கியூனிபார்ம் எழுத்தின் சுவையான வரலாறு (Post No.7288)

Written by london swaminathan

swami_48@yahoo.com

Date: 2 DECEMBER 2019

 Time in London – 14-35

Post No. 7288

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

மகுடம் சூட்டும் மரகதம்! (Post No.7287)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 2 DECEMBER 2019

 Time in London – 10-49 AM

Post No. 7287

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

30-11-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

மகுடம் சூட்டும் மரகதம்!

ச.நாகராஜன்

மரகதச் சிலைகள்

நவரத்தினங்களுள் பச்சை பசேலென ஒளிர் விடும் ரத்தினம் மரகதம்.

அன்னை மீனாட்சியின் சிலை மரகதத்தால் ஆனது என்பது ஒன்றே மரகதத்தின் அருளாட்சியைப் புலப்படுத்த வல்லது.

தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை நடராஜரின் திருவுருவமும் மரகதத்தால் ஆன ஒன்றே! வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும் நடராஜரின் திருவுருவம் திருவாதிரை உற்சவத்தின் போது மட்டும் சந்தனம் எடுக்கப்பட்டு காட்சியளிக்கும். சிறு அதிர்வுகள் கூட சிலைக்குப் பங்கம் விளைவித்து விடும் என்பதால் ஒரு வித தாள வாத்தியமும் சந்நிதியில் வாசிக்கப்பட மாட்டாது.

மரகத வண்ணன்

வில்லிபுத்தூரார் அர்ஜுனனும் துரியோதனனும் கண்ணனின் உதவி கேட்டு வரும் நிகழ்ச்சியை விவரிக்கும் போது கண்ணனை மரகதவண்ணன் என்று கூறிச் சிறப்பிக்கிறார்.

கம்பரோ இராமபிரானை வர்ணிக்கையில் அவரது மேனியிலிருந்து எழும் ஒளியால் சூரியனின் ஒளி மறைவதைக் குறிப்பிட்டு, ‘மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ, ஐயோ, இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்’ என்று ராமரின் அழியா அழகைப் பாராட்டுகிறார்.

ஆம், மரகதம் அழியா அழகுடையது தான்.

காலம் காலமாக உலக மக்களுடன் ஒன்றி விட்ட மணி மரகத மணி.

ஜோதிடத்தில் மரகதம்

ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசிக்காரர்களும்,கன்னி ராசிக்காரர்களும் அணிய வேண்டிய ரத்தினம் மரகதம். புத கிரகத்திற்கு உரியது மரகதம்.

எண் கணிதத்தின் படி ஐந்து என்ற எண்ணை பிறந்த தேதி எண்ணாகவும் கூட்டு எண்ணாகவும் உடையவர்கள் அணிய வேண்டியது மரகதமே.

மரகதத்தின் மற்ற பெயர்கள்

        மரகதம் எப்படித் தோன்றியது என்பதைப் பற்றி சிலப்பதிகார உரையில் ஊர்காண் காதையில் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகையில், “வலாசுரன் வயிற்றின் புறத்தைக் கொத்தி விழுங்கிய கருடன் அதனைக் கனைத்து உமிழ, அது வீழ்ந்து பல மலைகளிலும் ஊறிப் பிறந்த கற்கள் மரகதம் எனப்படும்” என்று குறிப்பிடுகிறார்.

கருடோற்காரம் எனவும் மரகத்தின் பெயராக அவர் குறிப்பிடுகிறார்.

நிகண்டுகள் மரகதத்தின் மற்ற பெயர்களாக, பச்சை, தோல், பரிமளம், புதல், மால் புந்தி ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றன.

மதுரை கலெக்டர் அளித்த மரகதக் காணிக்கை

மரகதம் பற்றி உலகெங்கும் சுவையான வரலாறுகள் ஏராளம் உண்டு.

மதுரையை ஆளும் மரகத மீனாட்சி பற்றி ஒன்றைப் பார்ப்போம். பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் ரோஸ் பீட்டர் என்பவர் (1812 முதல் 1828 முடிய) மதுரை கலெக்டராக இருந்தார்.

ஒருநாள் அவர் தூங்கும் போது பலத்த மின்னல் இடியுடன் ஒரு சூறாவளி எழுந்தது. ஒரு சிறிய பெண் ரோஸின் முன்னே தோன்றி உடனே கட்டிடத்திலிருந்து வெளியேறுமாறு கூறினாள். ரோஸ் பீட்டர் உடனே வெளியேறினார். அவர் வெளியே வந்ததும் ஒரு இடி கட்டிடத்தின் மேல் விழ, கட்டிடம் அடியோடு நொறுங்கிப் போனது. மிகவும் ஆச்சரியப்பட்ட ரோஸ் கனவில் தோன்றிய  பெண் யார் என விசாரிக்கத் தொடங்கினார். அது மதுரை மீனாட்சியே என்பதை உறுதிப் படுத்திக் கொண்ட அவர் தனது நன்றிக் காணிக்கையாக மதுரை மீனாட்சிக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட பாத அணிகளை  பக்தியுடன் சமர்ப்பித்தார். ஒவ்வொரு பாத அணியும் 28 தோலா (ஒரு தோலா என்பது சுமாராக 11.5 கிராம்) எடையுடன் இருந்தது. 412 சிவப்புக் கற்கள், 72 மரகதக் கற்கள், 80 வைரக் கற்கள், முத்துக்கள், வைடூரியம், நீலம் உள்ளிட்ட கற்கள் அவற்றில் பதிக்கப்பட்டிருந்தன. மரகதவல்லிக்கு காணிக்கையாக மரகதம் இப்படி வந்து சேர்ந்தது.

தர்மதேவதைக்கும் மரகதவல்லி என்ற பெயர் உண்டு. குபேரனுக்கு மரகதன் என்ற பெயரும் உண்டு.

விஷமகற்றும் மரகதம்

எகிப்திய நாகரிகம் உள்ளிட்ட பண்டைய நாகரிகங்கள் அனைத்திலும் மரகதத்தை அணிந்தால் கண் நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இருந்தது. அத்தோடு தீய கண்திருஷ்டியைப் போக்கவும் வலிப்பு வியாதி தீரவும் மரகத்தை அணிந்து கொண்டனர். தூய்மையான ஒளி பொருந்திய மரகதத்தைப் பார்த்தவுடன் கட்டுவிரியன், நாகப்பாம்பு ஆகியவற்றின் கண்கள் தெறித்து வெளியில் வந்து விழும் என்று அவர்கள் தங்கள் அனுபவ உரையைக் கூறினர்.

ரஸ ஜல நிதி தரும் தகவல்கள்

இனி பண்டைய பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி மரகதம் பற்றி ஏராளமான சுவையான கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறது.

நல்ல மரகதத்தின் ஏழு அம்சங்களாவன :-

  1. பச்சை வண்ணம் கொண்டிருக்கும் 2) கனமாக இருக்கும் 3) ஆனால் மிருதுவாக இருக்கும் 4) ஒளிக் கதிர்களைப் பீச்சி அடிக்கும் 5) வழவழப்பாக இருக்கும் 6) பிரகாசமாக  இருக்கும் 6) ஒப்படர்த்தி அதிகமாக இருக்கும்

மோசமான மரகதம் எப்படி இருக்கும்?

1) மஞ்சள் பழுப்பு நிறம் கொண்டது 2) கரடுமுரடானது 3) நீல வண்ணம் உடையது 4) இலேசானது 5) தட்டை வடிவமானது 6) அழகற்றது 7) கறுப்பாக இருப்பது 8) ஒழுங்கான வடிவமற்று இருப்பது

இப்படிப்பட்ட மரகதங்களை விலக்க வேண்டும்.

மரகதத்தின் பயன்கள் :

 (உரிய முறைப்படி பஸ்மமாக ஆக்கப்பட்ட போது) மரகதம் ஜுரத்தைப் போக்கும். வாந்தியை நீக்கும். விஷத்தை முறிக்கும். ஆஸ்த்மாவைப் போக்கும். திரிதோஷத்தை அகற்றும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். மூலத்தைப் போக்கும். ரத்த சோகையை விலக்கும். உடல் வீக்கத்தைத் தணிக்கும். வலிமையைக் கூட்டும்.

மரகத சுரங்கத்தில் உள்ள அனைத்துமே விஷத்தை நீக்கும் வல்லமை வாய்ந்தது. கொடிய விஷமுள்ள பாம்பு கடிக்கு – மூலிகை உள்ளிட்ட மற்ற அனைத்து மருந்துகளினாலும் குணப்படுத்த முடியாத நிலையிலும் கூட – மரகத பஸ்மமே சிறந்த மருந்து.

நல்ல உயரிய மரகதத்தின் குணங்கள் :

நல்ல பச்சை வண்ணமும் மிருதுவாகவும் ஒளி பளீரென மின்னுவதாகவும் வெளியிலிருந்து கதிர்கள் ஊடுருவும் படியான மரகதம் அருமையானவை. அதன் உட்புறம் தங்கத் துகள்களால் மின்னுவது போல இருக்கும். வண்ணம் சீராக இருப்பதுடன் வடிவ அமைப்பு அற்புதமாக இருக்கும். சூரியக் கதிர்கள் அதன் மீது படும் போது அது இருக்கும் அறையே ஒளிரும்! அதைப் பார்த்தாலே மனம் அமைதியுறும்; மகிழ்ச்சி பொங்கும்.

மரகதத்தைச் சோதிக்கும் விதம்

முதலாவது முறை

 அதை ஒரு கல்லினால் கீறும் போது அது கண்ணாடியாக இருந்தால் பல துண்டுகளாக உடைந்து வீழும். நிஜமான மரகதம் இப்படி உடையவே உடையாது.

இரண்டாவது முறை

ஒரு இரும்புக் கம்பியினால் மரகதத்தைக் கீறி விட்டுப் பின்னர் எலுமிச்சையினால் பூசினால் நிஜ மரகதம் ஒளிரும். போலிகள் ஒளி இழந்து காணப்படும்.

மூன்றாவது முறை

ஒரு மரகதம் இன்னொரு மரகதத்தால் உடைபட்டால் அதை அணியக் கூடாது. அப்படிப்பட்ட கல்லை வாங்கவும் கூடாது.

நான்காவது முறை

பட்டுத் துணியினால் அழுத்தித் துடைக்கப்படும் போது போலி மரகதம் அதன் ஒளியை இழக்கும்; நல்ல மரகதமோ ஒளியை அதிகரித்துக் காட்டும்!

ஐந்தாவது முறை

மரகதத்தின் எடையை அதே அளவுடன் கூடிய நீரின் எடையுடன் ஒப்பிட வேண்டும். பின்னர் நீரின் அதே அளவுடன் கூடிய ஒரு கல்லின் எடையுடன் ஒப்பிட வேண்டும். கிடைத்த எடையில் இரண்டாவதாகக் கிடைத்தது  முதலில் கிடைத்ததை விட மிகவும் குறைவாக இருந்தால் அது வெறும் கண்ணாடி தான் என்பதை அறியலாம் ; அல்லது மரகதமில்லாத வேறொரு கல் எனத் துணியலாம்.

ஆறாவது முறை

மரகதம் போன்று தோற்றமளிக்கும் கற்களை இனம் காண்பது எளிது. வண்ணம் தெளிவாகவும் அதிகமாகவும் இருப்பது தான் உண்மை மரகதம். (அதாவது ஒரு நல்ல மரகதக் கல்லை பக்கத்தில் வைத்துக் கொண்டு போலியா உண்மையா என்பதைக் கண்டுபிடித்து விடலாம்)

இவ்வளவு அரிய விஷயங்களையும் ரஸ ஜல நிதி  நமக்குத் தெரிகிறது. ஒப்படர்த்தி எனப்படும் Specific Gravity பற்றி அந்தக் காலத்திலேயே நன்கு அறிந்திருந்தனர் என்பதை ரஸ ஜல நிதியின் மரகதம் பற்றிய பகுதியால் நன்கு அறிய முடிகிறது!

 

அறிவியல் தகவல்கள்

‘மோ அலகின் படி மரகதத்தின் கடினத் தன்மை 7.5 முதல் 8 ஆகும்.

Specific Gravity சராசரியாக 2.6 இருக்கும்.

வைரத்திற்கு உள்ள நான்கு ‘C’க்கள் – Colour, Clarity, Cut, Carat weight – நிறம், தெளிவு, பட்டை தீட்டல், கேரட் எடை  ஆகியவை – மரகதத்திற்கும் உண்டு. தரம் பிரிக்கையில் வண்ணத்திற்கே முதலிடம் தரப்படும்.

அதிசய மரகத புத்தர்

 பாங்காக்கில் உள்ள தியானம் செய்வது போன்ற யோக நிலையில் காணப்படும் புத்தர் மரகதத்தால் ஆனது. 26 அங்குலம் உயரம் உள்ள இந்தச் சிலை மரகத புத்தர் ஆலயத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டிருக்கிறது. இதை வாட் ப்ரா க்யூ என அழைக்கின்றனர்.

        இந்தச் சிலை பற்றி ஏராளமான சுவையான வரலாறுகள் உண்டு. அவற்றில் ஒன்று இது:

பாடலிபுத்ரத்தில் (இன்றைய பாட்னா நகரில்) நாகசேனர் என்னும் புத்த துறவி இதை உருவாக்கினார். இதை உருவாக்குவதில் விஷ்ணுவும் இந்திரனும் அவருக்கு அருள் புரிந்தனர். நாகசேனர் இந்த மரகத புத்தர் பிரபலமடையப் போவதை முன்கூட்டியே கணித்துச் சொல்லி விட்டார் இப்படி :” மிகப் பெரும்  புகழை ஐந்து தேசங்களில் – ஸ்ரீ லங்கா, ராமலக்கா, த்வாராவதி, சியங் மாய் மற்றும் லாவோஸ் ஆகிய தேசங்களில் – இது பெறப் போகிறது.”

பாடலிபுத்ரத்தில் இருந்த இந்த மரகத புத்தர் உள்நாட்டுப் போரினால் சேதமடையாமல் இருப்பதற்காக ஸ்ரீ லங்காவிற்கு 457ஆம் ஆண்டு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கிருந்து அனுருத் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க பர்மாவிற்கு அனுப்பப்பட்டது, ஆனால் வழியில் ஒரு சூறாவளியில் அதை எடுத்துச் சென்ற கப்பல் திசை மாறி கம்போடியாவை அடைந்தது. பின்னர் பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு இப்போதிருக்கும் பாங்காக்கை அடைந்தது.

கொலம்பியா மரகதம்

தென்னமரிக்காவில் உள்ள கொலம்பியாவில் உள்ள மரகதச் சுரங்கங்கள் பிரபலமானவை. மரகத சந்தையில் 70 முதல் 90 சதவிகிதம்  மரகதத்தை உலகிற்கு வழங்குவது கொலம்பியாவே.

தமிழ்நாட்டில் கோவை,காங்கேயம் பகுதியிலும், ஜெய்ப்பூர் பகுதியிலும் நல்ல மரகதம் கிடைக்கிறது.

பிரேஜில் நாட்டில் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் முதன் முதலாக ‘வனடியம் பெரில்’ என்னும் மரகதம் கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இது மரகதம் தானா என்ற சர்ச்சை இன்றளவும் தொடர்கிறது. அமெரிக்கா ‘வனடியம் பெரிலை’ மரகதம் என்று அங்கீகரித்துள்ளது. ஆனால் இதர நாடுகள் இதை மரகதம் என்று அங்கீகரிக்கவில்லை.

செயற்கை முறையிலும் மரகதம் கடந்த அறுபது ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இவை ஒரிஜினல் மரகதம் போல அவ்வளவு சிறப்பானவையாக இல்லை.

 நமது அறநூல்கள் கூறும் அனைத்துப் பயன்களும் இயற்கை மரகதத்திற்கே பொருந்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இன்னும் அக்னி புராணம், கருட புராணம் ஆகியவற்றில் கூறப்படும் செய்திகளையும் முழுவதுமாக அறிந்தால் நாம் மரகத நிபுணராக ஆகி விடுவோம்; நம்மிடம் மரகதம் பற்றிய தகவல் களஞ்சியம் ஒன்று இருக்கும்!

கிளியோபாட்ராவின் மகுடம்

மரகதத்தைப் பற்றிய மகுடமான செய்தியும் உண்டு!

எகிப்திய மன்னர்களும் சக்கரவர்த்திகளும் மரகதத்தை உயரிய அந்தஸ்தைத் தரும் ஒன்றாகக் கருதினர்.

உலகின் பேரழகியும் பெரும் சாம்ராஜ்யத்தின் ராணியுமான கிளியோபாட்ராவிற்கு மரகதம் என்றால் உயிர். அதை மகுடம் உள்ளிட்ட தனது அனைத்து ஆபரணங்களிலும் பதித்து மகிழ்ந்தார்; உலகினரும் அவரைக் கௌரவித்தனர்.

ஸ்பெயினிலும் அனைத்து மன்னர்களும் மரகத கிரீடத்திற்குத் தனி கௌரவத்தை வழங்கினர்.

தி க்ரௌன் ஆஃப் ஆண்டஸ் (The Crown of Andes) என்ற ஆண்டஸ் மகுடத்தில் இருந்த மிகப் பெரும் மரகதம்  உலகப் புகழ் வாய்ந்த ஒன்று!  இப்போது அடாகுலாபா மரகதம் என இது அழைக்கப்படுகிறது. இங்கா வமிச மன்னரான அடாகுலாபா என்பவரை பிரான்ஸிஸ்கோ பிஜாரோ என்பவர் வெற்றி கொண்டபோது எடுத்துச் செல்லப்பட்டது இந்த மகுடம்!

கிளியோபாட்ரா ராணியின் மகுடம் ஒரு புறம் இருக்கட்டும், என் இல்லத்திற்கு நானே ராணி என்று உங்கள் அன்புக்குரியவர் சொன்னால் அதுவும் சரி தான்! அவருக்கு ஒரு மரகத மகுடத்தைச் சூட்ட வேண்டியது தான்!

மரகதம் மரகதமே தான்!

****

.

Bhartruhari Notes – 2 (Post No.7286)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 DECEMBER 2019

 Time in London – 20-50

Post No. 7286

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

Verse 25
Without wealth all these merits— character, virtues, heroism, high birth— are all like worthless bits of straw .
Compare this with Tirukkural 247
All those without riches can have no enjoyments in this world so also all those without compassion denied the blessings of the world above.


Verse 26
Interesting story about a snake
A snake was starving inside a tightly closed basket and a rat made a hole in the basket to get some food, but it was eaten by the snake. Not only that, the snake  used the same hole to escape.
Moral- only chance/luck causes the rise and fall of man.

Verse 27
Stay away from bad people even if they are intelligent.
Isn’t a serpent with a gem on its hood an agent of danger?


Nagaratna, Cobra Jewel, is found in ancient Tamil and Sanskrit literature.

Verse 28
Another interesting story
Look at the boiling milk
When milk is boiled it suffers. But his friend water comes to its rescue. When water is sprinkled on boiling milk, it is subdued. it is an example for good friendship.

Verse 30
Dog eats meatless bone and thinks the tasty blood comes from it. Actually it’s dogs blood oozing out from its own mouth

Verse 33
Swati star and pearls!
It is in Tamil literature and Kalidasa.
If a drop of water falls on a hot pan, it makes hissing noise.
If it falls on a lotus leaf, it looks like a pearl .
If it falls in the mouth of an oyster on Sati star day , it turns into a pearl.
Man also attains good or bad depending upon the company he keeps.

Verse 34
The lamp on top of a hill or the lamp inside a pot are two proverbs in Tamil.
Compare B’s verse below,
As it is with clusters of blossoms wise men have two destinies—
To grace the summit of the world or wither in the forest.

Verse 35
this verse is very interesting. This is the lament of a servant. Most of us have come across the same situation in our work spot.

Servant says
If I talk I get the bad name of Talkative,
If I keep quiet they call me Dumb
If I go near they accuse me of arrogance
If I go faraway they call me incompetent
The rules of service are a mystery.

To be continued……..

பூமிக்கு நூறு ஆண்டுகளுக்கு ஆபத்து இல்லை (Post No.7285)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 DECEMBER 2019

Time in London – 19-10

Post No. 7285

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

டுமீல், டுமீல் கிளின்ட் ஈஸ்ட்வுட் (Post No.7284)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 DECEMBER 2019

Time in London – 7-23 AM

Post No. 7284

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

திரைப்பட  நடிகர்

பிறப்பு – 31 மே  1930

தற்போது வயது- 89

நான் எழுதிய கட்டுரை தினமணியில் 1992ல் பிரசுரமானது

Clinton Eastwood Jr. is an American actor, filmmaker, musician, and politician. After achieving success in the Western TV series Rawhide, he rose to international fame with his role as the Man with No … Wikipedia

Born31 May 1930 (age 89 years), San Francisco, California, United States

Height1.93 m

ChildrenScott EastwoodFrancesca EastwoodAlison EastwoodMORE

SpouseDina Eastwood (m. 1996–2014), Maggie Johnson (m. 1953–1984)

TV showsRawhideMrs. Eastwood & CompanyThe BluesThe Lone Ranger: Extras

அத்வைதத்தை விளக்க ஒரு அழகிய குட்டிக் கதை! (Post No.7283

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 1 DECEMBER 2019

Time in London – 6-34 AM

Post No. 7283

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

அத்வைதம் என்றால் இரண்டு என்பதே இல்லை; ஒன்று தான் என்று உபதேச உரைகள் கூறுகின்றன. ஏகம் ஏவ; அத்விதீயம் ப்ரஹ்ம

ப்ரஹ்மம் ஒன்றே; இரண்டு இல்லை!

இது எப்படி? நான் இதோ இருக்கிறேன்.

நானே இல்லை; ப்ரஹ்மம் தான் என்பது எப்படிச் சரியாகும்?

கேள்வி நல்ல கேள்வி தான்!

இதை விளக்க ஒரு அருமையான குட்டிக் கதையை ஸ்வாமி ஸர்வப்ரியானந்தா கூறுகிறார்.

ஸ்வாமிஜி நியூயார்க்கில் உள்ள வேதாந்தா சொஸைடியின் பொறுப்பு அமைச்சர் (Minister-in-charge of the Vedanta Society of New York, USA).

அவர் பிரபுத்த பாரத ஜனவரி 2019 யோகா சிறப்பிதழில் ‘அஸ்பர்ஷ யோகா’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இந்தக் கதையைக் கூறுகிறார்.

கதைக்கு வருவோம்; கருத்தைப் புரிந்து கொள்வோம்!

***

காசி இளவரசி!

முன்னொரு காலத்தில் கலைகளைப் பெரிதும் ஆதரித்து வந்த ஒரு மன்னன் ஆண்டு கொண்டிருந்தான். ஒரு சமயம் அவனது அரசவையில் நாடகம் ஒன்று நடத்த ஏற்பாடானது. அந்த நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் காசியின் இளவரசி பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு ஏற்ற பெண் குழந்தை கிடைக்கவில்லை.

ராணி கூறினார்;”பரவாயில்லை! நமது இளவரசனையே அந்தக் காசி இளவரசி பாத்திரத்தில் நடிக்க வைத்து விடுவோம்”

இளவரசனுக்கு வயது ஐந்து. அவனுக்கு இளவரசியின் அலங்கார ஆடைகள் அணிவிக்கப்பட்டன. அவன் காசி இளவரசியாக்கப்பட்டான்.

நாடகம் அருமையாக நடந்தது.காசி இளவரசி பாத்திரத்தில் இளவரசன் அற்புதமாக நடித்து விட்டான். அனைவரும் பாராட்டினர்.

ராணி அழகிய காசி இளவரசியை அப்படியே ஒரு ஓவியமாக வரையுமாறு தன் அரசவை ஓவியருக்குக் கட்டளை இட்டார்.

ஓவியமும் பிரமாதமாக தத்ரூபமாக அப்படியே வரையப்பட்டது.

பதினைந்து வருடங்கள் உருண்டோடின. இளவரசன் வளர்ந்து அழகிய வாலிபன் ஆனான். இளவரசனுக்கே உரித்தான அனைத்துச் செயல்களையும் நன்கு அவன் செய்ய ஆரம்பித்தான்.

ஒரு நாள் அவன் தன் அரண்மனையில் பழைய பொருள்கள் உள்ள அறைக்குச் சென்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போது அழகிய ஓவியம் ஒன்று அவனைக் கவர்ந்தது.

அழகிய காசி இளவரசியின் ஓவியம் தான் அது!

“ஆஹா! என்ன அழகு! மணந்தால் இந்தப் பெண்ணையே தான் நான் மணந்து கொள்வேன். இவளை மணக்காவிட்டால் நான் சந்தோஷமாகவே வாழ முடியாது” என்ற எண்ணத்தில் மூழ்கிய இளவரசன் அது பற்றி யாரிடமும் சொல்லவில்லை. அவன் கொஞ்சம் வெட்கப்பட்டதால் தாயாரிடமோ தந்தையிடமோ கூட இது பற்றிப் பேசவில்லை.

இளவரசன் சில நாட்களாக ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதை அனைவரும் கவனித்தனர்.

கடைசியில் வயதான மந்திரி அவனை அணுகி, “இளவரசரே!சில நாட்களாக ஏதோ ஒரு  சிந்தனையிலேயே  ஆழ்ந்திருக்கிறீர்கள். என்னிடம் அதைச் சொல்லக் கூடாதா?” என்று மெல்ல வினவினார்.

இளவரசன் மெல்ல வாய் திறந்து,”நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன்.” என்றான்.

“நல்லது, அந்தப் பெண் யார்?” என்று கேட்டார் மந்திரி.

“ஓ! அவள் காசி இளவரசி” என்றான் இளவரசன்.

“நல்லது! ஒரு இளவரசி தான் உங்களுக்கு ஏற்றவள். அவளை எப்போது பார்த்தீர்கள்?”

“அவளை நான் பார்க்கவில்லை. ஆனால் அவளது ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன்.”

“சரி, அந்த ஓவியம் எங்கே இருக்கிறது?”

“அது ஒரு அறையில் இருக்கிறது. வாருங்கள், உங்களுக்கு அதை நான் காண்பிக்கிறேன். அந்த ஓவியம் அவள் ஐந்து வயதாக இருக்கும் போது வரையப்பட்ட ஒன்று.”

இருவரும் அந்த அறைக்குச் சென்றனர். இளவரசன் காசி இளவரசியின் ஓவியத்தை மந்திரிக்குக் காண்பித்தான்.

மந்திரிக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது.

அவர் இளவரசனிடம் கூறினார்:”இளவரசே! அது காசி இளவரசியின் படம் இல்லை.”


“அது காசி இளவரசியாக இல்லாது போனால் போகட்டும்; யாராக இருந்தாலும் சரி, அவளை தான் நான் மணப்பேன்.”

“இளவரசே! பல ஆண்டுகளுக்கு முன்பு நமது அரண்மனையில் ஒரு நாடகம் நடந்தது.அந்த இளவரசி பாத்திரத்தில் நடிக்க யாரும் இல்லை. அதற்குத் தகுதி வாய்ந்தவர் தாங்கள் தான் என்று எண்ணி உங்களுக்கு அந்த வேஷத்தை அளித்தோம். அந்தக் காசி இளவரசி உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. நீங்களே தான் அது!”

இப்போது இளவரசனின் மனதில் இருந்த ஆசை என்ன ஆனது? அது உடனடியாக மறைந்து விட்டது. ஆனால் அது ஏன் உடனே மறைந்தது?

அது நிறைவேற முடியாத ஒன்று என்பதாலா?

இல்லை. காசி இளவரசி அந்த இளவரசரைத் தவிர வேறு யாரும் இல்லை!

அவரே தான் காசி இளவரசி! எப்போதுமே அந்த இளவரசனே தான் காசி இளவரசி!!

அந்த இளவரசரைத் தவிர வேறு ஒன்று உண்டு என்ற இரட்டை என்ற எண்ணம் அவரது ஆசையால் உதித்தது. அந்த இரட்டையை அவர் விரும்பினார். அதனால் அவருக்கு ஒரு சங்கல்பம் உருவானது.

அது அவரது மனதில் வளர்ந்தது. ‘எனக்கு இது வேண்டும்’ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

இதுவே இன்னொரு விதமாகவும் இருந்திருக்கக்கூடும். “இது மோசம். எனக்கு இது வேண்டாம்” என்று இருந்திருக்கக் கூடும்.

எனக்கு இது வேண்டும் என்பது ராகத்தினால் – பற்றினால் உருவானது.

எனக்கு இது வேண்டாம் என்பது த்வேஷத்தினால் உருவாவது.

அந்த ராக-த்வேஷம் தான் சம்சாரம்!

ஏன் சங்கல்பம் மறைந்தது? ஏனெனில் இரட்டை என்பது மறைந்தது.

“என்னைத் தவிர காசி இளவரசி என்ற இரட்டை இல்லை” –

இதைத் தான் அந்த இளவரசன் உணர்ந்தான்.

த்வைதம் – இரட்டை – மறைந்தது.

சங்கல்பம் மறையும் போது ராகம்-த்வேஷம், பற்று- வேண்டாமை இரண்டும் போகிறது.

ஆத்மா மட்டுமே நிற்கிறது!

ஆத்மனுக்கு எதை விட வேண்டும்? அல்லது எதைச் சாதிக்க வேண்டும்?

அது எப்போதும் என்னுடனேயே இருக்கிறது. அது எப்போதும் நானாகவே இருக்கிறது.

***

அற்புதமான இந்தக் கதை ‘மனமே இல்லை’ என்ற நிலைக்கான ஒரு சரியான உதாரணக் கதையாகும்.

ஸ்வாமிஜியின் கதையைச் சற்று சிந்தித்தால் உயரிய உபதேசம் ஒன்றைப் பெற்றவர்களாவோம்.

***

நன்றி:Prabuddha Bharata : January 2019 issue – Yearly Subscription rs 150/ only; email:prabuddhabharata@gmail.com

பிரபுத்தபாரதம் ஸ்வாமி விவேகானந்தரால் 1896ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

year 1897 issue

மூலிகைக் கேள்வி பதில் (Post No.7282)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time in London – 17-25

Post No. 7282

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

1.குப்பையில் கிடந்தாலும் பயனுள்ள மூலிகை . அது என்ன?

2.வல்லாரை வல்லவராக்கும் நினைவாற்றலை  வழங்கும் .மூலிகை . அது என்ன?

3. மேனியை பொன்னக்குமாம் .மூலிகை . அது என்ன?

4காமக்கண்ணி என்னும் சங்கப்   புலவர் காமாட்சி என்பதை அறிவோம்.

கறுப்புக் கண்ணி மூலிகை எது ?

5.சின்னப்  பெண்   என்னும் மூலிகை எது ?

6.மஞ்சள் காமாலைக்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?

7.நப்பசலை என்ற சங்கப் புலவரை அறிவோம் . அவர் பெயரில்

என்ன தாவரம் உளது?

8.கை இல்லாதவன் பெயரில் ஒரு மூலிகையா ?

9.ஸ்யவனப் பிராஸ் எனும் லேகியத்தின் முக்கிய தாவரம் என்ன?

10.காலையில் சுகமாக பேதியை உண்டாக்கும் காய் எது?

11. இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்க்கு வெளிநாட்டினரும் உபயோகிக்கும் மூலிகை எது ?

12.தண்ணீரை சுத்தப்படுத்தும் காய் எது?

Answers

மூலிகைக்  கேள்வி பதில்

1.குப்பைமேனி

2.வல்லாரை

3.பொன்னாங்கானி (பொன் ஆகும் காண்  மேனி)

4.கரிசலாங்கண்ணி

5.சிறியாநங்கை

6. கீழாநெல்லி

7.பசலைக்கீரை

8.முடக்கத்தான்

9.நெல்லிக்காய்

10.கடுக்காய்

11.சர்ப்பகந்தி

12. தேற்றான்கொட்டை

BHARTRUHARI NOTES- 1 (Post No.7281)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time in London – 14-59

Post No. 7281

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

FOLLOWING ARE THE NOTES WRITTEN BY ME ON 8TH OCTOBER 1995

I READ Bhartuharis’ Poems Edited by Theodore de Barry, Colombia University Press,1967.

1.I Ching, Chinese traveller, who travelled in India between 671 CE and 695 CE refers to Bhartruhari.

2.B’s Satakatryam (3×100 Niti, Srngara and Vairagya Satakam) contains 21 meters in Sanskrit.

3.Punning is used to strengthen the antithesis between amorous passion and peace.

Pun words  — Passion – Peace

Kesa samyamina sruther (verse 139)

Samyamina- tied up  — self control

Param param gathe – extended to ear—gone to the opposite shore of worldly existence

Sruti – ear – Vedas

Dwijaana – teeth – twice born men

Mukta – pearl – released, liberated

Xxx

Verse 1- Shiva is worshipped as light in the minds of Yogis

Verse 2 – Passion smites even those bereft of life

Verse 3 – Don’t think of suicide, don’t desire wealth of others, Speak the Truth, Do charity , Don’t talk about women’s conduct, Control your desires, Respect elders- this is the gist of scriptures.

Verse 5 – yathaa kincit jnoham……

compare Tirukkural 1110 (the more I come to know now, exposed my ignorance.

When I knew but a little, I was blinded by pride, as an elephant by rut; with my mind so stained, I believed “I am a sage”.

But slowly I learned from the presence of men wise in myriad ways.

My pride was like fever, subdued and I knew, “I am a fool”.

Verse 7 – like a string of pearls napped- this simile is in Gita, Tirukkural, Karnan- Bhanumati game

Verse 8 – you can wake up a sleeping man but not a man who is pretending to sleep is a Tamil proverb.

An ignorant man is readily pleased

More readily is a sage

But a man distorted by trifling knowledge

Brahma himself cannot sway.

Compare He who knows not……………… (proverb)

Verse 9 –

You cannot straighten the tail of a dog is a Tamil proverb

B says you can get gems by opening the mouth of a sea animal (Makara Mani), you may cross the roaring seas, you can wear a snake as a garland, but you cannot change a fool.

Verse 11 – mani sanollita

A warrior hero wounded at arms

And men whose riches are spent in alms.

Verse 15- hartur yati na ko charam

It is about education/ learning; it is in a later time Tamil poem

It eludes the pillage of thieves

Promotes endless joy

Bestowed on those who beg

It was greater yet

And perishes not despite the end of time

Wisdom is a treasure deep within

Kings renounce your arrogance

Towards its masters

Who can rival them?

Also Tamil poet Thiruvalluvar in Tirukkural Chapters 40, 41, 42

Verse 17

Tamil proverb is A tiger never eats grass even if it s very hungry.

And B says

How can a lion , proudest of the creatures,

Stop to feed on withered grass?

Kim jirnam trunam aththimana mahatma agre cara kesari

Verse 18

Walk in the footsteps of great men

Who revealed to the saints this vow

As severe as a sword

Compare Longfellow’s English poem

Kalidasa and Tamil poet Kamban also say that the ancient poets showed them the path .

Verse 19

Tri karana suddhi- this unique to Hindus. They believe that word and deed and thought  must be one and then only one can do wonders.

Manasi, vacasi, kaye (Mano, Vak, Kaya)

This concept is found from Himalayas to  Kanyakumari and no where else in the world.

Verse 20

Greatness of ocean – it supports Vishnu, weight of the deep water and Vadavagni.

It is also in Bhagavad Gita (2-70), Panca Tantra, Kalidasa and Tamil literature

Verse 22

About fate—B gives the gist of three couplets in Tirukkural. Tiruvaluvar, author of Tirukkural sings about the influence of fate in chapter 38.

Most famous Tamil epic is based upon fate.

But yet Hindus believe God can change anything over ruling written fate (Hindus believe that Brahma has already written t on your head; it may mean actual lines n one’s skull or one’s thinking process)

In one of the Shiva temples in Tamil Nadu Shiva is called Mr Effort (Muyarchinathar)

Tiruvalluvar also says in Couples 619, 620 and 1023

B says

We would bow to the gods

But even they submit to destiny’s sway

We would pay destiny homage

But it can only grant reward

In accord with our karma

Nay, if the Karma is the source of all reward

What need have we for destiny or deities?

Our fealty is to karma

Under which even destiny crumbles

To be continued………………………………

தனிமையில் கடல் தாண்டிய வீராங்கனை (Post No.7280)

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 8-46 am

Post No. 7280

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

அட்லாண்டிக் கடல் கடந்த வீராங்கனையின் சுவையான அனுபவம் பற்றி 1992-ம் ஆண்டில்  எழுதிய  கட்டுரை இது

பெர்த் கண்ட்ரோலும் டெத் கண்ட்ரோலும்! ரமணரின் அறிவுரை! (Post No.7279)

Written by S NAGARAJAN

swami_48@yahoo.com

Date: 30  NOVEMBER 2019

Time  in London – 7-41 am

Post No. 7279

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

ச.நாகராஜன்

வெளிநாட்டிலிருந்து ஒரு பத்திரிகையாளர் பகவான் ரமண மஹரிஷியைத் தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவரிடம் அவர், “பகவான்! நாங்கள் பெர்த் கண்ட்ரோலுக்காக (குடும்பக் கட்டுப்பாட்டிற்காக) ஒரு இயக்கம் ஆரம்பிக்கப் போகிறோம். பெர்த் கண்ட்ரோல் (Birth Control) பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? அதை எங்கள் பத்திரிகையில் வெளியிடுவோம்” என்றார்.

ரமணர் மௌனமாக இருந்தார்.

வந்த பத்திரிகையாளர் திருப்பித் திருப்பித் தான் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டிருந்தார்.

உடனே பகவான், “அன்பரே! நீங்களும் நானும் ஏற்கனவே பிறந்து விட்டோம். அதை இந்த நிலையில் கட்டுப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் நீங்களும் நானும் நிச்சயமாக ஒரு நாள் இறக்கப் போகிறோம். ஆகவே அது பற்றி நீங்கள் இன்னும் அதிகக் கவலைப்பட வேண்டாமா? தயவுசெய்து டெத் கண்ட்ரோல் (Death Control) பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள்!”

வந்த பத்திரிகையாளர் நகர்ந்தார்.

என்ன ஒரு அற்புதமான உபதேச உரையை ரமண மஹரிஷி அருளினார் பாருங்கள்!

(இமய மலையில் வசிஷ்ட குகையில் வசித்து வந்த சாந்தானந்தா பூரி கூறிய சம்பவம் இது)

***

மேலை நாட்டு எழுத்தாளரான பால் பிரண்டன் கூறியுள்ள சம்பவம் இது:

“பக்தர்களும் ஆசிரமத்திற்கு வருகை புரிந்தோரும் ஹாலில் குழுமி இருந்த போது யாரோ ஒருவர் ஹாலுக்குள் நுழைந்து அந்த டவுனில் எல்லோரும் அறிந்த ஒரு பிரபலமான கிரிமினல் இறந்து விட்டார் என்ற செய்தியை அறிவித்தார். உடனே அவரைப் பற்றி அனைவரும் பேச ஆரம்பித்தனர். அவரது இயல்பு, அவர் செய்த குற்றங்கள், அவரது குணாதிசயத்தில் மிக மோசமான அம்சங்கள் என்பது போன்றவற்றைப் பற்றிப் பலரும் கூற ஆரம்பித்தனர்.

இந்தப் பேச்செல்லாம் முடிந்த பிறகு மஹரிஷி தனது முதல் தடவையாகத் தன் வாயைத் திறந்தார். அவர் கூறினார் :” அது சரி, அவர் எப்போதும் தன்னை சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தார். ஏனென்றால் அவர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பது வழக்கம்.”

***

வேளச்சேரி ரங்க ஐயர் என்பவர் பகவான் ரமணரின் பள்ளிப்படிப்புக் காலத்தில் வகுப்புத் தோழராக இருந்தவர். அவர் தனது ஒரு அனுபவத்தை இப்படி விளக்கியுள்ளார்.

“ஒரு முறை நான் ஸ்காந்தஸ்ரமத்தில் பகவானை விட்டு சிறிது நேரம் வெளியில் சென்றேன். அவர் அப்போது உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். நான் திருப்பி வந்த போது அவர் வெளியில் ஒரு படுக்கையில் அமர்ந்திருந்தார். அதைப் பற்றி ஒன்றும் நினைக்கவில்லை நான்.

ஆனால் ஆசிரமத்தின் உள்ளே சென்ற போது அவரை எப்படிப் பார்த்தவாறு வெளியில் சென்றேனோ அதே போல அவர் உள்ளேயே இருந்தார். இதைப் பற்றி பகவானிடம் நான் சொன்ன போது அவர் சிரித்தவாறே கூறினார் :” அதை அப்போதே ஏன் சொல்லவில்லை? அந்தத் திருடனை அப்போதே நான் பிடித்திருப்பேனே!”

“அசாதாரணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பகவானின் பதில் இப்படித்தான் இருக்கும்! இப்படிப்பட்ட நிகழ்வுகளை அவரிடம் சொன்னால் அவர் அதை ஒதுக்கி விடுவார் அல்லது அதை ஜோக்காக எடுத்துக் கொண்டு விடுவார்.  அற்புத நிகழ்வுகளில் தனது பக்தர்கள் இழுத்துச் செல்லப்பட்டு தங்கள் முக்கிய லக்ஷியமான ஆத்மனை அறிவது என்பதை விட்டுவிடக் கூடாதே என்பதால் தான் அவர் இப்படிச் செய்தார்.”

***

பகவான் ரமண மஹரிஷியின் வாழ்க்கையில் இது போன்ற அற்புத நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. அதைப் படிப்பது ஒரு தெய்வீக அனுபவமாக இருக்கும்!

SUBHAM