கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை (Post No.4643)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6–37 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4643

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

தமிழ் இன்பம்

கண்ணதாசனின் சம்ஸ்கிருதக் கவிதை

.நாகராஜன்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

1

கவியரசு கண்ணதாசன் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?

கேள்விகள் நியாயமானவை தான்.

ஆரம்ப காலத்தில் சேரக் கூடாதாரோடு சேர்ந்திருந்த காலத்தில் அவர் எழுதிய் கவிதை இது:

 

“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்

திணறுகிறான்! மயங்குகிறான்! வேற்று நாட்டுப்

பொத்தல்களைத் தமிழாக்கி விற்ப தற்குப்

புறப்பட்டோன், ஆதலினால் புலம்பு கின்றான்!

அத்தியிலே பூத்தம்லர் அனைய நாட்டில்

அழகுமொழி படைத்த மறைமலையைக் கண்டால்

சித்திரமும் தமிழ் பேசும்; திறமில் லாத

சிறுநரிதான் ஊளையிடும்; இட்டான் ஊளை!

வேரெடுத்த செம்மைமொழி தமிழல் லாமல்

வேறெது தான் தமிழாகும்! அத்திம் பேரும்

பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்

பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”

  • தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்

ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:

“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வ்டமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”

 

 

2

“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”

இதை விடச் சிறப்பாக இந்த இரு மொழிகளையும் பற்றி வேறு யார் தான் கூற முடியும்? என்னதான் கூற முடியும்!

இதைச் சொல்லி விட்டுச் சும்மா இருக்கவில்லை.

அவர் கூறுகிறார்:

“வடமொழி ஆழ்ந்த கருத்துக்கள் நிறைந்த ஒரு பொக்கிஷம். இரண்டு ஆண்டுகளாக நான் வடமொழியில் பயிற்சி பெற்று வருகிறேன்.”

இந்தப் பயிற்சிக்கு அவரது உற்ற நண்பர் ஒருவர் – ஆல் இந்தியா ரேடியோ அதிகாரி ஒருவர் – துணை புரிந்தார்.

இந்த வட மொழிப் பயிற்சி தமிழுக்குப் பெரிய நலனை அளித்தது.

 

3

ஆம், என்ன நலன்? சில பல நல்ல நூல்கள் வடமொழியிலிருந்து அவர்  மூலமாக தமிழாக்கம் செய்யப்பட்டு தமிழுக்குக் கிடைத்தது.

அவரது வார்த்தைகளில் அதைப் பார்ப்போம்;

“வடமொழியைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதன் காரணமாக இப்போது பகவத்கீதை விளக்கவுரையைக் கவிதையிலும் உரைநடையிலும் எழுதியுள்ளேன்.

 

 

பஜகோவிந்தத்தில் வரும் முப்பத்தோரு பாடல்களையும் விவேக சிந்தாமனியைப் போல சந்தக் கவிகளாக்கியுள்ளேன்.”

மிக அருமையான மொழி பெயர்ப்புக் கவிதைகளாக இவை அமைந்துள்ளதைப் படித்துப் பார்த்து உணரலாம்.

இது மட்டுமல்ல, கீத கோவிந்தத்தில் மனதைப் பறி கொடுத்த அவர் அதை, “கோபியர் கொஞ்சும் ரமணன்” என்று தமிழில் தந்தார்.

 

 

ஜெயதேவரின் அஷ்டபதி பற்றி அவர் தனது கவிதையில் கூறும் போது சொல்வது இது:

கண்ணனின் லீலையை அஷ்டபதி – என்னும்

காவிய மாக்கிய ஜெயதேவன்

எண்ணி உரைத்ததை நானுரைத்தேன் – அதில்

இன்னும் பலப்பல போதையுண்டு!

 

கோலமிகும் இந்தப் பாடலினை – கீத

கோவிந்தம் என்றும் உரைப்பார்கள்

ஞால மொழிகளில் வந்ததிது – கண்ணன்

ரஸ லீலாவினைச் சொல்வதிது!

 

மொத்தம் இருபத்துநான்கு வண்ணம் – அது

மோகச்சுவை ரஸம் ஊறும் கிண்ணம்

அத்தனையில் இங்கு ஒன்பதையே – நான்

அள்ளிக் கொடுத்தனன் என் மொழியில்

 

போஜன் மகன் ஜெய தேவனவன் – இங்கு

போதனை செய்தது ஞான ரஸம்!

ராஜன் பராசரர் வம்சமவன் – அந்த

ஞானியின் பாடலைப் பாடுகவே”

24 அஷ்டபதியில் ஒன்பதைத் தமிழாக்கினார் கவிஞர்.

 

 

4

வடமொழியின் சுவையையும் அருமையையும் உணர்ந்த கவிஞர் அதில் தோய்ந்தே போனார்.

அதன் விளைவு தான் அவர் எழுதிய சம்ஸ்கிருதக் கவிதை.

“இதோ எனக்குத் தெரிந்த வடமொழியில் நான் எழுதிய ஒரு பாடல்:” என்று கூறி விட்டு அவர் தரும் அற்புத சம்ஸ்கிருதக் கவிதை இது தான்:-

 

அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்

பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்

முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்

நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்

பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

 

ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்

சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்

ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்

கீத போதகம்  ஸ்ரீகிருஷ்ண மந்திரம்

எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை!

 

 

5

என்ன ஒரு வருத்தம் நமக்கெல்லாம்..? நமது கவியரசு இன்னும் ஒரு நாற்பது ஆண்டுகளாவது கூட வாழ்ந்திருக்கலாம்.

“ஆண்டவன் எனக்கு இன்னும் பத்தாண்டுகள் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பானேயானால், ஆங்கிலத்தில் ஒரு சிறு காவியமும், வடமொழியில் ஒரு சிறு காவியமும் எழுதுவேன்.” என்றார் அவர்.

ஆனால் கொடுத்து வைக்கவில்லை – தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும்.

என்றாலும் கூட இறைவன் அருளால் அவர் தமிழில் எழுதியுள்ள ஆன்மீக இந்துக் களஞ்சியம் நிச்சயம் ஒரு அற்புத ஞான  ஓவியமே.

அதைப் படித்து அவரது மேன்மையைத் தெரிந்து கொள்ளலாம்; அப்போது இந்து மதச் சிறப்பும் தானாகவே தெரிய வரும்.

 

 

 

ஆதாரம் :

  1. முதல் பக்கம் – கல்கியில் வந்த கட்டுரை – தலைப்பு “மொழி வெறுப்பு – விழி இழப்பு”

2.கோபியர் கொஞ்சும் ரமணன் – கண்ணதாசன் மாத இதழ் ஜனவரி 1978

3.கண்ணதாசன் கவிதைகள் – முதல் இரண்டு தொகுதிகள்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின் பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

பாரதி போற்றி ஆயிரம் – 32 (Post No.4642)

Date: 21 JANUARY 2018

 

Time uploaded in London- 6-12 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4642

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

பாரதி போற்றி ஆயிரம் – 32

  பாடல்கள் 180 முதல் 187

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும் (தொடர்ச்சி)

 

“காதலி னாலுயிர் தோன்றும் – இங்கு

     காதலி னாலுயிர் வீ ரத்தி லேறும்

காதலி னாலறி வெய்தும் – இங்கு

    காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்!

 

பாரதி சொன்னத னாலே – காதல்

    பாட்டர்கள்  நெஞ்சிலும் ஏறுந் தன் னாலே!

பாரதி தாசனும் சொன்னார் – எனின்

    பாரதி சொன்னதன் பின்பவர் சொன்னார்!

 

பிள்ளைக் கனியினைக் காட்டி – இன்பம்

   பெற்றவன் மற்றவர் பெற்றிடத் தந்தான்!

வெள்ளை மனத்தொரு பெண்ணின் – நெஞ்சில்

    வீ ழ்ந்தவன் நமையும் வீ ழ்ந்திடச் செய்தான்!

 

கற்பனை வாழ்விது மாயம் – எனக்

    காட்டிய சாமிகள் சாத்திரச் சாயம்

விற்பனன் பாரதி சொல்லில் – கெட

   வீ ழ்வது தான் அவன் காவிய மாயம்!

 

நிற்பது ஊர்வது யாவும் – இந்த

   நீணிலத் துள்ளநல் லின்பங்கள் யாவும்

அற்புதச் சிந்தனை யாவும் – நிலை

    ஆவதில்லை என்ற சூதரைக் கொண்டா!

 

சோலை மரங்க ளனைத்தும் –தினம்

    தோன்றுவ தேயொரு விதையினி றென்றால்

சோலைகள் பொய்யென லாமோ – இதைச்

    சொல்லொடு சேர்ப்பவர் மூடர்க ளன்றோ?

 

“பெண்ணுக்கு ஞானத்தை வைத்தன் – புவி

    பேணி வளர்த்திடு மீசன்!

மண்ணுக் குள்ளேசில மூடர் – நல்ல –

    மாத ரறிவைக் கெடுத்தார்!

 

எண்ணித் துடித்தவன் சொன்னான் – “கண்கள்

    இரண்டினி லொன்றைக் கெடுத்திட லாமோ?

பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்

    பேதமை யற்றிடும்! ஆம்; – இது உண்மை!

(அடுத்த பகுதியுடன் இக்கவிதை முடியும்)

 

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

 

 

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 18-13

 

 

 

Post No. 4641

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

அவர் சொன்னாரா? இவர் சொன்னாரா? எவர் சொன்னார்? QUIZ (Post No.4641)

  1. வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய்

 

 

  1. அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி

 

  1. பால்புரை பிறை நுதற் பொலிந்த சென்னி

நீலமணிமிடற்று ஒருவன் போல

மன்னுக — பெரும!

 

 

 

  1. பொதியில் ஆயினும், இமயம் ஆயினும்

பதி எழு அறியாப் பழங்குடி கெழீஇய

பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும்

 

  1. எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி

வந்து வழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்

 

  1. தன்னை அடைந்தார்வினை தீர்ப்பதன்றோ

தலையாயவர் தங்கடன் ஆவதுதான்

 

  1. அருள்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா

அருள்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே

 

  1. வாதக்கால் ஆம்தமக்கு; மைத்துனர்க்கு நீரிழிவு ஆம்;

பேதப் பெருவயிறு ஆம் பிள்ளைதனக்கு!– ஓதக்கேள்!

வந்தவினை தீர்க்க வகை அறியார் வேளூரர்

எந்தவினை தீர்ப்பார் இவர்?

 

  1. ஆரிய பூமியில் நாரியரும் நர

சூரியரும் சொலும் வீரிய வாசகம்

வந்தே மாதரம்- ஜய வந்தே மாதரம்

 

  1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

 

  1. எங்கெங்கும் காணும் சக்தியடா – தம்பி

ஏழுகடல் அவள் வண்ணமடா

 

 

  (தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்மற்றவர்கள் எழுதியதைஅதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்அதிகம் எழுதுவர்ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்தமிழ் வாழும்!)

ANSWERS

 

1.காளமேகம்,  தனிப்பாடல்கள், 2. கம்பன், கம்ப ராமாயணம்     3. சங்க கால அவ்வையார் ,புறநானூறு, 4. இளங்கோ, சிலப்பதிகாரம்,      5.பெரியாழ்வார் திருமொழி, திவ்யப் பிரபந்தம், 6.அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. திருமூலர் எழுதிய திருமந்திரம், 8.காளமேகம்,  தனிப்பாடல்கள், 9.பாரதி, பாரதியார் பாடல்கள், 10.திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 11.பாரதிதாசன் எழுதிய முதல் பாடல், பாரதியார் எழுதச் சொன்னவுடன் எழுதிய கவிதை

 

 

 

UGLY GIRL IS OK- CHANAKYA (Post No.4640)

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 16-26

 

 

 

Post No. 4640

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

We all know why Chankaya conspired to throw the mighty Nanda dynasty. I already gave the story how he was insulted for being ugly. so no wonder Chanakya gives the following advice:

 

“A wise man should marry a girl of a good family, though she be ugly, and not the beautiful one (the daughter) of a lowly family. Marriage has to be in a matching family”-

chapter 1, sloka 14 of Chanakya Niti.

 

varayet kulajaam praaknjo virupaamapi kanyakaam

ruupavatiir wa niichasya vivaahah sadruse kule

 

xxx

in chapter 3, he says sukule yojayet kanyaam i.e one should marry a daughter in a good family

 

ONLY ONCE

Chanakya continues,”The kings speak but once, so do the learned men

Girls are given in marriage but once.

All these take place but once.”

sakrujjalpanti raajaanah sakrujjalpanti panditaah

sakrytkanyaah pradiiyante triinyetaani sakrut sakrut

chapter 4, sloka 11

 

xxx

 

A young woman for an old man is poison

vruddhasya tarunii visham- says in chapter 4.

xxx

 

WHO IS A GOOD WIFE?

Chanakya defines a good wife,

“That one is a good wife who is pure, efficient, devoted to husband, liked by him and is truthful”.

saa bhaaryaa yaa suchirdakshaa saa bhaaryaa yaa pativrata

saa bharyaa yaa patipriitaa saa bharyaa satyavaadinii

chapter 4, sloka 13

 

xxx

If couple don’t quarrel, fortune comes!

 

“Where the fools are not adored,

where there is a good store of food grains,

where the couples do not quarrel,

fortune comes there herself”

muurkhaa yatra na puujyante dhaanyam yatra susanchitam

dampatyooh kalaho naasti tatra sriih svayamaagataa

chapter 3, sloka 21.

 

xxx

WIFE OF A FRIEND= MOTHER!

The wife of the king, the wife of the teacher, the wife of a friend, the mother of the wife (the mother in law), and one’s own mother are said to be mothers

Chanakya Niti, chapter 4, sloka 2o

 

xxx SUBHAM xxx

 

 

கலியுக முடிவு பற்றி சாணக்கியன் (Post No.4639)

 

Written by London Swaminathan 

 

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London 7-27 am

 

 

 

Post No. 4639

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

சாணக்கியன் அதி மேதாவி; பொருளாதார நிபுணன்; ராஜ தந்திரி; ஏழைப் பிராஹ்மணன்; கொஞ்சம் அவலட்சணமான, அழகில்லாத பிராஹ்மணன். நீதி நூலில் வல்லவன்; ஆயினும் அவன் தனக்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களையும் பிரஸ்தாபிப்பது வேடிக்கையாக உளது.

 

அவன் சொல்லுவதைப் படியுங்கள்:

கலௌ தச ஸஹஸ்ரேஷு ஹரிஸ்த்யஜதி மேதினீம்

ததர்த்தே ஜாஹ்னவீதோயம் ததர்த்தே க்ராமதேவதா.

சாணக்கிய நீதி, அத்தியாயம்11, ஸ்லோகம் 4

 

பொருள்

“கலியுகத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னர் ஹரி, பூமியில் இருந்து புறப்பட்டு விடுவார். அதில் பாதி காலத்துக்குள் கங்கை நீர் போய்விடும். அதில் பாதியில் கிராம தேவதை போய் விடுவாள்”.

 

இது, வியாக்கியானம் செய்ய கொஞ்சம் கடினமான ஸ்லோகம்.

நம்முடைய பஞ்சாங்கக் கணக்குப்படி கலியுகத்தின் ஆண்டு 5000-ஐ எப்போதோ தாண்டிவிட்டது. கிருஷ்ணரும் அதற்கு முன்னரே வேடனின் வில்லடி பட்டு இறந்து விட்டார்.

 

மேலும் கங்கை நதி இன்னும் பிரவாஹம் எடுத்து ஓடுகிறது. கிராம தேவதை வழிபாடும் உளது.

 

ஒரு வேளை சாணக்கியன், மனிதனின் ஆண்டு என்பதல்லாமல் தேவர்களின் ஆண்டு பற்றிச் சொல்லி இருந்தால், அதற்குப் பல காலம் இருக்கிறது. ‘ஹரி’ என்பதை இறைவனின் வழிபாடு மறையும் காலமென்று எடுத்தாலும் இன்னும் ஹரி வழிபாடும்/இறை வழிபாடும் இருக்கிறது. ஆகவே பொருள் சொல்லக் கடினமான ஸ்லோகம் இது. கங்கையின் புனிதமும், தூய்மையும் வேண்டுமானால் கெட்டுவிட்டது என்று சொல்லலாம்.

 

 

பிராமணர்கள் பற்றி சாணக்கியன்

இன்னும் ஒரு சுவையான செய்தி பிராஹ்மணர் பற்றியதாகும். பிராஹ்மணர் பற்றி லக்ஷ்மியின் வாய்மொழி மூலம் சில கருத்துக்களை முன்வைக்கிறார்.

 

இதோ ஸ்லோகத்தின் பொருள்

 

விஷ்ணுவிடம் லக்ஷ்மி செப்பியது யாது எனின்,

“என் பிராண நாதா; நான் பிராஹ்மணர்கள் மீது வெறுப்பு கொண்டு, அவர்கள் வீட்டுக்குப் போகாமல் எப்போதும் தவிர்த்து வருகிறேன்.ஏன் தெரியுமா? ஒரு கோபக்கார பிராஹ்மணன் என் தந்தையையே குடித்துவிட்டான் (அகஸ்த்ய மஹரிஷி கடல் குடித்த கதை) இன்னொரு மஹரிஷி என் புருஷனை காலால் உதைத்தார்.(பிருகு முனிவர் விஷ்ணுவைக் காலால்

உதைத்த கதை). மேலும் பிராமணர்கள் சிறு வயதிலிருந்தே

வாய்க்குள் ஸரஸ்வதியை வைத்துப் போற்றுகின்றனர். இதற்கெல்லாம் மேலாக என் வீட்டைக் கலைத்து சிவ பூஜை செய்கின்றனர் (லக்ஷ்மியின் வீடு தாமரை)

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15 ஸ்லோகம் 16

 

இது நிந்தா ஸ்துதி வகையினது. அதாவது இகழ்வது போல இறக்கி பின்னர் புகழ்வது ஆகும்.

 

இதில் பல விஷயங்களை அவர் தெரிவிக்க விரும்புகிறார்:

1.பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்காது. அதாவது லக்ஷ்மி இருக்கும் இடத்தில் ஸரஸ்வதி இருக்க மாட்டாள். பிராஹ்மணர்களும் கல்வியில் வல்ல புலவர்களும் வறுமையில் வாடியதை நாம் அறிவோம். நமது தந்தையர் காலத்தில் வாழ்ந்த உலக மஹா கவி பாரதியார் வறுமையில் உழன்றதை நாம் அறிவோம் ஆகையால் சாணக்கியன் சொன்னது புகழுரையே. மேலும் பிராஹ்மணர்கள் தாமரை மலரைக் கொண்டு சிவ பூஜை செய்வதையும் இது விதந்தோதுகிறது.

டேய், கிருஷ்ணா! நீ அதிர்ஷ்டக்காரண்டா?

 

இன்னொரு ஸ்லோகத்திலும் நிந்தா ஸ்துதியைக் காண்கிறோம்.

 

“ஒரு சிறு குன்றை கையில் உயர்த்திப் பிடித்தாய். இதனால் உன் பெயர் கோ வர்த்தனன் என்றாயிற்று. இதனால் மேல் உலகிலும் பூமியிலும் உன் புகழுரையை பாடுகின்றனர். நான் என் மார்பின் மீது சாய்த்து வைத்து உன்னைக் கொஞ்சுகிறேன். என்னை யாராவது புகழ்ந்தார்களா? எல்லா உலகங்களையும் தாங்கி நிற்கும் கேசவா! நீயே சொல். இனி நான் என்ன சொல்ல இருக்கிறது சிலருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது!

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 15, ஸ்லோகம் 16.

xxxx SUBHAM xxx

 

 

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ பெண்மணி! (Post No.4638)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6–47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4638

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல் வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

 

 

வைணவச் சிறப்பு

 

இராமானுஜரைச் சந்தித்து அருள் பெற்ற அபூர்வ, ஞானப் பெண்மணி!

 

ச.நாகராஜன்

 

1

இராமானுஜாசார்யார் கருணையே உருவாகக் கொண்ட பெரும் வைஷ்ணவ ஆசார்யர்.

 

எல்லோருக்கும் அருள் பாலிப்பவர்.

ஒரு சமயம் அவர் திருக்கோளூர் என்னும் புனிதப் பதியில் எழுந்தருளியிருந்தார்.

பக்தர்கள் திரளாக வந்து அவரை வணங்கி அவர் அருளைப் பெற்ற வண்ணம் இருந்தனர்.

 

அவர் அங்கிருப்பதைக் கேட்ட பலரும் திருக்கோளூர் நோக்கி வந்த வண்ணம் இருந்தனர்.

அப்போது ஒரு மாதரசி அந்த ஊரிலிருந்து கிளம்பப் போவதாகக் கூறினாள்.

 

அதைக் கேட்ட பலரும் வியந்தனர். அனைவரும் இங்கு வரும் போது நீங்கள் அயலூர் செல்லலாமா என்று அவர்கள் கேட்டனர்.

மாதரசியோ பிடிவாதமாக அங்கிருந்து செல்லப் போவதாக கூறினாள்.

உடனே அவளை ஆசார்யரிடம் அழைத்துச் சென்று விஷயத்தைக் கூறினர்.

 

2

கருணையே உருவான ஆசார்யர் அவளைப் புன்முறுவலோடு நோக்கினார். அவளது உயர்ந்த ஆன்ம நாட்டம் அவருக்குப் புரிந்தது. அவளது உயரிய ஆன்மிக பக்குவமும் அவருக்குத்த் தெரிந்து விட்டது.

அவரது முகக்குறிப்பு ‘சொல்’ என்றது.

மாதரசி, “ நான் திருக்கோளூரை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றாள்.

ஆசார்யர் கனிவோடு அவளை நோக்கி, “ திண்ணமென்னிளமான் புகுமூர் திருக்கோளூரே! அனைவரும் வந்து சேரும் இந்த புனிதத் தலத்தை விட்டு ஏன் வெளியே போக உத்தேசம்?” என்று வினவினார்.

 

 

அதற்கு அந்த மாதரசி பதில் அளித்தார் இப்படி:-

அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே,

அகமொழிந்து விட்டேனோ விதுரரைப் போலே,

தாய்க் கோலம் செய்தேனோ அநசூயையைப் போலே,

தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே,

மூன்று எழுத்து உரைத்தேனோ க்ஷத்ரபந்துவைப் போலே,

முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே,

அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே,

அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே,

‘அவன் தெய்வம்’ என்றேனோ மண்டோதரியைப் போலே,

‘அகம் வேத்மி’ என்றேனோ விசுவாமித்திரரைப் போலே

‘அநு யாத்ரம்’ செய்தேனோ அணிலங்களைப் போலே,

அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே,

ஆயுதங்கள் ஈந்தேனோ அகத்தியரைப் போலே,

கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே,

‘அனுப்பி வையும்’ என்றேனோ வசிஷ்டரைப் போலே,

மண் மலரை இட்டேனோ குருவநம்பியைப் போலே,

‘மூலம்’ என்றழைத்தேனோ கஜராஜனைப் போலே,

வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே,

வழியடிமை செய்தேனோ இலக்குவனைப் போலே,

அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாள் போலே,

இக்கரைக்கே சென்றேனோ விபீடணனைப் போலே,

இனியதொன்று வைத்தேனோ சபரியைப் போலே,

இங்குமுண்டு என்றேனோ பிரகலாதனைப் போலே,

இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே,

காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே,

கண்டு வந்தேனென்றேனோ திருவடியைப் போலே,

இரு கையும் விட்டேனோ திரௌபதையைப் போலே,

அனுகூலஞ் சொன்னேனோ மாலியவானைப் போலே,

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே,

தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியைப் போலே,

 

 

இப்படி நீண்டு சென்றது அவளது பட்டியல்! 81 பேரைச் சொல்லி அவள் முடித்தாள்.

 

பின்னர் இராமானுஜாசார்யரை நோக்கி அவள் பணிவுடன் கேட்டாள்: “ இப்படிப்பட்ட உயர்ந்தோர் வாழும் ஊர் அல்லவா திருக்கோளூர். இங்கிருக்க இப்படிப்பட்ட தகுதியல்லவோ வேண்டும். எனக்கு ஒன்று கூட இல்லையே! ஆகவே தான் நான் வெளியூர் செல்லப் போகிறேன்” என்றாள் அவள்.

இப்படி ஒரு பெரும் ஆன்ம ஞானப் பட்டியலை அறிந்து அதைத் தான் அடைய வேண்டும் என்ற அவாவுவது ஒன்றே பெரும் தகுதி அன்றோ – திருக்கோளூரில் வசிக்க!

அது போதாதா என்ன?

 

ஆசார்யரின் கருணை வெள்ளம் அவள் மீது  பொங்கி வழிந்தது.

புன்முறுவல் பூத்தார்.

“இவ்விடத்திலேயே இரு” என்று மட்டும் சொன்னார்.

அவர் சொன்ன வார்த்தையின் பொருளை உணர்ந்து கொண்ட அந்த மாதரசி அவரது அனுக்ரஹத்தைப் பெற்றதைப் பெரும் பேறாக எண்ணினாள்.

திருக்கோளூரிலேயே தங்கி விட்டாள்.

 

 

குறிப்பு : விசுவாமித்திரரின் நான் அறிவேன் என்பதற்குப் பொருள் – அஹம் வேத்மி.

அணில் கூடப் போனது அல்லவா, அது தான் அநு யாத்ரம் – ஒரு பயணத்தில் கூடவே செல்லுதல்!

மூலம் என்பது கஜேந்திரன் ஆதி மூலமே என்று அழைத்தது.

 

3

பெண்களுக்கு ஆன்ம ஞானம் லபிக்காது என்று சொல்வதெல்லாம் பொய்.

பேரருள் பெற்ற பெண்மணிகளைப் பற்றிய அருமையான சரித்திரங்கள் நமது இதிஹாஸ, புராணங்களில் உள்ளன.

இராமானுஜாசார்யரைச் சந்தித்த புனிதவதியின் சரித்திரமும் நவீன கால வரலாற்றில் ஒன்று.

இங்கு 81 வரிகளில் 30 மட்டுமே தரப்பட்டுள்ளன.

இதை ‘ வைணவம்’ என்ற கட்டுரையில் படித்தேன்.(கட்டுரையாளர் பெயர் ‘ஓரன்பன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

வெளியான இதழ் : பழைய தமிழ்ப் பத்திரிகை: “ஆனந்த போதினி”.

1914ஆம் ஆண்டில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பாடல் வெளியான இதழ் பிரபவ வருடம் ஐப்பசி மாதம் தொகுதி – 13 பகுதி – 4 பக்கம் 161  1927ஆம் வருடம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதியிட்ட இதழ்

 

(தமிழ் வாழ்க! தமிழை வளர்க்க நீங்கள் என்ன செய்யலாம்? மற்றவர்கள் எழுதியதை, அதை எழுதியவர் பெயரையும் அது வெளியான பிளாக் அல்லது பத்திரிக்கையின் பெயரையும் நீக்காமல்வெளியிடலாம்; இதனால் தமிழ் ஆர்வலர் பெருகுவர்; அதிகம் எழுதுவர்; ஸரஸ்வதி தேவியின்  பரிபூரண கடாக்ஷம் உங்கள் மீதும் குடும்பத்தின் மீதும் பொழியும்; தமிழ் வாழும்!)

***

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 31 (Post No.4637)

Date: 20 JANUARY 2018

 

Time uploaded in London- 6-31 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4637

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 31

  பாடல்கள் 174 முதல் 179

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

கண்ணதாசன் பாடல்கள்

 பாரதியும் பாரதிதாசனும்

 

களைமண்டிக் கிடந்த கனித்தமிழ் மொழியைக்

களைநீக்கி வடித்த கவிஞன் பாரதி!

களைநீக்கித் தந்த கழனியிற் பலவாய்

கனிக்காடு கண்டவர் பாரதிதாசன்!

இருள்சூழ்ந் திருந்த இவ்வைய முழுதும்

எழக்கதி ரான இளைஞன் பாரதி!

எழுந்த கதிர்முன் மானிடச் சாதிக்கு

இரத்தம் ஊட்டினர் பாரதி தாசன்!

ஆதி பத்திய வேரறுக் குந்திறன்

ஆக்கித் தந்த வல்லவன் பாரதி!

அந்த வேரை அறுத்தபின் மறுவேர்

அண்டாது காத்தவர் பாரதி தாசன்!

நிலைகுலைந் திருந்த நெஞ்சினைத் தூக்கி

நில்லெனச் சொன்ன வல்லோன் பாரதி!

நிற்க வைத்த நெஞ்சினைத் தட்டி

நிலைக்க வைத்தவர் பாரதி தாசன்!

எங்கள் நாடுஎங்கள் மொழியென

இயம்புந் திறனைத் தந்தவன் பாரதி!

இயம்ப மறுத்து ஏளனம் செய்தோர்

எலும்பை முறித்தவர் பாரதி தாசன்!

முன்னவர் சொன்ன பண்பா டனைத்தும்

முறையாய்த் தந்த மூத்தவன் பாரதி!

முறையாய்த் தந்ததை வகைவகை யாக்கி

முளைக்க விட்டவர் பாரதி தாசன்!

செந்தமிழ் மலரின் தேனுண்ண வாசலைத்

திறந்து விட்ட தலைவன் பாரதி!

திறந்த வாசலின் வழிப்புறம் மாடுகள்

செல்லாது காத்தவர் பாரதி தாசன்!

வகுத்தவன் முன்னோன்; காத்தவன் பின்னோன்!

வாழும் தமிழன் காவலர் இவர்கள்!

 

(வேறு)

 

பாருக்குள் ளேசம தர்மமும்ஒன்றிப்

      பற்றுஞ்ச கோதரத் தன்மையும்சொல்லி

யாருக்கும் தீமைசெய் யாமலேஎன்றும்

      அன்பு கொளுந்திறந் தந்தவன் முன்னோன்!

 

 

உண்மையின் பேர்தெய்ம் என்போம்அன்றி 

       ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்

உண்மைகள் வேதங்கள் என்போம்பிறி(து)

      உள்ளமறைகள் கதையெனக் கண்டோம்!

 

 

கடலினைத் தாவும் குரங்கும்வெங்

       கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்

வடமலை தாழ்ந்தத னாலேதெற்கில்

      வந்து சமன்செயும் குட்டை முனியும்

 

நதியினுள் ளேமுழு கிப்போய்அங்கு

       நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுறவே மணம் செய்ததிறல்

       வீமனும் கற்பனைஎன்றவன் முன்னோன்!

 

அன்னவன் கைகளிற் பட்டால்பிள்ளை

       அழுதகண் ணீரிலும் உதிரங் கொதிக்கும்

கன்னியர் நன்னெறி வீழமறம்

       காட்டு பவர்க்கவன் காட்டு விலங்காம்!

                         (நீண்ட கவிதை தொடரும்)

 

கவிஞர் கண்ணதாசன்: கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்

***

WHY DOESN’T LAKSHMI LIKE THE BRAHMINS? (Post No.4636)

Written by London Swaminathan 

 

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London 17-15

 

 

 

Post No. 4636

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

Chanakya says some strange things about the Brahmins and the End of Kali Yuga

 

Chanakya says in his Chanakya Niti Sastra,

“Lakshmi’s words to Vishnu: O Lord, in disgust I avoid always the house of the Brahmins because the angry one (Agastya) drank my father (ocean), the sage Bhrgu hit with his foot my husband (Vishnu), right from childhood Brahmins carry my adversary (Sarasvati) in the cavity of their mouth, day and day out destroy my house (the lotus) for offering worship to Siva.”

 

Chapter 15, sloka 16

 

This sloka reveals two things:

1.There is a proverb in Tamil, Where is money (Panam), there is no Virtue (Gunam). In other words Lakshmi, Goddess of wealth never resides where there is Sarasvati, Goddess of Education. This is very true in Indian context. Most of the poets lived in acute poverty. Bharati, the greatest of the modern Tamil poets, suffered from poverty till his death. So the message is that Money and virtue don’t go together.

 

2.The second thing is a compliment to Brahmins, not a complaint against the Brahmins. Sarasvati lives in their tongues from their early childhood. This means they are well versed in the Vedas. Vak Devi and Sarasvati are praised in the Rig Veda, the oldest religious book in the world. And the Brahmins used the lotus flower for Siva Puja (flower offering to Lord Siva)

Fame comes from Luck!

 

In another sloka, Chanakya praises Lord Vishnu indirectly.

“A small hillock on the earth was held by you on a finger with ease. Because of this your praise is sung under the name of Govardhana both in the heaven and the earth.

Yasoda’s remark “I cary you, O Kesava,  the carrier of all the worlds, on the tips of my breasts. (Still nobody sings my praises), O Kesava, enough of words. Fame comes from luck”

Chanakya Niti, Chapter 15, sloka 19.

 

These are called Nindha Stutis. That is you criticise someone in words explicitly, but the real implicit meaning is that you praise him or her. You have to read between the lines.

 

Chanakya’s Strange Prediction

Chanakya, the greatest genius of ancient India, made a strange prediction in one of the slokas:-

 

“Hari leaves the earth with the passage of ten thousand years in Kali Yuga, in the half of that period does the Ganga water and in the half of that village deity”.

 

It is very strange that the village deity disappears first, then the River Ganges disappears and then only God leaves the earth. So we may measure  the progress of Kaliyuga  by the Ganges.

The sloka is as follows:

Kalau dasa shasreshu Harisyajati medhiniim

tadardhe jahnaviitoyam tadardhe gramadevataa

Chapter 11, sloka 4

We have already passed 5000 year limit In Kaliyuga. But Ganga is still flowing but not with its original pristine purity. So Chanakya might have mentioned Deva year and not the human year.

–Subham–

சொன்னது அவர்தானா? சொல், சொல், மனமே! QUIZ – ‘க்விஸ்’ (Post No.4635)

Written by London Swaminathan 

 

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London 13-46

 

 

 

Post No. 4635

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கீழ்கண்ட பாடல்களை இயற்றியது யார்? அது எந்தப் புத்தகத்தில் உள்ளது? சொல், சொல், மனமே!

 

1.ஏர் ஆனைக் காவில் உறை என் ஆனைக்கு அன்று அளித்த

போர் ஆனைக் கன்றுதனைப் போற்றினால் – வாராத

புத்தி வரும்; பத்தி வரும்; புத்திர உற்பத்தி வரும்;

சத்தி வரும்; சித்திவரும் தான்

XXX

 

2.எண் தேர் செய்யும் தச்சன்

திங்கள் வலித்த கால் அன்னோனே

XXX

 

3.பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா! உன்

செவ்வடி செவ்வி திருக்காப்பு

 

xxx

 

4.நாரணன் விளையாட்டு எல்லாம் நாரத முனிவன் கூற

ஆரணக் கவிதை செய்தான் அறிந்த வான்மீகி என்பான்

 

xxx

5.மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!

நாம நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு

ஓங்கிப் பரந்தொழுகலான்

 

xxx

6.தமிழோடிசை பாடல் மறந்தறியேன்

xxx

 

7.பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை யிருட்கணம் போயின யாவும்

 

xxx

 

8.பெரியாருடன் கூடல் பேரின்பம் தாமே

 

xxx

 

9.யாகாவாராயினும் நா காக்க

xxx

  1. தமிழுக்கும் அமுதென்ற பேர்- அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

 

xxx

 

 

 

 

ANSWERS

1.காளமேகம், 2. சங்க கால அவ்வையார், 3. பெரியாழ்வார், திருமொழி, திவ்யப் பிரபந்தம் 4. கம்பன், கம்ப ராமாயணம், 5. இளங்கோ, சிலப்பதிகாரம், 6. அப்பர் தேவாரம், நாலாம் திருமுறை, 7. பாரதி, பாரதியார் பாடல்கள், 8. திருமூலர் எழுதிய திருமந்திரம் 9. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 10. பாரதிதாசன்

 

 

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள் (Post No.4634)

Date: 19 JANUARY 2018

 

Time uploaded in London- 6-39 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4634

 

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நகைச்சுவையே நல்ல மருந்து!

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

ச.நாகராஜன்

 

1

நகைச்சுவை உணர்வு இருந்தால் தான் இந்த உலகத்தில் நாம் வாழும் வாழ்க்கையைச் சீருடனும் சிறப்புடனும் இருக்குமாறு அமைத்துக் கொள்ள முடியும்.

 

சிறப்பாக வாழ, சிரித்து மகிழுங்கள்!

 

நல்ல நல்ல நகைச்சுவை புத்தகங்களைப் படித்தல், ஜோக் புத்தகங்களை வாங்கிச் சேகரித்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது படித்து மகிழ்தல், நல்ல ஜோக்குகளை பத்திரிகைகளிலிருந்து எடுத்து சேகரித்தல் போன்றவற்றால் ஒரு ஜோக் களஞ்சியம் எப்போதும்ச் நம்மிடம் இருக்கும்.

எனது ஜோக் களஞ்சியத்திலிருந்து சில உதிரிகளை இங்கு உதிர்த்து விடுகிறேன் – படித்து மகிழ!

 

நகைச்சுவையில் பல ரகம் உண்டு.

இதைப் பற்றி மிகத் தீவிரமாக் ஆய்ந்து எத்தனை வகை என்று கூறும் அறிஞர்களும் உண்டு.

 

இப்போது நாம் பார்க்கும் நகைச்சுவை என்ன வகை என்பதைப் படித்து முடித்த பின்னர் நீங்களே கூற முடியும்.

2

க்ரிமால்டி என்பவர் உலகின் மிகச் சிறந்த காமடியன். அவர் ‘ஷோ’க்களுக்குச் சென்று சிரிக்காமல் திரும்ப வரவே முடியாது.

அவரைப் பற்றிய் ஒரு ஜோக் இது!

 

There is a famous story told of Grimaldi, a well known comedian.

He went to consult a famous doctor, asking for some cure for acute melancholia.

The doctor suggested: “Go, and see Grimaldi.”

“Alas! I am Grimaldi” replied the patient.

 

3

A one –eyed doctor greeted a patient with “How are you?”

“As you see,” replied the latter.

“Then”, said the doctor, “If you are as I see, you are half dead.”

 

4

A beautiful girl was attending the lectures of a Greek philosopher. A grain of dust flew into her eye.

She begged the professor’s aid for its removal and as he stooped to the gallant task some one cried, “Do not spoil the pupil.”

 

 

 

5

When Dr Barton Warren was informed that Dr Vowel was dead, he exclaimed, “What! Vowel dead? Well, then heaven it was neither you nor I.”

 

 

6

Burke, when pressed by a shopkeeper for the payment of a bill, or for the interest at least, if not for the principal, produced a masterpiece.

“Sir”, he said, “it is not my principle to pay the interest, or my interest to pay the principal.”

 

7

Hurrying to office a busy executive was pestered by his wife to say what time he would be home.

About 7 or 8 or may be 9, he muttered.

“And what is the occasion that leaves you in the such doubt about your forward movements?”

“A meeting of the Society for Long Range Planning.”

 

 

8

A contractor wanted a favour from a Government official.

He tried to offer a small token of appreciation.

He offered the official a nice foreign sports car.

The official bristled and said he could not accept such a gift as it would be a bribe.

The contractor said, “Would it be all right if I sold you the car?”

The official asked for how much.

The contractor said,”One Hundred rupees.”

“The official promptly replied : “in that case, I will take two.”

 

9

ஜோக்குகளைச் சேர்த்து அவ்வப்பொழுது ரசியுங்கள் – சிரித்து மகிழ!

குறிப்பு:  மேலே உள்ளவற்றில் 2 முதல் 6 முடிய : Sun 24-7-1993 இதழில் Inder Mohan Puri  அளித்த ஜோக்குகள்.

7 – ரீடர்ஸ் டைஜஸ்ட் ஜனவரி 1974 இதழில் வந்தது.

8 – ஹிந்து 12-1-1998 தேதியிட்ட இதழில் திரு எஸ். கிருஷ்ணன் அளித்த ஜோக்!

 

 

10

இது போல லட்சத்திற்கும் மேற்பட்ட ஜோக்குகளை சேகரித்துள்ள ஒருவரை எனக்குத் தெரியும்!

அவர் தான் எனது அண்ணன் திரு S.சீனிவாசன், அசோக் நகர், சென்னை.

 

வீடு முழுவதும் ஜோக் புத்தகங்கள்! போதாததற்கு தடி தடியான் ஜோக்குகளை ஒட்டியுள்ள  கணக்கற்ற வால்யூம்கள்!

சிரித்துச் சிரித்து மகிழலாம்!

***