காண்டு படங்கள்! (Post No.3975)

Written by S NAGARAJAN

 

Date: 6 June 2017

 

Time uploaded in London:-  6-01  am

 

 

Post No.3975

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

சான்பிரான்ஸிஸ்கோவில் இருப்பதால் பல திரைப்ப்டங்களைப் பார்க்க முடிகிறது என்றும் இவற்றைப் பற்றித் தனியே ஒரு கட்டுரையில் எழுதுகிறேன் என்றும் ஜாலி எல் எல் பி (கட்டுரை எண 3948 ;வெளியான தேதி:28-5-2017) தெரிவித்திருந்தேன்.

இதோ அந்தக் கட்டுரை!

 

காண்டு படங்கள்!

 

.நாகராஜன்

 

***

காண்டு படங்களைப் பார்த்து வருகிறீர்களா? அது என்ன காண்டு?

தமிழ் வார்த்தையா?அர்த்தம் என்ன ? – என்று கேட்கிறீர்களா?

எனக்கும் தெரியாது. அது தமிழ் வார்த்தை தான் போலும்!

 

நிறைய காண்டு படங்கள் வரத் தொடங்கி உள்ளன தமிழில்.

ஒரு  கதாநாயகன்.- பொறுக்கி,பரட்டைத் த்லை, படிக்காதவன், ரவுடி இப்படி எல்லாவற்றையும் குழப்பி சேர்த்து உருட்டிய ஒரு உருவமாக இருப்பான் நமது கதாநாயகன்.

 

செக்கச் செவேலென்று தள தள, பள பளப்பாக ஒரு அழகி இருப்பாள். அவள் படித்தவள். கை நிறைய லகரக் கணக்கில் சம்ப்பாதிப்பவள்.அப்படியானால் பெரும்பாலும் சாப்ட்வேர் துறை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

 

நம்து பரட்டைத் தலை அவளைக் காதலிப்பான். அவளோ அவனை விரட்டியடிப்பாள். இவன் விடமாட்டான். தொடர்வான்.ஒரு சமயம் நமது பேரழகியை ஒரு ரவுடிக் கூட்டம் தொடர்ந்து இம்சிக்கும். நமது பரட்டைத் தலை பாய்ந்து வந்து அவளைக் காப்பாற்றும். அவ்வளவு தான்; உருகி விடுவாள், அழகி.

பிறகென்ன, சுபம்!

 

இதில் தான் காண்டு வருகிறது. பரட்டைத் தலை பேசும் வசனம் : ஒரே காண்டா இருக்கா? காண்டு பண்ணாதே.

இது அடிக்கடி வரும் வ்சனம்.

பொருள் என்றால் கத்தி, துப்பாக்கி!

சம்பவம் என்றால் கொலை,கொள்ளை.. இத்யாதி.

அய்யே!! நல்ல தமிழ் ஐயா இது!

 

***

 

இந்தியாவில் திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்து நூறு ஆண்டுகள் ஆகி விட்டன. அதாவது மூன்று தலைமுறைகளைக் கடந்து விட்டது திரையுலகம்.

***

 

இன்றைய கால கட்டத்தில் நல்ல ‘டேலண்டுடன்’ ஒரு இளைஞர் பட்டாளம் தமிழ் திரையுலகில் தோன்றி கலக்கோ கலக்கு என்று கலக்குவது ஒரு சுகமான அனுபவமே!

***

பேரழகிகள் கதாநாயகிகளாகத் தோன்றுகிறார்கள். ஆமாம்; தோன்றுகிறார்கள், அவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்புக் கொடுத்தால் தானே  நடிப்பார்கள்.

 

முகத்தைச் சிணுக்குவது, கதாநாயகன் ஒரு பக்கமும் இவள் மறு பக்கமும் போகும் போது கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்து தலையை அசைப்பது.. இடுப்பை வளைத்து ஒரு டான்ஸ் போஸ் கொடுப்பது .. இது தான் இந்தப் பேரழகிகளின் சினிமா அசைன்மெண்ட். நடிப்புக்கு எங்கே இடம் இருக்கிறது?

**

 

அறிவியல் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி ஏராளமான நவீன சாதனங்கள் திரைத் துறையில் குவிந்துள்ளன.கணினி மூலம் புகுத்தப்படும் உத்திகளோ மலைக்க வைப்பவை.

இத்துடன் நமது இளைஞர்களின் பல் துறை திறமையும் – டேலண்டும்- சேர்ந்தால் அது ஒரு புதிய உயரத்தை அல்லவா காண்பிக்க வேண்டும். அந்த உச்சியில் ஏறி நின்று அல்லவா கும்மாளம் போட வேண்டும்.

 

இல்லை, அது தான் இல்லை.

 

இவர்களிடம் இல்லாத ஒரு அம்சம் நல்ல கதை தான்! அதுவே மற்ற அனைத்தையும் கபளீக்ரம் செய்து விடுகிறது!

***

 

 

பேய்க்கதைகள், தாயாரையே கொல்வது, காண்டு, பொருள்,சம்பவம் இவற்றை உள்ளடக்கிய அடிதடிக் கதைகள், எத்தனை நாளைக்கு ஓடும்? எத்தனை நாளைக்கு இவர்களை திரைத்துறையில் ஓட்டும்?இவற்றில் வரும் காவல் துறையில் உள்ள அனைவருமே லஞ்ச்ப் பேர்வழிகள், கொலைகாரர்கள். துரோகிகள்,சமூக விரோதிகள்…

இவையெல்லாம் நல்லதற்கு அறிகுறியா? எதிர்கால சந்ததிக்கு உகந்த சிந்தனைகள் தானா?

***

 

 

குறைந்த பட்ஜெட்டில் மிக அருமையாக படத்தை முடித்து விடுகிறார்கள்.நல்ல செய்தி.

மூன்றே நாள் ஓடினால் போதுமாம.போட்ட முதலும் கொஞ்சம் லாபமும் வந்து விடுமாம்.

யாருக்கும் நஷ்டமில்லை.

பாகுபலி பிரம்மாண்டத்தை எடுக்கப்போய் உத்தம வில்லனாக முடிய வேண்டிய கஷடமும் நஷ்டமும் இவர்களுக்கு இல்லை!

ஆறுதலான செய்தி தான்.

பழைய கால நூறு நாள், 25வது வெள்ளி விழா வாரம் போன்ற கனவுகளில் இவர்கள் சிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

மூன்று நாட்கள், வெறும் மூன்றே நாட்கள்!

ஆனால் அதற்கும் தியேட்டர்கள் கிடைக்காத தமிழகத்தின் ‘பெகூலியர்’ பாலிடிக்ஸ் ஒரு தனிக்  கதை!

***

 

 

புதிய அலையின் எல்லா படங்களுமே கதை அம்சம் இல்லாத படங்களா? இல்லை,இல்லை.அப்பா என்று ஒரு படம். உத்வேகமூட்டும் ஒரு அப்பாவைப் பற்றிய கதை. கதை உள்ள நல்ல அப்பா!

 

சற்று சிந்தித்து (எனது ஜாலி எல் எல் பி ஹிந்தி படத்தைப் பற்றியது -அந்தக் கட்டுரையைப் படியுங்கள்) ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதை மெருகிட்டு எடுத்தால் இப்போதிருக்கும் இளைஞர்களின் டேலண்டும், பேரழகிகளின் அழகும் நவீன சாதனங்களின் உதவியும் ஒரு புது சகாபதத்தை உருவாக்கி விடுமே!

***

 

இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். முயன்றால் முடியும். அதுவும் இப்போதிருக்கும் இந்த கோஷ்டியினால் நிச்சயம் முடியும். வாழ்த்துக்கள்.

***

எந்த நடிகர், நடிகை, தொழில்நுட்ப வல்லுநர்கள்,இயக்குநர்கள், தயாரிப்பாளரின் பெயரையும் குறிப்பிடவில்லையே என்று கேட்காதீர்க்ள்.

திறமைப் பட்டாளம் ஜெயிக்கும் பட்டாளம். பெயரைக் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்குத் தேவையானது நல்ல கதையும், அதைத் திறம்படச் சொல்லும் (எடுக்கும்) உத்தியுமே.

 

ஒரே ஒரு சின்ன ஐடியா மட்டும் தர முடியும்.

ஒரு நூறு ஆங்கில, ஹிந்தி திரைப்ப்டங்களைப் பார்த்து அதன் கருவை ஒரு வரியில் எழுதி விட்டு அந்த ஒரு வரியை அவர்கள் 120 நிமிடமாக எப்படி டெவலப் பண்ணி இருக்கிறார்கள் என்று சிந்திக்கலாம். அதில் உள்ள கேரக்டர்களை எப்படி சித்தரித்திருக்கிறார்கள்,காட்சி அமைப்பை எப்படி உருவாக்கி இருக்கிறார்கள் என்று யோசிக்கலாம். அதை விவாதித்து எழுதி வைத்துக் கொள்ளலாம்.

 

அதன் பின்னர்  தங்களுடைய ஒரு வரிக் கதையை எழுதி அதை காட்சிப்படுத்த முயற்சிக்கலாம்.

உருப்படியான யோசனை!

***             நல்ல நடிகரோ தயாரிப்பாளரோ, “ஐயா சொல்வது சுலபம் இப்படி உங்களால் ஒரு வரிக் குறிப்புகளைச் செய்து தர முடியுமா” என்று கேட்டால்….

கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்!

***

பேயை விரட்ட, நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

பேயை விரட்ட,  நோயை விரட்ட, விஷத்தை இறக்க அபூர்வ மந்திரங்கள்- பகுதி 1 (Post No.3974)

 

Written by London Swaminathan

 

Date: 5 June 2017

 

Time uploaded in London- 16-18

 

Post No. 3974

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இந்துக்களுக்கு நான்கு வேதங்கள் உண்டு: ருக், யஜூர், சாமம், அதர்வணம்.

 

இதில் வெள்ளைக்காரகள் கணக்குப்படி ரிக் வேதம் பழமையானது: சிலர் 6000 ஆண்டு பழமை என்பர்; இன்னும் சிலர் 3200 ஆண்டுகள் பழமை என்பர். அதர்வண வேதம் பிற்காலத்தியது என்பர். ஆனால் இந்துக்கள் இதை ஏற்பத்தில்லை அவர்கள் கணக்குப்படி எல்லா வேதங்களும் கி.மு.3102 ஐ ஒட்டி வியாசரால் நான்காகப் பகுக்கப்பட்டவையே ; அதாவது இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முன்னரே 4 வேதங்களும் இருந்தன.

உண்மையில் இந்துக்களுக்கு இரண்டே வேதங்கள்தான்; அதாவது ரிக் வேத மந்திரங்களே பெரும்பாலும் யஜூர், சாம வேதங்களில்உள்ளன. அதர்வண வேதத்திலோ   பெரும்பாலும் புதிய மந்திரங்கள்.

 

சங்க காலம் முதல் தமிழர்கள் சொல்லுவது நான்மறை; அதாவது 4 வேதங்கள். ஆனால் மனு முதலானோர் சில இடங்களில் த்ரயீ வேத = மூன்று வேதம் என்பதால் வெள்ளையர்களுக்கு சிறு குழப்பம்; அவர்களுக்கு தமிழும் தெரியாது. ஆகையால் அதர்வண வேதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர்; உண்மையில் அதர்வண வேதம் என்பது அன்றாடம் பயன்படும் மருத்துவம், தாயத்து, பேய் ஓட்டல், விஷங்களை இற              க்கல், தாய் மொழி, தாய் நாடு, “பூமி என்னும் அன்னை”, எதிரிகளை ஒழிப்பது எப்படி என்பது பற்றிப் பேசுவதால் அதைச் சமயச்  சடங்குகள்     பற்றிப்    பேசும் மூன்று வேதங்களுடன் சேர்க்காமல் பேசினர்.

 

 

பிராமணர்களின் ஆயுதம் அதர்வண வேதம் என்று மனு சொல்லுவார். கோபத பிராமணமோ எனில் நான்கு வேத புரோகிதர்களும் யாக யக்ஞங்களில் கலந்து கொள்வதைக் குறிப்பிடுகிறது. ஆகையால் வெளிநாட்டினர் சொல்வதை நம்ப வேண்டியதில்லை.

 

அதர்வண வேதத்தில் 6000 மந்திரங்கள் 760 துதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சில அபூர்வ தாவரங்கள் எவை என்று தெரியவில்லை. அவைகளைத்தான் தாயத்துகளாக அணிந்து வந்தனர்.

 

அதர்வண வேதத்தை 20 காண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு காண்டத்திலும் எது சம்பந்தமான மந்திரங்கள் உள்ளன என்று சுருக்கமாகக் காண்போம்; இந்தப் பட்டியலைப் பார்த்தாலேயே அவர்கள் சிறந்த நாகரீகமும் உயர்ந்த சிந்தனையும் உடையவரகள் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி என விளங்கும்.

முதல் காண்டம்:

முதல் காண்டத்தின் முதல் மந்திரமே வாசஸ்பதி என்னும் வாக் (பேச்சு) தேவனையும் வசோஸ்பதி என்னும் செல்வ தேவனையும் வணங்கும் மந்திரம் ஆகும்.

கல்விக்கான மந்திரங்கள்

வெற்றிக்கான மந்திரங்கள்

எதிரிகளை அழிப்பதற்கான மந்திரங்கள்

நோயை அகற்றுவதற்கான மந்திரங்கள்

தண்ணீர் தேவதை பற்றிய மந்திரங்கள்

வரங்களைப் பெறும் மந்திரங்கள்

தர்மம் தொடர்பான மந்திரங்கள்

இதில் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 மந்திரங்களைக் கொண்ட

35 துதிகள் முதல் காண்டத்தில் காணப்படுகின்றன.

 

2 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 5 மந்திரங்களைக் கொண்ட 36 துதிகள் காணப்படுகின்றன.

நோயைக் குணப்படுத்தும் மந்திரங்கள்

ஜங்கிடா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

அக்னி, இந்திரன், பரப் பிரம்மம் பற்றிய துதிகள்

இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

ஜங்கிடா மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

3 ஆம் காண்டம்:

 

 

ரிக் வேதத்தில் இடம்பெற்ற வசிஷ்ட மஹரிஷியின் முக்கிய மந்திரம், கொஞ்சம் மாறுதல்களுடன் இதில் உள்ளது. இது செல்வத்தை வேண்டும் மந்திரமாகும்.

எதிரிகளத் தோற்கடிப்பதற்காக்ன மந்திரம்

தேச ஒற்றுமைக்கான மந்திரம்

பட்டாபிஷேக மந்திரம்

பர்ண மணி என்னும் அபூர்வ தாயத்து மந்திரம் — இந்தக் காண்டத்தில் இருக்கின்றன.

பர்ண மணி என்னும் தாயத்துக்கான தாவரம், மரம் என்ன என்பது யாருக்கும் தெரியாது!

 

இதில் ஒவ்வொன்றிலும் 6 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

 

4 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 7 மந்திரங்களைக் கொண்ட 40 துதிகள் காணப்படுகின்றன.

 

ரிக் வேதத்தில் உள்ள யார்? என்னும் மந்திரம் இதில் இடம்பெறுகிறது. யார் என்றால் சம்ஸ்கிருதத்தில் க:– இது பிரம்மாவுக்கும் பெயர்! அதாவது ஓரெழுத்துச் சொல். இதை வைத்து யாரை வணங்குவது என்று மந்திரம் முழுதும் திரும்பத் திரும்ப வரும்.

 

இதில் அதிசய ஒற்றுமை என்ன வென்றால் தமிழ் “க” பிராமி லிபியிலிருந்து வந்தது. அந்த “க” பிராமியில் சிலுவை வடிவில் இருக்கும். அது எகிப்தில் கடவுளைக் குறிக்கும் சித்திர எழுத்து. ஆனால் வெறும் சிலுவையாக இல்லாமல் இரு புறமும் கைகளை உயரத் தூக்கிய மனிதன் போல மேல் நோக்கிய கோடுகளுடன் இருக்கும்.

 

விஷத்தை அகற்றும் மந்திரம்

எதிரிகளை நாடு கடத்தும் மந்திரம்

பலத்தை அதிகரிக்கும் மந்திரம்

தூக்கமின்மையை அகற்றும் மந்திரம்

சங்கு கிழிஞ்சல்களைக் கொண்டு தாயத்து செய்யும் மந்திரம்

மரங்கள், மழையை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

மூலிகைகள் பசுக்களை நோக்கி உச்சரிக்கும் மந்திரங்கள்

 

பாவங்களைப் போக்கும் மந்திரங்கள்

புழுக்களை அகற்றும் மந்திரங்கள்

சக்தியை அதிகரிக்கும் மந்திரங்கள்

5 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 12 மந்திரங்களைக் கொண்ட 31 துதிகள் காணப்படுகின்றன.

குஸ்ட, சிலாச்சி, லக்ஷா மணி என்னும் தாயத்து மந்திரங்கள்

இவை என்ன தாவரம் என்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை.

வெற்றிக்கான மந்திரங்கள்

பிரம்மன் பற்றிய மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பிராமணர்கள், பசுக்களைப் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

ஆன்மீக பலத்தை உயர்த்தும் மந்திரங்கள்

ஆயுளை அதிகரிக்கும் மந்திரங்கள்

டாமாரங்களை அடித்து எதிரிகளை பயமுறுத்தும் மந்திரங்கள்

ஒரு அபூர்வ பசுவை வைத்திருப்பது பற்றி அதர்வணுக்கும் வருணனுக்கும் இடையே நடக்கும் சுவையான சம்பாஷணை,

பிராமணனின் மனைவி கடத்தல் பற்றிய செய்தி

பிராமணர்களை ஒடுக்கும் கொடுமை

ஆகியனவும் உள்ளன.

போர் முரசுக்குச் சொல்வது போன்ற இரண்டு மந்திரங்கள்.

 

6- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 3 மந்திரங்களைக் கொண்ட 142 துதிகள் காணப்படுகின்றன.

அமைதிக்கான மந்திரங்கள்

வளையல்கள் பற்றிய மந்திரங்கள்

‘ரேவதி’ தாயத்து பற்றிய மந்திரங்கள்

சவிதா, இந்திரன் போற்றும் மந்திரங்கள்

எதிரிகளை ஒழிக்கும் மந்திரங்கள்

பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரங்கள்

 

 

7 ஆம் காண்டம்:

இதில் 118 துதிகள் காணப்படுகின்றன.

நீண்ட ஆயுளைத்தரும் மந்திரங்கள்

தாய் நாடு பற்றிய மந்திரங்கள்

தாய் மொழி பற்றிய மந்திரங்கள்

ஜனநாயக சட்டசபை பற்றிய மந்திரங்கள்

ஆத்மா பற்றிய மந்திரங்கள்

சரஸ்வதி மந்திரங்கள்

கணவன்– மனைவி நல்லுறவு பற்றிய மந்திரங்கள்

8 ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 26 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

பேயை ஓட்டும் மந்திரங்கள்

ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்

விராஜ்- விராட் என்னும் தேவதை பற்றிய மந்திரங்கள்

இறந்துகொண்டிருக்கும் மனிதனை எழுப்பும் குளிகை பற்றிய மந்திரங்கள்

 

9 ஆம் காண்டம்:

ஒன்பதாம் காண்டத்தில் பத்து துதிகள் இடம்பெறுகின்றன.

இதில் விருந்தினரைப் போற்றும் நீண்ட மந்திரம் உளது.

அஸ்வினி தேவர்களின் இனிமையான உதவி பற்றிய மந்திரமும் உளது.

ரிக் வேதத்தில் முதல் மண்டலத்திலுள்ள தீர்கதமஸ் என்ற முனிவரின் மிகவும் புகழ்பெற்ற மந்திரம் இங்கே இடம்பெறுகிறது இதில்தான் “கடவுள் ஒருவரே; அறிஞர்கள் அவரை வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றனர்” என்ற புகழ் பெற்ற வாசகம் வருகிறது.

இது தவிர கிருஹப் ப்ரவேச மந்திரம்

நோய்களைத் தடுக்கும் மந்திரம்

பசுக்கள், காளைகளைப் பற்றிய மந்திரங்கள்

ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

10- ஆம் காண்டம்:

இதில் ஒவ்வொன்றிலும் 25 மந்திரங்களைக் கொண்ட 10 துதிகள் காணப்படுகின்றன.

கேன (யாரால், எதனால்) என்ற கேள்வி மந்திரமும்

பிரபஞ்சத்தைத் தாங்கும் ஸ்கம்ப (தூண்) என்ற மந்திரமும்

பரப் பிரம்மம், பசுக்களைப் போற்றும்

விஷத்தை அகற்றும் ராக்ஷசர்களை விரட்டும் மந்திரங்கள்    ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரையில் மேலும் பத்து காண்டங்களின் சுருக்கத்தைக் காண்போம்.

 

–சுபம்–

 

 

 

WHAT IS IN THE ATHARVA VEDA?- Part 1 (Post No.3973)

Compiled by London Swaminathan

 

Date: 5 June 2017

 

Time uploaded in London- 8-36

 

Post No. 3973

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Hindu Vedas are four in number: Rig Veda, Yajur Veda, Sama Veda and Atharva(na) Veda.

One sixth of the Atharva Veda is in prose. One sixth of the hymns are from the Rig Veda.

Atharvan was a seer of remote antiquity. He was credited with the discovery of Fire (Agni). Rig Veda says that Atharvan was the first priest ‘who rubbed Agni (fire) forth’ and who ‘first made the paths by sacrifices’.

 

The collected hymns are also called Atharvangiras or Bhrigvangiras. The meaning is it is a collection of the songs by Atharvan and Angirases and the Songs of Bhrigus and Angirases. From this we know that Angirases and Bhrigus were the families who revealed these hymns.

The Vedic prayers show that Vedic society was a highly developed society with great principles like Peace, Motherland, Mother tongue, Hospitality and general welfare. They pray for unity, general welfare, health, wealth and victory.

 

Since Veda Vyasa was the one who classified four Vedas, we know that it existed at that time 3102 BCE, the beginning of Kaliyuga. But T H Griffith who translated into English says it was a later addition to the vedic collection. Snce Sama Veda and Yajur Veda repeats what is in the Rig Veda, he believed that there are only two ‘original’ Vedas: Rig and Atharvana.

Prof. Whitney also said that it was later than Rig Veda. Prof. Weber and Prof.Max Muller also agree that it was later than the Rig Veda.

 

When Manu and others referred to Trayi Vedas (three Vedas), foreigners were misled and they believed it was not part of the original collection. But the fact of the matter is it is mostly about secular things such as warding off diseases, magical beliefs, using charms, talismans and describing earth, nature etc.

Hindus gave equal respect to Atharvana Veda on par with other three Vedas:

It is called the Brahmin Veda or the Veda of the Brahmin.

In the Gopata Brahmana we have a quote:

“Let a man elect a Hotri who knows the Rich (Rik,Rig), a Adhvarya who knows Yajush, an Udgatri, who knows the Saman and a Brahmin who knows the Atharvangiras.

BRAHMINS’ WEAPON!

 

Manu also says

“Let him use without hesitation the sacred texts revealed by Atharvan and by Angiras; speech indeed, is the weapon of the Brahmin, with it he may slay his enemies”- Manu 11-33

Epics and Puranas always speak of fourfold Vedas.

 

The Athrva Veda Samhita (Collection of Hymns) is divided into 20 Kandas (books or sections). It contains 6000 veses in 760 hymns.

Mystery: Many of the plants mentioned in the Vedas, are not identified. Though we can read about the miraculous properties of those plants, they are not available today, because we don’t know what they are!

BOOK 1

This book contains 35 hymns each averaging four verses. The first hymn is a prayer addressed to Vachaspati (Lord of Speech). Vashospati (Lord of Treasure) is also mentioned in the same hymn. Following prayers are available in this book:

Prayers for increasing one’s learning

Prayers for obtaining victory

Prayers for recovery from illness

Prayer for obtaining blessing from water

Prayer for spreading righteousness

Prayer for the granting of wishes

Prayer for pardoning sins

Prayer for destroying enemies.

 

BOOK 2

36 hymns, averaging five verses each in length. The hymns are of Miscellaneous character.

Prayer for Healing

Jangida Mani Charm made up from Jangida plant

Prayers to Supreme Deity, Agni, Indra

 

BOOK 3

It contains 31 hymns averaging six verses each. Hymn 16 is the morning prayer of great rishi (seer) Vasishtha. It is a verse from the Rig Veda with slight variations; the chief petitions are ‘give us wealth’, ‘may we be rich in men and heroes’.

Prayer for defeating enemies

Prayer for a coronation

Parna mani amulet

Prayer for Unity of the Kingdom

 

BOOK 4

In this book we have 40 hymns, averaging seven verses. Hymn 2 is a very interesting prayer to ‘Who’ (Kah in Sanskrit) It also means Brahma, Prajapati. Egyptians also used the  Kah glyph in Brahmi for God. The Christian Cross also might have been derived from it.

The knowledge of the Brahman

Prayer to Kah = Prajapati= Brahma= Kah(who)= Egyptian Letter for God= Christian Cross

Prayer for purging Poison

BOOK 5

This book contains 31 verses averaging 12 verses. There are some interesting verses here: A curious dialogue between Atharva and Varuna about possessing a wonderful cow. Another is about the abduction of a Brahmin’s wife; two hymns are on the wickedness of oppressing Brahmins. Two hymns are addressed to War Drums to secure success in battle.

Prayer for Victory

The herb Kushta, a medicinal herb

The herb Shilachi/Laksha, a medicinal herb

 

BOOK 6

It is a book about charms with prayers. 142 hymns are in the book with an average length of 3 verses.

Prayer to Savita, Indra.

Prayer for destroying enemies

Prayer for Protection

Prayer for sacrifice

PRAYER FOR PEACE

Prayer for PURGING Snake poison

The Revati herb, a medicinal herb

On wearing Bangles

 

BOOK 7

Book of charms; 118 hymns are in the book.

The Atman

THE MOTHERLAND

Prayer to Sarasvati

THE DEMOCRATIC ASSEMBLY (the Sabha)

THE MOTHER TONGUE

Prayer for a Long Life

Prayer for Marital harmony

A Wife’s Prayer about husband

Prayer to Sarasvati

 

BOOK 8

Though this book contains only 10 hymns, hey average 26 verses each. Health and charms are the subjects. The hymns are about using charms for the restoration of health.

Charm for the recovery of a man who is dying

Prayer to Goddess Virat/Viraj

Prayers for warding off Demons

Exorcism (to drive away the Ghosts)

GUESTS ARE GODS

BOOK 9

This book contains ten hymns on of which is entirely in prose. The longest verse is “ a glorification of the hospitable reception of guests regarded as identical with the sacrifice offered to the Gods. The most famous hymn of Dirgatamas in the Rig Veda 1-164 is repeated here in hymns 9 and 10. It has got enigmatical question. The verse is very famous because it says God is one; they call him with different names.

Famous Honey-lash of the Asvins

Consecration of new houses

Glorification of Cows and Bulls

Proper Reception of the Guests

 

BOOK 10

This book contains 10 hymns averaging 35 verses. One is a glorification of the Supreme deity, under the name of Skambha, considered the Pillar or Support of all existence. Another is in praise of sacred cow.

Famous Kena (from what) hymn

Prayers for fighting demons

Prayers for purging Poison

Prayers to Cows

Sukta describing Brahman

The Support of the Universe (SKAMBA)-AV 10-7

 

(In the second part of this article we will look at a summary of ten more books)

 

to be continued……………….

MANAGEMENT STORIES WHICH YOU MUST DEFINITELY READ! – 1 (Post No.3972)

Compiled by S NAGARAJAN

 

Date: 5 June 2017

 

Time uploaded in London:-  5-03  am

 

 

Post No.3972

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

It is my hobby to collect Management stories/ anecdotes for the past 30 years.

They not only give you guidelines but also make you think deeply.

Here are the first three stories which I enjoyed very much.

Happy Reading!!

Your Boss and You : Always let your Boss have the first Say!

A sales rep, an administration clerk, and the manager are walking to lunch when they find an antique oil lamp.
They rub it and a Genie comes out.
The Genie says, ‘I’ll give each of you just one wish.’
‘Me first! Me first!’ says the admin clerk. ‘I wantto be in the Bahamas, driving a speedboat, without a care in the world.’
Puff! She’s gone. 
‘Me next! Me next!’ says the sales rep. ‘I want to be in Hawaii , relaxing on the beach with my personal masseuse, an endless supply of Pina Coladas and the love of my life.’
Puff! He’s gone.
‘OK, you’re up,’ the Genie says to the manager.
The manager smiles and say, ‘I want those two back in the office after the lunch-time.’
Moral of the story:
Always let your boss have the first say. 

For doing nothing you must be very very high!

An eagle was sitting on a tree resting, doing nothing.
A small rabbit saw the eagle and asked him, ‘Can I also sit like you and do nothing?’
The eagle answered: ‘Sure, why not.’
So, the rabbit sat on the ground below the eagle and rested. All of a sudden, a fox appeared, jumped on the rabbit and ate it.
Moral of the story: 
To be sitting and doing nothing, you must be sitting very, very high up.

Staying at top is not easy!

A Turkey was chatting with a Bull.
‘I would love to be able to get to the top of that tree’ sighed the Turkey, ‘but I haven’t got the energy.’ ‘Well, why don’t you nibble on some of my droppings?’ replied the Bull. They’re packed with nutrients.’
The Turkey pecked at a lump of dung, and found it actually gave her enough strength to reach the lowest branch of the tree.
The next day, after eating some more dung, she reached the second branch.
Finally after a fourth night, the Turkey was proudly perched at the top of the tree..
She was promptly spotted by a farmer, who shot her out of the tree.
Moral of the story:
Bull Shit might get you to the top, but it won’t help you stay there for long.

****

Four Duties of Ascetics (Post No.3971)

Written by London Swaminathan

 

Date: 4 June 2017

 

Time uploaded in London- 20-50

 

Post No. 3971

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

1.Dhyaanam saucham tathaa bhikshaa nityamekaanthasiilathaa

yateschatwaari karmaani panchamam nopapadhyate

 

Dhyana – Meditation

Saucam – Maintaining purity

Bhiksa- Getting alms

Nitayamekanta silata -Remaining in solitude

 

xxxx

 

Four Types of Ascetics

One of the Upanishads classified ascetics into four types based on their goals:

 

Kutiicaka= seeking atmospheric world

Bahuudaka = seeking heavenly world

Hamsa= seeking penance world

Paramahamsa = seeking truth world

 

2.sanyaasaii syaat caturbedhah kutiicakabhahuudakau

hamsah paramahamsasca teshaam samjnaa ime bhudhaih

–Vedanta Samnjavali 135

xxxx

 

Four Types of Bad Disciples

Prajnaamaandya- dull

Kutarka= argumentative

Viparyaya – Erroneous

Duraagraha – Adamant

 

  1. atha vakshye caturbhedaah samnjaah sisyahitaaya vai

pranjamaandhyam kutarkasca viparyayaduraagrahah

—–Vedanta Samnjavali 98

 

xxxx Subham xxxx

 

 

 

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)

பயனில சொல்லாமை நன்று; புத்தரும் வள்ளுவரும் செப்பியது – Part 8 (Post No.3970)


Written by London Swaminathan

 

Date: 4 June 2017

 

Time uploaded in London- 15-53

 

Post No. 3970

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று (குறள் 197)

 

பொருள்-

அறத்தோடு பொருந்தாத  சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்; பயன் தராத வெறும் சொற்களை சான்றோர் சொல்லாதிருப்பது நல்லது

 

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்  (குறள் 198)

பொருள்-

அரிய பொருளை ஆராயும் அறிவினை உடையோர், வாழ்க்கைக்கு பெரும்பயனைத் தராத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்

 

1.கொலை செய்தல்

2.பொய் பேசுதல்,

3.திருடுதல்,

4.பிறன் மனைவியிடம்  போதல்

5.கள் குடித்தல் – இந்த ஐந்து செயல்களும் தன்னுடைய வேரை தானே தோண்டிக் கொள்வதற்குச் சமம் தம்மபதம் 246/247

யானை தனக்குக்குத் தானே மண்ணைவாரி தன்  தலையில் போட்டது போல.

பிறருடைய மனைவி

பகை பாவம் அச்சம் பழியென நான்கும்

இகவாவாம் இல்லிறப்பான் கண்- (குறள் 147)

 

பிறருடைய மனவியை நாடுபவனுக்கு

1.பகைமை (முதல் கணவனுடன் மோதல்)

2.பாவம் (மறு ஜன்மத்தில் பாவத்தின் பலன்)

3.அச்சம் (எந்த நேரத்தில் பிடிபட்டுவிடுவோமோ என்ற பயம்)

4.பழி (ஊரே தூற்றும் கெட்ட பெயர்)– இந்த நான்கும் எப்போதும் நீங்காது-

 

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற  ஒழுக்கு – (குறள் 148)

பிறருடைய மனைவியை தவறான எண்ணத்துடன் கண் எடுத்தும்

பார்க்காத  பேராண்மை என்னும் பண்பு சான்றோர்க்கு அறமாக மட்டும் அமைவதில்லை; பொருந்திய ஒழுக்கமும் ஆகும்.

 

மற்றவன் மனைவியை அனுபவிப்பவனுக்கு நான்கு கேடுகள் விளையும்: 1.அவன் மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும் 2.அவன் பயத்தோடுதான் இன்பம் அனுபவிப்பான் 3.எல்லோரும் அவனை பழி தூற்றுவர் 4. அவன் நரகத்தில் விழுவான் – தம்மபதம் 309

வெறுப்பு

பகல் கருதிப் பற்றா செயினும் இகல் கருதி

இன்னா செய்யாமை தலை  ( குறள் 852)

 

பொருள்

கருத்து மாறுபட்டு ஒருவன் அன்பில்லாத செயலைச் செய்யினும் , வெறுப்பினால் அவனுக்கு கெடுதல் செய்யாது இருப்பது சிறந்தது.

 

நம்மை வெறுப்போருக்கு இடையே நாம் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம் (தம்மபதம் 197)

 

இகலானாம் இன்னாத எல்லாம்  நகலானாம்

நன்னயம் என்னும் செறுக்கு (குறள் 860)

 

ஒருவனுக்கு வெறுப்பினாலேயே துன்பம் உண்டாகும்; நட்பினால் நல்லவன் என்ற மதிப்பு கிடைக்கும்.

நற்குணங்கள்

 

உள்ளத்தால் பொய்யாதொழுகின்  உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன் (குறள் 294)

 

ஒருவன் மனத்தாலும் பொய் சொல்லாதிருக்கக் கற்றுக் கொண்டால் அவன் உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் நிலைபெற்று இருப்பான் (அரிச்சந்திரன், ராமன், தர்மன், காந்தி அடிகள் போல)

 

பொய் பேசாதிருப்பவனை உலகமே நேசிக்கும் (தம்ம 217)

 

ஒரு மனிதனின் தோற்றத்தையும் சொற்களையும் வைத்து அவனை கௌரமானவன் என்று நினைப்பதற்கில்லை; பொறாமை, பேராசை, அகந்தை ஆகிய மூன்று பாவங்களும் இல்லாதவன், விவேகமுள்ளவன், அன்பே உருவானவன் — ஒருவனே மதிக்கப்படத் தக்கவன் –தம்ம 262, 263

 

இதே கருத்து பகவத் கீதை 16-21லும் உளது மூன்று நரக வாசல்கள் என்று கீதை சித்தரிக்கும்.

வள்ளுவன் குறளில்

 

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்

நாமம் கெடக்கூடும் நோய் (குறள் 360)

காமம், க்ரோதம், மோகம் ஆகிய மூன்றின் பெயர்கூட மனத்தில் தோன்றாதவாறு ஒருவன் வாழ்ந்தால் அவன் உள்ளத்தில் ஞானம் பிறக்கும்; கர்ம வினை அறுபட்டுப்போகும்; பிறவ்தி தளை அறுபடும்;  மோட்சம் கிட்டும்

 

–சுபம்-

எண் ரகசியம்–3; தொண்ணூறு க்யாட் கரன்ஸி! (Post No.3969)

Written by S NAGARAJAN

 

Date: 4 June 2017

 

Time uploaded in London:-  5-24  am

 

 

Post No.3969

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

எண் ரகசியம்

காபிரைட் உள்ள தொடர் இது. திரு எஸ்.சுவாமிநாதன் அனுமதி பெற்று www.tamilandvedas.com மற்றும் கட்டுரை ஆசிரியரின் பெயரோடு வெளியிடல் வேண்டும். மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

 

எண் ரகசியம் – 3

தொண்ணூறு க்யாட் கரன்ஸி!  

 

ச.நாகராஜன்

பழைய காலத்தில் பர்மா என்று சிறப்புற்றிருந்த நாட்டை நாம் நன்கு அறிவோம்.

 

இப்போது மியான்மர் என்ற பெயரில் அறியப்படும் நாடு அது.

 

பர்மாவை சர்வாதிகாரியாக இருநது ஆண்டவர் நீ வின்.

(பிறப்பு 14-5-1911 மரணம் 5-12-2002) 1958 முதல் 1960 முடியவும் மீண்டும் 1962லிருந்து 1974முடியவும் பிரதமராக இருந்தவர் அவர். 1962லிருந்து 1981 முடிய அரசின் தலைமை பீடத்திலும் அவர் இருந்தார்.

 

அவருக்கு எண் கணித சாஸ்திரத்தின் மீது அபாரமான நம்பிக்கை.

அவர், 1963இல் பர்மாவின் கரன்ஸியாக இருந்த 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகளை 45 மற்றும் 90 க்யாட் நோட்டுகளாக மாற்றினார். உலகில் இப்படி அதிசயமான எண்களில் கரன்ஸியைக் கொண்டிருந்த ஒரே நாடு பர்மா தான்!

45 மற்றும் 90 ஆகிய எண்கள் ஒன்பதால் வகுபடக் கூடியவை. அவற்றை கூட்டினால் வருவது 9. (45 க்யாட் நோட்டில் 4= 5 = 9; 90 க்யாட் நோட்டில் 9 + 0= 9)

1963இல் 50 மற்றும் 100 க்யாட் நோட்டுகள் செல்லாது என்று அவர் செய்த அதிரடி உத்தரவால் பர்மாவே ஆடிப் போனது.ஒரே நாளில் வாழ் நாள் முழுவதும் சேர்த்த  மொத்த பணத்தையும் இழந்தோர் ஏராளம்.

 

 

இப்படி ஒன்பது வரும்படியான க்யாட் நோட்டை அவர் அமுல் படுத்தியதற்கான காரணம் அவரது நியூமராலஜி ஆலோசகர் அவருக்கு ஒன்பது என்ற எண்ணே அதிர்ஷ்டம் என்றும் எதையும் அவர் ஒன்பது வரும் படி பார்த்துக் கொண்டால் அவர் நிச்சயம் தொண்ணூறு ஆண்டுகள் வாழ்வார் என்றும் சொன்னது தான்!

பர்மாவின் கரன்ஸியை மட்டும் அவர் ஒன்பது  என்று வரும் படி பார்த்துக் கொள்ளவில்லை தனது அலுவலக மற்றும் பிரத்யேக வாழ்க்கையில் வரும் அனைத்தையும் ஒன்பது வரும்படி பார்த்துக் கொண்டார்.

 

 

இதனால் பர்மாவின் பொருளாதாரமே பலவீனமாகி நாசமாகியது.

ஆனால் அவரது நியூமராலஜி நம்பிக்கை அவரைக் கைவிடவில்லை.

 

 

ஏராளமானோர் அங்கு இறந்த போதிலும் 28 ஆண்டுகள் பலம் பொருந்திய தலைவராக அவர் ஆட்சி செலுத்தினார்.

நியூமரலாஜி ‘உறுதி அளித்த’ தொண்ணூறு வயதையும் தாண்டி வாழ்ந்து 91ஆம் வயதில் மரணமடைந்தார்.

 

 

அவரைப் பற்றிய ஏராளமான வதந்திகள் உண்டு.பர்மாவில் இரத்த புரட்சி ஏற்படும் என்றும் அதனால் அவருக்கு அபாயம் வரும் என்றும் ஜோதிடர் சொன்னதைக் கேட்டு கண்ணாடி முன்னால் நின்று கொண்டு மாமிச ரத்தத்தைத் தன் மேல் தெளித்துக் கொண்டு கண்ணாடியில் இருந்த தன் உருவத்தை துப்பாக்கியால் சுட்டுத் தான் இறக்கவிருக்கும் “தோஷத்தை” அவர் விலக்கிக் கொண்டாராம்.

 

அத்துடன் இளமையுடன் “என்றும்” இருக்க டால்பினின் ரத்தத்தில் அவர் குளிப்பாராம்.

 

 

எண் ஜோதிடம் தவறாகக் கையாளப்பட்டால் அது தனி நபர் அளவில் நன்மையைத் தந்தாலும் ஒரு நாட்டிற்கே அவலத்தைத் தந்ததை நீவின் சரித்திரத்தின் மூலம் பார்க்கலாம்.

 

இதே போல சிங்கப்பூரை நிறுவிய சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ க்வான் யூ (பிறப்பு 16-9-1923 மறைவு 23-3-2015) தனிச் சிறப்பு வாய்ந்த தலைவராக சிங்கப்பூர் மக்களால் கருதப் படுபவர்; 91 வயது வாழ்ந்து மறைந்தார்.

 

 

அவர் பெங் சுயி சாஸ்திரத்தின் அடிப்படையில் புத்த துறவி ஒருவரின் அறிவுரையின் பெயரில் எட்டு பக்கம் கொண்ட (பாகுவா என்று சொல்லப்படும் அமைப்பைக் கொண்ட) ‘ஒரு டாலர்’ நாணயத்தை சிங்கப்பூரில் கொண்டு வர சிங்கப்பூரின் பொருளாதாரம் பிரமாதமாக செழித்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அவரோ தனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று தான் எழுதிய ஹார்ட் ட்ரூத்ஸ் (Hard Truths)  என்ற நூலில் சொல்லி இருந்தாலும் கூட அவர் எடுத்த பல நடவடிக்கைகள் ஆழ்ந்த பெங் சுயி கொள்கைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையே என்று பெங்சுயி ஆதரவாளர்கள் நம்புகின்றனர்; அதற்கான ஆதாரங்களைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

Singapore’s Octal Coin

 

 

91 வயது வாழ்ந்த அவரை 91 என்ற எண்ணுடன் சம்பந்தப்படுத்தும்  அவர் சம்பந்தப்பட்ட ஏராளமான விஷயங்களை மக்கள் இன்று தொகுத்துக் கூறி மகிழ்கின்றனர்.

 

ஆழ்ந்து யோசியுங்கள், எண்களின் ரகசியம் புரியும் என்று நியூமராலஜி ஆர்வலர்கள் கூறி  மகிழ்கின்றனர்!

-to be continued………………………………..

Q and A on Kali Yuga and Nava Graha Homa (Post No.3968)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 21-55

 

Post No. 3968

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Sir

 

I came across this article and it says that the kaliyuga will be over by year 2025?

 

how come, if each yuga is 4,300, 3,600,2,400 and 1,200 years each ?

 

so we should have been over with the Kaliyuga

 

or is this the demigod years 360 human years Still it doesn t stand ground

 

thanks

G.D

 

 

Answer:

 

Dear GD,

 

About Yugas there are two different calculations.

One with more zeroes and another with less zeroes.

Whatever it may be, we see for ourselves Kaliyuga now.

 

It will not finish in 2025 unless there is Third World War.

 

I have read an article in Madras Mail in 1970s that Krta Yuga has already begun.

Now it looks ridiculous.

 

We published another book review in Dinamani Kadir (where I worked as Senior Sub Editor for 16 years) that Kalki Avatar would appear in 1985.

Nothing happened. It was written by a Swamiji of a famous Mutt!

 

But let us try to bring Kaliyuga like the great Tamil poet Bharati said.

 

 

Navagraha Homam

 

Navagraha Homa  and Nine types of Wood

 

Question

I have been given a note to buy nine different fuel sticks for the fire sacrifice to propitiate nine planets. I cant identify the nine plants. More over they are not available here. Can you please tell me the nine different woods.

VS

 

Answer

Dear VS’

Nowadays all are available in different parts of the world through courier service. You can google Navagraha Samithu and get the bundle. But please be aware of the import restrictions in your country.

 

Following are the nine types of woodds or fuel sticks in English and Tamil:-

When Hindus do Navagraha Homa ( Fire Sacrifice) to celebrate entering a new house (House warming) or for a long life they sacrifice nine different sticks in the fire. They display nine different grains, pulses and nine differently coloured cloths to propitiate the nine heavenly bodies, roughly translated as Nine Planets.

 

அத்தி- சுக்கிரன் (Ficus Udumbura) = Venus

நாயுருவி- புதன் (Achyranthe aspera) = Mercury

புரசு /பலாச மர – சந்திரன் (Butea monosperma) = Moon

அரச மர – குரு (Ficus Religiosa)= Jupiter

வன்னி மரம்- சனைஸ்வரன் (Prosopis cineraria) = Saturn

அருகம் புல் – ராகு (Cynodon dactylon) = ascending node

தர்ப்பை – கேது (Desmostachya bipinnata) = descending node

கருங்காலி—செவ்வாய் (Diospyros ebenum) = Mars

எருக்கு- சூரியன் (Calotropis gigantean) = Sun

 

In Tamil from my previous post:-

நவக்கிரக ஹோம சமித்து

நவ சமித்துகள், நவ தானியங்கள்

நவக்ரஹ ஹோமத்தில் போடப்படும் நவதானியங்கள், நவ சமித்துகள் ஆகியனவும் தாவரங்களே; இதோ அந்தப் பட்டியல்:

நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, எள், வெள்ளை மொச்சை, கொள்ளு, உளுந்து, கொத்துக் கடலை

நவக்ரஹ ஹோம சமித்துகள்

எருக்கு, புரசு (பலாசம்), அத்தி, அரசு, வன்னி, அருகம் புல், கருங்காலி, நாயுருவி,, தர்ப்பை.

அரச மரம் வேதத்தில் உள்ளது, சிந்து சமவெளியிலும் உள்ளது. அரசு, ஆல், அத்தி ஆகிய மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. இது மூன்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் மூன்று நாமங்களாக வருகின்றன.
வன்னி மரத்தையும் அரச மரத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட அரணிக் கட்டையைக் கொண்டே யாக யக்ஞங்களுக்கான தீ/ அக்னி மூட்டப்படும்.

பலாச மரத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் கரண்டிகளைக் கொண்டே யாகத்தில் ஹவிஸ், நெய் முதலியவற்றை ஆகுதி செய்வர்.

 

—Subham–

 

 

 

ஸ்ரீ ஆனந்தமயீ மா- எல்லோரையும் வியக்கவைத்த பெண்மணி (Post No.3967)

Written by London Swaminathan

 

Date: 3 June 2017

 

Time uploaded in London- 12-50

 

Post No. 3967

 

Pictures are taken from various sources such as Face book, Wikipedia and newspapers; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

கிழக்கு வங்காளத்தில் ஒரு சிறு கிராமத்தில் ஏழைப் பிராமணனக் குடும்பத்தில் பிறந்த நிர்மலா என்ற பெண் பிற்காலத்தில் உலகம் போற்றும் ஆனாந்த மயீ மா என்ற புனிதவதியாக உயர்ந்த கதை கேட்பதற்கே சுவையானது; புனிதமானது.

 

1896ஆம் ஆண்டு ஏப்ரல் 30 தேதி பிறந்த அவர் 86 ஆண்டுகளுக்கு வாழ்ந்து இந்தியாவிலுள்ள புனித ஹரித்வாரில் 1982 ஆகஸ்ட் 27ல் சமாதி அடைந்தார். உடனே அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி விசேஷ  ஹெலிகாப்டரில் வந்து அந்திமக் கிரியைகளில் கலந்து கொண்டார்.

 

தெய்வ நெறிக் கழகத்தின் சுவாமி சிவாநந்தா, யோகதா சத் சங்கத்தின் பரமஹம்ச யோகாநந்தா போன்றோர் புகழ் மாலை சூட்டிய ஆன்மீகப் பேரரசி அவர்.

 

ஆனந்தமயீ மா, கியோரா என்னும் சிறு கிராமத்தில் விபினவிஹாரி பட்டாசார்யா- மோக்ஷதா சுந்தரி தேவி ஆகிய தம்பதியருக்கு தவப் புதல்வியாக  அவதரித்தார் நிர்மலா சுந்தரி. சிறுவயதிலிருந்தே படிப்பில் நாட்டமில்லாமல் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் செலுத்தினார். எல்லா இந்துக் குடும்பங்களிலும் உள்ளது போலவே அவரது வீட்டிலும் ஒரு சுவாமி அறை இருந்தது. அதிலுள்ள பல கடவுளரிம் படங்களுக்கு முன்னால் தியானம் செய்வது இவரது வழக்கம்.

அந்தக் கால வழக்கபடி நிர்மலாவுக்கும் விக்ரமபுரத்தைச் சேர்ந்த ரமணி மோஹன சக்ரவர்த்திக்கும் திருமணம் நடந்தது. அப்போது நிர்மலாவுக்கு வயது 13. ஆயினும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தது அதற்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர்தான். எப்படி பிற்காலத்தில் நிர்மலா– ஆனந்தமயீ ஆனாரோ,  அப்படி ரமணி மோஹன் — போலாநாத் ஆனார்.

 

நிர்மலாவும் ரமணியும் பெயர் அளவிலேயே மனைவி- கணவனாக இருந்தனரே தவிர தாம்பத்திய உறவு என்பது கிடையவே கிடையாது.

 

சிறிது காலத்தில் போலாநாத்துக்கும் ஆன்மீக உணர்வு அதிகமானது எப்படி ராமகிருஷ்ன பரமஹம்சரால், அவரது மனைவி சாரதா தேவி சந்யாசினி ஆனாரோ அப்படி ஆனந்தமயீ முன்னிலையில் போலாநாத் சந்யாசி ஆனார்.

 

 

ஆனந்தமயீ மாவின் தவ வலிமை அவ்வளவு சக்தி வாய்ந்தது.

பிறப்பிலேயே இறை உணர்வு பெற்ற ஆனந்தமயீ, அடிக்கடி தன்னை மறந்த நிலையை அடைந்தார். நாளடைவில் இது அதிகமாகி, பல நாட்களுக்கு நினைவற்றுக் கிடப்பார். கணவனும் கூட அவருக்கு சேவகம் செய்யத் துவங்கினார். அறியாத ஒரு மகளுக்கு தந்தை எப்படி உதவுவாரோ அது போல போலாநாத் தன் மனைவிக்கு உதவினார்.

 

ஆனந்தமயீயின் பெருமை கொஞ்சம் கொஞ்சமாகத் தெரியத் துவங்கியது அவரது கணவருக்கு பாஜிப்பூரில் நவாப்பிடம் முதலில் வேலை கிடைத்தது. பின்னர் டாக்காவில் வேலை கிடைத்தது.

 

 

டாக்காவில் ஆனந்தமயீ இருக்கும் போது சமூகத்தின் உயர் நிலையில் இருந்த டாக்டர்கள், வக்கீல்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் அவரைப் பார்க்க குவிந்தனர். காலப் போக்கில் பக்தர்கள் அனைவரும் சேர்ந்து டாக்காவில் அவருக்கு ஒரு ஆஸ்ரமம் கட்டினர். ஆனால் தன்னை சி றைப்படுத்திக் கொள்ள விரும்பாத ஆனந்தமயீ தேச சஞ்சாரம் செய்யத் துவங்கினார். நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்யத்  துவங்கினார். எந்த இடத்திலும் இரண்டு நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.

 

 

தென்னிந்தியாவில் ரமண மகரிஷிக்கு வெளிநாட்டு பக்தர்கள் சேர்ந்தது போல ஆனந்தமயீக்கும் நிறைய வெளி நாட்டு பக்தர்கள் சேர்ந்தனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு,  அவரது மகள் இந்திரா காந்தி , தத்துவ அறிஞர் கோபிநாத் கவிராஜ் ஆகியோர் இவரது பக்தர்களாயினர்.

 

இவரது ஆன்மீக சக்தி, இவரைத் தரிசித்த அனைவரிடமும் பரவியது. அனைவரும் இவரது செல்வாக்கின்கீ ழ் வந்தனர். குறிப்பிடத்தக்க ஒரு வெளிநாட்டுக்காரர் ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவில் பிறந்த பிளாங்கா (Blanca) ஆவார். அ ந்த யூத மதப் பெண்மணி இவரது உபதேசத்தில் உருகி ஆத்மாநந்தா என்ற பெயர் பெற்றார். அவர் எழுதிய டயரி, ஆத்மாநந்தா சமாதி அடைந்தபின்னர்  ராம் அலெக்ஸாண்டர் என்பவரால் வெளியிடப்ப ட்டது. அதில் ஆனந்தமயீ மற்றும் ஆத்மாநந்தாதாவின்  வரலாறு வெளியானது.

 

ஆனந்ததமயீயிடம் வந்த அறிஞர்களில் ஒருவர் ஒரு நாள் திடீரென்று உரத்த குரலில் பேசினார். இன்று நான் உங்களை “அம்மா” என்று அழைத்துக் கதறிவிட்டேன்; எதிர்காலத்தில் உலகம் முழுதும் உங்களை “அம்மா” என்று அழைக்கும் என்று ஆரூடம் சொன்னார். அது உண்மையும் ஆயிற்று. உலகமே அவரை மா (அன்னை) என்று அழைக்கத் துவங்கியது.

 

வெளிநாட்டுப் பேராசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் ஆகியோர் இவரிடம் பல வினாக்களுக்கு விளக்கம் கேட்டறிந்தனர். அவர் படிக்காத மேதையாக விளங்கினார்.

குரு இல்லை!

 

ஆனந்தமயீ தனக்குத் தானே குரு ஆனார். அவருக்கு குரு என்று எவரும் இல்லை. தனக்கு ஏற்பட்ட அனுபவங்களில் ஆயிரத்தில் ஒரு பகுதியை கூட தான் வெளி உலகிற்குச் சொல்லவில்லை என்று பிற்காலத்தில் அவரே கூறியதுண்டு. சுமார் 60 ஆண்டுக் கால தர்மப் பிரசாரத்திற்குப் பின்னர் ஆனந்தமயீமா 1982 ஆகஸ்ட் 27ல் ஹரித்வாரில் சமாதி அடைந்தார். அங்கே அவரது புனித சமாதி இருக்கிறது.

அவர் பரப்பிய ஞான ஒளியும், அவர் பொழிந்த அருள் மழையும் இன்றும் நீடிக்கிறது; அவரை நினைப்போருக்கு அவை என்றும் கிடைக்கும்!

 

xxxx SUBHAM xxxxxx

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால்! (Post No.3966)

Written by S NAGARAJAN

 

Date: 3 June 2017

 

Time uploaded in London:-  6-29  am

 

 

Post No.3966

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

திருக்குறள் மர்மம்

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்பாக்கள்!

 

ச.நாகராஜன்

 

 

வள்ளுவர் தமிழ் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கையாளும் மஹாகவி. மஹரிஷி.

 

அவரது குறளில் பகுத்தறிவு என்ற ஒரு அறிவைப் பற்றிச் சொல்லவே இல்லை.

பகுத்து என்ற வார்த்தை,

 

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” (குறள் 322)

 

என்ற ஒரே ஒரு குறளில் மட்டுமே வருகிறது. பகுத்து உண் என்பதில் மட்டுமே பகுத்து என்ற வார்த்தை வருகிறது.

பகுத்தறிவு என்பதைச் சொல்லாத வள்ளுவர் அறிவை அற்புதமாக மூன்று விதமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

கார் அறிவு (குறள் 287)

களவென்னும் காரறிவாண்மை அளவென்னும்

ஆற்றல் புரிந்தார் கண் இல்

 

இங்கு கார் அறிவு என்பது குறுமதி அல்லது இருண்ட அறிவு என்பதைக் குறிப்பிடுகிறது.

ஆக அறிவில் கீழ்த்தரமான கீழ் மக்களது அறிவு கார் அறிவு.

அடுத்து பேரறிவு (குறள் 215)

 

ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்

பேரறிவாளன் திரு

 

பொது சேவையில் ஈடுபடும் ஒருவனது பேரறிவை இக்குறள் சுட்டிக் காட்டுகிறது.

 

ஆக கார் அறிவு மற்றும் பேரறிவைச் சொல்லிய வள்ளுவர் இன்னொரு அறிவைச் சொல்கிறார்.

வால் அறிவு (குறள் 2)

 

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

வால் அறிவு இறைவனது அறிவு. தூய அறிவு.

ஆக இப்படி கார் அறிவு, பேரறிவு, வாலறிவு ஆக மூன்று விதமாக நுண்ணறிவைப் பிரிக்கிறார் வள்ளுவர்.

பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு புது வித இனத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளுவரைப் படிக்க ஆர்வப்படலாமா?

 

பகுத்தறிவாளர்களுக்கு சவால் விடும் குறள்கள் ஏராளமாக திருக்குறளில் உள்ளன.

 

எடுத்துக்காட்டிற்காக சில குறள்களை மட்டும் கீழே காணலாம்:

  • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் பெய் என்றால் மழை பெய்யும்.

கேள்வி: பெண்ணியத்திற்குத் துணை போகும் ஒருவரா வள்ளுவர். அது எப்படி பெய் என்று ஒரு பெண்மணி சொன்னால் மழை பெய்யும்? உலகத்தில் வாழ்கின்ற தாய்க்குலத்தில் பத்தினிகளே இல்லையா? யாருமே பெய் என்று சொல்லி மழை பெய்ததைப் பார்க்க முடியவில்லையே!

  • வழுத்தினாள் தும்மினேனாக அழித்தழுதாள்

யாருள்ளித் தும்மினீ ர் என்று (குறள் 1317)

3) தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்தீரோ என்று (குறள் 1318)

 

தும்மல் என்பது இயற்கையில் மனிதருக்கு ஏற்படும் ஒன்று. இதற்கும் காதலி நினைப்பதற்கு என்ன, ஐயா சம்பந்தம்? காதலனை நோக்கிக் காதலி யாரை நினைத்து தும்மினாய் என்று கேட்பது பகுத்தறிவுக்கு ஒத்ததா?

 

  • அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொற்த்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)

சிவிகையை ஒருவன் சுமக்கிறான். அதனுள் ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். ஆயிரக்கணக்கில் கார்கள் போகின்றன. டிரைவர் ஓட்டுகிறார். முதலாளி அமர்கிறான்.

இது உலகியல்பு. இதையும் வினையையும் எப்படி முடிச்சு போடலாம். எங்கள் பகுத்தறிவுக்கு இது ஒத்ததல்ல.

  • மலர்மிசை மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார் (குறள் 3) நீண்ட ஆயுளுக்கும் இறைவனுக்கும் என்ன சம்ப்ந்தம்?
  • கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும் (குறள் 260)

கொலை செய்யப்பட உள்ள உயிர் வேண்டுமானால் ஒரு வேளை மனதிற்குள் தப்பித்தேன் என்று நினைக்கலாம். ஆனால் எல்லா உயிரும் எப்படித் தொழும்?

  • மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை

எந்நோற்றான் கொல் எனும் சொல்

தந்தை நோன்புக்கும் மகனுக்கும் என்ன தொடர்பு? அவனவன் வாய்ப்பு, அறிவு, பணம் போன்றவற்றிற்குத் தக முன்னேறுகிறான். தந்தை உதவி செய்யாவிட்டாலும் கூட பலர் முன்னேறவில்லையா, என்ன?

  • ஊழிற் பெருவலி யா உள? மற்றொன்று

சூழினும் தான் முந்துறும் (குறள் 380)

விதி எப்படியும் தான் செய்வதைச் செய்தே தீரும் என்பது பொருந்தாத ஒன்று.

விதியின் மீதே பகுத்தறிவாளருக்கு நம்பிக்கை இல்லை. ஆக வள்ளுவரின் இந்தக் குறள் பகுத்தறிவுக்குப் பொருந்துமா?

  • ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப்பு உடைத்து (குறள் 398)

இந்தப் பிறவியில் தான் கற்ற கல்வி ஒருவனுக்கு ஏழு பிறவிகளில் பயன் தரும்.

மனிதனுக்கு ஒரு பிறவி மட்டுமே உண்டு. அதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டியது தான். எங்கிருந்து வந்தது ஏழு பிறவி? இது இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தாதே. அவர்கள் ஒரு பிறவி நம்பிக்கை உடையவர்கள் அல்லவா? ஹிந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினருக்கு மட்டுமே இது பொருந்தும்.

 

 

இப்படிப் பல குறள்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஐயன் வள்ளுவனுக்கு விழா எடுப்பதாகச் சொல்லிக் கொண்டு தனக்கு விழாவைத் தவறாமல் எடுத்துக் கொள்ளும் பகுத்தறிவுத் தலைவருக்கும் அவரது அன்புத் தம்பிகளுக்கும் இந்த வள்ளுவர் சரிப்பட்டு வருவாரா?

ஒன்று தங்கத் தம்பிகள் தவறாக வழி சொல்லும் தலைவனைக் கைவிட வேண்டும். அல்லது வள்ளுவரைக் கைவிட வேண்டும்.

 

 

சற்று சிந்தித்தால் ஒரே ஒரு விஷயம் புலப்படும்.

வள்ளுவரின் குறள்கள் ஆழ்ந்த தத்துவங்களின் அடிப்படையில் எழுந்தவை. காலம் காலமாக நிற்பவை. காலத்தை வென்றும் நிலைப்பவை.

 

எளிதில் மேலெழுந்தவாரியாகச் சொல்லப்படும் பொருளுக்கும் அப்பாற்பட்டு ஆழ்ந்த உட்கருத்தைக் கொண்டவை.

 

அதனால் தான் வேதங்களுக்குச் சொல்லப்படும் புகழ்மொழியான மறை என்று இதற்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தமிழில் இருப்பதால் தமிழ் மறை.

 

 

அதி மானுடவியல் என்னும் சைக்கிக், அதற்கும அப்பாற்ப்ட்ட வால் அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே இவற்றின் உட்பொருளை ஒருவர் அறிய முடியும்.

புண்ணிய பாவங்கள் பிறப்பைத் தரும்.

 

அதற்கேற்ப இன்றைய வாழ்வு அமையும்.

நல்லதைச் செய்து நல்ல பிறவியை எடு.

பின்னர் பிறவிச் சுழலிலிருந்து இறைவனை வேண்டி அவன் அருள் பெற்று விடுபடு.

 

கற்பில் சிறந்தவள் கடவுளே. அவள் ஆணைக்கு பஞ்ச பூதங்களும் அடி பணியும்.

 

நோன்பு அல்லது தவம் செய்தால் நன் மக்களைப் பெறலாம்.

எண்ணம் என்பது சக்தி வாய்ந்தது. ஒருவர் நினைக்கும் போது அதே லயத்தைக் கொண்டவர்க்கு எண்ண சக்தியின் ஓட்டம் தெரியும்.

 

இப்படி அதிமானுடவியல், ஹிந்து தத்துவம், சாஸ்திரங்கள் அல்லது அறநூல்களின் அடிப்படையில் மட்டுமே வள்ளுவரைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்றைய பகுத்தறிவின் அடிப்படைக்கு அப்பாற்பட்டவர் வள்ளுவர்.

 

 

தமிழ் மக்கள் செய்த தவத்தால் வந்தவர் வள்ளுவ.ர்

கார் அறிவை (இன்றைய பகுத்தறிவு) விட்டு விட்டு பேரறிவை ஈட்டி, அடைந்து, வாலறிவனை அறியும் முயற்சியில் ஈடுபடும் போது வள்ளுவம் புரியும்; வாழ்க்கையும் சிறக்கும்!

****