை எந்த நான்கு புராண இதிஹாச புருஷர்களுடன் ஒப்பிடுகிறார்கள்?

49

குதிரைகள் யானைகள் பெயர் பற்றிக் கிடைக்கும் விநோதத் துகள்கள் என்ன ?

50

பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை எவை ?

.****

விடைகள்

41.க்மேர்

சாளுக்கிய மன்னன் விக்ரமாதித்யன்  பல்லவர்களை வென்று தென் இந்தியா முழுமைக்கும் தனி அரசனாக விளங்கினான். கி.பி. (CE) 692 ஆம் ஆண்டில் சீனாவுக்கும் தூதுவரை அனுப்பினான். அப்போது அவன் தென்னிந்திய ராஜ்யத்தின் அதிபதி என்று குறிக்கப்பெற்றிருக்கிறான் அந்த வெற்றியின் காரணமாக  இந்தோ சீனாவிலுள்ள காம்போஜமும் அவன் ஆளுகைக்குட்பட்டது . பல்லவர்களை வென்று பிறரால் அடக்க முடியாதவர்களை வென்றதால் காம்போஜ நாட்டு பெண்கள் ஆடிப்பாடினர் என்ற செய்தி CE.693 ஆம் ஆண்டு கோலாப்பூர்ச் செப்பேடுகளிலிருந்து தெரிகிறது. ராஜ ராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் கடல்கடந்து அடைந்த வெற்றிகளை இபோதுதான் கொண்டாடுகிறோம்; ஆயினும் அவர்களுக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர்கள் வியட்நாம் முதல் இந்தோனேஷியா வரை சென்ற தகவல்கள் பல்லவர் செப்பேடுகளில் உள்ளன. போர்னியோ தீவின் அடர்ந்த காட்டுக்குள் கிடைத்த மூல வர்மன், பூரண வர்மன்  ஆகியோர் பெயர்கள் , பல்லவர் பெயர்களைப்  போல உள்ளன . இவர்கள் நான்காம் நூற் றாண்டுகளைச் சேர்ந்தவர்கள் ; இரண்டு கேள்விகள் நம் மனதில்  எழும் ; எதற்காக அவன் சீனாவுக்கு தூது அனுப்பினான் ; எதற்காக கமேர (இப்போதும் கம்போடியா மக்கள் தங்களை க்மே ர் இன மக்கள் என்றே சொல்கிறார்கள் ) நாட்டுப் பெண்கள் டான்ஸ் ஆடிக் கொண்டாடினார்கள் என்று.

கம்போடியாவில் சீனர்கள் செல்வாக்கும் இருந்தது. அதுவரை அந்த இடம் பல்லவர்கள் ஆட்சியில் இருந்தது! அவ்வளவு கம்போடிய மன்னர்களும் தன்னை வர்மன் என்றே அழைத்துக் கொண்டனர்; பல்லவர்களும் கம்போடியா மன்னர்களும் மட்டுமே வர்மன் பட்டத்தை கடைசி வரை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டனர் இதற்கெல்லாம் பின்னர்தான் உலகப் புகழ்பெற்ற அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் கட்டப்பட்டது .

அஸ்வத்தாமன் முதல் மஹேந்திர பல்லவன் வரையுள்ள இடைவெளியை  சாளுக்கிய, கங்க, கம்போடிய , இந்தோ னேஷிய மன்னர்கள் மூலம் நிரப்ப முடியும். ஏனெனில் சம்பு என்ற மூதாதையரைக் பல்லவ சாசனங்கள் குறிப்பிடும் கின்றன இதை கம்பு என்று கம்போடிய சாசனங்கள் சொல்லி அவர்கள்தான் மூதாதையர் என்கின்றனர் . இதை வெள்ளைக்காரர்களும் ஆராய்ந்து எழுதியுள்ளனர். இந்தியாவுக்கு வெளியே சீனர் போன்ற முகமுள்ள யாரைக் கல்யாணம் செய்து கொண்டாலும் அவர்களை நாக கன்னிகை என்று குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும்; அவர்களுக்கு மங்கோலாய்ட்/MONGOLOID முகம் இருக்கும் . கடல்கடந்து செல்லும் பொழுது அதை பாதாள லோகம் என்று அழைப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் . அவர்கள் தமிழர்கள் அல்ல.

Missing Pallavas are in Cambodia?

Scholar George Coedes refers to a 10th century inscription of a Cambodian dynastic legend in which the hermit Kambu Swayambhuva and the celestial nymph Mera unite and establish the Cambodian Solar royal dynasty (Kambu-Mera), that begins with the Chenla ruler Srutavarman and his son Sreshthavarman. Coedes suggests that the Kambu Swayambhuva legend has its origins in southern India, as a version of the Kanchi Pallava dynasty creation myth.

Claimed to be the eponym of the Kambojas, Kambu Swayambhuva is characterized as a Brahmin chieftain, married to Mera, who was given to him by Lord Shiva.

The name Kambu is stated to be a corruption of the standard Sanskrit Kamboja.[6] English Scholars such as C. Lassen, S. Levi, Michael Witzel, J. Charpentier, A. Hoffman, A. B. Keith, A. A. Macdonell, H. W. Bailey and many others have traced the ethnic name Kamboja in the royal name Kambujadeshah (कम्बुजदेशः) in the Old Persian Inscriptions Parskar Gryhamsutram spells the usual Kamboja as Kambuja. The Markandeya Purana (8.1-6) as well as in Srimad Devi Bhagawatam (5.28.1-12) etc. refers to the Kambojas as Kambu clan. King Ashoka’s Rock Edicts V & XIII located at Peshawar write Kamboj as Kamboy or Kambo.

Numerous Muslim writings of medieval era spell the Kamboj clan name as Kambu as well as Kambo. Obviously, these Kambu/Kambo terms are the corrupted forms of Kambuj/Kamboj and relate to the Kamboja of ancient Sanskrit and Pali texts and Inscriptions.[original research?] This Sanskrit Kamboja appears as K.b.u.ji.i.y, Kabujiya or perhaps Kabaujiya/Kaboujiya and Kambujiya or perhaps Kambaujiya ( OR with -n- in place of -m- as Kanbujiya or Kanbaujiya) of Old Persian inscriptions, and Cambyses of Greek writings. The same name appears as C-n-b-n-z-y in Aramaic, Kambuzia in Assyrian, Kambythet in Egyptian, Kam-bu-zi-ya or Ka-am-bu-zi-ya in Akkadian, Kan-bu-zi-ia or Kan-bu-si-ya in Elamite, and Kanpuziya in the Susan language.[8]

***

42..பல்லவர் செப்பேடுகளில் உள்ள புராண மன்னர்களை மறந்துவிட்டு வரலாற்றுச் சான்று வேண்டுமானால் முதல் சான்று சமுத்திர குப்தனின் அலகாபாத் தூண் கல்வெட்டில் (பிரயாகை பிரசஸ்தி) கிடைக்கிறது . அவன் காஞ்சீபுர விஷ்ணு கோபனைத் தோற்கடித்து சிறைப்பிடித்து , பின்னர் கிரஹண மோக்ஷ அனுக்ரஹா என்ற கொள்கையின் படி அவனை விடுதலை செய்து கப்பம் பெற்றான் என்று ஹரிசேனன் எழுதிய சாசனம் கூறுகிறது . சமுத்திர குப்தன் கி பி 335 CEல் அரியாசனம் ஏறினான் ; கேரளத்தில் மாந்தரஞ் சென்றால் இரும்பொறையையும் இவன் தோற்கடித்தான் ; சம்ஸ்க்ருதத்தில் மந்த ராஜா என்று எழுதப்பட்டுள்ளது .ஆக 1700 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவன் காஞ்சீபுரத்தில் ஆட்சி செய்ததை அறிகிறோம் ; கல்வெட்டு செய்திகளை யாரும் மறுப்பதில்லை.

***

43.உரகபுரம்- காளிதாசன் காவியமான ராகு வம்சத்தில் முதல் தடவையாக பாண்டியர்- அகஸ்தியர் தொடர்பு எழுதப்பட்டுள்ளது இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சங்க காலத்துக்கு முன்னர் எழுதப்பட்டது ; இதை விளக்கிய வட நாட்டு ஆசிரியர்கள் இதை உறையூரோ நாகப்பட்டினமோ என்றெல்லாம் எண்ணி கேள்விக்குறியுடன் முடித்து விட்டனர் அவர்களுக்கு புரா நானூற்றில் பேராளவாயர் என்று அப்புலவர் இருப்பது தெரியாது ஆலவாய் என்பது உரக்க புறம் ஆதாவது பாம்பு ஊர்.

 (திருவிளையாடல் புராண செய்தி:  உக்கிரகுமாரன் 96 அசுவமேதம் செய்ததாக பரஞ்சோதி சொல்வதால் இவனை முதுகுடுமிப்பெரு  வழுதியுடன் ஒப்பிடலாம். ஏனெனில் காளிதாசனும் ரகுவம்சத்தில் சுயம்வர சபையில் பாண்டியமன்னனை அறிமுகப்படுத்தும்போது இவன் அகஸ்திய முனிவருடன் தொடர்புடையவன் என்றும் யாகத்தின் அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த துணியுடையவன் என்றும் கூறுகிறாள் தோழி.

இதிலிருந்தது சங்க காலத்துக்கு  முன்னர் வாழ்ந்த காளிதாசனுக்கும் பாண்டியன் யாகம் செய்த செய்தி பிரபலமானது தெரிகிறது ;மேலும் ஆலவாய்  (உரகபுரம்) என்பதையும் குறிப்பிடுகிறான் காளிதாசன் !)

இதே போல முதலாம் பரமேஸ்வர வர்மன் பற்றிய கூரம், உன்னகுரவய பாளையம் செப்பேடுகளில் உரகபுரம் வருகிறது ; உதயேந்திரம் செப்பேடுகளில் சாளுக்கிய விக்ரமாதித்தன் தோற்று கந்தைத் துணியுடன் ஒடிய தகவல்  கிடை க்கிறது. சாளுக்கிய விக்ரமாதித்தன்  கி பி 674 ஆம் ஆண்டில் உரகபுரத்தில் தங்கியிருந்தான் என்ற செய்தியை விளக்கிய உரைகள் இதை கும்பகோணம் அருகிலுள்ள பாம்பூர் என்னும் திருநாகேஸ்வர க்ஷேத்திரம் என்று உறுதிசெய்துள்ளது ; இதிலிருந்து பாம்புசம்பந்தப்பட்ட எந்த ஊரையும் உரகபுரம் என்று அழைக்கின்றனர் என்ற செய்தி நமக்கு கிடைக்கிறது; உரகம் என்றால் பாம்பு; மதுரைக்கு ஆலவாய் என்று பெயர் வரக்காரணமும் ஒரு பாம்புதான் ; இனி காளிதாசர    பற்றிய பழைய புஸ்தகங்களைத் திருத்தி எழுதுவது நமது கடமை;  பாண்டியனுக்கும் பாம்புக்கும் சம்பந்தமுள்ள ஒரே இடம் மதுரைதான்

****

44.பெரும்பாணாற்றுப்படை என்னும் சங்கத் தமிழ் நூலுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் சோழ அரசன் ஒருவன் நாகலோகம் சென்று நாக கன்னிகையை மணந்தான் என்றும் பின்னர் அந்தப்பெண்ணவர்களுக்குப் பிறந்த குழந்தையைக்   கப்பலில் அனுப்பியபோது அடையாளத்துக்கு கழுத்தில் தொண்டைக்கொடியைக் கட்டி அனுப்பினாள் என்றும் எழுதியுள்ளார்.  தொண்டைக்கொடியுடன் வந்த வம்சம் தொண்டைமான் வம்சம் என்றும் திரைகடல் மூலம் வந்ததால் திரையன் என்றும் அவர்களை அழைக்கிறோம் . அவர்கள் ஆண்ட பூமி தொண்டை மண்டலம் ஆகும். இதை நச்சினார்க்கினியர் எழுதுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னரே மஹேந்திர வர்மன் தனது தளவானூர்க் குகைக் கல்வெட்டில் தொண்டை மாலை அணிந்தவன் என்று வருணி க்கப்பட்டுள்ளான்  . ஆக நச்சினார்க்கினியர் சொல்வது உண்மையே.  நாக கன்னிகையை மணந்த சோழன் யார் என்று தெரியாது; பிற்கால தமிழ்க் காப்பியமான மணி மேகலையும் இது போல் ஒரு செய்தியைக் கூறுகிறது .

***

45.பிராமணர்கள் ஆராய்ச்சி செய்வதற்கு பல்லவர் செப்பேடு களில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தண்டந்த் தோட்டம் சாசனத்தில் மட்டுமே 214 பிராமணர்களின் பெயர்கள், ஊர்கள், கோத்ரங்கள், சூத்திரங்கள் காணப்படுகின்றன. பல பெயர்களை இன்று யாரும் சூட்டுவதில்லை . துரோணர் பெயர் மட்டும் பலரிடத்தில் காணப்படுவதால் பல்லவ மன்னர்கள் அஸ்வத்தாமன்- நாககன்னிகை வழிவந்த பிராமணர்கள்தான் என்பது உறுதியாகிறது . புள்ளூர்ச் செப்பேடுகளில் மேலும் 204 பிராமணர்களின் முழு பட்டியல் வருகிறது .இவை தவிர ஒவ்வொரு செப்பேட்டிலும் பிராமணர் பற்றிய விஷயங்கள் உள்ளன . இவைகளை ஆராய்ந்து டாக்டர் பட்டமே பெறலாம்!

***

46.பல்லவர்கள் 600 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ததாக கல்வெட்டுகளும் செப்பேடுகளும் காட்டுகின்றன. ஆயினும் 12 பல்லவர்களின் ஆட்சிக்காலம்தான் பட்டியலில் உள்ளது. உலக வரலாற்று நிபுணர்கள் ஒப்புக்கொண்ட ஒரு மன்னனுக்கு 25 ஆண்டுதான் என்ற கணக்குப்படி பார்த்தால் இது 300 ஆண்டுஆட்சியை மட்டுமே காட்டும்! மீதி 300 ஆண்டுகளுக்கு முன்னோர்கள் பட்டியலில் பெயர்கள் உள்ளன . அவைகளை குப்தர் காலம் முதல் உள்ள கல்வெட்டு தாமிர பட்டயங்கள் மூலம் வரிசைப்படுத்தலாம் . பின்னர் ஆண்டுகளையும் யூகிக்கலாம் . அஸ்வத்தாமன் – நாக கன்னிகை மகன்தான் முதல் பல்லவன் என்பதை ஒப்புக்கொண்டால் மேலும் 3000 ஆண்டு வரலாற்றினை ஆராய வேண்டிவரும்! அவர்கள் இரானியர்களா அல்லது யானைத் தலை மகுடம் பூண்ட இந்தோ கிரேக்க மன்னர்களா என்றும் ஆராய வேண்டும் . ஒரு பல்லவ மன்னனுக்கு யானைத் தலைமுடி கிரீடம் வந்தவுடன் எல்லோரும் ஆசாரியப்பட்டு கேள்வி எழுப்பியது சாசனங்களில் உள்ளது இது தவிர வைகுண்டப்பெருமாள் கோவில் சிற்பங்களுக்கு சரியான விளக்கம் பெறவேண்டும் . சம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ள, தமிழில் இல்லாத, விஷயங்களை சம்ஸ்க்ருத மொழி அறிஞர்கள் உதவியுடன் ஆராய வேண்டும். இந்த ஒரு ஆராய்ச்சியே பலருக்கு டாக்டர் பட்டம் கிடைக்க உதவும் . பல்லவர் செப்பேடுகள் என்னும் நூல்  குறிப்பிடும் ஏராளமான பிற சாசனங்களை முதலில் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு பின்னர் ஆய்வினைத் துவங்க வேண்டும்.

***

47.பல்லவர் செப்பேடுகளில் சுமார் ஆயிரம் ஊர்களின் பெயர்கள் வருகின்றன . பல ஊர்ப்பெயர்கள் மீண்டும் மீண்டும் வந்திருக்கலாம் இவை தவிர நதிகள் தானம் செய்யப்பட்ட இடங்களும் வருகின்றன; பல ஊர்களின் பெயர்கள் இப்போது எப்படி மாறிவிட்டன என்பதை ஓரளவுக்கு பல்லவர் செப்பேடுகள் முப்பது நூல் விளக்குகிறது ஆயினும் நிறைய விஷயங்கள் கேள்விக்குறிகளாகவு ம் ஆச்சர்யக் குறிகளாகவுமே உள்ளன. தற்காலத் தலை முறை மறைந்துவிட்டால் விளக்கம் சொல்லக்கூட ஆட்கள் கிடைக்காது . தல புராணங்களிலிலும் பெரிய புராணத்திலும் திருமங்கை ஆழ்வார் பாடல்களும் வரும் விஷயங்கள் உதவி செய்யக்கூடும். அப்பர், சம்பந்தர் தரிசித்த தேவாரத் தலங்களும் மகேந்திரன் பல்லவர் கால ஊர்களே என்பதை நினைவிற்கொல வேண்டும்.

***

48.கூரம் செப்பேட்டில் பரமேஸ்வர வர்மனின்  கழைப்பாடும் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் அவனை பரதன்சகரன் கர்ணன், யயாதி (உஷானஸ் கவி ) ஆகியோருடன் ஒப்பிடுகிறது

ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு

பரதன் போல எல்லாவற்றையும் அடக்கியவன் / ஸர்வ தமனன்; தன் பிள்ளையான அசமஞ்சசனைக் கைவிட்ட சகரன் போல அசமஞ்சசர்களைத் துறந்தவன்; அங்க தேசத்து அரசனான கர்ணன் போல அங்கங்களைக் கொண்டவன்; கவி குலத்தில் பிறந்த உஷனஸ் என்ற தன் மாமனாரான காவியனிடம் பிரியம் கொண்ட யயாதியைப்போல கவிகளிடம் பிரியம் கொண்டவன் .

(இதற்கு விளக்கம் சொல்லப்போனால் ஒரு புஸ்தகமே எழுதலாம் ! பிராமணர் வீடுகளில் மக்குப்பிள்ளைகளை தவறிழைப்பவர்களை அசமஞ்சன் என்றுதான் திட்டுவார்கள்;  அங்க தேசம் என்ற சொல் கர்ணன் விஷயத்தில் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது அதாவது அங்க தேச மன்னன் கர்ணன் போல வாரி வழங்கும் கைகளைப் படைத்தவன்(அங்கம்);  உஷனஸ் கவி ரிக்வேதத்திலும் பகவத் கீதையிலும் தொல்காப்பியர் பெயரிலும் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற சங்கப்புலவர் பெயரிலும் கவி, கவிதை, கவிஞர் காவியம் என்ற சொற் களில் இருப்பதையும் இதே பிளாக்கில் காணலாம்.)

***

49.ரிக்வேத சரமேயஸ் என்னும் நாய், மஹாபாரத அஸ்வத்தாமன் என்னும் யானை காரி, ஓரி என்னும் சங்க இலக்கிய குதிரைகளை இதே பிளாக் கட்டுரைகளில் கண்டோம்; இப்போது அந்தப் பட்டியலில் மேலும் மூன்று பெயர்களை சேர்க்கலாம் :-

.கூரம் செப்பேடுகளில் பரமேஸ்வர வர்மனின் யானை பெயர் மகிவாரணம் என்றும் குதிரையின் பெயர் அதிசயம் என்றும் வியப்பான செய்திகள் உள்ளன.  சாளுக்கிய பூமியைப் பல்லவர்களிடமிருந்து மீட்ட விக்கிரமாதித்தனின் குதிரையின் பெயர் சித்ரகண்டம் (அழகிய கழுத்து) என்பதை அவனுடையய சாசனங்கள் கூறுகின்றன!

***

50.பல்லவர் — செப்பேடு களில் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் கிடைத்தவை :

பள்ளங்கோயில் செப்பேடுகள்

கூரம் செப்பேடுகள்

உன்னக்குரவயபாளையம் செப்பேடுகள்–ஆந்திரம்

ரேயுருச் செப்பேடுகள்–ஆந்திரம்

ராயக்கோட்டை செப்பேடுகள்

உதயேந்திரம் செப்பேடுகள் -1

காசக்குடி செப்பேடுகள்

புல்லூர்ச் செப்பேடுகள்

தண்டந்தோட்டம் செப்பேடுகள்

பட்டதாள் மங்கலம் செப்பேடுகள்

வேலூர்பாளையம் செப்பேடுகள்

பாகூர் செப்பேடுகள்-புதுவை

ஓங்கோடு செப்பேடுகள் -1-ஆந்திரம்

உருவப்பள்ளி செப்பேடுகள்

மாங்களூர் செப்பேடுகள்- கர்நாடகம்

பீகிரச் செப்பேடுகள்-ஆந்திரம்

நெடுங்கராயச் செப்பேடுகள் 

வேஷந்தச் செப்பேடுகள்–ஆந்திரம்

விழவெட்டிச் செப்பேடுகள்-ஆந்திரம்

செந்தலூர்ச் செப்பேடுகள்-ஆந்திரம்

ஓங்கோடு செப்பேடுகள் -2-ஆந்திரம்

தர்சி உதிரி செப்பேடுகள்–ஆந்திரம்

சுராச் செப்பேடுகள்–ஆந்திரம்

உதயேந்திர செப்பேடுகள் -2

மயிதவோலு செப்பேடுகள்–ஆந்திரம்

ஹீரஹடஹள்ளி செப்பேடுகள்- கர்நாடகம்

குணபதேயம் செப்பேடுகள்–ஆந்திரம்

ஹொசக்கோட்டை செப்பேடுகள்- கர்நாடகம்

ஹெல்லகரே  செப்பேடுகள்– – கர்நாடகம்

ஹால்திபூர் செப்பேடு செப்பேடுகள்– கர்நாடகம்

Tags- பல்லவர் செப்பேடுகள், ஐந்தாவது 10 கேள்விகள்

–subham–

Leave a comment

Leave a comment