பிராமணங்களில் உள்ள சுவையான கதைகள் (Post No.4347)

Written by London Swaminathan

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 6-51 am

 

 

Post No. 4347

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வேத கால இலக்கியத்தில் நான்கு பகுதிகள் உண்டு. சம்ஹிதை எனப்படும் துதிகள், தோத்திரங்கள் அடங்கியது முதல் பகுதி. இரண்டாவது பிராமணங்கள்; மூன்றாவது ஆரண்யகங்கள்; நாலாவது உபநிஷதங்கள். பொதுவாக கர்ம காண்டம், ஞான காண்டம் என்றும் பிரித்துப் பேசுவர்.

 

இந்த இலக்கியம் தோன்றிய பின்னரே உலகில் கிரேக்கம், லத்தீன், தமிழ் மொழி இலக்கியங்கள் தோன்றின. எபிரேய (ஹீப்ரூ) மொழியில் பைபிளின் சில பகுதிகள், சீன மொழியில் சில துண்டு இலக்கியங்கள் மட்டுமே அப்போது இருந்தன. மற்ற பழைய மொழிகள் இன்று வழக்கில் இல்லை.

 

பிராமணங்களிலும், வேத சம்ஹிதைகளிலும் மறை பொருளில்– ரஹசிய பாஷையில் — கவி மழை பொழிவர்- அல்லது உரையாற்றுவர்- இது புரியாத வெள்ளைத்தோல் அரை வேக்காடுகள் இதை சிறு ‘பிள்ளைத் தனமான பேச்சு’, ‘அபத்தம்’ என்றெல்லாம் எழுதிவைத்தனர். ஏனெனில் மாக்ஸ்முல்லர்களும், கால்டுவெல்களும் இந்து சமயத்தைக் குறைகூற இவைகளைக் கற்றனரேயன்றி புகழ்பாட அல்ல. மேலும் நாங்கள் வெளிநாட்டிலுருந்து இன்று வந்தோம்; ஆரியர்களும், திராவிடர்களும் வெளிநாட்டிலிருந்து அன்று வந்தனர் என்று சொல்லி, அவர்கள் ஆக்ரமிப்புக்கு நியாயம் கற்பித்தனர். ஆனால் இப்போதைய ஆராய்ச்சிகள் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னதாகவே சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் இருந்ததையும் அவர்கள் நாகரீகத்தின் உச்ச நிலையில் இருந்ததையும் காட்டுகின்றன.

 

பிராமணங்கள் என்ற சொல் மிகவும் குழப்பத்தை விளைவிக்கும் சொல். குறிப்பாக இதை ஆங்கிலத்தில் எழுதும் போது ‘பிரம்மா’ என்னும் கடவுளா, ‘பிரம்மன்’ எனப்படும் இறைவன் என்ற பொதுவான சொல்லா, பிராமணங்கள் எனப்படும் வேதப் பகுதியா அல்லது பிராமணர்கள் எனப்படும் ஜாதியா என்று 4 விதக் குழப்பம் வரும். நாம் இங்கே சொல்ல வருவது வேத கால இலக்கியமான பிராமணங்கள் எனப்படும் பகுதியே..

“ஐயா, எனக்கு இதெல்லாம் புரியாது; மேலும் சம்ஸ்கிருதமும் தெரியாது; அது மட்டுமல்ல; சம்ஸ்கிருதத்தில் உள்ள பழங்கால இலக்கியம், உலகத்திலுள்ள எல்லா பழைய இலக்கியங்களையும் சேர்த்து வைத்தாலும் அதை விடப் பெரியது; ஆகையால் நீங்கள் சொல்லுவது உண்மை என்று நான் எப்படி அறிவது? என்று கேட்பீர்களானால், நான் ஒன்று மட்டும் சொல்லுவேன். இதிலுள்ள விசயங்களின் அட்டவணையை மட்டும் பாருங்கள்; உலகிலேயே மிகப் பெரிய எண்கள், மொழி ஆராய்ச்சி, 27 நட்சத்திரங்களின் பட்டியல், வானத்தில் கிருத்திகா ரோஹிணி முதலிய நட்சத்திரங்களின் நிலைகள், பருவ காலங்கள், மனிதனின் ஆயுள் 100 ஆண்டுகள்—- என்று பெரிய பட்டியல் வரும் இதிலுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், நிலப்பரப்புகள், மன்னர்களின், ரிஷிகளின் பெயர்கள் முதலியவற் றை எடுத்தால் இன்னும் புரியும்; மன்னரின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் வேண்டும் என்று பேசும்; இவை எல்லாம் சிறுபிள்ளத் தனமானவையா? அல்ல, அல்லவே அல்ல. அக்னிக்கு 7, பிரஜாபதிக்கு 17, இந்திரனுக்கு 100 என்று மர்மமான எண்களையும் கொடுக்கும். ரிக் வேதத்தின் கவிஞர்களின் பெயர்களே 450 பேர்! உலகில் இது போல எங்கும் காண முடியாது. தமிழில் சங்க காலத்தில் 450 புலவர் பட்டியலைப் பார்க்க, நாம் வேதங்கள் தோன்றியதற்குப் பின்னர் சில ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆக வேத கால நாகரீகம் உயர்ந்த நிலயில் இருந்தது என்பதும், அவர்கள் உலகம் முழுதும் ஆரியத்தை (பண்பாட்டினை) பரப்பினர் என்பதும் வெள்ளிடை மலையென விளங்கும்.

 

ரிக் வேதத்தில் நான்கு ஜாதிகளும் தொழில் அடிப்படையிலான சொற்கள் என்றும் (10-90) அவர்கள் இறைவனின் அங்கங்கள் என்றும் துதி உள்ளது ஆனால் வெள்ளைக்கார பாதிரிகளும், திராவிட அசிங்கங்களும் சூத்திரர் என்பவர் திராவிடர் என்று பொய்யுரை உரைத்தனர். அசுரர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று பிராமண நூல்கள் பகர்கின்றன. ஆனால் வெள்ளைத் தோல்களும் மார்கஸீய வாந்திகளும் நேர்மாறாக பொய்யுரை பகன்றனர். நிற்க. ஓரிரு கதைகளைப் பார்ப்போம்.

பிராமண நூல்களில் பெரியது சதபத பிராமணம்; அதில் வரும் செய்தி:

“மனம் என்பது ஒரு பெரிய சமுத்திரம்;  அந்தப் பெருங்கடலில் இருந்து தேவர்கள், வாக்கு (சொல்) என்னும் மண்வெட்டியைக் கொண்டு, மூன்று வேதங்களைத் தோண்டி எடுத்தனர். ஆகையால்தான் இந்தத் துதியை இங்கே சொல்கிறோம் (7-5-2-52)

 

இது சிறுபிள்ளைகளுக்கும் புரியும் உவமை; சொல்லினால் ஆனது வேதம்; அதுவும் தேவர்களால் அகழ்ந்தெடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் மனதை ஒருமுகப்படுத்திய போது வானில் மிதந்த உண்மைகளைக் கேட்டனர். அதை நமக்கும் மொழிந்தனர்.

 

நல்லோரிடையே ஒற்றுமை வேண்டும் என்ற ஒரு கதை சதபத பிராமணத்திலும்,  ஐதரேய பிராமணத்திலும் உளது.

தேவர்களும் அசுரகளும் போட்டி போட்டனர்; தேவர்களுக்குள் போட்டி, பொறாமை மிகுந்திருந்தது. யார் பெரியவர்? நீயா நானா? என்று நினைத்ததால் தனித்தனி கூட்டணி அமைத்தனர்; அதுவும் ஐந்து கூட்டணிகள்! அக்னி தேவன் வசுக்களுடன் சென்றான்; சோம தேவன் ருத்ரர்களுடன் சென்றான்; இந்திரன் மருத்துகளுடன் போனான்; வருணன் ஆதித்யர்களுடன் சேர்ந்தான்; பிருஹஸ்பதியோ, விஸ்வே தேவர்களுடன் கூட்டணி போட்டான். பின்னர் அவர்கள் மனதில் ஒரு சிந்தனை மலர்ந்தது. அசுரர்கள் நம்மை வீழ்த்திவிடுவர்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு– என்று கருதி நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக (ஓருடல்) இணைவோம் என்றனர். மாபெரும் கூட்டணி!!

நம்மில் யாராவது ஒருவர் மற்றொருவரை எதிர்த்தால் அவர், இந்த அமைப்பிலிருந்து வெளியே தள்ளப்படுவார். நாம் இன்று ஒரு சத்தியப் பிரமாணத்தால் (உறுதிமொழி) கட்டப்பட்டுள்ளோம்; யாராவது இதை மீறினால்– இந்த ஒரே உடலைக் காயப்படுத்தினால், அவருக்கு அழிவு வரும்! எந்த மனிதன் இந்த ஓருடல் உடன்படிக்கையில் சேருகிறானோ அவன் வெற்றி பெறுவான்; எதிரிகளை ஒழிப்பான்.”

 

இந்த உடன்படிக்கைக்கு “தானனப்த்ரம்” என்று பிராமணங்கள் பெயர் கொடுத்துள்ளன; இதன் பொருள் “ஓர் உடல் (இணைந்த உடல்)”.

இன்றைய அரசியல் கட்சி ஒப்பந்தங்கள், ‘நாட்டோ’ போன்ற ராணுவக் கூட்டு ஒப்பந்தங்களிலும் இதே வாசகங்களைக் காணலாம். வெள்ளைக்காரர்கள் — கொள்ளைக்காரர்கள் — கணக்குப்படியே இந்த பிராமணங்கள் கி.மு 1000ல் தோன்றின. நமது கணக்குப் படியோ அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. எது எப்படியாகிலும் இதை ‘சிறுபிள்ளைத் தனமான’ இலக்கியம் என்று சொல்லும் கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் மெகாலேக்களையும் ‘அடு மடையர்கள்’, ‘மடத் தடியர்கள்’ என்று சொல்லுவது பொருத்தம்தானே?

மன்னர்களின் பட்டாபிஷேகத்துக்கு 17 வகை நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று சதபத பிராமணத்தில் ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. மன்னன் பிரஜாபதி (பிரம்மா); பிரஜாபதிக்கும் எண் 17; ஆகையால் 17 வகை நீர், மன்னனை அபிஷேகம் செய்யத் தேவை; அப்படிச் செய்தால் 17 வகை சக்தி அவன் உடலில் ஏறும் என்றும் பிராமணம் (for more details, please see my English version of this article) சொல்லும்.

 

இந்துக்கள் மத்திய ஆசியாவில் இருந்தும், ஐரோப்பாவில் இருந்தும் வந்து குடி ஏறியதாகப் பிதற்றும் பேதைகளுக்கு அறிவிலிகளுக்குச் சரியான பாடம் கற்பிப்பது வேத கால இலக்கியம்; இறப்பு முதல் பிறப்பு வரை சமயச் சடங்குகளில் தண்ணீரைப் பயன்படுத்துவது இந்துக்கள் மட்டுமே; ரிக் வேதத்தில் தண்ணீரைப் போற்றி  வரும் மந்திரங்களைப் பிராமணர்கள் இன்றும் தினசரி சந்தியாவந்தனத்தில் சொல்லுகின்றனர். தண்ணீரைக் கொது சந்தியா வந்தனம் செய்கின்றனர். ஆகையால் இவை எல்லாம் கால்டுவெல்கள், மாக்ஸ்முல்லர்கள் தலையில் விழும் இடிகள் என்று சொன்னால் அதை மறுப்பாரிலை!!!

TAGS:–பிராமணங்கள், கதைகள், சதபத, ஐதரேய, ஒற்றுமை, கூட்டணி

— சுபம், சுபம் —

விதுரர் கூறும் விதுர நீதி – 6 (Post No.4346)

Written by S.NAGARAJAN

 

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 4-51 am

 

 

Post No. 4346

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மஹாபாரதச் செல்வம்

விதுரர் கூறும் விதுர நீதி – 6

 

ச.நாகராஜன்

இதுவரை எண்கள் ரீதியாக நீதிகளைச் சொல்லி வந்த விதுரர் திருதராஷ்டிரனுக்கு இதர நீதிகளையும் கூறுகிறார்.

அவற்றில் சில:

சுகமாக இருப்பவன்

எவன் ஒருவன் வீட்டை விட்டுப் பயனில்லாமல் அயல் தேசம் செல்வதையும், பாவிகளுடைய சேர்க்கையையும்,பிறர் மனைவியைச் சேர்தலையும்,டம்பத்தையும், திருட்டையும், கோள் சொல்லுவதையும், மதுபானத்தையும் செய்யவில்லையோ அவன் எப்பொழுதும் சுகியாக இருப்பான்.

 

மூடனில்லாதவன் யார்?

 

மூடனில்லாதவன் தர்மார்த்தகாமங்களைப் படபடப்பாக ஆரம்பிக்க மாட்டான்.

அழைத்துக் கேட்கப்பட்டால் உண்மையையே சொல்லுவான்.

நண்பன் விஷயத்தில் விவாதத்தை விரும்பமாட்டான்.

பூஜிக்கப்படாவிட்டாலும் கோபிக்கமாட்டான்.

 

எங்கும் புகழ்ச்சியை அடைபவன் யார்?

 

எவன் பொறாமைப் படுவதில்லையோ,

எவன் தயை செய்கிறானோ,

பலமில்லாமல் இருக்கும் போது விரோதத்தைச் செய்வதில்லையோ,

ஒன்றையும் அதிகமாகச் சொல்லுவதில்லையோ,

விவாதத்தைப் பொறுத்துக் கொள்கிறானோ,

அப்படிப்பட்டவன் எப்பொழுதும் புகழ்ச்சியை அடைகிறான்.

 

எவன் ஒருவன் அனைவருக்கும் பிரியமானவனாகிறான்?

 

எவன் ஒரு பொழுதும் கர்வத்தைக் காட்டும் வேஷத்தைச் செய்து கொள்ளுகிறதில்லையோ,

ஆண்தன்மையால் (பௌருஷத்தால்) பிறரிடம் தற்புகழ்ச்சி செய்துகொள்கிறதில்லையோ.

மிஞ்சினவனாகச் சிறிதும் கடுமையாக வார்த்தைகளைப் பேசுகிறதில்லையோ,

அவனை மற்ற மனிதன் எப்பொழுதும் பிரியமானவனாகச் செய்கிறான், அல்லவா!

 

ஆரியர்களின் சுபாவம் என்ன?

சமாதானம் அடைந்த சண்டையை மீண்டும் கிளப்பமாட்டான்.

கர்வத்தை அடையான்.

எப்பொழுதும் பொறுமையாக இருப்பான்.

வறுமையை அடைந்து ஏழையாகி விட்ட காரணத்தால் செய்யத் தகாததைச் செய்யமாட்டான்.

தனக்கு சுகம் ஏற்பட்டாலும் அதிகமாக மகிழ்ச்சி அடைய மாட்டான்.

பிறருக்கு துக்கம் ஏற்பட்டபொழுதும்  மகிழ்ச்சி அடைய மாட்டான்.

கொடுத்து விட்டுப் பின்பு வருத்தப்பட மாட்டான்.

இவனே நல்ல மனிதன். இவனே புகழத் தக்க ஒழுக்கமுடையவன்.

இதுவே ஆரியர்களின் சுபாவம்.

 

முன்னுக்கு வருபவன் யார்?

தேசாசாரங்களையும், அங்குள்ள கொள்கைகளையும், ஜாதிகளின் தர்மங்களையும் அறிந்தவனும்,

ஏற்றத்தாழ்வை அறிந்தவனுமாக இருப்பவன் முன்னுக்கு வருகிறான். அவன் எங்கே போனாலும் சென்ற இடத்தில் உள்ள மக்களால் ஏற்கப்பட்டவனாகி அந்த மக்கள் கூட்டத்திற்குத் தலைவனாகிறான்.

 

சிறந்தவன் யார்?

டம்பத்தையும், மோகத்தையும், பொறாமையையும், பாவச் செயலையும், ராஜ த்வேஷத்தையும், கோள் சொல்லுவதையும், மக்கள் கூட்டத்தோடு பகைத்தலையும், மதங்கொண்டவர்கள், பித்தர்கள், தீயமக்கள் ஆகியோருடன் பேச்சையும் தள்ளுகிறானோ அந்தப் பேரறிவாளனே சிறந்தவன்.

 

தேவதைகள் யாருக்கு அனுக்ரஹம் செய்கிறார்கள்?

எவன் அடக்கம், சுத்தி,  தெய்வ கர்மம். மங்கள காரியங்கள், பிராயச்சித்தங்கள், பலவிதமான உலக வியவகாரங்கள்  ஆகிய இவற்றைத் தினமும் செய்கிறானோ அவனுக்குத் தேவதைகள் மென்மேலும் வளத்தை (விருத்தியை) தருகிறார்கள்.

வித்வானுடைய நீதி எப்போது நன்றாகச் செய்யப்பட்டதாகிறது?

சமமானவர்களுடன் விவாஹம் செய்கிறவன்

இழிவானவர்களுடன் விவாஹத்தைச் செய்யாதவன்

சமமாக உள்ளவர்களுடன் நட்பு கொண்டு, உணவு, உரையாடல் ஆகியவற்றைச் செய்கிறவன்,

குணங்களால் சிறந்தவர்களைக் கௌரவிக்கிறவன்

ஆகிய இந்த வித்வானுடைய நீதிகள் நன்றாகச் செய்யப்பட்டதாகிறது.

 

அனர்த்தங்கள் யாரை விட்டு விலகுகின்றன?

தன்னை அண்டி வருவோர்க்கு பகுத்துக் கொடுத்து விட்டு மிதமாக உண்ணுபவனும்,

அளவற்ற காரியத்தைச் செய்து விட்டு மிதமாக உறங்குபவனும்,

யாசிக்கப்படாமல் பகைவர்களுக்குத் தானம் செய்பவனும்,

நல்ல மனம் உடையவனாயிருப்பவனை விட்டு

அனர்த்தங்கள் விலகுகின்றன.

 

தேஜஸில் சூரியன் போல விளங்குபவன் யார்?

எவனுடைய செய்ய விருப்பப்பட்ட காரியத்தையும்,

மாறாகச் செய்யப்பட்ட காரியத்தையும் இதர மக்கள் சிறிதும் அறிகிறதில்லையோ அவனுடைய ஆலோசனை ரகசியமாகவும் நன்றாக அனுஷ்டிக்கப்பட்டதாகவும் இருந்தால் அவனுக்கு ஒரு காரியமும் நழுவுவதில்லை.

எல்லாப் பிராணிகள் விஷயத்திலும் அமைதியில் செல்பவனும், உண்மையுள்ளவனும், மிருதுவான சுபாவம் உள்ளவனும், தக்கவர்களை நன்கு மதிப்பவனும் சுத்தமான் எண்ணமும் உடையவனுமாயிருக்கிறவனும் ஆன இவன்

ஞாதிகளின் நடுவில், நல்ல ஜாதியில் உண்டானதும் தெளிவுள்ளதுமான பெரிய ரத்தினம் போல அதிகமாக அறியப்படுகிறான்.

எந்த மனிதன் தானாகவே செய்யக் கூடாத காரியங்களில் லஜ்ஜை (வெட்கம்) அடைகிறானோ அவன் எல்லா உலகத்திற்கும் குருவாக ஆகிறான்.

தவிரவும் அளவற்ற தேஜஸுடையவனும் நல்ல மனமுடையவனும் சித்தம் நிலை பெற்றவனுமாகிறான்.

அவன் தேஜஸினால் சூரியன் போல விளங்குகிறான்.

 

இப்படி விரிவாக நீதி தர்மத்தை விளக்கிய விதுரர் திருதராஷ்டிரனிடம்  பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை வழங்கி விடுமாறு அறிவுரை கூறுகிறார்.

இத்துடன் உத்யோக பர்வத்தில் உப பர்வமாக விளங்கும் ப்ரஜாகர பர்வத்தில் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முடிகிறது.

இதைத் தொடர்ந்து விதுரர் தனது உரையாடலில் மேற்கொண்டு பல நீதிகளையும் விளக்குகிறார்.

அவற்றை மஹாபாரதத்தில் படித்து மகிழலாம்; கடைப்பிடித்து வாழலாம்; மேன்மையுற்றுச் சிறக்கலாம்; தேவதைகளின் அனுக்ரஹத்தையும் பெறலாம்.

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்

***

 

INTERESTING STORIES IN THE BRAHMANAS (Post No.4345)

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 18-41

 

 

Post No. 4345

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Following stories in the Brahmanas are symbolic stories. They show that the Vedic Hindus were very intelligent and advanced in civilization. They talk about gold, goddess of speech, amicable solution, unity among good people etc.

 

“The Gods and Asuras contended together. The Gods were hostile to one another. Striving with one another for superiority, they parted into five divisions, Agni with the Vasus, Soma with the Rudras, Indra with the Maruts, Varuna with the Adityas and Brihaspati with the Visvedevas. They then reflected, ‘we are subject to our enemies, the Asuras, because we are hostile to one another. Let us unite our bodies; and whoever shall show enmity to another, let him be separated from his body. Hence anyone among our persons who have bound themselves together by an oath, who first commits an injury, falls into calamity. When a man joins in the oath ‘tananaptra’ for the purpose of overcoming his enemies, he conquers,  and his adversary is overcome.

–Taittiriya Samhita Ashtaka 6

Aitareya Brahmana 1-24 has the following story:-

The Devas were afraid, surmising the Asuras might become aware of their being disunited and seize their reign.  They marched out in several divisions and deliberated. Agni marched out with the Vasus and deliberated; Indra did go with the Rudras; Varuna with the Adityas; and Brihaspati with the Visvedevas. Thus all, having severally marched, deliberated. They said, ‘well let us put these our dearest bodies in the house of Varuna the king (water); he among us who should, out of greediness, transgress this oath, , not to do anything which might injure the sacrifice, he shall no more be joined with them’. They put their bodies in the house of Varuna. This putting their bodies I the house of Varuna the king became their ‘tananaptram (joining of bodies). Thence the Asuras could not conquer the gods’ empire, for they had all been made inviolable by the enemy”.

xxxx

 

Angiras Vs Adityas

In the beginning, there were two kinds of beings here, the Adityas and the Angiras (both children of Prajapati). The Angiras then were the first to prepare a sacrifice, and having prepared the sacrifice they said to Agni. “Please announce to Adityas there would be a Soma sacrifice tomorrow and you will be the minister.

 

The Adityas spoke to one another and wondered why should they be ministering in the sacrifice. Then they decided to have one Soma feast on their own. They brought together the material for sacrifice and told Agni, “you have announced a Soma feast for tomorrow”. We have decided to have one today itself and let Angiras be the officiating priest. They sent back the Angiras a messenger about the feast.

 

But the Angiras were very angry with Agni. You went as our messenger and why didn’t you say ‘no’. The blameless chose me and I could not say ‘no’. The Angiras then officiated for the Adityas. This is called Sadhyakri. They brought Vach (goddess of speech) to them for their sacrificial fee. They aid, we cannot accept her. If we accept her we will be the losers. So it remained incomplete. Then they brought Surya (Sun) to them and they accepted him.

Whereupon the Angiras said, “we are fit for the sacrifice office; we are worthy to receive fees. Hence a white horse was the fee for the Sadhyakri. On the front of it was a golden ornament.

 

Now Vach was angry. It asked in what respect is that one better than I? Then she went away from them. Having become a lioness she went on seizing upon everything between those two contending parties, the gods and the Asuas. The gods called her to them and so did the Asuras. Agni was the messenger of the gods and one Sharakshas for the Asura-Rakshas. Being willing to go over to the gods, she said, ‘What would be mine if I were to come over to you.

“The offering will reach you even before it reaches Agni”. She then said to the gods, “Whatsover blessing you will invoke through me, all that shall be accomplished on to you. So she went over to the gods”—Satapata Brahmana 3-5-1-13

 

xxxx

Mind is the Ocean

In the same Brahmana Vach is credited with  another service: “ Mind is the ocean. From Mind, the ocean, the gods, with Vach for a shovel, dug out the triple sciences, i.e. the Three Vedas. Wherefore this verse has been uttered – Sat Brah5-5-2-52

 

–Subham–

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

அப்பரும் ஆழ்வார்களும்- ஒரு ஒப்பீடு (Post No.4344)

 

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 14-14

 

 

Post No. 4344

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

இறைவனின் புகழ்பாடுவோர் எல்லோரும் ஒரே விஷயத்தை அழகு தமிழில்- பழகு தமிழில் – சொல்லுகின்றனர். சிலர் நெற்றியில் மூன்று படுக்கைக் கோடுகளை (விபூதி) வரைகின்றனர்; மற்றும் சிலர் நெற்றியில் நெடுக்கைக் கோடு (நாமம்) வரைகின்றனர். எல்லாம் பூமியிலிருந்து கிடைப்பனவே; வேஷம் வேறானாலும் சொல்ல வந்த விஷயம் ஒன்றே; இதை அப்பர் என்னும் திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பதிகங்களுடன் ஆழ்வார்கள் பாடிய திவ்வியப் பிரபந்த பாசுரங்களை ஒப்பிடுகையில் அறியலாம்.

இதோ ஓரிரு படல்கள் மட்டும்!

 

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்— பூதத்தாழ்வார்

 

அறிவைக் கொடுக்கும் தமிழ் நூலை இயற்றிய நான் , அன்பு அகலாகவும்,ஆர்வம் நெய்யாகவும் இனிய மனத்தைத் திரியாகவும், மெய்யுணர்வு மயமான உள்ளுயிர் கிளர்ந்தெரியும் விளக்கை நாராயணனுக்கு ஏற்றினேன்

 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக — செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று — பொய்கையாழ்வார்

 

பொருள்:-

இந்த உலகமே ஒரு அகல்; அதைச் சூழ்ந்த கடலே அதிலுள்ள நெய்;செங்கதிரே/சூரிய ஒளியே தீச்சுடர் என்று ஒளி பொருந்திய திருமாலின் (ஆழியானின்) திருவடிகளுக்கு இடர்கள் நீங்க, நான் பாமாலை சூட்டினேன்

 

இடர் ஆழி= துயரக் கடல்

 

ஆழ்வார் பாடல்களை அப்பர் பாடலுடன் ஒப்பிடுங்கள்; அழகு புரியும்.

உடம்பெனும் மனையகத்து  உள்ளமே தகளியாக

மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி

இடம்படு ஞானத்தீயா லெரிகொள விருந்து நோக்கில்

கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே

–நாலாந் திருமுறை

 

பொருள்-

உடம்பு என்னும் வீட்டில் உள்ளத்தை அகல் சட்டியாக்கி, அதில் உணர்வு என்னும் நெய்யை ஊற்றி, உயிரையே திரியாக வைத்து, ஞானத்தீயை ஏற்றினேன். கடம்ப மலர் மாலையை அணிந்த முருகனின் தந்தையான சிவனைக் காண்பதற்கான வழி இது.

 

உடலான வீட்டில், சிவமான பொருள் இருப்பது, மடமான இருளால் தெரிந்திலது; விளக்கேறிப் பார்த்துணர்தல் வேண்டும். உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து, உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக்கொள்ள, அச்சிவஞானப் பிரகாசத்திலிருந்து நோக்கினால், சிவமான   பொருளைக் காணலாம்.

கடம்பமர் காளை தாதை= கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரானின் தந்தை

 

திருமங்கை ஆழ்வார்

 

ஓடினேன் ஓடிச்சென்று உருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயமே என்பார் அப்பர் எனும் திருநாவுக்கரசர்

 

 

வாடினேன், வாடி வருந்தினேன் மனத்தால்; பெருந்துயர் இடும்பையில் பிறந்து

 

கூடினேன்; கூடி இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி

 

 

ஓடினேன்; ஓடி உய்வது ஒரு பொருளால் உணர்வு எனும் பெரும்பதம் திரிந்து

 

நாடினேன்; நாடி நான் கண்டுகொண்டேந் நாராயணா என்னும் நாமம்

என்பார் திருமங்கை ஆழ்வார். இப்படி ஒப்பிட்டுக்கொண்டே போகலாம்.

சுபம்

 

 

நான் மறை என்றால் என்ன பொருள்? (Post No.4343)

Written by London Swaminathan

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 7-32 AM

 

 

Post No. 4343

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

1.நான் மறை என்றால் நான்கு வேதங்கள்: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

2.நான் மறை என்றால்  – சொல்ல வரும் விஷயங்களை நேரில் சொல்லாமல் மறை பொருளில் (SYMBOLIC LANGUAGE, CODED LANGUAGE, SECRET LANGUAGE) நவில்வது என்று பொருள்; மறை = மறைத்துச் சொல்லுதல்

 

3.நான் மறை என்றால் – உலகம் அறியாத- மறை பொருளை– இறைவனைப் பற்றிச் (OMNIPRESENT, OMNISCIENT, OMNIPOTENT FORCE) சொல்லும் நால் வேத மந்திரங்கள்.

 

4.நான் மறை என்றால்- இந்த மந்திரங்களை மூன்று ஜாதியினர் மட்டுமே — அந்தணர், அரசர், வணிகர்– ஆகிய மூன்று ஜாதியினர் மட்டுமே அறியலாம் பிறருக்கு அறிய முடியாதபடி– அதாவது மாக்ஸ்முல்லர், கால்டுவெல் போன்ற மிலேச்சர்களுக்குத் தெரிவிக்கக்கூடாததாக மறைத்து வைக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் பிராமணர்கள், வெள்ளைக்கார பறங்கித் தலையர்க்கு வேதம் கற்றுததர மறுத்தனர். பின்னர் பேரசைக்காரப் பார்ப்பனர்கள் சிலர் அவர்களுக்கு சம்ஸ்கிருதமும் வேதமும் கற்பித்தனர்.

5.நான் மறை என்றால் “நான்” என்னும் அஹம்காரம் “மறை”யும் பொருளைச் சொல்லும் உபநிஷதங்கள் அடங்கிய தொகுதி- அதாவது அதுவே வேதத்தின் அந்தம் (முடிபு, துணிவு)- வேதாந்தம்!

யான் எனது என்னும் செறுக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் (குறள் 346)

யான்= அஹம்+காரம் (அஹம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் நான்)

 

எனது= மம+காரம் ( மம என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு “என்”னுடையது என்று பொருள்.

 

நான் மறைகளும் புரிந்துவிட்டதா?

 

–சுபம்-

அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்! (Post No.4342)

Written by S.NAGARAJAN

 

 

Date: 28 October 2017

 

Time uploaded in London- 6-19 am

 

 

Post No. 4342

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

27-10-2017 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 36வது) கட்டுரை

 

 

ஒரு அழகிய மனம் – கணித மேதை ஜான் நாஷ்!

 

 ச.நாகராஜன்

 

 

உலகின் பிரபல கணித மேதையான ஜான் நாஷின் (பிறப்பு 13-6-1928; மறைவு 23-5-2015)) வாழ்க்கையச் சித்தரிக்கும் ‘எ பியூட்டிஃபுல் மைண்ட் (A Beautiful Mind) என்ற படம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

 

2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் நாஷாக ரஸ்ஸல் க்ரோ நடித்திருக்கிறார்.

 

சில்வியா நாஸர் எழுதி 1998இல் வெளியான புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் திரைப்படம் வெளியானது.

மிக அற்புதமான ஒரு விஞ்ஞானியின் சோகமான வரலாறு அழகிய முறையில் இதில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க கணித மேதையான் நாஷ் கேம் தியரியில் பல புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தார். அன்றாட வாழ்வில் பல விஷயங்களில் முடிவெடுப்பது குறித்த இவரது கொள்கைகள் உலகின் அன்றாட நடப்புகளை நல்ல முறையில் அறிந்து கொள்ள உதவியது.

 

1994இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை இன்னும் இருவருடன் இவர் பகிர்ந்து கொண்டு பெற்றார். இத்துடன் ஏபல் பரிசையும் இவர் பெற்றார்.

 

21ஆம் வயதிலேயே தனது அருமையான் ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதி விட்டார். ஆனால் பின்னால் தான் அதை உலகம் அறிந்து மதித்தது. சிறு வயதில் அவருக்கான செல்லப் பெயர் “பெரிய மூளைக்காரன்

 

ஆலிஷா என்ற பெண்மணியைச் சந்தித்து அவர் மீது காதல் கொண்டு அவரையே மணந்தார் நாஷ்.

 

இவர் பற்றிய ஒரு முக்கியமான விஷயம் இவர் புத்தி பேதலித்தவராக இருந்தது தான்! (paranoid Schizophrenia வியாதியால் இவர் பாதிக்கப்பட்டிருந்தார்)

 

 முக்கியமான ஒரு சொற்பொழிவை நிகழ்த்த இருந்தவர் அதற்குச் சம்பந்தமில்லாமல் ஏதோ பேச ஆரம்பிக்கவே இவருக்குள்ள வியாதி வெளிப்படையாகத் தெரிந்தது. உடனடியாக மனோவியாதிக்காக சிகிச்சை நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

 

 

     திடீரென்று டெலிபோன் மணி அடிப்பது போல அவரது மூளையில் இடைவிடா ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.

அத்துடன் சிவப்பு டை கட்டிக் கொண்டிருந்த அனைவரும் பயங்கரமான கம்யூனிஸ சதிகாரர்கள் என்று அவர் நம்பினார்.

 

    நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அயல்கிரக்வாசிகளிடமிருந்து வரும் செய்திகளைப் பெற்று பிரசுரிப்பதாக அவர் நம்பினார். அந்த செய்திகளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் நம்பினார்.

  தனது மாணவர்களின் ஒருவருக்கு எல்லா கிரகங்களிலும் வண்டி ஓட்டுவதற்கான லைசென்ஸைக் கூட அவர் வழங்கினார்!

  

    சிகாகோ பல்கலைக்கழகம் அவருக்கு பெறுதற்கு அரிய ஒரு பதவியை வழங்க முன் வந்தது. ஆனால் அவர் அதை மறுத்து விட்டாஎ. ஏன் தெரியுமா? அண்டார்டிகாவின் சக்கரவர்த்தியாகும் வாய்ப்பு தனக்கு இருப்பதாக் அவர் நினைத்ததால் தான்.

 

பெரிய சக்கரவர்த்தியாக ஆகப் போகிறவர் “சின்ன பதவிகளை ஒப்புக் கொள்ளலாமா?

 

  தன்னை மிக முக்கியமான ரகசியம் வாய்ந்த ஒரு நபராக அவர் நம்பி அதற்கேற்ப நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

    குறிப்பிட்ட சில எண்களைப் பார்த்தவுடன் அது சொர்க்க்த்திலிருந்து ஒரு பெரிய ரகசியத்தைத் தெரிவிக்க வந்திருப்பதாக அவர் நம்பினார்.

 

 

இப்படி பல விதமான மனச் சித்திரங்களால் அவரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட ஆரம்பித்தது.

எதையும் மனதில் பேட்டர்னாகப் பார்ப்பது இவருக்கு கை வந்த கலை.

 

    எதிரியின் சங்கேத குறியீட்டுச் செய்திகளை மனதில் சித்திர வடிவங்களாகப் பார்த்து அந்தப் புதிரை இவர் அவிழ்ப்பதை ஹாலிவுட் படம் திறம்படச் சித்தரித்துக் காட்டும்.

 

    நார்வே சென்று ஏபல் பரிசை வாங்கிக் கொண்டு மனைவியுடன் மீண்டும் நியூ ஜெர்ஸி திரும்பினார் நாஷ். .அப்போது அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழக்கவே அவர்கள் இருவரும் விபத்தில் சிக்கி இறந்தனர்.

 

     சாதாரணமாக இருந்திருந்தால் இவ்வளவு கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்திருப்பேனோ என்னவோ, இப்படி இருந்ததால் தான் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று நாஷ் பின்னால் ஒரு சமயம் கூறினார்.

ஒரு விஞ்ஞானி உடலிலும் மனதிலும் குறைபாடு கொண்டிருந்தாவராக இருந்தாலும் கூட அதிலிருந்து மீண்டு சாதிக்க முடியும் என்பதற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் நாஷ்.

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் …

 

எக்ஸ் ரே மெஷினைக் கண்டு பிடித்த மேடம் க்யூரி அதை முதலாம் உலகப் போரில் போர்க்களத்தில் பயன்படுத்த முற்பட்டது ஒரு சுவையான செய்தி!

 

போர் மூண்ட போது அந்தக் கால கட்டத்தில் எக்ஸ் ரே எடுப்பது மருத்துவ மனைகளில் மட்டுமே முடியும்!

ஆகவே அவர் ஒரு “ரேடியாலஜிகல் காரை உருவாக்கினார். அதில் எக்ஸ்ரே மெஷினை நிறுவினார். அதை இயக்க  மின்சக்தி வேண்டுமே! அதற்காக ஒரு டைனமோவையும் காரில் நிறுவினார்.

 

பிரெஞ்சு ராணுவத்திடமிருந்து இதற்கென எந்த உதவியும் கிடைக்கவில்லை.

 

மிகவும் ஏமாற்றமடைந்த கியூரி பிரான்ஸில் இருந்த பெண்கள் சங்கத்தை நாடினார். அந்தச் சங்கமும் தேவையான பணத்தைக் கொடுத்தது.அதை வைத்து முதல் காரை உருவாக்கினார்.

 

     அதற்கு லிட்டில் க்யூஇ என்று பெயரிட்டார். அது 1914ஆம் ஆண்டு முதன் முதலாக போர்க்களத்தில் செயல்பட ஆரம்பித்தது. அவரே இதை ஓட்டினார். இதற்காக வண்டியை ஓட்டவும் அவர் கற்றுக் கொண்டார்.

    ஒரு முறை அந்தக் காரின் டிரைவர் அதை ஒரு குழியில் விடவே கார் கவிழ்ந்தது. க்யூரி சளைக்கவில்லை. காரை நிமிர்த்தி சேதமான காரின் பாகங்களை சரி செய்து காரை ஓட்டிச் சென்ரார்.

 

 

   போர்க்களத்தில் காயமடைந்த வீரர்கள் எக்ஸ் ரேயின் உதவியினால் அறுவைச் சிகிச்சையை உரிய விதத்தில் மேற்கொண்டு உயிர் பிழைத்தனர்.

போர்க்களத்தில் 200 எக்ஸ்ரே மெஷின்களை நிலையான இடங்களிலும் அவர் நிறுவினார்.

 

செயல் திறம் மிக்க அபூர்வமான பெண்மணியாக அவர் திகழ்ந்தார்.

****

 

 

WATER, WATER, EVERYWHERE IN THE HINDU VEDAS! (Post No.4341)

Written by London Swaminathan

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 18-46

 

 

Post No. 4341

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Water occupies a pre-eminent position among the five elements, in the Hindu scriptures. A Hindu cannot survive without water. From birth to death every ceremony is done with the help of water. Brahmins cannot survive without water. So they lived on the banks of the rivers. Even today all the Brahmin streets called Agraharams are on the banks of the rivers. This poohpoohed the theory of half-baked people like Max Mullers and Caldwells who thought that the Vedic Hindus came from arid or snow clad regions of Central Asia or Europe and Dravidians came from the Mediterranean regions.

 

Water is, of course, essential for every human being whether you are a Hindu or not. But no literature praised water like the Hindu scriptures. Even a today a Brahmin worships water three times a day. Apart from that, the  Hindus discovered the enormous power of water. they can create missiles with it. They can curse any one with water or give a boon to anyone with water.

 

The whole of Sanskrit literature and the Tamil literature repeated the phrase sea-clad earth thousands of times. Whenever a Tamil poet or a Sanskrit poet wants to describe the earth they will say ‘sea clad’, or ‘sea clothed earth’. Asvini  Devas, the mysterious gods of the Rig Veda, had hundred oared ships and went deep into the ocean to rescue ship wrecked people according to the Rig Veda.

 

The mighty Saraswati rives is praised as ‘ocean like’ in the Rig Veda. Modern atomic research (carbon dating of isotopes) and astronomical research (NASA satellite pictures) showed that the Saraswati River Civilization existed before the Indus valley Civilization. So, water is the mainstay of the Vedic Hindus. The Vedas reverberated on the banks of the River Saraswati for the first time.

17 Kinds of Water!

Idiots and half-baked people wrote lot of nonsense about the Vedas in ENGLISH! They wrote that the Vedic people were nomads and those people mostly wrote silly/ nonsense in Sanskrit. But when we read the Vedas we are surprised to see the subjects they deal with. For the first time 27 stars are mentioned in the Brahmana literature. Since foreign idiots knew only Greek literature, they did not know the vast topics covered in the Vedic literature. Even if you just write the titles of the subjects you will know what they knew and you wouldn’t dare to call them primitive.

 

In the consecration ceremony of a king, as given in the Satapata Brahmana there are 17 different kinds of water used in order to infuse their different kinds of vigour into the king. This shows the importance of water in the Vedic literature.

Lot of half-baked people dated the Vedic literature differently and made themselves laughing stocks. First, they wrote that the Vedic Hindus were nomads and primitive people and then in their translations of Brahmanas which were dated  200 years after the Rig Veda by them,  the world’s highest decimal number and the consecration of a king with 17 types of water, 27 stars etc are shown.

 

Even in the Rig Veda, the oldest scripture in the world, a vast area from Ganges to rivers in Afghanistan is described. The world’s biggest and oldest geography book!

 

The 17 different waters are:

1.Water from the River Saraswati

(This explodes the theory of half baked  ‘scholars’ and  Marxist idiots, because Saraswati disappeared around 2000 BCE. So Satapata Brahmana or the ceremony it denotes existed before 2000 BCE)

2.Water that rises in front of him (called males wave), when he steps into water.

(either we don’t know their geography jargon or we don’t know their coded language)

3.Water that rises behind him

4.The flowing water

5.Such water as flows against the stream of the flowing water

6.Water that flows off the main current

7.The Lord of the waters (sea?)

8.Water from a whirlpool

9.Water from a standing pool of flowing water in a sunny spot

10.Water raining while the sun shines

11.Water from a pond

12.Waters from a well

13.Dew drops

14.Honey- one kind of water

15.Embryonic waters

16.Milk- another kind of water

17.Clarified butter

When the mantra says honey, milk, clarified butter we don’t know whether they meant them or a type of water. When they said embryonic waters we wonder what it is.

But through out the Vedic literature it is said that life came from the waters. Later Puranas also showed the first Avatar of Vishnu in waters.

Prajapati (Brahma) is given the number of 17 (another mystery) and the mantra says 17 kinds of water brings together, for Prajapati is 17 fold, and Prajapati is the sacrifice.;that is why he brings together 17 kinds of water.

Water in the Rig Veda

Hymn 9 in the 10th Mandala of Rig Veda is addressed to the Waters as Divinities and the first three of the nine verses are repeated by all Brahmins at their morning ablutions (Sandhyavandanam). The same three are used in the making of firepan, as described in the Sat. Br.(6-5-1-2) in which we read,

“Hence this triplet (RV10-9-1/3) is these waters which appeared as one form.

“This whole earth dissolved itself all over the water; all this universe appeared as one form only, namely water (6-1-1-12)

“Agni, we know that source whence thou art come, – the source, doubtless, is the heavenly waters, for from the waters he first came. In the sea the manly minded kindled thee in the water—the manly minded is Prajapati; thus, in the waters Prajapati kindled thee – the man watcher hath kindled thee, O Agni, in the udder of the sky—the man watcher, doubtless, is Prajapati, and the udder of the sky is water—thee whilst standing in the third region, doubtless, is the sky. the buffaloes made thee grow in the lap of the waters—the buffaloes, doubtless, are the vital airs; thus the vital airs made thee grow in the sky—Sat.Brah 6-7-4-5

Geographically we are informed that an ocean of water surrounds the earth. Later Puranas refer to the seven concentric oceans of milk, ghee, sugarcane etc.

“He surrounds this world with water—it is with the ocean that he thus surrounds it on all sides, and hence the ocean flows round this world in a moat- Sat. Br.7-1-13

 

Hindus were the first one to describe this world ‘round’ in shape (Anda=egg) and they are the one who described the universe is round (Hiranyagarbha). I have also written about how the Hiranyagarbha gave birth to the Big Bang theory.

Satapata Brahana and other Brahmanas have lot of things about water which may be considered unintelligible (or silly by foreigners) today. The reason being they were translated into English (which I and many others follow today) by people who don’t know anything about Hindu culture; leave alone the lack of knowledge about Hindu beliefs, they were anti-Hindu which is reflected in their lectures (please read my articles on Max Muller and his bluff)

–Subham–

 

சிவ பக்த ‘க்விஸ்’ QUIZ (கேள்வி-பதில்) (Post No.4340)

Written by London Swaminathan

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 11-59 am

 

 

Post No. 4340

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

நீங்கள் தீவிர சிவபக்தரா, இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு கேள்வி-பதில் (QUIZ) போட்டி. முதலில் கேள்விகளும் இறுதியில் பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடைக்கும் வெவ்வேறு மதிப்பெண்கள் இருப்பதைக் கவனிக்கவும். 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் ‘

அதி தீவிர சிவ பக்தர், 60 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (60 to 80) நீங்கள் தீவிர சிவ பக்தர், 40 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றால் (40-60) நீங்கள் சிவ பக்தர், 20 சதவிகிதத்துக்கு மேல் (20-40) மதிப்பெண்கள் பெற்றால் நீங்கள் பக்தர்!

1.அட்ட வீரட்டானத் தலங்கள் எவை? அங்கே

சிவபெருமான் செய்த லீலைகள் என்ன? —-16 மதிப்பெண்கள்

 

2.சப்தவிடங்கத் தலங்கள் எவை?

அங்குள்ள விடங்கரின் பெயர் என்ன?

அங்கு இறைவன் என்ன நடனம் ஆடினார்?- 21 மதிப்பெண்கள்

 

3.பஞ்ச பூதத் தலங்கள் எவை? –5 மதிப்பெண்கள்

 

4.தாண்டவ சிறப்புத் தலங்கள் எவை? அசபா.ஆனந்த, ஞான சுந்தர, ஊர்த்வ, பிரம தாண்டவ தலங்களைச் சொல்லவும்.– 5 மதிப்பெண்கள்

 

 

5.கீழ்கண்ட ஆலயங்களைச் சொல்லவும்: சபாபதி ஆலயம், தியாகேசர் ஆலயம், ஐங்கரனாலயம், குமரனாலயம், சண்டேசுரனாலயம், விடையினாலயம், வடுகனாலயம்.—7 மதிப்பெண்கள்

6.சப்த(7)ஸ்தான க்ஷேத்ரங்கள் எவை?- .—7 மதிப்பெண்கள்

 

7.பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் யார்? –25 மதிப்பெண்கள்

8.நால்வர் யார்? – 4 மதிப்பெண்கள்

 

9.கீழ்க்கண்ட 10 ஊர்களின் மறுபெயர் என்ன? 10 மதிப்பெண்கள்

திருவாலவாய், கொடுங்குன்றம், திருக்கானப்பேர், கோயில், புள்ளிருக்குவேலூர், குடமூக்குநாகைக்காரோணம், திருமறைக்காடு, கச்சி, திருமுதுகுன்றம்

 

 

ANSWERS

QUESTION 1- திருக்கண்டீயுர் – பிரமன் சிரம்/தலை கொய்தது

திருக்கோவலூர்- அந்தகாசுரனை சம்ஹரித்தது

திரு அதிகை – திரிபுரத்தை எரித்தது

திருப்பறியலூர்- தக்கன் சிரம் கொய்தது

திருவிற்குடி- சலந்தாசுரனை சம்ஹரித்தது

வழுவூர்- யானையைத் தோலுரித்தது

திருக்குறுக்கை- காமனை எரித்தது

திருக்கடவூர்- யமனை உதைத்து விரட்டியது

 

QUESTION 2– திருவாரூர் -வீதி விடங்கர்- அசபா நடனம்

திருநள்ளாறு- நகர விடங்கர்- உன்மத்த நடனம்

திருநாகைக்காரோணம்- சுந்தரவிடங்கர்- வீசி நடனம்

திருக்காறாயில்- ஆதி விடங்கர்– குக்குட நடனம்

திருக்கோளிலி- அவனிவிடங்கர்- பிருங்க நடனம்

திருவாய்மூர்- நீல விடங்கர் – கமல நடனம்

திருமறைக்காடு- புவனி விடங்கர் – ஹம்சபாத நடனம்

 

QUESTION 3-

1.திருவாரூர், காஞ்சீபுரம் – பிருதிவி (பூமி)

2.திருவானைக்கா – அப்பு (நீர்)

3.திருவண்ணாமலை- தேயு (தீ)

4.திருக்காலத்தி -வாயு (காற்று)

  1. சிதம்பரம் – ஆகாசம் (வெற்றிடம்)

 

QUESTION 4-

அசபா தாண்டவம்- திருவாரூர்,

ஆநந்த தாண்டவம் – தில்லைச் சித்திர கூடம், பேரூர்,

ஞான சுந்தர தாண்டவம் – மதுரை,

ஊர்த்துவ தாண்டவம் – திருப்புக் கொளியூர்

பிரம தாண்டவம்- திருமுருகன்பூண்டி – 5 மதிப்பெண்கள்

 

QUESTION 5-

சபாபதி ஆலயம்- சிதம்பரம்;

தியாகேசர் ஆலயம்- திருவாரூர்;

ஐங்கரனாலயம்-திருவலஞ்சுழி;

குமரனாலயம்-திருவேரகம்;

சண்டேசுரனாலயம்-சேய்ஞ்ஞலூர்;

விடையினாலயம்-திருவாவடுதுறை;

வடுகனாலயம்-சீர்காழி.

 

QUESTION 6-

திருவையாறு, திருப்பழனம், திருச் சோற்றுத்துறை , திருவேதிகுடி,

திருக்கண்டியூர்,திருப்பூந்துருத்தி, திருநெய் த்தானம்.

 

QUESTION 7-

1,2,3 திருமுறை- திருஞான சம்பந்தர்

4,5,6 – திருநாவுக்கரசர்/ அப்பர்

7- சுந்தரர்

8- மாணிக்கவாசகர்

9-திருமாளிகைத்தேவர், சேந்தனார், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தநம்பி,, சேதிராயர்

10-திருமூலர்

11- காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் நாயனார், நக்கீரதேவர், கல்லாடர், கபிலர், பரணர், இளம் பெருமானடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.

12- சேக்கிழார்

 

QUESTION 8-

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்

 

QUESTION -9

திருவாலவாய்- மதுரை

கொடுங்குன்றம்- பிரான்மலை

திருக்கானப்பேர்- காளையார்கோயில்

கோயில்- சிதம்பரம், தில்லை

புள்ளிருக்குவேலூர்- வைதீஸ்வரன் கோயில்

குடமூக்கு- கும்பகோணம்

நாகைக்காரோணம்– நாகப்பட்டிணம்

திருமறைக்காடு–வேதாரண்யம்

கச்சி– காஞ்சீபுரம்

திருமுதுகுன்றம்- விருத்தாசலம்

–SUBHAM–

 

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 2 (Post No.4339)

Written by S.NAGARAJAN

 

 

Date: 27 October 2017

 

Time uploaded in London- 7-46 am

 

 

Post No. 4339

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அதிசய பூமி

இது தான் இந்தியா! – ஜிம் கார்பெட்டின் அனுபவம்! – 2

 

ச.நாகராஜன்

 

நான் அவருக்கு எனது சிகிச்சையால் அவர் நிச்சயம் குணம் அடைவார் என்ற நம்பிக்கையை ஊட்டி விட்டால் வேறு எதுவும் ஒரு பொருட்டல்ல என்று தோன்றியது.

ஆகவே அவரிடம் அவரை எனது காம்பவுண்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தது அவர் அங்கு இறப்பதற்காக அல்ல என்று கூறினேன். மேலும் அவர் குணமடைவதற்காகத்தான் அவரை அங்கு அழைத்து வந்தேன் என்றும் அதற்கு அவரது முழு ஒத்துழைப்பு தேவை என்பதையும் தெரிவித்தேன்.

முதல் நாள் இரவு எவ்வளவு கஷ்டப்பட்டு  முயற்சி எடுத்த போதும் கூட அவரால் பிழைக்க முடியாது; இறக்கத் தான் போகிறார் என்று தோன்றியது.

ஆனால் காலை விடியும் போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அந்தக் கணம் முதல் அவர் வெகுவாக முன்னேறிக் கொண்டிருந்தார். அவருக்கு நல்ல பலம் வரச் செய்வது ஒன்று தான் பாக்கி. காலரா மற்ற எந்த வியாதியையும் விட ஒரு மனிதனின் சக்தியை முழுதுமாக உறிஞ்சி விடும். அந்த வார முடிவில் அவர் தனது முழுக் கதையையும் என்னிடம் சொல்ல முடிந்தது.

அவர் ஒரு லாலா. வியாபாரி. தானிய வியாபாரத்தில் ஒரு காலத்தில் செழிப்போடு இருந்தார். பிறகு இது பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவரைப் பங்காளியாகச் சேர்த்துக் கொண்டார். அங்கு தான் அவர் தவறு செய்தார். சில வருடங்கள் வியாபாரம் நன்றாகத் தான் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் ஒரு பெரிய பயணத்தை முடித்து விட்டு ஊருக்குத் திரும்புகையில் தன் கடை காலியாக இருந்ததைப் பார்த்தார்.அவரது பங்காளி ஒடியிருந்தார்.

கையிலிருந்த சொற்ப பணம் கடனை அடைக்கவே போதுமானதாக இருந்தது. காசில்லாத நிலையில் அவர் ஒரு வேலையைத் தான் தேடிக் கொள்ள வேண்டியிருந்தது.

 

அடுத்த பத்து ஆண்டுக் காலம் மாதம் ஏழு ரூபாய் சம்பளத்திற்கு அவர் வேலை பார்த்தார். அந்தப் பணம் அவருக்கும் அவரது மகனுக்கும் போதுமானதாக இருந்தது. அவர் மனைவியோ பங்காளி அவரைக் கவிழ்த்து விட்டு கொள்ளையடித்து ஒடிய சில நாட்களிலேயே இறந்து விட்டாள்.

முஸாபுர்பூரிலிருந்து கயாவிற்கு தனது எஜமானனது வியாபார சம்பந்தமாக அவர் ட்ரெயினில் சென்று கொண்டிருந்தபோது நோய்வாய்ப்பட்டார்.

படகில் ஏறிய போது அவர் நிலை மிக மோசமானது. ஆகவே தவழ்ந்து வந்து நதிக்கரையில் படுத்துக் கொண்டார் – புனிதமான கங்கை நதிக் கரையில் சாவதற்காக.

லாலாஜி – வேறு எந்தப் பெயராலும் அவரை எனக்குத் தெரியாது என்பதால் அவர் எனக்கு லாலாஜி தான் – ஒரு மாத காலம் என்னுடன் தங்கி இருந்தார். ஒரு நாள் கயாவிற்குத் தன் பயணத்தைத் தொடர என் அனுமதியை வேண்டினார்.

ஷெட்டுகளின் வழியே இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் இந்த கோரிக்கையை வைத்தார்.

வேலைக்கு நான் செல்லும் போது என்னுடன் கூட அவர் சிறிது தூரம் நடந்து வருவதற்கான பலம் அவருக்கு அப்போது வந்திருந்தது.

அவர் கயாவிலிருந்து திரும்பி ஊருக்குப் போகும் போது அவர் வேலை பார்த்த இடத்தில் அவரது எஜமானர் இன்னொருவரை அமர்த்தி இருந்தால் அவர் என்ன செய்வார் என்று நான் கேட்டேன்.  இன்னொரு வேலையைத் தேடிப் போவேன் என்றார் அவர்.

“ஏன் நீங்கள் திரும்பி உங்கள் வியாபாரத்தைத் தொடங்க ஒருவரின் உதவியை நாடக் கூடாது?” என்று நான் கேட்டேன்.

“வியாபாரத்தை மீண்டும் தொடங்குவது, மகனுக்கு நல்ல கல்வியை ஏற்பாடு செய்வது ஆகிய இது பற்றித் தான் நான் இரவும் பகலும் தொடர்ந்து சிந்தித்து வருகிறேன். ஆனால், சாஹிப், இந்த உலகில் என்னை நம்பி உதவி செய்ய யாருமே இல்லை. மாதம் ஏழு ரூபாய் சமபளம் வாங்கும் ஒருவனுக்கு, எந்த விதமான உத்தரவாதமும் தர முடியாத என்னைப் போன்ற ஒருவனுக்கு,  வியாபாரத்தைத் தொடங்கத் தேவையான ஐநூறு ரூபாயை யார் தான் தருவார்கள்?” என்றார் அவர்.

 

அன்று இரவு கயாவிற்கு 8 மணிக்கு ட்ரெயின் புறப்படும் சற்று நேரத்திற்கு முன்னதாகவே எனது பங்களாவிற்கு வந்தேன்.

லாலாஜி புதிதாகத் துணியைத் துவைத்துப் போட்டு உடுத்திக் கொண்டிருந்தார். வந்த போது அவர் கையிலிருந்ததை விட சற்றுப் பெரிதான மூட்டை ஒன்று அவர் கையில் இருந்தது. வாராந்தாவில் என்னிடம் விடைபெற்றுக் கொண்டு போவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் கயாவிற்குப் போவதற்கான டிக்கட்டையும் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளையும் நான் கொடுத்த போது திக்பிரமை பிடித்த முகத்தோடு நாக்கு பேச முடியாமல் அவர் தவித்தார்.

அவரால் செய்ய முடிந்ததெல்லாம் என் முகத்தையும் தன் கையிலிருந்த நூறு ரூபாய் நோட்டுக்களையும் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தான்!

இறுதியாக வண்டி கிளம்பும் பெல் அடித்தது. இன்னும் ஐந்து நிமிடத்தில் வண்டி கிளம்பப் போகிறது. அதுவரை அவர் அப்படி என்னையும் பணத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென்று என் காலில் விழுந்தார் அவர்.

“இந்த அடிமை இன்னும் ஒரு வருட காலத்தில் இந்தப் பணத்தை உங்களிடம் திருப்பித் தந்து விடுவான்” என்றார் அவர்.

ஆக லாலாஜி என்னிடமிருந்து கிளம்பி விட்டார் – நான் சேமித்து வைத்திருந்ததில் நான் கொடுத்த பெரும் பகுதி பணத்தை எடுத்துக் கொண்டு!

 

அவரை நான் மீண்டும் பார்க்கப்போகிறேன் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை!

ஏனெனில் இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் ஒரு போதும் தங்களிடம் காட்டப்பட்ட அன்பை – நன்றியை – மறப்பதில்லை.

ஆனால் லாலாஜி எனக்குக் கொடுத்த வாக்குறுதி அவரால் நிறைவேற்றப்படக்கூடிய சக்திக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பதே எனது எண்ணம்.

ஆனால் இந்த என் எண்ணம் தவறான ஒன்று!

 

ஒரு நாள் இரவில் சற்று தாமதமாக என் வீட்டிற்கு வந்த போது அங்கு வாரந்தாவில் வெள்ளை வெளேரென்று ஆடை உடுத்திய ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அறையில் இருந்த வெளிச்சம் அவருக்குப் பின்னாலிருந்து வந்து என் கண்களில் விழுந்திருந்தது. ஆகையால் அவர் யார் என்பதை என்னால் உணரமுடியவில்லை – அவர் பேச ஆரம்பிக்கும் வரை.

லாலாஜி தான் அவர்.

வாக்குறுதிப் படி தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட கெடு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் அவர் அங்கு வந்து நின்றிருந்தார்.

அந்த இரவு எனது நாற்காலியின் கீழே அமர்ந்து அவர் தனது வியாபாரம் பற்றிய முழு விவரங்களையும் என்னிடம் விவரித்தார். தான் எப்படி வெற்றி பெற முடிந்தது என்பதைத் தெளிவாகக் கூறினார்.

சில மூட்டைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு அவர் தன் வியாபாரத்தை ஆரம்பித்தார். ஒரு  மூட்டைக்கு நான்கு அணா லாபம் வந்தால் போதும் என்பதே அவரது இலக்கு.

கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை விருத்தி செய்து கொண்டே வந்தவர் 30 டன் எடை கொண்ட சரக்கைக் கையாளும் அளவுக்கு உயர்ந்து விட்டார்.

ஒரு டன்னுக்கு மூன்று ரூபாய் லாபம்!

அவரது மகன் நல்ல பள்ளியில் படிக்கிறான். பாட்னாவைச் சேர்ந்த ஒரு பணக்கார வியாபாரியின் மகளை அவர் மணந்து கொண்டார்.

இந்த அனைத்தையும் அவர் 12 மாதங்களுக்குள்ளாகவே சாதித்திருந்தார்.

தனது ட்ரெயினுக்குச் செல்லும் நேரம் வந்து விட்ட போது என் காலடியில் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை வைத்தார்.

பிறகு தன்னிடமிருந்த ஒரு பையை எடுத்து என்னிடம் கொடுத்து, “இது வட்டிக்காக. நீங்கள் எனக்குக் கொடுத்த பணத்திற்கு 25 சதவிகிதம் வீதம் வட்டி கணக்கிட்டிருக்கிறேன்” என்று கூறியவாறே பையை நீட்டினார்.

நண்பர்களிடம் வட்டியாகப் பணம் வாங்குவது எங்கள் பழக்கம் இல்லை என்று நான் அவரிடம் சொன்ன போது அவர் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

கிளம்புவதற்கு முன்னர் லாலாஜி என்னிடம் கூறினார்:” நான் உங்களிடம் தங்கி இருந்த காலத்தில் உங்கள் பணியாளர்களிடமும் வேலைக்காரர்களிடமும் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மூலமாக ஒரு காலத்தில் நீங்கள் ஒரு சப்பாத்தியும் கொஞ்சம் பருப்பும் சாப்பிடும் நிலைக்கு வந்து அப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று அறிந்தேன்.

அது போன்ற ஒரு நிலை எந்தக் காலத்திலாவது உங்களுக்கு மீண்டும் வந்தால் – அப்படிப்பட்ட ஒரு நிலை உங்களுக்கு எந்தக் காலத்திலும் வரக் கூடாது என்று பரமேஸ்வரரைப் பிரார்த்திக்கிறேன் – இந்த அடிமை தன்னிடம் இருக்கும அனைத்தையும் உங்கள் காலடியில் சமர்ப்பிப்பான்.”

பதினோரு ஆண்டுகள் – அதாவது மொகமேகாட்டிலிருந்து நான் கிளம்பும் வரையில் – ஒவ்வொரு வருடமும் லாலாஜியின் தோட்டத்திலிருந்து மிக அற்புதமான தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழங்கள் அடங்கிய பெரிய கூடை எனக்கு வந்து கொண்டிருந்தது.

அவர் பெரிய வியாபாரியாக வேண்டும் என்ற தனது ஆசையில் வெற்றி பெற்று விட்டார் – அவரது பங்காளி அவரைக் கொள்ளையடித்த போது இழந்திருந்த தன் சொந்த இல்லத்திற்கே அவர் திரும்பி விட்டார்.

*

ஜிம் கார்பெட்டின் அழகிய அனுபவம் இப்படி முடிகிறது.

இந்தியாவில் ஒரு ஏழை கூட நன்றியை  மறக்க மாட்டான்; சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாமல் இருக்க மாட்டான்.

ஜிம் கார்பெட்டின் நெஞ்சை நெகிழ வைக்கும் அழகிய ஆங்கில நடைக்காக ஏன் நீங்கள் அதை ஒரு தரம் ஆங்கிலத்திலேயே படிக்கக் கூடாது.

JIM CARPETT – MY INDIA

நல்ல ஒரு அழகிய நூல்!

*** (முற்றும்)

 

 

 

 

 

SIX DOORS TO BRAHMAN (Post No.4338)

Written by London Swaminathan

 

Date: 26 October 2017

 

Time uploaded in London- 16-31

 

 

Post No. 4338

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Brahmana literature in prose which followed the poems in Vedas have many mysteries like the Vedas. A lot of research—rather than research—intuition of great saints will help us to understand the mysteries.

 

Here are some curious passages from the Satapata Brahmana:

“There are six doors to Brahma(n), viz. Agni, Vayu, the Waters, the Moon, Lightning (Indra) and the Sun. He who sacrifices with a burnt offering arrives by Agni, as the door to Brahma; and having so arrived, he attains to a union with Brahma and abides in the same sphere with him.

 

 

“When he performs the Viasvadeva offerings, then he becomes Agni and attains union with Agni and to co-existence in his world…. and when he performs the Sakha-medha offerings, then he becomes Indra and attains to union with Indra and to co-existence in his world – Satapata Brahmana 2-6-4-8

A man who reads the Vedas in a particular manner is “freed from dying again and attains to a sameness of nature with Brahma. Even if he cannot recite with much power, let him read one sentence relating to the gods”– Satapata Brahmana 9-5-6-9

“The man who knows this, that the sun never sets, enjoys union and sameness of nature with him and abides in the same sphere—Aitareya Brahmana3-4-4

DOOR TO HEAVEN

In the Sat.Brah(6-6-2-4), it is said that the door of heaven (Swarga Loka) is situated in the north-eastern regions; while by that which the heaven of the Fathers is entered lies to the south-east (13-8-1-5).

 

In a legend in Sat.Brah (11-6-1-6), it is related that Bhrigu, son of Varuna, visited, by his father’s command, the four points of the compass, where he saw men being cut into piece and eaten by other men, who when questioned by Bhrigu, declared they were revenging on their victims the treatment which they had received at their hands in the other world (earth). These victims are allegorically explained in the Brahmana as representing the trees, animals, plants and waters employed in sacrifice.

The idea of rebirth or transmigration of soul is in our Upanishads and Brahmanas.

“The spring, assuredly comes to life again out of the winter, for out of the one the other is born again; therefore he who knows this is indeed born again in the world -1-5-3-14

 

The Mahabharata gives the stories of previous births of several individuals. The Puranas are all replete with such stories. The idea of re-incrnation is one which lives deep in the Hindu mind. Hindu philosophers have held this doctrine for ages past, and the chief object which the Hindu shastras have in view is, is to obtain emancipation from the series of Re incarnations which every soul by its actions, is heir to . Every Hindu believes in the doctrine and our females are not behind in their beliefs.

According to a very ancient conception, the soul ascends to the abodes of the blessedon the wings of the air, of the wind, having itself changd into an aerial from.

“Whoever departs from this world, knowing this, goes with his voice to fire (Agni), with his eye to the Sun (Aditya), with his mind (manas) to the moon (Soma) with his ear to the regions, with his breath (prana) to the wind (Vayu). Having attained the nature of these and become any one of these deities that he desires, he rests (10-3-3-8)

When the voice of the departed soul goes to fire, his breath to the wind, his eye to the sun, his mind to the moon, his hearing to the regions, his body to the earth, his soul to the ether, the hairs of his head to the trees, his blood and his seminal fluid to the waters  — Where then is the spirit?(15-6-2-13)

 

The rays of him who shines (the Sun) are the pious. The ligt which is above is Prajapati or the heavenly world (1-9-3-10)

The stars are the lights of the practisers of holy acts who go to heaven (6-5-4-8)

 

The earth is macrocosm and our body is microcosm is developed from this. Greeks copied it from us.

 

The stars are the lights of the holy people is in Vana Parva of Mahabharata as well.

 

–Subham–