Hinduism through 500 Pictures in Tamil and English 43; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-43 (Post No.15,536)

Surya in Delhi Airport

Written by London Swaminathan

Post No. 15,536

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Tamil Version is given as Part 44)

Navagrahas – nine heavenly bodies

Strange Things about Navagraha Shrines

Navagraha Shrines are found mostly in Shiva temples; but there are exceptions. Madurai Koodal Azakar Perumal Temple , though a Vaishnava temple, has a Navagraha Shrine.

Famous Navagraha Shrines, at least nine in number are crowded in one area. That is Thanjavur district in Tamil Nadu. Some Vaishnava Navagraha Shrines are also known. They are in Tirunelveli District.

Gangai Konda Chozapuram temple has a unique Navagraha Statue. The sculptor has selected a square stone where Sun occupies centre place; on four sides all the other eight Grahas are carved.

Tirunaraiyur Shiva temple has a special shrine for Sani and his family.

Since Hindus knew well about the solar system, Sun is placed in the centre and all others face towards the sun. Sun’s wives are Chaya and Usha; again this is also based on science. Before sunrise, we see dawn, that is Usha; Rig Veda has beautiful poems on Dawn/Usha. Sun creates shadow behind. Shadow in Sanskrit is Chaya.

Sun’s black spots cause big disruptions on communication on earth. Bhartruhari described them Ketus and Kabandhas , that is demons, in his Brhat Samhita.

Navagrahas are not Nine Planets; they are nine heavenly bodies with gravity. Graha means gravity. English words Grip, Grab, Gravity etc are derived from this Sanskrit word. That is the reason Hindu scientists named hem Graha and included Sun, Moon, Rahu and Ketu which are not planets. They have gravity. Tamils copied it and called them Kol. This also has the same meaning.

Hindus gave supreme importance to Sun which is considered Arogya Karaka- one who gives Health and long life. Without sun light all living beings will die within a few hours or few days. Sun light provides us Vitamin D. Moon has big impact on oceans and tides, so do they have influence on human bodies and particularly Mind.

Rig Veda says suns is important for Eyes and Moon is important for Mind (It is in Purushasukta, Tenth Mandala of RV).

Hindus have also discovered the relationship between planets. Throughout Sanskrit Literature and Sangam Tamil literature Venus is linked with Rains. Thoughtout Sanskrit literature Moon is linked with plants. They used the same word SOMA for moon and Soma Rasa, the elixir of life.

In the Navagraha hymn they sing about the relationship between planets. Some are symbolic and others have literal meaning.

Konark, Odisah Sun Rath and Sun God below

Navagraha- Nine Gem Ring

Navagraha shrines inside Temples

All South Indian temples have separate shrines for the Navagrahas inside the big temple complex.

Round the sanctum/ garbhagriha of Siva temple, we find this Navagraha shrine. The sun stands in the centre and other planets are fixed round him, each in a specified direction.  This shows Hindus knew that all the plants are orbiting around sun. The planets are highly respected and scrupulously worshipped by the Hindus as they are believed to influence the destinies of human beings.

Hindus cast horoscopes when a child is born. That will show his future life. Brahmins do Sandhyavandana three times a day and the Navagraha tarpanam is done to satisfy all the nine planets. This will avoid evil influence of planets.

Hindus only worship stars and planets in the world. This explodes Aryan immigration theories. Sangam Tamil literature mentioned all the nine planets with reverence. They mentioned even the worship of Saptarishi / ursa major constellation. This shows Hindus from north to south have the same belief even 2000 years ago. This shows Greek influence has nothing to do with Hindu astrology and Hindu astronomy. Moon / crescent worship, Rohini star worship are also in Tamil and Sanskrit books. Link between the pearl and swati star is also in both the ancient scriptures.

*****

In the Amarakośa, Amarasiṃha lists numerous synonyms for the Sun (Sūrya), highlighting its attributes such as radiance, timekeeping, and its role as the source of light.

Here are the key sun names found in the Amarakosa:

Sūra (सूर): The Sun.

Aryamā (अर्यमा): One of the Adityas.

Dvādaśātmā (द्वादशात्मा): The one with twelve souls (months).

Divākara (दिवाकर): Maker of the day.

Bhāskara (भास्कर): Maker of light/radiance.

Ahaskara (अहस्कर): Creator of the day.

Bradhna (ब्रध्न): The pale/white one.

Prabhākara (प्रभाकर): Creator of light.

Vibhākara (विभाकर): Maker of light/shining.

Bhāsvān (भास्वान्): Radiant/luminous.

Vivasvān (विवस्वान्): The shining one.

Saptāśva (सप्ताश्व): Drawn by seven horses.

Haridaśva (हरिदश्व): Having green/yellow horses.

Uşnaraśmi (उष्णरश्मि): Hot-rayed.

Vikartana (विकर्तन): The cutter (associated with the cutting of the sun’s limbs).

Arka (अर्क): The reverend/radiant one.

Mārtanda (मार्तण्ड): Born from a dead egg (bird), the sun.

Mihira (मिहिर): Friend/cloud-disperser.

Aruṇa (अरुण): Dawn/ruddy.

Pūşā (पूषा): Nourisher.

Dyumaņi (द्युमणि): Jewel of the sky.

Taraņi (तरणि): Swift/remover of darkness.

Mitra (मित्र): Friend.

Citrabhānu (चित्रभानु): Having brilliant rays.

Virocana (विरोचन): Illuminator.

Viśvāvasu (विश्वावसु): One of the Gandharvas, also used for the sun.

Grahapati (ग्रहपति): Lord of the planets.

Tvişāmpati (त्विषांपति): Lord of light.

Aharpati (अहर्पति): Lord of the day.

Bhānu (भानु): Ray/sun.

Hamsa (हंस): The swan/sun.

Sahasrāmśu (सहस्रांशु): Thousand-rayed.

Savitā (सविता): The Arouser/creator.

Tapana (तपन): The Heater.

Ravi (रवि): Praised by all.

Padmākşā (पद्माक्ष): Lotus-eyed.

Tejasāmrāśi (तेजसाम्राशि): Mass of glory.

Chāyānātha (छायानाथ): Lord of shadow.

Tamistahā (तमिस्रहा): Remover of darkness.

Karmasākşi (कर्मसाक्षी): Witness to actions.

Jagaccakşus (जगच्चक्षुस्): Eye of the world.

Lokabandhu (लोकबन्धु): Friend of the world.

Trayitanu (त्रयितनु): The three-bodied (associated with Vedas).

Pradyotana (प्रद्योतन): Shining/illuminating.

Dinamani (दिनमणि): Jewel of the day.

Khadyota (खद्योत): The sky-light.

Lokabāndhava (लोकबान्धव): Relative of the world.

Ina (इन): Strong/lord.

BhaŖga (भर्ग): Refulgent/shining.

Dhāmanidhi (धामनिधि): Repository of light.

Amśumāli (अंशुमाली): Garlanded with rays.

Abjinípati (अब्जिनीपति): Lord of lotus beds.

These names are described and commented upon in the Amara-koṣa-udghāṭana of Kṣīrasvāmin, which provides explanations for the origin and aspects of these sun-related terms. (from Wisdom Library)

****

Navagraha in Asmoleon Museum, Oxford

Navagras in British Museum, London

Oxford Museum

Nine Planets in Hindu Astronomy

Hindus called heavenly bodies Grahas. So Nava Grahas/ Nine Planets include Sun, Moon, Mars, Mercury, Jupiter, Venus, Saturn, Rahu and Ketu. Strictly speaking, sun is a star and moon is earth’s satellite and Rahu and Ketu are north and south lunar nodes. Four of the “nine planets” are not planets. They calculated correctly the time of the eclipses in spite of these naming.

Thesauruses like Amarakosa in Sanskrit and Diwakaram and Pingalandhai in Tamil give several names for the planets. What do we know from these names or epithets for the planets? Navagraha stotras also describe the planets, their colours and their virtues. Now and then we read some “scholarly” articles about Hindus copying Greeks or the Babylonians. Is there any truth in it?

Following are taken from our Hymns or Thesarus:

Statement 1

Mars is the son of Earth (Bhumi putra, Mahisuta)

Statement 2

Mercury is the son of Moon (Induja, Somaja)

Statement 3

Saturn is the son of Sun (Chaya putra)

Statement 4

Venus causes rains (Rain planet in Tamil)

Statement 5

Moon influences Mind; moon is born out of the mind of God

Statement 6

Sun is linked to Eyes; sun is born out of the eyes of God

Statement 7

60,000 Valakilya Rishis, seers of thumb size, travel with the sun.

Statement 8

Guru/Jupiter is the Teacher (guru) of the Devas; Venus is the Teacher of Demons. Both are Brahmins.

Statement 9

Colours of the Planets: Saturn is black, Jupiter is Golden, Mercury is Green, Mars is red and Venus is white.

Statement 10

Saturn is lame or a slow coach; Jupiter measures the years.

What is the meaning?

The above statements are rough translations of the words found in thesaurus or the hymns. What do they mean? Are they scientific?

The short answer is most of them are yet to be proved by science. Let me give some explanations

About Statements 1, 2, 3

When you say that a particular planet is the son of another heavenly body (Graha) it may mean collision between the two heavenly bodies produced X planet. So we call the X planet is the son of so and so. In short it is an astronomical event happened long ago. In astronomical terms billions of years ago.

Another meaning is one looks like another. For instance Mars looks like earth and so we call it the son of the Earth.

The third meaning is that earthly creatures are going to settle in Mars in future. So we call Mars is the son of earth.

The fourth meaning is a hidden meaning which we don’t know now. May be future scientific discoveries may prove us right. If we take soil samples from both the planets and compare it, clearer picture will emerge.

For instance there are several theories about the origin of moon. Nothing is proved beyond doubt. Some say it is a big chunk thrown out of earth because of a collision and it can be easily fit into Pacific Ocean. Some others say it was caught by earth and made a slave (satellite) of earth. These theories can be made as beautiful Puranic stories (Mythology).

About Statement 4

Venus- Rain connection may be superficial or more than that. It is in Sanskrit books as well as Sangam Tamil books. The amount of rains or the drought is forecast by the position or movement of Venus in the sky according to Tamil commentators. Science hasn’t proved it yet.

About Statements 5,6

Rig Veda says that the sun and moon are born from the eyes and mind of the Supreme God. We know for sure the connection between the moon and the mind. Lot of articles have come out in science journals linking the lunatics and the full moon. Hindus believe that doing Surya Namaskar every day in the morning will brighten one’s eyes. Science has to prove it.

“Chandrama Manaso Jata: Chakshor Suryo Ajayata” (Purushasukta in the Tenth Mandala of Rig Veda).

About Statements 8,9, 10

The colours are partly right. When we look at Mars in the sky it is blood red in the night sky.

When we say Saturn is “lame” we know that is the planet that takes longer years than other planets in completing one circle in orbit (30 years). When we say that Jupiter is the planet that measures years we mean it moves from one zodiac sign to another sign every year and completes the 12 zodiacal signs in 12 years which decides Kumba mela, Maha makam and other big festivals.

Planets-lots-of-info-Chart1

I have already written about the Valakilya Rishis (Lilliputian seers travelling with sun). I have also written about the Heavy planet Guru and its sling shot effect in sending the rockets without fuel. Guru in Sanskrit means Heavy and one who sends up (elevates) others.

My Conclusions:

1.No other language has got so many names for the planets or stars like Tamil and Sanskrit. This shows that astronomy was born here and we have not borrowed it from the Greeks or the Babylonians.

2.Brahmins in their Sandhya Vandhanam every day, worship Navagrahas in the same order like Sunday , Monday, Tuesday …….. They couldn’t have borrowed it from someone and inserted it in their Vedic ceremonies.

3.Tamil saint Sambandhar of seventh century CE sang about the nine planets in the same order. So it is Vedic and not Greek.

4. Moreover these beliefs are listed in 2000 year old scriptures in Tamil and Sanskrit from Kanyakumari to Himalayas covering the vast sub continent. So they couldn’t have borrowed it during Alexander’s time and spread it over the entire country. There were no mobile phones or telephone lines or electronic communication at that time!

5. Foreign beliefs can’t be inserted into Hindu ceremonies that easily. They have a fool proof system.

6. Purusha sukta of Rig Veda linked mind to Moon. It is scientifically proved with lots of research confirming the link between the two.

We can conclude that Hindus spread it to the whole word like their decimal system and Hindu numerals.

******

Here is the Sanskrit Hymn

Navagraha strotram

SURYA:

       Om Japa Kusuma Sankasam Kashya peyum mahadyuthim

        Thamorim sarva papaghanam pranatosmi divakaram

Chandra:

        Om Dadhi sankha thusharabham kshirodarnava sambhavam

       Namami sasinam somam shabhormakuda Bhushanam

Mangal(Mars or Chouva)

     Om Dharani Garbha Sambhootham vidyuthi kanthi samaprabham

     Kumaram Sakthi Hastham tham Mangalam Pranamamyaham

Mercury (Budha)

     Om Priyangu Kalikashyamam roopena prathimam budham

      Soumyam soumyagunopetham tham Budham pranamamyaham

Jupiter (Brihaspathi or  Vyasham)

          Om Devanam cha rishinam cha gurum kanchana sannibham

          Budhhibhootham thrilokesham tham namami brihaspatham

Venus (Shukra)

        Om Himakunda mrinalabham dythyanam paramam gurum

          Sarava sastha pravaktharam bhargavam pranamamyaham

Saturn(Shani)

        Om Neelanjana samabhasam raviputhram yamagrajam

         Chhayya marthanda sambhootham tham namami shanaiswaram

Rahu

       Om Ardha kayam mahaveeryam chandradhithiya vimardanam

         Simihika Garbha Sambhootam Tham Rahum Pranamamayaham

Kethu

       Om Palasa Pushpa sankasam tharakagraha masthakam

        Roudram roudrathmakam ghoram tham Kethum pranamamyaham

Meaning

The first verse is dedicated to Surya, the Sun God. In this verse sun is compared to Hibiscus (Japa Kusuma) with magnificence (Mahaa-dyutim). He is the descendent of Sage Kashyapa (Kashyapeeyam). Destroyer of darkness and sins (Tamorim sarva paapaghnam), He is the day-maker (Divakaram) too.   

The second hymn is on Chandra, the Moon. His colour is of Yogurt, Shell and Snow (Dadhi Shanka Tushara). He is born out of Milky Ocean at the time of Samudra Mathana (Ksheeror daarnava sambhavam) and bears the rabbit (Shashi) in Him. He is the head ornament of Shambhu (Shambhur mukuta bhushanam).

The third hymn is on Mangala, the Mars. He is Youth (Kumaram) Romans too consider Mars to be valiant youth. Born out of Earth (Dharani Garbha sambhutam) He is bright as lightening (Vidyut Kanti samaprabham).

The fourth hymn is on Budha, the Mercury. Like the bud of Priyangu (Aglaia Elaeagnoidea) He is Shyama (cloud colour) astronomers have observed Mercury to be grey. Roopene apratimam (matchless beauty). Gentle and composed nature (Sowmyam Sowmyagunopetam).

The fifth hymn is on Guru, the Jupiter. Resembling Gold (Kanchana sannibham) he is the preceptor of Deva and Rishis (Devanam cha Rishinam cha). He is embodiment of Intellect (Buddhi bhutam) and Lord of three worlds (Trilokesham).

The sixth hymn is on Sukra, the Venus. With the advantage of looking like the fibre of snow jasmine (Hima Kunda mirnalaabham), He is the teacher for Demons (Daityanam Paramam Gurum). He is the preacher of all science (Sarva shastra pravaktaaram).

The seventh hymn is on Shani, the Saturn. There is a mention of the Rings of Saturn (Neelanjana Samabhaasam) Neela is blue, Anjana is embellishment and Samabhaasam is resemble. He is (Raviputra) Son of Sun and Elder brother to Yama (Yamagrajam). He is son of Surya and Chayadevi (Chayamarthanda Sambootam) Marthanda is Sun.   

The eighth hymn is on Rahu, the north lunar node. He has half body but he is brave (Ardhakayam mahaveeram), He is the destroyer of Sun and moon (Chandraditya vimardanam) that is, while eclipse he destroys them. He is the son of Simhika, sister of Prahalada (Simhikagarbha sambootam).  

The ninth hymn is on Ketu, the south lunar node. He is red as Butea flower (Palasha Pushpa samkaasha). He is the head of all stars and planets (Tarakagriha mastakam). He is fierce and terrifying (Raudram Raudratmakam).


Gangaokonda Chozapuram Navagrahas in one stone.

To be continued………………

Tags- Navagrahas, Surya, Nine heavenly bodies, Gravity, Solar system, Hindu knowledge, Science in Navagraha Hymn, Synonyms for Sun, 29 Names

சப்தஸ்தான தலங்களின் பட்டியல், துஷ்டர்கள் பட்டியல் (Post No.15,535)

Thanjavur District Maps

Written by London Swaminathan

Post No. 15,535

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 56

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 56

துஷ்டர்கள் பட்டியல்

ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள் … ஆசார ஒழுக்கங்களில்

குறைபாட்டுடன் விதண்டாவாதம் செய்யும் துஷ்டர்கள்,

மாதாபிதாவைப் பழித்த துட்டர்கள் … தாய் தந்தையரை இழிவு

செய்யும் துஷ்டர்கள்,

ஆமாவின் ஊனைச் செகுத்த துட்டர்கள் … பசுவின் மாமிசத்துக்காக

அதைக் கொல்லும் துஷ்டர்கள்,

பரதாரம் ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள் … பிறர்

மனைவியை இச்சிக்கக் கூடாது என்ற நல்லறிவின்றி அனுபவித்த

துஷ்டர்கள்,

நானா வுபாயச் சரித்ர துட்டர்கள் … பலவித தந்திரச் செயல்களைச்

செய்த சரித்திரம் உடைய துஷ்டர்கள்,

ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் … வெறியேற்றும் கள்ளைக்

குடித்த துஷ்டர்கள்,

தமியோர்சொம் கூசாது சேரப் பறித்த துட்டர்கள் … தனியாய்

அநாதையாக உள்ளவரின் சொத்தைக் கூசாமல் தமக்காகவே பிடுங்கி

எடுத்த துஷ்டர்கள்,

ஊரார்கள் ஆசைப் பிதற்று துட்டர்கள் … ஊரில் எல்லாரின்

ஆசைகளையும் தாமே கொண்டு அறிவின்றிக் குழறும் துஷ்டர்கள்,

கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் … ஆரவாரத்துடன்

வாளாலும் வில்லாலும் போர் செய்து அகந்தை கொண்டு திரியும்

துஷ்டர்கள்,

குருசேவை கூடாத பாவத்து அவத்த துட்டர்கள் … குருவின்

சேவை கிடைக்கப் பெறாத பாவமும் பிழையும் கொண்ட துஷ்டர்கள்,

ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள் … மற்றவர்க்குக் கொடுக்காமல்

பொருளைத் தேடித் தேடி மறைத்துச் சேகரிக்கும் துஷ்டர்கள்,

கோமாள நாயிற் கடைப்பி றப்பினில் உழல்வாரே … இந்த

துஷ்டர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்த நாயை விட இழிவான பிறப்பை அடைந்து அதில் துன்புறுவார்கள்.

***

ராமன்அனுமன்பகீரதன் பற்றி

நிகர் இல் வஞ்சக மாரீச ஆதிகள் தசமுகன் படை கோடா

கோடிய நிருதரும் பட ஓர் ஏய் ஏவியே அடு போர் செய்

நெடியன் … வஞ்சகச் செயல்களில் நிகரற்ற மாரீசன் முதலிய அரக்கர்கள்,

ராவணன், அவனுடைய கோடிக் கணக்கான சேனைகள் யாவரும்

அழியும்படி ஒப்பற்ற அம்பைச் செலுத்திக் கொல்லும் போரைச் செய்த நெடியோனாகிய மாயோனும்,

அங்கு அனுமானோடே எழுபது வெ(ள்)ளம் கவி சேனா

சேவித நிருபன் அம்பரர் கோமான் ராகவன் மருகோனே …

அங்கு அனுமனோடு எழுபது வெள்ளம் குரங்குப் படையால் வணங்கப்

பெற்ற அரசனும், தேவர்களுக்குத் தலைவனும் ஆகிய ராமனுக்கு மருகனே,

சிகர உம்பர்கள் பாகீராதிகள் பிரபை ஒன்று பிராசாதாதிகள்

சிவ சடங்கமொடு ஈசானாதிகள் சிவ மோனர் தெளியும் மந்த்ர

கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ … மேலான

தேவர்கள், பகீரதன்* முதலிய அடியார்கள், ஒளி பொருந்திய அருள்

பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ மெளனிகள், தெளிந்துள்ள மந்திர சாத்திரத்தில் பாயும் மனத்தை உடைய யோகிகள், இவர்கள் யாவரும் பக்கத்தில் விளங்கும் சுவாமியே,

காமரு திரு வலஞ்சுழி வாழ்வே தேவர்கள் பெருமாளே. …

அழகிய நகராகிய திருவலஞ்சுழியில்** வாழ்பவனே, தேவர்களின்

பெருமாளே.

பகீரதன் சூரிய வம்சத்து அரசன். கங்கையை உலகிற்கு வரவழைத்தவன். வல்லக்கோட்டையில் முருகனைப் பூஜித்தவன்.

** திருவலஞ்சுழி கும்பகோணத்துக்கு அருகே உள்ளது.

***

மன்மதனின் மறுபெயர்

Manmatha and Rathi

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா …

மன்மதனைக்* கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு உபதேசம் செய்த குருநாதனே,

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப்

பெருமாளே. … திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால்

கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

* ‘சம்பரன்’ என்ற அசுரனை மன்மதன் தனது மறு பிறப்பில் கொன்றதால்,’சம்பராரி’ என்று மன்மதனுக்குப் பெயர் உண்டு.

***

கற்பக மரத்தைக் கொணர்ந்தவன்


Krishna with Rukmini and Sathyabhama

இந்த்ர தாருவை ஞால(ம்) மீதினில் கொணர்ந்த சங்க

பாணியன் ஆதி கேசவ ப்ரசங்கன் என்று வாழ் மணி மார்பன்

வீர விக்ரமன் தன் மருகோனே … இந்திரலோகத்து கற்பக

விருட்சத்தை பூமிக்குக் கொண்டு வந்தவன், பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவன், ஆதிகேசவன் என்னும் கீர்த்தியைப் பெற்றவன், சூரியனுடைய ஒளி போன்று என்றும் பிரகாசிக்கும் கெளஸ்துபம் என்னும் மணியை மார்பில் அணிந்தவன், வீர வல்லமை வாய்ந்தவனாகிய திருமாலின் மருகனே,

எண் திசா முக வேலை ஞாலம் முற்று(ம்) மண்டு கந்த …

எட்டுத் திசைகளிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முற்றிலும்

நிறைந்து விளங்கும் கந்தனே,

தாருக சேனை நீறு பட்டு ஒதுங்க வென்று பேரொளி சேர்

ப்ரகாசம் விட்டு இலங்கு கதிர்வேலா … தாருகாசுரனும் அவன்

சேனையும் தூள்பட்டு அழிய அவர்களை வென்று, பெரும் புகழ்

கொண்ட ஒளி வீசி விளங்கும் கதிர் வேலனே,

சந்த்ர சேகரி நாக பூஷணத்தி அண்டம் உண்ட நாரணி ஆல

போஜனத்தி அம்பை தந்த பூரண ஞான வேள் குறத்தி துஞ்சு

மணி மார்பா … சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக்

கொண்டவள், பூவுலகை உண்ட வைஷ்ணவி, ஆலகால விஷத்தை

உண்டவள், அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞான பூரணனாகிய

முருகவேளே, குற மகளாகிய வள்ளி உறங்கும் அகன்ற மார்பனே,

சண்ட நீல கலாப வாசியில் திகழ்ந்து கஞ்சன் வாசவன் மேவி

வாழ் பதிக்கு உயர்ந்த தஞ்சை மாநகர் ராஜ கோபுரத்து

அமர்ந்த பெருமாளே. … அதி வேகம் கொண்டதும் நீலநிறத் தோகை

உள்ளதுமான மயிலாகிய குதிரை மீது விளங்கி, பிரமன், இந்திரன்

வீற்றிருந்து வாழும் தலைநகரான ஊர்களைக் காட்டிலும் மேலான

தஞ்சை மாநகரில் ராஜ கோபுரத்தில் அமர்ந்த பெருமாளே.

***

சப்தஸ்தான தலங்களின் பட்டியல்

சலசம் மேவிய பாத(ம்) நினைத்து முன் அருணை நாடு

அதில் ஓது திருப்புகழ் … தாமரையை ஒத்த உனது திருவடியைத்

தியானித்து, முன்பு திருவண்ணாமலை நாட்டில் நான் ஓதிய திருப்புகழை

தணிய ஓகையில் ஓத எனக்கு அருள் புரிவாயே … மனம் குளிர

மகிழ்ச்சியுடன் (எப்போதும்) ஓதும்படியான பாக்கியத்தை எனக்கு அருள் புரிவாயாக.

………………………………………

திருவின் மா மரம் ஆர் பழனப் பதி அயிலும் சோறவை

ஆளு(ம்) துறைப் பதி … லக்ஷ்மிகரம் பொருந்திய பெரிய மாமரங்கள்

நிறைந்த திருப்பழனம் [1] என்னும் தலம், உண்பதற்குரிய

திருச்சோற்றுத்துறை [2] என்ற தலம்,

திசையில் நான் மறை தேடிய முன் குடி … திசைகள் தோறும்

நான்கு வேதங்கள் (ஈசனைத்) தேடி அடைந்த பழம் பதியாகிய

திருவேதிக்குடி [3] என்ற தலம்,

விதி ஆதிச் சிரமும் மா நிலம் வீழ் தரு மெய்ப்பதி …

பிரமனுடைய முதல் (உச்சித்) தலை பெரிய பூமியில் (சிவபிரானால்)

கிள்ளி வீழ்த்தப்பட்ட திருக்கண்டியூர் [4] என்ற தலம்,

பதும நாயகன் வாழ் பதி நெய்ப்பதி திருவையாறுடன் ஏழு

திருப்பதி பெருமாளே. … தாமரையில் வாழும் நாயகனான சூரியன்

பூஜித்து வாழ்ந்த ஊராகிய திருப்பூந்துருத்தி [5] என்ற தலம்,

திருநெய்த்தானம் [6], திருவையாறு [7] என்ற தலங்களுடன், ஏழு

திருப்பதிகளில் (சப்தஸ்தானத்தில்**) வாழ்கின்ற பெருமாளே.

இவை திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம், திருவையாறு என்னும் ஏழு தலங்கள் – தஞ்சாவூருக்கு அருகில் உள்ளன.

***

சாங்கிய யோகம்சுகப்பிரம்ம ரிஷி பற்றி

தாங்கு நிற்சரர் சேனா நீதர் உ(ன்)ன ஆங்கு ருத்ர குமாரா

கோஷண தாண்டவற்கு அருள் கேகீ வாகன துங்க வீரா …

(ஜைன மதக் கொள்கைகளை அனுஷ்டித்துத்) தாங்கி நின்ற

குருமார்களின் கூட்டமாகிய நீசர்கள் ஆழ்ந்து நினைக்கக் காரணமாக இருந்து, அங்கு (மதுரையில் திருஞானசம்பந்தராக) வந்த சிவ குமாரனே, பேரொலியுடன் நடனம் செய்த சிவபெருமானுக்கு உபதேசித்து அருளிய மயில் வாகனனே, உயர்ந்த வீரனே,

சாங்கிபற் சுகர் சீ நாத(ர்) ஈசுரர் இந்திரன் மெச்சிய வேலா

போதக சாந்த வித்தக ஸ்வாமி நீப அலங்கன் மார்பா … ஆத்ம

தத்துவத்தை விவரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப் பிரம ரிஷி, லக்ஷ்மியின் நாதராகிய திருமால், சிவபெருமான், தேவேந்திரன் ஆகியோர் மெச்சிப் போற்றிய வேலனே, உபதேச குருவே, சாந்தமூர்த்தியே, அறிஞனே, சுவாமியே, கடப்ப மாலை அணிந்த மார்பனே,

பூங்குளத்திடை தாராவோடு அ(ன்)னம் மேய்ந்த செய்ப்பதி நாதா மா மலைபோன்ற விக்ரக சூரா அரி பகிரண்ட ரூபா … தாமரைப் பூ உள்ள குளத்தில் குள்ள வாத்துக்களுடன் அன்னப் பறவைகளும் மேய்ந்த வயலூர்ப் பெருமானே, பெரிய மலை போன்ற உருவத்தைக் கொண்டிருந்த சூரனுக்குப் பகைவனே, வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தனே,

போந்த பத்தர் பொ(ல்)லா நோய் போயிட வேண்ட அநுக்ரக போதா மேவிய பூந்துருத்தியில் வாழ்வே தேவர்கள் தம்பிரானே. … (உன் அடியை வேண்டி) வந்த அடியார்களின் பொல்லாத பிறவியாகிய நோய் ஓடிப் போக வேண்டிய அருள் செய்தஅறிஞனே, பொருந்திய திருப்பூந்துருத்தி என்னும் தலத்துச் செல்வமே, தேவர்கள் தம்பிரானே.

திருப்பூந்துருத்தி தஞ்சாவூருக்கு அருகில் உள்ள அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று.

–subham—

Tags – சாங்கிய யோகம், சுகப்பிரம்ம ரிஷி, சப்தஸ்தான தலங்  கள்,  பட்டியல் , துஷ்டர்கள் , திருப்புகழ்,  அருணகிரி நாதர் – Part 56

விடைகளைப் புது விதமாகத் தரும் புதிர் கவிதை! (Post No.15,534)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,534

Date uploaded in London – 26 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

விடைகளைப் புது விதமாகத் தரும் புதிர் கவிதை!

ச. நாகராஜன்

விடையை முதலிலிருந்து படித்தும் பின்னாலிருந்து படித்தும் தரும் ஒரு புது வித சுபாஷிதம் இதோ:1

க்ஷோணோ கம் சஹ்தே கரோதி திவி கா ந்ருத்யம் ஷிவாயா: பதிர்

  பூதானாம் கமயுங்க்த ஜீவஹரணே கா  ராமசஸ்த்ரோ புரீ|

கம் ரக்ஷந்தி ச  ராகவ: பசுப்தே: கிம் வாஹனம் ப்ரோச்யதாம்

  ப்ராலோமப்ரதிலோமசாஸ்த்ரசதுரைரேகம் த்வயோருதரம் ||

இது ஒரு புதிர் கவிதை.

பூமி எதைத் தாங்குகிறது? விடை: பாரம்

சொர்க்கத்தில் யார் நடனமாடுகிறார்? விடை: ரம்பா -தேவலோகப் பெண்

உலகத்தில் உள்ள உயிர்களை எடுக்க பார்வதியின் கணவர் யாருக்கு அதிகாரம் அளித்திருக்கிறார்? விடை: காலம் (யமன்)

ராமரின் எதிரியான ராவணனின் நகரம் எது? விடை: லங்கா

நல்லவர்கள் யாரைக் காப்பாற்றுகின்றனர்? விடை: தீனம் (ஏழைளை)

சிவனின் வாகனம் எது? விடை: நந்தி

இந்தக் கவிதையில் உள்ள சிறப்பு என்னவெனில் இரண்டு இரண்டு கேள்விகளாக எடுத்துக் கொண்டால் விடையானது முதலிலிருந்தும் பின்னாலிலிருந்தும் படிக்கலாம்.

பா-ரம் (சம்ஸ்கிருத எழுத்துப்படியான எழுத்துக்கள்)  – திருப்பினால் வருவது ரம்பா

கா-லம் – லங்கா

தீ- னம் – நந்தி

2

பெண்ணின் பாதுகாப்பு!

பிதா ரக்ஷதி கௌமாரே பர்தா ரக்ஷதி யௌவனே |

புத் ரஸ்து ஸ்தாவிரே பாவே ந ஸ்த் ரீ ஸ்வாதந்தர்யமர்ஹதி ||

குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் குழந்தையை தகப்பனார் காப்பாற்றுகிறார். யௌவனப் பருவத்தில் கணவன் காப்பாற்றுகிறான். வயதான காலத்தில் அவளது மகன்கள் காப்பாற்றுகின்றனர். ஒரு பெண்ணானவள் பாதுகாப்பின்றி ஒரு போதும் விடப்படக் கூடாது.

(ஒரு பெண் என்பவள் மிகவும் மதிப்பு வாய்ந்தவள் என்பதால் அவள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையே இந்த செய்யுள் வலியுறுத்துகிறது.

3

எல்லா தேசமும் எமது தேசமே!

கோதிபார: சமர்தானாம் கிம் தூரம் வ்யவசாயினாம் |

கோ விதேஷ: சுவித்யானாம் க: பர: ப்ரியவாதினாம் ||

திறமைசாலிக்கு எந்த விஷயமும் பாரமாக இருக்காது.

கடுமையான உழைப்பவனுக்கு எந்த லட்சியமும் வெகு தூரத்தில் இருக்காது.

நன்கு படித்தவனுக்கு எந்த தேசமும் அன்னிய நாடாகாது.

இனிமையாகப் பேசுபவனுக்கு யாரும் அன்னியன் கிடையாது. (எந்த தேசமும் அவனது தேசமே!)

4

குலப்பெருமையைக் கூட்டும் மகன்!

ஏகேநாபி சுவ்ருக்ஷேண புஷ்பிதேன சுகந்திநா |

வாஸிதம் தத் வனம் சர்வம் சுபுத்ரேண குலம் யதா ||

ஒரே மரம் தான் என்றாலும் அதில் பூத்துக் குலுங்கும் மணமுள்ள மலர்களால் காடே நறுமணம் உடையதாகிறது. அதே போல நல்ல செயல்களைச் செய்யும் நற்குணமுள்ள ஒரு புத்திரன் குலம் முழுவதற்கும் நற்பெயரைத் தருகிறான்.

5

ஒட்டகத்தின் கல்யாணத்தில் கழுதைகளின் பாட்டு!

உஷ்ட்ராணாம் ஹி விவாஹேஷு கீதம் காயந்தி கர்தபா: |

பரஸ்பரம் ப்ரஷம்ஸந்தி அஹோ ரூபம் அஹோ த்வனி: ||

ஒட்டகத்தின் கல்யாண வைபவத்தில் கழுதைகள் பாடுகின்றன. பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு கழுதைகள் ஒட்டகங்களின் உடல் அழகை வர்ணிக்க ஒட்டகங்களோ கழுதைகளின் இனிய குரலைப் பாராட்டுகின்றன!

**

என்னை ஏமாற்றிய வாதாபி கணபதி கோயில்! (Post No.15,533)

Written by London Swaminathan

Post No. 15,533

Date uploaded in London – 25 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London Swaminathan in the Temple

மதுரையிலுள்ள ஆறு அடி உயர முக்குறுணிப் பிள்ளையார், திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி ஆகிய தலங்களில் உள்ள குடைவரைக்  கோயில் கணபதி ஆகியோரையெல்லாம் கணக்கற்ற முறை தரிசனம் செய்த எனக்கு பல்லவ ஆர்மி கமாண்டர் பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் பாதாமியிலிருந்து (வாதாபி நகரம்) கொண்டுவந்த கணபதியைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக இருந்தது அந்த ஆவல் 2026 மார்ச் ஆறாம் தேதி பூர்த்தியானது .

முத்து சுவாமி தீட்சிதரின் வாதாபி கணபதிம் பஜே பாடலை உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் அனைவரும் பாடியிருப்பதைக் கேட்டதால்  இந்த ஆர்வம் பெருகியது ஆயினும் கோயிலுக்குள் இருக்கும் சின்ன மண்டபத்தில் கணபதியைத் தரிசித்த பொது பெரிய ஏமாற்றமே மிஞ்சியது

கோயிலில் என்னையும் கணபதியைத் தவிர யாரும் இல்லை சிறிய மண்டபத்தில் இருந்த கணபதிக்கு ஆடையோ அலங்காரமோ பூ மாலையோ இல்லை! சின்ன மண்டபத்தில் இருள்  வேறு !

சிவன் சந்நிதியில் இருந்த குருக்கள் விபூதி பிரசாதம் கொடுத்தார் ; ;பிரகாரத்தில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி நடந்த அபிஷேக ஆராதனையைக் காணவந்த சுமார் ஐம்பது பேர் பிரசாதம் வாங்கிய பின்னர் நழுவிவிட்டனர்

கோவில் மிகவும் பழைய நிலையில் வறண்டு துவண்டு போய் கிடாக்கிறது கும்பாபிஷேகம் செய்வது மிகவும் அவசியம்.

கணபதியின் வீர பிரதாபங்களை விளக்கும் சில படங்கள் கோவில் சுவற்றில் வரையப்பட்டிருந்தன. அவைகளைப்  புகைப்படம் எடுத்தேன் .

திருச்செங்காட்டங்குடி கோயில்

புராண பெயர்(கள்):    மந்திரபுரீசம், சக்திபுரீசம், இந்திரபுரீசம், ஆத்திவனம், பாஸ்கரபுரீசம், திருச்செங்காட்டங்குடி

பெயர்:     திருச்செங்காட்டங்குடி உத்தராபதீசுவரர் திருக்கோயில்

மூலவர்:   கணபதீஸ்வரர் சிவன், (உத்தராபதீசுவரர் பைரவர் உற்சவர்), ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்

தாயார்:    சூளிகாம்பாள், திருக்குழலம்மை

தல விருட்சம்:  ஆத்தி

தீர்த்தம்:   ஒன்பது தீர்த்தங்கள்: சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்கள்

தேவாரம் பாடியவர்கள்:    திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்

வழிபட்டோர்: சம்பந்தர்,அப்பர் , சுந்தரர்,  பரணதேவ நாயனார்,  சேக்கிழார், விநாயகர், பிரமன், சத்பாஷாடர் முதலியோர்.

திருவாரூர் – திருமருகல் சாலையில், ‘செங்காட்டங்குடி’ என்று பெயர்ப் பலகை உள்ள இடத்தில் அது காட்டும் பாதையில் சென்று சந்தைப்பேட்டை வழியாக வந்து, திருமருகல் கால்நடை மருந்தகத்தைத் தாண்டி, பாதை வழியே  சென்றால் தலத்தை அடையலாம். திருவாரூரிலிருந்தும் திருமருகலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன

***

இராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது – கிழக்கு நோக்கியது. கோயில் வாயிலில் உள்ள திருக்குளம் சத்திய தீர்த்தமாகும். குளக்கரையில் ‘மங்களவிநாயகர்’ எழுந்தருளியுள்ளார். ராஜகோபுரத்தின் உட்பக்கம் ஆத்திமரம் உள்ளது. இறைவன் அமர்ந்திருக்க, சிறுத் தொண்டர் அவரை அமுதுசெய்ய அழைக்கும் சிற்பம் இங்குள்ளது.

முன் மண்டபத்தில் வலப்பால் அம்பாள் சந்நிதி நின்ற திருக்கோலம் – கவசமிட்ட கொடிமரம் தாண்டி, உட்பிராகாரத்தில் பிட்சாடனர் கல்லில் வடித்துள்ள கோலத்தையும், சந்தனநங்கை, சீராளதேவர், திரவெண்காட்டு நங்கை, சிறுத்தொண்டர் ஆகியோர் மூலத் திருமேனிகளையும், அறுபத்துமூவர் திருமேனிகளையும் தரிசிக்கலாம்.

பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், சித்தி விநாயகர், நால்வர், சங்கபதுமநிதிகள் ஆகிய சந்நிதிகள் அடுத்து உள்ளன. வாதாபிகணபதி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். சத்பாஷாட மகரிஷி, அவர் பூஜித்த லிங்கம், பிரமன் வழிபட்ட இலிங்கம் வள்ளிதெய்வனானை சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் உள்ள அஷ்டமூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது. துர்க்கை, வீரட்டலிங்கம், விஸ்வலிங்கம், புஜங்கலளிதர், கஜசம்ஹாரர், ஊர்த்துவதாண்டவர், காலசம்ஹாரர், கங்காளர், பிட்சாடனர், திரிபுராரி, பைரவர், விநாயகர் முதலிய மூலத் திருமேனிகள் மிக அருமையான வேலைப்பாடுடையவை – இம் மண்டபத்தில் உள்ளன. நடராஜ சபை உள்ளது. நவக்கிரகங்கள், பைரவர், ஸ்தம்ப முகூர்த்த விநாயகர், சூரியன் சந்நிதிகள் உள்ளன.

திண்டி, முண்டி எனும் துவாரபாலகர்களைக் கடந்தால் நேரே மூலவர் தரிசனம் – கணபதீச்சரமுடையார். சுவாமி கருவறை அகழி அமைப்புடையது. உத்ராபதீஸ்வரர் உற்சவத் திருமேனி கொண்டுள்ளார். இவருக்கு நாடொறும் பச்சைக்கற்பூரமும் குங்குமப்பூவும் சார்த்தப்படுகிறது. பேழையில் மரகதலிங்கம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர் (ரிஷபத்தின் மீது கை ஊன்றியநிலை.) . துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேசர் சந்நிதி எதிரிலுள்ளது.

கோயிலின் பின்புற வீதியில் இருக்கும் மடாலயத்தில்தான் சித்திரைப் பரணியில் உத்தராபதீஸ்வரர் அமுது செய்த விழா நடைபெறுகிறது. இதன் வடபாலுள்ள சிறுத்தொண்டர் மாளிகை இன்று கோயிலாகவுள்ளது. இங்குச் சிறுத்தொண்டர் உத்ராபதீஸ்வரர் திருவெண்காட்டு நங்கை அன்னம் பரிமாறும் கோலத்தில் திருவுருவங்கள் உள்ளன. நான்கு வீதிகளின் கோடியிலும் விநாயகர் ஆலயங்கள் உள்ளன. கோயிலின் கீழவீதியில் உள்ள விநாயகர் ‘வேண்டும் விநாயகர்’ என்றழைக்கப்படுகிறார். உற்சவக்காலங்களில் iஉலாவரும் நாதர் உத்தராபதியாரே.

சிறுத்தொண்டர் நாயனார் வாழ்ந்த தலம். இவர் இயற்பெயர் பரஞ்சோதி. இளம் வயதில் இவர், நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியாகப் பணிபுரிந்தார். நரசிம்ம பல்லவன் கிபி 642 ஆம் ஆண்டு சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து அவர்கள் தலைநகர் வாதாபியைக் (BADAMI) கைப்பற்றினான்.அப்போது பரஞ்சோதி அங்கிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி என்ற பெயரில். தனி சன்னதியில் எழுந்தருளி இருக்கிறார்

“உத்ராபதியார் ” திருமேனி உருவான விதம் பற்றி சொல்லப்படும் வரலாறாவது – ஐயடிகள் காடவர்கோன் என்னும் பல்லவ மன்னன், சிறுத் தொண்டருக்கு இறைவன் அருள் புரிந்த செய்தியைக் கேட்டு, இத்தலத்திற்கு வந்து, பல நாட்கள் தங்கி வழிபட்டு வந்தார். உத்திராபதியாரின் தோற்றத்தைக் காண விரும்பினார். இறைவன், “இத்திருக்கோயிலைத் திருப்பணி செய்து, உத்தராபதியார் திருவுருவம் அமைத்துச் சித்திரைத் திருவோணத்தில் குடமுழுக்கு செய்வாயாகில், யாம் சண்பகப்பூ மணம் வீசக் கட்சி தருவோம்” என்றருளினார். ஐயடிகள் அவ்வாறே செயல்படலானார். கொல்லர்கள் உத்ராபதியார் உருவம் அமைக்கத் தொடங்கினர். பல இடர்பாடுகள் – கும்பாபிஷேக நாள் நெருங்கியது. மன்னனோ விரைவில் முடிக்க கட்டளையிட்டான். வடிவம் நன்கு அமைய வேண்டுமே என்ற கவலையுடன் உலைக்களத்தில் ஐம்பொன்னை உருக்கிக் கொண்டிருந்தனர். இறைவன் சிவயோகியார் வடிவில் அங்கு வந்து நீர் கேட்டார். இருந்தவர்கள், “உலைக்களத்தில் நீர் ஏது? காய்ச்சிய மழுதான் உள்ளது; வேண்டுமானால் ஊற்றுகிறோம்” என்றனர். சிவயோகியார், “நல்லது; அதையே ஊற்றுங்கள்” என்றார். கொல்லர்கள் காய்ச்சிய மழுவை ஊற்ற, வாங்கியுண்ட சிவயோகியார் அங்கிருந்து மறைந்தார் – உத்தராபதீஸ்வரர் உருவானார். செய்தியறிந்த மன்னன் வியந்து போற்றி, அத்திருவுருவை கோயிலில் எழுந்தருளுவித்து – கும்பாபிஷேகம் செய்வித்தான். ஐயடிகள் காடவர்கோனுக்கு இறைவன் சண்பகப்பூவின் மணம் வீச, காட்சித் தந்தருளினார். (ஆதாரம் – கோயில் வரலாறு.)

Read more at: https://shaivam.org/hindu-hub/temples/place/228/thiruchengattankudi-uthiraapateeswarar-temple/#gsc.tab=0

***

கன்னி மேரியா ஏசு கிறிஸ்துவ சிவா பெருமானா ?

கோவிலுக்குள் சாண்டோ ராமசாமி என்பவர் வரைந்த ஓவியம் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது இது என்னடா கிறிஸ்தவ ஓவியத்தை வரைந்துள்ளார் என்று பயந்து போனேன். வினோதமான ஓவியம்! அருகில் போய்ப் பார்த்தால் கிறிஸ்தவ உடைக்குள் சிவபெருமான்!

திருச்செங்காட்டங்குடி (Tiruchengattankudi) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பாடல் பெற்ற சிவத்தலம் . இங்குள்ள உத்தராபதீசுவரர் கோயில் (கணபதீச்சரம்) மிகவும் புகழ்பெற்றது, மேலும், இது சிறுத்தொண்ட நாயனார் அவதரித்த தலமாகவும், காவிரி தென்கரைத் தலங்களில் 79-வது சிவத்தலமாகவும் விளங்குகிறது. 

திருச்செங்காட்டங்குடி சிறப்பம்சங்கள்:

  • தல வரலாறு: கஜமுகாசூரனை வதம் செய்த விநாயகர், தான் செய்த பழி நீங்க சிவனை வழிபட்ட இடமாக இது கருதப்படுகிறது. விநாயகர் அசுரனைக் கொன்றபோது சிந்திய குருதியால் நிலம் செக்கச் சிவந்திருந்ததால், ‘செங்காட்டங்குடி’ (செங்கருதி) எனப் பெயர் பெற்றது.
  • கோயில் அமைப்பு: இங்குள்ள மூலவர் உத்தராபதீசுவரர், அம்பாள் வாள்நெடுங்கண்ணி. இத்தலத்தில் விநாயகர் ‘வாதாபி கணபதி’ என்று அழைக்கப்படுகிறார்.
  • சிறுத்தொண்ட நாயனார்: அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) பிறந்த தலம். இவர் தன் மகனையே அமுதாகப் படைத்த ‘பிள்ளைக் கறி’ இட்டுச் சிவனுக்குப் படைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம்.
  • இறைவன்: இத்தல இறைவன் தேவாரப் பாடல் பெற்றவராவார் (திருஞானசம்பந்தர், நாவுக்கரசர் பாடியுள்ளனர்).
  • அமைவிடம்: திருவாரூர் – திருமருகல் சாலையில், நாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ளது

***

தேவாரசப்பாடல்

“பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைநாள் பயப்பூரச்

சங்காட்டந்த விர்த்தென்னைத் தவிரா நோய் தந்தானே

செங்காட்டங் குடிமேய சிறுத் தொண்டன் பணிசெய்ய

வெங்காட்டுள் அனலேந்தி விளையாடும் பெருமானே.” (சம்பந்தர்)

பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக்கத்தைப்

பேணிநினைந் தெழுவார்தம் மனத்தேமன்னி

இருந்தமணி விளக்கதனை நின்றபூமேல்

எழுந்தருளி யிருந்தானை எண்தோள்வீசி

அருந்திறல்மா நடமாடும் அம்மான்தன்னை

அங்கனகச் சுடர்க்குன்றை அன்றாலின்கீழ்த்

திருந்துமறைப் பொருள் நால்வர்க்கருள் செய்தானைச்

செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே. (அப்பர்) 

அஞ்சல் முகவரி –

அருள்மிகு. உத்தராபதீஸ்வரர் திருக்கோயில்

திருச்செங்காட்டங்குடி – திருக்கண்ணபுரம் அஞ்சல்

நாகப்பட்டினம் வட்டம் – மாவட்டம் 609 704

***

வாதாபி கணபதிம் பஜே

முத்து சுவாமி தீட்சிதர் கிருதி

பல்லவி

வாதாபி கணபதிம் பஜேஹம்

வாரணாஸ்யம்  வரப்ரதம் ஸ்ரீ

அனுபல்லவி

பூதாதி ஸம் ஸேவித சரணம்

பூத பெளதிக பிரபஞ்ச பரணம்

வீத ராகிணம் வினத யோகினம்

விஸ்வ காரணம் விக்ன வாரணம்

…வாதாபி

சரணம்

புரா கும்ப ஸம்பவ  முனிவர  ப்ரபூஜிதம்

திரிகோண மத்யகதம்

முராரி ப்ரமுகாத் யுபாஸிதம்

மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்

பராதி சத்வாரி வாகாத்மகம்

ப்ரணவ ஸ்வரூப வக்ரதுண்டம் 

நிரந்தரம் நிதல சந்த்ர கண்டம்

நிஜ வாமகர வித்ருதேக்ஷு தண்டம்

கராம்புஜ பாச பீஜாபூரம்   

கலுஷவிதூரம் பூதாஹாரம்

ஹராதி குருகுஹ தோஷித பிம்பம்

ஹம்சத்வனி பூஷித ஹேரம்பம்

… வாதாபி

பொருள்:

யானை முகம் கொண்டவராகவும் வரங்களைக் கொடுக்கின்றவராகவும்

விளங்கும் வாதாபி கணபதியை நான் வணங்குகிறேன் .

பூதகணங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவர். பூமி, நெருப்பு, காற்று, நீர், ஆகாசம் ஆகிய ஐம்புதங்களையும் அவற்றாலான மற்ற உலகங்களையும் தரிப்பவர். ஆசையில்லாதவர்.

வணங்கப்படும் யோகியவர்களை உடையவர். உலகங்களுக்குக் காரணபூதர்.

இடையூறுகளைப் போக்கடிப்பவர்.

முன்காலத்தில் கும்பசம்பவர் எனப்படும் அகஸ்தியர் என்ற

சிறந்த முனிவரால் பூஜிக்கப்பட்டவர்.

மூன்று கோணங்களுடன் கூடிய யந்திரத்தின் நடுவில் இருப்பவர்.

விஷ்ணு முதலிய முதல்வர்களால் தியானிக்கப்பட்டவர்.

மூலாதார §க்ஷத்திரமான திருவாரூரில் இருப்பவர்.

பரா, பச்யந்தி, மத்யமா, வைகரீ ஆகிய நான்கு வித வாக்கு சொரூபமாக இருப்பவர்.

பிரணவ சொரூபமாக(ஓங்கார சொரூபமாக) வளைந்த முகத்தை உடையவர்.

எப்போதும் நெற்றியில் பிறை சூடியவர்.

தமது இடது கையில் வைத்திருக்கப்பட்ட கரும்புத்துண்டத்தை உடையவர்.

தாமரை போன்ற கையில் பாசக்கயிறு, கொய்யாப்பழம், மாதுளம்பழம்,

இவற்றை உடையவர். பாபமற்றவர்.

பூதம் போன்ற பெரிய உருவத்தை உடையவர்.

பரமசிவன் முதலியவர்களாலும் சிவகுருவாகிய முருகனாலும்

சந்தோஷிக்கப்பட்ட சொரூபத்தை உடையவர்.

ஹம்சத்வனி ராகத்தில் இன்பமுறும் யானைமுகத்தோன்

குரு குஹ என்பது தீக்ஷிதரின் எல்லா கிருதிகளிலும் வரும் முத்திரை .

Ganesh in Madurai Temple

vaathaapi

raagam: hamsadwani 

taaLam: aadi

Composer: Muttuswaamee Dikshitar

Language: Sanskrit 

pallavi 

vaataapi gaNapatim bajEham |

vaaraNaasyam varapradam shree ||

anupallavi

bootaadi sam sEvita caraNam |

boota bowdika prapanca baraNam ||

veetaraagiNam vinata yOginam (shree) |

vishva kaaraNam vigna vaaraNam ||

(vaathapi)

caraNam

puraa kumba sambhava munivara prapoojitam |

trikONa madya gatam |

muraari pramukaat yupaasitam |

moolaadhaara kshEtraa stitam |

paraadi sattvaari vaakaatmagam |

praNava svaroopa vakratunDam |

nirandaram niDala candra kaNDam |

nija vaamakara vidrutEkshutanDam |

karaambuja paaSa beejaapooram |

kaloosha vidhooram bootaahaaram |

haraadi guruguha tOshita bimbam |

hamsadhwani booshita hErambam ||

(vaathapi)

–subham—

Tags- திருச்செங்காட்டங்குடி,உத்தராபதீஸ்வரர், திருக்கோயில், வாதாபி கணபதி , சிறுத்தொண்டர், கணபதீச்வரம், பிள்ளைக் கறி யமுது , வாதாபி கணபதிம் பஜே

அவனிபுகழ் சோமநாதன் யார்?  அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 55 (Post No.15,532)

Written by London Swaminathan

Post No. 15,532

Date uploaded in London – 25 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

55திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 55

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 55

***

அவனிபுகழ் சோமநாதன் யார்?

அரிவையொரு பாகமான அருணகிரி நாதர் பூசை … தேவியை

ஒருபாகத்தில் கொண்ட அருணாசலேஸ்வரர் பூஜையை

அடைவு தவறாது பேணும் அறிவாளன் … ஒழுங்கு தவறாமல்

புரிந்து வருகின்ற அறிவாளியும்,

அமணர்குல காலனாகும் … சமணர் குலத்துக்கு ஒரு யமனாகத்

தோன்றியவனும்,

அரியதவ ராஜராஜன் … அருமையான தவங்கள் பல செய்ததவராஜனும்,

அவனிபுகழ் சோமநாதன் மடமேவும் முருக … இந்த உலகெல்லாம் புகழ்பவனும் ஆன சோமநாதனுடைய* ஊராகிய சோமநாதன்மடத்தில் வீற்றிருக்கின்ற முருகனே,

திருவண்ணாமலையாரை ஆத்மார்த்த மூர்த்தியாகக் கொண்டு புத்தூரில் வாழ்ந்த தவசீலர் ஒருவர் சோமநாதன் என்ற பெயரோடு நியமம் தவறாது பூஜை செய்து வந்தார். அவர் புத்தூரில் ஒரு மடத்தில் முருகனையும் துதித்து வந்தார். அந்த இடமே சோமநாதன்மடம் என்று வழங்கப்படுகிறது. வட ஆற்காட்டு

மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் புத்தூர் உள்ளது.

***

ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை

.தனத்த குந்தகு தானன தந்தக் கொதித்து வந்திடு சூர் உடல்

சிந்தச் சலத்துடன் கிரி தூள் பட எறிந்திட்டிடும் வேலா …

தனத்த குந்தகு தானன தந்த என்ற ஓசையுடன் கோபித்து எழுந்து

(போருக்கு) வந்த சூரனுடைய உடல் அழியவும், கடல் வற்றிப்

போவதுடன் கிரெளஞ்ச மலை பொடிபடவும் வேலாயுதத்தை எறிந்தவனே,

சிரத்துடன் கரம் ஏடு பொழிந்திட்டு இரைத்து வந்து

அமரோர்கள் படிந்துச் சிரத்தினும் கமழ் மாலை மணம் பொன்

சரணோனே … தலை வணக்கத்துடன் கையிலுள்ள மலர்களைப்

பொழிந்து போற்றி செய்யும் தேவர்கள் அவர்களது சிரத்தில் தலையில் மணக்கின்ற மாலைகளின் நறு மணத்தைப் பெற்ற அழகிய திருவடிகளை உடையவனே,

செகத்தினில் குருவாகிய தந்தைக்கு அளித்திடும் குரு …

உலகில் குருவாய் விளங்கும் உனது தந்தையாகிய சிவபெருமானுக்கு வேத உபதேசம் அளித்த பரமகுருவே,

ஞான ப்ரசங்க* திருப் பெருந்துறை மேவிய கந்தப்

பெருமாளே. … (உன் தந்தை) ஞானச் சொற்பொழிவு செய்த

தலமாகிய திருப்பெருந்துறையில்** விரும்பி வீற்றிருக்கும் கந்தப்

பெருமாளே.

நான்கு சைவக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் அரசனுக்காக  குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறையில் சிவனே குரு மூர்த்தியாக இருந்து அடியார்களுக்கு ஞான உபதேசம் செய்வதைக் கண்டுத் தாமும்

இழுக்கப்பட்டு அவ்வடியர்களுடன் உபதேசம் பெற்றார். அதனால் ஞானப்ரசங்கத் திருப்பெருந்துறை எனப்பட்டது.

** இது அறந்தாங்கி ரயில் நிலையத்தில் இருந்து 8 மைலில் உள்ளது.

***

எனதிடர் மங்கஉனதருள் பொங்க  கழல்தாராய்!

இருவினை யஞ்ச … சஞ்சித வினை, பிராரப்த வினை ஆகிய இருவினைகளும் பயப்படும்படியாக,

வருவினை கெஞ்ச … இனி வந்து தாக்க இருக்கும் (ஆகாமிய) வினை தான் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலக,

இருள்பிணி துஞ்ச … இருண்ட நோய்கள் வாராது மாய்ந்து போக,

மலம் மாய … ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்தொழிய,

எனதிடர் மங்க … எனது துயரமெல்லாம் குறைந்துபோக,

உனதருள் பொங்க … உனது திருவருள் பெருக,

இசைகொடு துங்க புகழ்கூறி … இசையுடன் உன் பரிசுத்தமான திருப்புகழைப் பாடி,

திருமுக சந்த்ர … சந்திரன் போன்ற அழகிய திருமுகத்தை உடையோனே,

முருக கடம்ப சிவசுத கந்த … முருகா, கடம்பா, சிவகுமாரா, கந்தா,

குகவேல சிவசிவ என்று … குகா, வேலா, சிவசிவ என்று கூறி

தெளிவுறு நெஞ்சு திகழ … அதனால் தெளிவுபெற்ற என் நெஞ்சு பொலிவு அடைவதற்காக

ந டஞ்செய் கழல்தாராய் … நடனம் செய்யும் உன் திருவடிகளைத் தந்தருள்வாய்.

***

முருகனின் யானை வாஹனம்

செழு மத கரி நீல கோமள அபி நவ மயில் ஏறு சேவக செய

செய முருகா குகா வளர் கந்த வேளே … செழுமை வாய்ந்த

பிணிமுகம்* என்னும் யானை மீதும், நீல நிறம் உள்ள அழகிய நவீனமானமயில் மீதும் ஏறுகின்ற வலிமையாளனே, வெற்றி வேல் முருகனே, குகனே, புகழ் ஓங்கும் கந்த வேளே,

திரைபொரு கரை மோது(ம்) காவிரி வருபுனல் வயல் வாவி

சூழ்தரு திருவிடை மருதூரில் மேவிய தம்பிரானே. … அலைகள்

ஒன்றோடொன்று போரிட்டு கரையில் மோதுகின்ற காவிரியில் வரும் நீர் பாயும் வயல்களும், குளங்களும் சூழ்ந்துள்ள திருவிடைமருதூரில்** வீற்றிருக்கும் தம்பிரானே.

முருகன் மயில் வாகனன் ஆகினும், அடியார்களை ஆட்கொள்வதற்கும், அருள் செய்வதற்கும், போர் புரிவதற்குப் புறப்படும்போதும் ‘பிணிமுகம்’ என்ற யானை வாகனத்தில் செல்வான் என்பர். பல தலங்களில் முருகனுக்கு பிணிமுக யானை வாகனமாக உள்ளது.

** திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு அருகே வடக்கில் 5 மைலில் உள்ளது.

—subham—

Tags- சோமநாதன், ‘பிணிமுகம்’ , யானை வாகனம், அருணகிரிநாதர், அரிய செய்திகள் , Part 55

எட்டு விஷயங்களில் வெட்கப்படாதே! (Post No.15,531)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,531

Date uploaded in London – 25 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்!

எட்டு விஷயங்களில் வெட்கப்படாதே! 

ச. நாகராஜன் 

வெட்கப்படக் கூடாத எட்டு விஷயங்கள்!

கீதே நாட்யே படே வாதே சங்க்ராமே ச சுராக்ருஹே |

ஆஹாரே வ்யவஹாரே ச த்யக்தலஜ்ஜ: சுகீ பவேத் ||

எட்டு விஷயங்களில் நீங்கள் வெட்கப்படக் கூடாது.

எந்த எட்டு விஷயங்கள் அவை?

1)      பாடும் போது

2)      நடனமாடும் போது

3)      படிக்கும் போது

4)      விவாதத்தின் போது

5)      போர் செய்யும் போது

6)      மதுபானக் கடையில் மது அருந்தும் போது

7)      சாப்பிடும் போது

8)      வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் போது

ஒருவர் வெட்கப்படக் கூடாது.

படிப்பதில் உள்ள ஆறு குறைகள்!

கீதி ஷீக்ரி சிரகம்பி ததா லிகிதபாடக: |

அனர்தக்ஞ்ல்பகண்டஸ்ய படேத் பாடகாதமா: ||

ஒருவர் படிக்கும் போது ஆறு விதமான குறைகள் இல்லாமல் படிக்க

வேண்டும்.

என்ன குறைகள் அவை?

1)      பாட்டுப் பாடுவது போல படிக்கக் கூடாது

2)      வெகு வேகமாகப் படிக்கக் கூடாது

3)      தலையை ஆட்டிக் கொண்டு படிக்கக் கூடாது

4)      எழுதியதைப் பார்த்துப் படிக்கக் கூடாது (அதில் இருக்கும் தவறைத் திருத்தாமல்)

5)      என்ன பேசுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது

6)      கம்மிய குரலில் பேசக் கூடாது. (கணீரென்று கம்பீரமாகப் பேச வேண்டும்.)

தன்னம்பிக்கை வேண்டிய விஷயங்கள்!

கீதே வாத்யே ச ந்ருத்யே ச சக்தி சாதாரணோ குண: |

சா சேதஸ்தி கிமன்யேன தூஷகேன குகேன ச ||

பாடும் போதும் வாத்தியங்களை வாசிக்கும் போதும் நடனமாடும் போதும் தன்னம்பிக்கை என்பது ஒரு முக்கியமாக இருக்க வேண்டிய குணமாகும். இது ஒருவரிடம் இருக்கும் போது  மற்ற குணங்களைப் பற்றியோ குறைகளைப் பற்றியோ எதற்குக் கவலை?

சொல்லாமல் செய்வர் பெரியர்! 

கர்ஜதி ஷரதி ந வர்ஷதி வர்ஷதி வர்ஷாஸு நிஸ்வனோ மேக: |

நீசோ வததி ந குருதே ந வததி சாது: கரோத்யேவ ||

சரத் காலம் வரும் போது மேகங்கள் கர்ஜிக்கின்றன. ஆனால் மழை பெய்வதில்லை. மழைக் காலத்தின் போதோ இடி இடிக்காமலேயே மழை பொழிகிறது. நீசர்கள் அதிகமாகப் பேசுவார்கள்; ஆனால் செயலில் காட்டமாட்டார்கள். நல்லவர்களோ பேசவே மாட்டார்கள்; செயலில் செய்து காட்டுவார்கள்!

**

திருப்புகலூரில் அப்பர், அக்னீஸ்வரர் தரிசனம் கிடைத்தது! (Post No.15,530)

Written by London Swaminathan

Post No. 15,530

Date uploaded in London – 24 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?

   எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்

கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,

   சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்

ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,

   ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,

புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்

பூம்புகலூர் மேவிய புண்ணியனே

பொருள்:
இறைவா! உனது திருவடிகளைத் தவிர நான் வேறென்ன நினைப்பேன்? வேறு புகலிடம் எனக்கு இல்லை. இந்த ஒன்பது வாசல்கள் கொண்ட உடலை (ஒக்க அடைக்கும் போது) உயிர் பிரியும் காலத்தில், உன்னை நினைத்து உணரமாட்டேன். அதனால், இப்போதே உன் பாதங்களை வணங்கி சரணடைகிறேன் என, பூம்புகலூர் இறைவனைப் போற்றி அப்பர் பாடியுள்ளார்.

***

மார்ச் ஆறாம் தேதி (2026) அப்பர் பெருமானையும் அக்னீச்வரரையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது  கும்பகோணம் முதியோர் இல்லமான ஸ்ரீவத்சம் கட்டிடத்திலுள்ள டிவைன் இன் DIVINE INN ஹோட்டல் அறையிலிருந்து புறப்பட்டு திருச்செங்காட்டன் குடி, திருப்புகலூர் , திருவாஞ்சியம் ஆகிய மூன்று சிவன் கோவில்களையும் மூன்றே மணி நேரத்தில் தரிசித்தேன். நான் எடுத்த புகைப்படங்களையும் கண்டு களியுங்கள்.

திருப்புகலூர், பாடல் பெற்ற சிவத்தலமாகும். அக்னி பகவான் சிவனை வழிபட்ட தலமாகவும், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த இடமாகவும், சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய அற்புதத் தலமாகவும் இது போற்றப்படுகிறது.

இறைவர் திருப்பெயர்:  அக்னீஸ்வரர், சரண்ய புரீஸ்வரர், கோணப்பிரான். 

இறைவியார் திருப்பெயர்: கருந்தார்குழலி, சூளிகாம்பாள். 

தல மரம்:  புன்னை மரம் – Punnai (Alexandrian Laurel) Tree

தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்.

கோவிலின் எதிர்ப்புறம் அழகான குளம் உள்ளது

வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்,கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார்,நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார், அக்னி, முதலியோர்

முக்தி தலம்: திருநாவுக்கரசர் தனது 81-வது வயதில் திருப்புகலூர் (அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்) என்னும் தலத்தில் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.

இறுதி பதிகம்: “எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேன்” எனத் தொடங்கி, “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்” என முடியும் பதிகத்தை பாடினார்.

சிறப்பு: இங்கு அப்பருக்கெனத் தனியாகத் திருமடம் மற்றும் நந்தவனம் உள்ளன. இத்தலம் திருநாவுக்கரசர் மட்டுமின்றி, முருக நாயனார் அவதரித்த தலமாகவும், சுந்தரர் பாடிய தலமாகவும் போற்றப்படுகிறது.

இங்குள்ள அக்னீஸ்வரர் கோயிலில் அப்பர் தனது இறுதி நாட்களைக் கழித்துச் சிவத்தொண்டு புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Appar/ Tiru Navukkarasar 

நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது.

இறைவன் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது.

திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.

சிறப்பு: திருநாவுக்கரசர் சிவனுடன் கலந்த இடம். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய 75-வது காவிரி தென்கரைத் தலம்.

சிறப்பம்சம்: அக்னி பகவான் காட்சியளிக்கும் அபூர்வ தலம்.

அக்னி வழிபட்ட தலம்: அக்னி பகவான் இத்தலத்தில் சிவனை வணங்கித் தன் பாவம் நீங்கப் பெற்றதால், இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

செங்கல்லைப் பொன்னாக்கியது: சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூருக்குச் செல்லும்போது, அவருக்காகச் சிவபெருமான் இத்தலத்தில் செங்கற்களைப் பொன் கற்களாக மாற்றிய அற்புதத் தலம்.

வேளக்குறிச்சி ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில்

கிழக்கு நோக்கிய  ராஜ கோபுரத்திற்கு எதிரில் அகழி இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தம், அக்கினி தீர்த்தம் எனப்படுகிறது.அதன் படிக்கட்டருகே சந்திர சேகரர் சன்னதி அமைந்துள்ளது.

ராஜ கோபுர வாயிலைக் கடந்தவுடன் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அம்பிகையின் சன்னதியைக் காண்கிறோம். கருந்தாழ் குழலி என்று இந்த அம்பிகை இத்தலத்துத் தேவாரப் பாடலில் குறிப்பிடப்படுகிறாள். வடமொழியில் இந்த இறைவியை சூளிகாம்பாள் என்று அழைக்கின்றனர்.

இத்தலத்தின் முக்கிய சன்னதி அக்னீசுவரர். சரண்யபுரீசுவரர், கோணப்பிரான் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இதை  ஒட்டி மற்றும் ஓர் சிவ சன்னதி உள்ளது . அங்குள்ள சுவாமிக்கு வர்தமாநீசுவரர்  என்றும் அம்பிகைக்கு மனோன்மணி என்றும் பெயர்கள்.  இந்தப் பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் முருக நாயனார் ஆவார். அக்நீசுவரரைப் பாடிய திருஞானசம்பந்தர் வர்த்தமானீசுவரரையும் ஒரு பதிகத்தால் பாடியிருக்கிறார். அதில் முருக நாயனாரது தொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

உட்ப்ராகாரத்தில் கணபதி ,பூதேஸ்வரர், பவிஷ்யேசுவரர், அகோர லிங்கம், சிந்தாமணீசுவரர் ஆகிய மூர்த்திகளும், ததீசி, பராசரர், பிருகு, புலஸ்தியர்,ஜாபாலி, பாரத்வாஜர், வாமதேவர், ஆகியோர்  பூஜித்த சிவலிங்கங்களையும் தரிசிக்கலாம்.  உள் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அப்பர் (திருநாவுக்கரசர்) சன்னதியும் உள்ளது.

***

அப்பர் ஐக்கிய விழா பத்து நாள் நிகழ்வுகள்

இத்தலத்தின் பிரமோற்சவம் வைகாசி விசாகத்தை முன்னிட்டுப் பத்து நாட்கள் நடைபெறுகிறது

முதல் நாளன்று, சூலை நோய் தீரப்  பெற்ற வரலாற்று நிகழ்ச்சி விழாவும், இரண்டாம் நாள் பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் இட்ட பொது, ” மாசில் வீணையும் ” என்ற பதிகம் பாடி சிவானந்தத்தில் திளைத்திருந்ததும், மூன்றாம் நாள் சமணர்கள் ஏவிய யானை இவரைத் தீங்கு செய்யாது வணங்கிச் சென்றதும், நான்காம் நாள் சமணர்கள் இவரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது, நமசிவாயப் பதிகம் பாடிக் கரை ஏறியதும், ஐந்தாம் நாள், பெண்ணாகடத்தில் சூலக் குறியும், ரிஷபக் குறியும் தோள்களில் பொறிக்கப் பெற்றதும், ஆறாம் நாள் , திருநல்லூரில் திருவடி தீக்ஷை பெற்றதும், ஏழாம் நாள் திங்களூரில் அப்பூதி அடிகளின்  பாம்பு தீண்டிய  மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், எட்டாம் நாளன்று  திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் மூடியிருந்த ஆலயக் கதவைப் பதிகம் பாடித் திறந்ததும், ஒன்பதாம் நாள் பழையாறை வடதளியில் சமணர்களால் மூடப்பட்டிருந்த ஆலயத்தைப் பதிகம் பாடித் திறந்ததும், கயிலை யாத்திரை செய்து, திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டதும், பத்தாம் நாள் காலையில் திருப்பைஞ்ஞீ லியில் கட்டமுது பெற்றதும்  ஆகிய நிகழ்ச்சிகள் ஐதீக விழாக்களாக நடைபெறுகின்றன.

பத்தாம் திருநாளான சித்திரை சதயத்தன்று மாலை அப்பர் பெருமான் ,ப்ராகாரத்திலுள்ள கட்டமுது மண்டபத்திலிருந்து புறப்பாடாகிப்  பிராகாரத்தில் எழுந்தருளுகிறார். அவர் உழவாரப் பணி செய்ததை நினைவு கூறுவதாகப்  பிராகாரத்தில் உழவாரப் பணி செய்யப்படுகிறது.

அப்போது இறைவன் அவரைச்  சோதிக்க வேண்டி அவ்விடத்தில் பொன்னும்,மணிகளும் தோன்றச் செய்தபோது, நாட்டம் எதுவும் கொள்ளாமல் அவற்றைப்  பருக்கைக் கற்களோடு கோயிலுக்கு வெளியில் அகற்றிய  வரலாறும் நடத்திக் காட்டப் படுகிறது. அப்பரது பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் தேவ லோக அரம்பையர்களை அவருக்கு முன்னே தோன்றி நடனமாடச் செய்தபோது, ஐம்புலன்களையும் வென்ற நாவுக்கரசர்,  ” பொய்ம்மாயப் பெருங் கடலில்.. ” எனத் துவங்கும் பதிகத்தைப் பாடியவுடன் அவரது உறுதியைக் கண்ட அரம்பையர்கள் அங்கிருந்து அகன்ற வரலாற்றைப்  பிராகாரத்தில் செய்து காட்டுகிறார்கள். சிறுமியர்கள் நடனம் ஆடிவிட்டுப் பிறகு அப்பர் பெருமானை வலம் வந்து திருநீறு பெற்றுக் கொண்டு செல்வதாக நடத்திக் காட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சிகள், இவ்வாலயத்தை நிர்வகிக்கும் வேளக்குறிச்சி ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடை பெறுகிறது.

பிறகு இரவு 12 மணி அளவில் ப்ராகாரத்திலுள்ள அப்பர் சன்னதியில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும்  சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அலங்காரமாகி வீதி புறப்பாடு நடைபெற்று,மீண்டும் கோயிலுக்குக் காலை  சுமார் 5 மணிக்கு வந்து சேர்ந்தவுடன், அப்பர் சுவாமிகள் நேராக அக்னீசுவரப் பெருமான் சன்னதிக்கு,          “எண்ணுகேன் ” எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடியவாறு வந்தடைகிறார். சுவாமி சன்னதிக்குள் சென்றதும் நாம் காண்பது ஒளிப் பிழம்பு மட்டுமே. ” அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார் ” என்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில்  குறிப்பிடுவதை நேரில் காண்கையில் புல்லரிக்கும்; பேரானந்தம் கிடைக்கும் .

Muruga Nayaanr

Sundrar got Golden Bricks

Appar Shrine

செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது: 

இங்கு வந்த சுந்தரர், ஆலயம் மூடியிருக்கவே, களைத்தவராக, அங்கிருந்த  செங்கல்லைத் தலைக்கு வைத்தவாறு  உறங்கி விட்டுக் கண் விழித்த போது ,அக்கல்லானது  செம் பொன்னாக மாறி இருப்பதைக் கண்டு பரவசமாகித் , ” தம்மையே புகழ்ந்து .. ” எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் பாடினார்

திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை தம்மையே புகழ்ந்து என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.

ஆலய முகவரி

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்

திருப்புகலூர், நாகப்பட்டிணம் மாவட்டம்

PIN – 609704

Subham-

Tags- திருப்புகலூர், அக்னீஸ்வரர் தரிசனம் , அப்பர் , திருநாவுக்கரசர் , சதயம், ஐக்கிய விழா ,எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?, pictures of Tiruppugalur, London Swaminathan

முக்தி தரும் தலங்களின் பட்டியல்! யோகிகள் உணரும் பத்து நாதங்கள் ! (Post No.15,529)

Written by London Swaminathan

Post No. 15,529

Date uploaded in London – 24 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 54

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 54

முக்தி தரும் தலங்களின் பட்டியல்

திறல்பூண்ட சுப்ர மணிய ஷண்முகவேலா … பராக்ரமம் வாய்ந்த சுப்பிரமணியனே, ஆறுமுகனே, வேலனே,

திரைபாய்ந்த பத்ம தடவயலியில்வேந்த … அலைகள் பாயும் தாமரைக் குளங்கள் உள்ள வயலூரின் அரசனே,

முத்தி யருள்தரு திருவாஞ்சியத்தில் … க்தித்தலமாகிய**

திருவாஞ்சியத்தில்*** வீற்றிருக்கும்

அமரர்கள் பெருமாளே. … தேவர்கள்தம் பெருமாளே.

** முக்தித்தலங்கள் பின்வருமாறு:

தில்லைவனம், காசி, திருவாரூர், மாயூரம், முல்லைவனம், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, காஞ்சீபுரம், திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருவாஞ்சியம்.

*** திருவாஞ்சியம் திருவாரூர் தலத்துக்கு வடமேற்கில் நன்னிலத்துக்கு மேற்கில் 7 மைலில் உள்ளது.

***

யோகிகள் உணரும் பத்து நாதங்கள் !

சங்கோதை நாதமொடு கூடி … யோகவழியில் கிடைக்கும்

தசநாதங்களாகிய* ஓசையை அனுபவித்து அதனோடு கலந்து,

வெகு மாயையிருள் வெந்தோட … மிக்க மாயையாம் இருள் வெந்து அழிந்து போக

மூலஅழல் வீச உபதேசமது தண்காதிலோதி … மூலாக்கினி

வீசிட, உபதேசத்தை என் குளிர்ந்த காதில் ஓதி,

இரு பாதமலர் சேரஅருள் புரிவாயே … உன் இரண்டு பாதமலரைச்

சேரும்படியான திருவருளைத் தந்தருள்க.

………………………………………

ஒரு பெண்காதலோடு வன மேவி வளிநாயகியை … ஒப்பற்ற

பெண்ணாகிய வள்ளிமேல் காதலோடு அவள் வசித்த காட்டிற்குச்

சென்று அந்த வள்ளிநாயகியின்

இன்பான தேனிரச மார்முலைவிடாதகர மணிமார்பா …

இன்பம் நிறைந்த, தேனைப் போல் இனிமையான மார்பினைவிட்டு

நீங்காத கரதலமும் அழகிய மார்பும் உடையவனே,

எண் தோளர் காதல்கொடு காதல்கறியேபருகு … எட்டுத்

தோள்களை உடைய சிவபிரான் ஆசையுடனே பிள்ளைக்கறியை

உண்ணப்புகுந்த**

செங்காடு மேவிபிரகாசமயில் மேலழகொடு …

திருச்செங்காட்டங்குடி*** என்னும் தலத்தைச் சார்ந்து, ஒளிவீசும்

மயில் மீது அழகோடு அமர்ந்து,

என்காதல் மாலைமுடி ஆறுமுகவா … எனது ஆசையால் எழுந்த

இந்தத் தமிழ் மாலையைப் புனைந்தருளும் ஆறுமுகனே,

அமரர் பெருமாளே. … தேவர்களின் பெருமாளே.

சங்கோதை நாதம் – யோகிகள் உணரும் பத்து நாதங்கள் பின்வருமாறு:

கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல், பேரி, மத்தளம், முகில்).

** சிவபிரான் திருச்செங்காட்டங்குடியில் இருந்த சிறுத்தொண்டரின் சிவபக்தியைச் சோதிக்கக் கருதி, ஒரு சிவவிரதியர் போல வந்து பிள்ளைக்கறி கேட்க, தம்

ஒரே மகன் சீராளனைக் கறி செய்தளித்தார். இறுதியில் சிவபிரான் தரிசனம் தந்து சீராளனை உயிர்ப்பித்து, சிறுத்தொண்டரையும் அவரது மனைவியையும்,

குழந்தையையும் வாழ்த்திய புராணம் இங்கு குறிப்பிடப்படுகிறது – பெரிய புராணம்.

*** திருச்செங்காட்டங்குடி நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 6 மைலில் உள்ளது.

***

மனு நீதிச் சோழன் கதை

சுரபி மகவினை எழு பொருள் வினவிட மனுவின் நெறி

மணி அசைவு உற அவ் இசை மிகு துயரில் செவியினில் அடி

பட வினவுமின் அதி தீது … பசு இறந்த தனது கன்றை எழுப்புதற்கு வழியை ஆராய்ந்து நாடி மனு நீதிச் சோழனின் ஆராய்ச்சி மணியைச் சென்று அசைத்து ஆட்ட, அந்த மணியின் ஒலி மிக்க துயரை விளைவித்து

அரசனின் காதுகளில் ஒலிக்க, மிகவும் கொடிய செயல் ஏதோ

நடந்திருக்கின்றது, போய் விசாரிக்கவும் என்று அவர் சொல்ல,

துணிவில் இது பிழை பெரிது என வரும் மநு உருகி அரகர

சிவ சிவ பெறுமது ஒர் சுரபி அலமர விழி புனல் பெருகிட

நடுவாகப் பரவி … நிச்சயமாக இது பெரிய தவறாகும் என்று எழுந்து வந்த மன்னனாகிய மநு மனம் கசிந்து, அரகர சிவசிவ என்ற வார்த்தைகள் வரச் செய்த ஒரு பசு வேதனைப்பட்டு கண்ணீர் பெருகுதலைப் பார்த்து, நடு நிலைமையை அறிந்து இறைவனைத் தியானித்து,

அதனது துயர் கொடு நடவிய பழுதின் மதலையை உடல் இரு

பிளவொடு படிய ரதம் அதை நடவிய மொழிபவன் அருள்

ஆரூர்ப் படியில் அறுமுக … அந்தப் பசுவுக்கு துயரத்தைத்

தரும்படியாக ரதத்தை ஓட்டிய குற்றத்துக்கு ஆளான தன் மகனை உடல் இரண்டு பிளவாகும்படி, அவன் மேல் படியுமாறு ரதத்தை நடத்தும்படி சொன்னவனாகிய மநு நீதிச் சோழன் ஆட்சி செய்த திருவாரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் ஆறு முகனே,

சிவசுத கணபதி இளைய குமர நிருப பதி சரவண பரவை

முறையிட அயில் கொடு நடவிய பெருமாளே. … சிவபெருமானின்

மகனே, விநாயகப் பெருமானின் தம்பியே, குமரனே, அரசர்கள் தலைவனே, சரவணப் பெருமாளே, கடல் முறை இடும்படி வேல் கொண்டு செலுத்திய பெருமாளே.

திருவாரூர் நாகப்பட்டினத்துக்கு மேற்கே 14 மைலில் உள்ளது. மூவரின் தேவாரமும் போற்றும் முதுநகர்.

*****

மனுநீதிச் சோழன் கதை

திருவாரூரில் மனுநீதிச் சோழன் என்பவன் அரசாண்டு வந்தான். இவனது கதை பெரிய புராணத்திலும் , சிலப்பதிகாரத்திலும், பழமொழியிலும் உள்ளது. அவனது மகன் வீதி விடங்கன் என்பவன் சாலை விதிகளை மீறி நூறு மைல் (100 mph) வேகத்தில் தேரை ஓட்டிச் சென்றான். அபோது துள்ளிக் குதித்து வந்த ஒரு பசு மாட்டின் கன்று, தேர்க்கடியிடில் சிக்கி இறந்தது. அந்தக் காலத்தில் போக்குவரத்து போலீஸோ சிக்னல் லைட்டோ (No Traffic Police or Signal light) கிடையாது. ஆனால் அரண்மனை வாசலில் எமர்ஜென்ஸி பெல் (Emergency alarm bell)  உண்டு. யாருக்காவது துயரம் என்றால் உடனே ஓடிப் போய் காலிங் பெல்லை (Calling Bell) அமுக்கினால் அரசின் வேலைக்காரர்கள் அல்லது மன்னர் அல்லது அமைச்சரே நேரே வந்து மனுவை வாங்கிக் கொள்வார். இதை ஒரு பசு மாடும் தினமும் கவனித்து வந்தது. அந்தப் பசு மாட்டின் கன்று ட் ரா ஃபிக் ஆக்ஸிடெண்டில் (Traffic accident) இறந்தவுடன் அந்த வண்டி ‘ஸ்டாப்’ பண்ணாமல் போனவுடன் ஓடி வந்து அரண்மனையின் ‘காலிங் பெல்’லை அடித்தது. அந்த பெல்லின் பெயர் ஆராய்ச்சி மணி. மன்னன் இதுவரை அந்த சப்தத்தைக் கேட்டதே இல்லை. அது துருப்பிடித்து போயிருந்தாலும் நல்ல ஒர்க்கிங் கண்டிஷனில் (good working condition) இருந்தது! 

மன்னர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் வாயிலுக்கு ஓடி வந்து பார்த்தால் ஒரு பசு மாடு நின்று கொண்டிருந்தது. “ஓஹோ, ஏதோ ஒரு மிஸ்டேக் (mistake)கில் கொம்பு கயிற்றில் மாட்டிக் கொண்டு அடித்தி ருக்கும் அதனால் என்ன, ஒரு கட்டு அகத்திக் கீரை வாங்கிப் போடு! அது போய்விடும்” என்று ஒரு மந்திரி சொன்னார். இப்படி விவாதம் நடக்கையில் அரசு நியமித்த 007 ஜேம்ஸ்பாண்டு   (007  James  Bond) ஓடி வந்து உளவுத் தகவல் சொன்னான்.

“மன்னர் மன்னா! உன் மகன் ஒரு பசுவின் கன்றைக் கொன்றான். அதன் தாய்  இங்கே  வந்து உன் முன்னால் நிற்கிறது என்றான். பசுவின் காதிலும் அது விழுந்தவுடன் எல்லோரையும் பின் தொடர்ந்து வருமாறு அது ‘சிக்னல்’ (Signal) கொடுத்து விட்டு, ஆம்புலனஸ் கார் சப்தம் போடுவது போல ‘நீனா நீனா நீனா’, ‘உய்ந் உய்ந் உய்ந்’ என்று ஓலமிட்டுக் கொண்டே (accident spot) ஆக்ஸிடெண்ட் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்தது. 

மன்னனுகுக்கு வருத்தமும் கோபமும் ; என்ன செய்யலாம் என்றான்? உடனே  ஒரு திராவிட அமைச்சர் கேஸை (case) யாருக்கும் தெரியாமல் அமுக்கிவிடலாம் என்றார். அதற்குள் ஒரு பிராஹ்மணன் நூறு தங்க பசுங் கன்றுகள் செய்து பிராஹ்மணாளு க்குத் தந்தால் போதும். அதுதான் பிராயச் சித்தம் என்றார். ஒரு புத்திசாலி அமைச்சர், மநு நீதி சாஸ்திரத்தில் சொன்ன தண்டனையைச் சொன்னவுடன், “அப்படித்தான் செய்யவேண்டும்; ‘பல்லுக்குப் பல், ரத்தத்துக்கு ரத்தம்; கொண்டா என் மகனை என்றான். மன்னன்; ஏறினான் தேரில்;  70 மைல் ஸ்பீடில் (70 mph) போய் மகனைக் கொன்றான்; தேவர்கள் பூமாரி பெய்தனர்.

உன் நேர்மையை மெச்சினோம்; பசுவின் கன்றுக்கும் உன் மகனுக்கும் உயிர்ப் பிச்சை தந்தோம் என்று சொல்ல இருவரும் உயிர் பெற்று நடந்தனர்.

***

மன்னா! நேர்மையாக நாட்சி நடந்தால் அங்கே பயிர் செய்யாமலேயே தானியங்கள் விளையுமென்று வள்ளுவன் தமிழ் வேதம் செப்புவதை நீ அறியாயோ? காளிதாஸன்  ரகுவம்ஸ காவியத்தின் ஐந்தாவது அத்திய,,,யத்தில் ரகு என்ற மன்னன் கௌத்ஸ முனிவருக்கு 14 கோடிப் பொன்னை குபேரனிடம் வாங்கிக் கொடுத்ததை அறியாயோ? ரகு படை எடுக்க, முதல் நாள் இரவில் ஆயுத ரதத்தை தயார் செய்தவுடன் குபேரனே பயந்து போய் இரவோடிரவாக 14 கோடிக்கும் மேல் அவன் கஜானாவில் கொட்டி நிரப்பினானே. அது போல உன் நாட்டிலும் தன, தான்யம் செழிக்கும் என்று தேவர்கள் சொன்னார்கள்:

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்

காலை கழிந்ததன் பின்றையும்- மேலைக்

கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையு மூர்ந்தான்

முறைமைக்கு முப்பிளமை யில் – பழமொழி

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை– நறுந்தொகை, அதிவீரராம பாண்டியன்

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல் – குறள் 559

நீதி முறை தவறி மன்னன் ஆட்சி செய்தால் அவன் நாட்டில் மழை பெய்யாமல் போகும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட

பெயலும் விளையும் தொக்கு – குறள்

தர்ம நூல்கள் செப்பும் படி ஆட்சி நடத்தும் மன்னவன் நாட்டில் மழையும் பெய்யும்; விளைச்சலும் பெருகும்.

–subham

Tags- முக்தி தரும் தலங்களின் பட்டியல்! யோகிகள் உணரும் பத்து நாதங்கள் ! மனுநீதிச் சோழன் கதை

லிப்டில் போகும் போது உங்கள் எடை கூடுகிறதா? குறைகிறதா? விண்வெளியில் உடலின் எடை பற்றிய மர்மம்! (Post.15,528)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,528

Date uploaded in London – 24 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

தினமணி 22-3-26 இதழில் கொண்டாட்டம் பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை! 

லிப்டில் போகும் போது உங்கள் எடை கூடுகிறதாகுறைகிறதாவிண்வெளியில் உடலின் எடை பற்றிய மர்மம்! 

ச. நாகராஜன்  

புவி ஈர்ப்பு விசை பற்றிய புதிரான பல உண்மைகளை சாதாரணமாக நாம் அறிவதில்லை. அந்த அதிசய உண்மைகளைப் பற்றி சற்று அறிந்து கொள்வோமா?

லிப்டில் ஏறியவுடன் அது மேலே கிளம்பும் போது உங்கள் கால்களில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது. லிப்ட் மேலே செல்லச் செல்ல நீங்கள் அந்த அழுத்தத்திலிருந்து விடுபட்டு சற்று லேசாக உணர்கிறீர்கள். 

எடை பார்க்கும் மெஷினை லிப்டில் வைத்து இதைச் சரி பார்க்கலாம். லிப்ட் மேலே ஏறத் தொடங்குகையில் உங்கள் எடை சற்று கூடும். ஆனால் மேலே ஏற ஆரம்பித்தவுன் எடை மெஷினில் உங்கள் எடை குறைந்து பழைய நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள்.

68 கிலோ எடை என்பது 75 கிலோ வரை உயரலாகும். இந்த அதிசயம் எதனால்? 

இதே போலவே விண்கலத்தில் விண்வெளி வீரர்கள் எடையற்ற நிலையில் இருப்பதாகச் சொல்கிறோம். ஆனால் உண்மை என்ன? அவர்கள் எடை மாறுவதே இல்லை. பூமிக்கு மேலே 250 மைல் உயரத்தில் உள்ள இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் பூமியின் புவி ஈர்ப்பு விசை 90 சதவிகிதம் என்ற அளவுக்கு வலிமை உள்ளதாகவே இருக்கிறது. 

ஆனால் ஸ்பேஸ் ஸ்டேஷன் எனப்படும் விண்வெளி நிலையம் அதனுள் இருக்கும் விண்வெளிவீரர்களுடன் ஃப்ரீ பால் எனப்படும் இயல்வீழ்வினால் பூமியை நோக்கி வருகிறது.

அந்த நிலையம் மணிக்கு 17000 மைல் வேகத்தில் பக்கவாட்டில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. பூமியின் வளைவினால் அது பூமியின் மீது மோதுவதில்லை. அது மோதலைத் தவிர்த்துக் கொண்டே இருக்கிறது. 

பூமியில் இருக்கும் நாமோ தரையானது நம்மை எப்போதும் மேலே தள்ளிக் கொண்டே இருப்பதால் நாம் கீழே விழுவதே இல்லை. 

விண்வெளி வீரர்களுக்கு புவி ஈர்ப்பு விசையின் செல்வாக்கு உண்டு என்றாலும் விண்கலத்தை மேலே செலுத்தும் அழுத்தம் அங்கு இல்லாததால் அவர்கள் எடையற்ற தன்மையை உணர்கிறார்கள். 

இந்த அன்றாட லிப்ட் அனுபவம் நமக்கு ஒரு மாபெரும் உண்மையை உணர்த்துகிறது. உடல் எடை எப்போதும் மாறுவதே இல்லை. புவி ஈர்ப்பு விசையும் பூமிக்கு அருகில் எப்போதுமே மாறுவதில்லை. மாறுவது என்னவென்றால் லிப்ட் மேலே செல்லும் போது ஏற்படும் அழுத்தம் தான். அதன் காரணமாகத் தான் அப்போது அங்குள்ள எடை பார்க்கும் மெஷின் உங்களின் எடையைக் கூட்டுகிறது.

இதைத் தான் ஐன்ஸ்டீன் முதலில் உணர்ந்தார். அவரது தியரி ஆஃப் ரிலேடிவிடி தத்துவம் கண்டுபிடிக்க முனைந்த போது அவர் இதைக் கண்டார். காலமும் இடமும் கொண்ட வளைவுத் தன்மையினாலும் விரைவு படுத்தும் வேகத்தினாலும் அவர் இந்த (Equivalance Principle) ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். 

அடலிப்டில் ஏறிப் போவதில் இவ்வளவு பெரிய உண்மை அடங்கி இருக்கிறதா என்று பிரமிப்போடு அடுத்த முறை லிப்டில் ஏறலாமே!

**

Hinduism through 500 Pictures in Tamil and English 42; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-42 (Post.15,527)

Sarabha 

Written by London Swaminathan

Post No. 15,527

Date uploaded in London – 23 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நாரதர்

ரிக் வேதத்திலும் அதர்வ வேதத்திலும் சாந்தோக்ய உபநிஷத்திலும் நாரதர் பெயர் அடிபடுகிறது; ஆகையால் வேதத்துக்கும் முந்தியவர் என்றால் மிகையாகாது

நாரதர் தேவரிஷியாகவும், கலகப் பிரியராகவும், ஸ்ரீமந் நாராயணனின் தீவிர பக்தராகவும் அறியப்படுகிறார். மாபெரும் அறிஞரும் வேத விற்பன்னரும் இசைப் புலவரும் பக்தி சாஸ்திரத்தை நுணுக்கமாக அலசி ஆராய்ந்து விளக்கியவருமான நாரதர் சிறந்த ஜோதிட மேதையும் கூட!

நாரதர் பெரிய விஷ்னு பக்தர்; த்ரி லோக சஞ்சாரி ; பிரபஞ்சம் விட்டுப் பிரபஞ்சம் செல்லுமற்புத சக்தி உண்டு; சென்றவிடமெல்லாம் சர்ச்சசையைக் கிளப்புவார் ; அது நன்மையில் முடியும்; வீணையைக் கண்டு பிடித்தவர்; எப்போதும் வீணையைக்  கையில் வைத்திருப்பார்; நடராஜர் நடனத்தை குதிரைமுகம் கொண்ட இசை மேதை தும்புருவுடன் நின்று ரசிப்பார். இவரைப்பற்றிய எண்ணற்ற கதைகள் உண்டு;

தமிழ் இலக்கியத்தில் முதல் தடவையாக, சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை வருகிறது; இவர் இசை மேதை. ஜோதிட வல்லுநர்; பரம யோகி ; ரிஷிகளின் தலைவர் ; பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்.

பக்தியின் ஒட்டுமொத்த உருவம் இவர்; நாராயண நாராயண என்று வினாடிதோறும் ஜெபிப்பவர். நாரத பக்தி சூத்திரம்நாரத புராணம், நாரத தர்ம சாஸ்திரம் என்று பல நூல்கள் இவர் பெயரில் உள்ளன

தனது பக்தி சூத்திரத்தில் பக்தி எத்தனை வகைப்படும் என்பதை நாரதர் விளக்குகிறார்.

நாரதர்  “கலகம் நன்மையில் முடியும்” என்ற தத்துவத்தின்படி, நாரதர் பிரச்சனைகளை உண்டாக்கி, இறுதியில் அதற்குத் தீர்வும் காணும் பல சம்பவங்கள், கதைகள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

நாரத கலகப் ப்ரியா – பாரிஜாத மரத்தின் கதை:

நாரதர் கலகம் – அனுமன்-ராமன் போட்டி:— சில எடுத்துக்காட்டுகள்

வால்மீகி ராமாயணத்தில் வரும் “தபஸ்ஸ்வாத்யாயநிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்” என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமை பற்றிக் கூற! நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.

Narada

Nārada, is a revered divine sage in Hinduism, known as a mind-born son of Brahmā. He is a pivotal figure in Vaishnavism and Puranic literature, recognized for his immense wisdom, devotion, and role as a messenger between the divine and devotees. 

In Tamil literature Ilango used the word Naradar Veenai in Silappadikaram.

From Kanchi Shankaracharya’s1894-1994  speech,

Unlike Svetaketu, sage Narada who had mastered all branches of learning, was humble and full of regret that he had been ignorant of the atman. He finds enlightenment in the teachings of Sanatkumara which are included in the Chandogya Upanishad.  In the Chandogya Upanishad, Narada speaks about the subjects he learned and they included puranas. From this we infer that they must have existed during the time of the Vedas and the Upanishads.

The Rig Veda describes him as of the Kanwa family. Another authority says he sprang from the head of Brahma.

He is the inventor of veena and the chief of the Gandharvas or heavenly musicians.in later times he is connected with the legends of Krishna.

Narada was also one of the great writers upon law. His textbook called Naradiya dharma sastra  has been translated into English by dr jolly 100 years ago.

Narada purana has 3000 slokas.  They glorify bhakti. Narada has many other appellations Kali-karaka/strife maker, Kapi vaktra/monkey faced and Pisuna/messenger/spy.

He is always portrayed with Nataraja where he is standing with Tumburu. 

  • Role and Characteristics: He is considered a “king of sages” (Rishi raja) with the ability to travel across heavenly, earthly, and subterranean worlds.
  • Symbolism: He symbolizes spiritual dedication, musical expertise, and sometimes serves as an instigator of healthy conflict (troubleshooter) to fulfill a higher divine purpose.

Muni Narada also appears in Jainism as a divine sage, representing wisdom and focusing on issues such as discouraging animal sacrifice.

  • Divine Messenger: Considered the first journalist on Earth, he frequently interacts with deities, humans, and sages, often transmitting crucial information. He is an Inter Galactic Traveller; he can go to any place on earth or universe. He is called Triloka Chanchari
  • Devotion and Wisdom: As a foremost devotee of Vishnu, he sings his praises while traveling with his musical instrument, the Veena.
  • The Narada Bhakti Sutra: Credited as the author of this important text, which emphasizes the path of devotion as a means of self-realization.
  • Role in Mythology: He is portrayed as a creator of necessary conflict or “mischief” that ultimately results in a greater good or lesson, earning him the reputation of a divine troublemaker who facilitates spiritual progress.
  • Appearance and Attributes: Often described as a serene sage, he is known for his ability to travel freely across all worlds. 
  • Star Trek: The Narada is the name of the mining vessel/warship commanded by Nero, which serves as the primary antagonist ship in the 2009 Star Trek film

·         Narada with veena is referred to in Tamil epic Silappadikaram . Narada is distinguished from other sages by the veena which he holds in his hands, being always engaged in singing the praises of Vishnu. His catch phrase is Narayana Narayana.

***

தும்புரு

தும்புரு (Tumburu) இந்து புராணங்களில் போற்றப்படும் மிகச்சிறந்த தேவலோக கந்தர்வ இசைக்கலைஞர் ஆவார். இவர் குதிரை முகமும், மனித உடலும் கொண்டவராக வர்ணிக்கப்படுகிறார். இந்திரன் மற்றும் குபேரனின் அவைகளில் பாடக்கூடிய இவர், நாரதருக்கு இணையான இசை ஞானம் கொண்டவர். இவர் வீணை போன்ற நரம்பிசைக் கருவியை வாசிப்பதில் வல்லவர்.

காசியபர் முனிவரின் மூத்த மகனான இவர், குதிரை முகத்துடன் காட்சி தருகிறார்.

நாரதருக்கு இசையில் குருவாகவும், நாரதருக்கு நிகரான இசை வல்லுநராகவும் கருதப்படுகிறார்.

திருப்பதி தும்புரு தீர்த்தம்: திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டி இவர் தவம் இருந்த இடம் ‘தும்புரு தீர்த்தம்’ எனப் போற்றப்படுகிறது.

மனைவி: ரம்பா இவருடைய மனைவி.

கதை: இராமாயணத்தில், தும்புரு ஒரு சாபத்தினால் பூமியில் விராத என்ற அசுரனாகப் பிறந்து, பின்னர் ராமரால் சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இவரது இசைத்திறன் நாரத கானத்திற்கு இணையான ‘தேவ கானம்’ என்று போற்றப்படுகிறது. ஆடல் வல்லானின் நடனத்தைக் காண எப்போதும் நாரதர் அருகில் நிற்பார்.

Tumburu

Tumburu is one of the most celebrated celestial musicians in Indian mythology. He is usually recognized with his horse head. This horse faced Gandharva is described in ancient Indian literatures as a master of music, skilled in dancing, good in playing stringed instruments. He leads the Gandharvasin music and singing

Tumburu (तुम्बुरु) was the son of Kaśyapa, son of Marīci and grandson of Brahmā, born of his wife Pradhā. Of the sons of Kaśyapa the four Gandharva sons, Tumburu, Bāhu, Hāhā and Hūhū were noted for their sweet and pleasant conversation

2) (i) This sage was one among the many sages who came from the north to visit Śrī Rāma on his return to Ayodhyā after the exile. Those who came from the north were—Kaśyapa, Vasiṣṭha, Atri, Viśvāmitra, Gautama, Jamadagni, Bharadvāja, Sanakādis, Śarabhaṅga, Durvāsas, Mataṅga, Vibhāṇḍaka and Tumburu. (Uttara Rāmāyaṇa).

2) (ii) Tumburu was one among the ṛṣis who visited Bhīṣma lying on his bed of arrows. (Chapter 47, Śānti Parva).

Tumburu (तुम्बुरु) was a gandharva (demi god) who, owing to a curse, became a demon (yakṣa). Tumburu, in the service of Kubera, lord of treasures, happens to see Rambhā, one of the celestial nymphs and falls in love with her. He tries his luck on her. Being not happy with the attitude of Tumburu, Kubera, curses him to become a terrific demon. On realising his mistake Tumburu begs to Kubera to put a term to the curse. Kubera tells him that he will have an encounter with Rāma and when the latter cuts off his (Virādha’s) arms, he will be relieved from his curse. Till then he will wander in the forest under the name of Virādha.

In Mahabalipuram and Namakkal Trivikrama avatar sculpture shows Tumburu flying in the air.

·         Karanagama says that Tumburu and Narada should be  shown reciting vocal music in the sculptures of Nataraja.

***

சரபேஸ்வரர்

சரபேஸ்வரர், நரசிம்மரின் உக்கிரத்தைக் தணிக்க சிவனார் எடுத்த அவதாரமாகக் கருதப்படும் உக்கிர மூர்த்தி ஆவார். பறவை (அன்னம்), விலங்கு (சிங்கம்), மனித உருவம் கலந்த வினோத வடிவத்தில், எட்டு கால்களுடன் காட்சி தருகிறார். ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது பகை, பயம் மற்றும் தீவினைகளை அகற்றி, எண்ணிய காரியங்களை வெற்றியாக்கும் என நம்பப்படுகிறது.

அவதார நோக்கம்: ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னும் நரசிம்மரின் கோபம் தணியாததால், சிவபெருமான் சரபப் பறவையாக விஸ்வரூபம் எடுத்து அவரை சாந்தப்படுத்தினார். வைணவர்கள் இதை ஏற்பதில்லை!

பிரசித்தி பெற்ற தலம்: தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் அருள்மிகு சரபேஸ்வரர் திருக்கோவில் மிக முக்கியமான தலம். சென்னை மயிலை ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலும் குறிப்பிடத்தக்கது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், தாராசுரம், கிருஷ்ணாபுரம் முதலிய இடங்களில் சரபேஸ்வரர் சிற்பங்கள் உள்ளன

***

Sarabha

Sharabha is a creature in Hindu mythology that is part lion and part bird. According to Sanskrit literature, Sharabha is an eight-legged beast, mightier than a lion and elephant and which can kill the lion. Sharabha, can clear a valley in one jump. In later literature, Sharabha is described as an eight-legged deer.

Śarabha (शरभ) is the name of some wild animal in the Atharvaveda and later. In the classical literature it is a fabulous, eight-legged beast, dwelling in the snowy mountains, a foe of lions and elephants.

It is known as a ferocious form of Lord Shiva—often part-lion and part-bird—created to subdue Narasimha, the avatar of Vishnu. The Vaishnavas refute the portrayal of Narasimha as being destroyed by Shiva-Sharabha and regard Sharabha as a name of Vishnu.

It also appears in Buddhist literature (Sarabhamiga Jataka). 

  • Shiva Purana: Sarabha is an incarnation of Shiva, specifically the “Annihilator” form created to calm Narasimha’s fury.
  • Mythological Beast: Described in Sanskrit literature as an eight-legged beast or deer, capable of jumping over valleys.

Sharabha according to Kalikagama.—The body of Sharabha should be that of a bird of golden hue, having two red eyes; and it should have two up-lifted wings and eight limbs. Sharabha, which is said to be mightier than an elephant, should have the fierce face of a lion grinning widely, having tusks and wearing Kiriti makuta. The torso of Sharabha resembles that of human male having four hands. The lower part of its body should resemble that of a lion having four legs, sharp claws and a tail. Sharabha should be shown carrying the figure of Narasimha in his human form with upraised folded hands, anjali-mudra.

***

Purushamriga

புருஷாமிருகம்

புருஷாமிருகம் (Purushamirugam) என்பது மனித முகம் மற்றும் சிங்க உடலமைப்பு கொண்ட ஒரு புராண வடிவம் ஆகும். இது தீவிர சிவ பக்தராகவும், குபேர வனத்தைக் காப்பவனாகவும் கருதப்படுகிறது. மகாபாரதத்தில், பீமனுடன் போரிட்ட கதையிலும், சென்னை கபாலீஸ்வரர் கோயில் போன்ற சிவத்தலங்களில் வெள்ளி வாகனமாகவும் இது போற்றப்படுகிறது.

தோற்றம்: மனிதத் தலை மற்றும் சிங்கத்தின் உடலைக் கொண்ட உருவம் ; சிவ பக்தி: சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்ட இது, சிவலிங்கத்தைக் கண்டால் உடனே பூஜிக்கும் பண்புடையது.

மகாபாரதத் தொடர்பு: பீமனின் பயணத்தின்போது அவனைத் தடுத்து நிறுத்திய கதையில், லிங்க பூஜை செய்வதன் மூலம் பீமன் இதனிடமிருந்து தப்பிக்கிறான்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனிப் பெருவிழாவில், புருஷாமிருக வாகனம் முக்கிய இடம் வகிக்கிறது.

தலம்: கொள்ளிட வடகரையில் உள்ள திருப்பராய்த்துறை (திருமழபாடி) போன்ற சிவத்தலங்களில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து பேறு பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குபேர வனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு, இதைப் பெரும் பலம் வாய்ந்ததாக சித்தரிக்கிறது

திரு மழபாடி : காவிரிக்கு வடகரையில் உள்ள தலம்.

புருஷாமிருகம் பூஜித்து பேறு பெற்ற தலம்,

கொள்ளிடத்தில் வடகரையில் உள்ள மழபாடியில் புருஷாமிருகம் சிவபூஜை செய்து கொண்டிருந்தது. அதற்கு உடல் வலிமையையும், தீர்க்க ஆயுளையும் பிறரால் வெல்ல முடியாத ஆற்றலையும் இறைவன் அருளினார்..

சிவலிங்கத்தைப் பெற தவம் செய்த புருஷாமிருகத்திற்கு  பூமியைப் பிளந்து கொண்டு வஜ்ஜிர ஸ்தம்ப வடிவமாக ஈசன் தோன்றினார். அதனால் அவருக்கு வச்சிரஸ்தம்பேஸ்வரர் என்று பெயர். பிரமதேவன் பூஜித்த சிவலிங்கமே இங்கு இந்த வடிவமாகத் தோன்றியது. தான் பூஜித்த லிங்கத்தைக் காணாது திகைத்த பிரமதேவன் இந்த இடத்தில் வந்து அதைப் பார்க்கும் போது லிங்கத்தை புருஷாமிருகம் பூஜித்துக் கொண்டிருந்தது.  உடனே  பிரம்மா தனது லிங்கத்தை புருஷாமிருகம் திருடிக் கொண்டு வந்து விட்டதென்று எண்ணி அதனுடன் போர் செய்யத் தொடங்கினார். போர் நீடித்துக் கொண்டே போன சமயம் பரமசிவன் லிங்கத்தினின்று தோன்றி, “யாமே இந்த மிருகத்தின் தவத்திற்கு இரங்கி இங்கு வந்து விட்டோம் இந்த மிருகம் திருடவில்லை. இனி யாம் இங்கேயே இருப்போம். நீ இங்கு வந்து பூஜை செய்க” என்று அருளினார்.

சிவபூஜையைத் தொடர்ந்து செய்த புருஷாமிருகம் ஆடகேஸ்வரர் என்ற மூர்த்தி எழுந்தருளியிருக்கும் கீலமலை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டிருந்தது.

சிவபக்தியில் சிறந்து விளங்கிய புருஷாமிருகத்தை சிவ பகதர்கள் பெரிதும் போற்றுவர்.

பீமனுக்கும் புருஷாமிருகத்திற்கும் நடந்த ஓட்டப்பந்தயத்தில் புருஷாமிருகம் தன்னை ஓட்டத்தில் வென்று விட்டால் பீமனை விட்டு விடுவதாகக் கூறவே பீமன் பந்தயத்திற்கு இணங்கினான். பந்தயத்தில் பீமனின் ஒரு கால் எல்லைக்கு வெளியேயும் ஒரு கால் எல்லைக்கு உள்ளேயும் இருக்கவே புருஷாமிருகம் பீமனைத் தோற்றதாகக் கூறியது.பீமனோ வெளியே இருந்த ஒரு காலைக் காட்டித் தான் வென்றதாகக் கூறினான். இதற்கு நடுவராக இருந்த தர்மபுத்திரர் தீர்ப்பு சொல்ல வேண்டி இருந்தது. அவர் தீர்க்கமாக புருஷாமிருகமே வென்றதாக அறிவித்தார். தம்பிக்காக சலுகை காட்டவில்லை. இதனால் மனம் மகிழ்ந்த புருஷாமிருகம் பீமனை விடுவித்தது. நடுவுநிலைமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தை கூற விழைந்த குருபாததாசர் தனது குமரேச சதகத்தில் 61ஆம் பாடலில் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறுகிறார்.

வந்தவிவ காரத்தில் இனியபரி தானங்கள்

வருமென்றும் நேசரென்றும்

வன்பகைஞ ரென்றுமய லோரென்றும் மிக்கதன

வானென்றும் ஏழையென்றும்

இந்தவகை யைக்குறித் தொருபட்ச பாதம்ஓர்

எள்ளள வுரைத்திடாமல்

எண்ணமுட னேலிகித புத்தியொடு சாட்சிக்கும்

ஏற்கச்ச பாசமதமாம்

முந்த இரு தலையும் சமன்செய்த கோல்போல்

மொழிந்திடின் தர்மமதுகாண்

முனைவீமன் உடல்பாதி மிருகந் தனக்கென்று

முன்தருமர் சொன்னதலவோ?

மைந்தனென அன்றுமை முலைப்பால் கொடுத்திட

வளர்ந்தருள் குழந்தைவடிவே

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

மலைமேவு குமரேசனே.

Purushamriga

Purusha Mrga Vahana in Temples

Purushamriga, translating to “human-beast” in Sanskrit, is a mythological creature from Hindu tradition, often described as having a human head/torso and a lion’s body. it is frequently depicted on the entrance pillars of South Indian temples to ward off evil and absorb worshippers’ sins. 

  • Mythology: Mentioned in the Mahabharata (Sabha Parva), it is considered one of the greatest devotees of Lord Shiva.
  • Appearance: Typically portrayed with a human face and a lion’s body, sometimes referred to as ‘Vyagra Paada’ (tiger-footed).
  • Symbolism: It functions as a guardian figure protecting sacred spaces.
  • Depictions: Examples are found at the Brihadeeswara Temple in Tamil Nadu and the Someswara Temple in Kolar, Karnataka. 

It is distinct from the Egyptian Sphinx, with its own specific significance within Indian iconography. 

One of the fierce forms of siva is sarabhamurti. Lord siva assumed this form in order to suppress the pride of narasmha, man lion incarnation of Vishnu.

The karanagama describes sarabha as having eight legs, three eyes, long nails two hands and a  body glowing like fire. Sarabhamurti is sculpted in Dharasuram and Madurai.

The story of Bhima and the Purusha-mruga (also known as Vyagrapada) is a fascinating episode from the Mahabharata, commonly found in South Indian versions of the epic, which highlights Bhima’s strength, his devotion to Shiva, and the pivotal role of Hanuman. 

The Background
During the preparation for the Rajasuya Yagna conducted by Yudhishthira, it was considered auspicious to have the presence of a Purusha-mruga—a unique, divine creature with a human face and a lion’s body, who was a great devotee of Lord Shiva. This creature resided in the gardens of Kubera. 

The Challenge
Bhima was assigned the task of inviting the Purusha-mruga. Upon being invited, the beast agreed to attend the yagna on one condition: Bhima had to win a race against him. If Bhima lost, the Purusha-mruga would eat him. 

The Race and Hanuman’s Intervention

  1. The Race: As they ran toward Hastinapura, the Purusha-mruga was much faster and almost caught up with Bhima.
  2. The Escape Plan: Knowing his brother might fail, Krishna had advised Bhima to take three hairs from Hanuman (Bhima’s brother) for protection.
  3. Shiva Devotion: As the Purusha-mruga gained on him, Bhima threw one of Hanuman’s hairs, which immediately turned into numerous Shiva Lingas.
  4. The Delay: The Purusha-mruga, being a staunch devotee of Lord Shiva, had to stop and worship every single Linga, allowing Bhima to get ahead.
  5. The Final Stretch: Bhima used this tactic three times. However, just as Bhima crossed the gates of Hastinapura, the Purusha-mruga managed to grab Bhima’s foot. 

The Judgment
A dispute arose: was Bhima fully inside, or did the creature rightfully catch him? The case was taken to Yudhishthira. The Purusha-mruga asked Yudhishthira to deliver justice, saying, “As per condition, I can consume his leg.” Yudhishthira, acting with impartiality, ruled that since the leg was outside the door, the beast could eat it. 

Bhima and Purushamrga in Krishnapuram

The Resolution
Impressed by Yudhishthira’s unbiased judgment—even when it came to his own brother—the Purusha-mruga blessed the Pandavas and decided to bless the yagna with his presence without eating Bhima. 

  • Symbolism: The Purusha-mruga is often regarded as a “Hindu Sphinx”.
  • Temples: Carvings of the Purusha-mruga can be found in South Indian temples, such as the Thillai Nataraja Temple in Chidambaram and the Bhuleshwar Temple in Maharashtra.
  • Themes: The story reinforces themes of righteousness (Dharma), the immense power of devotion to Shiva, and the wisdom of Yudhishthira. 

–subham-

Tags – Narada, Tumburu, Sarabha, Purushamrga, 42Hinduism through 500 Pictures in Tamil and English 42; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-42, நாரதர் , சரபேசர், புருஷாமிருகம், தும்புரு , சர்ப்ப பக்ஷி, Bhima