WRITTEN by London Swaminathan
Date: 13 April 2018
Time uploaded in London – 11-17 am (British Summer Time)
Post No. 4910
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
ராஜ ராஜ சோழன் கதை- எல்லார்க்கும் நன்றாம் பணிதல் (Post No. 4910)
ஒரு இயக்கத்திலோ ஒரு நாட்டிலோ தலைவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே தொண்டர்களும் இருப்பர். ‘யதா ராஜா ததா ப்ரஜா’- என்று ஸம்ஸ்க்ருதத்திலும் மொழிவர். ஆகவே பெரிய பதவிகளில் இருப்பவர்கள் அடக்கத்தோடு இருக்க வேண்டும். வள்ளுவன் இதை அழகாகச் சொல்கிறான். அடக்கம், பணிவு என்பது மிகவும் போற்றுதற்குரியது. அது செல்வந்தர்களிடத்தில் இருந்தால் இன்னும் சிறப்பு என்பான்.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)
பொருள்
பணிவு- அடக்கம் என்பது எல்லோருக்கும் நன்மை தரும்; பணக்காரர்களிடத்தில் அது இருந்தால், அவர்களுக்கு மேலும் செல்வம் கிடைததது போல இருக்கும்.
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது (குறள் 124)
எந்த நிலையிலும் மாறுபாடமல் இருப்பவனின் பணிவு, மலையை விடப் பெரியது, உயர்வானது.
‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்ரியில் குடை பிடிபான்’– என்பர். அப்படி கூத்தாடக் கூடாது. இன்னும் சிலரோ சின்னக் கஷ்டம் வந்தாலும் உலகையே பறிகொடுத்தது போல வாடி விடுவர். தோல்வி என்பது – வெற்றியின் முதற்படி என்பதை அவர்கள் உணரார்.
ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடம் கற்பிக்கிறது என்பதை அவர்கள் அறியார்.
மாபெரும் பெரிய கோவிலை தஞ்சையில் எழுப்பி அதில் பெருவுடையார் என்ற பிரம்மாண்டமான பிருஹத் ஈஸ்வரர் லிங்கத்தை வைத்த சோழ மன்னன் ராஜ ராஜன், அடக்கத்தின் சின்னம்! பணிவுக்கு எடுத்துக் காட்டு.
தஞ்சையில் பிரம்மாண்டமான கோவில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. பெரிய சிற்பியானவன்,அடைப்பைக்காரன் அருகில் நிற்க, நுணுக்கமான கலை வேலைப்பாடுகளில் ஈடு பட்டிருந்தான். அவன் வெற்றிலை போட்டுத் துப்பும் எச்சிலை அதற்கான வட்டிலில் ஏந்துவது, அவனுக்கு வேண்டிய எடுபிடி வேலைகளைச் செய்வது அடைப்பைக்காரன் பணி.
கோவில் பணிகள் செவ்வனே நடக்கின்றனவா என்று ஆர்வத்தோடு பார்த்து வந்தான் ராஜ ராஜ சோழன். பெருந்தச்சனோ, மாமன்னனைக் கவனிக்கவில்லை. அவன் தனது செதுக்கல் வேலைகளில் முனைப்பாக இருந்தான். அந்த நேரத்தில் அ டைப்பைக்காரன் ஒரு சின்ன வேலைக்காக வெளியே போயிருந்தான். மாமன்னன் அவன் அருகில் வந்து அந்தக் கலை நுணுக்கப் பணிகளை உன்னிப்பாக கவனித்தான். அப்பொழுது அவன் எச்சிலைத் துப்ப அடைப்பைக்கரனை அழைக்க, அவனோ அங்கு இல்லை. மாமன்னன் அந்த எச்சில் துப்பும் தட்டை ஏந்தி துப்புதலை வாங்கிக் கொண்டான். அவன் தன்னிச்சையாக திரும்பிப் பார்த்தபொழுதே மாமன்னன் —– இந்து மஹா சமுத்திரத் தீவுகளைக் கடற்படை கொண்டு தமிழ் பூமியாக மாற்றிய மன்னன் —- அருகில் நிற்பது புரிந்தது. காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அலறியிருப்பான்; மன்னன், அவனை ஆஸ்வாசப்படுத்தி இருப்பான் என்பதெல்லாம் எழுதாமலே விளங்கும்.
இனியவை நாற்பது
பட்டாங்கு பேணிப் பணிந்தொழுகல் முன்னினிது – என்று இனியவை நாற்பது செப்பும். அதாவது உண்மையைக் கடைப் பிடித்து அடக்கத்துடன் வாழ்வது நல்லது.
கல்வியுடைமை பொருளுடைமை யென்றிரண்டு
செல்வமுஞ் செல்வமெனப்படும் – இல்லார்
குறையிரந்து தம்முன்னர் நிற்போற் றாமுந்
தலைவணங்கித் தாழாப்பெறின்
–நீதிநெறி விளக்கம்
பொருள்
கல்வியும் செல்வமும் இல்லாதோர், அவை இரண்டையும் வேண்டி ஒருவர் முன்னால் எப்படி நிற்பார்களோ அது போல தாமும் தலைவணங்கித் தாழப் பெறின்/ நின்றால், அவன் பெற்ற கல்வியையும், செல்வத்தையும் உண்மையான செல்வங்களாகப் பெரியோர் கருதுவர்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், பணிவு என்பதே பெரிய செல்வம். ஏனைய எல்லாம் அதற்குப் பக்க பலமாக இருப்பதே சிறப்பு.
எனது பழைய கட்டுரைகளில் பல கதைகளும் உண்டு. கீழே காண்க
கம்பன் பணிவு | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/கம்பன்-பணிவு/
1 Jun 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Contact swami_48@yahoo.com. kalidasa_20405. Poet Kalidasa. அடக்கத்தின் சின்னம் கம்பன்; பணிவின் சின்னம் காளிதாசன். கம்ப ராமாயணத்தின் புகழும், காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று இந்தியா முழுதும் பரவிவிட்டது.
https://tamilandvedas.com/tag/பணிவு/
10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …
https://tamilandvedas.com/tag/அகந்தை/
பணிவு என்ற அணி கொண்ட பண்புடையார் தாமே! அவமானப்பட்டு அழிவார்கள் யாவர்? அகம்பாவத் திமிராலே அழிவாரே ஆவர்! எவராலும் நம்பியே ஏற்கமுடியாதோர்? எந்நாளும் பொய் கூறி ஏய்க்குமவராவார்” (பாடல் 46). சம்ஸ்கிருதத்திலும் இதைக் காண்போம்: கோ வர்த்ததே விநீத: கோ வா …
அடங்காத பெண் | Tamil and Vedas
https://tamilandvedas.com/tag/அடங்காத-பெண்/
10 Apr 2016 – கல்லூரி முதல்வரின் அடக்கம், பணிவு! (Post No.2711). modi humility. Compiled by london swaminathan. Date: 10 April, 2016. Post No. 2711. Time uploaded in London :– 8-47. ( Thanks for the Pictures ). DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). ‘அறிஞர்க்கு அழகு …
https://tamilandvedas.com/tag/5-லகாரம்/ – Translate this page
விநய/ பணிவு. வஸ்த்ரேன வபுஷா வாசா வித்யயா விநயேன ச. வகாரை: பஞ்சாபி: ஹீன நரோநாயாதி கௌரவம். வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க தமிழ்! Leave a comment. by Tamil and Vedas on July 23, 2015 • Permalink. Posted in தமிழ் பண்பாடு, Quotations, Women. Tagged 5 லகாரம், 5 வகாரம், கல்யாணப் பெண், நல்ல மனைவி, மாப்பிள்ளை.
https://tamilandvedas.com/tag/ஜானவி/ –
4) வித்யா – கல்வி அறிவு 5) வினயா – வினயம் அல்லது எளிமை அல்லது பணிவு இந்த ஐந்தும் ஒருவனின் மதிப்பைக் கூட்டுகின்றன. கௌரவம் அடையக் காரணமாக அமைகின்றன. வஸ்த்ரேண வபுஷா வாசா வித்யா வினயேன ச I வகாரை: பஞ்சாபி: ஹீன: நரோ நாயாதி கௌரவம் II. வஸ்த்ரேண – ஆடையும்
https://tamilandvedas.com/tag/சிலை-எதற்கு/
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). Modesty Anecdotes (Translated by London swaminathan). 0_photographers_alinari_rome. Rome Art Gallery. பணிவு, அடக்கம் பற்றி பல மேற்கோள்களும், துணுக்குச் செய்திகளும் உள்ளன. ஏற்கனவே ஆப்ரஹாம் லிங்கன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை எழுதினேன். இதோ மேலும் …
‘வணக்கம் வளர்ச்சி தரும், அகந்தை …
https://tamilandvedas.com/…/வணக்கம்-வளர்ச்சி-தர…
28 Feb 2014 – எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவர் உள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து –125. பொருள்: அடக்கம் உடையோர் தேவர். அடங்காதோர் வாழ்வது இருள் சூழ்ந்த நரக வாழ்வு. எல்லோருக்கும் அடக்கம்/ பணிவு தேவை. இது பணக்காரன் இடம் இருந்தால் அவனுக்கு அது மேலும் ஒரு …
–SUBHAM–
You must be logged in to post a comment.