ராமாயண காலம் 7000 ஆண்டுகளுக்கு முன்! (Post No.5102)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 12 JUNE 2018

 

Time uploaded in London –  11-50 am  (British Summer Time)

 

Post No. 5102

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

ராமாயணம் பற்றி எவ்வளவோ புஸ்தகங்கள் வெளியாகி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் லண்டன் பல்கலைக் கழக லைப்ரரிக்குப் போன போது புஷ்கர் பட்னாகர் எழுதி, 2005ஆம் ஆண்டு வெளியிட்ட, புஸ்தகத்தை எடுத்தேன். இதன் சுருக்கததை மட்டும் செப்புவேன்.

புத்தகத்தில் வான சாஸ்திர அடிப்படையில் வால்மீகி ராமாயனத்தை ஆராய்ந்து ராமனின் காலம் கி.மு5100– அதாவது இற்றைக்கு 7100 ஆண்டுகளுக்கு முந்தையவர் என்று கணித்துள்ளார். இதற்கு அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் உழைத்ததும் நவீன சாப்ட்வேர் computer software முதலியவற்றைப் பயன்படுத்தியதும் சுவையான செய்திகள் ஆகும்.

 

இந்தப் புத்தகத்தில் 60 வான மண்டல நட்சத்திர வரைபடங்கள் உள்ளன. வான சாஸ்திரம் (வானியல்) ஜோதிடம் அறிந்தோருக்கு அவை சுவை கூட்டும்.

ராமாயணத்தில் இரண்டு இடங்களில் வரும் ஸரஸ்வதி நதி பற்றிய குறிப்புகள், ராம ஸேது பாலம் பற்றிய ‘நாஸா’ (NASA) ஆய்வுகள் ஆகியவற்றை எல்லாம் ஆராய்கிறார். ஆயினும் இவர் வால்மீகி குறிப்பிடும் வானியல் குறிப்புகளையே பிரதானமாகக் கொள்கிறார். அவ்வகையில் இந்த நூல் தனிச் சிறப்புடையது.

 

ராமர் பிறந்தபோது இருந்த கிரஹ நிலைகள் முதலியவற்றை கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் (software) போட்டு ஆராய்ந்து இவர் கண்ட உண்மைகள் பின்வருமாறு:–

 

1.சமீப கால ஆய்வுகள் ஸரஸ்வதி- சிந்து நதி நாகரீகத் தடயங்கள் கி.மு 8000 என்று காட்டுகின்றன.

 

2.ரிக்வேதத்தின் பமையான பகுதிகள் கி.மு.6500 என்று வானியல் குறிப்புகளால் அறிகிறோம்.

 

3.ராமாயனணத்தின் காலம் கி.மு 5100

 

4.ரிக்வேதத்தின் கடைசி மண்டலம்– பத்தாவது மண்டலம்– கி.மு.5000

 

5.மஹாபாரத யுத்த காலம்- கி.மு.3137

 

6.ஸரஸ்வதி நதி மறைந்த காலம் கி.மு.1900

 

வால்மீகி இரண்டு இடங்களில் ஸரஸ்வதி நதியைப் பற்றி பாடுகிறார். பரதன், அயோத்தி நகருக்குத் திரும்பி வரும் வழியை அழகாக வருணிக்கிறார். அப்போது அவன் ஸரஸ்வதி நதிக்கரையைக் கடந்து சென்றதையும் நுவல்கிறார். இல்லாத நதியின் கரைகள் பற்றி யாரும் இயம்புவதில்லை. ஆக நதியின் கரைகள் என்றும் செப்புகிறார். இதனால் இராமபிரான் கி.மு 1900-க்கு முன்னர் இருந்தது உறுதியாகிறது.

வால்மீகியின் வரலாற்று உணர்வும் பூகோள அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது. ராமன் பிறந்த காலம், பரதன் சென்ற வழிகளை எல்லாம் அன்று எழுதி வைத்ததால் நாம் இன்று ஆராய முடிகிறது.

 

இவையெல்லாம் ஒரு புறம் நிற்க, புஸ்த ஆசிரியர் இந்த விஷயங்களை உறுதி செய்ய எவ்வளவு கஷ்டப்பட்டர் என்பது இன்னும் சுவை ஊட்டுகிறது புஸ்தகத்துக்கு!

 

 

இவர் ஆஸ்பத்திரியில் அனுமதியாகி உயிருக்குப் போராடிய தருணத்தில் ஒருவர் வால்மீகி ராமயணத்தின் இந்தி மொழிபெயர்ப்பை அன்பளிப்பாகத் தந்தாராம். ராமன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அதைப் படிக்கவே உயிர் தப்பி, உடல் நலம் தேறினார். அப்போது பிறந்தது இந்த ஆராய்ச்சி எண்ணம். தற்காலத்தில் நிறைய வானியல் மென்பொருட்கள் (Software) அகப்படுவதால் அதையெல்லாம் கம்ப்யூட்டரில் ஏற்றி,  கணினி என்ன புகல்கிறது என்று ஆராய, ஆராய அற்புத விஷயங்கள் வருகின்றன.

 

 

சீதையைத் தேடச் சென்ற அனுமன் இலங்கையில் அசோக வனத்தில் நுழைந்த நாள்– மார்கழி அல்லது தை மாத பௌர்ணமி என்றும் அன்றையதினம் ஒரு சந்திர கிரஹணம் நிகழ்ந்தது என்றும் இவரது கணிப்புகள் காட்டின. ஆனால் இவர் கையில் இருந்த சாப்ட்வேர் கிரஹணங்களைக் காட்டாது என்று நினைத்துக் கொண்டு பல சாப்ட்வேர் கம்பெனிகளை அணுகிணார். சரியான விடை கிடைக்காததால் ஐந்தாண்டுகள் தவியாய்த் தவித்தார். பல பத்திரிக்கைகளில் எழுதிய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து புஸ்தமாக அச்சிட ப்ரிண்டிங் பிரஸ்ஸுக்கும் (Printing Press) அனுப்பிவிட்டார்.

 

மறுநாள் காலையில் பத்திரிக்கைகளைத் திறந்தபோது நவம்பர் 9, 2003-ல் சந்திர கிரஹணம் ஏற்படப்போகிறது, அது இந்தியாவிலும் தெரியும் என்று கண்டார். அதற்கு முதல் நாள் தன்னிடம் இருந்த ஸாப்ட்வேரில் அதைப் போட்டு சரிபாரத்தார். பத்திரிக்கை சொன்ன கிரஹண கால விவரம் அப்படியே வந்தன. உடனே இதயம் பட படக்க்க நெஞ்சு துடிதுடிக்க தனது ஆராய்ச்சி தேதி கிரஹணத்தையும் போட்டுப்பார்த்தார். என்ன ஆச்சர்யம்! அவர் 12 செப்டம்பர் கி.மு.5076 என்று போட்டபோது அந்த தேதியில் சந்திர கிரஹணம் என்பதை கம்ப்யூட்டர் காட்டியது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதை இதுதான். ஐந்தாண்டு தேடிய விஷயம் அவர் கையில் இருந்த ஸாப்ட்வேரில் ஐந்து நொடியில் கிடைத்தது

 

அவருக்கு பரமானந்தம், பிராம்மானந்தம். ஏன்?

 

இராம பிரானே நான் செய்த ஆராய்ச்சிக்கு ‘அக்மார்க்’ முத்திரை குத்திவிட்டார் என்று.

 

இப்படிப் பல சுவையான செய்திகள் உடைய இந்தப் புஸ்தகம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியும் என் கையில் கிடைத்தது சில நாட்களுக்கு முன்னர்தான்!

எனக்கும் இராம பிரான் ஒரு முத்திரை – யெஸ் YES முத்திரை குத்தினார்.

 

நேற்று ஆங்கிலத்தில் இதே கட்டுரையை எழுதி இராமபிரான் காலம் கி.மு 5100 என்று போட்டுவிட்டு கட்டுரை எண்.5100 என்று போட்டுவிட்டு ULOAD அப்லோட் செய்துவிட்டுப் பார்க்கிறேன்! ஆண்டும் 5100, கட்டுரை எண்ணும் 5100!! முதலில் நான் இரண்டு முறை தவறுதலாக 5100 என்பதை அடித்துவிட் டேனோ என்று முழித்தேன்; பின்னர்தான் விழித்தேன்; இதுவும் தெய்வ ஸங்கல்பம் என்று.

 

ராமர் காலம் கி.மு 5100 என்பது என் பிளாக் மூலம் ராமரே நிரூபித்தார் போலும்.

Krishna in Thailand

கடவுள் கனவில் வந்தாராம்! ஒரே நகைப்பு, கிண்டல்!

சின்ன வயஸில் எங்கள் வீட்டுக்கு ஒரு மாஜிஸ்டிரேட் வருவார். அவர் எப்போது பார்த்தாலும் பகவத் கீதை பற்றிப் பேசுவார். ஒரு நாள் கிருஷ்ணர்  எந்த ஆங்கிளில் Angle (கோணத்தில்) ரதம் செலுத்தினார், அர்ஜுனன் எந்த ஆங்கிளில் angle அம்பு விட்டார் என்று மூளையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தேன் விடையே கிடைக்கவில்லை. இரவில் கண்ணனே தோன்றி இந்த Angle ஆங்கிள் என்று காட்டினார் என்று சொல்லி நடித்தும் காட்டினார்.

 

அவர் வீட்டை விட்டு வெளியே போனதுதான் தாமதம், நாங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் கூடி கேலியும் கிண்டலுமாகப் பேஸி சரியான பைத்தியம் இது; கிருஷ்ணன்தான் இவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சிரியாய் சிரித்தோம்.

 

ஆனால் பிற்காலத்தில் கணித மேதை ராமானுஜனுக்கு,  நாமகிரித் தாயார் கணித ரகசியங்களை கனவில் வெளியிட்டதை ராமானுஜமே கூறியதைப் படித்த பின்னர், பிரபல வேதியியல் விஞ்ஞானிக்கு பென்ஸீன் ரிங் Benzene Ring  என்னும் ஆர்கானிக் பார்முலா கனவில் வந்ததை அவரே கூறியதைப் படித்த பின்னர் இறைவன் என்பவன் “கல்லார்க்கும் கற்றவர்க்கும், வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிப்பவன்” என்பது விளங்கியது.

 

Picture of Benzene Ring that came in the dream of a scientist.

-சுபம், சுபம்-

POLITICAL IDEAS OF TAMIL POETS Vs MANU AND OTHER LAW MAKERS (Post No.5103)

Written by LONDON SWAMINATHAN

 

Date: 12 JUNE 2018

 

Time uploaded in London –  21-11  (British Summer Time)

 

Post No. 5103

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

POLITICAL IDEAS OF TAMIL POETS Vs MANU AND OTHER LAW MAKERS (Post No.5103)

 

Professor Bency Kumar Sarkar of Calcutta (Kolkata) has written an article about the political ideas of Cendeswara who has dealt with political thought under sixteen topics. When I read that I did my own quick research with the political thoughts of Tamil poet Tiruvalluvar. It is not a comprehensive one but touches all the 16 topics. Ilango of Tamil epic Silappadikaram also make several statements reflecting Tamil political thought.

Candesvara was the author of Raajaniiti Rantnaakaara. He lived in the fourteenth century and served as a minister under king Harisimha deva of Mithila (North Bihar). He was a student of law and so wrote this book. But he never claimed any originality, but collected materials from several ancient authors and produced them as a digest. So his work Rajaniiti Ratnaakara is a digest. In addition to collection Candesvara made comments as well.

 

Unfortunately, we have no law book in Tamil to compare with Sanskrit law books which are umpteen in number. But Sangam Tamil literature has several verses which deal with the law. Post Sangam works such as Tirukkural and 17 other minor works and Tamil epic Silappadikaram deal with law, but not separately. Tirukkural, a didactic work, may come nearer to a law book and Silappadikaram by Ilango is also useful to compare some points.

It is very interesting to see Tirukkural- a single book of the Tamils, covers almost all the topics except Coronation.

The author of the original article B K Sarkar has given the 16 topics and showed how many times Candesvara quotes the books or authors. I will use it as the base for my research and show how many times Tamil poets touched those topics (only a rough figure):-

1.THE KING

Kulluka Bhatta Rajaniiti Kamadhenu (twice); Guru (Brihaspati or Candesvara’s Guru), Yajnavalkya- thrice; Narada Niti aand Mahabharata- twice, Mahabharata – twice, Manu (4 times); Yasa, Naradiya Smrti, Harita

Tirukkural of Tiruvalluvar- Chapters 70, 39, 55, 56 (Total 40 couplets)

 

xxx

2.THE MINISTER

Manu (4), Yajnavalkya, Vysa, Amarakosa, Mahabharata, Harita, Nardas smriti.

Tirukkural of Tiruvalluvar -Chapter 64 (Ten couplets)

xxx

3.THE FAMILY PRIEST-

Vyasa, Manu (2), Yanjavalkya (1)

None

xxx

  1. THE JUDGE-

KaatyaayanaBrihaspati, Pallavakara Lakshmidhra, Harita, Vyasa, Manu, Narada.

Tirukkural of Tiruvalluvar -Chapter 12, 108

 

xxx

5.THE COUNCIL

Manu, Harita, Brhaspati

Tirukkural of Tiruvalluvar – Chapter 99, 100

6.FORTS

Manu, Yajnavalkya, Mahabharata

Tirukkural of Tiruvalluvar – Chapters 74,75

 

 

7.DELIBERATIONS

Manu, Yajnavalkya, Mahabharata

Tirukkural of Tiruvalluvar – Chapter 45

 

8.TREASURE

Manu, Yajnavalkya, Pallava

Tirukkural of Tiruvalluvar -Chapter 76+ couplet 247

 

 

9.THE ARMY

Manu (7 times), Kamandaka, Mahabharata

Tirukkural of Tiruvalluvar -Chapter 77, 78

 

10.THE GENERAL

Manu, Mahabharata, Rajaniti

Tirukkural of Tiruvalluvar -Chapter 77, 78

 

11.THE AMBASSADOR

Manu, Sukraniti, Yajnavalkya, Mahabharata, Pallava, Kamandaka

Tirukkural of Tiruvalluvar -Chapter 69

 

 

12.KING’S  FUNCTIONS

Manu, Yajnavalkya, Maya Maitra

Tirukkural of Tiruvalluvar- Chapter 39, 49, 50, 55, 56

 

 

  1. PUNISHMENT

Manu, Yajnavalkya, Narada, Pallava

Chapters 57, 55,44

 

  1. GIVING THE KINGDOM TO HIS ELDEST SON (THROUGH ABDICATION)

Manu, Kandaki, Harita, Narada, Vyasa, Mahabharata, Ramayana, Brihaspati, Katyayana

N/A

  1. GIVING THE KINGDOM TO HIS ELDEST SON (THROUGH PRIEST)

Manu, Amarakosa, Ramayana, sukraniti, Padmapurana, Lakshmidhara, Narada, Pallavakara

Pathitrupaththu (one of the 18 Major works of Sangam Period)

 

16.CORONATION

Candesvara cites 42 authors or books under this topic.

He quoted Manu 38 times

Yajnavalkya 19

Mahabharata 14

Narada 13

Kamandaka 2

Pallavakaara 8

Lakshmidhara 7

Katyayana 6 Times

Candesvaea did not consider Arthasastra as a dharma sastra. It is not a Law book but a book on politics and economics.

Tirukkural , Naladiyar and 16 other didactic works are called 18 Minor Works. They contain lot of law points.

 

–Subham–

 

 

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்! (Post No.5101)

Written by S NAGARAJAN

 

Date: 12 JUNE 2018

 

Time uploaded in London –  6-18 am  (British Summer Time)

 

Post No. 5101

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!

 

.நாகராஜன்

 

மஹாபாரதத்தை அழகுறத் தமிழில் பாடியவர் வில்லிப்புத்தூரார்.

இவரை பாரதம் பாடச் செய்தவர் ஆட்கொண்டான்.

இவர் வக்கபாகையில் (சோழநாடு) வசித்தவர் என்று சொல்லப்பட்டாலும் கூட இவரது மரபு கொங்கு மரபே என்று சொல்ல வேண்டும்.

பாரதத்திலேயே கொங்கர்பிரான் ஆட்கொண்டான் என்று வருகிறது.

ஆகவே இவரது முன்னோர்கள் சோழ மன்னனின் அழைப்பின் பேரில் அங்கு சென்று காணி நிலம் பெற்று சோழனது சேனாதிபதியாக வக்க பாகையில் தங்கி இருந்திருக்க வேண்டும். வில்லிப்புத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான் கொங்கு மண்டலத்தைச் சார்ந்தவரே என்று கொங்கு மண்டலச்  சதகம் தனது 32ஆம் பாடலில் எடுத்துரைக்கிறது.

பாடல் இது தான்:

துன்னு மறைப்பொரு ளெல்லாம் பொதிந்து சுவை முதிர்ந்து

பன்னும் புகழ்பெறைந் தாம்வேத மென்னும் பாரதத்தைத்

தென்னன் மொழியிற் சொலச்செய்து கன்னடர்ச் செற்றதமிழ்

மன்னன் வலியனாட் கொண்டான் முனோர் கொங்குமண்டலமே

  • கொங்கு மண்டலச் சதகம் பாடல் 32

 

பாடலின் பொருள் : வேதப் பொருள்கள் உள்ளமைந்தமையால்

ஐந்தாம் வேதம் என்று போற்றப்படும் பாரதக் கதையைத் தமிழில் வில்லிப்புத்தூராரைக் கொண்டு பாடச் செய்த ஆட்கொண்டானது முன்னோரும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்களே!

 

சோழியர் எங்கு வசித்தாலும் அவரைச் சோழியர்கள் என்றே அழைப்பர்; தொண்டைமண்டலத்தார் எந்த மண்டலத்தில் வசித்தாலும் அவரைத் தொண்டை மண்டலத்தார் என்றே அழைப்பர். அது போல ஆட்கொண்டான் வக்க பாகையில் வசித்தாலும் அவர் கொங்கர் ஆதலால் கொங்கர் எங்கு வசித்தாலும் கொங்கர் என்று சொல்லப்படுதல் போல கொங்கர் என்றே அழைக்கப்படுகிறார்.

ஆட்கொண்டான் என்னும் உபகாரி கொங்கன் என்பதை வில்லிப்புத்தூராரின் மகனான வரந்தருவார் பாரதச் சிறப்புப் பாயிரத்தில் இப்படிக் கூறுகிறார்:-

 

 

எங்குமிவ னிசைபரப்பி வருநாளில் யாமுரைத்த விந்த நாட்டிற்

கொங்கர்குல வரபதியாட் கொண்டானென் றொருவண்மைக் குரிசி றோன்றி

வெங்கலியின் மூழ்காமற் கருநடப்போர் வெள்ளத்து விழாம னான்காஞ்

சங்கமென முச்சங்கத் தண்டமிழ்நூல் கலங்காமற் றலைகண் டானே

 

ஆற்றியவிச் செல்வத்தா லளகையைவேன் றிருங்கவினா லமர ருரை

மாற்றியபொற் றடமதில்சூழ் வக்கபா கையினறத்தின் வடிவம் போலத்

தோற்றியவக் கொங்கர்பிரான் சூழ்தமிழா னாட்கொண்டான் சுற்றத் தோடு

போற்றியவிப் புவிமுழுதுந் தன்றிருப்பேர்  மொழிகொண்டே புரந்தா னம்மா

 

ஆட்கொண்டானைப் பற்றி இரட்டையர் பாடிய பாடல் ஒன்றும் உண்டு:

சாணர்க்கு முன்னிற்கு மாட்கொண்ட நாயகன் தமிழ்க்கொங்கர் கோன்

பாணுற்ற வரிவண்டு சேர்வக்கை நகராதி பக்கத்திலே

யூணுக்கு வாரா திருப்பாவி ருப்பாகி யுயர்வானிலே

வீணுக்கு நின்னாக மெலிகின்ற தெவ்வாறு வேண்டிங்களே.

 

 

ஆக தமிழில் பாரதம் உருவாகக் காரணம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஆட்கொண்டான் என்னும் உபகாரி என்பது இச்சதகத்தால் விளங்குகிறது.

***

DATE OF RAMAYANA 5100 BCE (Post No.5100)

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  18-16 (British Summer Time)

Post No. 5100

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

I was reading the book ‘Dating the Era of Lord Ram’ by Pushkar Bhatnagar, 2004, Rs.395

He has concluded that Rama lived around 5100 BCE on the astronomical evidence in the Valmiki Ramayana. First let me give his conclusions and then his introduction. It is a book with sixty colour star maps.  His conclusions are

 

The archaeological evidence suggesting the date of Saraswati Sindhu region sites up to 8000 BCE,

astronomical dating of some of the verses of the Rig Veda to 6500 BCE,

the Astronomical dating of Ramayana at around  5100 BCE,

date of composition of the last Mandala of the Rig Veda around 5000 BCE,

strong evidences suggesting the traditional date of 3137 BCE as the date of Mahabharata,

probable date of Puranas well after the beginning of the Kaliyuga and the drying up of the Saraswati River around 1900 BCE

makes highly agreeable and logically acceptable timeline of our civilization.

 

His introduction in the book gives the following interesting details:

“The Ramayana clearly mentions that a lunar eclipse had occurred on the day Hanuman visited Lanka in search of Sita. On examination of the sequence of events narrated in the book

(Ramayana) I had concluded that it was the full moon day of either the month of Margasirsh (Maarkazi in Tamil) or Paush (Thai in Tamil)of the last year of exile (5076 BCE). However, I had no means to verify whether a lunar eclipse had actually occurred about 7000 years or not.

 

My belief and understanding was that the software I was using  did not have the capability of  showing the occurrence of lunar eclipse. I browsed the web for any other software. These efforts bore no fruit. For almost five years I had desperately wished and prayed that somehow I could verify and demonstrate the occurrence of Lunar eclipse so that my findings become complete in all respects.

 

Since no solution could be found to this puzzle and being completely helpless in this regard, I submitted my manuscript to the publishers for publication in the month of October 2003. (He just mentioned that he could not verify the lunar eclipse in the manuscript).

After a few days, I read in the newspapers that a lunar eclipse was to occur on the morning of 9 November 2003 and it would be visible from India. Late in the evening of 8th, without any specific hope of finding a solution, intuitively I felt like examining the position of the sun and the moon during the eclipse due to occur the next day, though the software. My intention was to compare the positions of the sun and the moon during the eclipse of 9 th. However as soon as I entered the time of the occurrence of the eclipse in the software I was surprised to find that the software was displaying the occurrence of the eclipse very precisely. Without wasting a moment, I entered the date 12 September 5076 BCE. (full moon day of lunar month Margasirsh, which according to me the day Hanuman visited Lanka.

 

With a pounding heart, I started examining the position of the moon. And then came the stamp of Divine confirmation! The software demonstrated that a lunar eclipse had indeed occurred that evening – exactly at the time when it had been described in the Ramayana. I could not believe five year long hopelessness was transformed into triumph in just a matter of five minutes! “

-Pushkar Bhatnagar10 May 2004

pushkarbhatnagar@hotmail.com

This shows the author’s long and sincere research into the date of Ramayana.

–Subham–

 

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  13-37 (British Summer Time)

Post No. 5099

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அமெரிக்கப் பாம்பும் கம்பன் குரங்கும்! (Post No.5099)

 

கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,அப்துல் காதருக்கும் அமாவாஸைக்கும் தொடர்பு உண்டோ இல்லையோ ,ராம நவமிக்கும் ரஹீமுக்கும்  தொடர்பு உண்டோ இல்லையோ, அமெரிக்கப் பாம்புக்கும் கம்பன் சொன்ன ராமாயண வானரப் படைக்கும் கட்டாயம் தொடர்பு உண்டு!

 

ஞாயிற்றுக் கிழமை தோறும் நாங்கள் லண்டன் நேரம் காலை 7-30 முதல் 9 மணி வரை ஸ்கைப்பில் (Skype) நடத்தும் கம்பராமாயண வகுப்பில் பல விஷயங்களை அலசுவோம். இந்த வாரம் கம்பராமாயணப் பாடலில் இரண்டு சுவையான விஷயங்கள் விவாதத்துக்கு வந்தன.

 

கம்பன் சொல்கிறான்:

ஒளிவீசும் தீப்பொறி கக்கும் விழிகளை உடைய குரங்குப் படைகள் கையில் எடுத்த மரங்கள் அரக்கப் படை வீசிய அம்புகளால் துண்டாயின. அரக்கர்கள் வீசிய அம்புகள், வானரங்களின் நெஞ்சில் ஊடுருவ அவை இறந்து விழுந்தன; அந்த நிலையிலும் அரக்கர்களை கடித்து அவர்களைக் கொன்று தாமும் இறந்தன (அதாவது செத்தும் கடித்தன அல்லது சாவதும் கடிப்பதும் ஒருங்கே நிகழ்ந்தன).

 

இதோ யுத்த காண்ட நாகபாசப் படலப் பாடல்:-

 

சுடர்த்தலை நெடும்பொறி சொரியும் கண்ணன

அடர்த்து அலை நெடும் மரம் அற்ற கையன்

உடர்த்தலை வைரவேல் உருவ உற்றவர்

மிடற்றினைக் கடித்து உடன் விளிந்து போவன.

 

 

இதே போல அமெரிக்காவிலும் ஒரு சம்பவம் நடந்தது.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகானத்தில் கார்ப்பஸ் கிறிஸ்டி என்ற Corpus Christi, Texas, USA) ஊருக்கு அருகில் ஒரு   பெண்மணி  வீட்டிற்குப் பின்புறமுள்ள பகுதிகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். அப்பொழுது கிலுகிலுப்பைப் பாம்பு (Rattle Snake) ஒன்று தலைப்பட்டது.

 

சாரைப் பாம்பு போன்ற இத்தகைய பாம்பு வாலை ஆட்டு போது கிலுகிலுப்பை ஒலி உண்டாகும்.

 

அந்தப் பெண்மணி ‘பாம்பு, பாம்பு’ என்று அலறிய உடன், கணவர் ஓடோடி வந்து அருகிலுள்ள மண்வெட்டியால் பாம்பின்  தலையில் ஒரு போட்டு போட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகியது. அவர் பெயர் மியோ சட்க்லிப். அவருக்கு பெருமை தாங்கவில்லை. பாம்பின் தலையருகே போனார். துண்டாகிக் கடந்த தலை அவர் மீது பாய்ந்து கடிக்கவே அவர் உடலில் விஷம் ஏறி மயங்கி விழுந்தார். உடனே விமான ஆம்புலன்ஸ் வந்து அவ ரைத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் போட்டது. கொஞ்சம் கொஞ்சமாக உ யிர் வந்து கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கம்பன் பாடலில் சாகும் அல்லது செத்த குரங்குகள் கடித்து, அதுவும் இறந்தது;  கடிபட்ட அரக்கனும் இறந்தான் என்று சொன்னது மெய்யே; அவன் கண்ணால் கண்டதை எழுதுகிறான்.; காட்டு வழியாகப் போகும் போது இத்தகைய காட்சிகளைப் பார்த்து இருப்பான் போலும்!

 

கரடி தின்ன Sweet Dinner ‘ஸ்வீட் டின்னர்

 

இன்னொரு பாட்டில் யானைகளின் மூளைகளை   கரடிகள் தின்னதாகச் சொல்லி அது அவைகளுக்கு இனிய உணவாக/ விருந்தாக அமைந்தது என்கிறான். கரடிகள் பெரும்பாலும் மீன், புழுப்பூச்சிகளை த் தின்னும். ஆனால யானை போன்றவற்றின் மூளைகளைத் தின்னுவதாக கம்பன் சொல்லும் காட்சியையும் அவன் கண்ணால் கண்டான் போலும்.

 

கம்பராமாயண,  யுத்த காண்ட, நாக பாஸப் படலத்தில் சொல்கிறான்:

 

போர் புரியும் கரடிகள், மலைகளைத் தாக்கி அழிக்கும் இடிகள் போலத் தொடர்ந்து சென்று, மதம் பொழியும் யானைகளின் தலைகளைப் பிளந்தன. அதனால் வெளிப்பட்ட மூளைகளை இனிமையாகத் தின்று பசி என்னும் தீயை அனைத்தன.

 

அடர்ந்தன கிரிகளை அசனி ஏறு எனத்

 

தொடர்ந்தன மழை பொழி தும்பிக் கும்பங்கள்

 

இடந்தன மூளைகள் இனிதின் உண்டன

 

கடந்தன பசித் தழல் கரடி காதுவ

 

இப்படிப் போகிற போக்கில் வன விலங்குகள் பற்றியும் கம்பன் சொல்லுவது ராமாயணச் சுவையைக் கூட்டுகிறது.

வாழ்க தமிழ்! வளர்க கம்பன் புகழ்!!

 

–சுபம், சுபம்—

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

ஜாகர்த்தா மியூஸியத்தில் உள்ள ஸம்ஸ்க்ருத கல்வெட்டு. 

இந்தோநேஷிய பாஷா லிபியில் உளது.

 

Written by London swaminathan

Date: 11 JUNE 2018

Time uploaded in London –  8-25 am  (British Summer Time)

Post No. 5098

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

கம்போடியாவில் பிராமணர்களுக்குக் கோவில்! (Post No.5098)

 

பிராஹ்மணத் தலைவர்களுக்கு கம்போடிய மன்னர்கள் கோவில்கள் கட்டிய சுவையான தகவல்கள் கல்வெட்டுகள் மூலம் தெரிய வருகின்றன.

 

கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம், பர்மா, இந்தோநேஷியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வெட்டுகளில் அங்குள்ள பிராஹ்மணர்களின் செல்வாக்கு பற்றிய அரிய பெரிய தகவல்கள் கிடைக்கின்றன. யசோவர்மன் (கி.பி.889) என்னும் கம்போடிய மன்னனின் கல்வெட்டு பின்வரும் தகவலை அளிக்கிறது:-

 

‘மன்னன், கடமைகளில் தவறாதவன்; கோடி ஹோமமும் பல யக்ஞங்களும் செய்தான்; பிராஹ்மணர்களுக்கு தங்கமும் நகைகளும் வாரி வழங்கினான்’ — என்று கல்வெட்டு கூறுகிறது. அவனது காலத்தில் சைவ சமயம் தழைத்தோங்கியது.

 

 

கம்போடியாவில் ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பிராஹ்மணர்கள் பிரசன்னமாயிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. இந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்த பிராஹ்மணர் எண்ணிக்கையால் அவர்களின் ஜனத்தொகை அதிகரித்தது.

 

மன்னனையே இறைவனாக கருதி கோவில் கட்டுவது இரண்டாவது ஜயவர்மன் (கி.பி.802) காலத்தில் ஆரம்பித்தது. அதற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அந்த வழக்கம் வளர்ந்தது. அங்கோர்வட் காலத்தில் வைஷ்ணவ மதம் செழித்தது.

 

பிராஹ்மணர்களின் செல்வாக்கு வளர, வளர மன்னர்களுக்கும் மேலாக அவர்கள் புகழ் பரவியது. குறிப்பாக சிவ கைவல்யர் என்னும் குடும்பத்தினர் பரம்பரையாக மன்னர்களுக்குப் புரோஹிதர்களாக விளங்கினர்.

 

நமது நாட்டில் பிரதம மந்திரிகள், முதல் மந்திரிகள், கவர்னர்கள் மாறினாலும் அவர்களிடம் வேலை பார்த்த சில அரசாங்க அதிகாரிகள் மற்றும் செயலர், டிரைவர், பியூன், சமையல்காரர் தொடர்ந்து வேலையில் நீட்டிப்பதால் அவர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது; அவர்களின் நீண்ட கால அனுபவம் பயன்படும். இதுபோல சில பிராஹ்மணக் குடும்பங்கள் பல    மன்னர்களை உருவாக்கின. அவர்களுடைய தயவு மன்னர்களுக்குத் தேவைப்பட்டது.

எகிப்திய மன்னன் அம்னோதேப்புக்கு (அமண தேவன்= ஸ்ரமண தேவன்)துருக்கி மன்னன் தசரதன் எழுதிய கடிதம்/ கல்வெட்டுக்யூனிபார்ம் லிபியில் உளது.

மேலும் அவர்களுடைய ஸம்ஸ்க்ருத அறிவு சட்டப் புத்தகங்களையும் வேத தர்மங்களையும் அறிய உதவியது. இதனால் வெறும் புரோகிதர் பதவியில் மட்டுமின்றி சட்ட ஆலோசகர்களாகவும், அமைச்சர்களாகவும் விளங்கினர். அங்கோர்வட் சிற்பங்களில் பிராஹ்மண ஆசிரியர் துரோணர், பிராஹ்மணராக மாறிய விஸ்வாமித்ரர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கோடஸ் (COEDES) என்னும் அறிஞர் செப்புகிறார்.

 

சிற்பங்களில் உயர்குடி மக்கள் உச்சுக் குடுமியுடனும் (தலையின் உச்சியில் தூக்கிக் கட்டிய குடுமி) CHINGON, தாழ்ந்த குல மக்கள் கீழே தொங்கும் தாழ் சடையுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சில ஊர்வல சிற்பங்களில் பிராஹ்மணர்கள் மட்டுமே அதைக் காண்பதாகவும் உள்ளன.

 

மன்னர்களுக்குத் தலை வணங்காத ஒரே இனம் பிராஹ்மணர்கள் என்பதாக சிற்பங்கள் காட்டும்; ஏனையோர் தாழ்ந்த தலையுடன் நிற்பர். இத இந்தியாவிலும் காணலாம். மன்னர்கள் இறைவனுக்கும் பிராஹ்மணர்களுக்கும் மட்டுமே தலை வணங்குவர், தலை தாழ்த்துவர் என்று மிகப் பழைய புற நானூற்றுப் பாடல்கள் போற்றுகின்றன.

 

தாய்லாந்து, கம்போடியாவில் புத்த மதம் ஆதிக்கம் பெற்றபோதும் பிராஹ்மணர்களுக்கே முதலிடம் தரப்பட்டது; தாய்லாந்தில் இன்று வரை இது நீடிக்கிறது.

 

கம்போடியாவில் பிராஹ்மணர்கள் க்ஷத்ரிய ஜாதியாருக்குப் பெண் கொடுத்து, பெண் எடுத்த செய்திகள்  உள. புராதன பிராஹ்மணர்களின் வழி வந்த பாகு (Bakus) என்போர் மன்னர் ஆட்சிக்கு வழி இல்லாத போது அரசு கட்டிலும் ஏறி முரசு கொட்டினர்.

 

அசோகர் கல்வெட்டுகளில் எப்படி புத்தமத ஸ்ரமணர்களுக்கும் முன்னர் பிராஹ்மண ஜாதி குறிப்பிடப்படுகிறதோ அதே போல பர்மா, தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளில் புத்த மதத்தினருக்கும் முன்னதாக பிராஹ்மண குருக்களே இடம் பெற்றனர்.

 

 

ஐயருக்கும் கோவில்கள்

சில பிராஹ்மணத் தலைவர்கள் “புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று கபிலர் என்னும் புலவரை சங்கத் தமிழ் நூல்கள் போற்றுவது போல ஒழுக்க சீலர்களாகவும், அறநெறி தவறா பெருந்தகைகளாகவும் இருந்த காரணத்தால் அவர்களுக்குக் கோவில்களும் எழுப்பப்பட்டன.

 

எட்டாவது ஜயவர்மன் காலத்தில் ஜயமங்களார்த்த என்ற பிராஹ்மண புரோகிதருக்கு கோவில் கட்டப்பட்டது. இதே போல வித்யாவிசத் என்பவருக்கும் கோவில் இருந்தது. சீன யாத்ரீகர்கள் பூணுல் அணிந்த பிராஹ்மணர்களைப் பார்த்ததை குறிப்பிடத் தவறவில்லை.

 

 

ஒன்பதாம் நூற்றாண்டு முதலாவது இந்திரவர்மன் கால அங்கோர்வட்டில் சிவ சோமன் என்ற பேரறிஞரைப் பற்றிக் குறிப்பிட்டு, அவர் சங்கரரிடம் வேதாந்தம் கற்றவர் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

பிராஹ்மணர்கள் கடல் கடந்து போக க்கூடாது என்று மநு தர்ம சாஸ்திரம் புகலும். பெண்கள் கடல் கடந்து போகக் கூடாது என்று தமிழ் தொல்காப்பியம் நுவலும். ஆயினும் பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு பலரும் சென்றதை கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். இலங்கையின் முதல் மன்னனுக்கு – விஜயனுக்கு— அரச குல மங்கைகள் தேவைப்பட்டதால் மதுரை பாண்டிய நாட்டிலிருந்து பெண்கள் அனுப்பப்பட்டனர்; அவர்களில் ஷத்ரிய குல நங்கைகளும் அமைச்சர்களின் பிராஹ்மண குல மங்கைகளும் அடக்கம்.

 

இதே போல தென் கிழக்காசிய நாடுகளில் இந்தியப் பிராஹ்மணர்களின் வருகை பற்றிப் பகரும்  கல்வெட்டுகளும் உள.

 

1500 ஆண்டுகளுக்குக் கொடிகட்டிப் பறந்த  தென் கிழக்காஸிய நாடுகளின் இந்து சாம்ராஜ்யத்துக்கு விதை ஊன்றியவர்களும் அகஸ்த்யர், கௌண்டின்யர் என்ற இரண்டு பிராஹ்மணர்களே.

 

கம்போடியாவில் மட்டுமின்றி பர்மாவிலுள்ள பகான், தாய்லாந்திலுள்ள சுகோதை நகர அரச வம்சங்களுக்கும் பிராஹ்மண புரோகிதர்களே அபிஷேக ஆராதனைகளை செய்துவைத்தனர். அவர்களுக்குப் பின்னர் புத்த குருமார்கள் வந்தனர். பிராஹ்மண குருக்களை வேலைக்கு எடுத்தபோதே அவர்களுக்கு ஸம்ஸ்க்ருத நூல் அறிவோடு பௌத்த மத ஸம்ப்ரதாயங்களும் தெரிய வேண்டும் என்று புதிய தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.

 

சம்பா என்று அழைக்கபட்ட வியட்நாமில் பிராஹ்மணர் நிலை தாழ்ந்த அளவுக்கு ஏனைய நாடுகளில் தாழவில்லை. சம்பா தேசத்து போ நகர கல்வெட்டில் பிராஹ்மணர்களும் மன்னர் காலடியில் விழுந்து வணங்கியதாக எழுதப்பட்டுள்ளத்து. இத்தகைய  கல்வெட்டு வாசகத்தை இந்தியாவிலோ வேறு எங்கோ காண முடியாது.

 

தாய்லாந்தில்

தர்மராஜ (1361) என்ற மன்னன் வேத சாஸ்திர நூல்களிலும் வான சாஸ்திரத்திலும் வல்லவன் என்று ஒரு கல்வெட்டு விளம்பும். தர்மராஜ அசோக (1510) என்ற மன்னன் இந்து மதத்தையும் புத்தமததையும் ஒரு சேர ஆதரித்ததாக மற்றொரு கல்வெட்டு ;போற்றும். ஆக திருமாறன் என்னும் பாண்டிய மன்னன் வியட்நாமில் (சம்பா தேசம்) ஆளத் துவங்கியதிலிருந்து 1600-களில் முஸ்லீம் ஆக்ரமிப்பாளர்கள் வரும் வரை 1500 ஆண்டுகளுக்கு தென் கிழக்காஸிய நாடுகளில் இந்து மதம் கொடி பறந்தது என்பதைக் கல்வெட்டுகள் காட்டுகின்றன.

 

உலகிலேயே மிகப் பெரிய முஸ்லீம் நாடான இந்தொநேஷியாவில் பிராஹ்மணர் ஆதிக்கம் பற்றிய தகவல்கள் எனது நேற்றைய கட்டுரையில் (மூல வர்மன் கல்வெட்டு) உளது.

 

ஸம்ஸ்க்ருத ஆதிக்கத்தைப் பரவ விடாத  இலங்கையிலும் கூட ‘குண்ட மாலா’ என்ற ஸம்ஸ்க்ருத நூல் இயற்றப்பட்டதாக ஆராய்சியாளர் சிலர் உரைப்பர்.

-சுபம்-

நரேந்திர மோடி 20 மணி நேர உழைப்பு ரகசியம்! (Post No.5097)

Written by S NAGARAJAN

 

Date: 11 JUNE 2018

 

Time uploaded in London –  7-15 am  (British Summer Time)

 

Post No. 5097

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

நரேந்திர மோடி நாளுக்கு 20 மணி நேரம் உழைப்பதன் ரகசியம்!

 

ச.நாகராஜன்

 

ரிபப்ளிக் டி.வியில் ஆர்னாப் கோஸ்வாமி வெள்ளியன்று (8-6-18) பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை மாவோயிஸ்டுகள் கொல்லச் சதி தீட்டும் கடிதத்தை வெளியிட்ட போது நாடே திடுக்கிட்டது.

 

பல கோடி ரூபாய் இதற்குத் தேவைப்படுகிறது என்றும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களையும் கட்சிகளையும் இதற்கு உதவி கோரி நாடலாம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வாக்கியத்தைக் காண்பித்து அந்த நிறுவனங்களும் கட்சிகளும் எவை எவை என்று கேட்டார் ஆர்னாப்.

நாடே அறியத் துடிக்கும் விஷயம் இது.

 

 

மாவோயிஸ்டுகளை இரக்கமின்றி நாட்டை விட்டுத் துரத்த வேண்டும் என்று அவர் கூறிய போது தேசமே ஆமாம் ஆமாம் என்று ஒரே குரலில் கூறியது.

ஹ்யூமன் ரைட்ஸ் என்ற பெயரில் அந்த இயக்கத்தில் இந்த வம்பு கோஷ்டிகள் புகுந்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றின் பெயரிலும் பெண்ணியக்கம் பெயரிலும் மனித உரிமைகள் பெயரிலும் உள்ளே நுழைந்து தேசத்தைத் துண்டாட நினைக்கும் தேசத் துரோகிகள் கடையில் ராஜீவ் காந்தி ஸ்டைலில் நரேந்திர மோடியைக் கொலை செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பதை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது.

 

 

அருண் ஜேட்லியின் நான்கு விதமான தேசத் துரோகிகளின் பட்டியலையும் இந்த டி.வி.நிகழ்ச்சி அறிமுகப் படுத்தியது.

சரி, நரேந்திர மோடி என்ன ‘பாவம்’ செய்தார் – இந்த தேசத் துரோகிகளின் பார்வையில் விழுவதற்கு.

பதிலை அனைவரும் அறிவோம்.

நாட்டிற்காக நாளுக்கு இருபது மணி நேரம் உழைக்கிறார் என்பது தான் பதில்.

 

அதாவது இருபத்து நான்கு மணி நேரத்தில் 83.88 சதவிகிதம் அவர் உழைக்கிறார்.

 

நாடு ஒன்றுபட்டு முன்னேறி விட்டால் நாசகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியாதே.

 

2

நரேந்திர மோடி லண்டனில் 18, ஏப்ரல், 2018 அன்று வெஸ்ட்மினிஸ்டர் சென்ட்ரல் ஹாலில் ‘பாரத் கி பாத் சப்கே சாத்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒருவர் மோடி அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார் இப்படி:

 

 

“ நீங்கள் ஒரு நாளைக்கு இருபது மணி நேரம் உழைக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி இதற்கான சக்தியும் உந்துதலும் கிடைக்கிறது?!”

 

அதற்கு உடனே மோடி அவர்கள் நகைச்சுவையாக பதில் அளித்தார்:” நான் ஒரு நாளைக்கு 2 முதல் 3 கிலோ வரை திட்டலையும் ஏசலையும் ஜீரணிப்பதால்!”

பின்னர் அவர் கேள்விக்கான பதிலைக் கூறலானார்:

‘அவன் ஒரு பாரமல்ல; அவன் எனது சகோதரன்’ என்ற கதையை முதலில் கூறினார்.

 

 

ஒரு இளம் பெண் அவளது சின்னத் தம்பியை தூக்கி வைத்துக் கொண்டு மலையின் மீது தினமும் ஏறிக் கொண்டிருந்தாள். ஒரு சந்யாசி அவளைப் பார்த்து,” அவனைத் தூக்கிக் கொண்டு மலை மீது ஏறுகிறாயே, உனக்குக் களைப்பாக இல்லையா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்த இளம் பெண் பதில் சொன்னாள்: “அவன் எனது தம்பி.”

 

சந்யாசி கேட்டார்:”அது எனக்குத் தெரியும். ஆனால் தினந்தோறும் அவனைச் சுமந்து மலை மீது ஏறுவது சிரமமாகத் தோன்றவில்லையா?”

 

ஒவ்வொரு முறை சந்யாசி இப்படிக் கேட்கும் போதும் அந்த இளம் பெண் கூறிய பதில்: “அவன் எனது தம்பி.”

கடைசியாக ஒரு நாள் முத்தாய்ப்பாக அவள் சந்யாசியிடம் கூறினாள் : “எனது தம்பியைத் தூக்கிக் கொண்டு போவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. சுமையாகத் தோன்றவில்லை.”

மோடி கதையைக் கூறி விட்டுத் தொடர்ந்தார் : “அந்தப் பெண் போல தேசத்திற்காகவும் எனது சகோதர சகோதரிகளான 125 கோடி பேருக்காகவும்  உழைக்கும் போது எனக்கு களைப்பே தோன்றவில்லை.”

 

 

உண்மையான அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் கூடிய ஒரு சிறந்த தேசத் தொண்டனின் பதில் இது.

இப்படிப்பட்ட தேசபக்தனை மாவோயிஸ்டுகளும் “ஒத்த மனமுடைய” நிறுவனங்களும் கட்சிகளும் விரும்பவில்லை; விரும்பாது என்பது நிதர்சனமான உண்மை.

 

ராஜீவ் காந்தி ஸ்டைலில் என்றால் தற்கொலைப் படையை தயார் செய்ய வேண்டும் அதற்காக பல கோடி ரூபாய்களும் ஏராளமான ஆயுத தளவாடங்களும் தேவை என்று கடிதம் குறிப்பிடுவதில் ஆச்சரியம் இல்லை.

 

தேசம் இந்த துரோகிகளால் ஒரு இளம் பிரதமரை இழந்தது போதும்.

இவர்களை இனம் கண்டு, கண்டு பிடித்து உடனடியாக நாடு கடத்த வேண்டும்.

 

ஜனநாயகத்தின் பெயரால் இந்த தேசத் துரோகிகள் தேசத்தைப் பிரிக்கும் எதை வேண்டுமானாலும் கூறிக் கொண்டு திரியலாம் என்று நினைத்தால் அதற்கு இந்திய மக்களின் பதில்”

“அது நடக்காது, ‘தோழா’! அதற்கு முன் உன் பாவச் சுமையால் நீயே அழிவாய்!” என்பது தான்!

 

ஜனநாயக சக்திகள் ஒன்று சேர வேண்டிய தருணம் இந்திய வரலாற்றில் இதுவே தான்!

 

சேர்வோம்; வெல்வோம்!

***

அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

Picture of Mulavarman Inscription in Jakarata Museum

 

Written by London swaminathan

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  18-59  (British Summer Time)

 

Post No. 5096

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

அடர்ந்த காட்டுக்குள் மூலவர்மன் கல்வெட்டு (Post No.5096)

இந்தோநேஷியா என்பது உலகிலேயே பெரிய முஸ்லீம் நாடு. அந்த நாட்டின் ஒரு பகுதியான போர்னியோ (BORNEO) தீவு உலகில் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று. அதில் அடர்ந்த மழை வனக்காடுகள் (RAIN FORESTS) உள்ளன. அந்த காட்டுக்குள் இது வரை மனிதர்கள் காலடியே பட்டதில்லை—இது கன்னி கழியாத காடுகள் (VIRGIN FORESTS) என்று உள்ளே நுழைந்த ஆராய்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது சில சம்ஸ்ருதக் கல்வெட்டுகள்!

இதெல்லாம் நடந்து நூறு ஆண்டுகள் ஆயிருக்கும்; ஆயினும் இக் கல்வெட்டுகளின் பெருமையை இப்பொழுதுதான் உலகம் உணரத்  துவங்கியுள்ளது.

 

1950-ஆம் ஆண்டுகளில் காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் நடத்திய சொற்பொழிவுகளில் இது பற்றிய அபூர்வ விஷயங்களைத் தொட்டுக் காட்டினார். ஆயினும் முழு விவரங்கள் கிடைக்கவில்லை. ஏனெனில் அவர் நடத்தியது வரலாற்றுச் சொற்பொழிவு அல்ல. அது சமயச் சொற்பொழிவு.

 

அடர்ந்த காட்டுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது  ஏழு யூப ஸ்தம்பங்களாகும். மன்னர்கள் யாக யக்ஞங்கள் செய்கையில் பிராஹ்மணர்கள் இப்படி யூப ஸ்தம்பங்களை நட்டு அதில் மன்னன் பெருமை, அவர் அளித்த தான தருமங்களைச் சொல்லுவது மரபு.

 

யூப நெடுந்தூண், வேள்வித்தூண் எனபன சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகிறது. முது குடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் அஸ்வமேதம் முதலிய யாகங்களைச் செய்தான்; கரிகால் சோழன் பருந்து வடிவ யாக குண்டங்கள் செய்து யாகம் செய்தான். சோழ மன்னன் பெருநற்கிள்ளி ராஜ சூய யாகம் செய்தான். சேர மன்னன் ஒருவன் பார்ப்பனீயப் புலவரின் வேண்டுகோளுக்கிணங்க பத்து வேள்விகள் இயற்றி பத்தாவது முறையில் பார்ப்பனப் புலவரையும் பார்ப்பனியையும் அப்படியே உடலுடன் சொர்க்கத்துக்கு அனுப்பி மாயமாய் மறைய வைத்தான் . இவை எல்லாம் புறநானூற்றிலும் பதிற்றுப் பத்திலும் உள. திருவள்ளுவரும் திருக்குறளில் யாக யக்ஞங்களைப் புகழ்ந்து தள்ளுகிறார். ஆக தமிழர்கள் மிகப்  பழைய புறநானூற்றுப் பாடலில் யூபம் என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துவதால் தமிழர்களுக்கு இதெல்லாம் அத்துபடி.

Dasatatha’s Letter to Egyptian King Amenotep (Sramana Deva) in Cuneiform script

அது மட்டுமல்ல காளிதாசனும் பாண்டிய மன்னனை அறிமுகப்படுத்தும் போது அவன் யாகம் செய்து குளித்த ஆடையுடன் எப்போதும் இருப்பவன் என்று பெருமையாகக் கூறுகிறான். அத்தோடு அகஸ்தியர் பெயரையும் சொல்கிறான். ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியன் செய்த யாகங்கள் உலகப் பிரசித்தம்.

 

இந்தோநேஷியாவின் காட்டுக்குள் கிடைத்த மன்னன் 1700 ஆண்டுகளுக்கு முன்னர்– சங்க காலத்தை ஒட்டி- வாழ்ந்தவன். பாண்டவர் போலவே ‘வர்மன்’ பட்டத்தை உடையவன் ஒருவே ளை தமிழனாக இருக்கலாம் என்பதற்காகத்தான் மேற்சொன்ன பீடிகை போட்டேன்.

 

 

மூலவர்மன் கல்வெட்டு அழகான ஸம்ஸ்க்ருத மொழியில் எழுதப்பட்டுள்ளது. அவைதான் இந்தோநேஷியாவில் கிடைத்த பழைய கல்வெட்டுகள். முதல் இரண்டு கல்வெட்டுகளில் மூலவர்மன், அவனது தந்தை அஸ்வவர்மன், அவனது தந்தை குண்டுங்கா (குண துங்கன் என்பது மருவியது போலும்!) ஆகியோர் சிறப்பு பட்டங்களோடு குறிப்பிடப்படுகின்றனர். பின்னர் யாகத்தில் பிராஹ்மணர்களுக்கு அவன் அளித்த தான தருமங்கள் சொல்லப்படுகின்றன; யாகத்தின் போது பிரதான யஜமானன் (யாக புருஷன்) இந்தத் தூணை நிறுவியதாகவும் உள்ளது.

மூன்றாவது கல்வெட்டில் எல்லோரும், மூலவர்மனின்  தான தருமங்களைக் கேளுங்கள்– அவன்  நிலங்கள், பசுமாடுகள், அற்புத மரம் (கற்பக வ்ருக்ஷம் அல்லது சோம லதை) பிராஹ்மணர்களுக்குத் தானம் செய்தான். இவ்வாறு பலவகை அறச் செயல்களைப் புரிந்ததற்காக இந்த யூபத் தூண்கள் நிறுவப்பட்டுள்ளன என்று பொறிக்கப்பட்டுள்ளது.

 

அருகிலுள்ள ஜாவா தீவில் இதே போல 1700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு பிராஹ்மணர்களுக்கு 1000 பசுக்கள் தானம் அளித்ததாக எழுதப்பட்டுள்ளது.

 

 

இதை வேறு இரண்டு கல்வெட்டுகளுடன் ஒப்பிட்டுக் காட்டுகிறேன்; கன்யாகுமரியில் உள்ள வீர ராஜேந்திரன் என்ற சோழர் கல்வெட்டு அவனது முன்னோன் ஒருவன் 40,000 பிராஹ்மணர்களை அழைத்து வந்து காவிரிக் கரையில் குடி அமர்த்தினான் என்கிறது. காவிரிக் கரையில் பிராஹ்மணர்கள் இல்லாத குறையைப் போக்க ஆர்யாவர்த்தத்தில் இருந்து 40,000 பிராஹ்மணர்களை அழை த்து வந்தான் என்று கோபிநாத ராவ் புத்தகத்தில் (1926) விளம்புகிறார்.

 

வியட்நாமில் கிடைத்த பழைய கல்வெட்டு ஸ்ரீ மாறன் என்பதாகும். இது 1800 ஆண்டுகளுக்கு முந்தையது. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் இது பற்றி எழுதினேன். திருமாறன் என்ற பாண்டியன் பெயரை ஸம்ஸ்க்ருதத்தில் எழுதுகையில் ஸ்ரீமாறன் ஆகும்.

 

 

ஆக வியட்நாம் முதல் இந்தோநேஷியாவரை ஆயிரம் ஸம்ஸ்க்ருத கல்வெட்டுகள் உள்ளன. ஒரு வரிக் கல்வெட்டிலிருந்து மிக மிக நீண்ட பாடல்கள் வரையுள்ள கல்வெட்டுகள் இவை.

 

இது தவிர சிலப்பதிகாரத்திலும் நமக்குச் சான்று உளது. எல்லோர் முன்னிலையிலும் இமயம் வென்ற செங்குட்டுவனை மாடல மறையோன் என்ற பிராஹ்மணன் குறை சொல்லுகிறான். “மன்னனே! போதும் போதும் நீ பெற்ற போர் வெற்றிகள்; போகும் வழிக்குப் புண்ணியம் தேடு; யாக யக்ஞங்களைச் செய்” என்கிறான். இப்படிக் கடிந்து கொண்ட பிராஹ்மணனை தண்டிக்காமல் எடைக்கு எடை தங்கம் கொடுத்து உடனே யாக யக்ஞங்கள் செய்ய உத்தவிட்டதாக இளங்கோ இயம்புவார்.

 

துருக்கி நாடு முதல் இந்தோநேஷியாவரை இப்படி ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் இருப்பதும் கோவலன் ஒரு பார்ப்பனப் பெண்ணின் ஸம்ஸ்க்ருத ஓலையைப் படித்ததாக சிலப்பதிகாரம் செப்புவதும் ஸம்ஸ்க்ருதத்தின் உலக வீச்சைக் காட்டுகிறது. அலெக்ஸாண்டர் போல மக்களைக் கொன்று குவித்து கிரேக்க மொழிக் கல்வெட்டுகளை நிறுவ வைத்ததைவிட அமைதியான கலாச்சார, வணிக வீச்சின் மூலம் உலகம் முழுதும் ஸம்ஸ்க்ருதத்தைப் பரவச் செய்தது மற்றொரு உலக அதிசயம் ஆகும். அது மட்டுமல்லாமல் கிரேக்க  மொழியில் ஹோமர்,  முதல் கிரேக்க நூலை எழுதுவதற்கு முன்னரே — அதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே– துருக்கியில் ஸம்ஸ்க்ருதப் பெயர்களும் குதிரை நூலும் இருப்பது உலக மஹா அதிசயம் ஆகும்.

 

–சுபம்–

 

Brahmin Power in South East Asian Countries- (Post No 5095)

Written by London swaminathan

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  9-46 am  (British Summer Time)

 

Post No. 5095

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

Brahmin Power in Cambodia ,Thailand Burma and Vietnam

(Campa)- Post No 5095

 

n Cambodia, Brahmins maintained powerful hierarchy for many centuries. They were well organised. They came there around fifth century and increased in number due to a constant flow of immigrants from India. During the reign of Yasovarman 889 CE, Saivism was predominant. We learn from the following inscription that they enjoyed a position similar to that which was theirs in India.

 

The king,well versed in kingly duties, performed Koti Homa and Yajnas, for which he gave the priest s magnificent presents of jewels, gold etc.

 

The cult of the Royal God, though founded by Jayavarman II, 802 CE, did not reach the heights of its development until two centuries after wards, and was especially associated with Vaishnavism and the temple of Angkor Wat. This cult led Brahmins enjoying even more exalted position . The priest hood became hereditary in the family of Sivakaivalya, who enjoyed immense power. This sacerdotal dynasty almost threw the royal dynasty into the shade. Brahmins were depicted on the reliefs of Angkor Wat and Coedes has identified Drona and Visvamitra amongst them. In one of the relief s which illustrates a royal procession, it is interesting that the Brahmins were the only onlookers who do not prostrate before the king, as was also the case in India. In the reliefs aristocracy wear the chignon and the lower castes short hair.

One remarkable sign of the power of the Brahmins was that they had even marriage alliances with the princesses. Bakus, the descendants of ancient Brahmins, chose one from them to succeed if the royal family failed.

 

As early as the reign of Jayavarman V, Buddhism and Hinduism got mixed and the Brahmin purohitas were expected to be well versed in Buddhist prayers and rites. But the Brahmin s of Cambodia never sank so low as did those of Campa (modern Vietnam). In the Po Nagar inscription of Campa, we read that the feet of the king were worshiped,even by Brahmins and priests.

 

 

In Thailand

 

Though the religion of Thailand was Buddhism the royalty recruited Brahmin s from Cambodia. For centuries Brahmin s enjoyed quite an important position.

The famous inscription dated about 1361 CE of King Dharma Raja mentioned the kings knowledge of the Vedas and of astronomy. The inscription on the Siva statue found at Kamben bejra recorded the desire of King Dharmasokaraja,(1510 CE), to exalt both Hinduism and Buddhism.

 

Brahmins had access to sacred books and law books and so they served the royal s in various capacities. The epigraph ic records demonstrate the powerful influence of purohitas in Burma and Cambodia, where they often served under successive rulers and provided continuity to the government in troubled times. In ninth century Angkor, for instance, Indravarman I had the service of Sivasoma, who studied VedantA under Shankara.

 

Indian Brahmins are occasionally mentioned in the south East Asian inscription s and one wondered how Brahmins travelled abroad when Manu and other lawmakers ban foreign travel for Brahmins. These prohibitions may have had little practical effect, and would n of have deterred ambitious men lured by the hope of honour and fortune in a distant land. In fact they were invited by some rulers.

 

Not only in the Hindu courts in Cambodia but also in the courts of Pagan in Burma and Sukothai in Thailand, the Brahmins conducted great ceremonies,such as the Royal Consecration and-functioned as ministers and counsellors . The grand ceremony in Pagan required the services of numerous Brahmins.

 

In Cambodia Jayavarman VIII built a temple for the scholar priest Jayamangalaartha and likewise for the Brahmin Vidyesavid. Who became Royal sacrificial Priest. The Chinese visitor Chou Ta kuan refers to the presence of Brahmins wearing sacred thread.

 

We have evidence of use of Sanskrit even in Sri Lanka. Thirteenth century work Kundamala was composed in Anuradhapura in Sri Lanka, according to some scholars.

 

Source: Source books- From Turfan to Ajanta, Edited by Eli Franco and Monika Zin, Lumbini International Research Institute, Nepal;2010

 

–Subham–

புல்வெளியில் நடப்பதால் ஏற்படும் பலன்கள்! (Post No.5094)

Written by S NAGARAJAN

 

Date: 10 JUNE 2018

 

Time uploaded in London –  7-14 am  (British Summer Time)

 

Post No. 5094

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஆரோக்கிய மாத இதழ் ஹெல்த்கேர் இதழ். இதில் ஜூன் 2018 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் நற்பலன்கள்!

ச.நாகராஜன்

 

காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பது மிகப் பெரும் நற்பலன்களைத் தரும். இப்படி நடப்பதை ‘எர்த்திங்’ ( Earthing) என்று சொல்கின்றனர்.

ஆரோக்கிய மேம்பாட்டைத் தரும் இந்த நடைப் பயிற்சி செலவில்லாதது; எல்லோரும் எளிதில் செய்யக் கூடியது!

பூமியானது பல அரிய ஆற்றல்களைக் கொண்டது. இத்துடன் கால் மூலம் நம்மை இணைத்துத் தொடர்பு கொண்டால் மனம், உடல், ஆன்மா ஆகிய அனைத்தும் அளப்பரிய பயனைப் பெறும்.

மனதை ஒருமுகப்படுத்தும்!

வெறும் காலுடன் நடப்பது கீழ்க்கண்ட பலன்களைத் தரும்:

வெறும் காலுடன் அதிகாலை நேரத்தில் புல்வெளி மீது நடக்கும் போது நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டி வரும். கூழாங்கற்கள், முள், கூரிய கற்கள் இல்லாத பகுதியாக நீங்கள் செல்ல வேண்டி வரும்.

அப்போது உங்கள் கவனமும் ஒருமுகப்படுத்தும் தன்மையும் அதிகரிக்கும். உள்மனதுடன் இடைவிடாது நடத்தும் போர்களும், அனாவசிய அரட்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். மனம் அமைதி பெறும். மனதிற்கு – அது ஏங்கும் – நல்ல ஓய்வைத் தரும். கவன சக்தி அதிகரிக்கும்!

நடைப்பயிற்சி யோகம்

வெறுங் காலுடன் நடக்கும் போது தசைகள், தசை நாண், வடம், கணுக்கால் மற்றும் இதர காலின் ஆதாரப் பகுதிகள் (the muscles, ligaments and tendons in the feet, ankles and calves stretch and get strengthened)  ஆகியவை நீட்சிக்கு உட்படுகின்றன. அத்துடன் உங்கள் தோற்ற அமைவை –posture ஐ – அது நிலைப்படுத்தும்.

வர்மப்புள்ளிகள் தரும் சக்தி (Reflexology)

உடலில் அநேக வர்மப் புள்ளிகள் (reflexology points) உண்டு. புல்வெளியில் நடப்பதை தினசரிப் பழக்கமாக ஆக்கிக் கொண்டால் உடல் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதை அனுபவ பூர்வமாக உணர முடியும். ஒரு 30 நிமிட நடையிலேயே ஆரோக்கிய மேம்பாட்டை அறியமுடியும் என்பது அனுபவஸ்தர்களின் கூற்று.

மன அழுத்தம் போகும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் சுத்தமான தூய காற்றை சுவாசத்தில் உள்ளிழுக்கிறீர்கள். சுற்றி வர பறவைகள் இருக்க, செடி கொடிகள் மலர்கள் சூழ்ந்திருக்க ஒரு அமைதியான சூழ்நிலையை நீங்கள் அனுபவிக்க முடியும். மன அழுத்தம், மன இறுக்கம் எல்லாம் போக இது வழி வகுக்கும். இன்றையப் பொழுதில் வாழ்வது (living in the present moment) என்ற அரிய பழக்கம் வரும்.

கவலையைக் குறைக்கும்

புல்வெளியில் தினமும் காலையில் நடந்தால் கவலைகள் 62 சதவிகிதம் குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நல்ல ஹார்மோன்கள் உடலில் இருப்பதை உணர்த்துகின்றன. எண்டார்பின்களின் அளவும் அதிகரிக்கிறது.

நல்ல தூக்கத்தைத் தரும்

வெறும் காலுடன் புல்வெளியில் நடப்பதானது இன்சோம்னியா மற்றும் தூக்க வியாதிகளைப் போக்கி நல்ல தூக்கத்தைத் தருவதை சிகிச்சை நிலைய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

  • இயற்கையுடன் இணைவீ ர்கள்

நீங்கள் இயற்கை அன்னையுடன் உங்களை இணைத்துக் கொள்ள முடிகிறது. குளுமையான பனித்துளி நிறைந்த புல்லை ஸ்பரிசிப்பதன் மூலமும் மலர்களின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலமும் புலர்காலைப் பொழுதில் எழும் உதய சூரியனின் இனிய கிரணங்களை உடலில் படவைப்பதன் மூலமும் மரங்களினூடே வரும் காற்றை அனுபவிப்பதன் மூலமும் இயற்கையை நன்கு அனுபவித்து ஆனந்திக்க முடிகிறது; அமைதியைப் பெற முடிகிறது.

பூமியின் சக்தியுடன் இணைப்பு

பூமி அபாரமான காந்த புலத்தைக் கொண்டுள்ளது. இத்துடன் வெறுங்காலுடன் நடப்பதால் நீங்கள் இணைக்கப்படுகிறீர்கள். இது  காந்த மற்றும் மின் புலங்களுடன் நீங்கள் இணைக்கப்பட ஏதுவாகிறது. உடலிலிருந்து பூமிக்கும் பூமியிலிருந்து உடலுக்குமான ஆற்றல் பரிமாற்றம் பல்வேறு நலன்களைப் பெற உதவுகிறது. இது உங்கள் உடலில் உள்ள நெகடிவ் எனர்ஜியை நீக்கி ஆரோக்கியத்தைத் தருகிறது.

கண் பார்வை கூர்மை பெறும்

புல்வெளியில் வெறுங்காலுடன் நடக்கும் போது உங்கள் கண் பார்வை மேம்படுகிறது. கால் உடலின் அனைத்துப் பாகங்களுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது. இது உங்கள் கண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடக்கும் போது உங்கள் முன்காலில் முதல் இரண்டாம் மூன்றாம் பகுதிகளில் அழுத்தம் தரும் போது இந்த ரெஃபெளக்ஸோலொஜி புள்ளிகளால் கண் பார்வை கூரியதாகிறது; தீர்க்கமாகிறது. இந்தப் புள்ளிகள் மசாஜ் செய்யப்படுவதால் கண்கள் நலம் பெறுகின்றன.

ஆக இப்போது உங்கள் அருகிலுள்ள புல்வெளியை நாடி நல்ல பயன்களைப் பெறலாம் இல்லையா?!

***