உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! (Post No. 2460)

villi-bharatham

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 5 January 2016

 

Post No. 2460

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

வில்லி பாரதம்

 

உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!

ச.நாகராஜன்

 

வில்லியின் பாணி

 

கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. தங்களின் சிற்ப்புத் தன்மைகளை அவர்கள் காட்டிக் கொண்டே போவர்.அதைக் கண்டுபிடிப்பதில் தான் ரஸிகனுக்கு உற்சாகம்.

நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) அப்போது தானே சித்திக்கும்!

 

வில்லிப்புத்தூராரின் பாணியை ரஸிகனாக உற்சாகத்துடன் பார்க்க ஆரம்பித்தால் ஏராளமான சிறப்பியல்புகளைக் கண்டு பிடித்து அநுபவிக்கலாம்.

 

ஒரு உவமையைச் சொல்லவே சில கவிஞர்கள் தவிப்பர். ஆனால் இரு அடிகளில் மூன்று உவமைகளை அடுக்கி நம்மை பிரமிக்க வைப்பார் வில்லிப்புத்தூரார்.

இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

villi 1

 

மின்னல், வேல், பொன் உவமைகள்

 

“மின்போல் நுடங்க விடைவேல் விழி நீர் ததும்பப்              பொன் போலுருவங் கருகும்படி பூமி போர்ப்ப              அன்போடு அவுணர் மடமாதர் அரற்றும் ஓதை என்போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும்

 

(நிவாதகவசர் காலகேயர் வதை சருக்கம் பாடல் எண் 102)

அர்ஜுனன் ராட்சஸர்களை வதம் செய்து குவிக்கிறான்.

இறந்து போன ராட்சஸர்களின் மனைவிமார்கள் அழுது புலம்புகின்றனர்.

 

 

மின் போல் நுடங்க இடை: அவர்களின் இடைக்கு மின்னலை உவமையாக்குகிறார் கவிஞர். ஒளியும் மெல்லியதாக இருத்தலும் பற்றி இடை மின்னலாக கூறப்படுகிறது.

 

விழிக்கு வேல் உவமை :- கூர்மை கொண்டது. காம நோயை உண்டாக்கி ஆடவரை வருத்துதலால் விழிக்கு வேல் உவமை.

உருவத்துக்குப் பொன் உவமை: நிறம் பொன் போல ஜொலிக்கிறது. பொன் கிடைத்தற்கு அருமையானது. ஆகவே அருமை மற்றும் நிறத்திற்குப் பொன் உவமை ஆனது.

மட மாதர் என்பதால் அழகும் பேதைமையும் கொண்ட பெண்டிர் என்பது உணர்த்தப்பட்டது.

 

அவர்கள் அழும் ஒசை எது போல் இருந்தது என்றால் இடி இடிக்கும் ஓசையைப் போல இருந்தது.

உவமைகளின் குவியல் எப்படி அமைகிறது!

இன்னொரு பாடல்!

 

மின் தாரை, வெண்ணிலா, மேகம் உவமைகள்

 

“மின் தாரை பட வெண்ணிலா வீசு மேகம் கொல் என வந்து முன் நின்றானை முகநோக்கி நீதிக்கொர் வடிவாம் மன் இவை கூறுவான்

 

உன் தாதை தமியனோடு உயவாமல் ஒரு வாசமலர் கொண்டிடச் சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான்

 

புட்பயாத்திரைச் சருக்கத்தில் 130வது பாடல் இது.

வீமனுக்கு இடிம்பியிடம் பிறந்த புதல்வன் கடோத்கஜன். வீமன் தன்னைக் கலந்து ஆலோசியாது ஒரு புஷ்பத்தைக் கொண்டுவரச் சென்றதை கடோத்கஜனிடம் தர்மர் கூறுவதாக அமைந்த பாடல் இது.

 

 

மின் தாரை பட என்பதால்  கடோத்கஜனின் செம்பட்ட மயிர் மின் தாரை போல இருந்தது என்பது பெறப்படுகிறது.

 

வெள் நிலா வீசும் என்பதால் வெண்மையான கோர தந்தங்களை உடையவன் அவன் என்பது பெறப்பட்டது.

 

மேகம் கொல் என்பதால் கரிய பெரிய வடிவமான காளமேகமோ என்று கூறத் தகும் பெரிய வடிவை உடையவன்  அவன் என்பது பெறப்பட்டது.

 

கடோத்கஜனின் தோற்றம் ஒரு கணத்தில் நம் முன்னர் நிறுத்தப்படுகிறது, அடுக்கு உவமைகளால்!

 

அவனை நோக்கி, தர்மர், “உன் தந்தை என்னோடு ஆராயாமல் நறுமணம் கொண்ட மலர் ஒன்றைக் கொண்டு வருவதற்காகப் போய் விட்டான் என்று மனம் வருந்தி அன்புடன் கூறி விட்டு மீண்டும் கூறத் தொடங்குகிறான்” என்பதே பாடலின் பொருள்.

srimad_bhagavad_gita

 

கவிதை தரும் இன்பம்

 

ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

 

கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம்.

 

கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம்.

சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.

வில்லி பாரதத்தில் பல பாடல்களில் இப்படி உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதைக் கற்பதால் வரும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை!

 

வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு!

 

*******

 

 

 

What is Dance, Drama?-1 (Post No. 2459)

natyashastr2

COMPILED LONDON SWAMINATHAN

 

Date: 4 January 2016

 

Post No. 2459

 

Time uploaded in London :–  9-52 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

natyasastra

“In it (Natya) there is no exclusive representation of you or of the gods; for drama is a representation of the state (Bhaavaanikiirtana) of the three worlds.

 

In it sometimes there is a reference to duty, sometimes to game, sometimes to money, sometimes to peace, and sometimes laughter is found in it, sometimes fight, sometimes love making and sometimes killing of people.

 

This teaches duty to those bent on doing their duty, love to those eager for its fulfilment and it chastises those who are ill-bred or unruly, promotes self-restraint, in those who are disciplined, gives courage to cowards, energy to heroic persons, enlightens men of poor intellect and gives wisdom to the learned.

 

This gives diversions to kings, and firmness (of mind) to persons afflicted with sorrow, and (hints of acquiring) money to those who are for earning it, and it brings composure to persons agitated in mind.

 

The drama as I have devised it, is a mimicry of actions and conducts of people, which is rich in various emotions, and which depicts different situations. This will relate to actions of men good, bad and indifferent, and will give courage, amusement and happiness as well as counsel to them all.

 

The drama will thus be instructive to all, through actions and States (Bhaava) depicted in it, and through Sentiments arising out of it.

 

It will give relief to unlucky persons who are afflicted with sorrow and grief or over work, and will be conducive to observance of duty (dharma) as well as to fame, long life, intellect and general good, and will educate people.

 

There is no wise maxim, no learning, no rt or craft, no device, no action that is not found in the drama (natya)

 

Hence I have devised the drama in which meet all the departments of knowledge, different arts and various actions.so (O daityas) you should not have any anger towards the gods;for a mimicry of the world with its Seven Divisions (Sapta Dvipa) has been made a rule of, in the drama.

 

Stories taken out of Vedic works as well as semi historical tales (Itihasa) so embellished that they are, capable of giving pleasure, is called drama (natya).

 

A mimicry of the exploits of gods, Asuras, kings as well as house-holders in this world, is called drama.

 

An when human nature with its joys and sorrows, is depicted by means of Representation through Gestures, and the like (Words, Costume and Temperament) it is called Drama”.

 

—Bharata’s Natya Sastra (200 BCE)

abhinava darpana

What is Drama?-2

“Brahma explains to the Daanavaas:-

This play is not merely for your pleasure or the pleasure of the Devas, but exhibits mood (bhava) for all the Three Worlds. I made this play as following the movement f the world, whether in work or play, profit, peace, laughter, battle, lust or slaughter; yielding the fruit of righteousness to those who follow the moral law, pleasure to those who follow lust, a restraint for the unruly, a discipline for the followers of a rule, creating vigour in the impotent, zeal in warriors, wisdom in the ignorant, learning in scholars, sport to kings, endurance to the sorrow-smitten, profit to those who seek advantage, courage to the broken-willed; replete with diverse moods (Bhaavas), informed with the varying passions of the soul, linked to the deeds of all mankind, the best, the middling, and the low, affording excellent counsel, pastime, weal and all else.

This drama shall be the source of all counsel in matters of flavour (rasa), mood (Bhaava), and every rite; it shall serve as a timely resting-place for those who are grieved, weary, unhappy, or engaged in an arduous discipline; bestowing righteousness, renowned, long life, fortune, increase of reason; affording counsel to the world. That which is not found to be herein in not knowledge, nor craft, nor wisdom, nor any art, nor deeds, nor Union (yoga).

 

I made this drama according to the Seven Lands, and so you should not feel resentment towards the immortals. The drama is to be understood as witnessing the deeds of gods and Titans, kings of the sphere, and Brahma-prophets. Drama is that which accords with the nature (Svabhaava) of the world, with its weal and woe, and it consists in movements of the body and other arts of expressive gesture (Abhinaya). The theatre is such as to afford a means of entertainment in the world, and a place of audience for the Vedas, for philosophy, for history and other matters.

 

He adds that no performance should be begun without fulfilling the Office of the Stage (Ranga-Puja), and those that neglect this ritual will be ruined”.

Abhinaya Darpana

 

FROM THE BOOK ‘ASIA THROUGH ASIAN EYES’, YEAR 1959,SOAS,UNIVERSITY OF LONDON LIBRARY

 

–Subham–

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! வசுதைவ குடும்பகம்!! (Post No. 2458)

best bharat mata

Written by London swaminathan

Date: 4 January 2016

 

Post No. 2456

 

Time uploaded in London :–  8-30 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

“எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர், வாழ்க!” (பாரதியார்)

barati stat3

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனையுடைய நாடு பாரதம். இங்கு வாழ்ந்த சாது சந்யாசிகள், பெரியோர்கள், உத்தமர்கள், சத்யசந்தர்கள், உண்மை விளம்பிகள், ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், மஹநீயர்கள், ஞானிகள் — 3500 ஆண்டுகளாக ஒரே கருத்தை வலியுறுத்துவது, படித்துப் படித்து இன்புறத்தக்கது.

யாதும் ஊரே, யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா –

என்ற புறநானூற்று வரிகளை (புறம் 192) அறியாதோர் யாருமில்லை; கனியன் பூங்குன்றன் இக்கருத்தைச் சொல்லுவது போலவே வடமொழி வாணவர்களும் செப்பி மகிழ்வர். வசுதைவ குடும்பகம்= உலகம் ஒரே குடும்பம் என்பது அவர்கள் கண்ட உண்மை.

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதஸாம்

உதராசரிதானாம் து வசுதைவ குடும்பகம்

—ஹிதோபதேசம், பஞ்ச தந்திரம்

பொருள்:- இது தன்னுடையது, அது பிறருடையது என்பது சின்ன புத்தியுடையோரின் செய்கையாகும்; நற்குணம் பொருந்தியோருக்கோவெனில் இந்த உலகமே ஒரு குடும்பம்.

kanchi best anbe sivam

இந்தக் கருத்து பஞ்சதந்திரத்திலும், ஹிதோபதேசத்திலும் வலியுறுத்தப்படுவதால் இதன் முக்கியம் மேலும் தெளிவாகிறது.

 

பண்டிதா: சமதர்சின:

ஆனால் இதற்கெல்லாம் மூலக் கருத்து கண்ணபிரான் சொன்ன பகவத்கீதையில் இருக்கிறது. ஞான பண்டிதர்களுக்கு நாயும் பசுவும், யானையும் ஒன்றுதான்! அந்தணர்களும் புலையர்களும் ஒன்றுதான். காக்கை, குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்ற பாரதியின் வரிகள் – அவர்களுடைய கருத்தைப் பிரதிபலிக்கிறது.

இதோ பகவத் கீதை ஸ்லோகம்:

வித்யா விநய ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி

சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின:

(பகவத் கீதை 5-18)

வித்யா விநய ஸம்பன்னே = கல்வியும் அடக்கமும் நிறைந்த

ப்ராஹ்மணே = பிராமணனிடத்தும்

கவி ஹஸ்தினி = பசுவினிடத்தும், யானையினிடத்தும்

சுனி ச = நாயினிடத்தும்

ஏவ ச்வபாகே = அவ்வாறே நாயை உண்ணும் புலையனிடத்தும்

பண்டிதாஹா = ஆத்ம ஞானிகள்

ஸமதர்சினஹ = சமநோக்கு உடையவர்கள்.

baba closwe up

இதையே தாயுமானவரும்

எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும்  அவ்வுயிராய்

அங்கிருப்பது நீ யன்றோ பராபரமே – என்பார்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்……..

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமையான் – (திருக்குறள் –972)

என்று வள்ளுவன் இதை இன்னும் அழகாகச் சொல்லுவான்.

பொருள்:– எல்லா உயிர்க்கும் பிறப்பு என்பது ஒரே தன்மையுடையது; அங்கே வேறுபாடில்லை. செய்யும் தொழில்களால் – செயல்களினால் தான் வேறுபாடுகள்.

 

இது எவ்வளவு உண்மை; சிறு வயதில் எத்தனை கதைகள் கேட்டிருக்கிறோம்; ஒரு பெரிய பணக்காரனுக்கு இரண்டு பிள்ளைகள் அல்லது ஒரு ராஜாவுக்கு இரண்டு குமாரர்கள்; ஒருவர் உயர்ந்தார்; மற்றொருவர் தாழ்ந்தார் என்றும் அதற்கான காரணம் என்னவென்றும் விதவிதமாக கதைகள் உள்ளன. அவரவர் செய்தொழிலால்தான் இந்த வேற்றுமைகள். இந்தக் கருது வள்ளுவனுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பிருஹதாரண்யக உபநிஷத்திலுமுள்ளது (பிருஹத் = பெரிய, ஆரண்யக = காட்டு).

 

ந இஹ நானாவஸ்தி கிஞ்சன- ப்ருஹத் ஆரண்யக உபநிஷத்

பொருள்:-இந்த உலகில் உயிர்களிடத்தில் மட்டும் எந்தபேதமும் இல்லை.

சிறுவயதில் ஒரு கதை கேட்டிருப்போம்; உடலின் ஒவ்வொரு உறுப்பும் தான் தான் முக்கியமான வேலையைச் செய்வதாகச் சொல்லி தனகே முதல் மரியாதை வேண்டும் என்னும் கதை அது. தான் ரத்தத்தை எல்லா உறுப்புகளுக்கும் அனுப்பாவிடில் உடலே இயங்காது என்று இதயம் சொல்கிறது. நுரையீரலோ தான் ஆக்சிஜனைக் கொடுத்து, கரியமிலவாயுவை வெளியேற்றாவிடில் உடலில் நீலம் பாய்ந்து இறக்க நேரிடும் என்கிறது. மூளையோ தந்து உத்தரவுப்படியே நரம்புகள் செயல்படுகின்றன; ஒருவனுடைய மூளை இறந்துவிட்டால் இதயம் என்ன செய்ய இயலும்? என்று சொல்கிறது. இதே போல கை, கால், கண், மூக்கு, வாய், செவி, தோல் எல்லாம் சண்டையிடுகின்றன. ஆனால் இக்காலத்தில் ஒரு சிறுவனுக்குக் கூடத் தெரியும் உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானவை; ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அவன் உடலூனமுடையவனே என்று.

 

இதை ரிக்வேதமும் புருஷசூக்தத்தில் (10-8-90) அழகாகச் சொல்லும்; பிராமணன் என்பவன் சிந்திப்பவன்; க்ஷத்ரியன் என்பவன் தோள்வலியால் நாட்டையும் மக்களையும் காப்பவன்; வைஸ்யன் என்பவன் தொடை வலிமையால் வணிகம் செய்து காப்பான்; சூத்திரன் என்பவன் கால் வலிமையால் உழைத்துக் காப்பான் என்று.

ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத்,

பாஹூ ராஜன்ய க்ருத:

ஊரு ததஸ்ய யத் வைச்ய:

பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத

பொருள்: பிரம்மாவை தேவர்கள் பலியிட்டபோது அவருடைய முகம் பிராமணனாகவும், கைகள் க்ஷத்ரியனாகவும், தொடைகள் வைச்யனாகவும், பாதங்கள் சூத்ரனாகவும் ஆயின.

 

at_the_feet_of_god_medium

எப்படி ஒரு உறுப்பில்லாமல் உடல் நன்கு செயல்படாதோ அப்படியே இந்த நான்கு வர்கமும் எந்த நாட்டிலும், எப்போதுமிருக்கும்! ஆனால் பிறப்பின் அடிப்பையிலன்றி செய்தொழிலின் அடிப்படையில்.

பிற்காலத்தில் இது வேறுபட்டது. முன்காலத்தில் சேர,சோழ, பாண்டிய மன்னன் மகன்கள் தான் ராஜாவாக இருக்கமுடியும். இன்றும் பிரிட்டனில் ராஜா அல்லது ராணி மகன் தான் அரசுகட்டிலில் ஏற முடியும். இன்றும்  நார்வே, சுவீடன், மொனாகோ என்று ஏராளமான நாடுகளில் இந்த வழக்கமுளது.பிரிட்டனில் பிரபுக்கள் மகன்தான் பிரபுவாகிறான். பரம்பரை மூலமே பிரபுக்கள் சபையில் இடம் பெறமுடியும். இந்திராகாந்தி, ராஜமான்யத்தை ஒழித்தபின்னர்தான் ஒவ்வொரு நாடாக அதைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா போன்ற பலநாட்டு மக்கள் இன்றும் பிரிட்டிஷ் ராணியை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது பிறப்பே, பதவியை முடிவு செய்கிறது! அதில் யாரும் தவறு கானவில்லை. ஒவ்வொரு தடவைக் கருத்துக் கணிப்பு நடக்கையிலும் ராஜா ராணிக்குப் பெரும்பானமை மக்கள் அதாரவு இருக்கிறது!

எதுவுமே மக்கள் பார்க்கும் பார்வையிலும், ராஜ குடும்பத்தினரின் செயல்பாட்டிலும்தான் இருக்கிறது. ஆக பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது கூட காலத்துக்கு காலம், நாட்டுக்கு நாடு வேறு படும். ஆனால் இந்திய ஆன்ம ஞானிகளுக்கு எல்லாம் எப்போதும் ஒன்றே.

ஒன்றே குலம், ஒருவனே தேவன் (திருமூலர்)

 

894_Bhagwat_Gita_thumb[13]

–சுபம்–

 

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்! (Post No. 2457)

kambaar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 4 January 2016

 

Post No. 2457

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

kambar2

இராமாயண வழிகாட்டி

 

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி கம்பனின் திறமை

 

மஹாகவிகளின் மனம் ஒரு பெரும் சாகரம் போன்றது. அகன்றது. ஆழ்ந்தது. பல்வேறு நற்பொருள்களைக் கொண்டுள்ள பாற்கடல் போன்றது. அங்கு நாம் விரும்பித் தேடினால் கற்பக மரம் கிடைக்கும் காமதேனு கிடைக்கும்!

மஹாகவி கம்பனின் இராம காதை பாற்கடல் போல அமைந்த சுவை சாகரம்!

சுந்தர காண்டத்தில் ஒரு பாடல்.(நிந்தனைப் படலம் 50ஆம் பாடல்)

 

 

 

மனிசனால் அழிவா?

 

இராவணன் சீதையை அசோகவனத்தில் சந்தித்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறான். இதனால் வெகுண்ட சீதை, “உனக்கு அழிவு காலம் வந்து விட்டது. அழியப் போகிறாய்” என்று கூறுகிறாள்.

 

கேவலமான ஒரு “மனிசனால்” தனக்குச் சாவு என்பதை நினைத்தாலே இராவணனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஆனால் இங்கு சீதை ‘இராவணஜித்’தைப் பற்றிச் சொல்கிறாள்.

இராவணஜித் என்றால் இராவணனை வென்றவன் என்பது பொருள்.

 

இராவணனை வெல்ல இருப்பவன் இராமன் ஆயிற்றே. அப்படியானால் இராவணஜித் யார்?

 

மானுயர் இவர் என மனங் கொண்டாயோ எனின்                

கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்                    

தானொரு மனிதனாற் தளார்ந்துளா எனில்                    

தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்

 

 

பாடலின் பொருள்: இந்த இராமனை மனிதன் என்று அலட்சியமாக நினைத்தாய் எனில் (ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்!)

 

காட்டில் உயர்ந்து தோன்றுகின்ற மலைகளை நிகர்த்த கார்த்த வீர்யாஜுனன் பரசுராமன் என்னும் ஒரு மனிதனால் வலிமை ஒருங்கினான். அல்லவா? அந்த பரசுராமனின் வலிமையையும் ஒடுக்கிய தேன் நிறைந்த மலர் மாலையை அணிந்த இராமபிரானது தன்மையை ஆலோசித்துப் பார்!

 

இங்கு கார்த்த வீர்யார்ஜுனனைப் பற்றியும் பலராமனைப்பற்றியும் சீதை குறிப்பிடுவதை கவிஞருக்கே உரிய தனித் தன்மை  மூலம் ஒரு இரகசியக் குறிப்பை அறிவிப்பதில் கம்பன் தன் திறமையைக் காட்டுகிறான்.

 

 

கார்த்தவீர்யார்ஜுனனே இராவணஜித்

 

முன்னொரு காலத்தில் நடந்த விஷயம்!

அனைவரையும் வெல்ல வேண்டும் என்ற வெறியில் திக்விஜயம் செய்த இராவணன் மாகிஷ்மதி நகருக்கு வந்தான். அதை ஆண்டு வந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்ட மாவீரன்.

அந்த நகரத்தில் உள்ளோர்,” எங்கள் மன்னர் தமக்குரிய பெண்களுடன் நீர் விளையாட நர்மதை நதிக்குச் சென்றிருக்கிறார்” என்று கூறினர்.

உடனே இராவணன் நர்மதை நதிக்கு வந்தான். அதில் நீராடி மணலால் சிவலிங்கம் அமைத்துச் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.

 

 

நர்மதியின் மேற்குக் கரையில் இருந்த கார்த்தவீர்யார்ஜுனனுக்கு தனது நீர் விளையாடலுக்கு நர்மதை நதி போதுமானதாக இல்லை. ஆகவே ஐநூறு கைகளினால் ஓடுகின்ற நீரைத் தடுத்து அணை கட்டி மீதி இருக்கும் ஐநூறு கைகளைக் கொண்டு பல வித விளையாட்டுக்களைச் செய்து மகிழ ஆரம்பித்தான்.

எதிர்த்து ஓடி வரும் நீரானது இராவணன் பக்கம் வரவே தனது மணலால் ஆன சிவலிங்கம் அழிந்து விடுமே என்று ஆவேசப்பட்ட இராவணன் கார்த்தவீர்யார்ஜுனன் மீது பாய்ந்தான்.

அவனோ இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லையே.

தன் இருபது கரங்களினால் இராவணனைப் பற்றித் தூக்கினான். இதர 980 கைகளினால் அவனைத் துன்புறுத்தியவாறே மாகிஷமதி நகர் சென்று அங்கு இராவணனைச் சிறையில் அடைத்தான்.

நடந்ததை அறிந்த விபீஷணன் ஓடோடிச் சென்று  பாட்டனாராகிய புலஸ்தியரிடம் நடந்ததைச் சொன்னான்.

உடனே புலஸ்தியர் கார்த்தவீர்யார்ஜுனனிடம் வந்தார். மத்யஸ்த பேச்சு துவங்கியது.

 

 

உனக்கு “இராவணஜித்” என்ற பட்டப்பெயரைத் தருகிறேன். அவனை விட்டு விடு என்றார்.

திக்விஜயம் செய்ய வந்தவனையே வெல்லும் பட்டம் தனக்குக் கிடைக்க இராவணனை சிறையிலிருந்து விடுவித்தான் கார்த்தவீர்யார்ஜுனன்.

 

yakshagana

இராவணஜித்தை வென்ற பரசுராமன்

 

அப்படிப்பட்ட மாபெரும் வீரன் ஒரு சமயம் ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் சென்று அங்கு விருந்துண்டு மகிழ்ந்தான். அங்கிருந்த பல வளங்களுக்கும் காரணம் அவரிடமிருந்த ஓமதேனு என்பதை அறிந்த அவன் அதைக் கவர்ந்து சென்றான்.

இதை அறிந்த ஜமதக்னியின் புதல்வரான பரசுராமர் வெகுண்டெழுந்தார்.

 

 

அவனுடன் போர் செய்யப் புறப்பட்டார். கார்த்த வீர்யனின் பதினோரு அக்ஷௌகினி சேனையை அழித்தொழித்து அவனது ஆயிரம் தலைகளையும் தோள்களையும் தனது கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வெற்றி கொண்டார்.

சீதை இந்த வரலாறை இலேசாக ஞாபகப்படுத்தினாள் இராவணனுக்கு.

 

 

பரசுராமனை வென்ற இராமபிரான்

 

“உன்னை வென்றவனை- இராவணஜித்தை – கார்த்தவீரியனை வென்றானே பரசுராமன், அவனையும் வென்ற மாவிரன் இராமன்.

உன்னை வென்றவனை வென்றவனை வென்றவன் அவன்” – இது தான் சீதை சொன்ன சேதி!

 

 

அழகுற நான்கே அடிகளில் கம்பன் மாபெரும் வரலாற்றைச் சொல்லி தன் நயத்தையும் தான் கருப்பொருளாக எடுத்துக் கொண்ட நாயகன் நயத்தையும் காட்டுகிறான்.

கம்பன் போல் ஒரு கவிஞன் இனிப் பிறப்பானா!

*******

 

God forgives sins, otherwise heaven would be empty! (Post No. 2456)

diamond linga, ambani, rs50 crore,fb

Date: 3 January 2016

 

Post No. 2456

 

Time uploaded in London :–  8-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

2.One Hundred Quotations on God!—Part 2

(First Part was published yesterday)

 

cute krishna, fb

51.Divine grace was never slow.

(Lord Shiva is known as Asutosh, one who is easily pleased; that is why all the demons got boons from him quickly and easily)

52.God’s grace and piling moss are boundless (Piling Moss is a large stretch of land near Fleetwood.)

53.Well thrives he whom loves.

54.Who has god for his friend has the saints in his pocket.

55.Whom god loves, his bitch brings forth pigs.

56.When god loathes aught, men presently loathe it too(A reference to the dangers of losing god’s grace).

57.The grace of god is enough.

58.The grace of god is worth a fair.

59.God moves in a mysterious way (William Cowper 1731-1800)

60.Afflictions are sent to us by god for our good.

 

anjaneya near vijayawada

61.God heals, and the physician has the thanks.

62.God gives his wrath by weight, and without weight his mercy.

63.The most high god, sees, and bears; my neighbour sees nothing, and yet always finding fault.

64.God forgives sins, otherwise heaven would be empty.

65.He who forgives others, god forgives him (Arabic proverb).

66.Who errs and mends, to god himself commends (God forgives the repentant)

 

77.God comes with leaden feet, but strikes with iron hands (God is not quick  to punish, allowing time for repentance, but when he strikes, it is with force).

78.The feet of the avenging deities are shod with wool(A warning of the silent approach of divine retribution)

79.God is a sure pay master.

bairagi matam2

Devil and God (Deva and Asura)

80.The believers never get disappointed; this is the verdict of the Four (Hindu) Vedas.

81.The devil is god’s ape (Devil strives to counterfeit or parody the works of god)

82.Where god has his church, the devil will have his chapel.

83.Where God dwells, the devil also has his nest.

(atheists will always be there)

84.God sends the corn and the devil mars the sack

85.That which god will give, the devil cannot reave (reave means ‘take away’)

 

God and Man

86.God makes and man shapes

87.God made the country, and man made the town

88.Man does what he can, and God what he will.

89.Man proposes, God disposes.

90.God is Omnipotent, Omniscient and Omnipresent.

 

 

bangle meenakshi, madurai

Ramakrishna Paramahamsa on God:–

91.God is beyond all attributes.

92.God alone is true; his manifestations as living beings and the world are untrue (non-eternal)

93.Those who describe god has never seen Him; those who has seen him never described Him (he is beyond words)

94.God the absolute and god the personal are one and the same.

95.God is formless and god is possessed of form too. He is also that which transcends form and formlessness.

96.God with form is visible. Yes, we can touch him and talk to him face to face as with our own dearest friend.

97.Serving a poor man is serving god.

98.The more you advance towards god, the more you will find his attributive grandeur falling off.

99.God appears in various ways – sometimes in human form, sometimes as a spiritual expression.

100.God oft has a great share in a little house.

 

durga beauty

Tamil Poet Tiruvalluvar on God:-

101.As all alphabets have the letter ‘A’ for their first, so that the world God for its beginning.

102.No ills of life ever touch those that alone cling to the feet of God

103.God is beyond likes and dislikes.

104.God abides in the lotus shaped region of a devout heart.

105.God is incomparable Divine

106.God is Ocean of Virtue.

  1. God is love – Tamil Poet Tirumular

–subham-

ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”(Post No. 2455)

frogs

Date: 3 January 2016

 

Post No. 2455

 

Time uploaded in London :–  7-41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

செல்லும், செல்லாததுக்குச் செட்டியார் இருக்கிறார்!

 

(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நூலிலிருந்து; புத்தகம் தந்தவர்: ச.சீனிவாசன், சென்னை).

திருடனுக்குப் பயந்து ஒரு ரோட்டின் ஓரத்தில் மணியகாரன் ஒருவனும்,  செட்டியார் ஒருவனும் கத்தாழைப் புதருக்கு மறைவில் படுத்திருந்தார்கள். திருடர்கள் அவ்வழியே வேகமாகச் செல்லுகையில் படுத்திருந்த மணியக்காரன் காலில், திருடனின் காலிடறியது.

 

அப்போது இவர்கள் படுத்திருப்பதையறியாத திருடன், ‘இதென்ன பாதையில் கட்டை விழுந்து கிடக்கிறது? என்றான். அதற்கு மணியகாரன் சும்மாவிராமல், “உங்கள் வீட்டுக் கட்டை இப்படித்தான் ஐந்து பணத்தை முடித்துக்கொண்டு படுத்திருக்குமோ?’ என்றான். இதைக் கேட்ட திருடர்கள், அவனிடமிருந்த ஐந்து பணத்தை அபகரித்துக்கொண்டனர்.

 

இது செல்லுமோ, செல்லாதோ? என்று ஒரு திருடன் கேட்கப் பறிகொடுத்த மணியகாரன், “செல்லும், செல்லாததைப் பார்க்க இதோ செட்டியார் படுத்திருகிக்கிறாரே; அவரிடம் கேட்டால் போச்சு “ என்றான். உடனே திருடர்கள், அந்த செட்டியையும் பிடித்து அவனிடமிருந்த நூறு பவுன்களையும் அடித்துப் பறித்துக்கொண்டு இருவரையும் செம்மையாய்ப் புடைத்துவிட்டுச் சென்றார்கள்.

“நுணலும் தன் வாயால் கெடும்” – தமிழ்ப் பழமொழி (நுணல்= தவளை)

-சுபம்-

 

 

 

 

சென்னை மழையில் உலராத மன ஈரம் (Post No. 2454)

chennai rain 9

Date: 3 January 2016

 

Post No. 2454

 

Time uploaded in London :–  6-19 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஹிந்து இந்தியா

 

 

ஹிந்து பரம்பரையின் நற்பண்புகள் எந்நாளும் தொடரும்!

 

.நாகராஜன்

 

சென்னை மழையில் உலராத மன ஈரம்

 

 Suruji-Chennai

சமீபத்திய சென்னை மழை ஒன்றை உலகிற்கு உணர்த்தி விட்டது. பெரு வெள்ளத்தால் ஈரமான பூமி கூட ஒரு நாள் உலர்ந்து விடும், ஆனால் ஹிந்து பரம்பரையில் ரத்தத்தில் ஊறி உள்ள அவனது ஈரத்தை யாராலும் அகற்ற முடியாது.

ஈர மனம் என்றுமே ஈர மனம் தான் என்பதை ஹிந்து இந்தியா நிரூபித்து விட்டது.

 

 

உ;பியிலிருந்து பண உதவி, கேரளத்திலிருந்து பல கார்களில் ஏராளமான உதவிப் பொருள்கள், கர்நாடகத்திலிருந்து அலை அலையாக கார்களில் வந்த தன்னார்வத் தொண்டர்கள் துன்பப்பட்டவர் யாராயிருந்தாலும் சரி அவர்களுக்குத் தேவையான பொருள்களைத் தருதல் என இப்படி மதம், ஜாதி, அந்தஸ்து, மாநிலம், மொழி என எதையும் பாராது உதவி செய்வது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டனர் அனைவரும்!

 

 

இன்றைய அரசியல்வாதிகளில் மோசமானோர் சிலர் இந்த நிலையிலும் ஒட்டை மனதில் நினைத்து இயற்கைச் சீற்றத்திலும் கூட அரசியல் ஆதாயம் பார்த்த நேரத்தில் மக்கள் தாங்கள் ஒரு பெரும் ராஜ பரம்பரையில் வந்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டனர்.

 

 

ஹிந்து மண்ணின் வாசனையை எந்த முகலாயப் படையெடுப்பு ஆக்கிரமிப்பினாலும். எந்த ஆங்கிலேய ஆட்சியினாலும் போக்க முடியவில்லை; முடியாது என்பதை இந்த ஈர நெஞ்சங்கள் நிரூபித்து விட்டன.

chennai rss

இது ஒன்றும் புதிதில்லை.

 

 

வரலாறு நெடுக லட்சக்கணக்கான சம்பவங்கள் ஒரே பாரதம் என்ற உணர்வை மக்கள் தொன்று தொட்டுக் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிக்கின்றன.அவர்களின் அறப்பண்புகள் இந்தியா முழுவதும் பரவி ஒரே மாதிரியாக இருப்பவை என்பதையும் நிரூபிக்கின்றன.

 

 

அனைத்தையும் தொகுத்தால் பல கலைக்களஞ்சியங்களாகி விடும்.

மாதிரிக்கு ஒரு சில சம்பவங்களின் தொகுப்பைக் கீழே காணலாம்.

 

chennai rss2

சுனாமியில் நிகழ்ந்த ஒரு சம்பவம்

 

சுனாமி சென்னையைத் தாக்கிய சமயம் அது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி நாகைப்பட்டினமே அல்லோலகல்லோலப் பட்டது.தொடுவை என்ற ஊரிலிருந்த ராஜலக்ஷ்மி- ஜயகுமார் தம்பதி தங்கள் அருமைக் குமாரனை சுனாமிக்கு பலி கொடுத்து விட்டனர்.தமிழ்நாடு அரசு இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ஒரு லட்சம் தந்தது. ஜயகுமாருக்கும் ஒரு லட்சம் கிடைத்தது.

 

 

ஆனால் 2005 மார்ச் மாதம் 5ஆம் தேதியன்று ஜயகுமாருக்கு ஒர் நற்செய்தி கிடைத்தது.அவரது நண்பர் ஒருவர் தான் அந்த நற்செய்தியை அவரிடம் கூறினார்.

 

 

ராட்சஸ அலையினால் தூக்கிச் செல்லப்பட்ட ஜயகுமாரின் புதல்வர் வேளாங்கண்ணியில் 50 மைல் தூரத்திற்கு அப்பால் உயிருடன் பிழைத்துக் கொண்டார்.

இதைத் தெரிந்து கொண்ட தம்பதியினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

 

 

உடனடியாக அவர்கள் செய்த காரியம் என்ன தெரியுமா? அந்த ஏழை தம்பதியினர் நாகை மாவட்ட கலெக்டர் ஜே.ராதாகிருஷ்ணனைச் சந்தித்தனர். தங்கள் மகன் உயிருடன் இருக்கும் செய்தி கிடைத்து விட்டதாகவும் ஆகவே அரசு தந்த ஒரு லட்ச ரூபாயைத் திருப்பித் தர வந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

 

அனைவரின் மனமும் கசிந்தது. யாரும் அவர்களிடம் பணத்தைக் கேட்கவில்லை.

 

அந்தப் பணம் இன்னொருவருக்கு உதவட்டும் என்ற நோக்கில் அங்கு உடனே வந்த அவர்களைத் தூண்டியது எது?

அவர்கள் உடலில் ஓடுகின்ற ஹிந்து சக்தி!

khrushchev DDR STAMPS_zpsugatzps9

குருஷேவின் வியப்பு

 

ரஷியாவில் கொடி கட்டிப் பறந்த ரஷிய பிரதம மந்திரி நிகிதா குருஷேவ் 1954இல் டெல்லிக்கு வந்தார். தனது பேண்டுகள் இரண்டை துவைத்து அயர்ன் செய்ய சலவைக்காரரிடம் தந்தார். துணிகளைத் திருப்பித் தர வந்த சலவைக்காரர் அவர் பையில் நானூறு ரூபாய் இருந்ததாகக் கூறி அதைத் தந்தார். “உங்கள் நாட்டின் பாரம்பரியத்தை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்” என்று உணர்ச்சி ததும்பக் கூறினார் குருஷேவ்.

 

 

பொய் சொல்லாத ஹிந்து

 

சுமார் நூற்றிஅறுபது ஆண்டுகளுக்கு முன்னர் துக்கீயர்களைக் கொடுமைப்படுத்துவதற்கு பெயர் பெற்ற ஸ்லீமன் (SLEEMAN), “ “ஒரே ஒரு பொய் சொன்னால் போதும், வீடு, மானம், மரியாதை, அனைத்தும் காப்பாற்றப்படும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான சம்பவங்களை என் வாழ்வில் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு ஹிந்து எந்தக் காலத்திலும் எதை இழப்பதாயிருந்தாலும் பொய் சொல்லி நான் பார்த்ததில்லை” என்றான்.

 

chennai4

போர்த்துக்கீசியரின் வியப்பு

 

500 ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கீய நாட்டைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டின் ஒரு ப்குதியைப் பிடித்த போது அவர்கள் பிடித்து வைத்த ஹிந்து போர் வீரர்களை பரோலில் ஆறு மாதம் அனுப்ப பிணைத்தொகை கட்டி விட்டுத் தான் போக வேண்டும் என்று ஆணையைப் பிறப்பித்தனர். ஆனால் அப்படி பிணைத்தொகையைக் கொடுக்க ஆளில்லாத போர்வீரர்கள் பணம் கொடுக்க தங்களுக்கு யாரும் இல்லை என்று கூறித் தாமாகவே போர்த்துக்கீசியரிடம் திரும்ப வந்ததை அவர்கள் வியப்புடன் நோக்கினர்.

ஒரு ஹிந்துவை யாராலும் பொய் சொல்ல வைக்க முடியாது; அதை விட மரணத்தை அவன் ஏற்பான் என்று எழுதி வைத்தனர்.

 

 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் கிரேக்க வரலாற்றாசிரியன் மெகஸ்தனிஸ் ஒரு ஹிந்து எப்போதுமே, எந்த நிலையிலும் பொய் சொல்ல மாட்டான் என்று எழுதி வைத்தான். அது இன்று வரை தொடர்வதைப் பார்க்கும் போது நமக்கு பெருமிதம் பொங்குவது இயல்பே!

 

 

ஹிந்துவின் அறப்பண்புகள் பொய் சொல்லாமை, திருடாமை, நாணயத்துடன் இருத்தல், ஹிந்து காலம் மாறலாம்; மோசமான அரசியல்வாதிகள் மாறி மாறி வரலாம்.

 

ஆனால் ஒரு நாளும் அவனது அடிப்படை அறப்பண்புகள் மாறாது.

ஆஸேது ஹிமாசல் – சேது முதல் இமயம் வரை ஹிந்து இந்தியா ஒன்று தான்.

 

ஹிந்துவின் தர்மம் ஒன்றே தான்!

 

அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்பது தான் நமது தேசீய தர்மம். இது உலக தர்மமும் கூட.

 

சொல்லவொணாத் துன்பத்தைச் சென்னையில் தந்த இயற்கைச் சீற்றம் நமக்கு ஆறுதலாக விட்டுச் செல்லும் செய்தி நமது பண்டைய அறப்பண்புகள் நம்மை விட்டு நீங்கவில்லை என்பதே!

–Subham-

 

 

One Hundred Quotations on God!—Part 1 (Post No. 2453)

bhakti

Date: 2 January 2016

 

Post No. 2453

 

Time uploaded in London :–  15-10

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

If you have faith: God is “now here”!

If you don’t have faith God is “nowhere”!!

 

betel leaf mala

1.God is the help of those who need help.

2.God stays long but strikes at last.

3.The mill of God grinds late, but grinds to powder.

4.Even if the God is willing to help, the priest is not ready to allow him.

5.As all the alphabets have letter A for their first, so has the world the eternal god for its beginning.

 

6.No ills of life ever touch those that alone cling to the feet of god.

 

7.God is above all.

8.All must be as god will

9.That god will have see, shall not wink.

10.Where god will help, nothing does harm.

 

 

11.What god will, no frost can kill.

12.When god will, no wind but brings rain.

13.The tree that god plants, no wind hurts it.

14.All things are possible with god.

15.When it pleases not god, the saint can do little.

16.He sits above that deals acres.

bangaluru perumal

17.Do the likeliest, and god will do the best.

18.God complains not, but does what is fitting.

19.God is no botcher.

20.God knows well which the best pilgrims are.

 

 

21.They are well guided that god guides.

22.To whom god gives the task, he gives the wit.

23.If god does not give us what we want he gives us what we need.

 

24.That never ends ill which begins in god’s name.

25.God, and parents, and our master, can never be requited.

 

26.God is a good man.

27.He who serves god, serves a good master.

 

28.God tempers the wind to shorn lamb.

29.God makes the back for the burden.

30.God sends cold after clothes.

 

ardhanari, dwarapudi, AP

31.Since god has not bent the top of the palm-tree, he has given a long neck to the giraffe (Arabic Proverb)

32.God strikes not with both hands, for to the sea he made heavens, and to rivers fords.

33.Heaven takes care of children, sailors, and drunken men.

34.God strikes with his finger, and not with all his arm.

35.God comes at last when we think he is farthest off

36.God provides for him that trusts.

37.He that sows, trusts in god.

38.God never sends mouth but he sends meat (When a new child is born god will always provide sufficient food for it).

39.The constancy of the benefit of the year in their seasons argues a Deity.

40.God helps them that help themselves.

 

14727_779716662082741_4768742221132287102_n

41.God reaches us good things by our own hands.  42.We must not lie down and cry, “God help us.”

43.God is a good worker, but he loves to be helped.

44.God gives the grain, but we must make the furrow (Bohemian Proverb)

45.For a web begun god sends the thread

46.God gives, but he does not lock the gate of the fold (Bulgarian Proverb).

47.Get thy spindle and thy distaff ready and god will send thee flax.

48.Man’s extremity is god’s opportunity (God is best able to help when man most needs him)

49.God’s help is better than early rising.

50.God’s help is nearer than the fair even.

 

Please see 50 more quotations in second part…………………………

To be continued………………………………………….

 

–Subham–

நகைச் சுவைக் கதை! மனைவியாற் பட்டபாடு! (Post No. 2452) Date: 2 January 2016 Post No. 2452 Time uploaded in London :– 14-40 ( Thanks for the Pictures ) DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. முன்னர் வெளியிட்ட கதையின் தொடர்ச்சிக் கதை:– இவ்வாறு நான் துபாஷ் வேலையில் தகல்பாஜி அன்னாத்தைகளுடன் தமாஷாயிருக்கும்போது, எனது குரு என்னைப் பார்க்க வந்தார். முன்னரே எனக்கும், அவருக்கும் ஒரு சபதமுண்டல்லவா? ஆகையால் அவர் வந்தவுடன் மெதுவாய்க் கொல்லைப்புஅம் போய், என் மனைவி நாறவல்லியை நயந்து, அடிபணிந்து, “அம்மணீ! பரதேவதா! உனக்குப் புண்ணியமுண்டே; ப்ருஷார்த்தமுண்டே; இகமுண்டே, பரமுண்டே, எல்லாமுண்டே. இன்று என் குரு வந்திருக்கிறார். ஓம், பாக்யவதி, ஐம்பது வசவு உன்னை வைவேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” – என்று வேண்டினேன். உடனே ஜகஜண்டி மனமிரங்கி, ஒரு வசவு ஜாஸ்தியாப் போனாலும் வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிவிடுவேனென்றாள். நானும் சாப்பிட்டு முடிவதற்குள் ஐம்பது வசவு ஆகாதென்று மனம் தேறி உள்ளே வந்து, என் குரு முன்னிலயில் நின்று, “ ஜலமேண்டி தூக்கவில்லை, லவண்டி, பருப்பேண்டி கடையவில்லை பத்ரகாளி, பெருக்காமலிருக்கிறாயே பெருச்சாளி, தலைமயிர் ஏன் அவிழ்ந்திருக்கிறது தடிமுண்டே” என்று பிரண்டையின் மேல் வண்டிக்காலுருண்டதுபோல், மனங்கொண்டது மாளிகையாய் வைதேன். அவளும் கணக்கெண்ணிக்கொண்டு வந்தாள். எனது குருவும் எனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்திருக்கிறாளென்று உள்ளமகிழ்ந்தார். சமையல் ஆயிற்று. சாப்பாட்டிற்கு உகார்ந்தோம்.என் சம்சாரம், ரசம் ஒரு சட்டியிலெடுத்துவது வார்க்கவந்தாள்; வசது ஐம்பதும் தீர்ந்துவிட்டது எனக்குத் தெரியாது. குருவின் இலையில் ரசத்தை விடவும், ஒரு துளி சிதறி அவர்துடையில் விழ அவர் ‘உஸ்’ அப்பாடா, என்றார். உடனே நான் கோபித்து, “கொட்டினாளா பரத்தை” என்று திட்டினேன். அதற்கவள், என்னை முறைத்துப் பார்த்து ‘ஆமடாபிலே, வெள்ளான்பிலே’ என்று கூறி என் தலையில் சட்டியைப் போட்டுக் கரண்டிக்காம்பாலடித்து, “வெட்கங்கெட்ட வெங்கம், ஐம்பது வசவுக்கு மேல் பொறுக்கமாட்டெனென்று சொல்லவில்லையோடா; ஆலி பூதமே! பின்னழலாம். முன்னே ரசச் சட்டிக்காசை கீழே வை” – என்றாள். அப்போது நான் ரசமெல்லாம் மேலே ஒழுகிக் கழுத்தில் சட்டிவாய் மாட்டிக் கன்றிச் சிவந்து திகுதிகுவென்றெரிய,’இஞ்சி தின்ற குரங்கு போல்’ விழித்தேன்.எனது குருவோ பயந்து நடுங்கிக் கொண்டு, “வீணாயுடைத்தது வேணதுண்டு என் தலையில் இந்தப் பூணாரம்பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை” –என்று கூறிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிட்டார். –சுபம்–

Angry Wife in the Elevator(1)

Date: 2 January 2016

 

Post No. 2452

 

Time uploaded in London :–  14-40

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

முன்னர் வெளியிட்ட கதையின் தொடர்ச்சிக் கதை:–

இவ்வாறு நான் துபாஷ் வேலையில் தகல்பாஜி அன்னாத்தைகளுடன் தமாஷாயிருக்கும்போது, எனது குரு என்னைப் பார்க்க வந்தார். முன்னரே எனக்கும், அவருக்கும் ஒரு சபதமுண்டல்லவா? ஆகையால் அவர் வந்தவுடன் மெதுவாய்க் கொல்லைப்புஅம் போய், என் மனைவி நாறவல்லியை நயந்து, அடிபணிந்து, “அம்மணீ! பரதேவதா! உனக்குப் புண்ணியமுண்டே; ப்ருஷார்த்தமுண்டே; இகமுண்டே, பரமுண்டே, எல்லாமுண்டே. இன்று என் குரு வந்திருக்கிறார். ஓம், பாக்யவதி, ஐம்பது வசவு உன்னை வைவேன். நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்” – என்று வேண்டினேன். உடனே ஜகஜண்டி மனமிரங்கி, ஒரு வசவு ஜாஸ்தியாப் போனாலும் வட்டியும் முதலுமாய் வசூல் பண்ணிவிடுவேனென்றாள்.

 

நானும் சாப்பிட்டு முடிவதற்குள் ஐம்பது வசவு ஆகாதென்று மனம் தேறி உள்ளே வந்து, என் குரு முன்னிலயில் நின்று, “ ஜலமேண்டி தூக்கவில்லை, லவண்டி, பருப்பேண்டி கடையவில்லை பத்ரகாளி, பெருக்காமலிருக்கிறாயே பெருச்சாளி,  தலைமயிர் ஏன் அவிழ்ந்திருக்கிறது தடிமுண்டே” என்று பிரண்டையின் மேல் வண்டிக்காலுருண்டதுபோல், மனங்கொண்டது மாளிகையாய் வைதேன். அவளும் கணக்கெண்ணிக்கொண்டு வந்தாள். எனது குருவும் எனக்கு நல்ல பெண்டாட்டி வாய்த்திருக்கிறாளென்று உள்ளமகிழ்ந்தார். சமையல் ஆயிற்று.

 

சாப்பாட்டிற்கு உகார்ந்தோம்.என் சம்சாரம், ரசம் ஒரு சட்டியிலெடுத்துவது வார்க்கவந்தாள்; வசது ஐம்பதும் தீர்ந்துவிட்டது எனக்குத் தெரியாது. குருவின் இலையில் ரசத்தை விடவும், ஒரு துளி சிதறி அவர்துடையில் விழ அவர் ‘உஸ்’ அப்பாடா, என்றார். உடனே நான் கோபித்து, “கொட்டினாளா பரத்தை” என்று திட்டினேன். அதற்கவள், என்னை முறைத்துப் பார்த்து ‘ஆமடாபிலே, வெள்ளான்பிலே’ என்று கூறி என் தலையில் சட்டியைப் போட்டுக் கரண்டிக்காம்பாலடித்து, “வெட்கங்கெட்ட வெங்கம், ஐம்பது வசவுக்கு மேல் பொறுக்கமாட்டெனென்று சொல்லவில்லையோடா; ஆலி பூதமே! பின்னழலாம். முன்னே ரசச் சட்டிக்காசை கீழே வை” – என்றாள்.

Angry_Wife_Cha

அப்போது நான் ரசமெல்லாம் மேலே ஒழுகிக் கழுத்தில் சட்டிவாய் மாட்டிக் கன்றிச் சிவந்து திகுதிகுவென்றெரிய,’இஞ்சி தின்ற குரங்கு போல்’ விழித்தேன்.எனது குருவோ பயந்து நடுங்கிக் கொண்டு,

“வீணாயுடைத்தது வேணதுண்டு என் தலையில் இந்தப்

பூணாரம்பூண்ட புதுமைதனைக் கண்டதில்லை”

–என்று கூறிக்கொண்டு சிட்டாய்ப் பறந்துவிட்டார்.

–சுபம்–

மாணாக்கராற்றுப்படை: பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

IMG_1490

 

Date: 2 January 2016

 

Post No. 2451

 

Time uploaded in London :–  7-58 (காலைப்பொழுது)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பொன்ற ஆற்றுபடை நூல்களை நாம் படித்திருக்கிறோம். அதே வழியில் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஒரு நூலை பின்னத்தூர் பிரம்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயர், 1900 ஆம் ஆண்டில்  யாத்தார். இந்த அரிய நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதற்கு உரையும் எழுதுவதாக முகவுரையில் எழுதியிருக்கிறார். அது கிடைக்கும்போது அதையும் வெளியிடுவேன்.

 

இவர் 18 நூல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். நற்றிணை முதலிய சங்க இலக்கிய நூல்களுக்கு அருமையான உரைகளை வெளியிட்டிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் வளர்த்த பெரியார்களில் இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது.

IMG_8897

 

IMG_8898

 

IMG_8899

 

IMG_8900

 

IMG_8901

 

IMG_8903

 

IMG_8904

 

IMG_8905

 

IMG_8906IMG_1491IMG_1492IMG_1493IMG_1494IMG_1495

–சுபம்–