மதப் பிரசாரம் கூடாது: இங்கிலாந்து ராஜாவுக்கு சீன ராஜா கடிதம்( Post No. 2401)

chien2

Compiled by London swaminathan

Date: 18 December 2015

 

Post No. 2401

 

Time uploaded in London :– காலை 6-20

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Chien lung’s (1711-1799) letter to George III (1760-1801).

சீனாவை ஆண்ட சியான் லங் என்பவர் இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்கு ஒரு அழகான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இதோ அந்தக் கடிதம்:_

“ பல கடல்களைத் தாண்டி தொலைவில் வசிக்கும் ஓ, மன்னவா! எங்கள் நாகரீக நன்மைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் உடையவரே! மரியாதைக்குரிய உமது கடிதத்துடன் உங்கள் நாட்டு தூதர் இங்கே வந்தார். நீங்கள் மரியாதையுடன் அனுப்பிய உங்கள் நாட்டுப் பரிசுப்பொருள்கள் கிடைக்கப் பெற்றோம்.

george3

எங்கள் சாம்ராஜ்யத்தின் மணம் இந்த சொர்கத்தின் கீழுள்ள எல்லா நாடுகளிலும் பரவி இருக்கிறது. இந்தப் பூவுலகில் எல்லா மன்னர்களும் எங்களுக்கு கடல் வழியாகவும், நிலம் வழியாகவும் கப்பம் செலுத்தி வருகின்றனர். எங்களிடம் எல்லாப் பொருட்களும் உளது. விநோதமான, விலையுயர்ந்த உங்கள் நாட்டுச் சரக்குகளில் எங்களுக்கு நாட்டம் இல்லை. தொலை தூரத்திலிருந்து மரியாதையுடன் அனுப்பியதாலேயே அவைகளை நாம் ஏற்றோம்.

 

உங்கள் கடிதத்தை நான் படித்தேன். உங்கள் பணிவும் அடக்கமும் அதில் பிரதிபலித்தது. உங்கள் நாட்டுத் தூதருக்கு நான் பல சலுகைகளை அளித்தேன். அவரைக் கௌரவித்துப் பல பரிசுப் பொருட்களையும் தந்தேன். மன்னவா, உமக்கும் நான் விலையுயந்த பரிசுப் பொருட்களை அனுப்புகிறேன். அவைகளின் பட்டியலையும் அனுப்புகிறேன். அவைகளை அன்புடன் ஏற்கவும். உன்பால் எனக்குள்ள பரிவும் பாசமும் அதில் புலப்படும்.

 

ch-ien-lung-

சொர்கம் போன்ற எனது அரசவையில் உமது நாட்டு தூதர் இருக்க விருப்பம் தெரிவித்தீர். அதை நாம் ஏற்பதற்கில்லை. பீகிங் மாநாகரில் வசிக்கும் எந்த ஐரோப்பியனும், வெளியே போக முடியாது; கடிதமும் எழுத முடியாது. ஆகையால் இங்கு உன்னாட்டு தூதரை அனுப்புவதில் யாதொரும் நன்மையும் விளையாது. மேலும் ஐரோப்பாவில் உம் நாட்டைப் போல பல நாடுகள் உள. அவ்வளவு ஆட்களும் எமது அரசவையில் அமர வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தால் நாம் ஏற்பது எங்கனம்? நீங்கள் கேட்பதற்காக இந்த சாம்ராஜ்யம், அதனுடைய  பழக்க வழக்கங்களை (சம்ப்ரதாயங்களை)  மாற்றிக்கொள்ள முடியுமா?

 

காண்டன் நகரத்துக்கு வெளியேயும் உங்கள் நாட்டு சரக்குகளின் வியாபாரம் நடத்த அனுமதி வேண்டுமென்ற கோரிக்கையையும் உமது தூதர் தெரிவித்தார். வேறு எந்தத் துறைமுகத்திலும் வசதிகளுமில்லை; மொழிபெயர்ப்பாளர்களுமில்லை. ஆகையால் உன்னாட்டு வணிகர்கள் அங்கே வர்த்தகம் செய்ய இயலாது. கடந்தகாலத்திலும் சரி, எதிர்காலத்திலும் சரி உமது வேண்டுகோளை நிராகரிக்கிறேன். காண்டன் துறைமுகத்தில் மட்டும் நீவீர் வியாபாரம் நடத்தலாம்.

 

பீகிங் நகரில் வியாபாரம் செய்ய வேண்டும், சரக்குகளைச் சேமித்துவைக்க வசதிகள் வேண்டும் என்பது செயல்முறைக்கு ஏற்றதல்ல. எனது தலைநகரம் உலகிலுள்ள எல்லாம் வலம் வரும் அச்சுப் போன்றது. அதன் சட்டதிட்டங்கள் மிகவும் கடுமையானவை. இதுவரை எந்த வெளிநாட்டானுக்கும் அங்கே அனுமதி தந்ததில்லை. ஆகையால் உமது வேண்டுகோளை அனுமதிக்க மாட்டேன்.

GeorgeIII

உமது மதத்தைப் போதனை செய்யவும் உமது தூதர் அனுமதி கோரினார். வரலாறு தோன்றிய காலம் முதற்கொண்டு சீனாவின் அறிவு சால் மன்னர்களும் சாது,சந்யாசிகளும் ஒரு மதத்தை எங்களுக்கு அளித்துள்ளனர். அதைக் கோடிக்கணக்கான எமது பிரஜைகள் பின்பற்றி வருகின்றனர்.எங்களுக்கு வெளி நாட்டான் கற்பிக்க வேண்டிய தேவை இல்லை. உமது மதப் பிரசார கோரிக்கை சாரமற்றது.

 

எங்கள் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்ளவிரும்பும் பல கப்பம் செலுத்தும் நாடுகளிடம் நாங்கள் பேரன்பு காட்டிவருகிறோம். ஓ, தொலைதூரத்தில் வசிக்கும் மன்னவா! உம்மிடத்தில் வேறு எவரையும் விட கூடுதலாகவே அன்பு காட்டினோம். ஆனால் உமது கோரிக்கைகளோவெனில் எம் நாட்டு பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டுள்ளன. இதனால் எந்த நன்மையும் பயக்காது. ஆகையால்தான் நாம் சற்று விவரமாகவே பதில் தருகிறோம். எங்கள் உணர்ச்சிகளை நன்கு புரிந்துகொண்டு மரியாதையுடன் அவைகளுக்கு எக்காலத்திலும் கீழ்படிந்து நடத்தல் வேண்டும். உங்களுக்கு நல்ல அமைதி கிட்டுமாக!”

 

xxxx

 

 

 

 

 

 

 

Chinese Emperor’s “No” to Religious Propaganda! (Post No. 2400)

chien2

Compiled by London swaminathan
Date: 17 December 2015

Post No. 2400

Time uploaded in London :– 16-21
( Thanks for the Pictures )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Chien Lung’s letter to a King Geaorge III
“You, O King, live in a distant region, far beyond the borders of many oceans, but, desiring humbly to share the blessings of our civilisation, you have sent an embassy respectfully bearing your letter. To show your devotion you have also sent offerings of your country’s produce.

Our dynasty’s majestic virtue has reached every country under Heaven and kings of all nations have sent their tribute by land and sea. We possess all things, we are not interested in strange and costly objects and we have no use of your country s products. I have accepted your tribute offerings only because of the devotion which made you send them so far.

I have read your letter, it shows a respectful humility on your part. I have shown great favour to your ambassador. I have entertained him and given him many gifts. I am sending you, O King, valuable presents of which I enclose a list. Receive them reverently and notice my tender good will towards you.

 

george3

As to your request to send an ambassador to live at my Heavenly Court, this request cannot possibly be granted. Any European living in Peking is forbidden to leave China or write to his own country, so that you would gain nothing by having an ambassador here. Besides there are many other nations in Europe beside your own. If all of them asked to come to our court, how could we possibly consent? Can our dynasty change all its ways and habits in order to do what you ask?

Your ambassador asks us to allow your ships to trade at other ports beside Canton. There are no hongs and no interpreters at any other port, so that your barbarian merchants could not carry on their business there. For the future, as well as the past, your request is refused. Trade may be carried on only at Canton.

The request that your merchants may store and trade their goods In Peking is also impracticable. My capital is the hub and centre around which all the quarters of the earth revolve. Its laws are very strict and no foreigner has ever been allowed to trade there. This request is also refused.

Your ambassador has asked permission to have your religion taught in China. Since the beginning of history, wise emperors and sages have given china a religion which has been followed by the millions of my subjects. We do not need any foreign teaching. The request is utterly unreasonable.

ch-ien-lung-
I have always shown the greatest kindness to tribute embassies from kingdoms which truly long for the blessings of civilisation. To you, O King, who live so far away, I have shown greater kindness than to any other nation. But your demands are contrary to the customs of our dynasty and would bring no good result. I have therefore answered them in detail, and it is your duty to understand my feelings and reverently obey to my instructions henceforth and for all time, so that you may enjoy the blessings of peace”.

 

GeorgeIII

Chien lung’s (1711-1799) letter to George III (1760-1801).

xxxxx

லேடி இல்லாதவன் பேடி!! நாடகத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி!!! (Post No. 2399)

IMG_2814

Compiled by London swaminathan

Date: 17 December 2015

 

Post No. 2399

 

Time uploaded in London :– 8-20 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

garland making

விகடன்:மை டியர் சூத்ரதாரர்! தாசிகளால் சுகமில்லை என்ற தங்கள் கருத்தை நான் ஏற்கமுடியாது. ஏனெனில் உலகத்தில் தாய்மானவர், தந்தையுமானவர், தம்பியுமானவர் முதலிய மகான்களெல்லாம், தெரியாமல், அறியாமல், வெறும் பாடல்களை எழுதி நம்மை ஏமாற்றியிருகிறார்கள் என்பது என் சித்தாந்தம். உண்மையில் எட்டாத கொம்பிலுள்ள தேனுக்குக் கொட்டாவி விடுவதுபோல அவர்களுக்குக் கிடைக்காத தோஷம் அப்படி பாடியிருப்பதாகத் தெரிகிறது. ஒருவருக்கு ஆயிரம் தாரமிருப்பினும் ஒரு தாசிக்கு நிகராகார்கள். இதற்காகவே முன்னோர்கள், “லேடியில்லாதவன் பேடி” என்றும், “கிளிபோற் பெண்சாதி யிருந்தாலும் குரங்குபோலொரு கூத்தியாள் வேண்டும்” என்றுங் கூறியிருக்கிறார்கள். தவிரவும்,

 

 

 

நான் என் வாலிபத்தில், “மனோ உல்லாச, மரகத விசுவாச, பிரகாச, அதிநேச, கோலாகல, குஞ்சித ரஞ்சித பாலாமிர்த, நீலாமரகத பூஷணி!” என்ற தாசியை வைத்திருந்தேன்.ஒரு போலீஸ் உத்தியோகஸ்தருக்கு அவள்மீது திருஷ்டி ஏற்பட்டது.மெள்ள மெள்ள வருத்துப் போக்காயிருந்தார் அதனால் எங்களிருவருக்கும் லடாய் உண்டாயிற்று. இப்படியிருக்க ஓர் நாள் போலீஸ்லயன் வழியே போய்க்கொண்டிருந்த நான் கீழே விழுந்துகிடந்த ஒரு பொன்னாபரணத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க, என் பின்னாலென்னை யறியாமல்  ஒளிந்து வந்த போலீஸ் ஜெவான் திருட்டுச் சொத்தை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி க் கன்னத்தில் தவடை சுத்திசெய்து ஸ்டேஷனுக்கு இட்டுப் போய் என் விரோதியான போலீஸ் ஜவானிடம் நிறுத்தினான்.  அவன் என்னயேறவிறங்கப் பார்த்து, பின்பு, ‘பூஜை இன்னும் நடக்கட்டும்’ என்றான்.

 

 

வண்ணான் கூட அப்படி வெளுக்கமாட்டான். தகுந்தபடி எனக்குச் சாத்துபடி செய்தான். இது சங்கதி என் தாயார் கேள்விப்பட்டு ஸ்டேஷனுக்கு ஓடிவந்து மாரடித்துக்கொண்டாள். என் மனைவி ஓர் மூலையிலிருந்து “காள் காள்” என்று சத்தம் போட்டுக்கொண்டி ருந்தாள். என் தகப்பனோ நாலுகை போட்ட பாரிஸ்டரைத் தருவித்துப் போடுகிறேன், என்ன கேள்விமுறையில்லையா என்று தடபுடல் பண்ணினார்.

 

IMG_3318

இங்கனமிது நிற்க இச்செய்தியறிந்த  என்

 

 

மனோன்மணி

மல்லிகையரும்பு

மதுரைக்கரும்பு

கற்பகத்தரு

களங்கமில்லாத கிளி

கோதிலாவொளி

அன்பின் குன்று

இன்பக்கடலாகிய என்னருமை வைப்பாட்டி! கேள்விப்பட்டு ஓடிவந்து போலீஸ் ஜவானை கண்வலையில் மாட்டி மயக்கம்பூட்டி என்னை விட்டு விடும்படி ஜாடை காட்டினாள்.

 

ஆகா இதல்லவோ ஆச்சரியம்! உடனே விடுதலையாகி வந்து விட்டேன்

 

தாயாரழுது பயனென்ன? மனைவியழுது மலையாய்க் குவித்தென்ன? தகப்பன் பாரிஸ்டரைக் கொண்டு வருகிறேனென்றதினாலானதென்ன? ஆகையால் தாசிகளால் சுகமில்லை  என்று தாம் சொல்வது ஒப்போதப்போ? தாங்களே அறிய வேண்டியது

 

சூத்ரதாரர்:- மித்ரா! உன் அனுபவம் விசித்திரமாகத்தானிருக்கிறது. இன்னும் மற்றுமுள்ள கதைகளைக் கூறுவாயாக.

 

விகடன்: – இதோ கூறுகின்றேன்.

To be continued…………………………………………………………….

ஆவி உலக எழுத்தாளர்கள்! ஆவி உலக அதிசயங்கள்! Post No. 2398

 

Drood_300x300

WRITTEN BY S NAGARAJAN

Date: 17 December 2015

 

Post No. 2398

 

Time uploaded in London :– 6-08 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

அறிவியல் துளிகள் தொடரில் 18, டிசம்பர் 2015 தேதியிட்ட பாக்யா இதழில் வெளி வந்த கட்டுரை

 

இறந்த பிறகும் எழுதிய அதிசய எழுத்தாளர்!

.நாகராஜன்

இறந்த பிறகு உலகம் உங்களை மறக்காமல் இருக்க ஒரு வழி இருக்கிறது, ஒன்று மற்றவர்கள் படிக்க உகந்த எதையேனும் எழுதுங்கள், அல்லது மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுத உகந்த செயல்களைச் செய்யுங்கள் – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்

 

 

உலக பிரசித்தி பெற்ற நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸின் (பிறப்பு 7-2-1812; மறைவு 8-7-1870) நாவல்களைப் படிக்காதவர்களே இருக்க முடியாது. அவரது கதாபாத்திரங்கள் அனைத்துமே உயிர் சித்திரங்கள். ஷேக்ஸ்பியருக்கு அடுத்தாற் போல மகோன்னதமான படைப்புகளைப் படைத்தவர் என்று உலகம் டிக்கன்ஸைக் கொண்டாடுகிறது.

 

220px-Drood_serial_cover

அதீத உளவியலில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். அற்புதமான பேய்க் கதைகள் பலவற்றை அவர் எழுதியிருக்கிறார். To be taken with a Grain of Salt மற்றும் The Signalman ஆகிய அவரது இரு பேய்க் கதைகள் பிரபலமானவை.

The Mystery of Edwin Drood என்ற மர்ம நாவலை அவர் எழுதிக் கொண்டிருந்த போது இறந்து விட்டார். இதற்குச் சில காலம் கழித்து டி.பி.ஜேம்ஸ் என்ற ஒரு அமெரிக்கருக்கு சார்லஸ் டிக்கன்ஸ் மூலம் ‘ஆவி உலகச் செய்தி’ வந்தது.

 

ஜேம்ஸ் படிக்காத ஒரு மெக்கானிக். வெர்மாண்ட் என்ற இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அவருக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ என்ற ‘ஆவி ஒருவரின் மேல் ஆவிர்பித்து எழுதுகின்ற முறை’ மூலம், நாவல் டிக்கன்ஸ் மறைந்த போது விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தது.

 

1872ஆம் ஆண்டு கிறிஸ்துமஸிலிருந்து தொடங்கி 1873ஆம் ஆண்டு ஜுலை முடிய தவறாமல் நாவலின் அத்தியாயங்கள் ஜேம்ஸுக்கு ‘ஆட்டோமேடிக் ரைடிங்’ முறை மூலம் வந்தது.

 

இறந்த பிறகு சார்லஸ் டிக்கன்ஸ் இப்படி எழுதிய அத்தியாயங்கள் அவர் உயிருடன் இருந்த போது எழுதியதை விட அதிகமானவை. அந்த அத்தியாயங்கள் அற்புதமான முறையில் தொடர்ச்சி, அவரது நடை, சிந்தனா முறை ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

 

இறப்பதற்கு முன்னர் மற்றும் இறப்பதற்குப் பின்னர் எழுதிய இரண்டு பகுதிகளும் இணைந்து ‘தி மிஸ்ட்ரி ஆஃப் எட்வின் ட்ரூட்’ என்ற தலைப்பில் நாவலாக வெளி வந்தது. எழுதியவர் – சார்லஸ் டிக்கன்ஸ் என்று வேறு பிரசுரிக்கப்பட்டிருந்தது.

 

இதைப் படித்த சார்லஸ் டிக்கன்ஸின் உலகெங்கிமுள்ள ரசிகர்கள் மற்றும் ஆவி உலக அபிமானிகள் அனைவரும் இதைப் பாராட்டினர். ஆவி உலகம் இருப்பதற்கு இந்த நாவல் ஒன்றே அத்தாட்சி என்று அவர்கள் உரக்கக் கூறினர்.

OUIJA

ஆனால் இதை கடுமையாக விமரிசனம் செய்த ஒருவரும் இருந்தார். அவர் பெயர் தியோடர் ஃப்லோராய். உளவியலாளரான அவர் இதற்கும் சார்லஸ் டிக்கன்ஸுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் ஜேம்ஸ் தனது ஆழ்மனதில் உதித்த கற்பனை மூலமாகவே இதை எழுதினார் என்றும் கூறினார்.

 

இரு பெண்மணிகள் சந்திக்கும் ஒரு சீன் மிக அற்புதமாக சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியது போலவே இருக்கிறது என்று விமரிசித்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மேடம் கே. ஃபேர்பேங்க்ஸ் என்ற பெண்மணி இதர பல பகுதிகள் அவரது வழக்கமான நடை போல இல்லை என்றார்.

 

இதற்கிடையில் சார்லஸ் டிக்கன்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜான் ஃபோர்ஸ்டர் என்பவர் டிக்கன்ஸின் நோட்புத்தகங்கள், பேப்பர்களிலிருந்து இந்த நாவலில் பின்னால் வரப் போவதை அவர் முன் கூட்டியே ஒரு அத்தியாயமாக எழுதி வைத்திருந்ததைக் கண்டுபிடித்துக் கூறினார். அத்தோடு மட்டுமின்றி ஆவி உலகத்திலிருந்து டிக்கன்ஸ் எழுதிய பகுதியில் மூன்றே மூன்று கதாபாத்திரங்களே சேர்க்கப்பட்டிருப்பதையும், இதை எழுதிய ஜேம்ஸ், தான் டிக்கன்ஸ் எழுதிய நாவலின் முற்பகுதியைப் படித்திருப்பதை ஒத்துக் கொண்டதையும், டிக்கன்ஸ் இறந்த பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்தே இதை எழுதியிருப்பதையும் ஃபோர்ஸ்டர் சுட்டிக் காட்டினார்.

 

ஆனால் எது எப்படி இருந்த போதிலும் இறந்த பின்னரும் சார்லஸ் டிக்கன்ஸ் ‘எழுதிய’ நாவல் நன்றாகத் தான் இருந்தது!

டிக்கன்ஸ் மெஸ்மரிஸத்தை நன்கு பயின்றவர். அதனால் அவர் வாழ்வில் ஏற்பட்ட சுவையான சம்பவங்கள் ஏராளம் உண்டு.

இதே போல ஏராளமான மீடியம்கள் ஆவி உலகத் தொடர்பினால் பல புத்தக்கங்களை எழுதி உள்ளனர்.

 

 

ஆயிரத்தி தொள்ளாயிரமாவது ஆண்டு தொடங்கிய போது செயிண்ட் லூயிஸ் என்ற இடத்தில் இல்லத்தரசியாகத் திகழ்ந்த பேர்ல் குரண் என்பவர் தன்னிடம் பேஷன்ஸ் ஒர்த் என்பவரின் ஆவி தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறினார். ஆவி உலகத் தொடர்பினால் வரும் செய்திகளை அறிந்து கொள்ளப் பயன்படும் ஊஜா போர்டை அவர் பயன்படுத்தினார். இதன் மூலம் 5000 கவிதைகள், ஒரு நாடகம், பல நாவல்களை அவர் எழுதினார். நாளடைவில் ஊஜா போர்டைத் தூக்கிப் போட்டு விட்டு சாதாரண நிலையிலேயே அவர் ஆவியின் மூலம் எழுத ஆரம்பித்தார்.

 

ouija_board

இப்படி ஆவி மூலம் எழுதிய இன்னொரு பிரபல பெண்மணி ஹெலன் ஸ்மித் என்பவர். காதரீன் எலிஸ் முல்லர் என்ற புனைபெயரில் அவர் எழுதலானார். இந்த புனைப் பெயருக்கு உரியவர் 1863இல் ஜெனிவாவில் பிறந்த ஒரு   மீடியம். அவர் தனது முந்தைய ஜென்மத்தில் ஹிந்து குருக்களாக இருந்ததாகக் கூறினார். அராபிய மொழியில் அவர் எழுத ஆரம்பித்தது அனைவரையும் வியக்க வைத்தது. தனது மொழியானது செவ்வாய் மற்றும் யுரேனஸ் கிரகத்தின் மொழி என்றார் அவர்.

 

 

இதை ஆராய வந்த ஜெனிவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் தியோடர் ஃப்ளர்நாய் என்பவர் ஹெலன் ஸ்மித்தின் ஆழ்மனமே இவற்றைப் படைத்தது என்றார். கற்பனை வளம் வாய்ந்த ஒரு பெண்மணியின் மொழியே செவ்வாய் கிரக மொழி என்றார் அவர். ஆனால் ஹெலன் மிகவும் பிரபலமான ஒருவராகத் திகழ்ந்தார்.

 

 

பிரேஜில் நாட்டைச் சேர்ந்த மீடியமான பிரான்ஸிஸ்கோ சேவியர் 1910ஆம் ஆண்டில் பிறந்தவர். வரலாறிலேயே ஆட்டோமேடிக் ரைடிங்கிற்காக அதிகப் புகழ் பெற்றவர் இவர். ஒரு லட்சம் பக்கங்களை ஆவியின் மூலமாக இவர் எழுதித் தள்ளி விட்டார். அவர் பள்ளியில் படித்ததே இல்லை என்பது தான் பெரிய அதிசயம்! விஞ்ஞானம், இலக்கியம் என பல்துறை புத்தகங்களை அவர் எழுதியது அனைவரையும் வியக்க வைத்தது! ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளிலும் எழுபதுகளிலும் அவர் உலகெங்கும் நடத்திய டாக்-ஷோக்கள் மிகவும் பிரபலமாயின. தன் புத்தகங்களிலிருந்து வந்த வருமானத்தை அறக்கட்டளை நிறுவி தர்ம காரியங்களுக்காக அவர் செலவழித்தார்.

 

 

இப்படி சார்லஸ் டிக்கன்ஸ் போல இறந்தும் எழுதியோர் அநேகர் உண்டு. ஆவிகளாக எழுதினாலும் கூட அவர்களின் நூல்கள் சுவையாகத் தான் உள்ளன!

 

Baron-Alexander-Von-Humboldt-to-the-Americ

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்….

ஜெர்மானிய விஞ்ஞானியான பரோன் அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Baron Alexander Von Humboldt) ஒரு முறை அமெரிக்கா வந்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜெஃபர்ஸனை (Jefferson) அவரது அலுவலக அறையில் சந்தித்தார். அங்கு மேஜை மீது ஜனாதிபதி ஜெஃபர்ஸனைத் திட்டிக் கேவலமாகவும் ஆபாசமாகவும் எழுதி இருந்த பத்திரிகை ஒன்றைக் கண்டு திடுக்கிட்டார்.

“இந்த பத்திரிகையை இன்னும் ஏன் தடை செய்யவில்லை?” என்று ஆச்சரியத்துடன் கேட்ட அவர், “இதன் ஆசிரியரை சிறையில் அடைத்தாயிற்றா? இவருக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது?” என்று கேட்டார்.

 

BARON CURRENCY

ஜெஃபர்ஸன் புன்முறுவல் பூத்தார்.

‘அதை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள், பரோன்” என்ற ஜெஃபர்ஸன்,

“உங்களிடம் யாரேனும் அமெரிக்காவில் சுதந்திரம் இருக்கிறதா என்று சந்தேகப்பட்டுக் கேட்டாலோ அல்லது அமெரிக்காவில் கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா என்று கேட்டாலோ, இந்தப் பத்திரிகையைக் காண்பியுங்கள். இதை எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள் என்பதையும் சொல்லுங்கள்” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி என்றால் அமெரிக்க ஜனாதிபதி தான்!

************

 

 

No Whiteman is nearby; it is a safe place!!

miinesota

Compiled by London swaminathan

Date: 16 December 2015

 

Post No. 2397

 

Time uploaded in London :– 16-54

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

MURDER AND STEALING ANECDOTES

In France the Comte de Charolais shot a tiler on the roof of the house for the pleasure of seeing him fall off. Louis XV pardoned him saying, “Understand me well, I will likewise pardon anyone who shoots you.”

 

xxx

 

No white thief nearby!

Dr Whipple, long Bishop of Minnesota, was about to hold religious services at an Indian (American Indian) village in one of the Western states, and before going to the place of the meeting asked the chief, who was his host, whether it was safe for him to leave his effects in the lodge.

“There is no white man within a hundred miles of here”, answered the chief.

balzac

Rob the Customers!

A certain celebrated New York night club proprietor is known for his laxness in the disciplining of his waiters on the point of honesty. It is in effect an extension of the tipping principle. Said he, on one occasion, “Most of the stealing they do is from the customers, so what do I care?”

xxx

Tried and Trusted

A man was once attending a formal dinner party. Finding himself next to a banker with whom he had very little acquaintanceship, he attempted to establish a friendly footing by remarking:

“I used to Mr Jones, who was with your firm. I understand he is a tried and trusted employee.

The banker immediately assumed an air of cold unfriendliness.

“He was trusted, yes; and he will be tried, if we are fortunate enough to catch him.”

xxx

 

balzac2

Balzac robbed!

Balzac was once lying awake in bed when he saw a man enter his room cautiously and attempt to pick the lock of his writing desk. The rogue was not a little disconcerted at hearing a loud laugh from the occupant of the apartment whom he supposed asleep.

“Why do you laugh? asked the thief.

“I am laughing, my good fellow”, said Balzac, “to think what pains and risks you are taking in the hope of finding money by night in a desk where the lawful owner can never find any by day.”

 

The motto which was inserted under the arms of William, Price of Orange, on his accession to the English crown, was Non rapui sed recepi, (I did not steal but I received)

 

This being shown to Dean Swift, he said with a sarcastic smile, “The receiver’s as bad as the thief.”

xxx

 

brahms

Brahms’ Gold Watch!

 

Brahms’ gold watch was stolen one day from his rooms which he never locked. When the police came and urged him to take the matter officially, he simply said, “Leave me in peace! The watch was probably carried away by some poor devil who needs it more than I do.”

brahms2

–Subham–

 

 

 

 

சத்வ, ரஜோ, தாமச உணவு வகைகள் எவை? (Post No. 2396)

IMG_9939

Compiled by London swaminathan

Date: 16 December 2015

 

Post No. 2396

 

Time uploaded in London :– காலை 9-18

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_9937

267 உணவுகளின் பட்டியல்:

பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த அருமையான தமிழ் உணவு என்சைக்ளோபீடியாவில் உணவு பரிமாறுவது எப்படி? என்ற விவரங்களை நேற்று வெளியிட்டேன். இதோ 267 உணவு வகைகளில் எவை உத்தம (சத்வ), மத்தியம (ரஜோ), அதம (தாமஸ) உணவு வகைகள் என்ற பட்டியல். இதற்கான அறிவியல் காரணங்கள் ஆராயப்படாவிடினும், இது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கையாகும். 1891-ஆம் ஆண்டில் வெளியான இப்புத்தகம் 1912-க்குள் மூன்று பதிப்புகளைக் கண்டுவிட்டது. இதில் குறிப்பிடப்படாத தமிழ் உணவு வகை இல்லை என்றே சொல்லிவிடலாம். யாராவது ஒருவர் இதை மறுபதிப்பு செய்வது பயனுள்ள பணியாக இருக்கும். சேர், வீசை போன்ற அளவை முறைகளை கிலோ முதலிய தற்கால அளவுகளுக்கு மாற்றுவது அவசியம். இதை எழுதியவர் டி.கே.ராமசந்திர ராவ்.

சத்துவ குண, உணவு வகைகள்

IMG_0336 (2)

 

ரஜோ குண, உணவு வகைகள்

IMG_0337 (2)

 

தமோ குண, உணவு வகைகள்

IMG_0338 (2)

நூலிலடங்கிய விஷயங்கள்

IMG_9957 (2)

 

IMG_9945

 

IMG_9946IMG_9947

–சுபம்–

விவேகானந்தரும் நெப்போலியனும்! (Post No. 2395)

VIVEKA QUOTE

WRITTEN BY S NAGARAJAN

Date: 16 December 2015

 

Post No. 2395

Time uploaded in London :– 8-10 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

 

விவேகானந்தர் சரிதம்

 

ஸ்வாமி விவேகானந்தரும் நெப்போலியனும்!

 

ச.நாகராஜன்

 

 

கதாம்ருதம் எழுதிய மகான் எம்

 

எம் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மகேந்திர நாத் குப்தா (ஜனனம் 14-7-1854; சமாதி 4-6-1932) ராமகிருஷ்ண பரமஹம்ஸர் சமாதியான பின்னர், அன்னை சாரதா தேவியாரின் அருள் பாலிப்பில் வாழ்ந்து வந்தார். அன்னையின் மறைவுக்குப் பின் தாயை இழந்த சேய் போல அவர் துடித்தார். எழுபது வயது நிரம்பிய அவர்.”ஆஹா! அன்னை அல்லவா என்னை 35 வருட காலம் பாதுகாத்தார்! இப்போது அவர் இல்லையே! நான் என்ன செய்வேன்” என்று மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார்.

 

 

பின் மிஹிஜம் என்ற இடத்தில் ஒரு சிறு ஆசிரமத்தை அமைத்து அங்கு வசிக்கலானார்.

அமைதியையும் ஞானத்தையும் நாடுவோர் அந்த ஆசிரமத்திற்கு வரலாயினர். வேத கால ஆசிரமம் போல அது விளங்க ஆரம்பித்தது.

 

காலையிலிருந்து இரவு முடிய பரமஹம்ஸரின் அருளுரைகளும் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அங்கு ‘எம்’மால் நினைவு கூரப்பட்டன.

 

பரமஹம்ஸரின் பக்தரான பாபு என்பவர் உலகியல் வாழ்க்கையில் அதிக துன்பம் அடைந்திருப்பதாக கேள்விப்பட்ட எம், ஒரு நாள் தனது தொண்டர்களில் ஒருவரை அவருக்கு உதவ கல்கத்தா அனுப்பி வைத்தார்.

 

அந்தத் தொண்டரிடம்  “பாபுவிடம் ஷிமுல்தலாவுக்கு (பாபு வாழ்ந்த இடம் – வங்காளத்தில் உள்ளது) என்னால் இப்போது வர முடியாது என்று சொல். யாருக்குத் தான் துன்பம் இல்லை, கஷ்டங்கள் இல்லை!” என்று கூறியவர் தொடர்ந்து வாழ்க்கையில் வாழ வேண்டிய முறையை அங்கு கூடியிருந்தோருக்கு உபதேசிக்க ஆரம்பித்தார்.

 

QUOTE VIEVEKA

எம்மின் உபதேச உரை

 

“உலகம் என்பது புயல் அலைகளைக் கொண்ட ஒரு பெரும் கடல். அதில் பலஹீனமானவர்கள் தலையை நிமிர்த்திக் கொண்டு நிலைத்திருக்க முடியாது. துன்பங்களோ, சறுக்கல்களோ ஏற்பட்டால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் எப்போதும் சுகமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.

ஸ்வாமி விவேகானந்தர், “ எவர்கள் துன்பங்களையும் சறுக்கல்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் குழந்தைகள்.. பச்சைக் குழந்தைகள்” என்று சொன்னார்.

 

 

ஸ்வாமிஜி தனது நண்பர் ஒருவரிடம். “ உனக்கு தொந்தரவு, தாழ்வுகள், சறுக்கல்கள் என்றால் என்ன என்று தெரியுமா? எவர்கள் அபாயங்களையும் கஷ்டங்களையும் சந்திக்கவில்லையோ அவர்கள் எல்லாம் மனிதர்களா, என்ன?” என்று கேட்டார்.

 

 

பரமஹம்ஸர் ஒரு  முறை சொன்னார்: “சுகத்தை மட்டுமே விரும்புபவர்கள் ஐந்து ரூபாய்க்குச் சமம். ஆனால் எவர்கள்  வெற்றி தோல்வியில் மயங்காமல் இருக்கிறார்களோ அவர்கள் எழுபத்தைந்து ரூபாய்க்குச் சமம். அவர்கள் தொட்டவுடன் துள்ளிப் பறந்தோடும் காளைக்குச் சமம். அவர்கள் எந்த ஒரு சந்தோஷமான உணர்வுக்கும் அடி பணீய மாட்டார்கள்”.

 

 

(கிரேக்கத்தில் உள்ள) ஸ்பார்டாவில் ஒரு  முறை பலஹீனமானவர்களை மலை உச்சியிலிருந்து தூக்கிப் போட்டார்கள். அந்த தேசத்தில் பலஹீனமானவர்களை ஒரு பெரும்  தொந்தரவு என்று நினைத்தார்கள். பலஹீனமானவன் எதையும் சாதிக்க முடியாது. துன்பங்களைச் சந்திக்காதவன் மனிதனா என்ன?

 

மஹாபுருஷர்களின் குணாதிசயங்கள் எவை தெரியுமா? பொறுமை, அபாய தருணங்களில் சீரான முன்னேற்றம், நல்ல காலங்களில் தர்ம சிந்தனை, பேச்சில் நளினம், போர்க்களத்திலோ அபார வீரம் – சிங்கத்தைப் போல!”

 

Statue équestre de Napoléon

L’empereur désigne le port.

 

நெப்போலியனின் நன்றி உணர்வு

 

இதைத் தொடர்ந்து எம் பாண்டவர்கள் துன்பங்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றதைக் குறிப்பிட்டார். பி நெப்போலியனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்னர்ர்.

“நெப்போலியன் படை விரானாக இருந்த போது அவனுக்கு திடீரென்று வேலை போனது.  கஷ்டத்தில் வாடும் அவனது தாயார் அவனுக்கு உடனடியாகப் பணம் அனுப்புமாறு கடிதம் எழுதினார். அவனால் வேதனையைத் தாள முடியவில்லை. நேராக ஆற்றை நோக்கி ஓடினான். அதில் குதித்து உயிரை விட் நினைத்தான். அப்போது அவனைப் பின்னாலிருந்து ஒரு கரம் தொட்டது. அவனது நண்பர்களில் ஒருவனின் கரம் அது.

 

 

‘என்ன விஷயம்’ என்று அவன் கேட்க நடந்ததை நெப்போலியன் சொல்லி வருந்தினான். உடனே அந்த நண்பன் தன் பையிலிருந்த (இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான) பிரெஞ்சு நாணயங்களை எடுத்து அவன் கையில் கொடுத்தான். தபால் அலுவலக நேரம் முடியப் போவதை நினைத்த நெப்போலியன் அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல் அதை அனுப்ப ஓடினான். காலம் ஓடியது. படிப்படியாக உயர்ந்த நெப்போலியன் சக்கரவர்த்தியாக மாறினான.

ஒரு நாள் தன் நகரில் மக்கள் வெள்ளம் சூழ ஊர்வலமாக வந்த போது வழியில் ஒரு ஓரமாக நின்றிருந்த பழைய நண்பனைப் பார்த்தான். ஓடோடிச் சென்று அவனைத் தழுவிக் கொண்ட நெப்போலியன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசரித்தான்.

 

 

அந்த நிலையிலும் கூட அந்த நண்பன் தான் நெப்போலியனுக்கு பணம் கொடுத்து உதவியதைச் சொல்லவில்லை. ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால் நெப்போலியன் வற்புறுத்தி அவனுக்கு ஒரு பெரும் பதவியைத் தந்து கௌரவித்தான்.”

napoleon_statue_inside_les_invalides_2_1600

 

ஸ்வாமிஜியின் வாழ்க்கையில்

 

எம் இதைச் சொல்லி நிறுத்தினார். உடனே குழுமியிருந்த சீடர்களில் ஒருவர் இது ஸ்வாமிஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்ததைப் போல அல்லவா இருக்கிறது என்று கூறி வியந்தார்.

அந்தச் சீடர் கூறினார்:- “அடடா! நெப்போலியன் எப்படிப்பட்ட அரும் குணம் உடையவன். பொது சபையில் தன் நண்பனை கௌரவித்தானே! ஸ்வாமிஜியின் வாழ்க்கையிலும் இதே போல நிகழ்ச்சி நடந்துள்ளதே! அல்மோராவில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் தனது பழைய கால நண்பர் ஒருவரைச் சுட்டிக் காட்டி வரவழைத்து பெரிதும் கௌரவித்தார். உணவின்றி பசியால் வாடி விவேகானந்தர் அலைந்த காலத்தில் அந்த நண்பர் அவருக்கு ஒரு வெள்ளரிக்காய் கொடுத்து அவர் பசியைப் போக்கினார். அந்த நன்றியை அவர் மறகக்வே இல்லையே” என்று உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார்.

 

 

எம் கூறினார்: “அது தான் மஹாபுருஷர்களின் குணநலமாகும். அவர்கள் ஒவ்வொரு நல்ல செயலையும் -அது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் அதை – மறக்க மாட்டார்கள். என்றும் நன்றியுடன் இருப்பர்.”

 

 

இரவு நேர சந்திர ஒளி பிரகாசமாக ஒளிர ஆசிரமத்தின் வனாந்திர சூழ்நிலை ஸ்வாமிஜியின் நினைவால் புனிதம் பெற்றது.

 

நெப்போலியன் வாழ்விலும் ஸ்வாமிஜியின் வாழ்விலும் நிகழ்ந்த அதிசய ஒற்றுமையை மனதில் அசை போட்டு வியந்தவாறு சீடர்கள் அனைவரும் ஆனந்தத்துடன் கலைந்தனர்.

 

*********

ஸ்வாமி நித்யாத்மனந்தா எழுதிய ‘M – THE APOSTLE AND THE EVANGELIST’ (VOLUME – 1) என்ற நூலில் 346 முதல் 349ஆம் பக்கம் முடிய உள்ள உரையாடலை அடிப்படையாகக் கொண்டது இந்தக் கட்டுரை.

வாழை இலையில் உணவு பரிமாறுவது எப்படி? (Post No. 2394)

IMG_0335

Third Edition of 1891 Book

 

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2394

Time uploaded in London :– 13-22

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் ஒரு அருமையான சமையல் புத்தகத்தைக் கண்டேன். சுமார் 350 பக்கங்களுக்கு ராமச்சந்திர ராவ் என்பவர் எல்லா தென்னிந்திய வகை உணவுகளையும், அவற்றின் செய்முறைகளையும், பாத்திரம், அடுப்பு வகைகளையும் அருமையாக விளக்கி எழுத்யுள்ளார். 300 உணவுப் பதார்த்தங்களின் பட்டியலைப் போட்டு அவற்றில் எவை சாத்வீகமானவை, எவை ராஜஸ உணவு, எவை தாமஸ உணவு என்ற பட்டியலும் கொடுத்து இருக்கிறார். இது ஒரு தமிழ் உணவு என்சைக்ளோபீடியா, அதாவது கலைக் களஞ்சியம்.

 

 

இதில் சிறப்பு என்னவென்றால் 1891-ஆம் ஆண்டிலேயே இந்த தமிழ்ப் புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டது. என் கையில் தவழ்ந்த பதிப்பு, மூன்றாம் பதிப்பு. அது அச்சிடப்பட்டு வெளியான ஆண்டு 1912.

 

பிராமண கல்யாணங்களில் இலையில் எந்த இடத்தில் என்ன உணவுப் பொருட்களை வைக்கவேண்டும், அதை எந்த வரிசையில் பரிமாற வேண்டும் என்பதை படம்போட்டு 1891 ஆம் ஆண்டிலேயே எழுதிவிட்டார். வாழை இலை கிடைக்காத பட்சத்தில் ஆல், பலா அல்லது மந்தாரை இலைகளைக் கொண்டு தைக்கப்பட்ட தையல் இலை பற்றியும், வாழை இலை தொன்னைகள் பற்றியும் சொல்லியுள்ளார்.

 

இந்தக் கட்டுரையில் சுப நாட்களிலும், அசுப கர்மாக்களிலும் உணவு பரிமாறுவது எப்படி என்பதைக் காண்போம். இன்னொரு கட்டுரையில் 300-க்கும் மேலான சத்வ, ராஜச, தாமச உணவுவகைகளின் பட்டியலைக் காண்போம்.

IMG_0007 (2)

IMG_0006 (2)

 

IMG_0008 (2)

 

8c886-donnai4 DONNAI 1

 

b88a5-donnai2

வாழை இலையில் தொன்னை செய்யும் முறை.

 

–சுபம்–

Traditional Way of Serving Food! (Post No. 2393)

IMG_0335

Third Edition of 1891 Book

 

Compiled by London swaminathan

Date: 15 December 2015

 

Post No. 2393

Time uploaded in London :– 9-54 am

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

IMG_0007 (2)

South Indian Hindus, particularly Brahmins, eat food on banana leaves. Villagers eat on stitched leaves. The leaves from Banyan, or Jack fruit trees or Mandarai are stitched together with small sticks (looking like tooth picks) and used for eating food. In addition to the leafy plates, they also make leaf cups from banana leaves and they are called Donnai. Now the custom of using the banana leaves is followed only during weddings or religious ceremonies. People started using metal plates or porcelain or plastic or even paper plates.

 

The banana leaf has got very good medicinal qualities. Moreover Hindus believed in recycling. The left overs on the leaves were eaten by dogs, cattle and other animals. The leaves easily decay and mix with the soil and change into manure.

DONNAI making CHENNAI; family priest is making leaf cups/Donnais in my brother’s house in Chennai.

 

 

There is a traditional way of serving food in Hindu ceremonies. If it is an auspicious event they serve the food in a particular order. If it is an inauspicious event, such as an event for the departed souls, they serve it differently. The following information is taken form an 1891 book – a veritable Tamil encyclopaedia of Food items and recipes. But serving food differs from region to region. So there is no hard and fast rule. Each food item is placed in a particular place on the leaf. The cooks and chefs are very well versed in it.

 

Brahmins never used garlic or onion or Masala ingredients 75 years ago. This is followed until today in all the Tamil temples (Sri Lankan Tamils use onion and garlic). Even non vegetarians served only vegetarian food in social functions.

 

This is the order they follow traditionally (Please see the picture):

1.Salt

  1. Spicy paste (like chutney, but made up of vegetable, known as Thukaiyal or Thuvaiyal in Tamil)

3.Pickles

4.Kosumbary (salty and soaked lentils)

  1. Vegetable Curry, Upperi (nowadays English vegetables such as Cabbage, Beans, Cauliflower, Potatoes, Tomatoes etc are used in the wedding feasts. But they never use it even today in religious ceremonies, particularly ceremonies for the departed souls)
  2. Dhal (boiled tur dhal); they mix it with rice and ghee and eat it as the first course; the second course is Rasam/diluted lentil soup and the third course is Yogurt/curd rice); in between there are a few items added on special occasions.
  3. Chitrannam (lemon rice, Coconut rice etc)

8.Papad, Dhal Vada, Vadaam, Vatral (Vatral is fried dried vegetables i.e. they preserve all the vegetables by salting and drying. When they need it, they shallow fry it)

9.Leafy cups called Donnai are placed in which they pour spicy liquids such as Sambar, Rasam, Kuzampu etc

  1. Sweets such Boli, Laddu, Kozukkattai/Modakam

11.Payasam (sweet liquid made up of vermicelli, Suji/rawa, Sago, Pounded rice or dhal with jiggery)

  1. Rice (staple food of South Indians)
  2. Ghee (melted butter)

 IMG_0014

Ceremonies for Departed Souls

If it is a memorial day such as death anniversary, then the order is slightly changed.

It is 12, 11, 10 and 13.

Then 2 to 9.

(Please see the picture for numbering)

 

–Subham–

காற்றில் அசுத்தம்: 5-ஆவது ஆட்கொல்லி! (Post No. 2392)

The India Gate monument in New Delhi, India, enveloped by a blanket of smog

Radio Talk written by S NAGARAJAN

Date: 15 December 2015

 

Post No. 2392

 

Time uploaded in London :– 6-15 AM

( Thanks for the Pictures  ) 

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  

DON’T USE THE PICTURES; 

THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 air pollution 4

  1. காற்று மாசு இந்தியாவில் ஐந்தாவது பெரும் ஆட்கொல்லி!

 

     சுற்றுப்புறச் சூழ்நிலை மாசினால் வெளிப்புறக் காற்றும் மாசு அடைந்து மனிதனின் உயிரைப் பறிக்கும் ஆட்கொல்லி ஆகிறது.

 

 

    உயர் இரத்த அழுத்தம், வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் மாசடைந்த காற்று, புகை பிடித்தல், ஊட்டச் சத்தில்லா உணவு ஆகிய நான்கு காரணங்களினால் இந்தியாவில் ஏராளமானோர் இறக்கின்றனர். இதை அடுத்து ஐந்தாவது காரணமாக வெளிப்புறத்தில் ஏற்படும் காற்று மாசினால் ஏராளமானோர் தங்கள் இன்னுயிரைப் பறி கொடுக்கின்றனர். க்ளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global burden of Disease) தனது அறிக்கையில் இவ்வாறு அறிவித்துள்ளது.

 

 

 

     ஆறுலட்சத்து இருபதினாயிரம் பேர் இப்படி காற்று மாசினால் தங்கள் ஆயுளைக் குறுக்கிக் கொண்டு இறக்கின்றனர் என்று தெரிவிக்கும் இந்த அறிக்கை இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து இந்தியாவில் இறப்பவரின் எண்ணிக்கை உலகில் இது போல காற்று மாசினால் இறப்பவர்களில் ஐந்தில் ஒரு பங்கினராக இருக்கின்றனர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மையையும் அறிவிக்கிறது.

 

 

    காற்றிலே உள்ள மாசானது சுவாசக் கோளாறுகளையும் இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்குகிறது. இதனால் குறுகிய ஆயுளுடன் இறப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்தியாவில் காற்று மாசின் மோசமான விளைவுகளை அதிகமாகக் காண்கிறோம்.

 

 

   உலகளாவிய அளவில் பார்த்தால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் பேர் காற்றில் உள்ள மாசினால் ஏற்படும் வியாதிகளால் இறக்கின்றனர். இரண்டாயிரமாவது ஆண்டில் 8 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்து இப்போது 32 லட்சமாக ஆகி இருப்பது பெரும் கவலை அளிக்கும் விஷயம் என்று கூறும் விஞ்ஞானிகள் இதன் பொருள் என்னவெனில் நாம் மிகவும் அரிதான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்குரிய 740 லட்சம் மனித ஆண்டுகளை இழக்கிறோம் என்பது தான் என்கின்றனர்.

 

 air pollution

    ஆகவே காற்று மாசு பற்றிய விழிப்புணர்ச்சியை ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் ஏற்படுத்துவது நமது தலையாய கடமை ஆகிறது!

*************