பாவச் செயல்களைப் பரப்பாதே! (Post No. 2450)

mahabharata_

Written by S NAGARAJAN

 

Date: 2 January 2016

 

Post No. 2450

 

Time uploaded in London :–  6-06 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

வில்லி பாரதம்

 

பாவச் செயல்களைப் பரப்பாதே!

ச.நாகராஜன்

 

 

இரகசியம் விண்டுரைக்கும் வில்லிப்புத்தூரார்

 

வில்லிபாரதத்தில் ஏராளமான இரகசியங்களை வில்லிப்புத்தூரார் போகின்ற போக்கில் சொல்லிக் கொண்டே போவார். உன்னிப்பாகப் படிப்பவர்கள் அதை சட்டென்று பிடித்துக் கொண்டு நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்.

இன்றைய நாளில் ஃபேஸ் புக்கில் வம்பு வளர்க்கும் நம்மவர்களில் பலர் அதில் அடுத்தவர்களின் பாவச் செயல்களைப் பகிர்ந்து கொள்வதையே தமது முதல் கடமையாகக் கொண்டுள்ளனர்.

 

 

ஃபேஸ் புக்கை நலம் பரப்பும் வலிமை வாய்ந்த ஆயுதமாகப் பயன்படுத்தாமல் வம்பில் ஈடுபட்டிருப்பதால் நமக்கு நினைவாற்றல் குறைகிறது என்றும், மனச் சோர்வு ஏற்படுகிறது என்றும் விஞ்ஞான ஆய்வுகள் தற்போது தெரிவிக்கின்றன. ஆக இந்த பாவம் பகிரும் ஃபேஸ்புக் நண்பர்களுக்கு பாரதம் தரும் செய்தி ஒன்று உண்டு!

 

 

ஐயோ பாடல்

 

பாரதத்தில் வரும் அவலமான காட்சி ஒன்றைப் பார்ப்போம். திரௌபதியின் துகில் உரியும் காட்சி அது.

விகர்ணன் திரௌபதியை அலங்கோலமாக இழுத்து வர சூழ்ந்திருக்கும் அரசர் எல்லாம் “ஊமர்கணம்” போல அமர்ந்திருக்கும் கொடுமையான காட்சி.

திரௌபதி சபையோரை நோக்கி இது நியாயமா, நீதியைச் சொல்லுங்கள் என்று கேட்கிறாள்.

சபையோர் மௌனமாக இருக்கின்றனர்.

 

 

கவிஞருக்குப் பொறுக்கவில்லை. பிறக்கிறது ஒரு “ஐயோ” பாடல்.

(நேயர்கள் எமது “ஐயோ பாட்ல்கள்” கட்டுரையைப் படித்ததை நினைவு கூரலாம். படிக்காதவர்கள் படிக்கலாம்)

 

 

மையோ டரிக்கண் மழை பொழிய வாடுங் கொடியின் மொழிக்காகார்

வெய்யோ னெண்ணந்தனக்கா கார் விறல் வேந்தர் வெரூஉக் கொண்டு

பொய்யோ வன்று மெய்யாகப் புனையோ வியம்போ லிருத்தாரை ஐயோ வந்தக் கொடுமையையா முரைக்கும் பொழுதைக் கதிபாவம்

 

(சூது போர்ச் சருக்கம் பாடல் 236)

 

 

இதன் பொருள்: – (வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியார் உரையின் படி)

கௌரவர் சபையில் உள்ள பராக்கிரமம் உள்ள வேலாயுதத்தை ஏந்திய அரசர்கள் துரியோதனனிடத்தில் கொண்ட அச்சத்துடன்,  மையையும் செவ்வரியையும் உடைய கண்களிலிருந்து மழை போல நீர் பெருக வாடும் பூங்கொடி போன்ற திரௌபதியினது கேள்விக்குச் சரியான பதில் கூறத் திறனற்றவர்களாக இருந்ததால் கொடியவனாகிய துரியோதனனின் எண்ணத்திற்கு உடன்பட்டுக் கூறாதவ்ர்களாயும் பொய்யே இல்லாமல் உண்மையாகவே அழகாக எழுதிய ஓவியம் போலவே இருந்தார்கள்.

 

mahabharat

ஐயோ!

அந்தக் கொடுமையைக் குறித்து யாம் எடுத்துச் சொன்னாலும் கூட அப்பொழுது நமக்குப் பெரும் பாவம் உண்டாகும்.

 

ஒரு பெரிய இரகசியத்தை கவிஞர் இங்குச் சுட்டிக் காட்டுகிறார்.

ஒருவன் பாவச் செயலை இன்னொருவன் எடுத்துரைத்தால் அவ்வாறு உரைப்போனையும் அந்தப் பாவத்தில் பாதிப் பங்கு சேரும் என்பது அறநூல் கொள்கை.

 

 

ஆகவே ஐயோ, கவிதைக்கென்று நடந்ததைச் சொன்னாலும்  கூட  எனக்கும் அல்லவா அந்தப் பாவத்தில் பாதி வந்து சேரும் (ஐயோ அந்தக் கொடுமையை யாம் உரைக்கும் பொழுதைக்கு  அதிபாவம்) என்று புலம்புகிறார் வில்லிப் புத்தூரார்.

ஆகவே தான், ‘அடுத்த வீட்டுப் பெண் ஒடிப் போய் விட்டாள் என்று வீடு வீடாகச் சென்று வம்பளப்பதற்கு முன்னர் உன் வீட்டுப் பையன் வீட்டில் இருக்கிறானா என்று  உறுதி செய்து கொள்’ என்று சொன்னார்கள் பெரியோர்.

பாவச் செயல்களைச் செய்யாதே; பங்கு கொள்ளாதே; அதைப் பரப்பாதே என்பது அறநூல் தரும் அறிவுரை.

பரப்புவது பற்றித் தெரியாதவர்களுக்கு வில்லி பாரதத்தில் இந்த இடம் மாபெரும் இரகசியத்தை அறிவிக்கிறது.

இந்த ஐயோ பாடல் அழகான பாடல்!

 

 

பாவத்தைத் தடு; புண்ணியம் சேரும்

 

பாவம் புண்ணியம் பற்றிய இன்னொரு இரகசியத்தை கீசகன் வதைச் சருக்கத்தில் வில்லிப்புத்தூரார் அற்புதமாக விண்டுரைக்கிறார்.

 

 

பண்ணிய வினைகளின் பயனலாது தாம்                 எண்ணிய கரும மற்றி யாவரெய்தினார்                            திண்ணிய கீசகன் செய்த தீங்கிவன்               புண்ணியமானதாற் புகல்வதென்கொலாம்

(கீசகன் வதைச் சருக்கம் பாடல் எண் 83)

 

 

கீசகன் திரௌபதியை அடையக் கருதுகிறான். அந்தத் தீச்செயலால் அவனது தீவினைப் பயன் அவனை அழிக்கிறது. அதுவே பீமனுக்கு புண்ணியப் பயனாக இருந்தது என்று ஒரு அழகிய இரகசிய உண்மையை இங்கு வில்லிப்புத்தூரார் உலகினருக்கு எடுத்துரைக்கிறார்.

 

பாடலின் பொருள் : அவரவர் செய்த புண்ணிய பாவ ரூபமான செய்கைகளின் பயனை அடைவதல்லாமல் தாம் நினைத்த செயலை வினைப்பயனுக்கு மாறாக அடைந்தவர் யார் தான் இருக்கிறார்கள்? வலிமை வாய்ந்த கீசகனின் தீச்செயல் பீமனுக்குப் புண்ணியப் பயனைத் தருவதாக ஆயிற்று.

இதைப் பற்றி யாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது (புகல்வது என் கொல்?)

 

 

ஒரு இரகசியத்தை வெளியிடும் போதெல்லாம் கவிஞர் வில்லிப்புத்தூரார் திரைமறைவிலிருந்து வெளிவந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

 

எத்தனை அற்புதமான கவிஞர் அவர்!

பாவச் செயலைத் தடுப்பவன் ஒருவனுக்கு பாவியின் தீவினையே புண்ணியமாகிறது. கீசகப் பாவியை அழிக்க வந்த பீமனுக்கு அந்தப் பாவியின் பாவமே புண்ணியமாகிறது.

 

புண்ணிய பாவ மெக்கானிஸத்தில் இந்த ‘ட்ரான்ஸ்பர்” நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

 

 

ஆக பாவச் செயலைப் பரப்பக் கூடாது என்பது மட்டுமல்ல; பாவச் செயலைத் தடுத்தால் புண்யம் தானே சேரும் என்பதும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு இரகசியம் தானே!

 

*******

Four Interesting Speech Anecdotes! (Post No. 2449)

Written by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2449

 

Time uploaded in London :–  17-25

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Lower Animals!

Henry Ward Beecher was once in the midst of an address. A drunken spectator interrupted him by crowing like a rooster. Beecher was imperturbable; looking at his watch he said, “What! Morning already? I would never have believed it, but the instinct of the lower animals are infallible.”

Xxx

 

Still raining! You may speak!!

 

Dr MacNamara on one occasion, while speaking in a marquee at Bridlington, during a torrential rain, said to the audience, “I am afraid I have kept you too long”.

“Go on, sir, It is still raining,” a voice in the rear replied.

 

Xxx

 

Blowing Whale!

General Sam Carey, the great Ohio orator, was finishing up an exceptionally fiery oration: “You cannot keep me down”, he shouted, “Though I may be pressed below the waves I rise again; you will find that I come to the surface, gentlemen.”

An old whaler, who happened to be in the audience, said, and not too quietly, “Yes, you come to the surface to blow.”

 

Xxx

I said nothing important!

On one occasion, when George III came out of the House of Lords after opening the session of Parliament, he addressed Lord Eldon thus: “Lord Chancellor, did I deliver the speech well?”

“Very well indeed, sir”, was the enthusiastic answer.

“I am glad of that”, replied the king, “For there was nothing in it.”

 

–Subham–

‘அன்பென்று கொட்டு முரசே!’– புத்தாண்டு சிந்தனைகள்! (Post No. 2448)

IMG_3382

Written by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2448

 

Time uploaded in London :–  9-31 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாரதி பாடல்களில் மந்திர சக்தி இருக்கிறது!

காரணம்?

சதாசர்வ காலமும் “மந்திரம் போல் சொல்லின்பம் வேண்டுமென்று” அவர் கலைமகளை வேண்டி நின்றார். பாரதி பாட்டில் எனக்குப் பிடித்த வரிகள் எது என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிக்கிறேன். எல்லா வரிகளிலும் பாஸ்ட்டிவ் எனர்ஜி= ‘ஆக்க சக்தி’ பொங்கிப் பரிமளிக்கிறது.

‘ஒளிபடைத்த கண்ணினாய் வா, வா’ என்ற வரியா? ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே!’ என்ற வரியா? ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற வரியா? அல்லது ‘எல்லாரும் அமர நிலை எய்தும் நிலையை இந்தியா உலகிற்களிக்கும்’ என்ற வரியா? அல்லது ‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்’ என்ற வரியா?, ‘இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்’ என்ற வரியா?, ‘கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்’ – என்ற வரியா – என்று என்னால் முடிவு செய்ய முடியவில்லை.

 

நூற்றுக் கணக்கான மந்திரங்களை நமக்களித்த பாரதி, மேலும் ஒரு அருமையான சொற்றொடரைத் தந்துள்ளார். “அன்புதன்னில் செழித்திடும் வையம்”!

 

இந்த உலகம் வளம் பெற மழை வேண்டாம், உரம் வேண்டாம். ஆனால் அன்பு என்று ஒன்று இருந்துவிட்டால் தானாக மாதம் மும்மாரி மழை பெய்யும். நல்லறம், நல்லாட்சி நிலவும் இடங்களில் பயிர் செய்யாமலேயே தானியம் தானாக விளையுமாம்! இதை வள்ளுவனும் காளிதாசனும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டனர். புல்வாயும் (மான்), புலிப்போத்தும் ஒரு துறையில் நீருண்ணுமாம். இதையும் கம்பனும் காளிதாசனும் சொல்லிவிட்டனர்.

 

அன்பு பற்றி பாரதி வேறு என்ன சொன்னார்?

 

முரசு கொட்டுங்கள்!

அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்

அத்தனை பேரும் நிகராம்.

இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு

யாவரும் ஒன்றென்று கொண்டால்.

 

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே!

நன்றென்று கொட்டு முரசே! – இந்த

நாநில மாந்தருக்கெல்லாம்.

 

IMG_3326

அன்பே சிவம்!

அன்பு சிவம் உலகத் துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே- இங்கு

முன்பு மொழிந்துலகாண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

 

மஹாகளியின் புகழ்

அன்பு வடிவாகி நிற்பள் துன்பமெலாம் அவள் இழைப்பள்

ஆக்கம் நீக்கம் யாவும் அவள் செய்கை – இதை

ஆர்ந்து உணர்ந்தவர்களுக்கு உண்டு உய்கை

 

பாப்பாவுக்கு அன்பு ‘அட்வைஸ்’!

அன்பு மிகுந்த தெய்வம் உண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

 

உயிர்களிடத்தில் அன்பு வேணும் – தெய்வம்

உண்மையென்று தனறிதல் வேணும்

 

புலியிடம் அன்பு! (ஞானிகளுக்கு அட்வைஸ்)

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தையிற் போற்றிடுவாய் – நன்னெஞ்சே

அன்னை பராசக்தி அவ்வுருவாயினள்

அவளைக் கும்பிடுவாய் – நன்னெஞ்சே

 

 

சிவசக்தி

அன்புறு சோதியென்பார் – சிலர்

ஆரிருட் காளியென்று உனைப் புகழ்வார்;

 

 

விநாயகர் நான்மணி மாலை

பூமண்டலத்தில் அன்பும் பொறையும்

விளங்குக: துன்பமும், மிடிமையும், நோவும்,

சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்

இன்புற்று வாழ்க!

 

வாழ்க திலகன் நாமம்

அன்பெனும் தேன் ஊறித் ததும்பும்

புதுமலர் அவன் பேர்

 

ஜாதீய கீதம் (பாரத அன்னை பற்றி)

அறிவு நீ, தருமம் நீ, உள்ளம் நீ, அதனிடை

மருமம் நீ, உடற்கண் வாழ்ந்திடும் உயிர் நீ;

தோளிடைவன்பு நீ, நெஞ்சகத்து அன்பு நீ

SURAT CHATURTHI

முரசு

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்;

ஆதரவுற்றிங்கு வாழ்வோம்- தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்

 

அன்பு குறித்து பாரதி பாடியது இத்தனைதான் என்று எண்ணிவிடாதீர்.  அவன் பாடல்களில் அன்பு என்ற சொல் இல்லாத இடங்களிலும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்வதைக் காணலாம்.

 

-சுபம்-

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!(Post No. 2447)

singapore thimithi with amman face

Picture:–Singapore Mariamman Festival Fire walking

 

Written by S NAGARAJAN

 

Date: 1 January 2016

 

Post No. 2447

 

Time uploaded in London :–  7-17 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பாக்யா ஜனவரி 2016 முதல் தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

 

அக்னி பரீட்சையில் மீண்டு வந்த அற்புத மனிதர்கள்!

.நாகராஜன்

 

 Agni-pariksha-of-sita

Sita Devi’s Fire Walking

“1871ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம் தேதியன்று அமெரிக்க நகரான சிகாகோவில் ஏற்பட்ட தீ, 24 மணி நேரம் தொடர்ந்து எரிய, நகரில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் இல்லங்களை இழந்தனர். 300 பேர்கள் இந்த மாபெரும் தீ விபத்தில் கொல்லப்பட்டனர்” – பஞ்ச பூதங்களில் ஒன்றான தீயின் கோர தாண்டவம் பற்றி அமெரிக்க வரலாறு

 

 

சீதா பிராட்டியை ராமன் அக்னியில் பிரவேசிக்கச் செய்ததையும் அக்னி ப்ரவேசம் செய்த சீதை கற்புக்கரசி என அக்னியால் புகழப்பட்டதையும் ராமாயணம் விளக்குகிறது.

 

தமிழகத்தில் ஆங்காங்கு மாரியம்மன் கோவில் திருவிழாக்களில்  பல நூறு ஆண்டுகளாக தீ மிதி வைபவம் நடைபெறுவதை நமது சரித்திரம் கூறுகிறது. இதில் கலந்து கொள்வோர் நெருப்புத் துண்டுகள் உள்ள பாதை வழியே பக்தியுடன் செல்வதையும் அவர்கள் கால் உள்ளிட்ட அங்கங்கள் எந்த வித பாதிப்புமின்றி இருப்பதையும் பார்த்து வியக்க முடிகிறது. இதை பூ மிதி திருவிழா என்றும் கூறுவது வழக்கம். அம்மன் தீயைப் பக்தர்களுக்குப் பூவாக மாற்றுவதாக ஐதீகம்.

 

இப்படி “ஃபயர் ஃப்ரூப்” ஆக இருப்பது சாத்தியம் தானா? பல காலமாக அறிவியல் உலகம் இதை ஆராய்ச்சி செய்து வருகிறது.

ஹிந்து இதிஹாஸங்கள் மட்டுமல்ல, உலகின் இதர மதங்களும் பல மகான்கள் தீ மீது நடந்ததைக் குறிப்பிடுகின்றன.

 

செயிண்ட் ஃப்ரான்ஸிஸ் ஆஃப் பாலா (1508ஆம் ஆண்டு) பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டைத் தன் கைகளில் ஏந்தியவாறே தன்னை வியந்து பார்த்துக் கொண்டிருந்த மக்களிடம்,” தூய மனமுடன் இறைவனை வழிபடுவோரின் கட்டளைக்கு அனைத்து உயிரினமும் கீழ்ப்படியும்” என்றார்.

 

சியனா நகரைச் சேர்ந்த செயிண்ட் காதரீன் கொழுந்து விட்டெரியும் இரும்பு உலையில் கரித் துண்டுகளின் மீது முகம் படிந்திருக்க நெடு நேரம் இருந்தார். அந்தப் புனிதப் பெண்மணி நெருப்பில் இருப்பதைப் பார்த்து திகைத்தவர்கள் அவரை அப்புறப்படுத்திய போது அவருக்கு ஒரு தீக்காயமும் ஏற்பட்டிருக்கவில்லை!

 

இந்தியாவில் குற்றமிழைக்காதவன் என்று தன்னை நிரூபிக்க விரும்புவோர் கொதிக்கும் எண்ணெயில் கையை விடுவது, தீ மீது நடப்பது, பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டை கைகளில் ஏந்துவது என இப்படிப் பலவற்றில் ஒன்றைச் செய்து தீயின் பாதிப்பு இன்றி மீண்டு தம்மை நிரபராதி என்று நிரூபிப்பது வழக்கம். இதே போல இடைக்காலத்தில் மேலை நாடுகளிலும் இந்தப் பழக்கங்கள் கையாளப்பட்டு வந்திருக்கின்றன.

charity-fire.jpgeast cheshire

Charity Fire Walking in East Cheshire Hospice (UK)

 

1929ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் மரிஸ்பர்க் என்ற இடத்தில் தீ மிதி விழா ஒன்று நடைபெற்றது. 15 மீட்டர் (அதாவது சுமார் 49 அடி) நீளமுள்ள குழியில் 12 டன் விறகு போடப்பட்டு அக்னி ஜொலிக்க 8 ஹிந்துக்களும் 4 ஆங்கிலேயரும் அந்த தீக்குழியில் வெற்றிகரமாக நடந்தனர். ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் இரண்டு அடி மட்டுமே குழியைத் தாண்டுவதற்கு இருக்கும் நிலையில் அப்படியே கீழே விழுந்தார். உடனடியாக சமாளித்து எழுந்து நடந்தவரின் கால்களில் தீப் புண்கள் ஏற்படவே அவரை மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு குழுமிய பத்திரிகையாளர்களிடம் அவர், “கூட்டத்தின் ஆரவாரம் மிகவும் அதிகமாகவே என்னால் உயர் சக்தியின் மீது மனதை ஒருமுனைப்படுத்த முடியவில்லை. அது தான் நான் விழுந்ததற்குக் காரணம்”, என்று கூறினார்.

 

 

உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற மீடியமான டி.டி, ஹோம் -டேனியல் டங்ளஸ் ஹோம் – (Daniel Dunglas Home) செய்து காட்டாத அபூர்வமான அதீத உளவியல் ஆற்றல் நிகழ்வுகளே இல்லை எனலாம். அவரது பல நிகழ்ச்சிகளில் அவர், தான் “ஃபயர் ஃப்ரூபாக” இருப்பதை மட்டும் நிரூபிக்கவில்லை,  அடுத்தவரையும் அப்படி தீ பாதிக்காத தன்மையைக் கொண்டவராக அவர் ஆக்கினார், அது தான் ஆச்சரியம்!

“டையாலக்ட்ரிகல் சொஸைடி” (Diaelectrical Society) என்ற அமைப்பின் சார்பில் ஐவர் குழு ஒன்று அவரை நேரடியாக சோதனை செய்தது. ஹோம் பலரது கைகளிலும் தலைகளிலும் எரியும் கரித்துண்டுகளை வைத்தார். ஆனால் அவர்களோ தீயின் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருந்தனர்!

 

Daniel-Dunglas-Home-levitation

Daniel Dunglas

1869ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 17ஆம் தேதி நடந்த ஒரு அதீத உளவியல் அமர்வு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஒரு பெண்மணியின் வெண்மையான மஸ்லின் ஆடையில் ஹோம் பழுத்து எரியும் ஒரு கரித் துண்டத்தை வைத்தார். ஆடை எரியவே இல்லை. பின்னர் அங்கிருந்த மலர்களின் மீது எரியும் கரித்துண்டை வைக்க அங்கு பொசுங்கிய நாற்றம் வந்ததே தவிர மலர்களுக்கு ஒரு சேதமும் ஏற்படவில்லை. அதே அமர்வில் அங்கிருந்த ஹனிவுட் என்ற பெண்மணி மற்றும் லார்ட் லிண்ட்ஸே ஆகியோரது கையில் நன்கு சூடேறிய கண்ணாடி விளக்கைக் கையில் தர அதை அவர்கள் எந்த வித பாதிப்புமின்றி ஏந்தி நின்றனர். அப்போது தன் வாயில் ஒரு தீக்குச்சியை வைத்துக் கொண்டு அதை கண்ணாடியின் மீது ஹோம் உரச அந்தச் சூட்டினால் உடனே தீக்குச்சி பற்றி எரிய ஆரம்பித்தது.

இதே போல அருகில் யார் இருந்தாலும் அவர்கள் கையில் பழுக்கக் காய்ச்சிய நெருப்புத் துண்டுகளை கொடுப்பது அவரது வழக்கமானது.

 

 

இதனால் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் திகைத்து நின்றனர்.

உலகின் அபூர்வ மனிதரான டேனியல் டங்ளஸ் ஹோம் (பிறப்பு 20-3-1833 இறப்பு 21-6-1886) பற்றிப் பல புத்தகங்கள் எழுதுமளவு சுவையான நிகழ்வுகளை அவர் வாழ்வு கொண்டிருந்தது.

 

SirChristopher

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

சர் கிறிஸ்டோபர் ரென் என்பவர் (1632-1723) பிரிட்டனின் பிரசித்தி பெற்ற கணிதமேதை, வானவியல் நிபுணர் மற்றும் சிறந்த கட்டிடக் கலை நிபுணர். விண்ட்சார் டவுன் ஹால் கட்டிட்டத்தின் உட்புறத்தை மிகவும் ஆர்வமுடன் அவர் வடிவமைத்துக் கொண்டிருந்தார். அதன் மேற்கூரையை அழகிய தூண்கள் வலுவாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்வையிட வந்த கட்டிட ஆய்வாளர்கள் போதுமான தூண்கள் இல்லை என்றும் ஆகவே கட்டிடத்தில் வலு போதுமானதாக இல்லை என்றும் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் ரென்னுக்கோ தன் திறமையின் மீது அபார நம்பிக்கை. என்றாலும் கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவிக்கவில்லையே! அவர் உடனே நான்கு தூண்களை அழகுற அமைத்தார். கட்டிட ஆய்வாளர்கள் திருப்தி தெரிவித்தனர். ஆனால் உண்மையில் அந்தத் தூண்கள் மேற்கூரையைத் தொடவே இல்லை. அழகுக்காக தொடாமல் அமைக்கப்பட்டிருந்தன. ரென் சிரித்தார். இன்றும் அந்தத் தூண்கள் அந்தக் கட்டிடத்தில் உள்ளன!

 

England, P-381a 50 Pounds, Inv1766(b)(1000)

இதே போல அமெரிக்காவின் கட்டிடக் கலை நிபுணர் ஃப்ராங்க் லாயிட் ரைட் என்பவர் (1869-1956) விஞ்ஞான முறையில் கட்டிடங்களைக் கட்டி வந்தார். அவரை பிரபல தொழிலதிபரான ஹிப்பர்ட் ஜான்ஸன் தனக்கு ஒரு வீட்டைக் கட்டித் தருமாறு கேட்டுக் கொண்டார். ஒரு நாள் அந்த வீட்டில் ஜான்ஸன் தனக்கு மிகவும் வேண்டியவர்களைக் கூப்பிட்டு ஒரு விருந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பெரிய மழை பெய்ய ஆரம்பித்தது. மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுக ஆரம்பித்தது. சரியாக ஜான்ஸன் அமரிந்திருந்த இடத்தின் மேலிருந்து சொட்டு சொட்டாகத் தண்ணீர் விழ, அவரது வழுக்கைத் தலை மீது நீர் சொட்ட ஆரம்பித்தது. விருந்தினர்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்க கோபமடைந்த ஜான்ஸன் அரிஜோனாவில் இருந்த கட்டிட  ரைட்டைப் போனில் அழைத்தார். “என்ன கட்டிடம் கட்டினீர்கள். மழையில் மேற்புறம் ஒழுக, என் தலை மீதே நீர் ஒழுகுகிறது” என்று அவர் கோபமாகக் கத்தினார்.

 

 

மறுமுனையிலிருந்து அமைதியான குரலில் வந்த பதிலை விருந்தினர்கள் அனைவரும் கேட்டனர்:” அது சரி, உங்கள் நாற்காலியை நீங்கள் ஏன் சற்று நகர்த்திப் போட்டுக் கொள்ளக் கூடாது!”

*******

A Novel Fortune-Teller (Acche Din aane waale hain)! (Post No. 2446)

IMG_1652 (2)

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

Poem by Tamil Poet Subrahmanya Bharati (1882-1921)

 

Compiled by London swaminathan

 

Date: 1 January 2016

 

Post No. 2446

 

Time uploaded in London :–  00-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

  1. Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Auspicious days are ahead; Auspicious days are ahead;

Castes combine; conflicts cease

Speak up, speak up, Sakti, Durga!

Predict, predict propitious days for Vedapura.

 

  1. Destitution disappears; affluence is attained

Learning spreads apace; sin ceases to be;

If the learned take to trickery and commit crimes,

They will be ruined, alas, utterly ruined

 

  1. Commerce expands in Vedapura

Industry grows; workers prosper;

Sciences flourish, secrets come to light.

Power-plants multiply; know-how develops;

Fertile ideas arise in abundance.

 

 

4.Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Speak up, speak up, Malayala Bhavati:

Antari, Veeri, Chandika, Sulini;

Kudukudu Kudukudu;

 

  1. Kudukudu Kudukudu Kudukudu Kudukudu;

Masters are becoming brave;

Paunch sharinks; diligence spreads;

All forms of wealth grow apace;

Fear dies; sin perishes;

Scinces grow; caste declines;

Eyes open; justice is perceived;

Old madness vanishes all of a sudden;

Heroism is attained; so is honour;

Speak up, Sakti, Malayala Bhagavati

Virtue flourishes, virtue thrive.

 

-translated from Tamil into English by Prof. S Ramakrishnan (SRK)

Note: The original is from Kothaik kotthu (1939)

Bharati died on 11th September 1921 at the age of 39.

1960-Subramanya_Bharati

நல்ல காலம் வருகுது ( அச்சே தின் ஆனே வாலே ஹைன்) — பாரதியார்

 

புதிய கோணங்கி

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

சொல்லடி, சொல்லடி, சக்தி, மாகாளீ!

வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு.

தரித்திரம்போகுது; செல்வம் வருகுது;

படிப்பு வளருது; பாவம் தொலையுது;

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்

போவான், போவான் ஐயோவென்று போவான்!

 

வேதபுரத்திலே வியபாரம் பெருகுது;

தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான்

சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது’

யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது

மந்திரமெல்லாம் வளருது, வளருது;

 

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சொல்லடி, சொல்லடி, மலையாள பகவதீ!

அந்தரி, வீரி, சண்டிகை, சூலி

குடு குடு குடு குடு

 

குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;

சாமிமார்க்கெல்லாம் தைரியம் வளருது;

தொப்பை சுருங்குது, சுறுசுறுப்பு விளையுது;

எட்டு லட்சுமியும் ஏறி வளருது;

சாத்திரம் வளருது, சாதி குறையுது;

நேத்திரம் திறக்குது, நியாயம் தெரியுது;

பழைய பைத்தியம் படீலென்று தெளியுது;

வீரம் வளருது, மேன்மை கிடைக்குது;

சொல்லடி சக்தி, மலையாள பகவதி;

தர்மம் பெருகுது, தர்மம் பெருகுது.

–பாரதியார்

–SuBham–

English New Year is Hindu New Year! (Post No. 2445)

SL ganesh stamp

Research Article written by London swaminathan

 

Date: 31  December 2015

 

Post No. 2445

 

Time uploaded in London :– 12-56

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article is uploaded in TAMIL as well.

 

Every year we hear a debate, sometimes becoming a raging controversy, whether we can celebrate English New Year or not on 1st January. Actually there is more ‘Hinduism’ in English New Year than any other religion.

So please celebrate Hindu New Year on First January! But it should be a ‘no drinks’, no ‘hanky-panky’ celebration.

ganesh nepal

Calendars have been changed continuously from the dawn of history. Hindus have more calendar systems than any other culture in the world. The whole world is celebrating New Year based on one or the other of the Hindu calendars. Most of the countries follow either a New Year calendar as March or April as the first month.

 

January Ganapathy! Ganapathy January!!

 

January, the first month of English calendar is named after Lord Ganesh. Romans called Ganesh as Janus and worshipped him for 800 years between 400 BCE and 400 CE. Anyone who reads about Janus will find it is nothing but the corruption of Hindu God Ganesh! J and G are interchangeable.

 

Here are the similarities:

1.Romans worshipped him with two faces facing opposite direction, looking at future and past

2.They installed Janus temples on road sides, entrances and gates.

3.They named the first month after him.

 

4.Janus is connected with war.

 

5.Janus temples were constructed in square shapes.

gold ganesh

All these are based on Hindu beliefs. Hindus begin any work with the worship of Ganesh. That is why Romans made it as the first month after calendar reformation.

Hindus install Ganesh at the gates or entrances of the temples. Most of the Tamil Ganesh temples are on road sides and in square shaped buildings or platforms. Ganesh is in charge of our future and that is why he is worshipped first. Bhuta Ganas under the leadership of Ganesh serve the army of Lord Shiva.

 

Romans had Janus temples all over Italy and Nero and other kings issued coins with Janus temples pictures. Even today Janus is displayed in all the museums from Vatican to Louvre. Romans had a city in the name of Janus, ‘Janiculum’ on the banks of River Tiber. Even today, Hindus install Ganesh under a tree mostly on river banks.

So the reformed English calendar is actually Hindu calendar.

Janus-Vatican

Janus in Vatican City.

January 9th was celebrated as the Birth day of Janus/Ganesh in Italy 2000 years ago!

So we can even sing a Bhajan song in the name of January!

 

January Ganapathy, Ganapathy January Paahimaam

Ganapthay January, January Ganapathy Rakshamaam

 

(Paahimaam, Rakshamaam= Protect me, bless me)

 

Sesterce_temple_janus.JPGNERO

Janus Temple in a coin of Emperor Nero

 

Hindu Sanskrit Months in English!

Sapta = 7= September

Ashta = 8 = October

Nava = 9 = November

Dasa = 10 = December

 

Sanskrit words for 7, 8, 9, 10 are still used in the names of English months. The entire world was following Hindu calendar beginning in March at one time and so the names for 7,8,9, 10 for September, October, November and December. The latest calendar was called Julian calendar after his reformation. Romans also made lot of changes in the calendar naming certain months after the Roman emperors Julius (July) and Augustus (August) Caesars.

So long as we have these months we will be remembering the Sanskrit numbers.

Even today the Saka year of the Government of India begins around March.

janus

Hindus followed both solar (Tamil, Singhalese, Nepalese, Bengalis, South East Asian countries) and Lunar ( National year, Telugus, Kannadigas etc) calendars. Since it was the largest country in the ancient world each king or region followed different systems.

 

Hinduism is a religion which will digest everything alien to it and absorb or adapt it to suit it. Tamils have started going to temples like Tirupati, Tiruttani, Palani etc on Pada Yatra ( by foot ) on the English New Year day. This is a typical example how Hindus take everything to their advantage.

 

Muslim and Christian invaders were so ruthless and killed several thousand before converting them to their religion. They converted the whole of South America and most of Africa. But they could not do such a thing in India even after 1000 years! This is the secret of adaptation and absorption. Hindu religion is an ever changing religion. But it will never sacrifice its basic values such as Truth, Peace, Love, Kindness, Charity, fear of God, Respect for culture, Respect for Elders etc. They don’t bother about superficial forms. They digested and absorbed all that is good from the Greeks, Romans, Sakas and Huns. They boldly adapted certain systems from the Christians and Muslims. The world also took all that is useful from the Hindus such as the numbers, value of zero, domestication of cow and horse etc. Without these Hindu contributions the world would never have seen computers or space rockets! Or a civilization.

ijanus0001p1

ijanus0001p1

Let us celebrate “English” New Year as Hindu New Year on 1st January in addition to our traditional new years’ celebrations!

Wish you all a Very Happy New Year!

–subham-

 

 

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடலாமா? (Post No. 2444)

SL ganesh stamp

Research Article written by London swaminathan

 

Date: 31  December 2015

 

Post No. 2444

 

Time uploaded in London :– 9-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article is uploaded in English as well.

ganesh nepal

ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். ஆனால் குடித்துவிட்டுக் கும்மாளம் போடக்கூடாது. அதே நேரத்தில் தமிழ் புத்தாண்டையும் மறக்கலாகாது.

ஆங்கிலப் புத்தாண்டை ஏன் கொண்டாட வேண்டும்?

ஏனெனில்,அதைக் கொண்டாடும்வரை சம்ஸ்கிருதம் வாழும். இந்துமதம் வாழும். அது எப்படி?

 

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி!!

நீங்கள் ஒரு பஜனைப் பாடலே பாடலாம்!

கணபதி=ஜனவரி; ஜனவரி=கணபதி! பாஹிமாம்!

ஜனவரி=கணபதி!! கணபதி=ஜனவரி!! ரக்ஷமாம்!!

 

ஏனெனில் ஜனவரி என்ற மாதப் பெயர் ‘ஜேனஸ்’ என்ற ரோமானிய கடவுள் பெயரிலிருந்து வந்தது என்பர். உண்மையில் ‘ஜேனஸ்’ என்பது ‘கணேஷ்’ என்பதன் திரிபு!

Janus-Vatican

Janus/Ganesh  in Vatican

ஆங்கிலத்தில் ‘ஜி’ என்ற எழுத்தும் ‘ஜே’என்ற எழுத்தும் இடம் மாறுவது சர்வ சாதாரண விஷயம்!

 

ஜேனஸ்=கணேஸ் யார்?

ஜேனஸ் என்ற ரோம் நகர தெய்வத்துக்கு இரண்டு முகங்கள்: ஒன்று கடந்த காலத்தைப் பார்க்கும்; மற்றொன்று எதிர்காலத்தைப் பார்க்கும். இதை வாசல்படிகளில், நுழைவாயில்களில் வைப்பர். நமது இந்துக் கோவில்களில் நுழைவாயிலில் கணபதி/கணேஷ் இருப்பதைப் பார்த்தே அவர்களும் இப்படி வைத்தனர்.

 

மேலும் இந்துக்கள் எல்லா காரியங்களையும் துவங்குவதற்கு முன் கணேஷை வணங்குவர். ஆகவே அவர்களும் ஜனவரியை ஆண்டுக்கு முதல் மாதமாக வைத்தனர். ஆகையால் இது ஆங்கிலப் புத்தாண்டு இல்லை. இந்துப் புத்தாண்டே!

 

ரோமானியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி கணேஷ் சதுர்த்தி கொண்டாடினர். இன்றைக்கு அல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்பு!

 

Sesterce_temple_janus.JPGNERO

Janus Temple coin issued by Roman Emperor Nero

 

ஜேனஸ் கோவில்கள் கி.மு.400 முதல் கி.பி.400 வரை 800 ஆண்டுகளுக்கு இத்தாலி முழுதும் இருந்தன. அவருடைய கோவில்கள் சதுர வடிவில் – 4 பருவங்களைக் குறிக்க—அமைக்கப்பட்டிருந்தன. இதையும் இந்துக்களைப் பார்த்தே செய்தனர். கணபதியின் தனிக் கோவில்கள் தமிழ்நாடு முழுதும் சதுர வடிவிலே இருக்கும்.

 

இத்தாலியில், டைபர் நதிக்கரையில் ஜனிகுலம் என்ற இடத்தில் கணபதி நகரமே அமைக்கப்பட்டது!

 

ஜேனஸ் கையில் ஒரு சாவியும் மற்றொரு கையில் ஒரு தண்டமும் இருக்கும். நாம் அங்குசம், பாசக் கயிற்றைக் கைகளில் காட்டினோம். அவர்கள் சிறிது மாற்றி வைத்தனர். ஜேனஸுக்கும், போருக்கும் தொடர்பு உண்டு. இந்து புராணக் கதைகளிலும் அவர்தான் பூதகணத் தலைவர்.

janus

கணபதி கோவில்களை சாலை ஓரங்களிலும் ரோமானியர் கட்டினர். இன்றும் தமிழ் நாட்டின் சாலை ஓரங்களில் கணபதியைக் காணலாம். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டிலிருந்துதான் ரோமுக்கு இவர் போனாரோ என்று என்ன வேண்டியிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலுள்ள பிள்ளையார்பட்டி, திருப்பரங்குன்ற குகையிலுள்ள பிள்ளையார் சிற்பங்கள் ரோமானிய ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னால் எழுந்தவை.

மாதங்களில் சம்ஸ்கிருதம்!!!!!!!!!!

சப்த- ம்பர்= செப்டெம்பர்= சப்த =7

அஷ்ட- ஓபர்= அக்டோபர்= 8

நவ- ம்பர்= நவம்பர் = 9

தச- ம்பர் = டிசம்பர்= 10

முன்காலத்தில் மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதம். பின்னால் வந்தவர்கள் இதை மாற்றி வைத்தனர். அதற்கும் பின்னர், ஜூலியன் என்ற போப்பாண்டவர் இன்னும் சில காலண்டர் சீர்திருத்தங்களைச் செய்தார். மார்ச் மாதம் முத்லாவது மாதம் என்றால் சப்த, அஷ்ட, நவ, தச= 7,8,9,10 என்பது பொருந்தும். ஆகவே இதுவும் இந்து ஆண்டே. இன்றும் இந்தியவின் தேசிய வருடமான சக வருடம் (தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர புத்தாண்டு) மார்ச் மாதத்தை ஒட்டியே துவங்கும். அதுதான் நமது உண்மையான புத்தாண்டு. ஆனால் தமிழ் புத்தாண்டு சூரிய இயக்கத்தின் (சோலார்) அடிப்படையிலும், மற்ற இந்திய புத்தாண்டுகள் சந்திர இயக்க (லூனார்) அடிப்படையிலும் அமைந்தன. ஆகவே இரண்டும் சரியே.

ஆக ஆங்கிலப் புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டல்ல. இந்துப் புத்தாண்டே!! அது வாழும் வரை சம்ஸ்கிருத எண்கள் நினைவில் நிற்கும்.

 

மேலும் இந்துமதம் எதையும் ஜீரணம் செய்துவிடும். ஆங்கிலப் புத்தாண்டன்று பலர், திருத்தணி, பழநி, திருப்பதிக்குப் பாதயாத்திரை செல்வது பெரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது. சகரர், ஹூணர், கிரேக்கர், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களை ஜீரணம் செய்த நாடு பாரதம். அகாவே இந்து மதம் எதையும் ஜீரண செய்து தனதாக்கிக் கொண்டுவிடும். அஞ்சற்க.

gold ganesh

உலகில் கிறிஸ்தவ, முஸ்லீம் படையெடுப்பாளர்கள் சென்ற அவ்வளவு நாடுகளும் அவர்கள் மயமாய்விட்டன. தென் அமெரிக்கா முழுவதையும் ஸ்பானியர்களும் போர்ச்சுகீசியர்களும், ரோமன் கத்தோலிக்க நாடுகளாக்கினர். ஆப்ரிக்க நாடுகளை முஸ்லீகளும் கிறிஸ்தவர்களும் தமதாக்கினர். அனல் இந்தியாவில் “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி”க்கும் (பாரதியாரின் வரி) பின்னர், பத்து சதவீதமே மதம் மாற்றப்பட்டனர். அவர்களும் பெரும்பாலும் நம்பிக்கையிலும், கலாசாரத்திலும் இந்துக்களே!

-சுபம்–

(இது போன்ற 2400 ஆராய்ச்சிக் கட்டுரைகள், எனது பிளாக்குகளில் உள. படித்து மகிழ்க)

 

ijanus0001p1

ijanus0001p1

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

 

பிரார்த்தனை செய்வது எப்படி? (Post No. 2443)

Saint-Vallalar-Ramalinga-Adigalar

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 31  December 2015

 

Post No. 2443

 

Time uploaded in London :– 5-50 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

ஆன்மீக இரகசியம்

 

பிரார்த்தனை செய்வது எப்படி?

 

ச.நாகராஜன்

 

 kutty namaskar

மனிதனுக்கே உரித்தானது பிரார்த்தனை

 

பிரார்த்தனை செய்வது என்பது ஹிந்து, கிறிஸ்தவம், முஸ்லீம், புத்தம், சமணம், யூதம் உள்ளிட்ட அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் புரியும் ஒன்று.

 

மானிட குலம் முழுமைக்கும் பொதுவாக அமைந்த சிறப்பியல்புகளில் பிரார்த்தனையும் ஒன்று; முக்கியமானதும் கூட.

 

ஆனால் பிரார்த்தனையை எப்படிச் செய்தல் வேண்டும் என்பது மாபெரும் இரகசியம்.

 

எனக்குச் செல்வம் வேண்டும்; நான் புகழ் பெற வேண்டும்; எனக்கு அதிகாரம் வேண்டும்; நான் அமைச்சராக வேண்டும், எனக்கு பிள்ளை பிறக்க வேண்டும், எனக்கு நோய் நீங்க வேண்டும் என்றெல்லாம் பலரும் கோவில் உள்ளிட்ட பிரார்த்தனை ஸ்தலங்களில் பிரார்த்தனை புரிவதை அறிவோம்.

 

அவர்களின் நம்பிக்கைக்கும் பூர்வ கர்மவினைகளுக்கும் தக்கபடியும் வேண்டுகின்ற் ஸ்தலத்தில் அருள் பாலிக்கும் தெய்வத்தின் அருளுக்கும் ஏற்ப பெரும்பாலானோரது பிரார்த்தனை நிறைவேறி விடுகிறது.

 

இதனாலேயே பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாகிறது.

 

 

எப்படிப் பிரார்த்திப்பது

 

ஆனால் அருளாளர்களும் மகான்களூம் பிரார்த்தனையை சரியாகச் செய்வது எப்படி என்று கூறி அருளி இருக்கின்றனர்.

தாயுமானவர் மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்:-

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

 

மக்கள் அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் அதுவே அவரது நிரந்தர பிரார்த்தனை.

 

அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டு விட்டால் இன்பநிலை தானே எய்தும் பராபரமே

என்றும் அவர் அருளி இருக்கிறார்.

 

மாபெரும் ரகசியங்கள் இரண்டை மிக எளிமையாகச் சொல்லி விட்டார் அருளாளர்.

 

அனைவரின் நலனையும் வேண்டு; அனைவருக்கும் தொண்டு செய் – இதுவே நீ நலம் பெற வழி; உனக்கு நன்மை தரும் வழி.

 

vallalar2

 

வள்ளலார் கூறும் பிரார்த்தனை இரகசியம்

 

இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் ஏராளமான இரகசியங்களை நூல் வடிவிலும் பா வடிவிலும் அருளியுள்ளார். பிரார்த்தனை இரகசியம் பற்றியும அவர் கூறியுள்ளார்.

பிரார்த்தனை என்ற தலைப்பில் அவரது அருள் மொழிகள் இதோ:-

 

“ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்:

 

 

“பாதி இரவி லெழுந்தருளிப் பாவியேனை யெழுப்பியருட்  ஜோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை  ஓதிமுடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே

        (6ஆம் திருமுறை  – பக்கம் 129)

என்பதே பிரார்த்தனையாகும்.

 

 

தான் பெற்ற பெரும் பேற்றை நெடும் பேறு என்று கூறும் அவர் அதை அனைத்து மக்களும் பெற வேண்டுவேனே என்கிறார்.

 

இது தான் உண்மையான பிரார்த்தனை என்னும் மாபெரும் இரகசியத்தையும் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றார்.

“சர்வே ஜனா சுகிநோ பவந்து                       

“லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து

 

என்று காலம் காலமாக மகான்கள் சொல்லி வருகின்றனர்.

அனைவரின் நலனுக்குமாக அருள் வேண்டுவதே பிரார்த்தனை; அதைச் செய்யும் போது நமது நலன்களும் தாமாகவே கூடி விடும்.

 

இறைவனின் இந்த அருள் ‘மெக்கானிஸம் இரகசியமான ஒன்று.

 

அதைத் தாயுமானவர், வள்ளலார் போன்றோர் நமக்காக எளிய தமிழில் “உடைத்துப் போட்டுத் தருகின்றனர்.

ஆக உண்மையான பிரார்த்தனை எது என்பதை அறிந்த சந்தோஷத்தில் கூறுவோம்:

 

 

சர்வே ஜனா சுகிநோ பவந்து

 

லோகாஸ் ஸமஸ்தா சுகிநோ பவந்து

 

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!

 

********

 

 

‘DONKEY AND ITS SHADOW’ STORY!( Post No. 2442)

demosthenes

‘DONKEY AND ITS SHADOW’ STORY!( Post No. 2442)

 

Compiled  by London swaminathan

Date: 30 December 2015

 

Post No. 2442

 

Time uploaded in London :– 9-28 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Speech Anecdotes

An Athenian crowd demonstrated impatience at a public assembly one day and hissed the orator Demosthenes (384- 322 BCE, Greece), refusing to hear him. He said that he had a short story to tell them and began,

“A certain youth hired an ass, in the summer time, to go from his home to Megara. At noon, when the sun was very hot, both who he hired the ass and the owner of the animal were desirous of sitting at the shade in the shade of the ass, and fell to thrusting one another away. The owner insisted that he had hired out only the ass and not the shadow. The other insisted as he had hired the ass, all that belonged to the ass was his.

 

Turning away, Demosthenes made as though to depart, but the mob, which had been piqued by the story, would not allow him to leave and insisted that he continue. He then turned upon them and demanded, “How is that you insist upon hearing the story of the shadow of the ass, and will not give an ear to the matters of great moment?” He was permitted to deliver the speech for which he had come. And the fine point of the ass and his shadow remains unsettled to this day.

Xxx

Mark_Twain,_

Mark Twain lost!

Chauncey Depew once played a trick on Mark Twain (1835—1910, American author, humourist)  on an occasion when they were both to speak at a banquet. Twain spoke first for 20 minutes and was received with great enthusiasm. When Depew’s turn came, immediately afterwards, he said, “Mr Toastmaster, Ladies and Gentlemen, before this dinner, Mark Twain and I made an agreement to trade speeches. He has just delivered mine and I am grateful for the reception you have accorded it. I regret that I have lost his speech and cannot remember a thing he had to say.”

 

He sat down with much applause.

 

—-SUBHAM—-

 

விகடன் பள்ளியிற் படித்த விநோதம் (Post No. 2441)

IMG_9805 (2)

Compiled  by London swaminathan

Date: 30 December 2015

 

Post No. 2441

 

Time uploaded in London :– காலை 8-58

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

விநோத விகட சிந்தாமணி- என்ற பழைய நூலிலிருந்து; (நூல் கொடுத்துதவியர்- ச.சீனிவாசன், சென்னை).

 

பழைய தமிழ்நடை; பழைய நகைச்சுவை!!

 

“ஐயா! நான் பள்ளியிற் வாசித்த வைபவத்தைக் கூறுகிறேன் கேளும். நான் பிறந்தது வெயிலடிச்சான்பட்டி. என் தகப்பனாருக்கு நான் ஒருவனே ஏகபுத்திரன். எங்கள் ஜாதியோ துடைதட்டி வெள்ளாளர். என் தகப்பனார் சுத்த கர்நாடகம். ஒருநாள் என் தகப்பன் வழக்கம்போல் அதிகாலையிலெழுந்து ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டுக் கரையில் வந்து வேஷ்டி கட்டிக்கொள்ள மடிசஞ்சியைப் பார்க்க, எவனோ அப்பிக்கொண்டு போய்விட்டான். அங்கு தோட்டக்காரனின் வெள்ளை நாயொன்று படுத்திருந்தது.

மையிருட்டாயிருந்தமையாலும்,கண்பார்வை மத்தியமாதலாலும் மடிசஞ்சியென்றெண்ணி நாயைப் பலமாய்த் தூக்கினார். அப்போது வயிரவர் தீர விசாரித்துவிட்டார். சிலநாளைக்கெல்லாம் அவர் வெறிநாய் கடித்த கிறுக்கால் வலி பொறுக்கமாட்டாமல் நாய் போல் ஊளையிட்டே இறந்தார்.

 

அதன்பின் என் தாய் என்னைப் பள்ளியில் வைக்கத் தொடங்கினாள். நான், “ஆனகுலத்திற் பிறந்து ஆடுமாடு மேய்க்காமல் ஓலைவாரிக் கழுதையாய்ப் போகிறதா?” என்றெண்ணிப் படிப்பும் வேண்டாம், பிடிப்பும் வேண்டாம்” என்றேன். அது என் தாயாருக்கு மனம் பொறாமல் நான்கு ஐந்து புளியமரங்களும், பத்துப் பதினைந்து வீடுகளுமுள்ள பெரியபட்டணமாகிய ஆடுசாபட்டியில் ஓர் உபாத்தியரிடம் கொண்டுபோய் என்னை ஒப்புவித்தார். நான் அங்கேயே உபாத்தியாயர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன்.

 

என் வாத்தியார் சம்சாரமோ வெகு வக்கணைக்காரி. அவள் அழகோ சொல்லவேண்டியதில்லை; வர்ணிக்கத்தான் வேண்டும்

 

(சிந்து)

“இளிச்ச பல்லுக்காரி

இடிபோல் சொல்லுக்காரி

வெளிச்ச மூஞ்சிக்காரி

வெட்கங்கெட்ட நாரி

டொக்கு கன்னக்காரி

டக்குக் கண்ணுக்காரி

ஈன நடைக்காரி

ஆனைக் கழற்காரி

IMG_9805 (3)

இப்பேற்பட்ட அற்புதம் வாய்ந்து சுப்ரதீபமாய் விளங்கும் வல்லாளகண்டி என்பவள் அனுதினமும் உபாத்தியாயர் தலையில் ஒரு சட்டி அல்லது ஒரு பானை உருட்டமலிருக்கமாள். அப்படி சட்டிப்பனைகளை அவர் தலையில் உருட்டும்போது நான் பசுமூத்திரம் குடித்த காளைபோல் பல்லை யிளித்துக்கொண்டிருப்பேன். அப்போதவர், “அடே பையா! இவளைக் காட்டிலும் பட்டிமுண்டையாய் உனக்கு வாய்க்கவேணும். அப்போது இளிக்கமாட்டாய் என்பார். இப்படியிருக்க ஒரு நாள் கிணற்றில் தண்ணீர் இறைத்துவிடவேண்டுமென்று எனது வாத்தியார் மனைவி என்னை ஏவினார். அப்போது,

 

நெடுமால் திருமுருகா

நித்த நித்தமிந்தெழவா

வாத்தியாரும் சாகாரோ

வயிற்றெரிச்சல் தீராதா”

என்று ஓயாமல் கடவுளைப் பிரார்த்திக்கொண்டிருக்கும்போது, ‘போதாக்குறைக்கு பொன்னியம்மன் குறை’ என்பதுபோல வாத்திச்சியும் மோட்டுத் தவளைபோற் கட்டளையிடவே நான் கிணற்றண்டை சென்று ஒரு கூர்மையான கல்லொன்றெடுத்து அந்தத் தோண்டியை ஆயிரம் பொத்தலாக்கி ஒரு குடம் தண்ணீர் எடுத்துவந்தேன். அதற்கவள், ‘அடிமாண்டு போக’, கரியாய்ப் போக என்று தனது வசவு அரிச்சுவடியை வரிசையாயொப்பிவித்தாள்.

மற்றொரு நாள் அவள் நெல்லுக் குத்திக்கொண்டிருக்கையில் என்னையும் ஒரு உலக்கை எடுத்து வந்து குந்தாணியில் குத்தும்படி சொன்னாள். நான் இதுதான் சமயமென்று  என் பலமெல்லாம் சேர்த்து அவள் கைவிரல் நசுங்கும்படி ஒரு போடு போட்டேன். அம்மாடி, அப்பாடி, நான் சாகலாச்சு, போகாச்சு என்று அவள் தாய் தந்தை பாட்டன் பூட்டன் இறந்த துக்கத்தையெல்லாம் எண்ணி ஒப்பாரி வைத்தாள். பின்னர் வாத்தியார் வந்து சமாதானம் பண்ணப்பட்ட பாடு ‘மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது’ போலாயிற்று.

 

வேறொரு நாள் குரு என்னைப் பார்த்து, வெந்நீர் போடும்படி சொன்னார். ஆகட்டும் குருபராக்கென்று வெகு வணக்கத்துடனும், விரைவுடனும், வாத்தியார் பாட்டன் பூட்டென்களெல்லாம் அருமையாய்க் கைபாடுபட்ட மூளை பிறள, எழுத்தாணி முனைதேய வறட்டு வறட்டென்று எழுதிய  ஏட்டுச் சுவடிகளாகிய பாகவத, பாரத இதிஹாச புராணங்களையெல்லாம் தூக்கிவந்து அடுப்பில் உருவியும், உருவாமலும் போட்டு வெந்நீர் காய வைத்துக் குருவை வணக்கத்துடன் ஸ்நானம் செய்ய அழைத்தேன்.

 

குருவும் முப்பத்திரண்டு பற்கள் தெரியும்படி தன் மனைவியைக் கூப்பிட்டு, பார்த்தாயடி! சீஷப் பிள்ளை விரைவில் வெந்நீர் போட்டுவிட்டான். நீ வெந்நீர் போட ஊரடங்கிவிடும் என்று சொல்லி வெந்நீர் ஸ்நானஞ் செய்து, மடி வஸ்திரம் தரித்துப் பலகைமீதமர்ந்து பாராயணஞ் செய்ய ராமாயணம் கொண்டுவா” என்று தன் மனைவியையேவ அவள் பரணெல்லாம் தேடியும் ஒரு ஏட்டுத் துணுக்குங்கூட கிடைக்கவில்லை. அப்போது பரண்மீது அந்த அம்மாள் கையில் ஒரு கொள்ளித்தேளிருந்து கொட்டிவிடவே அலறியடித்துக்கொண்டு, “ஏட்டுக் கட்டையும் காணோம், சுடுகாட்டையும் காணோம். உமது ராமாயணம் பாழாய்ப்ப் போக, நீர் அடிமாண்டு போக” என்று வைய ஆரம்பித்தாள். உடனே வாத்தியார் எழுந்து, துஷ்டை, பிரிஷ்டை என்று வைதுகொண்டு தேடிப் பார்த்தார். அது அங்கே ஏனிருக்கும்?

 

பின்பு என்னைப் பார்த்து, சிஷ்யா! ஏடுகளெல்லாமெங்கே? என்றார். உடனே பரமானந்த சீஷனான நான், “ஒரு அண்டா வெந்நீர்  ஐந்து நிமிஷத்திலெப்படிக் காய்ந்ததென்றெண்ணுகிறீர் என்றேன். அதற்கவர், சபாஷ்! பிள்ளையாண்டான், கெட்டிக்கரனென்று மெச்சி என்னை ஊருக்கனுப்பிவிட்டார். பின்பு சிறிது நாளைக்கெல்லாம் எனக்கு விவாகம் நடந்தேறி, துபாஷ் வேலியிலிருந்தேன். அப்போது மனைவியால் பட்ட பாட்டைக் கேளும்.

 

சூத்ரதாரர்:- நண்பா! உன் அன்பார்ந்த கதைகளைக் கேட்கக் கேட்க ஆனந்தமாயிருக்கிறது. விளம்புவாய்

–சுபம்—

நகைச் சுவைக் கதைகள் தொடரும்………………………………………….