தமிழர்களின் பழைய “கடி” ஜோக்குகள்! (Post No. 2391)

Cape-Buffaloes-0560

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2391

Time uploaded in London :– 5-50 am

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Following jokes were taken from 100 year old Tamil book Vinotha Vikata Chintamani; Book given by S Srinivasan of Chennai.

 

ஒரு எருமைக்கு இரண்டு எருமை இருக்கும்!

ஒருவன் ஒரு உபாத்தியாயரிடம் சென்று, “ஐயா! எமது பையனைப் படிக்க வைக்க மொத்தச் செலவு என்னவாகும்?” என்றான்

50 ரூபாய் ஆகும் என்று வாத்தியார் சொல்ல அதற்கவன், “ஐயோ! அந்த ஐம்பது ரூபாயிருந்தால் ஒரு எருமைமாடு வாங்குவேனே” என்றான். அதற்கு உபாத்தியாயர், “வாங்கு,வாங்கு, வாங்கினால் ஒரு எருமைக்கு இரண்டு எருமை உன் வீட்டில் இருக்கும்” என்றார்.

 

Xxx

ஒரு கணக்கு

உபாத்தியாயர் பையன்களைப் பார்த்து, “இந்தக் கணக்கு தெரியவில்லையா? உங்கள் நால்வருக்கும் 100 வாழைப்பழம், 60 கொய்யாப்பழம் கொடுத்துவிட்டால், ஒவ்வொருவனுக்கும் என்ன வரும்?” என்று கேட்டார்.

சிறு பையன்:- வயிற்று வலி வரும்!

banana

Xxx

சம்பாஷணை

மகன்:- நம்ம வீட்டில் பேசும் பாஷைக்கு தாய் மொழி என்று ஏன் கூறுகிறார்கள்?

தகப்பன்:- ஏனெனில் வீட்டில் தகப்பன் பேச்சை யாரும் ஏற்காததால் அப்படியாயிற்று.

Xxx

யார் வீரன்?

ஒரு வீரன் “நான் ஆயிரம் பேருடைய  கால்களை வெட்டி வந்திருக்கிறேன், பாருங்கள்” என்றான்.

சூரன்: அடே, முட்டாள்! தலையை வெட்டுவதல்லவோ சுத்த வீரத்தனம்?

வீரன்: அதற்கு நானென்ன செய்வேன்? முன்னமேயே ஒருவன் தலைகளையெல்லாம் வெட்டிக்கொண்டு போய்விட்டானே” என்றான்.

 

Xxx

தடையென்ன பத்தியம் சொல்

இறக்கும் தருணத்திருக்கிற ஒரு பிராமணனருகில் பந்துக்கள் சேர்ந்து, ஓய்! சாஸ்திரிகளே! தாங்கள் பெரியவாள், எல்லாம் அனுபவித்தாயிற்று. சந்நியாசம் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கந்த ரோகி, “ஆஹா, ரொம்ப சரி, அதற்குத் தடையில்லை. பத்தியமென்ன?சொல்லுங்கள்” என்றார்

Xxx

 

halwa

காப்பி கிளப் கல்யாணமய்யன்

ஒரு காப்பிக் கிளப்பில் ஜம்பக்கார சாஸ்திரியார் ஒரு சேர் அல்வா வேண்டும் என்று கேட்டார். கல்யாணமய்யன் கட்டிக் கொடுக்கவே, அதற்குச் சாஸ்திரியார், அல்வா வேண்டாம்,  ஜிலேபி கொடு என்று திருப்பிக் கொடுத்துவிட்டார்.

ஜிலேபி கட்டிக்கொடுத்தவுடனே அதை வாங்கிக் கொண்டு, அவர் மெள்ள மெள்ள பொடி நடையாகச் சென்றார். ஓய், சாஸ்திரிகளே! ஜிலேபிக்கு ரூபய் தரவில்லையே என்று கல்யாணமய்யன் கேட்க, ஜிலேபிக்குப் பதிலாக அல்வா கொடுத்தேனே என்றார். ஓய், அல்வாக்குப் பணம் எங்கே? என்று கல்யானமய்யன் கேட்க, சாஸ்திரியார், அல்வா நான் வாங்கவில்லையே என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

Xxxx

 

சொக்காய் தைக்கும் சுப்பிரமணிய மேஸ்திரி

ஒருநாள் சுப்பிரமணிய மேஸ்திரி என்னும் தையல்காரன், தன் மனைவிக்கு ரவிக்கை தைத்துக் கொண்டிருக்கும்போது அதில் அரைகஜம் துணி எடுத்துப் பதுக்கி வைத்தான். கதவுக்கு மறைவில் நின்று அதை பார்த்துக் கொண்டிருந்த மனைவி, “ஏன் அப்படி செய்தீர்கள்?” என்றாள்.

அதற்கு மேஸ்திரி வழக்கம் மாறாதிருக்கும் பொருட்டும், மறவாதிருக்கும்பொருட்டுமே அப்படிச் செய்தேன் என்று பதில் சொன்னான்.

Xxx

 

குதிரையும் கழுதையும்

ஒரு ஊரில் ஒரு நீதிபதியும் வக்கீலும் மிக நேசமாயிருந்தனர். அவர்கள் காப்பி சாப்பிடப் போகும்போது

நீதிபதி: ஹலோ மிஸ்டர் அரிகரய்யர்வாள்! நாமிருவரும் கழுதையும் குதிரையுமாய் மாறும்பக்ஷத்தில் நீங்கள் எதுவாகவெண்டுமென்று கோருவீர்கள்?

வக்கீல்: – இதைக் கேட்கவும் வேண்டுமா? சந்தேகமின்றி கழுதை ஜென்மமே கோருவேன்

நீதிபதி:– ஏன் அவ்விதம் கோருவீர்?

வக்கீல்:- கழுதைக்கு ஒருதடவையாவது நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் குதிரைக்குக் கொடுத்ததாகக் கேட்டதேயில்லை.

-சுபம்–

 

 

 

 

100 Year Old Tamil Jokes (Post No. 2390)

donkey, horse

Compiled by London swaminathan

Date: 14 December 2015

 

Post No. 2390

Time uploaded in London :– 16-04

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Following jokes were taken from 100 year old Tamil book Vinotha Vikata Chintamani; Book given by S Srinivasan of Chennai.

Horse & Donkey

A judge and a lawyer were very friendly in a town in Tamil Nadu. One day the judge wanted to belittle the lawyer and said with a smile:

My dear friend, if both of us are to become donkey and horse what would you be?

Lawyer: Sir, definitely a donkey is my preference!

Judge: Why do you want to become a donkey?

Lawyer: I know at least a donkey has got the post of a judge, but a horse has never got it. So I would like to be a donkey!!

Xxx

 

Mother tongue

Why do they call one’s native language a “Mother” tongue?

Because nobody listens to a “ father” in the house!

 

XXX

Who is a Hero?

A hero boasted: Look at me. I have brought the legs of one thousand soldiers. What other proof is required to prove me a hero?

Others said, “No, No, if you have brought one thousand heads of the enemies, they will consider you a great hero”

What can I do? Someone has chopped off all the heads already. That is why I cut the legs!

XXX

Cape-Buffaloes-0560

Two buffaloes!

A village farmer went to a school teacher and asked how much it would cost him to educate his son.

Teacher said : It would cost you Rs.50

Villager: Oh my God! If I have Rs.50, I will buy a buffalo.

Teacher: Please go ahead. Then you will have two buffaloes in the house.

Xxx

 

Dying Brahmin

An age old Brahmin was in his death bed following long period of sickness. During that period he was put on a diet.

Priests came to him and advised him to take Sanyasa (This is the fourth stage in every Hindu’s life: Brahmachary/student, Grahastha/Householder, Vanaprastha/Secluded life in the forest and Sanyasin/Given up all attachments)

 

Immediately the Brahmin said: I am ready. But what is the Patyam/diet?

XXX

 banana

Stomach pain

The teacher asked the students: Don’t you know the answer? It is a simple arithmetic sum. I give all the four of you

100 bananas

And 60 mangoes

What does each one get?

Youngest of the boys : Stomach ache, Sir!

 

XXX

Purattasi Saturday Leave

A man left his native town and studied abroad. He did not know his mother tongue Tamil, but very fluent in English. He was appointed as the Deputy Collector in Tamil Nadu. One of his subordinates went to him and  asked for leave of absence for a Saturday in the month of Purattasi (It is a holy day and prayers are offered to Vishnu).

 

Deputy collector asked him whether there is any precedent to give him holiday. And asked him ‘’did you get this leave last year?’’

 

The subordinate replied humbly and politely in Tamil, “Sir last year it fell on a Sunday. So there was no leave granted”.

Ok, leave sanctioned, said the Deputy Collector!

Xxx

Tailor Subramanya Mestry

A woman came to tailor Subramanya Mestry and gave a piece of cloth for stitching blouse for her. Mestry’s wife was watching it from behind the door. As soon as the woman customer left, he cut a piece from it and hid it in the table drawer. His wife came and asked him why he did that. He replied without any hesitation, “I did it to follow our tradition and to keep something to remind me.”

halwa

 

xxx

Coffee Club Kalyanam Iyer

A clever and cunning man went to Kalyanam Iyer’s Sweetmeat shop.

Man : Please give me one kilo Halwa (Indian sweet).

When he got it he returned it saying he changed his mind.

Man: Give me One kilo Jalebi instead.

He got and walked away without paying for the sweets.

Kalyanam: Hey, give me the money for Jalebi.

Man: I have given you one kilo Halwa for that.

Kalanam: Where is the money for the Halwa.

Man: I don’t have it in my bag. I returned it to you.

 

–Subham–

நட்சத்திரப் பாடல்!(Post No. 2389)

IMG_0349 (2)

Zodiac Coins issued by Mogul Emperor Jehanghir

Compiled by S NAGARAJAN

Date: 14 December 2015

 

Post No. 2388

Time uploaded in London :– 7-40 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ச.நாகராஜன்

 

 

தமிழ் என்னும் விந்தை

 

நட்சத்திரப் பாடல்

 

தமிழ் மக்களின் அன்றாட வாழ்வில் 27 நட்சத்திரங்கள் தொன்று தொட்டு இடம் பெற்று வந்துள்ளன. இந்த நட்சத்திரங்களைப் புலவர்கள் தம் பாடல்கள் பலவற்றில் பல்வேறு விதமாகக் கையாண்டுள்ளனர். மிக சுவாரசியமான பாடல்கள் அவை.

 

மதுரகவிராயர் என்றொரு புலவர் இருந்தார்.  அவர் இளம் பெண் ஒருத்தியைக் கண்டு மோகித்தார். அப்போது அவருக்கு ஞாபகம் வந்தது 27 நட்சத்திரங்களின் ஒன்றின் பெயர். அதைப் பாடலில் சூசகமாகப் பயன்படுத்திப் பாடலை இயற்றினார்.

 

asrtrology

Zodiac stamps issued by India

பாடல் இதோ:-

 

 

மூவொன்ப தென்பதிலோர் நாளில்லை மொய்வனத்தில்    

தாவுந் தனிமிருகந் தானில்லை – நேரே                    

வளையா நடையில்லை வாரிறுக விம்மும்            

முலையாளை யான் முயங்குதற்கு

 

 

இதன் பொருளைப் பார்ப்போம்:

வாரிறுக விம்மும் முலையாளை – கச்சு இறுகும் படி விம்மிப் பருத்துள்ள மார்பகங்களை உடையவளை

யான் முயங்குதற்கு – நான் கட்டித் தழுவுவதற்கு                   மூவொன்ப தென்பதில் – மூன்று ஒன்பது, அதாவது 27 நட்சத்திரங்களில்                                               ஓர் நாளில்லை – ஒரு நட்சத்திரம் இல்லை        மொய்வனத்தில் – அடர்ந்த காட்டில்                          தாவுந் தனிமிருகந் தானில்லை – தாண்டித் திரிகின்ற ஒப்பற்ற மிருகம் இல்லை

நேரே வளையா நடையில்லை – நேராக வளையாத நடையும் இல்லை.

 

 

மூவொன்பதில் ஓர் நாளை இங்கு உத்தரம் என்று கொள்ள வேண்டும். அதாவது 27 நட்சத்திரங்களில் ஒன்று உத்தரம். அவள் நான் கட்டித் தழுவுவதற்கு எனக்கு உத்தரம் – மறுமொழியும் சொல்ல மாட்டேன் என்கிறாள்.

 

 

மொய் வனத்தில் தாவும் தனி மிருகம் வேங்கையாகும் வேங்கைக்கு இன்னொரு சொல் பொன் என்பதாகும். என்னிடம் தங்கமும் இல்லை.

 

 

நேரா வளையா நடை அன்னத்திற்கே உரியது. அந்த அன்னமும் என்னிடம் இல்லை.

 

பொன்னும் அன்னமும் இல்லாத அவளை எப்படிக் கட்டித் தழுவுவது, அவளோ உத்தரம் தர மாட்டேன் என்கிறா என்று அங்கலாய்க்கிறார் கவிஞர்.

 

Zodiac, SL

Zodiac Stamps issued by Sri Lanka

ராசிப் பாடல்

இன்னொரு பாடலில் 12 ராசிகளையும் அமைத்துப் பாடியுள்ளார் ஆசுகவிப் புலவர் கவி காளமேகம்.

 

அவரிம் ஒருவர் சவால் விடுத்தார். சவால் விடுத்தவரோ சாதாரணமானவர் இல்லை.  மன்னரிடம் பாடல் பாடி அவன் வியந்து தண்டிகை பரிசை அளித்தால் அவர் சிறந்த தண்டிகைப் புலவர் எனப்படுவார். அப்படிப்பட்ட அருமையான 64 தண்டிகைப் புலவர்களில் அவரும் ஒருவர்.

 

 

அவர் போட்ட நிபந்தனைகள் இவை:

ஒரு வெண்பா பாட வேண்டும். அதன் முதல் சீராக பகருங்கால் (சொல்லப் போனால்) என்று வர வேண்டும். இறுதியிலோ வசையறு மிராசி வளம் என்று ஈற்றடி (கடைசி அடி) அமைய வேண்டும்.  இடையில் 12 ராசிகளின் பெயர்கள் வரவேண்டும். ராசிகளுக்கு அடைமொழிகள் எதுவும் இருக்கக் கூடாது.

 

கடினமான போட்டி தான். கவிஞருக்கு கிடைத்திருப்பது இரண்டே முக்கால் அடி தான். விட்டாரா காளமேகம்.

பாடினார் இப்படி:-

 

 

பகருங்கால் மேடமிட பம்மிதுனங் கர்க்க                  

டகஞ்சிங்கம் கன்னி துலாம் விர்ச் – சிகந்த                 

நுசுமகரங் கும்பமீ நம்பன்னி ரண்டும்                             

 வசையறு மிராசி வளம்

 

 

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம்,  விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆக பன்னிரண்டு ராசிகளும் முறையே வரிசையாக அமைத்து வெண்பா இலக்கணம் தவறாமல் பாடி வெற்றி பெற்றார் காளமேகம்.

தமிழ் என்னும் விந்தையில் உலக மொழிகளில் இல்லாதபடி நட்சத்திரப் பாடல்கள் ஏராளம் உள்ளன.

 

 

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

 

 

மேலே உள்ள நட்சத்திரப் பாடலும் ராசிப் பாடலும் தமிழுக்கே உரித்தான முத்திரைப் பாடல்களில் சில!

********

 

பம்பாய் நகரில் சில அதிசயங்கள்!! (Post No. 2388)

IMG_2814 (2)

Compiled by London swaminathan

Date: 14 December 2015

 

Post No. 2388

Time uploaded in London :– 6-06 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

This article was published in English

 

எனது மும்பை யாத்திரை!

இரண்டு ஆண்டுகளுக்கு  முன்னர் மும்பை சென்றபோது நான் பார்த்த இரண்டே இடங்கள் மஹாலக்ஷ்மி கோவிலும், சித்தி விநாயகர் கோவிலும்தான். இம்முறையாவது ஜுஹு பீச்/கடற்கரை, பயங்கர வாதிகள் தாக்கி நூற்றுக் கணக்காணோரைக் கொன்ற தாஜ் ஹோட்டல், இந்தியா கேட் (இந்தியாவின் நுழைவாயில்), விக்டோரியா டெர்மினஸ் (ரயில் நிலையம்), பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம், ஆகியவற்றைக் காண வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டேன். ஆயினும் எனது சம்பந்தியின் வலியுறுத்தலின் பெயரில், விமானத்திருந்து இறங்கிய நாளன்றே மீண்டும் சித்தி விநாயகர் கோவிலுக்கே சென்றோம். ஒரே கூட்டம், அரை நிமிட தரிசனம். கையில் பூ, வாயில் கொழுக்கட்டையுடன் திரும்பினோம். தமிழர்களுக்கு முருகன் எப்படியோ அப்படி மஹாராஷ்டிரர்களுக்கு கணபதி. நாம், அறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனைத் தரிசிப்பது போல, அவர்கள் விநாயகரின் எட்டு தலங்களுக்குச் சென்று வருவர். விநாயக சதுர்த்தி அங்கு தேசிய தேசிய திருவிழா!

IMG_2803 (2)

வெளியே வந்தவுடன் கடைகளில் இருந்த, தமிழ் நாட்டில் காணக்கிடைக்காத பூ வகைகளையும், சிறிய கொழுக்கட்டை முதல் மிகப்பெரிய ராட்சதக் கொழுக்கட்டைகள் (மோதகம்) வரையும் போட்டோ எடுத்தேன்.

 

நாசிக்கிலிருந்து திரும்பிவந்து மூன்று நாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்ட பின்னர் ஒரு நாள் ‘ஷாப்பிங்’ சென்றோம். பின்னர் ஒரு டாக்ஸியில் விக்டோரியா டெர்மினஸ் சென்றோம். இந்தியா கேட்டுக்கு எதிரே புகழ்மிகு டாஜ் ஹோட்டல் இருக்கிறது. அதில் நைசாக உள்ளே நுழைந்தோம் ரிசப்ஷன் வரை சென்று வழ வழ தரையில் நடந்தோம். எல்லா இடங்களிலும் எலக்ட்ரானிக் செக்யூரிட்டி கேட்டுகள் உள்ளன. நம்மைச் சோதித்தே அனுப்புகின்றனர். காரணம்—எதிரேயுள்ள கடல் வழியாக ரப்பர் படகில் வந்த பயங்கர வாதிகள் சுமார் 300 சுற்றுலாப் பயணிகளைக் கொன்றதே. இது சில ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

IMG_2790

தாஜ் ஹோட்டலுக்கு எதிரேயிருந்த இந்தியா ‘கேட்’டருகே அன்று கடற்படை விழா நடந்ததால், பக்கத்தில் அனுமதிக்கவில்லை. தூரத்தில் கப்பல்கள் மட்டும் விளக்கொளியில் ஜொலித்தன. தொலைவிலிருந்து இந்தியா கேட்டையும், கப்பல்களையும், நூற்றுக் கணக்கான மின் விளக்கு பொருத்தப் பட்ட அலங்கார குதிரை வண்டிகளையும் பார்த்தோம். நல்ல கூட்டம். குழந்தைகளுடன் வந்தோரும், வெளி நாட்டினரும், அலங்கார குதிரை வண்டிகளில் ஏறி பவனி வந்தனர். ஒரு புறம், சுண்டல், பொறி கடலை விற்பனை நடந்து கொண்டிருந்தது. மறு புறம் இளம் சிட்டுகள் ‘செல்பி’ படம் எடுத்துக் கொண்டிருந்தன. ஒரு வியாபாரி ஐம்பது ரூபாய் விலையுள்ள ராட்சத பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார்!

 

வீர சிவாஜி வாழ்க (ஜய ஜய பவானி: பாரதி பாட்டு)

 

மஹாராஷ்டிரத்தில் விநாயகருக்கு அடுத்தபடியாக போற்றப்படுபவர் வீர சிவாஜி! பல இடங்களில் இவரது சிலை உண்டு. இந்தியா கேட் வீர சிவாஜி, ஏர்போர்ட் வீர சிவாஜி ஆகியவற்றை காரிலிருந்தே படம் எடுத்தேன். சாண்டாக்ரூஸ் விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி விமான நிலையம். இப்படி ரயில் நிலையம், விமான நிலயம், மியூசியம் எல்லவற்றின் பெயர்களையும் சிவாஜியின் பெயரில் மாற்றிவிட்டனர். மொகலாய சாம்ராஜ்யத்தை விழுத்தாட்டி, முஸ்லீம்களின் ஆட்சிக்கு சாவு மணி அடித்த சிவாஜியின் பெயரை நம் நாட்டிற்கே சூட்டினாலும் அது போ.ற்றப்பட வேண்டியதே.

IMG_9425

 

IMG_9427

பம்பாய் ஐடியா/ யோஜனை

சுவிடன் நாட்டிலுள்ள ஸ்டாக்ஹோம், பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ், அமெரிக்கவிலுள்ள நியூ யார்க், இதாலியிலுள்ள ரோம் ஆகிய இடங்களுக்குச் சென்றவுடன், சின்னச் சின்ன பயனுள்ள விஷயங்களை எழுதி இவைகளை ஏன் மற்றவர்களும் பயன்படுத்தக் கூடாதென்று கேட்டிருந்தேன். பம்பாயிலும் ஒன்றிரண்டு விஷயங்களைக் கண்டேன்.

 

பட்டுப்போன மரங்களுக்கு பல வண்ணப் பெயிண்ட் அடித்து அதில் கண் காது மூக்கு வரைந்து அழகு செய்துவிட்டனர். இதுபோல வைரம் பாய்ந்த மரங்களை நாமும் அலங்கரிக்கலாமே!

 

பல இடங்களில் மரத்தின் உச்சியில் மஞ்சள் நிற டயர்கள் தொங்கின. முதலில் அவை ஆபத்துக்கு உதவும் லைப் போட் ( உயிர் காக்கும் படகுகள்) என்று நினைத்தேன். மூலைக்கு மூலை அவைகலைக் கண்டவுடன் டிரைவரிடம் கேட்டேன். அவை எல்லாம் டயர்களுக்கு பங்க்சர் ஒட்டும் கடைகளாம். அதை எளிதில் காட்ட மரங்களின் கிளைகளிலிந்து மஞ்சள் நிற டயர்களைத் தொங்க விட்டுள்ளனர். இது போல ரயில் நிலையங்களைக் காட்டவும் பஸ் ஸ்டாப்புகளைக் காட்டவும் நாமும் சில அடையாளங்களை — தொலைவிலிருந்து எளிதில் காணும் அடையாலங்களைத் தொங்கவிடலாமே.

IMG_9550

லண்டன் ஐடியா

லண்டனில் பல்வேறு மொழிகள் ( 130 மொழிகள்) பேசுவோர் வாழ்கின்றனர். ஆகையால் செண்ட்ரல் மிடில்செக்ஸ் ஆஸ்பத்தியில் ரிசப்ஷன் பகுதிலிருந்து பல்வேறு வண்ணக் கோடுகள் செல்லும். யாரேனும் பிளட் டெஸ்ட் (ரத்த பரிசோதனை) எங்கே என்றால், சிவப்பு நிறக் கோட்டைக் காட்டி அதைப் பின்பற்றும்படி சைகை காட்டுவர். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் FOLLOW THE RED LINE, PLEASE என்பர். இப்படி எக்ஸ்ரே என்றால் நீல நிறம் – என்று முக்கிய டிபார்ட்மெண்டுகளுக்கு கலர் கோடிங் (COLOUR CODING வண்ண அடையாளம்) வைத்துள்ளனர். இதைப் பின்பற்றும்படி வேறு சில மருத்துவ மனைகளுக்கும் நான் எழுதினேன்.

 

சமீப காலமாக லண்டன் விக்டோரியா (VICTORIA STATION) ரயில் நிலயம் போன்ற பெரிய ஸ்டேஷன்களும் பயணிகளுக்கு இந்த கலர் லைன்களப் போட்டு, பஸ், டாக்ஸி டாய்லட் ஆகியவற்றுக்கு வழிகாட்டுகின்றனர். இந்தியாவிலும் இப்படி கலர் கோடிங் பின்பற்றலாம். பிளட் டெஸ்ட் BLOOD TEST என்றால் உலகம் முழுதும் சிவப்பும், எக்ஸ் ரே X RAY என்றால் உலகம் முழுதும் நீல நிறமும் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குM? இதே போல டாக்ஸி, ரயில், பஸ் ஆகிய நிலையங்களுக்கும் உலகம் முழுதும் ஒரே நிற சைகைகள் இருந்தால் நலம்.

IMG_8067

ஆல மரமும் கரும்பு ஜூசும்

மஹாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் உள்ளன. தென்காசி- செங்கோட்டை சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன் இப்படிப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இதே போல கரும்புச் சாறும் பல இடங்களில் விற்கப்படுகிறது. இப்போது வெங்காய விலையேற்றமும், தட்டுப்பாடும் இருப்பதால், சாலை ஓரங்களில் மூட்டை மூட்டையாக வெங்காயம் விற்கப்படுவதையும் கண்டோம்.

 

அஞ்சல்தலைக் கண்காட்சி

நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தினமும் இலவச ஆங்கில நாளேடுகள், அறையின் வாசலில் கிடக்கும். அதை எடுத்தபோது அதிலிருந்து விழுந்த நோட்டீஸ் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நவி மும்பை (புதிய பம்பாய்) பகுதியில் ஒரு தபால்தலைக் கண்காட்சி- இலவச அனுமதி – என்று அச்சிட்டிருந்தனர். மாப்பிள்ளை அழைப்பன்று மதியச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரில் விரைந்தேன். லண்டனில் கடந்த முப்பது ஆண்டுகளில் நடந்த எந்த தபால்தலைக் கண்காட்சியையும் நான் தவறவிட்டதில்லை. மேலும் சென்னை, மதுரை தலைமைத் தபால அலுவகங்களில் பிலாடெலிக் கவுண்டரில் தபால்தலைகள் வாங்கவும் திட்டமிட்டிருந்தேன். ஆனால் சென்னை வெள்ளத்தால் விமானங்கள் ரத்தாயின என்று கேட்டு என்ன செய்வதென்று திகைத்தபோது, “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – தபால்தலைக் கண்காட்சி நோட்டீஸ் வந்தது.

IMG_9639

தபால்தலைக் கண்காட்சியில் பல இந்திய தபால்தலைகளை விலைக்கு வாங்கினேன். ஆனால் லண்டனில் 150 வியாபாரிகள் ஸ்டால்களில் தபால் தலைகள் விற்பார்கள். மும்பையில் வெறும் அரசு ஸ்டால்கள் மட்டுமே இருந்தன. ஆயினும் கும்பல் கும்பலாக பள்ளி மாணவ மாணவியர் வந்து அஞ்சல்தலைகளைத் ‘தரிசித்த’ வண்ணமிருந்தனர். அதைக் கண்டபோது மகிழ்ச்சி பொங்கியது.

 

தபால்தலை சேகரிப்பு உலகில் அழிந்துவருகிறது. காரணம்: இண்டர்நெட், பேஸ்புக், கம்ப்யூட்டர் கேம்ஸ். இதுதவிர அஞ்சல்தலைகளின் விலையேற்றம்– நான் பிரிட்டனில் ஆண்டுதோறும் வெளியிடும் தபாலதலைகளை வாங்க நூறு பவுண்டுகளுக்கு மேல் செலவிடுகிறேன். இன்னுமொரு காரணம் தபால்தலைகளை ஒட்டுவதற்குப் பதிலாக, போஸ்ட் ஆபீஸ்காரகளே அச்சு முத்திரை குத்தும் வழக்கம் மேலைநாடுகளில் பரவிவருகிறது

IMG_9631

உலக அதிசய தபால் கார்டு!!

அஞ்சல்தலைக் கண்காட்சியில் தபால் கார்ட் (போஸ்ட் கார்ட்), உறை முதலியனவும் வாங்கியபோது வியப்பு மேலிட்டது. ஒரு கார்டின் விலை ரூ 2-50, உறையின் விலை ரூ.4. எங்கள் நாட்டு கணக்கில் இரண்டரை பென்ஸ், நாலு பென்ஸ்!! உலகிலேயே குறைந்த தபால் கட்டணம் இந்தியாவில்தான்! இமயம் முதல் குமரி வரையுள்ள பன்னிரெண்டரை லட்சம் சதுரமைல் பரப்பில்  உள்ளோரைத் தொடர்புகொள்ள இரண்டரை ரூபாய் போதும்! ஐரோப்பாவில் 15 நாடுகளைக் கடக்கும் தூரம் 3500 மைல் (குமரி- காஷ்மீர்).இதற்கு நாங்கள் 60 பென்ஸ் முதல் ஒரு பவுண்ட் வரை ( ஒரு பவுண்ட்= 100 ரூபாய்) செலவிடுகிறோம்.

வாழ்க இந்தியா! வளர்க அஞ்சல் துறை!

IMG_2731

விமானநிலயத்தில் ஒரு சர்ப்ரைஸ் !!

சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமானநிலயத்தில் ட்யூட்டி Fரீ கடைப் பகுதியில் கோண்டு இனப் பழங்குடி மக்களின் ஓவியங்கள் கலைப் பொருட்களை விற்கும் இரண்டு கடைகளைக் கண்டேன். மிக அருமையான வண்ண ஓவியங்கள்; கலைப் பொருட்கள். ஆனால் விலையோ யானை விலை, குதிரை விலை!! பார்த்துப் பார்த்து ரசித்தேன். அவர்கள் அனுமதி கேட்டு புகைப் படமும் எடுத்தேன். நான் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளில் கோண்டுகள் வனம் என்பதே = கோண்ட்வானா லாண்ட்= காண்ட வனம் என்பதை நிரூபித்து இருக்கிறேன். காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது தென் அமெரிக்காவுக்குச் சென்றவர்களே மாயா இன மக்கள் என்றும் சில கட்டுரைகள் எழுதியுள்ளேன். ((காண்டவ = கோண்ட், காண்டவ வனம் = கோண்ட்வானா லாண்ட்.))

 

இப்பொழுது இந்தப் பழங்குடி மக்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களில் வசிக்கின்றனர்.

 

வாழ்க காண்டவ வன கோண்ட் மக்கள்!

 

–Subham–

 

ANECDOTES ABOUT LAW (Post No. 2387)

aristotle_law_

Compiled by London swaminathan

Date: 13 December 2015

 

Post No. 2387

 

Time uploaded in London :– 14-20

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Lord John Russel said to David Hume, the philosopher:

“What do you consider the object of legislation?”

“The greatest good to the greatest number”

“What do you consider the greatest number?”

“Number one,” replied Hume.

 

Xxx

legal_quote

Mayor Frank Hague of Jersey City has been one of America’s more notorious characters for many years. He is noted for his peculiar interpretations of the law, beginning with his insistent, “I am the law” policy. He pursues his legal interpretations into more specialised channels however. He has cut down Jersey City’s murder statistics at the expense of manslaughter by rigidly classifying all inter-marital killings as manslaughter, “when a man kills his wife that is not murder, that is manslaughter”, says Hague.

 

law love

Xxx

Abraham Lincoln was once arguing a case against an opponent who tried to convince the jury that precedent is superior to law, and that custom makes things legal in all cases. Lincoln’s reply was one of his effective analogies in the form of a story. He told the jury that he would argue the case in the same way as his opponent and began:

“Od Squire Bagley came into my office one day and said: “Lincoln, I want your advice as a lawyer. Has a man what has been elected justice of the peace a right to issue a marriage license?”

 

“I told him no. whereupon the old squire threw himself back in his chair very indignantly and said, “Lincoln, I thought you was a lawyer. Now Bob Thomas and me had a bet on this thing, and we agreed to let you decide, but if this is your opinion, I don’t want it, for I know a thundering sight better. I have been a squire eight years, and I have issued marriage licenses all that time.”

—Subham—

மூன்று செவிடர்கள் கதை (Post No. 2386)

deaf4

Compiled by London swaminathan

Date: 13 December 2015

 

Post No. 2386

 

Time uploaded in London :–7-09 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

deaf joke1

மூன்று செவிடர்கள் கதை

பொண்டிரெட்டிபட்டி யென்றவூரில் பொம்மனனென்றவனுக்கு வல்லாளகண்டியென்னும் பெண்வாழ்க்கைப் பட்டிருந்தாள். அவ்விருவரும் பீரங்கிபோட்டாலும் புகையென்று சொல்லக்கூடிய காதுகேளாத கம்பிளிகள்.

 

ஒருநாள் பொம்மணன் தன் மனைவியைப் பார்த்து, அடியே! இன்று அரைக்கீரை மசியலும் , உருளைக் கிழங்கு வறுவலும் செய்யென்று சொன்னான். அதற்கவள் தாங்கள் அசலூருக்குப் போவதால் எனக்குச் சமையல் வேண்டாமென்றாள். அதற்குப் பொம்மணன், சரி, செய். வயலுக்குப்போகிறேனென்று சொல்லிப்போய்விட்டான்.  இவள் தனக்குச் செய்துவைத்திருந்த சாப்பாட்டைச் சாப்பிடப்போகும் தருணத்தில்  புருஷன் கதவைத்திறந்து உள்ளே வந்து, அடியே எனக்கு இலையைப் போடு என்றான்.

 

மனைவி:– ஏன் ஊருக்குப்போகவில்லையா?

புருஷன்:- நான்தான் உருளைக்கிழங்கு வறுவலும், அரைக்கீரை மசியலும் செய்யச் சொன்னேனே! செய்தாயா?

 

மனைவி: வண்டி உருளையை நான் பார்க்கவில்லையே!

 

புருஷனுக்குக் கோபம் வந்து உடனே தலைமயிரைப் பிடித்து அடித்துவிட்டு, ஊருக்கு மேற்கிலுள்ள மண்டபத்திலுட்கார்ந்து யோஜனைசெய்துகொண்டிருக்கும்போது,

deaf joke2

ஒரு செவிட்டு இடையன் தன் ஆடுகளில் மூன்று காணாமற்போனதால், அதைத்தேடிக்கொண்டுவர மண்டபத்திலுட்கார்ந்திருக்கும் பொம்மணனைப் பார்த்து ஐயா! என் ஆட்டுக்குட்டிகளைப் பார்த்தீராவென்று கேட்க, இவனென்னமோ கேட்கிறானென்று கீழ்திசையை நோக்கிக் கையைக் காட்டினான். அதற்கு இடையன், சாமி! ஆடுகள் அகப்படால் உங்களுக்கு நொண்டியாடு ஒன்றிருக்கிறது. அதைத் தருகிறேனென்று சொல்லிப்போனான். தற்செயலாய் அத்திசையில் மூன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துக்கொண்டு அம்ம்மண்டபத்துக்கு வந்து, செவிட்டுப் பொம்மனைப் பார்த்து, இச்செவிட்டிடையன், சாமி! இந்தாங்க, நொண்டியாடு வாங்கிக் கொள்ளுங்கள் என்றான்.

 

பொம்மண: அடே போடா! நான் ஒடிக்கவில்லை, காலை.

இடையன்: நல்ல ஆடாவேணும்! அது முடியாது. (காலைக் காட்டி) நொண்டியாடுதான் கொடுப்பேன்.

 

பொம்மண: வலது காலும் ஒடிக்கவில்லை, இடது காலும் ஒடிகவில்லை போடா!

இதேது, உபத்திரமாயிருக்கிறது. பெண்சாதி, சொன்னபடி கேட்கவில்லையென்று இங்குவதால் இவன் ஆட்டின் காலை ஒடித்தானென்கிறானே!

 

இடையன்; கும்பிட்டு விழுகிறேன் சாமி! கோபித்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் ஒப்புக்கொண்டபடி இந்த நொண்டியாட்டை வாங்கிக்கொள்ளவேணும்.

 

பொம்ம: ஐயையோ! இதேது இழவாயிருக்கிறது, இந்த நொண்டியாட்டை வைத்துக்கொண்டு வேறே ஆடு கேட்கிறானே. இது அநியாயம்.

deaf 3

இதற்குள் வழியே போன ஒரு தகல்பாஜி இச்செய்கையறிந்து,  இடையனைக் கூப்பிட்டு, அடே உனக்கெனடா, இந்த நொண்டியாட்டைக் கட்டிவிட்டுப் போவென்றான். அந்தப்படி கட்டிவிட்டு அவன் நெடுந்தூரம் போனபிறகு, ஓய், இதோ பாரும், நீர் இந்த ஆட்டின் காலை ஒடித்ததற்காக ஒரு போலீஸ்காரனைக் கூட்டிவரப்போகிறான் என்று உரத்துக் கூறப் பொம்மணன் விழுந்து ஓட்டமாயோடித் தன்வீடு போய்ச் சேர்ந்தான். தகல்பாஜியும் இதுதான் சமயமென்று நொண்டியாட்டைப் பிடித்துக்கொண்டுசென்றான்.

–சுபம்–

 

பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது! (Post No. 2385)

atom bomb

Radio Talk written by S NAGARAJAN

Date: 13 Decemberember 2015

Post No. 2385

 

Time uploaded in London :– 6-12 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

  1. நான்கு அணுகுண்டுகள் வெளிப்படுத்தும் வெப்பம் அளவு பூமியின் வெப்பம் விநாடிக்கு விநாடி அதிகரிக்கிறது!

 

     சமீபத்தில் (2013ஆம் ஆண்டு ஜூன் மாதம்) ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பூமியின் வெப்பம் அதிகரிப்பதைப் பற்றி எச்சரித்து பிரபல விஞ்ஞானியான ஜான் குக் ஒரு பெரும் எச்சரிக்கையை விடுத்தார்.        

 

 

   க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள க்ளோபல் சேஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் (Global Change Institute) பணியாற்றும் இவர் தது உரையில் பூமியில் இப்போது விநாடிக்கு விநாடி அதிகமாகும் வெப்பத்தின் அளவானது ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்ட அணுகுண்டானது வெளிப்படுத்திய வெப்ப அளவைப் போல நான்கு மடங்கிற்குச் சமம் என்று தெரிவித்தார்.அதாவது நான்கு அணுகுண்டுகளை ஒவ்வொரு விநாடியும் போட்டால் எவ்வளவு வெப்பம் உண்டாகுமோ அவ்வளவு வெப்பம் உருவாகிறது பூமியில்! இதற்குக் காரணம் மனிதன் க்ரீன்ஹவுஸ் வாயு எனப்படும் கார்பன் வாயுவை மிக அதிகமாக வெளிப்படுத்துவதே ஆகும்.

 

 

      பூமி அதிக வெப்பமாக ஆகிக் கொண்டே வருவதற்கான காரணங்களில் மனிதன் வெளிப்படுத்தும் கார்பனே முக்கியமானதும் முதலாவதுமான காரணமாக அமைகிறது. பூமியின் வெப்பத்திற்கு மனிதன் எவ்வளவு காரணமாக அமைகிறான் என்பதை ஆராயப் புகுந்த போது அனைத்து வெப்பத்திற்கும் அவனே காரணம் என்பது  தெரிய வருகிறது.

 

 

    கடந்த 20 ஆண்டுகளாக பூமி வெப்பமாதல் பற்றிய ஆராய்ச்சி நடத்தி வரும் விஞ்ஞானிகளில் 97 சதவிகிதம் பேர் இதை ஆமோதித்திருப்பதாக ஜான் குக் கூறினார்.’

 

 

     இப்படி அதிகமாக வெளிப்படுத்தப்படும் வெப்பத்தில் 90 சதவிகிதம்  பெருங்கடல்களைச் சென்று அடைகிறது. நிலம், பனிப் பரப்பு, மற்றும் மிருகங்களின் மீது ஏற்படும் விளைவுகள் ஆகிய அனைத்தையும் தெரிவிக்கும் இயற்கையான உஷ்ணமானி போல அமையும் கடல்கள் இந்த உஷ்ணநிலை உயர்வை நமக்கு அறிவிக்கின்றன.

 

 

    மனிதர்கள் அபாயமான இந்த விளைவை நன்கு உணர்ந்து கார்பன் அளவைக் கட்டுப் படுத்தும் முயற்சிகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் எச்சரிக்கை.

 

 

    ஆகவே ஒவ்வொருவரும் கார்பனை வெளிப்படுத்தப் பெரிதும் காரணமாக  அமையும் வாகனங்களின் பயன்பாட்டை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய படிப்பினை ஆகும்.

 

******** 


MUMBAI WONDERS!!! (Post No. 2384)

IMG_9748

IMG_9749

 

IMG_2814 (2)

Written by London swaminathan

Date: 12 December 2015

Post No. 2384

 

Time uploaded in London:–18-20 AM

( Thanks for the Pictures ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

I visited Mumbai in 2013 and 2015. During my first visit I covered only two places: Siddhi Vinayak Temple and Mahalakshmi Temple. This time I went to Vinayak temple again, but covered many more places including Taj Hotel, India Gate, Victoria Terminus and Nariman point.

 

Mumbai Stamp exhibition

I was going through the newspapers and found out that there was a stamp exhibition held for two days. I never missed the twice a year London Stamp exhibitions (Stampex). So I requested my friend to take me to Mumbai Stamp Exhibition held in Nerul, Navi Mumbai. There were lot of students visiting the exhibition. It was held by the post and telegraph department, and no private dealers were there. In London in addition to Royal mail stall, there will be at least 150 dealers. So I was disappointed, but yet there were display of Indian stamps. I bought some stamps in the stalls there. Next time they organise an exhibition, they must allow the private dealers to open stalls.

Mumbai Dried trees painted

One thing that attracted me was the painted and decorated trees on the road side. My taxi driver explained that many of the dried or dead tree trunks are painted and figures were carved out or drawn on it. It is a good idea which other cities could follow.

 

Tyres hung

I saw lot of yellow tyres hung on trees. First I thought that they were life buoys for the boats. When I saw more ad more at every corner, I asked my driver and he told me they were the shops who fix the punctures. Bombay is full of four wheelers and two wheelers. It looks like the puncture business is doing a roaring business.

 

Stamp Exhibition in Mumbai

 

Cheapest postage in the world

At the stamp exhibition I looked at the post cards and envelopes. I was surprised to read the price of a post card and an envelope. Probably this is the cheapest in the world. A Rs.2-50 post card can carry the message from Kanyakumari to Kashmir. In Europe the same distance will cover fifteen countries. The amount is only two and a half pence! Here the same will cost us 60 pence just to cover the area of Andhra Pradesh. Great Britain is similar to one state in India! To be precise just like Andhra Pradesh.

Rs 2-50 card

Rs 4 cover/envelope

Picture cards with land marks

 

IMG_2803 (2)

Shivaji everywhere

I know Maharashtrians named their Railway Stations, air ports, and Bus terminuses after Shivaji Maharaj. I tried to take some pictures from the car. The security guard at the airport zone (Chatrapathi Shivaji International Terminus) shouted at me when I focussed my camera on the Shivaji statue. He might have thought I am a terrorist photographing a sensitive area. Even when my driver explained that I was just taking the photo of Shivaji statue, he was not convinced. We knew if we stayed there for a few more minutes, five police cars would come after us with blaring sirens and so we quit.

 

Room rents

When we came to know that Chennai airport is closed for a few days because of the rains and floods, we tried to extend our stay in Mumbai. But to our surprise no hotel room was available in Mumbai or Navi Mumbai. Fortunately we got seats in direct flight to London. Room rents are almost similar to Western Countries.

 

Taj Hotel

We went to see the Taj Hotel opposite India gate. We were allowed into reception after passing through an electronic gate. We saw lot of illuminated Horse Carts carrying the tourists for a ride. India gate lights were switched off due to some navy Day meetings. We could see the ships with light decoration at a distance.

IMG_8067

Sugarcane Juice Stalls, peanut vendors, balloon vendors were doing good business. A large balloon was sold for Rs.50. platform food stalls are found everywhere selling Vada pav.

 

Inside the Mumbai airport, I went through the duty free shopping area. There are two shops selling Gond Tribal drawings and artefacts. They are beautiful. Make sure you visit the stalls. The drawings are expensive.

 

Next time I visit Mumbai, I must see Juhu beach and Prince of Wales Museum.

Illuminated Horse Carts near Taj Hotel

 

IMG_2794

Ships decorated with lights near India gate, Mumbai

 

 

Stalls at the Stamp Exhibition , Mumbai

–subham–

 

 

 

 

எனது பஞ்சவடி யாத்திரை! Post No. 2383

IMG_9470

படம்: பஞ்சவடியில் வால்மீகி முனிவர்

This article was published already in English

Written by London swaminathan

Date: 12 December 2015

Post No. 2383

 

Time uploaded in London :–9-38 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

IMG_9502

படம்: பஞ்சவடியில் சீதா தேவி

நாசிக்கிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் பஞ்சவடி என்னும் தலத்துக்குச் சென்றோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து, ‘வட’ என்றால் ஆலமரம்; இங்கே ஐந்து ஆலமரங்கள் இருக்கின்றன. இங்குள்ள குகையில் ராம, லெட்சுமணர், சீதை ஆகியோர் தங்கினர். இங்குதான் சூர்ப்பநகை வந்து ராமன் மீது காதல் கொள்ள, அவளுடைய மூக்கை லெட்சுமணன் அறுக்க, மாரீசன் வந்து பொன் மான் வேடம் பூண்டு ராம, லெட்சுமணர்களையும் சீதையையும் ஏமாற்ற, அதே நேரத்தில் ராவணன் தவ வேடம் பூண்டு சீதையைக் கடத்த — ராமாயணம் புதிய திருப்பத்தை அடைகிறது.

 

ஊருக்குள் நுழைந்தவுடனே ராமாயணக் காட்சிகள், சுவரில் பளிச்செனத் தெரிகின்றன. அருகிலுள்ள பூங்காவில் வால்மீகீ, சுவாமி விவேகாநந்தர் சிலைகளும் உள்ளன.

 

இந்தக் காட்சிகளையெல்லாம் பஞ்சவடியில் சித்திரமாக செதுக்கியும் வரைந்தும் வைத்துள்ளனர். அருகிலேயே காளா ராம் (கறுப்பு ராமன்) கோவில் இருகிறது.

IMG_9503

முனிவர் வேஷத்தில் ராவணன்

(ராமன், கிருஷ்ணன், வியாசர், திரவுபதி ஆகியோர் எல்லாம் கறுப்பர்கள்! ஆரிய- திராவிட பேதம் கற்பிக்கும் மூடர்களுக்கு இவர்கள் உருவம் செமை அடி கொடுக்கும்!!)

 

காளா ராம் கோவில், மிகவும் நல்ல படிமங்களைக் கொண்ட கோவில். கோவிலுக்குள் சென்று வணங்கிவிட்டு வெளியே வந்து கொஞ்சம் விளக்கு முதலிய பித்தளைப் பொருட்களை வாங்கினோம்.எல்லாம் இந்தியில் எழுதபட்டிருப்பதால் விவரங்களை அறியமுடியவில்லை. இந்தி தவிர தமிழ் முதலிய பிராந்திய மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோஒ போர்டு இருந்தால் நலம்.

 

சீதை குகையை, குடிகாரர்கள் மிகவும் மோசமாக்கி விட்டதாக டிரைவர் சொன்னதாலும், இரவில் சென்றதாலும் தொலைவிலிருந்தே பார்த்தோம். அருகில் வேறு ஒரு மண்டபத்தில் எல்லா காட்சிகளையும் உருவங்களாகச் செய்து வைத்துள்ளனர். மாரீசன் வதை, சீதையை அபஹரித்தல் முதலியன சித்தரிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பார்க்கவேஎண்டிய இடம் இது.

IMG_9487

ஐந்து ஆலமரங்களையும் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் பெரிதாக எண்/ நம்பர் எழுதி வைத்துள்ளனர். பொதுவாக மகாராஷ்டிரத்தில் நிறைய ஆலமரங்கள் காணப்படுகின்றன. ஆலமரங்களில் நூல் கட்டி வைத்துள்ளனர். அருகிலுள்ள பூங்காவில் வால்மீகி சிலை, சுவாமி விவேகாநந்தர் சிலை ஆகியன உள்ளன. சுவரில் ராமாயணக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

 

வெளியில் கடைகளில் ஆமை யந்திரம், சூரியன் யந்திரம் முதலினவற்றை விற்றனர் (முந்தைய கட்டுரையில் ஆமை மர்மம் பற்றி படிக்கவும்).

IMG_9483

(கறுப்பு ராமன்/ காளா ராம் கோவில்

முக்திதாம் யாத்திரை

பஞ்சவடிக்கு அருகில் முக்திதாமென்ற ஊர் உள்ளது. அங்கு பெரிய சலவைக் கல் கோவில் இருக்கிறது. அதில் ராம லெட்சுமணர் மூர்த்திகளும், 12 ஜோதிர்லிங்க தலங்களின் மாதிரி உருவங்களும் நவக்ரஹ உருவங்களும் உள.

 

கார்த்திகேயர்/ முருகன் சந்நிதிக்குள் பெண்கள் அனுமதிக் கப்படமாட்டார்கள் என்று எழுதிப் போட்டுள்ளனர். பெண்கள் யாரும் அங்கே வருவதில்லை. இந்த நம்பிக்கை சங்க இலக்கியத்திலும், காளிதாசன் கவிதையிலும் உளது (இது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே பிளாக்கில் கட்டுரை எழுதியுள்ளேன்).

 

வடநாட்டில் நாங்கள் சென்ற எந்தக் கோவிலுக்கும் அனுமதிக் கட்டணம் கிடையாது. பட்டு வேட்டி, கறுப்பு-சிவப்பு துண்டுகளின் இடையூறும் கிடையாது. எந்த தலங்களிலும் வியாபாரிகளும், விஷமிகளும் உண்டு. நாம் உஷாராக இருந்தால் ஏமாறமாட்டோம்.

IMG_9515

முக்திதாம் கோவிலில் 50 ரூபாய்க்கு கோவில் சாப்பாடு உண்டு. எங்கள் குழுவில் சிலர் வலியுறுத்தவே, அதே காம்பவுண்டிலுள்ள புரோஹித் என்ற ஹோட்டலில் நுழைந்தோம். சாதத்தைத் தவிர மீதி எல்லா, கறி கூட்டுகளும் எண்ணையில் மிதந்தன. ஒரு சாப்பாட்டின் விலை 230 ரூபாய்! தப்பித் தவறி உள்ளே நுழைந்துவிடாதீர்கள்.

 

முக்திதாம் கோவிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. கோவில் படங்களுடன் ஏதாவது புத்தகம் விலைக்குக் கிடைக்குமா என்று விசாரித்ததில் அப்படி புத்தகம் எதுவுமில்லை. கோவில் நிர்வாகம், எல்லா சிலைகளின் படங்களுடன் புத்தகமோ, பட அட்டைகளோ விற்க வேண்டும். அல்லது ஒரு கட்டணம் வசூலித்துக் கொண்டு, கூட்டமில்லாத நேரத்தில் புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்

 

பஞ்சவடி, நாசிக், திரயம்பகேஸ்வர் முதலிய இடங்கள் கோதாவரி நதியின் தோற்றுவாய்க்கு அருகில் இருப்பதால், இஅயற்கையை ரசிக்கவிரும்புவோர் பகற்பொழுதில் செல்ல வேண்டும். நாங்கள் திரயம்பகேஸ்வர் கோவிலில் நன்கு மணி நேரம் கியூவில் நின்றதால் இஅயற்கைக் காட்சிகளை ரசிக்க இயலவில்லை.

IMG_8092

அனுபவ முத்துக்கள்!!!

கடவுளைப் பார்க்க வேண்டுமானால் மற்ற காட்சிகளையும், காமெராவையும் மறக்கவேண்டும்.

காட்சிகளைக் கண்டுகளிக்க வேண்டுமானால் கடவுளை மறந்து விடவேண்டும் – சுவாமிநாதன் பொன்மொழி

 

வடக்கத்தி ஹோட்டலில், மசாலாதோசை ‘ஆர்டர் ‘ செய்யாதே. தெற்கத்திய ஹோட்டல்களில் சப்பாத்தி ஆர்டர் செய்யாதே- அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பயன்படுத்தவேண்டும் — சுவாமிநாதன் அனுபவ மொழி.

 

சாமியார் ஆஸ்ரமத்தில் “பார்ட்டிக்கிள் பிஸிக்ஸ்” கேள்விகளைக் கேட்காதே; அறிவியல்கூடத்தில் கடவுள் ஆராய்ச்சி செய்யாதே; அறிவியல் முடியும் எல்லையில் ஆன்மீகம் துவங்குகிறது- சுவாமிநாதன் பொன்மொழி.

வடதுருவத்தில் பெங்குவின் பறவையைப் பார்க்கமுடியாது; தென் துருவத்தில் வெள்ளைக் கரடிகளைக் காணமுடியாது; இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடமெல்லாம்………………….

சுவாமிநாதன் அனுபவ மொழி

 

IMG_9500

 

IMG_9489

IMG_9466

சூர்ப்பநகையின் மூக்கறுக்கும் காட்சி

IMG_9462

 

IMG_8076

IMG_8089 (2)

பஞ்சவடி கடைகளில் சூர்ய யந்திரம், ஆமை யந்திரம் விற்பனை

IMG_8087

IMG_8088

பஞ்சவடி காட்சிகள்

-சுபம்-

மாவீரர்கள் சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும் (Post No. 2382)

IMG_2814 (2)

சிவாஜி புகைப்படம், பம்பாய் விமான நிலையம்; எடுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

Written by S NAGARAJAN

Date: 12 December 2015

Post No. 2382

 

Time uploaded in London :– 5-40 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ச.நாகராஜன்

 

 

IMG_2814

அன்னையின் மீது அன்பு

 

மாவீரன் சத்ரபதி சிவாஜிக்கும் மாவீரன் அலெக்ஸாண்டருக்கும் ஒரு பெரும் ஒற்றுமை உண்டு. இருவரும் பெரும் வீரர்கள் என்பது தானே ஒற்றுமை என எண்ணம் தோன்றும். ஆனால் இன்னொரு விஷயத்தில் இவர்களிடையே ஒற்றுமை உண்டு. அது தான் தன் தனது தாயை நேசிப்பது. இருவரும் அபாரமான அன்பு, மரியாதையைத் தாயின் மீது கொண்டிருந்தனர்.

சிவாஜி எதைச் செய்வதாக இருந்தாலும் தன் தாயின் ஆசியுடன் தான் தொடங்குவார். வெற்றிகளை தாய்க்கே சமர்ப்பிப்பார்.

அலெக்ஸாண்டரும் தன் தாயின் மீது அபாரமான பிரியத்தைக் கொண்டிருந்தார்.

 

 

Alexander_lifetime

ஆயிரம் கடிதங்கள்

ஆனால் அவரது தாவரட்டும்யாரான ஒலிம்பியஸ் (Olympias) ஒரு முசுடு. எல்லோரிடமும் குறை காண்பவர்; எரிச்சலை மூட்டுபவர். ஆகவே அவரை எந்த வித அரசியல் விவகாரத்திலும் அலெக்ஸாண்டர் ஈடுபடுத்தவில்லை. என்றாலும் கூட தானாகவே அனைத்து விஷயங்களிலும் தலையை விட்டு ஒவ்வொருவரைப் பற்றியும் அலெக்ஸாண்டரிடம் அவர் புகார் கூறுவது வழக்கம்.

அலெக்ஸாண்டர் தனது அன்னை கூறும் ஒவ்வொரு சொல்லையும் அமைதியுடனும் பொறுமையுடனும் கேட்பார்.

ஒரு சமயம் அவரது தொந்தரவு தாங்காமல் ஐரோப்பாவில் அலெக்ஸாண்டரின் உதவி தளகர்த்தராக இருந்த ஆண்டிபேடர் (Antipater) அலெக்ஸாண்டருக்கு அவரது அன்னையைப் பற்றி ஒரு பெரிய புகார் கடிதத்தை எழுதினார்.

அதற்கு அலெக்ஸாண்டர் பதிலாக இப்படி எழுதி அனுப்பினார்:-“ நீ எழுதியது போன்ற ஆயிரம் கடிதங்களைக் கூட என் அன்னையின் ஒரு சொட்டுக் கண்ணீர் ஒதுக்கித் தள்ளி விடும்”

 

Stamp_UK_2003_1st

சப்பாத்தி தந்த போர்த் தந்திரம்

 

இதே போல சத்ரபதி சிவாஜியும் தன் அன்னையின் மீது உயிராக இருந்தார். ஆனால் ஒலிம்பியஸைப் போலன்றி அன்னை ஜீஜாபாய் அருமையான குணநலன்கள் கொண்டவர். ராஜாங்க காரியங்களில் அநாவசியமாகத் தலையிடாத தன்மை அவருக்கு இருந்தது. சிவாஜிக்கு ராமாயண மஹாபாரதம் போன்ற இதிஹாஸங்களையும் அறநெறிகளையும் அவர் இளமையிலிருந்தே ஊட்டி வந்தார். இதுவே சிவாஜியை ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க அடி கோலியது.

 

ஒரு சமயம் சப்பாத்தியை சுடச் சுடத் தயாரித்து சிவாஜிக்கு பரிமாறிக் கொண்டிருந்தார் அன்னை ஜீஜாபாய்.

ஆனால் உணவில் கவனம் செலுத்தாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தார் சத்ரபதி. பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டு பெரும் வலிமையுடன் இருக்கும் ஔரங்கசீப்பை வெல்வது எப்படி என்ற யோசனையில் தீவிரமாக ஆழ்ந்திருந்த அவருக்கு உண்வின் மீது எப்படிக் கவனம் இருக்கும். சூடாக இருந்த சப்பாத்தியின் நடுவில் கையை வைத்தார். அதிகமான சூட்டால் ஆ என்று அலறினார்.

அன்னை அவரை நோக்கினார்:”மகனே! அப்படி சாப்பிடக் கூடாது. சப்பாத்தியின் ஓரத்தை முதலில் கிள்ளிச் சாப்பிடு. அங்கு சூடு இருக்காது. அது ஆறி இருக்கும். பின்னர் மெதுவாக நடுப்பகுதியை எடு” என்றார்.

சிவாஜி உட்னே துள்ளிக் குதித்தார். அவருக்கு ஔரங்கசீப்பை வெல்லும் உபாயத்தை அன்னை கற்பித்து விட்டார் ஒரு நொடியில்!

 

 

வலுவான மையத்தோடு பரந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த ஔரங்கசீப்பை நேரில் தாக்காமல் முதலில் சுற்றிவர இருக்கும் கோட்டைகளைக் கைப்பற்றி அவரை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை சப்பாத்தி அவருக்கு கற்பித்து விட்டது. சூடான மையப் பகுதி சுற்றி வர இருப்பதைக் கிள்ளிச் சா போது ஆறி விடும், இல்லையா!ப்பிடும்

 

 

சிவாஜி உடனே சுற்றி வர இருந்த கோட்டைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கைப்பற்றினார். ஔரங்கசீப் வலுவிழந்தார். ஹிந்து சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது.

 

 

ஆதி சங்கரர் முதல் விவேகானந்தர் வரை அனைவருமே அன்னையின் அன்புக்கு அடிமைகள்! மாவீரர்களான சத்ரபதி சிவாஜியும் அலெக்ஸாண்டரும் அன்னையைப் போற்றி வணங்கியதில் வியப்பில்லை தானே

*******