பூமியைக் காப்போம்! (POST No 2635)

EARTH

WRITTEN BY S NAGARAJAN (for AIR Talk)

 

Date: 16 March 2016

 

Post No. 2635

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 பூமி 300 கோடி டன் ஐஸை வருடந்தோறும் இழக்கிறது!

      விண்ணில் உலவும் ஒரு சாடலைட் பூமி வருடந்தோறும் 300 கோடி டன் ஐஸை அதாவது பனிக்கட்டிகளை அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் இழக்கிறது என்பதை அறிவித்துள்ளது. இந்த சாடலைட்டின் பெயர் க்ராவிடி ரிகவரி அண்ட் க்ளைமேட் எக்ஸ்பெரிமெண்ட் (Gravity Recovery
And Climate Experiment – GRACE)
என்பதாகும். சுருக்கமாக இதை க்ரேஸ் என்று குறிப்பிடுகின்றனர்.

      பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் இந்த சாடலைட்டை 2002ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வருகின்றனர். புவி ஈர்ப்பு விசை மண்டலத்தை ஆராயும் இந்த விண்கலம் அந்த வேறுபாடுகளால் பூமி எவ்வளவு பனிக்கட்டிகளை இழக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடும்.

    இப்படிப் பெருமளவில் ஐஸ் இழப்பானது கடல் நீர் மட்டத்தை உயரவைக்கும். கடல் வாழ் உயிரினங்களைத் திகைக்க வைத்து அவற்றின் அழிவிற்கு வழி கோலும்.

      பூமியில் உள்ள மொத்த பனிக்கட்டிகளில் 99.5 சதவிகிதம் அண்டார்க்டிக் மற்றும் ஐஸ்லாந்து பகுதிகளில் உள்ளது.இந்தப் பனிக்கட்டிகளை பூமி முற்றிலுமாக இழந்து விடுவதாக வைத்துக் கொண்டால் கடலின் நீர் மட்டம் சுமார் 63 மீட்டர் அளவு உயர்ந்து விடும்.அதாவது சுமார் 206 அடி கடல் நீர் மட்டம் உயர்ந்து விடும். அப்போது ஏற்படும் உலக நாடுகளின் அழிவை எண்ணிப் பார்த்தால் அனைவரின் மனமும் திடுக்கிடும், இல்லையா! ஆகவே தான் மக்களும் மிருகங்களும் இதர கடல் வாழ் உயிரினங்களும் உயிர் வாழ அண்டார்க்டிக் பகுதி ஐஸ் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிவியல் சுட்டிக் காட்டுகிறது.

       இந்த ஆய்வின் முடிவுகள் பனிக்கட்டிகளை இழப்பதன் மூலம் பூமியின் வெப்பம் எப்படி ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது என்ற அபாயத்தைச் சுட்டிக் காட்டுவதால் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்ச்சியை உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்துவது இன்றைய தலையாய கடமையாக அமைகிறது. விழிப்புணர்ச்சி பெறுவோம்;பூமியைக் காப்போம்!

*********      

 

 

 

Snake Charmers of India and Hindu Magic: Edwin Arnold (Post No 2634)

snke2

Compiled by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2634

 

Time uploaded in London :–  17-17

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Following is the extract from the book “India Revisited” by Edwin Arnold published in 1886.

 

“It is a mistake to think that the snakes are always harmless which are brought round to house doors and hotels in India by jugglers and samp-walahs. An almost universal opinion exists that these men extract the poison –fangs (teeth) from the serpents kept in their baskets and that anybody, therefore, may approach and play with them as freely as their exhibitors. This is by no means the case. Many of the reptiles which hiss and coil about in the Indian verandahs are as deadly as any to be found in the jungle.

 

 

The conjuring people tame and familiarise their snakes, especially the cobras, which are then disinclined to strike and become quite friendly and playful; so that unless suddenly frightened or irritated, they dart at the hand of the snake charmer without erecting the poison fangs or even opening their mouths.

 

Hindu Tricks by Palace jugglers!

The Maharajah of Benares was kind enough to send the entire company of his jugglers for our entertainment. They performed with much adroitness the usual series of Hindu tricks. They made the mango tree grow and bear ripe fruit from a deed; swallowed fire and swords; disentangled inextricable knots; and, having mixed together in water and drunk up three powders, red, green and yellow, one of them brought what seemed the same powders from his mouth in a dry state again. Then they produced a large selection of snakes, of which three are cobras, and one of these was made to dance to the gourd and bansula, striking again and again meanwhile at the hand of the performer.

 

Poisonous Snake!

A doubt being expressed by somebody as to the lethal power of this creature, the chief juggler declared that it was truly a dant-wallah, and had his poison teeth. “If the sahib-lok would supply a sheep or goat, they might quickly see whether I spoke a true word.” Eventually a white chicken was produced and seizing his cobra by the neck, the juggler pinched its tail and made it bite the poor fowl, which uttered a little cry when the sharp tooth punctured its thigh. The chicken was dead in another ten minutes.

 

At Pahalpur, a snake charmer for whom we sent to catch a serpent, said to be infesting the compound, had just died by a bite from one of his own captive snakes. The fact is snakes are not understood, and especially cobras. They are extremely intelligent, slow to anger, conscious of their terrible venom and loath to employ it. They are easily tamed, are anxious to escape notice, but extraordinarily sensible to kindness, and when not frightened are among the most gentle and attached of creatures. I shall print in this place an unpublished poem written by me some time ago, which illustrates the topic: THE SNAKE AND THE BABY.”

(Here he had given his long poem which ran to three pages)

–subham-

ஜீரண சக்தி அதிகரிக்க 5 விஷயங்கள்!

agastyanepal-carole-r-bolon

Written by london swaminathan

 

Date: 15 March 2016

 

Post No. 2633

 

Time uploaded in London :–  9-36

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

எச்சரிக்கை: இது மருத்துவக் கட்டுரை அல்ல; ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை!

saturn

சம்ஸ்கிருதத்தில் பல அழகான ஸ்லோகங்கள் உள்ளன. அவைகளில் மூன்று பாக்களில் எந்தெந்த ஐந்து விசயங்களை நினைவிற் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளன. அவைகளில் ஜீரண சக்திக்கான ஐந்து பேர்கள் விநோதமாகவுள்ளன. அதில் ஒன்று சனிக் கிரகம். அட, ஜீரண சக்திக்கு அஷ்ட சூர்ணம் சாப்பிடு, த்ரிபலா சூர்ணம் சாப்பிடு என்று சொல்லாமல் கீழ்கண்ட ஐந்து பேரை நினை என்று சொல்லுகிறது அந்த செய்யுள்:

 

அகஸ்திம் கும்பகர்ணம் ச சனிம்  ச வடவானலம்

ஆஹாரபரிபாகார்த்தம் ஸ்மராமி ச வ்ருகோதரம்

அகஸ்தியர், கும்பகர்ணன், சனி, வடவைத் தீ, பீமன் (வ்ருகோதரன்) ஆகிய ஐந்து பேரை நினைத்தால் ஜீரணம் எளிதாகும் என்கிறது இந்தப் பா!

அகஸ்தியர்: இல்வலன் என்ற அசுரன் எல்லோரையும் கொல்லப் பயன்படுத்தும் தந்திரத்தை அகஸ்தியரிடமும் பயன்படுத்த முயன்றபோது அவர் “வாதாபி ஜீர்ணோ பவ” என்று சொல்லி வயிற்றைத் தடவவே, இல்வலனின் சகோதரனான வாதாபி ஜீர்ணமாகி விடுகிறான் என்பது புராணக் கதை. அகஸ்தியர் கடலைக் குடித்தார், அகஸ்தியர் கமண்டலத்திலிருந்து காவிரி வந்தது, அகஸ்தியர் விந்தியமலையை கர்வபங்கம் செய்தார், அகஸ்தியரை மக்கட் தொகைப் பெருக்கத்தால் சிவபெருமான் தெற்கே அனுப்பிவைத்தார் என்பன எல்லாம் விஞ்ஞான பூர்வ அல்லது வரலாற்று ரீதியிலான விஷயங்கள்- வெறும் புராணக் கதைகள் அல்ல என்பதை முந்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விளக்கிவிட்டேன்.

கும்பகர்ணன்:- ராவணனின் தம்பியான கும்பகர்ணன் ஆறு மாதம் சாப்பிட்டுவிட்டு ஆறுமாதம் நிம்மதியாகத் தூங்குவான். அவனுக்கு ஒரு உடற்  பிரச்சனையும் ஏற்படவில்லை. நல்ல ஜீரண சக்த்திக்கு நிம்மதியான உறக்கம் தேவை!

 

வடவைத்தீ: கடலுக்கடியில் சீறும் எரிமலைகளால் சுனாமி போன்ற ஆபத்துகளும், பெரும் தீயும் உண்டாகி பேரழிவை உண்டாக்குவதை நாம் அறிவோம். ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் மர்மத் தீ உண்டானது பற்றியும் பல ஆயிரம் பேர் உயிரிழந்தது பற்றியும் ஏற்கனவே எழுதியுள்ளேன்.

பீமன்/வ்ருகோதரன்: பீமனின் அசுரப் பசி உலகிற்கே தெரிந்ததுதான். பகாசுரனுக்காக பல வண்டிகளில்  வைக்கப்பட்டிருந்த உணவை ஒரே நேரத்தில் சாப்பிட்டவன் அவன். ஒரு அஜீரணக் கோளாறு அவனுக்கு ஏற்பட்டதில்லை.

 

சனி: இந்தப் பட்டியலில் மிகவும் புரிந்துகொள்ள கடினமானது சனிக் கிரகம் தான். அதற்கும் ஜீரணத்துக்கும் என்ன தொடர்பு என்று வியப்போம். சனிக் கிரஹம், உடலுறுப்புகளில் பாதத்துக்கும் பெருங்குடலுக்கும் அதிபதி. உலோகங்களில் இரும்புக்கு அதிபதி. இரும்புச் சத்து ரத்தத்தில் குறைந்தால் எல்லா உறுப்புகளும் ஜீரண சக்தியும் பாதிக்கப்படும். ஹீமோக்ளோபின் என்ற இரத்தச் சிவப்பணுக்களுக்கு இரும்பு தேவை என்பதை எனது நண்பர் கல்யாண குருக்கள் சுட்டிக்காட்டினார். மேலும் சனிக் கிரஹமே ஆயுள்காரகன். ஒருவன் இறப்பதும், இருப்பதும் சனியின் வேலையே.ஆக சனிக்கும் ஜீரணத்துகுமுள்ள தொடர்பு சரியே!

 

xxxx

 

indonesia-gifts-saras

வேதக் கல்வியில் முன்னேற கீழ்கண்ட 5 பேரை நினைவு கொள்வது அவசியம்:-

கணநாத சரஸ்வதீ ரவிசுக்ர ப்ருஹஸ்பதீன்

பஞ்சைதானி ஸ்மரேந்நித்யம்  வேத வாணீப்ரவ்ருத்தயே

 

கணநாதன் என்பது முதற்கடவுளான கணபதியையும், சிவனையும் குறிக்கும். சரஸ்வதி, கல்விக்கு அதிதேவதை. வியாழனும் (ப்ருஹஸ்பதி), வெள்ளியும் (சுக்ரன்) தேவ, அசுர கணங்களுக்கு ஆசிரியர்கள். ஆக  இவர்களை நினைப்பது வேதம் கற்க உதவும் என்பதில் பொருளுண்டு.

 

Xxx

 

india00015

தினமும் நினைக்க வேண்டிய ஐவர்:

அம்மா, அப்பா, ஆசிரியர், தாய்நாடு, தர்மத்தை உபதேசிக்கும் குரு (வியாசர் போன்றோர் அல்லது ஒவ்வொருவருக்கும் மந்திரம் முதலியன கற்பிக்கும் ஆசிரியர்). இதை விளக்கத் தேவையே இல்லை. இது ஒவ்வொரு இந்துவின் ரத்தத்திலும் ஊறிய கருத்து!

ஜனனீ ஜன்மதாதா ச சுவித்யாம்  ப்ரததாதி ய:

ராஷ்ட்ரம் தர்மோபதேஷ்டா ச பஞ்சகம் சந்ததம் ஸ்மரேத்

 

–சுபம்–

 

 

 

இஸ்லாமியர்கள் முன்னேற இஸ்லாமியர்களே உதவுக! (Post 2632)

muslims and hindu swamijis

தீவிரவாதம் ஒழிய வழி

 

இஸ்லாமியர்கள் முன்னேற இஸ்லாமியர்களே உதவுக! (Post 2632)

 

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 15 March 2016

 

Post No. 2632

 

Time uploaded in London :–  7-56 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ச.நாகராஜன்

muslim eating on banana leaves

அமெரிக்காவில் பிரபலமான எழுத்தாளர்கள் எழுதும் நாவல்கள் லட்சக் கணக்கில்  விற்பனையாகின்றன.

 

இர்விங் வாலஸ், சிட்னி ஷெல்டன், ராபர்ட் லுட்லம் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்; இன்றைய எழுத்தாளர்களின் காலம் ஒரு காலம்!

 

முன்பு ஹாலிவுட் திரைப்படங்களிலும் நாவல்களிலும் எதிரியாக சித்தரிக்கப்படுவது ஒரு கம்யூனிஸ்ட் தான். அந்த எதிரியிடமிருந்து கதாநாயகன் கதாநாயகி நாட்டை (அமெரிக்காவை) அல்லது உலகத்தையே காப்பாற்றுவர்.

ஆனால் கொள்கை அளவில் உள்ளீடே இல்லாத கம்யூனிஸ கொள்கையை அது பிறந்த ரஷியாவிலேயே தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

 

75 ஆண்டுகளுக்குள்ளேயே தள்ளாட்டம் போட்ட கம்யூனிஸ கொள்கை உலக தொழிலாளர்களை ஒன்று சேர்ப்பது இருக்கட்டும்; உள்ளூர் தொழிலாளர்களையே ஒன்று சேர்க்க முடியவில்லை.

 

சோவியத் யூனியன் சிதறுண்டு போனது; கம்யூனிஸம் காலாவதியானது.

 

அதன் மிரட்டல் கொள்கை, அடிதடி, வன்முறை, சர்வாதிகாரம் மட்டும் எஞ்சி உள்ளன.

 

அதை, கலக்கும் காம்ரேடுகள் முதலாக வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிழைப்பை ஓட்டுகின்றனர்.

செத்த  பிணத்திற்கு தினசரி பூஜை!

 

இப்போது அமெரிக்கர்களுக்கு உத்வேகமூட்டிய கலக்கல் காம்ரேடுகளைக் காணோம் என்பதால் ஹாலிவுட் தயாரிப்பாளர்களும் எழுத்தாளர்களும் வேறு ஒரு களத்தைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

வந்து சேம்ர்ந்தார் ஒஸாமா பின் லேடன்.

 

 

தவறான கம்யூனிஸ கொள்கையை விட மோசமான ஒரு கொள்கையை முன் வைத்து அருமையான ஒரு மதத்தையே காவு கொடுக்க முன் வந்த அவர் செய்த மாபெரும் தவறு இரட்டை கோபுரத் தாக்குதல் தான்!

 

 

இப்போது அமெரிக்க சீரியல்கள், ஹாலிவுட் படங்கள், நாவல்கள் அனைத்திலும் வரும் ஒரே வில்லன் தீவிரவாத முஸ்லீம் தான்!

24 என்ற பிரபலமான அமெரிக்க சீரியலில் நம் பாலிவுட் அனில் கபூரும் நடித்துக் கலக்கியுள்ளார்.

 

அதில் வரும் ஒரு வாக்கியம் இது! முஸ்லீம் தீவிரவாதி சொல்வது:

 

“நமக்கு எப்போதுமே முதல் எதிரி அமெரிக்கா தான்!”

இது தான் அமெரிக்காவின் தீம். இதற்குத் தக தீவிர வாத முஸ்லீம்கள் செயல்படுகின்றனர்.

ஒரு பெரும் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்கா தயாராகிறது.

தீவிர வாதத்திற்கு எதிராக!

 

அதில் மேலை நாடுகள் அனைத்தும் – பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, ஹங்கேரி,பிரான்ஸ், உள்ளிட்ட அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள்கின்றன! தீவிரவாத்தை விரும்பாத இதர உலக நாடுகள் அனைத்தும் இந்த் அணிக்கு முழு ஆதரவு தருகின்றன!

கம்யூனிஸம் தானாக அழிந்தது போல தீவிரவாதமும் தானாகவே அழியும் காலம் வந்து விட்டது.

 

ஆனால் இதற்கு இஸ்லாம் பலி ஆகி விடக் கூடாது. இதை இஸ்லாமிய சகோதரர்கள் நன்கு உணர்ந்து தீவிரவாதிகளை தாமே அழிக்க முற்பட வேண்டும்.

 

இல்லாவிடில் 24 போன்ற ஏராளமான சீரியல்கள் கோடிக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு ஆதரவு தரப்படும். தீவிரவாதத்தை ஒழிக்க அவர்கள் முன் வருவது காலத்தின் கட்டாயமாகி விடும்!.

 

இன்று உலக மக்களின் ஒட்டு மொத்த வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாகியுள்ளவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளே!

இஸ்லாம் இவர்களிலிருந்து விடுபட்டு முன்னேற இஸ்லாமியர்கள் தாம் உதவ வேண்டும்! செய்வார்களா?

காலம் பதில் சொல்லும்!

 

*******

 

Wisdom from Sanskrit couplets! Always Remember Five People! (Post No 2631)

india00015

Written by london swaminathan

 

Date: 14 March 2016

 

Post No. 2631

 

Time uploaded in London :–  13-03

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Mother and Father

You must always remember the following five:-

Janani – Mother

Janmadaataa- Father

Vidyaadaataa – Teacher

Raastra – Motherland

Dharmopadestaa – Teacher of Dharma

 

Janani Janmadata ca suvidyam pradadati yah

Raastram Dharmopadestaa ca pancakam santatam smaret

 

Xxx

 

indonesia-gifts-saras

 

To attain full Vedic Knowledge, remember the following five:

Gananaatha

Sarasvatii

Ravi

Sukra

Brhaspati

Gananaathasarasvatii ravisukrabrhaspatin

Pancaitani smarennityam vedavanipravruttaye

My comments: Gananatha stands for Siva and Ganesh. All the Vedic prayers start with a hymn on Ganesh: Gananam tva ganapathihum…………

Sarasvati- Goddess of Knowledge

Ravi is Sun, also the symbol for Veda Mata Gayatri.

Sukra (Venus) and Brhaspati (Jupiter) stand for the teachers of Demons and Angels/Devas respectively. Both of them are praised as Two Great Brahmins in Tamil and Sanskrit literature. They were the most famous teachers of ancient Hindu world.

If one remembers all the above five, they derive great inspiration to imbibe more.

Xxx

 

saturn

For Digestion of Food

Agastya

Kumbhakarana

Sani

Vadavaanala

Vrkodara (Bhima)

Agastim kumbhakarnam ca sanim ca vadavanalam

Aharaparipapakartam smrami ca vrkodaram

 

Source: Encyclopaedia of Numerals by The Kuppuswami Sastri Research Institute, Chennai 600 004

 

My comments:

If you know the mythological stories of these people, then you will understand better the logic behind these five names.

1.Agastya was a short person who travelled from North India to South India at the request of Lord Siva to solve the problem of population explosion in the North. At that time South India was least populated. Moreover he was a great Hindu engineer who diverted the River Kaveri in to the plains of Tamil Nadu and laid a new road route to South India via Vindhya Mountains. He also crossed the Bay of Bengal n a naval expedition to South East Asia and established Hindu empire there. But all these facts are hidden in mythological stories (Please read my previous research papers).

agastyanepal-carole-r-bolon

At that time South India was infested with cannibals. One of the cannibals Ilvala killed lot of seers. He used to ‘cook’ his brother Vatapi and feed the seers. As soon as they ate ‘him’, he used to call his brother Vatapi to come out and he would do it by tearing open the  stomachs of the seers. Ilvala tried the same trick with Agastya. Knowing the cunningness of Ilvala, Agastya ‘ate’ Vatapi dish and said “Vatapi jeerno Bhava”, when Ilvala called him. But he died inside the stomach of Agastya when he said “Let Vatapi get digested” (vatapi jeerna bhava).

 

2.Kumbhakarana used to eat for six months and sleep for the next six months. He was the brother of Ravana, the king and demon of Sri Lanka. Though he was a great eater, he got everything digested. If someone sleeps peacefully like Kumbha karna after a big meal, food will get easily digested. We don’t need to sleep for six months like him. You need a good, long and sound sleep for good digestion.

 

3.Vadavanala is the submarine fire in Hindu mythology. During volcanic eruptions under the ocean, it comes out and make Tsunamis to happen. Tsunamis create mysterious fires and devour lands and other objects on its way. If one could remember it, he would get the confidence of digesting anything.

4.Vrkodara alias Bheema was one of the five Pandava brothers. Bheema would consume anything that comes his way. When a demon called Bakasura who killed villagers, Bheema went all alone, ate the carts load of food sent for him and killed the demon Bakasura as well. So he stands for good appetites, great food and easy digestion.

 

5.Sani graha, planet Saturn, is in charge of longevity, disease and death in Hindu astrology. He is in charge of large intestines and feet. Apart from this, my friend and priest Sri M N Kalyanasundaram of Trichy, living in London, gave me a reasonable explanation to link Sani/Saturn with digestion. According to our Hindu astrology, Sani/Saturn governs the metal IRON. And in our blood vessels, the most important metal is iron. If haemoglobin is less, all problems crop up. So doctors first check our iron (haemoglobin) level as soon as we go into the clinic with some complaints. That way Sani is connected with blood and digestion.

 

So if one wishes that he or she should live for long without any disease, one should know digestion and absorption are essential. Remember the above five great personalities who got digested anything in their way!

 

We know people who eat some tablets for digestion after dinner. But if they give some positive thoughts about the five characters mentioned here, it will improve their digestion. It is more of a psychological treatment rather than a physical treatment.

 

–subham-

 

 

 

ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை: பதவிக்காக அலையும் கழுதைகள் (Post No.2630)

415-Abraham-Lincoln-Block-of-4

Written by london swaminathan

 

Date: 14 March 2016

 

Post No. 2630

 

Time uploaded in London :–  8-57

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

(Already posted in English by me under the title: Every jackass wants an office;post no. 2628)

jackass (1)

அமெரிக்க ஜனாதிபதியாகவிருந்த ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை; தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்

 

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் மந்திரியுடன் சேர்ந்து வேட்டைக்குப் போனார்.

“மந்திரியாரே! இன்று மழை வருமா?”

“மன்னனே! இன்று கட்டாயம் மழை வராது.”

 

இந்த உரையாடலுக்குப் பின்னர், ராஜா, ஒரு விவசாயியைப் பார்த்தார். அவன் ஒரு கழுதை மீது சவாரி செய்து கொண்டிருந்தான். “என்ன, வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று ராஜா கேட்டார்.

“ஐயோ, ராஜா, மழை கொட்டப்போகிறதே! அதனால்தான் வேகமாகப் போகிறேன்” – என்றான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று ராஜா கேட்டார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கழுதையின் காதுகளைப் பார்த்துத்தான் நான் கண்டு பிடித்தேன். இதோ பருங்கள்! காதுகளை நன்றாக நீட்டி வைத்துக்கொண்டுள்ளன. இப்படியிருந்தால் மழை கொட்டப்போகிறது என்று அர்த்தம்” – என்றான்.

 

ராஜாவும் , மந்திரியும் காட்டுக்குள் வேட்டையாடப் போனார்கள். மழை கொட்டித் தள்ளிவிட்டது. ராஜாவுக்குப் பயங்கர கோபம். மந்திரியைப் பதவி நீக்கம் செய்தார். அந்த விவசாயியைக் கண்டுபிடித்து, அவன் கழுதையை விலைக்கு வாங்கி, அதற்கு மந்திரி பதவி கொடுத்தார்.

 

எல்லோரும், ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதையைச் சுவையாகக் கேட்டனர்.

“அந்த ராஜா பெரிய தப்புச் செய்துவிட்டார்” ….. என்று லிங்கன் கதையைத் தொடர்ந்தார். எல்லோருக்கும் சந்தேகம். ராஜா என்ன தப்பு செய்தார்? கூட்டத்தில் ஒருவன் எழுந்து “ராஜா, என்ன தப்பு செய்தார்?” – என்று கேட்டான்.

“அவர் ஒரு கழுதைக்கு மந்திரி பதவி கொடுத்ததிலிருந்து, இப்பொழுது எல்லா கழுதைகளும் மந்திரி பதவிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன” – என்று போட்டாரே ஒரு போடு!

 

Xxx

 

jackass

கர்னல், இடத்தில் என்னைப் போடுங்கள்!

ஒரு ராணுவத்தில் பெரிய கர்னல் பதவி வகித்தவர் இறந்து போய்விட்டார். இன்னும் இறுதிச் சடங்கு கூட நடந்த பாடில்லை. அதற்குள் அந்த மாகாண கவர்னரிடம் அந்த பதவிக்காக பல மனுக்கள் குவிந்தன. இறுதிச் சடங்கு ஊர்வல நாளும் வந்தது. பெரிய ராணுவ மரியாதையுடன் ஊர்வலம் துவங்கியது. சவப்பெட்டிக்குள் கர்னலின் சடலம் இருந்தது. ராணுவ அதிகாரிகளில் ஒரு ‘முந்திரிக்கொட்டை’, கவர்னரிடம் போய், “கர்னலின் இடத்தில் (பதவியில்) என்னைப் போடுங்களேன்”. என்று சொன்னார். கவர்னருக்கு ஒரே கோபம்! “கர்னலின் இடத்திலா? அதோ, அந்த சவப்பெட்டியைத் துக்கிக்கொண்டு போகிறார்களே, அவர்களிடம் போய்க்கேளுங்கள்” – என்றார்.

-சுபம்-

 

 

 

 

 

நூறு வயதை எட்டிய பெரியோர்! – காஞ்சிப் பெரியவர்! (Post No 2629)

2kanchi on mat

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 14 March 2016

 

Post No. 2629

 

Time uploaded in London :–  7-57 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 kanchi new pose

வேத வழி

இதற்கு முந்தைய இரு கட்டுரைகளைத் தொடர்ந்து, வெளியாகும் மூன்றாவது கட்டுரை இது!

 

பிராயம் நூறு வயதை எட்டிய பெரியோர்! -3

காஞ்சி காமகோடி ஜகத்குரு சங்காராசாரியார் (ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி – 68வது பீடாதிபதி)

 

 

.நாகராஜன்

 

 பரமாசார்யாள் என்றும் பெரியவா என்றும் உள்ளார்ந்த பக்தியுடனும் அன்புடனும் அழைக்கப்படும் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி அவர்களை இனி வரும் வரலாறு அதிசயத்துடனேயே நோக்கும்.

 

 

உலகில் கடவுளை நேரில் பார்த்தல் சுலபமான ஒன்று இல்லை. ஆனால் கடவுள் நிகழ்த்தும் அதிசயங்களைப் பார்க்கிறோம்; அற்புதங்களைப் பார்த்து பிரமிக்கிறோம்.

இப்படி கடவுளின் அதிசய அற்புதமாக அவதரித்தவர் பெரியவா என்றால் அது மிகையாது.

 

 

ஒரு கஷ்டமான கால கட்டத்தில் அவதரித்து ஹிந்து மதத்தை ஏற்றம் பெறச் செய்த அவரை இறையருளே உருக்கொண்ட ஒரு அற்புத ஆசார்யர் என்றே சொல்லலாம்.

 

 

1894ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி தோன்றி 1994ஆம் ஆண்டு ஜனவரி  மாதம் 8ஆம் தேதி நீக்கமற நிறைந்த பரம்பொருளுடன் ஐக்கியமான அவரை வர்ணித்தல் இயலாது.

பிள்ளையாரை உடை; கொளுத்து புராணங்களை; அர்ச்சகர்களை அடி என்று தீய சக்திகள் தலை தூக்கி விரித்த காலகட்டத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டோரைக் காப்பாற்றி வீதிக்கு வீதி கோவிலுக்குக் கோவில் வழிபாட்டை மேம்படச் செய்தார் அவர்.

 kanchi rinkled skin

 

கோவில் கோபுரம்தோறும் மார்கழி  மாதம் திருப்பாவை திருவெம்பாவை பாட்லகளை ஒலிக்கச் செய்து தமிழகத்தையே தெய்வீக மணம் கமழச் செய்தார்.

 

அவரை தரிசித்த மேதைகள், ராஜாக்கள், ராணிகள் ஏராளம் எனில் சாமானியர் லட்சக்கணக்கில் இருந்தனர்; அவரின் அருளைப் பெற்றனர் என்றே கூறலாம்.

 

 

ஆகம சில்ப மகாநாடு ஒரு புறம், வேத பாடசாலைகள் ஒரு புறம், நலிவடைந்து இருந்த கரகாட்டம் உள்ளிட்ட புராதன கலைகளை மேம்படுத்தல் ஒரு புறம் என்று அவர் தொடாத ஹிந்து மதம் சார்ந்த துறைகளே இல்லை.

 

 

இந்திய அரசியல் சட்டத்தில் ஹிந்துக்களைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றியவர் அவரே என்பதைப் பெரும்பாலானோர் அறியார். உரிய சட்ட வல்லுநர்களை அழைத்து அறிவுரைகளை அருளியவர் அவர்.

கிரீஸ் தேசத்து ராணி அவரை பரம குருவாகப் போற்றி வணங்கினார்.

 

 

மஹாத்மா காந்திஜியோ அவரைச் சந்தித்த மாலை வேளையில் நன்கு அளவளாவி மகிழந்தார். உரிய நேரத்தில் அவர் சாப்பிட வேண்டிய தருணத்தை ராஜாஜி நினைவு படுத்துகையில், “இன்று உணவு தேவை இல்லை; இப்போது  இந்த சந்திப்பில் பெற்றதே உணவு” என்று தான் அவரிடமிருந்து பெற்ற ஆன்ம உணவை எண்ணிக் களித்தார்.

கண்ணதாசனை வழிப்படுத்தினார்; எம்.ஜி.ஆரை தமிழ் மாநாடு நடத்த ஊக்குவித்து அவருக்கு நேரிட்ட சங்கடங்களிலிருந்து அவரைக் காப்பாற்றினார்.

 

 

இந்திரா காந்திக்கு அருளினார். அவரது கை சின்னம் உதிக்க அவரது ஆசிக் கரமே உதவியது.

 

 

காவிரித் தலங்களைப் பற்றி எழுத ஒருவரைப் பணித்தார்.காசியையும் கங்கையையும்  எழுத ஒருவரை ஊக்கினார். சுமார் எண்பது ஆண்டு கால வரலாற்றை வேடிக்கைக்காக எடுத்துப் பார்த்தாலும் எந்த ஒரு நல்ல ஆன்மீக காரியத்தின் ஆரம்பமும் அவரையே சுட்டிக் காட்டும்.

 

எல்லா நல்ல புத்தகங்களும் தவறாமல் முன்னுரையில் அவரது அருளாசியாலும் ஊக்கத்தாலும் அந்தப் புத்தகம் மலர்ந்தது என்று குறிக்கப்படும்.

 

 

கலைமகள் நிறுவனத்தார் ஆசாரிய ஸ்வாமிகளின் உபதேசங்கள் என்று அவரது உரைகளைப் பதிப்பித்தது.

கல்கி பத்திரிகை வாரம் தோறும் அவரது அற்புதமான அருளுரைகளை விடாமல் பிரசுரித்தது.

 

 

தெய்வத்தின் குரல் என்று அவரது உபதேச உரைகளை பல பாகங்களாக அன்பர் ரா. கணபதி தொகுத்து வெளியிட்டார்.

ஆயிரக்கணக்கான நூல்களில் தெவிட்டாத அவரது உபதேச உரைகள், அவர் ஆற்றிய அற்புதங்கள் உள்ளிட்டவற்றைப் படிக்க முடிகிறது.

 

 

நூறாண்டு வாழ்ந்த இந்த மகானின் பெருமையைச் சொல்லும் போது வார்த்தைகள் தோற்கின்றன.

 

 two shankaras

எங்கு வார்த்தைகள் தோற்கின்றனவோ எதை வார்த்தைகளால் அடக்க முடியாதோ அதுவே அது” என்று சொல்ல முடியா பிரம்மத்தை உபநிடதங்கள் விளக்கும்.

அதையே பரமாசார்யருக்கும் பொருந்தக் கூறலாம்.

எங்கே வார்த்தைகள் விவரிக்க முடியாமல் திணறுகின்றனவோ அங்கே பரமாசார்யாரின் திவ்ய சரிதம் அடங்குகிறது.

 

 

அவரின் நூறாண்டு பணியை நினைத்து அவர் காட்டிய வழியில் ஹிந்து மத தத்துவத்தை உலகெங்கும் பரப்புவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக அமையும்!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

 

******        

Every Jackass wants an office! (Post No 2628)

jackass (1)

Compiled by london swaminathan

 

Date: 13 March 2016

 

Post No. 2628

 

Time uploaded in London :–  14-20

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

One time, Abraham Lincoln, drawled as he read a story of a certain king who wanted to go hunting, and asked the court minister if it would rain. The minister told him the weather would be fair. Setting out, the royal party met a farmer riding a jackass. He warned the king that it was going to rain. The king laughed, went on, and no sooner got started hunting than a heavy downpour drenched him and his party. He went back, there out the minister, and called for the farmer.

“Tell me how you knew it would rain”

“I did not know, Your Majesty, it is not me. It is my jackass. He puts his ear forward when it it is going to be wet”.

 

The king sent the farmer away, had the jackass brought and put in place of the minister.

 

“It was here”, said Lincoln, “the king made a great mistake”.

 

“How so? asked someone of the audience.

“Why, ever since that time, every jack ass wants an office. Gentlemen, leave your credentials with me and when the war is over you will hear from me.”

 

Xxx

jackass

Urgent!

A certain Colonel on the staff of Governor died suddenly. Many applicants for this post were clamouring to be heard. Before even the funeral had taken place, one of these managed to detain the Governor for a moment, asking “Would you object to my taking  the place of the  Colonel?”

 

“Not at all”, snapped the Governor. “Speak to the undertaker.”

 

-subham-

 

சோஷலிசத்தின் விலை 16 பைசா! (Post No.2627)

16cents

Compiled by london swaminathan

 

Date: 13 March 2016

 

Post No. 2627

 

Time uploaded in London :–  9-35 AM

 

(Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

the-truth-about-socialism

ஆண்ட்ரூ கார்னிஜி (Andrew Carnegie)  என்ற செல்வந்தர் வீட்டுக்கு ஒரு சோஷலிசப் பிரமுகர் (Socialist leader) வந்தார். வந்தவர் சாப்பிட்டுவிட்டுப் போகக்கூடாதோ! நீண்ட சொற் பொழிவாற்றினார். ஒரே மனிதனிடம் பணம் குவிந்திருப்பது – அக்கிரமம், அநியாயம். செல்வத்தை எல்லோருக்கும் பகிர்வதே சமத்துவ சமுதாயம்” – என்று பேசிக்கொண்டே இருந்தார்.

 

பணக்காரப் பிரமுகர் தனது காரியதரிசியை (secretary) அழைத்து, குத்து மதிப்பாக என் சொத்து-சுகங்களின் மதிப்பை விரைவில் கணக்கிட்டு வாருங்கள் என்றார். அதே நேரத்தில், மேஜை மீதிருந்த உபகரனங்கள், நூல்களை எடுத்து நாட்டின் ஜனத் தொகை எவ்வளவு என்றும் கணக்கிட்டார்.

 

காரியதரிசி வந்து, அவருடைய சொத்தின் மதிப்பைக் கொடுத்தவுடனே, அதை நாட்டின் ஜனத்தொகையால் வகுத்துப் பார்த்ததில் ஒரு ஆளுக்கு 16 செண்ட் (16 cents) என்று தெரிந்தது.

 

உடனே காரியதரிசியை அழைத்து, “வந்திருந்த கனவானிடம் 16 செண்ட்டுகளைக் கொடுத்து, என் சொத்தில் அவருக்குச் சேர வேண்டிய பங்கு அது” – என்று சொல்லு என்றார்! தமிழ் மொழியாக்கம்-லண்டன் சுவாமிநாதன்.

 

Xxx

mercury

திருடர்களின் தெய்வம் புதன்/மெர்குரி

ரோமானியர் கடவுள்களின் குழுவில் ‘மெர்குரி (Mercury)’ எனப்படும் ‘புதன்’ தான் திருடர்களுக்குத் தெய்வம். அதே கடவுள்தான், வியாபாரிகளுக்கும், வணிகத் துறைக்கும், பேச்சாளர்களுக்கும் தெய்வம். இதற்கு அவர்கள் ‘வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போல’ அழகாக ஒரு காரணத்தையும் சொல்லுவார்கள்.

வியாபாரமும் ஒரு வகைத் திருட்டு என்றும், மேடைப்பேச்சும் ஏமாற்று வித்தை என்றும் சொல்லி அதனால்தான், திருடர்கள், பேச்சாளர்கள்,வணிகர்கள் ஆகிய அனைவரும் ஒரே தெய்வத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன ரென்றும் கூறுவர்.

 

பழங்கால ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் தேதி அவர்கள் ஒரு கூட்டம் போட்டு, மெர்குரியின் கோவிலுக்கு ஊர்வலம் போவார்கள். அதையும் ரோமானியர்கள் கிண்டல்/நக்கல்/பகடி செய்வார்கள். முந்தைய ஆண்டு அவர்கள் சொல்லிய பொய்களுக்கும், செய்த மோசடிகளுக்கும் மன்னிப்புக் கேட்கவே இந்த வழிபாடு என்பர்.தமிழ் மொழியாக்கம்- லண்டன் சுவாமிநாதன்

(ரோமானியர்கள், நம்ம ஊரை வந்து பார்க்கட்டும். இது கிண்டல் அல்ல; முழு உண்மை என்பதை அறிவர்!!)

 

Xxx

சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!Post No 2626

circarro

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 13 March 2016

 

 

Post No. 2626

 

Time uploaded in London :–  7-15 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

ஹிந்து தத்துவம்

 

சுழற்சி பற்றிய அபூர்வமான ஹிந்து தத்துவம்!

 

ச.நாகராஜன்

 

சுழற்சித் தத்துவம்!

 

ஒரு ஹிந்து,  வாழ்க்கையைப் பற்றிய சரியான கண்ணோட்டத்துடன் ஆனந்தமாக அலட்டிக் கொள்ளாமல் வாழ முடிவது எப்படி? அது கூறும் சுழற்சி தத்துவத்தினால் தான்!

கல்பம் என்ற நீண்ட நெடும் காலம் கூட சுழற்சிக்கு உட்பட்டதே!

நான்கு யுகங்கள் தோன்றும்; நடக்கும்; உரிய காலத்தில் உள் வாங்கி ஒடுங்கும். பின் மீண்டும் தோன்றும்; மலரும்!

ஜீவன்களும் அப்படித் தான்! சுழற்சிக்கு உட்பட்ட ஜீவன்கள் மீண்டும் அதே போல அதே செய்கையைச் செய்து வாழும்; மறையும் மீண்டும் தோன்றும்!

 

 

விவேகானந்தரின் விளக்கம்

 

ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் வட கலிபோர்னியாவில் சீடர்களுக்கு கீதையின் சுலோகம் ஒன்றுக்கு உரை சொல்லி அதை விளக்கிக் கொண்டிருந்தார்.

 

அது கீதையில் 18ஆம் அத்தியாயத்தில் வரும் 61ஆம் சுலோகம்!

ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||

அர்ஜுந = அர்ஜுனா
யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்
ஈஸ்²வர: = ஈசுவரன்
மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு
ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில்
திஷ்ட²தி = நிற்கிறான்

இதன் திரண்ட கருத்து இது: அர்ஜுனா, எல்லா உயிர்களிலும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.

potter figure

ஒரு குயவனின் சக்கரத்தில் வைத்துச் சுழற்றுவது போல தமது மாயா சக்தியால் உயிரினங்களை இறைவன் சுழலச் செய்கிறார் என்ற கருத்தை ஸ்வாமிஜி நன்கு விளக்கி விட்டு இப்படிக் கூறினார்:” இப்போது நாம் காண்கின்ற இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே ஏற்கனவே நடைபெற்றவை தான்! விளையாடுபவன் தாயக்கட்டையைக் குலுக்கி இடுகிறான். எண்கள் வருகின்றன. ஒரே விதமான சேர்க்கை பல நேரங்களில் வரலாம். வாழ்க்கையும் அப்படித்தான். சக்கரம் சுழலுகிறது. ஒரு முறை நிகழ்ந்ததே மீண்டும் நிகழ்கிறது. அதோ அந்தப் பானை, அந்த டம்ளர், இந்த வெங்காயம், இந்த உருளைக் கிழங்கு எல்லாம் ஏற்கனவே ஒரு முறை இதே இடத்தில் இப்படியே இருந்தன. இப்போது அந்தச் சேர்க்கையில் மீண்டும் இங்கே இருக்கின்றன. நாம் என்ன செய்யலாம், அம்மா! வாழ்க்கையின் சக்கரத்தில் நம்மை வைத்துச் சுழற்றுவது அவர் அல்லவா!”

 

 

 

 

சீதை காடு செல்லக் கூறும் காரணம்!

 

ஆனந்த ராமாயணத்திலில் இந்தக் கருத்தை விளக்கும் ஒரு அற்புதமான சம்பவம் இது:

 

ராமன் சீதையைக் காட்டுக்கு வர வேண்டாம் என்று கூறும் போது அவள் காட்டிற்கு வருவேன் என்பதை வலியுறுத்திக் கூறும் பல காரணங்களுள் ஒரு காரணம் இது:

 

“ஓ! ராமா! இது வரை நடந்த எந்த ராமாயணத்திலாவது சீதை இல்லாமல் ராமர் காட்டுக்குப் போயிருக்கிறாரா?”

 

 

கவி சமத்காரமாக இதை எடுத்துக் கொண்டாலும் கூட இது ஒரு அற்புதமான சுழற்சித் தத்துவத்தை வலியுறுத்தவே செய்கிறது.

 

circular2

கர்ம யோகம்

 

எல்லாமே நடந்தது தான் என்றால் அல்லது நடப்பது நடந்தே தீரும் என்றால் நாம் எதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

இருக்கும் இடத்தில் தர்மத்திற்கேற்ப உன் வேலையைச் செய்! அதில் பலனை எதிர்பார்க்காமல் கடமையை கர்ம யோகமாகச் செய் என்பது கண்ணனின் அருளுரை!

 

கீதை வலியுறுத்தும் தத்துவத்தை விளக்கும் விதமாக மாயக் கண்ணன் ஒரு கணம் கூட ஓய்வின்றி கர்மம் புரிகிறான்; எடுத்துக் காட்டாக விளங்குகிறான்!

நத்திங் டைஸ்!

 

  1. DUNNE என்பவர் எழுதிய ‘NOTHING DIES’ என்ற நூல் எதுவும் இறப்பதில்லை; யாரும் இறப்பதில்லை என்ற கருத்தை அழகுற விளக்குகிறது!

இறப்பது போலத் தோன்றும் ஒரு உயிர் இன்னொரு இடத்தில் வாழ்கிறது; அது மீண்டும் பூவுலகில் வருகிறது.

 

‘இந்த ஜனன மரணச் சுழற்சியை நீக்க முக்தி அடைவதை குறிக்கோளாகக் கொள்! நீண்ட நெடும் பயணத்தில் அனைவரும் ஒரு நாள் இந்த லட்சியத்தை எய்துவோம்’ என்கிறது  ஹிந்து மதம்!

 

என்ன ஒரு ஆறுதலான செய்தி!

 

 

 

இறந்தவரை மீட்ட சம்பவங்கள்!

 

இன்னும் ஒரு கண்ணோட்டத்தில் வாழ்கின்ற அனைவரும் அவர்கள் ஆற்றிய அனைத்துச் செயல்களும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

 

வல்லவர்கள் அந்த பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எந்தக் காலத்திற்கு வேண்டுமானாலும் பயணப்படலாம்.

 

அதனால் தான் ஞான சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பிக்க முடிந்தது.

கிருஷ்ணர் குரு தக்ஷிணையாக சாந்தீபனி முனிவருக்கு அவரது புதல்வரை காலம் சென்றாலும் வளர்ந்த நிலையில் மீட்டுத் தர முடிந்தது.

சுந்தரர் முதலை வாய்ப்பட்ட சிறுவனை இரு வருடங்கள் கழித்து மீட்டாலும் உரிய வளர்ச்சியுடன் பெற முடிந்தது.

 

அற்புதமான இந்த சுழற்சித் தத்துவம் ஹிந்து மதம் ஒன்றுக்கே உரியது என்பது எவ்வளவு அற்புதமான விஷயம்!

 

சிந்திப்போம்; உரிய வினையை ஆற்றி உயர்வோம்!!

*******