உப்பு நீரில் ஓடும் கார் (Post No.2987)

salt powereeed

Article Written S NAGARAJAN

Date: 20 July 2016

Post No. 2987

Time uploaded in London :– 5-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

22-7-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை
உப்பு நீரால் ஓடும் கார்!
ச.நாகராஜன்

“படிம எரிபொருள் சீக்கிரமே அரிதாகி விடும் என்பதால் மாற்று எரிபொருள் இன்றியமையாதது.”
– காதத் பகத்

 

salt water car

Toy Salt Car Kit: You can do it

பெட்ரோல் மற்றும் டீஸல் ஆகியவற்றின் விலையை நினைத்தாலேயே நடுத்தர மக்களுக்கு பகீர் என்கிறது. படிம எரிபொருளை விட்டு விட்டு மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க உலகெங்கும் பெரும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் கார், எலக்ட்ரிக் கார், ஆர்கானிக் எதனால் கார், சூரிய சக்தியால் இயங்கும் சோலார் கார் என பல்வேறு விதமாக மாற்று எரிபொருள் முயற்சிகளை உலகிலுள்ள பல நிறுவனங்களும் மேற்கொண்டு மாதிரி கார்களை உருவாக்கியுள்ளன.
ஆனால் பரவலாக அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் மாற்று எரிபொருள் கார்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கென உருவாகவில்லை.
இந்த நிலையில் உப்பு நீரை வைத்து காரை ஓட்டலாம் என்ற செய்தி எவ்வளவு இனிப்பான செய்தி!
மரீனா கடற்கரையில் வரிசையில் நின்று ஆளுக்கு தினமும் ஒரு வாளி அல்லது பீப்பாய் கடல் நீரை இலவசமாக எடுத்துச் சென்று அதைக் காரில் போட்டுக் கொண்டு ஓட்டினால்?!!
நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது இல்லையா!

ஜெர்மனியைச் சேர்ந்த நேனோ ஃப்ளோசெல் (Nano Flowcell) என்ற நிறுவனம் ஒரு மந்திரக் காரைக் கண்டுபிடித்துள்ளது. அது உப்பு நீரினால் ஓடுகிறது! இந்த உப்பு நீர் காரானது பெட்ரோல் டீஸல் கார்களை விட மூன்று மடங்கு அதிக தூரம் ஓடுகிறது!
ஹைட்ரஜனால் ஓடுகின்ற கார்களைப் போன்றே இந்த உப்பு நீர் காரும் ஓடுகிறது.
உப்பு நீரிலிருந்து மின்சக்தி உருவாக்கப்படுகிறது. ஆனால் ஹைட்ரஜன் காரில் உள்ளது போல சிக்கலான உயர் அழுத்த அமைப்புகள் (high pressure system) இதில் தேவையில்லை!
கொஞ்சம் ‘டெக்னிகலாக’ இதன் செயல்பாட்டை விளக்கவும் முடியும். இந்தக் காரில் இரண்டு எரிபொருள் டாங்குகள் இருக்கும். அது கரைக்கப்பட்ட உலோக உப்புகளினால் (dissolved metallic salts) நிரப்பப் பட்டிருக்கும். இந்த உப்பு எதிர்மறை அயோனிக் மின்னூட்டத்தைக் கொண்டிருக்கும் அது ஒரு மென்படலத்தின் மூலம் பம்ப் செய்யப்படும். இரசாய்ன வினை மூலம் சக்தி உருவாகி நான்கு மின் மோட்டார்கள் இயக்கப்படும். இவை சூப்பர் கபாசிடர்களினால் காரின் சக்கரங்களை இயங்க வைக்கும்.
நேனோ ஃப்ளோசெல் இதுவரை மூன்று உப்பு நீர் கார்களை உருவாக்கி உள்ளது. ஒன்று ஸ்போர்ட்ஸ் கார். இன்னொன்று சாதாரணப் பயன்பாட்டிற்காக உள்ளது. அடுத்தது முதலாக அமைக்கப்பட்ட ப்ரோடோ கார்!
இந்தக் கார்கள் ஐரோப்பாவில் சோதனை ஓட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுள்ளன.

பொதுமக்களின் பயன்பாட்டிற்கான காரின் பெயர் க்வாண்டினோ (Quantino).
இதன் ஹார்ஸ்பவர் 108. ஐந்து வினாடிகளில் இது 100 கிலோமீட்டர் வேகத்தை எடுத்து விடும்! ரேஸ் கார்களோ 200 ஹார்ஸ் பவர் கொண்டது.
சரி, இதன் மைலேஜ் என்ன? எவ்வளவு மைல்கள் இது ஓடும்?
ஒரு முறை டேங்கை நிரப்பினால் 1000 கிலோமீட்டர் இது ஓடும்!

இதைத் தொடர்ந்து ஓட்டிய டிரைவர் 14 மணி மூன்று நிமிடங்களில் களைத்துப் போய் நிறுத்தினார். ஆனால் கார் தொட்ர்ந்து ஓடும் நிலையில் நல்ல கண்டிஷனில் இருந்தது.ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 300 மைல் வேகத்தில் ஓடும், 1090 ஹார்ஸ் பவரைக் கொண்டது

இது போன்ற கார்களை உருவாக்கிய கம்பெனிகள் சில உண்டு என்றாலும் அவை சந்தைக்கு உரிய வண்டிகளை இதுவரை தயாரிக்கவில்லை. ஜப்பானிய நிறுவனமான ஜெனிபகஸ் என்ற நிறுவனம் ஒரு ஹைட்ரஜன் காரைத் தயாரித்தது. ஆனால் நிறுவனமே திவாலாகி விட்டது.!
ஸ்டான்லி ஆலன் மேயர் என்பவர் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனால் ஓடக் கூடிய காரைக் கண்டுபிடித்துத் தயாரித்தார். அது உற்பத்திக்கான நிலை வரும் போது அவரை விஷம் வைத்துக் கொல்ல முயற்சி நடந்தது. முதலீட்டாளர்களிடம் கார் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையிலேயே விஷத்தினால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அத்தோடு அந்தக் கார் பற்றிய திட்டமும் நின்றது.
இப்போது உப்பு நீர் காரினால் ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது.
கடற்கரை ஓரம் வாழ்பவர்கள் இனி புதிதாக ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். மாற்று எரிபொருளான உப்பு நீரை வேண்டி நிற்கும் வாகனச் சொந்தக்காரர்கள் இனி கடலை நோக்கித் தானே திரண்டு வருவார்கள்! அல்லது அங்கு அமைந்திருக்கும் உப்பு தொழிற்சாலைகளை நோக்கி வரலாம்!
பெட்ரோலும் டீஸலும் போய் உப்பு நீர் எரி பொருளானால் ஏற்படும் பொருளாதார மாற்றங்களை நினைத்தாலே மனம் இனிக்கிறது.

 

lauterber 2
அறிவியல் செய்யும் ஜாலங்களுக்கு ஒரு முடிவே இல்லை!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
அமெரிக்கரான பால் சி.லாடர்பெர் (Paul C Lauterber : தோற்றம் 6-5-1929 மறைவு : 27-3-2007) 2003ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோப்ல பரிசைப் பெற்ற மேதை. எம் ஆர் ஐ எனப்படும் மாக்னெடிக் ரெசோனென்ஸ் இமேஜிங் கண்டுபிடிப்பிற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. நோய் அறிகுறிக்கான சோதனையில் இன்று உலகெங்கும் வருடந்தோறும் 6 கோடி பேர்களால் எம் ஆர் ஐ சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பக்கவிளைவு இல்லாத பாதுகாப்பான நோய் அறிகுறிக்கான சோதனை இது என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.
முதலில் தனது கண்டுபிடிப்பைப் பற்றி நேச்சர் பத்திரிகைக்கு இவர் எழுதி அனுப்பினார். ஆனால் பத்திரிகை இவரது கண்டுபிடிப்பை நிராகரித்து விட்டது.
மனம் நொந்து போன அவர்,” கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானத்தாலோ அல்லதுநேச்சரினாலோ நிராகரிக்கப்பட்டதை வைத்து விஞ்ஞானத்தின் முழுச் சரித்திரத்தையே எழுதலாம்” என்று நேச்சர் பத்திரிகைக்கு எழுதினார். பின்னர் இவரது கண்டுபிடிப்பின் அருமையையும் பயன்பாட்டையும் கண்ட உலகம் வியந்தது. இவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது.
சுமார் 60க்கும் மேற்பட்ட பிரபல விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு முதலில் எள்ளி நகையாடப்பட்டன.

 

lauterber
அவர்களின் விடாமுயற்சியால் பின்னர் அறிவியல் உலகம அவர்களை அங்கீகரித்தது.. அவர்களுள் பலரும் நோப்ல பரிசை வென்றிருக்கின்றனர்..
எந்த ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பையும் உலகம் பொதுவாக திறந்த மனதுடன் பாராட்டி ஏற்றுக் கொண்டதில்லை என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
ஆன் லைன் மூலமாக இன்று அன்றாடம் நடைபெறும் ஷாப்பிங்கை 1966ஆம் வருடம டைம் பத்திரிகை, “இதெல்லாம சரிப்பட்டு வராது. பெண்கள் கடைக்குச் சென்று ஷாப்பிங் செய்வதையே விரும்புவர்” என்று விமர்சித்தது.
1904ஆம் வருடம் பிரான்ஸை சேர்ந்த உத்திகளை வகுக்கும் பேராசிரியர் ஈகோல் டீ கர், “விமானங்கள் என்பது சுவையான பொம்மைகள் தான். அவை இராணுவ உபயோகத்திற்குச் சரிப்பட்டு வராது” என்றார். இரண்டாம் உலகப் போரில் விமானப் படைகளின் சேவை பற்றி அனைவரும் அறிவர்.
தாமஸ் எடிஸனே, “ஆல்டர்னேடிங் கரண்ட்” என்பதைப் பற்றிச் சிந்திப்பதே வேஸ்ட் ஆஃப் டைம்” என்றார். ஆனால் ஏசி- யே உலகை இன்று ஆள்கிறது.
இப்படி நூற்றுக் கணக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்..
அறிவுடன் விடாமுயற்சியும் இணைந்தாலேயே உலகம் அங்கீகரிக்கிறது என்பது உண்மை!
*********

அவன் யார் தெரியுமா? – பகுதி 2

ranganthananda

Article Written S NAGARAJAN
Date: 16 July 2016
Post No. 2975
Time uploaded in London :– 6-10 AM
( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

அவன் யார்? – 2
ச.நாகராஜன்

மைசூர் மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த கோபால் மஹராஜிற்கு சங்கரன் தன் விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதினான். பதில் சாதகமாக வந்தது. ஆனால் திருச்சூரிலிருந்து மைசூருக்கு வர பணம் இருக்கிறதா என்ற கேள்வியும் கடிதத்தில் இருந்தது.

சங்கரனிட்ம் இருந்ததோ மூன்று ரூபாய்கள் தான். அவன் காதில் போட்டிருந்த கடுக்கனை விற்க முனைந்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நகைக் கடைகளுக்கு விடுமுறை. ஒருவர் அவனுக்கு அதற்காக இர்ண்டு ரூபாய் தர முன்வந்தார்.

திருச்சூருக்கு அலுவல் நிமித்தமாக வந்த கோபால் மஹராஜ் தன் சார்பாக மூன்று ரூபாய்  கொடுத்தார். ஆக மொத்தம் இப்போது ஏழு ரூபாய் சேர்ந்து விட்டது. ஆனால் இந்தத் தொகை மைசூருக்குச் செல்லப் போதவே போதாது.
சங்கரன் திருச்சூர் பள்ளியில் இருந்த ராமகிருஷ்ண சந்நிதியில் மனமுவந்து பிரார்த்தனை செய்தான். அதற்குப் பலன் இருந்தது.

அன்று இரவே கோபால்  மஹராஜுடன்  மைசூருக்குச் செல்லும் இரயிலில் அவனும் சென்றான்.

நீண்ட நெடும் தவ வாழ்க்கை தொடங்கியது.
1926ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி சங்கரனுக்கு மந்திர தீட்சை அளிக்கப்பட்டது.

அதை அளித்தவர் மஹாபுருஷ் மஹராஜ்.
அவர் கேட்டார்: “நீ ராமகிருஷ்ணரை வழிபடுகிறாயா?’
பதில் : “இல்லை. ஆனால் அவர் படம் என்னிடம் இருக்கிறது. அதற்கு நமஸ்காரம் செய்வேன்”
“அது போதும்.”

பின்னர் மந்திர தீட்சை அளித்த குரு, “குரு தட்சிணையாக ஏதாவது  கொண்டு வந்திருக்கிறாயா?” என்று கேட்டார்.
“ஒன்றும் கொண்டு வரவில்லை”

ஒரு சட்டை, ஒரு வேஷ்டி, ஒரு துண்டு இவ்வளவு தான் வீட்டிலிருந்து சங்கரன் எடுத்து வந்தவை.
இப்போது குரு பக்கதிலிருந்த மூன்று மாம்பழங்களை எடுத்துச் சங்கரனிடம் தந்தார்.

“இதை எனக்குக் குரு தட்சிணையாகத் தா”
சங்கரன் அப்படியே செய்தான்.
“நீ போய் கோபாலுக்கு சேவை செய்”
இது தான் குரு கொடுத்த உத்தரவு.

கோபால் மஹராஜ் பின்னால் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரானந்தாஜி ஆகப் புகழ் பெற்றார். அவர் பிரான்ஸில் ஒரு புதிய கிளையைத் தொடங்க ஒன்பது வருடங்கள் கழித்து இந்தியாவை விட்டுப் பயணமானார்.
அது வரை அவருக்குச் சேவை செய்வதில் சங்கரனின் காலம் கழிந்தது.
1933ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி ஸ்வாமி விவேகானந்தர் பிறந்த தினத்தன்று பேலூர் மடத்தில் மஹாபுருஷ மஹராஜ சந்நியாச தீட்சை செய்து வைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை அழைத்தார்.
சங்கரனும் அதில் ஒருவர்.

அவருக்கு ரங்கநாதானந்தா என்ற பெயர் அளிக்கப்பட்டது.
அடுத்த பல ஆண்டுகளில் உலகெங்கும் ஸ்வாமி ரங்கநாதானந்தாவின் பேச்சைக் கேட்க உலகமே திரண்டது.

1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி போர்டு டிரஸ்டிகளின் கூட்டம் நடந்தது. அதில் ஒரு மனதாக ஸ்வாமி ரங்கநாதானந்தாவை அடுத்த தலைவராக ராமகிருஷ்ண மடம் தேர்ந்தெடுத்தது.
அப்போது அவர் நர்ஸிங்ஹோமில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உபதலைவர்களில் ஒருவர் இந்தச் செய்தியை அவரிடம் தெரிவிக்க விரைந்தார்.

செய்தியைக் கேட்ட ரங்கநாதானந்தா, ‘என்ன  மைசூரில் சமையல்காரனாக இருந்தவன் மடத்தின் தலைவரா?: என்று கூறினார்.
எப்படிப்பட்ட எளிமை!

ராமகிருஷ்ண மடத்தின் 13வது தலைவராக அவர் ஆனார்.

உலக நாடுகள் பலவற்றின் ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகள் அவரைத் தரிசிக்க வந்திருக்கின்றனர். அவர் பேச்சைக் கேட்க உலகத் தலைவர்கள் காத்திருப்பது வழக்கம்!.

50க்கும் மேற்பட்ட அருமையான நூல்களை அவர் வழங்கியுள்ளார்.
600 ஆடியோ டேப்புகளும், 50 வீடியோ டேப்புகளும் அவரது கீதை, உபநிடதம் மற்றும் வேதாந்தக் கருத்துக்களை அள்ளித் தரும் பொக்கிஷங்களாக உள்ளன.

96 வருடம் 4 மாதம் 11 நாட்கள் வாழ்ந்த அவர் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் : “என்னைத் தூக்கு நான் உடகார விரும்புகிறேன். என்னைத் தூக்கி விடு” (Lift me up; I want to sit up; Lift me up)

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி அவர் ராமகிருஷ்ணருடன் இரண்டறக் கலந்தார்.

மகத்தான வாழ்க்கை வாழ்ந்த அவரது சரித்திரம் அற்புதமானது.

ராமகிருஷ்ணரின் புகழை உலகெங்கும் பரப்பிய மகானுக்கு அஞ்சலி செலுத்துவோம். அவரது உரைகளைப் படித்த்ப் புத்துணர்வு பெறுவோம்.

***********

.

 

 

 

பெண்ணுக்கு புதிய இலக்கணம்: பெண் – உரிச் சொல்; ஆண் -பெயர்ச் சொல் (Post No.2986)

IMG_3681

Written by London swaminathan

Date:19 July 2016

Post No. 2986

Time uploaded in London :–16-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

கேசவ சந்திர சென் என்னும்  பெரியார் பெண்களை உரிச் சொல் (Adjective) என்றும் ஆண்களை பெயர்ச் சொல் (Noun) என்றும் வருணித்துள்ளார்.

 

எந்த மொழி இலக்கணத்திலும் பெயர்ச் சொல்லுக்கு அணுசரனையாக, அழகூட்டுவதாக உரிச் சொல் வரும். (எ.கா. அழகான ஆண், அழகான பெண்).

 

வேதத்திலும் இதுபோன்ற உவமை இருக்கிறது. அக்னிதேவனின் பிரகாசம், ஒரு வீட்டிலுள்ள பெண்மணியின் பிரகாசத்தைப் போல் இருந்தது என்று வேதகாலப் புலவர் பாடுகிறார். மனைவியை குடும்ப விளக்கு என்று சங்க இலக்கியமும், சம்ஸ்கிருத இலக்கியமும் போற்றும்.

 

வால்மீகி ராமாயணத்தில் சீதையும் ராம பிரானிடம் சொல்லுகிறாள்:-

 

உலகம் என்னைப் பற்றி கவலை கொள்ளாது

நானும் உங்கள் ஒருவரையே உண்மை என்று நம்பி இருக்கிறேன்

 

இதையே கொஞ்சம் மாற்றிப்போட்டு, ராமனும் சீதையிடம் நான் உன்னையே உண்மை என்று நம்பியிருக்கிறேன் என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். ஆண்கள், பெண்களிடத்திலும் , பெண்கள் ஆண்க ளிடத்திலும் அவ்வளவு விசுவாசம் கொண்டால், வாழ்க்கையின் துயரங்கள் மறையும்; பள்ளங்கள் மேடுகளாகிவிடும்.

 

இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அப்துல்லா யூசுப் அலி என்னும் பாரிஸ்டர், ஆணைப் பெயர்ச் சொல் என்றும், அதை செயல்பட வைக்கும் வினைச் சொல் (Verb) பெண் என்றும் வேடிக்கையாக வருணிக்கிறார்.

 

அமெரிக்காவில் ஒரு பொன்மொழி — பெண் மொழி — உளது. பெண்கள், இங்கிலாந்தில் கலியாணத்துக்கு முன்பாக சுதந்திரமானவர்கள்; பிரான்ஸில் கலியாணத்துக்குப் பின்னர் சுதந்திரமானவர்கள்; அமெரிக்காவிலோ எப்போதுமே சுதந்திரமானவர்கள்.

IMG_3686

மனு என்ன சொன்னார்: பெண்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட  வேண்டியவர்கள்: சிறுமியாக இருக்கையில் தந்தையும், இளமையோடு இருக்கையில் கல்யாணமானவுடன் கணவனும் வயதான காலத்தில் மகனுன்களும் பெண்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களை எப்போதும் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்கிறார்.

 

பெண்களுக்கு சகோதரனும், கணவனும் நகை, நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கித் தந்து சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும்; பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் இடத்தில் தெய்வம் வசிக்கும்; பெண்கள் துயரக் கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் வேரோடு சாயும் என்றும் மனு பாடி வைத்தார்.

 

பெண்களுக்கு குடும்ப பாரம் ஒன்றே போதும்; வேலை செய்யும் பாரம் வேறு வேண்டாம் என்று இந்துக்கள் நம்பினர். ஆனால் தர்மம் என்பது காலத்துக்கு காலம் மாறும் என்று மனு எழுதிவைத்தார். அதன்படி இன்று பெண்களும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

 

ஆனால் அந்த பொருளாதார சுதந்திரம் வந்தவுடனே அடங்காபிடாரித்தனமும், கட்டுப்பாடின்மையும், விவாக ரத்துகளும்  — அதனுடனேயே பவனி வருவதைக் காண்கிறோம். காலத்தின் கோலம் இது.

–SUBHAM–

 

More PREJUDICE Anecdotes (Post No.2985)

image prejudice BBC

Compiled by London swaminathan

Date:19 July 2016

Post No. 2985

Time uploaded in London :–6-05 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

Meeting Margaret Fuller one day full-gloved in the street, Mrs. Horace Greeley, who had an antipathy to kid coverings, touched Miss Fuller’s hand with a shudder and snapped out “Skin of a beast!”

 

“Why, what do you wear?” asked Margaret.

 

“Silk,” responded Mrs. Greeley.

 

Miss Fuller gave a comic shudder and came back with: “Entrails of a worm!”

Xxx

 

“One day,” related Booker T. Washington, the Negro educator, “a poor, ignorant white man came to the polls to vote.

 

“I wish you’d oblige me by voting this ticket,’ said a bright mulatto, who was standing near the polls.

 

“What kind of a ticket is it?” asked the poor white man.

 

“Why,” said the mulatto, “you can see for yourself.”

 

“But I can’t read “What, can’t you read the ballot you have there in your hand and which you are about to vote? exclaimed the colored man.

 

“No,” said he, “I can’t read at all.” “Well,” said the colored man, this ballot means that you are in favor of giving equal franchise to both white and colored citizens.”

 

“It means to let the niggers vote, does it?”

 

“ Yes, sir “

 

Then I don’t want it. Niggers don’t know enough to  vote”

 

xxx

Pauline Bonaparte

 Portrait of Pauline Bonaparte (1780-1825) 

 

Pauline Bonaparte engaged a huge Negro to bath her morning. When some one protested, she answered innocently,

 

“What? Do you call that thing a man?”

 

She then ordered the Negro to go out and marry at once in order that she might not be compromised.

 

Xxx

 

 

One day Jack Johnson (the Negro heavyweight champion) went alone into Bradcock’s (in Mexico City), a very fashionable restaurant run by an American Southerner.

 

Jack had been told that there was no color line in Mexico, but in Bradcock’s restaurant, after a long wait on his part, a waitress informed him she had orders never to serve a Negro.

 

He went over to El Globo. Two generals at once insisted on returning with him to Bradcock’s. The three of them seated themselves at a table and asked to see Bradcock personally.

 

Bradcock appeared, rubbing his hands ingratiatingly as though about to present someone with a loving-cup.

 

“What can we do for you he asked solicitously, noticing the insignia on the uniforms.

 

“We want four coffees.”

 

“Certainly, certainly.” One was never impolite to a Mexi can general. “You have another friend coming.”

 

“No,” snorted one of the generals. “We are asking you to do us the honor of taking coffee with us.” He laid his gun on the table.

 

Mr. Brad cock, proud Southerner that he was, tamely sat down.

 

Afterwards the generals called a policeman, and Bradcock was fined a hundred pesos for discrimination.

 

jack-jackson

 

—Subham–

 

சந்தியா வந்தனம் – 2 பாகங்கள்- 24 பகுதிகள் (Post No.2984)

IMG_4222

Article Written S NAGARAJAN

Date: 19 July 2016

Post No. 2984

Time uploaded in London :– 5-34 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 ஒரு சிறிய அணுவில் பெரும் விளைவை ஏற்படுத்தும் சக்தி இருப்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. பெரும் அழிவை ஏற்படுத்துவதற்கான சக்தி ஒரு அணுகுண்டில் உள்ளடங்கி இருக்கிறது. முறைப்படி அதை வெடிக்க வைத்தால் அதன் அழிவு சக்தி வெளிப்படுகிறது. இதை நாகசாகி, ஹிரோஷிமாவில் பார்த்தோம்.

அதே பிரம்மாண்டமான ஆக்க சக்தியை- தெய்வீக சக்தியை – இறை சக்தியை ஒரு சிறிய அனுஷ்டானத்தில் முன்னோர் அடக்கி வைத்துள்ளனர்.
அது தான் சந்தியாவந்தனம்.
காலை, நடுப்ப்கல், மாலை ஆகிய வேளைகளில் செய்யப்பட வேண்டிய அனுஷ்டானம் இது. முறைப்படி செய்தால் செய்பவருக்கு பெரும் சக்தி உண்டாவதோடு உலகமும் நன்மையை அடைகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!
இதில் இரு பாகங்கள் உள்ளன. பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகம்.
பூர்வபாகத்தில் 11 பகுதிகளும் உத்தரபாகத்தில் 13 பகுதிகளும் உள்ளன. அனைத்துமே முக்கியம் தான் என்றாலும் முக்கியத்தில் முக்கியம் அர்க்கியப்ரதானம், பிராணாயாமம் மற்றும் காயத்ரீ ஜபம் ஆகிய மூன்றாகும்.
இனி பூர்வ பாகம் மற்றும் உத்தர பாகத்தில் உள்ளனவற்றைப் பார்ப்போம்.
பூர்வ பாகம்
1) ஆசமனம்
2) கணபதி தியானம்
3) பிராணாயாமம்
4) ஸங்கல்பம்
5) மார்ஜனம்
6) ப்ராசனம்
7) புனர்மார்ஜனம்
8) அர்க்கியப்ரதானம்
9) பிராயசித்தார்க்கியம்
10) ஐக்கியானுஸந்தானம்
11) தேவ தர்ப்பணம்
உத்தர பாகம்
12) ஜப ஸங்கல்பம்
13) ப்ரணவ ஜப: ப்ராணாயாமம்
14) காயத்ரீ ஆவாஹனம் மற்றும் காயத்ரீ ந்யாஸம்
15) காயத்ரீ ஜபம்
16) காயத்ரீ உபஸ்தானம்
17) ஸூர்ய உபஸ்தானம்
18) ஸமஷ்டி அபிவாதனம்
19) திக்தேவதா வந்தனம்
20) யம வந்தனம்
21) ஹரிஹர வந்தனம்
22) ஸூர்யநாராயண வந்தனம்
23) ஸமர்ப்பணம்
24) இரக்ஷை
இந்த பகுதிகளில் உள்ள மந்திரங்களின் அர்த்தம் மகத்தானது. சிறிய செயல்கள் மூலம அரிய சக்தியைப் பெற வழி வகுத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
இதைச் செய்வதால் ஏற்படும் மகத்தான பலன்களை ரிஷிகளும், மகான்களும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
ஹிந்து தர்மத்தில் உள்ள அநேக சாஸ்திரங்கள் மற்றும் நூல்கள் இந்த ஸந்தியா வந்தனத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கின்றன.
அவற்றைப் படித்தாலேயே இதன் அருமையை உணர்ந்து நாம் கடைப்பிடிக்க ஆரம்பிப்போம்.

 

Previous Articles:

“Brahmins deserve an entry in to Guinness Book of Records”  (Posted in Tamilbrahmins.com and swamiindology.blogspot.com until 3rd December 2011 in 9 parts over nine days); written by London swaminathan
***

கணக்கு வரவில்லை! கவிதை வந்தது! நான் கவிஞனாக மாறிய கதை (Post No.2983)

sarojini

Compiled by London swaminathan

Date:18 July 2016

Post No. 2983

Time uploaded in London :– 14-43

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

sarojini book

இந்தியாவின் புகழ்பெற்ற ஆங்கில இலக்கிய மேதை, கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவம் இது:-

 

அவர் எப்படி கவிதை எழுதத் துவங்கினேன் என்று சொல்லுகிறார்:-

 

“எனக்கு அப்போது வயது 11. ஒரு அல்ஜீப்ரா கணக்கு போட வேண்டியிருந்தது. விடை தெரியவில்லை;  மிகவும் போராடிக் கொண்டிருந்தேன். அந்த போராட்டம் ஒரு கவிதையாக கொப்புளித்தது. உடனே அவசரம், அவசரமாக அதை எழுதி வைத்தேன். அப்போதிலிருந்து கவிதை என்பது சுலபமாக வர ஆரம்பித்தது”.

 

இலக்கியத்தி ல்பெண்கள் சிறப்படைந்தது  இது  முதல் தடவை அல்ல. குமார கம்பண்ணனின் மனைவி கங்கா தேவி, கணவனின் படையெடுப்பின்போது, மதுரை மாநகர மீனாட்சி கோவில் வரை வந்து, மதுரா விஜயம் என்ற காவியத்தைப் படைத்தார்.

 

ரிக் வேதத்தில் , சங்கத் தமிழ் இலக்கியத்தில், பிராக்ருத நூலான காதா சப்த சதியில் நிறைய பெண்புலவர்களைக் காண்கிறோம். காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும், அவ்வையாரும் நிறைய கவிதைகளைப்ப்ழிந்தனர்.  பொழிந்தனர். அவுரரங்க சீப்பின் மகள் ஜெப் உன்னிசாவும்  ஒரு எழுத்தாளர்.

 

உலகின் பல நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் உண்டு. ஆயினும் பழங்கால நாகரீகங்களில் சுமார் நூறு இலக்கியகர்த்தாக்களை கிரேக்க நாட்டிலோ, எகிப்திலோ, சுமேரியாவிலோ, ரோமானிய சாம்ரஜ்யத்திலோ, காண முடியாது. எபிரேய மொழியிலோ சீன மொழியிலோ காணக்கிடைக்காது. அவை எல்லாம் ஆண் ஆதிக்கம் மிக்க சமூகங்கள்.

 

 

ரிக் வேத காலத்தில் 20 பெண்மணிகள் கவிதைகளை எழுதி உபநிஷத காலத்தில் பொதுச் சபை விவாதத்துக்கு — பட்டி மன்றத்துக்கு — வந்த கார்க்கி போன்ற பெண்கள் உலகில் வேறு எங்கும் இல்லை. இவர்களுக்கு 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் அவ்வ்வையார், நப்பசலை, நச்செள்ளை போன்ற பல சங்க இலக்கிய பெண்மணிகளைக் காண்கிறோம்.

 

sarojini 3

நான் காற்று வாங்கப் போனேன்

 

“நான் காற்று வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதைக் கேட்டு வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி என்ன ஆனாள்  — என்று பாடினார் கண்ணதாசன்.

 

தமிழில் கவிதை புனையும் ஆற்றல், சரோஜினிக்கு இருந்திருந்தால்,

 

நான் கணக்குப்போடப் போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்;

 

அதைக் கேட்டு சொக்கிப் போனார்கள்

ஒரு கவிஞனாகி விட்டேன்.

 

என்று பாடியிருப்பார்.

 

–SUBHAM–

 

Woman is an Adjective; Man is a Noun! (Post No.2982)

 

IMG_3686

Compiled by London swaminathan

Date:18 July 2016

Post No. 2982

Time uploaded in London :– 14-05

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Following piece is an interesting excerpt from a 100-year-old book written by a Muslim scholar: –

 

Source: Life and Labour of the People of India by Abdullah Yusuf Ali, Barrister at Law, London, 1907

 

 IMG_3681

 

‘Woman, said Keshub Chunder Sen, has been defined as an adjective agreeing with the noun man.  I should rather say that man is a noun in the objective case, governed by the verb woman. This humorous simile may be read with the simile of the poet of the Veda when he compares the brightness of the God of fire to the shining of a woman in her home.

 

Sita, in a celebrated passage of Valmiki’s Ramayana, says to her husband,

 

“The world shall wake no care in me;

My only care be truth to thee”

 

If we apply this noble saying in a reciprocal sense, and base the solidarity of human society on the truth of man to woman, and of woman to man, many of life’s riddles would be solved –many of life’s difficulties would disappear.

 

I may be something of a dreamer, but I hope and trust that society in India, — as elsewhere — will recognise the place that is woman’s , not as a result of conflict and strife– not as a victory after the dust of battle– but as the natural symbol of Peace, Harmony, Union, Devotion, and Love.”

 

 

Xxxx

 

IMG_3685

American, French English Women

 

“The Americans have a saying that a woman is independent before marriage in England, after marriage in France, and at all times in America. From an Indian point of view, it would probably be expressed thus; that a woman in her husband in England, and in her brother in France, while in America, she has to fight for her own hand against all the world.

 

The Indian woman is always protected — by the father in childhood, by the husband in youth, and by the sons in old age. A woman, says Manu, should never left unprotected. Whatever degree of freedom and initiative she had in her mother’s house is lost to her in her new home. There she is the daughter in law. The mother in law is with us the chief butt of satire and comic poetry in what country she is not? But in India the mother in law is the husbands mother, not the wife’s; and the amenities between her and her son’s wife are accentuated by the fact that he former is so much older than the latter and the two have to live together, with scarcely any influence on the part of the boy husband”.

 

Xxx

IMG_3682

Woman is not made for work!

 

 

“The fact that the woman is not supposed, according to our social ideas, to earn her daily bread.

 

For the legal profession a very energetic and all but success full attempt was made by one of the most brilliant of India’s women, Miss Cornelian Sorabjee. After a distinguished college career in India she went to Oxford and studied law. She passed rats all her legal examination s, but unfortunately the High Courts in India did not see their way permit her to practise as an advocate on account of her sex. The loss of the legal profession was the gain of literature, for she has since published two charming books containing sketches of India n life. But her legal knowledge was not acquired in vain; how services have been requisitioned by the Bengal Government. She is acting as the legal adviser to the women under Courts of Wards. Her position is one of great authority and exceptional difficulty, for she is the interpreter between two languages, vulgarly held to be incompatible with one another — the language of a woman’s wish, and the language of the law but the wit of a refined woman may be trusted to translate from the one to the other, with a full combination of grace, tact, and business acumen”.

 

Written over 100 years ago by a Muslim Scholar; pictures re from Hare Krishna Rath Yatra in London held on 17th July 2016; taken by london swaminathan.

 

–Subham–

பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம்….. ( Post No.2981)

akhand bharat

Article Written S NAGARAJAN

Date: 18 July 2016

Post No. 2981

Time uploaded in London :– 8-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விப்போம்!
ச.நாகராஜன்

 

ilove my india

 

உலகத்தின் தலையாய பீடத்தில் பாரதம் இருந்தது என்பதைப் பல கட்டுரைகளின் வாயிலாகச் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகவே அவற்றை மீண்டும் இங்கு கூற வேண்டிய அவசியமில்லை. ‘பாழ்பட்டு நின்றதாம் ஓர் தேசம் தன்னை’ வாழ்விக்க மஹாத்மாவை பாரதி போற்றினான்.

 
ஒளி இழந்த நாட்டிலே ஒளி கொடுக்க வா வா வா என்று அனைவரையும் அழைத்தான். வலிமையற்ற போகின்ற பாரதத்தைப் போ போ போ என்று அவன் துரத்தினான்.
அவனே கூறிய படி, மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மஹிமை இல்லை!

 

 
இன்றைய பாரதத்தின் நிலை என்ன?
அறிக்கை வந்து விட்டது! பார்ப்போம்!!
உலகின் மிகச் சிறந்த நாடாக ஸ்வீடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன்! ஸ்வீட் ஸ்வீடன்!! வாழ்த்துக்கள்!!!

 
மக்களின் நலனைக் காப்பதில் முதலிடம் பெற்றுள்ளது ஸ்வீடன்.
உலகில் உள்ள மனித குலத்தின் பொது நன்மையை உறுதி செய்து அதைக் காக்கப் பாடுபடுவதிலும் அது முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா???

 

 
163 நாடுகள் கணிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியா 70வது இடத்தைப் பெற்றுள்ளது.
நமக்குப் பின்னே 93 நாடுகள் உள்ளன என்று ‘பெருமை’ப்படுவதா (இன்றைய தரித்திர புத்தி அப்படித் தான் நினைக்க வைக்கும்!)

 
அல்லது நம்மை விட் 69 பேர் முந்தைய இடத்தில் இருக்கிறார்களே முய்னறு முன்னேற வேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறதா! ஒளி படைத்த பாரதன் அப்படித் தான் நினைப்பான்!

 
‘தி குட் கண்ட்ரி இண்டெக்ஸ் – 2015’ (The Good Country Index – 2015) என்பது உலக நன்மைக்காக ஒரு நாடு எவ்வளவு தூரம் உழைத்து நல்லதைச் செய்கிறது, என்பதைக் காக்கும் குறியீட்டெண் ஆகும்.

 

 

விஞ்ஞானம், பண்பாடு, அமைதி, பாதுகாப்பு, காலநிலை மாறுபாடு, ஆரோக்கியம்., சமத்துவம் உள்ளிட்ட 35 குறியீடுகளைக் கொண்டு அளக்கப்பட்டு உல்கிற்கு ஒரு நாட்டின் பங்களிப்பு எப்படி உள்ளது என்பதைப் பார்த்து ஒரு நாட்டின் தர வரிசை இதில் நிர்ணயிக்கப்படுகிறது.

 
ஸ்வீடன் 163 நாடுகளில் முதல் இடத்தைல் பிடிக்க லிபியா கடைசியில் நிற்கிறது.
உலக அமைதிக்கான பங்களிப்பில் சீனாவிற்குக் (27) கீழே மூன்று இடங்கள் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சமத்துவம் கடைப்பிடிப்பதில் ஒரே அவலம். 124ஆம் இடத்திற்குத் தள்ளபபட்டுள்ளது.

 

akhand baharat 2
இந்தியாவின் இடம் : ஆரோக்கியத்தில் 37வது இடம், விஞ்ஞானத்தில் 62வது இடம், பண்பாட்டில் 119வது இடம், காலநிலை காப்பதில் 106வது இடம், உலக ஒழுங்கில் 100வது இடம்.
முற்பட்ட இடங்களில் இருப்பதை நினைத்துப் பெருமைப் படும் அதே வேளையில் இதர துறைகளில் மேம்பட வேண்டும் என ஒவ்வொரு பாரதீயனும் உறுதி எடுத்தால் முதல் இடத்தைப் பிடிக்க மாட்டோமா என்ன!
புகழோங்கிய பண்டைய நாளை அடைவோம்.
பாரில் உள்ள தேசங்களில் எங்கள் தேசம் உயர் தேசம்!
வாழ்க பாரதம்!
**********

Algebra led to English Poetry (Post No.2980)

sarojini 3

Compiled by London swaminathan

Date:18 July 2016

Post No. 2980

Time uploaded in London :– 8-30 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Following piece is an interesting excerpt from a 100-year-old book written by a Muslim scholar: –

 

Source: Life and Labour of the People of India by Abdullah Yusuf Ali, Barrister at Law, London, 1907

 

sarojini

“In literature the women of India are specially fitted to excel. If it were permitted to dive into history, Miran Bai might be mentioned among the Hindus and Aurangazeb’s daughter, Zeb-un-Nisa, among the Muhammadans , and a great many other names besides. But to confine ourselves to modern

India, it is a singular circumstance that the only two Indian poets who have really made their name in English literature are girls. Miss Toru Dutts book, “Ancient Ballads and Legends of Hindostan”, tells the tales of old India with all the charms of a woman’s style.

 

Mrs Sarojini Naidu is at the threshold of her career, but with her very first book she has established her reputation as an inspired singer.

 

Sarojini Naidu, like Pope, lisped in numbers, for the numbers came. “One day, she says, when I was eleven, I was sighing over a sum in algebra; it wouldn’t come right; but instead a whole poem came to me suddenly. I wrote it down. From that day my poetic career began”.

 

There are journals in India — such as Mrs Sathianathan’s  ‘Ladies Magazine’ in Madras and Mrs Mumtaz Ali’s ‘Tahzib in Niswan’ in Lahore — edited and managed by women. Mrs Sathianadhan is a Master of Arts of the Madras University. All the Indian universities admit women to degrees as freely as men, and in this respect they are certainly more advanced than the older universities”.

 

Xxx

sarojini book

“Take the picture of a modern Indian woman of the aristocracy of intellect, as drawn by a modern English man of letters. Describing Mrs Sarojini Naidu as Mr Arthur Symons knew her before she was married, he says, “ To those who knew her in England, all the life of the tiny figure seemed to concentrate itself in the eyes; they turned towards beauty as the sunflower turns towards the sun, opening wider and wider, until one saw nothing but the eyes. She was dressed always in clinging dresses of Eastern silk, and she was so small and her long black hair hung straight down her back, you might have taken her for a child. She spoke little and in a low voice, like gentle music; and she seemed, wherever she was, to be alone.”

 

–Subham–

 

 

யமன் பயன்படுத்தும் அளவுகோல்! தமிழன் கண்டுபிடிப்பு!! (Post No 2979)

padi

Compiled by London swaminathan

Date:17 July 2016

Post No. 2979

Time uploaded in London :– 9-16 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

reading-jug-large

நாலடியார் என்னும் நூலில் ஒரு அருமையான பாடல் வருகிறது. இது 18 கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.

 

யமன், ஒரு அளவு கோல் வைத்திருக்கிறானாம். நாம் படி, அல்லது லிட்டர் என்ற அளவுகளை பயன்படுத்துவது போல அவன் தினமும் சூரியன் உதிப்பதை ‘நாழி’ என்னும் அளவாகப் பயன்படுத்தி தினமும் நம் வாழ்நாளை அளந்து கொண்டிருக்கிறானாம். இதைப் படித்தும் கூட நம் வாழ்நாள் தினமும் கழிந்துகொண்டிருப்பதை பலரும் உணருவதில்லை.

 

இதோ அந்தப் பாடல்:-

 

தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்

கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் – ஆற்ற

அறஞ்செய் தருடையீஇர் ஆகுமின் யாரும்

பிறந்தும் பிறவாதார் இல்

பொருள்:–

எமன் ஒளிமிக்க சூரியனை, ‘நாழி’ என்னும் அளவு கருவியாகக் கொண்டு, உமது வாழ்நாளை நாள் தோறும் அளந்து, ஆயுள் இறுதியில் உயிரை உண்ணும்! ஆதலால் மிகுதியாக அறம் செய்து உயிர்களிடத்தில் அருள் உடையவராக ஆகுங்கள்! அப்படி ஆகாதவர்கள் மக்களாகப் பிறந்தும் பிறவாதவரே ஆவர்!

 

நாலடியாரில் இன்னொரு பாட்டில்,

 

வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்

வைகலும் வைகலை வைகுமென்று இன்புறுவர்

வைகலும் வைகற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்

வைகலை வைத்துணராதார்

 

பொருள்:-

நாள்தோறும் நாள் கழிந்து வருவதைப் பார்த்திருந்தும், அப்படி நாள்தோறும் நாள் கழிதலை அறியாதார், தமது ஆயுள் நாளில் ஒரு நாள் அப்படிக்கழிவதை உணராது அது நிலையாக இருக்கிறது என நினைத்து இன்புறுவர்.

 

 

ஒரு நாளையும் வீணடிக்காமல் தர்மம் செய்ய வேண்டும் என்பதே இதன் பொருள்.

 

 

வள்ளுவனும் இதே கருத்தை நம் முன் வைக்கிறான்:–

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ்வுலகு

(திருக்குறள் 336)

 

பொருள்: நேற்று இருந்தவன் இன்று உயிருடன் இல்லை என்று கூறப்படும் பெருமை கொண்டு விளங்குகின்றது இந்த உலகம்.

 

 

 

முந்தைய கட்டுரைகள்

 

உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்? (10 ணொவெம்பெர் 2013)

 

கடல் ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No.2969), Date:14 July 2016

 

ஒன்றே செய்க! நன்றே செய்க! இன்றே செய்க! (4-4-2014)

 

உலகில் ஆச்சரியம் எது? அற்புதம் எது? அதிசயம் எது? (Post No 2876), Date: 7 June 2016

 

–Subham–