அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் (Post No. 3515)

Written by S NAGARAJAN

 

Date: 5 January 2017

 

Time uploaded in London:-  6-27 AM

 

 

Post No.3515

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

by ச.நாகராஜன்

 

இந்திய வரலாறு – பி. என். ஓக்கின் புதிய கண்ணோட்டம்

 

இந்திய வரலாற்றை அதிசயக்கத்தக்க முறையில் ஆய்வு செய்து ஏராளமான புத்தகங்களை எழுதிய அதிசய வரலாற்று ஆய்வாளர் பி.என்.ஓக் ஹிந்து தர்மத்தின் புகழையும் பெருமையையும் உலகறியச் செய்தவர்களில் ஒருவர்.

 

 

1917ஆம் ஆண்டு  மார்ச் மாதம் இரண்டாம் தேதி பிறந்து 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மறைந்தார்.

 

90 வயது நிறைவாழ்வு வாழ்ந்த புருஷோத்தம நாகேஷ் ஓக்கை பி.என், ஓக் என்றே உலகம் அறிந்தது.

 

ஹிந்து வரலாறு சின்னாபின்னாபடுத்தப்பட்டு திரித்து, மாற்றி, சிதைத்து எழுதப்பட்டிருப்பதைக் கண்டு மனிதர் கொதித்தெழுந்தார். முறையாக வரலாற்றை ஆய்வு செய்யத் தொடங்கினார். இன்ஸ்டிடியூட் ஃபார் ரீ ரைட்டிங் இண்டியன் ஹிஸ்டரி என்ற ஒரு அமைப்பை நிறுவித் தன் ஆய்வு முடிவுகளை உலகினருக்கு அறிவித்தார். இதிஹாஸ் பத்ரிகா என்ற வரலாற்று இதழ் ஒன்றையும் நடத்த ஆரம்பித்தார். மதத்திற்கெல்லாம் தாய் மதமாக ஹிந்து மதம் இலங்கியது என்பதே இவர் வரலாற்று ஆய்வின் உயிரோட்டமான தத்துவமாக இருந்தது.

 

வேத நாகரிகத்தின் வரலாறு

 

ஏசு கிறிஸ்து, வாடிகன் சிடி, காபா,வெஸ்ட் மினிஸ்டர் அப்பே, தாஜ்மஹால் பற்றிய இவரது ஆய்வு முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கின. ப்லரை கோபம் கொள்ள வைத்தன.

 

வோர்ல்ட் வேதிக் ஹெரிடேஜ்  – எ ஹிஸ்டரி ஆஃப் ஹிஸ்டரிஸ் (World Vedic Heritage – A History of Histories) என்ற இவரது புத்தகம் மிக அருமையான புத்தகம். 92 அத்தியாயங்களில் 1312 பக்கங்களில் பல்வேறு அதிசயமான தகவல்களைத் தொகுத்து இதில் அவர் தந்திருக்கிறார்.

 

இதில் இவர் கூறும் முக்கிய செய்திகளில் இரண்டை மட்டும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

 

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

 

ஏசு கிறிஸ்து என்று ஒருவர் இல்லை

Did Jesus Ever Lived  என்ற (76ஆம்) அத்தியாயத்தில் ஏசு பற்றிய பல்வேறு தகவல்களை முறையாக இவர் ஆய்வு செய்கிறார்.

பின்னர் அவர் முத்தாய்ப்பாகக் கூறுவது இது தான்:

 

“Thus from beginning to end the Jesus story is one big fiction which developed as a mushroom growth gathering heterogeneous elements in its meandering course over centuries after it had acquired a head-start with the grouse of an ambitious, short- tempered, angry man called Saus alias Paul expelled from the management of the Christ cult.

 

 

It is hoped that the above details would help people who believe in logic to realize how the whole foundation of Christianity is entirely fictious despite its colossal spread and size.” (Page 1003)

 

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

 

தாஜ்மஹல் ஒரு ஹிந்து ஆலயமே

தாஜ்மஹல் உண்மையில் தேஜோ மஹாலயம் என்ற ஹிந்து ஆலயம் என்று கூறும் இவர் அதற்கான் ஆதாரங்களை அள்ளித் தருகிறார்.

 

பிரம்மாண்டமான தாஜ்மஹாலில் பார்வையாளர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே இன்று பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். உண்மையில் அனைத்துப் பகுதிகளையும் பார்க்க அனுமதித்தால் இந்த உண்மையை எளிதாகப் புரிந்து கொள்ளலாம் என்பது இவரது வாதம்

இவரது கூற்று:

 

“The marble Taj Mahal in Agra (India) is surrounded by numerous such palatial, red stone pavilions which escapes visitor’s attention, being misled by the concoted Shahjahan-Mumtaz legend. The Taj Mahal is Tejo-Mahalaya a Hindu temple-palace complex built several centuries before the 5th generation. Mogul ruler Shahjahan, (Reference, our research book titiled – THE TAJ MAHAL IS A TEMPLE PALACE). Shajahan requisioned the edifice, robbed it of its costly fixtures and furniture (such as silver doors, gold-railings, gems stuffed in the  marble grill, strings of pearl hanging on the Shivling amd the  legemdary  peacock throne) and misused it recklessly as a Muslim cemetery. Thus history has been turned so topsy turvy as to credit the very person who robbed, ravaged and descrated the Taj Mahal with having built it. Such is the appalling state of history all the world over,” (Page  1246)

 

இப்படிப்பட்ட ஏராளமான செய்திகள் பக்கத்திற்குப் பக்கம் தரப்படுகின்றன; நம்மை பிரமிக்க வைக்கின்றன.

 

 

சரியான ஹிந்து நாகரிக வரலாற்றுக்காக உழைத்தவர்

 

ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் சர் ஆர்தர் கானன் டாயிலின் நாவலில் வரும் லாஜிக், அகதா கிறிஸ்டியின் நாவலில் வரும் மர்மம், இர்விங் வாலஸ் நாவல்களில் வரும் எதிர்பாரா திடுக்கிடும் திருப்பங்கள் போன்றவற்றை இந்திய வரலாற்றில் காண முடியும் என்பதை ஓக் நிரூபிக்கிறார்.

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உதவியாளராக சில காலமும், பத்திரிகையாளராக சில காலமும், இந்திய தகவல் ஒலிபரப்புத்துறை அதிகாரியாக நீண்ட காலமும் பணியாற்றிய இந்திய வரலாறு எப்படி திரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டு பிடித்து, அதன் உண்மையான வரலாறு என்ன என்பதை ஆய்வு செய்து தருவதிலேயே ஓக் தனது வாழ்நாள் முழுவதையும் செல்வழித்து அர்ப்பணித்தார்.

 

போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் இலக்கான மகத்தான வாழ்வு வாழ்ந்த அவர் வேத நாகரிகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த பெரும் மேதை என்றே சொல்லலாம்!

 

********

 

Bhagavad Gita Simile used by Ancient Tamil Poets! (Post No.3514)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  20-56

 

Post No.3514

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

If one studies the similes used by ancient Sanskrit poets and Tamil poets one will find out that Indians had a unique culture spreading over a vast landmass, that was the largest country in the world 2000 years ago. The simile used by Lord Krishna in Bhagavad Gita is found in the oldest Tamil book Tolkappiam and Sangam Tamil literature. Kalidasa and other Sanskrit poets also used the simile in umpteen places. This explodes the divisive Aryan- Dravidian Race Theory. Hundreds of similes are unique to Tamil and Sanskrit literature which are not found in any other literature or culture in the world.

 

Lord Krishna says (Sutra Manigana Iva) :

There is nothing whatsoever higher than Me, O Dhanjanjaya. All this strung in Me, as clusters of gems on a string 7-7

 

Commenting on this couplet Swami Chinmayananda says: “To show that the Self is one and the same in all forms, it has been said that the Lord is the common factor in all forms in the universe. He holds them all intact as the string holds all the pearls in a necklace. These words have deep significance. Not only is it beautiful in its poetic suggestion, but it has also a very exhaustive philosophical implication. The pearls in the necklace are necessarily uniform and homogenous, and its thread, which is generally unseen, passes through the central core of every pearl, and holds them all, the big and the small, into a harmonious ornament of beauty. Here is an instance wherein we see Shri Veda Vyasa typically expressing himself as the poet-philosopher of the world.

 

Tolkappaiam written by Tolkappiar, is considered the oldest book available in Tamil. It is dated around First Century BCE. Definitely later than Bhagavad Gita. We find the simile in Tolkappiam as well. Like Sanskrit, Sutra means a book and a thread in Tamil also; in Tamil the word used is Nuul= Thread or Book.

 

Tolkappiar used the word Sutra following Panini. He never hesitated to use a Sanskrit word. In the Sutra 1426:

Like orderly arranging the gems in a string, arranging the same types is called Othu.

 

Tamil Veda Tirukkural written by Tiruvalluvar also used the Bhagavad Gita simile:-

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

 

Thus Krishna’s “Sutra Manigana Iva” simile has become popular 2000 years ago. Avadhutopanishad also has this.

Kalidasa used this imagery in His Raghuvamsam and Vikrama Urvaseeyam:-

Though a dunce, I have a way in through the epic already rendered by Valmiki like the thread that easily goes through the diamonds already bored- (Raghuvamsa 1-4)

 

This King of Anga made the wives of his enemies to throw off their ornaments and weep for their husbands shedding tears larger than pearls on to their breasts which appeared like pearl necklaces. The king took the real necklace and gave them tear necklace- Raghu.6-28

 

A lady was halfway through her stringing of gems for her girdle. The thread was tied to her thumb. When she came to know about Aja’s visit she rushed to the window to see him. All the gems fell and scattered leaving only the thread still knotted to her thumb 7-10

 

These women engrossed at splashing water on each other are unable to give a thought to the severance and slithering of their pearl necklaces from their bosom, for the water drops as large as pearls are hopping on their bosoms which they think necklace of pearls – 16-62

These similes of Raghuvamsa were used by Tamil poets in Sangam literature.

Sangam Tamil poets used the similes in the following places:

 

Kudavayil Keerathanar has used this imagery twice in his poems in Akananuru (289 and 315)

 

Eyinanthai Ilankeeranar (Akam.225) used the broken pearl necklace image in his verse.

 

Kurunthokai Poets Kundriyanar and Kavan Mullai Poothanar and  Marudan Ilanagan of Marudakkali also followed his predecessors.   All of them used the unstringed or broken necklace images.

 

Thus, we see One Thought- One Culture from Kanyakumari to Kashmir. Before the foreigners came they didn’t know any divisions in the community such as Aryan or Dravidian races.

-Subham-

 

 

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை! (Post No.3513)

Research Article written by London swaminathan

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  15-53

 

Post No.3513

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஆதிகாலத்தில் இந்தியர்களுக்கு ஒரே சிந்தனைதான். அவர்கள் உவமைகள் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மேலும் அததகைய உவமைகளை வேறு எந்த பண்பாட்டிலும் காண முடியாது. இதனால் என்ன தெரிகிறது? ஆரியரும் கிடையாது, திராவிடரும் கிடையாது; இமயம் முதல் முதல் குமரி வரை ஒரே சிந்தனைதான். ஒரே பண்பாடுதான். ஒரு உவமையை வைத்து மட்டும் இப்படிச் சொல்லிவிட  முடியாது.  ஏராளமான இடங்களில் இதைக் காணலாம் “யானையால் யானையாத்தற்று” = நாட்டு யானையை வைத்து காட்டு யானையைப் பிடிப்பது என்பதை வள்ளுவனும் சொல்லுவான். அவனுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சாணக்கியனும் அர்த்தசாத்திரத்தில் சொல்லுவான்!

 

தொல்காப்பியனும், காளிதாசனும், சங்கப் புலவர்களும் கிருஷ்ண பரமாத்மா என்ன சொன்னாரோ அதையே கிளிப்பிள்ளை மாதிரி திரும்பத் திரும்பச் சொல்லுவர்.

 

ஒரே ஒரு உவமையை மட்டும் எடுத்துக்கொள்வோம்:

முத்துமாலை அல்லது ரத்தின மணிமாலை

 

மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்சய

மயி சர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணி-கணா இவ

-பகவத் கீதை 7-7

தனஞ்சயா! என்னைக் காட்டிலும் உயர்ந்தது வேறு ஒரு சிறிதும் இல்லை; நூலில் மணிகள் போல இவை எல்லாம் என்னிடத்தில் கோர்க்கப்பட்டுள்ளன.

 

இது அவதூதோபநிஷத்திலும் உள்ளது

யேன ஸர்வமிதம் ப்ரோதம்  ஸூத்ரே மணிகணா இவ; தத் ஸூத்ரம் தாரயேத் யோகீ யோகவித் ப்ராஹ்மணோ யதி:

 

தொல்காப்பியர் சம்ஸ்கிருதத்தில் உள்ள சூத்ரம் என்ற சொல்லையே தனது சுருக்கமான விதிகளுக்குப் (1425) பயன்படுத்தியுள்ளார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். கீழேயுள்ள பகுதியில் நூல் (சரடு) என்ற பொருளில் வருகிறது. தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நூல்=சூத்ரம் என்றால் ஒரே பொருள்தான்! அதவது சரடு/ நூல் , புத்தகம்

 

நூற்பா=சூத்ரம் 1426

நேரின மணியை நிரல்படவைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி  வைப்பது

ஒத்து என மொழிப உயர்மொழிப் புலவர்

 

பொருள்:– ஒரே மாதிரியான மணிகளை வரிசையாகக் கோர்ப்பதுபோல ஓரினப் பொருள்களைத் தொகுத்து ஒரு முறையில் வைப்பதை ஒத்து என்று கூறுவர் சிறந்த புலவர்.

 

சூத்திரம் 1425-ல் சூத்திரம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் சூத்திரம் 1426-ல் மணி என்ற சம்ஸ்கிருதச் சொல்லையும் தொல்காப்பியர் கையாளுவதையும் மறந்துவிடக் கூடாது.

 

இதையே மற்ற புலவர்கள் எப்படிப் பயன்படுத்துகின்றனர் என்பதைப் பார்க்கையில் மேலும் வியப்படைவோம்.

 

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன்று உண்டு (குறள் 1273)

 

பொருள்:-

கோத்த மணியின் ஊடே விளங்கும்  நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளே (இவள் மறைத்து வைத்தாலும்) தோன்றுகின்ற குறிப்பு ஒன்று இருக்கின்றது.

 

காளிதாசன் பயன்படுத்தும் இடங்கள்:

 

ரகுவம்சம் 1-4; 6-28; 7-10, 8-64, 16-62; விக்ர 5-2, 5-3

எனக்கு முன்னால் இருந்த பெரியோர்களால் செய்ய்ப்பட்ட ராமாயணம் இந்த துவாரமுடைய சூரியவம்சத்தில் என்னுடைய போக்கு, வஜ்ரத்தினால் துளியிடப்பட்ட ரத்தினத்தில் நூல் (எளிதாகச்) செல்லுவது போல இருக்கிறது- ரகுவம்சம்.1-4

 

 

இந்த அங்கதேச மன்னர், பல தேச மன்னர்களை வென்றதால் அவர்களுடைய மனைவிமார் முத்துமாலைகளை இழந்தனர். இப்பொழுது அவர்கள் அழுவதால் விழும் கண்ணீர்த்துளிகள் நூலின்றியே புது முத்துமாலைகள் சூட்டியதைப் போல விளங்கின – ரகுவம்சம்.6-28

 

(இந்த உவமையைப் பல தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தி இருப்பதைக் கீழே காண்க)

 

ஒரு பெண் கால் கட்டைவிரலில் நூலைக் கட்டி, அதில் மணிகளைச் சேர்த்து மாலை கட்டிக் கொண்டிருந்தாள். அஜன் வருவதைக் கேட்டவுடனே நூலின் மறுமுனையை விட்டுவிட்டு அவனைப் பார்க்க ஜன்னலுக்கு ஓடினாள். அவள் காலில் நூல் மட்டுமே இருந்தது. மணிகள் சிதறி ஓடின- ரகுவம்சம்..7-10

 

பெண்கள் தனது உள்ளங்கைகளால் தண்ணீரை அடித்து விளையாடினர். அந்த வேகத்தில் அவர்களுடைய முத்துமாலைகள் இற்றுப் போயின. ஆனால் அவர்கள் எழுப்பிய நீர்த்துளியானது அவர்களுடைய மார்பகங்கள் மேல் மணிகள் போல இருந்ததால் மாலை நழுவியதை அவர்கள் உணர  முடியவில்லை.-ரகுவம்சம்.18-62

 

பாதி தொடுக்கபட்ட மேகலை என்னும் வரிகள் ரகுவம்சத்தில் (ரகுவம்சம்.8-64) வருகிறது.

 

சங்கத்   தமிழ் இலக்கியத்தில்

 

அகம்225 (எயினந்தை மகன் இளங்கீரனார்

பூத்த இருப்பைக் குழைபொதி குவீணர்

கழல்துளை முத்தின் செந்நிலத்து உதிர

பொருள்:-

குவிந்த துளை உடைய பூங்கொத்துகள் நூலினின்று அறுந்து விழும் துளையுடைய முத்தைப் போல சிவந்த நிலத்தில் உதிரும்.

 

குடவாயிற் கீரத்தனார் பாடிய (அகம்.315) பாடலில்

கோடை உதிர்த்த குவி கண் பசுங்காய்

அறுநூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப

வறு நிலத்து உதிரும் அத்தம்

 

பொருள்:-

நெல்லி மரத்தில் மேல் காற்று உதிர்த்த, குவிந்த கண்ணை உடைய பசிய காய்கள், நூல் அறுபட்டு விழுந்த துளையுடைய , பளிங்குக் காசுகளைப் போல வெற்று நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் காட்டு நெறி….

 

 

 

இதே புலவர் (அகம்.289) இன்னொரு பாட்டில், ”

கண்பனி நெகிழ்நூல்முத்தின், முகிழ் முலை தெறிப்ப”

பொருள்:-

 

உடன் அவர் இல்லாமையை எண்ணி வருந்த, நூலறுந்து விழும் முத்துக்களைப் போல கண்ணீர் முலை மீது சிந்தக், குற்றம் இல்லாத படுக்கையில் அழகிய மெல்லிய அன்னச்சிறகால் ஆகிய  அணையைச் சேர்த்து………………………………….

 

இளங்கீரனார் ஒவ்வொரு பாட்டிலும் காளிதாசன் பயன்படுத்திய இரண்டு விஷயங்களைப் பயன்பத்துகிறார் என்பது அவர் காளிதாசனைக் கரைத்துக்குடித்தவர் என்பதைக் காட்டும்.

 

குறுந்தொகைப் பாடலில் (51) குன்றியனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

கூன் முண் முண்டகக் கூர்ம்பனி மாமல்ர்

நூலறு முத்திற் காலொடு பாறித்

துறைதொறும் பரக்குந்தூமணல் சேர்ப்பனை

 

பொருள்:-

வளைந்த முள்ளையுடைய கழிமுள்ளியினது மிக்க குளிர்ச்சியுடைய கரிய மலரானது, நூலற்று உதிர்ந்த முத்துக்களைப் போல காற்றால் சிதறி நீர்த்துறைகள் உள்ள இடம்தொறும் பரவும் தூய மணல் பரப்பை………………

 

குறுந்தொகை  104-ல் காவன் முல்லைப்  பூதனார் என்னும் புலவர் கூறுவதாவது:-

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளமேயும்

 

பொருள்:-

தோழி, ஒன்று கூறுவன்; கேட்பாயாக, நம் தலைவர் (காதலர்) நூலற்ற முத்துவடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப்போல, குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை,  விடியற்காலத்தில் பசுக்கள் மேயும்…………..

கலித்தொகையிலும் (பாடல் 82, மருதக்கலி, மருதன் இளநாகன்) கண்ணீர்த் துளிகளை அறுந்த முத்துமாலைக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

 

தமிழ் பக்தி இலக்கியத்தில் நிறைய இடங்களில் முத்துமாலை  கோத்தல், அறுந்த முத்துமாலை உவமைகளை  காணலாம்.

 

“செப்பு மொழி பதினெட்டுடையாள்- எனில்

சிந்தனை ஒன்றுடையாள்” (பாரத தேவி)– பாரதியார்

 

–சுபம்—

 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4 (Post No. 3512)

Written by S NAGARAJAN

 

Date: 4 January 2017

 

Time uploaded in London:-  4-52 AM

 

 

Post No.3512

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 18

இந்தக் கட்டுரையில் பரிபாடலில் வரும் 4,5,6,8 ஆம்  பாடல்களில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 4

 

                        ச.நாகராஜன்

 

 

பரிபாடலில் நான்காம் பாடல்

 

பரிபாடலின் நான்காம் பாடல் 73 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்ட நாகனார். திருமாலைப் பற்றிய அழகான பாடல் இது.  இதில் இரணியனைக் கொன்று பிரகலாதனைக்  காப்பாற்றிய வரலாறு வருகிறது. பிரகலாதன் என்ற பெயரையும் இதில் காணும் போது புராணங்கள் பாரதம் முழுவதிலும் பரவி இருந்தமை தெரிய வருகிறது. வராக அவதாரத்தின் சிறப்பு, கருடக் கொடியின் பெருமை போன்றவை சிறப்பு வாய்ந்த சொற்களால் வர்ணிக்கப்படுகிறது.

 

 

நின்னோர் அன்னோர் அந்தணர் அருமறை (வரி 65)

என்ற இந்த வரியால், “திருமாலின் பெருமை அளப்பதற்கு அப்பாற்பட்டது. அது அந்தணர் ஓதும் வேதத்தால் உரைக்கப்படுகிறது” என்பது விளக்கப்படுகிறது.

 

 

ஐந்தாம் பாடல்

அடுத்ததாக, பரிபாடலின் ஐந்தாம் பாடல் 81 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கண்ணகனார். முருகனைப் பற்றிய அழகான பாடல் இது. முருகனிடம், “யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல; அருளும் அன்பும் அறனும் மூன்றும்” மட்டுமே யாம் வேண்டுவது என்னும் வரிகள் மனதை உருக்குபவை.

இதில் வரும்,

 

“ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து”  (வரிகள் 22,23)

 

என்பதன் பொருள் :

ஆதி அந்தணன் என்பது புராதன பிராமணனான பிரம்மம்.அந்த ஆதி அந்தணன் புவி என்னும் ரதத்தில் எப்படி நன்கு ரதத்தை நடத்துவது என்பதை அறிந்து வேதத்தை குதிரைகளாகக் கொண்டு புவி மீது நடத்துகிறான்.

 

 

ஆறாம் பாடல்

 

அடுத்ததாக, பரிபாடலின் ஆறாம் பாடல் 106 அடிகளைக் கொண்ட நீண்டதொரு சுவையான பாடல்..

இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். வையையின் பெருமையை மிக அழகுற விளக்கும் பாடல் இது. வையையில் வெள்ளம் கரையையும் உடைத்துக் கொண்டு ஓட மகளிரும் ஏனையோரும் புனலாடுதல் உள்ளிட்ட பல காட்சிகளை அழகுறப் படம் பிடித்துக் காட்டும் பாடல் இது.

ஓடி வரும் வெள்ளத்தால் அந்தணர் கலக்கம் அடைகிறார்களாம். அதைப் பாடல் அழகுறச் சொல்கிறது இப்படி:

 

 

நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து                         வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை                         புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு (வரிகள் 43-45)

 

புலம் என்றால் வேதம். புலம் புரி என்பதால் வேதம் ஓதும் அந்தணர் என்பது சொல்லப்படுகிறது.  அவர்கள் மணத்துடன் கரை புரண்டோடும் ஆறு கண்டு (நாறுபு நிகழும் யாறு கண்டு) இது வேறு பல மணம் கொண்டு அழிந்தது என்று (வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழை) வேதம் ஓதும் அந்தணர் மருண்டு கலங்கினர் (புலம் புரி அந்தணர் கலங்கினர் மருண்டு)

அழகான வையைப் பற்றி விளக்கும் அற்புதமான பாடல் இது.

 

எட்டாம் பாடல்

 

அடுத்ததாக, பரிபாடலின் எட்டாம் பாடல் 130 அடிகளைக் கொண்ட நீண்டதொரு அழகிய பாடல்..

இதைப் பாடியவர் ஆசிரியர் நல்லந்துவனார்.  இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் மருத்துவன் நலலச்சுதனார். திருப்பரங்குன்றின்  மாண்பினை இதை விடச் சுவையாகக் கூற முடியாது என்ற அளவில் பரங்குன்றின் சிறப்பை விளக்கும் அற்புதப் பாடல் இது.

இமய மலையை ஒக்கும் சிறப்புடைய குன்று எது தெரியுமா?

பதிலைப் பாடல் தருகிறது இப்படி:

“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்                     இமயக் குன்றினில் சிறந்து”    (வரிகள் 11,12)

 

முருகன் உறைந்து அருள் புரியும் மலை இமயத்தில் சிறந்ததாக இல்லாமல் இருக்க முடியுமா என்ன?

“யாவரும் பிறரும் அமரரும் அவுணரும்                            மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்”                                         

(வரிகள் 8,9)

 

தேவர்கள், அசுரர்கள், முதுமொழி எனப்படும் வேதம் ஓதுவதில் நிபுணர்களான தவ முதல்வரும் வந்து சேரும் இடம் திருப்பரங்குன்றமே!

பரங்குன்றின் அருமை பெருமைகளை தேர்ந்தெடுத்த தமிழ்ச் சொற்களால் உரைக்கும் இந்தப் பாடலை அனைவரும் படித்தல் வேண்டும்.

 

அரு மறை, வேதம், புலம், முது மொழி என்று இப்படி, பல சொற்களால் வேதம் புகழப்படுவதையும் அதை ஓதும் அந்தணர் மேன்மை உரைக்கப்படுவதையும் இந்தப் பரிபாடல் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன..

**********

 

 

 

Feet are ruled by Brahma, Heart is ruled by Rudra (Post No.3511)

Compiled by London swaminathan

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  19-14

 

Post No.3511

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Medical Astrology says which planet rules which part of the body. Though there is no scientific evidence for that, astrologers believe in it and ‘treat’ their customers accordingly. In the same way Hindu scriptures gives details about the body parts and their rulers and the respective mantras.

The following chart gives the details:

1.Region in Body –   Elements—  Deity—  Bija Mantra

Feet to Knees –                  Earth —        Brahma—lam

Knees to Generative organ-    Water –   Vishnu—vam

Generative organ to Heart    —  Fire      —  Rudra – ram

Heart to Eye Brows          — Air          — Maruta  — yam

Eye brows to Head         — Space    — Sankara  — ham

 

2.Five Jnanendriyas  – Sense Organs

Naasikaa-Nose, Jihvaa- Tongue, Caksuh- Eye,

Tvak- Skin, Srotra- Ear

 

3.Five Karmendriyas- Motor Organs

Vak-Tonge, Paani- Hand, Paada- Feet, Paayu- Organ of excretion, Upastha- Organ of Creation

4.Pancha Bhutas – Five Elements

Prithvii- Earth, Ap- Water, Tejas- Fire, Vayu- Air, Aakaasa – Space

5.Five Tanmatras – Subtle Elements

Gandha- Smell, Rasa- Taste, Ruupa – Vision/colour, Sparsa – Touch, Sabda- Sound.

Source: sankhya sanketa kosa (Encyclopaedia of Numerals) , Volume-1, The Kuppuswami Sastri Research Institute, Chennai-600 004, Year 2011

 

-Subham-

‘இனிய தமிழ்நாடு’ – கம்பன் பாராட்டு (Post No. 3510)

Written by London swaminathan

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  7-58 am

 

Post No.3510

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழ் மொழியைப் பாராட்ட வாய்ப்பு கிடைத்தால் கம்பன் நழுவ விடுவானா? பால காண்டத்தில் அவன் துவக்கிய பாராட்டுரை கிஷ்கிந்தா காண்டம் வரை நீடிக்கிறது. அகத்திய மகரிஷியைக் குறிப்பிட்ட

போதெல்லாம் தமிழையும் சேர்த்தே பாடினான்.

 

இப்பொழுது, சீதையைத் தேடுவதற்குப் புறப்பட்ட வானரங்கள் ஒவ்வொரு திசையை நோக்கியும் பட்டாளம் பட்டாமாகப் புறப்பட்டார்கள். தென் திசை நோக்கிச் சென்ற வானரங்கள் குறித்து கம்பன் பாடுகிறான்:–

 

அனைய பொன்னி அகன் புனல் நாடு ஒரீஇ

மனையின் மாட்சிகுலாம் மலை மண்டலம்

வினையின் நீங்கிய பண்பினர் மேயினார்

இனிய தென்  தமிழ்நாடு சென்றெய்தினார்

-ஆறுசெல் படலம், கிட்கிந்தா காண்டம்

 

பொருள்:-

வானர வீரர்கள், நீர்வளம் கொண்ட சோழநாட்டை விட்டுப் புறப்பட்டு, இல்லறத்தின் சிறப்புமிக்க சேரநாட்டைச் சேர்ந்தார்கள். அங்கும் சீதையைக் காணாமல், இனிய தமிழ் வழங்கப் பெறுகின்ற தென் பாண்டிநாட்டைச் சேர்ந்தார்கள்.

அத்திருத் தகு நாட்டினை அண்டர்நாடு

ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ

எத்திறத்திலும் ஏழ் உலகும் புகழ்

முத்தும் முத்தமிழும் தந்து முற்றலால்

 

பொருள்:_

ஏழ் உலகத்திலும் புகழப்படுகின்ற முத்துக்களையும் இயல்-இசை-நாடகம் என்ற மூன்று தமிழையும் தன்னிடத்தில் தோற்றுவித்து பெருமை பெறுவதால் செல்வத்தால் சிறப்பு பெற்ற அந்தப் பாண்டிய நாட்டை தேவர் உலகம் ஒத்திருக்கும் என்றால் அது ஏற்புடையதுதானே.

 

முத்தும் முத்தமிழும் தந்த நாடு பாண்டியநாடு!

 

இதைத் தொடர்ந்து வரும் மூன்றாவது பாட்டிலும்

 

என்ற தென் தமிழ்நாட்டினை எங்கனும்

சென்றுநாடித் திரிந்து திரிந்தினார்

பொன்றுவாரின் பொருந்தினர் போயினார்

துன்றல் அல் ஓதியைக் கண்டிலர் துன்பினார்

 

பொருள்:

ஒழுக்கத்தில் சிறந்த அந்த வானரர்கள், அழகிய தமிழ்நாடு என்று மேலே சிறப்பிக்கப்பட்ட பாண்டிய நாட்டில் எல்லா இடங்களிலும் தேடினர். அடர்ந்த இருள் போன்ற கூந்தலை உடைய சீதையைக்  காணாமல்,  துன்பம் கொண்டவர்களாகி இறக்கும் நிலமைதனை எட்டிப்பார்த்து மேலே சென்றார்கள்.

 

இதை சங்க காலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

 

சங்க இலக்கியத்தில் உள்ள சுமார் 30,000 வரிகளில் ஏறத்தாழ 20 இடங்களில் மட்டுமே தமிழ் என்ற சொல்லைக் காணலாம்!

 

தமிழ்நாடு என்ற சொல் பரிபாடல் திரட்டில் (9-1) என்ற ஒரே இடத்தில் மட்டும் காணப்படும். பொதுவாகத் திரட்டில் வரும் விஷயங்கள் பிற்காலத்தியவை என்ற கருத்து உண்டு.

 

ஆனால் தமிழகம் என்ற சொல் மிகப்பழைய பகுதியான புறநானூற்றிலேயே (168-18) காணப்படுகிறது.

 

அந்த காலப் புலவர்கள், தமிழ்  வாழ்க என்று வெறும் கூச்சல் போடுவோர் அல்ல. ஆக்கபூர்வமான வேலைகள் செய்து தமிழை வளர்த்தவர்கள்!

 

—Subahm–

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 18 (3509)

Written by S NAGARAJAN

 

Date: 3 January 2017

 

Time uploaded in London:-  5-53 AM

 

 

Post No.3509

 

 

Pictures are taken from different sources; thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 18

 

ஏ.கே.செட்டிடாரின் குமரி மலர் கட்டுரைகள் – 3

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

25) சிவாஜி சைநியத்தாரிடம் கூறியது – சி.சுப்பிரமணிய பாரதி (1906)

இந்தப் பாடல் கோத்திர மங்கையர் குலங்கெடுக்கின்றார் என்ற வரியுடன் முடிகிறது.

குறிப்பு என்று குறிப்பிட்டு கீழ்க்கண்ட வரிகள் தரப்படுகின்றன:

குறிப்பு: இச் செய்யுளில் ‘பாரதநாடு பார்க்கெலாந் தெய்வமாம், நீரதன் புதல்வரிந் நினைவகற்றாதிர்!’ என்னும் இரண்டு வரிகள் புதிய பதிப்புகளில் (சக்தி 1957) காணப் பெறவில்லை. ‘நவைப்டு துருக்கர்’ என்பது நகைபுரி பகைவர்’ என மாறி யிருக்கிறது.

 

26) அல்லா! அல்லா! அல்லா!  – இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை – சுதேசமித்திரன் 24-6-20

 

இந்தக் கவிதை பற்றிய குறிப்பு ஒன்றும் இங்கு தரப்படுகிறது.

சுதேசமித்திரன் காரியலத்தார் வெளியிட்ட ‘கதாரத்னாகரம்’ என்னும் தமிழ் மாதப்பத்திரிகை 1920 ஜூலை மாத இதழில் 77ஆம் பக்கத்தில் பாரதியார் பாடிய அல்லா பாட்டு வெளியாகியிருக்கிறது. இதில் காணும் ஸ்வரவரிசையும் , மூன்றாவது பாட்டும் ஏற்கனவே வெளிவந்துள்ள ‘பாரதியார் கவிதை’யில் காணப் பெறவில்லை.

 

குமரி மலரில் இந்தக் குறிப்பு ஒரு புறமிருக்க இப்போதுள்ள பாரதியார் கவிதைகளில் விடுபட்ட மூன்றாம் சரணம் இணைக்கப்பட்டுள்ளது.

 

‘ஏழைகட்கும் செல்வர்கட்கும் இரங்கியருளும் ஓர் பிதா’ என்று இந்த சரணம் ஆரம்பிக்கிறது.

 

27) A Beautiful Arrangement நேர்த்தியான வியாபாரம் – சி.சுப்பிரமணிய பாரதி (1907)

இந்தியா வாரப் பத்திரிகை 27-4-1907

 

28) Excessive Optimism   அளவு கடந்த நம்பிக்கை சி.சுப்பிரமணிய பாரதி (1906)

இந்தியா வாரப் பத்திரிகை 2-11-1906

 

29) பத்திரிகைத் தமிழ் சி.சுப்பிரமணிய பாரதி (1909)

இந்தியா 24-4-1909

 

30) பாரதி திருநாள்

திரு.வி.க (1929)

நவசக்தி  11-9-1929 தலையங்கக் குறிப்பு (ஆசிரியர் திரு.வி.க)

 

இந்தக் கட்டுரை மூலம் 1929லிருந்தே பாரதியார் தினம் கொண்டாடப்பட ஆரம்பித்திருபப்தை அறிய முடிகிறது.

இதில் திரு.வி.க குறிப்பிடும் வாசகங்கள் உருக்கமானவை.

சில வரிகளைக் கீழே பார்க்கலாம்:

தமிழ் நாட்டுக்குப் புத்துயர் அளித்துத் தமிழ் மொழிக்கு என்றும் மாறாத இளமையைத் தந்த கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் திருநாள் இன்று உறுகின்றது.

இதைத் தமிழர்கள் ஆங்காங்கு கொண்டாடுவார்கள் என்று நம்புகிறோம்.

வறுமையில் வாடி நின்ற பாரதியார், இணையிலாத் தமிழ்ச் செல்வத்தை நாட்டுக்கு அளித்துச் சென்றார்.

 

31) சக்கரவர்த்தினி சி.சுப்பிரமணிய பாரதி (1906)

   நெ.100, வீரராகவ முதல்தெரு,

   திருவல்லிக்கேணி, சென்னை

   – சக்ரவர்த்தினி’ 1906 பிப்ரவரி

இந்தக் கட்டுரையில் பாரதியார் எழுதும் முதல் வரி சக்கரவர்த்தினியின் ஆரம்பம் பற்றித் தெரிவிக்கிறது.

“நமது பத்திரிகை பிரசுரமாகத் தொடங்கி ஏழு மாதங்கள் ஆய்விட்டன.”

 

32) மாதர் கல்விக் கணக்கு சி.சுப்பிரமணிய பாரதி (1906)

சக்ரவர்த்தினி  1906 பிப்ரவரி

 

33) மகா மகோபாத்தியாய சாமிநாதய்யர் சி.சுப்பிரமணிய பாரதி (1906)

சக்கரவர்த்தினி சென்னை 1906 பிப்ரவரி

 

34) ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி

கனம் கே.வி.அரங்கசாமி ஐயங்கார் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் எழுதுவதன் சாராம்சம் : –

கவியும் தேசபக்தரும் ஆகிய ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி இள வயதில் இம்மண்ணுலகை நீத்து விண்ணுலக கெய்தியானது தமிழ் நாட்டிற்கே பெருத்ததொரு நஷ்டமாகும்.

   அவர் தன் கவித்திறமையை இந்தியாவின் முன்னேற்றத்திலும், இந்திய  மக்களின் முன்னேற்றத்திலும் உபயோகப்படுத்தி வந்தார்.

அறிவாளிகள் உயிருடன் இருக்கும் போது ஜனங்கள் கௌரவிக்காதது சாதாரணம். அப்படியிருந்தும் ஸ்ரீமான் பாரதியாரின் தேசபக்தியும் இனிமையான கவிகளும் சிலரை அவர் பால் ஈர்த்தன.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் காலஞ்சென்ற ஸ்ரீமான் வி.கிருஷ்ணசாமி ஐயர் ஆவர். அவர் பாரதியாரின் நூல்களை வாங்கி ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் இனாமாக அளித்தார்.

  ஸ்ரீமான் பாரதியார் அஞ்ஞாதவாசத்தில் அதிக கஷ்டப்பட்டார். பாரதியாருக்கு போதிய சௌகரியகளில்லாமையாலும், குடும்பக் கவலைகள்  மேலிட்டமையாலும் அவர் உடல், மனம் இரண்டிலும் நலிவுற்றார்.

அவர் தம் சொந்த நாட்டிற்கு வந்த பின்னரும் கவனிக்கப்படடமையால் இறக்க நேரிட்டது தேசத்திற்காக உழைக்கும் தேசபக்தர்களின் நன்மைகளைக் காங்கிரஸாவது கவனிக்குமா?

   பாரதியாரின் நூல்கள் எஞ்ஞான்றும் நிலைத்திருக்கும். அவர் தம் பந்துக்களில் யாரேனும் அவர் நூல்களைச் சேகரித்து வெளியிடுவாரா?

   தமிழர்களுக்கு ஆத்மா இருக்கும் வரை அவர்கள் சுப்பிரமணிய பாரதியின் அரிய சேவைகளை  மறக்க மாட்டார்கள்.

            -நவசக்தி

              4-11-1921   ஆசிரியர் திரு.வி.க

 

குமரி மலர் பத்திரிகையில் ஏ.கே. செட்டியார் வெளியிட்டு வந்த அரிய பாரதியாரின் கவிதை மற்றும் கட்டுரைகள் அவரின் தமிழ் பற்றையும் பாரதியார் பற்றையும் அறிவிப்பன. அத்துடன் பாரதியார் பற்றிப் பலரும் அந்தக் காலத்தில் பல்வேறு இதழ்களில் எழுதியிருந்த கட்டுரைகளையும் கூட அவர் தொகுத்து தன் குமரி மலரில் வெளியிட்ட வண்ணம் இருந்தார்.

இன்னும் பல கட்டுரைகளை அடுத்துக் காண்போம்.

இவை பாரதி இயலில் ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, பாரதியாரைப் பற்றி நன்கு அறிய விரும்பும் ஒவ்வொருவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

                         *****

 

 

‘Eyeless Needle’ Changed the Life of a Millionaire! (Post No.3508)

Compiled by London swaminathan

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  16-15

 

Post No.3508

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

Pattinathar was a rich man who lived in the port city Kaveri Poompattinam (also known as Pumpuhar) in the tenth century CE. He has not been included among the Sixty-Three Saiva Nayanmars, though five of his poems have been taken into the Eleventh Tirumurai.

 

A bright infant he was, left uncared for in a garden at Tiruvidaimarudur. It was picked by a poor couple who it to Pattinathar for reward. He took the child and reared it as his own son, naming him Marudapiran. Some years later the boy disappeared after asking his mother to handover a box to his father when he returned home. When Pattinathar opened, it he found an eyeless needle and a palm leaf on which a conundrum had been written.  This is said to have opened his eyes to the truth about the divine nature of the boy, who was thought to be God Shiva himself. He immediately arranged for the distribution of his wealth to the poor, renounced life and became an ascetic. He wandered far and wide visiting several sacred places and temples and finally attained salvation at Tiruvotriyur.

 

In the course of his pilgrimage he is reported to have visited the Tuluva country and converted a king of Bhadragiri to his creed of Yogic asceticism.

 

Commenting on the eyeless needle which brought a sea change in the life of Pattinathar A J Appasamy (in a book published by YMCA Publishing house nearly 100 years ago) says: “The eyeless needle, tradition maintains, was the means of Pattinathar’s conversion. It swiftly flashed across his mind that just as a needle without an eye is of no value., though the eye itself be the tiniest of things, so the human soul which does not devote itself to God, is lost. The little symbol brought home to him that great truth.

 

The word Pattinathar means “He of the City”. Pattinathar belonged to the mercantile clan. According to the tradition he was a Chettiar. A flourishing merchant, it is well known, will be greatly attached to his business and wealth. It takes a miracle to wean him away from these. And, a miracle did take pace, in his life. It pleased Lord Shiva to bring about his enlightenment in a flash “ All wealth is worthless, yes as worthless as an eyeless needle”. This knowledge made a new man of Pattinathar. He revelled in divine vagabondry. He sang

Our home is Tiruvalankadu; we have with us

A begging-bowl – God given- and never empty;

To supply as whatever we need, there is the rich land;

O goody heart, there is none our equal.

 

Visit to a Courtesan’s house

The great commentator Sivagnana Munivar says “Here is commanded the chanting of Panchakshara as ordained. Though for these souls the effulgence of Gnanam (wisdom) is vouchsafed, Nescience does its besetting, even as the worm accustomed to eating neem, forever repairs to it.” Lust besieged, out saint visited a courtesan. She took some time to present herself before him. Meanwhile, our saint quelled his sinful thought. When the woman eventually came, he burst into verse thus:

“O Peafowl-like woman adorned with the garlands

Of bourgeoning flowers, the one that just now

Quested for you, has gone away; compose yourself.

If you yearn for me I will kick you on your hips

And if I think of you, you kick me.

 

In the history of Tamil religious literature he has secured a niche which is proof against the tooth of time and razure oblivion.

 

Two Pattinathars?

It is said that there were two Pattinathars. The author of the hymns included in the Eleventh Tirumurai is the earlier of the two. A careful perusal of his poems establishes this fact indubitably. Pattinathar the second, if such a description can pass muster, is the author of the poems given below:

Kovil Tiru akaval, Kachi Tiru akaval, Tiruvekampamalai, The decad of Obsequies, Anatomical song.

 

Pattinathar refers to the eyeless needle episode his poems:

He tore a cloth of silk, placed there in with love

A thick needle, folded it and put it into the hand

Of my wife with rich tresses;

Did Siva by his advent intend that I should

Give up my love for my bewitching wife?

For ever hail the flower-feet of the strong-armed Lord

Of Annamalai, oh my heart!

In this world, of what avail are wealth

Tined with evil and the buries riches?

Even an eyeless needle accompanies you not

After you decease”.

 

AV Subramania Aiyar wrote the following in 1957 believing that there was one Pattinathar:

 

“A careful study of the very scanty materials about the life and works of Pattinathar shows that there are, broadly, two periods in his life after his final and sudden renunciation. Ther is a tradition that when he left his home he took with him a broken pot and a palm leaf manuscript of Tirumular’s poem. There is no doubt that he was greatly influenced by Tirumular’s Tirumantiram.  There was a significant change in the lives of both Sivavakkiyar (a Tamil Siddha) and Pattinathar at some crucial period in their lives.

 

There are some similarities and differences in the pomes of Sivavakkiyar and Pattinathar. Both have shown an excessive desire to extoll the virtues of unqualified asceticism and Yogic mysticism in language that can be understood by the masses. Their frequent and repeated scornful references to the physical facts of sex and the biological facts of birth are similar in tone, if not in language.

Pattinathar’s poems are happily free from the violent denunciations of idol worship, temples, rituals, caste, the Vedas, Agamas etc. which Sivavakkiyar indulges in.

 

Source Books:

St Pattinathar in English by Sekkizhar Adippodi T N Ramachandran, Dharmapura Adinam,1990

 

The Poetry and the Philosophy of THE TAMIL SIDDHAS, A V Subramania Aiyar, Tirunelveli, 1957

–Subham–

 

32 அறங்கள், 16 பேறுகள், 8 மங்களச் சின்னங்கள் (Post No. 3507)

Written by London swaminathan

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  9-27 am

 

Post No.3507

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பூங்கா வைத்து மலர்ச் செடிகளை வளர்த்தல், கோவிலில் நந்தவனம் அமைத்து பூஜைக்கு வேண்டிய மரம் செடி கொடிகளை வளர்த்தல். தல மரங்கள் என்ற பெயரில் பல்வேறு மரங்களுக்கு சிறப்பான இடம் தருதல், ஏழைகளுக்கு சத்திரம் அமைத்து உணவு கொடுத்தல், மருந்து கொடுத்தல், பிராணிகளுக்கு உணவும் நீரும் கிடைக்க ஏற்பாடு செய்தல் முதலிய ஏராளமான அறப் பணிகள் அந்தக் காலத்திலேயே நடைபெற்றன.

 

சிறைச்சாலைக் கைதிகளுக்கு உணவு கொடுத்தல் மேலை நாட்டிலும் இல்லாத ஒரு நூதன விஷயம். மன்னர்களின் பட்டாபிஷேகம், இளவரசர் பிறப்பு, திருமணம் ஆகிய காலங்களில் கைதிகளை மன்னித்து விடுதலை செய்தல் போன்ற பல அறப்பணிகள் நடந்துள்ளன. அறப்பணிகளுக்கான ஆதாரபூர்வ கல்வெட்டு அசோகர் சாசன காலத்திருந்து கிடைக்கின்றன. மஹாபாரத, ராமாயணம், அர்த்த சாத்திரம் முதலிய நூல்களிலும் கிடைக்கின்றன. மிகவும் நாகரீக முன்னேற்றம் உடைய ஒரு நாட்டில் மட்டுமே இத்தகைய சிந்தனைகள் எழும். சமூக சேவையில் பாரதம் உலகிற்கு வழிகாட்டியது என்று சொன்னால் மிகையில்லை

 

உவமான சங்ரகம் என்ற நூலில் எட்டு மங்கலச் சின்னங்கள் (அஷ்ட மங்கலம்), 16 பேறுகள், 32 அறங்கள் செய்யுள் வடிவில் உள்ளன.

செய்யுள் வடிவில் இருப்பதால் இரண்டு நன்மைகள்:- ஒன்று மனப்பாடம் செய்து நினைவில் வைப்பது எளிது. இரண்டாவது  இடைச்செருகலுக்கோ, மாற்றங்களுக்கோ வாய்ப்புகள் குறைவு.

 

 

1).வண்ணான் புன்னாவிதன் காதோலை சோலை மடந்தடம் வெண்

சுண்ணாம் பறவைப் பிணஞ்சுடற் றூரியஞ் சோறளித்தல்

கண்ணாடி யாவிற்குரிஞ்சுதல் வாயுறை கண்மருந்து

தண்ணீர் பந்தற் றலைக்கெண்ணை பெண்போகந் தரலையமே

 

2).மேதகுமாதுலர்க்குசாலை யேறுவிடுத்தல் கலை

யோதுவார்க் குண்டி விலங்கிற் குணவோடுயர்பிணிநோய்க்

கிதன் மருந்து சிறைச் சோறளித்தலியல் பிறரின்

மதுயற்காத்தநற்கந்நியர் தானம் வழங்கலுமே

 

3).கற்றவறுசமயத்தார்க் குணவு கருதும் விலை

உற்றதளித்துயிர் மீட்டல் சிறார்க்குதவனற்பான்

மற்று மகப்பெறுவித்தல் சிறாரை வளர்த்த்லெனப்

பெற்றவிவற்றினையெண்ணான்கறமெனப் பேசுவாரே

-உபமானசங்கிரஹம், இரத்தினச் சுருக்கம்

 

32 அறச் செயல்களின் பட்டியல்:-

1.ஆதுலர்க்குச் சாலை (ஏழைகள்=ஆதுலர்)

2.ஓதுவார்க்கு உணவு (மாணவர்களுக்கு)

3.அறுசமயத்தோர்க்கு உண்டி (உணவு)

4.பசுவிற்கு வாயுரை (உணவு)

5.சிறைக் கைதிகளுக்கு உணவு

6.ஐயமிட்டு உண் (பிச்சை போடுதல்)

7.திண்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் பொங்கல், வடை)

8.அறவைச் சோறு (அன்னதானம்)

9.மகப்பெறுவித்தல் (பிள்ளை பெறுதல்)

10.மகவு வளர்த்தல் (பிள்ளைகளை வளர்த்தல்)

11.மகப்பால் வார்த்தல் (அவர்களுக்கு பால் வழங்கல்)

 

12.அறவைப் பிணஞ்சுடல் (அனாதைகள் இறுதிச் சடங்கு)

13.அறவைத் தூரியம் ( தூரியம்=மேள வாத்தியம்

அளித்தல்)

14.சுண்ணம் அளித்தல்

15.நோய்க்கு மருந்து வழங்கல்

16.வண்ணார்

17.நாவிதர்

18.காதோலை

19.கண்ணாடி

20.கண்மருத்து

21.தலைக்கு எண்ணெய்

 

22.பெண்போகம்

23.பிறர்துயர் காத்தல்

24.தண்ணீர் பந்தல்

  1. மடம் அமைத்தல்

26.குளம் வெட்டல்

27.பூங்கா வைத்தல்

28.ஆவுறுஞ்சுதறி (பசு முதலிய பிராணிகளுக்கு நீர்)

29.விலங்கிற்குணவு

30.ஏறுவிடுத்தல் (இனப்பெருக்கத்த்துக்கு காளைகள்)

31.விலைகொடுத்துயிர்காத்தல்

32.கன்னிகாதானம்

 

எட்டு மங்களச் சின்னங்கள்

 

சாற்றுங்கவரி நிறைகுடந்தோட்டிமுன் றர்ப்பணமா

மேற்றிய தீபம் முர்சம் பதாகை யிணைக்கயலே

நாற்றிசை சூழ்புவி மீதஅட்ட நன்குழையின்

மேற்றிதழ் வேற்றடங்கட்செய்ய வாய்ப்பைம்பொன்ந்த் மெய்த்திருவே

 

கவரி, நிறைகுடம் (பூர்ணகும்பம்),  தோட்டி(அங்குசம்),  தர்ப்பணம் (கண்ணாடி), தீபம், முரசம், பதாகை (கொடி), இணைக்கயல் ( இரட்டை மீன்)– ஆகியன அட்டமங்கலம் எனப்படும்.

 

 

வேண்டுநற்சுற்ற மிராசாங்க மக்கள்மேவு பொன்ம ணி

யாண்டிடுந்தொண்டு நெல்வாகன மாமிவை யட்டசெல்வங்

காண்டவி சீதல் கால்கெழு நீரொடு முக்குடி

நீராண்டளித்  தேபுனலாட்டனல் லாடை யணிதல்பினே

 

நல் சுற்றம், ராஜாங்கம், பிள்ளைகள் தங்கம், அணிவதற்குரிய ஆடை, ஆளுதர்க்குரிய அடிமை, நெல் முதலிய தானியம், வாஹனம் – இவையே அட்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள் ) எனப்படும்.

 

16 பேறுகள்

 

பதினாறு பேறுகள் பற்றிய ஐந்து பாடல்களை ஏற்கனவே கொடுத்துள்ளேன். 16 பேறுகள்;

 

அழகு, வலிமை, இளமை, நன் மக்கள், நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிலம், பெண், தங்கம், அறிவு, உற்சாகம்,கல்வி, வெற்றி, புகழ், மரியாதை, தானியம் (உணவுப் பொருட்கள்).

 

ஐந்து கவிஞர்கள் பாடிய “பதினாறும் பெற்றுப் பெறுவாழ்வு வாழ்க”! –Posted on 2nd July 2014.

 

–subham–

 

 

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 25 (Post No. 3506)

Written by S NAGARAJAN

 

Date: 2 January 2017

 

Time uploaded in London:-  4-39 AM

 

Post No.3506

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 25

ச.நாகராஜன்

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 85 இந்த வருடம் பழமை வாய்ந்த 16 ஸ்தூபங்களும் புதுப்பிக்கப்பட்டதோடு அனைத்து புத்தர் சிலைகளும் புதுப்பிக்கப்பட்டன. ஷெங் – இன் மடாலயத்தில் புதிய வெங்கலச் சிலைகள் செய்யப்பட்டு பிரதான ஹாலில் நிறுவப்பட்ட்ன. களிமண்ணாலான  மூன்று சிலைகள் மேற்கு சுவர்க்கம் என்னும் தலத்தில் வைக்கப்பட்டன.

 

 

ஒழுக்க விதிகளை முதன் முதலில் பெற்ற சான் பிட்சு ஸூ ஸிங்கின் வாழ்க்கை வரலாறு மிக்க சுவையானது.

பிட்சு ரி-பியான் என்றும் அழைக்கப்பட்ட ஸு ஸிங் ஹூயிலி என்ற இடத்தைச் சேர்ந்தவர. இளம் வயதிலேயே அவர் அனாதையானார்.

செங் என்ற ஒருவர் அவரை அன்புடன அரவணைத்து ஆதரித்ததோடு தன் மகளையும் அவருக்கு  மணம் முடித்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. மிகவும் ஏழைகளாக அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

 

 

ஸு யுன் அவர் இருந்த மடாலயத்திற்கு வந்த போது எட்டுப் பேர் அடங்கிய அந்தக் குடும்பம் மடாலயத்தில் சேவை புரிந்து வந்தது. காக் ஃபுட் மவுண்டனுக்கு ஸு யுன் வந்த போது அவருக்கு வயது 20. ஸு ஸிங்கிற்கு பிரதான சூத்திரங்களை ஸு யுன் தந்தார்.

 

அவருக்கு 21 வயது ஆன போது அந்தக் குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேரும் சங்கத்தில் சேர்ந்தனர்.

ஸு ஸிங்கின் முகம் அவலட்சணமாக ஒன்று.  காது வேறு அவருக்குக் கேட்காது.. படிப்பறிவும் இல்லாதவர்.

 

 

தினமும் தோட்ட வேலை செய்தும் மாலை நேரத்தில் பிரார்த்தனை செய்தும் வந்த அவர் 1920இல்  ஸு யுன் யுன் – ஸி ஆலயத்தில் இருந்த போது அங்கு வந்து தோட்ட வேலை செய்யும் பணியை ஏற்றார்.

 

மூன்றாம் மாதம் 29ஆம் நாளன்று பகல் தியானத்தை முடித்துக் கொண்ட அவர் பிரதான ஹாலின் பின்பக்கம் உள்ள  முற்ற்த்திற்குச் சென்றார். அங்கு பிட்சுக்கான் ஆடையை அணிந்து கொண்டு  தியான நிலையில் மேற்குப் பக்கம் பார்த்து அமர்ந்தார். அவர் நா தொடர்ந்து புத்தரின் நாமத்தை உச்சரித்தது. பின்னர் ஒரு கையால் மணியை அடித்தும் இன்னொரு கையால் மர மீனால் அடித்துக் கொண்டும் வைக்கோல் போரில் தீயை மூட்டினார்.

 

 

 

அங்கு குழுமியிருந்த ஏராளமான பேருக்கு அப்போது என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் தீ ஜுவாலையின் பிரகாசத்தைக் கண்டு ம்டாலயத்தின் உள்ளே ஓடி வந்து அவர் அருகில் சென்ற போது அவரது உரு அமர்ந்த நிலையில் சாம்பலின் மீது இருந்தது. ஆனால் மணியின் பிடியும் மர மீனும் எரிந்திருந்தன.

உடனே இந்த விவரம் ஸு யுன்னுக்கு அறிவிக்கப்பட  அவர் போதிசதவரின் சடங்கில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாக மலையிலிருந்து கீழே இறங்க முடியாமலிருந்தது.

 

உரிய அதிகாரிகளுக்கு ஸு யுன் கடிதம் எழுதி அனுப்பினார். கவர்னர் டாங் உள்ளிட்ட அனைவரும் அசாதாரணமான இந்த நிகழ்வு பற்றி அறிந்து அதிசயித்தனர்.

 

 

அவரது கையில் இருந்த் மணி அகற்றப்பட்ட போது அவரது உடல் கீழே விழுந்து பிடி சாம்பலானது.

 

 

கவர்னார் டாங் மூன்று நாட்கள் நினைவு தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.  ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடி அஞ்சலி செலுத்தினர்.

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 86.

 

சான் தியான முறை ஒரு வாரம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு இருந்த ஏராளமான மரங்கள் அகற்றப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. உள்ளூர்  மக்களின் உதவியோடு மரங்கள் அகற்றப்பட்ட போது அந்த மரங்களில் பாதி மக்களுக்கே வழங்கப்பட்டது. அவர்கள்  மிகவும் மகிழ்ந்தனர்.

 

 

ஆட்சியிலோ கவர்னர் பதவி ஒழிக்கப்பட்டது. ஆகவே கவர்னர் டாங் ஓய்வு பெற்றார். அடிக்கடி மடாலயம் வந்து தங்கி தியானம் செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டார்.

வருடம் உருண்டு ஓடி முடிந்தது.

*********

 

.