Kannaki and Andal Weddings

Kannaki & Kovalan pictures from Poompuhar Art Gallery;Picture courtesy: Vijayan

Three Beautiful Tamil Hindu Weddings- Part 2

( Please read first part before reading the second part: swami )

We saw, in the first part, the beautiful descriptions of two weddings that happened 2000 years ago in Tamil Nadu. Another beautiful wedding scene is in the Tamil epic Silappadikaram. This is the most famous epic of the five Tamil epics. The wedding scene of Kannaki- Kovalan is quite a contrast to the scenes from the Akananuru. Here we see the ceremony of going round the fire, Vedic Mantras etc. This is like a typical Tamil Brahmin wedding that is celebrated today. But Kannaki and Kovalan were the daughter and son of two big Tamil merchants. They were not Brahmins. They lived in a city famous for its maritime trade.

The author of the epic was poet Ilango. Like I mentioned in the first part, the wedding was celebrated sometime in the second century AD. But no linguist will date the epic at 2nd century AD. The style of the language, Sanskrit words and knowledge of various fine arts copied from Sanskrit sources—all point to fifth or sixth century AD. Since Vashista Mahrishi’s wife Arundhati is referred to as the chaste woman in Sangam Tamil literature in several places, fire ceremony may have existed in Sangam Time. Seeing Arundhati star in the night of the wedding day is part of Hindu wedding ceremony.

Let’s look at the wedding now:

“Fair maidens seated on an elephant’s neck were sent forth, to invite to the wedding all those lived in the great city. As they went forth into the streets, drums were beaten; mirudangams were sounded; conches were blown; and white umbrellas were lifted high in the sky as if in kingly procession. O, how enchanting was their entry into the pavilion, glimmering with the pearls beneath the canopy of blue silk and with dazzling pillars, decked with diamonds and beautified by overhanging garlands! This was the day the moon moving in the sky approached the star Rohini, when Kovalan who walked around the holy fire in accordance with scriptural injunctions as directed by the revered priest, approached his bride, divinely fair, resembling the star Arundhati. How fortunate were those who enjoyed such a splendid sight!”

“ Lovely maidens bringing spices and flowers, spoke and sang, and looked bewitching. Women with full breasts and glowing tresses took with them sandal paste, frankincense, perfumes and powders. Ladies with lovely teeth bore lamps, vessels and Palikai pots of tender shoots. These maidens who looked like golden creepers and whose hair was decked with flowers, showered blossoms on the bridal pair, saying May you live a flawless life, with a love that knows no separation, and held in close and un relaxing embrace”.

“Then they led Kannaki, the Arundhati of this vast world, to the auspicious nuptial bed with the prayer that the royal tiger emblem, engraved on this side of the Himalayas, might remain forever on the golden crest of the mountain.”

All the three weddings narrated so far were on Rohini star day. But in Kannaki-Kovalan wedding we see the class difference in the ancient Tamil society. The first two were done on sandy floor under a thatched shed. This one was in a dazzling hall decked with diamonds.

Rohini in the Vedas:

Rohini star is an auspicious star according to the Vedas (Vedic Index, Vol. I, page 415).  It is in Brihat Jataka as well. Rohini was the favourite of the 27 wives of the moon. Palikai pots are part of Hindu ceremonies even today. The Bodhayana Grihya sutras mentions five palikais for purpose of marriage.

Andal’s dream of a divine wedding

Andal, one of the glorious Tamil poetesses, lived in the seventh century AD. She fell in love with Lord Vishnu and in her dream she saw her wedding. It is in Varanam Ayiram of Divya Prabandham. This is sung in all Vaishnavaite Brahmin weddings even today. The beauty of Varanam Ayiram is all the steps in today’s wedding ceremony are described in the same sequence.

Arrival of the bridegroom, Betrothal ceremony, arrival of the bride, bridegroom’s sister’s role, the red colour special sari, grasping the hand (Pani Grahanam), Havan/Fire Ceremony, Chanting of Vedic Mantras, Walking around the fire in seven steps (Saptapati), Puffed rice Homam (laja homam)- all these are described in beautiful Tamil verses. This is a wonderful Tamil verse, that too coming from a wise girl, who lived 1300 years ago. Tamil women must be proud of Andal.

Avvaiyar,Andal and Karaikal Ammaiyar are proof for the good education of women in ancient India. Though we have a score of Vedic poetesses and nearly the same number of Sangam Tamil poetesses, Andal’s place is unique in Tamil literature. Her Tiruppavai and Nachiyar Tirumozi were the most popular parts of 4000 Divya Prabandham verses.

Picture shows Saptapati in a Bengali wedding

Varanam Ayiram shows the role of dream in Tamil culture. Lord Vishnu come to marry our poetess Andal with thousand (Ayiram) elephants (Varanam). That is why this piece is called Varanam Ayiram. Purna Kumbham (Holy water pots), Toranams (Decorative streamers),Wedding dais decoration with betel nut trees, Kurai Pudavai (sacred red colour sari that is worn by Hindu goddess), Kankanam (Kaappu mentioned in Akananauru verse), Lighting the holy fire, Walking in seven steps around it in a circle, Stepping on a grinding stone (ammi) to show their steadfastness, Kunkumam (red colour powder) and sandal paste, wedding procession around the city—all these are beautifully described by Andal. This is every girl’s dream in the world. Whoever reads this will get married in a grand ceremony like this is the belief of Tamil Hindus.

 

**********

Three Beautiful Tamil Hindu Weddings

Tamil Actress Sneha on her wedding day

By London swaminathan

How did the ancient Tamil Hindus celebrate their weddings? There are three beautiful wedding scenes in Tamil literature: Akananauru, Silappadikaram and Divyaprabandham.

Two thousand year old Sangam Tamil literature describes Tamil Hindu weddings in two beautiful verses in Akananauru (verses 86 and 136). The poets bring the wedding ceremony in front of our eyes. Anyone who reads those poems can visualise that day. It is like a live running commentary.

In the first verse (86), poet Nallavur Kizar describes the food and the dress. There was a huge heap of rice cooked with black gram (Pongal). There was a wooden shed (pandal) with fresh sand from the river banks spread. Since they believed in astrology and auspicious days ,it was celebrated on the day when Rohini star was with the moon. Since they were orthodox Hindus they lighted lamps even though it was celebrated in the day time. Bridegroom and bride were adorned with flower garlands. Some women were carrying the pots on their head, others bearing new, broad bowls, handed them one after another, while fair elderly dames were making noise. Mothers of sons, with bellies marked with beauty spots, wearing beautiful ornaments, poured water on the bride, so that her black hair shone bright with cool petals of flowers and rice grains (probably yellow rice called Akshatai). They blessed her saying ,’do not swerve from the path of chastity, be serviceable in various ways to your husband who loves you and live with him as his wife. They greeted her ‘Dirgha Sumangali Bhava: in Tamil– Per Il Kizaththi Aguka’–.On the night after the marriage ceremony was over, the neighbouring ladies assembled and sent her to the arms of her lover, to which she went with trepidation ( This is the Shanti Muhurtham alias First Night).

Picture shows Soundarya Rajinikant’s wedding

In another verse136, poet Vitrutru Mutheyinanar says, white rice well cooked with plenty of ghee was served generously to the elders. Since Tamils believed in astrology, the poet remarks, the omens shown by the birds were propitious. It was a bright morning. The moon was in faultless conjunction with the Rohini star. The marriage house was decorated. They worshiped God. The big drums sounded with wedding tunes. Excited women were peeping without a wink with their flower like eyes at the bride who had been bathed. The image (to be worshiped) was made of big flower petals. Clear like a gem that has been well washed, was placed on the soft Vagai flower with the double leaf and the Arukam grass. It was decked with cool, sweet flower buds and white thread clothed with holy cloth, so as to look grand. The bride was seated on the fresh sand under the Pandal ( A thatched shed made over a row of wooden poles). The bride was perspiring with loads of ornaments. They fanned her to dry the wet.( I have used the translations given in History of the Tamils by  PT Srinivasa Iyengar).

Though tying the knot (Thaali=sacred yellow thread around the neck of the bride) is not mentioned  a few other verses hint at it. But no priests, no fire ceremony or no circumambulation of the sacred Fire were mentioned. One can understand it when one understands the caste differences that existed in those days. Since the Tamil epic Silapadikaram mentions the fire ceremony etc we can’t conclude it was never done. Most of the scholars put Silappadikaram event in the Sangam age. But the writing of the epic was dated between 3rd century and 7th century.

What is very clear in the above two Sangam Tamil verses is the Tamils believed in God and astrology. They used lot of vegetarian food and flowers during weddings. Ornaments and decorations, respect for elders are all like modern day weddings. The bride wore a thread (protective Kaappu) and new dress after a shower. Music was part of Tamil Hindu weddings.

(In part 2 Wedding Scenes of Kannaki and Andal are discussed).

Contact swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ராம பக்தனான ஹனுமானை ஸ்வாதி நட்சத்திரத்துடன் ஒப்பிடுகிறார் மாமுனிவர் வால்மீகி. அதிசயமான ஸ்வாதி நட்சத்திரம் மர்மத்தைப் பார்ப்போம்!

 

நட்சத்திர அதிசயங்கள்!

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ச.நாகராஜன்

 

அதிசயமே ஸ்வாதி

 

27 நட்சத்திரங்களுல் 15வதாக இடம் பெறும் ஸ்வாதி நட்சத்திரம் ஒரு அதிசய நட்சத்திரம். இது துலா ராசியில் உள்ளது. பெரிய பெரிய மகான்களுடனும் ஆசார்யர்களுடனும் தொடர்புடைய இந்த நட்சத்திரம் வால்மீகி முனிவரால் அதிசயமான விதத்தில் குறிப்பிடப்படுகிறது.

 

ஸ்வாதி போல முன்னேறுவேன்

 

சப்த ரிஷி  மண்டலத்தின் தென் கிழக்கில் ஒரு அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது.இதை பூடஸ் என்று மேலை நாட்டு வானியல் குறிப்பிடுகிறது. இந்த ஆல்பா பூடஸ் செக்கச் சிவந்து ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். இதையே மேலை நாட்டின்ர் ஆர்க்ட்ரஸ் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இதையே நாம் ஸ்வாதி என அழைக்கிறோம்! குரங்கு போன்ற வடிவமுள்ளதாக இதை நம் முன்னோர் கண்டுள்ளனர்!

 

வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப் போல நான் செல்வேன் என்று ஹனுமான் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 67ம் ஸர்க்கம் 20ம்  சுலோகத்தில் சொல்வது (பவிஷ்யதி ஹிமே: யதா ஸ்வாதே: பந்தா இவாம்பரே) பொருள் பொதிந்த வார்த்தை. வாயு புத்திரனான ஹனுமான் குரங்காக அவதரித்ததை அனைத்து தேச மக்களும் அறிந்திருக்கின்றனரோ என்று எண்ண வைக்கும் விதத்தில் ஆர்க்ட்ரஸ் நட்சத்திரத் தொகுதியை பண்டைய எகிப்து நாட்டினர் குரங்கு போன்றது என்றும் சீனர்கள் கன்னியா ராசி அருகில் உள்ள குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர். வான மண்டலத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கும் நவீன கால கிரிமால்டி கேடலாக்கில் எகிப்து தேசத்தினர் குரங்கு எனக் குறிப்பிடுவதை 29 எண்ணுடைய நட்சத்திரமாகவும் சீனர்கள் குரங்கு வடிவம் என குறிப்பிடுவதை 142,143 எண்ணுடைய நட்சத்திரங்களாகவும் இந்த கேடலாக்கில் காணலாம்!

 

ஸ்வாதி பவனோ

 

இந்த ஸ்வாதி நட்சத்திரம் சாதாரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி முடிய சூரியனுடன் இணைகிறது. அப்போது இந்தியாவில் பயங்கரமான சூறாவளியும் புயல் காற்றும் ஏற்படுவது வழக்கம். 1864ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று மசூலிபட்னத்தில் ஏற்பட்ட கோரமான சூறாவளியால் கடல் கொந்தளித்து 30000 பேர் பரிதாபமாக நீரில் முழ்கி சில நிமிடங்களுக்குள்ளாகவே மாண்டனர். ஒரிஸாவில் அக்டோபர்-நவம்பரில் ஏற்படும் புயல் மற்றும் சூறாவளியை மக்கள் ஸ்வாதி பவனோ (ஸ்வாதிக் காற்று) என்றே குறிப்பிடுகின்றனர்.

 

ஸ்வாதிக்கும் வாயுவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது! ஸ்வாதியின் அதி தேவதை வாயு! வேதம் ஸ்வாதி நட்சத்ரம் வாயு தேவதா எனக் குறிப்பிடுகிறது. புராண இதிஹாஸங்களில் மருத் தேவதைகளே ஸ்வாதியாகக் குறிப்பிடப்படுகிறது. சாந்தி கல்பம் என்னும் நூல்  ஸ்வாதியை எப்பொழுதும் வடக்கு முகமாகவே நகர்வது என விவரிக்கிறது.

 

வான மாணிக்கம்

 

ஸ்வாதி என்றால் வாள் என்று பொருள்.  வாயு தேவன் கையில் வாள் சித்தரிக்கப்படுகிறது. ‘நிஷ்டா’ அல்லது ‘நிஷ்த்யம்’ என்னும் இருளை சுவாதியின் ஒளிக் கிரணங்கள் அகற்றி விடுமாம்! அதாவது தமஸ் என்னும் இருளை ஜோதி என்னும் ஒளி நீக்கி விடும். (தமஸோ மா ஜ்யோதிர் கமய – இருளிலிருந்து ஒளிக்கு எங்களை இட்டுச் செல் என்பது வேத பிரார்த்தனை)

 

அற்புதமாக வானில் பிரகாசிக்கும் ஸ்வாதி வான அதிசயம் தான்! கோரல் சிவப்பு, குங்குமச் சிவப்பு ஸ்கார்லெட் சிவப்பு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மாணிக்கமே சுவாதி. ஆகவே தான் இது வான மாணிக்கம் என்று போற்றப்படுகிறது. அராபியர்கள் இதை ‘சுவர்க்கத்தின் காவலன்’ என வர்ணிக்கின்றனர்.பைபிளும் ஆர்க்ட்ரஸை வெகுவாகப் புகழ்கிறது.இதன் குறுக்களவு பேராசிரியர் மிகல்சனால்19 கோடி மைல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும்!

 

திருவோண நட்சத்திரம் விஷ்ணு பதம் எனக் குறிப்பிடப் படுவதை முன்பே பார்த்தோம். அதன் அருகில் உள்ள மருத் தேவதைகளே ஸ்வாதியாக விளங்குகிறது. விஷ்ணுவின் பக்கத்தில் அவனது பக்தனான ஹனுமான் அமைந்திருப்பது பொருத்தம் தானே!

மாத்வ சம்பிரதாயத்தில் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.ஹனுமனை சிறப்பாக வழிபடுவது மாத்வ சம்பிரதாயத்தில் இடம் பெறுகிறது, வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும் என்று அது கூறுவது குறிப்பிடத் தகுந்தது.

 

ஹனுமத் ஜெயந்தி என ஹனுமான் அவதரித்த தினத்தை இந்த நட்சத்திரத்தின் சஞ்சாரத்தை வைத்தே நிர்ணயிக்கின்றனர்!

சுவர்க்கத்தின் நுழைவாயில் என்றும் பிரபஞ்சத்தின் தலைநகரமான விஷ்ணுலோக வாயில் என்றும் போற்றப்படும் ஸ்வாதியையும் ஹனுமானையும் தொழுது அனைத்து நலன்களோடு விஷ்ணுவின் அருளையும் பெறலாம்!

 

***********************

 

வடக்கே தலை வைக்காதே!

(This article is available in English as well: London Swaminathan)

வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று இந்து மத சாத்திர நூல்கள் கூறுகின்றன. சதாசாரம் என்னும் நூல் நாம் அன்றாடம் பின்பற்றவேண்டிய பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மற்ற திசைகளில் தலை வைத்துப் படுக்கலாம். இந்த சாத்திர விதிக்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உண்டா என்று கேட்டால் “உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.

காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்

புல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த மாட்டு மந்தையோ மான்கள் கூட்டமோ உயர் அழுத்த மின்சாரம் (High Voltage Pwer lines) செல்லும் கம்பிகளுக்குக் கீழாக வந்தால் இப்படி ஒரே திசையில் நிற்காமல் வெவ்வேறு திசையை நோக்கி நிற்பதும் கூகுள் படங்கள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலும் அவை வடக்கு தெற்கு அச்சுக்கு அணுசரனையாகவே நிற்கும். ஆனால் மின்சார கம்பிகளுக்கு 30 மீட்டருக்குக் கீழாக வந்தால் இது மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?

மாடுகள், மான்கள் மற்றும் வௌவால் போன்ற பல பிராணிகளின் உடலிலும் பறவைகளின் மூக்கிலும் காந்தம் (magnetite) இருப்பது தெரிகிறது. இந்த காந்த துருவங்கள் மின்சாரக் கம்பிகள் வெளிவிடும் அலைகள் மூலமாக “extremely low-frequency magnetic fields” (ELFMFs) திசை மாறும் என்பது தெரிந்ததே.

பூமி என்பது மிகப் பெரிய காந்தம். இப்போது நாம் மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். நம் உடம்பிலும் காந்தம் இருக்கிறது. நாம் தூங்கும் போது நம்முடைய தலையை வடக்கே வைத்தால் அது நம்மை பாதிக்கும். எப்படி என்றால் தலையை காந்தத்தின் வடதுருவம் என்று வைத்துக் கொண்டால் கால்கள் தென் துருவம் ஆகும்.

இயற்பியல் படித்தவர்களுக்குத் தெரியும் “ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று தள்ளிவிடும், மாற்று துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்/கவரும்”.. (Like poles repel each other, unlike poles attract) ஆக நம் உடல் என்னும் காந்தம் வடக்கைத் தவிர எந்தப் பக்கத்தில் தலை வைத்தாலும் பாதிக்காது.

கண்டங்கள் உருவானது எப்படி?

இந்த பூமியானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனித்தனி கண்டமாக இல்லாமல் ஒரே நிலப் (Pangaea) பகுதியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக (Continental Drift) விலகி இப்போதைய நிலக்கு வந்துள்ளன. இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் பார்த்தால் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இப்போதைய நிலையில் இருக்காது. ஆனால் உலகப் படத்தைப் பார்த்தீர்களானால் ஒரு வியப்பான விஷயத்தைக் கவனிக்கலாம். ஒரே நிலப் பரப்பு விலகி விலகி சென்றபோது ஏன் வடக்கே மட்டும் அதிக நிலப்பரப்பு (land mass) போயின? தெற்கே ஏன் அதிகம் கடற்பரப்பு (oceans) வந்தன? ஏன் எல்லா கண்டங்களும் கீழே குறுகியும் மேலே பருத்தும் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நிலப் பரப்பைப் பாருங்கள். வடக்கில் பெரிய நிலப் பரப்பும் தெற்கில் சுருங்கி தீபகற்பமாகவும் (peninsular) இருக்கும். ஏன் இப்படி வந்தது என்றால் இதுவரை யாரும் விடை சொல்ல முடியவில்லை.

பூமியில் வடக்கில் காந்த சக்தி அதிகம் இருந்ததால் கண்டங்களை இப்படி மேல் நோக்கி இழுத்தனவா? அல்லது தன்னிச்சையாக வடக்கில் நிலப் பரப்பு கூடியதாலங்கே காந்த சக்தி அதிகரித்ததா? இதற்கு விடை கிடைத்தாலும் விடை கிடைக்காவிட்டாலும் வடக்கில் நிலப் பரப்பு குவிந்திருப்பதை யாரும் காணலாம்.

ஆக பூமி என்னும் காந்த உருண்டைக்கு மதிப்பு கொடுத்து அதனுடன் மோதாமல் இருக்க வேண்டுமானால் வடக்கைத் தவிர வேறு திசையில் தலை வைத்தும் உறங்கலாம். கிழக்கு திசையிலோ தெற்கு திசையிலோ தலைவைத்துப் படுப்பது உத்தமம்.

புனித திசை வடக்கு

இந்துக்களுக்கு வட திசை மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கையிலாயமும் மேருவும் இருக்கும் புனித திசை அது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க விரும்புவோர் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். சங்க இலக்கிய நூல்கள் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் உண்ணாநோன்பு இருந்ததை வடக்கிருத்தல் என்றே அழைப்பர். மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வட திசைப் பயணம் நோக்கிப் பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர்விட்டதையும் படித்திருப்பீர்கள். இதை மஹா பிரஸ்தானம் என்று அழைப்பர்.

நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க என்று வேதம் கூறுகிறது (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்). தீர்க்காயுஷ்மான் பவ:

For more of the same contact: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

*****************

வானத்தில் ராமாயணக் காட்சிகள்!

படத்தில் ஸபரியும் ராம லெட்சுமணரும்

வால்மீகி முனிவர் பெரிய ஜோதிட மேதை! ராமாயணம் முழுவதும் ஆங்காங்கே அவர் நட்சத்திர ரகசியங்களைச் சுட்டிக் காட்டுவதை அதை அறியும் நோக்குடன் படிப்பவருக்குப் புரியும்! வானத்தில் ராமாயணக் காட்சிகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்!

வானத்தில் ராமாயணக் காட்சிகள்!

By ச.நாகராஜன்

 

ராமாயணத்தில் ஜோதிடக் குறிப்புகள்

 

வால்மீகி முனிவர் பெரும் ஜோதிட மேதை. வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான ஜோதிடக் குறிப்புகளைக் காணலாம்.பாலகாண்டம் பதினெட்டாம் ஸர்க்கத்தில் ராமரின் ஜெனன ஜாதகம் பற்றி விரிவாகக் காணலாம்.இது போலவே பரத லக்ஷ்மண சத்ருக்னரின் ஜாதகங்களையும் காணலாம்.அதே போல ராமர் ஹனுமானிடம் போருக்கு இன்றே கிளம்பலாம் என வெற்றி தரும் உத்தர நட்சத்திரத்தைக் கணித்து சாதக தாராபலம் என்பதை உணர்ந்து கூறுகிறார். மறு நாள் ஹஸ்த நட்சத்திரம் தன் ஜென்ம நட்சத்திற்கு வதத் தாரை என்பதால் வெற்றி கிடைக்காது என்பதால் உடனே கிளம்புவதன் அவசியத்தை தாராபலம் சந்திர பலம் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்!

 

இதே போல தசரதன் ஆட்சியில் சனி ரோஹிணி நட்சத்திற்குள் புக இருக்கும் தருணத்தில் பெரும் தீங்கு ஏற்படும் என்பதை அறிந்த தசரதன் சனியை நோக்கி ஸ்தோத்ரம் செய்ய சனி தசரதனுக்கு அருள் பாலிப்பதை தசரதனின் சனி ஸ்தோத்திர வரலாறு அறிவிக்கிறது. இது போன்ற ஜோதிடக் குறிப்புகளை ராமாயணம் வாயிலாக அறிவது ஒரு புறம் இருக்க, வால்மீகியின் சுலோகங்கள் வாயிலாகவும் நட்சத்திரக் கலை மூலமாகவும் ராமாயணக் காட்சிகளையே வானில் நாம் பார்க்கவும் உணர்ந்து அறியவும் முடியும். சில காட்சிகளை இங்கு பார்க்கலாம்.

 

மூல ராவணனும் ராவணகங்கையும்

 

ஆகாய கங்கையின் ஒரு பகுதியே சீதா என அழைக்கப்படுகிறது.கோடி சூர்ய பிரகாசம் உடைய இந்த ஒளி மண்டலம் இருளின் அரசனான மூல ராவணனை வெல்வதையே ஆகாயக் காட்சி காண்பிக்கிறது,மூல நட்சத்திரத்திற்கு உரியவனான ராவணனைப் பற்றி வால்மீகி ராமாயணம் சொல்லாத ஒரு சம்பவத்தைப் பத்ம புராணம் சொல்கிறது. வானத்தின் அசுர பாகத்தில் அதாவது வானத்தின் தென் பிராந்தியத்தில் வானகங்கையின் ஒரு பகுதி மூல நட்சத்திரத்தின் வழியே செல்கிறது. இங்குள்ள சீதா ராவணனின் சித்திரத்தில் அமைந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுவதை பத்ம புராணம் சுட்டிக் காட்டுகிறது. வான கங்கையின் மூல நட்சத்திரப் பகுதியை ராவண கங்கை என அனைவரும் இன்று வரை சொல்லி வருவது குறிப்பிடத் தகுந்தது!

 

 

27 நட்சத்திரங்களுள் 19 நட்சத்திரமாக அமையும் மூல நட்சத்திரத்தின் அதி தேவதை நிருதி. அழிவின் அதிபதி!தனது தீய செய்கையால் அரக்கர் குலத்திற்கே அழிவைத் தேடினான் ராவணன்.(என்றாலும் கூட மூல நட்சத்திரக்காரகளை பொதுவாக பயமுறுத்தாமல் அதற்குரிய பரிகாரங்கள், விதிவிலக்குகள் ஆகியவற்றையும் சேர்த்தே ஜோதிடம் அறிந்தோர் சொல்ல வேண்டும்). 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே; ஒவ்வொன்றிற்கு ஒவ்வொரு குணாதிசயம் என்ற அடிப்படையை ஜோதிட ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக் காட்டுவது இங்கு கடமை ஆகிறது)

 

பாவிகள் செல்ல ஒரு வழி அமைக்கவில்லையே!

 

படத்தில் சூர்ப்பநகை மீது லெட்சுமணன் கோபம்

மேலை நாட்டு பைபிளில் மனிதர்கள் அனைவரும் சேர்ந்து விசித்திரமான ஒரு நகரை அமைத்து அதில் ஒரு உயரமான கோபுரம் அமைப்பதையும் அது சுவர்க்கத்தை எட்டும் படி அமைக்கப்பட்டதையும் அதன் பெயர் பேபல் என வைக்கப்பட்டதையும் படித்து விட்டு வங்காளத்தில் கீர்த்திவாஸர் தரும் ஒரு சித்திரத்தையும் பார்த்து மகிழலாம். வால்மீகியில் சித்தரிக்கப்படாத இந்தக் காட்சியில் ராவணன் இறக்கும் தருவாயில் புலம்புகிறான்.அடடா, பாவிகள் செல்லும்படியாக சுவர்க்கத்திற்கு ஒரு மாடிப்படிகள் உள்ள கோபுரத்தை நான் உயிருடன் இருக்கும் போதே கட்டத் தவறி விட்டேனே என அவன் புலம்புகிறான்.

சபரியின் பக்தி

 

வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் 74வது ஸர்க்கமாக 35 சுலோகங்களில் அமையும் சபரியின் சரித்திரம் புல்லரிக்க வைக்கும் சொற்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் 35 சுலோகங்கள் முடிய படிப்பவர்க்குப் பல ரகசியங்கள் புலப்படும். “எனது குரு (சித்ர சிகண்டி மண்டலத்தில் உள்ள சப்தரிஷிகள்) தங்களது சுவர்க்க மாளிகைகளுக்கு ஒளிமயமான ரதங்களில் சென்ற போது தாங்கள் இங்கு வரும் வரை என்னைக் காத்திருக்கப் பணித்தனர்.” (ஆறாம் சுலோகம்)

 

பின்னர் சபரி கடித்து அவை சுவையான பழங்கள் தாம் என்பதை அறிந்து கொடுத்ததை ஏற்றுக் கொண்ட ராமர். “ நான் முறையாக கௌரவிக்கப்பட்டேன். நீ இனி உனக்கு சுகம் இடத்திற்குச் செல்லலாம்” என்கிறார் (சுலோகம் 31)

இதனைக் கேட்டு ஆனந்தித்த சபரி தன் உடலை ஜுவாலைக்கு இரையாக்கி வானை நோக்கி உயர்ந்து சென்றாள்! மின்னல் போல ஒளிரும் அவள் சப்தரிஷிகள் அருகே தனக்கு ஒரு இடத்தைப் பெற்றாள்.

 

இந்த ஸர்க்கத்தை விளக்க வந்த கோவிந்தராஜீயம் உள்ளிட்ட வியாக்கியானங்கள் பல பிரமிக்க வைக்கும் ரகசியங்களை நமக்குப் புலப்படுத்துகிறது. பம்பா போன்ற நதிகள் கடலைச் சேர்வது இயல்பு. இதற்கு மாறாக அனைத்து கடல்களும் பம்பாவை அடையும் அதிசயம் அங்கு நிகழ்கிறது. அந்த அளவிற்கு புனிதமான இடம் பம்பா. அங்கு சப்த ரிஷிகள் செய்த யாகங்களை சபரி விளக்கும் போதே வேத காலத்தில் தீண்டாமை என்பதே இல்லை என்ற அரிய உண்மையும் தெரிய வருகிறது. இப்படிப்பட்ட புண்யவதியான சபரிக்கு விஷ்ணுவிற்கு வெகு அருகிலேயே சப்தரிஷி மண்டலத்திற்கு அருகிலேயே ஒரு இடம் கிடைக்கிறது என்பதும் நமக்கு புலனாகிறது. வால்மீகி முனிவரின் அற்புத சொற்களை மனம் முழுவதும் நிறைத்துக் கொண்டு வானில் சப்தரிஷிகளையும் அவர்கள் அருகில் இடம் பெற்றுள்ள சபரியையும் வணங்கும் போது ஒரு புதிய உணர்வு தவறாது எழும்!

 

ராம பாணம்!

 

வைகுண்ட வாயில் அல்லது சுவர்க்க வாயிலை வால்மீகி சுட்டிக் காட்டும் விதமே தனி! மஹாபாரதம், பரசுராமர் ராமரை நோக்கி,”:இதோ இந்த வில்லை எடுத்துக் கொள்” என்று கூறுவதையும் அதற்கு ராமர் அதை எடுத்துக் கொண்டதாகவும் உடனே பரசுராமர் இதோ ஒரு வான அம்பைத் தந்து இதை நாண் பூட்டிக் காது வரை இழு” என்று சொன்னதையும் விரிவாகக் கூறுகிறது.(III -99-5o,51,54) வால்மீகியோ பாலகாண்டம் 76ம் ஸர்க்கத்தில் நடந்தது என்ன என்பதை விரிவாக விளக்குகிறார். தனது வீர்யத்தால் பரசுராமரை வென்று அம்பை எய்து பரசுராமரின் சுவர்க்க வழியை ராமர் தடுத்தார்.பரசுராமரோ. “எனக்கு அதை இழந்ததில் வருத்தமில்லை. ஏனெனில் எனக்கு தீர்க்க வேண்டிய ஆசைகள் எதுவுமில்லை” என்று ராமரிடம் கூறுகிறார்!பின்னர் வில்லை வருணனிடம் ராமர் தருகிறார்.

அர்ஜுனனுக்கு தன் விஸ்வரூப தரிசனத்தை கிருஷ்ணர் காண்பித்தது போல ராமர் தன் விஸ்வரூப தரிசனத்தை பரசுராமருக்கு இங்கே தான் காண்பிக்கிறார்!பிரம்ம மண்டலம் என்னும் பகுதியில் உள்ள பிரம்மஹ்ருதயம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற நட்சத்திரம் பரசு என்னும் கோடாலி போல உள்ளதையும்அதற்கு எதிரில் ‘தி கிட்ஸ்’ (The Kids) என்று மேலை நாட்டில் அழைக்கப்படும் ராம பாணம் போல உள்ள இரு நட்சத்திரங்களையும் வானில் கண்டு மகிழலாம்!

 

வானத்தில் 12 வீதிகளை அமைத்து அதில் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தேவதையையும் நமக்குச் சுட்டிக் காட்டிய நம் முன்னோரின் வானவியல், ஜோதிட ஆன்மீக அறிவை எண்ணி பிரமிக்க வேறு எங்கும் போக வேண்டாம். சற்று தலையைத் தூக்கி வானத்தைப் பார்த்தாலே போதும்; அனைத்தும் புரிந்து விடும்!

வால்மீகி மாமுனிவர்

அடுத்து ராமாயணத்தின் முக்கிய பாத்திரமான அனுமனை பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? அவனை அடுத்து தரிசிப்போம்!

 

******************************

 

FLOWERS IN TAMIL CULTURE

By London Swaminathan (swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com)

Tamils are crazy about flowers. Travellers have noticed the passion of Tamil women for flowers.  Every temple and every bazaar(shopping area) has scores of flower vendors who make garlands and flower strings with fresh flowers. Half of the flowers go on the hair of women and the other half go to the Gods inside the temples. Half of the garlands go into the neck of Tamil politicians and the other half go in to the neck of gods’ statues.

This love for flowers is not a new fashion. The love story began at least two thousand years ago. We have several references of flower vendors in the Sangam Tamil literature (Narrinai verse 97,118,160 etc.)

Tamil’s custom of wearing lot of flowers on their heads was noticed by Valmiki in his Ramyana:Bharata says our soldiers are wearing lot of flowers on their heads like southerners and carry black coloured shields (ayodhya Kanda, Sarga 96)

 

Tamils are unique in one thing. The three powerful kingdoms of Tamil Nadu had separate flags, emblems and flowers. Like we choose a national flower of a county they chose one flower garland each. The Sangam works simply mention the particular flower garland to mention the king.In other words, the garlands were more popular than the dynasty name! Pandya kings wore Neem flower garlands, Chera Palmyra flower garlands and the Cholas Athi (fig) flower garlands.

 

Tamils divided their lands into five natural geographical areas add gave the name of dominant flowering tree/plant to each area. At least this custom has precedence in other parts of India. Sanskrit literature called India Jambu dwipa meaning land of Jamboo trees (Rose apple tree). It also divided the globe into seven different continents and named them after the predominant flowering tree of that area: Jambu (Rose apple),Plaksha (fig tree), Shalmali (Silk Cotton Tree), Kusha (Darba grass), Krauncha (water birds, may be some trees with the same name) Shaka and Pushkara (Lotus)

Five regions of Tamil Land

Mullai , a variety of Jasmine, stands for the forest area.

Kurinji, a mountain flower, stands for mountainous region.

Marutham, a tree with red flowers, stands for patoral region

Neytal, a water flower, stands for sandy sea shore

Palai, an ever green tree growing in arid areas, stands for arid lands.

 

Another unique feature of Tamil culture is they wore different flowers in the battlefield to denote different activities. No other culture wore flowers when they went to war. We know that Olympic winners in Greece received Olive branches. But Tamils took different flowers. For instance if they want to invade a country, soldiers will go in to the border areas and steal the cattle wearing VETCHI flowers. Though this practice of stealing cattle was  in Mahabharata days in the north of the country, the soldiers did not wear any particular flower. But Tamils wear a particular type of flowers during this raid which is not found anywhere in the world. For each and every military activity they allocated a flower. Following is the list of flowers and the corresponding activity:

  • Vetchi – the provocation of war through attack and cattle raids
  • Karanthai – defending against cattle raids
  • Vanchi – invasion of the enemy’s territory
  • Kanchi – transcience and change, the fragility of human life, against the backdrop of war
  • Uzhingai- attacking the fort
  • Nochchi – defence of the fort or territory
  • Thumpai – the frenzy of battle
  • Vaakai – victory
  • Paadaan – praise of a king’s heroism or generosity, asking for gifts

But this was not strictly followed. Tamil men and women wore flowers. Men had flowers in their ears. Women had it on their heads. Women continue to wear it even today. During weddings they spend a lot on flowers.

Pushpanchali (Flower Offering)

In Bhagavad Gita Krishna also spoke about offering flowers and leaves (Tulsi, Bilva) to God. Tamil poet Kapila has translated that sloka in Purananuru

Pushpanchali is an annual event in several South Indian temples. They heap hills of flowers on God on that day.

ANDAL MALAI/ GARLAND

Tamil Nadu is famous for its biggest flower garland called Andal Malai (Malai=Mala+ garland). This garland is a special one meant for Andal of Srivilliputtur, near Madurai. Andal, who lived 1300 years ago in Srivilliputur of Tamil Nadu, was a Vishnu devotee. This garland is normally 8 ft long made up of different flowers. It is heavy and expensive. Political heavy weights get this heavy garland, particularly after election victory.

Kapilar’s Guinnes Record-99 flowers

Sangam Tamil poet who lived 200 years ago would have entered Guinnes Book, has there been a category for reciting flower names. He recounted 99 flowers in his Kurinjipattu ( Lines 62-97). Though other books like Mahabharata, Valmiki Ramayana, Kalidasa have provided more flower names, no one poet had given them at one go.

“Tamil Nadu Assembly Speaker, K. Kalimuthu, who spoke on `Tamil and Tamilians in world arena,’ kept the audience spellbound for about 30 minutes. The audience was stunned when he repeated the names of 99 flowers from Kabilan’s Kurinji Pattu. All the students of Jamal Mohamed College (Trichy)who had occupied every inch of the auditorium maintained pin drop silence and heard his speech in rapt attention.” (The Hindu report on August 16, 2004).

Of the 99 flowers many of them have Sanskrit names and a few of them are unidentifiable.

Onam and Pukkolam

Onam is an old festival mentioned in Tamil Sangam literature (maduraikanji 590-591). Till this day it is celebrated in Kerala (Old Tamil Chera country) with gigantic flower decorations on the ground called Pukkolam.

Tamil classification

Even before Linnaeus classified the botanical kingdom, Tamils classified them in to four categories: Kottu Pu, Kodi Pu, Neer Pu, Nila Pu.

Kottu Pu=Kongu, Shenbakam Makiz etc.

Kodi Pu= Mallikai, Mullai (jasmine varieties) etc.

Neer Pu (water flowers)= Lotus, Water Lily etc.

Nila Pu ( Land flowers)= Thumbai, Sevanthi etc.

They talk about flowering plants and non flowering plants, flowers to give good fragrance to water (Pathiri Pu) etc.

21 leaves for Vinayaka

Ancient Tamils even knew all the plant names by heart. They allocated 21 leaves for Ganesh Puja. Such acts serve many purposes: 1. Spread of knowledge about plants 2.Herbs are used when someone falls sick 3. Naturala environment is protected. Following are the 21 plants: Masi pathram, Bruhati pathram,Bilva pathram, Durva pathram, Thuthura pathram, Badari pathram,Apamarga pathram, Tulsi pathram, Suta pathram, Kraveera pathram, Vishnugranthi pathram, Thadi pathram, Deva thaaru pathram, Maruva pathram, Sindhuvara pathram, Jaji pathram, Kandaki pathram, Samee pathram, Asva pathram, Arjuna pathram, Arka pathram.

 

சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண்

By London Swaminathan (This post has already been uploaded in English)

சிந்து சம்வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட 4000க்கும் மேலான முத்திரைகளில் உள்ள எழுத்துக்கள் இதுவரை எல்லோரும் ஒப்புக்கொள்ளும் விதத்தில் படிக்கப்படவில்லை. சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல ஆராய்ச்சியாளர் இது எழுத்தே அல்ல ,வெறும் சித்திர முத்திரை என்று சொல்லி பெரிய சர்ச்சையைக் கூடக் கிளப்பிவிட்டார். இதுவரை சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு ஐம்பத்துக்கும் மேலான வினோத விளக்கங்கள் வந்துள்ளன.

 

எழுத்துக்கள் புரியாவிடிலும் அதிலிருக்கும் தெய்வங்களையாவது புரிந்துகொள்ள முடியுமா என்று பார்த்தால் அதுவும் முடியவில்லை. ஒரு முத்திரையில் ஒரு உருவத்தைச் சுற்றி 4 மிருகங்கள் இருப்பதை பசுபதி முத்திரை என்றும் இது ஆதி சிவன் என்றும் ஆரிய சிவனுக்கு முந்திய திராவிட சிவன் என்றும் தவறான விளக்கங்களைக் கொடுத்து இந்து மதத்தைக் குழப்பிவிடவும் மாற்று மத ஆராய்ச்சியாளர்கள் முயன்றனர்.

 

இவர்கள் ஆரிய திராவிடப் புதை மணலில் சிந்து சம்வெளி நாகரீகத்தைச் சிக்க வைத்திருப்பதால் அது வெளியே வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. இது திராவிட எழுத்து அமைப்பு உடைய எழுத்துவகையைச் சேர்ந்தது என்று சொல்லி திசை திருப்பியும் விட்டனர். ஆனால் இதைச் சொல்லி ஐம்பது ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை.

ஆரிய திராவிட விஷத்தை அகற்றிவிட்டு இந்த முத்திரைகளை ஆராய்ந்தால் நாளைக்கே கூட தீர்வுகாணமுடியும். இதை உணர்ச்சிக் கொந்தளிப்பால் எழுதவில்லை. பசுபதி முத்திரை மத்திய கிழக்கு நாட்டிலும், டென்மார்க்கிலும் கிடைத்திருப்பதால் அதை சிவன் என்று முத்திரை குத்த முடியாது. பாம்பு ராணி முத்திரை கிரேக்க நாட்டிலும் மற்ற நாடுகளிலும் கிடைத்திருப்பதால் அதையும் சிந்துவெளிக்கு மட்டுமே சொந்தம் என்றும் சொல்ல முடியாது. இன்றைய கட்டுரையில் வரும் 2 புலிகளுடன் சண்டை இடும் காட்சியும் உலகம் முழுதும் கிடைத்திருப்பதால் ஆரிய திராவிட மாயையை ஒதுக்கிவிட்டு ஆராய வேண்டும். சிந்துவெளி நகரங்களில் உள்ள வட்டக் கற்களும் ம்த்தியக் கிழக்கு, நீலகிரி பழங்குடி மக்கள், ஐரொப்பிய நாடுகளில் காணக் கிடக்கின்றன.

 

இந்திரனும் வருணனும் விஷ்ணுவும் தமிழ்க் கடவுள்கள் என்று “ஒல்காப் பகழ் தொல்காப்பியன்” கூறுவதையும், தொல்காப்பியன் ஒரு பிராமணன் என்று “உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” கூறுவதையும், “நான்முறை முற்றிய அதங்கோட்டு ஆசான்” என்னும் வேதப் பிராமணன் தலைமையில் தொல்காப்பியம் நிறைவேறியதாக பனம்பாரனார் கூறுவதையும் கருத்திற் கொண்டால் ஆரிய திராவிட மாயை, சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும்.

யார் இந்தப் புலி மகள்?

சிந்து சமவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட வினோதமான முத்திரைகளில் பேய் முத்திரைகள் பற்றியும், பாம்பு ராணி முத்திரை பற்றியும், பசுபதி/விஷ்ணு முத்திரை பற்றியும், ஐராவதம் மேல் பவனி வரும் இந்திரன் பற்றியும் முந்திய கட்டுரைகளில் கண்டோம். இன்று புலி மகள், புலி ராணி, புலி தேவி யார் என்று ஆராய்வோம்.

ஒரு புலித் தெய்வ முத்திரையில் ஒரு பெண்ணின் பாதி உடல் புலியாகவும் மறு பாதி பெண்ணாகவும் இருக்கிறது.

இன்னொரு புலி முத்திரையில் கொம்புள்ள புலி இருக்கிறது. மற்றுமொரு முத்திரையில் கொம்புப் புலியுடன் ஒரு கொம்பு மனிதன் சண்டை போடுகிறான். சிலர் இதை நடனம் ஆடுவதாகவும் எழுதி இருக்கிறார்கள்.

வேறு ஒரு புலி முத்திரையில் ஒருவன் புலிக்குப் பயந்து மரத்தின் மேல் இருந்து கொண்டே ஏதோ சைகை செய்கிறான். இன்னும் ஒரு முத்திரையில் ஒருவன் இரண்டு புலிகளுடன் சண்டை போடுகிறான்.

யார் இந்தப் புலிப் பெண்? துர்க்கையா? இந்தியாவில் புலி வாகனம் உடைய இரண்டு கடவுளர் உண்டு: ஒன்று துர்க்கா தேவி மற்றொன்று சபரிமலை ஐயப்பன்.

திபெத்தில் புத்த மதத்தைப் பரப்பிய இந்திய சாது பத்ம சம்பவர் புலியில் சவாரி செய்வது போல உருவங்கள் இருக்கின்றன.

சோழர்களின் சின்னம் புலிச்சின்னம் என்று சங்கத் தமிழ் நூல்கள் பாடுகின்றன. சோழர்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று அவர்களுடைய மெய்க்கீர்த்திகளும் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மறைமுகமாகச் சொல்லுகின்றன. உத்தர குருவை ஆண்ட சிபிச் சக்கரவர்த்தி, முது மக்கள் தழியை உண்டக்கிய முசுகுந்தன் மற்றும் சூரிய குல மன்னர்களை– தங்கள் முன்னோர்கள் என்று சோழர்கள் பெருமை பேசுகின்றனர். இதுதவிர, புலிகள் க்ஷத்ரியர்களின் சின்னம் என்று வேதகால இலக்கியங்கள் கூறுகின்றன.

மஹாபாரத்தில் வீரர்களைப் புகழ்கையில் அடிக்கடி, “ஓ, மனிதர்களில் புலி போன்றவனே!” என்று வியாசர் புகழ்கிறார்.

சிவ பெருமான் புலித்தோல் அணிந்திருக்கிறார். பதஞ்சலி முனிவரை புலிக்கால் முனிவர் என்று அழைத்தனர். தமிழர்கள் புலி நகத்தை வீரத்துக்காக அணிந்தனர். சகுந்தலை – துஷ்யந்தன் பெற்றெடுத்த பரதன் சிங்கம் புலி ஆகியவற்றுடன் விளையாடினான். புருஷாமிருகம் என்னும் மிருகம் பற்றிய கதை மகாபாரத்தில் வருகிறது.பாதி சிங்கம் பாதி மனிதனான நரசிங்காவதாரம் நாம் அனைவரும் அறிந்ததே. வேதத்தில் கழுதைப் புலி பற்றிய குறிப்பு வருகிறது.

ஆக இந்த எல்லாப் புலிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டாலும் சிந்து சமவெளிப் புலி மகள் கொஞ்சம் விலகியே நிற்கிறாள். வெளி நாட்டு அறிஞர்கள் இவளையும் ஆதி துர்க்கா (புரோட்டோ ஷிவா என்று கதை விட்டது போல இவளை புரோட்டோ துர்க்கா) என்று கதை கட்டி விடுவார்கள்.

 

சப்த மாதர் முத்திரை நரபலியா?

ஒரு முத்திரையில் அரசமரத்துக்குள் ஒரு தெய்வம் நிற்க ஒருவன் மிகப் பெரிய ஆட்டைக் கொண்டுவந்து அவள் முன்னே நிறுத்தி மண்டியிட்டு வணங்குகிறான். ஒரு ஸ்டூலின் மீது மனித தலை மட்டும் இருக்கிறது. இது நரபலியா?

அதற்குக் கீழே ஏழு பெண்கள் கைகோர்த்து நடனம் ஆடுகின்றனர். இந்த ஏழு பெண்கள் உலகில் பல இடங்களில் இருக்கின்றன. தென் ஆப்பிரிக்கா குகைச் சிற்பங்களில் ஆஸ்திரேலியப் பழங்குடி ஓவியங்களில், கிரேக்க நட்சத்திரக் கதைகளில், வடமொழியில் சப்த மாதர் கதைகளில் ஏழு பெண்களைக் காணலாம்.

ஒரிஸ்ஸாவில் கோண்டு இனமக்கள் வழிபடும் தரைப் பெண்ணு என்னும் கடவுள் பூராப் பெண்ணு என்னும் கடவுளைப் படைத்ததாகக் கதை உண்டு. இந்த தரைப் பெண்ணுக்கு கொடுரமான முறையில் பலிகள் இடுவதுண்டு.

சுருக்கமாகச் சொல்லப் போனால் சிந்து முத்திரைகளில் காணப்படும் அதே கருத்து உலகம் முழுதும் இருப்பதால இதை ஆரிய திராவிட நீர்ச் சுழலில் இருந்து மீட்டு காய்தல் உவத்தல் இன்றி ஆராய்தல் நலம் பயக்கும்.

Please read my earlier posts:1.Serpent Queen: From Indus Valley to Sabarimalai 2.Sugarcane Mystery: Indus valley and Ikshvaku Dynasty 3. Vishnu seal In Indus Valley 4. Indus Valley –New Approach required 5.Indra in Indus valley seals+ Symbols for Vedic Gods and 6.Ghost in Indus seals.

Contact swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com

*******************

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்!

கர்மம் பற்றிய குறுந்தொடர்!

 

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்!

By ச.நாகராஜன்

 

கர்மத்திற்கு ஏற்ற பலன் கிடைக்கும்

 

மற்ற மதங்களிலிருந்து ஹிந்து மதத்தை வேறுபடுத்திக் காண்பிக்கும் முக்கியக் கொள்கை கர்மத்திற்கு ஏற்ற பலனின்படி மறுபிறப்பு உண்டு என்பதாகும்.

 

கீதையின்  மூன்றாம் அத்தியாயம் கர்ம யோகத்தைப் பற்றி அற்புதமாக விளக்குகிறது.

“எவனும் எவனும் எப்பொழுதும் ஒரு கணம் கூட கர்மம் செய்யாமல் இருக்க முடியாது” என்று கண்ணன் அர்ஜுனனிடம் விளக்குகிறான். (ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்- கீதை, மூன்றாம் அத்தியாயம் 5ஆம் ஸ்லோகம்)

இயற்கை குணங்களினால் ஒவ்வொருவனும் கர்மம் செய்யும் படி தூண்டப்படுகிறான்.அந்தக் கர்ம பலனின் விளைவுகள் அவனைத் தவறாமல் சென்று சேர்கின்றன.

கன்று தாயைச் சேர்வது போல கர்ம பலன் சேரும்

இதை மஹாபாரதமும் உபநிடதங்களும் ஒரே உவமையால் விளக்குகின்றன. எப்படி பசு மந்தைக்கூட்டத்தில் ஒரு கன்றானது தாய்ப்பசுவைத் தவறாமல் சென்று அடைகிறதோ அதே போல ஒருவன் செய்த நல்ல கர்மங்களின் விளைவும் தீய கர்மங்களின் விளைவும் உரிய காலத்தில் தவறாமல் அவனைச் சென்று அடைகிறது என்று இப்படி அழகாக கர்ம பலன் வந்து சேரும் விதத்தை விளக்குகிறது.

 

காந்திஜி வாழ்க்கையில் 

கண்களையும் மனதையும் திறந்து வைத்துக் கொண்டால் கர்ம பலனின் ரகசியங்களை யார் வேண்டுமானாலும் உணர முடியும். மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்.

இந்தியா சுதந்திரம் அடைய வேண்டுமென்பதை வலியுறுத்தி விட்டு வெளிநாட்டிலிருந்து டெல்லிக்குத் திரும்பிய மகாத்மா டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்று ரயிலில் ஏறினார். அப்போது அவரது கால்களில் மாட்டி இருந்த செருப்புகளில் ஒன்று கீழே தரையில் விழுந்து விட்டது. உடனே ரயில் கிளம்பி விட்டது. மகாத்மா உடனே தனது அடுத்த காலிலிருந்த செருப்பையும் கழட்டிக் கீழே ஏறிந்தார் அருகில் இருந்தவர் மகாத்மாவிடம், “பாபாஜி, ஏன் அடுத்ததையும் கழட்டிக் கீழே எறிந்தீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு அவர், “கீழே கிடக்கும் ஒரு செருப்பைக் கண்டெடுப்பவர் அதனால் பயன் அடைய முடியாது அல்லவா? அதற்காகத் தான் இன்னொரு செருப்பையும் அதன் அருகில் எறிந்தேன்” என்று பதில் கூறினார்..

பன்னிரெண்டு மாதங்கள் கழிந்தன.லக்ஷ்மி தேவியின் திருவிழாவில் கலந்து கொள்ள ஒரு நகருக்கு காந்திஜி விஜயம் செய்தார்.கூட்ட நெரிசலில் காந்திஜியுடன் சென்ற தொண்டர்கள் அவரை விட்டுச் சற்று விலகி விட்டனர். அப்போது அவருக்குப் பின்னாலிருந்து கடூரமான குரல் ஒன்று ஒலித்தது. “நீங்கள் பாரதத்தை நாசம் செய்கிறீர்கள்.”

யார் இப்படிப் பேசுகிறார் என்று காந்திஜி திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த அசம்பாவிதம் நடந்து விட்டது. பின்னால் இருந்து குற்றம் சாட்டியவர் மகாத்மாவைக் கீழே தள்ளி விட்டார். கீழே விழுந்த காந்திஜி ஒரு புறமாகத் தள்ளப்பட்டார். அப்போது.” அவரை ஒன்றும் செய்யாதே”, என்ற கம்பீரமான குரல் ஒன்று கேட்டது.பின்னால் கசமுச என்று சப்தம் கேட்டதை காந்திஜி உணர்ந்தார். தன்னைத் தள்ளியவரை ஒருவர் அப்புறப்படுத்தியதை உணர்ந்து கொண்டார். அப்புறப்படுத்தியவரின் கால்களைத் தரையில் படுத்திருந்த காந்திஜி பார்க்க நேர்ந்தது.

 

ஆஹா! அதே ஜோடி செருப்புகள்!! அவருக்குத் தெரிந்து விட்டது. தான் ரயிலில் முன்பொரு சமயம் தூக்கி எறிந்த செருப்பும் தவறி விழுந்த செருப்பும் தன்னைக் காப்பாற்ற முயன்றவரின் காலில் மாட்டப்பட்டிருப்பதை காந்திஜி பார்த்தார்.  அவரது செருப்புகளை அவருக்கு நன்கு அடையாளம் தெரியும். ஏனெனில் அவை விசேஷமான அளவுகள் உடையவை.

காந்திஜியை மெதுவாக தூக்கி நிறுத்திய அவர், “பாபுஜி! ஒன்றும் தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள்! அந்த முரடன் ஒரு முட்டாள்! நானும் கூட அவனைப் போலத் தான் சென்ற வருடம் வரை இருந்தேன்” என்றார்

காந்திஜி வியப்பு மேலிட,” சென்ற வருடம் வரை என்றால்..? உங்களை மாற்றியது எது?” என்று தன் மேலிருந்த தூசியைத் தட்டி விட்டவாறே கேட்டார்.

காந்திஜியைக் காப்பாற்றியவர் தன் கதையைச் சொன்னார்

சென்ற வருடம் வரை எனக்கு வேலையே கிடைக்காமல் இருந்தது.தாங்க முடியாத கஷ்டத்தில் இருந்தேன்.என்னுடைய நண்பன் ஒருவன் அருகிலிருந்த லக்ஷ்மி கோவிலுக்கு என்னை அழைத்தான். செல்வச் செழிப்பை அருளும் லக்ஷ்மியின் கோவிலுக்கு வந்தால் நல்ல வழி பிறக்கும் என்றான். ஆனால் எனக்கோ மனமே இல்லை.

என் நண்பனிடம், “ அந்தக் கோவில் மிகவும் தூரத்தில் இருக்கிறது. எனக்கோ காலில் செருப்பு கூட இல்லை? எப்படி வருவதாம்?” என்றேன். அப்போது ரெயில் தண்டவாளப் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்தோம். அங்கே அழகிய ஒரு ஜோடி செருப்பைக் கண்டேன். அதை எடுத்து அணிந்து கொண்டேன். அது என் காலுக்குச் சரியாகப் பொருந்தியது.

 

“இப்போது வரலாமில்லையா” என்றான் நண்பன். அவனுடன் கோவிலுக்குச் சென்றேன்.

என்ன ஆச்சரியம்! அந்த புதிய செருப்புகளை அணிந்ததிலிலிருந்து எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கோவிலில் சேவை செய்து அனைவருக்கும் உதவலானேன். அங்கிருந்த கோவில் முக்கியஸ்தர்களுள் ஒருவர் என் சேவையைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து எனக்கு பக்கத்திலிருந்த டவுனில் ஒரு வேலை போட்டுக் கொடுத்தார். நான் இப்போது அனைவராலும் மதிக்கப்படுகிறேன்.”

கருணை ததும்பும் விழிகளுடன் அவரைப் பார்த்த மஹாத்மா, “நல்லது. உங்களுக்கு நன்றி” என்று மெதுவாகக் கூறியவாறே நகர்ந்தார்.

இந்தச் சம்பவத்தை தன் ‘கர்மா மானுவல்’ என்ற நூலில் விளக்கும் டாக்டர். ஜான் மம்போர்ட், “நல்ல விளைவுகளை விளைவிக்கும் ஆகாமி கர்மா (உள்ளுறையும் கர்மம்) விதைக்கப்பட்டது. அதுவே வெகு சீக்கிரமே பிராரப்த கர்மாவாக மாறி பலனை அளித்தது” என்று விளக்குகிறார்.

 

கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்!

 கர்மங்களில் தான் எத்தனை ரகங்கள்! கத்தி கையில் கீறியவுடன் வெளிப்படுகிறது ரத்தம். சில கர்மங்கள் உடனடி பலனைத் தருபவை.

இரவிலே கொண்டைக்கடலையை ஈரத் துணியில் முடிந்து வைத்தால் காலையில் அவை முளை விடுகின்றன. சில கர்மங்கள் சில மணி நேரம் கழித்துப் பலனைத் தருகிறது.

ஒரு ஆலமரத்து விதையை ஓரிடத்தில் விதைத்தால் அது முழு மரமாகிப் பலன் தர பல்லாண்டுகள் ஆகின்றன, சில கர்மங்கள் ஆலமர விதையைப் போன்றவை. அடுத்த ஜென்மத்தில் பலனைத் தருபவை.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் கர்மங்களை விதைத்துக் கொண்டே சென்றால் அவற்றின் பலன்கள் நமக்கு நல்லவையாகவும் தீயவையாகவும் வந்து கொண்டே தானே இருக்கும்.

கீதை காட்டும் பாதை

 ஆகவே தான் நமது அற நூல்கள் கர்ம பலன் ரகசியங்களை விளக்கும் விதமாக இரண்டு முக்கிய வழிகளைச் சொல்கிறது.

ஒன்று (மனோ வாக்காய கர்மாணி) மனம் வாக்கு செயலால் நல்லதையே நினை; செய் இரண்டாவது கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் ஒரு பொழுதும் அதன் பலனில் இல்லை (கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷ¤ கதாசன – கீதை இரண்டாம் அத்தியாயம் 47ஆம் ஸ்லோகம்). ஆகவே பலனைக் கருதாது கர்மத்தைச் செய்!

எந்தக் கர்மத்திற்கு என்ன பலன்: உமையின் கேள்வி

எந்த எந்த கர்மத்திற்கு என்ன என்ன பலன் என்பதை உமா தேவியார் பரமேஸ்வரனிடம் கேட்க அவர் அருள் கூர்ந்து மனித குல நன்மைக்காக அவற்றை விளக்கிக் கூறுவதை மஹாபாரதம் விளக்கிக் கூறுகிறது!

கிருஷ்ணர் கேட்க நாரதர் விளக்கும் உமா மஹேஸ்வர சம்வாதமாக அமையும் கர்மமும் அதன் விளைவுகளும் பற்றிய பட்டியல் மிக நீண்ட ஒன்று. அநுசாஸன பர்வம் 205ஆம் அத்தியாயம் முதல் 250 அத்தியாயம் முடிய சுமார் 46 அத்தியாயங்களில் கர்மபலன்களின் ரகசியங்கள் விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பு : நன்றி ஞான ஆலயம் ( ஜுலை 2012 இதழில் வெளியான கட்டுரை)

 

கர்மம் பற்றிய குறுந்தொடர்! சென்ற கட்டுரையில் மஹாத்மா காந்திஜியின் வாழ்வில் நடந்த சம்பவத்தையும் அது விளக்கும் கர்ம பலன் ரகசியத்தையும் பார்த்தோம். இதோ, இன்னும் ஒரு அதிசய சம்பவம் – அமெரிக்காவில் நடந்தது! நூறு கோடி கல்பம் ஆனாலும் செய்த கர்மங்களின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற உண்மை என்றும் அழியாத ஒன்று!

 

அதிசயிக்க வைக்கும் கர்ம பலன் ரகசியம்! – 2

 

ச.நாகராஜன்

 

பார்வதி, பரமசிவன் உரையாடலின் சுருக்கம்

உமாதேவிக்கு மனித ஜன்மத்தில் எந்தக் கருமத்திற்கு என்ன பலன் என்று சந்தேகம் ஏற்பட பரமேஸ்வரன் அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவாக பதில் சொல்வதைத் தொகுத்துப் பட்டியலிட்டால் அது மிக நீண்ட ஒன்றாக ஆகி விடும்.

இருந்தாலும் அதன் சுருக்கத்தை இப்படி உரைக்கலாம் :

தானத்தையும் தர்மத்தையும் உரியவர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே தாமாகவே முன் வந்து உதவுபவர் அடுத்த ஜன்மத்தில் முயற்சியின்றியே செல்வத்தையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் பெறுவர்.

யாசிப்பவர்க்கு மட்டுமே தானம் செய்பவர் முயற்சிகள் செய்து பாக்கியத்தை மறு ஜன்மத்தில் அடைவர்.

யாசித்தவர்க்கும் ஒன்றும் தராதவர் அடுத்த ஜன்மத்தில்  முயற்சி செய்த போதும் பலனை அடையார்.

செல்வத்தைக் கொண்டிருந்தும் யாருக்கும் இளமையில் உதவாமல் இருந்து, முதிர்ந்த பிராயத்தில் பிணிகள் வந்தவுடன் தானம் செய்வோர் அடுத்த பிறவியில் முதிர்ந்த பிராயத்தில் போகங்களை அனுபவிப்பர்.

ஏழைகளிடம் அடாத வட்டி வாங்கியோரும் மிருகங்களை வேட்டையாடி வதை செய்தோரும் ஹிம்ஸை நிறைந்த நாட்டில் ஜன்மம் எடுப்பர்.

முற்பிறவியில் செய்த கர்மங்களுக்கான பலன்களை இந்த ஜன்மத்திலும், இந்த ஜன்மத்தில் செய்யும் கர்மங்களுக்கான பலன்களை அடுத்த ஜன்மத்திலும் அனுபவிப்பர்.

 

ஆச்சரியமான ஒரு சம்பவம்

கர்ம பலன்களின் விளைவுகள் அதிசயக்கத் தக்க விதத்தில் ஒரு கணம் கூடத் தவறாது எப்படியோ நம்மை வந்து அடைகின்றன. இதை விளக்க ஒரே ஒரு ஆச்சரியமான சம்பவத்தை மட்டும் இங்கே பார்ப்போம்:

 

பிரபல ஆங்கில மாத இதழான ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழை அறியாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் சிறந்த கட்டுரைகளை மட்டுமே அது ஒவ்வொரு இதழிலும் வெளியிடும் – அதுவும் ஒவ்வொரு சம்பவமும் தகவலும் ஏன் எழுத்தும் கூடச் சரி பார்க்கப்பட்டு! ரீடர்ஸ் டைஜஸ்ட் க்ளாஸிக் என்ற ஒரு சிறப்புப் புத்தகத்தில் பல வருடங்களாக இது வரை வெளியான கட்டுரைகளிலிலிருந்து மிகவும் சிறந்த கட்டுரைகளை அது வெளியிட்டுள்ளது. அதில் ஒரு அற்புதமான கட்டுரை கர்மபலன் சம்பந்தப்பட்டது. (இதன் மறுபதிப்பை ஜனவரி 2010 இதழில் படிக்கலாம்) அதில் வரும் சம்பவம் தான் இது!

1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் தேதி பிற்பகல். மார்செல் ஸ்டெர்ன்பெர்கர் என்பவர் ஹங்கேரியில் பிறந்தவர். பிழைப்புக்காக நியூயார்க் வந்து போட்டோகிராபராக தன் வாழ்க்கையைக் கழிக்கலானார். அவரது தினசரி வாழ்க்கை வழக்கமான ஒன்று – வீட்டிலிருந்து ஐந்தாம் அவென்யூவில் உள்ள தன் அலுவலகத்திற்குச் செல்வது, அங்கு வேலையை முடித்து விட்டு திரும்பவும் வீடு வந்து சேர்வது என்பது தான் அவரது வழக்கம்.

 

50 வயதான மார்செல் வழக்கம் போல சரியாக 9.09க்குக் கிளம்பும் லாங் ஐலேண்ட் ரெயில்ரோட் புகை வண்டியில் ஏறி உட்சைடு என்ற அவரது இடத்துக்குப் போயிருக்க வேண்டும். அன்று அவருக்கு வழியில் ப்ரூக்ளினில் இருக்கும் தன் நண்பரைப் பார்க்க வேண்டும் போலத் திடீரென்று தோன்றியது.ஆகவே ஒஸோன்பார்க் என்ற ஸ்டேஷனில் இறங்கி ப்ரூக்ளின் செல்லும் ரயிலில் ஏறினார்.தனது நண்பரின் இல்லத்திற்குச் சென்று அவருடன் சற்று நேரம் அளவளாவி மகிழ்ந்து பின்னர் ரயில் நிலையம் வந்து மன்ஹாட்டனுக்குச் செல்லும் ரயிலில் தன் அலுவலகம் செல்வதற்காக ஏறினார்.ரயிலில் ஒரே கூட்டம்.உட்கார இடமே இல்லை.ஆனால் என்ன ஆச்சரியம். அவர் உள்ளே நுழைந்த போது அடுத்த ஸ்டேஷனில் இறங்க வேண்டிய ஒருவர் தன் இருக்கையை விட்டு எழுந்திருக்க சடக்கென்று அந்த இடத்தைப் பிடித்தார் மார்செல்.போட்டோகிராபருக்கே உரித்தான இயல்புடன் தனக்கு அடுத்து உட்கார்ந்திருந்தவரின் முகத்தைப் பார்த்தார். அடுத்த சீட்டில் உட்கார்ந்திருந்தவருக்கு சுமார் முப்பது வயது இருக்கும். ஒரு விதமான சோகம் அவர் கண்களில் ததும்பி இருந்தது.அவர் ஹங்கேரிய மொழியில் வெளிவரும் செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். தனது தாய் மொழியில் இருக்கும் பேப்பரைக் கண்டு ஆனந்தம் அடைந்த மார்செல் உடனே அவரிடம் அதைச் சற்று தருமாறு ஹங்கேரிய மொழியில் வேண்டினார். அவருக்கு ஒரே ஆச்சரியம். நியூயார்க்கில் ஹங்கேரிய மொழியில் பேசும் ஒருவரா! அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் அவர் தன் சோகக் கதை முழுவதையும் கூறி விட்டார்.அவரது பெயர் பாஸ்கின். சட்டம் படிக்கும் மாணவராக இருந்த போது இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமானது. அவரைப் பிடித்து இறந்த ஜெர்மானியர்களைப் புதைப்பதற்காக உக்ரேனில்   இருந்த முகாமுக்கு அனுப்பி விட்டார்கள்.யுத்தம் முடிந்தவுடன் பல நூறு மைல்கள் நடந்து ஹங்கேரியில் இருந்த டெப்ரெசென் என்ற தன் சொந்த ஊருக்கு வந்த தனது வீட்டிற்குச் சென்ற போது அதிர்ந்து போனார். அங்கே அவரது தந்தை, தாயார், சகோதர சகோதரிகள்,மனைவி யாரையும் காணோம்.அங்கே இருந்தவர்களுக்கு பாஸ்கின் குடும்பம் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. மலைத்து நின்ற பாஸ்கினை நோக்கி ஓடி வந்த சிறுவன் பாஸ்கின் அங்கிள், உங்கள் வீட்டில் இருந்த அனைவரும் இறந்து விட்டனர்.நாஜிக்கள் உங்கள் மனைவியை அசுவிச் சித்திரவதை முகாமுக்கு கொண்டு சென்று விட்டனர்.” என்று கூறினான்.சோகத்தோடு பாரிஸ் திரும்பிய மார்செல் 1947இல் அக்டோபர் மாதம் நியூயார்க் வந்து சேர்ந்தார்.

 

இந்தக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த மார்செலுக்கு திடீரென்று தான் சமீபத்தில் சந்தித்த ஒரு பெண்மணி பற்றிய ஞாபகம் வந்தது… அவர் டெப்ரெசனைச் சேர்ந்தவர் தான். அவரது உறவினர்கள் நச்சு வாயு சேம்பர்களில் நாஜிக்களால் கொல்லப்பட்டனர். அசுவிச்சில் ஜெர்மானிய ஆயுத பேக்டரியில் வேலை பார்த்து வந்த அவரை யுத்த முடிவில் அமெரிக்கர்கள் விடுவித்தனர்.

பாஸ்கினிடம் மார்செல் அவரது மனைவியின் பெயர் மரியாவா என்று கேட்டார். பாஸ்கின் ஆச்சரியப்பட்டுப் போனார். எப்படி முகம் அறியாத ஒருவருக்குத் தன் மனைவியின் பெயர் தெரிந்தது/

அடுத்த ஸ்டேஷனில் பாஸ்கினை இறங்குமாறு கூறிய மார்செல் ஒரு போன் பூத்திற்குச் சென்று தனது டயரியை எடுத்து ஒரு போன் நம்பரை டயல் செய்தார். மரியாவிடம் அவர் கணவரின் அடையாளங்களைக் கேட்டார். பாஸ்கின் தான் அவரது கணவர் என்று உறுதிப்படுத்திக் கொண்ட மார்செல் போனை பாஸ்கினிடம் தந்து, “உங்கள் மனைவியிடம் பேசுங்கள்” என்றார். வாயடைத்துப் போன பாஸ்கின் சில நிமிடங்கள் அப்படியே நின்றார். பின்னால் போனில் தன் மனைவியுடன் பேசி ஆனந்தக் கண்ணீர் விட்டார். பின்னர் பாஸ்கினை ஒரு டாக்ஸியில் ஏற்றி மனைவியிடம் செல்லுமாறு கூறிய மார்செல் தம்பதிகள் இணையும் புனிதமான தருணத்தில் தான் இருப்பது அழகல்ல என்று விளக்கி பாஸ்கினை மட்டும் அனுப்பினார்.

இப்போது கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கூறும் மார்செல் சம்பவத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் அலசுகிறார். ஏன் அவர் தன் நண்பரைப் பார்க்க திடீரென்று அவருக்கு ஏன் தோன்ற வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட ரயிலைத் திரும்பும் போது ஏன் பிடிக்க வேண்டும், அதில் ஒரு இருக்கை தனக்கு மட்டும் ஏன் கிடைக்க வேண்டும், அருகில் இருந்தவர் அந்தக் கணத்தில் ஏன் ஹங்கேரிய பேப்பரைப் படிக்க வேண்டும்.. ஏராளமான அதிசயங்கள்.

 

இறைவனின் வழி தனி வழி என்று முடிகிறது கட்டுரை!.

கர்ம பலன்கள் தவறாது அந்தந்த கணத்தில் உரியவரை வந்து அடையும் என்பதற்கான சரியான நடந்த சம்பவம் இது! ஆனால் ஆயிரக்கணக்கானோருக்கு இது போன்ற அதிசய சம்பவங்கள் தினந்தோறும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. அதில் உள்ள அபூர்வமான நிகழ்வுகளை இனம் காணும் மனோபாவம் தான் ஏராளமானோருக்கு இல்லை. அப்படி அதிசய நிகழ்ச்சிகளை இனம் காணும் சிலருக்கும் அதைக் கர்ம பலன்களோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தனது வாழ்வில் நிகழும் சம்பவங்களை அன்றாடம் இரவு படுக்கப் போகும் முன்னர் அலசினால் கர்ம பலன்களின் ரகசியத்தை ஓரளவு உணர்ந்து கொள்ளலாம்!

 

நூறு கோடி கல்பம் ஆனாலும் வினை விடாது

 

ஹிந்து மதத்தின் மிக முக்கியமான இந்த கர்மபலன் தத்துவத்தை விளக்கும் சுபாஷித சுலோகம் ஒன்று உண்டு.

க்ருத கர்ம க்ஷயோ நாஸ்தி கல்போ கோடி ஷதைரபி I

அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் II

இதன் பொருள்: ஒருவன் செய்த கர்மங்களின் பலன்கள் (செயல்களின் விளைவுகள்) ஒரு பொழுதும் அழியாது. அநேக நூறு கோடி கல்பம் போனாலும் சரி, (அழியாது) த்னது கர்ம பலனை ஒருவன் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அவை நல்லவையாக இருந்தாலும் சரி, தீயவையாக இருந்தாலும் சரி, அனுபவித்தே ஆக வேண்டும்!

இந்த கர்ம பலனை உரிய நேரத்தில் உரியவரை யார் கொண்டு சேர்க்கின்றனர், இதற்கான செயல் முறை என்ற மாபெரும் இறை ரகசியத்தை அறிந்தவர் யாரும் இல்லை என்றே நமது அற நூல்கள் வியந்து கூறுகின்றன!(ந மே விது: ஸ¤ரகணா ப்ரபவம் ந மஹர்ஷய: – என்னுடைய ப்ரபாவத்தை தேவர் கூட்டங்களோ மஹரிஷிகளோ அறியார் – கீதையில் கண்ணன் வாக்கு – 10ஆம் அத்தியாயம் 2ஆம் ஸ்லோகம்)

உத்தரேத் ஆத்மனாத்மானம்

 கர்ம பலன்களையும் அதற்கான பலன்களையும் பூர்வ ஜன்ம புண்ணியத்தால் சில தீய விளைவுகளுக்கான பரிகாரம் செய்து இந்த ஜன்மத்திலேயே நலம் பெறுவதற்கான வழிகளையும் ரிஷிகள் உள்ளுணர்வால் அறிந்து அதை பல தர்ம சாஸ்திர நூல்களில் விவரித்துள்ளனர். அவற்றை அறிந்து நலம் பெறலாம்; பலனை எதிர்பார்க்காமல் கர்மங்களைச் செய்து கர்ம விளைவுகள் நம்மைப் பற்றாமல் அடுத்த ஜன்மத்தைப் புனிதம் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம்; கர்ம பலன் ரகசியத்தை விசாரத்தால் அறிந்து, இறைவனை அடிபணிந்து ஜன்ம நிவிருத்தி பெற்று முக்தியையும் அடையலாம்! எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது.

இதையே கீதையில் சுருக்கமாக கண்ணன் ‘உத்தரேத் ஆத்மனாத்மானம்’ (உன்னை நீயே உயர்த்திக்கொள்ளலாம்) என்று கூறி விட்டான்!

நன்றி: ஞான ஆலயம் ஆகஸ்டு 2012                                          இந்தத் தொடர் நிறைவுறுகிறது

Article written by S Nagarajan

Indra Festival in the Vedas and Tamil Epics

By London Swaminathan (my posts are simultaneously uploaded into five websites)

(This article is available in Tamil as well in my blogs.)

Worship of God Indra was popular in ancient Tamil Nadu. The oldest Tamil Book is Tolkappiyam, which is dated to 1st century BCE. Vedic gods Indra and Varuna were among the four Gods mentioned by Tolkappiam as Gods of the Tamils. Interestingly, Shiva was not one of them. That book was written by a Brahmin by name Trundadumagni and launched in the court of Pandya king under the chairmanship of Athankottu Asan, who was well versed in the four Vedas. Today we see the amazing continuity of Indra worship in India and Nepal. Brahmins worship Indra and Varuna three times a day in their Sandhya vandhana. Nepalese celebrate Indra Festival every year. Hindu Temple priests around the world invoke all the Vedic Gods in their day to day rituals.

Indra Festival was a very popular festival in ancient Tamil Nadu according to twin Tamil epics Silappadikaram and Manimekalai. It was first mentioned in Mahabharata and Ramayana. But in the Vedas we have some information which is interpreted by scholars as Indra festival. Atharva Veda mentioned Indra Dwaja (banner or flag of Indra). Rig Veda hinted at it.

At present Indra festival is celebrated as a grand Royal festival in Nepal. Gunabhadra, a king of 10th century CE started this festival in Nepal. They call it Yenya or Indra Jatra. Bengalese also celebrated it.

Raksha Bhandan celebrated all over India and the Water Festivals celebrated in Laos, Cambodia, Thailand and Burma has got some links with Indra, the god of rain.

 

Picture: Elephant dance in Indra Festival,Kathmandu, Nepal

All the important Hindu scriptures like Bhagavatha, Ramayana and Mahabharata and Jain and Buddhist scriptures refer to Indra festival. This shows that Indra was held in high esteem from the southernmost tip of India up to Nepal in the Himalayas. Jains and Buddhists competed with each other in praising Indra by saying that “even Indra” worshipped the Buddha or Jain Tirthankara. Ramayana used the simile of Indra Dwaja in many places. Bringing down Indra Dwaja (flag)on the last day of the festival was a ritual used very often by Valmiki.

2000 year old Sangam Tamil literature refers to Indra (Pura Nanuru 182 and 241, Ainkuru. 62, Tirumurugu. 155-59 ) and Amruta (ambrosia of Indraloka) in a lot of places. Didactic books including Tirukkural also refer to Indra and Amruta.

The rare coincidence between the Tamils and the Nepalese is that both of them install a pole and hoist the Indra flag. In Nepal it is celebrated for 8 days but in Tamil Nadu it was celebrated for 28 days.

Another rare coincidence of Indra Festival in north and south is that they believed stoppage of the festival would result in a natural catastrophe. When Krishna stopped it, it was raining incessantly and Krishna had to lift the Govardhana Hill to protect his people. When the Choza king stopped it, the harbour city of Kaveripumpattinam in Tamil Nadu was devoured by the sea. Both of them believed Indra was in charge of rains and water.

 

Who Started the Festival?

Mahabharata says it was started by Uparichara Vasu. The life story of Uparichara Vasu itself is interesting. He was given an aeroplane and a garland of never fading lotus flowers by Indra. He married Girika but he was asked to go to a forest where his seed (semen) fell at the thought of his wife. It was devoured by a fish and Matsya (satyavati) was born to the fish. Each one of his sons started a separate dynasty in India. He was credited with some engineering feats  such as breaking down a hill to create a new river (Please read my post GREAT ENGINEERS OF ANCIENT INDIA).

Jain scriptures link Indra festival with Rishabadeva, the first Thirthankara. Tamil epic Silappadikaram (Kathai 5) says that one choza king Thungeyil  Erintha Thodithot  Sembiyan started this festival. Both may be correct if we take one started it in the north and another started in the south of India. Interestingly Chozas themselves claimed that their ancestors ruled north India. All their ancestors were mythological characters mentioned in Mahabharata and Ramayana. The very word Sembiyan came from Sibi Chakravarthy of the famous pigeon story  (Sibi=Saibya=Sembiya). The story of Sibi is in Sangam Tamil literature, Pancha Tantra and Tamil epic Silappadikaram.

The details of the celebrations were given in Silappadikaram  (5: 141-4) and Manimekalai (1:27-72, 2:1-3, 1:1-9, 24: 62-69, 25: 175-200). The drummer will announce that the festival began and then people will assemble to hoist the Indra Dwaja (Banner). The whole town wore a festive look with lot of decorations. Indra was bathed with holy water. It started on a full moon day in Chitra month (coinciding with April). Other deities were also decorated. Dance and Music were the highlights.

According to Maimekalai, Agastya asked the Sembian (Choza) king to start this festval. In Nepal, it is celebrated in September. In Tamil Nadu, the festival Bogi, celebrated on the eve of Makarasanranti/ Pongal also linked with Indra. Bogi itself means Indra.

 

In the Vedas

Indra is said to have shaken in front of Maruts in the Vedas. Actually it means that Indra Flag was fluttering in the Wind (Maruts are wind gods; The word Maruti/ Anjaneya came from it). Vedic scholars Dange and Meyer have written about the festival in detail.

In the Rig Veda it is said that Indra shook in the company of his followers. His companions Maruts were the wind god. Vedas also say, “ priests have raised you up on the high, O, Satakratu like a pole” (RV 1.X.1). Vedic poets used symbolic language to convey the message that the Indra flag was hoisted and it was fluttering in the wind. Meyer gives more evidence from Atharva Veda.

In Kuchipudi and other dance performances a victory flag and staff are installed in the name of Indra. In ancient Tamil Nadu a big honour in the name of Indra’s son Jayanta was given to the court dancer. It was called Talai kol.

Tamils celebrate Bogi festival on the eve of Pongal (Makara Sankaranti). Bogi is another name of Indra. Indra and Varuna are worshipped by the Brahmins in their day to day Sandhayvandana (thrice a day water oblation to Sun God) and in all the temples during Puja and Abhisheka (ritual bathing of Gods). It is amazing to see the same custom is followed for more than at least 3500 years.

 

Nivedita and Indra Flag

Swami Vivekananda asked his Irish disciple Nivedita alias Margaret Noble to design a Hindu flag. She came with a design of Indra’s  weapon Vajrayutha and word “Vandemataram” in Bengali language. South East Asian countries had Indra’s vehicle Iravatha elephant on their flags or on their national emblems. Now we see lot of Indra Idols and statues in the museums around the world.

Now we realise that the theory of Aryan Dravidian divisions proposed by the Western “scholars”  were utter lies. Indians had one culture from time immemorial though out India. We have seen the same festival celebrated from Vedic days to modern days in Nepal via Krishna of Mathura and Chozas of Tamil Nadu.

(Read other posts Indra Seal in Indus Valley, Vishnu Seal in Indus Valley by Swaminathan. Contact for more information: swami_48@yahoo.com or swaminathan.santanam@gmail.com)

***************

இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

(This article is available in English as well in my blogs: INDRA FESTIVAL IN THE VEDAS AND TAMIL EPICS: swami.)

தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. ஆனால் இதன் தோற்றம் வேதத்திலும் ராமாயண, மஹா பாரத இதிஹசங்களிலும் உள்ளது. இன்றும் நேபாள நாட்டில் பெரிய விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

தமிழ் உலகம் செய்த தவப் பயனால் கிடைக்கப்பெற்ற பழந்தமிழ் நூல் “ஒல்காப் புகழ் தொல்காப்பியன்” எழுதிய தொல்காப்பியம் என்னும் இலக்கணப் பனுவல் ஆகும். அதன் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. அதை எழுதியவர் த்ருணதூமாகினி என்னும் தொல்காப்பியன் ஆவார். இது “உச்சி மேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்” தரும் தகவல். அதை ஒப்புக் கொள்ளாதோரும் “நான்மறை முற்றிய” அதங்கோட்டு ஆசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேறியதாக பனம்பாரனார் கூறியதை மறுக்கவில்லை. அதாவது தமிழ்நாட்டில் வேதங்களில் கரைகண்ட ஒரு பார்ப்பனன் இருந்தார், அவர்தான் தொல்காப்பியத்துக்கு நற்சான்றிதழ் வழங்கினார் என்பதை “தமிழ் கூறு நல்லுலகம்” ஒப்புக் கொள்கிறது.

வேதத்தில் இந்திர விழா

டாங்கே, மெயர் போன்ற வேத நூல் அறிஞர்கள் இந்திரவிழா பற்றிய குறிப்பு உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலும், அதர்வ வேத்திலும் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திர த்வஜம் (இந்திரன் கொடி) பற்றி அதர்வ வேதம் பேசுகிறது. ரிக் வேதத்தில் மறை மொழியில் இதே விஷயம் உள்ளது. “மருத்துக்கு முன் இந்திரன் நடுங்கியதாக” ஒரு இடத்தில் வருகிறது. இதன் பொருள்—காற்றில் இந்திரன் கொடி படபடத்தது என்பதாகும். மருத் என்பது காற்றுக் கடவுள். அதிலிருந்தே அனுமனைக் குறிக்கும் மாருதி என்ற சொல் வந்தது. ரிக் வேதத்தில் இன்னும் ஒரு இடத்தில் , “ஏ இந்திரனே உன்னை புரோகிதர்கள் உயரே ஏற்றிவிட்டார்கள்” என்ற வரிகள் வருகின்றன. இது இந்திரன் கொடி ஏற்றப்பட்டுவிட்டது என்பதாகும்.

இந்திர விழா தோற்றம்

இந்திரன் விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன.

இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும். ஆனால் உபரிசார வசு துவக்கியதாக மகா பாரதம் கூறும். செம்பியன் என்ற சொல்லே சிபிச் சக்ரவர்த்தியின் பெயரிலிருந்து வந்ததுதான். சிபியின் கதை சங்க இலக்கியத்தில், சிலப்பதிகாரத்தில் மற்றும் பல வட மொழி நூல்களில் இடம் பெற்றுள்ளது சோழ்ர்கள் கல்வெட்டுகளில் தங்கள் முன்னோர்கள் வடமேற்கு இந்தியாவை ஆண்டதாகக் கூறுவர். (சிபி= சைப்ய=செம்பிய)

உபரிசார வசு இந்திரனிடம் வாடாத் தாமரை மாலையும் ஒரு விமானத்தையும் பெற்ற பேரரசன். இந்தியாவின் பழங்கால எஞஜினீயர்களில் சிறப்பானவன். ஒரு மலையை உடைத்து புதிய நதியை உருவாக்கியவன். (வேத காலத்தின் முதல் எஞ்ஜினீயர் இந்திரன். அவன் மலையை உடைத்து விருத்திரனை, நமுசியை விழுத்தாட்டிய செய்திகளை வேதங்கள் பாடுகின்றன. இவைகள் மாபெரும் பொறி இயல் செய்திகள். என்னுடைய GREAT ENGINEERS OF ANCIENT INDIA ஆங்கிலக் கட்டுரையில் மேல் விவரம் காண்க).

உபரிசார வசுவின் மனைவி பெயர் கிரிகா. அவளுடன் படுத்து சுகம் அனுபவிப்பதற்குள் அவனை அவசரமாகக் காட்டில் வேட்டை ஆட அனுப்பினர். அங்கே மனைவியை நினைக்கவே விந்து வெளியாகி, அதை  ஒரு மீன் உண்ண, மத்ச்யா (சத்யவதி) பிறந்தாள். அவனுடைய குழந்தைகள் மூலம் இந்தியாவின் பழைய வம்சாவளிகள் தோன்றின என்பது மகாபாரதம் கூறும் செய்தி. (மீன்,  மனித விந்துவை சாப்பிட மனிதர்கள் பிறக்கும் என்பது எல்லாம் மறை மொழிகள். இதனுடைய சரியான பொருளை வேறு ஒரு கட்டுரையில் தருவேன்). இந்த உபரிசார வசுதான் இந்திர விழாவைத் துவக்கினார்.

சோழன் துவக்கியதும், உபரிசார வசு துவக்கியதும் சரியான தகவல்தான். ஒருவர் வட இந்தியாவிலும் ஒருவர் தென் இந்தியாவிலும் துவக்கினர் என்பது சாலப்பொருத்தமே.

ராமாயணத்தில் வால்மீகி முனிவர் நேரடியாக எந்தத் தகவலையும் தராமல் “அவன் இந்திரன் கொடிக் கம்பம் போல வீழ்ந்தான், சாய்ந்தான்” என்ற உவமையைப் பல இடங்களில் பயன்படுத்துகிறார்.

Picture: Indra in Nepal

தமிழனும் இந்திரனும்

தமிழில் மிகப் பழைய நூல் தொல்காப்பியம் என்பது எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை. அதில் தொல்காப்பியர், வேதங்கள் கூறும் கடவுள்களே தமிழர் கடவுள் என்று உறுதிபடக் கூறுகிறார். இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் (முருகன்) ஆகிய நால்வரே தமிழ்க் கடவுள்கள். சிவன் அந்தப் பட்டியலில் இல்லை. உண்மையில் சிவன் என்ற சொல்லை முதல் முதலில் பயன்படுத்தியவர்கள் நாயன்மார்கள தான். ஆனால் சிவ பெருமானைக் குறிக்கும் ஏனைய சொற்கள் சங்கத் தமிழில் உண்டு.

இந்திரன் இடம்பெறாத தமிழ் நூல்களே இல்லை என்று சொல்லிவிடலாம். புறநானூற்றில் உண்டு. திருக்குறளில் உண்டு. ஐங்குறு நூற்றிலும் இருக்கிறது. தேவலோக அமிழ்தம், நிறைய இடங்களில் வருகிறது.

மிகவும் வியப்பான விஷயம்! பாபிலோனிய ஜில்காமேஷ் போன்றோர் உலக மியுசியங்களில் ஒளிந்து கொண்டுவிட்டனர். ஆனால் இந்திரனையோ இன்றும் பிராமணர்கள் முக்கால சந்தியாவந்தனத்தில் தினமும் வழிபடுகின்றனர். உலகம் முழுதும் உள்ள இந்துக் கோவில்களில் தினசரி பூஜைகளில் இந்திரனும் வருணனும் வழிபடப்படுகின்றனர். இந்திரன் பெயர் இல்லாத இனம் இந்தியாவில் எங்குமே இல்லை. இந்தியாவின் முதல் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் முதல் தமிழ்நாட்டின் நாகேந்திரன், கண்ணாயிரம் வரை எல்லாம் இந்திரன் பெயர்கள்தான்.

இன்றும்கூட குச்சிப்புடி முதலிய நடனங்களில் மேடையில் இந்திரன் கொடி வைக்கப்படுகிறது. சிலப்பதிகார, மணிமேகலை புகழ் மாதவிக்குக் கொடுக்கப்பட்ட தலைக் கோல் இந்திரன் மகன் ஜயந்தனுடன் தொடர்புடையது.

 

நேபாளத்தில் இந்திர விழா

இன்றுவரை இந்திர விழாவை  பழந்தமிழ்நாடு போலக் கொண்டாடும் நாடு நேபாளம். அதன் தலை நகரமான காத்மண்டுவில் ஆண்டுதோறும் அரசாங்கத் திருவிழாவாக நடைபெறுகிறது. தமிழ் நாடு போலவே கொடி ஏற்றி ஆடல் பாடலுடன் இந்திர தேவன் ஊர்வலத்துடன் விழா நடைபெறுகிறது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, பர்மாவில் ஏப்ரல் மாத புத்தாண்டு தினத்தில் நடைபெறும் நீர் விழாவும், இன்று இந்தியா முழுதும் நடை பெறும் ரக்ஷா பந்தனும் (கையில் சகோதரிகள் கட்டிவிடும் காப்பு) இந்திரன் தொடர்புடைய விழக்களே.

பொங்கலுக்கு முதல் நாளன்று தமிழர்கள் கொண்டாடும் போகிப் பண்டிகை இந்திர விழாவின் ஒரு பகுதியே. போகி என்பது இந்திரனின் பெயர்களில் ஒன்று.

Elephant Dance in Indra Viza in Nepal

கண்ணன்—- இந்திரன் “மோதல்”

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சில “அதிமேதாவிகள்” உண்டு. இந்திய மக்களையும் நாட்டையும் பிளவுபடுத்த ஏதேனும் ஆரிய மாயை ,திராவிட மாயை கிடைக்காதா என்று கண்ணில் விளக்கெண்ணயை ஊற்றிக் கொண்டு தேடுவார்கள். வெறும் வாயை மெல்லும் இந்த பரிதாப கேசுகளுக்கு அவல் கிடைதது போல பாகவதத்தில் ஒரு செய்தி வருகிறது. இந்திரன் விழாவை கண்ணன் நிறுத்தி தனக்கும் பாதி பங்கு கேட்டான் என்று. இதனால் இந்திரன் கோபம் கொண்டு பேய் மழை பெய்யச் செய்யவே கண்ணன் கோவர்த்தன மலையைத்தூக்கி தனது மக்களைக் காப்பாற்றினான் என்று. பாகவதத்தையே நம்பாதப் பரிதாபக் கேசுகள், கண்ணனின் பகவத் கீதையையே நம்பாதப் பரிதாபக் கேசுகள் இதை மட்டும் பிடித்துக் கொண்டு புது தியரிகள் எழுதி பி எச். டி வாங்கவும் முயலுவர்.

உண்மை என்னவென்றால் தமிழ் நாட்டைப் போலவே கிருஷ்ண பூமியிலும் இந்திர விழா நடைபெற்றது. சோழ மன்னன் அதை நிறுத்தியதால் காவிரிப் பூம்பட்டிணத்தைக் கடல் கொண்டது என்று மணிமேகலை கூறுகிறது. ஆக இந்திர விழாவை நிறுத்தினால் இயற்கைச் சீற்றம் ஏற்படும் என்பதை வட ,தென் இந்தியர்கள் ஒப்புக்கொண்டனர் என்பதே உண்மை.

தொல்காப்பியர் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை,, வேதங்கள் குறிப்பிட்ட இந்திர வழிபாட்டை இன்றுவரை தமிழ் பிராமணர்கள் மற்றும் தமிழ் நாட்டுக் கோவில் பூசாரிகள், அர்ச்சகர்கள் பின்பற்றிவருவது 3500 ஆண்டுக்கும் மேற்பட்ட பாரம்பர்யத்தின் தொடர்ச்சி என்பதை அறியும்போது மெய்சிலிர்க்கிறது.

 

நிவேதிதாவும் இந்திரன் கொடியும்

 

இன்னொரு வெப்சைட்டில் படித்த ஒரு வியப்பான விஷயம் விவேகானந்தரரின் சிஷ்யைகளில் ஒருவர் உருவாக்கிய இந்திரன் கொடியாகும். அவர் பெயர் மர்கரெட் நோபிள். ஐரிஷ்காரியான அப்பெண் நிவேதிதா என்று பெயர்தாங்கி புகழ்பெற்றார். இந்துக்களுக்கான ஒரு கொடியை உருவாக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டபோது அவர் இந்திரனின் வஜ்ராயுதத்தைப் பொறித்து வங்காளி மொழியில் வந்தே மாதரம் (தாயை வணங்குவோம்) என்று எழுதிய கொடியை உருவாக்கினார். தமிழர்கள், நேபாளியர்கள் போல வங்காளிகளும் இந்திர விழா கொண்டாடுவர். இன்றும் கூட தென் கிழக்காசிய நாடுகளில் இந்திரனின் ஐராவதம் ( 3 அல்லது 4 தலை யானை ) கொடியிலோ, அரசாங்க சின்னங்களிலோ இடம்பெற்றிருக்கிறது. இந்திரனின் சிலைகள் இல்லாத மியூசியமே இல்லை என்றும் சொல்லலாம்.

வாழ்க இந்திரன் புகழ். வளர்க இந்து மதம்.

குறிப்புகள் வேண்டுவோருக்கு:

Silappadikaram  (5: 141-4) and Manimekalai (1:27-72, 2:1-3, 1:1-9, 24: 62-69, 25: 175-200). (Pura Nanuru 182 and 241, Ainkuru. 62, Tirumurugu. 155-59 ) and Amruta (ambrosia of Indraloka) in a lot of places.

In the Rig Veda it is said that Indra shook in the company of his followers. His companions Maruts were the wind god. Vedas also say, “ priests have raised you up on the high, O, Satakratu like a pole” (RV 1.X.1). Vedic poets used symbolic language to convey the message that the Indra flag was hoisted and it was fluttering in the wind. Meyer gives more evidence from Atharva Veda

*******