நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5 (Post No.2791)

2srirangam

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 8 May 2016

 

Post No. 2791

 

Time uploaded in London :–  5-36 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 5

 

.நாகராஜன்

 

IMG_9630 (2)

ஏகாதசி –  சிந்தாமணி என்ற காவேரியில் ஏகாதசியில் ஸ்நானம்.

ஜம்புகேஸ்வரம், மாத்ருபூதம் ரங்கநாதர் இம்முவர்களுடைய வீக்ஷண்யம் இருப்பதால் சிந்தாமணி என்று பெயர் வந்தது. எல்லா ஏகாசதியும் விசேடமே. மார்கழி ஏகாதசி மிகவும் விசேடம். சிதம்பரம் வடமேற்கில் ஏகாதசி விசேடம்

 

துவாதசி – ஐம்பு தீர்த்தம்,  ஸ்ரீரங்கம் லட்சுமி ஸந்நிதானத்தில் உள்ள தீர்த்தம்

 

திரயோதசி – கோகர்ணம் கோடி தீர்த்தம்

 

சதுர்த்தசி – கோகர்ணம்,  ஸ்ரீகாளஹஸ்தி, கேதாரம்,காசி, மத்யார்ச்சுனம், திருவையாறு, மாயூரம் ஆகிய தலங்களில் சிவராத்திரி சதுர்த்தசி தவிர மாயூரத்திலும் கேதாரத்திலும் நாக சதுர்த்தசி விசேடம். தீபாவளியோடு கேதார பூஜை முடிவு பெறும்.

திருவையாறு: காவேரி வடகரையில் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இதற்கு தக்ஷிண கைலாஸம் என்று பெயர்.பஞ்சநத க்ஷேத்திரம். தர்மஸம்வர்த்தனி சமேத பஞ்சநாதேசுவரர் ஆலயம். அப்பருக்கு கைலாஸ தரிசனம் கொடுத்த தலம்.இந்திரன், வாலி ஆகியோரும் பூஜித்த தலம்.

 

 

மாயூரம்: காவேரி தென்கரையில் ஒரு மைல் தூரத்தில் உள்ள தலம். ஒரு அசுரன் காவேரி ஜலத்தைக் குடிக்க ஆரம்பித்தான். பரமசிவன் அவனை வதம் செய்து, தான் அந்த தீர்த்தத்திலேயே வசித்தார். மயூர நாதர் கோவில் உள்ளது. தேவி மயில் ரூபம் எடுத்து ஈஸ்வரனை பூஜித்த தலம்.இந்திராணியும் இங்கு பூஜித்தாள்.

 

அமாவாசை, பௌர்ணமி – காளத்தி, மல்லிகார்ஜுனம் (சிவராத்திரி) அமாவாசை, பௌர்ணமி. ஸகலதீர்த்தம், மாயூரம், அர்த்தோதயம். மஹோதயம்.

 

 

வாரங்கள் பூஜித்த தலங்கள்

 

ஞாயிறு:  திருநாகேஸ்வரம், ஸ்ரீ வாஞ்சியம், திருத்தானமுடையார் கோயில், சாயாவனம்

திங்கள்: திருக்கடையூர்,(திருக்கடவூர்), சிவபுரம், திருவாலவாய், காசி

1859 tiruvaiyaru ther

செவ்வாய்: வைத்தீசுவரன் கோவில், அத்திப்புலியூர், இலந்துறை

புதன்: வெண்காடு (சந்திர புஷ்கரணி)

 

வியாழன்: பெருஞ்சேரி, திருக்கொண்டீசுவரம், கச்சி, கழுக்குன்றம்

வெள்ளி: காஞ்சி (வாமதீர்த்தம்)

சனி: திருநள்ளாறு, ஆரூர்

 

மாதங்களும் பர்வங்களும் பூஜை செய்த இடங்களை ஆகமங்கள் மூலம் அறியலாம்.

 

மேலே கண்ட குறிப்புகளை ஆழ்ந்து ஊன்றி கவனித்து அவரவர்கள் தங்கள் தங்களுக்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடலாம்.

 

mahamakam tank view

தலங்கள் பற்றிய அபூர்வ புத்தகங்கள்

தல முறை பற்றி அபூர்வமான புத்தகங்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியாகி உள்ளன.

 

 

திரு இராமசுவாமிப் பிள்ளை அவர்கள் தலமுறைப் பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் பயனபடுத்தியது போலவே  ஸ்ரீ உ.வே.சாவும் தொடர் எண்ணிட்டு தலங்கள், தீர்த்தங்கள், விமானங்கள் ஆகியவற்றின் சிறப்புகளைத் தொகுத்துள்ளார். 8135 என்ற தொடர் எண்ணை இவரது குறிப்புகளில் காணும் போது எண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட எத்துணை விஷயங்களை இவர் சேர்த்திருக்கிறார் என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. ஆனால் அவை என்னவாயின?!! வருங்காலம் மீட்டுத் தருமா?

 

 

இது தவிர காசியைப் பற்றிய அபூர்வ விவரங்களை காஞ்சி பரமாசார்யாள் ஆசியுடன் தொகுத்துள்ளவர் திரு ரா.வீழிநாதன். (1987)

 

இன்னொரு தலங்களைப் பற்றிய குறிப்பிடத் தகுந்த அபூர்வமான புத்தகம்  ஸ்ரீகாவேரி ரஹஸ்யம் (1962) என்ற நூலாகும்.காஞ்சி பரமாசார்யாள், தமது தொடர்ச்சியான முயற்சியின் மூலம் பல பக்தர்களிடமும் அரிய தல விஷயங்களைச் சேகரிக்குமாறு ஆணையிட்டார். இந்த அபூர்வமான குறிப்புகள் அனைத்தும் ஓய்வு பெற்ற கல்வி இலாகா அதிகாரியான  ஸ்ரீ ஈ.வி. கோபாலையரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர் காவேரி நதியை ஒட்டி உள்ள வடபுற க்ஷேத்திரங்கள், தென்புற க்ஷேத்திரங்கள், காவேரி வளர்த்த மகான்கள், காவேரி ப்ரதக்ஷிண விதி, ஸ்நான முறை, காவேரி பற்றிய இலக்கியக் குறிப்புகள், புராணக் குறிப்புகள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களைத் தொகுத்து காவேரி கலைக் களஞ்சியமாக ஒரு நூலை வெளியிட்டார்.

 

 

ஆன்மீக அன்பர்கள் தல விசேடங்களைப் பற்றிய உண்மையான தொன்மக் குறிப்புகளை அறிய வேண்டுமெனில் இது போன்ற புத்தங்களையும் இது பற்றி நன்கு அறிந்த வல்லாரையும் நாட வேண்டும்.

ganga-arati-modi-abe

Prime Minister of Japan Shinzo Abe and Indian Prime Minister Narendra Modi performing Ganga Arti at Dhashvmegh Ghat in Varanasi on saturday.Express photo by Vishal Srivastav 12.12.2015

வைக்கோல்போரில் ஊசியைக் கண்டெடுத்தவர்கள் நமது தேடலைச் சுலபமாக்கி விட்டார்கள். அவர்களுக்கு வரும் காலமெல்லாம் நன்றி சொல்லும்!

–Subham–

********

 

திருடர்கள் இரண்டு வகை! ஞானம் இரண்டு வகை (Post No.2790)

obbery324-600

Compiled by london swaminathan

Date: 7 May 2016

Post No. 2790

Time uploaded in London :– 12-56

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
திருடர்களைப் பற்றி ஒரு சம்ஸ்கிருத பழமொழியைப் படித்தேன். உடனே இந்திய அரசியல்வாதிகள், குறிப்பாக தமிழ்நாட்டுக் கட்சிகளின் அரசியல்வாதிகளின் படம் என் மனக் கண் முன்னால் ஓடியது. நீங்களும் படியுங்கள்; பகற்கொள்ளையர்களின் படங்கள் உங்கள் கண்களுக்கு முன்னால் தெரியும்:–

“ப்ரகாசாஸ்ச அப்ரகாசாஸ்ச த்வி வித அஸ்தி தஸ்கரா: ஸ்ம்ருதா:” (திருடர்கள் இரண்டு வகை என்று சொல்லப்படுகிறது; தெரிந்தும், தெரியாமலும் (ஒளிந்து) திருடுபவர்கள்)

பகல் ஒளியில் பகிரங்கமாகத் திருடுபவர்கள் (ப்ரகாச), இருட்டில் யாருக்கும் தெரியாமல் திருருடுபவர்கள் (அப்ரகாச) என்று இரண்டு வகை! திருடர்களைக் கூட அக்காலத்திலேயே வகைப்படுத்தியது மட்டுமின்றி திருடர்கள், திருட்டுத்தொழில் பற்றி ஒரு சம்ஸ்கிருத நூலும் உள்ளது!

 

1900 வேதபாடசாலை

ஞானம் இரண்டு வகை
ஞானம் து த்வி விதம் ப்ரோக்தம் சாப்திகம் ப்ரதமம் ஸ்ம்ருதம்
அனுபவாக்யம் த்விதீயந்து ஞானம் தத் துர்லபம் ந்ருப
–தேவீ பாகவதம் 15-52
ஞானம் இரண்டு வகையாகச் சொல்லப்படுகிறது: 1. முதலாவது, வேத சாஸ்திரம் மூலம் கிடைக்கும் அறிவு (சாப்திகம்= சப்தம்/ஒலி மூல அறிவு) 2.இரண்டாவது, அனுபவ அறிவு, அதாவது பட்டறிவு. அரசனே! இவை இரண்டும் அரிதானவை.

என்னதான் படித்தாலும் அனுபவ அறிவுக்கு ஈடாகாது. அதனால்தான் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்றனர். ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்ற பழமொழியும், மருத்துவம், ஜோதிடம் போன்ற தொழில்களில் அனுபவ அறிவே முக்கியம் என்பதைக் காட்டுகிறது.

 

படிப்பறிவு மூலம் மட்டும் ஒருவன் ஞானியாவதல்ல. விட்டகுறை தொட்ட குறையாக – பூர்வ ஜன்ம புண்ணியம் காரணமாக—ஞான வேட்கை இருப்பவனே ஆன்மீகப் பாதையில் அடிவைக்கிறான். பின்னர் குரு மூலம் சந்தேகம் தெளிகிறான்.அப்போது மேலும் மேலும் பல நூல்களைக் கற்கிறான் அல்லது கேட்டு அறிகிறான்.

asceticww2

–Subham–

Interesting Salesman Anecdotes (Post No.2789)

Newspaper-Salesman-1

Compiled by london swaminathan

 

Date: 7 May 2016

 

Post No. 2789

 

Time uploaded in London :– 6-20 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

smarmy salesman

I am them!

The executive was taken down a peg.
You may well feel proud of yourself, young fellow, he said to the life insurance agent, I have refused to see seven insurance agents today.
I know, said the agent, I am them.

Xxx
Taking Orders!
The sales manager was delivering a terrible dressing down to one of his salesmen. He became so abusive in his anger that the culprit protested, saying,

“Don’t talk to me that way. I take ORDERS from no one”.
“That is what I am raising Hell about”, snapped the manager.

Xxx

Bed Bugs!!!
In one of his political speeches in the early days of the NRA (National Recovery Administration), Hugh ‘Ironpants’ Johnson revived an old story, demonstrating the usual futility of letters of complaint.
It concerns the case of the man who was tormented by bedbugs in his sleeping car and who wrote an indignant letter about the matter to the general passenger agent of the railroad.

He was cautioned by his friends that he would probably not receive so much as a reply, and his satisfaction was great when, in due course, he received an apologetic letter assuring him that such a thing could never happen again. His elation was quashed a moment later, however, by the discovery of the inter office memo which had inadvertently been inserted with the letter, which said tersely, “Send this s.o.b. the bug letter”.

Xxxx

salesman

Competition
A young and conscientious fellow ran a newsstand in front of a bank. One day a friend of his stopped by and asked him a loan of five dollars.

“Sorry”, said the young man, “I am afraid I couldn’t do that. You see I have an agreement with the bank”.
“You…… An agreement with the bank. What do you mean?”
“Well, you see, it is this way.
I don’t give loans. The bank doesn’t sell newspapers. It’s a perfect agreement. I am sorry, but I am bound”.

–subham–

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4 (Post No 2788)

3 towers in kanchi

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 7 May 2016

 

Post No. 2788

 

 

Time uploaded in London :–  5-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 4

 

.நாகராஜன்

 

 

திதிகள் பூஜித்த தலங்கள்

 

இதே போல 14 திதிகளும் பூஜித்த தலங்கள் வருமாறு:

 

பிரதமைகாஞ்சிபுரம் (காமாட்சி கோவிலுள் காம தீர்த்தம்,

 

புரட்டாசி நவராத்திரி பிரதமை)

காஞ்சிபுரம்: கல்வியிற் பெரிய காஞ்சி பழைய பல்லவ நாட்டின் தலை நகரம். காமாட்சி அம்மன் திருக்கோவிலைக் கொண்டுள்ள தலம். சக்திக்கான தனிப்பெரும் கோவில். ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தலம். அம்மன் இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவரது ஒரு கையில் கரும்பு வில்லும் இன்னொரு கையில் தாமரை மற்றும் கிளியும் உள்ளது. தந்திர சூடாமணி நூலின் படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும்.  இங்குள்ள கைலாச நாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

 

 

துவிதியை – 1) கருவிலி என்கிற துர்க்குணேசுவரபுரம்

 

(யமதீர்த்தம் – யம துவிதியை; ஐப்பசி விசேடம்), 2) தாராசுரம், 3) திருச்செங்காட்டங்குடி

கருவிலி:  யமன், மஹாபலி, திருமால், சூரியன் பூஜித்த தலம். தக்ஷிணாமூர்த்தி விக்ரஹம் மஹாமண்டபத்தின் தெற்கில் உள்ளது. பரணி தீர்த்தம். மஹாமண்டபத்தின் கிழக்கே யமனுக்கு உபதேசம் ஆனது.

 

திருதியை – 1) கேதாரம்அக்ஷய திருதியை, கனகல தீர்த்தம்; கேதார பூஜை ஆரம்பம் 2)சிந்தாமணி

 

சதுர்த்தி – 1) செங்காட்டங்குடி  சித்திரை சுக்கில பட்சம் சதுர்த்தி தீர்த்தம், சித்திரை சுக்கில பட்ச கணபதி பூஜை பண்ணிய தினமாகும்.  2) திருவலஞ்சுழி – சதுர்த்தி உற்சவம்

செங்கட்டாங்குடி : காவிரித் தென்கரைத் தலம்.இறைவன்: கணபதீச்சுரத்தார் இறைவி: திருக்குழல் நன்மாது. தலவிருட்சம் ஆத்தி. தீர்த்தம்: சூரிய தீர்த்தம்

chidambaram tower close

Chidambaram temple  tower

பஞ்சமிதவத்துறை (லால்குடி)

(ஏழு முனிவர்கள் பூஜித்து முக்தி பெற்றது ரிஷி பஞ்சமி)

 

லால்குடி

காவிரியின் வடபுறத்தில் இரண்டரை மைல் தூரத்தில் உள்ளது.

ஸ்வாமி: ஸப்தரிஷிநாதர்: ஸப்த ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட தலம். காயத்ரி என்ற சிறு ஆறும் ஓடுகிறது. சிவகாமி சமேத நடராஜர் சன்னதி பிரபலம். சன்னதியில் சிவகங்கை தீர்த்தம் விசேஷமானது. பைரவி வனம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.மாணிக்கவாசகர் இயற்றிய புராணம் கொண்டது இத்தலம்.மழவராஜன் குஷ்டரோகம் நீங்கப் பெற்ற இடம். மாங்கல்ய ரிஷி பெருந்திருவாட்டி அம்மையை மணம் செய்து கொண்ட திருத்தலம். இக்கோயிலில் கமலகொத்த நாயனார், ஐயனார் சன்னதி பிரபலமானவை.

 

ஷஷ்டி – ஸ்கந்த ஷஷ்டி – சுப்பிரமணிய தலங்கள்

வெண்காட்டில் மாசி மாத ஷஷ்டியில் மணிகர்ணிகையில் அவபிருதம்; துவாதசியில் கொடியேற்றம். கிருஷ்ணபட்சம் ஷஷ்டி.

 

 

ஸப்தமி – 1) திருவாவடுதுறை 2) மீயச்சூர் 3) சிதம்பரம் ; ஆனித் திருமஞ்சனம் 4)திருவொற்றியூர்

 

திருவாவடுதுறை : காவேரி தென்கரைத் தலம். இறைவன்: மாசிலாம்ணியீசர் இறைவி: மங்கள நாயகி தீர்த்தம் பிரமதீர்த்தம்.இத்தலத்தில் தருமதேவதை தவம் செய்து இறைவனுக்கு வாகனமான விடை ஆயிற்று என்று தல புராணம் கூறுகிறது.

 

ஸப்தமி – 2 பட்ச உற்சவ தலங்கள்

 

சிதம்பரம், வெண்காடும் செங்காடு, மீயச்சூர், ஆவடுதுறை, ஆனைக்கா

 

மீயச்சூர்: காவேரி தென்கரைத் தலம். இறைவர்: முயற்சி நாதர், இறைவி சுந்தர நாயகி தல விருட்சம் வில்வம் தீர்த்தம்: சூரிய புஷ்கரணி

 

அஷ்டமி – பைரவ தீர்த்தம் (அஷ்டமி தீர்த்தம்) , காசி,  ஸ்ரீ சைலம் என்கிற நீலகிரி, ஐயாறும் மதுரை.

கார்த்திகை ம்கா காளாஷ்டமி, பைரவாஷ்டமி, ஆவணி முதல் பங்குனி வரை காளாஷ்டமி

8 பைரவர்கள் தோன்றிய தினம்: கார்த்திகை மாத கிருஷ்ண பட்ச அஷ்டமி மாத்திரம் மகா காளாஷ்டமி; மகா பைரவர் பிறந்த தினம்; கோடி சிவராத்திரி புண்ணியத்தையும் ஒருங்கே தர வல்லது.

 

 

நவமி  – காஞ்சீபுரம்; காமதீர்த்தம் நவமி சிதம்பரம் பரமாநத கூபம். திருவீழிமலை விஷ்ணு தீர்த்தம்; புரட்டாசி மாதம் சுக்ல பட்சம் நவமி

தசமி – திருவாரூர் விஜய தசமி தேவதீர்த்தம் என்ற கமலாலயம்; விஜயலக்ஷ்மி பூஜை பண்ணி கமலாம்பிகை பிரசாதத்தினால் விஜயத்தை அடைந்ந்தபடியால் விஜயதசமி என்று பெயர்; விஜயபுரம் என்று கிழக்கே இருக்கிறது.

 

-அடுத்த கட்டுரையுடன் இந்தத் தொடர் முடிவடைகிறது.

 

எது அழகு? நான்கு கவிஞர்கள் கருத்து (Post No.2787)

bob painting 3

Written by london swaminathan

 

Date: 6 May 2016

 

Post No. 2787

 

Time uploaded in London :– 10-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

bob painting 2

கல்வி அழகு

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம் யாமென்னு நடுவு நிலைமையால்

கல்வியழகே அழகு – நாலடியார் 131

 

சிகை அலங்காரமும், ஆடையினது கரை அழகும், மஞ்சள் பொடி பூசியதால் ஏற்படும் அழகும் அழகல்ல. மனத்தினால் நாம் நல்லவர் என்று எண்ணும் நடுநிலைமையால் கல்வியால் உண்டாகும் அழகே அழகு. (கல்விகற்றால், நல்லவர் ஆவர். அதுவே அழகு)

நாலடியார் என்பது பல கவிஞர்கள் சேர்ந்து படிய 400 பாடல்களைக் கொண்ட நூல்.

xxx

சொல் அழகு

மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு

–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)

 

பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்ரமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.

Xxx

bob painting1

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு

–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)

பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.

Xxx

thalai atti bommai

வள்ளுவன் கூறுகிறான்

சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம்

மண்மாண் புனை பாவை அற்று

–திருக்குறள் 407 (திருவள்ளுவர் இயற்றியது)

 

–Subham–

 

Boy and the House Hunter: Evidence Anecdotes (Post No.2786)

Home For Sale Sign in Front of New House.

Home For Sale Sign in Front of New House.

Compiled by london swaminathan

 

Date: 6 May 2016

 

Post No. 2786

 

Time uploaded in London :– 6-27 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

1).Evidence
Justice John M.Harlan once explained the intricacies of evidence to a young man. Usually in conflicting evidence one statement is far more probable than the other, so that we can easily decide easily which to believe. It is like the boy and the house hunter.

A house hunter getting off the train at a suburban station, said to a lad
“My boy, I am looking for Mr Smithson’s new block of semi-detached cottages. How far are they from here?”
“About twenty minutes’ walk from here”, the boy replied.
“Twenty minutes! Exclaimed the house hunter, nonsense, the advertisement says five.”
“Well”, said the boy, “you can believe me or the advertisement, but I am not trying to make a sale”.

Xxx

2).Eskimo pies (Chocolate coated Ice Cream)

In a case tried by the famous criminal lawyer, Samuel Leibowitz, the determining evidence was that of an alleged eye witness to the crime , one Brecht, who claimed to have been at the scene in the legitimate capacity of a seller of Eskimo pies.

Shortly after this testimony had been given, Leibowitz sent out and had brought into him some twenty Eskimo Pies, which he blandly distributed to the judge, the jury men, and others before the bar. The ice cream was eaten with appreciation and pleasure by all in the presence of the witness, who, still on the stand, was unaware of the significance of what was going on. By his failure to identify the objects being eaten, their wrappers, and his inability to explain how the pies had been kept from melting when he was selling them, Leibowitz proved the perjury and fraudulent pretensions of the witness and won the case.

Xxx

 

3).Witness Anecdotes
Two friendly enemies were involved in a lawsuit. The issue at stake was small, but each was determined to win. The day of the trial arrived. Mr Johnson, the party of the first part, came into the courtroom surrounded by a covey of witnesses for his side of the case.

A few minutes later, Logan, the other man involved, entered. Looking about, he spied Johnson with the witnesses.

Good Lord, Johnson, are these your witnesses?
They certainly are.
Well, in that case, I give up. You win! I have used these witnesses twice myself.

Xxx

london-haven-pickpockets

4).Professional Pickpocket!

It is extraordinary to watch the occasional results of the fact that the prisoner before the bar is concerned only and strictly with the question of his guilt on the count charged and none other.

A peculiarly brazen piece of testimony was once given by a defendant under the charge of Samuel Leibowitz. The issue at stake was the question of a frame up. The great criminal lawyer was frank in his examination of the witness as Toni’s general character.

He questioned him thus:
What is your occupation?
Professional pickpocket
How long have you been a professional pickpocket?
Twenty four years.
If acquitted in this case, what will your occupation be in the future?
Professional pickpocket
He was acquitted.

Source for Anecdotes: Old Thesaurus of Anecdotes

–Subham–

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3 (Post No.2785)

meenakshi base view

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 6 May 2016

 

Post No. 2785

 

 

Time uploaded in London :–  5-51 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்..

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

 

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 3

 

.நாகராஜன்

 

மூலம்மதுரை

மதுரை: தத்தன் என்னும் பாண்டியன் அரசாளுகையில் சமணர் அனுப்பிய நாகம் உமிழ்ந்த விஷத்தின் கொடுமை சிவபெருமானுடைய சடையில் இருந்த சந்திரனிடத்துள்ள அமுதத்துளியால் சமனதமுற்று மதுரமாயிற்று. அதனால் இந்தத் தலம் மதுரை என்ற பெயரைப் பெற்றது. திருவாலவாய், திரு நள்ளாறு, திரு முடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு மாடங்கள் கூடும் இடமாகையால் நான்மாடக் கூடல் என்ற பெயர் பெற்றது.சிவபெருமானின் அழகிய வடிவைக் கண்டு மகிழ்ந்த இந்திரன் சிவனுக்குச் சொக்கன் என்ற திருநாமம் சாத்தித் தொழுதான்.பாண்டியனுக்காக கால் மாறி ஆடிய திருவிளையாடல் உள்ளிட்ட 64 திருவிளையாடல்களின் அற்புதத் தலம்.

 

 

பூராடம்திருச்செந்தூர்

 

திருச்செந்தூர்: முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக அமைந்த கடற்கரைத் தலம். வள்ளி தெய்வானையுடன் முருகன் வீற்றிருக்கும் திருத்தலம். சூரபத்மனை போரில் வென்ற தலமும் இதுவே. ஐப்பசி மாதம் நடக்கும் சூரசம்ஹாரத் திருவிழா பிரபலமான ஒன்று. நாழிக் கிணறு தீர்த்தம் கடலின் அருகே இருந்த போதும் உப்புக் கரிக்காமல் சுவையாக இருப்பது விந்தைக்குரிய ஒன்று.

 murugan senthiandavan

 Tiruchendur Skanda

உத்திராடம்சஙகரநயினார் கோவில்

 

சங்கரநயினார் கோவில் : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தலம். இறைவன்: சங்கரலிங்க ஸ்வாமி இறைவி: கோமதி அம்மன் என்னும் ஆவுடையம்மன். உக்கிரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோவில். ஆடி மாதத்தில் நடக்கும் ஆடித்தவசு திருவிழா பிரபலமானது. அம்மன் சிவனை வேண்டி ஊசிமுனையின் மேலிருந்து தவம் புரியும் திருத்தலம். அம்மனின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணராக இறைவன் காட்சி கொடுத்த திருத்தலம். உடம்பில் கட்டி உள்ளிட்ட நோய்களிலிருந்து காக்கும் அரும் தலம்.

திருவோணம் – அர்த்தோதயம், மகோதயம்

 

 

அவிட்டம், சதயம்காளஹஸ்தி, மல்லிகார்ஜுனம், கோகர்ணம் (சிவராத்திரி)

 

காளஹஸ்தி: இறைவன்: காளத்திநாதர் இறைவி: ஞானப் பூங்கோதை.கண்ணப்பர் அருள் பெற்ற தலம். சிலந்தி, பாம்பு, யானை வழிபட்டுப் பேறு பெற்ற தலம், பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது சிறந்த ராகு- கேது க்ஷேத்திரமாகும்.

கோகர்ணம்: வடநாட்டில் அமைந்துள்ள தலம். இறைவன்: மஹாபல நாதர் இறைவி: கோகர்ண நாயகி தீர்த்தம்  :கோடி தீர்த்தம்

 

 

பூரட்டாதி, உத்திரட்டாதி – திருவாரூர் (தேவதீர்த்தம்)

 

ரேவதி – திருக்கடையூர் (அமிருத தீர்த்தம், திருவாவடுதுறை  (மாஸம் பூர்வ பட்சத்தில் ஆரம்பமாகி அமரபட்சத்தில் தீர்த்தம் – அமரபட்சம்.

 

-தொடரும்

 

 

 

 

What is Rare? Views of Three Great Poets! (Post No.2784)

evolution

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2784

 

Time uploaded in London :– 13-54

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

What is rare? It is very interesting to see how Adi Kavi Valmiki, great philosopher Adi Shankara and Tamil poetess Avvaiyar answered this question.

Valmiki said in his Ramayana,

Speaker of unpleasant truth and listener of unpleasant truth are rare.

“sulabaa purushaa raajan satatam priyavaadinah

Apriyasya ca pathyasya vaktaa srotaa ca durlabhah

–Valmiki Ramayana, Aranya Kanda, 37-2

It is easy to find the speakers of pleasant things. But pathyasya vaktaa (speaker of unpleasant truth) and pathyasya srotaa 9listener of unpleasant truth are rare to find.

 

Easy death is also rare!

 

There is another Sanskrit saying that says easy death and life without misery are rare:-

“Anaayaasena maranam vinaa dainyena jiivanam”

Anaayaasena maranam = easy death

Vina dainyena jiivanam = life without misery

We see our friends and relatives suffer in the hospital for a long time before death. It has become very common nowadays to stop the life supplying machine at our will and pleasure. In the olden days all good souls died peacefully in their sleep. That is ‘anayesena maranam’.

rarerarerrarest

Following is from my old article:–

 

‘Jantunam Narajanma Durlabatha:’

 

 

Human Birth is difficult to obtain (21 October 2013)
wriiten by london swaminathan

Human birth is difficult to obtain is a famous saying from northern Himalayas to Southern Kanyakumari. It is in ancient Tamil and Sanskrit literature. The above quote is from Viveka Cudamani of Adi Shankara. Let us look at the full sloka:

“ For all beings a human birth is difficult to obtain, more so is a male body; rarer than that is Brahmnahood; rarer still is the attachment to the path of Vedic religion; higher than is erudition in the scriptures; discrimination between the Self and not-Self, Realization, Identity with Brahman—these come next in order. Mukti/liberation is not to be attained except through the well earned merits of a hundred crores of births (1000 million births!)”.

In the next sloka he says three things are rare:Human birth, the longing for liberation and protective care of a greatman (mahapurusha).
Tamil literature explains the same thing in a beautiful way. One of the five Tamil epics is Jeevaka Chintamani which gives the story of Udayana and Vasavadatta. The author Thiruththakka devar says human birth is rare. It is like one yoke floating in southern sea coming next to another yoke floating in northern sea and a pole is inserted into it. Human birth is rarer than this.

sheep_thumb1

Avvai answers Lord Skanda’s question
Another famous episode in Tamil is about the grand old lady of Tamil literature Avvaiyar meeting Lord Skanda. Skanda asked her several thought provoking questions just to enjoy her beautiful Tamil. He asked her what is bigger, sweeter, crueler and rarer. When she answered his question about rarer things in the world she says human birth is rarer. Let us look at the beautiful Tamil poem in full:

“ Rare is human birth, Vadivel (Skanda/Subramanya)! Rarer is birth as a male with perfect limbs and with full use of all the senses. Rarer still is attainment of knowledge and wisdom. Rarer than this is the tendency to give and serve; and rarest of all is a life dedicated to spiritual enlightenment, for when one reaches the end the heavens will open to welcome that person—the perfect of all human beings”.

I consider this as an echo of Adi Shankara’s three slokas 2, 3 and 4 of Viveka Cudamani. It is not uncommon to see the same thoughts in all saints of India whether they speak Tamil or Sanskrit. Great men think alike. We see the same thought in all the hymns of Thevaram,  Thiruvasagam and Divya Prabandham.

 

–subham–
 

 

 

வள்ளுவர் சொன்ன ‘செக்ஸி’ உவமை! (Post No 2783)

hugging

Written by london swaminathan

 

Date: 5 May 2016

 

Post No. 2783

 

Time uploaded in London :– 6-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

காமத்துப் பாலில் 250 குறள்களில் காம சம்பந்தமான விஷயங்களை வள்ளுவன் பாடியிருப்பதை நாம் அறிவோம். அறம், பொருள் பற்றிப் பாடிய குறள்களிலும் ஆங்காங்கே சில ‘செக்ஸி’ உவமைகள் இருப்பது படித்து இன்புறத் தக்கது.

 

முலையிரண்டும் இல்லாத பெண், ஆசைவயப்பட்டது பற்றிப் பாடுகிறான் (குறள் 402) வள்ளுவன்.

 

அறியாமை (கல்லாமை) பற்றி பத்து குறட்பா எழுதிய வள்ளுவன் 5 பாடல்களில் அருமையான உவமைகளைப் பயன்படுத்தி உலக மஹா கவிஞன் – உவமை மன்னன் — காளிதாசனுடன் போட்டியிட முயல்கிறான்!

 

முதலில் மஹாபாரதத்தில் வரும் அறியாமை பற்றிய ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்:

 

“மனிதனுக்கு ஒரே எதிரி அறியாமைதான்; இரண்டாவது எதிரியே அவனுக்கு இல்லை; அறியாமையால் சூழப்பட்டவன் மோசமான கொடூரமான செயல்களில் இறங்கிவிடுகிறான்” – என்று வியாசர் சொல்லுகிறார்:-

 

ஏகசத்ருர் நத்வீயோ(அ)ஸ்தி சத்ருரக்ஞானதுல்ய: புருஷஸ்ய ராஜன்

யேனாவ்ருத: குருதே சம்ப்ரயுக்த: கோராணி கர்மாணி சுதாருனானி

–மஹாபாரதம், சாந்தி பர்வம், 297-28

 

வள்ளுவன் வாய்மொழி

உவமை 1

கல்லாதான் சொற்காமுறுதல் முலையிரண்டும்

இல்லாதாள் பெண்காமுற்றற்று- குறள் 402

பொருள்:- கல்லாத ஒருவன் ஒரு சபையில் பேச விரும்புவது, இயல்பாகவே ஸ்தனங்கள் (முலைகள்) இரண்டுமில்லாத ஒரு பெண், இன்பத்தை அனுபவிக்க விரும்பிய கதையாக முடியும்.

 

உவமை 2

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் கல்லாதவர் குறள் 406

பொருள்:-கல்லாதவர்கள் இருந்தும் இறந்தவர்களுக்குச் சமம்; அவர்கள் எதுவும் விளையாத களர் நிலத்துக்கு ஒப்பானவர்கள்.

 

உவமை 3

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்

மண்மாண் புனைபாவையற்று-குறள் 407

பொருள்:- ஆழ்ந்த, சிறந்த அறிவு இல்லாதவனின் அழகு (தோற்றம்) மண்பொம்மை போல இருக்கும் (தண்ணீரில் விழுந்தால் சாயம் வெளுத்துப் போகும்!)

 

உவமை 4

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்–குறள் 410

 

பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)

 

உவமை 5

அரங்கின்றி வட்டாடியற்றே நிரம்பிய

நூலின்றிக் கோட்டி கொளல் -குறள் 401

பொருள்:- நூல் பல கல்லாமல், ஒரு சபையில் பேசுவது, கட்டம் போட்டு சதுரங்கம் வரையாமல் தாயக் கட்டையை உருட்டுவது போலத்தான்.

fool

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2 (Post No.2782)

Zodiac-Barocius-1585

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 5 May 2016

 

Post No. 2782

 

 

Time uploaded in London :–  5-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(THIS WAS WRITTEN BY MY BROTHER S NAGARAJAN FOR THE TAMIL MAGAZINE JNANA ALAYAM:—London swaminathan)

 

 

 

ஞான ஆலயம் பத்திரிகை மே 2016 இதழுடன் நட்சத்திரங்கள் பூஜித்த பரிகார தலங்கள் என்ற இலவச இணைப்பு இதழ் வெளி வந்திருக்கிறது. அதை இங்கு வழங்குகிறோம்.

சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் பத்திரிகை சென்னையிலிருந்து வெளி வருகிறது. இதன் ஆசிரியப் பொறுப்பில் பெரும் பணி ஆற்றி வருபவர் திருமதி மஞ்சுளா ரமேஷ். சந்தா உள்ளிட்ட விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :: editorial @ aalyam.co.in.

Star-Chart-Black

நட்சத்திரங்கள் பூஜித்த பரிகாரத் தலங்கள் – 2

 

.நாகராஜன்

 

 

மிருகசீர்ஷம், திருவாதிரைசிதம்பரம், சிவகங்கை

 

சிதம்பரம் : கோயில் என்று சிறப்பாகச் சொல்லப்படும் தலம்.இறைவன் : திருமூலட்டானேசுவரர் இறைவி: உமையம்மை. தில்லை என்றும் பூலோக கைலாயம் என்றும் சிறப்பாக அழைக்கப்படும் தலம். பஞ்சபூத தலங்களுள் ஆகாய தலம் இது. பாடல் பெற்ற சிவ தலங்களில் முதலாவது தலம். பதஞ்சலி, வியாக்கிரபாதர், திருமூலர் ஆகியோர் வழிபட்ட தலம். கிழக்கு கோபுரத்தில் 108 பரத நாட்டிய நிலைகளைக் காண முடியும். பொன் கூரை வேய்ந்திருப்பதால் பொன்னம்பலம் என்ற சிறப்புப் பெயர் உண்டு.

 

புனர்பூசம்இராமேஸ்வரம் முதலான இராமதீர்த்தம்

இராமேஸ்வரம்: பாண்டிய நாட்டுத் தலம். இறைவன்: இராமநாதர் இறைவி: மலைவளர் காதலி (பர்வதவர்த்திநி) அக்நி தீரத்தம் உள்ள கடற்கரைத் தலம்.இராவணனைக் கொன்ற தோஷத்திற்கு இராமன் பூஜித்த தலம். இராமநாதர் எழுந்தருளி இருக்கும் இடம் திருக் கந்தமாதனம் என்னும் மலையாகும்.இராமநாதர் திருமேனி சீதையால் வெண் மணலாற் செய்த திருவுருவமாக ஸைகத லிங்கமாக அமைக்கப் பெற்றது.

 

பூசம் – பிரசித்தம் ( பிரசித்தம் என்றால் ஏராளமான தலங்கள் என்று பொருள்)

ஆயில்யம் – வழுவூர், மாகாளம்

 

மகம், பூரம் – பிரசித்தம்

 

 

உத்திரம்பங்குனி உத்திரம்திருவாரூர்

 

திருவாரூர்: பஞ்சபூதத் தலங்களுள் பிருதுவி தலம். தேவர்கள் கறையான் வடிவு கொண்டியற்றிய புற்றை இடமாகக் கொண்டு இறைவன் சிவலிங்கப் பெருமானாக எழுந்தருளிய இடமாகையால் வன்மீகபுரம் என்ற பெயரும் உண்டு.சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மையான இது காசிக்கும் தில்லைக்கும் மேலானது.அம்பிகை தவம் செய்த தலமாதலால் பராசக்தி தலம். திருமகள் வழிபட்ட தலமாதலால் கமலாலயம். வீதி விடங்கராகிய தியாகேசர் எழுந்தருளி இருப்பதால் வீதிவிடங்கம் என்ற பெயரும் உண்டு.அகத்தியர், அரிச்சந்திரன் சனகாதி நால்வர் என்று இங்கு வழிபட்டுப் பேறு பெற்றோர் ஏராளம்.

ஹஸ்தம் – திருவாரூர்

சித்திரை – பிரசித்தம்

 

சுவாதிகேதாரம் (தீபாவளி)

கேதாரம் : வடநாட்டுத் தலம். இமயமலைச் சாரலில் ஹரிதுவாரத்திலிருந்து 253 கிலோமீட்டரில் உள்ள தலம். இறைவன்: கேதாரநாதர் இறைவி: கேதார கௌரியம்மை. கேதாரம்: வளைந்த பூமி இங்குள்ள லிங்கம் எருமையின் பின்புறம் போன்ற வடிவில் இருப்பதாக அருணாசல புராணம் கூறுகிறது.

 

விசாகம் – (வைசாகம்) பிரசித்தம்

 

அநுஷம்திருநெல்வேலி

 

திருநெல்வேலி: பாண்டிய நாட்டுத் தலம். இறைவர்: நெல்லையப்பர்.  இறைவி:காந்திமதியம்மை. தீர்த்தம்: தாமிரவருணி

 

 

கேட்டைஎலந்துறை, திருநெல்வேலி

-தொடரும்