சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி (Post No.5385)

WRITTEN BY S NAGARAJAN

Date: 2  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-45 AM (British Summer Time)

 

Post No. 5385

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!

 

ச.நாகராஜன்

 

ரமண மஹரிஷியிடம் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று வருவோர் ஏராளம். இடக்காக கேள்வி கேட்டு அவரைத் திணற வைக்க வேண்டும் என்று வருவோரும் உண்டு.

அவரவர்க்கு அவரவர் பாணியில் பதில் தருவது பகவானின் விசேஷ சமத்கார திறன்.

 

இரு சம்பவங்களை இப்போது இங்கு பார்க்கலாம்.

இஸ்லாமியர் இருவர் மஹரிஷியிடம் வந்தனர். அவர்களுள் ஒருவர் சம்பாஷணையைத் தொடங்கினார்.

இஸ்லாமியர் : கடவுளுக்கு உருவம் உண்டா?

மஹரிஷி : அப்படி என்று யார் சொன்னது?

இஸ்: நல்லது, அப்படியானால் கடவுளுக்கு உருவம் இல்லை என்றால் சிலையை வைத்து வழிபடலாமா?

மஹ: கடவுளை விட்டு விடுங்கள். ஏனென்றால் அவர் யாருக்கும் புலனாகாதவர். உங்களை எடுத்துக் கொள்வோம். உங்களுக்கு உருவம் உண்டா?

 

இஸ்: ஆம். என்னை இன்னார் என்று சொல்ல முடியும்.

மஹ: அப்படியானால் நீங்கள் அங்கங்களை எல்லாம் கொண்ட ஒரு மனிதர். ஆறடி உயரம் கொண்டவர், தாடி கொண்டவர், இல்லையா?

 

இஸ்: நிச்சயமாக.

 

மஹ: அப்படியானால் ஆழ்ந்த உறக்கத்தின் போது உங்களை நீங்கள் காண்கிறீர்களா?

 

இஸ்: விழித்து எழுந்தவுடன் நான் தூங்கியதாக உணர்கிறேன். ஆகவே ஊகத்தின் அடிப்படையில் தூக்கத்திலும் நான் இருந்ததாக உணர்கிறேன்.

 

மஹ: நீங்கள் உடல் தான் என்றால் இறந்த பிறகு உடலை ஏன் புதைக்க வேண்டும். உடல் தன்னை புதைப்பதை எதிர்த்து புதைக்கக் கூடாது என்று மறுக்க அல்லவா வேண்டும்?

இஸ் : இல்லை, நான் நுண்மையான உயிராக பரு உடலில் இருக்கிறேன்.

 

மஹ: ஆகவே உண்மையில் நீங்கள் உருவமற்றவர் என்பதை அறிகிறீர்கள். ஆனால் இப்போது உங்களை உடலுடன் அடையாளம் கண்டு கொள்கிறீர்கள். நீங்கள் உருவமுடன் இருக்கும் வரையில்  உருவமற்ற கடவுளை உருவமுள்ளவராக ஏன் வழிபடக் கூடாது?

 

கேள்வி கேட்ட இஸ்லாமியர் விழித்தார். முழித்தார்.

29-12- 1935 தேதியிட்ட குறிப்பில் முனகல வேங்கடராமையா Talks with Sri Ramana Maharishi – Volume I  என்ற நூலில் முன்னர் நடந்த சம்பாஷணை ஒன்றைத் தந்துள்ளார் இப்படி.

ரமணரை மடக்க வேண்டும் என்று வருவோர் அவரது பதிலால்  திணறுவதும் திருப்தியுறுவதும் வழக்கம்.

*

 

இன்னொரு சுவையான சம்பவம்:

 

ஒருநாள் இளைஞன் ஒருவன் மஹரிஷியிடம் வந்தான்.

இளைஞன்: ஸ்வாமி! ராமகிருஷ்ண பரமஹம்ஸர் விவேகானந்தரைத் தொட்ட மாத்திரத்தில் நிர்விகல்ப சமாதியில் இருக்கச் செய்தது போல் மஹரிஷியும் நிர்விகல்ப சமாதியில் என்னை நிலைபெறச் செய்ய முடியுமோ?

இதைக் கேட்டவுடன் மஹரிஷி, “கேட்பது விவேகானந்தர் தானோ?” என்றார்.

 

கேள்வி கேட்ட இளைஞன் வாயடைத்து நின்று விட்டான். பின்னர் சென்று விட்டான்.

*

கேட்பவர்க்கு கேட்கும் பாணியில் பதில் தரும் மஹரிஷியின் Artless Art of Repartee – சுடச்சுட பதில் தரும் கலை – வியக்க வைக்கும் ஒன்று. இப்படி ஏராளமான பதில்களில் பெரிய ஆன்மீக விளக்கங்களும் இடம் பெறும்.

***

 

 

HINDUS’ NEW METHODS OF FORTUNE TELLING! (Post No.5384)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 20-23 (British Summer Time)

 

Post No. 5384

 

 

HINDU SCIENCE: DO YOU WANT TO BE A SOOTHSAYER OR A FORTUNE TELLER?

 

Let us look at two new Hindu methods of sooth saying today; very easy to follow. You can master it very quickly!

 

Hindus have several methods of predicting one’s future. I have already given details about rope trick astrology, lizard predictions, black bird predictions, parrot astrology, sea shell (Prasnam) astrology, face reading, palmistry, amazing Nadi Jothidam (palm leaf reading), Sneezing predictions, Five Bird (Pancha Pakshi Shastra) Astrology and horoscope reading. Probably Hindus are the only race that has so many prediction methods. In addition to these approved methods there are some voodoo methods as well. Instead of crystal gazing they will look at a betel leaf tarred with special black ink! We can call it Betel Leaf Gazing!

 

if you hear one sneeze it is bad; if any one sneezes twice it is a positive sign. And then there are predictions on the basis of Fox crossing your way, crow flying above, cat crossing your way, white necked eagle (Garuda) flying above etc.

 

Now I want to tell you something I Have read yesterday in the British Library in London. It is a Tamil book published in 1901. We had a book in our house in Madurai titled ‘Swarodaya Vinjanam’. Unfortunately, I lost it. Now I have got a very brief description of what was in the lost book.

How to predict:

Hindus believe that our breathing alternates in the two nostrils. If you closely watch your breathing, the breathing is done through one nostril for some time and then it changes to another nostril. Sometimes the air goes in and comes out using both the nostrils.

 

Hindu scriptures say breathing starts with right nostril at 6 am in the morning and then it changes to left at 8 am. it alternates like this every two hours. If someone comes to you and asks some advice, you check your breathing. If it is done through your right nostril and the person who asked your advice also stands on the same side, you say, ‘YES, YOU WILL WIN’, ‘YOU WILL BE SUCCESSFUL’, ‘DO IT’, ‘GO AHEAD WITH YOUR PLAN’ etc.

Possible questions:

Can I buy a new car now? new house now?

Can I go abroad?  send an application now?

Can I get a promotion in my job?

Can I win the election?

Can I get married now?

Will I get my lost property?

Can I win the court case? etc

 

When your breathing is done by left nostril and the person stands on the left side, then you say Yes.

 

But if the person stands on the opposite side to your breathing nostril; you tell the person not to do it. If the breathing is done by both nostrils also, it is NOT a positive answer. The Right nostril is called Sun Part (Pingalai) and the left side is called Moon Part (Ida Kalai in Tamil). The central part (both nostrils) is called Sushumna or Suzu Munai in Tamil.

One more rule is there! The person should be standing or sitting below your level. You should be in a raised seat or higher level.

 

This looks very strange. Someone has to prove it scientifically or disprove it. But all Hindus have certain basic rules for practising astrology or any science. You must be selfless and follow purity in ‘word, deed and thought’. It is called Tri Karana Suddhi (Three Dimensional Purity). If someone practises a Hindu science whether it is medicine or astrology without that purity, the very same science will bring the person down. Every day we read in newspapers that this ascetic was arrested that ascetic was jailed. This is because the moment you get some extraordinary powers the angels in charge of them will send you temptations. You will naturally become greedy or wish something bad i.e. abuse of women or abuse of power or becoming greedy. That is the end of you!

 

These prediction methods are in our books for very long. Nothing new. I repeat what I have read yesterday in the British Library.

Shadow Science Mystery

This is the second method; it will sound like some science fiction story!

It is called Chaya Darsan Prediction (Shadow Watching/seeing)

When the sky is clear and the sun is shining bright and when you can see a long shadow of you i.e. five to ten feet long, you look at it facing the same direction of your shadow. If you watch it for ten or 15 minutes from head to foot (of your shadow) and look up in the sky you will see your figure in the sky. If it is of golden colour, you will get lot of money or property. If your figure in the sky is of white colour, then you will be healthy and have a long life. If you see it in red colour, something bad will happen and if it is in black colour it is very bad for your health or life. If nay part of the body is missing in the figure, it is a life threatening sign. Some people look at moon and follow the same predictions.

 

If someone practises this art for 12 years, the shadow will communicate with you. It will speak to you and come with you. Once it starts talking to you,  you will get the Ashta Ma siddhi (Eight Paranormal Powers). The shadow will sit with you, walk with you and lie down with you. It will warn you any dangers that may come to you. And you can do miracles.

 

This looks like a fairy tale story. But one has to practise it. Looking at moon on certain days in a month is part of Hindu religious ceremony. If one sees 1000 crescent moons in one’s life, a big celebration is organised for that person. Probably this is also part of that Chaya Darsan.

Sometime ago I wrote that NASA scientists of USA must do some research about Hindu Nadi Jothidam. Though most of the Nadi Jyoshya astrologers are frauds nowadays, there is a big science in it. By looking at one’s hand they can tell your birth day and name. So we need some scientific research on such strange astrological methods. I wish I get some funding for such research!

 

–subham–

 

 

கம்போடியாவில் கந்தன், காமராஜ்! (Post No.5383)

WRITTEN BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 1 September 2018

 

Time uploaded in London – 9-09 am (British Summer Time)

 

Post No. 5383

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கந்தன், காமராஜ் பொன்ற பெயர்கள்  தமிழ்நாட்டில் சர்வ சாதாரணமாகக் காணப்படும்  பெயர்கள்;  இந்தப் பெயர்கள்  ஸம்ஸ்ருதச் சொற்கள் என்றாலும் தமிழ்நாட்டில் நிறைய புழக்கத்தில் உள்ளது. இந்தப் பெயர்களும்  ஏனைய சில பெயர்களும் கம்போடியா நாட்டிலும் உள்ளன.  இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு நிலவிய தமிழர்களின்  செல்வாக்கைக் காட்டும்.

 

லண்டன் (SOAS) பல்கலைக்கழகத்தில் சீனியர் விரிவுரையாளராக வேலை செய்த ஜூடித் ஜாகப் (CAMBODIAN LINGUISTICS, LITERATURE AND HISTORY BY JUDITH JACOB AND EDITED BY DAVID A SMYTH) எழுதிய புஸ்தகத்தை நான் ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் இதோ:

 

ஒரு கல்வெட்டில் ‘மே கந்தன், தா கந்தன், கு கந்தன்’ என்று வருகிறது – இதன் பொருள் கந்தனின் தாய், கந்தனின் தந்தை, அவர்களுடைய மகன் கந்தன் என்பதாகும்.

 

(வா என்பது திரு, கு என்பது குமாரி அல்லது திருமதி)

 

கம்போடியா, பர்மா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் நாட்டுப்புற கதைகளில் தனஞ்ஜயன் (அர்ஜுனனின் பெயர்) மிகவும் அடிபடும். கிட்டத்தட்ட தெனாலிராமன் கதைகள் போல பல நிகழ்ச்சிகள் இருக்கும்.

 

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் ‘தாக்கு அணங்கு’ கம்போடிய கதைகளிலும் உண்டு . காடு, மலை, மரம், ஏரி, குளம் ஆகியவற்றை ஆக்ரமிக்கும் பிரம்ம ராக்சஸ் போன்றவை அணங்கு என்னும் தேவதைகள்

 

ஒரு நாட்டுப்புற கதையிலும் கந்தன் வருகிறான்.

 

இதோ அந்தக் கதை:-

பிரம்ம தத்தன் என்ற அரசனின் மனைவி பெயர் காக்கி. (கார்கி என்பவள் உபநிஷத்தில் வரும் புகழ்பெற்ற பெண்மணி). கருடர்களின் அரசனுடன் ராஜா, சதுரங்கம் விளையாடுவான். அவன் காகியைக் காதலிக்கத் துவங்கினான். அரசனுக்குத் தெரியாமல் காதல் சமிக்ஞைகளைச் செய்வான். அவளும் காதல் வலையில் விழுந்தாள். ஒருநாள் கருட அரசன் ஒரு புயலை உருவாக்கி, எல்லோரும் பயந்துகொண்டு இருந்த சம்யத்தில் ராணியை அணுகி தன்னுடைய நாட்டுக்கு வரும்படி வலியுறுத்தினான். அரசனுக்கு நடந்தது தெரியாது. புயல் ஓய்ந்த பின்னர் கருட அரசன் வழக்கம்போல சதுரங்கமாட வந்தான். அரசனுக்கு அவன் மீது சந்தேகம் ஏற்படவே தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான தளபதி கந்தனை அழைத்து ஒரு பூச்சி ரூபத்தில் கருடனுன் போய், ரஹஸியத்தை அறிந்து வா என்று அனுப்பினான்

அங்கே கந்தனும் காக்கியைக் காதலித்தான்; பின்னர் திரும்பி வந்தான்; மறு நாளன்று வழக்கம்போல கருட ராஜா ‘செஸ்’ விளையாட வந்தபோது யாழ் வாத்தியத்தையும் வாசித்தனர். அப்போது காக்கியின் வேசித்தனத்தையும் ஏசினர் (கந்தனும் அவனுடைய ராஜா பிரம்மத்ததனும்).

 

கருட ராஜாவுக்குக் கோபம் வரவே அவளைத் திருப்பிக் கொண்டுவந்து விட்டான். பிரம்மதத்தனும் அவள் மீது கோபம் கொண்டு ஒரு படகில் வைத்து நதியில் அனுப்பிவிட்டான்.

 

இந்தக் கதையிலும் கந்தன் என்ற பெயர் தமிழ் வழக்குப்படி ‘கந்தன்’ என்றே வருகிறது; ‘ஸ்கந்த’ என்பது ஸம்ஸ்க்ருத மூலம்.

காமராஜ், அருண்ராஜ்

 

மற்றொரு கதையில் காமராஜ், அருண்ராஜ் என்ற பெயர்கள் வருகின்றன. இன்னொரு கதையில் கிருஷ்ணகுமார், சுவண்ண (ஸ்வர்ண) குமார் என்ற பெயர்கள் காணப்படுகின்றன.

 

ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் என்றபோதிலும் அவை தமிழர் பயன்படுத்தும் வடிவத்தில் இருப்பது தமிழ் மொழியின் தாக்கத்தைக் காட்டுகிறது.

 

 

 

 

அடிமைகளின் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்

 

அங்கோர் ஆட்சிக்கு முந்தைய கம்போடியாவில் (Pre-Angkhor) படித்த மக்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களையே பயன்படுத்தினர். அப்படிப்பட்ட பெயர்கள் அடிமைகளாக இருந்தவர்களிடமும் காணப்படுகின்றன. ‘வசந்த மல்லிகா’ என்பது ஒரு அடிமைப் பெண்ணின் பெயர்.

 

அடிமைகள், நாம் பயன்படுத்தும் பலசரக்கு சாமான்களைப் போல,

நடத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் எப்படி அடிமை ஆயினர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது.

 

கோவிலுக்கு தானம் செய்யும் போது இத்தனை அரிசி மூட்டை அல்லது நிலம், இத்தனை அடிமை என்று எழுதப்பட்டது.

 

 

இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகளைப் போலவே, கம்போடியக் கல்வெட்டுகளில் பின்வரும் தகவல்கள் இருக்கின்றன:

 

1.ஆளும் அரசனின் பெயர் அல்லது ஆண்டு;

2.தானம் செய்வோரின் பெயர்கள், பதவி;

3.எந்தக் கடவுளுக்கு தான்ம்

4.யார் யார் கொடுத்ததை அறக்கொடைக்கு எழுதுகின்றனர்.

5.அறக்கொடைக்காக அப்படி நிலத்தை விட்டுக் கொடுத்தோருக்கு என்ன நஷ்ட ஈடு அளிக்கப்பட்டது;

6.தானம் செய்யப்பட்ட நிலங்களின் பரப்பு

7.நிலத்துடன் தானம் செய்யப்பட அடிமைகளின் பெயர், அவர்கள்

செய்யப் போகும் வேலை;

8.குருமார்களுக்கான ஊதியம்

9.அறக்கொடை நிறுவனங்களுக்கு இத்தோடு கூடுதலாகத் தரப்படும் நந்தவனம், கடை முதலியன.

10.கொடுக்கப்படும் வேறு விலையுயர்ந்த பொருட்கள்

11.வருவாயை என்ன செய்வது, எப்படிச் செலவிடுவது;

12.எவரேனும் இந்த தானத்துக்குப் பாதகம் செய்தால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை.

இந்தக் கல்வெட்டு அமைப்பும் இந்தியாவின் செல்வாக்கைக் காட்டுகிறது. தமிழ்க் கல்வெட்டுகளும் இதே வரிசையில் விஷயங்களைத் தருகின்றன.

 

–சுபம்–

ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக் “கேட்கலாம்”! (Post No.5382)

WRITTEN BY S NAGARAJAN

Date: 1  SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-55 AM (British Summer Time)

 

Post No. 5382

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 31-8-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்திஆறாம்) கட்டுரை

 

ஆச்சரியம் ஆனால் உண்மை; நீங்கள் நினைப்பதைக்கேட்கலாம்!

 

.நாகராஜன்

 

ஆச்சரியம் ஆனால் உண்மை! நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம்! நீங்கள் மனதில் நினைப்பதை உங்களால் கேட்க முடியும்!

 

இதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியவர் இந்திய வமிசாவளியினரில் ஒருவர். பெயர் ஆர்னவ் கபுர்.இவரைப் பற்றி உலகப் பத்திரிகைகள் அனைத்தும் புகழ்ந்து தள்ளுகிறது.

 

அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம் ஐ டி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது) புதுமை சாதனங்களை உருவாக்குவதில் முதலிடம் பெற்ற ஒன்று. இதில் மீடியா லேப் என்று ஒரு பிரிவு சுமார் 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அங்கு எதிர்காலம் உருவாக்கப்படுகிறது.

 

 

ஆறு மாடிக் கட்டிடத்தில் உள்ள மீடியா லேபில் 230 ஆய்வு மாணவர்கள் இருக்கின்றனர். அவர்கள் கலை, எஞ்சினியரிங், உயிரியல், இயற்பியல், குறியீடு ஆகிய துறைகளில் தங்கள் ஆய்வைச் செய்கின்றனர்.

 

இன்று நாம் காணும் டச் ஸ்கிரீன், தானியங்கி காரை ஓட்டுவிக்கும் ஆணைகள் போன்றவை இங்கு உருவாக்கப்பட்டவை தான்.

 

பைத்தியக்காரத்தனமான எண்ணங்கள் என்று பிறரால் எள்ளி நகையாடப்படும் எண்ணங்களை செயல்படுத்த விரும்புவோரின் களம் இது.

 

இன்று நாம் கூகிளில் எந்த இடத்தைப் பற்றிக் கேட்டாலும் பதில் பெறுகிறோமே, அது 1979இல் மீடியா லேபில் உருவானது தான்!

மூவி மேப் என்ற பெயரில் அன்று அது உருவாக்கப்பட, இன்று ஒவ்வொரு சந்து பொந்தையும் கூகிளில் நாம் காண்கிறோம்!

 

மிகப் பெரிய சோதனைக் கூடமான இதில் பாலைவனத்தில் பயிர் வளர்ப்பது எப்படி, கனவுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி, மனித மூளையை இண்டர்நெட்டுடன் இணைப்பது எப்படி போன்றவை ஆராயப்படுகின்றன.

 

கேட்டால் சிரிப்போம்; ஆனால் இவை மெய்ப்பிக்கப்படும் போது ஆவென்று வாயைப் பிளந்து ஆச்சரியப்படுவோம். இதை அறிவியல் உலகம் ‘எதிர்காலம் உருவாக்கப்படும் தொழிற்சாலை’ என்று செல்லமாகக் குறிப்பிடுகிறது!

மீடியா லேப்பில் ஒரு ஆய்வு மாணவராக இருக்கும் ஆர்னவ் கபுருக்கு மனம் நினைப்பதைக் ‘கேட்டால்’ என்ன என்று தோன்றியது.

 

விளைவு : ஆல்டர் ஈகோ என்ற சாதனம் அவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இது காதில் சொருகி வைக்கப்படும். ஒரு ஒலாவை அல்லது ஊபரை வரவழைக்க வேண்டுமென்றால் நீங்கள் அதை நினைத்தாலே போதும். அது ஓலா அல்லது ஊபருக்கு சொல்லப்பட்டு கார் உங்களை வந்து அடையும்!

 

இதை யூ டியூபில் அவர் சமீபத்தில் செய்து காண்பித்த போது உலகமே அயர்ந்து போனது. நீங்களும் இந்த யூ டியூப் டெமோவைப் பார்க்கலாம் (Arnav Kapoor’s Alter Ego YouTube video).

எதை கபுர் நினைத்தாலும் ஆல்டர் ஈகோ அவர் பேசாமல் இருக்கும் போதே அதைச் செய்து விடுகிறது.

 

இயந்திரமும் மனித மனமும் இணையும் காலம் தொடங்கி விட்டது என்கிறார் அவர்.

 

 

 

அவரை 60 நிமிடங்கள் என்ற தொடருக்காக பேட்டி கண்ட ஸ்காட் பெல்லி அதிசய அனுபவத்தை அடைந்தார்.

‘நீங்கள் உங்களுக்குள்ளாக பேசும் போதே உங்கள் மூளை எலக்ட் ரிகல் சிக்னல்களை உங்கள் குரல் நாண்களுக்கு அனுப்புகிறது. அந்த சிக்னல்களை நீங்கள் எடுத்து ஒருவர் என்ன பேச நினைக்கிறார்’ என்பதைக் கண்டு பிடிக்க முடியும் என்கிறார் ஆர்னவ்.

 

இந்த சிக்னலை பெறுகின்ற சாதனத்தைத் தான் வடிவமைத்துள்ளார் ஆர்னவ்.

பேசாமல் இருக்கும் போதே இந்த சிக்னல்கள் பெறப்பட்டு அவை ஒரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப்படுகின்றன. உடனடியாக நினைத்தது செயல்படுத்தப்படுகிறது.

 

எடுத்துக்காட்டாக சில கேள்விகளை ஸ்காட் பெல்லி கேட்டார்:

ஸ்காட்: 45689 என்ற எண்ணை 67 ஆல் வகுத்தால் வருவது?

ஆர்னவ் மனதிற்குள்ளாக இந்தக் கேள்வியைக் கேட்டு கணினிக்கு அனுப்புகிறார். பின்னர் மண்டைஓட்டின் வழியே கணினி அனுப்பும் அதிர்வுகளை உட்காதில் கேட்கிறார். விடையைச் சொல்கிறார்.

 

ஆர்னவ் : விடை 681.925

 

ஸ்காட் : மிகச் சரியான விடை. பல்கேரியாவில் உள்ள பெரிய நகர் எது? அதன் ஜனத்தொகை என்ன?

 

ஆர்னவ் மனதிற்குள்ளாக இதை எண்ணி அவர் சாதனம் மூலமாகக் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறார்.

ஆர்னவ் : சோபியா 12.10 லட்சம் ஜனத்தொகை

ஸ்காட் : அட, இண்டர்நெட்டே உங்கள் தலைக்குள் இருக்கும் போல் இருக்கிறதே!

 

ஆர்னவ்: ஆம், அதைப் பெறத்தான் இந்த சாதனம்.

இப்படித் தொடரும் கேள்விகளும் பதில்களும் நம்மை வியக்க வைக்கின்றன.

 

இந்த மீடியா லேபிற்கு நிதி எப்படி வந்து சேருகிறது? இதில் 90 நிறுவனங்கள் இணைந்து நிதி உதவியை அளிக்கின்றன.  உலகின் மிகப் பெரிய விளையாட்டு சாதனம் தயாரிக்கும் லெகோ, தோஷிபா, ஜெனரல் எலக்ட்ரிக் போன்ற பிரம்மாண்டமான நிறுவனங்கள் நிதியை அள்ளித் தருகின்றன. மீடியா லேப் 302 அதிசயக் கண்டுபிடிப்புகளுக்கான பேடண்ட் உரிமைகளைப் பெற்றுள்ளது! மீடியா லேப் தரும் நவீன கண்டுபிடிப்புகள் கேட்கவே நம்ப முடியாதவை.

 

எடுத்துக்காட்டாக பெட்டிக்குள் பயிர் வளர்ப்பது ஒன்று. பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்டவை. அந்தப் பயிர்கள் ஆனந்தமாக வளர்கிறதாம். வருடத்திற்கு ஐந்து அறுவடை நிச்சயம்!

நம்ப முடியாத இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் நாளைய உலகை மாற்றப் போவது நிச்சயம்

 

ஆர்னவ் கபுரின் உங்கள் எண்ணத்தின் படி பேசாமலேயே ஆணையிட்டு எதையும் செய்ய முடியும் என்பதும் இதில் ஒன்று.

அவரது யூடியூப் காட்சியைத் தான் பாருங்களேன், ஒரு முறை!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ….

 

ரொபாட் இயலில் மிகப் பெரிய விஞ்ஞானியான கெவின் வார்விக் ரொபாட்டுகளைப் பற்றி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருகிறார்.ஸ்டீபன் ஹாகிங்கும் இதையே சொல்லி வந்தார். இவர்கள் இருவரும் சொல்வதை மெய்ப்பிப்பது போல ஒரு சம்பவம் நடந்து விட்டது.

 

ஃபேஸ்புக்கின் ஆய்வுப் பிரிவு இரண்டு ரொபாட்டுகளைச் செய்தது. இவை ஒன்றுக்கொன்று பேசும் வல்லமை படைத்தவை. ஆகவே இதற்கு சாட்பாட்ஸ் (Chatbots) என்று பெயர். ரொபாட்டுகளின் பெயர் ஆலிஸ் மற்றும் பாப். (Alice and Bob).

 

இவைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பாஷை கடினமாக இருக்கிறது என்று எண்ணிய இவை தமக்கு எளிதான ஒரு பாஷையை தாமே உருவாக்கிக் கொண்டு பேச ஆரம்பித்து விட்டன.

 

இவைகள் பேசிக் கொண்டது விஞ்ஞானிகளுக்குப் புரியவில்லை.

அரண்டு போன விஞ்ஞானிகள் திகைத்தனர். இவை பேசுவது என்ன என்று தெரியாமல், ஏதேனும் ஏடாகூடமாக அவை திட்டம் போட்டால்!

 

அவ்வளவு தான், சோதனையையே ஃபேஸ்புக் நிறுத்தி விட்டது.

இது அபாயமானது என்பதை விஞ்ஞானிகள் உணர்ந்து கொண்டனர்.

 

கெவின் வார்விக்கோ, “இது ஒரு முக்கியமான மைல்கல். ரொபாட் அபாயகரமானவை அல்ல என்று எவரெவர் நினைத்தார்களோ அவர்களுக்கு இந்த சம்பவம் ஒரு நல்ல பாடம். அவை என்ன பேசுகின்றன என்று நமக்குத் தெரியவில்லை. அவை இயங்கக்கூடியவையாக இருந்து ராணுவ ரொபாட்டாக இருந்தால், விளைவு ஆபத்தான ஒன்றாகும். இது தான் உலகின் பதிவு செய்யப்பட்ட ரொபாட்டுகளின் முதல் சம்பாஷணை! அவை நமது கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது என்று நாம் நினைத்தாலும் அவை என்ன பேசின என்பது நமக்குத் தெரியவே தெரியாது. ஜாக்கிரதை, ஸ்டீபன் ஹாகிங்கும் நானும் இது பற்றி பலமுறை எச்சரித்து விட்டோம்” என்கிறார்.

ஃபேஸ்புக் நிறுத்தி விட்ட சோதனை உலகில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது!

குறிப்பு : முன்பொரு முறை பாக்யா வாசகர்களுக்கு தன் கையெழுத்திட்ட போட்டோவை அனுப்பி கெவின் வார்விக் வாழ்த்துக்கள் கூறியது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

***

 

 

ஆருடம் சொல்ல ஆசையா? (Post No.5381)

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

swami_48@yahoo.com

Date: 31 August 2018

 

Time uploaded in London – 20-44 (British Summer Time)

 

Post No. 5381

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

இந்துக்களின் அதிசய மூச்சு சாஸ்திரம்

 

நமது மூக்கில் இரண்டு துளைகள் உள்ளன. அதில் மூச்சு மாறி மாறி ஓடும். இதை நாம் கவனிப்பதே இல்லை. எப்போதாவது ஜலதோஷத்தில் மூக்கு அடைத்துக் கொண்டால் அப்போது மட்டுமே, எந்த துவாரத்தின் வழியாக மூச்சு ஓடுகிறதோ அந்த வழியாக விடுகிறோம்.

 

வலது துவாரம் வழியாக மூச்சு விடும்போது அதை சூரியகலை என்பர். இடது துவாரம் வழியாக முச்சு விடும்போது அதை சந்திரகலை என்பர். சிலநேரங்களில் இரண்டு துவாரம் வழியாகவும் மூச்சு சென்று வரும்; இதை சுழுமுனை என்பர்.

இந்த மூச்சு சாஸ்திரத்தை நன்கு கவனித்த பெரியோர்கள் சாதாரண மனிதனுக்கு மூச்சு எப்படி ஓடுகிறது என்று கண்டுபிடித்து எழுதி வைத்துள்ளனர். இதைப் பற்றி மேலை நாட்டு மருத்துவ நூல்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 

காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரையிலும் சூரிய கலை எனப்படும் வலது நாசித் துவாரம் வழியாக மூச்சு வெளியேறும்; உள்ளே வரும். எட்டு மணி முதல் பத்து மணிவரை மூக்கின் இடது துளை வழியாக- அதாவது சந்திர கலை வழியாக மூச்சு விடுவோம். இப்படி இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறி மாறி ஓடும்.

சூரிய கலையை பிங்கலை என்றும் சொல்வர்.

சூரிய கலையில் செய்யக்கூடிய காரியங்கள் என்ன என்று பழைய நூல்கள் கூறும்:–

கல்வி கற்றல்

மந்திரம் ஓதுதல் துவக்கம்

வாஹனம் ஓட்டக் கற்றல்

சித்திரப் படமெழுதல்

ஸ்நானம்/ குளியல்

சொற்பொழிவாற்றுதல்

தான தருமம்

வேட்டை யாடல்

பெண்களுடன் சம்போகம்

மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம்

புத்தாடை அணிதல் (நூதன வஸ்திராபரணம்)

வடக்கு, கிழக்கு திசையில் பிரயாணம்

 

 

 

சந்திர கலை எனப்படும் இடது துவரம் வழியாக நாம் மூச்சு விடும்போது செய்ய வேண்டிய செயல்கள்

தெற்கு, மேற்கு திசையில் பிரயாணம் செய்தல்

யுத்தம் செய்தல்

உபநயனம்

கிரஹப் ப்ரவேசம்

விதை விதைத்தல்

மருந்து சாப்பிடுதல்

சாந்தி கழித்தல்

விவாகம்

யோக அப்யாஸம்

வெளிநாட்டுப் பயணம்

கடவுள் சிலை நிர்மாணித்தல்

அலங்காரம்

 

இந்த நேரங்களில் இந்தக் காரியங்களைச் செய்வது 100 சதவிகித பலன் தரும் என்பது நம்பிக்கை.

ஆருடம் சொல்ல ஆசையா?

 

மூச்சு சாஸ்திரத்தைப் பயின்றால் நீங்களும் ஆரூடம் சொல்லலாம். ஆனால் மனம் , மொழி, மெய் ஆகியவற்றில் சுத்தம் வேண்டும்; அல்லது ஜோதிடம் சொல்லியே சிக்கலில் மாட்டிக் கொள்வோம். ஏனெனில் நாம் சொல்வது பலிக்காது; அப்படிப் பலித்தாலும் அதுவே நம்மை சிக்கலில்  மாட்டிவிடும். ஆகையால் வினைத் தூய்மை இல்லாதோர் விலகி நிற்க.

யாராவது ஒருவர் உங்களிடம் வந்து நான் கார் வாங்கலாமா, வீடு வாங்கலாமா, அல்லது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று கேட்பதாக வைத்துக் கொள்ளுங்கள். தேர்தலில் வெற்றி  கிடைக்குமா, போட்டி போடலாமா என்றெல்லாம் கேடதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் மூக்கின் வலது துவாரத்தின் வழியாக மூச்சு ஓடி, அவரும் அதே பக்கத்தில் நின்று உங்களை எது கேட்டாலும் ஜயம்/ வெற்றி என்று சொல்லலாம்.

 

இது சூரிய குறி எனப்படும்

 

சந்திர குறி என்றால் என்ன?

சந்திர கலை பூரணமாய் நடக்கும்போது– அதாவது இடது துளை வழியாக மூச்சு ஓடுகையில் ஒருவர் வந்து அதே பக்கத்தில் நின்று கேள்வி கேட்டால் அந்தக் காரியம் தடை இன்றி நிறைவேறும் என்று செப்பலாம்.

 

மூக்கின் இரண்டு துளைகள் வழியாகவும் மூச்சு ஓடினால் அதை சுழும்,,,,,,,,,,,,,,,னை என்பர். அந்த நேரத்தில் ஒருவர் வந்து கேட்டால் அவர் வெற்றி பெறமாட்டார். காணாமற்போன பொருள் கிடைக்குமா என்று கேட்டாலும் அது கிடைக்காது என்று சொல்லிவிடலாம்.

 

மூச்சு ஓடும் பக்கம் பூரண பக்கம்

மூச்சு ஓடாத பக்கம் சூன்யம் எனப்படும்.

நமக்கு வேண்டாதவர் வந்தால், எதிரிகள் வந்தால், அவர்களை சூன்ய பக்கத்தில் நிற்க வைத்து, நிறை வேறாது என்று சொல்லலாம். வாதங்களில் அவரைத் தோற்கடித்து விடலாம்.

 

மூச்சு சாஸ்திரத்தில் இன்னும் பல அதிசயங்கள் உண்டு; அவற்றைப் பின்னர் காண்போம்.

 

-சுபம்–

Parties Anecdotes (Post No.5380)

Image of William III of England

COMPILED BY LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 31 August 2018

 

Time uploaded in London – 16-10 (British Summer Time)

 

Post No. 5380

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

At Dinner one day Douglas Jerrold was forced to listen to a noisy argument between an admirer of Prince of Orange and a henchman of William III. Having exhausted the political issues of the debate, they entered upon the personal phases of the question. One of the arguers finally brought his fist down on the table and exclaimed,

Bah! to you sir; I spit upon your Prince of Orange.

The other, determined not to be outdone, rose to his feet and screamed, “And I Sir, spit upon your King William!”

Hereupon, Jerrold unable to endure the racket longer, rang the bell and shouted to the waiter, “Here, boy – spittoons for two!”

 

Dictionary meaning:–

spit·toon

/spiˈto͞on/

noun

  • a metal or earthenware pot typically having a funnel-shaped top, used for spitting into.

 

Image of Prince of Orange

XXX
Thomas Alva Edison was once reluctantly persuaded by his wife to attend one of the brilliant social functions of the season in New York.
At last the inventor managed to escape the lionizers who had crowded about his, and sat alone unnoticed in a corner. Edison kept looking at his watch with a resigned expression on his face. A friend edged near to him unnoticed and heard the inventor mutter to himself with a sigh,
‘If there were only a dog here’!

Xxx

Oliver Wendell Holmes, having been at an afternoon tea, authoritatively defined such functions for all time as,
‘Giggle. Gabble. Gobble. Git’

Xxxx

Dorothy Parker once attended a party at which the greater number of people Seemed to be the rankings of Bohemia. Her companion said to her,
Where on earth do these people come from and where do they stay the rest of the time?
I think, Miss Parker said thoughtfully, after it is o over they crawl back into the woodwork.

 

DICTIoNARY MEANING:

Bo·he·mi·an

(bō-hē′mē-ən)

n.

1.

  1. A native or inhabitant of Bohemia.
  2. A person of Bohemian ancestry.
  3. The Czech dialects of Bohemia.

3.

  1. ArchaicA Romani person.
  2. An itinerant person; a vagabond.

Xxx


Dorothy Parker (American poet, writer, satirist)  completely bored by a country weekend, wired a friend,
Please send me a loaf bread — and enclose a saw and file.

 

XXX

‘I have had a wonderful evening’, said
Groucho Marx to his hostess as he was leaving a dull Hollywood party, ‘but this was not it’.

Xxx

Once, it is said, Margot Asquith gave a party in London — a big party. She received the guests with graciousness, set them spinning into the rhythm of pleasure and then retired to an upper room to play bridge.

Next day, a well meaning, but tactless woman fluttered up to her in a restaurant and said,
Oh, Lady Asquith, I was at your party last night,
‘Thank God, I wasn’t’, answered Margot, and moved on.

Xxx subham xxx

 

புறச் சூழல் விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது! (Post No.5379)

WRITTEN BY S NAGARAJAN

Date: 31 August 2018

 

Time uploaded in London – 9-18 AM (British Summer Time)

 

Post No. 5379

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

சென்னை வானொலி நிலையம் அலை வரிசையில் 21-7-2108 முதல் 31-7-2018 முடிய தினமும் காலையில் ஒலிபரப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் இடம் பெற்ற பத்தாவது உரை.

 

விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது!

 

உலகெங்கும் சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

பல நாடுகளில் புதிய தலைவர்கள் அரசுப் பொறுப்பை ஏற்றுள்ளனர். கிரீஸ், ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் வெப்பநிலை உயர்வைத் தடுக்கும் தங்களது இலக்கை அடைந்து விட்டன. சீனா தனது நான்கு இலக்குகளில் ஒன்றை அடைந்து விட்டது. 50 நாடுகள் 2050ஆம் ஆண்டிற்குள் 100 சதவிகித தூய்மையை சுற்றுப்புறச் சூழலில் ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளன.

 

 

பாரிஸில் கூடிய க்ளைமேட் அக்கார்ட் எனப்படும் சீதோஷ்ண நிலை ஒப்பந்தம்,  நியூயார்க்கில் ஏற்பட்ட காடுகள் பற்றிய பிரகடனம் ஆகியவை நல்லதொரு நம்பிக்கையை உலக மக்களிடம் ஏற்படுத்தியுள்ளன.

நமது நாட்டில் புதிய விழிப்புணர்வுடன் மக்கள் செயல்பட ஆரம்பித்துள்ளனர். க்ளீன் இந்தியா மூவ்மெண்ட் எனப்படும் ஸ்வச்ச பாரத் அபிக்யான் (Swachh Bharat Abhiyan) என்ற திட்டத்தை பாரத அரசு தொடங்கியுள்ளது. இதன்படி சாலைகள், தெருக்கள்,சந்துகளில் சேரும் குப்பைகள் அகற்றப்பட்டு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு கிராம மக்களுக்கு மேம்பட்ட ஆரோக்கிய நல்வாழ்வு அளிக்கப்படும். 2014ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி துவங்கப்பட்ட இந்தத் திட்டம் நாடெங்கும் நற்பயன்களை அளித்து வருகிறது

 

சூரிய ஆற்றலின் பயன்பாடு உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

 

பெட்ரோல், டீஸலைத் தவிர்த்து சூரிய சக்தியாலும், மின் சக்தியாலும் இயங்கும் கார்கள், பஸ்கள், லாரிகள் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

 

மண்வளத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அற்புதமான இந்த வளத்தினால் தான் விவசாயம் செழிக்கிறது. உணவு தானியங்கள் விளைகின்றன.உலகம் இயங்குகிறது. இந்த வளமே நீரை வடிகட்டிக் குடிநீராக்கித் தருகிறது. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆக மண்வளத்தைச் சீராக்கி மேம்படுத்தினால் உற்பத்தி பெருகும், சுற்றுப்புறச் சூழல் பெரிதும் மேம்படும் என்பதால் விவசாயப் பெருமக்களும் விஞ்ஞானிகளும் இணைந்து மண்வளத்தை மேம்படுத்தும் அரிய பணிகளில் இறங்கியுள்ளனர்.

 

நமது அரிய பூமியில் இந்த சமீப விழிப்புணர்வு எதிர்கால சந்ததியினருக்கும் உதவக் கூடிய ஒரு பெரிய வரபிரசாதமாகும்.

ஆக பல்வேறு துறைகளிலும் இளைய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டுள்ள இந்த வரவேற்கத்தக்க மாறுதலில் அவர்களுடன் அனைவரும் இணைந்து உலகை மாசற்ற சுற்றுப்புறச் சூழல் கொண்ட ஒன்றாக ஆக்குவோமாக!

***

 

30 வெற்றிவேற்கை மேற்கோள்கள் (Post No.5378)

COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 13-02 (British Summer Time)

 

Post No. 5378

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

செப்டம்பர் 2018 காலண்டர்; விளம்பி வருஷம் ஆவணி-புரட்டாசி

 

30 வெற்றி வேற்கை மேற்கோள்களும் ஆங்கிலத்தில் இம்மாத ஆங்கிலக் காலண்டரில் கொடுக்கப்பட்டுள்ளன. அதிவீர ராம பாண்டியனால் இயற்றப்பட்டவை.

 

பண்டிகை நாட்கள்: செப்.2 கிருஷ்ண ஜயந்தி/ ஜன்மாஷ்டமி;

5 ஆசிரியர் தினம்; 11 பாரதி நினைவு தினம்; 13 விநாயக சதுர்த்தி/ பிள்ளையார் சதுர்த்தி; 25- மாளயபக்ஷம் ஆரம்பம்

 

அமாவாசை -9; பௌர்ணமி- 24; ஏகாதஸி- 6, 20

முகூர்த்த நாட்கள்- 6, 12

 

செப்டம்பர் 1 சனிக்கிழமை

 

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

 

செப்டம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை

 

கல்விக்கழகு கசடற மொழிதல்

 

செப்டம்பர் 3 திங்கட்கிழமை

செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்

 

செப்டம்பர் 4 செவ்வாய்க்கிழமை

வேதியர்க்கழகு வேதமும் ஒழுக்கமும்

 

செப்டம்பர் 5 புதன்கிழமை

மன்னவர்க்கழகு செங்கோல் முறைமை

 

செப்டம்பர் 6 வியாழக்கிழமை

வணிகர்க்கழகு வளர் பொருளீட்டல்

 

செப்டம்பர் 7 வெள்ளிக்கிழமை

உழவர்க்கழகு ஏர் உழுதூண் விரும்பல்

 

 

செப்டம்பர் 8 சனிக்கிழமை

மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்

 

செப்டம்பர் 9 ஞாயிற்றுக்கிழமை

தந்திரிக்கழகு தறுகண் ஆண்மை

 

 

செப்டம்பர் 10 திங்கட்கிழமை

உண்டிக்கழகு விருந்தோடுண்டல்

 

செப்டம்பர் 11 செவ்வாய்க்கிழமை

பெண்டிர்க்கழகு எதிர்பேசாதிருத்தல்

 

செப்டம்பர் 12 புதன்கிழமை

குலமகட்கழகு தன் கொழுநனைப் பேணுதல்

 

செப்டம்பர் 13 வியாழக்கிழமை

அறிஞர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்

 

செப்டம்பர் 14 வெள்ளிக்கிழமை

வறிஞர்க்கழகு வறுமையில் செம்மை

 

செப்டம்பர் 15 சனிக்கிழமை

தேம்படு பனையின் திரள் பழத்தொரு விதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே (வெற்றி வேர்க்கை)

 

தெள்ளிய வாலின் சிறு பழத்தொரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்

நுண்ணிதே யாயயினும் அண்ணல் யானை

அணிதேர்ப் புரவி ஆள் பெரும்படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே

நறுந்தொகை (வெற்றி வேற்கை)

 

செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை

பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்

 

செப்டம்பர் 17 திங்கட்கிழமை

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்

 

செப்டம்பர் 18 செவ்வாய்க்கிழமை

பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்

 

செப்டம்பர் 19 புதன்கிழமை

உற்றோர் எல்லாம் உறவினர் அல்லர்

 

 

செப்டம்பர் 20 வியாழக்கிழமை

கொண்டோர் எல்லாம் பெண்டிரும் அல்லர்

 

செப்டம்பர் 21 வெள்ளிக்கிழமை

அடினும் ஆவின் பால் சுவை குன்றாது

 

செப்டம்பர் 22 சனிக்கிழமை

 

சுடினும் செம்பொன் தன் ஒளி கெடாது

 

செப்டம்பர் 23 ஞாயிற்றுக்கிழமை

 

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

 

செப்டம்பர் 24 திங்கட்கிழமை

 

புகைக்கினும் காரகில் பொல்லாங்கு கமழாது

 

செப்டம்பர் 25 செவ்வாய்க்கிழமை

 

கலக்கினும் தன் கடல் சேறு ஆகாது – வெற்றி வேற்கை

 

செப்டம்பர் 26 புதன்கிழமை

அடினும் பால்பெய்துகைப் பறாது பேய்ச்சுரைக்காய்

 

செப்டம்பர் 27 வியாழக்கிழமை

 

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை

இரு நிலம் பிளக்க வேர் வீழ்க்கும்மே

 

 

செப்டம்பர் 28 வெள்ளிக்கிழமை

 

நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை

நீர்மேல் பாசிபோல் வேர் கொள்ளாதே

 

 

செப்டம்பர் 29 சனிக்கிழமை

 

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

 

 

செப்டம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை

 

சிறியோர் செய்த சிறுபிழை எல்லாம்

பெரியோராயின் பொறுப்பது கடனே

–subham–

30 Quotations from Tamil Book Vertriverkai (Post No.5377)

 

 

September 2018 Calendar

 


COMPILED BY LONDON SWAMINATHAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 6-56 am (British Summer Time)

 

Post No. 5377

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

This month’s calendar has 30 quotations from Vertiverkai of Athi Veera Rama Pandyan who wrote several Tamil books

 

Important Festivals: Sep.2- Janmashtami; 11 Sama Veda Upakarma; 13 Ganesh Chaturthi; 14 Rishi Panchami; 5- TEACHERS DAY; 11- BHARATI DAY.

New moon/ Amavasai- 9

Full moon- 24

Ekadasi Fasting- 6, 20

Auspicious Days- Sep. 6, 12

 

 

September 1 Saturday

He who teaches letters to one is God (Teacher is God)

September 2 Sunday

Correctness of the language is the beauty of language.

September 3 Monday

To support their relatives is an ornament to the rich

September 4 Tuesday

To study the Vedas and good conduct are ornaments to Brahmins.

September 5 Wednesday

The right administration of justice is an ornament to kings.

 

September 6 Thursday

To increase their capital is ornament to merchants

September 7 Friday

The desire to live by ploughing is an ornament to farmers.

 

September 8 Saturday

The clear foresight of events is an ornament to ministers of state.

September 9 Sunday

Heroism is an ornament t military commanders.

September 10 Monday

To eat in company with guests is an ornament to food.

 

 

September 11 Tuesday

Not to contradict their husbands is an ornament to wives.

September 12 Wednesday

To take care of her husband is an ornament to a lawful and virtuous wife.

September 13 Thursday

The beauty of prostitutes is to ornament their persons

September 14 Friday

It is an ornament to the wise to study, understand and govern their passions.

 

September 15 Saturday

It is an ornament to the poor to be honest in poverty.

 

September 16 Sunday

In the scented Palmyra’s round ripe fruit there is a seed; though it grows so high to reach the sky, yet it affords no shade sufficient even for one person.

September 17 Monday

But in the beautiful banyan’s small fruit there is a seed; though it is smaller than the egg of a little fish that lives in the pure fresh water, yet it gives shade to the king and his whole army, consisting of huge elephants, splendid chariots, horses and soldiers.

September 18 Tuesday

Therefore all little people are not little

September 19 Wednesday

All great people are not great

September 20 Thursday

All children are not children

 

September 21 Friday

All relatives are not relatives.

 

September 22 Saturday

All wives are not wives

September 23 Sunday

Cow’s milk does not lose its flavour when boiled

September 24 Monday

Pure gold does not lose its lustre, when burnt in fire.

September 25 Tuesday

Sandal wood doesn’t lose its odour by grinding

 

September 26 Wednesday

When black akil -wood (eagle-wood)  burns its smoke does not give a bad smell.

September 27 Thursday

The sea does not become muddy, when stirred up.

September 28 Friday

Therefore, Greatness and littleness come from one’s own acts.

 

September 29 Saturday

All the little faults that the lowly commit ought to be borne and forgiven by the great.

September 30 Sunday

If lowly persons commit great faults it is rare to see great bearing with them.

Therefore,

To live according to these precepts is good.

(Translated by Rev.S. Winfred in 1872)

Tamil version of this is given in this months Tamil Calendar)

 

–Subham–

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா?- 4 (Post No.5376)

WRITTEN BY S NAGARAJAN

Date: 30 August 2018

 

Time uploaded in London – 6-37 AM (British Summer Time)

 

Post No. 5376

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

ஹிந்து ராஷ்ட்ரத்தில் எங்களை நாங்கள் விரும்பும் கிறிஸ்துவை வழிபட விடுவீ ர்களா? – 4

 

ச.நாகராஜன்

 

8

கிறிஸ்தவத்தின் எந்தப் பிரிவானாலும் சரி, ஒரு நாட்டிற்குள் நுழைந்தால் அந்த நாட்டின் கதி அதோகதி தான்.

 

கென்யாவின் தலைவரானா ஜோமோ கென்யாட்டா ஒரு முறை இப்படிக் கூறினார் : “ஆப்பிரிக்காவில் ஐரோப்பியர்கள் வந்த போது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தது. எங்களிடம் நிலம் இருந்தது. சீக்கிரமே இது தலைகீழாக மாறிவிட்டது. எங்கள் கைகளில் பைபிளும் அவர்கள் கைகளில் எங்கள் நிலங்களும் உள்ளன.”

(Kenyan leader Jomo Kenyatta had ruefully observed, “When the Europeans landed in Africa they had Bible in their hands and we had our lands. Soon it got reversed and now we have the bible and they have our lands.”)

 

ஐயான் ஸ்மித் என்ற வெள்ளைக்காரத் தலைவர் ரொடீஷியாவின் அதிகாரத்தை அங்குள்ள பூர்வ குடியினரிடம் தர மறுத்தார். ஏனெனில் அவர்கள் நாட்டை ஆளுகின்ற அளவு நாகரிகம் கொண்டவர்கள் இல்லை என்று அவர் சொன்னார்.

 

இதைக் கேட்ட ரொடீஷிய மக்கள், “கொலை, கொள்ளை, திருட்டு, லஞ்சம், ஓரினச் சேர்க்கை, பாவ காரியங்கள் ஆகியவற்றை ஆப்பிரிக்காவில் கொண்டு வந்ததே வெள்ளைக்கார இனம் தான். அதுவரை ஆப்பிரிக்கர்களுக்கு இந்த மாதிரி பாவச் செயல்கள் எதுவுமே தெரியாது” என்று கூறி பதிலடி கொடுத்தனர்.

எலும்புக்கூடு புன்சிரிப்பு சிரித்தாலும் அது பயத்தைத் தானே தரும்! கிறிஸ்தவ பிரார்த்தனை கூட இது போன்ற எலும்புக் கூட்டின் புன்னகைச் சிரிப்பு தான்!

 

செயிண்ட் இக்னேஷியஸ் லயோலாவும் செயிண்ட் சேவியரும் கோவாவிற்குள் நுழைந்தனர். அவ்வளவு தான், அதை மரண பூமியாக மாற்றினர்.லயோலோ சொஸைடி ஆஃப் ஜீஸஸ் அல்லது ஜெஸ்யூட் என்ற சங்கத்தை கி.பி. 1525ஆம் ஆண்டு அங்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக நிறுவினார். இந்த சங்கம் தீவிரவாதத்தைக் கிளப்பி விட்டது. அறக்கட்டளை மற்றும் கல்வியின் பேரால் இன்று வரை இவற்றின் மூலம் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் முயற்சியைத் தான் காண்கிறோம்.செயிண்ட் சேவியர் பள்ளி, மற்றும் கல்லூரி மற்றும் மிஷனரிகளின் அறக்கட்டளைகள் இந்த நச்சு மரத்தின் கிளைகளே.

 

9

ஜெஸ்யூட் பிரமாணம் என்று ஒன்று இருக்கிறது.இதை இணையதளத்திலிருந்து எடுத்துப் படிக்கலாம். (http:/ www.reformation.org/jesuitoathinaction.html/) கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு முன்வரும் ஜெஸ்யூட்கள் இந்த பிரமாணத்தை எடுக்க வேண்டும்.

 

இந்த பிரமாணத்தின் படி, தலைவராக ஆகும் ஒருவர் பிரமாணம் எடுக்கும் போது அவரைத் தவிர இன்னும் மூன்று பேர்கள் மட்டுமே இருப்பர்.

 

இவருக்கு இரு பக்கமும் இருப்பவர்களில் ஒருவர் மஞ்சள் மற்றும் வெள்ளை ஆகிய போப்பின் வண்ணம் ஏந்திய பதாகையை ஏந்தியிருப்பார்.இன்னொருவர்  ஒரு குத்தீட்டியும் சிவப்பு சிலுவையும் இருக்க மேலே மண்டைஓட்டுடன் இரு எலும்புகள் குறுக்காக இருப்பதையும் கொண்ட கறுப்பு பதாகையை ஏந்தியிருப்பார்.

 

இதன் கீழ் INRI என்று இருக்கும். அதன் கீழ் IUSTUM, NECAR, REGES, IMPIOUS என்ற வார்த்தைகள் இருக்கும்.

 

இதன் பொருள் : பரம்பரையாக அரசாளும் அரசர்கள், அரசுகளை ஒழித்துக் கட்டுவோம் என்பது தான்.

 

பிரமாணத்தை எடுத்து வைப்பவர் பிரமாணத்தைச் சொல்லச் சொல்ல அதை பிரமாணம் சொல்பவர் திருப்பிச் சொல்ல வேண்டும். பிரமாணத்தைக் கூறுபவர் சொல்வதில் ஒரு பகுதி இது:

 

“எனது மகனே! ஆகவே உனக்கு பொய்யாக நடித்து ஏமாற்றக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறாமை, வெறுப்பு ஆகியவற்றிற்கான செடியின் விதைகள் பற்றி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவைகளால் அமைதியுடன் வாழும்  சமூகங்கள், ராஜ்யங்கள், மாநிலங்கள் ஆகியவற்றில் இரத்தம் சிந்த வைத்து சுதந்திரம், அமைதி கொண்ட அவைகளை ஒன்றுடன் ஒன்று போரிடச் செய்து உள்நாட்டுக் குழப்பம் உண்டாக்கி புரட்சிகளை உருவாக்க கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிரணியில் இன்னொரு ஜெஸ்யூட் இருந்தாலும் சர்ச்சின் நன்மையே உங்கள் கவனத்தில் இருக்க வேண்டும்.

 

உளவாளியாக இருக்க உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான தகவல்கள், உண்மைகளை எல்லா விதங்களிலும் சேர்க்க வேண்டும்.

இரத்தம் சிந்தாமல் யாரும் “காப்பாற்றப் பட” முடியாது. நான் சொல்லும் பிரமாணத்தைத் திருப்பிச் சொல்லுங்கள்.

 

இதன் பின்னர் சொல்லப்படும் பிரமாணம் இது தான்: –

 

“I,…. now in the presence of Almighty God, the Blessed Virgin Mary, the Blessed Michael the Archangel, the Blessed St. John the Baptist, the holy Apostles St. Peter and St. Paul and all the saints and sacred hosts of heaven, and to you, my ghostly father, the Superior General of the Society of Jesus, founded by St. Ignatius Loyola in the Pontificate of Paul the Third, and continued to the present, do by the womb of the Virgin, the matrix of God, and the rod of Jesus Christ, declare and swear that his holiness the Pope is Christ’s Vice-regent and in the true and only head of the Catholic or Universal church throughout the earth… …

 

I furthermore promise and declare that I will, when opportunity present, make and wage relentless war, secretly or openly, against all heretics, Protestants and Liberals, as I am directed to do, to extirpate and exterminate them from the face of the whole earth; and that I shall spare neither age, sex or condition; and that I will hang, waste, boil, flay, strangle and bury alive these infamous heretics, rip up the stomachs and wombs of their women and crush their infants’ heads against the walls, in order to annihilate forever their execrable race….”

 

இந்த பிரமாணத்தைப் படிப்போர் மனம் திடுக்கிடும் என்பதில் ஐயமில்லை.

 

ஜூலியாக்கள் போன்ற செகுலரிஸ்டுகள் உண்மை தெரியாதவர்களா அல்லது ஜெஸ்யூட் கோஷ்டியில் ஒருவரா?

ஒன்றும் தெரியாத அப்பாவி போல நாளிதழ்களில் எதையேனும் எழுதி ஹிந்து ராஷ்டிரத்தில் எங்களை நாங்கள் வணங்கும் கிறிஸ்துவை வழிபட விடுவீர்களா என்று கேள்வி கேட்கும் போது விஷயம் அறியாதவர்கள் அடடா, இவர் கேட்பது சரி தானோ என்று எண்ணுவர்.

 

ஆக, ஜுலியாக்களுக்கு உண்மை தெரிவதற்காவது கிறிஸ்தவ  மதம் இந்தியாவில் எப்படி பரப்பப் பட்டது அதற்கு எத்தனை ஆயிரம் அப்பாவிகள் பலி ஆகினர் என்ற வரலாறு வெளி வர வேண்டும்.

 

எவ்வளவு செல்வம் இந்த நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டது, என்னென்ன இழி செயல்கள் இங்கு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வேண்டும்.

வரலாற்றை ஆராய்வோர் எழுதுவர்; படிப்போம்!

 

10

பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிந்து போவான் என்பது பைபிள் வாசகம்.

பட்டயம் என்றால் கத்தி. அதாவது கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே அழிந்து போவான்.

 

இது ஹிந்துவாகிய எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

ஏனெனில் உயரிய குணங்கள் என்று குணங்களை பகவத் கீதையும் மனு ஸ்மிருதியும் பட்டியலிடும் போது அதில் முதலிடம் பெறுவது அஹிம்ஸை. அடுத்து தான் சத்தியம் சொல்லப்படுகிறது.

அந்த அளவிற்கு அஹிம்ஸை ஹிந்து மதத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதன் மஹிமையை எடுத்துக் காட்டியவர் மஹாத்மா காந்தி.

 

சிங்கத்தை அதன் குகையிலேயே பல்லைப் பிடித்து ஆட்டியவர்.

கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப வந்த ஐரோப்பியர்களை துரத்தியவர்.

ஆக அஹிம்ஸாவாதிகளான ஹிந்துக்கள், ‘கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே அழிந்து போவான்’ என்ற ஹிந்து தத்துவத்தை வலியுறுத்தும் பைபிள் வாசகத்தை நிச்சயம் விரும்புவார்கள்.

 

அப்பாவிகளாக வாழ்ந்து வந்த பல தேசத்து மக்களை மதமாற்றம் என்ற பெயரால் கொன்று குவிக்க கத்தியை எடுத்த கிறிஸ்தவ பாதிரிகள் கத்தியாலேயே அழிவர் என்பது உறுதி.

பைபிள் வாசகம் பலிக்குமானால், அஹிம்ஸையை விரும்பும் கிறிஸ்தவர்களில் மனம் மாறியவர்கள் போக, காலப் போக்கில் மீதியுள்ள கிறிஸ்தவராக ஏசு ஒருவர் தான் அதில் மிஞ்சுவாரோ?

பைபிளை ஹிந்து ராஷ்டிரத்தில் படிக்க விரும்பும் ஜூலியாக்கள் சிந்திக்கட்டும்!

 

*** தொடர் முற்றும்

தொடருக்கு உதவிய ஆதாரம் : Truth Volume 86 Issue 12 – 6-7-2018 இதழ்

நன்றி : Truth