யானை பற்றிய நூறு பழமொழிகள்

Guruvayur’s famous Valiya Kesavan elephant

 

20 000 Tamil Proverbs என்று ஆங்கிலத்திலும் 20000 தமிழ் பழமொழிகள என்ற எனது இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டு இதைப் படிக்கவும்.

தொடர்புடைய கட்டுரைகள்: தமிழ் ஒரு கடல், சம்ஸ்கிருதம் ஒரு சமுத்திரம்

மேற்கூறிய கட்டுரையில் கூறியது போலவே தமிழ் மொழி மிகவும் வளமான ஒரு மொழி. உலகில் தமிழ் மொழியில் உள்ளதைப் போல வேறு எந்த மொழியிலாவது பழமொழிகள் இருக்குமா என்பது சந்தேகமே. வளமிக்க மிகப் பழமையான சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் 20,000 க்கும் மேலாக இருந்தபோதிலும் அவை தனிப்பாடல்கள், நீதி நெறி புகட்டும் குறள் பாக்கள் என்ற வகையில் சேர்ந்துவிடும்.

இதோ யானை பற்றிய நூறு பழமொழிகள். பாமர மனிதன் ஆனை என்றே சொல்லுவான். யானை என்பது எழுத்து வழக்கு-இலக்கிய வழக்கு

 

Punnathurkotta elephant camp with 64 elephants

1. யானை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே

2. யானைக்கும் கூட அடி சறுக்கும்

3. பட்டிக்காட்டான் யானையைப் பார்த்தது போல

4. யானையைப் பார்த்து நாய் குரைத்த மாதிரி

5 .யானை உண்ட விளங்கனி

6. யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும்

7. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்

8. வெண்கலக் கடையில் யானை புகுந்தது போல

9. யானை முதல் எறும்பு வரை

10. ரத கஜ துரக பதாதி உடன் வந்தான் மன்னன்

11. யானைப் பல் காண்பான் பகல் (பழமொழி)

12. யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக் கொள்ளும்

13. ஆனைக்கும் பானைக்கும் சரி

14. ஆனக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்

15.யானைக்கு அல்வா வாங்கிப் போட்ட கதைதான்

16. யானைப் பசிக்கு சோளப் பொறி

17. யானை கண்ட பிறவிக்குருடர்கள் அடித்துக்கொண்டதுபோல

18. ஆனை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்

19. ஆனை ஆசாரவாசலைக் காக்கும், பூனை புழுத்த மீனைக் காக்கும்

20. ஆனை ஆயிரம் பெற்றால் அடியும் ஆயிரம் பெறுமா?

Elephant playing drums

21. ஆனையிருந்து அரசாண்டவிடத்திலே பூனையிருந்து புலம்பியழுகிறது

22. ஆனை இலைக் கறி, பூனை பொறிக்கறி

23. ஆனை உயரம் பூனை ஆகுமா?

24. ஆனை ஏறித் திட்டிவாசலில் நுழைவது போல

25. ஆனை ஏறியும் சந்து வழி நுழைவானேன்?

26. ஆனை ஒரு குட்டி போட்டும் பலன், பன்றி பல குட்டி போட்டும் பலன் இல்லை

27. ஆனை கட்டத் தாள், வான முட்டப்போர்

28. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன் ஓட்டை கறுத்தால் உதவி என்ன?

29. ஆனை காணாமற் போனால் அரிக்கன் சட்டி குண்டு சட்டிகளில் தேடுவதா?

30. ஆனை குட்டி போடும் என்று நம்பி லத்தி போட்டது போல

31. ஆனை குண்டுச் சட்டியிலும் குழிசிச் சட்டியிலும் உண்டோ?

32. ஆனை குத்தும் தோட்டிக்குப் பிணக்கா?

33. ஆனை கேடு அரசு கேடு உண்டோ?

34. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக் குட்டி கேட்கிறதா?

35. ஆனை கொடிற்றில் அடங்குகிறது போல எந்த மட்டும் அடக்குகிறது?

36. ஆனை கொடுத்தும் அங்குசத்திற்குப் பிணக்கா?

37. ஆனைக் கவடும் பூனைத் திருடும்

38. ஆனைக்கிட்டுக் கெட்டவன் குடத்தில் கையிட்டாற்போல

39. ஆனைக்கில்லை கானலும் மழையும்

40. ஆனைக்கு அறுபது முழம், அறக்குள்ளனுக்கு எழுபது முழம்

Surin City, Thailand

41. ஆனைக்கு கோவணம் கட்டினாற்போல

42. ஆனைக்கு சிட்டுக் குருவி மத்தியஸ்தம் போனாற்போல

43. ஆனைக்குத் தீனியிடும் வீட்டில் ஆட்டுக் குட்டிக்குப் பஞ்சமா?

44. ஆனைக்குத் துறடும் அன்னத்துக்கு மிளகாயும் வேண்டும்

45. ஆனைக்குத் தேரை இட்டது போல

46. ஆனைக்குத் தேரை ஊனா?

47. ஆனைக்குமுண்டு அவ கேடு

48. ஆனைக்கும் புலிக்கும் நெருப்பை கண்டால் பயம்

49. ஆனைக்கு வேகிற வீட்டில் பூனைக்கு சோறில்லையா?

50. ஆனைக் கூட்டத்திற் சிங்கம் புகுந்தாற்போல

51. ஆனைச் சவாரி செய்தவன் பூனைச் சவாரிக்கு அஞ்சுவானா?

52. ஆனை தழுவிய கையால் பூனையைத் தழுவுறதா?

53. ஆனை தன்னைக் கட்ட சங்கிலியைத் தன் கையாலேயே கொடுத்தது போல

54. ஆனை துரத்தி வந்தாலும் ஆலயத்தில் நுழையலாகாது

55. ஆனை நிழல் பார்க்க தவளை அழித்தாற்போல

56. ஆனை படுத்தால் ஆட்டுக் குட்டிக்குத் தாழுமா?

57. ஆனை படுத்தால் ஆள் மட்டம்

58. ஆனை படுத்தால் குதிரை மட்டமாவது இராதா?

59. ஆனை பார்க்க வெள்ளெழுத்தா?

60. ஆனை புலி வந்தாலும் தாண்டுவாள்

Famous elephant Echo

61. ஆனை போகிற வழியில் எறும்பு தாரை விட்டாற் போல

62. ஆனை போகிற வழியில் போன வீதியில் ஆட்டுக் குட்டி போகிறது வருத்தமா?

63. ஆனை மதத்தால் (கொழுத்தால்) வாழைத் தண்டு, ஆண்பிள்ளை மதத்தால் கீரைத் தண்டு

64. ஆனை மிதிக்கப் பிழைப்பார்களா?

65. ஆனை மேயும் காட்டில் ஆடு மேய இடம் இல்லையா?

66. ஆனை மேல ஏறுவேன் வீர மணி கட்டுவேன்

67. ஆனை மேல இடும் பாரத்தைப் பூனை மேல இடலாமா?

68. ஆனை மேல இருக்கிற அரசன் சோற்றை விட, பிச்சை எடுக்கிற பார்ப்பான் சோறு மேல்

69. ஆனை மேல போகிறவன்கிட்ட சுண்ணாம்பு கேட்டா அகப்படுமா?

70. ஆனை மேல போகிறவனையும் பானையோட தின்றான் என்கிறது

71. ஆனையும் அருகம் புல்லினால் தடைப் படும்

72. ஆனையும் ஆனையும் முட்டும் போது இடையில் அகப்பட்ட கொசுகு போல

73. ஆனையும் நாகமும் புல்லினால் தடைப்பட்டன

74. ஆனையை ஆயிரம் பொன்னுக்கு வாங்கி, இரும்பு அங்குசத்துக்கு ஏமாந்து நிற்பானேன்?

75. ஆனையைக் கட்டி சுளகாலே மறைப்பாள்

76. ஆனையைக் குத்தி சுளகாலே மூடுவாள்

77. ஆனையைக் கொன்றவன் பூனையை வெல்ல மாட்டானா?

78. ஆனையைத் தண்ணீரில் இழுக்கும் முதலை பூனையைத் தரையில் இழுக்குமா?

79. ஆனையைத் தேட பூதக் கண்ணாடி வேண்டுமா?

Kenya’s famous elephant

80. ஆனையைப் பிடிப்பதும் கரகத்தில் (பானையில்) அடைப்பதும், அதுவே செல்லப் பிள்ளைக்கு அடையாளம்

81. ஆனையை வித்துவானுகும் பூனையைக் குறவனுக்கும் கொடு

82. ஆனையை விற்றா பூனைக்கு பரிகாரம் (வைத்தியம்) செய்யறது?

83. ஆனையை விற்று துறட்டிக்கு மன்றாடுகிறான்

84. ஆனை லத்தி ஆனை ஆகுமா?

85. ஆனை வயிறு நிறைந்தாலும் ஆட்டின் வயிறு நிறையாது

86. ஆனை வாயில போன கரும்பு போல

87. ஆனை வால் பிடித்து கரை ஏறலாம், ஆட்டின் வால் பிடித்து கரை ஏற முடியுமா?

88. ஆனை விழுங்கிய அம்மையாருக்கு பூனை சுண்டாங்கி

89. ஆனை விழுந்தாலும் குதிரை மட்டம்

90. ஆனை விழுந்தால் கொம்பு ,புலி விழுந்தால் தோல்

91. ஆனை வேகம் அடங்கும் அங்குசத்தில்

92 .யானை தொட்டாலும் மரணம் வரும்

93. யானை முன்னே முயல் முக்கினது போல

94. யானை வந்தால் ஏறுவேன், சப்பாணி வந்தால் நகருவேன்

95. யானை வாய்க் கரும்பும், பாம்பின் வாய்த் தேரையும், யமன் கைக்கொண்ட உயிரும் திரும்பி வாரா

96. யானை விற்றால் யானை லாபம், பானை விற்றால் பானை லாபம்

97. யானைக்கு சிம்ம சொப்பனம் போல

98. பன்றிக் குட்டி யானை ஆகுமா?

99 .மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை

100. யானையால் யானை யாத்தற்று

101. சோழ நாடு சோறுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சேர நாடு வேழமுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து

102.வேழத்திற்குச் சிறிதும் பெரிதாய்த் தோன்றும்

103. வேழத்தை ஒத்த வினைவந்தால் தீர்வது எப்படி?

104.வேழம் முழங்கினாற் போல

 

இவை ஒவ்வொன்று பற்றியும் ஒரு கதையும் ஆய்வுக் கட்டுரையும் எழுதலாம். அவ்வளவு பொருள் பொதிந்த பழ மொழிகள்.

 

Sri Lanka Elephants

 

20,000 Tamil Proverbs

(Tamil version of the post is also available in the blog)    

Tamil is one of the richest languages in the world.  It has a collection of more than 20,000 proverbs. This collection is an Encyclopaedia of Tamil Wisdom. Tamil proverbs touch all the subjects under the sun.  A proverb has been defined as the “wisdom of many and the wit of one”. Tamil word for proverb is Pazamozi, the meaning of which is an old saying.

Tamil people take great delight in quoting them. Women are more familiar with the proverbs. There won’t be any conversation or discussion without a proverb being quoted. Villagers use more proverbs than city dwellers. Illiterates and neo literates use more proverbs than educated Tamils.

Three English people showed great interest in collecting them. They collected Tamil proverbs and published them with English translations 125 years ago. Their collection exceeded 19,000 proverbs. Still there are thousands of proverbs which did not find a place in the collection. Reverend P. Percival published his first collection with less than 2000 proverbs in 1842. When he brought out his third edition in 1877 he had 6156 proverbs. Later John Lazarus published another collection with 9415 proverbs in 1894. The last collection by a foreigner Rev. Herman Jensen came out in 1897. It contained another 1897 proverbs. There may be some repetitions or some new versions of the same proverbs.

But no one should think only foreigners  did the pioneering work in this area. Ancient Tamil literature has many proverbs used in their verses. There is one book called Pazamozi, a collection of 400 verses. Each verse ends with a proverb. This was composed by Mundruraiyanar 1500 years ago. A devotional poet Appar alias Thirunavukkrasu used proverbs even in his devotional poems. This is very unique.

No culture has given so much importance to proverbs like the Tamils. This kind of literature indicates the great antiquity and poetic nature of Tamil people, says Lazarus in his introduction. He adds that the Tamil proverbs are in iambic tetrameter, with a rhyme in the first and third feet E.g. Agattin azagu Mugaththil theriyum; meaning Face is the Index of the mind.

Not all the proverbs are in grammatical language, some are colloquial. Tamil proverbs deal with various subjects. There is a great variety. They deal with god, religion, food, manners, customs, dress, morality, hygiene, animals, plants, inanimate objects, numbers, castes, medicines, mythology, superstitions and science. Name anything, you may find a fewproverbs or may be a hundred on the topic. Nothing worthy of note seems to have escaped the insight or scrutiny of the Tamil observer.

100 Proverbs on Elephant

Tamils are very keen observers of nature. They use most of the animals in proverbs. Over 100 proverbs are there on elephant alone! Even the great may slip (yanaikkum kuta adi sarukkum), A time for everything ( Yanaikku oru Kalam vanthal ,Punaikku oru Kalam varum), Seeking one’s own ruin (Yanai than thalayileye mannaip pottukkollum) and many more.

A great many proverbs are flashes of wit or sarcasm. Indecent haste is ridiculed by the following: Undressing oneself when the river is still ten miles off! One who is extreme in his approach is called a barber who either shaves the head clean or leaves the tuft( Vaithal kudumi, siraithal mottai). Women are either praised for their wisdom or criticized for their shortcomings: a woman can make or mar a person; A house without a wife is a burning ground; a wife is the ornament /lamp of the house; don’t confide your secrets to any woman; never listen to your wife’s counsel. Wife- Mother in Law clash also figure in proverbs: What the mother in law breaks is an earthen vessel, what the daughter in law breaks is a golden vessel.

The ancient Tamils had a genuine admiration for truth and justice, honesty and humility, love and mercy and hated every form of vice and hypocrisy. This is reflected very well in many of the proverbs.

Lazarus says in his introduction to Tamil Proverbs, “Proverbs have a mission of their own. It teaches all the good things in life in pithy words. Four or five words will give the effect of listening to a long sermon. It makes a good impact on everyone.

Proverbs are inexhaustible source for researchers.  One can write a lengthy article on each and every proverb. Some proverbs have both positive and negative meanings. It can be interpreted both ways. Many of the proverbs have lost their original meanings. Some are not all understood nowadays.

Some familiar proverbs are given below:

Where there is love, even the impossible becomes possible

The meek shall rule the earth

Waste not even a moment

Though it be a medicine, share it with a guest

The tears of the poor are like a sharp edged sword

Rather die than lose your honour

Though the rain has stopped, the drizzle has not

Desire has no limit

No pains no gains

 

****************************

 

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

 

தமிழ் மொழி மிகவும் வளமான மொழி. உலகிலேயே அதிகமான பழமொழிகள் இதில் தான் இருக்கின்றன. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று ஆங்கிலேயர்கள் 19,000க்கும் மேலான பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டனர். சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் எனப்படும் பாடல் வகை நீதிக் களஞ்சியம், தனிப்பாடல்கள் இருபதாயிரத்தும் மேலாக இருக்கின்றன. ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் முன்னிலையில் நிற்கிறது.

வெள்ளைக்கரகள் தொகுப்பதற்கு முன்னரும் தமிழ் மொழியில் பழமொழித் தொகுப்பு இருந்தது. இதை பெர்சிவல் என்பவரே தன் நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் பழ மொழிகளைக் கொண்டே சிவன் மீது ஒரு பதிகம் பாடிவிட்டார். அதற்கு முன்னர் முன்றுரை அரையனார் என்பார் பழமொழி 400 என்ற தொகுப்பில் 400 வெண்பாக்களையும் பழமொழிகளைக் கொண்டு முடிக்கிறார். இப்படி ஒரு நூல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதிலும் தமிழுக்கே முதலிடம்!! கம்பன், தன் ராமாயணத்தில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான்.

பழமொழி என்பது என்ன? ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்.

தனிப்பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்கள் அல்லது திருக்குறள் போன்ற நீதிநெறி இலக்கியப் பாடல்கள் கற்றோருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பழமொழிகளோ  எனில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் தெரியும். கிராமப் புறப் பெண்களின் வாயில் பழமொழிகள் புகுந்து விளையாடும். சண்டை சச்சரவானாலும் சரி, பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியானாலும் சரி, கிண்டல், வேடிக்கையானாலும்சரி எல்லா இடங்களிலும் சரளமாகப் புழங்கும்

ஆயிரக கணக்கான ஆண்டு அனுபவம், பழமொழிகளில், எதுகை மோனையுடன் வரும் நாலைந்து சொற்களில் அடங்கிவிடும்

 

யானை பற்றி நூறு பழமொழிகள்

யானை பற்றி மட்டுமே நூற்றுக்கும் மேலான பழமொழிகள் கிடைத்திருக்கின்றன. பறவைகளில் காகமும், பிராணிகளில் யானையும் தமிழர்களை மிகவும் கவர்ந்துவிட்டதன. ஆனை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே, ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன், யானை உண்ட விளாங்கனி போல, யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும், யானைக்கும் கூட அடி சறுக்கும்— இப்படி நூற்றுக்கும் மேலாகப் படிக்கலாம்

சமயம், பெண்கள், பண்புகள், உணவு, மருத்துவம், பழக்க வழக்கங்கள், மிருகங்கள், தாவரங்கள், ஜாதிகள், அரசு, தொழில்கள், சோதிடம், அறிவியல், வானசாத்திரம், பருவநிலை, விவசாயம்—இப்படி ஏராளமான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி கட்டுரை எழுதலாம். சில பழமொழிகளுக்கு நேரிடையான பொருளும் எதிர்ப்பத பொருளும் கிடைக்கும்.

முதல் முதலில் ரெவரண்டு பெர்சிவல் என்பவர் 1842 ஆம் ஆண்டு 2000-க்கும் குறைவான பழமொழிகளுடன் ஒரு புத்தகம் வெளியிட்டார். பின்னர் அவரே 1877 ல் மூன்றாம் பதிப்பை வெளியிட்ட போது அதில் 6156  தமிழ் பழமொழிகள் இருந்தன. அவர் தொகுப்பில் விட்டுப் போன பழமொழிகளாக எடுதுத் தொகுத்து 9415 பழமொழிகளுடன் ஜான் லசாரஸ் என்பவர் 1894ல் வெளியிட்டார். பின்னர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 1897ம் ஆண்டில் 3644 பழமொழிகளுடன் இன்னும் ஒரு நூலை வெளியிட்டார். இவற்றைத் தொகுத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு இதன் பொருளை விளக்கியதில் நம்மவரின் பங்கே அதிகம் அதுமட்டுமல, நம்மவர்களும் பழமொழிகளைத் திரட்டித் தந்தனர். இந்த 3 புத்தகங்களும் தமிழ் பழமொழிகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் வந்தன.

சமயம் பற்றிய பழமொழிகள் (பழமொழிகளில் இந்து மதம் என்ற என் கட்டுரையைப் படிக்கவும்):

தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் (நரசிம்மாவதாரம் கதை), எல்லாம் அவன் செயல், நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது (கர்ணன் கதை) இப்படி மதம் தொடர்பாக நூற்றுக் கணக்கில் பழமொழிகள் உண்டு.

 

சோதிடப் பழமொழிகள்

ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி,முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை, முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை (சனிக் கிரகத்தின் சுழற்சி), பரணி தரணி ஆள்வான், அவிட்ட நட்சத்திரக் காரனுக்கு தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்—இப்படி நிறைய சோதிட பழமொழிகள் .

ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் ஒரு சமுதாயம் சம்பாதித்த அனுபவம் எல்லாவற்றையும் பழரசமாகப் பிழிந்து கொடுப்பது போன்றது பழமொழி.

பெண்களுக்கும் ஜாதிகளுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பழமொழிகள் கிடைக்கின்றன. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பெண் என்றால் பேயும் இரங்கும், பெண் பாவம் பொல்லாதது, பெண் புத்தி பின் புத்தி இப்படி எதிரும் புதிருமாகப் படிக்கலாம்.

ஆலும் வேலும் பல்லுக் குறுதி, வறுத்த பயற்றை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே, உடம்பைக் கடம்பால் அடி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம், சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை, சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்— இப்படி நூற்றுக் கணக்கான மருத்துவப் பழமொழிகள்.

ஆடிப் பட்டம் தேடி விதை, எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும் என்பன பருவ நிலை, விவசாயம் பற்றிப் பேசும்.

தாய்க்குப் பின் தாரம் என்று சினிமாப் பட தலைப்புகளில் கூட பழமொழி இடம்பெறும்

 

இரு பொருள்படும் பழமொழிகள்

சில பழமொழிகளுக்கு இன்றுவரை அர்த்தமே தெரியவில்லை. இன்னும் சில பழமொழிகளுக்கு இருவேறு விதமாகப் பொருள் சொல்லலாம். தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்று ஒரு பழமொழி. இது தன் சக்திக்கும் அப்பால் போய் ஒருவர் செய்வதே தானம் என்பாரும் உளர்; தனக்குப் பின் மிஞ்சிப் போனதைக் கொடுப்பதே தானம் என்பாரும் உளர். ஆக இது போன்ற பழமொழிகளுக்கு அவரவர் விருப்பப்படி வியாக்கியானம் செய்யலாம்!!

உலகில் எல்லா மொழிகளிலும் பழமொழிகள் இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதோடு அதைப் பேச்சு மொழியில் சுவைபடச் சொல்லுவதே இதன் இலக்கணம். தமிழ் மொழியில் இது உச்சநிலையை எட்டி, தமிழுக்குத் தனிப் பெருமையை ஈட்டித் தந்துள்ளது.

***************

Draupadi and Tamil Heroines

Picture shows Angry Kannaki

Draupadi, wife of Pancha Pandavas came from Punjab. She was a heroic woman. She was called Draupadi because she was the daughter of Drupada, King of Punjab/Panchala. She was also known as Panchali because she was a woman from Punjab/Panchala. She had another name Yagnaseni because she was born out of a holy fire/Yagna.

People of Punjab were famous for their heroic deeds. They protected Hindus from the onslaught of foreign invaders for over two thousand years. Draupadi was an intelligent woman, but she was an arrogant princess as well when she got married to the Pandavas. When the Pandavas constructed a new palace, Duryodhana and others were invited to view the palace. It was so beautifully done that Duryodhana mistook its crystal floor for water and lifted his clothes to step in carefully. Draupadi who watched it from the balcony burst into laughter. Women should never laugh at men, that too for silly mistake, like this. Duryodhana and his brothers were already burning with jealousy. This laughter rubbed salt into their wounds.  They were all waiting for an opportunity to take revenge upon her.

When Dharama (Yudhistra), eldest of the five Pandava brothers, lost everything in the gambling, Sakuni, the most wicked uncle of Dhuryodana provoked Dharma to stake his wife Draupadi in the game of dice. When he did this and lost again,  Duryodhana ordered his brother to undress Draupadi. When she was dragged into the court in front of all the elders in the Royal Assembly, nobody raised a finger against Duryodhana or advised him against this un holy, un Hindu act of molesting a woman in public.

But Draupadi asked them what right Dharma had over her when his independence was already lost in the gambling. She argued like an efficient solicitor. She asked the elders in the Royal Assembly to speak up. No one could answer her questions. But Krishna came to her rescue and saved her modesty. When Duschasana, brother of Duryodhana, tried to denude her by pulling her sari, it became longer and longer and there was no end to the garment. Krishna played many magical tricks throughout the Mahabaharata warand this was one of them. Beyond Krishna’s magical gifts, Hindus believe that chaste women can control even Nature’s forces. Tamils believe that a chaste woman can bring rains and stop anything at their will power. A woman can make or mar a man and she can make or destroy a country.

Draupadi Vs Tamil Heroines

In Tamil country, we have a great heroine by name Kannaki. Her full story is given in the great Tamil epic Silappadikaram. When her husband Kovalan was falsely accused of stealing Pandyan queen’s anklet and executed without proper enquiry, she went straight to the Royal court and challenged the king. Like Draupadi she also argued her case and proved that she was right. The ashamed Pandya king died of heart attack on the spot. Since such an injustice had never happened in the country his wife/the queen also died of heart attack. But yet Kannaki’s anger did not subside and she walked through the streets of Madurai and invoked God of fire to burn all the bad elements in Madurai, the capital city of Pandya kingdom. This is a famous story every Tamil knew. But there was another fiery woman who lived nearer her time who was not known even by Tamils. Her name was AnnI Njimili. Her unusual name itself is a tongue twister.

Anni njimili was an ordinary innocent village girl. Her father was also equally humble and a poor man. He used to take his cows for grazing every day. Kosars, a clan who were famous for their truthful words, were controlling that area. It was Anni Njimi family’s bad luck that the cows went into the field of Kosars. Immediately they arrested Anni Njimili’s father and took him to their leader. He ordered his servants to gouge his eyes. But knowing the seriousness of the situation, Anni went with all the elders of the village and begged him to pardon her dad. The arrogant Kosars did not listen to her and Anni’s dad lost his eyes.

When Draupadi was insulted in the royal court she made a vow not to tie her hair till she saw the end of Duryodhana. Probabbly Anni Njimili knew the story of Draupadi. Mahabharata and Ramayana were very popular in Tamilnadu two thousand years ago that we have new anecdotes in Tamil which were not found in Sanskrit versions of the epics. (Please read my Articles: WHERE IS RAMA STU? and TWO ANIMALS THAT INSPIRED INDIANS in the blogs). Anni also made the same vows. She swore that she wouldn’t eat or dress herself properly till the wrongdoers were punished.

Like Draupadi and Kannaki , Anni was very clever and she was looking for a hero who would punish the bad people. She had heard about valorous Thithiyan of Azunthur. She went to Azunthur and told him what happened. When Thithiyan saw the conviction of this girl, her love and affection for her dad and her determination to punish the bad people ,he made up his mind. He promised her that he would finish off the people who did this to her father. As promised, Thithian went to Kosar country and killed the people who did the barbaric act of gouging her dad’s eyes just for grazing the cows. On that day her angry face changed to beautiful face of a woman. Sangam Tamil poems written two thousand years ago praised her heroic act and determination in Akananuru  verses 196 and 262. Paranar who never missed any of the important events of his days like a war correspondent, recorded this incident in his beautiful poem.

 

***********************

பார்ப்பனிக்கு வடமொழிச் சீட்டு

சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் ஒரு முக்கியமான செய்தி வருகிறது. பஞ்சதந்திரக் கதைகளில் வரும் கீரி-பார்ப்பனி கதையைக் குறிப்பிட்டு பின்னர் நடந்ததை மாடல மறையவன் கூறுகிறான்.

ஒரு பார்ப்பனப் பெண் வீட்டில் கீரி வளர்ந்து வந்தது. அவள் தண்ணீர் பிடிக்கப் போனபோது ஒரு பாம்பு அவளுடைய குழந்தையைச் சீண்ட வந்தது. உடனே கீரி சீறிப் பாய்ந்து அந்தப் பாம்பைக் கொன்றது. வாய் முழுதும் ரத்தம். குழந்தையைக் காபாற்றிவிட்ட பெருமிதத்தோடு வாசலில் நின்றது. வீட்டை நோக்கி வந்த பார்ப்பனப் பெண் கீரிப் பிள்ளையின் வாயில் ரத்தத்தைப் பார்த்தவுடன் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டு அதைக் கொன்றுவிடுகிறாள். அவசரப் பட்டோ ஆத்திரப் பட்டோ எதையும் செய்துவிடக் கூடாது என்பது இதன் நீதி.

இதற்குப் பின் பார்ப்பனப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதை சிலப்பதிகாரத்தின் வாயிலாகக் காண்போம். மாடல மறையவன் கோவலனின் பல சிறப்புகளை எடுத்துரைக்கையில் இதையும் கூறுகிறான்: கீரிப் பிள்ளை இறந்த துயரம் பெரிதாக, அதனாற் கைவிடப்பட்ட மனைவியானவள் வருந்திப் பின்வர, வட திசை நோக்கிப் புறப்பட்ட பார்ப்பனன், நின் கையால் உணவுண்டு வாழும் வாழ்வு இனி முறையற்றது என்று கூறி “வடமொழி வாசகம் எழுதிய இந்த ஏட்டினைக் கடமை அறிந்த மாந்தர் கையிலே நீ கொடுப்பாயாக” என்று தந்து போயினன்.

பின்னர் அப்பெண் தெருத்தெருவாக அலைந்து உதவி கேட்டபோது கோவலன் வலியச் சென்று அவளை அழைத்து மறையவர் சொல்லிய நெறிப்படி அவளது பாவம் போக்க தர்மங்கள் பலவும் செய்து அவள் துன்பத்தைப் போக்கினான். அத்தோடு அவளது கணவனையும் தேடிப் பிடித்து அவர்களைச் சேர்த்துவைத்து பொருளும் கொடுத்து அனுப்பினான். கோவலனின் இந்த சமூகத் தொண்டை அவனிடமே மாடல மறையவன் கூறி உனக்கு ஏன் துன்பம் வந்தது என்று கேட்கிறான். உடனே கோவலன் தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிக் கூறுகிறான் என்று கதை தொடர்கிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் “வடமொழி வாசகம் எழுதிய ஏடு” என்பதாகும். வடமொழி எழுதப் படவே இல்லை, பேசப்படவே இல்லை  என்று சொல்லுவோருக்கு இந்த ஏடு பதில் சொல்லுகிறது.

“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;

வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என…..” (அடைக்கலக் காதை)

சிலப்பதிகார காலத்திலேயே (கி.பி.100) வடமொழியை ஏட்டில், எழுத்தில் எழுதினர். அதை கோவலன் வாழ்ந்த புகார் நகரிலே படித்துப் பொருள் உணர்ந்து தான தர்மம் செய்தனர் என்பதை இதன் வாயிலாக அறிகிறோம். அந்த ஏட்டை கோவலனே படித்தான் என்றும் நினைக்க இடமுண்டு. ஆனால் இது தெளிவாகச் சொல்லப்படவில்லை.

மாதவி கடிதம்

இதற்கு முன் புறஞ்சேரி இருத்த காதையில் மாதவி எழுதி அனுப்பிய ஓலை பற்றிய செய்தியும் வருகிறது. அவள் ஏன் என்னை விட்டுப் பிரிந்தீர் என்று வருத்தமுற்று எழுதிய கடிதம் அது. அவள் தமிழில்தான் எழுதி இருப்பாள். இதிலும் ஒரு விஷயம் புலப்படுகிறது. அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை சிறப்பாக இருந்தது. பெண்களும் கடிதம் எழுதினர். அதை பார்ப்பன தூதர் மூலம் அனுப்பினர் என்று தெரிகிறது. கோசிகன் என்பவன் மூலம் வந்த அதே ஓலையை தன் பெற்றோரிடமும் காட்டும்படி கோவலன் திருப்பி அனுப்புகிறான்.

காதல் கடிதங்கள்

கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசன் என்னும் மாபெரும் வடமொழிக் கவிஞன், அவனுடைய விக்ரமோர்வசீய நாடகத்தில் புரூருவஸ் என்னும் மன்னனுக்கு தேவ லோக அழகி ஊர்வசி, பூர்ஜ பத்திரத்தில் எழுதிய காதல் கடிதம் பற்றிக் குறிப்பிடுகிறான்.

விதர்ப நாட்டு இளவரசி ருக்மிணி எழுதிய காதல் கடிதம் இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டது. கண்ண பிரானுக்கு ருக்மிணி எழுதிய இக்கடிதம் சிசுபாலவதம் என்னும் சம்ஸ்கிருத காவியத்தில் இருக்கிறது.

காதா சப்த சதி என்னும் பிராக்ருத கவிதைத் தொகுப்பில் அழகான காதல் கடிதக் கவிதைகள் உள்ளன. இது தவிர தமயந்தி தன் கணவன் நளனைக் கண்டுபிடிக்க கவிதை வடிவில் அனுப்பிய விடுகதைகள், கவிஞன் காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் எழுதிய விடுகதைக் கவிதைகள் ஆகியனவும் கடித வடிவில் எழுதப்பட்டிருக்கலாம்.ஒரு பெண் காதல் கடிதம் எழுதும் அழகிய சிலை கஜுராஹோவில் இருக்கிறது.

சிவபெருமான் எழுதிய சிபாரிசுக் கடிதம்

அரசியல் தலைவர்களுக்குச் சிபாரிசுக் கடிதம் எழுதும் வழக்கம் இப்போது உள்ளது. இதைத் துவக்கிவைத்தவர் சிவ பெருமான் தானோ என்று எண்ண வேண்டியுள்ளது. சிவ பக்தரான பாணபத்திரர் வறுமையில் வாடவே அவருக்கு பணம் கொடுத்து உதவும்படி சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய சிபாரிசுக் கடிதம் அது. சித்தர் ஒருவர் மூலம் சிவன் இதை பாணருக்கு இதை அனுப்பினார். பாணபத்திரர்- ஏமநாதன் பாட்டுப்போட்டி கதை திருவிளையாடல் என்னும் திரைப்படம் மூலம் ஏற்கனவே பிரபலமான ஒன்று. ஆனால் இந்தக் கடிதம் பற்றி பலருக்கும் தெரியாது. கடிதம் எழுதியதோடு நில்லாமல், சேர மன்னன் கனவிலும் தோன்றி பாணபத்திரரை வரவேற்கவும் சிவன் உதவினார்.

மதிபுலி புரிசை மாடக் கூடல் என்னும் வரிகளுடன் இந்தத் திருமுகம்/ கடிதம் துவங்குகிறது.

மதிபுலி புரிசை மாடக் கூடற்

பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை

யன்னம் பயில்மொழி லாலவாயின்

மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்,

பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்

குரிமயி னுரிமையி னுதவி யொளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைகீழ்ச்

செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க.

பண்பால் யாழ் வல்ல பாணபத்திரன்

றன்போ லென்பா லன்பன் றன் பால்

காண்பது கருதிப் போத்தனன்

மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே

பொருள்: ஆலவாய் எனப்படும் மாடக் கூடலில் வசிக்கும் சிவன் எழுதும் கடிதம் இது. பருவ காலத்து மேகம் போல் வாரி வழங்கும் சேர மன்னனே இக் கடிதத்தைக் காண்க. உன்னைப் போலவே எனக்கு பாணபத்திரனும் அன்பன். அவனுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து அனுப்புவாயாக.

கடிதத்துடன் திருவஞ்சைக் களத்துக்குச் சென்ற பாணரை சேர மன்னனுடைய ஆட்கள் தேடிவந்து கண்டுபிடித்து அழைத்துச் செல்ல ,மன்னனும் பெரும்பொருள் கொடுத்து ஏழடி நடந்து வந்து அவரை வழி அனுப்பி வைத்தான்.( ஏழடி நடந்து வந்து வழி அனுப்புவது வேதத்திலும் திருமணத்திலும்/ சப்தபதி, பத்துப் பாட்டில் கரிகால் வளவன் பாடலிலும் இருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.)

********************************

Mysterious Tamil Bird Man

Mysterious Tamil Bird Man

Indian literature is full of stories about birds. The fables of Panchatantra and Hitopadesha are famous and translated into many languages. The seed for all such stories is in the Upanishads, Mahabharata and Ramayana. But certain stories are embedded so deep in Sanskrit and Tamil books that miss our attention. Tamil Bird Man story found in 2000 year old Sangam literature is one of them. Famous Tamil poet Paranar sang about him in five poems. The verses about the mysterious bird man Ay Eyinan are found in Akananuru (verses 148,181,208 etc). To be praised by Paranar, one must be as great as an emperor. Later poet Avvaiyar praised Athiyaman Neduman Anji just for getting a verse on him from Paranar (Puram 99).  He was paired with another great poet Kapilar.(For more details about Paranar, please read my article No Brahimns, No Tamil).

Ay Eyinan was a friend of a chieftain called Nannan. Nannan was attacked by a king from a neighbouring country. He was so worried about leaving his town unprotected. Ay Eyinan came to his help and protected his town. When Njimili attacked that town, Ay Eyinan was killed in the battle. Immediately a large flock of birds came to protect his body from scorching sun light. When his body was taken, the birds moved with it and sheltered him like an umbrella. He was a friend of birds, probably like our great emperor Vikramadiya who even knew the language of the birds!

Bird Girl

Sakuntala, heroine of the world famous drama Shakuntalm by Kalidasa, was named a bird girl. Sakunta means bird in Sanskrit. Abandoned at birth by her parents Visvamitra and Menaka, Sakuntala was looked after by birds. They encircled her protectively so that she remained unharmed until sage Kanva finds her. Kanva gave her the name Sakuntala, because she was first adopted in a sense by the birds who cared for her (More bird stories are in my article Animal Einsteins Part 1 and Part 2)

Sage who called hundreds of birds

Tiruvannamalai near Chennai is famous for its Shiva temple and sages who lived there. Among the famous poets and sages of Tiruvannamalai are Arunagirinathar, Ramana Maharishi and Seshadri Swagal (1870-1929). Seshadri Swamigal performed a number of miracles and one of them was about birds. Venkatachala Mudaliyar and his wife Subbalakshmi Ammal were his great disciples. One day Swamigal visited them and asked Subbalakshmi whether she would like to watch some fun. When she said yes, he just waved his hands looking at the sky. Hundreds of birds came within minutes and occupied the trees and terrace of nearby houses. All kinds of Indian birds were there. It was 4 pm in the evening. When Subbalakshmi Ammal sympathized with the bird lings in the nests and asked him to send the birds to their nests he just pulled a thread from his towel and blew it in the air. All the birds flew away in a few minutes.

Those who have watched Alfred Hitchcock’s film The Bird may be familiar with such scenes.

********************

 

அதிசயப் பறவைத் தமிழன்!!!

தமிழ் இலக்கியத்தில் உள்ள ஒரு அதிசயப் பறவை மனிதன் பற்றிப் பலருக்கும் தெரியாது. இது 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். பரணர் என்ற ஒரு பெரிய கவிஞர் மட்டும் இந்த விஷயத்தை விடாமல் நாலைந்து பாடல்களில் பாடிவிட்டார். பரணர் வாயால் ஒருவர் பாராட்டப்பட வேண்டும் என்றால் அவருக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாராட்டப் போன போது “பரணன் படினன் கொல்” என்று வியப்படைகிறார் அவ்வையார். நீ பரணனால் பாராட்டப் பட்டவன் ஆயிற்றே (புறம் 99) என்று.

கபிலர்-பரணர் என்று இரண்டு புலவர்களை இணத்தே பேசுவார்கள். சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனோவெனில் தனது மகனையே பரணரிடம் ஒப்படைத்து நீயே கல்வி கற்பி என்று குருகுல வாசத்துக்கு அனுப்பிவிட்டான். இவ்வளவு பெருமை உடைய ஒருவர் வாயால் பாராட்டப்பட்ட  அதிசயப் பறவை மனிதன் யார் தெரியுமா? அவன் பெயர் ஆய் எயினன். அவன் மிஞிலி என்பவனுடன் போரிட்டு உயிர் துறந்தான். அவன் உடல் மீது சூரிய ஒளி பட்டால் உடல் வாடுமே என்று அவன் மீது பறவைகள் ஒன்றுகூடி ப் பறந்து நிழல் செய்தன. இது சங்க காலத்தில் பெரும் அதிசயமாகக் கருதப் பட்டிருக்க வேண்டும். இல்லாவிடில் பரணர் போன்ற ஒரு பெரும் புலவர் இப்படி பல பாடல்கள் பாடமாட்டார்.

ஆய் எயினன் கதை ஒரு சுவையான, ஆனால் சோகமான கதை. அவன் நன்னன் என்பவனின் ஆருயிர் நண்பன். நன்னனை வேறு ஒருவன் எதிர்த்தபோது அவனுடைய ஊரை பாதுகாக்க எயினன் சென்றான். அப்போதுதான் மிஞிலியுடன் போரிட்டு உயிரிழக்க நேரிட்டது. நண்பனுக்கு உதவப் போய் இந்த கதி. தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் நண்பனுக்கு உதவியதால்தான் பறவைகளும் அனுதாபம் தெரிவித்தன போலும். எயினனின் மனைவியர் துயறுற்று அழுதபோது அகுதை என்பவன் மட்டும் வந்து மிஞிலியை தோற்கடித்து அவர்களுக்கு உதவினான்.

அகநானூற்றின் பாடல்களில் மேல் விவரங்களைக் காணலாம்:அகம். 148,181, 208, 396 புறம் 351

கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்

நெடுந்தேர் ஞிமிலியொடு பொருது, களம்பட்டென

காணிய செல்லாக் கூகை நாணிக்

கடும் பகல் வழங்கா தாஅங்கு……. (அகம்.148,பரணர்)

பொருள்: எயினனுக்கு நிழல் குடை பிடிக்க எல்லா பறவைகளும் போயின. ஆனால் கூகைக்குப் பகலில் கண் தெரியாது என்பதால் அந்தப் பறவை மட்டும் போக முடியவில்லை. அதற்காக அது வெட்கப்பட்டது.

ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று

ஒண்கதிர் உருப்பம் புதைய ஓராங்கு

வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு

விசும்பிடை தூர ஆடி, மொசிந்தூடன் (அகம்.181,பரணர்)

பொருள்: ஆய் எயினன் முருகப் பெருமானைப் போன்ற ஆற்றலுடன் நின்று மிஞிலியுடன் போரிட்டான்.இறுதியில் விழுப்புண்பட்டு வீழ்ந்தனன். கதிரவனின்  ஒளிய கதிர்கள் அந்த ஆயின் மேல் படாதவாறு மறையும்படிப் புதிய பறவைகள் வானத்தில் ஒன்றாகக் கூடின. வானத்தில் வட்டமிட்டன.

அதிசயப் பறவைப் பெண்

உலகப் புகழ்பெற்ற சம்ஸ்கிருத கவிஞன் காளிதாசனின் மிக உன்னத படைப்பு சாகுந்தலம் என்னும் நாடகமாகும். அதில் உள்ள கதா நாயகி சகுந்தலா அதிசயப் பறவைப் பெண்ணாவாள். விசுவாமித்திரரும் மேனகையும் பிறந்த குழந்தையைக் காட்டில் விட்டு விட்டுப் போய்விட்டார்கள். கண்வர் என்ற மகரிஷி அந்தப் பக்கம் வந்த போது பறவைகளே உணவு ஊட்டி வளர்த்த பச்சிளம் குழந்தையைக் கண்டு வளர்ப்பு மகளாக வளர்த்தார். அந்தப் பெண் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டுவது என்று யோசித்தபோது அவருக்கு பறவைப் பெண்=சகுந்தலா என்ற பெயரே பொருத்தமாகப் பட்டது. உன்னைப் பறவைகளே ஊட்டி வளர்த்ததால் உனக்கு இப்படி பெயர் வைக்கிறேன் என்று அவரே சொல்லுகிறார்.( ஆலமரப் பறவைகளின் ஒலியை ஸ்ரீ ராமர் அடக்கியது உள்பட ஏனைய பறவைச் செய்திகளை அனிமல் ஐன்ஸ்டைன் Animal Einsteins Part 1 and Part 2 என்ற ஆங்கிலக் கட்டுரையின் இரண்டு பகுதிகளில் காண்க)

சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த பறவை அதிசயம்

திருவண்ணாமலை சாது சந்யாசிகளுக்குப் பெயர் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர், ரமண மகரிஷி முதலிய எத்தனையோ ஆன்மீகப் பெரியார்களின் பாத துளிகள் பட்ட புனித ஊர். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் (1870-1929) என்ற மகான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவருடைய மனைவி சுப்புலெட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள். ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார்  4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். “சுப்புலட்சுமி இங்கு வா, ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன்” என்று சுவாமிகள் சொன்னவுடன் அவர் என்ன வேடிக்கை என்று கேtடுகொண்டே வந்தார். அவர்கள் வீட்டில் 3 மரங்கள் இருந்தன. சுவாமிகள் “பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடk கூப்பிட பறவைகளின்  எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் பெருகிவிட்டன. காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று வித விதமான பறவைகள் வந்துவிட்டன. பக்கத்து வீடுகளில் எல்லாம் பறவைகள் உட்கார்ந்து குரல் எழுப்பின. சுப்புலட்சுமி அம்மாள்,, அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவைகள் எல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்கவே, அப்படியா இதே போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதிப் போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. விக்ரமாத்திதன் கதையில் படிப்பது போல சுவாமிகளுக்கும் பறவைகளின் மொழி தெரியும் போலும்!!

ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் பறவைகள் (Alfred Hitchcock’s film The Bird ) என்ற படத்தைப் பார்த்தவர்களுக்கு ஏராளமான பறவைகள் என்றால் என்ன என்பது எளிதில் விளங்கும்.

*****************

முதல் திராவிட ராணி:கி.மு.1320

Kerala Royal Lady-Painting by Raja Ravivarma

திராவிடா என்ற ஒரு பெண்ணின் பெயர் மிக மிகப் பழைய பெயராக சம்ஸ்கிருத இலக்கியத்தில் இடம்பெறுகிறது. இவர் திராவிட நாட்டிலிருந்து சென்ற அரச குலப் பெண்ணாக இருக்க வேண்டும். இவர் த்ருணபிந்து என்பவரின் மகள். விஸ்ரவஸ் என்பவரின் தாய். இந்த வம்சங்களை ஆராய்ந்து பர்ஜிட்டர் (parjiter)  போன்ற புராண ஆராய்ச்சியாளருடன் ஒப்பிடும்  ஆர்.மார்ட்டன் ஸ்மித் (R. Morton Smith: Dates and Dynasties in Ancient India, Motilal Banarsidas)  இப்படி வரிசைப்படுத்துகிறார்.

த்ராவிடா—விஸ்ரவஸ்—விசால—ஹேமசந்திர—உசந்திர—தூம்ராஸ்வ—ஸ்ரீஞ்சய—சஹதேவ—க்ர்சாஸ்வ—சோமதத்த—ஜனமேஜய—ப்ரமாதி

ப்ரமாதி என்ற மன்னன் தசரதனின் தந்தையான அஜன் காலத்தவன். மார்ட்டன் ஸ்மித் கணக்குப்படி த்ருண பிந்துவின் காலம் கி.மு.1320. இந்த அரசர் வரிசை புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய கதைகளிலுள்ள மன்னர்களுக்கெல்லாம் காலம் கணித்த பின்னரும் நாம் மட்டும் புத்தர் காலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) முதல் வெள்ளைக்காரர் எழுதிய சரித்திரத்தையே இன்று வரை படித்து வருகிறோம். உண்மையில் ராமர், தசரதர் காலம் எல்லாம் இதற்கும் முன்னிருக்க வேண்டும். ஆனால் மார்ட்டன் ஸ்மித் , பர்ஜிட்டர் போன்றவர்கள் ஒவ்வொரு மன்னனுக்கும் 20 முதல் 30 ஆண்டு மட்டுமே ஒதுக்கியும் கூட அவர்கள் காலம் கி.மு.1300ஐ ஒட்டிச் செல்கிறது!

ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. விஜயன் என்ற மன்னன் இந்தியாவின் ஒரிஸ்ஸா/ வங்காளப் பகுதிலிருந்து நாடு கடத்தப் பட்டு இலங்கையை அடைந்தவுடன் அவனுக்கும் அவனுடைய மந்திரிகளுக்கும் மணம் முடிக்க பெண்கள் இல்லை. பாண்டிய நாட்டுப் பெண்கள்தான் அங்கு சென்று அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டனர் என்று இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சம் என்ற நூலில் உள்ளது. இது நடந்தது கி.மு ஐந்தாம் நூற்றாண்டு.

மன்னர்கள் பல நாட்டுப் பெண்களை மணப்பது தொன்று தொட்டு நடந்துவருகிறது. காந்தார (ஆப்கனிஸ்தான்) நாட்டுப் பெண்ணான காந்தாரியை திருதராஷ்ட்ரன் மணந்தான். கேகய (ஆப்கனிஸ்தான் /ஈரான்) நாட்டுப் பெண்ணான கைகேயியை தசரதன் மணந்தான். செல்யூகஸ் நிகடார் என்ற கிரேக்க மன்னனின் மகளை மௌர்ய சந்திர குப்தன் மணந்தான்.

மஹாபாரத வீரன் அர்ஜுனன் மணக்காத இனமே இல்லை. அர்ஜுனன் பாண்டிய குமாரியை மணந்ததாக நாட்டுபுற பாடலும் உண்டு. (அர்ஜுனனும் வந்துவிட்டார் அல்லி ராணி).

2000 ஆண்டுகளுக்கு முன் அகத்திய மகரிஷி தென்கிழக்காசிய ( நாக நாட்டு) மங்கையை மணந்து அங்கு இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அது முஸ்லீம்கள் வரும் வரை 1300 ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால் லோபமுத்ரா என்ற பெண்ணை மணந்த ரிக் வேத அகத்தியர் வேறு. மணி மேகலை கதையிலும் இதே போல நாகநாட்டு மங்கை பீலிவளையைச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணந்த வரலாறு வருகிறது.

பாண்டியர் –குஜராத்தி தொடர்பு

“ஆவஸ்யக சூர்னி” என்ற சமண மத நூல் ஒரு அரிய தகவலைத் தருகிறது. மதுரைக்கும் சவுராஷ்ட்ர தேசத்துக்கும் (குஜராத்தின் ஒரு பகுதி) இடையே தொடர்ந்து கப்பல் போக்குவரத்து இருந்ததாகவும் பாண்டு சேனன் என்ற மதுரை மன்னன் தனது இரண்டு மகள்களுடன் சென்றபோது புயல் காற்று வீசி கப்பல் உடைந்தவுடன் முருகனையும் சிவனையும் வேண்டிக் கொண்டதாகவும் கூறுகிறது. முருகனும் சிவனும் தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதோடு அவர்கள் இருவரும் தமிழ் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்ததாகவும் நாம் படிக்கிறோம். ஆக, இது சங்க காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்றும் கருதலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன் கடல் பயணத்தில் இறந்ததையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

மதுரை மன்னன் மலயத்வஜ பாண்டியன் சூர சேன (குஜராத்) மன்னன் மகளான காஞ்சன மாலாவை மணந்து மீனாட்சியைப் பெற்றெடுத்தான். இதிலிருந்துதான் தற்கால மதுரையின் வரலாறே துவங்குகிறது. மதுரையைச் சுற்றி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டால் மலயத்வஜன் காலமும் 2000 ஆண்டுகளுக்கு முந்தியதே.

(திராவிடம் என்பதை இப்போது அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சொல்லுடனும், வெளிநாட்டார்,  நம் மீது திணித்த ஆரிய திராவிடவாதச் சொல்லுடனும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சங்க இலக்கியத்திலும் பழைய வடமொழி நூல்களிலும் ஆரியர் என்பது முனிவர்கள் வாழும் பகுதி, வட நாடு, பண்பாடுமிக்கவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. திராவிடம் என்பது தென் பகுதியைக் குறிக்கும் சொல். இப்போது ஆங்கிலத்தில் மத்திய கிழக்கு, தூரக் கிழக்கு என்றெல்லாம் பெயரிட்டது போல இது ஒரு நிலவியல் சொல்.)

தசரதன் எழுதிய கடிதங்கள்

எகிப்து நாட்டு அரசனுக்கு இரண்டு பெண்களை மணம் முடித்த தசரதன் (Tushratta கி.மு.1354) என்ற மன்னனின் கடிதங்கள் மிகவும் புகழ் வாய்ந்த கடிதங்கள். அவை 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இவை விக்கி பீடியா போன்ற தளங்களில் முழு விவரங்களுடன் கிடைக்கும். மிட்டன்னி மன்னனான தசரதன் தனது சகோதரி ஜிலுகிபாவையும்(Gilukhipa), மகள் ததுகிபாவையும்(Tadukhipa) எகிப்பதிய மன்னன் மூன்றாம் அமணதேவனுக்கு( Amenhotep III)  மணம் முடித்தான். இதற்குப் பின் அவன் எழுதிய 10 கடிதங்கள் மிகவும் சுவையானவை. இப்பொது கியூனிபார்ம் எழுத்தில் மியூசியத்தில் உள்ளன. நமக்குத் தெரிந்து 4, 5 தசரதன்கள் இருப்பதால் இவர் ராமாயண தசரதனுக்கு முந்தியவரா பிந்தியவரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். மிக மிகப் பழமையான கலப்பின கல்யாணம் இதுதான். எகிப்து நாட்டுக்கே மிஸ்ரம் (கலப்பின) நாடு என்றுதான் பெயர்.

வட மொழி தென் மொழி நூல்கள் ஒரு உண்மையை மறைக்காமல் ஒத்துக் கொள்கின்றன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்சாவதாரம் தென்னாட்டில்தான் நடந்தது என்ற கதை வடமொழிப் புராணங்களிலேயே உள்ளது. திருஞான சம்பந்தரும் அவர் பிறந்த சீர்காழியைத் “தோணிபுரம்” (Boat City) என்றும் பிரளய காலத்தில் தோனி (Noak’s Ark) ஒதுங்கிய இடம் என்றும் பாடுகிறார். கடல் கோளும் சுனாமியும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் தென்னாட்டு / திராவிட ராணிகள் பல நாடுகளுக்குச் சென்றது உண்மையே என்று அடித்துக் கூறலாம்.

தமிழ் இலக்கியங்களில் தென்னவன் என்ற சொல் யமனையும் பாண்டியனையும் ராவணனையும் குறிக்கும். இலங்கை ராவணன் , மிதிலைப் (பீஹார்- நேபாள எல்லை ) பெண்ணான சீதையைக் குறிவைத்ததும் இதனால் அன்றோ. ராமனுக்கெல்லாம் முன்னோனான அஜன் — இந்துமதி ஸ்வயம்வரத்துக்கு பாண்டிய மன்னனும் வந்ததாக புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் பாடுகிறான். அவனும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். ஆக இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு வழக்குதான்.

*****************************

தாவரங்களின் அறிவு!

ச.நாகராஜன்

 

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

 

தாவரங்களுக்கான ‘ப்ளாண்ட் நியூரோ பயாலஜி’ எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

 

“பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு” என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால்  தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

 

“மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது,எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன” என்று மேலும் அவர் கூறுகிறார்!

 

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

 

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர்.அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

 

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம்.தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ‘ப்ளாண்டாய்ட்’ தான்  செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை  செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.

 

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது.ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

 

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

 

‘தி சீக்ரட் லைப் ஆ·ப் ப்ளாண்ட்ஸ்’ என்ற திரைப்படம்  ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது.தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும்  உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் ‘அறிவுள்ள தாவரங்கள்’ பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

 

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ‘ப்ளாண்ட் நியூரோபயாலஜி’ என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

 

பத்து லட்சம் யூரோக்கள் ( ஒரு யூரோ என்பது சுமார் ஐம்பத்தைந்து ரூபாய்கள்) இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

 

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி,” இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது” என்கிறார்.

 

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று!  இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

 

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது!இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!

 

-தொடரும்

(என் சகோதரர் ச. நாகராஜன் எழுதும் கட்டுரைகளும் இங்கே தொடர்ந்து வரும்)

 

 

 

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு

உலகில் உள்ள பழைய மொழிகளில் கிரேக்க மொழியும் ஒன்று. தமிழை விட பழமையான நூலை உடையது. ஆனால் சம்ஸ்கிருதத்துக்கு மிகவும் இளைய தம்பி. தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி.மு. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் கிடைக்கும் பழமையான நூல்கள் ஹோமர் எழுதிய இலியட், ஆடிசி என்னும் இரண்டு இதிஹாசங்களாகும் அவை கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சம்ஸ்கிருதத்தில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் ரிக் வேதம். அதன் காலம் கி.மு. 1500.

 

கிரேக்க மொழி இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது சம்ஸ்கிருத மொழியுடன் நெருங்கிய தொடர்புடைது. தமிழோ அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. மஹா அலெக்சாண்டர் கி. மு.326-ல் இந்தியா மீது படை எடுத்த பின்னர்தான் கிரீஸ் நாட்டுக்கும் நமக்கும் தொடர்பு ஏற்பட்டதாக சிலர் எழுதிவைத்தனர். அது தவறு. அதற்கு முன்னரே தமிழ் சொற்கள் அந்த மொழியில் கலந்துவிட்டன. வட மொழிச் சொற்களும் உள்ளன. ஆனால் கிரேக்கமும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால் சம்ஸ்கிருதத்தை யாரும் பெரிது படுத்துவதில்லை.

மொழி ஒரு புறம் இருக்க, பழக்க வழக்கங்களிலும் இதிஹாசக் கதை விஷயங்களிலும் இந்தியா கிரேக்க ஒற்றுமை பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதலில் மொழித் தொடர்புகளைக் காண்போம். இவைகள் அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னரே கிரேக்க மொழியில் உள்ள்வை. பல சொற்கள் இலியட், ஆடிசி நூல்களில் காணப்படுகின்றன.

 

இதற்கு கீழ்கண்டவாறு விளக்கங்கள் கூறலாம்:

  1. நாம் வட மொழி, தென் மொழி சொற்கள் என்று கருதுவன எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை. அதனால்தான் கிரேக்க மொழியில் பழந்தமிழ் சொற்களும் பழைய சம்ஸ்கிருத சொற்களும் உள்ளன.
  2. அல்லது நாம் பழந்தமிழ் சொற்கள் என்று கருதுபவையும் சம்ஸ்கிருத சொற்களே. அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க மொழியிலும் உள்ளது.
  3. அல்லது இரு வேறு மொழி பேசுவோர் வாணிபம் செய்யச் சென்றதால் அங்கே மொழிக் கலப்பு ஏற்பட்டிருக்கலாம்.

நான் முதலில் உள்ளதையே நம்புகிறேன். தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திருந்து வந்தவையே. கிரேக்க நாட்டில் பல நாட்டு மக்கள் குடி ஏறி இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

 

இந்திய-கிரேக்க உறவு, மொழியோடு மட்டும் நிற்கவில்லை என்பதை பல கோணங்களில் விளக்குவேன்.

PALEO: (Palaeo botany, Palaeontology ).இது பழைய என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

TELE: தொலை தூரம், தொலைக் காட்சி, தொலை பேசி என்பதெல்லாம் டெலி என்பதுடன் தொடர்புடையவை. டெலி என்பதை நாம் தொலை(வு) என்று சொல்கிறோம்.

NEREIDS: நெரைட்ஸ் என்பது நீர்த் தேவதைகளைக் குறிக்கும். நாராயணன் என்பவன் நீரில் மிதப்பதால் அப் பெயர் பெற்றான். விஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது கடலில் மிதப்பதாக இந்து மத புராணங்களும் வேதமும் கூறும். நீர் என்னும் சொல் ரிக் வேதத்திலும் கிரேக்கத்திலும் உள்ளது. இதை தமிழிலிருந்து சம்ஸ்கிருதம் கடன் வாங்கியதாக சிலர் எழுதிவைத்தனர். அது தவறு.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திருந்து வந்ததால் இரு மொழிகளில் மட்டும் இன்றி கிரேக்க மொழியிலும் நீர் உள்ளது. ஒரு சொல் கிரேக்கத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இருந்தால் அது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று மொழிநூலார் முத்திரை குத்தி விடுவார்கள். இனி இதை திருத்தி எழுத வேண்டும்.

ORYZA SATIVA: அரிசியின் (botanical term) பெயர். இது அலெக்ஸாண்டர் காலத்துக்கு முன்னமே கிரேக்கத்தில் உள்ளது.

CLEPTO: க்லெப்டோ என்பது களவு என்றாகும். ப –வும் வ- வும் உலகிலுள்ள ஏராளமான மொழிகளில் இடம் மாறும். (இது பற்றி தமிழன் காதில் பூ என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க.)

ODOMETER: ஓடு என்ற தமிழ் சொல்லுடன் தொடர்புடையது. எவ்வளவு தூரம் பயணம் செய்தது என்பதைக்காட்டும் மீட்டர்.

SYRINX: சுரங்கம் என்பதுடன் தொடர்புடைய சொல்.சுருங்கிய இடம்.

DOLIA (sthali-sanskrit)=தாழி= நீண்ட என்று பொருள். நீளமான ஜாடி.

PENELOPE: நப்பின்னை,Nappinnai= பின்னல் pinnal=பின்னு செஞ்சடையாள்

AMPHORAE: ampanam, அம்பணம் padi படி, barani பரணி, amparam அம்பாரம் போன்ற கொள்கலன்

ALPHA: First letter of Greek Alphabet: AA (Cow) ஆ/ பசு (பழைய மொழிகளில்)

BETA: veedu வீடு (பழைய மொழிகளில்).

 

1954 ஆம் ஆண்டில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து: I am adding a few more points from “Tamil Loan Words in Greek” by F.Legrand (Tamil Culture, Volume III, No 1, January 1954):

Oryza=oriza அரிசி (Latin) = Riz (French) = Rice (English) = Riso (Italian) = Arrez (Spanish)

PEPPER=பிப்பலி=pippali (Tamil)=Piperi (Greek)= Piper (Latin) ஆனால் இந்தச் சொல் சங்கத் தமிழில் கிடையாது. Milaku மிளகு and Kari கரி என்ற சொற்களே உண்டு.

GINGER = இஞ்சி வேர் inji+ver (Tamil)= Zinziberi (Greek)=Gingiber (Latin),

MALABATHRUM= மலபத்ரம் cinnamon leaf from Malabar is Malabathrum (Latin). (My opinion is it is a Sanskrit word Malabar/Malaya + Pathram) இது வடமொழிச் சொல்.

SANDAL = சாந்து Santalon (Greek)= Santhu சாந்து (Tamil)= Chandana (Sanskrit)

F.Legrand says that the Hebrew word Almug Trees (Old Testament, Bible) identified with Valgu வல்கு for Sandal is a Sanskrit word. எபிரேய மொழியில் அல்மக் மரம் என்பது வடமொழிச் சொல்லான வல்கு என்று லெக்ராந்த் சொல்லுகிறார்.

(He pointed out that the word Palais (Paleo) for old pazaiya in Tamil is found in Homer.

Legrand also pointed out that Nereus, God of the Sea, is found in Hesiod’s Theogony.)

TYRANNES (Powerful)=Thiran திறன்  (Tamil)

PATHOS (suffering)=படு Legrand compares it with Patu in Tamil. But I think it is a Sanskrit word similar to Vathai வதா/ வதை (vatha). But it is possible that both Tamil Patu and Sanskrit Vatha come from same source.

AROO (cultivate, plough)= அறு/ ஏரு Legrand says it is similar to Aru (cut, harvest). But I think it is closer to ERU (plough)

Legrand argues that Pagu, Paguthi, Pangu are all cognates of Pagos (greek) pagus (Latin). Probably he did not know that Pagam பாகம் is a Sanskrit word.

He argues Gynae<Gune for woman is Tamil. He points out it Pen பெண் in Tamil becomes Hennu ஹன்னு in Kannada and Gyne in European languages. But the linguists will see Kanya கன்யா / கன்னி in Sanskrit and Gynae closer.

ANTHROPOS = ANER (Greek)= aan ஆண் in Tamil (Anthropology= மானுடவியல்)

CHEIR (Gk) =kai கை in Tamil Kara கர in Sanskrit. Probably both have some common root.

PAIDI (Gk) =Boy=Page= paiyan பையன்

GALA = Gala காலா means milk. He argues that Halu ஹாலு in Kannada is similar to Pal பால் in Tamil. He says that if we understand G=H=P changes then we can trace many more words.

Megas= மஹா Great / Big. But it is Sanskrit (Maha). Tamil use Ma மா for big;May be from a common source.

 

மயிலை சீனி வேங்கடசாமியும் சில சொல் ஒற்றுமைகளை அவரது கட்டுரையில் எழுதியிருக்கிறார்:

மத்திகை= குதிரை ஓட்டும் சம்மட்டி, சுருங்கை=பாதாள சாக்கடை, கலம்=படகு, கன்னல் (கடிகாரம்)=க்ரோனோஸ், ஓரை/ஹோரை=Hour

எழினி=யவனிகா-எவினி=திரைச் சீலை

ட்ராய் (Troy) என்பது கிரேக்க இதிஹாசத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நகரம். இது துறை என்பதன் மாற்று வடிவம்.

 

(பகுதி இரண்டில் பண்பாட்டு ஒற்றுமைகள் விளக்கப்படும்)