லெட்சுமணன் படித்த ‘ஸ்கூல்’ பற்றி கம்பன் தகவல் (Post No.4916)

லெட்சுமணன் படித்த ஸ்கூல் பற்றி கம்பன் தகவல் (Post No.4916)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  14-27 (British Summer Time)

 

Post No. 4916

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

நான் வாழும் லண்டனில் வேலைவாய்ப்பு பேட்டிகளில் எந்தப் பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவன் படித்தான் என்பதற்கும் மார்க் (mark) உண்டு. நேருஜி படித்த ஈடன் (Eton) பள்ளி, மற்றும் அரசியல் பேர்வழிகளின் பிள்ளைகள் படித்த கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு (Cambridge, Oxford) பல்கலைக் கழகங்கள், பிரைவேட் ஸ்கூல் (மாதத்துக்கு 2000, 3000 பவுண்டு பீஸ்/fees) ஆகியவற்றுக்கு தனி மதிப்பு. அதிலிருந்தே அவர்களின் குணநலனும், அந்தஸ்தும், அறிவும் புலப்படும் என்ற ஒரு அசட்டு நம்பிக்கை.

 

ராமனின் தம்பி லெட்சுமணன் படித்த ஸ்கூலில் தியரி (theory) கிடையாதாம்; அதிகம் பிராக்டிகல் (practical) பாடங்கள்தானாம்! இதைக் கம்பனே இலக்குவன் வாய்மூலம் இயம்புகிறான். அதைப் படித்து கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், கம்பன் எவ்வளவு   நுணுக்கமாகப் பார்க்கிறான் என்பது புலப்படும்,

 

“நீ ராமன் தம்பி, நான் ராவணன் தம்பி, வா, கொஞ்சம் வீர வசனம் பேசுவோம்; அதில் யார் வெல்கிறார்கள் என்று முதலில் பார்ப்போம் என்கிறான்” கும்பகர்ணன்.

 

அதற்கு இலக்குவன் பதில் சொல்கிறான். “அப்பனே நான் படித்த பள்ளிக்கூடத்தில் எங்க வாத்தியார் சொல்லிக் கொடுத்த பாடம் வேறு; நீங்கள் சொல்லினால் பேசுவீர்கள்; நாங்கள் வில்லினால்தான் பேசுவோம்; அதுதான் நான் கற்ற பாடம்”.

 

முதலில் போர்க்களத்தில் வாக்குவாதம் நடத்துவது என்பதே இந்திய வழக்கு; பகவத் கீதை இதற்குச் சான்று. யுத்த காண்டத்தில் பல எதிர் எதிர் தரப்பு வீரர்கள் சொற் கணைகளைப் பெய்த பின்னரே விற்கணைகளைத் தொடுப்பர் என்பதைக் கம்பனும் காட்டுவான் .

இலக்குவன் மட்டும் எங்கள் ஸ்கூல் சிலபஸ் School syllabus வேறு என்று சொல்வதை கம்பன் கவி வழி சுவைப்போம்:

 

இராமன் தம்பி நீ இராவணன் தம்பி நான் இருவேம்

பொரநின்றேம் இது காணிய வந்தனர் புலவோர்

பராவும் தொல் செரு முறை வலிக்கு உரியன பகர்ந்து

விராவு நல் அமர் விளைக்குதும் யாம் என விளம்பா

யுத்த காண்டம், கும்ப கர்ணன் வதைப் படலம், கம்ப ராமாயணம்

 

பொருள்

நீ ராமனுக்குத் தம்பி; நான், ராவணனுக்குத் தம்பி. இருவரும் இப்போது போரிட நிற்கிறோம்.  இப்போரினைப் பார்க்க தேவர்களும் வந்தனர். புகழத் தக்க பழமையான போர் முறையில், நம் பலத்துக்கேற்ற வகையில் முதலில் கொஞ்சம் கதைப்போம்; பின்னர் கை கலப்போம் – என்று கும்ப கர்ணன் செப்பினான்.

 

இலக்குவன் பதில்

 

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர்

மல்லினால் செய்த புயத்தவன் மாற்றங்கள் நும்பால்

வில்லினால் சொல்லின் அல்லது வெந்திறல் வெள்கச்

சொல்லினால் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னான்

பொருள்

இருளையே உருக்கி வார்த்து செய்தாற் போல இருந்த கும்ப கர்ணன் சொல்லினைக் கேட்ட (மல்யுத்தம் செய்ததால் உரம் ஏறிப்போன தோள் கொண்ட)  இலக்குவன் உரைத்தான்— “உனக்கு பதில் சொல்வது வில்லினால் மட்டுமே இயலும். வீரத்துக்கு இழுக்கு உண்டாக்கும் வகையில் சொல்லினால் சொல்ல யாம் கற்கவில்லை”.

 

என் வில்தான் பேசும்; சொல் வேண்டாம்; இதுதான் நான் கற்றது.

நல்ல அருமையான பதில்

 

சில கம்பன் பாட்டில் சொல் நயம் இருக்கும்; சில கம்பன் பாட்டில் பொருள் நயம் இருக்கும்; இன்னும் சில பாடல்களில் இரு நயமும் இருக்கும்.

 

படித்துச் சுவையுங்கள்.

 

-சுபம்–

பாரதி போற்றி ஆயிரம் – 78 (Post No.4915)

COMPILED by S NAGARAJAN

 

Date: 15 April 2018

 

Time uploaded in London –  7-04 AM  (British Summer Time)

 

Post No. 4915

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 78

  பாடல்கள் 654 முதல் 665

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

                           பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு பத்தாம் அத்தியாயமான பாரதி பார்வையில் பாரதி இடம்பெறுகிறது.

பத்தாம் அத்தியாயம்: பாரதி பார்வையில் பாரதி

1 முதல் 12 வரை உள்ள பாடல்கள்

 

காலச்சக் கரத்தின் மேற்பகு தியெனில்

     காணுமு யிர்களின் பிறப்பாகும்

சீலமு றவது சுழல்கையில் கீழே

    சென்றிட லென்பது இறப்பாகும்

ஓலமிட் டழுவதில் பயனென் பிறந்தோர்

     ஒருநாள் மடிவது முறையாகும்

கோலமிட் டழித்தல் போல்பிறப் பிறப்பும்

    கோலம்மா றிவரல் இயல்பாகும்

 

எவரிறந் தாலும் மறுகணம் மறத்தல்

    இப்புவி மாந்தர் குணமாகும்

அவர்போல் எனையும் மறந்திடு வாரெனில்

    அதுவே வாழ்வின் நிலையாகும்

தவறா ததுவே நிகழும் எனயென்

    தமிழ்நாட் டினையும் நினைந்திட்டேன்

தவறாய் நினைத்தேன் எனும்படி என்றும்

    தமிழகம் என்னைப் போற்றிடுதே

 

என்பெய ராலே எண்ணிலா மன்றம்

    இருப்பதைக் கண்டு வியக்கின்றேன்

என்கவி தைகளை பலவடி வத்தில்

     எங்கணும் பாடக் கேட்கின்றேன்

என்னைப் பற்றிய ஆய்வுகள் பலவும்

     ஏடுக ளில்வரக் காண்கின்றேன்

என்தமிழ் நாட்டார் எனைமறப் பாரோ

    என்பதைக் கண்டு மகிழ்கின்றேன்

 

இந்நாள் எனையான் திரும்பிப் பார்க்கின்

     என்வாழ் வெனக்கே திகைப்பூட்டும்

அந்நாள் நடந்ததைச் சொல்கிறேன் எந்தன்

     ஆடையே பிறர்க்கு நகைப்பூட்டும்

எந்நா ளும்நான் நிம்மதி யாக

    இருந்தேன் என்றிட வாய்ப்பில்லை

இந்நாள் அதனை நினைத்துப் பார்த்தால்

    எனக்கே என்நிலை புரியவில்லை

 

சுயபுத்தி இல்லாமல் ஏதேதோ செய்வதாய்

     சூழ்ந்தவர் யாரும் சொல்ல

சுயசாதி வெறுப்புக்கு ஆளாகி அவரோடு

    சுற்றத்தால் ஒதுக்கப் பட்டேன்

சுயமாக எதனையும் செய்திட இயலாத

    சூழ்நிலைக் கைதி யானேன்

சுயசரி தம்எழுத முயன்றாலும் அதனையும்

    தொடராமல் நிறுத்த லானேன்

 

என்னிளம் பருவத்தின் பெருமைகள் ஈதென

     இயம்பிட ஏது மில்லை

சின்னஞ்சி றுவர்க்குள விளையாட்டில் கலந்திட

    சிறிதேனும் உரிமை யில்லை

இன்னுமோர் கொடுமையாய் சிறுமியைக் கொணர்ந்து

    என்மனைவி யாக்கி வைத்தார்

பின்னுமோர் சோதனை தந்தையார் மடிந்திட

    போகயிட மின்றி நின்றேன்

 

நிரந்தர மில்லாமல் ஊர்ஊராய் ஓடிநான்

     நிலையற்ற வாழ்வு வாழ்ந்தேன்

அரசனாம் தருமன்போல் அல்லல்கள் பலபட்டு

    அஞ்ஞாத வாசம் செய்தேன்

கரம்பிடித் திட்டநல் மனைவியொடு மக்களின்

     கடமையைச் செய்தி டாத

முரடனாய் வாழ்வியல் புரியாது முரண்படும்

    மூடனாய் தூற்றப் பட்டேன்

 

இத்தனைத் துயர்கள் இருப்பினும் கவிதை

     இயற்றுதல் மட்டும் நின்றதில்லை

எத்தனைத் தடைகள் குறுக்கிட்ட போதும்

     எழுதாமல் இருக்க இயலவில்லை

சித்தத்தில் ஒளிரும் சுடரென இருந்தென்னைச்

     சிறப்புறச் செய்தது தமிழன்றோ?

நித்தமென் சுவாசக் காற்றென இயங்கி

    நிலைபெறச் செய்தது கவியன்றோ?

 

வறுமையே தொடர்ந்தென்னைத் துரத்திய போதும்

    வடித்திடும் பாடலில் ஒருபோதும்

சிறுமையோ குறையோ நேர்ந்திட விடாமல்

     சீருடன் ஆய்ந்ததைப் படைத்திட்டேன்

பெறுமிச் சுதந்திரப் பயிரினை வளர்த்திட

    பாடுபட் டோரில் என்பெயரும்

உறுமென் பதுவே போதுமத னிலுமே

    உயர்நிலை எனக்குத் தந்திட்டார்

 

என்கவியைப் பாடாத மேடையில்லை எங்கும்

     என்புகழைப் பேசாத சபையுமில்லை

என்றாலும் நானன்று பாடியே மகிழ்ந்திட்ட

    இனிய பாரதமின்னும் தோன்ற வில்லை

என்சாதி என்மதம் என்னினம் என்மொழி

     எனமூளும் சண்டைகள் ஓய வில்லை

என்றுதான் இவையெலாம் தீருமோ அதுவரை

     என்பாடல் ஒலிப்பதில் பொருளு மில்லை

 

நல்லதோர் வீணையைச் செய்ததை மீட்டிட

     நல்லிசை அதனிலே கேட்க வில்லை

பல்லெழில் மிக்கதோர் ஓவியம் வாங்கியும்

    பார்த்திட விழிகளோ இரண்டு மில்லை

சொல்லழகு கொண்டதென என்கவியைப் பாடினார்

     சொல்பொருளை செயலாக்க முனைய வில்லை

அல்லல்கள் பலபட்டு அயராமல் இயற்றிய

    அருங்கவிகள் போல்நாடு அமையவில்லை

 

 

என்றென் தமிழ்மொழி உலகம் முழுதும்

ஏற்கும் செம்மொழி யாகிடுமோ

என்றென் பாரதம் எல்லா நலனும்

இருக்கும் நாடாய் உயர்வுறுமோ

என்றிவ் வுலகம் மாந்தர் யாவரும்

என்றும் சமமென இணைந்திடுமோ

அன்றென் கவிதைகள் உயிர்பெற் றிடுமே

அவற்றுள் நிலையாய் வாழ்வேனே!!!

 

பாரதி பார்வையில் பாரதி முற்றும்

பாரதி பத்துப்பாட்டு நூல் முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

 

TAMIL POET VALLUVAR AND WESTERN THINKERS ON RIGHT CONDUCT (Post.4914)

TAMIL POET VALLUVAR AND WESTERN THINKERS ON RIGHT CONDUCT (Post.4914)

 

WRITTEN by London Swaminathan 

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  20-31 (British Summer Time)

 

Post No. 4914

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

The greatest of the ancient Tamil poets, Tiruvalluvar had composed ten verses on right conduct or discipline. As it is the main topic in religious scriptures, we have lot of verses in religious books. But by comparing the verses with other western poets we learn that great men think alike irrespective of the race, religion and geographical location.

 

Let us compare a few verses: –

Right conduct makes one great; hence right conduct is greater than life (Tirukkural 131).

Mathew Arnold said,

Conduct is three fourths of life and its largest concern.

Dr S M Diaz, I G of Police in Tamil Nadu says,

“And that is precisely why in the National Police Academy at Hyderabad where officers of the Indian Police Service at all levels are trained, I had prominently placed the following inscription: –

No Niagara is ever turned into light and power

Until it is tunnelled and confined

No life ever grows great until It is Focussed,

Dedicated and Disciplined

According to Plato, what is to be feared in life is disgrace and not death.

 

Tiruvalluvar, author of Tirukkural says elsewhere,

Hair lost, the yak lives not.

Honour lost, noble men leave their life (Kural 969)

 

Noble men do not outlive loss of honour. The world hails their glory (970).

 

xxx

 

In another couplet, Valluvar says

Right conduct is true nobility;

The absence of it is just ignoble (Kural 133)

 

The great French dramatist Moliere said that ‘Virtue is the first title of Nobility’, while Benson and Forster would rate ‘sincerity’ and considerateness’ as the determinants of true aristocracy.

 

In Kural/couplet 134, Valluvar says,

The Brahmin who has forgotten his scriptures could read them up again;

But if he neglects right conduct he will lose his birth-right.

 

This couplet in fact is an amplification of the previous Kural 133, Moliere’s statement that ‘Birth is nothing where virtues is not” is relevant here.

S M Diaz, has given lot of comparisons from The Bible (Proverbs) for every couplet in this chapter.

 

In the couplet 140, Valluvar says

Even men of learning will be as ignorant as men,

If they do not live in tune with the world.

 

The following passage from Lord Chesterfield could be considered a felicitous alternative translation of this Kural:

“A man of the best parts and the greatest learning, if he does not know the world by his own experience and obligation, will be very absurd and consequently very unwelcome in company”.

What Indian Scholars say about conduct?

It may be sandal paste, incense or water lily or jasmine. The fragrance of good conduct has nothing superior to such perfumes – Dhammapada 4-12

 

As one acts according to one’s conduct. so does he become.

The doer of good becomes good; of evil, evil.

One become virtuous by virtuous acts.

-Brihad Aranyaka Upanishad 4.4.4

 

Do nothing to others which, if done to you , would cause you pain;  this is the sum of polity.

–Mahabharata, 5-1517

 

Forget not the good done to you;

Despise evil friends

Give not false evidence

And depart not from the truth.

Fail not to join the assembly of the learned,

Strive always to escape from the company of the lawless;

Abstain from others’ wives

Help the dying.

-Tamil Epic Silappadikaram

Conduct renders a man virtuous, a coward or her, transmuting purity into purity.

Valmiki Ramayana, Ayodhya Kanda, Chapter 108

 

Source books: Tirukkural Translation by S M Diaz

The Golden Treasury of Indian Quotations R N Saletore

–Subham–

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கியன் (Post No.4913)

 


WRITTEN by London Swaminathan 

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  14-18 (British Summer Time)

 

Post No. 4913

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய, உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்தசாஸ்திரத்தில், தண்டனை பற்றி பல சுவையான விஷயங்கள் உள்ளன.

 

கடுமையான தண்டனை கொடுத்தால் மக்கள் வெறுக்கிறார்கள்;

குறைவான தண்டனை கொடுத்தால் மக்கள்  நிந்திப்பார்கள்;

தவற்றுக்கு ஏற்ற தண்டனை கொடுத்தால் மக்கள் மதிப்பார்கள் (அர்த்தசாஸ்திரம் 1-4

 

யார் ஒருவன் அதிகமாகக் குடிக்கிறானோ சூதாடுகிறானோ, வேட்டை ஆடுகிறானோ அவர்களை, சட்டம் சந்தேகத்துடன் பார்க்கும் – (4-6)

 

பெண்கள் விஷயத்திலோ அல்லது வேறு எதிலோ அதிக ஈடுபாடு கொண்டிருப்பது குற்றம் – (8-1)

 

ஒரு ஆணும் பெண்ணும் திருமணத்துக்குப் பின்னர் கூடி வாழ வேண்டும். மாத விலக்குக்குப் பின்னர் மனைவியுடன் படுக்க மறுக்கும் கணவன் குற்றம் இழைத்தவன் ஆவான் (1-3; 3-2)

மஹா பாரதமும் இந்தக் கருத்தைச் சொல்கிறது.

ஒரு ஆண்மகன் இஷ்டப்பட்டால் வீட்டை விட்டு ஓடிப் போய் சந்யாசி ஆகிவிட முடியாது. அவன் தனது மனைவியும், மகனும் வாழ வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்த பின்னரே சந்யாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதானவ ஒருவர் காவி ஆடை போட்டுக்கொள்ள விரும்பினாலும் அரசாங்க அதிகாரிகளுக்குச் சொல்லாமல் செய்வது தண்டணைக்கு உரிய குற்றம் ஆகும் – (2-1)

 

ஒரு அரசன் கூட எதிலும் நிதானம் காட்ட வேண்டும் என்பது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த கொள்கை. அரசன் சுக போக விஷயங்களில் ஈடுபட்டால் அறமும் இல்லை, பொருளும் இல்லை என்று ஆகிவிடும் (பொருள்= செல்வம்; அறம்= தர்மம்) – மநு 7-46

 

தொல்காப்பியமும் திருக்குறளும் அறம், பொருள், இன்பம் ( தர்ம, அர்த்த, காம) என்ற சொற்களைப் பல இடங்களில் வலியுறுத்துகிறது. இதையே கௌடில்யன் எனப்படும் சாணக்கியன் அவ்விரு நூல்களுக்கும் முன்னரே சொல்லிவிட்டான்.

இன்பம் இல்லாமல் வாழாதீர்கள் (ந நிஸ்ஸுகஸ்யாத்- 1-7) என்று கௌடில்யன் கூறுவான். உள்ளத்தில் ஆசைத் தீ எரியட்டும். ஆனால் அறத்துக்கும் பொருளுக்கும் ஊறு விளைவிக்காத வகை யில் காமம் (ஆசை) இருக்க வேண்டும் என்பான் (1-7).

 

சாணக்கியன் சொல்லும் பல விஷயங்கள் மஹா பாரத சாந்தி பர்வத்திலும் உள்ளது. இது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததால் தமிழர்களும் தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் அறம், பொருள் இன்பமென்பதை அதே வரிசையில் அப்படியே (தர்ம, அர்த்த, காம) விளம்பினர்.

 

திருக்குறளின் பெயர்களில் ஒன்று முப்பால் (அறம், பொருள், இன்பம்).

இந்த மூன்று விஷயங்களை (த்ரிவர்க) என்று இயம்புவர்.

வாத்ஸ்யாயனர் எழுதிய காம சூத்ரமும் இது பற்றிக் கூறும்:-

 

ஒரு மனிதனுடைய வாழ்வு 100 ஆண்டுகள். இதை அவர்கள் முறையாகப் பிரித்து, ஒன்றுக்கு ஒன்று மோதாமல், அனுசரணையாக இருக்கும்படி அமைத்துக்  கொள்ள வேண்டும். மாணவப் பருவத்தில் கல்வியும், பொருள் ஈட்டும் வழிகளும் நோக்கம் ஆக இருக்க வேண்டும்.

வாலிபப் பருவத்தில் காம சுகங்களை நாட வேண்டும்; முதுமையில் மோட்சத்துக்கான வழிகளில் மனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, தக்க விதத்தில் இக்குறிக்கோள்கள்களைப் பின்பற்ற வேண்டும்.

 

திருக்குறளுக்கு முப்பால் என்று பெயரிட்டது ஏன்?

த்ரிவர்கங்களில் (அறம், பொருள் இன்பம்) மூன்றையும் அல்லது இரண்டையாவது அடையும்   செயல்களைச் செய்ய வேண்டும்.  ஆனால் மூன்றில் எந்த ஒன்றும்  அடுத்த இரண்டு குறிக்கோள்களைப் பாதிக்கக்கூடாது.(காமசூத்திரம் 1-2-51)

இவற்றைக் காணும் போது திருக்குறளுக்கு முப்பால் என்று பெயர் வந்தது ஏன்? திருவள்ளுவர் ஏன் தன் நூலை முப்பால்களாகத் தொகுத்தார் என்பது நன்கு விளங்கும்.

 

கிரேக்க அறிஞர் அரிஸ்டாடிலும் கூட கிட்டத்தட்ட இந்தக் கருத்துகளை எதிரொலிக்கிறார்.

 

எந்த ஒரு விஷயத்திலும் மிக அதிக ஈடுபாடோ மிகக் குறைவான ஈடுபாடோ அழிவை ஏற்படுத்தும். உடற்பயிற்சியில் இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் பலம் பாதிக்கப்படும்; மதுவிலோ, மாமிச உணவிலோ இப்படி ஏற்ற தாழ்வு இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். தைரியம், கோபம் முதலிய குணங்களில் ஏற்ற தாழ்வு இப்படி இருந்தால் அழிவை உண்டாக்கும்; நடுநிலை வகிப்பதே சாலச் சிறந்தது (ETHICS , ARISTOTLE எதிக்ஸ் 2-2)

 

மநுவும் மனு நீதி நூலில் இதையே உரைக்கிறார்:

மன்னன் என்பவன் தர்ம அர்த்த காம விஷயங்களைக் கற்றவன் ஆக இருத்தல் அவசியம்; தன் ஆட்சி அதிகாரத்தில் இம்மூன்றிலும் படிப்படியாக முன்னேற்றம் காண வேண்டும் (தர்ம காமார்த்தகோவிதம்; த்ரைவர்கேனாபிவர்ததே- மநு 7-26/27)

 

அர்த்தசாஸ்திரம் இதை இன்னும் தெளிவாகச் செப்பும்:

 

அறம், பொருள் இன்பம் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்றை அளவுக்கு அதிகமாகப் பின்பற்றினால் பின்பற்றப்பட்ட ஒரு விஷயம் பாதிப்பதோடு மற்ற இரண்டையும் கெடுத்துவிடும் (1-7)

 

2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இதையெல்லாம் சிந்தித்துஎழுதி இருப்பது சிறப்புக்குரியது.

xxxx

 

தொல்காப்பியத்தில் அறம் பொருள் இன்பம்

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

… (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு நூல்களில் பெருகுவதைக் காணலாம். புறம் 28, 31 பாடல்களில் காணப்படும் இந்த இந்து மதக்கருத்துக்கள் தொல். இல் 1363, 1038 சூத்திரங்களிலும் காணக்கிடக்கிறது. 9.

அறம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அறம்/

Translate this page

”தர்ம, அர்த்த, காம” என்ற வட மொழிச் சொற்றொடர் ”அறம்,பொருள்இன்பம்” என்று தமிழில் அதே வரிசையில் வருகிறது. இவை வாழ்க்கை மூல்யங்கள்- இந்தியர்களின் ஆதார சுருதி- பாரதீய வாழ்வின் அஸ்திவாரக் கற்கள்.–இதை மஹாபாரதத்திலும் காணலாம். தொல்காப்பியம்(சூத்திரம்1037, 1363) …

தொல்காப்பியத்தில் … – Tamil and Vedas

https://tamilandvedas.com/…/தொல்காப்பியத்தில…

Translate this page

தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!! … ஆரிய திராவிட வாதம் பேசும் அரை வேக்காடுகளுக்கு சூத்திரம் சூத்திரமாகத் தொல்காப்பியர் அடிமேல் அடி கொடுக்கிறார். … வாழ்க்கையின் லட்சியங்களை அறம்பொருள் இன்பம், வீடு (தர்மார்த்த காமமோக்ஷ) என்று பிரிப்பது.

 

Bhagavad Gita in Tamil | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/bhagavad-gita-in-tamil/

Translate this page

“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும். அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல” (புறம் 31, கோவுர் கிழார்). மேலும் சில :தொல்காப்பியம் 1038,,கலி.141,திருவள்ளுவ மாலையில் 5 இடங்கள். உ.வே.சாமிநாத அய்யர் புறநானூறு பாடல் முறை வைப்பு அறம்,பொருள்,இன்பம் என்ற தலைப்பில் …

You’ve visited this page 2 times. Last visit: 03/02/17

 

பகுதி4-தொல்காப்பியர் காலம் தவறு | Tamil …

https://tamilandvedas.com/…/பகுதி4-தொல்காப்பி…

Translate this page

13 Sep 2012 – ஒரு இலக்கண நூலில் இவ்வளவு இடங்களில் தெய்வம் பற்றிப் பேசியதையும் நோக்கவேண்டும் (கடவுள் பற்றி பொருள். 5, 88, 18, 57, 93, 115 சூத்திரங்களிலும் அறம் பொருள் இன்பம் பற்றி பொருள் 92, 418 சூத்திரங்களிலும் வருகிறது). தொல்காப்பியத்தின் காலத்தைப் பின்போடுவதால் …

தொல்காப்பியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/தொல்காப்பியம்/

Translate this page

தொல்காப்பியர் பெண்களுக்கு வேண்டிய குணநலன்கள் பற்றிச் சொல்லுவதையும் கூட இன்று பெண்கள் ஏற்பார்களா என்பது ஐயப்பாடே!சந்தேகமே! ….. தர்ம, அர்த்த, காம, (மோட்சம்)= அறம்பொருள்இன்பம், (வீடு) என்ற வடமொழி வரிசை திருக்குறள் காலத்தில் தோன்றி பதினென் கீழ்க்கனக்கு …

You’ve visited this page 3 times. Last visit: 16/12/16

கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம் …

https://tamilandvedas.com/…/கண்ணனின்-பக்தி-அற…

Translate this page

1 Feb 2014 – … சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பழமொழிகள் பழமொழிக் கதை பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் …

–சுபம்–

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது! (Post No.4912)

WRITTEN by S NAGARAJAN

 

Date: 14 April 2018

 

Time uploaded in London –  6-10 AM  (British Summer Time)

 

Post No. 4912

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

கொங்கு மண்டலப் பெருமை

 

புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

 

ச.நாகராஜன்

 

தமிழக மன்னர்களும் பிரபுக்களும் புலவர்களுக்குத் தகுந்த பரிசுகளைக் கொடுப்பதைப் பெருமையாகவும் கடமையாகவும் கருதியவர்கள்.

கொங்கு மண்டல சதகத்தில் வரும் பல பாடல்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

 

இப்போதுள்ள கோபிச்செட்டி பாளையம் தாலுகா பழைய காலத்தில் காஞ்சிக்கோயில் நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது. இதில் அடங்கியிருந்த ஊரான பாரியூரில் செட்டி பிள்ளையப்பன் என்ற பெரிய கொடையாளி ஒருவர் இருந்தார். அவர் மீது கவிபாடிக் கொண்டு புலவர் ஒருவர் வந்தார். கொடுத்துக் கொடுத்துக் கையில் ஒன்றுமில்லாமல் இளைத்திருந்த செட்டி பிள்ளையப்பன் சற்று வருத்தத்துடன் சிந்திக்கலானார்.

உலகத்தில் ஒருவனிடம் சென்று எனக்கு இல்லை என்று கேட்பது சிறுமை. கேட்போனுக்கு இல்லை என்று சொல்வதோ சிறுமையிலும் சிறுமை. அதிலும் நம் குலத்தைப் புகழ்ந்து கவி பாட வந்த புலவருக்கு இல்லை என்று சொல்வது நமக்கு தீரா வசையைத் தேடித் தரும். ஆகவே அருகில் உள்ள புலித்தூறிற் புகுந்து அங்கிருக்கும் புலிக்கு உணவாவதே சாலச் சிறந்தது.

 

இப்படி எண்ணிய செட்டி பிள்ளையப்பன் புலி உறையும் இடத்திற்குச் செல்லலானார்.

அப்போது அங்கு கொள்ளையடித்த பொற்குவியல்களை பங்கு போட்டுக் கொண்டிருந்த திருடர்கள் அவரைப் பார்த்து பயந்து அவற்றை அப்படியே விட்டு விட்டு ஓடினர்.

இதனால் மகிழ்ந்த செட்டி பிள்ளையப்பன் அவற்றை எடுத்து வந்து புலவருக்கு உரிய முறையில் பரிசுகளை வழங்கினார்.

 

 

கொங்கு மண்டல சதகம் 99வது பாடல் செட்டி பிள்ளையப்பனைப் போற்றுகிறது.

 

பாடல் வருமாறு:

கவியின் மெலிந்த புகல்கவிக் கீயக் கயிலின்மையால்

புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை

மலிய வெடுத்தப் புலவனுக் கீந்த வடகரையான்

வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே

 

இதன் பொருள் : வறுமையால் தளர்வுற்ற காலத்தில், கூறிய பாட்டைக் கேட்டு அவருக்குப் பொருள் கொடுக்க கையில் ஒன்றும் இல்லாததால், புலி வாழுமிடத்தில் புகவே, அங்கு திருடர்கள் பங்கிட்டுக் கொண்டிருந்த பொற்குவியலை அடைந்து கவி பாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை நாட்டினனான செட்டி பிள்ளான் என்பவனும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே!

 

 

ஒரு சுவையான செய்தி, பாரியூர் ஸ்ரீ அமரவிடங்கப் பெருமானார் சிவாலயத்தில் ஒரு கற்சாசனம் உள்ளது. அதில் செட்டி பிள்ளையப்பன் நில தானம் செய்த செய்தி உள்ளது.

 

“ஸ்வஸ்தி ஸ்ரீ…..வீர வல்லாள தேவர் .. ராஜ்ஜியம் பண்ணியருளா நின்ற   … வத்ஸரத்து ஆவணி மாத முதல் காஞ்சிக் கூவல்நாட்டில் பாரியூர் வெள்ளாளன்களில் செட்டி பிள்ளையப்பனேன் உடையார் அமரவிடங்கப் பெருமாள் திருப்பள்ளிஎழுச்சிக்கு….”

 

இந்த அரிய சம்ப்வத்தை அமரவிடங்கர் குறவஞ்சி என்னும் நூ பாடலாக இப்படித் தருகிறது:

 

 

இட்டமான கவிசொல்லும் பாவலர்க்

கில்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்

துட்ட வன்புலித்தூறிற் புகுந்தநற்

றூயவன் கனவாள குலத்தினன்

செட்டி பிள்ளையப் பன்றினந் தொண்டுசெல்

தேவிமாமலை மாதொரு பங்குள

கட்டு செஞ்சடையமர விடங்கனார்

கதித்துவாழ் பாரியூ ரெங்களூரே

 

தமிழ்ப் புலவர்களை மதித்து வாழ்ந்த நாடு தமிழ் நாடு; அதில் கொங்கு மண்டலத்தின் சிறப்பை இந்தப் பாடல் மூலம் அறிந்து மகிழ்கிறோம்.

 

***

 

ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)


WRITTEN by London Swaminathan 

 

Date: 13 April 2018

 

Time uploaded in London –  11-17 am  (British Summer Time)

 

Post No. 4910

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)

 

ஒரு இயக்கத்திலோ ஒரு நாட்டிலோ தலைவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே தொண்டர்களும் இருப்பர். ‘யதா ராஜா ததா ப்ரஜா’- என்று ஸம்ஸ்க்ருதத்திலும் மொழிவர். ஆகவே பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அடக்கத்தோடு இருக்க வேண்டும். வள்ளுவன் இதை அழகாகச் சொல்கிறான். அடக்கம், பணிவு என்பது மிகவும் போற்றுதற்குரியது. அது செல்வந்தர்களிடத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு என்பான்.

 

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

 

பொருள்

பணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில்  அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைததது போல இருக்கும்.

 

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது  (குறள் 124)

 

எந்த நிலையிலும் மாறுபாடமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.

 

‘அற்பனுக்கு வாழ்வு வந்தால்  அர்த்த ராத்ரியில் குடை பிடிபான்’– என்பர். அப்படி கூத்தாடக் கூடாது. இன்னும் சிலரோ சின்னக் கஷ்டம் வந்தாலும் உலகையே பறிகொடுத்தது போல வாடி விடுவர். தோல்வி என்பது – வெற்றியின் முதற்படி என்பதை அவர்கள் உணரார்.

 

ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது என்பதை அவர்கள் அறியார்.

மாபெரும்  பெரிய கோவிலை தஞ்சையில் எழுப்பி அதில் பெருவுடையார் என்ற பிரம்மாண்டமான பிருஹத் ஈஸ்வரர் லிங்கத்தை வைத்த சோழ மன்னன் ராஜ ராஜன், அடக்கத்தின் சின்னம்! பணிவுக்கு எடுத்துக் காட்டு.

 

தஞ்சையில் பிரம்மாண்டமான கோவில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய சிற்பியானவன்,அடைப்பைக்காரன் அருகில் நிற்க, நுணுக்கமான கலை வேலைப்பாடுகளில் ஈடு பட்டிருந்தான். அவன் வெற்றிலை போட்டுத் துப்பும் எச்சிலை அதற்கான வட்டிலில் ஏந்துவது, அவனுக்கு வேண்டிய எடுபிடி வேலைகளைச் செய்வது அடைப்பைக்காரன் பணி.

 

கோவில் பணிகள் செவ்வனே நடக்கின்றனவா என்று ஆர்வத்தோடு பார்த்து வந்தான் ராஜ ராஜ சோழன். பெருந்தச்சனோ, மாமன்னனைக் கவனிக்கவில்லை. அவன் தனது செதுக்கல் வேலைகளில் முனைப்பாக இருந்தான். அந்த நேரத்தில் அ டைப்பைக்காரன் ஒரு சின்ன வேலைக்காக வெளியே போயிருந்தான். மாமன்னன் அவன் அருகில் வந்து அந்தக்  கலை நுணுக்கப் பணிகளை உன்னிப்பாக கவனித்தான். அப்பொழுது அவன் எச்சிலைத் துப்ப அடைப்பைக்கரனை அழைக்க, அவனோ அங்கு இல்லை. மாமன்னன் அந்த எச்சில் துப்பும் தட்டை ஏந்தி துப்புதலை வாங்கிக் கொண்டான். அவன் தன்னிச்சையாக திரும்பிப் பார்த்தபொழுதே மாமன்னன்  —– இந்து மஹா சமுத்திரத் தீவுகளைக் கடற்படை கொண்டு தமிழ் பூமியாக மாற்றிய மன்னன் —- அருகில் நிற்பது  புரிந்தது. காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அலறியிருப்பான்; மன்னன், அவனை ஆஸ்வாசப்படுத்தி இருப்பான் என்பதெல்லாம் எழுதாமலே விளங்கும்.

இனியவை நாற்பது

 

பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்னினிது – என்று இனியவை நாற்பது செப்பும். அதாவது உண்மையைக் கடைப் பிடித்து அடக்கத்துடன் வாழ்வது நல்லது.

 

கல்வியுடைமை பொருளுடைமை யென்றிரண்டு

செல்வமுஞ் செல்வமெனப்படும் – இல்லார்

குறையிரந்து தம்முன்னர் நிற்போற்  றாமுந்

தலைவணங்கித் தாழாப்பெறின்

 

–நீதிநெறி விளக்கம்

 

பொருள்

 

 

கல்வியும் செல்வமும் இல்லாதோர், அவை இரண்டையும் வேண்டி ஒருவர் முன்னால் எப்படி நிற்பார்களோ அது போல தாமும் தலைவணங்கித் தாழப் பெறின்/ நின்றால்,  அவன் பெற்ற கல்வியையும், செல்வத்தையும் உண்மையான செல்வங்களாகப் பெரியோர் கருதுவர்.

 

சுருக்கமாகச் சொல்லப்போனால், பணிவு என்பதே பெரிய செல்வம். ஏனைய எல்லாம் அதற்குப் பக்க பலமாக இருப்பதே சிறப்பு.

எனது பழைய கட்டுரைகளில் பல கதைகளும் உண்டு. கீழே காண்க

 

கம்பன் பணிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/கம்பன்-பணிவு/

1 Jun 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact swami_48@yahoo.com. kalidasa_20405. Poet Kalidasa. அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது.

பணிவு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/பணிவு/

 

T

10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …

அகந்தை | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அகந்தை/

பணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே! அவமானப்பட்டு அழிவார்கள் யாவர்? அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர்! எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர்? எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46). சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்: கோ வர்த்ததே விநீத: கோ வா …

அடங்காத பெண் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/அடங்காத-பெண்/

10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …

 

5 லகாரம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/5-லகாரம்/ – Translate this page

விநய/ பணிவு. வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச. வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம். வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்! Leave a comment. by Tamil and Vedas on July 23, 2015 • Permalink. Posted in தமிழ் பண்பாடு, Quotations, Women. Tagged 5 லகாரம், 5 வகாரம், கல்யாணப் பெண், நல்ல மனைவி, மாப்பிள்ளை.

ஜானவி | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ஜானவி/ –

4) வித்யா – கல்வி அறிவு 5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன. வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II. வஸ்த்ரேண – ஆடையும்

சிலை எதற்கு | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/சிலை-எதற்கு/

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Modesty Anecdotes (Translated by London swaminathan). 0_photographers_alinari_rome. Rome Art Gallery. பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் …

 

‘வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை …

https://tamilandvedas.com/…/வணக்கம்-வளர்ச்சி-தர…

28 Feb 2014 – எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து –125. பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு …

 

–SUBHAM–

பாரதி போற்றி ஆயிரம் – 76 & 77 (Post No.4909)

Bharatiyar- Tamil drama acted by Ramanan; Directed by Raman; pictures posted by Manion CGS

Compiled by S NAGARAJAN

 

Date: 13 April 2018

 

Time uploaded in London –  7-17 AM  (British Summer Time)

 

Post No. 4909

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 76

  பாடல்கள் 632 முதல் 641

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு எட்டாம் அத்தியாயமான பாப்பா பார்வையில் பாரதி தொடர்கிறது.

எட்டாம் அத்தியாயம்: பாப்பா பார்வையில் பாரதி

19 முதல் 28 வரை உள்ள பாடல்கள்

 

பாப்பா தனக்கொரு பாட்டு நீ

     பாடிக் கொடுத்ததைக் கேட்டு

பாப்பாக்கள் அத்தனை பேரும் இங்கு

     பயனடை தோம்வந்து பாரும்

 

சிட்டுக் குருவியைப் போல இங்கு

     சிறுவர்கள் திரிந்திட வேண்டும்

வட்டமிடும் பறவை கண்டு மனம்

    மகிழ வேண்டுமெனச் சொன்னாய்

 

காக்கைக் கும்கருணை காட்டு நீ

     கோழியு டன்விளை யாடு

ஊக்க முளகுதிரை மாடு ஆடு

    உறுதியாய் எம்தோழர் என்றாய்

 

பிள்ளையாய் இருந்திடும்போதே நாங்கள்

     பிறவுயிரை நேசிக்கக் கற்று

வள்ளலார் ஜீவகா ருண்யம் எங்கள்

     வாழ்வோடு ஒன்றவழி சொன்னாய்

 

நேரம் பிரித்துவொரு நாளில் எங்கள்

    நிகழ்வுகள் வகுத்துநீ தந்தாய்

சாரமுள பட்டியல் அன்றோ? – அதில்

     தேர்ந்திங்கு நடந்திடல் என்றோ?

 

தீமையை எதிர்கொள்ள வேண்டும் எனும்

     தீரத்தை எமக்கு நீ தந்தாய்

ஊமைபோல் இருந்திடு வோமோ? – வரும்

     உலுத்தரை விட்டுவைப் போமோ?

 

துன்பத்தில் சோர்ந்திடு வோமோ வெறும்

    சோம்பலில் மூழ்கிவிடு வோமோ?

அன்பினைத் துறந்திடு வோமோ? – தெய்வ

     அருளினை மறந்திடு வோமோ?

 

தமிழ்தனை வணங்கிட வேண்டும் நாம்

     சார்ந்த பாரதம் காக்க வேண்டும்

அமிழ்தில் இனியதிந்த தேசம் எனும்உன்

    அரியவா சகம்போற்ற வேண்டும்

 

அன்று நீ சொன்னவை யாவும் முன்பு

    அந்தபாப் பாக்கள் கேட் டிருந்தால்

இன்றுபெரி யவரான பின்னால் இங்கு

     இத்தகைய தீமையிருந் திராது

 

இந்நாளில் நாங்களுன் பாட்டைக் கேட்டு

    எம்வாழ்வில் அதுபோல் நடப்போம்

எந்நாளும் எம்தலை முறைகள் அதனை

    ஏற்றுனைப் போற்றநீ வாழ்க!

பாப்பா பார்வையில் பாரதி முற்றும்

xxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 77

  பாடல்கள் 642 முதல் 653

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஒன்பதாம் அத்தியாயமான சித்தர் பார்வையில் பாரதி இடம்பெறுகிறது.

ஒன்பதாம் அத்தியாயம்: சித்தர் பார்வையில் பாரதி

1 முதல் 12 வரை உள்ள பாடல்கள்

 

பதினெட்டு சித்தர்கள் இந்த நாட்டில்

     பாங்குடனே வாழ்ந்ததாய்ச் சொல்வா ருண்டு

அதிலென்ன கணக்கென்று அதற்கும் மேலே

     அங்குமிங்கு மாய் சித்தர் பலபே ருண்டு

அதிசயங்கள் எனவுலகம் வியந்து போற்றும்

      அட்டமா சித்திகளும் பெற்றா ருண்டு

அதிலொருவன் எனயானும் இங்கு வந்தேன்

     அருட்கவி பாரதியே உன்னைக் கண்டேன்

 

அத்வைத நிலைகண்ட நீயும் அந்நாள்

     யானுமொரு சித்தனென சொல்லிக் கொண்டு

எத்தனைபேர் அன்றதனை ஏற்றுக் கொண்டார்

    ஏற்கனவே பித்தனென்றார் இதையேற் பாரா?

உத்தமனே உனக்குள்ளே இருந்த ஆன்ம

     ஒளிச்சுடரை உணர்ந்தவர்கள் சிலரே யன்றோ?

இத்தரையில் குருவெனவே உனக்குற் றோரை

     யாவருக்கும் அருள்கிடைக்க உரைத்தா யன்றோ?

 

தத்துவத்தை யாவருக்கும் உரைப்ப தற்கு

     தகுதிமிக்க ஞானியர்கள் பலபேர் வந்தார்

எத்தனைநாள் விரிவாக உரைத்த போதும்

    ஏதுமே புரியவில்லை என்றார் பல்லோர்

அத்தனென உனக்கமைந்த குள்ளச் சாமி

    அரியநற் தத்துவத்தை உரைக்கக் கேட்டு

சத்தான அதன்பொருளை யாவ ருக்கும்

     சாற்றினாய் உயர்ராமா நுசனைப் போல

 

குட்டிச்சு வர்தன்னை கிணற்றில் காட்டி

    குழப்புதற்குப் பரிதியையும் காட்டி நின்றால்

வெட்டித்த னமென்றதை நினைத்தி ருப்பார்

    வித்தகனே நீயன்றோ பொருளு ணர்ந்தாய்

சுட்டெரிக்கும் பரிதியது கிணற் றினுள்ளே

    சுடராகத் தெரிதல்போல் நம்முள்ளத்தில்

திட்பமுடன் சிவமென்னும் சுடரைக் கண்டு

    சிந்தனையற் றுச்சுவர்போல் இருப்போம் என்றாய்

 

அன்பினையே சிவமென்றார் திருமூ லர்தாம்

     அதற்கிலக் கணமாம் கோவிந்த சாமி

என்றுமுன் கல்விநலம் சிறப்ப தற்கு

     எந்தையென நீமகிழ வந்த தாலே

துன்பமெலாம் தீர்ந்திட்டாய் ஞானந் தன்னை

     தெளிவுறவே உணர்ந்திட்டாய் பாத்தி ரந்தான்

இன்னருளை ஏற்குமெனில் கொடுப்ப தற்கு

    ஏற்றகுரு தேடிவரல் இயல்பே யன்றோ?

 

குவளைக்கண்ணன் கொணர்ந்த யாழ்ப்பா ணத்தார்

     குருவெனவே அமைந்ததிலே நிறைவு கண்டாய்

இவருந்தன் இல்லத்தில் நுழைந்த தாலே

     ஈடற்ற வீடின்றே உற்றே னென்றாய்

தவறாமல் யாவரையும் உரைத்து நீயும்

    தகுதியுள்ள சீடனென உணர்த்து கின்றாய்

அவரைப்போல் தத்துவத்தில் நிறைவு பெற்று

    அரியதொரு சித்தனென உயர்ந்து நின்றாய்

 

மனத்தினில் புகுந்துள்ள அசுர சக்தி

    மாண்பிழக்கச் செய்துவிடும் மனிதர் தம்மை

சினத்தினை முதலில் நாம் துறந்தால் போதும்

    சீரிய நற்குணங்கள் நமக்குள் மேவும்

தினந்தினம் சினத்தினில் மூழ்கி மூழ்கி

    திசைமாறிச் சென்றோர்க்கு உய்வே யில்லை

அனலாக நமைஎரிக்கும் அதனை விட்டால்

     ஆன்மநெறி வாய்க்குமென்றார் உனைப்போ லுண்டோ?

 

சித்தத்தில் பற்றனைத்தும் நீங்கி னோனே

    சித்தனாவான் ஆனால்நீ புதுமைச் சித்தன்

எத்தினமும் மாறாத காதல் மாண்பை

    இங்கும்நீ உரைத்ததினால் வியந்தார் பல்லோர்

முத்திரையாய் ஆடவர்க்கும் கற்புண் டென்றே

     மொழிந்ததினால் திகைத்திட்டார் ஆண்க ளெல்லாம்

வித்தகனே உனைப்போல வாழ்வோ டொன்றி

    வியன்ஞானம் உரைத்தவர்தாம் எவரும் உண்டோ?

 

ஓரட்சரம் ஈரட்சரம் ஐந்து எட்டு

     ஒலிக்கின்ற நவாட்சரம் என்றே நம்முள்

யாரட்சரம் பெரிதெனவே போட்டி யிட்டு

     எத்தெய்வத் தையுமிகழல் முறையோ நன்றோ

பாரதனில் பலபெயரில் வழங்கிட் டாலும்

    பாங்குடைய தெய்வமெலாம் ஒன்றே யன்றே

தாரகமாய் சாமிநீ என்று ரைக்கும்

     தத்வமஸி என்பதனை ஏற்றா யன்றோ?

 

கனகலிங்கம் தனக்குநீயும் போட்ட பூணூல்

    காலமெலாம் சமுதாயம் சொல்லி வந்த

அனலாக சுட்டெரித்த சாதித் தீயை

    அணைப்பதற்கு வார்த்திட்ட மழைநீரன்றோ?

இனமென்றும் மதமென்றும் சாதி யென்றும்

    ஏனிங்கு மானிடர்கள் பிரிந்து நின்றார்

அனவருளும் இறைவனுளான் அறீவீ ரென்ற

     அத்வைத நிலையதனில் கண்டா யன்றோ?

 

பட்டினால் உத்தரியம் தந்தே உன்னைப்

    பான்மையுடன் அணிகயென உரைத்த போது

மட்டற்ற பட்டுப்பூச் சிகளைக் கொன்றே

     வடித்திட்ட உடையன்றோ பட்டின் ஆடை

இட்டமுடன் இதையணிந்தால் அவைதாம் வந்தே

     எமதுயிரை உடுத்தனையோ என்றே கேட்கும்

தொட்டாலே பாவமென்று உரைத்தா யன்றோ?

     தெய்வநிலை அதிலுன்னுள் உணர்ந்தா ரன்றோ?

 

சித்தரென்போர் தமக்கெங்கும் சமாதி யுண்டு

    திருக்கோயில் அவர்க்கென்றே அமைவ துண்டு

இத்தரையில் நான்சாகா திருப்பே னென்றே

     இயம்பியவன் பூதவுடல் தனக்கு இங்கே

எத்துமடை யாளமில்லை என்ற போதும்

    ஏற்றதத் துவமோடு தமிழ றிந்தோர்

சித்தமெலாம் நீயிருக்கும் கோயி லாக

    சித்தனென நிலைபெற்றாய் என்றும் வாழ்க!

 

 

சித்தர் பார்வையில் பாரதி முற்றும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

***

மாணவர்களை அடிக்காதே, திட்டாதே- மநு நீதி நூல் (Post No.4908)

மாணவர்களை அடிக்காதே, திட்டாதே மநு நீதி நூல் (Post No.4908)

 

 WRITTEN by London Swaminathan 

 

Date: 12 April 2018

 

Time uploaded in London –  21-55 (British Summer Time)

 

Post No. 4908

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

மநு நீதி நூல்- Part 15 (Post No 4908)

Second Chapter 2-148 continued

தாய் தந்தையரின் புணர்ச்சியால் பெறும் குழந்தை மற்ற மிருகங்கள் ஈனும் குட்டியைப் போல வெறும் விலங்குத் தன்மையுடையதுதான் என்று சென்ற கட்டுரையில் முடித்தோம்.

 

2-148 பிரம்ம உபதேசத்தால் (பூணூல் போட்ட பின்னர்) உண்டாகும் இரண்டாவது பிறப்பே அழிவற்ற, மூப்பற்ற தன்மையையும் புண்ணியலோக வாழ்வையும் தரும்

2-149 சாத்திர விஷயத்தில் உதவுபவனை குரு என்று கொள்ள வேண்டும்

2-150 வேதங்களை அறிந்தவன், தனக்கு அறநெறிகளை கற்றுத் தருபவன் வயதில் சிறியவனாலும் அவன் தந்தைக்குச் சமமானவன் ஆவான்.

2-151 அங்கீரஸ் முனிவரின் மகன் கவி, பெரிய அறிஞன். அவன் தனது தந்தை போன்ற வயதில் மூத்தவர்களுக்கு, பிதுர்களுக்கு வேதம் கற்பித்தான். எல்லோரையும் ‘’எனது அருமைப் பிள்ளைகளே’’ என்று சிறுவர்களை அழைப்பது போல அழைத்ததே இதற்குச் சான்று.

உடனே பிதுர்கள் கோபம் கொண்டு, தேவ சபையில் புகார் கொடுத்தார்கள்; அவர்கள், அங்கீரஸ் சொன்னதே சரியென்று தீர்ப்புக் கூறினார்கள்.

 

2-153 அறிவுடையவன் தந்தை போன்றவன்; அறிவில்லாதவன் பிள்ளை போன்றவன் இதையே சாத்திரம் சொல்லுகிறது. மேலோர் கருத்தும் இதுதான்

 

2-154 வயது, நரை, செல்வம், உறவு முறை ஆகியவற்றால் மட்டும் ஒருவன் பெரியவன் ஆகிவிட மாட்டான். யாருக்கு அதிகம் அறிவு இருக்கிறதோ அவனே மேலோன் என்று முனிவர்கள் கூறுவர்.

 

2-155 அந்தணர்கள் அறிவினாலும், அரசர்கள் வீரத்தாலும், வணிகர்கள் செல்வ வளத்தாலும், நாலாம் வருணத்தார் வயதினாலும் மேன்மை அடைகிறார்கள்

2-156 நரைதிரையால் (வயதால்) மூத்தவனைவிட வேதம் அறிந்தவன் வயதினால் சிறியவனாக இருந்தாலும், அவனே மூத்தவன் என்று தேவர்கள் கூறுவர்.

2-157 மர யானை பொம்மை , தோலினால் ஆன மிருகத்தின் பொம்மை, வேதம் கற்காத அந்தணன் ஆகிய மூன்றும் ஒன்றே- பயனற்றவர்கள் ஆவர்.

 

2-158 ஒரு பெண்ணுடன் இருக்கும் அலியும், பசுவினிடத்தில் பசுவும், அறிவில்லாதவனுக்குக் கொடுத்த தானமும் போன்று வேதம் அறியாத பிராமணனும் பயனற்றவனே

புகழ்ந்தால் விஷம்; இகழ்ந்தால் அமிர்தம் 

2-159 வேதம் முதலியவற்றைக் கற்பிக்கும் ஆசிரியன், மாணவர்களை ரொம்பவும் பிரம்புத் தடியால் அடிக்கக்கூடாது; சுடு சொற்களைப் பயன்படுத்தி திட்டவும் கூடாது. தாயார் போல அன்பாகப் போதிக்க வேண்டும்.

 

2-160 மனம் மொழிகளால் பொய் சொல்லாதவன், விருப்பு, வெறுப்பு இல்லாதவன், தூய்மையுடன் பணிவாக இருப்பவன், வேதத்தில் சொன்ன மேன்மைகளை அடைவான்.

தான் துயர் அடைந்தபோதும் மற்றவர்களை நோக வைக்கக்கூடாது. எண்ணத்தாலும் செயலாலும் வஞ்சிக்கலாகாது; சுடு சொற்களைச் சொன்னால் சுவர்க்கத்துக்குப் போக முடியாது.

 

யாரேனும் புகழ்ந்து கூறினால் அதை அந்தணர்கள் விஷம் போலவும் யாராவது குறைகூறினால் அதை அமிர்தம் போலவும் கொள்ளவேண்டும்.

 

2-163 எதனாலும் பாதிக்கப்படாதவன் நன்கு தூங்கி எழுவான்; பாதிப்பின்றி நடமாடுவான்; குறைகூறுவோன் தானாக அழிவான்

 

2-164 இதுவரை நான் சொன்ன விஷயங்களைப் பின்பற்றி, சம்ஸ்காரங்களால் தூய்மை அடைந்தோன், வேதத்தைக் கற்க வேண்டும்.

2-165 உரிய நோன்புகளையும், சடங்குகளையும் செய்து வேத வேதாந்தங்களைக் கற்க வேண்டும்

2-166 தவம் செய்ய விரும்புவன் வேத அத்தியயனம் செய்தாலேயே போதும்; அதைவிட சிறந்த தவம் இல்லை

2-167 தனது சக்திக்கு ஏற்ற வாறு வேத அத்தியனம் செய்யும் இருபிறப்பாளன் தலை முதல் பாதம் வரை தவம் செய்தவன் ஆவான்

2-168 வேதத்தைவிட்டு வேறு தொழில் செய்யும் அந்தணன், அவனது வாழ்நாளிலேயே குலத்தோடு நாலாம் வர்ணத்தான் ஆகிவிடுவான்.

2-169 இரு பிறப்பாளனுக்கு முதல் பிறப்பு தாயாலும், இரண்டாம் பிறப்பு உபநயனம் செய்து கொள்வதாலும் மூன்றாம் பிறப்பு வேள்வி செய்வதாலும் உண்டாகிறது என்று வேதம் கூறுகிறது.

 

2-170 இரண்டாவது பிறப்பு வேதத்துக்காக எடுக்கும் பிறப்பு. அதில் சாவித்ரி (காயத்ரி மந்திரம்) அவனது தாய்; அதை ஓதுவிப்பவர் அவனது தந்தை ஆகிவிடுகிறார்.

 

2-171 வேதம் ஓதுவிக்கும் ஆச்சார்யனும் தந்தையே; உபநயனம் செய்த பின்னர் வேதம் ஓதாமல் இருப்பவன் எந்த கிரியை செய்யவு    ம் அருகதை அற்றவன்

 

2-172 உபநயனம் செய்யும் முன் அவனும் நாலாம் வருணத்தவனே. ஆயினும் தாய் தந்தையரை  இழக்க நேரிட்டால் அப்போது மட்டும் மந்திரம் ஓதலாம்.

2-173 உபநயனம் ஆன பின்னரே வேள்வி, வேத அத்தியனம் செய்யலாம்.

 

2-174 முன்பு சொன்னபடி அவரவர்களுக்கு உரிய உரி, தண்டம், பூணூல், இடுப்பு வளையம், உடை ஆகியவற்றை, ஆகியவற் றை நோன்புகளின் போது அணிந்திருக்க வேண்டும்.

 

எனது கருத்து

அந்தணருக்கு மட்டும் இன்றி ஏனைய மூன்று வருணதாருக்கும் பொருந்தும் கருத்துகளும் உள. வள்ளுவன் சொன்னது போல இனிய உளவாக இன்னாது கூறாதே; பையன்களை அடிக்காதே; திட்டாதே; இவை எல்லாம் இக்காலத்துக்கும், எக்காலத்துகும் எல்லா வருண ஆசிரியர்களுக்கும் பொருந்தும்

 

போற்றுதல் என்பது விஷம் போல; தூற்றுதல் என்பது தேன் போல- என்பது நல்ல பொன்மொழி- எல்லோரும் பின்பற்றலாம்.

 

வேதம் ஓதாத அந்தணர்கள், நோன்பு, சம்ஸ்காரம், ஒழுக்கம் இல்லாதவர் அந்தணர்களே அல்ல.

 

பிராமணர்களுக்கு ஞானத்தாலும், அரசர்களுக்கு வீரத்தாலும், வைஸ்யர்களுக்கு தன-தான்யத்தாலும், ஏனைய வருணத்தாருக்கு வயதாலும் மதிப்பு வருகிறது என்பதும் நல்ல பொன்மொழி.

 

வேதம் கற்பிக்கும் இடத்தில் வயதில் சிறிய ஆசிரியர் ஆனாலும் அவர் தந்தைக்கு ஒப்பானவர். இதில் அங்கீரஸ் மகன் மீது கொண்டுவந்த புகார் மனு, இந்திர லோக சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி சுவையான செய்தி.

 

இன்னும் இரண்டாயிரம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. பையப் பைய பார்ப்போம்.

–SUBAHAM–

RIG VEDA AND TAMIL VEDA ON GAMBLING (Post No.4907)

RIG VEDA AND TAMIL VEDA ON GAMBLING (Post No.4907)

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 12 April 2018

 

Time uploaded in London –  10-33 am  (British Summer Time)

 

Post No. 4907

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

Dice is a Vice; Be Wise and slip out Nicely! –The Rig Veda (10-34)

 

It is very interesting to see both Rig Veda, the oldest book in the world, and the Tamil Veda Tirukkural, the greatest Tamil book, oppose gambling. Both point out the evils of gambling. This message is very relevant even today. Unlike the olden days now Governments themselves are encouraging gambling by conducting lotteries in almost all the countries. Only when poor people lost everything and started stealing and robbing, they put some limits for spending or gambling in casinos. All the people knew this is only an eyewash. Governments get more funds from horse races, betting shops and lotteries. In London and other western cities every bazar street has at least three to four Betting shops. It makes people to think that they can make good money without working. Even Manu, the oldest law maker in the world lists gambling as an evil.

 

The longest epic in the world with two million lines, The Mahabharata, is an epic based on the evils of gambling. In those days, even kings gambled their countries.

 

Let us compare the famous Gambling Hymn in the Rig Veda and the chapter on gambling in the Tamil Veda Tirukkural written by Tiru Valluvar.

The author of the Rig Vedic gambling hymn (10-34) is

a seer called Kavasa Ailushan.

Picture posted by Lalgudi Veda

 

It is in the last mandala of the RV (10-34). This describes the lament of a gambler and the advice he gives to the world. A very interesting poem!

 

Dice is a Vice; Be wise and slip out Nicely!

The poem has 14 stanzas or mantras; the summary of the poem is: –

Gambling gives pleasure like the Soma drink from Mujawan mountains ( no one is sure about its location; only guess work).

 

My wife was very nice to me and my friends. She never got angry; but I drove her out after losing in the gambling (What a shame!)

 

Wives don’t like it; mother and mother in law hate it. They think that the person is going wrong.

My father, mother, wife and sons say- We do not know this fellow, take him out! (like a drunkard on the roadside)

Every time I go to the casino; I think I am going to win! But the dice favours only my opponent (very much disappointing)

 

The dice go up and down and dance. They are like the coal that burns my heart.

The gambler goes to others’ houses in the night ( to steal or borrow money)

The gambler feels remorseful when he sees the status of his wife and wives of others. He started the day with good hopes and finished it miserably.

Now I open both my palms to show I have nothing on me now. (I am bankrupt)

Good Advice!

Do not play with the dice.

Better till your lands and be content (with what you harvest there)

Only when you feel content, thinking that is plenty, you will feel happy and regain your wife. This is God’s advice. Savita Devi told me this!

(To the dice coins, the gambler say)–

Don’t be angry with me; be my friend. Do not attack me. Let your anger fall on the misers. Go to my enemy and let him fall in your trap.

 

Family might have enjoyed the winning money; but they are not ready to share the sin.

The game of the dice was played in public places such as halls (compare it with modern casinos)

The sound of the rolling dice is luring; I vow not to repeat the mistake; but the sound of the rolling dice and friends pull me towards it. I run to it like a woman runs to the meeting place to see her lover.

After losing I look like an old horse ready to be sold (unwanted stuff).

Mysterious Number 53

There is one stanza which baffles every translator.

The group of the avowed gamblers plays the game, divided into three five (tri pancha in Sanskrit); or three times five or in a group of fifty three. – Sayana takes it as 53 coins in the gambling; Ludwik says 15;it shows Vedic language is very difficult to understand. Though we have detailed report about Dice Games in Nala Charita and Mahabharata, still we could not solve this mysterious Tri pancha!!!)

In the same way, ‘To the great captain of your mighty army’ is translated as the big number in Dice by some and  as Kali, the losing throw by others. Vedic language is several thousand years old; no one can translate it correctly; Griffith attempted to translate it in English and say that the meaning is obscure, the meaning is uncertain in every other page; Mischief makers like Max Muller say they followed Sayana, but use their own interpretations; Sayana of 13th century himself only guessed the meaning several thousand years after the Vedic seers recited it!

The dice are made with Vibhitaka seeds- no one knew the plant!

 

TIRUKKURAL

Now let us compare it with the Tamil Veda Tirukkural:

Tiru Valluvar described the evils of gambling in ten couplets ( Chapter 94; from 931 to 940)

 

931.Do not take to gambling even if you can win.

What can the fish gain by swallowing the baited hook?

  1. To win once, the gambler loses a hundred to foes. What good can gamblers gain in life? Nothing but loss.

933.Were a man to speak incessantly of that which he gains by rolling dice, the wealth would leave him and pass on to others.

934.Gambling increases miseries and ruins one’s fame. There is nothing that reduces one to poverty like that.

935.Many who took pleasure in gambling and gambling booths, proud of their skill in dice have been ruined.

 

(like the Rig Vedic seer, Tiru Valluvar also talks about casinos/gambling booths. Like Rig Veda, we see the miserable status of the gambler here, loosing fame and standing like on old unwanted horses, ready to be sold).

938.Gambling ruins a man’s fortune, makes him resort to falsehood.

This can be compared with the night visit of the gambler in the Veda (for stealing or borrowing).

 

  1. The five things

clothing

wealth

food

fame and

learning/education

avoid a person who takes to gambling

 

  1. Passion for gambling grows with every loss. It is craving for life which grows through all suffering.

This can be compared to a woman running to see her lover kin the Rig Veda. The more she is separated the more she longs to see him. A person who is sick wants to live longer.

In the Kural couplet 936 , Tiruvalluvar refers to Hindu goddess of Misfortune Muudevi (Mukati in Tamil). He says gambling is the ogress misfortune.

Manu also refers to the evils of gambling in at least 20 couplets.

–Subham–

 

 

மதுவினால் வரும் கேடு :திடுக்கிடும் தகவல்! (Post No.4906)

Written by S NAGARAJAN

 

Date: 12 April 2018

 

Time uploaded in London –  6-59 AM  (British Summer Time)

 

Post No. 4906

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

 

 

 

மதுவினால் வரும் கேடு : புதிய ஆய்வு தரும் திடுக்கிடும் தகவல்!

 

ச.நாகராஜன்

 

மதுவினால் வரும் கேடுகள் பற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. திருக்குறள் சொல்லாத உண்மையா?

இருந்தாலும் கூட தமிழக அரசு உள்ளிட்ட பல அரசுகள் அதைத் தடை செய்யவில்லை.

 

இப்போது பிரிட்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் Medical Research Council of Molecular Biology பிரிவு நடத்திய ஆய்வு பல திடுக்கிடும் தகவல்களைத் தருகிறது.

 

மது அருந்துவது டி என் ஏ -ஐ சேதப்படுத்துகிறதாம்! முதன் முறையாக இந்த உண்மை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஆகவே விஞ்ஞானிகள் மது அருந்துவோரை அவர்கள் குடிக்கும் அளவை உடனடியாகக் குறைக்குமாறு அறிவுறுத்துகின்றனர்.

முற்றிலுமாக நிறுத்தினால் பிழைத்தார்கள்!

 

பிரிட்டனில் வருடா வருடம் 12000 பேர்கள் கான்ஸர் நோயினால் பாதிக்கப்படுகின்றனர் – மது அருந்துவதால்!

 

பிரிட்டனின் ஆய்வு, மது அருந்துவதால் அது உடலில் Acetaldehyde

என்ற கெமிக்கலை உருவாக்கி DNA -ஐ சேதப்படுத்துவதை உறுதி செய்கிறது.

No Liquor Shops near Schools, please!

 

உடலில் ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள் ஆக்ஸிஜனை ஏந்திச் சென்று தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது. இந்த ரத்த ஸ்டெம் செல்களுக்கு மது சேதம் ஏற்படுத்துகிறது.

 

புதிதாக உருவாகிய கெமிக்கல் டி என் ஏ -ஐ மாற்றி மரபணு கோடை (Genetic Code) மாற்றி விடுகிறதாம்.

 

இந்தத் தகவல் நேச்சர் (Nature) பத்திரிகையில் “மிக முக்கியம்” என்று குறிப்பிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆகவே மதுவைத் தவிருங்கள் என்று அறிவுறுத்துகிறது கட்டுரை! கேன்ஸர் ஆராய்ச்சியில் தலை சிறந்து விளங்கும் நிபுணரான Prof Linda Bauld , “இந்த அரிய ஆராய்ச்சி, செல்கள் சேதமாகும் விஷயத்தை விளக்குகிறது” என்கிறார். மது ஏழு விதமான கேன்ஸருடன் தொடர்பு கொண்டுள்ளது.

 

Liver

Breast

Bowel

Upper Throat

Mouth

Oesophagal

Larynx

 

ஆகிய இடங்களில் ஏற்படும் கேன்ஸருக்கும் மதுவிற்கும் தொடர்பு உண்டு.

 

எப்படி மது உடலைப் பாதிக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் நீர்த்த மதுவை எலிகளுக்குக் கொடுத்தனர்.

பிறகு அவற்றின் டி என் ஏ-ஐ சோதனை செய்தனர்.

ஜெனிடிக் ப்ரேக் ஏற்பட்டு, குரோமோசோம்கள் மாற்றப்பட்டு டி என் ஏ ப்ளூபிரிண்ட் மாறப்படுவதை அவர்கள் கண்டனர்.

புரபஸர் Ketan Patel கேன்ஸர் ஆராய்ச்சியில் நிபுணர். அவர் கூறுகிறார்:- “ ஸ்டெம் செல்களில் டி என்ஏ -யின் சேதத்தினால் சில கேன்ஸர்கள் உருவாகின்றன!”

 

இப்படி நாளுக்கு நாள்  மதுவின் தீமை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

illicit liquor bulldozed in Patna,Bihar.

பரிதாபத்திற்குரியவர்கள் தமிழ் நாட்டின் ஏழை எளிய மக்கள்.

திராவிட ஆட்சி வந்தவுடன் அவர்களைக் “குடிக்கப் பழக்கினார்கள்”.

 

அவர்கள் புத்தியை மழுங்க அடித்தார்கள்.

அவர்களுக்கு கேன்ஸர் உள்ளிட்ட பல வியாதிகளை உண்டாக்கினார்கள்.

 

பல லட்சம் குடும்பங்கள் பாழாயின; பாழாகிக் கொண்டிருக்கின்றன!

 

இறைவன் தான் தமிழ்நாட்டின் எளிய “குடி மக்களைக்” காக்க வேண்டும்.

 

அனைவரும் வேண்டுவோமாக!

***