கம்யூனிஸம்= ஜிஹாதி= வன்முறை (Post No.4281)

Written by S.NAGARAJAN

 

 

Date:8 October 2017

 

Time uploaded in London- 5-52 am

 

 

Post No. 4281

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாப ராட்ஸசர்கள்

கம்யூனிஸம், ஜிஹாதி, வன்முறை – ஒரே பொருளைத் தரும் மூன்று சொற்கள்

 

by ச.நாகராஜன்

ஒரே பொருளைத் தரும் சொற்கள் பல உண்டு.

வன்முறை எனப்படும் கொலை, கொள்ளை, கடத்தல், தீவிரவாதம் என்ற சொல்லுக்கும் கூட மறு சொற்கள் உண்டு.

கம்யூனிஸம், ஜிஹாதி ஆகிய இரு சொற்களும் அதே பொருளைத் தான் தரும்.

 

அபாயகரமான இந்த வழி முறை சமீபத்தில் கேரளத்தில் தலை விரித்து ஆடியது.

 

ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் ராஜேஷ் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

80 காயங்கள்- உடல் முழுவதும்.. கைகள் துண்டிக்கப்பட்டன.

தீவிரவாதிகளே பயப்படும் வன்முறை.

 

கேரள கம்யூனிஸ அரசின் 17 மாத காலத்தில் 17 படு கொலைகள்.

 

கம்யூனிஸ்டுகள் பற்றிய வரலாறைப் புரட்டிப் பார்த்தால் வருவது நீளமான ஒரு பட்டியல். ஜிஹாதிகளுக்கோ இவர்களுடன் வன்முறையில் போட்டி.

 

இருவரும் ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உலகை நாசப்படுத்துகின்றனர். இத்துடன் சர்வாதிகாரிகள் வேறு.

இவர்களைப் பற்றிய சின்ன ஒரு பட்டியல் இதோ;

நீளமான பட்டியல் வேண்டுவோர் தாமே சுலபமாகத்  தொகுக்கலாம்.

சின்னப் பட்டியலை இங்கு காணலாம்.

1.மாசே துங்

சீனா 91949-1976)

பலியானோர் 600 லட்சம் பேர்

  1. ஜோஸப் ஸ்டாலின்

ரஷியா (1929-1953)

பலியானோர் 400 லட்சம் பேர்

  1. அடால்ஃப் ஹிட்லர்

ஜெர்மனி (1933-1945)

நாஜி சர்வாதிகாரம்

பலியானோர் 300 லட்சம் பேர்

 

  1. மன்னர் இரண்டாம் லியோபோல்ட் (King Leopold II) (1886-1908)

பெல்ஜியம்

காங்கோ காலனி ஆதிக்கம்

பலியானோர் 80 லட்சம் காங்கோ மக்கள் அடிமைகளாக்கப்பட்டனர்

  1. ஹிடேகி டோஜோ (1941-1945) (Hideko Tojo)

ஜப்பான் ராணுவ சர்வாதிகாரம்

இரண்டாம் உலகப் போரில் பலியானோர் 50 லட்சம் பேர்

  1. இஸ்மாயில் அன்வர் பாஷா 91915-1920) (Ismail Evver Pasha)

ஒட்டாமன் துருக்கி

ராணுவ சர்வாதிகாரம்

20 லட்சம் அமெரிக்கர்கள்,கிரேக்கர்கள்,அஸிரியர்கள் பலி

  1. போல் பாட் (1975-1979) (Pol Pot)

க்ம்யூனிஸ ஆட்சி (Khmer Rouge)

170 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள் பலி

  1. கிம் இல் ஸங் 91948-1994) (Kim Ilsung)

கம்யூனிஸ ஆட்சி

160 லட்சம் பேர் – அரசியல் எதிரிகள், பஞ்சம், பட்டினிச் சாவு

9.மெங்கிஸ்டு ஹைலே மரியம்(1974-1978) (Mengistu Haile Mariam)

எதியோப்பியா

கம்யூனிஸ்ட் எதேச்சாதிகார ஆட்சி

150 லட்சம் பேர் – எரிட் ரியர்கள், அரசியல் எதிரிகள் பலி

  1. யாகுபு கோவொன் (1967-1970) (Yakubu Gowon)

ராணுவ சர்வாதிகார ஆட்சி

நைஜீரியா

10 ல்ட்சம் பேர் பயாபரர்கள் பசியால் சாவு, உள்நாட்டுப் போரில் ராணுவ வீரர்கள் சாவு

  1. ஜீன் கம்பாண்டா (1994) (Jean Kambanda)

ருவாண்டா

ஆதிவாசி சர்வாதிகாரம்

ஹூடு

எட்டு லட்சம் பேர் – டுட்ஸிஸ் பலி

  1. சதாம் ஹுஸைன் 91979-2003) (Saddaam Hussein)

இராக்

சர்வாதிகார ஆட்சி

ஆறு லட்சம் பேர் பலி (ஷிலிட்டுகள், குர்துக்கள், குவைத் தேசத்தினர்,அரசியல் எதிரிகள் )

  1. ஜோஸப் ப்ராஸ் டிட்டோ 91945-1980) (Josheph Broz Tito)

யுகோஸ்லேவியா

கம்யூனிஸ ஆட்சி

5,70,000 பேர் பலி – அரசியல் எதிரிகள்

 

  1. சுகர்ணோ (1945-1966) (Sukarno)

இந்தோனேஷியா

தேசிய சர்வாதிகாரி

ஐந்து லட்சம் கம்யூனிஸ்டுகள் பலி

  1. முல்லா ஒமர் (1996-2001) (Mullah Omar)

ஆப்கனிஸ்தான்

இஸ்லாமிய சர்வாதிகாரம் – தாலிபான்

 

நான்கு லட்சம் பேர் பலி – அரசியல் மற்றும் மதத்திற்கான எதிரிகள்

 

இந்தப் பட்டியல் முடியவில்லை; இன்னும் கொஞ்சம் இருக்கிறது.

அதை அடுத்துக் காண்போம்.

 

இதை எழுதவே கை நடுங்குகிறது. படித்தால் கண்ணீர் வரும்.

ஆனால் … அனுபவித்தவர்களுக்கோ..

 

நல்ல உள்ளங்கள் சிந்திக்க வேண்டும்!

 

– தொடரும்

 

 

 

 

Astrology: Tamil’s Strange Prediction Method! (Post No.4280)

Written by London Swaminathan

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 15-58

 

Post No. 4280

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Some time ago I wrote about Tamil’s Rope Trick astrology. Like orthodox Hindus find some answer by throwing two differently coloured flowers in front of god and ask a child to pick one flower and decide the next course of action, every community has a different method. Some Hindus write Yes or No on two different pieces of papers and place it in front of child and the child picks one. That piece of paper decides the fate of the issue in their mind.

Orthodox Hindus insert a thread into a page in the holy books like Ramayana or Bhagavd Gita and find aa positive or negative message and take it an answer to their question. Christians also do this with the Bible. Tamils did this withholy scriptures (see my earlier article detailing one or two anecdotes)

Sand Astrology

 

2000 year old Tamil books describe one more method, unique to Tamils. Tamil ladies when separated from their husbands used this method to find out whether their husbands will join them soon. A lover also can find out whether he or she would succeed one’s heartthrob.

There were four great Tamil Saivite saints and they were called THE FOUR by the Tamils. Two of them who lived 1500 years ago described this strange prediction method. Appar alias Thirunavukkarasu and Manikka vasagar mentioned this method.

 

There are three ways of doing this:

1.Drawing lines

Closing her eyes, a separated woman draws two lines with her two hands in the sand and if they meet, her wish is fulfilled.

  1. A lady who is separated would draw a big circle in the sand, closing her eyes, and if the line forms a full circle, her husband or lover would join her soon.
  2. The third way of doing it is a blindfolded lady would draw lots of smaller circles within a big circle and her friend counts the completed circles. If they are more in number than the incomplete circles then her husband would come back soon.

This is attested in later books as well. As far as we know it has been in practise in Tamil Nadu at east for 2000 years. In Tamil it is called Kuudal Izaithal.

Some Tamils practise another thing in temples. In big temples like Madurai Meenakshi temple there are big lotus like flowers sculpted on the floor. It is a big circle around which six or eight people can sit. In Madurai it is front of the main shrines. Family members or friends who wanted to know whether they can go ahead with a project or matter, sit around the flower and place their hands on the stone petals. If their hands meet together  at the centre, the answer is a positive YES. In Tamil there is a phrase, which literally translated would mean “Work hands meet”. That is the work would be fulfilled or met with success.

 

Lizard predictions, Bird predictions, Animal predictions, Horoscope predictions, Palmistry, Possessed people’s predictions, Cowries (sea shell—Prasnam in Kerala) predictions and Palm leaf (Naadi) readings are also very popular among Tamils.

 

I wrote another article whether Tamils began the predictions and forecasts. There are umpteen names for each of the 27 stars and nine celestial bodies from 1st century BCE. A good subject for future research!

 

(For all the references in Thevaram and Tirukkovaiyar, please refer to my Tamil article posted today. Relevant Tamil verses are also given.)

Old articles on the same subject in my blogs:–

http://swamiindology.blogspot.com/2012/07/can-birds-predict-your-future.html#!

 

https://tamilandvedas.com/tag/bird-predictions/

  1. ஜோதிடம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிடம்

Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது நூலை … go to tamilandvedas.com OR …

  1. வேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/வேதத்தில்…

Posts about வேதத்தில் ஜோதிடம் written by Tamil and Vedas

  1. நாடிஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/நாடி…

Posts about நாடி ஜோதிடம் written by Tamil and Vedas

 

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Swami’s …

swamiindology.blogspot.com/2013/02/tamil-astrology-rope…

Today’s article is about a Rope Trick. It is not a magic like the famous Indian Rope Trick by the magicians. Actually it is a thread trick. What they do is they use …

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas

tamilandvedas.com/2013/02/27/tamil-astrology…

Tamil Astrology: Rope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to happen. They watch …

 

நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி | Tamil and Vedas

tamilandvedas.com/2012/12/20/நேபாள…

Tamil and Vedas A blog exploring themes in Tamil and vedic literature. நேபாள ஜோதிடர்–புது பத்ததியை …

 

ஜோதிட மேதைகள் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிட…

Posts about ஜோதிட மேதைகள் written by Tamil and Vedas

 

புத்திசாலி ஜோதிடர் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about புத்திசாலி ஜோதிடர் written by Tamil and Vedas

 

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post …

tamilandvedas.com/2016/08/05…

Written by london swaminathan Date: 5th August 2016 Post No. 3036 Time uploaded in London :– 7-52 AM ( Thanks for the Pictures)

 

 

–SUBHAM–

தமிழர்களின் மணல் ஜோதிடம்; அப்பர் தரும் அதிசயத் தகவல் (Post No.4279)

Written by London Swaminathan

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 11-50 am

 

Post No. 4279

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தேவாரம் என்பது சிவனின் புகழ்பாடும் கீதங்கள் மட்டும் அடங்கியது அல்ல. தமிழர்களின் பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா/ கலைக் களஞ்சியம். பல அற்புத நிகழ்ச்சிகளும் வரலாற்று விஷயங்களும் அடங்கிய பாடல் தொகுப்பு. சங்க இலக்கியத்தில் பரணர் என்னும் பார்ப்பனப் புலவர் எப்படி எண்பதுக்கும் மேலான வரலாற்று நிகழ்ச்சிகளைப் பாடல் தோறும் வைக்கிறாரோ அப்படி அப்பர் என்னும் திரு நாவுக்கரசர் பாடிய தேவாரத்தில் நாம் ஏராளமான புதுப்புது தகவ ல்களை அறிகிறோம்.

பாட்டன், பூட்டி உறவு முறை பற்றி அப்பர் பாடியதை எழுதினேன். இதன் மூலம் உறவு முறைச் சொற்களை அறிந்தோம். மாணிக்கவாசகர் அப்பருக்கும், சம்பந்தருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்பதை நரி-பரி பாடல் மூலம் அப்பர் நமக்கு அறிவித்தார். தர்மி என்ற பார்ப்பனசொனுக்கு சிவபெருமான் கவிதை எழுதித் தந்த திருவிளையாடலையும் அப்பர் கூறியமையால் அறிந்தோம்.  தமிழ் சங்கம் அவர் காலத்துக்கு முன் இருந்ததை அறிந்தோம். சோழ மன்னர்கள், அவருக்கு முந்தைய நாயன்மார்கள், சமணர்களின் ரஹசியங்கள் முதலியவற்றை நமக்குத் தெரிவிப்பதும் அப்பரே.

 

அவர் ஒரு நாயன்மார் மட்டுமல்ல; வரலாற்றுப் பேரறிஞர்.

பாடலிபுத்திரம் வரை சென்று நாட்டை அறிந்தவர். கங்கை-காவிரி, கங்கை- கோதாவரி பற்றிப் பாடுகிறார். அவர் பாட்டில் வரும் பூகோள விஷயங்களை தனி ஆராய்ச்சிக் கட் டுரையில் தருகிறேன். கங்கை நதி வங்காளத்தில் நுழைந்தவுடன் ஆயிரம் கிளைகளாகப் பிரியும் அற்புத விஷயத்தை ‘ஆயிரம் மாமுக கங்கை’ என்ற வரிகளில் நமக்குச் செப்புவார்

 

 

இன்றைய கட்டுரையில் அவர் சொல்லும் அதிசய சுழி- மணற் சுழி சோதிடம் பற்றிக் காண்போம்.

 

திருப்பழனம் என்னும் ஊரில் சிவனை ஏத்திப் பாடும் ஒரு பாடலில் அவர் புகல்வது யாதோ?

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே யாயிடினும்

பஞ்சிற்கார் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்

அஞ்சிபோய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி

குஞ்சிபூ வாய் நின்ற சேவடியாய் கோடியையே

 

-நாலாம் திருமுறை, அப்பர் தேவாரம்

பொருள்

ஈசன் என்னைக் கவர்ந்து ஆட்கொண்டு வளை கொண்ட நிலையில் ஏங்கவைத்து வாராமல் இருக்கிறார். ஆயினும் மென் சிறகுகளை உடைய அன்னப்பறவை பறந்தோடும் திருப்பழனத்தில் அவர் இருக்கிறார். அது மட்டுமா? கலியுகத்தின் கொடுமையைக் குறைப்பதற்காக

நாள் தோறும் யாக யக்ஞங்கள் செய்யும் அப்பூதி அடிகளின் தலைமுடி மீது வழங்கும் பூப்போல அவரது திருவடிகள் உள்ளன. கோடிழைத்துப் பார்ப்பேன்.

 

இந்தப் பாட்டில் இரண்டு முக்கியச் செய்திகள் உள.

அப்பூதி அடிகள் என்னும் பார்ப்பனர், திருநாவுக்கரசர் மீது பேரன்பு பூண்டவர். நாயன்மார்களில் ஒருவர். அவர் தினமும் ஹோமம் செய்வது எதற்காகத் தெரியுமா? தனக்காக அல்ல. கலியுகத்தினை அடக்கி ஒடுக்கி மெலியச் செய்வதற்காக. அவர் த லை  மீது ஈசன் எப்போதும் ஆசீர்வாதம் செய்து கொண்டே இருக்கிறான். ஆக ஒருவர் யாகம் செய்தால் கலியுகம் மாறும் என்ற செய்தியையும் அப்பூதி அடிகள் போன்றோர் செய்யும் யாகங்கள் சுயநலம் கருதி செய்யப்பட்டது அல்ல என்றும் அப்பர் அடித்துப் பேசுகிறார்.

 

நமக்கு வேண்டியது கோடியையே என்ற கடைசி சொல்லாகும். இது தமிழர்களின் விநோத சோதிடம். “காரியம் கைகூடுமா?” என்பதற்கும் பல பொருள்கள் உண்டு. இது பற்றி தமிழர்களின் கயிறு சோதிடம் என்ற கட்டுரையில் சொன்னேன்.

 

இப்போது கோடிழைத்தல் பற்றிப் பார்ப்போம்.

1.ஒரு பெண் தனது கணவன் அல்லது காதலன் விரைவில் தன்னிடம் வருவானா என்று பார்க்க இரண்டு கோடு இழைப்பாள் கண்ணை மூடிக்கொண்டு. இரண்டும் சேர்ந்தால் காரியம் கை கூடும் ஒரு வேளை இரண்டு கைகளால் கோடு போடுவர் போலும்!

  1. இதற்கு மற்றொரு விளக்கமும் உண்டு. ஒரு வட்டத்தை கண்களை மூடிக்கொண்டு வரைவர். அந்த வட்டம் இணைந்து வட்டமாக இருந்தால் அந்தக் காரியம் அல்லது நினைத்தது நிறைவேறும்; இதைச் சுழி இடுதல் என்றும் உரைப்பர்.

 

இதை அப்பரே பல பாடல்களில் சொல்கிறார்:—

பாடலாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள்

கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு

கோடல் பூத்தளலர் கோழம்பத்துள்மகிழ்ந்

தாடுங் கூத்தனுக்கன்பு  பட்டாளன்றே 5-64-4

 

நீடு நெஞ்சுள் நினைந்து கண்ணீர் மல்கும்

ஓடு மாலினோ டொண்கொடி மாதராள்

மாட நீள்மரு கற்பெருமான்வரில்

கூடுநீ என்று கூடலிழைக்குமே -5-88-8

 

இரண்டு பாடல்களும் அப்பரின் ஐந்தாம் திருமுறையில் உள்ளவை

 

இரண்டு பாடல்களில் வரும் “கூடலாக்கிடும் குன்றின் மணற்கொடு”, “கூடு நீ என்று கூடலிழைக்குமே” என்ற வரிகளின் பொருள் என்ன?

 

மாணிக்கவாசகரின் திருக்கோவையாரிலும் (பாடல் 186) உளது

 

ஆழி திருத்தும் புலியூர் உடையான் அருளின் அளித்து

ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருக என்று

ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல் ஐய

ஆழி திருத்தித் தாக்கிற்றி யோஉள்ளம் வள்ளலையே

— திருக்கோவையார் 186

ஆழி= வட்டம், சுழி

 

“கூடல் இழைத்தல் என்பது தலைமகள், இம்மணற்குன்றின் கண் நீத்து அகன்ற வள்ளலை உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவல்லையோ எனக் கூடற்றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தா நிற்றல்- திருக்கோவையார் உரை-186

 

கூடல் இழைப்பது எப்படி?

பெரியதொரு வட்டமாகக் கோடு கீறி, அதன் உள்ளே சிறு சுழிகளை அளவிடாது சுழித்து, அவற்றை இரட்டைப்பட எண்ணி, ஒற்றைபடாதுளதோ என்று நோக்கல்; மிஞ்சாதேல் தலைவன் வருவான் என்பது மரபு.

 

அதாவது வட்டம், முழு வட்டமாக இருக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் குறைவட்டம், நிறை வட்டம் ஆகியவற்றை எண்ணி எது அதிகமாக இருக்கிறது என்று காண்டல்.

 

தலைவன் பிரிவாற்றாமையால் வருந்தும் காதலி அல்லது மனைவி இப்படிப் பார்ப்பது தமிழர் வழக்கம். இதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழிக்கு உரை எழுதிய பெரியவாச்சான் பிள்ளையும் விளக்குவார்:– கூடலாவது வட்டமாகக் கோட்டைக்கீறி அதுக்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து, இவ்விரண்டு சுழியாகக் கூட்டினால் இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்று சங்கேதம்”

 

இவ்வாறன்றிக் கண்ணை மூடிக்கொண்டு கீறிய கோடு, எழுவாய், இறுவாயிரண்டும் கூடியிருப்பின், வந்து கூடுவன், விலகின் வாரான் என்பதுமுண்டு.

பிற்காலத்தில் வந்த ‘கைலை பாதி காளத்திபாதி’, ‘நான்முகன் திருவந்தாதி’, ‘ஐந்திணை ஐம் பது’, சீவக சிந்தாமணி, ‘கலிங்கத்துப் பரணி’ முதலிய நூல்களில் இந்த வழக்கு குறிப்பிடப்படுகிறது.

 

இதுகாறும் படித்தவற்றில் இருந்து நாம் அறிவது யாதெனில், கூடல் இழைத்தல் சிற்சில மாறுபாடுகளுடன் வழங்கப்பட்டது.

 

மிகவும் சுலபமான வழி- கண்ணை மூடிக்கொண்டு பெரிய வட்டம் கீற வேண்டும்; இணைந்தால் காரியம் கைகூடும்

பெரிய வட்டத்துக்குள் பல சுழிகளைப் போடுதல் ; அவைகளில் நிறைவான வட்டங்கள் இரட்டைப் படை எண்ணில் வந்தால் காரியம் வெற்றி; காதலன் வருவான்.

 

மூன்றாவது முறை:- கண்களை மூடிக்கொண்டு இரு கோடுகளை இரண்டு கைகளாலும் வரைதல் அவை சேர்ந்தால், காரியம் நிறைவேறும்.

 

இது தவிர கோவில் முதலியவற்றில் துவஜஸ்தம்பம் அருகில் பெரிய தாமரை மலர் போன்ற வட்டப் பூ வரையப்பட்டிருக்கும். அதில் சம்பந்தப்பட்டவர்கள் கைகளை வைப்பர். இதழ் போன்ற பகுதிகளில் நாம் வைக்கும் கைகள் நம்மை அறியாமலேயே நடுப்பகுதிக்கு, மொட்டு போன்ற பகுதிக்கு வந்து இணைந்தால் காரிய ம் கைகூடும்; இதை எனது நண்பர்கள் மதுரை மீனாட்சி கோவிலில் செய்வதைப் பார்த்து இருக்கிறேன்.

 

என் கருத்து:

இரண்டு கோடுகள் போடல், பெரிய வட்டம் ஒன்று மட்டும் வரைதல் ஆகியவற்றில் நம்மை அறியாமலேயே தவறு (மோசடி) செய்யமுடியும்; அதாவது பல முறை இப்படி வரைந்து பழகிவிட்டால் செய்ய முடியும். ஆனால் பெரிய வட்டத்துள் நிறைய சுழிகளைப் போட்டுவிட்டு வட்டத்துக்குள் உள்ள சுழிகளை மட்டும் கணக்கிட்டு, அதில் முழுச் சுழியாக இருப்பவை இரட்டைப் படை எண்ணில் இருந்தால் காதலன் வருவான் அல்லது நினைத்த காரியம் நிறைவேறும் என்பதே பொருத்தம்.

ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்

1.நாலாம் திருமுறை- தருமபுர ஆதீனம்

2.நாலாம் திருமுறை- வர்த்தமானன் பதிப்பகம்

3.திருக்கோவையார்

 

More ASTROLOGY Articles in my blog

 

  1. ஜோதிடம்| Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிடம்

Posts about ஜோதிடம் written … ஒரு கயிறு அல்லது நூலை … go to tamilandvedas.com OR …

  1. வேதத்தில்ஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/வேதத்தில்…

Posts about வேதத்தில் ஜோதிடம் written by Tamil and Vedas

  1. நாடிஜோதிடம் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/நாடி…

Posts about நாடி ஜோதிடம் written by Tamil and Vedas

 

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Swami’s …

swamiindology.blogspot.com/2013/02/tamil-astrology-rope…

Today’s article is about a Rope Trick. It is not a magic like the famous Indian Rope Trick by the magicians. Actually it is a thread trick. What they do is they use …

 

Tamil Astrology: Rope Trick for Predictions! | Tamil and Vedas

tamilandvedas.com/2013/02/27/tamil-astrology…

Tamil Astrology: Rope Trick for Predictions! Tamils have novel ways of predicting your future. They listen to lizards and predict what is going to happen. They watch …

 

நேபாள ஜோதிடர்–புது பத்ததியை வகுத்த ஸ்ரீபதி | Tamil and Vedas

tamilandvedas.com/2012/12/20/நேபாள…

Tamil and Vedas A blog exploring themes in Tamil and vedic literature. நேபாள ஜோதிடர்–புது பத்ததியை …

 

ஜோதிட மேதைகள் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/ஜோதிட…

Posts about ஜோதிட மேதைகள் written by Tamil and Vedas

 

புத்திசாலி ஜோதிடர் | Tamil and Vedas

tamilandvedas.com/tag…

Posts about புத்திசாலி ஜோதிடர் written by Tamil and Vedas

 

திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்! (Post …

tamilandvedas.com/2016/08/05…

Written by london swaminathan Date: 5th August 2016 Post No. 3036 Time uploaded in London :– 7-52 AM ( Thanks for the Pictures) DON’T REBLOG IT AT LEAST FOR …

 

 

TAGS: கூடல் இழைத்தல், மணல் ஜோதிடம், தமிழர், அப்பர்

–SUBHAM–

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40 (Post No.4278)

Written by S.NAGARAJAN

 

 

Date: 7 October 2017

 

Time uploaded in London- 5–19 am

 

 

Post No. 4278

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 40

மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள் – சீனி.விசுவநாதன் எழுதியுள்ள ஆய்வு நூல்

 

by ச.நாகராஜன்

 

மகாகவி பாரதியார் சமீப காலத்தில் வாழ்ந்திருந்தாலும் கூட அவரைப் பற்றிய செய்திகள் பல தவறாகவே உள்ளன.

இதற்குக் காரணம் பல.

அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தம் நினைவிலிருந்து கூறிய தகவல்கள் பல. இவற்றில் காலப் பிழை, இடப் பிழை, கருத்துப் பிழை ஆகியவை உள்ளன. இது இயல்பே.

பல செய்திகள் அரசு ஆவணங்களில் புதைந்துள்ளன. பல கட்டுரைகள், கவிதைகள் பழைய கால பத்திரிகைகளில் மறைந்துள்ளன.

இதையெல்லாம் சரி பார்த்து உள்ளதை உள்ளபடி தொகுப்பது உண்மையிலேயே பெரிய காரியம்.

இதற்கு கட்டுக்கோப்பான, நல்ல பண வசதி படைத்த நிறுவனம் ந்ல்லோரால் நடத்தப்பட வேண்டும்.

அது இதுவரை இல்லை.

ஆகவே இந்தக் குறையைப் போக்க பல பாரதி ஆர்வலர்கள் தம்மால் இயன்ற பணியைச் செய்துள்ளனர்.

எந்த வசதியும் இல்லாத குறையை நினைத்துப் பார்த்தால் இது ஒரு இமாலய முயற்சி தான்.

இந்த இமாலய முயற்சியில் ஏறி வெற்றி பெற பல டென்சிங்குகள் முயன்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த பல டென்சிங் ஒருவர் சீனி.விசுவநாதன்.

பாரதி அன்பர்கள் இகுகளில்வரை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

இவரது அரிய படைப்புகளில் ஒன்று – மகாகவி பாரதி – சில புதிய உண்மைகள்.

272 பக்கங்கள் முதல் பதிப்பு வெளியீடு 1984ஆம் ஆண்டு.

முழு நூலும் அத்தியாயங்களாகப் பிரிக்கப்படவில்லை.

செய்திகளின் தொகுப்பையே காண்கிறோம். நல்ல முறையில் பொருள்வாரியாக இதைப் பிரித்தால் நன்றாக இருக்கும்.

முதல் பகுதி மகாகவி பாரதி: சில புதிய உண்மைகள் (115 பக்கங்கள்)

அடுத்த பகுதி : சிந்தனைக்குச் சில (157 பக்கங்கள்)

ஏராளமான செய்திகள் அள்ளிக் குவிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.

நம்முடைய்  ஆர்வத்திற்கேற்ப நாம் தான் உரிய முறையில் அட்டவணைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுவையான பல செய்திகளில் சிலவற்றின் விவரம் கீழே தரப்படுகிறது. :

1) பாரதியார் கவிதைகள் பதிப்பு வரலாறு மிகவும் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

2) சக்கரவர்த்தினி, இந்தியா, சுதேசமித்திரன், கர்மயோகி ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ள பாரதி படைப்புகளின் அட்டவணை நூலில் தரப்பட்டுள்ளது.

3) ஏராளமான கவிதைகளின் தலைப்புகள் மாறி இருப்பதை சீனி. விசுவநாதன் சுட்டிக் காட்டுகிறார்.

4) ஆங்கிலம் மற்றும் வங்க மொழிப் பாடல்கள் ஒன்பதை பாரதி மொழி பெயர்த்திருக்கிறார். அவற்றின் பட்டியலை நூலில் காணலாம்.

5) பாரதி தன் கைப்பட எழுதிய கைப்பிரதிகளின் அடிப்படையில் 90 பாடல்களின் பட்டியலும் நூலில் இடம் பெற்றுள்ளது.

6) பாரதியின் கண்ணம்மா பாடல்களில் செல்லம்மா என்ற வார்த்தையே கவிதைகளில் முதலில் இடம் பெற்றிருந்தது.

ஆனால் “அப்பாதுரை மாமா விருப்பப்படி செல்லம்மா என்று வந்த் இடங்கள் எல்லாம் கண்ணம்மா என்று மாற்றப்பட்டது” என்பதை ச்குந்தலா பாரதி எழுதியுள்ளார்.

7) பாரதியார் தம் பாடல்களை எந்த ராகத்தில் எந்த தாள கதியில் பாட வேண்டுமென்று தெளிவு படுத்தியுள்ளார். அவரே எழுதியுள்ள சில பாடல்களின் ராகப் பட்டியலையும் நூலில் காண்கிறோம்.

8) காணி நிலம் வேண்டும் என்ற பாடலின் தலைப்பில் முதலில் பராசக்திக்கு ஒரு புலவன் வேண்டுகோள் என்று பாரதி எழுதியிருந்தார். பின்னர் அதை நீக்கி விட்டு காணி நிலம் என்பதையே தலைப்பாக ஆக்கி விட்டார்.

9) பாரதி வாழ்ந்த காலத்திலேயே அவரது பாடல்கள் சில தெலுங்கு மொழியில் பெயர்க்கப்பட்டன. பிரான்ஸ், இங்கிலாந்து கவியரசர்கள் பார்தி பாட்டை மொழி பெயர்த்தனர். அயர்லாந்து க்விஞரான ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ் என்பவர் பாரதியாரின் சில கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார்.

10) என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாடலை ஆங்கில அரசு மும்முறை மொழிபெயர்த்தது. அந்தப் பாடலின் ஆங்கில வடிவத்தை நூலில் பார்க்கலாம்.

 

11) தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் – ஓர் ஆராய்ச்சி என்ற தலைப்பில் தேசபக்தன் வருஷமலரில் திரு எ.எஸ்.நாகரத்தினம் என்பவர் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். ஆனால் என்ன முயன்றும் அது கிடைக்கவில்லை. இப்படி பல அரிய கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் சீனி.விசுவநாதன்.

12) பாரதி பாடல்கள் நாட்டுடமையாக்கப்பட்ட வரலாற்றை நூலில் காண்கிறோம்.

13) குரு கோவிந்தசிம்ஹன் விஜயம் இந்தியா பத்திரிகையில் நான்கு வாரங்கள் தொடர்ந்து பிரசுரமானது. இந்தப் பாடலின் வரலாறை நூலில் காணலாம். லண்டனில் நடந்த குருகோவிந்த சிங்கினுடைய விழா பற்றிய செய்தியை வ.வெ.சு ஐயர் பார்தியாருக்கு அனுப்ப அதைப் பிரசுரித்த பாரதியார் தன் பங்கிற்கு குரு கோவிந்த சிம்ஹ விஜயம் என்ற கவிதையைப் புனைந்து அதைப் பிரசுரித்தார்.

14) ‘பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்’ பாடலில் இல்லாத கண்ணிகள் நூலில் சுட்டிக் காட்டப்படுகின்றன – அதன் வரலாறுடன்.

15) நூலின் இறுதியில் “நான் செய்த தவறுகள்” என்ற தலைப்பில் சில தகவல்களைத் தான் “கண்மூடித்தனமாகப்” பின்பற்றித் தந்ததைச் சுட்டிக் காட்டும் சீனி.விசுவநாதன் ஆய்வின் களம் விரிய விரிய தனது தவறுகள் புலப்பட்டதை வெளிப்படையாக ஒப்புக்  கொள்கிறார்.

இது தான் ஆராய்ச்சியின் நேர்மை.

பாரதியைப் பற்றிய விரிவான ஆய்வு நூல் ஒன்று வெளியிடப்பட வேண்டும் காலப் போக்கில் கிடைக்கும் கூடுதல் தகவல்கள் -ரஸமான செய்திகள் – உள்ளிட்டவற்றைக் கொண்டு பாரதி நூல்கள் பற்றிய ஆராய்ச்சி விரிவாக நடைபெறலாம்; நடைபெற வேண்டும்  என்று தன் நம்பிக்கையை தெரிவிக்கிறார் ஆசிரியர்.

பாரதி ஆர்வலர்களுக்கு இந்த நூல் ஒரு பொக்கிஷம்.

ஏற்கனவே தாங்கள் படித்தவற்றுள் இருப்பதை “நேர் செய்து” கொள்ள இது ஒரு செய்திக் கருவூலம்.

உடனடியாக இதை பாரதி நூல்களுடன் வீட்டில் சேர்த்து விடலாம்.

***

 

Tiger and Bear Story told by Sita in Ramayana (Post No.4277)

Written by London Swaminathan

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 21-49

 

Post No. 4277

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Sita, Rama’s wife, was full of mercy. When the Rakshasis (demonesses) were tormenting Sita, she was very much distressed. Sita thought of killing herself. At that time, Trijata, only demoness who was supporting Sita, told her a dream with a positive message. She interpreted the dream all too favourably and said,

“Everything is going to turn out well for Sita. Lanka is going to be destroyed. Ravana is going to perish.  You Rakshasis, are going to suffer. So I advise you, Rakshasis, to fall down at the feet of Sita now itself and ask for pardon, so that she may save you”.

 

The words of Trijata consoled her. and she had begun to feel that all would end well. So, she tells the Rakshais, “Without your begging me, before you ever fall at my feet, I will give you the pardon. If ever what Trijata says happens, then be sure I will protect you all”. The occasion came when she was to protect them.

 

After Ravana’s death Hanuman said to Sita, “ Give me orders now. I will torment your tormentors. I will bite them. I will tear them with my nails; I will crush them with me feet”.

 

But Sita humbled and taught a lesson to Hanuman. She told him a story:-

“Let us remember women were not their own mistresses but were acting under the orders of a dreaded monarch. It is not just to be angry with them. They are not the cause of my mystery. I have no doubt brought it on myself by former misdeeds. The law of karma is inexorable. I pardon these slaves of Ravana. Now that Ravana is dead they won’t torment me hereafter. Let me remind you of a great moral taught of old by a bear.

 

Once upon a time a hunter pursued by a tiger, got up a big tree, which was already tenanted by a bear.

The tiger, halted in his course at the foot, looked up at and advised the bear to throw down the hunter, for he was not their common enemy? The bear refused, saying that a guest must be protected by all means, and he would not break the law of hospitality. With this higher thought the bear closed his eyes, sleeping the sleep of the just.

 

The tiger then turned to the fugitive, and asked him to hurl down the sleeping bear. This man did. The bear, however used to such mishaps, caught another branch and saved himself.  The tiger saw a fresh opening for his talent of persuasion.

‘Look at this human, says he to the bear, is not a miserable ingrate? Down with him’.  Quietly and in the accents of benignity, the bear enunciated the eternal code:

‘A righteous man ought not to be turned from the right by the sin of a sinner. The rule of honour is inviolable. Good men have only one jewel, their unblemished contact, and they must guard it. Come what may. Be they good men or bad, be they deserving of death, still must they be pardoned and treated with mercy by one claiming to be a cultured person. For no one is above error. So then let us give up the idea of retaliation or retribution and abstain from injury even to miscreants and persecutors of mankind’.

–Ramayana 6-116. 37/45

அதிசய பிராமணன்; பிராமண அதிசயம்! (Post No.4276)

Written by London Swaminathan

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 19-26

 

Post No. 4276

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

உலகிலேயே பழைய சடங்கு ஒன்றைப் பினபற்றும் ஒரே இனம் பிராமணர்கள்; அவர்கள் உலகிலேயே பழைய சடங்கைச் செய்வதாக விக்கிபீடியா முதலிய என்சைக்ளோபீடியாக்கள் உரைக்கும்.

 

அது என்ன பழைய சடங்கு?

சந்தியாவதந்தனம்!

அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான். அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)

சங்கத் தமிழர்கள் அதிகமாகப் புகழும் கபிலன், ஒரு பிராமணன். அவரை ‘’புலன் அழுக்கற்ற அந்தணாளன்’’ என்று புலவர் பெருமக்கள் போற்றுவர். அவர்தான் சங்கத்தமிழ் புலவர்களில் அதிக கவி மழை பொழிந்தவர்.

 

அந்தக் காலத்தில் பிராமணர்கள் ஒழுக்க சீலர்களாகவும், தன்னலமற்ற ரிஷி முனிவர்களாகவும் விளங்கினர். இதனால் பார்ப்பனரையும் கடவுளையும் ஒன்றாகப் பார்த்தனர். ( இன்று அவர்கள் த்ரிகால சந்தியா வந்தனம் செய்யாததால் அவர்கள் மதிப்பிழந்து விட்டனர்)

 

திரி கால சந்தியா வந்தனம்= முக்கால சந்தியா வழிபாடு

சந்தியா= தேவியின் பெயர், சந்தி/அந்தி நேரத்தின் பெயர்0.

நான் யஜூர் வேத ஆபஸ்தம்ப சூத்திர முறைப்படியுள்ள சந்தியாவந்தனத்தை இங்கே பயன்படுத்துகிறேன். மற்றவர்கள் சில மாறுபாடுகளுடன் செய்வர். சிலர் இ தைவிடக் கூடுதலான மந்திரங்களைச் சொல்லுவர். ஆயினும் முக்கியச் சடங்குகள் மாறாது

பிராமணர்களை பூசுரர்கள், அதாவது பூவுலகில் நடமாடும் தேவர்கள், என்று மனு ஸ்மிருதி முதலிய நூல்கள் விதந்து ஓதுகின்றன. சங்கத் தமிழ் நூல்களோவெனில் பிரமணர்களை பசுக்களுடன் ஒப்பிடுகின்றன. கண்ணகியோவெனில் பார்ப்பனர்களையும், பத்தினிகளையும் விட்டுவிட்டு மதுரையை எரி! என்று அக்கினி தேவனுக்குக் கட்டளை இடுகிறாள். முதுகுடுமிப் பெருவழுதியோ பார்ப்பனர்களுக்கும் சிவன் கோவிலுக்கும் மட்டும் தான் தலை சாய்ப்பான் என்று புற நானூறு செப்பும். மாவீரன்   சேரன் செங்குட்டுவனோவெனில் மன்னனைக் கண்டித்த பார்ப்பனன் மாடல மறை யோனுக்கு துலாபரம் செய்து தன்னு டைய எடையான 55 கிலோ தங்கத்தை அளித்ததாக சிலப்பதிகாரம் முழங்குகிறது.

 

 

பிராமணர்களின் சந்தியா வந்தனம் மாக்ஸ்முல்லர் (Max Muller) வகையறாக்களின் மண்டையில் சுத்தியல் அடி கொடுக்கிறது. அதுகள், ‘ஆரியர்கள்’ என்று வேதத்தில் இல்லாத ஒரு இனத்தை கற்பித்து அவர்கள் ஐரோப்பாவிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ நுழைந்ததாக கதை கட்டின. அப்படி ஒரு குளிர்ப்  பிரதேசத்தில் இருந்து வந்திருந்தால் தண்ணீர் சம்பந்தமான சடங்குகளே இராது. பிராமணர்களோ தண்ணீர் இல்லாமல் வாழ மாட்டார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எல்லா சடங்குகளிலும் தண்ணீர்தான் முக்கியம்; உலகிலேயே தண்ணீருக்கு அதிகமான சொற்களை உடைய மொழி-சம்ஸ்கிருதம்! பிராமணர்கள் வாழும் அக்கிரஹாரம் எப்போதும் நதிக்கரையில்தான் இருக்கும்

 

பிராமணர்கள் நாள் தோறும் நதிக்கரைக்குச் சென்று சூரிய உதயத்துக்கு முன்னரும், நடுப்பகலிலும், சூரிய அஸ்தமனத்துக்கும் முன்னரும் அந்தி நேரச் சடங்குகளைச் செய்வர். இதற்கு அவர்களுக்குத் தேவையாநது தண்ணீர் ஒன்று மட்டுமே.

 

(சூரியனைக்) காணாமல், (நிழல்) கோ ணாமல், ( சூரியனை) கண்டு கொடு என்பது பிராமணப் பழமொழி)

சுருங்கச் சொன்னால், இது நீரைக் கொடுத்து, சூரியனின் அருளை வேண்டுவது. உலகில் நமக்குக் கண்ணுக்குத் தெரியும் சக்திகளில் மிகப் பெரியது சூரியன். அதற்கு ஒப்பிட உலகில் வேறு ஒரு பொருளும் இல்லை. ஒவ்வொரு நிமிடமும் அதற்குள் பல கோடி ஹைட்ரஜன்  குண்டுகள் வெடிப்பதால் நமக்கு சக்தி கிடைக்கிறது. சூரியன் அழிந்தால் எட்டாவது நிமிடத்தில் பூமி இருண்டு விடும்; சில தினங்களுக்குள் உயிர் இனங்கள் அழியத் தொடங்கும்.

 

இதனால் கடவுளுக்கு நிகராக ஒரே ஒரு பொருளை மட்டுமே – ஒளியை – சூரிய ஒளியை ஒப்பிட்டனர். அதற்குப் பின் சக்தியின் வடிவான காயத்ரீ தேவியை வழிபடுவதே சந்தியா வந்தனத்தின் முக்கிய கட்டம்.

 

இதைச் செய்ய பத்து நிமிடம்தான் ஆகும். அதற்குள் 100 முதல் 150 பெயர்களை அவர்கள் சொல்லுவர். தனது கோத்திரம், குலம் சூத்திரம், அவர்களுக்கு மூலமான ரிஷிகளின் பெயர்க ளைப் பகருவர். நவக்கிரகங்களின் பெயர்களையும் மொழிவர். திசைகள், “கை தொழு எழுவர்” என்று சங்க நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களை  வழிபடுவர்.

 

கிருஷ்ணரும் அர்ஜுனரும் பழங்குடி மக்கள் ( கோண்டுகள் – கோண்ட்வானா லாண்ட்= காண்டவ வனக் காட்டு மக்கள்) வாழும் காண்டவ இனக் காடுகளை அழித்தபோது, நாகர்களுக்கும், பாண்டவர்களுக்கும் மிகப்பெரிய பகைமை மூண்டது. அதற்கு சமாதனம் செய்ய ஜரத்காரு, ஆஸ்தீகர் ஆகியோர் வந்தனர். நர்மதை நதிக்கரையில் ஜனமேஜயன் செய்த சர்ப்ப யாகம் (நாகர் படுகொலை) நிறுத்தப்பட்டது. பரீக்ஷித் மஹாராஜன் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக இது நடத்தப்பட்டது. அப்பொழுது மயன் தலைமையில் சென்ற ஒரு குழு தென் அமெரிக்காவில் மாயன் (MAYAN)  நாகரீகத்தை நிறுவியது; ( எனது பழைய ஆய்வுக் கட்டுரையில் முழு விவரம் காண்க) இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவமும் பிராமணர்களின் சந்தியா வந்தனத்தில் இடம் பெறுகிறது.

நான் லண்டன் மாநகரில் தேம்ஸ் நதி தீரத்தில் தினமும் இரு முறை  மட்டுமே சந்தியா  வந்தனம் செய்கிறேன். மதிய வேளைகளில் வெளியே இருப்பதால் செய்ய இயலவில்லை. ஒருநாள், நாம் எவ்வளவு பெயர்களை இதில் சொல்கிறோம் என்று கூட்டல், கழித்தல் கணக்குப் போட்ட போதுதான் 100 பேருக்கும் மேலாக வந்தது தெரிந்தது. அதுவும் தொல்காப்பியர் சொல்லும் கடவுளர் பெயர்கள் அதில் இருப்பதும், உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதம் சொல்லும் காயத்ரி மந்திரம் அதில் இருப்பதும் வியப்பை ஏற்படுத்தியது. 6000 ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதி தீரத்தில் நம்மவர் செய்த ஒரு சடங்கை இன்று வரை கடைப்பிடிப்பதால் என்னை நானே படிம அச்சு (FOSSIL) — பழங்காலச் சுவடு– என்று நினைத்து பெருமை அடைந்தேன்.

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னர் “பிராமணர்  இல்லையேல் தமிழ் இல்லை” (No Brahmins, No Tamil) என்று சங்க காலம் பற்றி ஒரு கட்டுரையும், பிராமணர்களை கின்னஸ் நூல் சாதனைப் புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று ஒன்பது கட்டுரைகளையும் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இதையும் படிக்க வேண்டுகிறேன்.

 

சிலர் நர்மதை நதி பற்றிய மந்திரம் சொல்லுவதில்லை; வடக்கத்தியர் நகக்கிரஹ தர்ப்பணம் செய்வதில்லை. ஆகாயால்தான் கூட்டல் கழித்தலுக்குப் பின்னர் நூற்றுக்கு மேலான பெயர்கள் என்று சொன்னேன். யமனுக்கு மட்டுமே பத்து பெயர்கள் வரை சொல்லுகிறோம்.

 

சந்தியாவந்தனம் பற்றிய இன்னொரு வியப்பான செய்தி– காயத்ரி தேவியை  “உன்னுடைய மலை உச்சியில் உள்ள வீட்டுக்குப் போகலாம்” என்று விடை கொடுத்து அனுப்புகிறோம். இந்த “சிகர” என்ற வார்த்தையை (ZIGGURAT) ஜிக்குராட் என்று அழைத்தனர். சுமேரியர்களும் மலை உச்சியில் தெய்வத்தை வைத்தனர். ஆனால் அது எல்லாம் மியூசியங்களுக்குப் போய்விட்டன. மோசசும் ஜீசசும் தோன்றும் முன்னர் துவங்கிய சந்தியா வந்தனத்தைச் செய்யும் பிராமணர் ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறத் தகுதி உடையவர்களே.

 

தினமும் மூன்று முறை சந்தியா வந்தனம் செய்யும் பிராமணனைக் கண்டால் ஒரு பெரிய கும்பிடும் போடுங்கள்.

நிற்க; இதோ பிராமணர் சொல்லும் தெய்வங்கள், புனிதர்களின் பட்டியல்:-

ஓம், அச்யுதா, அனந்தா, கோவிந்தா, விஷ்ணுவின் 12 பெயர்கள்- கேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு. மது சூதனா, த்ரிவிக்ரமா, வாமனா, ச்ரீதரா, ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா,

கணேச தியானம், (ஆதி சைவர்களாக இருந்தால் சில மாறுபாடுகள் உண்டு)

 

ஏழு லோகங்கள்- பூர், புவ, சுவர், மஹ, ஜன, தபோ, சத்ய லோகங்கள்

காயத்ரீ மந்திரம் பல இடங்களில் வருகிறது

பரமேஸ்வர (ப்ரீத்யர்த்தம்); வைணவர்கள் வேறு பெயர் சொல்லுவர்.

ஆப: (நீர்), சூர்யன், அக்னி,

பிரம்மன் (பிரும்மா அல்ல), நவக்கிரஹங்கள்- சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், ப்ருஹஸ்பதி, சுக்ர, சனைச்சர, ராஹு ,கேது

பிரம்மா, பரமாத்மா,

சப்த ரிஷிகள்: அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட,கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ்

 

யாப்பிலக்கண அணி: காயத்ரீ, உஷ்னிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதி

ஏழு வேத காலக் கடவுளர்: அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விச்வே தேவா, தேவதா:

 

வாமதேவ ரிஷி, காயத்ரீ, சாவித்ரீ, ஸரஸ்வதீ, விச்வாமித்ர ரிஷி

அபிவாதயே என்னும் மந்திரத்தில் ஒருவருடைய கோத்ரம், ரிஷிகளின் பெயர்கள் வரும். எடுத்துக் காட்டாக எனது குலத்தில், வைஸ்வாமித்ர, அகமர்ஷண, கௌசிக, ஆபஸ்தம்ப, ஸ்வாமிநாத: (My name)

 

சந்தியா, சாவித்ரி, காயத்ரீ, சரஸ்வதி, சர்வ தேவதா:

(சில பெயர்கள் திரும்பத் திரும்ப வரும்; கூட்டல் கழித்தலுக்குப் பின்னரும் 100 பெயர்களுக்கு மேல்!)

 

4 திசைகள் – கிழக்கு, தெற்கு, மேற்கு வடக்கு திசைகளுக்கு வந்தனம்

மேல், கீழ், இடைவெளி,பூமி, ம்ருத்யவே,

யமன்

 

(யமன், வருணன், சூரியன், காயத்ரீ முதலிய தெய்வங்களுக்கு பத்து, பதினைந்து சிறப்புப் பெயர்கள் வரும். அவைகளையும் சேர்த்தால் 150 பெயர்கள் வரை செல்லும்)

 

எடுத்து க்காட்டாக யமன் பற்றிய பெயர்களை மட்டும் தருகிறேன்:

யமன், தரமராஜன்,ம்ருத்யவே, அந்தகாய, வைவஸ்தாய, காலாய, சர்வபூதக்ஷயாய, ஔதும்பராய, தத்னாய, நீலாய, பரமேஷ்டினே, வ்ருகோதராய, சித்ராய, சித்ரகுப்தாய.

 

பின்னர் க்ருஷ்ண பிங்களம் ( சங்கர நராயணன்= ஹரிஹரன்)

 

நர்மதை நதிக்கு வணக்கம்- ஜனமேஜய, ஆஸ்தீக மகரிஷி- ஜரத்காரு- பன்னகேப்ய:-

சூரியன் பற்றிய நீண்ட மந்திரம்

நாராயணனுக்கு எல்லாம் சமர்ப்பணம்

 

சவித்ரு தேவன்

ஓம் தத் சத்

90 பெயர்களுக்கு மேல் வரும் தெய்வங்களோடு யமன் பற்றி வரும் 13 பெயர்கள் மற்றும் இது போல ஒவ்வொரு மந்திரத்திலும் வரும் பெயர்களைச் சேர்த்தால் 150 பேருக்கும் மேலாக வரும்!

 

வாழ்க பிராமணர்! வளர்க சந்தியாவந்தனம்!!

 

Please read my old articles:-

Brahmins deserve an entry in to Guinness Book of Records …

tamilandvedas.com/2012/01/26/327

Brahmins deserve an entry in to Guinness Book of … That is why I say Brahmins deserve a mention in the Book of Records. 32. … by Tamil and Vedas on January 26, …

Brahmins deserve an entry in to Guinness Book of Records -Part 5

  • Brahmins | Tamil and Vedas
  • tamilandvedas.com/category/brahmins
  • … Asoka mentioned Brahmins first and … //tamilandvedas.com/2017/05/30/about-brahmins-buddha-and … “Brahmins deserve an entry in to Guinness Book of …

·         No Brahmins, No Tamil!! | Tamil and Vedas

tamilandvedas.com/2012/01/14/no-brahmins-no-tamil

No Brahmins, No Tamil!! … political parties in Tamil Nadu has misled the public to a great extent that they really believed Brahmins were aliens to Tamil culture.

·         No Brahmins, No Tamil!! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2012/01/no-brahmins-no-tamil.html

No Brahmins, No Tamil!! By S Swaminathan … literature would find out that without Brahmins Tamilwould have died or at least become poorer two thousand years ago.

–SUBHAM—

 

TAGS: பிராமணன், அதிசயம், சந்தியவந்தனம், 100 கடவுள்

 

 

கோஹினூர் வைரம் மீட்கப்படுமா? – 2 (Post No.4275)

Written by S.NAGARAJAN

 

 

Date: 6 October 2017

 

Time uploaded in London- 7–25 am

 

 

Post No. 4275

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

உலகின் ஒப்பற்ற வைரம் கோஹினூர், மீட்கப்படுமா? – 2

 ச.நாகராஜன்

 

“அழுத்தம் இல்லையேல் வைரம் இல்லை – தாமஸ் கார்லைல் (No Pressure, No Diamond   – Thomas Carlyle)

 

 

கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும்.

அதில் அவர் கூறியிருப்பது :- சிம்மாசனத்தின் வெளிப்புற குடை எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள் மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும் . இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன. ஒவ்வொஇருந்ததுரு தூணின் மேலும் நெருக்கமாக இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால் ஆன மரம் ஒன்று இருந்தது.

இந்த அழகிய மயிலாசனத்தில் இரண்டு அபார மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று கோஹினூர் வைரம்.

இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில் உச்சியில் ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில்  பதிக்கப்பட்டிருந்தது.

 

 

  இப்படி ஒய்யாரமாக கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும் (இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.

இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால் உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.

‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்; அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு புகழ்ந்தனர். இருபது லட்சம் பேர் அப்போது டில்லியில் வசித்தனர். இது லண்டன், பாரிஸ் ஆகிய இரு நகரங்களையும் சேர்த்துப் பார்த்தால் ஜனத்தொகையில் அதை விட அதிகம்!

ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.

1739ஆம் ஆண்டு டில்லியின் மீது நாதிர் ஷா படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ரத்த ஆறு ஓடியது. கஜானா காலியானது. டில்லி அழுதது.

நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம் எவ்வளவு? கணக்கிலடங்காதது. அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள் தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு இருந்திருக்கும்!

இன்றைய நவீன யுக கம்ப்யூட்டர்கள் காட்டும் படங்களில் வரும் செல்வத்தை விட இது அதிகம்.

இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.

நாதிர்ஷா தான் கொள்ளையடித்ததில் தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் – அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்க்லாக!

இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.

இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.

 

ஆப்கனிஸ்தான் என்று பின்னால் அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின் வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.

இவர்கள் பற்றிய வரலாறு மிகவும் சுவையானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப் பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக் கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.

இந்த சண்டைகளுக்கு இடையில் அவுரங்கசீப் ஆட்சி கவிழவே, அதிகார மையம் இல்லாமல் போய் இந்தியாவில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டது.

இதற்காகவே காத்துக் கொண்டிருந்த பிரிட்டன் தன் காலனி ஆசையைத் தீர்த்துக் கொள்ள இதுவே சமயம் என்று எண்ணி யது

ஈஸ்ட் இந்தியா கம்பெனி வந்தது; இந்திய சுதந்திரம் பறி போனது; பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது.

முகலாயர்களின் கொள்ளை ஒரு புறம், பெர்சியா, ஆப்கன் கொள்ளை மறு புறம் என்று தன் செல்வத்தை இழந்திருந்த இந்தியா மீதி இருந்த அரிய செல்வத்தை பிரிட்டிஷாரிடம் இழக்க ஆரம்பித்தது. கூடவே தன் திறமையையும் அன்னிய ஆட்சியால் பல்வேறு துறைகளில் இழந்தது.

பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.

1761இல் டில்லி கொள்ளையடிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுத்த சம்பவமாக ரஞ்சித் சிங் கருதியதோடு ஆப்கனை ஆண்ட துரானி வமிசத்திடமிருந்து இந்தியாவிலிருந்து அவர்கள் அபகரித்த ஏராளமான விளைநிலங்களையும் மீட்டார்.

 

வைரம் வந்த போது நிலங்களும் மீண்டன; கௌரவமும் திரும்பியது. என்று அவர் எண்ணியதில் தவறே இல்லை

பஞ்சாபின் சிங்கம் என்று புகழப்பட்ட சீக்கிய மன்னரான ரஞ்சித் சிங்கின் வரலாறு சுவையான ஒன்று.

1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.

அம்மையால் பாதிக்கப்பட்டு இடது கண் பார்வையை இழந்தார். அசகாய சூரரான ரஞ்சித் சிங் பத்தாம வயதிலேயே தன் தந்தையுடன் முதல் போர்க்களத்தைக் கண்டார்.

மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக அவர் விளங்கினார்.

ஆனால் அவரது காலமும் ஒரு முடிவுக்கு வந்தது.பஞ்சாபின் துயரமான நாளாகக் கருதப்படும் 1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி வந்தது.

பஞ்சாபின் தலை நகரான லாகூரே அழுதது – தன் மன்னனை இழந்து. அன்று –

Mahatma Gandhi in London.

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

அறிவியல் வளர்ச்சியால் எங்கு பார்த்தாலும் கிராமபோன் ரிகார்டுகள் பரவத் தொடங்கிய பழைய காலம்.

மஹாத்மா காந்திஜி வட்டமேஜை மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்தார்.

கொலம்பியா கிராமபோன் கம்பெனிக்கு ஒரு ஆசை.எப்படியாவது காந்திஜியின் குரலை கிராமபோனில் பிடித்துவிட வேண்டும் என்று.

தனது தொழில்நுட்ப டெக்னீஷியனை அவர் பேச்சை ரிகார்ட் செய்ய அனுப்பி வைத்தது.

ஆனால் காந்திஜி அரசியல் பேச்சை ரிகார்ட் செய்வதைத் தான் விரும்பவில்லை என்று உறுதியாகக் கூறி விட்டா. ஆறுதலாக, ‘வேண்டுமானால் கடவுளைப் பற்றிப் பேசுகிறேன்’, என்றார்.

முன்னதாகவே தயார் செய்த தனது பேச்சை ஆறு நிமிடம் பேச அதை சந்தோஷத்துடன் பதிவு செய்தது கொலம்பியா கம்பெனி.

உலகெங்கும்  பரவலாக விரும்பிக் கேட்கப்படும் ரிகார்டாக அது ஆனது.

 

Gandhiji going to Round Table Conference in London.

 

விரும்புவோர் இன்றும் கூகிளில் அதைக் கேட்டு மகிழலாம்.

அறிவியல் செய்த பல நல்ல காரியங்களுள் ஒன்றாக மஹாத்மாவின் கடவுள் பற்றிய உரை நமக்கு நிரந்தரமாகக் கிடைத்துள்ளது!

***

பூமிக்கு பாரம் யார்? வேதப் பிரான்பட்டர் பதில் (Post No.4274)

Written by London Swaminathan

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 17-45

am

 

Post No. 4274

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பூமிக்குப் பாரம் யார்? இந்த பூமி சுமப்பதே வீண் என்று யாரைச் சொல்லலாம்?

 

5X 5 + 5 தெரியாதோர் இந்த உலகில் வாழ்வதே  பிரச்சினைதான்!

 

இது என்ன பிரமாதம்? விடை முப்பது 5X5+5=30!

 

வேதப் பிரான் பட்டர் சொல்லும் 30 அதுவல்ல.

வையம் புகழும் பாவைப் பாடல் முப்பதை அவர்  குறிப்பிடுகிறார்.

 

திருப்பாவை தெரியாதோரை இந்த பூமி சுமப்பதே வீண்.

 

இதைச் சொல்வதையும் அழகாகப் பாடல் வடிவில் பகர்வார்

 

பாதகங்கள் தீர்க்கும்

பரமன் அடிகாட்டும்

வேதமனைத்துக்கும்

வித்தாகும்- கோதைத் தமிழ்

ஐயைந்து மைந்தும்

அறியாத மானிடரை

வையம் சுமப்பதூஉம் வம்பு!

 

–வேதப் பிரான் பட்டர், ஆண்டாள் வாழித் திருநாமம்

வம்பு

ஆனந்த விகடன் அகராதி (1937-ம் ஆண்டு) தரும் பொருள்:-

கயிறு, அசப்பியம் ( சபைக்கு அடாத சொல்), சண்டை, தீச் செயல், தீச் சொல், நிலையின்மை, புதுமை, மிடா (பானை), முலைக் கச்சு, வாசனை, வீம்பு.

xxxx

கிரியா அகராதி தரும் அர்த்தம்:–

Unnecessary trouble; issue leading to quarrel; gossip

 

 

சுமப்பது என்ற வினைச் சொல்லை பொறுக்கி எடுத்திருப்பது ஆழந்த சிந்தனைக்குரியது. ‘கழுதை பொதி சுமக்கும்’ என்று சொல்லுவோம். அது போல பாரம்தான் திருப்பாவை தெரியாத, படியாத, கேளாத அறிவிலிகள்!

 

அடுத்த படியாக ‘வம்பு’ என்ற சொல். இதற்குப் பல பொருள் உண்டு.

நான் யார் தெரியுமா?

‘வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன்; வந்த சண்டையை விட மாட்டேன்’ என்று வீராப்பு பேசுவோம்.

 

‘அவள் ஊர் வம்புக்குக் கிடந்து அலைகிறாள்’ என்று சிலர் மீது புகார் சொல்வோம்.

 

‘வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்காதே’ என்றும் கேட்டிருப்போம்.

வேதப் பிரான் சொல்லும் ‘வம்பு’ எதுவோ?

ஊர் வம்பு பேசும் வெட்டிக் கும்பலில் ஒருவர்; சபைக்கு ஏற்றதல்லாத சொற்களைப் பேசும் ஆட்களில் ஒருவர் என்று சொல்லுவதே சாலப் பொருத்தம்.

 

ஆக திருப்பாவை என்பதும் ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழி என்பதும் (143 பாடல்கள் ) பெண் இனத்துக்கே பெருமை சேர்ப்பதாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு TEENAGE GIRL –டீன்  ஏஜ் கேர்ல்– பெண்– இப்படி ஊர்ப் பெண்களை (gossip) வம்பு பேசவிடாமல்- திருமாலின் பெருமைதனைப் பேச அழைத்திருப்பது அதிசயம்தானே. இவருக்கும் முன்னால் காரைக்கால் அம்மையாரைக் காண்கிறோம், மங்கையற்கரசியைக் காண்கிறோம், சங்கத் தமிழ் இலக்கியத்தில் இருபது பெண் புலவர்களைக் காண்கிறோம்; அவர்களில் மாமணியாக விளங்கும் அவ்வையாரையும் அறிவோம். ஆனால் ஆண்டாள் போல இளம் வயதும் இல்லை; கோழி கூவுவதற்கு முன்னால் ஊர்மக்களை, பெருமாளின் பெருமையைச் சொல்லி அழைத்த ஆண்டாளின் திருப்பாவை 5X 5 +5 = 30 அறியாதோர் பூமிக்கு வம்பு, பாரம், குப்பை!

 

நாமும் ஆண்டாள் பெருமையைப் பாடுவோம்:–

 

திரு ஆடிப் பூரத்து செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே!

 

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மரு ஆரும் திருமல்லி, வள நாடி வாழியே!

வண் புதுவை, நகர்க் கோதை, மலர்ப் பதங்கள் வாழியே!!!

 

 

 

–SUBHAM—

100 Gods in Daily worship! Brahmin Wonder!! (Post No.4273)

Written by London Swaminathan

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 8-36  am

 

Post No. 4273

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

It is amazing to see that Brahmins worship nearly 100 gods and saints everyday in their worship. Seven Vedic gods, seven seers (rishis), Goddess Gayatri, nine planets,  historical figures like Janamejaya, Jarat karu, Astika and their Gotra(clan) seers (rishis), Yama (god of death), four directions are included in their worship. But some are optional. They do it three times a day! (but I do only two times every day). It is a great wonder they have been doing it for over 5000 years without break. No modern religion existed at that time except Hinduism. Brahmins are like fossils who preserve the oldest rituals in the world. in the olden days, they were called Angels on Earth because of their character and selfless service. Sangam Tamil poet Kabilar, who contributed highest number of poems to Sangam corpus is praised by other poets as a Brahmin of spotless character ( Pulan Azukkatra Anthanaalan). It was sung 2000 years ago. He was a revolutionary Brahmin who opposed the three great Tamil Kings Chera, Choza and Pandya and took two daughters of a philanthropist chieftain called Pari and begged to every Kshatria to marry them. A man who did selfless service without any caste differences. At the end, he sacrificed himself in the fire like the great Ramayana Rishis (seers) and the tribal woman Sabari.

Now back to daily worship of Brahmins:–

 

 

Brahmins have been doing a daily ritual called Sandhya Vandanam. It is Sun Worship three times a day. In the morning before sunrise, in the noon and in the evening before sunset Brahmins do it. And in the olden days other two castes (Kshatriyas/warriors and Vaisyas/Businessmen) were also doing it. After wearing the sacred thread at the age of 7 or 9 or 11 respectively the males of 3 castes started doing it. It is a water ceremony. They can’t do it without water.

 

(This explodes the Max Muller Myth about Vedic Hindus coming from cold central Asia or Europe. This is the oldest ceremony followed by any community in the world. Had they lived in cold countries they would not have used WATER. Hindus take bath everyday where as other communities don’t do it. So Hindus are the sons of the soil- India. During 3 times Sandhya vandana they have to use water over 100 times!!!!!!!!!!!!)

 

In this article, I am going to show you a wonder the Brahmins do every day. As a Brahmin I do it twice a day instead of thrice a day on the banks of River Thames in London. When I counted the number of saints and Gods in the ritual I was surprised.

 

Though different sects of Brahmins slightly change it, the main rituals are same. They use the oldest book in the world- the Rig Veda in addition to other Vedic scriptures.

 

Let us count the number of Gods according to Yajur Veda (smarta) followers:

 

Lord Ganapathi

 

1-3:- First they purify themselves by taking three sips of water by reciting Achyuta, Anantha and Govinda

 

4-15: Then they do touch twelve parts of the body with water while reciting 12 names of Vishnu (though Govinda is repeated here I will include it):–

 

Keshava, Narayana, Madhava, Govinda, Vishnu, Madhusoodana, Trivikrama, Vamana,Sridhara, Hrushikesa, Padmanabha, Damodara.

  1. Then they worship Lord Ganapathi facing sun in the east.
  2. Om is also added with most of the Mantras

 

18-24.Here they do recite the names of seven Lokas (holy spheres)

Bhu, Bhuvaha,Suvah, Mahah, Janah, Tapah, Satyam

 

  1. The most powerful mantra Gayatri is recited in several places

 

  1. In the Sankalpa (intention to do this ritual or Vow) They do say ‘Parameswara/ Siva’ (other sects may have different God’s names)
  2. Then Apah/water is worshipped/praised

28.Then Surya/Sun or Agni /Fire mantra is recited

  1. Brahman’s name– The Supreme Being– comes in the Upanishad mantra, identifying f the self with the supreme God (brahmai vaham asmi)

30.-38 At the end of the first part water is offered to Nine celestial objects. 12 names of Vishnu are also recited, which we have already included.

SECOND PART of Sandhya Vandana

39.Brahma

40.Paramatma

41-46: Seven Seers: Atri, Bruhu, Kutsa, Vasistha, Gautama, Kasyaa, Aangiasa:

47-53: Seven meters are recited; they mean the some meters in prosody and Goddesses as well:

Gayatri, Ushnik, Anushtu, Brhati, Pankti, Trishtup, Jagatya

 

( I have included Gayatri in the count because it may be  considered a grammatical term here)

54- 60 Seven Vedic Gods are worshipped here

Agni, Vayu, Arka, Vageesa, Varuna, Indra, Visvedevatah

(Note Agni comes for the second time)

Then Gayatri is worshipped

61 and 62 :Visvamitra Rishi’s name and Savita’s name are recited

 

63 Gayatri is asked to go to her abode: Uttame Shikare (Mount Meru is mentioned ; she resides on top of a mountain like Babylonian Gods; Ziggurat= Shikara)

64.Sun God is worshipped

65.Mitra is worshipped

(Then comes Sun and Varuna; we have already counted their heads)

66-69: Four Devis in four directions and ‘All gods’ are worshipped: Sandhya, Savitri, Gayatri, Saraswathy, Sarva Devatas

 

70 to 75: during personal salutation we give our name, our Gotra name, names of the rishis in the Gotra (clan or group) , Sutra name ( in my case I say Vaisvamitra, Aghamarshana, Kausika,Apastamba Sutrah ; My name swaminathan etc)

 

76-79: Four Directions are worshipped

80, 81, 82,: Upper Region, Middle region, Sky

 

83 and 84- Yama and his assistant Chitragupta

85.Harihara (Krshna Pingalam)

 

PM NARENDRA MODI WORSHIPPING RIVER NARMADHA

 

86, 87, 88, 89, 90-Certain people do Narmadha vandanam where the names of River Narmada, and historical figures Janamejaya, Astika, Jaratkaru, Nga Kings Pannakebhya are worshipped

(Some people don’t do it)

91.Narayana

  1. Krishna

93.Om Tat sat

 

In each mantra every god has several attributes; for instance in the Yama vandana, God of death (Yama) is praised as 1)Yama, 2)Dharmaraja, 3)Mrtyu, 4)Andaka, 5)Vaivasvata, 6)Kaala/Time, 7)Sarvabhutakshayaya, 8)Audumbaraya, 9)Dadnaya (death= dadnaya), 10)Neelaya, 11)Vrkodaraya, 12)Chitraya, 13)Chitraguptaya

If we include all the names for Sun, Yama, Varuna it will exceed over 100 names.

 

Followers of  other Vedas such as Rig Veda, Sama Veda they have longer and additional mantras. So it is definitely over 100 Gods at one go.

 

Normally it will take 20 minutes to finish it even if one recites Gayatri mantra 108 times. So a Brahmin who does Tri Kala (three times a day) Sandhya vandana do one hour or less worship by reciting over names of 100 Gods and Seers/rishis!

 

Long Live Brahmins who do Tri Kala Sandhya Vandana. They are historical wonders!

Students of Jabalpur Veda Patasala

Please read my old articles:-

Brahmins deserve an entry in to Guinness Book of Records …

tamilandvedas.com/2012/01/26/327

Brahmins deserve an entry in to Guinness Book of … That is why I say Brahmins deserve a mention in the Book of Records. 32. … by Tamil and Vedas on January 26, …

Brahmins deserve an entry in to Guinness Book of Records -Part 5

  • tamilbrahmins.com
  • Brahmins | Tamil and Vedas
  • com/category/brahmins
  • … Asoka mentioned Brahmins first and … //tamilandvedas.com/2017/05/30/about-brahmins-buddha-and … “Brahmins deserve an entry in to Guinness Book of …

·         No Brahmins, No Tamil!! | Tamil and Vedas

tamilandvedas.com/2012/01/14/no-brahmins-no-tamil

No Brahmins, No Tamil!! … political parties in Tamil Nadu has misled the public to a great extent that they really believed Brahmins were aliens to Tamil culture.

 

 

·         No Brahmins, No Tamil!! | Swami’s Indology Blog

swamiindology.blogspot.com/2012/01/no-brahmins-no-tamil.html

No Brahmins, No Tamil!! By S Swaminathan … literature would find out that without Brahmins Tamilwould have died or at least become poorer two thousand years ago.

 

-SUBHAM–

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன? (POST No.4272)

Written by S.NAGARAJAN

 

 

Date: 5 October 2017

 

Time uploaded in London- 5-35 am

 

Post No. 4272

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Russian stamp for English Poet John Milton

 

கம்பன் கவி இன்பம் :கே.என்.சிவராஜ பிள்ளையின் கம்பராமாயண கௌஸ்துப மணிமாலை (கட்டுரை எண் 5)

24-9-17 அன்று வெளியான கட்டுரை எண் 4239-இன் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.

 

வர்ஜில், ஹோமர், மில்டனைப் புகழக் காரணம் என்ன -வால்மீகி, கம்பரைத் தெரியாததால் தான்!

 

ச.நாகராஜன்

 

கம்ப ரஸிகர் கே.என்.சிவராஜ பிள்ளையின் இனிய பாக்களைத் தொடர்ந்து பார்ப்போம்:.

 

பாடல் 11

குமுத வாயிற் குழவி மிழற்றுறும்

அமுத தாரை இனிதென் றசைத்தஅவ்

விபுதன் நூலொடு மெய்ப்ப்ல கைக்கணே

சமனில் நின்று தயங்கத் தகுவது

 

பொருள்: குமுத மலர் போலும் இதழ்களுடைய சிறு குழந்தைகள் குழறும் கொச்சைச் சொற்கள் குழலினிலும், யாழினிலும் இனிமையுடையனவென்று கூறிய தெய்வப்புலவர் திருவள்ளுவ நாயனார் செய்துள்ள தமிழ் மறையாகிய குறளோடு சங்கப் பலகையிற் சமனாக நிலவி நிற்கத் தகுதி வாய்ந்துள்ளது இக் கம்ப ராமாயண மகா காவியம்.

குறிப்பு: கம்ப ராமாயணம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்னே கடைச்சங்கம் இறந்து போயினமையால் இந்நூல் சங்கப்பலகை ஏறாதொழிந்தது எனக் கூறல்

மிகையாகாது.

Greek Poet Homer on coin

பாடல் 12

அங்கம் சேரும் அவயவ சாலத்துள்

துங்கம் சேரொண்மை சூட்டும் முகமன்றே;

திங்கள் போலும் முகத்திற் கெழில்நிலம்

தங்கச் செய்வ சலச விழியரோ

 

பொருள்: ஓர் உடலைச் சேர்ந்த உறுப்புக் கூட்டத்தில் அவ்வுடலுக்கு அழகைத் தருவது முகமே ஆகும். சந்திரன் போல ஒளிரும் அம்முகத்திற்கும் அழகைப் பொழிவன ஆங்குத் தாமரை மலர் போல் விகசிக்கும் இரண்டு விழிகளுமேயாம்.

 

பாடல் 13

பாஷை மாதர் பலருளும் இன்னிசை

ஓசை மாதர் உறும்தமிழ் ஒண்டொடி

வாச வாண்முகம் வாய்ந்த விழியுகம்

ஏசில் ராமன் கதைகுறள் என்பவே

 

பொருள்: குற்றமற்ற ராமன் கதை, குறள் என்னும் இரண்டு நூல்களையும், உலகத்தில் நின்று நிலவும் அநேக பாஷைகள் என்னும் அழகிய மாதர்கள் குழுமிய கூட்டத்தில் இனிய ஒலியின்பத்தாற் சொல்லோசையின் அழகு இத்தன்மைத்தென விளக்கிக் காட்டும் தமிழாய அணங்கின் முகத்தில் இன்பாய வாசத்தையும் அறிவாய ஒளியையும் ஊட்டி இலகும் இரண்டு விழிகளென்னச் சொல்லலாம்.

 Poet from Italy -Virgil

பாடல் 14

காவி யன்றக விஞர்பூங் கானரு

காவி யன்றழ காரலர் தூவுமங்

காவி யன்றரு வன்றேஇத் தென்கவி

காவி யமணம் கான்றொளிர் கற்பகம்

 

பொருள்: (கால தேச வேற்றுமையாலும், மொழி வேற்றுமையாலும், பல்வேறு கவித்துறை வேற்றுமையாலும்) பல தொகுதியாகச் சேர்ந்து நிற்கும் கவிஞராம் காக்கள் நிறைந்திருக்கும் அழகிய மொழி ஆரண்யத்திற்கு அடுத்துத் தங்கி அழகிய மலர்களைத் தூவி விளங்கி நிற்கும் ஒரு பெரிய தருவென இவ்வெழிற்கலைஞனை யான் ஒப்பிடேன்; இக்காட்டில் நின்றும் மிக்க தூரத்தில் காவிய மணம் எக்காலத்தும் வீசிக் கொண்டு நிற்கும் ஒரு நிகரில் கற்பகத் தருவென்றே அவனை யான் சொல்லத் துணிவேன்.

 

பாடல் 15

நாமகள் அருள் நண்ணும் வரகவி

ஹோமர் வர்ஜில் மில்ற்றன் என்ன ஓதுவார்

வாமமார் வடதேச வான்மீகர் தென்

சீமையத் தமிழ்க் கம்பர்த் தெரியலார்

 

பொருள்: ஸரஸ்வதி கடாக்ஷம் பெற்று விளங்கும் வரகவிகள் ஹோமர், வர்ஜில், மில்ற்றன் என்னும் மூவரே என்று மேற்றிசையோர் கூறுகின்றனர். ஆனால் அவர் அங்ஙனம் கூறுவதற்குக் காரணம் வடதேசத்தில் அழகிய ஆரியப் புலவனாம் வான்மீகியையும் தென் தேசத்தில் இனிய தமிழ்க்கவியரசனாம் கம்பனையும் அறியாமையேயன்றி வேறன்று.

**

மேலே உள்ள அழகிய ஐந்து பாக்களில் கம்பனைப் பற்றிய கவிஞரின் உன்னதமான புகழாரத்தைக் காண்கிறோம்.

குறளுக்குச் சமமாக சங்கப் பலகையில் ஏறும் தகுதி பெற்றது கம்ப ராமாயணம்.

 

உடலுக்கு அழகு முகம்.முகத்திற்கு அழகு இரு விழிகள். அப்படிப்பட்ட விழிகளாக குறளும் கம்ப ராமாயணமும் திகழ்கின்றன.

உலகில் பல மொழிகள் உண்டு; ஒலியின்பம் மீதுற இனிய  சொல்லோசையால் அழகுறத் திகழும் இன்ப வாசம், அறிவு ஒளி என்னத் திகழும் இரு கண்கள் அல்லவா அவை!

 

 

காட்டில் விளங்கும் பெரியதொரு மரம் என இவனை நான் ஒப்பிட மாட்டேன். ஆனால் நினைத்ததை எல்லாம் தரும் கற்பக மரம் என்றே கூறுவேன்.

மேலை நாட்டினர் கவிஞர்கள் என்றால் ஹோமர்,வர்ஜில், மில்டன் ஆகிய மூவர் மட்டுமே கவிஞர்கள் என்று கூறுகின்றனர். ஏனெனில் அவர்கள் வடதிசைப் புலவனான வான்மீகியை அறிய மாட்டார். தென் திசைப் புலவனாகிய கம்பனை அறிய மாட்டார்.

Homer on Greek Stamp

 

இவர்களை அறிந்திருந்தால் அந்தக் கவிஞர்களின் நிலை என்ன ஆகுமோ

 

இப்படி அழகுற உலகளாவிய ஒரு சஞ்சாரத்தை மேற்கொண்டு வான்மீகியையும் கம்பனையும் உலக கவிஞர்கள் வரிசையில் முன்னணியில் நிறுத்தி அவர்கள் தகதிக்குத் தக்கபடி தர வேண்டிய மரியாதையை கவிஞர் சிவராஜ பிள்ளை அழகுத் தமிழில் தருகிறார்.

 

கம்ப ரஸிகரின் பாடல்கள் தொடரும்

***