வள்ளுவரின் சுடும் குறள்கள்! (Post No. 2469)

punul valluvar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 8 January 2016

 

Post No. 2469

 

Time uploaded in London :–  5-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

திருக்குறள் தெளிவு

 

வள்ளுவரின் சுடும் குறள்கள்!

 

.நாகராஜன்

 

சுடும் குறள்கள் ஐந்து

 

வள்ளுவரின் சில குறள்கள் நம்மைக் குளிர்விக்கும். சில அறிவுரை தரும். சில கேள்விகளைக் கேட்கும். சில கேள்விகளைக் கேட்டு பதிலும் தரும்.

இன்னும் சில குறள்களோ  சுடும்

 

என்ன சுடுமா? ஆம், சுடும் குறள்கள் அனைத்தையும் இங்கு பார்ப்போம்.

 

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை    உள்ளினும் உள்ளம் சுடும்   (குறள் 799)

 

 

ஒருவனின் உள்ளம் எப்போது சுடும்?

பதில் தருகிறார் வள்ளுவர்.

மரணம் வரும் போது நினைத்தால் கூட (அடுங்காலை) உள்ளம் சுடும் – ஒரு கேடு நமக்கு வரும் போது உதவாமல் ந்ம்மைக் கைவிடுபவரின் நட்பை மரண நேரத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும்!

 

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்                உள்ளினும் உள்ளம் சுடும்    (குறள் 1207)

 

 

எனது காதலனை மறக்காமல் இடை விடாது நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த உள்ளம் சுடுகிறதே, ஒரு வேளை நினைக்காமல் மறக்க நேர்ந்தால் நான் என்ன ஆவேன்?

 

காதல் பற்றிய உணர்வை ஒரு பெண் சொல்லுகின்ற குறளில் உள்ளம் ஏன் சுடுகிறது என்பதை அறிய சுவையாக இருக்கிறது.

valluvar iyengar

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்                  தன்னெஞ்சே தன்னைச் சுடும்       (குறள் 293)

 

 

உன் நெஞ்சம் தானாகவே உன்னைச் சுடும் என்ற எச்சரிக்கைக் குறள் இது. எப்போது சுடும்?

தன் நெஞ்சம் அறிந்த உண்மையைக் கூறாமல் பொய் கூறினால் தன் நெஞ்சே தன்னைச் சுடும்.

அந்தச் சூடு இருக்க, தனியே வேறு இறந்த பிறகு மயானத்தில் சுட வேண்டாம். இறந்த பின் சுடுவது சில மணி நேரமே. ஆனால் நெஞ்சம் சுடுவதோ வாழ்நாள் இருக்கும் வரைக்கும்!

 

 

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்           ஏமப் புணையைச் சுடும்    (குறள் 306)

 

 

சேர்ந்தவுடன் ஒருவரை அழிக்கும் அபூர்வப் பொருள் உள்ளது. அது தான் நெருப்பு. சேர்ந்தாரைக் கொல்லி – நெருப்பு.

ஏமப்புணை என்பது நமக்குத் துணையாக இருக்கும் பாதுகாவலர்.

நெருப்பு பரவினால் அனைத்தையும் அல்லவா சுட்டெரிக்கும்.

 

சினம் அதாவது கோபம் நெருப்பு போன்றது. அது கோபப்பட்டவரை மட்டும் அது அழிக்காது. உடன் துணையாக இருக்கும் பாதுகாவலரையும் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி உடன் இருந்தாரையும் அல்லவா சுட்டு விடும்! ஜாக்கிரதை!

 

 

tirukkural seminar

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்             நாணின்மை நின்றக் கடை    (குறள் 1019)

 

ஒருவன் தான் கொண்ட கொள்கை தவறினால் (கொள்கை பிழைப்பின்) அது அவனுடைய குலத்தைச் சுடும்; அழிக்கும். ஆனால் செய்யத் தகாத செயல்களைச் செய்வதில் வெட்கப் படாவிட்டால் (நாணின்மை நின்றக் கடை) எல்லா நன்மையையும் அது அழிக்கும் (நலம் சுடும்)

 

ஐந்தும் சுடும் குறள்கள்.

 

ஒன்று உன் உள்ளத்தைச் சுட்டே உன்னை சாகும் வரைக்கும் எரிக்கும் என்கிறது — நெஞ்சம் அறிந்து பொய் சொல்லாதே

அடுத்தது மரண சமயத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும் என்கிறது -ஆபத்துக் காலத்தில் கைவிட்ட நண்பனை நினைத்தால்!

 

இன்னொன்று காதலியின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சதா ‘அவன்’ நினைவாக இருக்கும் போதே சுடுகிறதே, மறந்தேன் என்றால், ஐயையோ… அந்த நிலையை நினைக்கவும் முடியுமா?

 

அடுத்தது கொள்கையை விட்டு விட்டால் குலம் அழியும்; வெட்கப்பட வேண்டிய செயல்களை விடாவிட்டால் எல்லா நன்மையும் அழியும் என்கிறது.

 

இன்னொன்று, கோபப்படாதே. கோபம் சேர்ந்தவரை அழிக்கும் சேர்ந்தாரைக் கொல்லி. அது உன்னை மட்டும் அழிக்காது, உன் துணையையும் அழித்து விடும் என்கிறது.

 

 

அபூர்வமான சுடும் குறள்கள் நெஞ்சத்திற்கு இதமான உண்மைகளை அல்லவா கூறுகிறது!

 

valluvar gold

 

சுடுவதை ஒப்பிடும் குறள்கள் நான்கு

 

 

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்                 சுடச்சுட நோற்கிற்பவர்க்கு  (குறள் 267)

 

தவம் செய்கிறான் ஒருவன் அவனது தவம் மேம்பட மேம்பட ஒளி மயம் ஆவான். எது போல? சுடச் சுட  மாசு நீங்கி ஒளிரும் பொன் போல! தவம் மாசைக் களையும். மாயையை அழிக்கும். ஒளியைத் தரும்!

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல                        விடிற் கடல் ஆற்றுமோ தீ    (குறள் 1159)

 

 

நெருப்பு தன்னைத் தொட்டவரை மட்டும் தான் சுடும். ஆனால் இந்த காம நோய் இருக்கிறதே, விட்டு நீங்கியவரை கூட சுடுகிறதே, அந்த நெருப்புக்கு இந்த ஆற்றல் இல்லையே!

நெருப்புக்கும் காம நோய்க்கும் உள்ள வேற்றுமை தெரிந்து விடுகிறது! எப்போதும் உடலை தகிக்க வைப்பது காமம்!

 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்              பெரியார்ப் பிழைத்தொழுகுவார்   (குறள் 896)

 

தீயினால் சுடப்பட்டால் கூட ஒரு வேளை உயிர் தப்பி வாழ ஒருவனுக்கு வழி உண்டு. (எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்)

ஆனால் ஒருவன் பெரியோரிடத்தில் குற்றம் செய்து விட்டாலோ உய்வதற்கு வழியே இல்லை.

பெரியோரிடம் தவறு இழைக்காதே!

 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே                  நாவினால் சுட்ட வடு  (குறள் 129)

 

 

தீயினால் சுட்ட புண் கூட ஆறி விடும். ஆனால் நாவினால் ஒருவனைச் சுட்டு விட்டால் அது அவன் நினைவில் நீங்காத வடுவாக அல்லவா நிலைத்து நிற்கும். நாவினால் யாரையும் சுடாதே!

 

எப்படி இருக்கிறது ஐந்து சுடும் குறள்களும் நான்கு சுடுவது பற்றி ஒப்பிடும் குறள்களும்.

 

நவ (9) குறள்களும் நவமான (புதிதாக இருக்கும்) குறள்கள் – இன்று நோக்கினாலும், என்று நோக்கினாலும்!

*******

Where was Vishnu hiding? (Post No. 2468)

narshimha1

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 7 January 2016

 

Post No. 2468

 

Time uploaded in London :–  18-20

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Give up pride to attain God

narasimha2

Picture: Hiranyakasipu was killed by Vishnu in his lion-man form.

Hiranyakasipu was the King of the Asuras or demons. At one time he was the most powerful monarch of all the worlds. Being an Asura he was the enemy of the Gods. He used to wage war with the gods from time to time. By the great powers he had attained by penance, he used to defeat gods who would flee from him because of his severe onslaught on them.

 

 

Once Hiranyakasipu thought of taking possession completely of Devaloka, the abode of Devas, and also of Vaikuntha where Vishnu lived. He started the campaign with a sword in his hand fought with the Devas and drove them away from Devaloka. Then he proceeded to Vaikuntha. The news having reached Vishnu and his Dutas, they in a body took to heels and disappeared. Hiranyakasipu entered Vaikuntha and finding the place vacant, searched for Vishnu everywhere in all secret hiding places in the three worlds. But Vishnu could not be found anywhere. He returned to his kingdom utterly disappointed. Soon after, Vishnu came out of his hiding place and returned to Vaikuntha.

 

The news about Vishnu s flight from Vaikuntha out of fear on the invasion of Hiranyakasipu spread like wildfire. It reached the ears of Narada. Narada was astonished to hear of it. He directly went to Vaikuntha for making enquiries. After paying due obeisance to Vishnu, Narada with a curious smile on his face, asked the Lord, How is it You ran away when Hiranyakasipu invaded your heaven?  Vishnu confessed that since Hiranyakasipu was gifted with invincible powers acquired by his long continued penance, He couldn’t face him. Then Narada queried, it appears that you hid yourself in such a place that Hiranyakasipu, in spite of his combing every possible place of hiding all over the three worlds, could not discover You. May I know where you were when the search was going on?

 

Vishnu with a wink replied, Don you know? I was hiding in the heart of Hiranyakasipu himself. Is it so! Exclaimed Narada. How was it Hiranyakasipu failed to find you out while You were so near him, hiding in his own heart? Vishnu replied, How could he see me unless he bends down his head? He would not bow down as he was sitting and walking always with a puffed chest and upright head with a feeling of colossal pride that he was the suzerainty of all the worlds. So I felt safe in his heart while search for me was going on.

narasimha

The lesson we have to learn from this story is unless we bow down in all humility to God, we cannot find Him.

Story told by swami Ramdas.

 

–Subham–

 

வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க………….. தீயினில் தூசாகும் – ஆண்டாள் (Post No. 2467)

30 திருப்பாவை

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 7 January 2016

 

Post No. 2467

 

Time uploaded in London :–  8-37 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

கடவுள் பற்றி 275 பொன்மொழிகள், பழமொழிகள்

 

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 1 (ஜூன் 21, 2012)

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள்- பகுதி 2 (ஜூன் 22, 2012)

எனது முந்தைய தொகுப்புகளில் 200 பழமொழிகளும் இன்றைய தொகுப்பில் 75 பழமொழிகளும், ஆக மொத்தம் 275 பழமொழிகள் பொன்மொழிகள் உள:

2 கோதாவரி

கீழ்கண்ட தொகுப்பில் பல ஆங்கிலப் பழமொழிகளின் மொழி பெயர்ப்பும் உள.

 

1.சொர்கம் ஏன் காலியாக இல்லை? நம் பாவங்களை கடவுள் மன்னிப்பதால்!

 

2.முதல் எழுத்து அ போல உலகிற்கு மூல முதல்வன் பகவான் –வள்ளுவன் குறள்

 

3.வேண்டுதல் வேண்டாமை இலாதவன் –குறள்

 

4.தனக்குவமை இலாதான் – குறள்

 

5.வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் – ஆண்டாள்

 

6.கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிய்த்து கொண்டு கொடுக்கும்

 

7.நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்

 

8.நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு – பாரதியார்

 

9.அவனருளாலே அவன் தாள் வணங்கி- மாணிக்கவாசகர்

10.அன்பே சிவம் – திருமூலர்

11.கடவுள்,மர்மமான வழிகளில் செயல்படுகிறார்- வில்லியம் கவ்பர்

2.cosmic dancer, Boston Museum, US

12.குணப்படுத்துபவன் கடவுள்; நன்றியை வாங்கிக் கொள்பவன் டாக்டர்!

13.கடவுள் கட்டாயமாகக் கூலி கொடுக்கும் எஜமானன்

 

14.கடவுள் மெதுவாக வருவார்; ஆனால் அடிக்கும்போது இரும்புக்கரத்தால் அடிப்பார்

15.கடவுள் கோவிலில் இருப்பார்; அருகில் சின்னக் கோவிலில் சாத்தான் வசிப்பான்

 

16.கடவுள் கல்லைப் படைக்கிறார்; மனிதன் வடிவமைக்கிறான்

 

17.கடவுள் நாட்டுப்புறம் படைத்தார்; மனிதன் நகரத்தை உருவாக்கினான்.

 

18.எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், எல்லாம் அறிந்தவன் இறைவன்

 

19.திக்கற்றவருக்கு தெய்வமே துணை

 

20.யாண்டும் இடும்பை இல – குறள் (கடவுளை நம்புவோருக்கு துன்பமே இல்லை)

 

21.சங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம், விமுக்த துக்கா சுகினோ பவந்து – விஷ்ணு சஹஸ்ரநாமம் (நாராயண சப்தமுள்ள இடத்தில் துக்கம் பறந்தோடும்)

 

3 goddesses

22.சாமிவரம் கொடுத்தாலும் பூசாரி வரம்தர மாட்டான்

23.தெய்வச் செயல் இருந்தால் செத்தவனும் எழும்புவான்

 

24.தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும் – வள்ளுவன் வாக்கு

25.தெய்வப் புலவனுக்கு நா உணரும், சித்திர ஓடாவிக்கு கை உணரும்

 

26.தெய்வமிலாதேயா பொழுது போகிறதும், பொழுது விடிகிறதும்?

 

27.தெய்வமே துணை

 

28.தெய்வம் உண்டெபார்க்கு உண்டு, இல்லை என்பார்க்கு இல்லை

 

29.எல்லாம் அவன் செயல்

 

30.தெய்வம் காட்டுமே தவிர, ஊட்டாது

 

31.தெய்வம் பண்ணின திருக்கூத்து

 

32.பரமம் பவித்ரம் லீலா விபூதிம் (எல்லாம் அவன் லீலா விநோதம்)

 

33.தெய்வ வணக்கமே நரக வாசலை அடைக்கும் தாழ்

9krish_AP.jpgallbad, new IE

34.சாகற நேரத்தில் சங்கரா, சங்கரா என்றானாம்

 

35.சம்யாத்மா விநஸ்யதி (சந்தேகப்படுவான் அழிவான்)- பகவத் கீதை

36.அகதிக்குத் தெய்வமே துணை

37.அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும் (அரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்)

 

 

38.யோகக்ஷேமம் வஹாம்யஹம்- பகவத் கீதை 9-22 (பக்தன் விரும்பியதை அடையச்செய்வதும் அதைக் காப்பதும் என் பொறுப்பு)

39.கடவுள் நினைத்தால் காற்றில்லாமலே மேகம், மழை வரும்

 

40.சத்யம் ஞானம் அனதம் பிரம்மா

 

41.சத்யம், சிவம், சுந்தரம்

 

42.வேலை வணங்குவதே எமக்கு வேலை- பாரதியார்

 

18 steps

43.அஹம் பிரம்மாஸ்மி (நானே பிரம்மம்)

44.தத் த்வம் அஸி ( நீ அதுவாக (கடவுள்) இருக்கிறாய்)

45.ராமன் இருக்கும் இடத்தில் காமன் இரான்

46.அரங்கனைப் பாடின வாயால் குரங்கனைப் பாடுவேனா?

47.சிவநி ஆக்ஞலேக சீம கறவது (சிவனுடைய ஆணையின்றி எறும்பும் கடிக்காது)

48.ஓ ராம நீ நாமமு ஏமி ருசிரா? (தியாகராஜர்)

 

49.ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ- திருவாசகம்

 

50.பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது

 

51.அனுமார் வால் போல நீளும்

 

52.முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் (சிவன் பற்றி மாணிக்கவாசகர்)

 

53.சோற்றுக்குப் பின்னர்தான் சொக்கரும் மீனாட்சியும்

54.சிதம்பர ரகசியமா?

55.சிவத்தைப் போற்றிர் தவத்திற்கு அழகு – கொன்றைவேந்தன்

 

56.ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் – உலகநீதி

 

57.தெய்வம் நமக்குத் துணை பாப்பா- ஒரு தீங்குவரலாகாது பாப்பா – பாரதியார்

 

58.சிவாத் பரதரம் நாஸ்தி (சிவனுக்கு மேல் தெய்வமில்லை)

 

59.சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை; சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை

 

60.சிவன் அபிஷேகப் பிரியன்; விஷ்ணு அலங்காரப் ப்ரியன்

 

61.அவனினின்றி ஓர் அணுவும் அசையாது.

 

62.ஒன்றே குலம் ஒருவனே தேவன் –திருமூலர்

 

63.சிவனே என்று கிட

1377607696503-Janmashtami in jammu

Jammu,August 27 An children dressed up as Shri Krishna and his friends during shoba yatra on the eve of Janmashtami in Jammu city on Tuesday. Photo by Vishal Dutta

64.அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில மண்ணு

65.சிவனொடொக்கும் தெய்வம் தேடினுமில்லை

 

66.ஈசனுக்கு ஒப்பு எங்கனும் இல்லை

 

67.ஈசன் எப்படி, அப்படி தாசன்

68.ஈசன் செயலை நீசன் குறை சொன்னானாம்

69.ஈசன் செயல் எண்ணத் தொலையாது

70.ஈசுவரன் கோயில் திருநாள் ஒருநாள் கந்தாயம்

71.இறைவன், அடியார் நெஞ்சில் குடியாய் இருப்பான்

 

72தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்

73.காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி

74.ஜகஜ்ஜனனி, லோக மாதா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி

75.ஈக்கும் எறும்புக்கும் படி அளப்பவன் நமக்கும் படி அளப்பான்

 

alwarpet govindarajan

–Subham—

ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்! (Post No. 2466)

ragamala2

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 7 January 2016

 

Post No. 2466

 

Time uploaded in London :–  5-54 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

இந்திய சங்கீதம்

ராக தேவதைகளின் அருள் பெற்ற தான்ஸேன்!

 

ச.நாகராஜன்

 

 

ஹரிதாஸரின் சீடர்

 

இந்திய சரித்திரத்தில் பாடகர்களின் வரிசையில் இணையிலா இடத்தை வகிப்பவர் தான்ஸேன்.

 

இவரைப் பற்றி ஏராளமான சுவையான சம்பவங்கள் பல்வேறு நூல்களில் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவையெல்லாம் உண்மையா பொய்யா என்பதை அறிவது முடியாத காரியம்.

தான்ஸேனின் தந்தையின் பெயர் முகுந்த மிஸ்ரா.

ஐந்து வயதிலேயே சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றவராக ஆகி இருந்தார் தான்ஸேன். அவரது இளமைக்காலப் பெயர் ராமதனு.

அவரது குருநாதர் பிருந்தாவனத்தில் வாழ்ந்து வந்த பெரிய மகானான ஸ்வாமி ஹரிதாஸ்.

 

காடு வழியே சென்று கொண்டிருந்த குருநாதர் புலி போல குரல் (மிமிக்ரி) கொடுத்த ராமதனுவின் திறமையை மெச்சி அவருக்கு அனைத்தையும் சொல்லிக் கொடுத்ததாக ஒரு கதை.

அவரது தந்தையின் ஏற்பாட்டின் படி குருகுலவாஸம் செய்து தான்ஸேன் சங்கீதம் கற்றுக் கொண்டதாக இன்னொரு கதை.

எது எப்படியானாலும் ஹரிதாஸர் தனக்கு இணையாகப் பாடும்படி தான்ஸேனுக்கு அருளைப் பொழிந்தது வரலாற்று உண்மை. அனைத்து ராக தேவதைகளும் தான்ஸேன் மீது அருளைப் பொழிந்ததும் உண்மை!

 

ragamala3

அக்பரின் அழைப்பு

 

தான்ஸேனின் புகழைக் கேட்ட அக்பர் எப்படியும் அவரைத் தன் அரசவைக்கு அழைத்து வர விரும்பினார். அப்போது அக்பருக்கு வயது 20.

 

ரேவாவின் மஹாராஜாவான ராமச்சந்திராவின் அரசவையில் இருந்த தான்ஸேன் ஒருவாறாக அக்பர் அரசவைக்குச் சென்று தன் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். அப்போது அவருக்கு வயது 57.

 

அடுத்த 27 வருடங்களுக்கு அக்பர் தான்ஸேனை விடவே இல்லை. (1589ஆம் ஆண்டு வாக்கில் தான்ஸேன் மறைந்தார்)

அப்படி ஒரு மோகம், மரியாதை அக்பருக்கு தான்ஸேன் மேல் ஏற்பட்டது.

 

முதல் கச்சேரிக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்களை அக்பர் தான்ஸேனுக்கு வழங்கியதாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.

 

தனது நவரத்தினங்களில் முக்கியமான இடத்தை அக்பர் தான்ஸேனுக்கு அளித்தார்.

 

ragamala1

நரபதியும் தான்பதியும்

 

தன்னை புலவர்கள் நரபதி என்று அழைத்த போது தான்ஸேனை தான்பதி என்று அழைக்க வைத்தார் அக்பர்.

பாரத சாம்ராட் என்று கவிஞர்கள் அக்பரைப் புகழ்ந்த போது தான்ஸேனை சங்கீத சாம்ராட் என்று அவர் அழைத்தார்.

 

அவர் மேக மல்ஹார் ராகத்தைப் பாடினால் மழை பொழியும்!

(தான்ஸேன் தீபக் ராகம் பாடிய போது தீ ஜுவாலை எழுந்ததையும் குருநாதர் ஹரிதாஸைப் பார்க்க அக்பர் விரும்ப அவரை அழைத்துச் சென்ற போது நடந்த சுவையான சம்பவங்களையும் ஏற்கனவே கட்டுரைகளில் எழுதி இருப்பதால் அவற்றை இங்கு மீண்டும் எழுதவில்லை)

 

 

ஒரு அழகிய பாடல் நரபதி-தான்பதி விஷயத்தை விளக்குகிறது.

முராரே த்ரிபுவநபதே, இந்த்ர சுரபதே,, சேஷநாக் ஹை ஃபநபதே |

(முராரி மூன்று உலகங்களுக்கும் அதிபதி

இந்திரன் தேவலோகத்திற்கு அதிபதி

ஆதிசேஷன் நாகங்களுக்கு அதிபதி)

க்ஷீர உததி சலிலபதே, கௌஸ்துப மணி ரத்னபதே தினகர் தீனனபதே, கமலாபதே ||

(க்ஷீர சமுத்ரம் கடல்களுக்கு அதிபதி, கௌஸ்துப மணி  ரத்னங்களுக்கு அரசன், தினகரனும் விஷ்ணுவும் தீனர்களுக்குத் துணைவர்)

சசி உட்கணபதே, ஹநுமான் பலிநபதே, நாரதாதி பக்தநபதே, சாஜன் வீணா ம்ருதங்கபதே |

(நட்சத்திரங்களின் தலைவன் சந்திரன், ஹநுமான் பலசாலிகளின் அதிபதி, நாரதர், பக்தர்களின் தலைவர், வாத்தியங்களில் வீணை முதன்மையானது)

 

சிரஞ்சீவௌ சாஹ் அக்பர் நரபதே, தான்ஸேன் தான்பதே ||

இது போலவே சிரஞ்சீவி அக்பர் நரர்களுக்கு அதிபதி, அது போலவே தானபதி தான்ஸேன் தான்!

 

 raga1

சங்கீத ரஸிகர்கள் சென்று காணும் வட விருக்ஷம்

 

அக்பரின் அந்தப்புரத்தில் அக்பரைத் தவிர உள்ளே நுழையக் கூடிய உரிமையை தான்ஸேன் மட்டுமே பெற்றிருந்தார்.

அங்கு அவரது கச்சேரிகளை அந்தப்புரத்தில் இருக்கும் அரசமகளிருடன் அக்பரும் கேட்டு மகிழ்வது வழக்கம்.

தீபக் ராகம் பாடியபோது எழுந்த அக்னி ஜுவாலையில் தான்ஸேன் இறந்ததாக கர்ண பரம்பரைச் செய்தி தெரிவிக்கிறது.

அவரது அந்திமக் கிரியையின் போது கண்ணீருடன் அக்பர கலந்து கொண்டார் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

 

 

தான்ஸேனின் சமாதி, அவர் சங்கீதத்தை சாதகம் செய்த வட விருக்ஷம் முதலிய அனைத்தும் இன்றும் சங்கீத ரஸிகர்கள் செல்லும் இடங்களாக இன்றும் திகழ்கின்றன.

சுவையான சம்பவங்கள் நிறைந்த தான்ஸேனின் வாழ்க்கை இந்திய சங்கீதத்தின் பெருமைக்கான ஒரு வரலாறே. ஹிந்து(ஸ்தானி) ராகங்கள் பற்றியும் ராக தேவதைகளைப் பற்றியும் அறிய விரும்புவோர் தான்ஸேனின் வரலாறைப் படிப்பது பயன் தரும் ஒன்றாக அமையும்!

 

*******

இதைப் படிக்கும் அன்பர்கள் நேற்று வெளியான அக்பரும் சூரிய நமஸ்காரமும் கட்டுரையையும் படித்து மகிழலாம்.

துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்! (Post No. 2465)

conan doyle

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 6 January 2016

 

Post No. 2465

 

Time uploaded in London :–  13-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஆங்கிலக் கதை படிக்கும் அனைவர்க்கும் தெரிந்த துப்பறியும் கதா பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கற்பனைக் கதா பாத்திரத்தை உருவாக்கியவர் சர் ஆர்தர் கானன் டாய்ல். அப்பேற்பட்ட துப்பறியும் நிபுணரை ஒரு டாக்சி டிரைவர் பிரமிக்கவைத்த ஒரு சம்பவம்:-

 

நாவல் ஆசிரியர் ஆர்தர்,  பாரிஸில் வந்து இறங்கினார். ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வரிசையாக நிற்கும் ஒரு டாக்ஸியில் ஏறினார். ஹோட்டல் வாசல் வந்தவுடன் கட்டணத்தைக் கையில் கொடுத்தார் சர் ஆர்தர் கானன் டாயில்.

 

நன்றி, திரு.கானன் டாயில் – என்றார் டாக்சி ட்ரைவர்.

ஆர்தர்: ஏய், நில். என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?

டாக்ஸி டிரைவர்: அதுவா? இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். அதில் நீங்கள் இன்று தென் பிரான்ஸ் பகுதியிலிருந்து பாரீஸ் மாநகரம் வரப்போவதை அறிந்தேன். நீங்கள் வந்தவுடன் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஆங்கிலேயன் என்று புரிந்துகொண்டேன். எங்களுக்கு உங்கள் நாட்டுக்காரர்களின் நடை, உடை, பாவனை எல்லாம் அத்துபடி. மேலும் உங்கள் தலையைப் பார்த்தேன். தென் பிரான்ஸ் பகுதி நாவிதர்கள் முடிவெட்டிய பாணி (ஸ்டைல்) அதில் தெரிந்தது. உடனே நீங்கள்தான் சர் ஆர்தர் கானன் டாயில் என்று நினைத்தேன்.

ஆர்தர்- பலே, பலே! இதைவைத்து மட்டும் கண்டுபிடித்த உன் மூளை அபார மூளை. சரி, அது எப்படி நான் தான் ஆர்தர் என்று உறுதி செய்தாய்?

 

டாக்ஸி டிரைவர்: ஓ, அதுவா? உங்கள் பெட்டியில் தொங்கும் அடையாள அட்டையில் உங்கள் பெயர் எழுதியிருக்கிறதே!!!!!!!

ஆர்தர்:- !!!!! ??? !!!!!! ???? !!!!!!!!!!!!!!

sherlock holms

Xxx

நிர்வாணப் பெண் ஓட்டம்!

 

நியூயார்க் நகர போலீஸ் “வாக்கி டாக்கி” அலறியது:

“அவசரம், அவசரம்! கார் நம்பர் 13 கவனிக்கவும். உடனே மூன்றாவது அவென்யூ 14ஆவது தெருவுக்கு விரைக. ஒரு பெண் ஆடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறாள்”.

ஒரு சில வினாடிகளுக்கு ஒரே அமைதி!

இப்படி அறிவித்தவருக்கு சுரீர் என்று உரைத்தது! அடப் பாவி மகனே! நான் பெரிய தப்புச் செய்துவிட்டேனே! இப்போது எல்லா போலீஸ்  கார்களும் அங்கு போய்விடுமே என்ற எண்ணம் நிழலாட மீண்டும் மைக்ரோபோனை எடுத்தார்.

“கார் எண் 13 மட்டும் விரைக. மற்றவர் அனைவரும் அவர்தம் பணியில் ஆங்காங்கே நிற்க!

Xxx

-சுபம்-

 

 

 

 

Nude woman running down the street! Police and Detectives Anecdotes!!( Post No. 2464)

conan doyle

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 6 January 2016

 

Post No. 2464

 

Time uploaded in London :–  9-35 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Customer is always wrong!!

A policeman’s life is sometimes a happy one. This is indicated by the floor walker who threw up his job and entered the police force. When asked why, he said, “Well the pay and hours are alright, but the best thing is that the customer is always wrong.”

 

Xxx

Nude woman running down the street!

In New York City recently a police car cruising along the street received the following radio call.

“Calling car 13. Car 13. Go to Third Avenue and 14th Street, Nude woman running down the street. That is all.”

There was a pause. Then came the afterthought.

“All other cars stay on your beats. That is all.”

 

Xxx

sherlock holms

Sir Arthur Conan Doyle surprised!

The French are lovers of ratiocination (A reasoned train of thought). Accordingly there are to be found in that nation, many admirers of the works of Conan Doyle. Sir Arthur had once taxied from the station to his hotel in Paris, and as he left the cab, the driver said,

“Merci, Monsieur Conan Doyle.”

“How did you know who I am?” asked Doyle curiously.

The taxi man explained, “There was a notice in the paper that you were arriving in Paris from south of France. I knew from your general appearance that you were an Englishman.  It is evident that your hair was last cut by a barber of south of France. By these indications I knew you.”

“This is extraordinary. You have no other evidence to go upon? Asked Doyle.

“Nothing except”, said the driver, “the fact that your name is on your luggage.”

 

Xxx

I never buy empty bottles!

During Prohibition a malicious person directed the revenue officers to a man in whose cellar, they said, would be found a large cache of liquor. Swooping down upon the residence, they found nothing except the slightly incriminating presence of a hundred or more empty whisky bottles.

“How did these get here?” they demanded of the owner.

“I certainly don’t know”, replied the man innocently, “ I never bought an empty whiskey bottle in my life.”

Xxx

 

collie

Warning Dog!

Robert Burns had a collie (dog) named Thurlow. When he was a Revenue officer he used to encourage Thurlow, who was well known throughout the country side, to run a quarter of a mile or so ahead of him, that the moonshiners might be warned of his approach.

–Subham–

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும் (Post No. 2463)

Emperor-Akbar-Empress-Jodha

Akbar and his wife Jodha Akbar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 6 January 2016

 

Post No. 2463

 

Time uploaded in London :–  5-46 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

இந்திய சங்கீதம்

 

அக்பரும் சூரிய நமஸ்காரமும்

(Akbar and surya namaskar by Santanam Nagarajan)

ச.நாகராஜன்

 

 

கங்கை ஜலம் அருந்திய அக்பர்

 

அக்பர் ஒரு நல்ல ஹிந்துவுக்கு உரிய பல செயல்களை வாழ்நாள் முழுவதும் செய்து வந்தார்.

அவர் எங்கு சென்றாலும் கூடவே கங்கை ஜலம் கொண்டு செல்லப்படும். தன் வாழ்நாள் முழுவதும் கங்கை ஜலத்தைத் தவிர வேறெந்த நீரையும் அருந்தாதவர் அக்பர்.

 

Jodha-Akbar-Mugh

மரியாதையை எதிர்பார்க்காத மன்னர்

 

அவரது அரசவையில் இருந்த ந்வரத்னங்களின் வீட்டுக்கு அவர் செல்வது வழக்கம். அவர்களின் அழைப்பை அவர் எதிர்பார்ப்பதே இல்லை.

 

ஆனால் இதில் ஒரு சங்கடம் அவர்களுக்கு உண்டு. சாதாரணமாக மாமன்னரான அக்பர் ஒருவரது வீட்டிற்கோ மாளிகைக்கோ அரண்மனைக்கோ சென்றால் அவரை மரியாதை செய்ய வேண்டும், அவரது அந்தஸ்துக்குத் தக!

 

 

தங்கத் தட்டில் விருந்து, முத்துக்கள் பதிக்கப்பட்ட குவளைகளில் நீர், ஒன்றே கால் கோடி ரூபாய் தக்ஷிணை ஆகியவை நிறைவேற்றப்பட வேண்டிய குறைந்த பட்ச மரியாதைகள்.

ஆனால் ராஜா பீர்பல் இதற்கெல்லாம் எங்கே போவார்? அவர் தன் இல்லம் வந்தமைக்காக மன்னரை வாழ்த்தி ஒரு பாடலைப் பாடுவது வழக்கம்.

 

அக்பரும் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு மகிழ்வார்.

தான்ஸேனும் இது போல தங்கத் தாம்பாளம், வைரக் கோப்பை, வெள்ளிக் குவளைகள், தங்க நாணய தக்ஷிணை ஆகியவற்றை ஒரு போதும் கொடுத்ததில்லை; ஏனெனில் அவரிடம் இவை இல்லை, அவ்வளவு தான்.

 

ஆனால் மன்னர் வந்தவுடன் பாட ஆரம்பிப்பார். அதில் அக்பர் உருகி விடுவார். அவர் தான் தான்ஸேனுக்கு எல்லாவற்றையும் தருவார்.

 

ஏராளமான ஹிந்து அறிஞர்களைத் தன் அருகில் வைத்துக் கொண்டு அவர்களின் முழு அறிவையும் தன்னால் முடிந்த மட்டில் கிரகிக்கப்ப் பார்த்தார் அக்பர்.

surya namaskar by english

 

சூரிய உபாஸனை

 

தினமும் அதிகாலையில் சூரியோதயத்திற்கு முன்னர் எழுவது அவர் வழக்கம். சூரிய உபாஸனையில் அவர் மனம் பக்தி சிரத்தையுடன் வெகுவாக ஈடுபட்டது.

 

ஜைன மதத்தைச் சேர்ந்த பண்டிதரான பானுசந்திர உபாத்யாய அவருக்கு சூரிய ஸஹஸ்ரநாமத்தை உபதேசித்தார்.  ஆயிரம் நாமங்களைச் சொல்லி சூரியனை வழிபடும் வழக்கத்தை தன் வாழ்நாள் இறுதி வரை அக்பர் கடைப்பிடித்தார். அவரது ஆரோக்கிய ரகசியம் சூரிய நமஸ்காரத்தில் இருந்தது.

அக்பரின் இந்த சூரிய வழிபாடு தான்ஸேனை வெகுவாகக் கவர்ந்தது.

சூரியனை நோக்கிப் பிரார்த்தித்த தான்ஸேன், “ஒளிபொருந்தியவராக சிரஞ்சீவியாக அக்பர் ஆட்சி புரிய சூரிய பகவான் அநுக்ரஹம் புரிய வேண்டும்” என்று பாடலை யாத்துப் பாடினார்.

 

“அங்கே சூரியன், இங்கே அக்பர்!

இருவரையும் பாருங்கள்!

 

என்ன பவித்ரம், வந்து வரம் வாங்குங்கள், ஆனந்தம் பெறுங்கள்!

சஹஸ்ர கிரணங்களைக் கொண்டுள்ள சூரியன் போலவே அக்பரும் ஆயிரம் கிரணங்களைக் கொண்டுள்ளார். புத்தி ச்ரேஷ்டர். துக்கம் போக்குபவர் என தான்ஸேன் சொல்கிறேன்” என்ற பொருளமைந்த பாடலையும் யாத்துப் பாடினார்.

சூரிய உபாஸனையை இடைவிடாது அக்பர் செய்து வந்ததால் பவித்திரமான ஒருவராக அவர் இருப்பதாக நினைத்த தான்ஸேன் அக்பர் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வந்தார்.

 

surya deva painting

புனைகதைகளில் தான்ஸேன்

 

ஆனால் ராம தானுவாக இருந்தவர் தான்ஸேனாக மாறியதோடு இஸ்லாமை ஏன் தழுவினார் என்பதை வரலாறு சரியாக விளக்கவில்லை. பல புனைகதைகள் இருப்பதால் அது பற்றிய உண்மை தெரியவில்லை.

 

ஒரு கதையில் மன்னர் ராமச்சந்திரரிடமிருந்து வந்து விட்ட சோகத்தால் தான்ஸேன் பாடுவதையே நிறுத்தி விட்டதாகவும், இதனால் அக்பர் அவரிடம் தன் புத்திரியை அனுப்பிப் பாட்டுச் சொல்லித்தரச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. அவளுக்குப் பாட்டுச் சொல்லித் தரவே நாளடைவில் பழைய நிலைக்கு வந்து மீண்டும் பாட ஆரம்பித்ததாகக் கூறும் இந்தக் கதை வெறும் பொய்க்கதை என்பதை சுலபமாக உணரலாம்.

அரியணை ஏறி தான்ஸேனை அழைக்கும் போது அக்பருக்கு இருபதே வயது. அவர் எப்படி தன் மகளை 57 வயதான தான்ஸேனிடம் அனுப்பி இருக்க முடியும்?

 

ஆக தான்ஸேனின் வரலாறு பல மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே விளங்குகிறது.

 

ஆனால் ராகினிகளை  (ராக தேவதைகள்) அவர் உபாஸித்ததும் அந்த தேவதைகள் அவர் நாவில் நர்த்தனம் ஆடியதும் உண்மையே!

 

அக்பர் ஒரு வரலாற்று விசித்திரம் என்றால் அதில் அங்கம் வகிக்கும் தான்ஸேனைப் பற்றிய விவரங்களும் அப்படித்தான்!

*********

 

Tamil Genius! 100 tasks done simultaneously! (Post No. 2462)

IMG_0281

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

Date: 5 January 2016

 

Post No. 2462

 

Time uploaded in London :–  8-20 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Western world is very familiar with blindfold chess games. German chess player Marc Lang played blindfold chess with 46 people at the same time and set a new record. But Tamils did 100 tasks simultaneously and earned a special place in the literary world. It is called Satavadanam. It is the art of responding to one hundred tasks performed simultaneously. One Tamil Muslim scholar Seykuthambi Pavalar is known for this feat. There was another gentleman born in Jaffna in Sri Lanka and attained the title ‘Satavadani’. His name is N.Kathiraver Pillay (1871-1907).

 

Born in West Puloli of Jaffna peninsula, he migrated to Chennai in Tamil Nadu hundred years ago. He was a great Tamil scholar who compiled a proper dictionary for Tamil like the English lexicographer Samuel Johnson. Mr Pillay lived just 36 years, but yet carved a special place for him in the field of literature. He composed poems in many genres such as Chitra Kavi (composing poems to fit them in the figures such as lotus, snake, chariot), Seettuk Kvai (Letter is the form of verses), Siledaik Kavi (poems in double entendre or paronomasia). He wrote commentaries for minor Tamil works and also published out of print Tamil works.

IMG_0280

When he was in Sri Lanka he did 18 tasks at the same time. But he practised more and got ready for 100 tasks. This was demonstrated in front of learned men in Chennai. If one is able to do eight tasks at the same time he is known as Ashtavadani and those who could do ten tasks simultaneously are known as Dasavadani. Like blindfold chess, more the number, more difficult it will be.

 

Ashtavadanam includes tasks such as answering eight people at one time. One will be asking him to compose a verse in Tamil , another will be asking him to do sums like addition, multiplication, subtraction, fifth person may ask him to play with him a board game. Other scholars will be asking him difficult questions in grammar. While he is doing all these things, he has to make an iron chain with difficult links. This is not the end. Someone will be throwing small stones or marbles on his back. When he stops he would ask him how many balls he threw. Another person will ask the meaning of a poem from Tamil Ramayana or Mahabharata.

 

If ashtavadanam is this complicated, one can imagine how difficult it would be to do 100 tasks simultaneously. N Kathirvel Pillay did 100 tasks in Lakshmi Vilas Theatre in Chennai. All this was done after announcing to the general public and inviting Tamil professors and other scholars. Simple questions such as the day, date, time on a particular point in the calendar will also be asked. Since N Kathirvel Pillay had tremendous memory power he did this without any difficulty.

Rev Clayton who was an officer in the British Government at that time wrote a review in ‘Mail’ newspaper after Kathirvelpillay’s Satavadanam. He mentioned that Mr Pillay did this with effortless ease.

blindfold chess

Blindfold Chess: similar task

The art of doing 8 or 10 or 100 tasks is unique to the Tamil speaking world. Tamil literary history mentioned several Ashtavadanis, Dasavadanis and a few Satavadanis. They symbolised tremendous memory power, focus and concentration.

 

–subham–

 

 

யாழ்ப்பாணத் தமிழறிஞர் செய்த “100 செயல்” அற்புதம்! (Post No. 2461)

IMG_0281

WRITTEN BY LONDON SWAMINATHAN

 

Date: 5 January 2016

 

Post No. 2461

 

Time uploaded in London :–  7-53 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தமிழறிஞர்கள் பலர் செயற்கரிய செயல்களைச் செய்துள்ளனர்.இவர்களில் குறிப்பிடத் தக்கவர் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) ஆவார். பல சீட்டுக் கவிகள், சிலேடைக் கவிதைகள், சித்திரக் கவிதைகள், எல்லாவற்றிற்கும் மேலாக முறையான தமிழ் அகராதி முதலியன இவர்தம் படைப்புகளாகும். இவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைக் கவனிக்கும் – அவதானிக்கும் – ஆற்றல் படைத்தவர். ஆகையால் இவரை சதாவதானி என்ற சிறப்புப் பட்டத்துடனேயே குறிப்பிடுவர்.

 

ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு செயல்களைச் செய்தால் அவரை அஷ்டாவதானி (அஷ்ட=எட்டு) என்பர். பத்து செயல்களை ஒரே நேரத்தில் செய்தால் தசாவதானி (தச=பத்து) என்பர். நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி (சத = நூறு) எனபர். அஷ்ட, தச, சத என்பனவெல்லாம் வடமொழி எண்கள்.

 

தமிழ்கூறு நல்லுலகில் செய்குத் தம்பி பாவலர் என்பவற்கும் சதாவதானி என்ற அடைமொழி உண்டு. நா.கதிரைவேற்பிள்ளை செய்த அதிசயம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. அவர் என்ன செய்தார், எங்கே செய்தார்?

 

கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாணத்தில் பிறந்தாலும் வசித்தது முழுதும் தமிழ்நாட்டில்தான். ஆறுமுக நாவலருக்குப் பின்னர் சைவத் திருமுறைகளின் பாதுகாவலனாக நின்றார்.

1908ஆம் ஆண்டில் பாலசுந்தர நாயகர் எழுதி வெளியிட்ட வாழ்க்கைச் சரித நூலில் பல சுவையான விஷயங்கள் உள்ளன. அதில் ஒன்று:–

 

பிள்ளை அவர்கள், முதலில் மேலைப்புலோலி கந்தசாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்வான் அ.குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார்.

 

பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பால சரஸ்வதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில்,

 

வேலும் மயிலும் துணையென நவிலல்

இலாட சங்கிலி கழற்றல்

சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன

6 இலக்கண விடை உபந்யாசம்

இரண்டறக் கலத்தல் உபந்யாசம்

பாரதச் செய்யுளுரை

இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை

எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை

 

இவை எல்லாவற்றையும் அன்பர்களது மனம் குதூகலமுறுமாறு காட்டி முடித்து சதாவதானியென்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

 

இதற்குப் பின் ரெவரெண்ட் கிளேட்டன் துரையவர்கள் நீலகிரி குண்ணூரில் உத்தியோகம் கொடுத்தார்.

 

IMG_0280

 

 

 

ரெவெரெண்ட் கிளேட்டன் துரையவர்களால் மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட செய்தி:-

“தமிழ்ப் பாண்டித்யத்தின் அபிவிருத்தியி லூக்கமுடைய சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளைக்கு இம்மாதம் 25ஆம் தேதி குண்ணூரில் திடீரென்று நேர்ந்த மரணம் துக்கத்தையுண்டாக்கக்கூடியதே. அவரது வயது 36 ஆயினும் இச்சென்னையிலும், மதுரையிலும், தன் சுய நாடாகிய இலங்கையின் வடக்கிலும் தமிழ்க் கல்வியில் சிறந்தவர் என்ற கீர்த்தியைப் பெற்றிருக்கிறார். பூர்வீக பாஷையின் தத்துவ சாத்திரங்களில் பாண்டித்தியமும் மிக்க வைராக்கியமுடையவ ரென்றும் பிரசித்தியடைந்தவர். சின்னாளைக்கு முன் இச்சென்னையில், சதாவதானம் , (அதாவது நூறு விஷயங்களை ஏக காலத்தில் கவனமாய்ச் செய்தல்) ஆச்சரியமான பெரு ஞாபகத்தைக் காட்டினார். அக்காலத்திலங்கு வந்திருந்த வித்துவான்கள் முன்னிலையில் அபரிமிதமான வரிசைகளுடைய எண்களின் தொகைகளையும், மிகக் கஷ்டமான தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லியும், அநேகர் பிரமிக்கும்படியான கேள்விகட்குச் சிறிதும் தாமதமும், சந்தேகமில்லாதும், கலவரப்படாமலும் விடையிறுத்திய பின்னர்தான் சதாவதானியென்ற பெயரால் வித்வத்சிரோமணிகளால் அழைக்கப்பட்டார். அவர் அநேக நூல்களைச் செய்திருப்பவராயிருந்தாலும் அவற்றுள் மிக்க அருமையும் எவரும் தெரிந்துகொள்ளும்படியாய் வெளியாகியது தமிழ்ப் பேரகராதியே. தம்வேலைகளில் மிக்க ஊக்கமும் ஜாக்கிரதையுமுடையவர். அவர் வைதீக சைவராயிருந்தும் அந்நாட்க்குரிய வேலைகளின் பேரில் மிக்க கவனமுடையவர். அவர் பிறப்பு மிகச் சிறந்ததே.”

 

கதிரைவேற்பிள்ளை 1907 ஆம் ஆண்டில் நீலகிரியில் இறந்ததால் இந்தச் செய்தி 1907 ஆம் ஆண்டு மெயில் பத்திரிக்கையில் வந்திருக்க வேண்டும்.

 

கதிரைவேற் பிள்ளை இயற்றிய நூல்கள்:-

தமிழ்ப் பேரகராதி

அதிவீரராம பாண்டியனாரின் கூர்ம புராணத்துக்கு விளக்க உரை

பழநித் தல புராண விருத்தியுரை

சித்திரக் கவிகள்: கமலபந்தனம், கோபுர பந்தனம், ரத பந்தனம், இரட்டை நாக பந்தனம்

சிலேடை வெண்பா

யமகம் நிறைந்த கட்டளைக் கலித்துறை வெண்பா

கருவூர் மான்மியம் (மஹாத்மியம்)

சீட்டுக் கவிகள்:- ஏகாம்பரேஸ்வரர் கோவில் தர்மகர்த்தா கா. மு.சுப்பராயமுதலியருக்கு,

பாலவனம் ஜமீந்தாரும் மதிரைத் தமிழ் சங்க அக்கிராசனருமான ஸ்ரீமாந் பாண்டித்துரைத்தேவர் பெயரில் வாகைப்பாட்டு

தருமை ஆதீன திருக்கயிலாய பரம்பரை அம்பலவாண தேசிகருக்கு

சாமிநாத பண்டிதருக்கு

தெல்லியபதி கதிரேசன் பிள்ளைக்கு,

இராஜரெத்தினம் பிள்ளைக்கு எழுதிய சீட்டுக் கவிகள்

காஞ்சி கோவிதராஜ முதலியார்க்கு எழுதிய சீட்டுக் கவி இதோ :–

 

 

வாழ்க்கைக் குறிப்பு:-

தந்தை பெயர்: நாகப்ப பிள்ளை

 

மனைவியின் பெயர் – வடிவாம்பிகை (கோவிந்த பிள்ளையின் குமாரத்தி)

புதல்வி பெயர்- சிவஞானாம்பிகை

 

 

வள்ளலார் அன்பர்களுடன் மோதல்

பிள்ளைவாழ் காலத்தில் சைவத் திருமுறைகள் மட்டுமே அருட்பா, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் பாடியதை திரு அருட்பா என்று சொல்லலாகாது, அது மருட்பா என்று ஒரு வேண்டாத சர்ச்சை நிலவியது. நா. கதிரவேற்பிள்ளை ஆறுமுக நாவலர் கட்சியிலிருந்ததால், வள்ளலார் கோஷ்டி அவர் மீது மானநஷ்ட வழக்கு போட்டது. ஆனால் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.

அஷ்டாவதானம்:

ஒரே சமயத்தில் எட்டு காரியங்களில் கவனம் செலுத்துகை. இலாடச் சங்கிலி சேர்ப்பு,  ஒருவிருவர் வினாவிற்குத்திரம்  (உத்திரம்=பதில், விடை), சொக்கட்டான், முதுகிலிட்ட பரல் எண்ணல், சதுரங்கம், புதுக்கவிதை கூறல்,  கண்ட பத்திரிகை, கணிதம் கூறல், குதிரையடி கூறல் முதலியன ( பக்கம் 115, அபிதான சிந்தாமணி)

 

கண்ணை மூடிக்கொண்டு செஸ் விளையாடி சாதனை செய்வோரும் அபார நினைவாற்றல் உடையவரே..

blindfold chess

மார்க் லாங் சாதனை!

வெளிநாடுகளில் பார்க்காமலேயே (ப்ளைண்ட் Fபோல்ட்) செஸ் விளையாடுவார்கள். செஸ்/சதுரங்கப் பலகையைப் பார்க்காமலேயே, திரும்பி உட்கார்ந்துகொண்டு காயை நகர்த்தச் சொல்லி வெற்றி பெறுவார்கள். பலர் ஒரே நேரத்தில் பல சதுரங்கவீரர்களுடன் விளையாடுவதும் உண்டு. மார்க் லாங் என்ற ஜெர்மானியர் கண்ணை மூடிக்கொண்டு 46 பேருடன் செஸ் விளையாடி சாதனை படைத்தார். ஆனால் ஆட்டங்கள் முடிய சில நாட்கள் பிடிக்கும்.

 

–சுபம்–

 

உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்! (Post No. 2460)

villi-bharatham

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 5 January 2016

 

Post No. 2460

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

வில்லி பாரதம்

 

உவமைகளை அடுக்கும் உன்னதக் கவிஞர்!

ச.நாகராஜன்

 

வில்லியின் பாணி

 

கவிஞர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி. தங்களின் சிற்ப்புத் தன்மைகளை அவர்கள் காட்டிக் கொண்டே போவர்.அதைக் கண்டுபிடிப்பதில் தான் ரஸிகனுக்கு உற்சாகம்.

நவில்தொறும் நூல் நயம் (குறள் 783) அப்போது தானே சித்திக்கும்!

 

வில்லிப்புத்தூராரின் பாணியை ரஸிகனாக உற்சாகத்துடன் பார்க்க ஆரம்பித்தால் ஏராளமான சிறப்பியல்புகளைக் கண்டு பிடித்து அநுபவிக்கலாம்.

 

ஒரு உவமையைச் சொல்லவே சில கவிஞர்கள் தவிப்பர். ஆனால் இரு அடிகளில் மூன்று உவமைகளை அடுக்கி நம்மை பிரமிக்க வைப்பார் வில்லிப்புத்தூரார்.

இரண்டு எடுத்துக்காட்டுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

villi 1

 

மின்னல், வேல், பொன் உவமைகள்

 

“மின்போல் நுடங்க விடைவேல் விழி நீர் ததும்பப்              பொன் போலுருவங் கருகும்படி பூமி போர்ப்ப              அன்போடு அவுணர் மடமாதர் அரற்றும் ஓதை என்போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும்

 

(நிவாதகவசர் காலகேயர் வதை சருக்கம் பாடல் எண் 102)

அர்ஜுனன் ராட்சஸர்களை வதம் செய்து குவிக்கிறான்.

இறந்து போன ராட்சஸர்களின் மனைவிமார்கள் அழுது புலம்புகின்றனர்.

 

 

மின் போல் நுடங்க இடை: அவர்களின் இடைக்கு மின்னலை உவமையாக்குகிறார் கவிஞர். ஒளியும் மெல்லியதாக இருத்தலும் பற்றி இடை மின்னலாக கூறப்படுகிறது.

 

விழிக்கு வேல் உவமை :- கூர்மை கொண்டது. காம நோயை உண்டாக்கி ஆடவரை வருத்துதலால் விழிக்கு வேல் உவமை.

உருவத்துக்குப் பொன் உவமை: நிறம் பொன் போல ஜொலிக்கிறது. பொன் கிடைத்தற்கு அருமையானது. ஆகவே அருமை மற்றும் நிறத்திற்குப் பொன் உவமை ஆனது.

மட மாதர் என்பதால் அழகும் பேதைமையும் கொண்ட பெண்டிர் என்பது உணர்த்தப்பட்டது.

 

அவர்கள் அழும் ஒசை எது போல் இருந்தது என்றால் இடி இடிக்கும் ஓசையைப் போல இருந்தது.

உவமைகளின் குவியல் எப்படி அமைகிறது!

இன்னொரு பாடல்!

 

மின் தாரை, வெண்ணிலா, மேகம் உவமைகள்

 

“மின் தாரை பட வெண்ணிலா வீசு மேகம் கொல் என வந்து முன் நின்றானை முகநோக்கி நீதிக்கொர் வடிவாம் மன் இவை கூறுவான்

 

உன் தாதை தமியனோடு உயவாமல் ஒரு வாசமலர் கொண்டிடச் சென்றான் என சிந்தை நொந்து அன்புடன் பின்னும் இவை செப்புவான்

 

புட்பயாத்திரைச் சருக்கத்தில் 130வது பாடல் இது.

வீமனுக்கு இடிம்பியிடம் பிறந்த புதல்வன் கடோத்கஜன். வீமன் தன்னைக் கலந்து ஆலோசியாது ஒரு புஷ்பத்தைக் கொண்டுவரச் சென்றதை கடோத்கஜனிடம் தர்மர் கூறுவதாக அமைந்த பாடல் இது.

 

 

மின் தாரை பட என்பதால்  கடோத்கஜனின் செம்பட்ட மயிர் மின் தாரை போல இருந்தது என்பது பெறப்படுகிறது.

 

வெள் நிலா வீசும் என்பதால் வெண்மையான கோர தந்தங்களை உடையவன் அவன் என்பது பெறப்பட்டது.

 

மேகம் கொல் என்பதால் கரிய பெரிய வடிவமான காளமேகமோ என்று கூறத் தகும் பெரிய வடிவை உடையவன்  அவன் என்பது பெறப்பட்டது.

 

கடோத்கஜனின் தோற்றம் ஒரு கணத்தில் நம் முன்னர் நிறுத்தப்படுகிறது, அடுக்கு உவமைகளால்!

 

அவனை நோக்கி, தர்மர், “உன் தந்தை என்னோடு ஆராயாமல் நறுமணம் கொண்ட மலர் ஒன்றைக் கொண்டு வருவதற்காகப் போய் விட்டான் என்று மனம் வருந்தி அன்புடன் கூறி விட்டு மீண்டும் கூறத் தொடங்குகிறான்” என்பதே பாடலின் பொருள்.

srimad_bhagavad_gita

 

கவிதை தரும் இன்பம்

 

ஒரு கவிதை என்பது சொற்களின் மூலமாக ஒரு காட்சியை நம் மனக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.

 

கவிதையின் ஓசை நயத்தால் அதைப் படிக்கும் போது செவிக்கு இன்பம்.

 

கவிதை நம் மனக் கண் முன் வருவதால் கண்ணுக்கு இன்பம்.

சிந்தையைக் கவர்தலால் ஐம்பொறிகளுக்கும் இன்பம்.

வில்லி பாரதத்தில் பல பாடல்களில் இப்படி உவமைகளை அடுக்கிக் கொண்டே போவதைக் கற்பதால் வரும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை!

 

வில்லியிடம் ஊறும் உவமைகளைப் படித்தால் கற்றனைத்தூறும் அறிவு!

 

*******