Written by London Swaminathan
Date: 14 MARCH 2018
Time uploaded in London – 3-56 am
Post No. 4812
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதில்/ விடை சொல்லி உங்கள் தமிழ் அறிவினைச் சோதித்துக் கொள்ளுங்கள்
1.வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டு ஒருவன்
கல்லால் எறியப்பிரம்பால் அடிக்க இக்காசினியில்
அல்லார் பொழில் தில்லை அம்பலவாணற்கு ஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்லவோ இங்ஙனேஎளிது ஆனதுவே
2.வெள்வாய்க் கழுதைப் புல் இனம் புரட்டி
வெள்ளிஅ வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது
3.மறுஇல மாக்கதை கேட்பவர் வைகுந்தம்
பெறுவர் என்பது பேசவும் வேண்டுமொ
- அம் செஞ்சீறடி அணி சிலம்பு ஒழிய
மெந்துகில் அல்குல் மேகலை நீங்கக்
கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்
- முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே
- நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய்- அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்
- ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின் பார்த்து
இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
- அறத்தான் வருவதே இன்பம்
- பொருளற்ற பாட்டுக்களை – அங்குப்
புத்தமுதென்றனர்; கைத்தாளமிட்டனர்
இருளுக்குள் சித்திரத்தின் – திறன்
ஏற்படுமோ இன்பம் வாய்த்திடக் கூடுமோ?
- வினையைப் பொடியாக்கித்
தணியார் பாதம் வந்தொல்லைதாராய்
பொய்தீர் மெய்யானே
11.காலில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?
12.கையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?
13.காதில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?
14.இடையில் அணியும் ஒரு நகையின் பெயர் வரும் காவியம்/காப்பியம் எது?
- நினைத்ததை அளிக்கும் ரத்தினக் கல்லின் ( தலையில் அணியும் ஒரு நகையின்) பெயர் வரும் காவியம்/ காப்பியம் எது?
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடை/ ANSWERS
1.காளமேகம், தனிப்பாடல்கள், 2. சங்க கால அவ்வையார்
புறநானூறு, 3. கம்பன், கம்ப ராமாயணம், 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,
- அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 6. பாரதி, பாரதியார் பாடல்கள், 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 9. பாரதிதாசன் பாடல்கள், 10. மாணிக்கவாசகர், திருவாசகம்
- சிலப்பதிகாரம், 12.வளையாபதி,13.குண்டலகேசி, 14. மணிமேகலை, 15.சீவக சிந்தாமணி
You must be logged in to post a comment.