Ignorance is the cause of Injustice (Post No.3254)

englishman

Written by London Swaminathan

 

Date: 15 October 2016

 

Time uploaded in London: 18-49

 

Post No.3254

 

Pictures are taken from various sources; thanks. (Picture is only representational)

 

Contact swami_48@yahoo.com

 

 

In Chennapattana, there lived an Englishman, who, did not know any of the Indian languages. He had an interpreter to help him whenever he met the native speakers.

 

One day some conjurors came to the parks to give a performance. The Englishman also attended the event and watched it with very great interest. He was very much impressed with the several feats of agility for his interpreter told highly of them. He told the interpreter to give them ten pagodas (gold coins). But the interpreter pocketed nine coins and gave them only one. As they thought this was a poor recompense and suspected that the interpreter had deceived them.  After the interpreter left, the leader of the group turned to the gentleman and showed him the Pagoda given to them and informed him that his interpreter had taken nine coins.

 

As the gentleman was ignorant of the language he sent for the interpreter and asked him what they were saying. He told him that among the ten pagodas, he had given them, that one coin was a bad one and they wanted a better one in exchange for it. The Englishman, thereupon became very much enraged and ordered his servants to thrash them and send them away. They, who were ignorant of the vernaculars of the country they inhabit, believe what others tell them.

Ignorance is the cause of injustice.

–Story from 100 year old book, retold by London Swaminathan.

பிள்ளையார் விளையாடிய கால்பந்து! கைப்பந்து! (Post No.3253)

img_8871

Written by London Swaminathan

 

Date: 15 October 2016

 

Time uploaded in London: 8-16 AM

 

Post No.3253

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

ராவணனைப் பிள்ளையார் பந்தாடிய கதை,  கணேச புராணத்தில், மிகவும் சுவைபடச் சொல்லப்பட்டிருக்கிறது.

 

கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான் ராவணன். அவன் தியானத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு முன் காட்சி தந்தார். நினக்கு வேண்டியவைகளைக் கேள் என்றார். அடியேன் வாழும் இலங்கையும் நானும் அபசயம் அடையா வண்ணம் அருள் புரிய வேண்டும் என்றனன். இவன் மொழிகேட்ட கருணை வள்ளல், அவன் கையில் ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்து, இதனை அருமையுடன் ஆராதித்து வா. ஆனால் ஆசாரத்தின் பொருட்டு இவைகளை வாஹனாதிகளில் ஏற்றாமலும், கீழே வையாமலும் எடுத்துச் செல் என்றார் இப்படி ஆசார அனுட்டானத்துடன் கொண்டு சென்று இலங்கையில் தாபித்தால் நீயும் அழிய மட்டாய், இலங்கையும் அழியாது என்றார். எங்கேனும் கீழே வைத்தால் லிங்கத்தை எடுக்க முடியாது அது அங்கேயே தாபிதமாகிவிடும் என்றும் கருணை வள்ளலான சிவ பெருமான் மொழிந்தார்.

 

உடனே ராவணன் அந்தச் சிவலிங்கத்தினை கையில் ஏந்தி தெற்கு நோக்கி நடந்து வந்தனன். இதைத் தேவர்கள் கண்டனர். நடு நடுங்கினர். இந்த ஆள் ஏற்கனவே நமக்குச் சொல்லொணாத் துய ரம் தருகின்றனன். இந்த லிங்கம் ராவணனின் தலைநகருக்குச் செல்லாமல் தடுப்பது எங்கனம் என்று ஆலோசித்தனர். இவன் இலங்கைக்கு இதைக் கொண்டு சென்றால் நமக்கு எல்லாம் முன்னை விட அதிக உபத்திரவம் செய்வான் என்று அஞ்சினர்.

 

முழுமுதற் கடவுளான விநாயகனை வேண்டி வழி காணுவோம் என்று விரைந்தோடினர். அவர்களைப் புன்சிரிப்புடன் வரவேற்றார் கணேசப் பெருமான். பெருமானே! மகா துஷ்டனான ராவ ணன் ஒரு சக்திவாய்ந்த லிங்கத்தினை இலங்கையில் பிரதிட்டி செய்ய விரைந்து செல்லுகிறான. அவனைத் தடுத்து நிறுத்தி இலங்கைக்கு அந்த லிங்கம் போகா வண் ணம் அருள்பாலிக்க வேண்டும் இதுவே எங்கள் விக்ஞாபனம் (appeal) என்றனர்.

 

உடனே பிள்ளையார் வருணனை அழைத்தார். நீ உடனே சென்று ராவணனின் உதரத்தில் (stomach) புகுந்து சலோபாதியை (மல, மூத்ர விசர்ஜன நெருக்கடி Nature’s call) உண்டாக்ககடவை. யாம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அவன் உதரத்தில் இருக்கவும் (உதரம்=வயிறு) என்றார். வருணனும் அவ்வாறே செய்தான். இதற்கிடையில் தேவர்களும் கண்டு வியக்கும் வண் ணம், விநாயகப் பெருமானும் ஒரு அழகிய பார்ப்பனச் சிறுவன் வடிவம் கொண்டு ராவணனைப் பின் தொடர்ந்தார்.

ravana-3ht

 

ராவணன், காலைக் கடன் முடிக்கும் நெருக்கடிக்குள்ளானான்.; யாராவது ஆள் கிடைத்தால் அவன் தலையில் சிவலிங்கத்தை வைத்துவிட்டு குளத்தையோ ஏரிக் கரையையோ நோக்கி ஓடலாமே என்று வெண்ணிச் சுற்றிப் பார்க்கையில் விநாயகப் பெருமான் முஞ்சிப் புல்லரைஞாணும், முன் கையிலேந்திய தண்டமுமாக, ஒரு பிரம்மாச்சரியைப் போல ராவணன் முன் தோன்றினார்.

 

பையா! நீ தூய்மை உடைய பிரம்மச்சாரியாகக் காணப்படுகிறாய். நான் சலமோசனம் செய்துவருங்காறு இச் சிவலிங்கத்தினை நீ வைத்திரு. ஸ்நான முதலிய சுசி (சுத்தம்) இலாதவர் இதைத் தொடப்படாது; தரையிலும் வைக்கப்படாது என்றனன்.

பிள்ளையாரும், அதற்கென்ன, பேஷாய்ச் செய்கிறேன். ஆனால் நேரம் தாழ்த்தக் கூடாது; நான் நேரம் ஆகிவிட்டால் மூன்று முறை விளிப்பேன். அதற்குள் வராவிடில், வாங்கிக் கொள்ளாவிடில் கீழே வைத்துவிடுவேன் என்றார். ராவணன் , இதோ ஒரு நொடியில் திரும்புவேன் என்று சொல்லி ஓடினன். ஆனால் அவன் வயிற்றுக்குள் இருந்து வருணன் குடைந்த குடைவில் நேரம் போனதே தெரியவில்லை. விநாயகரும் முன்று முறை விளித்துவிட்டு சிவலிங்கத்தினை சுத்தமான தரையில் வைத்துவிட்டார். அதற்குப் பின் ராவணன் வயிற்றில் இருந்த வருணன், தன்னிடம் போய்ச் சேர்ந்தார்.

 

ராவணன் திரும்பி வந்தான் பிரம்மச்சாரி கையில் (விநாயகன்) சிவலிங்கம் இல்லாமை கண்டு திகைத்தான்; பதறினான். சிவலிங்கம் எங்கேடா? என்றான். அதற்கு அந்தப் பையன் நானோ துர்பலனுள்ள சிறுவன்; நெடுநேரம் ஆகியும் நீர் வராததால்  உன்னை மூன்று முறை கூப்பிட்டேன். அப்படியும் உம்மைக் காணமாட்டோமாய் அந்த இடத்தில் வைத்துவிட்டேன். நீவீர் அதை எடுத்துக்கொண்டு போம் என்றான்.

ravana6

ராவணனுக்கு ஒரே கோபம்; விழிகளை  உருட்டினான்; பிள்ளையாரை மிரட்டினான்; அதட்டினான்

அவசர புத்திக்காரனே!  இன்னும் சிறிது நேரம் பொறுக்கப்படதா? என்று சொல்லிக்கொண்டே கயிலை மலையையே பெயர்த்தெடுத்த எனக்கு இந்த சின்ன சிவலிங்கம் ஒரு பொருட்டா? என்று எண்ணி அதைத் தூக்க முயற்சித்தான். அதுவோ பாதாள ம் ஏழினும் கீழே படந்து வேரூன்றிவிட்டதனை அறியான். அதை பலம் கொண்ட மட்டும் இழுத்தான். ஒரு பக்கம் மட்டும் பசுவின் காதினைப் போல இழுபட்டு உருக்கொண்டது. ஆயினும் அது இருந்த இடத்தைவிட்டு அகலவில்லை. அந்த இடத்திலேயே அதை விட்டுச் சென்றான் இன்று வரை அந்த இடம் கோகர்ணம் (பசுவின் காது) என்றே அழைக் கப்படுகிறது. சிவனுக்கு மஹாபலநாதன்  என்ற பெயர் ஏற்பட்டது.

 

 

பிரம்மச்சாரி சிறுவனைப் பர்ர்த்து (பிள்ளையாரைப் பார்த்து) அடா! உன்னாலன்றோ இக்கேடு உண்டாயிற்று, என்று சொல்லி அவன் தலையில் குட்டவே, விநாயகப் பெருமான் சுயரூபம்  கொண்டார். யானை முகத்துடன் தோன்றி துதிக்கையினால் அவனைப் பிடித்து கறகரவென்றுசுழற்றி விண்ணுலக பரியந்தம் செல்லுமாறு தூக்கி வீசினார். அவன் மேலே சென்று தலை கீழாக கீழே விழுகையில் அவனைப் பிடித்து மீண்டும் தூக்கி எறிந்தார். இவ்வாறு அநேக முறை பிள்ளையார் அவனைப் பந்தாடினார். ராவணனுக்கு மூச்சு முட்டியது. என்னை மன்னிக்க வேண்டும், என்று பலமுறை சொல்லிக் கதறினான்.

 

உடனே விநாயகப் பெருமான் பந்தாடுதலை நிறுத்தி அவனை பூமியில் நிறுத்தினார். ராவணன் நடுநடுங்கி, விநாயப் பெருமானை துதித்தார். தவற்றுக்காக நெற்றியை பலமுறை நிலத்தில் மோதி மன்னிப்பு கேட்டார். அவரும் களி கூர்ந்து நின்னை மன்னித்தனம் நீ இப்போது குட்டிக்கொண்டது போல யார் குட்டிக் கொள்கிறாரோ அவர் குறைகளை எல்லாம் போக்குவன் என்றும் சொன்னார்.இதை கணேசப் புராணச் செய்யுளால் அறிக:

img_8724

மெல்லிய ஆக்கை யேனான் விழுச் சிவலிங்கந் தாங்கும்

வல்லமை   யுடையேனல்லேன் வலிதினீதருதிதந்தா

னல்லதே முக்காற்கூவ நண்ணிடாயாயின் மண்மேற்

செல்லுற விடுப்பனென் றான்றேவர் கடேவதேவன்

 

குட்டலும் மறைச் சிறான் போற்குறுகிய நாதன் வலே

யட்டும் மும்மத மாலயானை யானனாகி விண்ணின்

முட்டவொள்ளொளி கான்மோலி முதிர்ந்தபேருருவு கொண்டு

சட்டவல்லரக்கன் றன்னைத் தடக்கைப் பந்தாடினானே.

 

img_8881

விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்! (Post No.3252)

ag-7_space_pen

Written by S. NAGARAJAN

Date: 15 October 2016

Time uploaded in London: 5-43 AM

Post No.3252

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

பாக்யா 7-10-2016 இதழில் அறிவியல் துளிகள் பகுதியில் (அத்தியாயம் 296) வெளியாகியுள்ள கட்டுரை

 

விண்வெளி பேனா பற்றிய ஜோக்கும் உண்மையும்!

.நாகராஜன்

 

 fisher-space-pen

சந்திரனில் இருக்கும் ஒரு மனிதன் தன் நினைவுக் குறிப்புகளை எழுத விரும்பினால் அவன் ஃபிஷர் பேனாவைத் தான் எடுத்து எழுத ஆரம்பிப்பான்!                                                                                 

                                     – ஃபிஷர் பென் கம்பெனி 

 

 

விண்வெளியில் விண்வெளி வீரர் எழுதுவதற்கான பேனா ஒன்றை உருவாக்க நாஸா பல லட்சம் டாலர்கள் செலவழித்ததாகவும் இந்தப் பிரச்சினையை ரஷியா, விண்வெளி வீரருக்கு ஒரு பென்சிலைக் கொடுத்து எழுத வைத்து செலவே இல்லாமல் சமாளித்ததாகவும் ஒரு ஜோக் உண்டு.

 

(பாக்யாவில் ‘விண்வெளியில் மனித சாதனைகள் தொடரில் 85   மற்றும் 86ஆம் அத்தியாயங்களில் 23-6-2006, 30-6-2006 இதழ்களில் இது பற்றிப் படித்ததையும் இந்தச் சம்பவம் புகழ் பெற்ற ஒரு தமிழ் திரைப்படத்திலும் இடம் பெற்று விட்டதையும் இங்கு வாசகர்கள் நினைவு கூரலாம்!)

 

காலம் காலமாகச் சொல்லப்பட்டு வரும் இந்த ஜோக் பற்றிய உண்மை என்ன? இதற்கு ஒரு ஆய்வே நடந்து விட்டது!

ஆரம்ப காலத்தில் விண்வெளியில் வீரர்கள் பயணப்பட்ட போது ஜீரோ கிராவிடியில் பால் பாயிண்ட் பேனாவை வைத்து அவர்களால் எழுத முடியவில்லை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாஸா விஞ்ஞானிகள் பத்தாண்டுகள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கினர். சுமார் 12 பில்லியன் டாலர்கள் (1200 கோடி டாலர்கள்) செலவழித்து, தலைகீழாக இருந்த போதிலும் எழுதக் கூடிய பேனா கண்டு பிடிக்கப்பட்டது. இந்தப் பேனா கண்ணாடி உட்பட்ட எந்த பரப்பிலும் எழுத வல்லது!

 

 

உறைபனி என்ற நிலையிலிருந்து மிக மிக வெப்பமான 300 டிகிரி செல்ஸியஸ் என்ற உஷ்ணநிலையிலும் இது எழுத வல்லது.

ரஷியர்களோ விண்கலங்களில் பென்சிலை உபயோகித்தனர்.

அமெரிக்கர்களின் வரிப் பணம் தண்டமாகச் செலவழிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாக ஜோக் எழுந்தது – உங்கள் வரியைத் தவறாமல் கட்டி விடுங்கள். அதைச் செலுத்துவதில் சந்தோஷப்படுங்கள் என்று!

 

உண்மையில் ரஷிய மற்றும் அமெரிக்க விண்வெளிவீரர்கள் முதலில் பென்சிலையே உபயோகப்படுத்தி வந்தனர்.

ஆனால் பென்சில்கள் தீப்பிடித்து எரியக் கூடிய தனமை வாய்ந்தது. பாதுகாப்பானது அல்ல. அத்தோடு அதன் முனை உடைந்தால் அது விண்வெளி வீரர்களுக்கு பேராபத்தை விண்கலத்தில் ஏற்படக் கூடும்.  மேலும் 1967இல் அபல்லோ 1 விண்கலம் தீ விபத்துக்குள்ளானது ஆகவே நாஸா இப்படிப்பட்ட ஆபத்தான தீப்பிடிக்கக் கூடிய தன்மை வாய்ந்த பென்சிலைத் தவிர்க்க எண்ணியது.

 

ஆனால் இந்தப் பேனாவை நாஸா உருவாக்கவில்லை. இதைத் தாமாகவே ஃபிஷர் பென் கம்பெனியைச் சேர்ந்த பால் சி.ஃபிஷர்  தனது சொந்தப் பணத்தைச் செலவழித்து உருவாக்க முன் வந்தார். ஆண்டி கிராவிடி ஸ்பேஸ் பென் எனப்படும் ஏ.ஜி 7 பேனாவை அவர் உருவாக்கினார்.

 

இந்தப் பேனா உலோகத்தினால் உருவாக்கப்பட்டது 200 டிகிரி செல்ஸியஸ் வரை தாக்குப் பிடிக்கக் கூடியது. அது வரை பேனாவில் உள்ள மை எரியாது.

 bg4-s_nix_box_stylus_front_700

இந்தப் பேனாவை நாஸா விண்வெளியில் பயன்படுத்தி சோதனை செய்த சில பேனாக்களை வாங்கியது. அபல்லோ 1 தீ விபத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் இறந்ததால், நூறு சதவிகித ஆக்ஸிஜன் இருக்கும் சூழ்நிலையிலும் கூட எரியாத பேனா ஒன்றை நாஸா விரும்பியது

அப்படிப்பட்ட ஸ்பேஸ் பேனா காற்றில்லாத வெற்றிட சூழ்நிலையிலும் எழுத வேண்டும், ஈர்ப்பு விசை இல்லாத நிலையில் எழுதவும் வேண்டும், ப்ளஸ் 150 டிகிரியிலிருந்து மைனஸ் 120 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்ப நிலை மாறுபாட்டிலும் அது செயல்பட வேண்டும்.

 

பத்து லட்சம் டாலர்கள் செலவழித்து முதல் பேனா உருவாக்கப்பட்டது. அதை ஃபிஷர் நாஸாவில் ஹூஸ்டன் ஸ்பேஸ் மையத்தில் இருந்த மேலாளரான டாக்டர் ராபர்ட் கில்ருத்துக்கு அனுப்பினார். அவர் அதைச் சோதனை செய்த பின்னர் நாஸா 400 பேனாக்களை பேனா ஒன்றுக்கு  4 டாலர் என்ற விலையை நிர்ணயித்து வாங்கியது. இந்தப் பேனாவிற்கு அது டேடா ரிகார்டிங் பென் (data recording pen)  என்ற பெயரைத் தந்தது..

 

சாதாரண காரீய பென்சில்கள் மெர்குரி மற்றும் ஜெமினி விண்கலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதே போல ரஷியர்கள் தங்கள் விண்கலங்களிலும் இதே பென்சிலையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் விண்வெளிப் பயணங்கள் விரிவு பட்டு பாதுகாப்பு முதலிடத்தைப் பெற்று உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் ஃபிஷர் பேனாக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

 

இந்தப் பேனாக்களே சந்திரனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஃபிஷர் விண்கலப் பேனாக்களை உருவாக்குவதற்காகவே தனியாக ‘ஸ்பேஸ் பென் கம்பெனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். அதில் இன்றும் விண்கலப் பேனாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

 

ஃபிஷர் பேனா பற்றிய உண்மை டிவி காட்சிகளில் சொல்லப்பட்டாலும் விண்வெளி பேனா ஜோக் சொல்வதற்கு அருமையான ஒன்றாக அமைந்து விட்டது. மாற்றி யோசிப்பதற்கு நாடகபாணியில் உதாரணமாகச் சொல்ல  நல்ல ஜோக்காக இது இன்றும் சொல்லப்பட்டு வருகிறது. நாமும் கேட்டு மகிழ்கிறோம்.

 rw-wood

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..  

ஆர்.டபிள்யூ. உட் (R.W.Wood)  அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி. (தோற்றம் 2-5-1868 மறைவு 11-8-1965) அவர் புதுப் புதுக் கருவிகளைச் செய்து மகிழ்வது வழக்கம். ஒரு  முறை அவர் பிரம்மாண்டமான ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கேமரா ஒன்றைச் செய்ய விரும்பினார். அப்படியே 42 அடி நீளமும் ஆறு அங்குல குறுக்குளவும் கொண்ட ஒரு குழாய் அமைப்பை வைத்து பெரிய கேமராவை வடிவமைத்துச் செய்தார். அதில் ஒரு பக்கம் சிறியதாக ஒரு பிளவும் இன்னொரு பக்கம் ஒளிவிலகல் கொண்ட அமைப்பையும் செய்தார். லாங் ஐலேண்டில் இருந்த கோடை காலப் பண்ணை வீட்டில் அவரது பசு மாட்டுத் தொழுவத்தில் அதை நிறுவினார். வசந்த காலம் வந்தது. ஒரு நாள் தன் வீட்டிற்கு வந்து ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் கேமராவைப் பார்த்த அவர் திடுக்கிட்டார். நிண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்ததால் குழாய் முழுவதும் சிலந்திகள் வலைகளைப் பின்னியிருந்தன. இதை எப்படி சுத்தப்படுத்துவது என்றே அவருக்குப் புரியவில்லை. கடைசியாக அவருக்கு  ஒரு யோசனை உதித்தது. குழாயைத் தன் வீட்டின் முற்றத்திற்குக் கொண்டு போனார். அங்கு அவரது செல்லமான குட்டிப் பூனை இருந்தது. அதை அரட்டி உருட்டி அந்தக் குழாயின் ஒரு பக்கத்தில் நுழைய வைத்தார். இன்னொரு முனையில் பூனைக்கு மிகவும் பிடித்தமான மீனை மாட்டி வைத்தார். அவ்வளவு தான், சில வினாடிகளிலேயே பூனை அடுத்த பக்கம் வந்து மீனைக் கவ்வியது. குழாய் நெடுகிலும் இருந்த சிலந்தி வலைகள் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன.

தனது யோசனை பலித்ததைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.

பூனையும் தான் மகிழ்ந்தது. கஷ்டப்பட்டு குழாய்க்குள் ‘பயணப்பட்டாலும்’ மீன் கிடைத்ததே!

********

ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்! (Post No.3249)

 

time-health

Written by S. NAGARAJAN


Date: 14 October 2016

Time uploaded in London: 6-16 AM

Post No.3249

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

 

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் அக்டோபர்,2016  இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஆரோக்கியமாக நீடித்து வாழ எட்டு எளிய வழிகள்!

BY ச.நாகராஜன்

healthy-living-1

 

அமெரிக்காவில் மட்டுமல்ல, பொதுவாக உலகில் எல்லா நாடுகளிலுமே இப்போது நீடித்த ஆயுளைக் கொண்டு வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது!

என்றாலும் கூட வயதான போது நீடித்த வியாதிகளினால் பலரும் அவஸ்தைப் படுகின்றனர்.

 

இதைப் போக்க முடியுமா? முடியும் என்கிறது அறிவியல்.

ஆரோக்கியமாக, நீடித்த நாட்கள் வாழ எட்டு எளிய வழிகள் உள்ளன.

 

 

அவையாவன:

  • அறுபது வயது ஆயிற்றே, எழுபது வயது ஆயிற்றே என்று நினைக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஆரம்பிக்க இன்றைய நாளும் நல்ல நாள் தான் என்று நினைக்க வேண்டும். தாமதப்படுத்த வேண்டாம். உடனே ஆரம்பிக்கலாம் நல்ல வாழ்க்கை முறையை! வயதாகும் போது உடல் ரீதியாக சில மாற்றங்கள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால் அவை வியாதியைத் தருபவை என்று அர்த்தமுமில்லை, உடல் இயக்கத்தைத் தடுப்பவை என்றும் அர்த்தமில்லை. ஆக வாழ்க்கை முறை மாற்றத்தை இன்றிலிருந்தே தொடங்கலாம்.

 

  • உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிக்க வேண்டுமெனில் உலகெங்குமுள்ள அனைத்து நிபுணர்களும் ஒரே குரலில் ஓங்கிச் சொல்வது உடற்பயிற்சி செய்யுங்கள் என்பதைத் தான்! ஹூஸ்டனில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக மெடிகல் ஸ்கூலில் பணியாற்றும் கார்மல் பி.டையர்,” எனக்குத் தெரிந்து எழுபது வயதானவர்களில் ஏராளமானோர் உடற்பயிற்சியை மேற்கொண்டு அற்புதமான ஆரோக்கியத்தை அனுபவித்து வருகின்றனர்” என்கிறார். மஸில் மாஸ் (Muscle Mass ) கூடும் போது மருந்துகள் ஒரு இளவயதுக்காரரின் உடலில் என்ன வேலை செய்கிறதோ அதைச் செய்கிறது. அதாவது மருந்துகள் உரிய முறையில் உடலிலிருந்து எளிதாக அகற்றப்படுகின்றன. அத்துடன மட்டுமின்றி உடல் இயக்கம் மறதி நோயை வராமல் தடுக்கிறது. நடைப்பயிற்சி, தோட்ட வேலை செய்தல், அல்லது உடல் இயக்கத்தைத் தூண்டும் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துச் செய்யலாம்.

 

  • .தினமும் ஸ்ட்ரெட்சிங் எனப்படும் நீட்சி (Stretching) தேவை என்கிறார் டையர். செயலற்ற நிலையில் உங்கள் தசைகள் சுருங்குவதோடு விரைத்தும் போகின்றன. யோகா போன்றவற்றை மேற்கொண்டால் அது நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றது.

“ஐந்து நிமிடம் தானே, என்ன செய்யப் போகிறது என்று நினைக்காமல் செய்தால், அது வயதான காலத்தில் நம்ப முடியாத அளவு நன்மையைத் தருகிறது” என்கிறார் டையர்.

மூட்டுவலி போன்ற எண்ணற்ற நோய்களுக்கு நிவாரணம் யோகா தான்! தியானம், சுவாச முறை, சமச்சீரையும் வலிமையையும் தரும் ஆசனங்கள் என யோகா தரும் அனைத்துமே உடலுக்கு ந்ன்மை பயப்பவையே

healthy-living-3

 

  • உடலின் எடையைச் சீராகப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒன்று.உடல் பயிற்சி, சரியான திட்டமிட்ட உணவு முறையை மேற்கொள்வது, ஆகியவை பல்வேறு நன்மைகளைத் தருவதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

“உங்கள் எடையைக் குறைவாகவே வைத்துக் கொண்டால் டயாபடீஸ் வரும் அபாயம் தவிர்க்கப்படுகிறது. மூட்டுவலியும் வராது. ஒரு நாளைக்கு ஐந்து கோப்பை அளவு பழச்சாறு அல்லது கறிகாய்கள் சாப்பிடும் ஒருவருக்கு இரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இதய நோய்கள் வருவதில்லை. கான்ஸர் அபாயம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. நோய் எதிர்க்கும் சக்தியை உடல் அதிகமாகக் கொள்கிறது” என்கிறார் வாஷிங்டனில் உள்ள உணவுத் திட்ட நிபுணரான டெய்ல்மெட்ஜ்

 

 

  • நோய் வராமல் இருக்கச் செய்யும் தடுப்பு முறைகள் பல உண்டு. ஆண்டொன்றுக்கு ஒரு முறை மார்பகத்தை சோதனை செய்து கொள்வது பெண்களுக்கு நல்லது. ஃப்ளூ தடுப்ப்பூசி போன்றவற்றைப் போட்டுக் கொள்ளலாம். கான்ஸர், இதய நோய் வராமல் இருக்கிறதா என்பதற்கான டெஸ்டுகளையும் செய்து கொள்ளலாம். நோய்களின் அறிகுறிகளான அதிக இரத்த அழுத்தம், டயாபடீஸின் ஆரம்ப நிலைகள் ஆகியவற்றின் மீது ஒரு கண் இருக்க வேண்டும். உடல் இயக்கம் சீராக இருந்தால் மூட்டுவலி போன்றவை வராது என்பதை உணர்ந்து இயக்கங்கள் சரியாக உள்ளனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்

 

 

  • மத உணர்வு நல்ல ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஆலயத்திற்குச் செல்வது நிம்மதியையும் நீண்ட ஆயுளையும் தருவதை ஒரு ஆய்வு உறுதி செய்துள்ளது. மன அழுத்தத்தைப் போக்குவதற்கு மத சம்பந்தமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது முக்கியம். மதச் சடங்குகள், விழாக்கள் வாழ்வை தைரியத்துடன் எதிர்நோக்க உதவி செய்கிறது.

2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரம் பேரை ஆராய்ந்தது. அதில் தைரியத்துடன் வாழ்வை எதிர்நோக்கியோர் 55 சதவிகிதம் இறப்பைத் தள்ளிப் போடுகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு 23 சதவிகிதம் இதய நோய்த் தாக்குதல் குறைவாக அவர்களுக்கு இருப்பதும் தெரிய வந்தது!

 

%e0%ae%a4%e0%af%87%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

  • மற்றவர்களுக்கு உதவும் சேவை மனப்பான்மை பற்றி மிச்சிகன் பல்கலைக் கழகம் 10317 பேர்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வை நடத்தியது.1957லிருந்து 2004ஆம் ஆண்டு முடிய தன்னார்வத் தொண்டு செய்து வருபவர்கள் இவர்கள்.

அவர்களில் பலர் சேவை செய்யும் போது சொந்தத் துன்பங்கள் மறைந்து போகின்றன என்பதைத் தெரிவித்தனர். பலனை எதிர்பார்க்காமல் உதவும் தன்னார்வத் தொண்டர்களின் வாழ்வு நீடிப்பதையும் ஆய்வு உறுதி செய்தது.

 

 

  • நடுத்தர வயது உள்ள பெண்மணிகள் ஆல்கஹால் அருந்துவதைப் பற்றி ஆராய்ந்ததில் எப்போதேனும் ஒரு முறை ஆல்கஹாலை உட்கொள்பவர்கள் சீரான உடல்நிலை கொண்டிருப்பதை நர்ஸஸ் ஹெல்த் ஸ்டடி ஒன்று தெரிவிக்கிறது. தேவையற்ற தீய பழக்கங்களை மன உறுதியுடன் வெட்டி விடுங்கள்!

ஒரு நல்ல ஆரோக்கியமான வாழ்வு என்பது தான் என்ன? நீடித்த வியாதிகள் எதுவும் இருக்கக் கூடாது. முக்கியமாக இதய நோய்கள், டயாபடீஸ், கான்ஸர் போன்றவை வரக் கூடாது. மனத்தளவில் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். இவையே வெற்றிகரமாக முதுமை அடைவதைக் குறிக்கிறது.

%e0%ae%b5%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d

************ நன்றி: ஹெல்த் ஸயின்ஸ்

 

மரங்களை அலங்கரித்த மங்கையர்: கம்பன் தரும் அதிசயத்தகவல் (Post No.3248)

img_4055

Written by London Swaminathan

 

Date: 13 October 2016

 

Time uploaded in London: 20-36

 

Post No.3248

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

முல்லைக்கு தேர் ஈந்த பாரி வள்ளலை நாம் அறிவோம். ஒரு முல்லைக் கொடி காற்றில், கொழு கொம்பு இல்லாமல் தத்தளிக்கிறதே என்று வருந்தி தனது தேரையே ஒரு முல்லைக் கொடிககு அளித்தான் தமிழ் மன்னன் பாரி.

 

இதூபோல உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலம் நாடகத்தில் கானகத்தில் வளர்ந்த, சகுந்தலை என்ற பெண், செடிகொடி களுக்குத் தண்ணீர் விட்டுவிட்டு அந்த நீரை பறவைகள் அருந்துவதைப் பார்த்துவிட்டுத்தான் சாப்பிடப்போவாள் என்றும் எல்லாப் ண்களுக்கும் உள்ள பூச்சூடும் ஆர்வம் அவளுக்கு இருந்தாலும் பூவைப் பறித்தால் அதன் அழகு போய்விடுமே என்று எண்ணி பூவைக்கூட செடியிலிருந்து பறிக்க மாட்டாள் என்றும் காளிதாசன் பாடுகிறான். அது மட்டுமல்ல பூங்கொடிகள் முதல் முதலில் பூத்த நாள ன்று சகுந்தலை ஒரு விழாக் கொண்டாடினாள் என்றும் காளிதாசன் பாடுகிறான்,(அபிக்ஞான சாகுந்தலம், நாடகம் அங்கம் 4)

 

நம்முடைய கிராமப்புறங்களில் பல மரங்களில், குழந்தை பிறக்காதவர்கள் தொட்டில் போன்ற பொம்மைகளைத் தொங்கவிடுவர். இன்னும் சிலர் தனது துணிமணிகளிலிருந்து நூல் அல்லது, கந்தைகளைக் கிழித்து தொங்கவிடுவர். இது போல மேலை நாடுகளிலும் அந்தக் காலத்தில் வழக்கம் இருந்தது. இப்போது பார்ப்பது அரிது. இது எல்லாம் பிரதி பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்கள். .ஆனால் சகுந்தலையும் பாரியும் பிரதிபலன் எதிர்பாராமல் தாவரங்களையும் தன்னுயிராகக் கருதினர். இது போல செடிகொடிகளை சகோதரியாகக் கருதிய பாடல் சங்க இலக்கியத்திலும் இருப்பதை முன்னரே காட்டிவிட்டேன்.

img_4033

கம்பன் தரும் ஒரு அரிய தகவல்– மரங்களை பெண்கள் அலங்கரித்த செயல் பற்றியது!

 

கம்ப ராமாயணம், பால காண்டத்தில் வரும் பாடல் இதோ:-

பூ எலாம் கொய்து கொள்ளப் பொலிவு இல துவள நோக்கி

யாவை ஆம் கணவர் கண்ணுக்கு அழகு இல இவை என்று எண்ணி

கோவையும் வடமும் நாணும் குழைகளும் குழையப் பூட்டி

பாவையர் பனிமென் கொம்பை நோக்கினர் புரிந்து நிற்பார்

 

பொருள்:-

பூங்கொடிகளில் உள்ள மலர்களை எல்லாம் பெண்கள் பறித்துவிட்டனர். அடக் கடவுளே! நம் கணவன்மார்கள் வந்தபோது இந்தச் செடிகள் மொட்டையாக நின்றால் அழகாய் இராதே என்று எண்ணி தாம் அணிந்திருந்த முத்துமாலை, இரத்தின மாலை, தங்க வடங்கள், காதணிகள் எல்லா வற்றையும் கொடிகளுக்கும் செடிகளுக்கும் சூட்டி அவை அந்தக் கனத்தில் தாழத் துவங்கினவாம். பிறகு அந்தப் புதுப்பொலிவுபெற்ற செடிகொடிகளைக் கண்டு மகிழ்ந்தனராம்.

 

தாவரங்களின் மீது என்னே அன்பு. மேல நாடுகளில் நாய்களுக்கும் பூனைகளுக்கும் சட்டை, செருப்பு போட்டு மகிழும் மக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் செடிகொடிகளுக்கு ஆபரணங்களைப் போட்டு அழகு பார்த்தது நம் நாட்டில்தான். அதுவும் கம்பன் மட்டுமே தரும் தகவல் இது!

img_4063

வாழ்க செடி கொடிகள்: வளர்க மரங்கள்!!

 

 

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்! (Post No.3246)

7books

Written by S. NAGARAJAN

Date: 13 October 2016

Time uploaded in London: 6-11 AM

Post No.3246

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

ஹிந்துக்களின் மறுபிறப்புக் கொள்கை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருக்குறளில் மறுபிறப்பு பற்றி கூறப்படுவதை ஆய்வு செய்கிறது இந்தக் கட்டுரை

திருக்குறளில் மறுபிறப்புத் தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

valluvar-4

கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமிய மதங்களிலிருந்து ஹிந்து மதத்தைப் பிரித்துக் காட்டும் சிறப்பியல்புகளில் முக்கியமான் ஒன்று மறு பிறப்பு தத்துவம்.

இதர மதங்கள் ஒரே ஒரு பிறப்பு தான் மனிதனுக்கு உண்டு என்றும் அதில் ஒன்று உய்ய வேண்டும் அல்லது எடர்னல் ஹெல்லில் (Eternal Hell) முடிவற்ற நரகத்தில் ஆழ்ந்து அமிழ வேண்டும் என்று போதிக்கின்றன.

ஆனால் நம்பிக்கை ஊட்டும் ஹிந்து  மதம் உன் செயல்களால் பிறப்புகள் அமைகின்றன. நல்ல வினை மூலம் நீ ஒரு கால கட்டத்தில் நிச்சயம் முக்தி பெற முடியும் என்று சூக்ஷ்மமான ஸ்விட்சை நம் கையிலேயே கொடுக்கிறது.

இதை பாரத தேசமெங்கும் உள்ள ஹிந்துக்கள் ஒப்புக் கொண்டு அதன் படி பாவ புண்ணியத்திற்குப் பயந்து வாழ்கின்றனர். தனக்கு ஒரு இழிவு நேரும் போதெல்லாம், ‘தெரிந்தோ தெரியாமலோ நான செய்த பாவம். அதனால் இதை நான் அனுபவிக்கிறேன்’ என்று மனத் தெளிவைப் பெறுகின்றனர். நல்லன வரும் போது பூர்வ ஜன்ம புண்ணிய்ம் என்று மகிழ்கின்றனர்.

நமது அற நூல்கள், மற்றும் இலக்கியங்கள் இந்த மறுபிறப்புத் தத்துவத்தை இடையறாது சுட்டிக் காட்டுகின்றன

இராமாயணம், மஹாபாரதம் ஆகிய இதிஹாஸங்களில் வரும் நூற்றுக் கணக்கான மறுபிறப்புத் தக்வல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன

இந்த பாரதப் பண்பாடு தான் – பின்னால் ஹிந்துப் பண்பாடு என்று அறியப்படுவது –   பாரத தேசம் முழுவதும் பரவியிருந்த ஒரே பண்பாடு.

இதை சங்க இலக்கியங்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் காண முடிகிறது. இந்தப் பாரதப் பண்பாட்டின் ஒரு முக்கியமான அங்கமாகத் தான் தமிழர்களும் வாழ்ந்து வரலாறு படைத்திருக்கின்றனர்.

எடுத்துக் காட்டிற்குத் திருக்குறளை எடுத்துக் கொள்வோம்.

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்    (குறள் 62)

பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.

 

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு    (குறள் 107)

 

தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர்.

 

ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து    (குறள் 126)

 

ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி  ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து       (குறள் 398)

 

ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும்.

 

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்     (குறள் 538)

 

பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது.

 

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அன்று        (குறள் 835)

 

முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து  முடிக்க வல்லவன்!

 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்

மற்றீண்டு வாரா நெறி           (குறள் 356)

 

கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர்.

 

வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்    (குறள் 38)

 

ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும்.

ஆக இப்படி வள்ளுவர் மறுபிறப்பிற்கு உரிய முறையில் தன் குறளில் முக்கியத்துவம் கொடுத்து சொல்ல வேண்டிய செய்திக்ளை எல்லாம் சொல்லி விட்டார்.

நமது வள்ளுவரை கிறிஸ்தவராகக் காட்ட முயற்சி செய்து எழுந்த நூல்களும் உண்டு.

அப்படிப்பட்ட முயற்சிகளை இந்த மறுபிறப்புத் தத்துவம் ஒன்றே தகர்த்து விடுகிறது.  அப்படிப்பட்ட முயற்சிகளை எள்ளி நகையாடும் போதே, வள்ளுவரைத் ‘தம்மவராக’ ஒவ்வொருவரும் காட்டும் அளவு தமிழ்க் குறள் உயர்ந்துள்ளது என்ற பெருமையை நினைத்து மனம் மகிழ்கிறோம்.

 

valluva-nayanar

எந்தக் காலத்திற்கும் பொருந்தும் ஹிந்துப்  பண்பாட்டை மிகச் சரியாக முத்திரைக் குறட்பாக்களினால் வலியுறுத்திய ஒரு தமிழ் மஹானைச் சிரம் தாழ்த்தி வணங்கிக்கொண்டே இருக்கலாம்.

அவர் குறளைப் படித்து அதன் படி வாழ்வதே வாழ்நாள் வழி அடைக்கும் கல்லாக அமையும், இல்லையா!

********

 

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

vanni

Written by London Swaminathan

 

Date: 12 October 2016

 

Time uploaded in London: 8-49 AM

 

Post No.3245

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

1381580945_shami_tree

உலகிலேயே அற்புதமான மதம் இந்துமதம். உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் முதலில் அணுகுண்டு வெடித்த வளரும் நாடு இந்தியாதான்! உலகில் ஐந்து வல்லரசுகளுக்குப் பின்னர் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும் இந்தியாதான். உலகிலேயே அதிகமான கம்ப்யூட்டர் அலுவலர்களை அனுப்புவது இந்தியாதான். இப்படி அணுயுகத்திலும், விண்வெளி யுகத்திலும் முன்னனியில் நிற்கும் இந்தியா 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களுக்கும் மிருகங்களுக்கும் கொடுத்த மதிப்பையும் மரியாதையையும் இன்றும் கொடுக்கிறது!

 

ஒரு மூலையில் நாக பஞ்சமி என்ற பெயரில் பாம்பு வழிபாடு. மற்றொரு புறத்தில் தேள்கள் வழிபாடு. ராஜஸ்தானில் ஒரு கோவிலில் எலிகள் வழிபாடு. ஊர் தோறும் மர வழிபாடு. அருகம் புல்லுக்கும், தர்ப்பைப் புல்லுக்கும்—சந்யாசிகளுக்குத் தரும் மரியாதை!! துளசியும் வில்வமும் தினசரி பூஜையில்!!!

 

இப்படி இருப்பதைப் பார்த்து முன்னர் மூட நம்பிக்கை என்று எழுதியவர்கள் எல்லாம், இப்பொழுது இந்துக்கள்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்துகின்றனர்; இந்துக்கள்தான், புறச் சூழ்நிலையைப் பாதிக்காமல் பண்டிகை கொண்டாடுகின்றனர் என்று புகழத் துவங்கியுள்ளனர்.

 

வன்னி மர வழிபாடு மஹாபாரத காலத்திலிருந்து இருக்கிறது. அரச மர வழிபாடு புத்தருக்கும் முன்னாலேயே இருக்கிறது. அரச மரத்தின் பெயரில் பிப்பலாடன் முதலி ய ரிஷிகள் இருந்திருக்கின்றனர்.

 

12 ஆண்டு வனவாசமும் ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் (மறைந்திருந்து வாழுதல்) விதிக்கப்பட்டதால் பாண்டவர்கள் ஐவரும் 13-ஆவது ஆண்டில் விராட தேசத்துக்குச் சென்றனர்.

 

ஒவ்வொருவரும் ஒரு மாறுவேடத்தில் விராடன் அரண்மனையில் வேலை யில் புகுந்தனர். அவர்கள் விராட தேசத்தில் மாறுவேடத்தில் இருப்பதை துர்யோதனன், உளவாளிகள் மூலம் கண்டுபித்தான் போலும். விராட தேசத்தில் பசுக்களை கவரும் ‘ஆநிறை கவர்த’லில் ஈடுபட்டான். இந்த வேத கால வழக்கம் புற நானூற்றிலும் உள்ளது அப்போது  அர்ஜுனன் சண்டைக்குப் புற[ப்பட்டான். ஆனால் அவன் விராடன் சபையில் அலி வேடம் போட்டுக்கொண்டு ஆடல் பாடல் சொல்லிக் கொடுத்ததால், முன்கூட்டியே,  தனக்கு சிவபெருமான் கொடுத்த ஆயுதங்களை வன்னி மரத்துக்கு அடியில் ஒளித்து வைத்திருந்தான். சண்டைக்குப் போவதற்கு முன்னர்  அவைகளைத் தோண்டி யெடுத்தான்.

 

துரியோதனனின் படைகளச் சிதறடித்து, ஆநிரைகளை (பசு மாடுகளை) மீட்டு பின்னர் வன்னி மர பூஜை செய்தான்  .

 

இந்த ஆண்டு மைசூர் தசரா விழாவில்கூட வன்னி மர பூஜை நடைபெற்றது. நாடு முழுதும் மன்னர்களும் க்ஷத்ரியர்களும் செய்யும் பூஜை இது. ஒரு வேளை அர்ஜுனனுக்கும் முன்னரே இந்த வழக்கம் இருந்ததால்தான் அர்ஜுனனும் இதைச் செய்தான் போலும். ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

vanni-2

விஜய தசமி நாளில் வன்னி மரத்தை வழிபடுவது ஏன்?(Post No.3245)

சமீ விருட்சம் எனப்படும் வன்னி மரத்தைப் பூஜை செய்கையில் சொல்லப்படும் ஸ்லோகங்கள்:-

 

(1).சமீ சமயமேபாபம், சமீ சத்ரு விநாசினீ, அர்ஜுனஸ்ய தனுர் தாரி, ராமஸ்ய ப்ரியதர்சினி

 

 

(2).சமீம் கமல பத்ராக்ஷீம், சமீம் கடக தரரிணீம், ஆரோஹது சமீம் லக்ஷ்மீம், ந்ருணாம் ஆயுஷ்யவர்தனீம்

 

(3).நமோ விஸ்வாச வ்ருக்ஷாய பார்த்த சஸ்த்ர தாரிணே, துவத்தஹ விரத பிரதீச்யாமி, ஸதா விஜயதாபவ.

 

(4).தர்மாத்மா சத்ய சந்தஸ்ச, ராமோதாசா திர்யதி, பௌருஷேசா பிரதி துவந்துவம், சரைநம் ஜஹிராவணீம்

 

(5).அமங்களாய சமனீம், துஷ்கிருதஸ்ய நாசினீம், துஸ் ஸ்வப்ன ஹாரிணீம் தன்னியாம், பிரபத்தியேஹம் சமீம் சுபாம்.

 

இந்த ஐந்து ஸ்லோகங்களையும் சொல்லி சமீம் மரத்தை/ வன்னி மரத்தை வழிபடுவது காலாகாலமாகப் பின்பற்றப்படுகிறது.

 

வாழ்க வன்னி மரம்! வளர்க சமீ மரம்!!

 

–Subham–

Human Sacrifice (Nara Bali) in India (Post No.3244)

nara-bali

I have taken this picture from an old book; I dont know whether it is a drawing or something that happened long long ago.

Written by London Swaminathan

 

Date: 12 October 2016

 

Time uploaded in London: 5-55 AM

 

Post No.3244

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

We have references to Nara bali/ human sacrifice in the following sources in India:-

 

1.Siruthondar (from Tamil Periyapuranam):

One of the 63 Saivite saints of Tamil Nadu. He lived in the period of Mahendra Pallava, 1400 years ago. One Bairagi came and asked for human meat. Siruthondar, who was the commander in Chief of the Pallava army, was forced to cook his own son for the Siva devotee. But at the end, the boy came alive and the Bairagi disappeared and they came to know that it was Lord Siva who came as a meat eater to test his devotion.

Whatever be the end of the story this shows that there a sect who asked for human sacrifice. They were very few in number and hated by the true devotees.

 

2.Adi Sankara

Adi Shankara who lived 2000 years ago weeded out the bad elements in Hinduism. Knowing that he was against unruly elemtnts in the Hindu religion A Kabalika asked for his body to be sacrificed to the god. He agreed because an ascetic never cares for the human body. But one of his disciples took the form of Narasimha (Man lion form of Vishnu) and torn the Kabalika into pieces.

3.Purushamedha Yajna (from the Vedic literature)

We hear about it only name sake in the Vedas. There was one instance where a boy was tied to a pole (may be for sacrifice)  and he was released by the revolutionary Vedic Poet Visvamitra. No body objected to it. But there are other references that only human or animal figures made out of rice flour were sacrificed in the fire.

 

Other Nara Bali Episodes:–

4.Indus Valley Civilization; 5.Navakandam; 6.Mahabharatam:–

Please see my earlier post; link at the bottom

 

7.From Khond (Dravidian Human Sacrifices) Sources:–

Bera Pennu

“Vegetation goddess in Nothern India.

Worshipped by the Khonds in Bengal.

She was the recipient of human sacrifice to ensure good harvest, particularly of the spice turmeric, and as protection against disease and infirmity. The sacrificial victim or meriah was youthful, often kept as a holy person before death and was always either the offspring of a previous sacrificial victim, or purchased from impoverished families for the purpose. He or she was generally strangled, sometimes in the fork of a tree, after days of festivities. In other instances, the victim was cut alive.

 

Boora Pennu

God of light. Indian Khond.

A local deity in Orissa province who created the earth goddess Tari Pennu as his consort and through her engendered the other great gods. Until recently this deity was the subject of sacrifice in notorious meriah rituals which involved violent human sacrifice.

Tari Pennu

Chthonic goddess. Indian (Khond). Created by the sky gods Boora Pennu and Bella Pennu so as to conceive the rest of the pantheon she is identified as a malevolent deity, the subject of regular propitiation human sacrifices in the notorious meriah rituals in the Orissa province”.

(Pennu= light is explained in my other article posted on 7th October; please see the link at the bottom)

(Encyclopedia of Gods by Michael Jordan)

 

8.Egypt, Mayan, Middle East (Bahrain), Sumer etc

 

My earlier Posts:-

Human Sacrifice in Indus Valley and Egypt

31 October 2012

Human Sacrifice practised by the Khonds, 7 October 2016

நான் வெட்டிய கடைசி உருளைக்கிழங்கு! (Post No.3243)

ernest_rutherford_loc

Written by S. NAGARAJAN

Date: 12 October 2016

Time uploaded in London: 5-41 AM

Post No.3243

Pictures are taken from various sources; thanks

 

Contact :– swami_48@yahoo.com

 

 

7-10-2016 பாக்யா இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

நான் வெட்டிய கடைசி உருளைக்கிழங்கு!

ச.நாகராஜன்

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரபல இயற்பியல் விஞ்ஞானியான சர் எர்னஸ்ட் ருதர்போர்ட்  (Sir Ernest  Rutherford 1871-1937) ) நியூஜிலாந்தைச் சேர்ந்தவர். அவருக்கு மலர்ச் செடிகளின் மீது ஆர்வமும் இல்லை, தோட்டப் பராமரிப்பில் இஷடமும் இல்லை. ஆனால் இளவயதில் தோட்ட வேலை செய்ய வேண்டியிருந்தது. ஒரு நாள் குடும்பத்திற்குச் சொந்தமான பண்ணைத் தோட்டத்தில் உருளைக்கிழங்கை வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது தான் அவருக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது. அவர் பெரிதும் படிக்க விரும்பிய கேம்பிரிட்ஜில் படிப்பதற்கான ஸ்காலர்ஷிப் அவருக்குக் கிடைத்து விட்டதென்ற செய்தி கேட்டு ஆனந்தக் கூத்தாடினார். கையிலிருந்த மண்வெட்டியைத் தூக்கி எறிந்தவாறே,இது தான் நான் வெட்டிய கடைசி உருளைக் கிழங்கு என்று கூறி விட்டுத் தோட்டத்தை விட்டுப் புறப்பட்டார்.

அவரின் விஞ்ஞான சாதனைகள் அனைவரும் அறிந்ததே!

****

Why do Hindus Worship Vanni /Shami Tree on Vijaya Dasami Day? (Post No.3242)

1381580945_shami_tree

Written by London Swaminathan

 

Date: 11 October 2016

 

Time uploaded in London: 20-19

 

Post No.3242

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

Hindus are the most Nature-loving people on earth. They worship trees, rivers, animals, Birds and even insexcts lie ants. For every creature they have a story in their vast literature. Of all the tress the Ficus genus is the most loved and revered. Ficus Indica (Banyan Tree), Ficus Religiosa (Peepal tree/Asvatta Tree) and Ficus Udumbarata (Fig Tree). Bilva Tree, Badari Tree, Neem Tree, Mango Tree, Sami (Vanni) Tree , Tulsi Plant, Dharba Grass, Arka Grass and lot of Sthala Vrkshas (Temple Trees in South India) are also worshipped by the Hindus.most of the fragrant flowers are used in the religious rituals.

vanni

Of all the trees Vanni (Prosopis cineraria) has a special significance like the Asvatta Tree. The story of vanni tree is found in the Mahabharata. Following this tradition, Hindus do Puka to Vanni Tree. The Story is as follows:–

 

Arjuna, one of the Fiva Pandavas,had buried his weapons under the vanni Tree during his stay in the forest. He had to go to forest for 12 years along with his four brothers and in addition to 12 years he had to live incognito. Arjuna had won celestial weapons from Lord Siva by his austerities.

 

While in exile they all entered the palace of King Virata as servants. Arjuna disguised as a eunuch, taught music and dancing. The other brothers took suitable jobs according to their inherent skills. Princess Draupadi became a waiting woman in the same palace.

 

King Virata was troubled by cattle radis. Duryothana tried this trick to find out whether the Pandavas are actually living there. He would have got information through his spies to this effect. The enemies descended on the Kingdom of Virata while he was absent. Arjuna went into fight as a charioteer to the king. But before going to fight he dug out the buried celestial weapons from under the vanni Tree. Naturally with such weapons, he routed the enemies and rescued the cattle. Arjuna then took a vow to worship the Vanni tree every year.

 

Goddess Aparajita (Durga) is worshipped under this tree.

 

vanni-2

Tiruvanmiyur near Chennai has Vanni Tree as Sthala Vriksha (see the  picture)

On the Vijaya dasami day, Goddess killed the demon Mahisa Asuran. On that day Hindus worship Sami Tree with the following Sloka:-

 

Samii samayamepaapam , sami satru vinaasini, Arjunasya Dhanurdhari Ramasya priyadarsini.

Samim kamalapatrakshim, samim katadharinim arohatu samim lakshmim, nrunam ayushya vardhanim.

Namo visvasa vrksaya partha sastra dharine, twattaha vrata pradichyami, sada vijayatapava.

 

Dharmatma satya santasca ramodasatiryathi, paurusesha prati dwantvam saranamjahiravanim

 

Amangalaya samanim, duskrtasya nasinim, dus swapnaharinim tanniyam, prapatti moham shamim subham.

 

And then finished with the Palasruti (benefits received by the Puja) under the tree.

Vanni (Sanskrit: Vahni) means Agni/Fire. This indicates the energy given by the tree. In Tamil Nadu Lord Ganesh is seated under the tree. There is one Ganesh temple inside Madurai Meenakshi Temple.

 

Vannia Community of tamil Nadu, Bishnoi community of Rajasthan worship this tree. It has got many medicinal properties.

 

–Subham-