சொந்த தங்கையை மணந்த மன்னர்கள்- எகிப்திய அதிசயங்கள் 19 (Post No.3722)

Menkaure and his wife

Written by London swaminathan

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:- 9-18 am

 

Post No. 3722

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திய பாரோக்கள் (பர ராஜ = மன்னர்கள்) சொந்த தங்கைகளையே திருமணம் செய்துகொண்டனர். இதனால் அவர்கள் பலவகை மரபியல் நோய்களுக்கு உள்ளானார்கள். மேற்காசியாவை ஆண்ட ஹிட்டைட்டுகள் (Hittites) இப்படி யாரேனும் திருமணம் செய்தால் அவர்களுக்கு மரண தண்டனை என்று அறிவித்தார்கள். இவை எல்லாம் வரலாற்றில் காணப்படும் சுவையன செய்திகள்!

 

எகிப்திய சரித்திரத்தில் பழைய ராஜ்யம், நடு / மத்திய ராஜ்யம், புதிய ராஜ்யம் (Old, Middle and New Kingdoms) என்றும் குழப்பமான (அராஜக= அரசனற்ற) காலங்களை இடைப்பட்ட காலம்  (Intermediate Periods) என்றும் வரலாற்றாசிரியர்கள் பிரித்துள்ளனர். புதிய ராஜ்யத்தின் துவக்கத்தில் இரண்டாம் அஹோதேப் ( Ahotep II மஹாதேவி என்பது இப்படித் திரிந்திருக்கலாம்) தனது சகோதரனையே  கல்யாண ம் செய்துகொண்டார். அவருடைய பெயர் தா அல்லது காமோசி (Taa or Kamose) என்று நம்பப்படுகிறது.

 

(மோசி/மோசஸ்/ மூசு பலா,  தேப்/தேவி பற்றிய எனது முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளைக் காணவும்)

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமோசியும் (Ahmose) தனது தங்கையை திருமணம் செய்துகொண்டான். அவளுடைய பெயர் ஆமோசே நவரதிரி Ahmose Nefertiry (நவ ரதி).

 

அவர்களுக்குப் பிறந்த மகன் ஆமெனோதேப் ( Amenhotep) சமணதேவன்). அவன் தனது சகோதரி மேர்யாடாமுனை (Merytamun மாரி அம்மன்) மணந்தான்.

statue of Hatshepsut

இதற்குப் பின்னர் ஆண்ட மன்னன் துதமோசிக்கு (Thutmose) ஹட்சேப்சுத் (சத்ய சுதா Hatshepsut) என்ற மகள் பிறந்தாள். அவள் தனது ஒன்றுவிட்ட சகோதரனை கல்யா ணம் செய்துகொண்டாள். அவன் மன்னனான போது அவன் பெயர் இரண்டாம்  துதமோசி.

 

 

இந்தக் காலகட்டத்தில் சகோதர-சகோதரி கல்யாணம் நடைபெற்ரது உண்மை என்பதும், இது சம்பிரதாய சடங்கு அல்ல– உண்மையான திருமணம் என்பதும் உறுதியாகிவிட்டது.

 

எகிப் தி ய மன்னர்களின் பெயர்களில் உலகம் முழுதும் தெரிந்த மன்னன் துதன்காமுன் Tutankhamun (துஷ்டகாமினி). அவனும் அவனுடைய ஒன்றுவிட சகோதரி அங்கசேனாமுன்னை (தேவ சேனா/ தெய்வானை என்பது போன்ற ஒரு சம்ஸ்கிருதப் பெயர் என்பது என் துணிபு) கல்யாணம் செய்துகொண்டான்.

 

(துதன் காமுனின் ரத்தின- தங்கப் புதையல் அப்படியே கிடைத்ததால் அவன் பெயர் உலகம் முழுதும் பரவியது அவன் இளம் வயதில் இறந்ததால் அவனை BOY KING பாய் கிங் — மாணவ அரசன் — என்பர்).

 

அப்பாவும் மகளும் திருமணம் செய்துகொண்ட அபூர்வ நிகழ்ச்சிகளும் உண்டு. மூன்றாம் அமனோதேப் Amenhotep (சமண தேவன்), இரண்டாம் ரமேஸஸ் Ramesses II (ராம சேஷன், ரமேசன்) ஆகியோர் தங்களுடைய மகளைத் திருமணம் செய்தனர். ராமசேஷனுக்கு பிண்டாநட் Bintanat  (விந்தியாநாத்) என்ற மகள் பிறந்தாள்

 

Akhenaten and his wife Nefertiti

பழைய ராஜ்யத்தில் (OLD KINGDOM) இப்படி நடந்ததற்கான குறிப்புகள் உள்ளன. ஆனால் உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் டாலமி (PTOLEMY II) காலத்தில் மீண்டும் 200 வருடங்களுக்கு இந்த வழக்கம் நடைமுறைக்கு வந்தது. டாலமி காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டாகும் (இந்தியாவில் அசோகன் ஆண்ட காலத்தை ஒட்டி)

 

அரசர் அளவில் இப்படி நடந்தபோதும் சமுதாயத்தில் இப்படி நடந்ததாகத் தகவல் இல்லை. ஆகவே இது சமுதாயம் வெறுத்த ஒரு வழக்கம் என்றே கருதப்படுகிறது. இது எப்படித் தெரிகிறதென்றால் புதிய சாம்ராஜ்யத்தில் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசர் கல்லறைப் பணியில் ஈடுபட்ட ஒரு தொழிலாளி, அவனுடைய தாயாருடனும் மகளுடனும் கள்ள த் தொடர்பு வைத்துக்கொண்டதோடு வேறு ஒரு பெண்ணை தன் மகனுடன் சேர்ந்து அனுபவித்ததாக அவன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனுடைய பெயர் நபாமுன் (நவமுனி).

 

இப்பொழுது ஒரு கேள்வி எழுகிறது. மன்னர்கள் மட்டும் எப்படி குடும்ப உறுப்பினர்களை யே அனுபவித்தனர்? இதற்குக் காரணம் என்ன?

 

பெண்வழி (Female line) அரச மரபு இருந்ததால் தங்கள் குடும்பத்துக்குள்ளேயே ராஜபோகத்தை வைத்துக்கொள்ள அப் படிச் செய்தனர் என்பது ஒரு ஊகம்.

 

வெளியிடத்தில் பெண் எடுத்தால் அரசாட்சி கை மாறிவிடுமோ என்ற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது எகிப்தில் இருப்பதே ஒரு ராஜ குடும்பம்- அந்த ராஜ குடும்பத்திலேயே  உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று கருதி இருக்கலம். இப்பொழுதும் கூட சில ஜாதியினர் தங்கள் ஜாதிக்குள்ளேயே — ஒரு சிறு வட்டத்துக்குள்ளேயே — திருமணம் செய்வதைப் பார்க்கிறோம். தமிழர்கள் அத்தை, மாமன் மகள், மகன்களை க் கட்டுவதைக்கூட  வெளிநாட்டினர் COUSIN MARRIAGE கஸின் மேரேஜ் என்றுதான் இன்றும் சொல்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு புதுமை.

 

தெய்வங்களின் கதைகளிலும் இப்படி வருவதாலும் எகிப்திய அரசர்கள் தெய்வங்கள் என்று கருதப்பட்டதாலும் இப்படி நடந்ததாகக் கருதுவோரும் உண்டு. பைபிள் கூறும் முதல் மனிதனாகிய ஆதாம் அவன் இடுப்பு எலும்பில் உருவான ஏவாளையே (ADAM AND EVE) மனைவியாகக் கொண்டான். அதாவது மகளையே மணந்தான்!

 

ஆதாம்- ஏவாள் ஆகிய இருவருக்குப் பிறந்த சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் மணந்ததாலும் புணர்ந்ததாலும்  மக்கள் பெருகினர் என்று பைபிள் வாக்குவாதத்தில் ஈபடுவோர் செப்புவர்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது போன்ற பல குறிப்புகள் உண்டு.

எகிப்தைப் பொறுத்தமட்டில் எல்லா காரணங்களும் ஊகங்களே; உறுதியான காரணம் எதுவும் எழுதப்படவில்லை.

 

xxxxxxxxxxxxxxxxxxx சுபம் xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியாஎகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

 

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

18. எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)  Posted on12-3-20117

xxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

5000 வருடங்களுக்கு முந்தைய எகிப்திய நகரத்தின் கண்டுபிடிப்பு (Post No. 3487) by S Nagarajan, posted 27-12-2016

 

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)

 

Feng Shui – True or False? (Post No.3721)

Written by S NAGARAJAN

 

Date: 14 March 2017

 

Time uploaded in London:-  5-13 am

 

 

Post No.3721

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

Feng Shui – True or False? If it is True, is there a Proof?

by S. Nagarajan

 

Feng means Wind and Shui means water in Chinese language. It is an ancient Chinese art, at least 5000 years old.


There are five elements. Everything is energy. If you are able to channelise the positive energy understanding the five elements, you will be successful in all spheres.

 

 

How to channelise the energy and what is the proof that Feng Shui works?

We may refer at least one real story for this.

Hans Snook is famous for his slogan, ‘The future is bright, The future is Orange’.  With this he developed his company and sold it for a huge amount of 50 million pounds.

 

 

Snook was born in England. He dropped out of university and worked in the hotel business in Canada.

Then he went to Hong Kong and worked in a telecoms company. In 1994, he came back to London and launched a mobile phone company.

 

He was all success due to his belief in Feng Shui. Even though he did not have a great belief in that, he consulted a Feng Shui master. The master suggested certain alterations in his office and assured him that within twelve months the business would become very successful.

 

And that is what happened. His business incredibly brought a lot of money.

Not only Hans Snook, almost all businessmen around the world who want an all-round success and prosperity adopt Feng Shui principles. The Proof?

You may see the water spring in front of the big malls and corporate office buildings.

 

 

One interesting example is Andrew Thrasyvoulou. He is an architect himself and owner of a hotel group, Myhotel Company.

When he took over a London building he had to redesign and modify it since the existing one was not according to the principles of Feng Shui.

He has based the layout on the principles of this Chinese art. Major changes in the 76 room hotel were made.

The staircase facing the entrance was moved in order to make the positive flow of energy. The bar’s hard edges were removed and were replaced with round corners.

 

A Fish Tank was placed in front of Cash register locks to bring luck and prosperity.

Thus the entire hotel was modified and he made enormous money.

The latest fashion is to engage a Feng Shui master along with the architect.

The Hindu Scriptures specify Vastu Sastra which is more than Feng Shui.

 

 

All these special techniques are simply aligning the forces which are invisible. Those who respect and adopt them are fortunate and those who are ignorant of the facts are deprived of the benefits.

Hence we must understand the basic principles and make our life a successful one following these rules.

I would like to recommend to read my earlier article titled, ‘Get Feng Shui – Vastu Combined Benefits’.

****

 

Vedic Ribhu is Greek Orpheus: Nicholas Kazanas (Post No.3720)

Compiled by London swaminathan

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:- 20-43

 

Post No. 3720

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

“Rbhu is a Vedic God. Rbhu means Intelligent fashioner. Scholars generally agree that this word is cognate with English/Germanic elf (Elfe, Alp etc.), old Slavic Rahb (servant) and the name of the Greek poet- musician- hero Orpheus.

 

In the Rig Veda (1-20, 110; 3-60; 7-48 etc) the Rbhus are three brothers, sons of Sudhanvan who perform several miraculous deeds “through the power of mind”.

 

For instance, Rig Veda 4-2 says ‘ratham ye cakruh suvrtam sucetaso avibvarantam manasas pari dhyaya’ The wise ones who fashioned the fine-rolling, impeccable car by visionary power ’dhi’ – out of mind/manas – But three are often indicated by the singular Rbhu as one. Thus, in the RV, the name appears both in the singular and in the plural. The three brothers, though mortal, thanks to their great mental power gain the favour of the gods and stay in the mansion of the Sun god where they serve as priests and there become immortal gods themselves.

 

The Slavic servant can be put aside as of no significance other than the cognation rbhu=rabh. The Germanic elves are in the plural, a whole tribe of them. They are of two kinds: the dark ones live underground and  often identified with the Dwarfs who often are greedy and who are craftsmen dealing with metals, precious stones and ether minerals; the fair ones live in the light in Alfheim, are associated with the sun and can heal. Thus it is not difficult to see the connection with the Rigvedic Rbhus.

 

Greek Orpheus was a figure of veneration from very ancient times and a multitude of legends were woven around him. He too was a clever craftsman with music and became a devotee (and in later legend a priest) of the Sun god. Only instead of gaining immortal godhood he was torn apart by the Maenads; his head was thrown into the river Hebros, floated still singing into the sea and finally was washed ashore on Lesbos where a shrine was established giving out oracular prophecies. A different strand has him killed by the lighting of Zeus.

 

Here again countless generations of ancient and modern scholars tried to trace his antecedents. Some said Orpheus was a historical figure who performed miraculous deeds and founded a religion — Orphism”. Others said he was the son of the Sun god or even the very incarnation of Apollo. Some said his origin was to be found with the Thracians or the shamans in the Hyperborean regions (and farthest Siberia); others claimed that he came from Anatolia and still others argued that he was a native Greek and and/or son of Oiagros.

 

But, of course, Orpheus is a PIE (-Prtco-Indo-European) as the evidence shows and some IEans brought a memory of him with them when they came and settled into Greece, in the 3rd or the 2nd millennium BC. Although this fact is now well known among IE scholars, classicists continue to speculate and argue in their accustomed vein.

Reincarnation Theory

 

Closely connected with the Orphics are the Pythagoreans. Both held the idea of reincarnation, albeit clearly, in their early but only in their later traditions.

 

Now, since the very early Greekliterature of Homer, Hesiod and other poets until Pindar and Empedocles (early 5th century BCE), shows no definite knowledge of this doctrine, hellenists tend to accept what Herodotus says in the Second Book of his Histories (2-123), namely that Pythagoreans brought it into Greece from Egypt. In fact several scholars have the Greeks importing many ideas into Greece from the Near East (e.g. Pengalese 1994; West 1971, 1994).

 

We can say with certitude that Herodotus is often totally unreliable and this is one such instance. The Egyptians had no doctrine of reincarnation; they mummified the corpses of noblemen and held that their souls rose into heaven joining Ra or Osiris in his sky boat. In fact no, Near -eastern culture had reincarnation at this period.

 

It would be far more reasonable to accept that Greece brought the idea of metempsuchosis (reincarnation) or palingenesia (rebirth) together with the Erinus (Vedic Goddess Saranyu) legend, the memory of Orpheus and many other elements from the PIE culture, rather than assume that these were borrowed from near-eastern cultures that did not have them anyway.”

 

Source: Vedic and Indo-European Studies, Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, 2015

 

–Subham–

 

கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!! அடுத்த ஜன்மத்திலும் அவரே………….. !!! (Post No.3719)

Written by London swaminathan

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:- 11-15 am

 

Post No. 3719

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

  1. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் கும்பிடவே வேண்டாம்; கணவனைக் கும்பிட்டால் ‘பெய்யெனப் பெய்யும் மழை!

 

2.கணவன் பெயரைச் சொல்லக்கூடாது. அது மரியாதைக் குறைவு!!

 

3.அடுத்த ஜன்மத்திலும் அவரே எனக்கு கணவராக வரவேண்டும்; இதற்காகத் தவம் செய்வேன்………………

 

இப்போதுள்ள இந்துப் பெண்களைக் கருத்து கேட்டால், நிபந்தனையற்ற ஆதரவு தருவதில்லை. என் கணவன் ராமன் போல் இருந்தால், முன்னோர் சொன்னதை ‘’ஆதரிப்பேன்;’’ என் கணவர் கிருஷ்ணர் போல இருந்தால் ‘’மாட்டேன்’’ என்பர்!

 

ஆண்களிடம் கருத்துக் கேட்டால், கல்யாணம் ஆனதும் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த வரம்” என்று பாடிக்கொண்டிருந்தேன். இப்போது கொஞ்சம் நாக்கு குளறுவதால் “மனைவி அமைவதெலாம் இறைவன் கொடுத்த அ அ அ ‘ரவம்’ — என்று பாடுகிறேன் என்பர்

(அரவம்=பாம்பு); தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் கொட்டிக்கொண்டே இருக்கும் என்பது பழமொழி. என் மனைவிக்கு அதிகாரம் கொடுக்காமலேயே கொட்டிக்கொண்டிருக்கிறாள் என்பர்!

 

சங்கத் தமிழ் இலக்கியத்திலும் சம்ஸ்கிருத இலக்கியத்திலும் 2000 ஆண்டுகளாக பல “பத்தாம் பசலி”க் கருத்துகள் உள்ளன. உலகில் வேறு எந்த பழைய கலாசாரத்திலும் இப்படி “ஹைதர் அலி” கால கருத்துக்கள் இல்லை. ஆயினும் இமயம் முதல் குமரி வரை 2000 ஆண்டுகளாக இப்படி ஒரே கருத்து நிலவுவது, இந்த நாகரீகம் இயற்கையிலேயே இந்த மண்ணிலேயே உருவாகி வளர்ந்தது; ஆரியம்- திராவிடம் என்பதெல்லாம் நல்ல பிதற்ரறல் என்பதைக் காட்டுகிறது.

 

உங்கள் கணவர் பெயர் என்ன?

 

கணவன் பெயரைச் சொல்லக்கூடாது! என்று இந்துப் பெண்கள் நம்பினர்.

 

உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய கருத்துக்கள் இல்லாததால், அதுவும் உலகிலேயே பெரிய நாடாக இருந்த பாரதத்தில் 2000 ஆண்டுகளுக்குத் தொடர்ச்சியாக இருப்பதால் ஆரிய-திராவிடக் கூத்தாடிகளுக்கு இந்தக் கொள்கை அடி கொடுக்கும்.

 

மதுரையில் நாங்கள் வசித்த காலத்தில் என் தந்தை பெயரை என்  அம்மா எப்போதும் சொன்னதே கிடையாது. ஆனால் இப்போது என் மனைவி என் பெயரை, ஒன்றுக்குப் பத்து முறை சொல்லவும் தயங்க மாட்டாள்; நான் அதை காலத்தின் தேவை என்று கருதுகிறேன்.

 

மதுரை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாலளராக (ஜில்லா கார்யவாஹ்) தொண்டாற்றியபோது ஒரு வீட்டில் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தோம். ஒரு பெண்மணி மட்டுமே இருந்தார். அவரது கணவன் பெயர் தெரிந்தால்தான் நாங்கள் சென்ற விலாசம் சரியா என்று தெரியவரும். ஆனால் அப்பெண் கணவர் பெயரைச் சொல்லாமல் எங்களுக்கு ‘’விடுகதை’’ போட்டாள். அதாவது பெயரை நேரடியாகச் சொல்லாமல், பல துப்புகளைக் கொடுத்தாள். பொதுவாக இந்தமாதிரி நேரத்தில் மகனோ மகளோ இருந்தால் அவர்கள் மூலம் கணவர் பெயரை வெளிப்படுத்துவர்.

 

எனக்கு அந்த வீட்டுக்காரரைன் பெயர் இப்போது நினைவில்லை. நான் லண்டனுக்கு வந்தே 31 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு எடுத்துக்காட்டுக்காக கீழே உள்ளதைத் தருகிறேன்.

 

இது ராமநாதன் வீடா?

பெண்: இல்லீங்க

உங்கள் வீட்டுக்காரர்  பெயர் என்ன?

மிகவும் தயக்கத்துடன் அப்பெண்: அதுவா?.. அதுவா?…

 

அதாங்க மதுரைக் கோவில்ல இருரக்காரே அந்தக் கடவுள் பெயருங்க!

ஓ சுந்தரேசனா?

அப்பெண்: ‘’இல்லீங்க”

ஓ சுந்தரம்? …………. மீனாட்சி சுந்தரமா?

அது இல்லீங்க! தமிழ்ல சொல்லுவாங்களே/ இந்த சினிமாவில கூட நாகேஷ் உரக்கச் சொல்லுவாரே….

ஓ சொக்கனா!

ஆமாங்க, ஆமாங்க, அதே தான்!

 

இப்படி பலவிடுகதைகள் மூலம் நம் அறிவைச் சோதிப்பர். மண்டனமிஸ்ரரைச் சந்திக்கப் போன ஆதிசங்கரன் என்ற சிறுவனைப் பார்த்து நகைத்த நர்மதை நதிக்கரைப் பிராமணப் பெண்கள், அவருக்கு சம்ஸ்கிருதத்தில் புதிர் மிக்க கவிதை மூலம் வழி சொன்னது போல நமக்குக் கணவன் பெயரைத் தெரிவிப்பர்!

 

வால்மீகியும், காளிதாசனும், இளங்கோவும், வள்ளுவனும், அம்முவனாரும் சொல்லும் கருத்துகளை இன்றைய பெண்கள் ஏற்றுக் கொக்ள்வார்களா?

 

முதலில் புலவர்கள் சொல்லுவதைப் படியுங்கள். பின்னர் என் கேள்விக்கு என்ன பதில் என்று கேட்கிறேன்.

 

வள்ளுவனும் வால்மீகியும்!

 

வள்ளுவனும் வால்மீகியும் இவ்விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கு அதிகமகவே (TOO MUCH!) பேசிவிட்டனரோ!

 

ராமபிரான் வாய் மூலமும், சீதையின் மூலமும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று சொல்லிவிடுகிறார். அயோத்தியா காண்டத்தில்:-

 

சீதை சொல்கிறாள்:

ஒருவனுடைய தந்தை, தாய், தன்னுடைய சகோதரன், புதல்வன், மருமகள் ஆகிய ஐவரும் தாம்தாம் செய்த  பாவங்களுக்கு ஏற்ப அவற்றின் பலனை அனுபவிப்பார்கள். ஆனால் மனைவியே தன் கணவனின் பாவ புண்ணியங்களில் பங்கேற்பவள்.

 

கணவன் துன்புறும்போது மனைவி சுகத்தில் புரளும் ஈனப் பிறவி என்றா என்னை நினத்தீர்கள்?   த ங்களுடன் வாழ்வதே உத்தமமான தர்மம் என்பதைப் புரிந்து கொண்டேன்; தங்களுடன் வாழும்போது, எத்தகைய துன்பமும் எனக்குத் தென்றலைப் போல இனிக்கும்; குயிலைப் போல் ஆனந்தததைத் தரும். கணவனுக்குப் பணிவிடை செய்வதே நான் கொண்ட தர்மம். அந்தத் தர்மததைச் செய்ய விடுங்கள். தங்களை மீறிப் பேசும் சொற்கள் தங்களுக்குக் கோபத்தை உண்டாக்கலாம். இருப்பினும் நான் கதியற்றவள் தாங்களே தெய்வம் என்று வந்தவள்; தங்களைப் பிரிந்து நான் எப்படி வாழ்வேன்?

 

ராமனும் கோசலையிடம் பேசும்போது, கணவனே தெய்வம் என்று குறிப்பிடுவான்.

தமிழ் வேதமாகிய திருக்குறள் தந்த திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளுகிறார்:–

 

தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)

 

வேறு எந்த தெய்வத்தையும் தொழாது, தன்னைக் கொண்ட கணவனை மட்டும் தொழுது  — பின் தூங்கி முன் எழும் — துயில் எழும் மனைவி, பெய் என்றால், உடனே அவள் சொல் கேட்டு மழையும் பெய்யும்!

 

(இதற்கு சாவித்ரி, வாசுகி, கண்ணகி கதைகளை ஆதாரமாகக் கொள்வர்.)

 

இதைவிட ஒருபடி மேலே போய், வள்ளுவன் செப்புவான்:

 

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர் கொண்டனள் (குறள் 1315)

 

இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் – என்று சொன்னபோது –மறுமையில் மறந்து விடுவேன் என்று தவறாக நினைத்துக் கொண்டு, மறு பிறப்பில் பிரிந்துவிடுவோமோ என்று கண்களில் நீர் பெருகியது!

 

இதற்கெல்லாம் மூல காரணம் வால்மீகிதான்!

சங்கப் புலவர்களின் தங்க மொழிகள் (பொன்மொழிகள்)

 

2000 ஆண்டுகளுக்கு முன் பாடிவைத்த பைந்தமிழ்ப் புலவர்களும் வால்மீகியை அடியொற்றிக் கருத்துகளை உதிர்த்துள்ளனர்.

 

தோளும் அழியும்…………………

சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவின்

பிறப்புப் பிரிது ஆகுவது ஆயின்,

மறக்குவேன்கொல், என் காதலன் எனவே

நற்றிணை 397, புலவர் அம்மூவனார்

 

பிரிவிடை ஆற்றுக என வற்புறுத்திய தோழிக்கு, ஆற்றுவேன் என்று தலைவி சொல்லியது:

“மாலைப் பொழுதும் வந்துவிட்டது. யான் எப்படி ஆவேனோ இங்கே யான் இறப்பதற்கு பயப்படவில்லை ஆனால் வேறு ஒன்றுக்கு அஞ்சுவேன்; இறந்த பின் , மறு பிறப்பில் பெண்ணாகப் பிறக்காமல், வேறு ஒன்றாகப் பிறந்தால் என்ன செய்வேன் என்ற எண்ணம் என் மனதை வாட்டுகிறது”  — என்பது ஆன்றோர் உரை.

 

 

குறுந்தொகையிலும் அம்மூவனாரே இக்கருத்தைத் திருவாய் மலர்ந்து அருளுவார்:

 

அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து

மணிக்கே ழன மாநீர்ச் சேர்ப்ப

இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே

–குறுந்தொகை 49, அம்மூவனார்

 

தலைமகன் பரத்தை வீட்டில் வேறு ஒரு பெண்ணுடன் இன்பம் துய்த்துவிட்டுத் திரும்பிவருகிறான்:

ஆன்றோர் உரை:

தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவாற்றாமை நீங்குமன்றே; நீங்கி யவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது:

 

“அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய, தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும், நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையுடைய தலைவ!

 

இப் பிறப்பு நீங்கப் பெற்று நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும், என்னுடைய கணவன், இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக!  நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!

 

கருத்து:- நம்முடைய நட்பு பிறவிதோறும் தொடரும் இயல்பினதாகுக.

((மாதவியிடம் போய்விட்டுத் திரும்பிவந்த கோவலனை கண்ணகி ஏற்றுக் கொண்டாள்!))

 

 

இதே கருத்து குறுந்தொகை 199 -பரணர்

குறுந்தொகை-2 இறையனார்

குறிஞ்சிப் பாட்டு வரி 24 -கபிலர்

பெருங்கதை2-11-39; மற்றும் பல இடங்களில் வருகிறது.

 

தமிழர்கள் மறு பிறப்பிலும், மறு பிறப்பில் நட்பு தொடர்வதிலும் ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கள்

 

காளிதாசனின் ரகு வம்ச காவியம்

 

காளிதாசன், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளான். ரகு வம்சத்திலிருந்து மட்டும் சில மேற்கோள்களைத் தருவன்:

சீதை சொல்கிறாள்; இப்பொழுது நான் கர்ப்பவதி; தவம் செய்தால் அது பிறக்கப்போகும் குழந்தைகளைப் பாதிக்கும்;  குழந்தை பிறந்தவுடன், நான்கு தீக்களுக்கு நடுவே நின்று கொண்டு சூரியனை உற்று நோக்கி தவம் செய்வேன். எதற் காக என்றால் அடுத்த பிறப்பில் நானும் நீங்களும் கணவன் மனைவி ஆக வேண்டும்; அப்பொழுது இப்பிறப்பில் ஏற்பட்ட பிரிவு ஏற்படக்கூடாது!

 

சாஹம் தபஹ சூய நிவிஷ்ட த்ருஷ்டிர் ஊர்த்வம் ப்ரசூதேச் சரிதும் யதிஷ்யே

பூயோ யதா மே ஜனனாந்தரே அபி த்வமேவ பர்தா ந ச விப்ர யோகஹ

ரகு 14-66

 

பொருள்

எவ்வாறு மறுபடியும் எனக்கு மறுஜன்மத்திலும் தாங்களே கணவராக ஆவீர்களோ பிரிவும் உண்டாகாதோ அவ்வாறு இத்தகைய துரதிருஷ்டம் வாய்ந்த நான், பிரசவத்திற்குப் பிறகு, சூர்யனிடத்தில் வைக்கப்பட்ட பார்வையுடையவளாக தவத்தை (பஞ்சாக்னி தபஸ்) செய்யப் போகிறேன்

 

இன்னொரு இடத்தில் ஆயிரம் மன்னர்களுக்கு இடையே இந்துமதி, அஜனைத் தனக்கு கணவனாக ஏற்றது எப்படி யென்றால் மனதுக்கு பூர்வ ஜன்ம தொடர்பினை அறியும் சக்தி உண்டு என்பார் (7-15)

 

ரதிஸ்மரௌ நூனம் இமௌ அபூதாம் ராக்ஞாம் சஹஸ்ரேஷு ததாஹி பாலா

கதேயமாத்மப்ரதிரூபமேவ மனோ ஹி ஜன்மாந்தர சம்கதிக்ஞம்

 

இவ்விருவரும் மனித வடிவில் தோன்றிய இணைபிரியாத ரதியும் மன்மதனுமே ஆவர்; மனமானது பூர்வ ஜன்மதொடர்பின் படியே செயல்படும் ஆதலால இவளுடைய மனமும் 1000 அரசர்கள் குழுமியிருந்த இடத்தில் அவளுக்கு உரியவனையே தேர்ந்தெடுக்க உதவியது.

 

கண்ணகி எப்படி தெய்வமானாள்?

 

 

தெய்வந்தொழாஅள், கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழும் தகைமை திண்ணிதால் – தெய்வமாய்

மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து!

–கட்டுரைக் காதை, சிலப்பதிகாரம்

 

இளங்கோ சொல்வது:–

மண்ணக் மாதர்க்கு எல்லாம் அணி போல்பவளான கண்ணகியானவள், தெய்வமாக விண்ணக மாதர்க்கு விருந்தினளாயினாள். தெய்வத்தைத் தொழாமல் கணவனையே தொழும் பெண்ணை தெய்வமும் வணங்கும் என்பது இவ்வுலத்தில் இதனால் உறுதி ஆய்விட்டது.

 

கட்டுரையின் நீளத்தைக் கருதி ஏனைய மேற்கோள்களைத் தவிர்ப்பன்.

பெண்களே! உங்கள் கருத்து என்னவோ?

–சுபம்–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 34 (Post No.3518)

Written by S NAGARAJAN

 

Date: 13 March 2017

 

Time uploaded in London:-  8-10 am

 

 

Post No.3718

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 34

ச.நாகராஜன்

 

113ஆம் வயது – (1952-1953)

ஸு யுன்னுக்கு இப்போது வயது 113. வசந்த காலம் வந்தது. அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.மிகவும் மோசமான தருணங்களை எப்ப்படிக் கையாளுவது என்பத்ற்காக சான் தியான பயிற்சியை அவர் நடத்தினார்..

பீஜிங் அரசிடமிருந்து முதல் மூன்று மாதங்களில் நான்கு முறை பீஜிங் வருமாறு தந்தி வந்தது. அவரை அழைத்துச் செல்ல அதிகாரிகள் பீஜிங்கிலிருந்து வந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து போக வேண்டாம் என்றனர்.

அதற்கு ஸு யுன், “காலம் கனிந்திருக்கிறது. ஒரு நல்ல தலைவன் இல்லாததால் நமது பணிகளைச் செய்ய முடியாமல் துரதிர்ஷ்டம் வந்து தடுக்கிறது. நான் தர்மத்தைக் காக்க அங்கு செல்ல வேண்டும். அது எனது பொறுப்பாகும்.” என்றார்.

யுன் மென் மடாலயத்தை நிர்வகிக்க சில மூத்த பிக்ஷுக்களை அவர் தேர்ந்தெடுத்தார். பின்னர் விடை பெறுமுன் இரு துண்டுச் சீட்டுகளில் இப்படி எழுதினார்:

“ஐந்து ஆட்சிகளையும் நான்கு வம்சங்களையும் நான் பார்த்துக் கொண்டிருந்த போது பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.

சொல்லவொண்ணாத ஏற்ற இறக்கங்கள் உலகின் நிலையில்லாத் தன்மையை எனக்குப் புரிய வைத்தன.”

நான்காம் மாதம் நான்காம நாள் அவர் அதிகாரிகளுடன் அவர் புறப்பட்டார். பல நூறு பேர்கள் திரண்டு வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். டா ஜியான் மடாலயத்தில் அவர் தங்கிய சமயத்தில் ஏராளமானோர் வந்து அவருக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர். ஆட்சி மாறினாலும் அவரது மதிப்பு மாறாது என்பதை இது காட்டியது.

ப்த்தாம் நாளன்று அவர் காண்டன் ஹாங்கோ ரயிலில் ஏறி வுசாங் சென்றார்.

அங்கு ‘மூன்று புத்தர்கள்’ மடாலயத்தில் அவர் தங்கினார். உடம்பெல்லாம் ஏற்பட்டிருந்த புண்கள் இந்தப் பயணத்தினால் அவருக்கு வலியையும் வேதனையையும் தந்தன.

உபாசகர் ஜென் ஜென் ரு அவருக்கு மருத்துவ உதவியை அளித்தார். பின்னர் ஒரு வார காலம் அவலோக்தேச்வர போதிசத்வரின் மந்திரங்கள் ஓதப்பட்டன.

பின்னர் அவர் பீஜிங் சென்றார். அவர் செல்லுமுன்னர் மடாலயத்தில் இருந்த பிக்ஷுக்கள் அனைவரும் அவரை போட்டோ எடுத்தனர். போட்டோவில் ஒரு கவிதையை ஸு யுன் எழுதினார்.

“கர்மம் என்னை வுசாங் நோக்கிச் செலுத்துகிறது.

எனது உடல்நலமின்மை மற்றவருக்கு ஒரு தொந்தரவு.

மூன்று புத்தர்கள் ஆலயத்தில் மூன்று மாதம் தங்கினேன்.

அவமானமும் பயங்கரமும் என்னைச் சூழ உலகின் உச்சியில் ஏறினேன்.

மற்றவரும் அதை அடைவதற்காக நான் காத்திருந்தேன்.

குவான் ஜாங் மியூ ஓரிரு வார்த்தைகள் கேட்ட பின்னர் யு ஷுவான் மலையுச்சியில் நிர்வாண நிலையை எய்தியதை நினைவில் கொண்டேன்.”

ஏழாம் மாதம் இருபத்தெட்டாம் நாள் அவர் பீஜிங் அடைந்த போது ரயில் நிலையத்தில் ஏராளமானோர் அவரை வரவேற்கக் குழுமி இருந்தனர்.

குவாங் ஹா மடாலயத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வருகை புரிந்தோர் அதிகமாக இருந்ததால அந்த இடம் போதவில்லை.

நாடெங்கிலுமிருந்து நூறு பிரதிநிதிகள் அங்கு வந்தனர். சீன புத்த சங்கத்தை மறுபடியும் நிறுவ முடிவு செய்யபப்ட்டது.

மதத்தை சுதந்திரமாகக் கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை அரசின் முன்னர் ஸு யுன் சமர்ப்பித்தார்.

மடாலயங்கள் இடிக்கப்படக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பிக்ஷுக்களிடம் பிடுங்கிய நிலத்தை மீண்டும் ஒப்படைத்து அவர்கள் அதைப் பயிரிட அனுமதிக்க வேண்டும் என்ற் வேண்டுகோளையும் அவர் முன் வைத்தார்.

எட்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று சிலோன் புத்த தர்ம பிரதிநிதிகள் அவரைச் சந்திக்க வந்தனர்.

ஒன்பதாம் மாதம் குவாங் ஜி மடாலயம் வருமாறு ஏராளமானோர் வேண்டிய போது தனது முதிர்ந்த வயதையும் உடல் நலம் சரியில்லாம்ல் இருப்பதையும் சுட்டிக் காட்டி வர இயலாது என்று அவர் தெரிவித்தார்,

பத்தாம் மாதம் உலக அமைதிக்காக ஒரு பெரிய பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது. ஏழு வாரம் நடை பெற்ற கூட்டத்தின் இறுதியில் 3000 சீன டாலர்கள் அவருக்குக் காணிக்கையாக அளிக்கப்பட்டது. அதை நான்கு புனித தலங்களுக்கும் எட்டு மடாலயங்களுக்கும் 350 சிறிய மற்றும் பெரிய ஆலயங்களுக்கும் அவர் வழங்கினார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அருமையான சொற்பொழிவை அவர் ஷாங்காயில் 1952, டிசமப்ர் 17ஆம் தேதி ஆற்றினார்.

அதில் உலக அமைதியை அவர் வலியுறுத்தினார்.

தர்ம குரு யின் குவாங்கின் 12வது நினைவு நாள் 1952 டிசம்பர் 21ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்ட போதும் அவர் ஒரு சிறப்புரையை ஆற்றினார்.

அவரது 113ஆம் வ்யது முடிவுக்கு வந்தது.

– தொடரும்

 

Husband is God!!! Who will believe Valmiki, Kalidasa and Sangam Tamil Poets? (Post No.3717)

Written by London swaminathan

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:- 19-37

 

Post No. 3717

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

There is a saying in all old Sanskrit and Tamil books that ‘Husband is God’; I don’t know how many modern Hindu women would agree with this ‘old fashioned’ thought. When I was a school by there was, a film titled ‘Kanavane Kankanda Deivam’ i.e. Husband is the visible God! Now people may laugh at this idea, leave alone believing it!

 

The second idea repeated very often in 2000 year old Sangam Tamil Literature and Sanskrit literature is that the ‘same husband must come as her husband in future births’!! How many women would dare to say this to her husband in private or in public? How many women can tolerate such a thing if it happens!! Is in it horrible?

 

My mother had never said my father’s name in public! This is the third old fashioned idea that Hindu women had in the past. Now, my wife says my name loud and clear ten times in public when there was an opportunity to say it. But I myself had the difficulty of finding a gentleman’s’ name in a village, when I was working as the secretary of Madurai District RSS (Jilla Karyavah). The woman refused to say her husband’s name when I asked her and she gave me lot of tips and clues! It was like a puzzle I had to solve!

 

For instance if her husband’s name is Rama chandran, she would say her husband’s name is Sita’s husband name. If I say just Rama , then she will say ‘yes’ and add the moon with that name! Then I have to derive Rama Chandra from that! (Chandran is the Sanskrit word for moon)!

 

I don’t know how many Hindu women still believe in these ‘’old fashioned’’ views.

 

If you dare to put these views to any woman and ask her opinion, she may say ‘NO’ or a conditional YES (if my husband is like Rama, ‘YES’, if he is like Krishna ‘NO’)!

 

Let me give examples from Tamil and Sanskrit books:-

“Supressing his sobs, Rama replied to his mother, who was weeping, and said:- As long as sge lives, a woman’s god and her master is her husband; further the king is thine absolute lord as well as mine.”

 

This is a conversation between Rama and Kausalya about Kaikeyi and Dasaratha.

 

“By obedience to her husband, a woman attains the highest heaven, even if she has failed to render due homage to the Gods.”

 

–Ayodhya kanda, chapter 24, Vlmiki Ramayana

Tamil Poet supports Valmiki

Tiruvalluvar, author of Tamil Veda, Tirukkural says

“A wife who may not worship God but wakes up with worshipful devotion to her husband has the power to make rainfall at her bidding”- Kural 55

 

In fact Tiruvalluvar’s wife Vasuki is attributed with so many miracles because of her devotion to her husband.

 

Valmiki has repeated this in many places; one more instance from the same Ayodhya kanda:

“O, son of an illustrious monarch! a father, a mother, a brother, a son or a daughter-in-law enjoy the fruit of their merits and receive what is their due, a wife alone follows the destiny of her husband. For a woman it is not her father or her son nor her mother friends nor her own self, but the husband who in this world and the next is ever her sole means of salvation.”

Sita said this to her husband Rama.

In Kalidasa’s Raghuvamsa Kavya, Sita says that she would do penance to get Rama as her husband in her next birth!

साहम् तपः सूर्यनिविष्टदृष्टिः
ऊर्ध्वम् प्रसूतेश्चरितुम् यतिष्ये।
भूयो यथा मे जननान्तरेऽपि
त्वमेव भर्ता न च विप्रयोगः ॥ १४-६६

sāham tapaḥ sūryaniviṣṭadṛṣṭiḥ
ūrdhvam prasūteścaritum yatiṣye |
bhūyo yathā me jananāntare’pi
tvameva bhartā na ca viprayogaḥ  || 14-66

 

Thus situated, I shall, after the birth of the child, endeavour to practise penance with my eyes fixed on the sun in such a manner that I may gain you as my unseparated husband. [14-66]

But, once Thy son is born,/Unswerving I shall fix my weary eyes/On yon bright Sun, and by severest modes/Of penance strive that in some future life/Thou only be my Lord, my Lord for aye!

(It is called Panchagni penance, i.e. Five Fire Penance. Uma did this type of penance to get Siva s her husband in Kalidasa’s Kumara sambhava. On four sides there will be fire and one would stand in the sun which is the fifth fire. And in this heat the penance would be done).

 

Tamil Epic Silappadikaram has the following passage:

 

In a divine chariot at the side of Kovalan, Kannnaki went up to heaven.. Because it is a fact that Gods will worship her who worships not God but worships her husband, Kannaki, that jewel among women of the earth, became a goddess and the guest of the ladies of heaven (Katturai Kaathai, Silappadikaram)

Manimekalai, another Tamil epic, has a similar passage.

Sangam Poets

 

Tamil work Kuruntokai (49) of Sangam Period has a similar poem:

A man left the courtesan and returned to his lady love. Immediately the lady was over the moon and said, “ O , My Lord, even in the next birth you must be my lord and I must be your lover.—Poet Ammuvanar.

A wife cried because…………………………..

Tiruvalluvar, author of the Tamil Veda Tirukkura says,

“The moment I said we will not part IN THIS LIFE

Her eyes were filled with tears” – Kural 1315

 

the idea is that when her husband stated that they will not part in the PRESENT LIFE, she immediately held, that he was envisaging the possibility of their parting in the next life, which she did not kindly take to. Hence the tears.

 

Kalidasa says Aja and Indumati became husband and wife again in this birth. (Raghuvamsa 7-15)

 

रतिस्मरौ नूनमिमावभूताम् राज्ञाम् सहस्रेषु तथा हि बाला।
गतेयमात्मप्रतिरूपमेव मनो हि जन्मान्तरसंगतिज्ञम्॥ ७-१५

ratismarau nūnamimāvabhūtām
rājñām sahasreṣu tathā hi bālā |
gateyamātmapratirūpameva
mano hi janmāntarasaṁgatijñam || 7-15

“These two are undoubtedly Rati Devi and Manmatha in human form… that is why this maiden has chosen Prince Aja as her own match from among thousands of kings… after all, it is heart that cognises connubial tie-ups existing in all lifecycles… [ raghu vamsa 7-15]

 

Natrinai  (Verse 397 by Poet Ammuvanar) is another book in the Sangam literature. A woman laments: I am not worried about death; whoever is born must die. But if I am born as a non-human being in my next birth I may not get this man as my husband. That is what worries me much”.

There are lot of such examples in Tamil and Sanskrit literature. This is a common thought reflected in Manu Smrti and other Sanskrit works. It is amazing to see the same though from land’s southernmost end to the Northern Himalayas. The absence of such a view in other cultures explode the Aryan Dravidian divisions. India is one and there is no different culture. There is only one culture which is unique in the world.

 

–Subham–

 

 

எகிப்து மீது படை எடுத்தவர்கள் இந்திய யக்ஷர்களா?-எகிப்திய அதிசயங்கள் -18 (Post No.3716)

Written by London swaminathan

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:- 6-39 am

 

Post No. 3716

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

எகிப்தின் மீது படை எடுத்த HYKSOS ஹிக்ஸோஸ், வெளிநாட்டினர் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் ஆசியாவில் எங்கிருந்து என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. என்னுடைய கருத்து அவர்கள் இந்தியர்கள் என்பதே.

 

எகிப்தியர்களுக்கு குதிரை என்றால் என்ன என்று தெரியாது. ஹிக்ஸோச் கி.மு 10 வாக்கில் எகிப்துக்குள் நுழைந்த பின்னர்தான் அவர்கள் குதிரையைப் பயன்படுத்தத் துவங்கினர். அதற்கு முந்தைய 1500 ஆண்டுகளுக்கு குதிரையும் தெரியாது; ரதமும் (தேர்) தெரியாது. ஆயினும் கி.மு.1500 முதல் குதிரை ரதங்களின் படைகளில் எகிப்திய பாரோக்கள் சண்டை போடுவது போல படங்கள் இருப்பதால் ஹிக்ஸோஸ் படை எடுப்பதற்கு முன்னரே குதிரை வியாபாரிகளாகப் போயிருக்க வேண்டும். இலங்கைக்குள் குதிரை வியாபாரம் செய்யப்போன தமிழர்கள், ஆட்சியைக் கைப்பற்றிய செய்தி மஹா வம்சத்தில் இருக்கிறது.

IMG_1464

துருக்கியில் கிடைத்த (கி.மு.1300) சம்ஸ்கிருத கையேட்டில், குதிரைப் பயிற்சி எல்லாம் சம்ஸ்கிருதக் கட்டளைகளில் இருப்பதால் அக்காலத்திலேயே நம்மவர் துருக்கிவரை சென்று சம்ஸ்கிருத மொழி   மூலம் பயிற்சி தந்தது தெரிகிறது. இது தொல்பொருட் துறை சான்று என்பதால் மறுப்பதற்கில்லை.

 

துருக்கி என்ற நாடு இன்று முஸ்லீம் நாடாக இருந்த போதிலும் துருக்கி, சிரியா, இராக், ஈரான் முதலிய நாடுகள் இந்துக்களின் ஆதிக்கத்தில் அவ்வப்பொழுது இருந்து வந்தது. துரக (குதிரை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லில் இருந்தே துருக்கி என்ற சொல் வந்தது. இந்தக் காலத்துக்குப் பின்னர் எகிப்து – இந்துக்கள் தொடர்பு நல்ல ஆதாரங்களுடன் அமைந்துள்ளது. துருக்கி-சிரிய பகுதியை ஆண்ட தசரதன் என்ற மன்னன் எழுதிய கடிதங்கள் எகிப்தில் உள்ளன.

 

இனி ஹிக்ஸோஸ் (Hyksos) ஆட்சி பற்றி சற்று விரிவாகக் காண்போம்:

 

” பின்னர் கிழக்கு திசையிலிருந்து திடீரென்று இனம் தெரியாத ஆட்கள் வெற்றி முழக்கத்துடன் நம் தேசத்தின் மீது படை எடுத்தனர். பலத்தைப் பயன்படுத்தி நம் மன்னர்களை அவர்கள் வென்றனர். கருணையின்றி நம்முடைய நகரங்களை எரித்தனர்; கடவுளரின் கோவில்களை தரை மட்டமாக்கினர். நாட்டு மக்களை வெறுப்புடன் கொடூரமாக நடத்தினர்” — இவ்வாறு எகிப்து வரலாற்றை எழுதிய மனீதோ (Manetho) எழுதி இருப்பதாக முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோசபஸ் (Josephus) எழுதியுள்ளார்.

 

இதை அப்படியே நம்பிவிடக்கூடாது. ஏனெனில் ஹிக்ஸோஸ் படை எடுத்தது மனீதோவுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு!

மனீதோவின் புத்தகம் முழுதும் கிடைக்காததால் அவர் சொன்னதாக மற்றவர் எழுதி இருப்பதைப் பார்க்கிறோம்.

Pottery from Hyksos period

இவ்வளவுக்கும் இன்றுவரை அவர்கள் யார் என்பதற்கான தொல்பொருத் துறை தடயங்களோ, உறுதியான தகவல்களோ இல்லை. 15ஆவது 16ஆவது வம்சங்கள் ஆண்டபோது இவர்கள் இருந்ததால் சமகாலத்திய எழுத்துகள் கிடைத்துள்ளன. மனீதோ எழுதியதாக மற்றவர்கள் மேற்கோள் காட்டுவதைத்தான் நாம் நம்ப வேண்டியுள்ளது.

 

அதிலிருந்து கிடைக்கும் குறிப்புகள்:

  1. ஹிக்ஸோஸ் கடல் வழியாக (SEA PEOPLE) வந்த வெளிநாட்டினர்.

2.இந்தச் சொல்லின் பொருள் வெளிநாட்டு ஆட்சியாளர். இதற்கான எகிப்திய சொல்லை கிரேக்கர்கள் ஹிக்ஸோஸ் என்று எழுதத் துவங்கினர்.

  1. அவர்கள் நைல் நதி டெல்டாவில் அவரிஸ் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.

4.அவர்களுடைய ஆட்சி தெற்கில் நூபியா NUBIA வரை பரவியது

6.அவர்கள் கொடூரமானவர்கள்.

7.இறுதியில் எகிப்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர்.

இவர்கள் கி.மு 1650 முதல் கி.மு.1550 வரை சுமார் 100 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.

 

சில மன்னர்களின் பெயர்கள்

சகிர் ஹர — ??

க்யான் (ஞான) –கி.மு.1620

அசுர அபோபி –கி.மு.1595-1555

கமுதி (கௌமுதி) – – கி.மு. 1555- 1545

சேஷி (சசி)

(பெயர்களில் சம்ஸ்கிருத சாயல் இருப்பதைக் கவனியுங்கள்)

இதெல்லாம் நடந்தது நடு ராஜ்யத்துக்கும் இரண்டாவது இடைவெளிக் காலத்துக்கும் இடையே ஆகும். அவர்களை கி.மு 1520 ஆம் ஆண்டில் விரட்டி அடித்தவுடன் எகிப்தில் புதிய ராஜ்யம் ஆட்சி செய்யத் துவங்கியது.

இக்காலத்திய கல்வெட்டுகள் இரண்டு கிடைத்தன. தீப்ஸ் THEBES நகர மன்னர் காமோசி, தலை நகர் ஆவரிஸ் AVARIS வரைக்கும் 1540ல் சென்றார். ஹிக்ஸோஸ் மன்னர் அசுர அபோபிஸ்,  , கோட்டையைவிட்டு வெளியே வரவில்லை. பின்னர் கி.மு 1520ல்  காமோசிக்குப் பின்னர் ஆண்ட  அமோசி சென்று அவர்களை விரட்டினார்.

 

எங்கிருந்து வந்தனர்?

 

இவர்கள் எந்த இனத்தவர் என்பதற்கான துப்பு எதுவும் கிடைக்கவில்லை. ஹகா கசுட் Heqa Khasut என்றால் வெளிநாட்டு ஆட்சியாளர்- இது கிரேக்க மொழியில் ஹிக்ஸோஸ் ஆனது. சில காகிதங்களில் ஆவர்கள் Aamu ஆமு (ஆசிய நாட்டவர்) என்று சொல்லப்படுகிறது. அவர்களுடைய பெயர்களில் அசுர என்ற சொல் வருவதால் அவர்கள் செமிட்டிக் மொழியினர் என்று ஊகிக்கப்படுகிறது.

 

1985 ஆம் ஆண்டுவரை இரண்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ததில் அவர்கள் பைபிளில் குறிப்பிடப்படும் கானனைட் (Cananite) தொடர்புடையோர் என்பது தெரிகிறது. பானை ஓடுகள், இறுதிச் சடங்குகள் ஆகியவற்றைக் கொண்டு இதை அறிந்தனர்.

 

படங்களைப் பார்க்கையில் அவர்கள் குதிரை பூட்டிய ரதங்களில் வருவதும், புதுவகை வில்லைப் பயன்படுத்துவதும் தெரிகிறது. இதை இதற்கும் முன்னர் பாலஸ்தீனம், சிரியா  ஆகிய இடங்களில் காணலாம். புதிய ஆட்சியைப் பிடித்த அவர்கள் எகிப்திய கலாசாரங்களின் பல அம்சங்களை ஏற்று அவர்களோடு இணைந்துள்ளனர்.

 

கிழக்கு மத்திய தரைக் கடலோர நாடுகளான கிரீஸ், துருக்கி, பாலஸ்தீனம், சிரியா ஆகிய பகுதிகளை லெவான்ட் LEVANT என்று அழைப்பர். அதன் தென்பகுதிலிருந்து இவர்கள் வந்தனர் என்பது சிலரின் கணிப்பு.

 

13-ஆவது வம்சம் ஆட்சி பலவீனமானபோது பல நாடோடிக் குழுக்கள் எகிப்துக்குள் புகுந்து குடியேறினர் அவர்களே பின்னர் இப்படி ஆட்சியைக் கைப்பற்றினர் என்பர் மற்றும் சிலர். இவர்களுடைய ஆட்சிக் காலத்தில் எகிப்து நீண்ட தொலைவு கடல் வாணிபம் செதுள்ளது. கிரேக்க நாட்டிலும், அருகிலுள்ள தீவுகளிலும் இவர்களுடைய பரிசுப் பொருட்கள் கிடைத்தன. வாசனைத் திரவிய பாட்டில் மூடிகளில் மன்னர் க்யான் KHYAN (ஞானி?) பெயர் உள்ளது. அவர்கள் அருகாமை நாடுகளுடன் நட்புறவுடன் வாழ இப்படிப் பரிசுகளை அனுப்பியது குறிப்பிடத் தக்கது.

 

அவரிஸ் AVARIS என்ற தலைநகரில் ஹிக்ஸோஸ் அரண்மனையில்,  கிரேக்க நாட்டு மினோவன் MINOAN பாணி ஓவியங்கள் இருக்கின்றன. எகிப்தியர்கள் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிவர்கள்; ஆனால் ஹிக்ஸோஸ் கடலாதிக்கம்  செலுத்தினர்..

 

குதிரைகளை எகிப்துக்குள் கொண்டுவந்தவர்கள் என்பதாலும், ஞான், அசுர, யக்ஷ (Hykso) போன்ற சப்தம் உடைய பெயர்கள் இருப்பதாலும் இவர்கள் இந்திய நிலப் பரப்பிலிருந்து புறப்பட்டவர்களாக இருக்கலாம்.

 

தீப்ஸ் என்னும் தெற்கத்திய நகரிலிருந்து தன்னாட்சி செய்துவந்தோர் எகிப்திலிருந்து ஹிக்ஸோசை வெளியேற்றி முன்னைவிட சக்தி வாய்ந்த எகிப்தியப் பேரசை உருவாக்கினர்.

xxxx

 

 

My Research Articles on Egypt

Did Indians build Egyptian Pyramids?

27 august 2012

Hindu Gods in Egyptian Pyramids

16 september 2012

Sex Mantras and Talismans in Egypt and Atharva Veda

26 september 2012

 

Mata and Pita in Egyptian Religion! – 17 November 2014

 

Vedas and Egyptian Pyramid Texts

29 August 2012

 (Part 3)

5 september 2012

More Tamil and Sanskrit Names in Egypt

Research paper written by London Swaminathan
Research article No.1413; Dated 15th November 2014.

Flags: Indus Valley-Egypt similarity

15 october 2012

 

First Homosexual King in History! (Post No.3692) 5-3-2017

 

கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி எகிப்து அதிசய ஒற்றுமை!

14 october 2012

எகிப்திய நாகரீகத்தில் மேலும் பல தமிழ்ப் பெயர்கள்!!

Research paper written by London Swaminathan
Research article No.1414; Dated 16th November 2014.

 

எகிப்தில் திருமூலர் கருத்துக்கள்

POST No. 716 dated 21 Novemeber 2013

சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு!

15 September 2014

 

எகிப்திய அதிசயங்கள் 17 கட்டுரைகள்

 

1.எகிப்திய அதிசயங்கள்-1: மிஸ்ர தேசம் என்று ஏன் பெயர்? (Post No.3638) posted on 15-2-2017

2.எகிப்திய அரசனுக்கு ஐந்து பெயர்கள்! எகிப்திய அதிசயங்கள்-2 (Post No.3641) posted on 16-2-2017

 

3.எகிப்தில் இந்தியப் பண்பாட்டின் தாக்கம்: எகிப்திய அதிசயங்கள்- பகுதி 3 (Post No.3648)posted 18-2-2017

 

4.எகிப்தில் சூர்ய வம்சம்: எகிப்திய அதிசயங்கள்-பகுதி 4 (Post No.3651) posted 19-2-2017

 

5.ஆதிகால எகிப்திய புலவரின் புலம்பல்; எகிப்திய அதிசயங்கள்-5 (Post No.3654) posted 20-2-2017

6.எகிப்தில் நரபலி:எகிப்திய அதிசயங்கள்-பகுதி 6 (Post No.3657) posted on  21-2-2017

 

7.எகிப்தில் இந்திய நீலக்கல்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 7 (Post No.3660) posted on 22-2-2017
8.மனித முகம்சிங்க உடல்! ஸ்பிங்ஸ்! எகிப்திய அதிசயங்கள்- பகுதி 8 (Post No.3664) posted on  23-2-2017

9.எகிப்தில் 30 வம்சங்கள்: அதிசய தகவல்கள்-பகுதி 9 (Post No.3667)

posted on  24-2-2017

 

10.பிரமிடுகளை முதலில் கட்டிய வம்சாவளி: எகிப்திய அதிசயங்கள்-10 (Post No.3670)posted on  25-2-2017

 

11.பெரிய பிரமிடு– எகிப்திய அதிசயங்கள் -பகுதி 11posted on  27-2-2017

12.வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684) posted on  2-3-2017

 

13.சுவர்களில் எழுதப்பட்ட சமயச் சடங்குகள்- எகிப்திய அதிசயங்கள்-13 (Post No.3687)posted on  3-3-2017

 

14.மன்னர்களுடன் படகுகளை புதைத்தது ஏன்எகிப்திய அதிசயங்கள் –14 (Post No.3689) posted on  4-3-2017

15.சித்திர எழுத்துக்கள் – எகிப்திய அதிசயங்கள் –15 (Post No.3693)

posted on  5-3-2017

 

16.விசித்திர உருவம் கொண்ட தெய்வங்கள்: எகிப்திய அதிசயங்கள்-16 (Post No.3696) posted on   6-3-2017

 

17.எகிப்தில் இந்து தெய்வங்களின் வழிபாடு- எகிப்திய அதிசயங்கள் – பகுதி 17 (Post No.3705)

 

 

 

xxxxx

எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 1 (கட்டுரை எண் 2803) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

2.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 2 (Post No.2806) by S Nagarajan; posted on  Date: 12 May 2016

 

3.எகிப்திய பிரமிடுகளின் மர்மங்கள் பற்றி பால் பிரண்டன் — பகுதி 3 (Post No.2809)  BY S NAGARAJAN; posted on  Date: 14 May 2016

 

Please Read my earlier Posts
The Great Scorpion Mystery in History – Part 1 (posted 10 November 2012)
The Great Scorpion Mystery in History – Part 2(posted 10 November 2012)

 

பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா! (Post No.3715)

Written by S NAGARAJAN

 

Date: 12 March 2017

 

Time uploaded in London:-  5-41 am

 

 

Post No.3715

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

அறிவியல் துளிகள் தொடரில் ஏழாம் ஆண்டு துவங்குகிறது. ஏழாம் ஆண்டின் முதல் கட்டுரை பாக்யா 3-3-2017 இதழில் வெளியாகியுள்ளது.

 

 

பார்வை இருந்தும் பார்க்க முடியாத மாய கொரில்லா!

ச.நாகராஜன்

 

“உணர்ச்சியைப் போல கவனம் என்பதும் வியப்பளிக்கும் ஒரு விஷயமே” – ஏரியன் மாக்

 

பார்வையுள்ள அனைவ்ருமே எதிரில் இருப்பதை சரியாகப் பார்க்கிறார்களா? இதில் என்ன சந்தேகம், பார்க்கத் தான் பார்க்கிறார்கள் என்று பதில் சொன்னால் அது உணமையில்லை என்கிறது அறிவியல்.

 

 

எதிரில் நண்பர் ஒருவர் நிற்கும் போது மனதில் எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டிருக்கும் போது அவரைப் பற்றிய உணர்வே நமக்குத் தோன்றுவதில்லை. அவர் நம்மை அசைத்து ஆட்டி என்ன ஆயிற்று உனக்கு என்று கேட்கும் போது ‘சாரி, கவனம் எங்கேயோ இருந்தது’ என்கிறோம்.

 

 

 

இப்படி மனம் கண் என்ற புலனுடன் இயையாமல் இருக்கும் போது எதிரில் இருப்பதைப் பார்க்க முடிவதில்லைல் ஆனால் மனம் கண்ணுடன் இயைந்து இருக்கின்ற போது, கண் பார்வை சரியாக இருந்தும் எதிரில் இருப்பதை சரியாக பலரும் பார்ப்பதில்லை என்பதைத் தான் அறிவியல் சொல்கிறது.

இதற்கு இன் அட்டென்ஷனல் ப்ளைண்ட்னெஸ் (Inattentional Blindness) கவனமற்றுக் குருடாயிருத்தல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

 

கிறிஸ்டோபர் சாப்ரில் மற்றும் டேனியல் சைமன்ஸ் (Christopher Chabril and Daniel Simons)  ஆகிய இரு விஞ்ஞானிகள் இதற்காக ஒரு தனிச் சோதனையையே செய்துள்ளனர். அது மாயக் கொரில்லா என்ற பொருள்படும் இன்விஸிபிள் கொரில்லா சோதனை என்று அழைக்கப்படுகிறது.

 

 

இந்த விஞ்ஞானிகள் தன்னார்வத் தொண்டர்கள் சிலரை சோதனைக்கு அழைத்தனர். சோதனையில் வீடியோ ஒன்று போட்டுக் காண்பிக்கப்பட்டது. அது ஒரு பேஸ்க்ட்பால் விளையாட்டு. அதில் விளையாடியது இரு அணிகள். வெள்ளை உடை அணிந்து ஒரு டீம்;; கறுப்பு உடை அணிந்து இன்னொரு டீம். வீடியோ பார்ப்பதற்கான  மொத்த நேரமே ஒரு நிமிடம் தான்.

 

 

சோதனைக்கு வந்த பார்வையாளர்கள் வெள்ளை உடை அணிந்தவ்ர்கள் எத்தனை முறை பந்தைப் போடுகிறார்கள் என்று சொல்ல வேண்டும், அவ்வளவு தான்!

 

இந்த விளையாட்டில் பாதியில் கொரில்லா உடை அணிந்து ஒரு பெண் காட்சியில் தோன்றி நடந்து வந்து நின்று தனது மார்பில் ஒரு தட்டு தட்டிக் கொண்டு பின்னர் நடந்து சென்று விடுவார். அவர் காட்சியில் தோன்றும் மொத்த நேரம் ஒன்பது விநாடிகள் தான்.

படம் முடிந்த பிறகு அந்தப் பெண்மணியைப் பார்த்தவர்கள் யார் யார் என்று கேட்ட போது பாதிப் பேர் அப்படி ஒரு பெண்மணி விளையாட்டின் இடையே வரவே இல்லை என்றனர்.

 

 

இது தான் மாய கொரில்லா சோதனை.

 

இன்னும் பல சோதனைகளில் இப்படி ஒரு மாய கொரில்லா இடையே வருவார் என்று சொன்ன போதும் கூட அதைப் பலரும் கவனிக்கத் தவறி விட்டனர்.

 

மக்களில் பெரும்பாலானோர் திடீரென்று தோன்றும் ஒன்றைப் பொதுவாக கவனிப்பதில்லை.

 

 

 

இன்னொரு சோதனை ஒன்று நடத்தப்பட்டது.

யாரோ ஒரு அன்னியர் ஒரு பெண்மணியை திடீரென்று வழியில் பார்த்து ஒரு முகவரியைச் சொல்லி அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறார். அப்படிக் கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இடையே இரண்டு மனிதர்கள் ஒரு பெரிய கதவை தூக்கிக் கொண்டு நடக்கின்றனர். பிறகு அந்தப் பெண்மணி முகவரியில் உள்ள இடத்திற்கு எப்படிச் செல்வது என்று விவரிக்கிறார். ஆனால் அவர் விவரிப்பது இன்னொரு நபரிடம். கேள்வி கேட்டவ்ர் அவரில்லை. அவரை விட மாறுபட்ட உடை, உயர்ம் இருந்தாலும் கூட அதைப் பார்ப்பவர்கள் இந்த மாறுதலை உடனடியாகக் கண்டுபிடிக்கவில்லை.

 

 

மேலை நாட்டில் ஒரு முக்கிய கேஸில் ஒருவர் இதனால் தண்டனையையே அடைந்தார். 1995ஆம் ஆண்டில் நடந்தது இது. ஆபீஸர் கெனி கான்லி என்பவர் குற்றவாளி என்று சந்தேகப்பட்ட

ஒருவரைத் துரத்திக் கொண்டு ஓடினார். அதே சமயம் ஒரு புலனாய்வு ஆபீஸர் ஒருவரை அவரது சக அதிகாரிகள் அடித்துக் கொண்டிருந்தனர். வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் கான்லி தான் எதையும் பார்க்கவில்லை என்று சாட்சி சொன்னார். நீதிபதி அதை நமபவில்லை. அவர் தனது நண்பர்களுக்குச் சாதகமாக அந்த சண்டையைப் பார்க்கவில்லை என்று சொல்வதாகக் கூறி அவருக்கு பிழை சாட்சியம் சொன்னதற்காக தண்டனையைத் தந்தார்.

 

 

பாவம் கான்லி. இந்த இன் அட்டென்ஷனல்

ப்ளைண்ட்நெஸ்ஸுக்கு உள்ளான காரணத்தினால் தண்டனை அடைய நேர்ந்தது.

 

 

பொதுவாக் ஐம்பது சதவிகதம் பேருக்கு இந்த மாய கொரில்லா சோதனை ஒரு பெரிய வேதனையைத் தந்து விடுகிறது.

‘தி இன்விஸிபிள் கொரில்லா’ (The Invisible Gorilla( என்ற தங்களது புத்தகத்தில் மனிதர்களின் பார்வைக் கோளாறு பற்றி இந்த இரு விஞ்ஞானிகள் அழகுற விளக்குகின்றனர்.

 

 

 

மனமானது ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதை விளக்குகையில் மனம் ஏமாற்றும் இன்னும் ஐந்து மாயங்களையும் அவர்கள் விளக்குகின்றனர்.

 

 

நினைவில் அனைவரும் ஒரு காட்சியைப் பார்த்ததை நூறுக்கு நூறு சதவிகிதம் சொல்வது அரிது. நீதி மன்றத்தில் ஒரு சாட்சி பார்த்ததை இன்னொரு சாட்சி மறுக்கிறாரே, அது சகஜமான ஒன்று.

அடுத்து நம்பிக்கை பற்றியது. பலரும் அதீத நம்பிக்கையுடன் அடித்து ஒரு விஷயத்தைச் சொல்வார்கள். இதனால் குழப்பம் தான் ஏற்படும்.

 

 

அடுத்து அறிவைப் பற்றியது. நிபுணர்கள் கூட தனக்கு ஒரு விஷயத்தைப் பற்றி மிக நன்றாகத் தெரியும் என்று ஏமாறுவது வழக்கம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் தான் அவர்களுக்கு உண்மையில் எவ்வளவு தெரியும் என்பது தெரிய வரும்.

அடுத்து காரண காரியம் பற்றி ஏமாறுவது. ஏதோ ஒரு விஷயம் நடந்த போது அதற்கான காரணம் இது தான் என்று மனதில் தோன்றிய படி கூறி விடுவது வழக்கம். ஆனால் ஆராய்ந்தால் உண்மை வேறு விதமாக இருக்கும்.

 

 

 

இறுதியாக எல்லோரும் சொல்லும் ஒன்றை ஆராயாமல் உடனே நம்பி ஏமாறுவது. மனிதர்கள் தங்கள் மூளைத் திறனில் ஒரு சதவிகிதமே பயன்படுத்துகின்றனர் என்று ஒரு அறிவியல் கூற்றைப் படித்தவுடன் அதை அப்படியே நம்பி விடுவது வழக்கமாகி விடுகிறது. உண்மையில்  மூளையின் செயல் திறனை அளப்பதற்கு எந்தக் கருவியும் இல்லை; யாராலும் அது  முடியாது.

 

 

ஆக இப்படி மனதின் மாய வலையில் விழாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் சாப்ரிஸும் சைமன்ஸும்.

என்றாலும் கூட மாய கொரில்லா வருவதைப் பார்க்காதவர்க்ளே நிறைய பேர் என்பது நிதர்சனமான உண்மை!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் . .

.

விஞ்ஞானிகளுக்கு நகைச்சுவை உணர்வே இருக்காது என்பது பொதுவான அபிப்ராயம். அவர்கள் எப்போதும் தங்கள் ஆராய்ச்சியில் மூழ்கி இருப்பர் என்பது அனைவரது கருத்தும் கூட.

ஆனால் உணமை அதுவல்ல. பல விஞ்ஞானிகளுக்கு நகைச்சுவை என்றால் உயிர்.

 

 

உதாரணத்திற்கு இரண்டு சமபவங்களைப் பார்ப்போம்.

பிரிட்டனைச் சேர்ந்த இரசாயன இயல் விஞ்ஞானியான சர் ஹம்ப்ரீ டேவிஸ் ஒரு முறை பாரிஸிலிருந்து திரும்பி வந்தார். அங்குள்ள ஓவியக் கூடங்களை அவர் பார்வையிட்டு வந்திருந்ததால் அவரை அனைவரும், “ எப்படி இருந்தது பாரிஸின் ஓவியக்கூடங்கள்?” என்று கேட்டனர்.

அதற்கு உடனடியாக டேவிஸ், “ அடடா, என்னாமாய் இருந்தது படங்களைச் சுற்றி இருந்த ப்ரேம்கள். அது போன்ற ப்ரேம்களை என் வாழ்நாளில் எங்குமே நான் கண்டதில்லை!” என்றார்!

 

 

பிரபல விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் ரிலேடிவிடி தத்துவத்தினால் மிகவும் பிரபலமடைந்தார். இதைப் பொறுக்காதவ்ர்கள் புத்தகம் ஒன்றை எழுதினர். 100 ஆதர்ஸ் அகெய்ன்ஸ்ட் ஐன்ஸ்டீன் என்பது புத்தக்த்தின் பெயர். (100 Authors against Einstein).. இப்படி நூறு எழுத்தாளர்கள் உங்களுக்கு எதிராக ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்களே என்று ஐன்ஸ்டீனிடம் அவரது அபிப்ராயத்தைக் கேட்டனர் சிலர். அதற்கு அவர், “ நான் தவறு செய்திருக்கிறேன் என்றால் அதை நிரூபிக்க ஒருவர் போதாதா என்ன. எதற்கு நூறு பேர் வேண்டும்?” என்று கேட்டார்.

 

நகைச்சுவையுடன் கூடிய பளீர் சுளீர் பதில் அது!

****

 

Story: The Brahmin who ate Too Much! (Post No.3714)

Written by London swaminathan

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:- 10-17 am

 

Post No. 3714

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

I am trying to document all the old stories I have heard or read in the past. This is about the gluttonous Brahmins. People may wonder why they single out Brahmins in such stories. Of course, there are stories about every caste in India.

 

Feeding Brahmins (Brahmana Bhojanam) was considered a great meritorious (Punya) act; this is because the Neeti Shastras (Law Books) stipulated that the Brahmins should not accumulate any wealth and they should always go begging for alms by reciting the Vedas. So, kings have donated lot of lands to Brahmins so that they survive easily at times of natural catastrophes such as famine, drought, floods. Moreover, Brahmins themselves organised lot of Yagas and Yajnas (Fire Ceremonies) and other Pujas (ritual offerings to Gods) where feeding the Brahmins was done. This gave birth to a type of Brahmins who were gluttons. They can consume enormous quantity of food like a cart puller or a manual labourer.

 

One day there was a big festival in a village. Hundreds of Brahmins had a great feast on that day. Having done justice to their calling, Brahmins were returning to their respective villages in the afternoon. It happened so that two Brahmin priests travelling in opposite directions, crossed each other at a junction. Thy exchanged some pleasantries and then one of them had a big doubt!

“Oh my god, did I forget my shoes? I don’t feel anything in my feet because of heavy meals. I can’t even bend and look below because of my protruding tummy. Let me ask for some help from this man”, thought one of them. He said to the other Brahmin:

O, friend, do you see a pair of shoes on my feet?

Unfortunately, that Brahmin who had enjoyed a good feeding, was unable to look down at the foot of the Brahmin. He looked here and there and told him:

“What do you think about me? Am I a fool to leave some space in my tummy so that I can bend? Had I got that much space to allow me to bend, I would have consumed two more Vadas!”

(Vadai is a fried doughnut like snack)

He , then, made big burp and went his way!

Such was the helpless condition of the overeating Brahmins!

 

There is a saying about Brahmins: ‘Brahmana Bojana Priya’ (Brahmins are fond of food)

 

People use to tease Brahmins by saying, “Oh, that man! he would not know how much to eat in a feast. He always ties around his stomach a piece of thread, and eats until the thread bursts with the distension of the stomach!”

Long live Brahmins!

–Subham–

ரிக் வேதத்தில் பழமையான மண்டலம் எது? (Post No.3713)

Compiled by London swaminathan

 

Date: 11 March 2017

 

Time uploaded in London:- 7-40 am

 

Post No. 3713

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

மஹாபாரதத்தை எழுதிய வேத வியாசர் வேதங்களை நான்காகப் பிரித்தார். ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்ற நான்கு வேதங்களில் மிகப் பழையது ரிக் வேதம். இதை வியாசர் பிரித்து வகுத்தது கி.மு..3102-க்கு முன் — அதாவது கலியுகம் துவங்குவதற்கு முன்பு—. ரிக் வேதம்தான் உலகில் பழமையான நூல். உலகின் முதல் கவிதைத் தொகுப்பு. இதை ஹெர்மன் ஜாகோபி, பால கங்காதர திலகர் ஆகியோர் கி.மு 4500 க்கு முந்தையது என்று வானியல் குறிப்புகளைக் கொண்டு நிரூபித்தனர். இன்று வரை உலகில் எவரும் அது தவறு என்று காட்ட முடியவில்லை.

 

இப்போது பன்மொழி வித்தகரும் கிரேக்க நாட்டு அறிஞருமான நிகலஸ் கஜானாஸ் எழுதிய புத்தகத்தில் இது கி.மு. 3300 க்கு முந்தையது என்று மொழியியல் ரீதியில் நிரூபித்து இருக்கிறார். முதலில் ரிக்வேதத்துக்கு கி.மு.1200 என்று சொன்ன மாக்ஸ்முல்லரும் அந்தர்பல்டி அடித்து ரிக்வேதத்தின் காலத்தை எவருமே கணிக்க முடியாது. அது கி.மு.5000 ஆகக் கூட இருக்கலாம் என்று சொன்னதை அறிஞர் உலகம் நன்கு அறியும்.

 

ரிக் வேத மந்திரங்கள் ‘’இயற்றப்பட்ட’’ (not composed) கவிதைகள் அன்று. அவை ‘’கேட்கப்பட்ட’’ (heard) துதிகள். அதாவது ரிஷி முனிவர்கள் தியானத்தின் போது — நாம் ரேடியோ அலைவரிசைக்கேற்ப ஸ்டேஷன்களின் ஒலிபரப்பைக் கேட்பது போல — தெய்வீக அலைவரிசியில் கேட்ட – கண்டுபிடித்த (found) — மந்திரங்கள். இதனால் ரிஷிகளுக்கு மந்திர த்ருஷ்டா — மந்திரங்களை மனக் கண்ணில் பார்த்தவர்கள்/கண்டுபிடி த்தவர்கள் என்றும், வேதங்களுக்கு ச்ருதி (கேள்வி/கேட்கப்பட்டவை) என்றும் அறிஞர்கள் பெயரிட்டுள்ளனர்.

 

ரிக் வேதம் என்பதே உலக மஹா அதிசயம் — உலகில் இவ்வளவு பிரம்மாண்டமான கவிதைத் தொகுப்பை (anthology) எவரும் 6000 வருடங்களுக்கு மேல் அட்சரம் மாறாமல் வாய்ச் சொல் மூலம் பரப்பியதும் (word of mouth) இல்லை – எழுதப்பட்ட இலக்கியங்களில் இதற்கு இணையான சமய இலக்கியமும் இல்லை- உலகில் வெளியான கவிதைத் தொகுப்புகளில் இதை மிஞ்சிய கவிதைத் தொகுப்பும் இல்லை. ஜில்காமேஷ் (Gilgamesh) போன்ற இலக்கியத்தில் – அல்லது எகிப்து நாட்டுப் பிரமிடுகளின் (Pyramid Texts) சுவர்களில், மரணப் புத்தகத்தில் (Book of Dead) காணப்படும் சாதாரண புராணக் கதைகள் போலன்றி- மிக உயரிய கருத்துக்களைக் கொண்டுள்ளது எல்லோரும் வாழ்க, இன்புற்று வாழ்க என்ற கடைசி மந்திரத்துடன் முடிகிறது ரிக் வேதம்!

உலகில் முதல் முதலில் நானூறுக்கும் மேலான    கவிஞர்களின் (Over 400 poets) பட்டியலைக் கொடுத்ததும் இன்டெக்ஸ் (Index) போட்டதும் (அணுக்ரமணி) ரிக் வேதத்தொகுப்புதான் இதைப் பிற்காலத்தில் தமிழ்ச்  சங்க இலக்கியத்தைத் தொகுத்தவர்கள் அப்படியே பின்பற்றியுள்ளனர் என்பது என் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. ரிக்வேதத்தில் பெயர் தெரியாத ரிஷிகளின் (anonymous) கவிதைகளுக்கு அதில் உள்ள ஒரு வரியையே (line or expression) கவிஞரின் பெயராகக் கொடுப்பர். இதை அப்படியே தமிழ்க் கவிதைத் தொகுப்பாளரும் பின்பற்றினர்—(தேய்புரிக்கயிறு, செம்புலப்பெயல் நீரார்) —(இது பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளேன்)

 

 

பத்து மண்டலங்கள்

 

ரிக்வேதம் பழமையான நூல் மட்டுமல்ல. மிகப் பெரிய கவிதைத் தொகுப்பும் கூட. இதில் 1028 துதிகள் (சூக்தம்) உள்ளன. அவற்றில் பத்தாயிரத்துக்கும் மேலான மந்திரங்கள் இருக்கின்றன. இதை பத்து மண்டலங்களாகப் பிரித்தனர். அதில் முதல் மண்டலமும், பத்தாவது மண்டலமும் பல உதிரி மந்திரங்களின் தொகுப்பு. பொதுவாக அறிஞர்கள் இதை பிற்காலப் பகுதியாகவும் இடைப்பட்ட மண்டலங்களை ( 2 முதல் 9 வரை) பழைய பகுதி என்றும் கருதுவர்.

 

(எனது கருத்து: முதல் மண்டலத்திலும் பத்தாவது மண்டலத்திலும் உள்ள அத்தனை பாடல்களும் புதியன அல்ல. அவறில்தான் கல்யாண மந்திரங்களும், இறுதிச் சடங்கு மந்திரங்களும் உள்ளன. எல்லாவற்றையும் பாடி முடித்தபின்னர் கல்யாணம் பற்றியும், மரணம் பற்றியும் பாடிநர் என்பது கேலிக்குரியது. ஆனால் இம்மண்டலங்களில் பல புதிய பாடல்கள் இருப்பது உண்மையே)

 

 

இடைப்பட்ட எட்டு மண்டலங்களில் 2 முதல் 7 வரை குடும்ப மண்டலங்கள் (Family Mandalas). அதாவது ஒவ்வொரு ரிஷியின் பரம்பரையிலும் வந்த ரிஷிகளின் பாடலகளை வியாசர் அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார். இதில் எது பழையது? என்பது நீண்ட காலமாக ஆராயப்படும் விஷயம். அண்மைக் காலத்தில் தலகரி (Shrikant G. Talageri) என்ற அறிஞர் எது பழையது என்ற வரிசைக் கிரமத்தை அளித்துள்ளர். அதை நிகலஸ் (Nicholas Kazanas) ஏற்றுக் கொண்டு வேறு சில விஷயங்களையும் முன்வைக்கிறார். அது என்ன?

 

தலகரியின் ஆராய்ச்சியில் கண்ட வரிசை

 

மிகப்பழைய மண்டலங்கள் — 6, 3, 7

 

நடு மண்டலம் – 4, 2 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

இதற்கடுத்தது – 5 (+ முதல் மண்டலத்தின் சில பாடல்கள்)

 

கடைசி – 1, 8, 9

 

புதியது – 10

 

துதிகளில் வரும் மன்னர்களின் பெயர்கள், ரிஷிகளின் குடும்பம் ஆகியவற்றைக் கொண்டு தலகரி இவ்வாறு வரிசைப்படுத்தினார்.

இது பற்றி நிகலஸின் கருத்துரை:

 

தலகரி  கூறுவதைக் கொண்டுமட்டும் எதையும் உறுதிபடச் சொல்வதற்கில்லை. ஏனெனில் பழைய கவிஞர்கள் பயன்படுத்திய சொற்களை, வரிகளை, கற்பனைகளை, உவமைகளைப் பிற்காலப் புலவர்களும் Imitate காப்பி அடிக்கலாம்.

 

கிரேக்க மொழியில் உள்ள ஆர்பிக் (orphic hymns)  பாடல்கள் முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டன. ஆயினும் அவற்றின் பாணி style மிகப் பழைய பாடல்களை ஒத்து இருக்கின்றன. இதை எனக்கு முன்னரே ஹாப்கின்ஸ் (E W Hopkins) அவர்களே 1896 ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டிவிட்டார். புக ழ்பெற்ற பழங்கால புலவர்களின் பெயரகளைப் பிற்காலத்தவர் வைக்கக்கூடும்.

 

(தமிழிலும் இத்தகைய குழப்பம் உண்டு. பல அவ்வையார்கள், பல பரணர்கள், பல கபிலர்கள் உண்டு. சிலர் பல நக்கீரர்கள் உண்டு என்றும் கருதுவர்!)

 

பல ரிஷிகளின் பெயர்கள், அதிலுள்ள கடவுளின் பெயர்களில் உள்ளன

 

10-158 (கடவுள் காற்றுதேவன்; கவிஞர் காற்றாடி/வாதாயன)

10-158 (கடவுள்- சூர்ய தேவன்; கவிஞர் சூர்யக் கண்ணன்/சக்ஷுஸ் சூர்ய)

10-14 (யமன்; கவிஞர் யமன்)

9-107 (சப்தரிஷி; சப்தரிஷி )

8.27.8 (வைவஸ்வத மனு வைவஸ்வத மனு; )

 

(நான் முன்ன்ரே குறிப்பிட்டது போல சங்கத் தமிழ் கவிதைத் தொ குப்பாளர்களும் பெயர் தெரியாத புலவர்களுக்கு அவர் சொன்ன வாசகங்களையே பெயராகச் சூட்டிவிட்டனர். இப்படி 20 க்கும் மேலான விநோதப் புலவர் பெயர்களை நான் முன்னரே பட்டியலிட்டுள்ளேன்)

 

ஐதரேய பிராமணம் என்னும் நூலே ரிக்வேதப் புத்தகத்தில் கீழ்கண்ட பாடலகள் பிற் சேர்க்கை என்று சொல்கிறது:

3-30, 31, 34, 36, 38, 48

 

(பிற்சேர்க்கை என்றால் எவ்வளவு காலத்துக்குப் பின் என்று யாரும் சொல்லவில்லை. நிகலஸின் கருத்துப்படி வேதங்கள் கி.மு.3300; அதாவது சிந்துவெளி நாகரீகத்துக்கு முன் என்று அவரே தெளிவாகச் சொல்கிறார்)

 

ஆனால் தலகரி சொல்லுவது போல இவ்வளவு பாடல்களும் 2000 ஆண்டுக் கால வீச்சில் பாடப்பட்டவை என்பதை நான் ஏற்கமாட்டேன். மொழியியல் ரீதியில் பழைய பாடலுக்கும் புதிய பாடல்களுக்கும் வேறுபாடு இருப்பது உண்மையே. ஆயினும் இவ்வளவு கால இடைவெளி இருக்காது.

(எனது கருத்து: தமிழ் சங்க இலக்கியத்தின் 2000 பாடல்கள் — சுமார் 30,000 வரிகள்— உருவாக சுமார் 400 ஆண்டுகள் ஆயிற்று. நான் மொழியியல்  ரீதியில் மூன்று தமிழ் சங்க காலக் கணக்கீடு தவறு என்று முன்னரே காட்டி இருக்கிறேன். சங்க இலக்கியத்தில் மூன்று தமிழ் சங்கங்களின் சில புலவர் பாடல் இருப்பதால் மூன்று தமிழ் சங்ககங்களும் 300, 400 ஆண்டு இடைவெளிக்குள் தான் இருந்திருக்க வேண்டும் என்று காட்டியுள்ளேன். இதே போல தொல் காப்பியத்தின் காலம், திருக்குறளின் காலம் என்பனவற்றையும் மொழியியல் ரீதியில் அணுகி எழுதியுள்ளேன்)

 

ரிக்வேதம் கி.மு.3300க்கு முன் முடிக்கப்பட்டிருக்கும். நான் சொல்லும் கால வரிசை:-

முற்கால மண்டலங்கள் – 3, 6. 7

நடுக் கால மண்டலங்கள் – 2, 4

கடைசி  மண்டலங்கள் – 5,1,8,9, 10

 

என்று நிகலஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

தமிழ் மொழி பற்றிக் கதைக்கும், பிதற்றும் பேர்வழிகள் உலக மொழிகளை மற்றவர்கள் எப்படி அறிவியல் ரீதியில் அணுகுகிறார்கள் என்பதைப் பயிலுதல் நலம் பயக்கும். தமிழும் சம்ஸ்கிருதமும் அறியாதோர், பிற மொழிகளின் இலக்கியம் பற்றிப் படிக்காதோர் — முதலில் அறிவை வளர்த்துக்கொள்ளுதல் அவசியம்.

(Source:- Vedic and Indo-European Studies by Nicholas Kazanas, Aditya Prakashan, New Delhi, year 2015)

 

–சுபம்–