கம்பனும் காளிதாசனும் சொன்ன அதிசயச் செய்திகள்

Waitomo-glow-worm-New-Zealand
Glow worms in New Zealand Waitomo Caves

தமிழ் இலக்கியம், காளிதாசனில் மின்மினிப் பூச்சி

கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:- 1110; தேதி 16 ஜூன் 2014.

கம்பனும் காளிதாசனும் புகழ் பெற்ற கவிஞர்கள். வடமொழியில் ஏழு நூல்கள் எழுதிய காளிதாசனின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. எப்படி சங்கத் தமிழ் நூல்களைக் கல்லாதோருக்கு, இந்திய கலாசாரம் பற்றிப் பேச அருகதை இல்லையோ அப்படிக் காளிதாசனைக் கல்லாதோரும் இந்தியப் பண்பாடு பற்றிப் பேச அருகதை இல்லாதோர் ஆகிவிடுகின்றனர். ஆயிரம் உவமைகளுக்கு மேலாக அள்ளித் தெளித்து அறுசுவை உண்டி – செவிக்கு உணவு—படைத்திருக்கிறார் காளிதாசர்!!

கம்பன் புகழைப் பாரதியார் பல இடங்களில் பாடிப் பரவியதில் இருந்து அவனுடைய மேன்மையை நாம் உணரலாம். கம்பனும் காளிதாசனும் ‘’மின்மினிப் பூச்சி’’ பற்றி சில அதிசயச் செய்திகளைக் கூறுகின்றனர். இது தவிர அகநானூற்றுப் புலவர்களும் நற்றிணைப் புலவர்களும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய சில பாடல்கள் காளிதாசன் சொல்லும் ரகசியப் புதிரை விடுவிக்கிறது. இயற்கை வரலாற்று நிபுணரும், பி பி சி டெலிவிஷன் படத் தயாரிப்பாளருமான டேவிட் அட்டன்பரோ காட்டிய சில காட்சிகளைப் பார்த்தோருக்கு காளிதாசன் சொன்னது இதுதானோ என்று வியக்கவும் செய்வர்.

Fairies-nagoya city
Fireflies in Nagya City, Japan.

கம்பன் சொன்ன செய்தி
இந்திய கிராமப் புறங்களில் இரவு நேரத்தில் பயணம் செய்வோர் மின்மினிப் பூச்சிகளைக் கண்டிருப்பர். இந்த மின்மினிப் பூச்சிகளை, குருவிகள் பிடித்துச் சென்று தனது கூடுகளில் வைத்து மகிழும். கூடுகளுக்கு மின்சார விளக்குப்போடுவது போல இவைகள் வெளிச்சம் தருவதால் அவைகள் இப்படிச் செய்கின்றன போலும். இந்தக் காட்சியை கம்பன் பால காண்டத்தில் வருணிக்கிறான்:–

அயோத்தி மாநகரம் செல்வச் செழிப்பில் மிதக்கிறதாம். அங்கே கோழிகள் குப்பையைக் கிளறினால் கூட ரத்தினக் கற்கள்தான் வருமாம். அவை களைக் கண்ட குருவிகள் , மின்மினிப் பூச்சிகள் என்று எண்ணி அவை களைக் கூடுகளில் கொண்டு வைக்குமாம். இதோ அந்தப் பாடல்:–

சூட்டுடைத் தலைத் தூநிற வாரணம்
தாள் தனைக் குடைய தகைசால் மணி
மேட்டு இமைப்பன மின்மினி ஆம் எனக்
கூட்டின் உய்க்கும் குரீஇயின் குழாம் அரோ
(கம்ப ராமாயணம், பால காண்டம், பாடல் 59)

பொருள்: வாரணம்=கோழி, மணி= ரத்தினக் கற்கள், குரீஇ=குருவி.

_mycena_chlorophanos_33 species

Fungi with luminescence. 35 Fungal speecies emit light

காளிதாசன் சொன்ன செய்தி
காளிதாசன் அவனது பாடல்களில் ( குமார சம்பவம் 1-30; ரகு வம்சம் 9-70 ) பல இடங்களில் ஒளிவீசும் தாவரங்கள் (ஜோதிர்லதா) பற்றிப் பகருவான்.
தசரதர் ஒருமுறை வேட்டைக்குச் சென்றபோது காட்டில் தனியே தங்க நேரிட்டது என்றும் அப்பொழுது ஒளிவீசும் தாவரங்களே அவருக்கு விளக்குகளாக இருந்து உதவின என்றும் காளிதாசன் கூறுகிறான். (ரகு வம்சம் 9-70).

உமை அம்மை பற்றி வருணிக்கும் இடத்தில் குமார சம்பவத்தில் (1-30) மூலிகைகள் இரவு நேரத்தில் ஒளிவிடும் என்றும் சொல்கிறான்.

மேகதூத காவியத்தில் (பாடல் 80) மேகத்துக்கு வழங்கும் அறிவுரையில், “நீ மலைச் சிகரத்தில் குட்டி யானை அளவுக்கு உன் வடிவத்தைச் சுருக்கிக் கொள். மின்மினிப் பூச்சிகள் எந்த அளவுக்கு ஒளி சிந்துமோ அந்த அளவுக்கு ஒளி வீசி வீட்டிற்குள் எட்டிப் பார்” என்கிறான்.
கம்பனும் கூட “உம்பர் வானத்து நின்ற ஒளிவளர் தருவின்” – என்று தேவலோக ஒளி உமிழும் கற்பக தரு பற்றிப் பாடுகிறான் (பால காண்டம் 793)

glowing_plant_genetically engineered
Light emitting tobacco plant.

விஞ்ஞானிகள் சொல்லும் செய்தி:-
சில வகை மீன்கள், பூச்சிகள், கடல் வாழ் ஜெல்லி மீன்கள், தாவரங்களில் காளான் வகைகள் ஆகியன மட்டுமே ஒளி வீசக்கூடியவை. பெரிய மரங்களோ, செடி கொடிகளோ ஒளி வீசக்கூடியவை அல்ல. தற்காலத்தில் செயற்கை முறையில் புகையிலைத் தாவரத்துக்கு ஒளி ஊட்டி செயற்கையாக ஒளிரச் செய்துள்ளனர். ஆனால் இயற்கையில் உள்ள சில அதிசயங்கள் டெலிவிஷன் மூலம் எல்லோருக்கும் தெரிய வந்துள்ளன. நியூசிலாந்தில் ஒரு குகை முழுதும் மின்மினிப் பூச்சி வகைகள் வாழ்கின்றன. இரவு நேரத்தில் அந்தக் குகை ஜெகஜ் ஜோதியாகச் ஜொலிக்கிறது. விழா நாட்களில் கட்டிடங்களில் அலங்கார விளக்கு போடுவது போல அவை அணைந்தும் ஒளிவீசியும் ஜாலவித்தைகள் செய்கின்றன. பி.பி.சி போன்ற சில இயற்கை பற்றி ஒளிபரப்பும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோருக்கு இது தெரியும்.

காளிதாசன் கம்பன், சொல்லும் ஒளிவிடும் தாவரங்கள், இது போல மின்மினிப் பூச்சிகளால் சூழப்பட்ட மரங்களாக இருக்கக்கூடும் அல்லது இபோது நாம் காணும் ஒளிவிடும் மீன்கள் போல அந்தக் காலத்தில் ஒளிவிடும் தாவரங்களும் இருந்திருக்கலாம்.
சங்கப் புலவர்கள் அகநானூற்றிலும் நற்றிணையிலும் (அகம். 67-16, 72-3, 202-7, 291-8; நற் 44-10)) வரும் சில பாடல்கள் மூலம் பலா மரம் முழுதும் மின்மினிப் பூச்சிகள் இருந்ததையும் குறவர்கள் இரவு நேரத்தில் மேகங்களைப் பார்க்க மின்மினிப் பூச்சிகள் விளக்காக இருந்து உதவி செய்வதையும் பாடிவைத்துள்ளனர்.

பாலை நில பருக்கைக் கற்கள், மின்மினிப் பூச்சிகள் போல இருப்பதாக நோய்பாடியார் என்னும் புலவர் கூறுகிறார் (அகம்.67)

எருமை வெளியனார் மகனார் கடலனார் பாடிய பாடலில் ஒரு அரிய உவமை தருகிறார். இரவு நேரத்தில் காட்டில், கரடிகள் பாம்புப் புற்றில் கையை விட்டுக் கறையான்களைப் பிடிக்கப் போகும்போது மின்மினிப் பூச்சிகள் பறக்கும் காட்சி கொல்லன் பட்டறையில் பறக்கும் தீப்பொறிகள் போல இருக்கும் என்கிறார். கரடியை இரும்புவேலை செய்யும் கொல்லனுக்கும் கறையான் புற்றுகளை பட்டறைக்கும் ஒப்பிட்டது ஒரு நல்ல உவமை. (அகம்.72)

ஆவூர்க் கிழார் மகனார் கண்ணகனார் பாடிய பாடலிலும் இதே கொல்லன் உலைக்கள உவமையைத் தருகிறார்.
நற்றிணைப் பாடல் (44) ஒன்றில் பெருங் கௌசிகனார் வேறு ஒரு காட்சியை வருணிக்கிறார்: குறவர்கள் இரவு நேரத்தில் மின்மினிப் பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் மேகத்தின் செயல்பாட்டைக் கவனிப்பர் என்கிறார்.

குடக்காய் ஆசினிப் படப்பை நீடிய
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து….

தமிழ் நிகண்டுகளில் மின்மினிப் பூச்சிக்குப் பல பெயர்கள் உள்ளன அவை:–நிசாமணி, ஞவல், நுளம்பு, கத்தியோதம், அலகு, கசோதம், அலத்தி.

இயற்கையோடியைந்த வாழ்க்கை நடத்திய நம் முன்னோர்கள், மின்மினிப் பூச்சி மூலம் வழங்கும் செய்திகள்தாம் எத்தனை எத்தனை !!
–சுபம் —

Fireflies in Sanskrit and Tamil Literature!

Waitomo-glow-worm-New-Zealand
Waitomo Glowworm Caves, New Zealand.

Written by London Swaminathan
Post No. 1109; Dated 15th June 2014.

Great poet Kalidasa is famous for his similes and descriptions of nature. His works abound in imageries. One of the imageries is about the fire flies. Fire-flies are seen in thousands in Indian villages during night time. No one would have missed them. But using them in poetry in appropriates places needs lot of literary skills. Tamil and Sanskrit poets are very keen observers of nature. They use it to the maximum in their poems to convey lot of messages. The fire fly imagery brings out another fact of the natural world.

Kamban who wrote Ramayana in Tamil gives us an interesting fact in Bala Kanda (Verse 59) of Kamba Ramayana. While describing the fields of Ayodhya, he describes how the sparrows mistook the gems for fireflies and took the gem stones lying on the ground to illuminate their nests. They thought that they were fireflies. He compared it to the sparrows’ natural habit of taking fireflies to their nests for lighting! Human beings, probably, got the idea of lighting from the sparrows!

Fairies-nagoya city
Fireflies in Nagoya City, Japan.

Kalidasa in his Meghaduta (verse 80) says,
“The flash of lightning of a very mild brilliancy is imagined to resemble the soft and twinkling light of a row of fireflies. The lovely and varying illumination with which these fireflies light up the roads at night gives quite an idea of enchantment”.

Three Tamil poets of Sangam age give us a similar picture:

“The bear thrusts its hand like front leg into the anthill raised by the termites and scoop out their comb for its food at midnight. A poor snake that had its abode in the anthill, was fatally wounded by the sharp claws of the beast.

The fireflies surrounding the ant-hill fly scattered and emit phosphorescent light”.
This scene is repeatedly pictured in many passages by different poets and compared to that of a smithy. The beast covered with thick black fur all over the body is likened to the blacksmith working in the smithy, the ant-hill to the raised structure of the furnace, the hard breath and action of the beast to the roar and action of the bellows, and fireflies flying and emitting light to the sparks of red hot iron beaten there — Akam.72,Akam 81,Nar 125.

_mycena_chlorophanos_33 species
Mycena chlorophenos, 33 species of fungi emit light.

Perumkausikanar, in one of his poems (Nar. 44), described the glow worms on a jack tree. The heroine looks at the dark sky and observes the movement of the clouds in the light emitted by the glow worms among the branches of a jack tree.

Kalidasa described the light emitting plant ‘Jyotirlatha’ (Raghuvamsa 9-70 & Kumara Sambhava 1-30) which is not known to any biologist. We know only lower organisms such as fungi, jelly fish, planktons and insects like fireflies with this light emitting quality. Probably lit is like the jack tree full of fireflies (Nar. 44).

glowing_plant_genetically engineered
Genetically engineered tobacco plant emitting light.

David Attenborough, in his nature series on the BBC, described a cave full of fireflies in New Zealand. They looked like the illumination in the amusement parks or the government buildings on National Holidays. They emit light on and off. Millions of fireflies living in a narrow area! Only when we know such natural wonders we can get a glimpse of what Kalidasa described as Jyotirlatha. Kamban also described light emitting Kalpalatha (Balakandam 793)

contact swami_48@yahoo.com

சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

Balinese_rite_of_Suttee_in_Houtman_1597_

Suttee in Bali in 1597 (Wikipedia picture)

சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரையாளர்:– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

சதி என்று அழைக்கப்படும் வழக்கம் பழங்கால இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை இருந்தது. கணவன் இறந்தவுடன், அவனுடன் சிதைத் தீயில் ஏறி உயிர் விடுவது ‘’சதி’’ என்றும் ‘’உடன்கட்டை ஏறுதல்’’ என்றும் அழைக்கப்படும். இதை ஆரிய வழக்கம் என்று பிதற்றியோருக்கு புற நானூறும் பிற்கால இலக்கியமும் பதில் கூறுகிறது.

சதி என்பது ராமாயண, மஹாபாரத காலங்களில் கூட கட்டாயம் இல்லை. விரும்பினால் உடன்கட்டை ஏறலாம். அதீத அன்பினால் நடைபெறும் ‘தற்கொலை’ இது. தசரதன் இறந்தபோது அவன் அன்பு மனைவியர் உடன்கட்டை ஏறவில்லை. பாண்டு இறந்தபோது முதல் மனைவியான குந்தி தேவியும் உடன்கட்டை ஏறவில்லை. இரண்டாவது மனைவியான மாத்ரீ மட்டுமே உடன்கட்டை ஏறினாள். ஆக இது அந்தக் காலத்திலும் கூடப் பெருவாரியாக நடக்கவில்லை.

sati2

வெளிநாடுகளிலும் கூட அன்பின் காரணமாகவோ, பயம் காரணமாகவோ கணவன் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொள்வதையும், அல்லது ஒருவர் இறந்தவுடன் அடுத்தவர் தற்கொலை செய்து கொள்வதையும், பத்திரிக்கைகளில் படிக்கிறோம். அப்படிப் படிக்கையில் அவர்களின் அன்பைக் கண்டு வியந்து பாராட்டுகிறோம். இது போலவே முன்காலத்திலும் சதி மூலம் இறக்கும் பெண்களை பத்தினித் தெய்வமாக வணங்கி கோவில் எழுப்பி வழிப்பட்டனர். தமிழ் நாட்டில் நடுகல் வைத்து வீரர்களை வணங்கியது போல, வட இந்தியாவிலும் கர்நாடகத்திலும் கை சின்னத்துடன் கோவில்கள் வைத்து பத்தினிகளை வழிப்பட்டனர்.

சதி என்பது ஆரிய வழக்கம் என்று பிதற்றிய பி எச். டி.வாலாkகளும் வெள்ளைத்தோல் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’ உள் நோக்கத்தோடு இந்தியா பற்றி அவதூறுகளைக் கிளப்பினர். பெண்களை தீயில் தூக்கி எறிவது போல படங்கள் போட்டு கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயன்றனர். ஆரிய வழக்கம் என்று முத்திரை குத்தப்பட்ட நூற்றுக கணக்கான வழக்கங்கள் இமயம் முதல் குமரி வரை இருப்பதோடு உலகில் ஆரியர்கள் வாழ்ந்ததாக ‘’அறிஞர்கள்’’ கூறும் வேறு எவ்விடத்திலும் இல்லை!! ஆரியர்களும் வெளிநாட்டுக்காரர்களும் சைபிரீயவிலோ மத்திய ஆசியாவிலோ ஒரே இடத்தில் வசித்திருந்தால் நூற்றுக் கணக்கான ’’ஆரிய’’ பழக்க வழக்கங்கள் அங்கே இல்லதது ஏனோ??

சங்கத் தமிழ் நூல்களில் உள்ள வழக்கங்கள் வடக்கிலும் 2000 ஆண்டுகளுக்கு மேல் இருந்தன. ஆரிய- திராவிட வேறுபாடு அல்லது அத்தகைய இனச் சொல்லாட்சி எங்கனும் இல்லை. சங்க காலத்தில் வாழ்ந்த 461 கவிஞர்கள் எழுதிய 2389 பாடல்களில் உள்ள 27,000 வரிகளைக் கரைத்துக் குடித்தோருக்கு ஆரிய திராவிட இனவெறிக்கொள்கை நகைப்பைத் தரும். அது ஒரு பொய்மை வாதம் என்பது வெள்ளிடை மலை என விளங்கும். உள்ளங்கை நெல்லிக்கனி போல தெள்ளத் தெளிவாக தெரியும். இதற்குப் பின்னும் விளங்கவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் “விளங்காதவர்களே”!

ஆரிய- திராவிட இனவெறிக் கொள்கையை வைத்து ‘’திராவிடங்கள்’’ கோடிக் கணக்கில் பணம் குவித்ததையும், ஹிட்லர், முசோலினி போன்றோர் கோடிக் கணக்கில் மக்களைக் கொன்று குவித்ததையும் உலகம் அறியும்.

sati 3

சங்க இலக்கியத்தில் குரங்கு கூட ‘’சதி’’ செய்ததை அறிகிறோம். இதோ புற நானூறு முதல் நற்றிணை வரை சில ‘’சதி’’ பற்றிய பாடல்கள்:–

புறநானூறு பாடல் 246:–
பல் சான்றீரே! பல் சான்றீரே!
‘செல்க’ எனச் செல்லாது, ‘ஒழிக’ என விலக்கும்,
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே!
அணில்வரிக் கொடுங்காய் வாள் போழ்ந்திட்ட
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம்,
வெள் எள் சாந்தொடு, புளிப்பெய்து அட்ட
வேளை வெந்தை, வல்சி ஆக,
பரற்பெய் பள்ளிப்பாயின்று வதியும்
உயவற் பெண்டிரேம் அல்லேம் மாதோ;
பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட்டு ஈமம்
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம்
பெருந்தோட் கணவன் மாய்ந்தென, அரும்பு அற
வள் இதழ் அவிழ்த்த தாமரை
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே!
–பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப்பாய்வாள் சொல்லியது

பொருள்: ‘’கணவனுடன் நீயும் போ என்று சொல்லாமல் பொல்லாத செயல் புரியும் பெரியோர்களே! கணவன் இல்லாத பெண்கள் வெள்ளரிக்காய் விதை போல, நெய் இல்லாத சோறு, எள்ளுத் துவையல், புளி கூட்டி சமைத்த வேள இலை ஆகியவற்றை உண்ண வேண்டும். பாய் இல்லாமல் வெறும் கல் தரையில் படுக்க வேண்டும். அது போன்ற பெண் என்று என்னை நினைத்து விட்டீர்களா? நான் அப்படிப்பட்டவள் அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மரணப் படுக்கை கஷ்டமாக இருக்கலாம். என் கணவன் இறந்துவிட்டான். அந்த சிதைத் தீயே எனக்கு தாமரைக்குளம் போல குளிர்ச்சிதரும். இதைப் புரிந்துகொள்ளுங்கள்.’’

ஒரு மஹாராணி பாடிய பாடல் இது. கணவனின் சிதைத் தீ, தாமரைக் குளம் போல குளிர்ச்சி பொருந்தியது என்று பாடுகிறாள். அப்பர் பெருமானை மஹேந்திர பல்லவன் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போது அவர் ‘’மாசில் வீணையும்’’ பாடல் பாடியது நினைவுக்கு வருகிறது!

sati3

புறநானூறு பாடல் 373:– கிள்ளிவளவன் மீது கோவூர் கிழார் :–

மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ்சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மெந்தோள் மகளிர் மன்றம் பேணார்
புண்ணுவ……………………………………………..
…………………………………………….. அணியப் புரவி வாழ்க என,
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர –(வரிகள் 10-15)

பொருள்:– ‘’நல் இல் புலம்ப, கடை கழிந்து, மென் தோள் மகளிர் மன்றம் பேணார்’’— என்ற வரிக்கு உரைகார்கள் சொல்லும் பொருள்:தம் கணவர் திரும்பி வாராமையால் மகளிர் மன்றத்தில் எரியை மூட்டி தீயில் பாய்ந்து உயிர்விடுதலை உடனே செய்து……………………………… (காண்க- புறநானூறு உரை, வர்த்தமானன் பதிப்பகம்)

அலாவுதீன் கில்ஜி என்ற வெறியன் உலக மஹா அழகி சித்தூர் ராணி பத்மினியை எப்படியும் அடைய வேண்டும் என்று வந்தபோது, அந்த மஹா உத்தமி ஆயிரம் பெண்களுடன் தீப்பாய்ந்து உயிர்த் தியாகம் செய்தாள். வரலாற்றில் அழியாத இடம் பெற்றாள். அந்த நிகழ்ச்சியை நினைவு படுத்துகிறது கோவூர் கிழாரின் பாடல்.

குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)
கருங்கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென
கைம்மை உய்யாக் காமர் மந்தி,
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட நடு நாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே — குறுந்தொகை 69 (கடுந்தோட் கரவீரனார்)

பொருள்: ஆண் குரங்கு இறந்தது.– விதவையாக இருக்க விரும்பாத பெண் குரங்கு,— ஒன்றும் பயிலாத தன் குட்டியை நெருங்கிய உறவினரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கி உயர்ந்த மலையில் இருந்து விழுந்து இறக்கும் நாட்டை உடையவனே!

குரங்கு கூட அன்பின் மிகுதியால் மலையில் இருந்து பாய்ந்து உயிர் நீத்தது. இது பற்றி எழுதிய மு. வரதராசனார் இதை ‘சதி’ என்றே எழுதியமை குறிப்பிடத்தக்கது. (காண்க:– Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

பஞ்ச தந்திரக் கதையில் புறாக் கூட தீப்பாய்ந்த கதை வருகிறது. கணவன் புறாவை வேடன் பிடித்துச் சாப்பிட்டவுடன் மனைவி புறாவும் அவனுக்கு உணவாக தீயில் பாய்ந்தது சதி என்னும் வழக்கத்தினால் வந்ததன்றோ!!

ரிக் வேதம் பத்தாவது மண்டலத்தில் உள்ள சில பாடல்கள் ‘’சதி’’ என்னும் வழக்கத்தைக் குறிப்பிடுவதகச் சொல்வர் வெளி நாட்டோரும் பி. எச். டி. வாலாக்களும்— அதே பத்தாவது மண்டலத்தை நீங்கள் வேறு எதற்காவது மேற்கோள் காட்டினால் அது பிற்காலச் சேர்க்கை என்பர். வெளி நட்டோரும் அவர்களுக்கு அடிவருடும், ஒத்து ஊதும் நம்மவர்களும் அரை வேக்காடுகள் மட்டும் மல்ல, பாம்பு போல இரட்டை நாக்கினர் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டுமா? உங்களுக்கே புரியாதா?

எல்லை மீறிய அன்பு, பாசம் தொடர்பான கதைகளையும் நாவல்களையும் படித்தோருக்கு உடன்கட்டை ஏறும் பழக்கம் வியப்பைத் தருமேயன்றி அருவருப்பைத் தராது. எனினும் ஆதிகால வழக்கத்தைப் பலரும் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட காலையில் ராஜாராம் மோஹன்ராய் போன்ற பெரியோர்கள் முன்னின்று பிரம்ம சமாஜம் மூலம் அதற்குத் தடை போட்டதும் சரியே!

“Aryan SATI” in Sangam Tamil Literature!

Balinese_rite_of_Suttee_in_Houtman_1597_

(Sati in Bali, 1597 picture (from Wikipedia)

Written by London Swaminathan
Post No. 1107; Dated 14th June 2014.

Practice of Sati is found in ancient Sangam Tamil literature at least in three places. Sati is the custom practised by some Hindu women in the olden times. The wife of the diseased husband will enter the funeral pyre of her husband. This happened in extremely rare cases. We see it even in Western countries that wife and husband commit suicide together or wife committing suicide immediately after her husband’s death. We read such news items rarely. It happens because of extreme love or some fear. Sati was also seen rarely in the olden days.

White skinned racists proposed Aryan – Dravidian Racist theory with ulterior motives. Dravidian politicians used this theory to establish their rule and to make billions and billions of rupees, dollars and pounds (Swiss Accounts) for themselves. There are hundreds of Hindu customs which were NOT found in European countries or any other race. If Aryans have migrated from those areas where they lived with the white skinned people, those customs must have prevailed there. But to everyone’s surprise those customs prevailed only in South India and North India, from the Northern most Himalayas to the Southernmost Kanyakumari. This debunks the Aryan – Dravidian racist theory. There was no difference between the Tamils and other communities!

When you finish reading the following, you can have a good laugh at those who still stick to the Aryan – Dravidian Racist theory!

sati3

First of all one must know that Sati was not practised by all women even in the days of Ramayana and Mahabharata! When Pandu died, his second wife Madri only died with Pandu in the funeral pyre; but his old and first wife Kunti did not die with him. When Dasaratha died none of his queens died with him in the funeral pyre. In Tamil Nadu also not all the wives died in the funeral pyre when their husbands died. There are lot of Sangam poems concerning widows. Women lived longer than men in Ancient India like today. There are lots of rules regarding widows in Tamil and Sanskrit literature. This shows they lived long after their husbands’ death. Had all the women died with their husbands, India would have reduced ratio of women! Reduced population as well! Because we have to take into account the natural death of young women as well, in addition to ‘Sati’ deaths. In short, all this Sati issue was blown out of proportion by Christian missionaries and Ph.D.wallas !!

Even when the Ph.D.wallas quoted some Vedic hymns, they quoted from the10th Mandala of Rig Veda which is vague about Sati. When ‘YOU’ quote any other hymn from the same 10th Mandala, these foreign scholars would say that it was a later addition and not the ‘original’ Rig Veda!!

Sangam Tamil literature is 2000 year old where we have 2389 poems composed by 461 poets running to 27,000 lines. There are several poems which deal with widow’s life. But we have three poems where we have direct or indirect references to sati: Puram.246, Puram.374 and Kuru.69

sati 3

Purananauru 246 by Perngo pendu, wife of Bhutha Pandya.

When the Pandyan King Bhutha Pandya died, his wife Perum Koppendu wanted to commit Sati. But all the Tamil scholars and ministers tried to prevent her from entering the fire. She criticised every one assembled there and then entered the funeral pyre. She told them that the fire is like a cool lotus pond for her. Her statement in the crematorium was reported verbatim in her poem in Sangam literature.

Purananuru verse 373 (Lines 10-15) was by Kovur Kizar on Cholza king Kulamtrathu Thunjiya Killi Valavan. The poet says that the wives of the deceased soldiers did not find a better place than the feet of their husbands after their death They did not return home, but committed Sati by lighting the fire. This was what the Rajput Queen Chitoor Rani Padmini did in a later period, when her husband was killed by Alauddin Khilji.
Kuruntokai verse 68 sings about a monkey which committed suicide. Tamil scholar Professor M.Varadarajan described it as ‘Sati’:

“On the death of its loving mate, a female monkey is imagined to hand over its young one to its kith and kin and perform sati by falling down from the top of a hill” (Kuruntokai 68).
(Reference: The Treatment of Nature in Sangam Literature by M.Varadarajan)

When Kannaki proved that the Pandya king was wrong in sentencing her husband Kovalan to death, the king died of heart attack on the spot. Immediately his wife also died, says the Tamil epic Silappadikaram. We did not know whether she committed sati or suicide or had a heart attack due to extreme love and affection for her husband.
sati2

If we read about sati with this background knowledge, Sati would not get a bad name as painted by the authors of the Aryan racist theory.

Contact swami_48@yahoo.com

சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

saraswathimahal1

சரஸ்வதி மஹால் வெளியிட்ட பிருகதீஸ்வர மாஹாத்மியம்

By ச.நாகராஜன்; Post No 1106; dated 14th June 2014.

அற்புதமான தமிழ் ஏடுகளையும் அரிய புத்தகங்களின் கை பிரதிகளையும் நூல்களையும் சேர்த்து வைத்துள்ள சரஸ்வதி மஹால் நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அறிவுக் கோவில். சரஸ்வதி மஹால் பல அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் சரஸ்வதி மஹாலின் தமிழ்ப் பணிக்கு உரிய மதிப்பும் மரியாதையும் என்றுமே இருந்ததில்லை. இது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டம்!

சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ள அரிய நூலான பிருகதீஸ்வர மாஹாத்மியம் நம்மை வியக்க வைக்கும் ஒரு நூல்.
சோழ மன்னர்களில் 16 பேர்களின் வரலாற்றை விவரிக்கும் இந்த நூலை, பல தமிழறிஞர்களும் மேற்கோள் காட்டுவது வழக்கம்!

இந்த நூல் நானுறு வருடங்களுக்கு முன்னர் சம்ஸ்கிருதத்தில் எழுதப் பட்டுள்ளது. 30 அத்தியாயங்கள் கொண்டது. 49 பக்கங்கள் கொண்ட கைப்பிரதியை ஆராய்ந்து மூலத்தையும் தமிழாக்கத்தையும் (டி.ஆர்.தாமோதரன், எஸ்.ராஜலெக்ஷிமி, என்.சீனிவாசன் ஆகியோர் தமிழாக்கத்தைச் செய்துள்ளனர்) 1985ஆம் ஆண்டு சரஸ்வதி மஹால் வெளியிட்டுள்ளது.

இதில் உள்ள சில அரிய விஷயங்களை மட்டும் சுருக்கமாகச் சில வரிகளில் காண்போம்.

1)கர்வட என்ற கிராமத்தில் குலோத்துங்கன் என்ற விவசாயி வாழ்ந்து வந்தான்.சிறந்த சிவ பக்தனான அவனை சிவ பெருமான் சோதிக்க வந்தார். அவனும் அவன் துணைவியும் தக்க முறையில் சிவனடியாரை வரவேற்று உபசரித்தனர். இதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவனை சோழ வம்சத்தின் அரசனாக்கினார். மது, மயன், விஸ்வகர்மா, தாதா விதாதா ஆகிய தேவ சிற்பிகள் மூலம் காவிரிக் கரையில் சோழ தேசம் அமைக்கப்பட்டது. ஐயாரப்பர் ஆலயத்தையும் திருப்பழனம் ஆலயத்தையும் குலோத்துங்கன் கட்டுவித்தான்.

2) தஞ்சாசுரனை சிவபெருமான் சூலத்தால் வீழ்த்தும் போது அவன் உயிர் பிரியும் தருணம் “என் பெயரால் இந்த நகரம் விளங்க வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள அந்த நகருக்கு தஞ்சாவூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

3) தேவ சோழனின் மகன் சசிசேகர சோழன் மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவில், திருவாலங்காடு உள்ளிட்ட 60 ஆலயங்களை எடுப்பித்தான். ஒரு சமயம் காவிரியில் பெரு வெள்ளம் வர நாடே அழியும் சூழ்நிலை ஏற்பட்டது. 48 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து இறைவனை வேண்ட, ‘இறைவன் காவிரியின் குறுக்கே அணை கட்டுக’ என்று அருள் பாலித்தான். அதன் படியே மன்னனும் அணை கட்டினான்.

sarasvatimahal2

4) சசிசேகர சோழனின் மகன் சிவலிங்க சோழன் திருவாரூரை ஆண்டு வந்த போது பசுங்கன்று ஒன்று தேர்ச்சக்கரத்தில் வந்து சிக்கிக் கொண்டு இறந்தது. தாய்ப் பசு அரண்மனை வாயிலை அடைந்து கதறியது. இதைக் கண்ட மன்னன் தன் மைந்தன் மீது தேர்ச்

சக்கரத்தை ஏற்றி நீதி பரிபாலித்தான். இறைவன் அருளால் இருவரும் மீண்டு எழுந்தனர்.சிவலிங்க சோழன் 119 ஆலயங்களுக்குத் திருப்பணி செய்தான்.

5)சிவலிங்க சோழன் மகன் வீர சோழன் காவிரிக்குக் கிளை ஆறை ஒன்றை வெட்டி உருவாக்க அது வீர சோழன் ஆறு என்ற பெயரைப் பெற்றது.

6)வீர சோழனுடைய மகன் கரிகாலன். இவன் ஹரதத்த சிவாச்சாரியாரைத் தன் குருவாகப் பெற்றான். கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயத்தை எழுப்பினான். துர்கேஸ்வரம் மங்களேசம் ஆம்ரவனம் ஆகிய இடங்களிலும் ஆலயங்களை அமைத்தான். ஆனால் விதி வசமாக கருங்குஷ்டம் இவனைப் பிடித்தது.

ஹரதத்தர் ஒரு மண்டல காலம் ஆலயத்திலேயே வாசம் செய்து நூற்றெட்டு மறைவல்லோரை அழைத்து ‘ஏகாதசருத்ர’ ஜபம் செய்தார். சிவபெருமான் ஹரதத்தரின் கனவில் தோன்றி ‘தஞ்சாபுரீஸ்வரர் ஆலயத்திற்கு தென் மேற்கில் உள்ல சிவகங்கா பொய்கையில் மன்னரை நீராடச் சொல். சக்தி கூபம் கிணற்றுக்கு அருகில் உள்ள கந்தனின் ஆலயத்தில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் அன்று தரிசனம் செய்யச் சொல். அதற்கு முன் துந்தில விக்னேசர் (தொந்தி விநாயகர்) ஆலயத்தை நிர்மாணம் செய்யச் சொல்” என்று இப்படி வரிசையாகக் கட்டளைகளை இட மன்னனும் அனைத்தையும் செய்து கருங்குஷ்டம் நீங்கப் பெற்றான்.
thanjavur-big-temple

7)கரிகாலனின் மகன் பீம சோழன் கேரள ராஜகுமாரி வித்யுல்லதா (மின்னற்கொடி)வை மணந்தான்.திருவண்ணாமலையில் கோபுரங்களை அமைத்தான்.77 ஆண்டுகள் இவன் உயிர் வாழ்ந்தான்.

மிக நீண்ட வரலாற்றைக் கூறும் மாஹாத்மியத்தின் இதர பகுதிகளையும் இதைப் பற்றி ஆங்கிலேய அறிஞர்களின் கருத்தையும் பிரபல சரித்திர ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் கருத்தையும் அடுத்ததாகப் பார்ப்போம்!

8)பீம சோழனின் மகன் ராஜேந்திர சோழன். சேர பாண்டியரை வென்று சிறப்பாக அரசாட்சி நடத்தினான்.திருமுல்லைவாயில், திருப்பூந்துருத்தி, திருவெண்ணியூர், திருநெல்லிக்கா, சிற்றேமம் ருஷிகானனம் ஆகிய ஊர்களில் சிவாலயங்களை எடுத்தான். இதைப் போன்று 80 ஆலயங்களைக் கட்டி முடித்தான்.

9) இவனது மகன் வீரமார்த்தாண்டன்.இவன் காலத்தில் வேத பாடசாலைகளும், சாஸ்திர பாடசாலைகளும் தோன்றின. அக்னிஹோத்திர வேள்விச் சாலையிலிருந்து கிளம்பும் புகை மண்டலம் சுவர்க்கத்திற்குச் செல்லும் ‘’படி’’ போலத் தோன்றியது. இவன் சுமார் 60 ஆலயங்களைக் கட்டினான்.

10) இவனது மகன் புகழ்ச் சோழன். இவன் முருக பக்தன். தனக்கு ஒரு மகன் இல்லையே என்று வருந்த முருகப்பெருமான் கனவில் தோன்றி குக பர்வதத்தை புனருத்தாரணம் செய்யச் சொல்ல அவன் அப்படியே
செய்தான். முருகனின் அருளால் ஜய சோழனை பெற்றெடுத்தான்.

thanjavur temple
11)ஜயசோழன் ஜயசோழபுரத்தில் பெருவுடையார் கோவிலைப் போல முக்கால் பங்கு இருக்குமாறு ஒரு ஆலயத்தைக் கட்டினான்.இவன் மகன் கனக சோழன். இவன் காலத்தில் திருவலஞ்சுழியில் காவிரி நீர் பாதாளத்தில் ஓடி மறைந்தது. இதனால் மக்கள் வருந்தினர். அதற்குரிய பரிகாரங்களைச் செய்து ஏரண்ட முனிவரால் காவிரியை மீட்டான். ஏரண்ட முனிவர் காவிரையை மீட்க தன் உயிரை அர்ப்பணிக்க அவர் வழிபட்ட கொட்டையூர் ஆலயத்திற்குத் திருப்பணி செய்தான்.

12) கனக சோழனின் மகன் சுந்தர சோழன். மறையோன் ஒருவனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க இடை மருதூர் சென்று வழிபட்டுத் தன் தோஷத்தைப் போக்கிக் கொண்டான். இவன் மகன் கால கால சோழன். இவன் திருப்பனந்தாளில் குனிந்திருந்த லிங்கத்தை நிமிர்த்தினான். இவன் மகன் கல்யாண சோழன். இவன் சிதம்பரத்தில் உள்ள கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டினான்.இவன் மகன் பத்ர சோழன். இவனும் தன் முன்னோர்களைப் போல பல ஆலயங்களைக் கட்டினான்.

13) நூலின் கடைசி ‘பாரா’ சிவ பெருமான் பார்வதி தேவி கேட்ட கேள்விக்குப் பதில் அளிப்பதைத் தெரிவிக்கிறது. இதன் படி பார்வதி தேவி ஸ்தலங்களைப் பற்றிக் கேட்க சிவபிரான், காவிரிக்கும் சேதுவிற்கும் இடையே சிவ க்ஷேத்ரம் – 23000, விஷ்ணு க்ஷேத்ரம் – 1000 முருகன் க்ஷேத்ரம் – 6000 விநாயகர் க்ஷேத்ரம் – 5000 காளி க்ஷேத்ரம் – 1000 நடராஜர் க்ஷேத்ரம் – 100 துர்க்கை க்ஷேத்ரம் – 3000, சாஸ்தா க்ஷேத்ரம் – 11000 இருப்பதாக அருளுகிறார்!.
enterance-gopuram-new1

பல நீண்ட சுவையான கதைகளை உள்ளடக்கிய இந்த மாஹாத்மியம் பிரபல வரலாற்று ஆய்வாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களால் ஆராயப்பட்டுள்ளது. 1930ஆம் ஆண்டு சோளா லெஜண்ட்ஸ் (Cola Legends) என்று ‘ஜர்னல் ஆஃப் ஓரியண்டல் ரிஸர்ச்’ இதழில் அவர் இது பற்றி ஒரு கட்டுரையையும் எழுதியுள்ளார்.

இந்த நூல் வரலாற்று நூல் என்பதை விட்டு விட்டு க்ஷேத்திரங்களை விவரிக்கும் நூலாகவும் அங்கு பாவங்களுக்கான பரிகாரங்கள் மற்றும் பிராயச்சித்தங்களைத் தெரிவிக்கும் நூலாகவும் உள்ளது. அந்த அளவில் இது மதிப்பு வாய்ந்தது. குலோத்துங்கன் வீரன், கரிகாலன் ,ராஜேந்திரன், சுந்தர சோழன் ஆகியோரைத் தவிர ஏனைய மன்னர்களைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. கரிகாலனுக்கு கருங்குஷ்டம் இருந்தது என்பதை இந்த ஒரு நூலில் மட்டுமே காண முடிகிறது. மனு நீதிச் சோழன் வரலாற்றை அப்படியே சிவலிங்க சோழன் வரலாற்றில் காண முடிகிறது. இருந்தாலும் காவிரித் தலங்களின் மகிமை பற்றியும் அதன் புராதன பழமையையும் பற்றி இந்த நூல் மூலம் அறிய முடிகிறது. இந்த நூலை மேற்கோளாகப் பல ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் காட்டுவது வழக்கம்.

மக்கென்ஸி என்பவரிடம் இருந்த இந்த நூலின் ஒரு கைப்பிரதி அதிர்ஷ்டவசமாக டெய்லர் என்னும் அறிஞரால் மீட்டெடுக்கப்பட்ட
தால்தான் இந்த நூல் பற்றி அறிய முடிந்தது. இந்த நூலின் இதர பிரதிகள் இங்கிலாந்து சென்றிருக்கக் கூடும். அவைகள் கிடைக்க வில்லை. தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா இதைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். இதன் மூலமாகத் தான் சம்ஸ்கிருதத்தில் இருந்த க்ஷேத்திரங்களின் தமிழ்ப் பெயர்களை அறிய முடிந்தது.

த்ருதிஸ்தலம் என்பது திருப்பண்டுருத்தி என்றும் கடேசம் என்பது திருக்கடையூர் என்றும், த்ரிகோடிகா என்பது திருக்கோடிக்காவல் என்பதும் வால்மீகநகரா என்பது திருவாரூர் என்பதும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாலேயே அறிய முடிந்தது.

Thanjavur_Brihadeeswar

மொத்தத்தில் சுவையான ஒரு சோழ புராணத்தைப் படித்த மகிழ்ச்சியை இந்த நூல் ஏற்படுத்துகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான சுவடிகளில் தமிழ் மொழி பற்றியும் தமிழ் இலக்கியம், பண்பாடு, கோவில்கள் மன்னர்கள் பற்றியும் பல நூல்கள் உள்ளன. அவை அனைத்தும் வெளி வரும் நாள் எந்த நாளோ! அந்த நாளும் வந்திடாதோ .. வெகு விரைவில்!

******************* !

Agastya in Jataka Tales and Kalidasa

450px-Agastya,Prambanan,Indonesia
Agastya Statue from Prambanan, Indonesia.

Written by London Swaminathan
Post No.1105; Dated 13th June,2014.

The Jataka Tales is a collection of tales of the numerous births of Bodhisatva, who later became the Buddha. It is a record of very old folk tales adapted by the Buddhists to suit their needs. They were current among Indians from time immemorial. Buddhists did not hesitate to distort and twist all the old tales including the popular Hindu stories for their purpose. They even used Ramayana, Mahabharata , Puranas and Panchatantra stories and ‘’Buddhaized’’ the stories. One of such stories is the story of great Agastya whom the Tamil poets celebrated as the first patron of Tamil language. Tamil language came to Agastya through Shiva and his son Lord Skanda (Muruga in Tamil).

In the Akitti (Agastya) Jataka, Bodhisattva was born as Akitti as a son of a Brahmana mahasala (Brahmin scholar) Later he became an ascetic with his sister Yasavati. He went to Damila (Tamil country) from Kasi. Agastya lived in a garden in Kaveripattana. The reason for Agastya’s southward movement was the nuisance from his admirers. But he was pestered by his admirers in the South as well. Then he went to Karadipa also called Ahidipa (May be Nagadwipa; Ahi=snake, Naga). Nagadwipa was used for Sri Lanka as well as South East Asia. Agastya attained Moksha there.

Puranas say that Agastya drank ocean to convey the message symbolically that he crossed the ocean to go to South East Asia. His statues are found in different South East Asian countries. He was worshipped throughout South East Asia.

Kalidasa who lived in the first century BCE gives us very interesting details:-

agastya in London
Agastya Statue i London V&A Museum

Kalidasa’s Amazing knowledge about South India
Kalidasa in his Raghuvamsa Kavya confirmed that Agastya was closer to the Pandyas of the South. According to Tamil literature Agastya lived in the Podiya Hills ( a part of the Western Ghats inside the Tamil territory). Kalidasa’s knowledge about India was amazing. He was the first poet to give a clear and complete picture of India. Though Arjuna’s travel in the Mahabharata and Rama’s travel in the Ramayana described South India, a lot of things were vague—mixed with myths.

Kalidasa was the first Tourist guide in the world and he was the first Travel write in the world. Kalidasa’s Meghaduta described India from the Vindhya Hills up to the Northern Himalayas. His Raghu Vamsa Kavya described a vast area from Iran to South India.

During Indumati’s Swayamvara kings from different parts of India assembled to marry Indumati. Pandya king was also there. Kalidasa never mentioned other Tamil kings Choza or Chera. Pandyas were the oldest of the three kingdoms. Chozas came from North West India where Sibi ruled (Please read my article ‘’Sibi Story in Tamil literature’’ for more details)

220px-Kaviratna_Kalidasa_poster

The Agastya story shows that the contact between South India and North India existed even before Buddha. According to the Puranas, Agastya was sent to the South by Lord Shiva to solve the population explosion in the north. Tamil commentators on a Purananuru verse (201 by Kabilar) also confirmed that he came with the Velir tribes to South India.

Following slokas from the Raghuvamsa are noteworthy:–
Raghuvamsa-4-21, 4-44,4-49; 6-60,6-61/65

kalidasa_idk168
4-44 South is the direction of Agastya
4-46 Malaya (Pothiya) hills, Pepper plants, Parrots
4-47- Sandal wood
4-49 even sun shines less bright because of the might of the Pandyas
4-50 pearl fisheries where River Tambraparni meets the sea
4-53, 4-59 Parasurama land between Sahya hills and the sea (Kerala)
4-54 Beautiful Kerala girls and Cosmetics
6-61 Agastya –Pandya connection, Aswamedha yagna of Pandya
6-62 Ravana- Pandya peace treaty
6-64 Malaya hills (Podiya Hills)
6-65 Pandyas are black skinned
4-21 Agastya Star (Canopus)

Pandya kings copper plates, Purananuru verse 201 by Kapilar, Pura. 2 and commentaries on several other verses confirm the link between the Pandyas and Agastya, Podiya and Himalayas, Yagas performed by the Pandyas and Agastya.

Sage Agastya was inseparable from Tamil Nadu as Parasurama was
Inseparable from Kerala.

kalidas encyclopedia
Also read my earlier posts:
Is Brahmastra a Nuclear Weapon? Sept.7, 2011

Great Engineers of Ancient India Sep.10, 2011

Did Agastya drink Ocean? (Post No.931, Dated 25-3-14)

நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்!

ram,maha

நேராகப் படித்தால் ராமாயணம்; தலைகீழாகப் படித்தால் மஹாபாரதம்!

ச.நாகராஜன்

Written by S Nagarajan
Post No.1104; dated 13th June 2014.

ராமாயண, மஹாபாரதம்
ஹிந்து தர்மத்தின் அற்புதமான இதிஹாஸங்களாக இலங்குபவை ராமாயணமும் மஹாபாரதமும். வேதத்தின் சுருக்கமே ராமாயணம் என்றும் ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம் என்றும் தொன்று தொட்டு இந்த நாட்டில் போற்றப்பட்டு வருகிறது.உலகில் முதல் முதல் எழுந்த காவியம் என்பதால் ஆதி காவியம் என ராமாயணம் கருதப்படுகிறது. 644 ஸர்க்கங்களில் 24000 சுலோகங்களில் ஏழு காண்டங்களில் தர்மத்தின் திரு உருவான ராமனின் கதையை சம்ஸ்கிருதத்தில் மஹரிஷி வால்மீகி தருகிறார்.

18 பர்வங்களில் (100 உப பர்வங்களில்) ஒரு லட்சம் சுலோகங்களில் 2314 அத்தியாயங்களில் மஹரிஷி வேத வியாஸரால் மஹா பாரதம் இயற்றப்பட்டுள்ளது.

காலம் காலமாக இந்த இரு இதிஹாஸங்களும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஏராளமானோரை பல்லாயிரக்கணக்கில் கட்டுரைகள், நூல்கள் மற்றும் காவியங்களை வெவ்வேறு மொழிகளில் இயற்ற ஊக்குவித்திருப்பதை உலகமே அறியும்.

தைவக்ஞர் சூரிய கவி
ஆனால் பாரதத்தைச் சேர்ந்த மூன்று அதிசயக் கவிஞர்கள் இந்த இரு இதிஹாஸங்களை வைத்து ஒரு அற்புதமான அதிசயமான செயலை சம்ஸ்கிருத மொழியில் சாதித்துள்ளனர்.
தைவக்ஞர் சூரிய கவி என்பவர் பெரும் சம்ஸ்கிருத விற்பன்னர், கவிஞர்! அவர் 36 ஸ்லோகங்கள் அடங்கிய ராமகிருஷ்ண விலோம காவ்யம் என்று ஒரு காவியத்தை இயற்றியுள்ளார். இதில் ஸ்லோகத்தை முதலிலிருந்து படித்துக் கொண்டு போனால் ராமாயணக் கதையைக் காணலாம். ஸ்லோகத்தின் பின்னாலிலிருந்து திருப்பிப் படித்துக் கொண்டு போனால் வருவது இன்னொரு ஸ்லோகம். அதில் மஹாபாரதக் கதையைக் காணலாம். விகடகவி, தேருவருதே போன்ற சொற்களில் வரும் எழுத்துக்களைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டாலும் அதே சொற்கள் வருவது ஒரு சொல் அலங்காரம். இதை ஆங்கிலத்தில் Palindrome என்கிறோம்.

ஒரு ஸ்லோகம் அல்ல, பல ஸ்லோகங்கள் அடங்கிய ஒரு காவியமே இப்படி அமைக்கப்பட்டுள்ளது என்றால்..! வியக்க வைக்கும் இந்தக் காவியத்திலிருந்து உதாரணத்திற்கு இரு பாடல்களை இங்கு காணலாம்.

ramayan,mahabaharat

கௌசிகே த்ரிதபஸி ஷ்ரவ்ரதி யோத்ததாத் த்விதநயஸ்வமாதுரம் I
ரந்துமாஸ்வயன தத்தித்தாதயோ தீவ்ர ரக்ஷஸி பதத்ரிகேஷிகௌ II
-ஆறாவது ஸ்லோகம்

இதன் பொருள் : எல்லா உயிரினங்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி பூண்ட தசரத மன்னர், (மனோ வாக்கு காயம் ஆகிய )மூன்று விதத்திலும் தவம் செய்த ரிஷி விஸ்வாமித்திரருக்குத் தன் செல்வங்களான ராமர், லக்ஷ்மணரைத் தந்தார்.

இதே ஸ்லோகத்தை திருப்பிப் போட்டுப் படித்தால் பொருள் மாறி விடும் இப்படி:- புண்ணியச் செயல்களைச் செய்த ஓ, பரீட்சித்து மன்னனே, ராக்ஷஸ குணத்தில் வேறு யாரையும் ஒப்பிடமுடியாத பூதனையையும் பறவையின் உருவில் இருந்த பகனையும் குதிரையின் உருவில் இருந்த கேசினையும் விளையாட்டு லீலையாக எல்லையற்ற ஞானம் உடைய ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உடலிலிருந்து (உயிரை நீக்கி) முக்தி அளித்தார்.

rama brown

இதே காவியத்திலிருந்து இன்னொரு பாடலைப் பார்ப்போம்.
க்ஷதாய மா யத்ர ரகோரிதாயுர் அங்கானுகானன்யதயோயனானி I
நிநாய யோ வன்யனகானுகாரம் யுதாரிகோரத்ரயமாயதாக்ஷ: II
– 34வது ஸ்லோகம்

இதன் பொருள் : சுக்ரீவனும் இதர குரங்குகளும் யுத்தகளத்தில் நுழைந்தவுடன் அழியப் போகும் வாழ்வை உடையவனான ராவணனால் ராமருக்கு எந்தக் காயத்தையும் விளைவிக்க முடியவில்லை.
இதையே பின்னாலிலிருந்து படித்தால் வரும் பொருள் இது: நீண்ட கண்களையுடைய ஸ்ரீ கிருஷ்ணர் மலை போன்ற உருவத்தை ஒத்த (அகாசுரன், கேசின், பூதனா ஆகிய) மூன்று பயங்கரமான அசுரர்களை வதம் செய்தான்.

இது போன்ற விலோம காவியத்தின் ஆதிகர்த்தா சூர்யகவியே என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர் பார்த்தபுரத்தில் (அஹ்மத் நகர்) 1580ஆம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த அற்புதமான கவிஞர். இதற்கு அவரே ஒரு உரையையும் எழுதி இருக்கிறார். அதில் இப்படிப்பட்ட ஒரு காவியம் செய்வது எவ்வளவு கஷ்டமானது என்பதையும் விளக்கியுள்ளார்.

rama B&W

சிதம்பர கவியின் அற்புத காவியங்கள்
அடுத்து 1600ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் வாழ்ந்த சிதம்பர கவி என்பவர் சப்தார்த்த சிந்தாமணி என்ற நூலை இயற்றியுள்ளார். இதிலும் முதலிலிருந்து படித்தால் ராமாயணமும் பின்னாலிலிருந்து படித்தால் மஹாபாரதக் கதையும் மிளிரும். தஞ்சை சரஸ்வதி மஹாலில் சுவடி வடிவில் உள்ள இந்த அற்புத நூல் இன்னும் அச்சிடப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் இதன் பெருமை உலகெங்கும் பரவி விட்டிருக்கிறது.இவர் இன்னும் ஒரு படி மேலே போய் கதா த்ரயம் என்ற காவியத்தையும் இயற்றி இருக்கிறார். இதில் ஸ்லோகத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தால் ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றோடு பாகவதக் கதையையும் படிக்கலாம், ஒரே பாடலில் மூன்று பிரம்மாண்டமான நூல்கள்! அதிசயம், ஆனால் உண்மை! உலகில் இது போல எந்த ஒரு மொழியிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத சாதனையாக இது கருதப்படுகிறது!

கவிஞர் வேங்கடாத்வரி
சிதம்பர கவியை அடுத்து அதிசயமான மூன்றாவது கவிஞராகத் திகழ்பவர் வேங்கடாத்வரி என்பவர். 1650ஆம் ஆண்டு வாக்கில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் இவர். இவரது ராகவ யாதவீயம் என்பது 30 ஸ்லோகங்களைக் கொண்ட ஒரு அரிய நூல். ஸ்லோகத்தை நேரடியாகப் படித்தால் ராமாயணக் கதையையும் தலைகீழாகப் படித்தால் மஹாபாரத கதையையும் இதில் படிக்க முடிகிறது.இதில் இரு ஸ்லோகங்களைப் பார்க்கலாம்.

ராமநாமா சதா கேதபாவே தயாவான் அதாபீனதேஜா: ரிபௌ ஆனதே I
காதிமோதாஸஹாதா ஸ்வபாஸா ரஸாமே சுக: ரேணுகாகாத்ரஜே பூருமே II
-ஸ்லோகம் 7
அனுலோமமாக அதாவது முதலிலிருந்து கடைசி வரை வரிசைக்கிரம்மாகப் பார்த்தால் இதன் பொருள் : துயரப்படுவோரிடம் எப்போதும் சதா கருணையுடன் திகழும் ராமபிரான், சூரியனைப் போலப் பிரகாசிப்பவரும் சுலபமாக அணுகக்கூடியவரும் முனிவர்களைத் துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழித்தவருமான அவர் ரேணுகாவின் புத்திரரும் பூமி அனைத்தையும் தனது செல்வமாகக் கொண்டு சுற்றித் திரிந்தவருமான பரசுராமரைப் பார்த்த போது குளிர்ந்த ஒளியுடன் அடக்கமுடன் திகழ்ந்தார்.
இதையே திருப்பிப் போட்டால் வரும் ஸ்லோகம்:

மேருபூஜேத்ரகா காணுரே கோஸுமே சா அரஸா பாஸ்வதா ஹா சதா மோதிகா I
தேன வா பாரிஜாதேன பீதா நவா யாதவே அபாத் அஸ்வேதா சமானாமரா II

பிரதிலோமமாக அதாவது கடைசியிலிருந்து முதல் வரை (மேலே உள்ள ஸ்லோகப்படி பார்த்தால்) இதன் பொருள் : மேருவையும் வெல்லும் ரைவர்த்தக மலையில் இருந்தபோது பாரிஜாத மலரை அடைந்த ருக்மிணி பூமியில் உள்ள குறைந்த வாசனையே உள்ள எந்த புஷ்பங்களின் மீதும் ஆசையின்றிப் போனதோடு ஒரு புதிய மேனியை அடைந்தவள் போலத் திகழ்ந்தாள்.
ஆக அனுலோமமாகவும் பிரதிலோமமாகவும் உள்ள இந்த விலோம காவியத்தின் அனைத்துப் பாடல்களையும் வார்த்தை வார்த்தையாக எடுத்து அர்த்தத்தைக் கூறப் போனால் கவிதையின் அழகும் ஆழமும் நன்கு புரிவதோடு பிரமிப்பும் வியப்பும் வரும்.

krishna and balarama
Picture of Krishna and his brother Balarama.

இன்னும் ஒரு பாடல்:
தாம் ஸ: கோரமதோஷ்ரீத: விக்ராம் அஸதர: அதத I
வைரம் ஆஸ பலாஹாரா வினாஸா ரவிவம்சகே II
– ஸ்லோகம்18

அனுலோமமாக இதன் பொருள்: ராமனின் வலதுகரமாகத் திகழ்ந்த பயமே அறியாத லக்ஷ்மணனால் மூக்கு அறுபட்டவுடன் சூர்ப்பணகை ராமன் மேல் பழி வாங்கத் துடித்தாள்.
இந்த ஸ்லோகத்தை பிரதிலோமமாக கடைசியிலிருந்து தலைகீழாக எழுதிப் பார்த்தால் வருவது இந்த ஸ்லோகம்:-

கேசவம் விரஸானாவி: ஆஹ ஆலாபஸமாரவை: I
ததரோதஸம் அக்ராவித: அஷ்ரித: அமரக: அஸதாம் II

இதன் பொருள்:-மலைகளின் கொட்டமழிப்பவனும், தேவர்களின் தலைவனும், அசுரர்களை அழிப்பவனுமான இந்திரன் தனது சந்தோஷம், பலம், ஒளி ஆகியவற்றை இழந்தான். வானையும் பூமியையும் படைத்த கிருஷ்ணனிடம் சமாதானப்படுத்தும் சொற்களைப் பேசினான்.
காவியம் படிப்போம்; பரப்புவோம்!

(சம்ஸ்கிருத) இலக்கணத்திற்குட்பட்டு பொருள் பொதிந்த சொற்களை இப்படி அமைப்பதென்பது இறை அருளினால் மட்டுமே வரும் என சூரிய கவியே மனம் நெகிழ்ந்து சொல்லியுள்ளார்.
இப்படிப்பட்ட தெய்வீகக் கவிஞர்கள் இந்த நாட்டில் தோன்றி இதிஹாஸ மேன்மையையும் சம்ஸ்கிருத அருமையையும் நிலை நாட்டி இருப்பது சனாதன தர்மத்தின் ஏராளமான அதிசயங்களுள் இன்னும் ஒரு அதிசயமே!
krisna bow

ராமகிருஷ்ண விலோம காவ்யத்தை சம்ஸ்கிருதத்தில் படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் http://sanskritdocuments.org/all_pdf/raamakrshhna.pdf என்ற தொடுப்பிலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ராகவ யாதவீயம் காவியத்திற்கு ஆங்கிலத்தில் விரிவான அழகான உரை ஒன்றை எழுதி இருப்பவர் டாக்டர் சரோஜா ராமானுஜம்.இந்த சம்ஸ்கிருத ஸ்லோகத்திற்கான ஆங்கில விரிவுரை நூலையும் இணையதளத்தில் காணலாம்.

அருமையான காவியங்களை உலகிற்குத் தரும் இணைய தளங்களுக்கும் உரை எழுதிய சம்ஸ்கிருத விற்பன்னர்களுக்கும் நமது நன்றிகளை உரித்தாக்கி இக் காவியங்களின் பெருமையை உலகில் பரப்புவோம்!.ராம கிருஷ்ணரின் அருளுக்குப் பாத்திரராவோம்!!
******************

ஜோதிடமும் கோடீஸ்வரர்களும்!

c74d9-hongkongzodiaz

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–1103 தேதி ஜூன் 13, 2014.

ஜோதிடம் உண்மையா? ‘’கொஞ்சம் உண்மை’’ இருக்கிறது என்று சொல்ல ஒரு ஆதாரம் கிடைத்து இருக்கிறது.

ஜோதிடம் உண்மையானால் நடக்கப் போகும் விஷயங்களில் நூறு சதவிகிதம் இல்லாவிட்டாலும் 75 சதவிகிதமாவது முன் கூட்டியே சொல்ல வேண்டும். நடந்த பின்னர் நாத்ரதாமஸ் Nostradamus (1503 – 1566) என்பவர் அன்றே சொன்னார் என்று பிதற்றுவதில் பொருள் இல்லை. ஜோதிடர்கள் உண்மை விளம்பிகளாக இருந்தால், நடக்கப் போகும் விஷயங்களை முன்கூட்டியே எழுதி ஒரு ‘கவரில்’ போட்டுக் கொடுக்கட்டும். பின்னர் ஆண்டு முடிவில் நான் சொன்னதில் இத்தனை சரியாக இருந்தது ஆகையால் ஜோதிடம் உண்மை என்று சொல்லட்டும்.

35 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் மதுரை தினமணியில் சீனியர் உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். எனது தந்தை செய்தி ஆசிரியராக இருந்தார். மதுரையில் உள்ள ஒரு வணிகப் பிரமுகர், எல்லா ஜோதிடர்களுக்கும் ஒரு சவால் விட்டார். “நான் பத்து பிரமுகர்களின் ஜாதகங்களை ஒரு உறையில் போட்டுத் தருகிறேன். அதில் பத்து கேள்விகள் இருக்கும்— சரியான பதில் தரும் ஜோதிடருக்கு பெரிய ரொக்கப் பரிசு” என்று அறிவித்தார். ஜோதிடர்களுக்கு அவை யாருடைய ஜாதகங்கள் என்று தெரியாது. ஆனால் மதுரைப் பிரமுகர்கள் அடங்கிய கமிட்டிக்கு மட்டும் தெரியும். குறிப்பிட்ட நாளன்று பொது மக்கள் முன்னால் அந்த உறைகள் (கவர்) பகிரங்கமாகத் திறக்கப்பட்டு ஆராயப்படும் என்று தினமணியில் செய்தி வெளியானது. எங்கள் தினமணி ஜோதிடர் உள்பட யாரும் அந்த சவாலை ஏற்க முன்வில்லை!!

ஜோதிடம் உண்மைதான். ஆனால் அதை சரியாக கணக்கிட்டுச் சொல்லும் திறமைசாலிகள் குறைந்துவிட்டனர். நாம் சூப்பர் கம்ப்யூட்ட்ர் யுகத்தில் வாழ்கிறோம். சரியான முறையில் எல்லா விஷயங்களையும் அதில் போட்டுவிட்டால் பிறகு நல்ல முறையில் ஆரூடம் சொல்ல முடியும். ஒரு காலத்தில் நானும் என் சகோதர்களும் அஷ்டாவர்கம் வரையில் போட்டு ஜாதகங்களை ஆராய்ந்ததால் இதில் எவ்வளவு கணக்குகள் உள்ளன என்பது புரிகிறது. மேலும் ஜாதகம் கொண்டு வருவோரும் சரியான ஜாதகத்தைத் தான் கொடுத்தாரா என்பதையும் அறியவேண்டும்.

ஜோதிடம் உண்மை என்பதற்கான சில ஆதாரங்களைக் காண்போம். பெரிய பெரிய சுவாமிகள், பாபாக்கள் போன்றோர் ஒரு பக்தரைப் பார்த்த மாத்திர த்திலேயே அவர்கள் ஜாதகத்தில் உள்ள குறைபாடுகளைச் சொல்லிப் பரிகாரம் சொல்கிறார்கள். அவர்களுடைய ஜாதகங்களைப் பாராமலேயே உள்ளுணர்வு, தெய்வீக ஆற்றல் மூலம் இப்படிச் சொல்வதை அருகில் இருந்து கவனித்து இருக்கிறேன்.

லண்டன் டைம்ஸ் கோடீஸ்வரர் பட்டியல்
புகழ்பெற்ற லண்டன் ‘டைம்ஸ்’ பத்திரிக்கை ஆண்டுதோறும் பிரிட்டனில் வசிக்கும் ஆயிரம் கோடீஸ்வர்களின் பட்டியலை வரிசைக் கிரமமாக வெளியிடுவதுண்டு. இதை ஆண்டுதோறும் வாங்கி அலசி ஆராய்வது எனக்குப் பிடித்தப் பொழுது போக்குகளில் ஒன்று. எந்தந்த வகையில் யார் யார் எவ்வளவு பணம் சம்பாதித்தார்கள் என்ற ஆய்வுரைகளும் அதில் இருக்கும். சினிமா மூலம் சம்பாதித்தவர்கள், இசைத்துறை மூலம் சம்பாதித்தவர்கள் வணிகம் மூலம் சம்பாதித்தவர்கள் என்று பல வகைகள் இருக்கும். ஒரு மூலையில் சிறிதாக ஜோதிட விஷயமும் இருக்கும். எந்த ராசிக்காரர்கள் அதிகம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்றும் ஒரு பத்தி இருக்கும். இதில் வியப்பான விஷயம்,– எப்போதும் மிதுன ராசிக்காரர்கள்—பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். விருச்சிக ராசிக்காரகள் (எனது ராசி) அடிமட்டத்தில் இருக்கிறார்கள்!!

இந்து ஜாதக முறையில் ராசி கணக்கிடுவதும், மேலை நாட்டு முறையில் ராசி கணக்கிடுவதும் வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக எனக்கு ஜாதகப் படி தனுர் ராசி. மேலைக் கணக்குப்படி விருச்சிகம் (ஸ்கார்ப்பியோ). மேலை நாட்டில் நீங்கள் எந்த மாதத்தில் என்ன தேதியில் பிறந்தீர்களோ அதன்படி ராசி இருக்கும். கீழே உள்ள படத்தைப் பார்த்தால் மேலை நாட்டு (சூரியக் கணக்கு) முறையில் உங்கள் ராசிகள் என்ன என்பது தெரியும். ஆனால் இன்னும் ஒரு வியப்பான செய்தி:- இந்து ஜோதிட முறையில் கணக்கீட்டாலும் மிதுன ராசிக்கார்கள், — பணக்கார் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்கள்!!!

zodiac

வெளி நாட்டுப் பத்திரிக்கைகளில் விளையாட்டு வீரர்களின் ராசிகள், நடிகர் நடிகையர் ராசிகள் என்று அவ்வப்போது அலசி ஆராயும்போதும் சில ராசிக்காரர்கள், அந்தப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துவது ஜோதிடம் உண்மைதான் என்று நிரூபீக்கிறது.

இதோ லண்டனில் இருந்து வெளியாகும் ‘’சண்டே டைம்ஸ்’’ பத்திரிக்கை வெளியிட்ட இரண்டு ஆண்டு (2013 & 2014) கோடீஸ்வர்களின் ராசிகள்:–

According to Sunday Times Rich List 2013:

Gemini மிதுனம் 107 கோடீஸ்வரர்கள்
Aries மேஷம் 102 கோடீஸ்வரர்கள்

Capricorn மகரம் 102 கோடீஸ்வரர்கள்
Leo சிம்மம் 96 கோடீஸ்வரர்கள்
Taurus ரிஷபம் 96 கோடீஸ்வரர்கள்
Aquarius கும்பம் 93 கோடீஸ்வரர்கள்
Sagittarius தனுர் 91 கோடீஸ்வரர்கள்
Cancer கடகம் 87 கோடீஸ்வரர்கள்
Pisces மீனம் 86 கோடீஸ்வரர்கள்
Libra துலா 85 கோடீஸ்வரர்கள்
Virgo கன்னி 83 கோடீஸ்வரர்கள்
Scorpio விருச்சிகம் 71 கோடீஸ்வரர்கள்

sundaytimes2

According to Sunday Times Rich List 2014:

மிதுனம் Gemini 118 billionaires கோடீஸ்வரர்கள்
கன்னி Virgo 111 billionaires கோடீஸ்வரர்கள்
மகரம் Capricorn 98 billionaires கோடீஸ்வரர்கள்
மீனம் Pisces 95 billionaires கோடீஸ்வரர்கள்
மேஷம் Aries 95 billionaires கோடீஸ்வரர்கள்
ரிஷபம் Taurus 91 billionaires கோடீஸ்வரர்கள்
தனுர் Sagittarius 90 billionaires கோடீஸ்வரர்கள்

சிம்மம் Leo 89 billionaires கோடீஸ்வரர்கள்
கும்பம் Aquarius 89 billionaires கோடீஸ்வரர்கள்
கடகம் Cancer 81 billionaires கோடீஸ்வரர்கள்
துலா Libra 76 billionaires கோடீஸ்வரர்கள்
விருச்சிகம் Scorpio 73 billionaires கோடீஸ்வரர்கள்

ஆனால் இந்தப் பட்டியல் துல்லியமானது அல்ல என்றும் அவர்களே அடைப்புக் குறிக்குள் எழுதி இருக்கிறார்கள். ஏனெனில் ஆயிரம் கோடீஸ்வர்களின் ராசிகளும் கிடைப்பதில்லை. எந்தெந்த லட்சாதிபதிகளின் விவரங்கள் கிடைத்ததோ அவைகளை மட்டுமே கொண்டு தயாரிக்கப் பட்டது இந்த ஜோதிட ராசிப் பட்டியல் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

hindujas
Picture of Hinduja Brothers, Richest in the UK.

பட்டியலில் காணப்படும் சுவையான விஷயம் மிதுனராசியும், மகர ராசியும் இரண்டு பட்டியல்களிலும் உச்சியிலேயே இருப்பதைக் காணலாம். வுருச்சிக ராசி எப்போதுமே கீழேயே இருப்பதைக் காணலாம்.

என்னுடைய ராசி விருச்சிக ராசி. எப்போதுமே ஏழைதான். ஆனால் உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். ஏனெனில் லெட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதி இருக்க மாட்டாள். சரஸ்வதி இருக்கும் இடத்தில் லெட்சுமி இருக்க மாட்டாள். அறிவு என்னும் நிதி இருந்தால் போதுமே!

(ஆங்கிலக் கணக்குப்படி ராசிகள் வேறு என்பதால் உங்கள் ஜாதகப்படியான ராசியை வைத்து குழம்பிக் கொள்ளாதீர்கள். தமிழ் பத்திரிக்கைகள் பெரும்பாலும் இந்து முறையையும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் பெரும்பாலும் மேலை/ஆங்கில முறையையும் பின்பற்றுகின்றன

Billionaires and Astrology!!

zodiac 1
Written by London Swaminathan
Post No. 1102; Dated 12th June 2014.

We have some proof to say that astrology is right to some extent.

If astrology is true, it should give us some concrete proof. If astrology is true, it should forecast all the events, or at least 75% of the events that is going to happen. I don’t believe in Nostradamus. He might have been a true seer or a prophet or a clairvoyant. But the way he wrote always gave us two or three meanings or it may be interpreted in the way you wish. So anyone quoting him must produce all predictions before hand and should say at the end of the year in how many he or she was right. Everybody fools people by saying that Nostradamus (1503 – 1566) had already prophesied or predicted this and that. Had he alive today he himself would refute most of those cheats.

When I was working as Senior Sub Editor for Dinamani Newspaper in Madurai there was a wealthy businessman who challenged all the astrologers of Tamil Nadu. He told them through our newspaper that he would submit ten questions and some horoscopes of living people who are very popular. But the astrologers would not know whose horoscope it is. Only a committee of Madurai VIPs would know. All the envelopes with the predictions of the astrologers would be opened by the committee in front of the general public. Any astrologer with 75% success rate would get a big cash prize. My father who was News Editor at that time published this appeal several times. No astrologer came forward to accept the challenge. The person who challenged the astrologers did this through some club like Rotary or Lions; I don’t remember now. All this happened 35 years ago.

But there are certain indications which show that there is ‘some truth’ in astrology. Only problem is that you need huge calculations and intuition to predict correctly. I have seen even some Swamijis (Babas) saying that because of this planet that someone is undergoing a good or bad period. They don’t do it for money like astrologers. As soon as they look at the person they give predictions like this.

Now and then Western News Papers publish the zodiac signs of sportsmen or actors or actresses. Certain signs always dominate in each and every walk of life.

hindujas
Hinduja Brothers- The Richest in the UK.

Times News Paper Billionaires List
Every year The Sunday Times of London publish a supplement of Rich people in the United Kingdom. They will rank 1000 rich people of the country. The news paper analyses the list from various angles: How many of them made money through mass media, business, arts, films, music, publishing etc. In a small tabular column they also publish the zodiac sign list of the billionaires.

People who are born under Gemini Sign always dominate the billionaires list. Hindu astrology and Western astrology are different. Gemini means Miduna Rasi. So Gemini in Western astrology won’t be the same in Hindu horoscope calculations. Westerners decide your zodiac sign by the date you are born. But to my surprise whether it is Miduna Rasi in Hindu astrology or Gemini sign in Western astrology most of the rich people are born under GEMINI sign!!

Following is the Zodiac Signs on the basis of your birth days. Most of the English news papers follow this:

zodiac 2

According to Sunday Times News Paper Billionaires List 2013:
Gemini 107 billionaires
Aries 102 billionaires
Capricorn 102 billionaires
Leo 96 billionaires
Taurus 96 billionaires
Aquarius 93 billionaires
Sagittarius 91 billionaires
Cancer 87 billionaires
Pisces 86 billionaires
Libra 85 billionaires
Virgo 83 billionaires
Scorpio 71 billionaires

According to Sunday Times Rich List 2014:
Gemini 118 billionaires
Virgo 111 billionaires
Capricorn 98 billionaires
Pisces 95 billionaires
Aries 95 billionaires
Taurus 91 billionaires
Sagittarius 90 billionaires
Leo 89 billionaires
Aquarius 89 billionaires
Cancer 81 billionaires
Libra 76 billionaires
Scorpio 73 billionaires

But this list is not perfect. The list itself says wherever the signs of the billionaires are known they are taken into account. But Gemini and Capricorn are always at the top of the list!!

rich2014

I am a poor Scorpio! I am destined to be poor in money! But rich in knowledge!!!
It is said that Lakshmi (goddess of wealth) and Saraswati (Goddess of Knowledge) never live together!!!

contact swami_48@yahoo.com

ஏலாதி தரும் அபூர்வ செய்திகள்!

tamil veeran

ஏற்றம் தரும் ஏலாதி!-Part 2

லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை (Written by Santanam Nagarajan; Part 2 about Tamil Ethical book Elathi)

By S.Nagarajan ; Post No.1101 dated 12th June 2014.

காலன் வராமல் காக்கும் வழி!
பூமியில் ஒரு ஜனனம் ஏற்பட்டவுடன் அந்தப் பிறப்புடன் உடனே ஒட்டிக் கொள்ளும் ஒரு வார்த்தை மரணம் தான்! பாரபட்சமில்லாது வரும் காலனது வருகையை ஆசிரியர் அழகுற விளக்குவதைப் பார்க்கும் போது நயமான கருத்து நம் உள்ளத்தில் ஆழப் பதிகிறது.

அழப்போகான், அஞ்சான், அலறினால் கேளான்,
எழப்போகான் ஈடு அற்றார் என்றும் – தொழப் போகான்,
என்னே இக் காலன்!ஈடு ஓரான், தவம் முயலான்,
கொன்னே யிருத்தல் குறை (பாடல் 37)

அழுதாலும் விடமாட்டான், அலறினாலும் விட மாட்டான், நீயே என் குல தெய்வம் என தொழுதாலும் விட மாட்டான்,அட எப்படிப்பட்டவனடா இந்தக் காலன்! என்னே இக் காலன் என கணிமேதாவியார் வியக்கும் போது கூடவே நாமும் வியக்க வேண்டியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இவனை வெல்லத் தவம் அல்லவா வழி! அதை மேற்கொள்வோம் என பாடல் வலியுறுத்துகிறது.

இந்தப் பாடலைப் படித்து விட்டு கவியரசு கண்ணதாசனின் பாடலைப் பார்ப்போம்:
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா!
இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லை என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது -அது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது-அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா (பாலும் பழமும் திரைப்படப் பாடல்).

நயமான உண்மைக் கருத்தை கண்ணதாசனுக்கு இனம் காண்பித்தவர் ஏலாதியார் என்றால் மிகை அல்ல!

எழுத்தினால் நீங்காது, எண்ணால்ஒழியாது ஏத்தி வழுத்தினால் மாறாது என அடுத்த பாடலிலும் ஜனனம் மரணம் என்பது கல்வி அறிவினாலோ, தியானத்தினாலோ, அல்லது துதிக்கும் பாடல்களினாலோ நீங்காது என்று வலியுறுத்தி நல்ல ஒழுக்கத்துடன் தவம் புரிந்தால் ஜனன மரணச் சுழலிலிருந்து விடுபடலாம் என பேருண்மையை நூலாசிரியர் கூறுகிறார்.

ஆறு மனமே ஆறு; நூல் கூறும் கட்டளைகள் ஆறு

இனி பாடல்களில் ஆறு ஆறாகக் கூறும் பல உண்மைகள் சுவை பயப்பதோடு அரிய நீதிகளையும் உணர்த்துகிறது.

போகக்கூடாத இடங்கள் ஆறு:
கொலைக்களம் வார் குத்துச் சூதாடும் எல்லை,
அலைக்களம் போர்யானை ஆக்கும், – நிலைக்களம்,
முச்சாரிகை ஒதுங்கும் ஓரிடத்தும் இன்னவை,
நச்சாமை நோக்காமை நன்று (பாடல் 12)

கொலை செய்யும் இடம், வெள்ளச் சூழல் உள்ள நீர் நிலை,சூதாடும் கழகம், சிறைச்சாலை,யானைகளைப் பழக்குகின்ற இடம், தேர்,குதிரை, யானை ஆகிய முப்படைகள் செல்லும் இடத்திற்குப் போகாதே!

????????????????????????????????????????????????????

இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப இப்பாடலைப் பார்த்தால் ஏவுகணைகள் ஏவும் இடம், துப்பாக்கிப் பயிற்சி பெறும் இடம்,தரை, விமானப் படைகள் இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் ‘இந்த எல்லையில் வரக் கூடாது’ என்ற அறிவிப்புப் பலகைகளை சாதாரணமாகக் காண்கிறோம். உயிரைப் போக்க வைக்கும் அபாயங்கள் நிறைந்த இடத்திற்கு வலியப் போகாதே என்று கூறி ஆயுளை நீட்டிக்கும் வழிகளை கணி மேதாவியார் காட்டுகிறார்!

பெரியவன் யார்?
கொல்லான்கொலை புரியான்,பொய்யான் பிறர் மனை மேல்
செல்லான் சிறியார் இனம் சேரான் – சொல்லும்
மறையில் செவி இலன்,தீச்சொற்கண் மூங்கை,
இறையில் பெரியாற்கு இவை (பாடல் 19)
கொலை செய்யாதவன், பிறர் கொலை செய்வதையும் விரும்பாதவன்,பொய் சொல்லாதவன், பிறர் மனைவியிடம் செல்லாதவன்,தீயவர்களிடம் செல்லாதவன், தீய சொற்களைப் பேசாதவன், கேளாதவன் ஆகிய குணங்களை உடையவனே பெரியோன்!

தேவாதி தேவன் யார்?
உரையான் குலன் குடிமை: ஊனம் பிறரை
உரையான்:பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய்-
பூ ஆதி வண்டு தேர்ந்து உண்ணு குழலாய், ஈத்து உண்பான்,
தேவாதி தேவனாய்த் தேறு (பாடல் 32)

வண்டுகள் மொய்த்து உண்ணும் கூந்தலை உடைய பெண்ணே, தன் குல உயர்வு,குடிப் பிறப்பு உயர்வு ஆகியவற்றைப் பாராட்டிப் பேசாதவன்,பிறரது இழிவினை இகழ்ந்து உரைக்காதவன்,தன் பொருளை ஏழைகளுக்குக் கொடுத்து வாழ்பவன் தேவர்களுக்கெல்லாம் தேவன்!

மறை வழி நடப்போருக்கு எவையெல்லாம் வந்து சேரும்?
சென்றபுகழ் செல்வம் மீக்கூற்றம் சேவகம்
நின்றநிலை கல்வி வள்ளன்மை – என்றும்,
அளி வந்து ஆர் பூங்கோதாய் ஆறும் மறையின்
வழி வந்தார் கண்ணே வனப்பு (பாடல் 1)

திசை எங்கும் பரவிய புகழ், செல்வம்,மேன்மையான நிலை,வீரத்தில் அசையாத நிலை,கல்வி,கொடை இந்த ஆறும் மறையை நன்கு கற்று ஒழுகுவோருக்கு அழகைத் தரும்.

hairstyle2

எந்த அழகு உண்மை அழகு?
கல்வியைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் வழிவழியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது.
அந்தப் பாடல்:-

இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடில் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு (பாடல் 74)

இடுப்பழகு, தோளழகு,செல்வத்தின் அழகு, நடையழகு, நாணத்தின் அழகு,கழுத்தின் அழகு – இவையெல்லாம் அழகே அல்ல;எண்ணும் எழுத்தும் கூடிய கல்வி அழகே அழகு!

இந்தப் பாடலை பர்த்ருஹரியின் கீழ்க்கண்ட பாடலோடு (நீதி சதகம் பாடல் 15) இணைத்துப் பார்ப்போம்:

கேயூராணி ந பூஷயந்தி புருஷம் – மனிதனை வளைகள் அலங்கரிப்பதில்லை
ஹாரா ந சந்த்ரோஜ்வலா – சந்திரன் போல பிரகாசிக்கும் முத்து மாலைகளோ
ந ஸ்நானம் ந விலேபகம் ந குஸ¤மம் – குளிப்பதோ, சந்தனம் பூசிக் கொள்வதோ
ந அலங்க்ருதா மூர்தஜா – வாரி விட்ட சிகையோ
ந பூஷயந்தி – மனிதனை அலங்கரிப்பவையாகா
யா ஸம்ஸ்கிருதா தார்யதே ஏகாவாணீ – எது நன்கு பரிசுத்தமாகத் தரிக்கப்படுகிறதோ அந்தக் கல்வி ஒன்று தான்
புருஷம் ஸமலங்கரோதி -மனிதனை நன்கு அலங்கரிக்கச் செய்கிறது
அகில பூஷணானி க்ஷ£யந்தே வாக் பூஷணம் பூஷணம்- எல்லா அழகும் நசிக்கின்றன கல்வியுள்ள வாக்கே சிறந்த அழகு.

032maruthi

அபூர்வ செய்திகள்!
ஏலாதி சில அபூர்வமான செய்திகளையும் ஆங்காங்கே தெளித்துச் செல்கிறது!
ஒருவன் தவத்தினைச் செய்வானாயின் அவனுக்கு மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழாம் பிறப்பில் வீடு பேறு வாய்க்கும் என்று உறுதி படக் கூறுவது சுவையான செய்தி.

அடுத்து பல்வேறு வகையில் பிறப்பு நேரிடுவதைச் சுட்டிக் காட்டி அப்படிப் பிறக்கும் பிள்ளைகளுக்கு உரிய பெயரையும் பட்டியலிட்டுத் தருகிறது!(பாடல்கள் 31,32).இது வேறு எந்த நூலிலும் காணக் கிடைக்காத ஒரு பட்டியல்!

ஔரதன் – கணவனுக்குப் பிறந்தவன்; கேத்திரசன் – கணவன் இருக்கும் போது பிறனுக்குப் பிறந்தவன்;கானீனன் – திருமணம் ஆகாதவளுக்குப் பிறந்தவன்;கூடோத்துபன்னன் – களவில் பிறந்தவன்; கிரிதரன் – விலைக்கு வாங்கப்பட்டவன்;பௌநற்பவன் – கணவன் இறந்த பிறகு பிறனை மணந்து பெறப்பட்டவன்;தத்தன் – சுவீகார புத்திரன்;சகோடன் – திருமணத்தின் போதே கருவில் இருந்தவன்;கிருத்திருமன் – கண்டெடுத்து வளர்த்துக் கொள்ளப்பட்டவன்;புத்திர புத்திரன் – மகனுக்குப் பிறந்தவன்;அபவித்தன் – பெற்றோர்கள் கைவிட மற்றவர்களால் வளர்க்கப்பட்டவன்;உபகிருதன் – காணிக்கையாக வந்தவன்!

இப்படிப் பற்பல செய்திகளை நூலில் பரக்கக் காணலாம்!

சொல்வளம்
நூலின் சொல்வளம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் இருப்பதால் படிக்கப் படிக்கச் சுவை கூடுகிறது.ஒரே ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சுட்டிக் காட்டலாம்:

பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் – மை தீர்
சுடர் இன்று; சொல் இன்று; மாறு இன்று; சோர்வு இன்று;
இடர் இன்று; இனி துயிலும் இன்று (பாடல் 66)

பொய் இல்லாத பெரியோர் ஆராய்ந்த வீடு பேற்றின் மாட்சிமையை உணர்ந்தால் ஒளி இல்லை;சொல் இல்லை; மாறுபாடு இல்லை; சோர்வு இல்லை;துன்பமில்லை; இனி தூக்கமும் இல்லை!

tamil puu parithal

நூலின் யாப்பு
உலகிலேயே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட எந்த மொழியிலும் இல்லாத ஒரு பா வகை வெண்பா. சொல் நயத்தையும் ஓசை நயத்தையும் கருத்து நயத்தையும் தரும் வண்ணம் இதன் இலக்கணம் அமைக்கப்பட்டுள்ளது அதிசயத்திலும் அதிசயமே.

ஆகவே இதை மனப்பாடம் செய்வது மிகவும் சுலபம்! ஆகவே தான் ‘வெண்பா ஒரு கால் கல்லானை’ என்ற மொழி வழக்கில் உள்ளது. ஒரு முறை கேட்டாலேயே வெண்பா மனனம் ஆகி விட வேண்டுமாம்! வாழ்வியல் நீதிகளைக் கூறும் இந்த நூலை அதனால் தான் கணி மேதாவியார் வெண்பாவில் அமைத்துத் தந்தார் போலும்.அனைவரும் இதனை சுலபமாக மனத்தில் இருத்திக் கொள்ளலாமே!

ஆறு பொருள்களைச் சொல்ல வேண்டியிருப்பதால் உவமை நயங்கள், அலங்கார சாஸ்திரம், அணிகள் ஆகியவற்றிற்கு நூலில் அதிகம் இடம் இல்லாமல் போய் விட்டது. அதிலும் அழகிய பெண்ணை அழைத்து நீதியைச் சொல்வதால் அதில் சில சொற்கள் போய்விடுவதால் சொற்களின் இழப்பைப் புலவர் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஆனால் பெண்களின் அழகை வர்ணித்து அந்த இடத்தில் உவமை நயத்தைக் காட்டி உவமைகள் உள்ள நூலாக இதை ஆக்கியுள்ளார் அவர்!

மனிதனுக்கு ஏற்றம் தரும் வாழ்வியல் நீதிகளை எண்பது பாக்களில் தர வேண்டும் என்று நினைக்கும் கணிமேதாவியாரின் துடிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெரிவதால் ஏலாதி அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நூல் ஆகி விட்டது.

பல முறை இதைப் படித்தால் அறம்,பொருள், இன்பம், வீடு ஆகிய இந்த நான்கையும் அடையும் ரகசியம் புலப்படும்!

((லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை.))

****************************************************
தொடர்புடைய இதர கட்டுரைகள்: மந்திர மொழி தமிழ், பத்தும் பெற்ற தமிழ்,சர்க்கரை போற்றிப் பணிந்த தமிழ், ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: snagarajans@gmail.com