பாரதியாரின் சரித்திர அலசல்

IMG_3419

Article No. 2061

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 11 August  2015

Time uploaded in London :– 6-01

 

மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த எதிரிகள்! – 1

By .நாகராஜன்

 

 

பாரதியாரின் சரித்திர அலசல்

ஹிந்து தேச சரித்திரத்தை மஹாகவி பாரதியாரிடமிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும். அதி அற்புதமாக பகுப்பாய்வு செய்யும் திறமை கொண்ட மேதை அவர்.

இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?’ என்ற அற்புதமான நீண்ட கட்டுரையை ஒரு சிறு நூலாக புதுவையிலிருந்து அவர் வெளியிட்டுள்ளார். இதன் விலை பை 3 (3 பைசாக்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுவை சூரியோதயத்தினின்று பெயர்த்தெழுதப்பட்டது என்ற குறிப்புடன் இது பிரசுரிக்கப்பட்டுள்ளதுஇது அனைத்து ஹிந்துக்களாலும் படிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுரை.

 

 

அனைவரும் இந்தியரே

கட்டுரையில் உள்ள மிக முக்கியமான சில பாராக்களை மட்டும் இங்கு பார்ப்போம்:-

 

கிரேக்கர்கள் முதலியவர்கள் இந்தியாவின் மேல் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவாஸிகளுக்கு இந்தியர்களென்னும் நாமங்கொடுத்து வியவஹரித்து வந்தவர்களேயொழிய வேறில்லை.

 

பின்னும் சில மொகலாயர்கள் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவின் புத்திரர்களுக்கு இந்தியரென்னும் பொது நாமம் சூட்டியே வியவஹரித்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான வேதாந்த மதம் பரவியிருந்திருக்க வேண்டும், அல்லது ஒருகால் வேறு வித மதங்களிருப்பினும் ஒரு ஜாதியின் பெயரை அவர்களது ஜன்ம தேசத்தைக் கொண்டு கூப்பிடும்பொழுது வழக்கத்தையனுசரித்து இந்தியர்களென்னும் ஒரே நாமம் சூட்டியிருக்க வேண்டும். மதங்கள் பலவகையுள்ள இதர தேசங்களின் சுதேசிகளைப் பல ஜாதியினராகப் பிரிவினை செய்து கூப்பிடவில்லை. இங்கிலாண்டு, சீனா, ஜப்பான், அமெரிக்கா முதலிய இடங்களின் சுதேசிகளாகிய இங்கிலீஷ்காரர்களிலும், ஜப்பானியர்களிலும், சீனாக்காரர்களிலும், அமெரிக்கர்களிலும் சிலர் கிறிஸ்து மதத்தையும், சிலர் மகம்மதீய மதத்தையும், இன்னும் பலவித மதங்களையும் அவலம்பித்தபோதிலும், ஹிந்து மதத்தையவலம்பித்த ஆங்கிலேயன் தன்னை ஹிந்து ஜாதியென்று சொல்லிக் கொள்ளவில்லை, மஹம்மதீய மதத்தையவலம்பித்த ஓர் அமெரிக்கன் தன்னை மஹம்மதீய ஜாதிக்குச் சேர்ந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வத் தேசங்களிலுள்ள ஜாதீயாரெல்லாரும் தத்தம் அபிப்ராயத்துக்குத் தக்கன மனத்தையும் இஷ்ட தேவதையையும் வைத்துக் கொண்டார்களேயொழியத் தங்கள் ஜாதியை விட்டு நீங்கவில்லை

 

இப்படி ஆணித்தரமாக தன் வாதத்தை மஹாகவி முன் வைக்கிறார். இதற்கான காரணம் என்ன? இந்த தேசத்தவர்களை ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவனையும் ஒவ்வொரு ஜாதியாக ஆங்கிலேயன் பிரிக்க நினைத்ததே காரணம். அதில் அவன் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டான் என்று இன்றைய (2015ஆம் ஆண்டு) நிலையை வைத்து வெட்கத்துடன் துக்கப்பட வேண்டியிருக்கிறது.

 

 IMG_3326

பிரித்தாளும் சூழ்ச்சி

இந்த பிரிவினை வாதத்தை ஆங்கிலேயன் விதைத்த போதே அதைக் கண்டனம் செய்கிறார் மஹாகவி பாரதியார்.

தொடர்ந்து அடுத்த பாராவைப் பார்ப்போம்:_

 

 

ஆனால் இந்தியாவில் மஹம்மதீயம், கிறிஸ்தவம் முதலிய நூதன மதங்களை நுழைத்த பரதேச மதப்பிரவசன கர்த்தர்களும், அவர்களுக்குச் சகாயமாக இருந்து வேலை செய்த பிற்காலத்திய அயல்நாட்டிலிருந்து வந்து இந்தியாவின் மேல் படையெடுத்த சத்துருக்களும், நூதன மதத்திற் சேர்ந்த இந்தியர்களுக்கு அப்பெயரைக் கொண்ட ஜாதியரென்று பெயர் கொடுத்து மறுபடியும் இவர்கள் தங்கள் தாய்நாட்டாருடன் கூடிக் கொள்வனை கொடுப்பனை செய்தும், உண்டு, உடுத்தி, உலாவியுமிருக்கவொட்டாமல் பிரித்து வைத்துக் காலக்கிரமத்தில் இவர்களது ஸஹோதர இந்தியர்கள் மீது பலத்த துவேஷத்தையும் விருத்தி செய்து விட்டார்கள். சுயநலத்தை நாடியே இப்பிரதேச பாதிரிகளும், மற்றுமுள்ள மதகுருமார்களும் இத்தகைய பேதத்தை உண்டு பண்ணி விட்டார்கள். இந்தப் பேதத்தை அவ்வக்காலத்திய அன்னிய ஜாதி இராஜாங்கங்களும் விருத்தி செய்து தங்கள் நிலைமையை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தன.”

இன்றைய ஹிந்துமுஸ்லீம் பிரச்சினைக்கு, மைனாரிட்டி மதத்தவர்கள் என்ற பிரச்சினைக்கு காரணம் தேசீய உணர்வு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஆங்கிலேயனின் சூழ்ச்சியே காரணம் என்பதை மஹாகவி இப்படி மிகத் தெளிவாகக் கூறுகிறார் .

 

 

அத்தோடு மட்டுமல்ல, பாபர் முதல் ஆங்கிலேயர் வரையுள்ள அனைவரும் இந்தியருக்குள் வேற்றுமை உணர்ச்சியை வித்திட்டு வளர்த்தனர் என்பதையும் அவர் தனது கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

 

ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை அவர் அப்படியே சுட்டிக் காட்டுகிறார். அவரது கூற்றை அப்படியே பார்ப்போம்:“’பிரித்தாளுவதுஎன்பது இக்காலத்திய ஆங்கிலேய இராஜதந்திரத்தில் மிக்க கௌரவமான முறையாகக் கையாளப்பட்டு வருகிறது

 

 அவரது கட்டுரையின் முக்கியமான பகுதியைத் தொடர்ந்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

                                                   –தொடரும்

Lucky No.5’s Link to Literature!

kumara

Article No. 2060

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 10  August  2015

Time uploaded in London :– 19-53

It is a strange co incidence that Sanskrit and Tamil scholars chose number Five to name their best five epics and minor epics.

sisupalavatam

(1) In Sanskrit the Five Great Epics (Pancha Maha Kavyas) are:

1.Raghuvamsam by Kaalidaasa

2.Kumaarasambhavam by Kaalidaasa

3.Kiraataarjuniiyam by Bhaaravi

4.Sisupaalavatham by Maagha

  1. Naisadacaritam by Sriharsa

silambu-book1

(2) Five Tamil Epics

In the same way Tamils also chose the best five epics and named them ‘Aim Perum Kappiyangal’ meaning Five Great Epics and they are

1.Silapadikaaram by Ilango

2.Manimekalai by Siltalai Saattanaar

3.Siivaka Cintaamani by Tirutakkatevar

4.Valayapati – Anonymous

5.Kundalakesi – Naadakuttanaar

Tamil language has Five Minor Epics as well:

bharavis-poem-kiratarjuniya-

(3) Five Tamil Minor Works

Chulaamani – anonymous

Niilakesi – Tolaamozitevar

Udayanakumaara kaaviyam -anonymous

Nagakumaara kaaviyam- anonymous

Yasodaa kaaviyam- anonymous

(4) Grantha Pancakam

Even the Advaita philosophy chose number five to name their five great works ‘Grantha Panchakam’. They are

1.Brahmasutra

2.Bhasya of Sankara

3.Bhamati of Vacaspati Misra

4.Kalpataru of Amalananda

5.Parimala of Appayya Diksita

brahma_sutra_bhasya_of_shankaracharya_idj504

(5) Restraint from Speaking

Even a medicine man like Charaka instructs us to restraint from speaking

1.Harsh words= Parusam

2.Excessive words = Atimaatra

3.Back biting = Suucaka

4.Untruth =Anruta

5.Untimley utterance = Akaalayukta

Parusasyaatimaatrasya suchakasyaanruthasya cha

Vaakyasyaakaalayuktasya dhaarayetvehamuttitham

-Charaka sutra 7-28

mahabhasya

(6) Five Types of Texts, Commentaries, Explanatory Notes

Sutra

Vrtti

Bhaasya

Vaartika

Tiikaa

-Mahaabhaasya (Prastaavanaa)

(7) Five Blemishes in Writing

Illegible = Akaanti

Contradiction = Vyaaghaata

Repetition = Punarukta

Ungrammatical usage= Apasabda

Misarrangement = Samplava

Akaativyaardhatah punaruktamapasabdah samplavaiti lekadosaah   –Arthasastra 2-10-57

-Subham-

ஒரு சுவையான கதை : இக்கரைக்கு அக்கரை பச்சை!

man path

 Article No. 2059

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 10  August  2015

Time uploaded in London :– 16-53

கவலை மலையும், அதைக் கரைக்க கடவுள் உதவியும்

“இக்கரைக்கு அக்கரை பச்சை” என்ற தமிழ்ப் பழமொழிக்கு இணையான பழமொழி எல்லா மொழிகளிலும் இருக்கிறது. இதை விளக்க இதோ ஒரு சுவையான கதை. சுவாமி ராமதாஸ் சொன்ன கதை:

அம்மாவுக்கு கவலை, அப்பாவுக்கு கவலை, பெண்ணுக்கு கவலை, பிள்ளைக்கு கவலை, கோடிவீட்டு கோமளா, மாடி வீட்டு மாலதி, எதிர்வீட்டு எத்திராஜ், அடுத்தவீட்டு அங்கு சாமி, பக்கத்துவீட்டு பங்கஜம்மாள், முதல் வீட்டு முத்து சாமி, கடைசி வீட்டு கந்த சாமி – இப்படி எல்லோரும் கவலைக் கடலில் மூழ்கித் தத்தளித்தனர். அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார்.

உங்கள் எல்லோருடைய கவலையையும் போக்கவல்ல ஒரே ஆசாமி, இறைவனே. ஆகையால் பலமாகக் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். ஊர் கூடி தேர் இழுத்தது போல, ஊரே கூடி ப்ராரத்தனை செய்தது. இறைவன் பக்தி வலையில் எளிதில் சிக்குவான். ஆகவே பகதர்களின் பிராத்தனையை செவிமடுத்து ஓடிவந்தான்.

இது என்ன? இவ்வளவு பேரும் கூடிப் பிரார்த்திக்கிறீர்களே! என்ன விஷயம் ?என்றான். எல்லோரும் சேர்ந்து ஒப்பாரி வைத்தனர். எனக்கு இந்தக் கவலை, அந்தக் கவலை என்று மூச்சுவிடாமல் அடுக்கினர்.

இறைவன் சொன்னான், “இதோ பாருங்கள். இது உங்கள் பிராரப்த கர்மம். அனுபவித்தே தீர வேண்டும் ஆனால் ஒரு சலுகை தருகிறேன். இதோ இந்த பெரிய சமவெளியில் உங்கள் கவலைகளை எல்லாம் தூக்கி எறியுங்கள் என்றான். உடனே பக்த கோடிகள் எல்லோரும் கவலைகளை விட்டெறிந்தனர். கவலைகள் மலை அளவுக்கு உருப்பெற்று, இமயமலைக்குப் போட்டியாக கவலை மலை உண்டானது.

கடவுள் சொன்னார், “நல்லது; இப்பொழுது இதிலிருந்து ஏதாவது ஒரு கவலையைப் பொறுக்கி எடுங்கள், பின்னர் வீட்டுக்குப் போகலாம் என்றார். உடனே எல்லோரும் கவலை மலை மீது பாய்ந்து, இதுவரை தான் அனுபவித்த பெரிய கவலையை ஒதுக்கிவிட்டு, ஜாக்கிரதையாக மற்றவனின் கவலையை எடுத்தனர்.

கண்தெரியாதவர், கண்களையுடைய முடவனின் கவலையைப் பெற்றார். குழந்தை இல்லாத மலடி தன், கவலையை விட்டு, குழந்தையுள்ளவளின் கவலையை எடுத்தாள். பணக்காரனின் கவலையை ஏழை எடுத்தான். இப்படி ஒவ்வொருவரும் தனது கவலையை விட்டு மற்றவனின் கவலையுடன் மாற்றுப் போட்டுக் கொண்டனர். எல்லோரும் , “அப்பாடா, இனிமேல் எல்லாம் இன்பமயம்தான், நம் வாழ்வு வளம் பெறும் என்று பெரு மூச்சுவிட்டனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

29VZMP_PAPIKONDALU_2294921g

இரண்டே நாட்களில் ஊர் முழுதும், பெரிய முக்கல், முனகல் சப்தம். கடவுளே என்னால் இந்தப் புதிய கவலையைப் பொறுக்கவே முடியாது. பழைய கவலையே பரவாயில்லை. அதுவாவது பழகிப் போய்விட்டது என்று கதறினர்.

மீண்டும் கூட்டுப் பிராரத்தனை. கடவுள் மனமிரங்கி இரண்டாவது முறை தோன்றி, அன்பர்களே, நண்பர்களே! இப்போது என்ன பிரச்சனை? என்றார். எல்லோரும் இக்கரைக்கு அக்கரை பாசை என்று எண்ணி ஏமாந்துவிட்டோம். தயவுசெய்து எங்களுடைய பழைய கவலைகளைத் திரும்ப எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றனர்.

இறைவனும் “ததாஸ்து” (அப்படியே ஆகட்டும்) என்று ஆசீர்வதித்தார்.

இறைவன் எல்லோருக்கும் சரியாகப் படி அளந்துள்ளான். விரலுக்கேற்ற வீக்கத்தையும், ஏழைக்கேற்ற எள்ளுருண்டையையும் கொடுத்திருக்கிறான். அதை விளங்கிக் கொண்டு, ஏற்றுக் கொண்டால் கவலை என்பதே இராது.

–சுபம்–

ஶ்ரீ சிவாஜி உத்ஸவம்

shivaji,fb

Article No. 2058

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 10  August  2015

Time uploaded in London :–7-48 AM

BY ச.நாகராஜன்

பாரதியாரின் முக்கியமான கட்டுரை

‘ஶ்ரீ சிவாஜி உத்ஸவமும் ஆங்கிலோ இந்தியர்களும்’ என்ற தலைப்பிட்ட மகாகவி பாரதியாரின் கட்டுரை அருமையான ஒன்று.

பரவலாகப் படிக்கப்படாத இந்த கட்டுரை அபூர்வமான ஒன்று. 1910 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிட்ட விஜயா இதழில் இது வெளி வந்துள்ளது.

மிக நீண்ட கட்டுரையான இதில் நல்ல பல கருத்துக்களை அள்ளித் தந்துள்ளார் மாபெரும் கவிஞர்.

ஆங்கிலேயருக்கு பதில்

ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் அராஜகம்  விருத்தியாகிறதாம் என்ற ஆங்கிலேயர்களின் கூற்றைச் சொல்லி பாரதியார் தரும் மறுமொழி இது:-

“ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் நாடெங்கும் அராஜகம் எப்படிப் பரவும்? இவருடைய ஜன்ம தினத்தன்று இவருடைய ஜீவ சரித்திரம் ஒவ்வொரு கூட்டத்திலும் நன்றாக விளக்கப்படுகிறது.இவருடைய அந்தரங்கக் கருத்தை ஒரு சிறிது கூட மறைக்காமல் வெளியிடுகிறார்கள். இவர் முதல் முதலில் சிறு கூட்டம் கூட்டமாக மராட்டியர்களைச் சேர்த்துக் கொண்டு மகமதிய அதிகாரிகளைத் தாக்கினதையும், அவருடைய சேனை மெல்ல மெல்ல அதிகரித்ததையும், அவருக்கு நேர்ந்த தோல்விகளையும் கஷ்டங்களையும் வெளிப்படையாகத் தான் சொல்கிறார்கள். அவர் அப்சல்கான் என்னும் மகமதிய அதிகாரியைக் கொன்றதையும் அவர் தனித் தனி மகமதியர்களுக்குச் செய்த உதவியையும் ஒத்திட்டுப் பார்த்தால் அவருடைய செய்கை சுயநலத்தின் பொருட்டல்லவென்றும், மகமதியர்களின் பேரில் வீணான துவேஷத்தால் செய்யவில்லையென்றும் விளங்குகிறது. அவர் விடாமுயற்சியோடு போர் செய்தது கொடுங்கோன்மையோடு தான் என்பது அவர் ஆட்சிக்குள்ளிருந்த மகமதிய குடிகளின் காபந்து ஒன்றினாலேயே விளங்கும்.”

இப்படி சிவாஜி மத சமரஸத்துடன் தன் கீழ் வாழ்ந்த முஸ்லீம்களை நல்ல முறையில் நடத்தினார் என்பதை பாரதியார் வலியுறுத்துகிறார்.

sivaji afsal

ஆரிய பூமியாகிய இந்தியாவில் ஆரிய தர்மம் தழைக்கட்டும்!

ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் வாழ முடியாவிடில் அவர்கள் எங்கு தான் போவார்கள்? இந்தக் கவலையை அடுத்து வரும் பாராவில் அவர் சுட்டிக் காட்டுகிறார் இப்படி:-

மகமதிய தர்மம் அபிவிருத்தியடைய எப்படி துருக்கி, அராபியாபாரசீகம் முதலியவை இருக்கின்றனவோ அதே மாதிரி ஆரிய தர்மம் அபிவிருத்தியடைய உலகத்தில் ஒரு இடம் வேண்டாமா என்னும் சர்ச்சை தான் அவர் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. ஆரிய தர்மம் தழைத்தோங்க ஆரிய பூமியாகிய இந்தியாவை விட வேறு எந்த இடம் சிலாக்கியமானது?

 

 

 இந்தியாவில் ஆரிய தர்மம் வளர வேண்டுமானால் ஹிந்துக்கள் சுதந்திரமடைவது முக்கியமல்லவா? இதுதான் மஹாராஜாவாகிய சத்திரபதி சிவாஜியை ஸ்வராஜ்யம் ஸ்தாபிக்க முயலும்படி செய்தது

மிக அருமையாக சிவாஜியின் நோக்கத்தை இப்படிக் கூறும் மகாகவி சுதந்திர இந்தியா பற்றிய தன் கற்பனையையும் தெளிவாக்கி விட்டார்.

 

ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் ஏன் கொண்டாடப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அவர் நியாயப் படுத்துகிறார். ஆங்கிலேயர்கள், 1) இதனால் அராஜகம் விருத்தியாகிறது 2) ஶ்ரீ சிவாஜி மஹாராஜாவின் ஜன்ம தினத்தைக் கொண்டாடுவதினால் தேசபக்த கட்சிக்காரர்கள் அதிகமாகிறார்கள் என்ற இரு காரணங்களை முன் வைத்ததைச் சுட்டிக் காட்டிய மகாகவி முதல் குற்றச்சாட்டை காரணம் காட்டி ஏற்க மறுத்து விட்டார்.

அடுத்ததைப் பற்றி அவர் கூறுவது இது:- “இதில் ஒன்று வாஸ்தவம் தான். ஶ்ரீ சிவாஜி உத்ஸவத்தினால் தேசபக்தர்கள் அதிகமாகிறார்கள். இந்த உத்ஸவமே அதற்காகத் தான் ஏற்பட்டது. நமக்குள் தேசபக்தியில்லையென்பது ஒரு குறைவாக ஆங்கிலேயர்களே சொல்லியிருக்கிறார்கள். அதை நம்மில் நிலைநாட்டுவதற்காகத் தான் நம் தேச சரித்திரங்களை நமக்குச் சொல்வதாக பெருமை சொல்லிக் கொண்டு வந்தார்கள். இந்த தேசபக்தி ஆங்கிலேயர்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்ல்லை. நம் முன்னோர்களின் சரித்திரத்திலேயே இருக்கிறதை நம் ஜனங்களுக்கு தெளிவாக எடுத்துக்காட்ட ஶ்ரீ சிவாஜி உத்ஸவம் நடத்தினால் இவர்களால் பொறுக்க முடியவில்லை. ஆகையால் தான் தேசபக்தர்களிளினின்று அராஜகர்கள் உண்டாகிறார்கள் என்கிறார்கள்.”

இளம் வயது மேதையின் தீர்க்கதரிசனம்

1882ஆம் ஆண்டு பிறந்த மகாகவிக்கு இந்தக் கட்டுரை எழுதும் போது வயது 28 தான்!

ஆனால் தெளிவான சிந்தனையையும் தீர்க்கதரிசன நோக்கையும் அவரது கட்டுரைகள் அனைத்தும் கொண்டிருப்பது நமக்கு பிரமிப்பை ஊட்டுகிறது.

நடை, உடை, பாவனை மாறாத நிலையில இன்றும் இருக்கும் முஸ்லீம்களை பூர்வத்தில் ஹிந்துக்களாய் இருந்தவர்கள் என்பதைச் சொன்னவர் ஒரு தாய் வயிற்றினராக ஒருங்கிணைந்து வாழ்வதை வற்புறுத்துகிறார்; ஆனால் அதே சமயம் அவர்களை மதம் மாறுமாறு தூண்டவில்லை. தேசத்தை நேசி என்கிறார்.

பாரதியாரின் ஹிந்து தேசீயம் பற்றிய கட்டுரைகள் பரவலாக அறியப்படவில்லை.

இவற்றைப் படிப்பதும் பரப்புவதும் பாரதி ஆர்வலர்களின் பணியாக அமைதல் வேண்டும். வலிமை வாய்ந்த இந்தியா உருவாக வேண்டும்!

(படங்கள், பிற வெப்சைட்டுகளிலிருந்து, எடுக்கப்பட்டவை; நன்றி)

**************

A Story about Mountain of Worries!

man path

Article No. 2057

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :– 17-08

“Distance lends enchantment to the view” is the English saying and the equivalent proverbs exist in almost all the languages in the world. In Tamil “Ikkaraikku Akkarai Pachai” = The cow on one side of the river thinks the other side is greener. There is another saying in Tamil meaning “Green at a distance is cool to the eyes.”

There is a story told by Swami Ramdas to illustrate this proverb/saying.

There was a time when discontent seized the souls of men in the world to such an extent that they unitedly raised a wail to the throne of God for relief. Everyman, dissatisfied with his own lot, felt he would gladly exchange places with his neighbour.

God heard their cry and appeared before them. All the aggrieved people assembled around Him on a vast plain. God now said, “O men, in response to your prayers, I have come here. I give each of you power to throw down on this plain the particular disability or the woe which is the cause of your discomfort and misery.”

At once, in hot haste, all he people divested themselves of their burdens of sorrow and flung them on the plain. The accumulated heap of woes formed a veritable mountain. “Now, O men,” exclaimed God, “You may pick up from this heap any burden which you prefer in exchange for the one you have given up.”

29VZMP_PAPIKONDALU_2294921g

Immediately, there was a furious scramble and each man grabbed the burden of woe belonging to his neighbour. The blind man exchanged his blindness for a broken leg vice versa. The poor man exchanged his state with the man of riches. The barren women became fruitful and vice versa – so on and so forth. Thus in a short time, the mountain of worries disappeared. All the people felt for the moment happy and relieved. God left them and they returned to their homes.

What happened the next day? Louder lamentations, a hundred times more than what it was the day before, rose from the people. God again presented Himself before them. Now all the people cried out “ O Lord, give me back my own woe, for I cannot endure the pains and grief which I have taken in exchange.” God granted their prayer and they returned perfectly satisfied.

சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது- 2

sivaji

மகாகவி பாரதியாரின் அற்புத கவிதை! – Part 2

 

Research Article No. 2056

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :–  14-37

 

 

.நாகராஜன்

கஜினி அடித்த கொள்ளை

   பாரத தேசத்தின் மீது கண் வைத்து, குறி வைத்து அன்னியரால் செய்யப்பட்ட கொலைகளும் கொள்ளைகளும் கணக்கில் அடங்கா!

உலக சரித்திரத்தை எழுத வந்த வில் ட்யூரண்ட் என்ற அறிஞர் மனித குல சரித்திரத்திலேயே இந்தியாவின் மீதான முகமதியர்களின் படையெடுப்பு தான் மகா மோசமானது என வர்ணிக்கிறார்

அழித்த ஆலயங்கள் பல்லாயிரம்.செய்த கொலைகளோ பல லட்சம். கொள்ளையடித்ததோ யாராலும் மதிப்பிட முடியாத அளவு மாபெரும் செல்வம்!

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

‘THE MUSLIM EPOCH’ ‘என்ற நூலை எழுதியுள்ள J.D.REES I.C.S தனது நூலில் இரண்டாவது அத்தியாயமாக ‘THE HOUSE OF GHAZNI (1001-1030) என்ற அத்தியாயத்தில் கொள்ளை அடித்த விவரங்களைஒரு சிறிதுகுறிப்பிடுகிறார். (1894ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த நூல்)

 

உத்தரபிரதேசத்தில் உள்ள கன்னௌஜ் பழைய காலத்தில் பிரசித்தி பெற்ற கன்யாகுப்ஜ நகரமாகத் திகழ்ந்தது. பேரரசர் ஹர்ஷரின் தலைநகரம் இது. ஹிந்துஸ்தானத்தின் இதயப் பகுதியில் கான்பூருக்கு சற்று வடக்கே கங்கை நதியின் அருகில் அமைந்திருந்த மாபெரும் கலை நகரம் இது. இதை கஜினி முகம்மது அழித்தொழித்து தரைமட்டமாக்கினான்.

 

 

மகத்தான கன்யாகுப்ஜம்

இந்த நகரின் பெருமையை ஜே.டி.ரீஸ் விவரிப்பதைப் பார்க்கலாம்:-

The greatness of this may be inferred from the fact that it is said to have contained 30,000 shops for the sale of betel-nut, as who would say there are 30,000 tobacconists’ shops in London!

 

வெற்றிலை, பாக்கு, புகையிலைக் கடைகள் மட்டும் 30000 என்று வியக்கிறார் ரீஸ்!

 

இன்னும் ஒரே ஒரு பாரா அவரது நூலின் இரண்டாம் அத்தியாயத்திலிருந்து:-

The wealth and sanctity of Muttra (Mathura), a city on the Jumna, north   of Agra, next marked it out for attack. Its idols were broken, and the temple was spared only because of its exceeding solidity. The Sultan wrote to his governor of Ghazni, “Here are a thousand edifices as firm as the faith of the faithful, mostly of marble, besides innumerable temples. Such other could not be constructed under two centuries. The Raja of Mahaban, seeing his people massacred and driven into the river, made away with his family and with himself, while the Rajputs of the garrison of another city he attacked, burned themselves and their wives and children. The plunder of this expedition is estimated at £ 416,000, besides 5300 captives, and 350 elephants, excluding the ruby eyes of idols and their necklaces of pearls and sapphires.

எத்தனை கொடுமை! படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

 

 shivaji picture

உக்ரமான அறைகூவல்

இந்தக் கொடுமையை எல்லாம் அறிந்திருந்தார் மகாகவி.ஆகவே தான் சிவாஜியின் உக்ரமான ஆவேச அறைகூவலை அப்படியே வீராவேசமாகத் தந்து விட்டார், கவிதையில்!

“தாய் பிறன் கைப்படச் சகிப்பவனாகி  நாயென வாழ்வோன் நமரிலிங்குளனோ?’

என்றும்

‘பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்!’

என்றும்

செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மின்!

ஈட்டியால் சிரங்களை வீட்டிட எழுமின்!

நீட்டிய வேல்களி னேரலர்த் தெறுமின்

வாளுடை முனையிலும்  வயந்திகழ் சூலினும்

ஆளுடைக் கால்கள் அடியினும் தேர்களின்

உருளையின் இடையினும் மாற்றலர் தலைகள்

உருளையில் கண்டு நெஞ்சுவப்புற வம்மின்!

என்றும் பாடுகிறார்.

மகமதியர்களே கோபப்படாதீர்கள்

“சரித்திர சம்பந்தமான செய்யுள்கள் புனைவதில் இக்காலத்துத் தமிழர்கள் சாதாரணமாகப் பிரவேசிப்பதில்லை” என்று குறிப்புரையில் கூறும் மகாகவி பின்னும் தொடர்கிறார் இப்படி:-

“மேற்கூறிய விதமான செய்யுளிலே நமது மகமதிய சகோதரர்களுக்கு விரோதமாகச் சில வசனங்கள் உபயோக்கிக்க நேர்ந்திருப்பது பற்றி விசனமடைகிறோம். இக்காலத்து மகமதியர்கள் பாரத பூமியின் சொந்தப் புத்திரர்களென்பதையும், ஹிந்துக்களும் மகமதியர்களும் ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல நடந்து கொள்ள வேண்டுமென்பதையும் பலமுறை வற்புறுத்தியிருக்கிறோமென்றபோதிலும், சிவாஜி மகாராஜா காலத்தில் ஹிந்துக்களுக்கும் மகமதியர்களுக்கும் விரோதமிருந்தபடியால், அவர்களைப் பற்றி மஹாராஜா சிவாஜி சில கோபமான வார்த்தைகள் சொல்லி இருப்பது வியப்பாக மாட்டாது. செய்யுளிலே மகமதியர்களைப் பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீர ரஸத்தை மட்டும் கவனிக்க வேண்டுமேயல்லாமல் மகமதிய நண்பர்கள் நமது விஷயத்தில் உதாசீனம் இருப்பதாக நினைக்கக் கூடாதென்று கேட்டுக் கொள்கிறோம்.”

பாரத பூமியின் சொந்தப் புத்திரர்கள் மதமாற்றத்தால் வேறு மதம் தழுவ நேர்ந்ததைப் பலகாலும் பாரதியார் வற்புறுத்தி இருக்கிறார்.

ஆகவே ஒரு தாய் பிள்ளைகளாக அவர்கள் ஒருங்கிணைந்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பதே அவர் அவா!

இதற்காகத் தோன்றியது தான் சிவாஜி உற்சவம்!

-தொடரும்

12 அத்தியாயங்களில் 2647 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார்?- பகுதி 1

IMG_4756

IMG_4716

Research Article No. 2055

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :– காலை  8-37

மனு என்ன சொன்னார்? மனு நீதி நூலை முழுக்க படிக்கா முடியாவிட்டாலும் அவர் எதைப் பற்றி எழுதினார் என்று அறிய பினவரும் பொருளடக்கம் உதவும் (நன்றி:பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்). அடுத்தமுறை காமெராவுடன் சென்று இதைவிட நல்ல காப்பி எடுக்கையில் இதை அழித்து, அதைப் போடுகிறேன்.

பகுதி இரண்டில் தொடர்ச்சி உள்ளது.

IMG_4717

IMG_4718

IMG_4719

IMG_4720

IMG_4721

IMG_4722

IMG_4723

IMG_4724

IMG_4725

IMG_4726

IMG_4727

IMG_4728

IMG_4729

IMG_4730

IMG_4731

தொடரும்………………………………

12 அத்தியாயங்களில் 2647 ஸ்லோகங்களில் மனு என்ன செப்பினார்?- பகுதி 2

IMG_4622

Article No. 2054

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 9  August  2015

Time uploaded in London :– காலை 7- 59

பகுதி ஒன்றை முதலில் காண்க! (பக்கங்களைப் பெரிது படுத்தி படிக்கவும்)

மனு என்ன சொன்னார்? மனு நீதி நூலை முழுக்க படிக்கா முடியாவிட்டாலும் அவர் எதைப் பற்றி எழுதினார் என்று அறிய பினவரும் பொருளடக்கம் உதவும் (நன்றி:பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்). அடுத்தமுறை காமெராவுடன் சென்று இதைவிட நல்ல காப்பி எடுக்கையில் இதை அழித்து, அதைப் போடுகிறேன்.

IMG_4732

IMG_4733

IMG_4734

IMG_4735

IMG_4736

IMG_4737

IMG_4738

IMG_4739

IMG_4740

IMG_4741

IMG_4742

IMG_4743

IMG_4744

IMG_4745

IMG_4746

IMG_4747

IMG_4748

IMG_4749

IMG_4750

IMG_4751 (2)

IMG_4751

IMG_4752

IMG_4753

முற்றும்.

What can a Parrot Teach You?

parrot 1

Research Article No. 2053

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 8  August  2015

Time uploaded in London :– 16.27

 

There is a proverb in Sanskrit, “Bandanamaayaanti sukaah, yatheshta sanchaarinah Kaakaah”.

“The crows are flying freely, the parrots are caged”.

There is an equivalent proverb in Tamil, “It is the fruit laden tree that gets most hits (by stones).

The message is “if you have anything in excess, you are abused. In the olden days the talented poets were “slaves” of the kings. Very often there were conflicts between the kings and the scholars and they left the country in anger. We have plenty of stories in our literature.

parrot 3

Women are compared to parrots because of their beauty and sweet voice. A most beautiful woman was also a security risk. Alauddin Khilji wanted to take Chittoor Rani Padmini, the most beautiful Rajput princess, but she entered fire with her retinue before she was molested by the Muslim invaders.

Parrots were caged because of their ability of mimicry and its beauty.

Even brides are compared to parrots. Whenever a bride is married to an unsuitable man, then they used to say, Is it right to rear a parrot and then leave it to the claws of a cat? (Tamil Proverb)

parrot 6

Parrot and a Cheat

A merchant bought a parrot and taught the words NO DOUBT ABOUT IT to it. He used to prepare everything in advance to suit the answer ‘ no about it’ and then ask the question. One day he dug the ground and then buried some god coins without anybody’s knowledge. Then he called everyone and said that his parrot can even find treasures buried under the ground. He took the parrot to the place where he buried the gold coins and asked the question: “ Is there a treasure under the ground?” The parrot screeched “No doubt about it”. To the amazement of everyone he dug up the ground and took 1000 gold coins and showed to everyone.

A greedy person approached the merchant and bought the parrot for a higher price. He took it to some place where everyone  said that an old treasure has been there for a very long time. He asked the parrot, “Is there a reassure buried under the ground here?” The parrot said ,”No doubt about it”. He dug up the ground and nothing was there. The parrot repeated the words every time he asked the question. So he brought more men and dug up the ground deeper and deeper. At last he was disappointed. He shouted in anger, “Are you fooling me? Did you put dirt into my mouth?”

The parrot repeated the same words: No doubt about it.

Then only he realised that he was fooled by the merchant who sold the parrot to him.

No doubt, he sold it to another fool.

Tamil poets and saints used to sing apostrophes to birds and one of them is parrot.

mirror-parrot

Following two Stories are from my old articles:

Parrot and Mirror

The method by which a parrot is taught to speak is unique. The trainer places a big mirror in front of the newly caught parrot and talks to it from behind the mirror. The parrot thinks that another parrot is teaching it to talk and imitates the voice of the trainer. Trained in this manner, the parrot, picking up the language of the trainer, begins to talk fluently in the human language.

This is how a saint teaches his disciples. Apparently it is human being who is instructing them, but, verily, it is God hidden in the Guru that gives illuminating advice to the disciples. So, whenever the aspirant receives instructions from the Guru, he should consider that such instructions come from God himself. Truly, God and Guru are one.

Freedom is the Goal

In a war in Europe, a sailor was captured by the enemy and was put into prison. After fifteen years he was released, as the warring countries contracted an alliance through a treaty. On the day of release, a friend placed in his hands a purse containing £50/- When the sailor was passing through the streets, he saw a shop in which he saw various species of birds in cages kept for sale. He went up to the shop and bought all the cages from the money he possessed and, by opening the trap doors of the cages, set free the imprisoned birds one by one. The shop man was astounded at this. He asked why the sailor having bought the birds at such high prices, released them all.

caged-parrots2

The sailor replied, “You see, I alone know what it is to be in prison, being denied the privilege of freedom. For fifteen years I have suffered prison life. I could not bear to see these birds unhappy in their cages”.

Similarly, a saint having attained spiritual liberation himself is eager to release others from the bondage of ignorance.

–Subham–

ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை; விரலுக்கு ஏற்ற வீக்கம்!

A_White_Sesame_Seed_Ball(எள்ளுருண்டை)

விக்கிபீடியா படம்; நன்றி

Article No. 2052

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 8  August  2015

Time uploaded in London : – 10-37 am

 

மேலும் சில சம்ஸ்கிருதப் பொன்மொழிகளும், அவைகளுக்கிணையான தமிழ்ப் பழமொழிகளும்:–

 

1.யதா ராஜா ததா ப்ரஜா:- சாணக்ய நீதி தர்பணம்

மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி

 

2.ப்ரஷ்டவ்யா: சத்பதம் வ்ருத்தா:

நல்வழியை பெரியோரிடம் கேட்க வேண்டும்

(பெரியார் சொல் கேள்)

 

3.பந்தனமாயாந்தி சுகா யதேஷ்ட சஞ்சாரிண: காகா:

கிளிகள் கூண்டில் அடைபட்டுள்ளன; காகங்கள் சுதந்திரமாகப் பறக்கின்றன.

(பழுத்த மரம் தான் கல் அடிபடும்)

 

4.பாந்த்யா நைவ விஜானாதி குர்வீம் ப்ரசவ வேதனாம் – குவலயானந்த:

மலடிக்குத் தெரியுமா பிரசவ வேதனை?

(முன்னப்பின்ன செத்தாத்தான் சுடுகாடு தெரியும்)

 

 

5.பஹுப்ரஜா: க்ருச்ர மாபத்யத இதி பரிவ்ராஜகா:

அதிக குழந்தைகள் இருந்தால் கஷ்டம் என்று பரிவ்ராஜகர்கள் சொல்கிறார்கள்.

 beautiful-rings

6.பஜேதவஸ்தோசிதாம் வ்ருத்திம்

தகுதிக்கு ஏற்ற வேலை செய்

((ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை;

விரலுக்கு ஏற்ற வீக்கம்/மோதிரம்))

 

7.க: ப்ராக்ஞோ வாஞ்சதி ஸ்நேஹம் வேஸ்யாசு சிகதாசு ச –கதாசரித் சாகரம்

எந்த அறிவாளி தவசிகளிடமிருந்து அன்பையும், மண்ணிலிருந்து எண்ணையையும் எதிர்பார்ப்பான்?

 

 

8.பின்னருசிர் ஹி லோக: – ரகுவம்சம்

உலகம் பலவிதம்

Variety is the spice of life

 மீன் பிடித்தல்

9.மத்ஸ்ய ஏவ மத்ஸ்யம் கிலதி – சதபத ப்ராம்மணம்

மீனை மீனே விழுங்கும்

(சின்ன மீனைப் போட்டால்தான் பெரிய மீனைப் பிடிக்கலாம்)

 

10.முஹூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ ந ச தூமாயிதம் சிரம் – மஹாபாரதம்

நிரந்தர இருளை விட ஒரு முகூர்த்தம் ஒளிவிட்டாலும் போதும்

 

11.முகூர்த்தமபி ஜீவேத் நர: சுக்லேன கர்மணா

கொஞ்ச காலம் வாழ்ந்தாலும் நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்

 

12.ம்ருகா ம்ருகை: சங்கமனுவ்ரஜந்தி

மான்கள் மான்களோடு கூடும்

(இனம் இனத்தோடு சேரும்)

மான்

-subham–