HINDU GODS IN TAMIL BIBLE! (Post No.3069)

brahmin valluvar

Written by London swaminathan

Date: 17th August 2016

Time uploaded in London: 9-16 AM

Post No.3069

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

Tirukkural, the Veda of the Tamils, is a book of great value to the Tamils. Foreign writers who translated it into English and other European languages said it is like the Bible for the Tamils. Though the author TIRU VALLUVAR has written a lot of common things acceptable to all the four oriental religions Hinduism, Buddhism, Jainism and Sikhism, his 1330 couplets mostly reflect Hindu thoughts.

 

Some people tried to show him as a Buddhist or a Jain and those theories were exploded because of his reference to GOD and “the god who lives in the heaven”(Kural/Couplet 50)

More over Tiruvalluvar supports death sentence (550) and violence against the misers (1077 and 1078), he was the Chanakya of the Tamil speaking world. So he cannot be a Jain.

 

For the forty or fifty years I have been quoting his couplets on moral themes in my articles and speeches. I used to wonder whether he was a Vaishnavite or a Saivite. My research shows that he was a Vaishnavite because of his references to Vishnu and his incarnation and Goddess Lakshmi in more couplets. Next comes his references to Vedic Gods Inrda and Yama. Of the Vedic Gods, Yama was his favourite. He gets more references than others. Siva was mentioned only indirectly. But his first ten couplets in praise of God, he makes general references to God in form. He refers to the FEET OF GOD in most of the couplets. So out and out he was a Hindu.

valluva-nayanar

He was a master of Sanskrit as well. He used the Sanskrit words Dhanam and Tavam/Tapas in more than one couplet. Above all, he structured his book on the Hindu values: Dharma, Artha, Kama, Moksha. Since the Tamils do not write separately on Moksha, he has included it in the Dharma section.

 

In hundreds of Kurals/couplets, he refers to Vedas and Vedic customs, which I am not using here.

All the books that were published until 75 years ago, described Tiruvalluvar as a poet born to a Brahmin and a low caste woman. Dravidian political parties hid this information in later editions of the book and gave him a new date 31 BCE. Tamil Linguistics show that he lived in 4th or 5th century CE.

 

Let us look at the references to Hindu Gods in Tirukkural, the Tamil Veda:–

 

Trivikrama/Vamana Avatar – Kural Couplet 610

Adi Bhagawan – Kural 1

Amrita -64, 82, 720, 1106

Yama – 269, 326, 765, 1083, 1085

Pitrs/departed souls- 43 (who live in southern direction)

Brahma- 1062

Indra – 25

Krishna/Vishnu -1103 (Lotus Eyed)

Lakshmi (lotus seated)- 179, 519, 617, 920

Alakshmi- 617, 936 (Lakshmi’s sister)

Maya/charmer man- 1258 (may be Krishna of Gopis)

 

Couplet 377 refers to Brahma, as the man who writes fate on every one’s head. But commentators translate the word as GOD.

 

Couplet 580 refers to Siva drinking poison.

“Men of refined courtesy accept even a cup of poison and look cheerfully calm.”

I quoted this in my research article written in 1997 (in London Tamil Magazine Megam) and commented it may be a reference to Socrates or Siva. But Tamil saint Manikka vasakar used this epithet for Lord Siva. So I conclude that it is an indirect reference to Lord Siva drinking poison when the milky ocean was churned to get the Amrita/ambrosia.

Since more remarks point towards a person who worships Vishnu and Lakshmi, I conclude that Tiruvalluvar was a Vishnu Bhakta.

tiruvalluvar-at-soas-university-of-london

The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture. Location: SOAS, University of London.

 

Please read my old articles on Tiru Valluvar and Tirukkural:-

Strange Link between Lord Shiva, Socrates and Thiruvalluvar, posted on 18 September 2011

 

Albert Einstein and Thiruvalluvar, Post No. 749 dated 17th December 2013.

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

 

Who was Tiruvalluvar?, 24-7-2013

 

Tamil Merchant who dumped Gold into Sea, Post No. 1239; Dated 17th August 2014.

 

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன், 5 நவம்பர் 2012

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

 

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

–subham–

 

திருவள்ளுவர் ஐயரா? ஐயங்காரா? (Post No.3068)

 

brahmin valluvar

 

Written by London swaminathan

Date: 17th August 2016

Time uploaded in London: 6-08 AM

Post No.3068

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

திராவிடங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் தமிழ் நாட்டில் வெளியான எல்லாப் புத்தகங்களிலும் வள்ளுவர் ஒரு அரைப் பார்ப்பனர் என்று எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல. தமிழ்நாட்டில் கிடைத்த பழைய வள்ளுவர் சிலை பூணூலுடன் காட்சி தருகிறது. அது மட்டுமல்ல. அந்தப் பூணூல் தெரியக்கூ டாது என்பதற்காக அதே வாக்கில் ஒரு மேல் துண்டு போட்டுச் சுற்றிக் காட்டப்பட்டுள்ளது.

நிற்க.

 

திருவள்ளுவர் பல இந்து தெய்வங்களைக் குறிப்பிடுகிறார். அவர் சைவரா (ஐயர்) அல்லது வைஷ்ணவரா (ஐயங்கார்) என்று ஒரு பட்டி மன்றம் நடத்தினால் நான் ஐயங்காரே! என்ற கட்சியில் நின்று வாதாடி ஜெயிப்பேன். ஏனெனில் அதற்குத்தான் அதிக ஆதாரங்கள் உள்ளன.

 

சிலர் இவர் சமணரா, பௌத்தரா என்றும் வாதாடிப் பார்த்து தோற்றுப்போனார்கள். ஏனெனில் சமணமோ பௌத்தமோ, தெய்வத்தைப் பற்றிப் பேசுவதில்லை; வள்ளுவனோ தெய்வம் பற்றியும், வானுறையும் தெய்வம் பற்றியும் அடிக்கடி பேசுகிறான் (திருக்குறள் 619, 50, 702, 43, 55, 1023.

 

கடவுள் வாழ்த்தில் இவர், கடவுளுக்குப் பயன்படுத்திய சொற்கள் எல்லாம் தேவாரம், திவ்வியப்பிரபந்தத்தில் வருகின்றன. சம்ஸ்கிருதத்திலும் உள்ளன.

 

திருவள்ளுவர் குறிப்பிடும் தெய்வங்கள்:–

அடி அளந்தான் – திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610)

 

அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து)

ஆதி பகவன் – 1

யமன் (கூற்றம்) – 269, 1085, 326, 765, 1083

பித்ருக்கள் (இறந்தோர்)- தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை

பிரம்மா – உலகு இயற்றியான் 1062

இந்திரன் – 25

கண்ணன் – தாமரைக்கண்ணான் 1103

லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920,

மூதேவி – மாமுகடி 617, 936

பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258

tiruvalluvar-at-soas-university-of-london

The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture.Place SOAS, University of London.

வள்ளுவன், பல நூறு குறள்களில் சொன்ன— தவம், தானம், வேள்வி, தர்மம் (அறம்), நோன்பு, பார்ப்பான்,அந்தணன், புத்தேளிர் (தேவர்), மேல் உலகம், பிறவாமை, மறை, மறை மொழி (மந்திரம்), விதி, நிலையாமை, மெய்ப்பொருள், மாசறு காட்சி, நூல் (வேதம்) முதலிய இந்துமத விஷயங்களைப் பட்டிமன்றத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

 

லெட்சுமியும் விஷ்ணுவும், லெட்சுமியின் அக்காளும், பத்து அவதாரங்களில் ஒன்றும், அமிழ்தமும் வைஷ்ணவ விஷயங்களாதலால் திருவள்ளுவர் வைஷ்ணவரே என்று முடிவு செய்யலாம்.

 

இதற்கு அடுத்தபடியாக வருவது வேத கால தெய்வங்களான இந்திரன், யமன் ஆகும்.

 

பிரம்மாவைக் கூட — (உலகு இயற்றியான் 1062) — குறிப்பிட்ட வள்ளுவன் சிவனை நேரடியாகக் குறிப்பிடவில்லை. ஆனால் கடவுள் வாழ்த்தில் வரும் பத்து விஷயங்கள் சிவனுக்கும் திருமாலுக்கும் பொதுவான விஷயங்களே. அதே போல பாற்கடலைக் கடைந்து அமிழ்தம் எடுத்ததும் சிவ- விஷ்ணுவுக்குப் பொதுவான விஷயங்களே.

 

சிவனைப் பற்றியும் பிரம்மாவைப் பற்றியும் மறைமுகக் குறிப்புகள், இரண்டு குறள்களில் வருகின்றன:

 

“வள்ளுவர், சாக்ரடீஸ்,சிவபெருமான் – இவர்கள் மத்தியில் என்ன தொடர்பு? “ என்ற எனது மிகப்பழைய கட்டுரையில் (தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள், பக்கம் 126, நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை, ஆண்டு 2009)

 

பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டுபவர் (580)

 

சிவனையும், சாக்ரடீசையும் வள்ளுவர் குறிப்பிட்டது பற்றி எழுதியுள்ளேன். இது 1997ல் லண்டனில் ‘மேகம்’ பத்திரிக்கையில் நான் எழுதியது.

valluva-nayanar

இன்னொரு குறளில் (377)  ‘வகுத்தான்’ என்று பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். ஆனால் இவை இரண்டும் எனது வியாக்கியானமேயன்றி உரைகாரர்கள் செப்பியது அல்ல. வகுத்தான் என்பதை தலைவிதியை எழுதிய தெய்வம் என்று மட்டுமே உரைகாரர்கள் காட்டுவர்.

 

திருவள்ளுவ ஐயங்கார் வாழ்க!!!

 

My old Articles on the same subject:–

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன், 5 நவம்பர் 2012

திருவள்ளுவர் பற்றிய பழைய புத்தகம் (Post No. 2532) , 12 -2-2016

திருவள்ளுவர் யார்?,  Post No. 748 dated 17th December 2013.

Albert Einstein and Thiruvalluvar, Post No. 749 dated 17th December 2013.

Buddha and Tamil Saint on Good thoughts!, Post No 717 dated 21 November 2013

Who was Tiruvalluvar?, 24-7-2013

Tamil Merchant who dumped Gold into Sea, Post No. 1239; Dated 17th August 2014.

ஏலேல சிங்கன் கதை!, கட்டுரை எண்:– 1238; தேதி 17 ஆகஸ்ட் 2014.

அவ்வையார், வள்ளுவர் பற்றிய அதிசய தகவல்கள்! 14-11-2015

 

–Subham—

 

அரக்கர்கள் யார்? கம்பன் தரும் உண்மைத் தகவல்! (Post No.3066)

jaws_

Picture from James Bond Film

 

Written by London swaminathan

Date : 16th August 2016

Time uploaded in London: 5-51 AM

Post No.3066

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

 

அரக்கர்கள், இராட்சதர்கள் ஆகியோர் திராவிடர்கள் என்றும், தேவர்கள் எல்லோரும் ஆரியர்கள் என்றும், ஆரியர்களும் வெள்ளைக்காரர்களும் இந்தோ ஐரோப்பிய இனத்தவர் என்றும் வெளிநாட்டு “அறிஞர்கள்” எழுதி வைத்தனர். இப்படி வேற்றுமை விஷத்தை — விஷ வித்தை – விதைத்தால் இந்தியா துண்டாகும், இந்துமதமும் சிதறும் என்று ஆங்கிலத்தில் எழுதிய வெள்ளைத் தோல் அறிஞர்கள் தப்புக் கணக்குப் போட்டனர். காரணம் என்ன வென்றால், சில திராவிட அசிங்கங்கள் அவர்களுக்கு ஆமாம் சாமி போட்டு, வெள்ளைக்கார ஆட்சி நீடிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

 

ஆனால் உண்மை என்ன என்பதை ராமாயணமும் மஹாபாரதமும் பிட்டுப் பிட்டு வைக்கின்றன. உபநிஷத்துக்களிலேயே மிகப் பழைய பிருஹத் ஆரண்யக (பெருங் காட்டு) உபநிஷதத்திலேயே தேவர் மானுடர், அசுரர் — ஆகிய மூவரும் தவம் செய்ததும் ஒரே கடவுளிடம் உபதேசம் பெற்றதும் இருக்கிறது. புராண, இதிஹாசம் முழுதும் அவர்கள் சகோதர்கள் என்று காட்டுகின்றன.

 

 

இதை மேம்போக்கக எழுதினால் கூட சிலர் இடைச் செருகல் என்று சொல்லிவிடுவர். ஆனால் ஆதி முதல் அந்தம் வரை கதையின் கருப்பொருளிலேயே இவ்விஷயம் உள்ளது.

 

கம்பராமாயணத்தில் இருந்து இதோ இரண்டு பாடல்கள்:–

விராதன் என்ற அரக்கன் தன் கதையைச் சொல்லும் பாடல்   ஆரண்ய காண்ட விராதன் வதைப் படலத்தில் வருகிறது; :-

 

அன்ன சாபம் மேவி நான்

இன்னல் தீர்வது ஏது எனா

நின்ன தாளின் நீங்கும் என்று

உன்னும் எற்கு உணர்த்தினான்

 

ராமனிடம் விராதன் சொல்கிறான்:– “என் பெயர் தும்புரு; குபேர உலகத்தைச் சேர்ந்தவன்; ரம்பையிடம் வேட்கை கொண்டதால் குபேரனின் சாபம் பெற்று அரக்கன் ஆனேன். இச்சாபம் எப்போது தீரும் என்று கேட்ட போது உன் திருவடிகள் படும்போது சாபம் நீங்கும் என்று குபேரன் சொன்னான்.”

 

இதிலிருந்து அரக்கர்களும் தேவர்களே என்பதும் காமம், க்ரோதம் லோபம் முதலிய விகாரங்களால் — குண வேறு பாட்டினால் — அரக்கன் ஆவதும் , பின்னர் அதிலிருந்து விடுபடுவதும் தெரிகிறது!

இக்கருத்து இந்து மத அரக்கர் கதை எல்லாவற்றிலும் வருகிறது!

 

dracula

Picture from Dracula film

இதோ இன்னொரு கதை:–

இராம இலக்குவரால் கொல்லப்பட்ட, கோர வடிவமுள்ள அரக்கனான கவந்தன், வானத்தில் ஒளிவடிவில் தோன்றியவுடன் இராம, இலக்குவர்கள், ஆச்சர்யத்தோடு அவன் யார் என்று வினவுகின்றனர்:

 

கவந்தன் சொல்கிறான்:

சந்தப்பூண் அலங்கல் வீர!  தனு எனும் நாமத்தேன்  ஓர்

கந்தர்பன் சாபத்தால் இக்கடைப்படு பிறவி கண்டேன்

வந்துற்றீர் மலர்க்கை தீண்ட  முன்னுடை வடிவம் பெற்றேன்

எந்தைக்கும் எந்தை நீர் யான் இசைப்பது கேண்மின் என்றான்

 

பொருள்:–

அழகிய ஆபரணங்களையும் மாலையையும் அணிந்த  வீரனே!

 

“நான், தனு எனும் பெயரைக் கொண்ட ஒரு கந்தருவன். ஸ்தூலசிரஸ் என்னும் முனிவரின் சாபத்தால் , இந்த இழிவான அரக்கப் பிறப்பை அடைந்தேன் . உங்களுடைய மலர்க் கரங்கள் பட்டவுடன் பழைய வடிவம் பெற்றேன்.  நீங்கள் என் தந்தைக்கும் தந்தை போன்றவர்கள். இப்போது நான் சொல்லுவதைக் கேட்பீராக என்றான்”

 

.  இதுபோன்ற அரக்கர் கதைகளையும், மஹாபாரதத்தில் காஸ்யப ரிஷியின் வரலாற்றையும் படித்தால் வெள்ளை க்காரன் சொன்னதெல்லாம் பொய் என்பது புலப்படும்!

 

Please read my earlier research article:–

அரக்கர்கள்,அசுரர்கள் யார்?, Research paper written by London Swaminathan, Research article No.1395; Dated 7th November 2014

இந்துக்களின் 18 பிரிவுகள் : பதினெண் கணங்கள், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1399; தேதி 9 நவம்பர், 2014.

அசுரர்கள், அரக்கர்கள் அகராதி, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1365; தேதி அக்டோபர் 23, 2014.

 

–subham–

 

 

 

 

 

கம்பனின் அதிசய உவமை! புறச்சூழல் உண்மை!!(Post No.3065)

Dead fish floated in the green waste water.

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 17-56

Post No.3065

Pictures are taken from various sources; thanks for the pictures.

 

கம்பராமாயணம் ஒரு தேன் கூடு;  பிழியப் பிழிய தேன் வரும். ஆனால் என் போன்றோர் இலக்கிய நயத்துக்காக நூல்களைப் படிப்பதில்லை. அதிலுள்ள விஞ்ஞான உண்மைகளையும் தத்துவ உண்மைகளையும் ஆழத் துருவி ஆராய்வதே நோக்கம். ஆரணிய காண்டத்தில் மாரீசன் வதை படலத்தில் கம்பன் ஒரு அசாதாரண உவமையைக் கையாளுகிறான். இதைப் பார்க்கும் போது 1200 ஆண்டுகளுக்கு முன்னரே புறச் சூழல் அறிவு இருந்திருப்பது புலனாகிறது.

 

இதோ பாட்டும் அதன் பொருளும்:–

 

வெஞ்சுற்றம் நினைந்து உகும் வீரரை வேறு

அஞ்சுற்று மறுக்குறும் ஆழ் குழி நீர்

நஞ்சு உற்றுழி மீனின் நடுக்குறுவான்

நெஞ்சு உற்றது ஓர் பெற்றி நினைப்பு அரிதால்

 

பொருள்:

மாயமான் வடிவத்தில் சென்று சீதையை ஏமாற்று — என்று ராவணன் ஏவியபோது மாரீசன் மன நிலை பற்றிய பாடல் இது:–

 

“இராவணன் செயலால தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் அழிவு வரும் என்பதை மாரீசன் உணர்ந்தான். தனது அன்பிற்குரிய சுற்றத்தாரை நினைத்து வருந்தினான். மானிட வீரர்களான இராம இலக்குவரை எண்ணி மனதில் குழப்பம் அடைந்தான். இது எப்படி இருந்ததென்றால்….

ஆழமான பள்ளத்தில் உள்ள நீர் நச்சுத் தனமை அடையும் போது, அதில் வாழும் மீன் அந்த நீரில் இருந்தாலும் சரி, நிலத்தில் இருந்தாலும் சரி இறப்பது உறுதி. அந்த மீன்கள் எப்படி நடுங்குமோ அப்படி மாரீசன் நடுங்கினான். அந்த மாரீசனின் மன நிலையை நம்மால் முடியாத அளவுக்கு அவன் பயப்பட்டான்”

இந்தப் பாட்டில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவது இலக்கிய நயம்: விஷ நீரில் மீன் இருந்தாலும் சாகும். வெளியே போனாலும் சாகும். அது போல மாரீசன் மாய மான் வேடம் போடாமல் சென்றால் ராவணன் கொன்றுவிடுவான். மாய மான் வேடம் போட்டாலோ ராமன் கொன்று விடுவான்! இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை!

fishes 2

இரண்டாவது அறிவியல் விஷயம்:

 

ஒரு விஷயத்தை உவமையாகப் பயன்படுத்த வேண்டுமானால் அது மக்களுக்குப் புரிய வேண்டும்; தெரிந்திருக்க வேண்டும்.

 

நீர் நிலைகள், குறிப்பாக ஆழமான கிணறுகள், அசுத்தமடைவதும், அதனால் மீன்கள் இறப்பதும் மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வேளை நீரை அசுத்தம் செய்யாதீர்கள்! நடுக்குறும் மீனின் கதி , உங்களுக்கும் வரும் என்று கம்பன் அறிவுரை பகர்கிறான் போலும்.

 

எது எப்படியாகிலும் இப்பேற்பட்ட உவமை அரிதிலும் அரிது. கம்பன் கையாளும் உவமைகளைப் பட்டியலிட்டுப் பார்த்தால் அவன் மேதா விலாசமும் நமக்கு வெள்ளிடை மலையென விளங்கும்.

 

–SUBHAM–

ஆழ்வார் தரும் அதிசயத் தகவல் : 7 மலை, 7 கடல், 7 முகில்! (Post No.3064)

chart-cloud-types.jpg

Written by London swaminathan

Date : 15th August 2016

Time uploaded in London: 9-21 AM

Post No.3064

Pictures are taken from various sources; thanks for the pictures.

நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்னும் தொகுப்பு நூலிலே பன்னிரெண்டு ஆழ்வார்களின் அற்புதமான பாசுரங்கள் உள்ளன. அத்தனையிலும் பக்தித் தேன் சொட்டும். கடவுளைப் பற்றிக் கவிஞர்கள் கவிதை பாடினால் அதில் இலக்கிய அழகு அதிகம் இருக்கும். பக்தர்கள் கவி பாடினாலோ அதில் சொந்த ஆன்மீக அனுபவச் சுவை அதிகம் இருக்கும். ஆயினும் ஆராய்ச்சி நோக்குடன் படிப்போருக்கு வேறு பல விஷயங்களும் கிடைக்கும்.

 

நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியும் பக்திச் சுவை மிக்கதே. ஆயினும் போகிற போக்கில் அவர் பல அதிசய விஷயங்களை யும் சொல்கிறார். ஒரு பாசுரத்தில் 7 மலைகள், 7 கடல்கள், 7 மேகங்கள் பற்றிச் சொல்லுகிறார்.

 

நாங்கள் எல்லோரும் சிறுவர்களாக இருந்தபோது,  பல பாலர் பத்திரிக்கைகளில் வரும் மந்திரவாதி, மாயா ஜாலக் கதைககளைப் படிப்போம். அதில் பல கதைகளில் 7 மலை, 7 கடல் தாண்டி ஒரு குகையில்…………………..!! என்று படிப்போம். நம்மாழ்வாரும் 7 மலை, 7 கடல்  பாடி இருக்கிறார்:–

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து

பேரேன் என்று, என் நெஞ்சு நிறையப் புகுந்தான்

கார் ஏழ், கடல் ஏழ், மலை ஏழ், உலகு உண்டும்

ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே

பாடல் 3969, நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

 

பொருள்:-

“திருப்பேர் நகரில் உள்ள பெருமான் இன்று வந்து நின்று என் உள்ளத்தில் புகுந்து  இதைவிட்டுப் போகேன் என்று உறைகின்றான்.

ஏழு மேகங்கள், ஏழு கடல்கள், ஏழு மலைகள் உள்ள இந்தப் பூமியை அப்படியே உண்டும்,  வயிறு நிறையாத, வயிற்றை உடைய அப்பெருமானை நான் உள்ளத்தில் சிறைப் படுத்தி விட்டேன்.”

 

இதில் அதிசய விஷயம் மேகம்/ மழை/ காற்று மண்டலம் பற்றியதுதான். இது பற்றி நம்மாழ்வாரும், காளிதாசரும் பாடியிருப்பது இந்துக்களின் கால நிலை பற்றிய அறிவைக் காட்டும்

earth-atmosphere-layers

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.

முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது  புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே –  நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.

 

ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும்  சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான்.  அங்கே இயங்கும் காற்று பரவாஹ.

 

இதற்கு ஆதாரமான சம்ஸ்கிருத ஸ்லோகம்:–

ஆவஹோ நிவஹஸ்சைவ உத்வஹ: சம்வஹஸ்ததா

விவஹ: ப்ரவஸ்சைவ பரிவாஹஸ்ததைவ ச

ஒவ்வொரு மழைக்கும் உலகில் நடந்த அதிசய நிகழ்ச்சிகள் மூலம் பழைய கட்டுரையில்விளக்கியுள்ளேன்.

 

ஏழுவகை மழைகள்:-

சம்வர்த்தம் – மணி (ரத்தினக் கற்கள்)

ஆவர்த்தம்- நீர் மழை

புஷ்கலாவர்த்தம்- பொன் (தங்க) மழை

சங்காரித்தம் – பூ மழை (பூ மாரி)

துரோணம் – மண் மழை

காளமுகி- கல் மழை

நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)

 

ஏழு மலைகள்

இமயம்/கயிலை, மந்த்ரம், விந்தியம், நிடதம், ஹேமகூடம், நீலம், கந்தமாதனம்

 

ஏழு கடல்கள்

உவர் நீர், தேன்/மது, நன்னீர், பால், தயிர், நெய், கரும்புச் சாறு

 

உப்பு, தேன், மது, ஒண் தயிர், பால், கரும்பு,

அப்புத்தான் என்று உரைத்தன ஆழிகள்

துப்புப்போல் குருதிப் புனல் சுற்றலால்,

தப்பிற்று அவ் உரை, இன்று ஓர் தனுவினால்.

cloud_types

எண்கள் பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகள்:—-

இந்துக்களின் கண்டுபிடிப்பு: ஏழு வகை மழை, ஏழு வகை காற்று (Post No 2878), 8 June 2016

ஏழு எண்ணின் ரகசியம்: ரிக் வேதம் முதல் சிந்துவெளி வரை! ரிக் வேதம் முதல் சிந்து வெளி வரை!, posted on 22-11-2014

தமிழர்களின் எண் ஜோதிடம்(posted on 16th April 2012)
நீங்கள் நாலும் தெரிந்தவரா? (தமிழ் க்விஸ்)
Mystic No.7 in Music! (posted on 13th April 2013)
Numbers in the Rig Veda (posted on 3rd September2014)
Hindus’ Magic Numbers 18,108,1008! (posted on 26th November 2011)
Most Hated Numbers 666 and 13 (posted on 29th July 2012)
King and 8 Ministries in Vedic Period (posted on 28th May 2013)
Four Stages and Seven Ages of Man (posted on 21st March 2013)

கீழ்கண்ட கட்டுரைகளிலும் ஏழு எண் பற்றிய தகவல்கள் உள்ளன:–

தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும், posted on 15 February 2015பனை மரங்கள் வாழ்க!, posted on 27 January 2014பனை மர வழிபாடு: மகாவம்ச, சங்க இலக்கியச் சான்றுகள், posted 25 September 2014

–subham–

 

Anti-Barber, Goldsmith, Potter, Blacksmith, Carpenter Proverbs (Post No.3063)

blacksmith, tribe

Picture of blacksmiths

Compiled by london swaminathan

Date: 15th    August 2016

Post No. 3063

Time uploaded in London :–  6-24 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Part-3 of the Caste Proverbs. Please see the first two parts for the Anti Brahmin, Anti agricultural caste and Anti Bania proverbs

In the olden days, village barbers were marriage brokers, surgeons, Chiropodists and quacks. So proverb makers found abundant material for vituperative sarcasm.

mumbai barber

Anti-Barber Proverbs

 

1.Among men most deceitful is the barber, among birds the crow, among the things of water the tortoise.

2.Barbers, doctors, pleaders, prostitutes – all must have cash down.

 

3.A barber learns by shaving fools, for which reason you stick to your barber but change your washer man, since a new Dhobi washes clean.

4.You may hammer a barber on the head with a shoe, but you will not make him hold his tongue.

 

5.A barber found a purse, and all the world knew it.

6.Of the inquisitive barber the wise say, “Throw a dog a morsel to stop his mouth” (It is like saying “Choke of a reporter with a scrap of stale news)

7.A barber out of work bleeds the wall or shaves a cat to keep his hand in.

(In Tamil also there is a proverb: Jobless barber caught a cat to shave it)

8.A barber’s penny, all profit and no risk

9.A burglary at a barber’s: stolen, three pots of combings!

10.If you go back four generations, you will find that your uncle was a barber (the meaning is barbers are unduly intimate with the inmates of zenana)

goldsmi2

Anti-Goldsmith Proverbs

1.Trust not the goldsmith; he is no man’s friend, and his word is worthless.

2.If you have never seen a tiger, look at a cat; if you have never seen a thief, look at a Sonar (Swarnakar=Goldsmith)

3.The goldsmith, the tailor and the weaver are too sharp for the angel of death; God alone knows where to have them.

4.A Sonar (Swarnakar=Goldsmith) will rob his mother and sister; he will filch gold even from his wife’s nose ring.

 

5.If he cannot steal, his belly will burst with longing.

6.He will ruin your ornament by substituting base metal for the gold you gave him, and will clamour for wages into the bargain.

7.A pair of rogues: the goldsmith and the man who sifts his ashes for scraps.

goldsmit.JPG

Anti-Potter Proverbs

1.A potter is always thinking of his pots and, if he falls out with his wife he finds a solace in pulling his donkey’s ears.

2.When the clay is on the wheel the potter may shape it as he will, though the clay re-joins “Now you trample on me, one day I shall trample on you”.

 

3.Turned on the wheel you know better for it; praise not the pot till it is fired

4.If you are civil to a potter he will neither respect you nor will he sell his pots.

5.The potter can sleep sound; no one will steal his clay.

6.In a deserted village even a potter is a scribe.

A potter’s wife is a meddlesome fool, she will burn herself on the carcass of the Dhobi’s donkey ( Dhobi ke gadhe par Kumhaarin Satii huuii)

potter

Anti-Blacksmith Proverbs

1.A blacksmith’s single stroke is worth a goldsmith’s hundred

2.A Lohar (Loha kara= Blacksmith)is a bad friend; he will either burn you with fire or stifle you with smoke

3.His shop is always in an untidy mess; it is the place where the donkeys roll

4.Sparks are the lot of the blacksmith’s legs.

5.Such is his good nature that a monkey begged of him a pair of anklets.

6.Never buy his pet Myna (maina), even if you can get it for a farthing, for the bird will drive you mad by mimicking the noise of a hammer

7.To sell a needle in the Lohar’s quarter (Taking coals to New Castle)

8.Before the smith can make a screw he must learn to make a nail.

carpenter,tribe

Picture of Carpenters

Anti-Carpenter Proverbs

1.The carpenter thinks nothing but wood.

2.His wife walks and talks in time to the noise of the plane.

3.When carpenter is out of work he keeps his hand in by planing his friend’s buttocks.

4.The carpenter’s face is cited as a type of unpunctuality, since it is never to be seen at the time when he promised to come.

5.A whore’s oath and a Sutar’s chip are worthless

6.A fool of a Barhai’s has neither chisel nor adze and wants to be the village carpenter.

To be continued………………….

In the next session I will give Anti-Oil monger, Anti Tailor, Anti washer man; Fisherman, Weaver, Shoemaker Proverbs.

Source:The People of India, Sir Herbert Risley, Year 1915.

–Subham–

 

 

உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி! (Post No.3062)

I day map 2

Article Written S NAGARAJAN

Date: 15th  August 2016

Post No. 3062

Time uploaded in London :– 5-50 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சிறந்த தியாகியும், பத்திரிகையாளரும், ஆன்மீகத்தைத் தமிழகத்தில் வளர்த்த சிறந்த கர்மயோகியுமான எனது தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அமரரான தினம் ஆகஸ்ட் 15.(15-8-1997) ஒரு அஞ்சலிக் கட்டுரை இது!

 

உத்வேகம் ஊட்டும் உத்தமருக்கு அஞ்சலி!

ச.நாகராஜன்

 

ஒருவரை எப்பொழுது வேண்டுமானாலும் நினைக்கும் போது உடனே உத்வேகம் பிறந்து பல அரிய காரியங்களைச் செய்ய முடியும் என்றால் அப்படிப்பட்ட உத்வேக வாழ்க்கையை வாழ்ந்தவர் —வாழ்வாங்கு வாழ்ந்த சிறந்த மனிதர்– என்று அர்த்தம். ஆகஸ்ட் 15ஆம் தேதி கொடி ஏற்றியாகி விட்டதா என்று கேட்டு அமரரான திரு வெ.சந்தானம் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை உத்வேகமூட்டும் அவர் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எப்பொழுதும் உணர்த்தும்.

 

மாபெரும் அரசியல் தலைவர்களுடன் சகஜமாகப் பழகியவர் அவர். ஆன்மீகத்திலோ இணையிலா ஆசார்யர்களுடன் நெருங்கிப் பழகும் பாக்கியம் கொண்டவர். சித்தர்களிலோ எனில் கணபதியுடன்நேருக்கு நேர் பேசும்  மகத்தான ஸ்வாமிஜியின் அன்புக்கு பாத்திரமானவர்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சில நிகழ்ச்சிகள் ..

 

காமராஜர் மதுரையில் நடக்கும் காங்கிரஸ் மாநாட்டு பந்தலைப் பார்வையிட வந்தார். பந்தலோ டி.வி.எஸ் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட அருமையான் பந்தல். தினமணி நிருபர் காமராஜரிடம் சென்றார். எங்கள் ஆசிரியருக்கு (தினமணி வெ.சந்தானம்) தேச் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்காக அரசு தரும் எதுவம் வரவில்லையே என்றார்.

ஏன் என்று கேட்டார் காமராஜர்.

 

அதற்கு சிறை இருந்ததற்கான சான்றை சக சிறைவாசி ஒருவர் தர வேண்டும் என்று விதி இருக்கிறதே என்றார் நிருபர்.

எவன் அப்படி விதியைப் போட்டான்?

“தாங்கள் தான்! முதலமைச்சர் விதி இது”

ஹ ஹ ஹா என்று சிரித்தார் காமராஜர்.

 

ஒரே ஒரு வரி.

ஆங்கிலத்தில்,

திரு சந்தானம் என்னுடன் சிறையில் இருந்தார்.

கேகாமராஜ்

 

I day squirrel

உடனுக்குடன் செயலபடும் மாபெரும் தலைவர் காமராஜர். என் தந்தையாரிடம் மீது அவர் கொண்ட அன்பும் மதிப்பும் எல்லையற்றது.

 

எனது தந்தையாரை “சாமி” என்று அழைக்கும் முத்துராமலிங்கத் தேவர் ஆன்மீகம் தேசீய்மும் இழைந்து ஓடும் உத்வேகமூட்டும் சொற்பொழிவுக்குச் சொந்தக்காரர். மகுடி கேட்ட நாகம் போல மக்கள்  கூட்டம் சொக்கும் அவரது பேச்சால். மதுரையில் அவர் சொற்பொழிவு ஆற்றும் கூட்டங்கள் பலவற்றிற்கு என் தந்தையார் தான் தலைவர். மறுநாள் அப்படியே தேவர் பெருமானின் சொற்பொழிவு தினமணியில் வெளியாகும். மக்கள் பெரிதும் மகிழ்வர். தேவர் பெருமானும் தான்! அப்படியே வந்திருக்கிறதே என்று மகிழ்வார். எங்கள் குடும்பத்திற்கு தேவர் சமூகத்தினரின் உதவி காலம் காலமாக இருந்து வந்தது!

 

ஆயக்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா ஒரு அபூர்வமான சித்தருக்கெல்லாம் சித்தர். தினமும் கணபதி ஹோமம் இளமையிலிருந்தே செய்து வந்தவர். கணபதியை பிர்த்யட்சமாகக் கண்டு பேசுபவர்.

 

அவரை தரிசிக்கும் போதெல்லாம் ஏராளமான அபூர்வமான சம்பவங்களை எங்கள் குடும்பத்தினர் அனுபவித்து மகிழ்வது வழக்கம்.

 

ஆய்க்குடியி (தென்காசி அருகில் உள்ள அற்புதமான கிராமம்) வசித்து வந்தார் அவர்.

 

அவராலேயே பரசுராமர் பூஜை செய்த ஐயப்பனின் சிலை அச்சன்கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. இன்று லட்சக்கணக்கில் மக்கள் அங்கு செலவ்தை அனைவரும் அறிவர்.

 

அங்கு வருடந்தோறும் நடக்கும் புஷ்பாஞ்சலி அபூர்வமான ஒன்று.

என் தந்தையார் மீது அளவு  கடந்த அன்பு கொண்டவர் அவர் அவர் செய்யும் கணபதி ஹோமம் கணபதியை பிரத்யட்சமாக எழுந்தருளச் செய்யும் ஹோமம் ஆகும்.

 

எங்கள் வீட்டிலும் கணபதி ஹோமம் நடந்தது. நண்பர் ஒருவர் வீட்டிலும் ஹோமம் நடந்தது. அங்கு அனைவரையும் தீடீரென்று கீழே விழுந்து நமஸ்கரிக்கச் சொன்னார். அனைவரும் நமஸ்கரித்தோம்.

 

பின்னால் தான் அவர் நடந்ததைச் சொன்னார்,

ஹோமத்தைப் பார்க்க குழந்தையானந்தர் உள்ளிட்ட பலர் வந்திருந்ததாகவும் அவர்களைத் தரிசித்ததால் எங்களையும் நமஸ்கரிக்கச் சொல்லி அவர்களின் ஆசியைப் பெற வைத்ததாகவும் தெரிய வந்தது.

 

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஏராளமான சுவையான நிகழ்வுகள்.

காலம் நிறபதில்லை; ஓடுகிறது. நல்ல நினைவுகள் நீடிக்கின்றன மறைவதில்லை!

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார் வள்ளுவர்.

 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்றும் நினைப்பவருக்கு உத்வேகம் ஊட்டும் உத்தமர் திரு வெ.சந்தானம்.

எனது தந்தையார்.

 

இந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவரை நினைத்து அஞ்சலி செலுத்துகிறோம்.

 

*********

 

துணை இலாதவரும், புணை இலாதவரும்– கம்ப ராமாயணச் சுவை (Post No. 3061)

0c79b-ar2bkanda9.jpg

கவந்தன் படலம்

 

Written by london swaminathan

Date: 14th    August 2016

Post No. 3061

Time uploaded in London :– 12-47

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

கம்பன் காவியம் ஒரு கல்கண்டு! சுவைத்துக் கொண்டே இருக்கலாம்.

 

 

ராமன் ஒரு அவதாரம்; ஆயினும் மனிதனாகத் தோன்றினால் மனிதன் போலவே நடந்தால்தான் அவனை நாம் பின்பற்றுவோம். ராமன் தனது வாழ்க்கை மூலம் பல அரிய பண்புகளை நமக்குக் கற்பிக்கவந்தவன். ஆகவே துணையின் பெருமை, நட்பின் பெருமை, உதவி பெறுவதன் பெருமை ஆகியவற்றையும் நமக்குக் காட்டுகிறான்.

 

பஞ்ச தந்திரங்களில் ஒன்று சரியான நட்பைப் பெறுதல்; துணை இல்லாமல் ஒரு காரியமும் நடவாது. ஏழு கோடி அவுணர்களை வீழ்த்திய ராமனும் கூட துணை இல்லாமல் ஒருவேலையைச் செய்ய இயலாது.

 

 

ராமன் உதவி பெறுவதைவிட, கம்பன் அதை நமக்குச் சொல்லும் அழகு தனியே!

 

சுக்ரீவனின் நட்பைப் பெறுக – என்று ராம பிரானுக்கு  கவந்தன் அறிவுரை அறிவுரை வழங்குகிறான்

 

கணை உலாம் சிலையினீரைக் காக்குநர் இன்மையேனும்

இணை இலாதாள் தன்னை நாடற்கு ஏயன செய்தற்கு ஏற்கும்

புணை இலாதவற்கு வேலை போக்கு அரிது அன்னதே போல்

துணை இலாதவருக்கு இன்றால் பகைப் புலம் தொலைத்து நீக்கல்

 

–ஆரண்ய காண்டம், கவந்தன் படலம்

 

பொருள்:-

அம்புகளை வீசும் வில்லை உடைய (கணை உலாம் சிலை) உன்னைக் காப்பதற்கு பலம் உடையவர் யாருமில்லை.ஆயினும் ஒப்பில்லாத சீதையைத் தேடுவதற்கு (இண இலாள் தன்னை நாடற்கு), உதவி தேவை.

 

எதைப் போல என்றால்,

கப்பல் இல்லாமல் கடலைக் கடக்க முடியாது (புணை இலாதவற்கு வேலை/கடல் போக்கு அரிது)

 

அதேபோல

துணை இல்லாமல் பகைப் புலத்தை அழிக்க முடியாது.

kamban_stamp

நல்ல உவமை: இந்த உவமையை இந்துமத நூல்கள் முழுவதும் காணலாம். கடல் என்பது அவர்களுக்குத் தெப்பம் போல; உலகம் முழுதும் சென்று நாகரீகத்தைப் பரப்பியவர்கள் இந்துக்கள். அதனால் வேதம் முதல் நேற்றைய இலக்கியம் வரை கப்பல்-கடல் உவமை வரும்.

 

சம்சார சாகரம் = பிறவிப் பெருங்கடல் என்பதை கீதையிலும்  குற ளிலும் காணலாம். நிற்க.

 

திருவள்ளுவரும் இதை வலியுறுத்துவார்:-

 

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

–குறள் 677

ஒரு செயலைச் செய்பவன், ஏற்கனவே அந்தப் பணியைச் செய்து அறிவு பெற்றவனின் அனுபவத்தைப் பகிர்ந்து, அதைச் செய்வதே முறை.

MySt Kambar fdc

–Subham–

Tamil Taste and Sanskrit Taste! (Post No.3060)

b day feast 2

Written by london swaminathan

Date: 14th    August 2016

Post No. 3060

Time uploaded in London :– 9-18 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

fruit salad

Tastes are different, especially for Tamil speakers and Sanskrit speakers!

 

For some strange reason Tamil and Sanskrit literature describe tastes in different ways.

 

In my earlier articles I have written about the way Lord Krishna divides food into three categories Satva, Rajas and Tamasic food in the Bhagavad Gita! Moreover, Krishna advocates great vegetarian food!

 

Tamils have divided food on the basis of taste. Sanskritists have divided food on the basis of its structure or state or condition.

 

5 divisions of food in Sanskrit:–

Pancha paksha paramaannam means very good, fulsome and tasty five types of food in Sanskrit. If one is served varieties of dishes then they say, “Oh, I enjoyed the food in his house or in the wedding; it was a five-fold division of food I had today”. If a Tamil go to the same house or the same wedding he would say, “Oh, I had Six Taste food today! I am full”.

 

boli

Boli, South Indian Dish

So, what are the five divisions in Sanskrit literature?

Bhojyam, Bhakshyam, Soshyam, Peyam and Lehyam.

Bhojyam:-Bojanam is our normal food like rice and Chapatti; the word is very popular in most parts of India. The word stands for meals in general. This is spoiled in 24 or 48 hours because it is cooked food

Bakshyam: Bakshanam is used in most of the languages in India for any snacks. We don’t use it as food, but as snacks in between main meals. Most of the items we keep it for long, because they don’t go off that quickly. It means like sweets, Bombay Mixture, Tamil Murukku etc

 

Lehyam:- English word lick come from the same root of this Sanskrit word. Anything that is semi solid and semi liquid, mostly used in medicines nowadays is called Lehyam. Honey based items, Panchamritam, Chyavanaprash, medicinal lehiyams etc. fall under this category.

 

Soshyam: English word suck is cognate with this word. You use a straw to suck the liquid out of the cup. Fruit juices, milk shakes, Rose milk etc. fall under this category.

 

Peyam: Any drinks like milk or water. Orthodox Hindus wont allow their lips to touch the cup or a tumbler or any vessel containing water or milk or anything holy. Peyam is used there.

alva from tirunelveli

Halwa, Indian Sweet

Six Varieties of Tamil Food

Tamils have divided food into six types on the basis of taste felt in the tongue. They are Sweet, Hot/spicy, Sour, Salty, Bitter and Astringent.

Sweet: it needs no explanation; Eg. Sugar, jaggery, sugarcane, Indian sweets etc.

Spicy: any dish that contains chillies or black pepper

Sour: Dishes made with lemon juice or tamarind; raw vegetables such as green mangoes

Salty: dishes added with salt

Bitter: Dishes made up of bitter gourds, medicinal pastes of neem leaves, medicines like quinine, certain types of greens

Astringent: Tastes like betel nuts, certain baby vegetable like green plantain, green banana

Tamils are very fond of salt; they have a proverb “Unsalted items go into rubbish heap”.

On days like New Year day Hindus make a Pachadi (Liquid item that contains all the six tastes) to illustrate the truth that “Life is full of ups and downs”.

 

Kalidasa, the greatest poet of India, says “Variety is the spice of life.”

 

In short, Hindu Food items are classified on the basis Hindu philosophy!

Picture shows Vada/ Vadai, Tamil Foodappam3

 

Read my earlier articles on Hindu Food:

1.Krishna’s Restaurant in Dwaraka- Hot Satwic Food Sold, posted on 20 November 2011

  1. The Sugarcane Mystery: Indus valley and the Ikshwaku Dynasty, posted on 19 November 2011

3.SCIENCE BEHIND DIWALI-2; 175 SWEET ITEMS, posted on 3 November 2012

4.Unique and Wonderful  Food Items (Prasads) in Hindu Temples, posted on 22 May 2015

  1. Hindu Issues: Questions from Medical Students- Part 2, posted on 6 March 2015

6.What did Vedic Hindus Eat?, posted on 23 April 2015

hare krishna food 2

A typical North Indian Vegetarian meal.

–SUBHAM–

 

டர்பா (DARPA) காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!(Post No.3059)

 darpa 2

Article Written S NAGARAJAN

Date: 14th  August 2016

Post No. 3059

Time uploaded in London :– 6-31 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

12-8-16 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

டர்பா காண்பிக்கும் அடுத்த தலைமுறை உலகம்!

.நாகராஜன்

 

darpa 3

“இனி மேல் பிறக்கப் போகிறவர்களுக்கு நல்லவர்களாக இருங்கள். நீங்கள் வந்து சேர்ந்த இடத்தை விடச் சிறந்ததான இடத்தை அவர்களுக்காக உருவாக்குங்கள். அவர்கள் உங்களுக்கு நன்றியுடைய்வர்களாக இருப்பார்கள்.” – பங்காம்பிகி ஹப்யரிமானா

 

 

செயற்கை அவயவங்களைத் தயாரித்து மூளை செயல்பாட்டுடன் அதை ஒருங்கிணைக்க வைத்த அதிசயத்தை மட்டும் டர்பா (அமெரிக்க இராணுவத்தின் அறிவியல்  மற்றும் தொழில்நுட்பப் பிரிவு) செய்யவில்லை.

 

 

எதிர்கால உலகை எப்படி அமைப்பது என்பதையும் அது திட்டம் தீட்டி வருகிறது – இராணுவ நோக்கில்!

ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை அறிவு என்பதில் அது காட்டும் அக்கறையே தனி!

ஒரு வினாடிக்கும் கீழான நேரத்தில் எந்த ஒரு மொழியையும் இன்னொரு  மொழியில் கூற வல்ல மொழியாக்கத் தொழில் நுட்பம் அதனிடம் இப்போது தயார்! அதி நவீனமான காண்டாக்ட் லென்ஸுகளையும் அது தயாரித்து விட்டது.

அடுத்ததாக அதன் கவனம் செயற்கை அறிவு மற்றும் ரொபாட் வீரர்கள் ஆகியவற்றின் பயன்பாடு தான்!

2045ஆம் ஆண்டு உலகம் எப்படி இருக்கும் (அல்லது எப்படி இருக்க வேண்டும்) என்பதை அது தீர்மானித்து விட்டது!

எதிர்காலத்தை நோக்கி என்ற பொருள் படும் ‘ஃபார்வேர்ட் டு தி ஃப்யூச்சர்’ (Forward to the Future) என்ற ஒரு வீடியோ தொடரை அது யூ டியூபில் அண்மையில் வெளியிட்டுள்ளது

அதில் டர்பாவைச் சேர்ந்த மூன்று நிபுணர்கள் எப்படி தொழில்நுட்பம் இன்னும் 30 வருடங்களில் (அதாவது ஒரு தலைமுறையை முப்பது வருடங்கள் என்று கணக்கிடும் தற்போதைய கணக்கை எடுத்துக் கொண்டால், அடுத்த தலைமுறையில்) உலகை மாற்றப் போகிறது என்பதை விளக்குகின்றனர்.

 

 

இதில் முதல் அதிசயக் கணிப்பை வெளியிடுபவர் பாம் மெல்ராய் (Pam Melroy) என்னும் விண்வெளி விண்கல எஞ்ஜினியர், இவர் ஏற்கனவே விண்வெளியில் பறந்த விண்வெளி வீரரும் கூட.. இப்போது டர்பாவின் துணை டைரக்டர். தந்திர உத்திகளைக் கையாளும் பிரிவில் ட்ரோன்களை உருவாக்கும் பிரிவில் இவர் பணியாற்றி வருகிறார்.

 

 

இராணுவத்திற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட ‘வாம்பயர் ட்ரோன்ஸ்’ (Vampire Drones) என்று ஒரு திட்டம் உள்ளது. சூரிய ஒளியில் இந்த வாம்பயர் ட்ரோன் பறக்கும் போது அது இருப்பதே யாருக்கும் தெரியாது. மாயாஜாலமாகப் பறக்கும் பிசாசு ட்ரோன் அது. நமது குரலை இனம் கண்டு ஆணைகளை நிறைவேற்றும் செயற்கை அறிவைப் பயன்படுத்தும் ட்ரோன்கள் இப்போது தயாரிக்கப்படும் நிலையில் உள்ளன1 சிக்கலான பல காரியங்களை இந்த ட்ரோன்கள் ஒரே சமயத்தில் செய்யும்!

எம்பதடிக் சிஸ்டம்  (Empathetic System) என்று ஒரு அமைப்பு. இதில் ரொபாட்டுகள் போர் புரிய போர்க்களம் செல்லும், அங்கு அந்த வினாடியில் எதிரிகளில் யார் என்ன உணர்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்., அவர்களது உடல் தகுதி, திறன் எப்படி  இருக்கிறது என்பதை இவை நன்கு கணித்து அதற்குத் தக போரிடும்! 2030இல் மனிதர்கள் போர்க்களம் செல்ல மாட்டார்கள். கைகலப்பிற்காக ரொபாட்டுகள் களத்திற்குச் செல்லத் தயாராகிவிடும்.

 

DARPA_Logo

 

அடுத்து ஸ்டெஃபானி டாம்ப்கின்ஸ் (Stefanie Tompkins) என்ற நிலவியல் நிபுணர், 2045இல் நேனோ தொழில்நுட்பம் உலகை ஆளும் என்று கூறுகிறார். இவர் டர்பாவின் இராணுவ அறிவியல் அலுவலகத்தில் டைரக்டராக இருப்பவர். கற்பனைக்கு அப்பாற்பட்ட மிகச் சிறிய உலோகங்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் என்கிறார் இவர். இப்போதே செயற்கை அங்கங்கள் வந்ததைச் சுட்டிக் காட்டும் இவர் அந்த அங்கங்களின் கனம் சில அணுக்களின் கனம் தான் என்கிறார். காண்டாக்ட் லென்ஸ்  உணரவே முடியாத அளவு மெலிதாக இருக்கும்1 எதிர்கால உலோகங்கள் மிக மெலிதாக இருக்கும். ஆனால் அதே சமயம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் வலிமையுடன் இருக்கும் என்பது இவர் தரும் கணிப்பு.

ஜஸ்டின் சான்செஜ் (Justin Sanchez) என்பவர் மூளையியல் விஞ்ஞானி. டர்பாவின் உயிரியல் துறையில் பணியாற்றுபவர். இவர் கூறுவது : 2045இல் எண்ணத்தின் மூலமாக இயக்கப்படும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு விடும். 2045இல் நண்பர்களும் உறவினர்களும் மூளையின் மூலமாகவே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள  முடியும். (அதாவது டெலிபோன் உள்ளிட்டவை அவுட் ஆஃப் டேட்!)

எலக்ட்ரானிக் ஆர்கிடெக்சர் எனப்படும் மின்னணுவியல் கட்டிடத் தொழில்நுட்பம் வீட்டைக் கட்ட உதவும். நினைத்தால் எண்ணம் மூலமாகவே பல்புகள் எரியும். சிறிய சென்ஸர்கள் தனக்குள்ளேயே சக்தியைக் கொண்டிருப்பதால் வயர்கள், மின்சாரம் என்பதெல்லாம் அவுட் ஆஃப் டேட்!

எதிர்கால வீடுகளுக்கும் இன்றைய வீடுகளுக்கும் துளிக் கூட சம்பந்தம் இருக்காது. அறிவியல் வீடுகளில் அடுத்த தலைமுறை வாழத் தொடங்கும்!

 

துள்ளிக் குதித்து ஓடி வரும் தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்குச் சேவை செய்யுமா அல்லது அவர்களை ஆளுமா?

 

முப்பதே வருடங்கள், பொறுத்திருங்கள்! முடிவு தெரிந்து விடும்!!

 

Wallace_Carothers,_in_the_lab

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ,,

அமெரிக்க இரசாயன நிபுணரான வாலஸ் ஹ்யூம் கரொதர்ஸ் (Wallace Hume Carothers 1895-1937) 1935ஆம் ஆண்டு நைலானைக் கண்டுபிடித்தார். அதைக் கண்டுபிடிக்க ஏழு வருடங்கள் அவர் கடுமையாக உழைக்க வேண்டிய்தாயிற்று. ஒரு சிறிய அதிர்ஷ்டமும் அவருக்குத் துணை செய்தது. நைலானைப் போன்ற ஒன்றை அவர் முதலில் தற்செயலாகக் கண்டு பிடிக்கவே, அதை மேம்படுத்தி தான் நினைத்தவாறு நைலானைக் கண்டுபிடித்தார்.

பட்டுப்பூச்சிகளைக் கொன்று அதிலிருந்து செய்யப்பட்ட பட்டு காலுறைகளின் விலை மிக அதிகம். ஆனால் நைலான் சாக்ஸ்களோ விலை  மிகவும் குறைவு. நைலான் முதன் முதலில் அமெரிக்காவில் 1940ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் தேதி உபயோகத்திற்கு வந்தது. 50 லட்சம் காலுறைகள் உற்பத்தி செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்றுத் தீர்க்கப்பட்டது! இரண்டாம் உலகப் போர் மூளவே நைலானுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டது. பாராசூட்டுகளில் நைலான் பயன்படுத்தப்படவே அதன் மதிப்பு இன்னும் அதிகமானது.

தான் கண்டுபிடித்த நைலான் சந்தையில் இப்படி சக்கைப் போடு போட்டு விற்பனை ஆவதைப் பார்க்க வாலஸ் ஹ்யூமுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

மிக்க மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட அவர் 1937இல் சயனைடைச் சாப்பிட்டுத் தன் உயிரைப் போக்கிக் கொண்டார். அவரது மனைவி அப்போது கர்ப்பிணி. வாலஸ் இறந்த பின்னர் அவருக்கு மகள் பிறந்தாள்.

நைலான் என்ற பெயர் வரக் காரணம் டூ பாண்ட் நிறுவனத்தின் இரு தலைமையகங்களான நியூ யார்க் மற்றும் லண்டன் ஆகியவை இணைக்கப்பட்ட வார்த்தை (New York LONdon) என்று சொல்வது வழக்கம். ஆனால் உண்மை அதுவல்ல. அனைவராலும் சுலபமாகச் சொல்லும் வார்த்தை எது என்று கண்டு பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அமைத்த வார்த்தையே இது. ஆனால் இதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களும் உண்டு. நுசில்க், வகாரா(வாலஸை கௌரவிக்கும் பெயர் இது) என்ற பெயர்களெல்லாம் பரிசீலிக்கப்பட்டு நைலான் என்ற பெயர் பின்னால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்போது நைலானின் உற்பத்தி ஆண்டொன்றுக்கு 54 லட்சம் டன்கள் என்ற அளவையும் தாண்டி விட்டது!

நைலான் இன்று பயன்படாத இடமே இல்லை!

******