அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்! (Post No.2827)

biography gurdjief

Written  BY S NAGARAJAN

Date: 21 May 2016

 

Post No. 2827

 

 

Time uploaded in London :–  6-48 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

20-5-16  பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளீயான கட்டுரை

 

 

 Book Gurdjief

 

அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்!

ச.நாகராஜன்

 

 

“வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் முடிவற்று தொடரும். ஒன்று மனிதனின் முட்டாள் தனம், இரண்டாவது இறைவனின் கருணை!”

–  குர்ட்ஜியெஃப்

 

 

“மனிதர்களுக்கு நம்பமுடியாதபடி அளப்பரிய ஆற்றல் உண்டு. ஒவ்வொருவருக்கும் இந்த ஆற்றல் உண்டு என்ற போதிலும் அப்படி ஒரு ஆற்றல் இருப்பதைத் தெரிந்து கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்”

 

 

என்று இப்படி ஒரு கொள்கையை  முன் வைத்தவர் அதிசய ரஷிய யோகி குர்ட்ஜியெஃப். (GURDJIEFF :தோற்றம் 13-1-1866 மறைவு 29-10-1949)

 

 

சுவை நிறைந்த ஏராளமான சம்பவங்கள் நிறைந்தது இவரது வாழ்க்கை. தமிழ் மொழி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவரைப் பற்றி அதிகமாக எழுதப்படவில்லை. ஆகவே பொதுவாக மக்களிடையே அறியப்படாதவர்.

 

ஆனால் மேலை நாடுகளில் இந்த யோகியின் அருமையை அறிந்தோர் ஏராளம் உண்டு.

ஜான் ஜி.பென்னட் (தோற்றம் 8-6-1897 மறைவு 13-12-1974) என்பவர் பிரிட்டனைச் சேர்ந்த கணித மேதை. பெரிய விஞ்ஞானி. தொழில்துறை நிபுணர்.எழுத்தாளர். உளவியல் துறையில் சிறந்த புத்தகங்களை எழுதியவர்.

 

சிறந்த அறிவியல்  மனப்பான்மை கொண்ட இவர் ரஷிய யோகி குர்ட்ஜியெஃப்பைக் கண்டு அதிசயித்தார். அவருடனேயே இருந்து சிஷ்யராக மாறி அவர் காட்டிய வழியில் புதிய் ஆற்றலைப் பெற்றார்.

 

குர்ட்ஜியெஃப் பாரிஸுக்கு அருகில் இருந்த ப்ரியூர் என்ற இடத்தில் இன்ஸ்டிடியூட் ஃபார் ஹார்மோனியஸ் டெவலப்மெண்ட் ஆஃப் மேன் (Institue for the Harmonious development of man) என்ற ஒரு நிலையத்தை நடத்தி வந்தார்.

1923ஆம் ஆண்டு ஒரு நாள் அவரைக் காண பென்னட் வந்து சேர்ந்தார்.

 

 

பென்னட்டிற்கு ஒரு பெரிய பிரச்சினை இருந்தது.  நிரந்தரமான வயிற்றுப் போக்கு வியாதியால் அவர் பெரும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார்.ஒவ்வொரு நாள் காலை எழுந்திருக்கும் போதும் முந்தைய நாளை விட அதிக பலஹீனமாக ஆகியிருப்பதை அவர் உணர்ந்தார். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே முடியாத நிலைக்கு  வந்தார்.

ஆனால் ஒரு நாள் காலை படுக்கையிலேயே படுத்திருக்க் வேண்டும் என்று அவர் நினைத்த போது அந்த நினைப்பையும் மீறி அவர் எழுந்தார்.நன்கு உடைகளை அணிந்தார். ஏதோ ஒரு பெரும் சக்தி தன் மீது இறங்கியதைப் போல அவர் உணர்ந்தார்.

காலையில் ந்டைப் பயிற்சிக்குப் பின் அதிக பலஹீனமாக இருப்பது போல உணர்ந்தாலும் கூட நேராக குர்ட்ஜியெஃப் நடத்தி வந்த நடன வகுப்புக்கு வந்து சேர்ந்தார்.

 

அந்த நடன வகுப்போ அதிக சிக்கலான, நளினமான அசைவுகளைக் கொண்ட நடனத்தைக் கற்பிக்கும் ஒரு வகுப்பு. அதில் மிக அதிகமான கவனக்குவிப்பும் அதிக உடல் வலிமையும் தேவை.

 

Gurdjieff31

நடனம் ஆரம்பமானது. தன்னிடம் ஒரு சக்தி வந்திருப்பதை உணர்ந்த பென்னட் நடனம் ஆட ஆரம்பித்தார். அன்று குர்ட்ஜியெஃப் புதிய அபிநயங்களைக் கற்பித்தார். மற்ற மாணவர்களோ அதைப் பின்பற்ற முடியாமல் நின்று விட்டனர். பென்னட்டின் கண்களைத் தீவிரமாக குர்ட்ஜியெஃப் பார்த்தார்.

பென்னட் அதீத சக்தியுடன் ஆடலானார்.

 

நிண்ட நடனப் பயிற்சி  முடிந்தது. தனக்குள் எப்ப்டி இப்படி ஒரு வலிமை வந்து சேர்ந்தது என்று வியந்த பென்னட் தன் சக்தியைச் சோதித்துப் பார்க்க விரும்பி ஒரு மண்வெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு குழியைத் தோண்ட ஆரம்பித்தார். சாதாரணமாக அவரால் இரண்டு நிமிடங்கள் கூட அந்தக் குழியைத் தோண்டியிருக்க முடியாது. ஆனால் அன்றோ        கடுமையான வெயிலிலும் கூட அவர் தொடர்ந்து ஒரு மணி நேரம் குழியை வெட்டிக் கொண்டே இருந்தார். பின்னர் அருகிலிருந்த ஒரு காட்டினுள் நுழைந்தார். அங்கே அவர் குர்ட்ஜியெஃப்பைச் சந்தித்தார்.

 

 

எந்த ஒரு பீடிகையும் இன்றி குர்ட்ஜியெஃப் பல்வேறு விதமான சக்திகளைப் பற்றி பென்னட்டுக்குக் கூறலானார்.

“ஒரு மனிதன் ஆற்றலுடன் இருக்க ஒரு விதமான சக்தி வேண்டும். அதை உயரிய உணர்ச்சி ஆற்றல் (higher emotional energy) என்று  அழைக்கலாம். இந்த பிரம்மாண்டமான சக்தியுடன் உலகில் சில பேர்களே இனைக்கப்பட்டுள்ளனர்.அகண்டாகாரமான அந்த சக்தித் தேக்கம் மிக மிகப் பெரியது” என்றார் அவர்.

 

இதன் மூலமாக் பென்னட்டுக்குத் தானும் அந்த சக்தி தேக்கத்துடன் இணைக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்ததோடு தனது சக்தியைச் சிறிது பென்னட்டுக்கும் கொடுத்திருப்பதை அவர் குறிப்பால் உணர்த்தினார்.

 

 

பென்னட் இன்னும் கொஞ்ச தூரம் அடர்ந்த காட்டினுள் சென்றார்.

நான் இப்போது வியப்படையப் போகிறேன் என்று நினைத்துக் கொண்டார். அவ்வளவு தான், அங்கிருந்த மரம் ஒவ்வொன்றும் பெரும் வியப்புகுரிய ஒன்றாக மாறி இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் காட்டை விட்டு வெளியே போக முடியாது என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

 

 

பின்னர் பயப்படுவதாக அவர் நினைத்தார். அவ்வளவு தான், நானா திசையிலிருந்தும் அவரைப் பயமுறுத்தும் பல்வேறு தெரியாத தீய சக்திகள் அவர் மீது பாய்ந்தன.

திகைத்துப் போன அவர் சந்தோஷம் என்பதை நினைக்கவே உடலெல்லாம் புல்லிருக்கும் விதத்தில் சந்தோஷம் நிரம்பியது.

பிறகு அன்பு என்பதை அவர் நினைக்க உலகமே அன்பு மயமாகத் தோன்றியது. இந்த அன்பிலிருந்து ஒருகாலத்திலும் தான் விடுபட முடியாது என்று அவருக்குத் தோன்றியது.

 

 

இப்படிப்பட்ட அதிசய உணர்வுகள் வேண்ட்வே வேண்டாம் என்று அவர் நினைக்க அவரது அமானுஷய சக்தி அகன்று சாதாரண நிலைக்கு அவர் வந்தார்.

 

எப்படி குர்ட்ஜியெஃப்  அவருக்கு இப்படி ஒரு அபரிமிதமான சக்தியை அளித்தார்?

இது ஒன்றும் அதிசயம் இல்லை. யார் வேண்டுமானாலும் இப்படி ஒரு சக்தியை எல்லயற்ற சக்தித் தேக்கத்திலிருந்து பெறலாம் என்பதே குர்ட்ஜியெஃப்பின் கொள்கை.

 

உலகின் பிரபல விஞ்ஞானியும் உளவியலாளருமான வில்லியம் ஜேம்ஸும் இது பற்றிக் கூறி மனிதனின் ஆற்றல் அளப்பரியது என்று சொல்லி இருக்கிறார்.

 

பென்னட் வாழ்நாள் முழுவதும் குர்ட்ஜியெஃப்பை நேசித்தார். மதித்தார்.

 

abdulkalam

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பிரெஞ்சு கினியாவில் உள்ள கௌரவ் என்ற இடத்திலிருந்து இன்சாட் – 4 B சாடலைட் ஏவப்படுவதை மேற்பார்வையிட இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான ஐஎஸ் ஆர் ஓவிலிருந்து இந்திய விஞ்ஞானிகள் பலர் சென்றனர். சோதனையை முடித்து விட்டு இந்தியா திரும்ப அவர்கள் பாரிஸில் உள்ள சார்லஸ் டீ கால் விமான நிலையத்திற்கு வந்தனர்.

 

 

அங்கு அவர்களை விமான நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார். பாஸ்போர்ட்டுகளை செக் செய்த பின்னர் வழக்கமாக அவர்கள் செல்லும் பயணிகளுக்கான இருக்கைகளை நோக்கி அவர்கள் செல்ல முயன்ற போது அந்த அதிகாரி அவர்களைத் தடுத்தார். என் கூட வாருங்கள் என்றார் அவர். விஞ்ஞானிகள் பயந்து போனார்கள். ஏதாவது பிரச்சினையா என்று பயத்துடன் வினவினர்.

அதெல்லாம் ஒன்றும் இல்லை! எனக்குக் கிடைத்த உத்தரவை நான் நிறைவேற்றுகிறேன். அவ்வளவு தான். கூட வாருங்கள் என்றார்.

 

எல்லோரையும் ஒரு விசேஷமான விஐபி தங்குமிடத்திற்கு அவர் அழைத்துச் சென்று அங்கு அமரச் சொன்னார்.

ஏதோ விபரீதம் தான் என்று எண்ணிய விஞ்ஞானிகள் நாங்கள் சாதாரண எகானமி க்ளாஸ் டிக்கட் தான் வாங்கி இருக்கிறோம். இங்கு தங்க முடியாது என்று தயக்கத்துடன் கூறினர்.

 

அந்த அதிகாரி அப்போது, “டிக்கட்டெல்லாம் தேவையில்லை. சற்று நேரத்திற்கு முன்னர் உங்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்கள் எங்கள் நாட்டு விஞ்ஞானிகள் சோதனை முடிந்து திரும்பி வருவார்கள். அவர்களை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார். இங்கு உங்கள் விமானம்  புறப்பட இன்னும்  மூன்று மணி நேரம் இருக்கிறது. இங்கு உங்களை சௌகரியமாக வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு” என்றார்.

 

 

விஞ்ஞானிகளுக்கு மெய் சிலிர்த்தது. எவ்வளவோ வேலைகளுக்கு இடையில் தங்களின் வரவை நன்கு கணித்து விமான நிலைய அதிகாரியிடம் வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதியின் அன்புள்ளத்தை நினைத்து அவர்கள் உருகிப் போனார்கள். மாமனிதர் என்று அப்துல்கலாமை காரணம் இல்லாமல் மக்கள் அழைக்கவில்லை!

**********

 

தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் மங்கலச் சொற்கள் (Post No.2826)

08.08.67.earth.med

Research article written by London swaminathan

 

Date: 20 May 2016

 

Post No. 2826

 

Time uploaded in London :–  15-36

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

உலகில் வேறு எந்த இலக்கியங்களிலும் காணாத ஒரு வழக்கு இந்து மத இலக்கியங்களில் காணப்படுகிறது. சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் சிவபெருமானிடமிருந்து பிறந்து அவனருளால் பாணினி, அகத்தியன் ஆகிய இருவரால் இலக்கணம் வரையப்பட்டதால் இந்த வழக்கு நீடிக்கிறது. இரண்டு மொழிகளும் இன்னென்ன சொற்களைக் கொண்டே ஒரு நூல் துவக்கப்பட வேண்டும் என்று சொல்லும். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே பின்பற்றப் பட்டு வந்துள்ளது.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆரிய, திராவிட மொழிக் குடும்பம் என்பதெல்லாம் வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர்கள் எட்டுக்கட்டிய கட்டுக்கதை என்பதை மொழியியல் ரீதியாக முன்பே நிரூபித்துவிட்டேன்.

 

tricolour om

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

 

பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.

‘அத ரிக் வேத:’

‘அத ஸ்ரீமத்பகவத் கீதா’

என்று நூல்கள் ஆரம்பமாகும். நூலின் உள்ளே கடவுள் வாழ்த்து என்ற துதி இருக்கும். அதில் கடவுளின் பல பெயர்கள் வரும். கடவுள் வாழ்த்தே இல்லாவிடினும்

‘அத யோகானுசாசனம்’ (பதஞ்சலி யோக சூத்ரம்)

‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாசா’ (பிரம்ம சூத்ரம்)

அமரகோசம் என்னும் நிகண்டும் ‘அத’ சப்தத்தை மங்கல சொல்லாகப் பட்டியலிட்டுள்ளது.

ஓம்காரம் மிகவும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த மூல மந்திரத்திலிருந்துதான் பிரபஞ்சமே உற்பத்தியாகியது. இதை மாண்டூக்ய உபநிஷத் நன்கு விளக்கும். நவீன விஞ்ஞாமும் சப்தத்திலிருந்து பிரபஞ்சம் எல்லாம் உருவானதை ஒப்புக் கொள்கிறது.

‘அத’ என்றால் ‘இப்பொழுது’ என்று பொருள். அ –என்னும் எழுத்துதான் உலகின் பழைய மொழிகளின் முதல் எழுத்து. ரிக் வேதம் முதலான புனித நூல்கள் அக்னி என்று அ- வில் துவங்கும் அல்லது ஓம் என்னும் மந்திரத்துடன் துவங்கும்.

பழங்காலத்தில் குருமார்கள் மேடையில் அமர்வர். சிஷ்யர்கள் கீழே அமர்வர். குரு, ‘அத வால்மீகி ராமாயண’, ‘அத மஹா பாரத’ என்று உபதேசிக்கத் துவங்குவார்.

முடிவில் ‘சுபம்’ என்றோ ‘சாந்தி’ என்றோ சொல்லி முடிப்பார். உலகில் வேறு எங்கும் காண முடியாத அற்புத இலக்கிய வழக்கு இது.

 

moon night

கடவுளை நேரிடையாக குறிப்பிடாவிட்டால், ‘லோகம்’, ‘விஸ்வம்’, ‘ஸ்வஸ்தி’ போன்ற மங்கலச் சொற்களைப் பயன்படுத்துவர்.

விஷ்ணு சஹஸ்ர நாமம், ஓம் ‘விஸ்வம்’ என்று துவங்கும்.

தமிழ் வழக்கு

சம்ஸ்கிருதம் தோன்றி சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய தமிழும் இதை அப்படியே பின்பற்றுகிறது. ஆனால் தமிழில் பெரிய பட்டியல் உள்ளது.

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் என்சைக்ளோபீடியா) வழங்கும் பட்டியல்:–

சீர், எழுத்து, பொன், பூ, திரு, மணி, யானை, தேர், பரி, கடல், புகழ், மலை, மதி, நீர், ஆரணம்(வேதம்), சொல், புயல், நிலம், கங்கை, உலகம், பரிதி (சூரியன்), அமிர்தம் ஆகியனவும் இவை தொடர்பன சொற்களும்.

 

தமிழில் கிடைத்த மிகப் பழைய நூலான, கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தொல் காப்பியம் ‘எழுத்து’ என்ற சொல்லுடன் துவங்கும்.

ஆயினும் பெரும்பாலான நூல்கள் ‘உலகம்’ என்ற சொல்லுடன் துவங்கும். முன்காலத்தில் இதை ‘லோகம்’ என்ற சம்ஸ்கிருதச் சொல் என்று கருதினர். ஆனால் எனது ஆராய்ச்சியில் இது இரு மொழிகளுக்கும் பொதுவான சொல் என்பது கண்டறியப்பட்டுளது. (ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதற்கும் தமிழ்-சம்ஸ்கிருத மூல மொழியே காரணம்).

sheep, sun

‘உலகம் உவப்ப வலனேர்பு’

சங்கத் தமிழ் நூல்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு’ – என்று துவங்கும்

மற்ற நூல்களின் முதல் வரிகள்:–

‘உலகந்திரியா’ (மணிமேகலை),

‘உலகம் மூன்றும்’ (வளையாபதி),

‘உலகெலாம் உணர்ந்து’ (பெரிய புராணம்),

‘உலகம் யாவையும்’ (கம்ப ராமாயணம்)

‘நனந்தலை உலகம்’ (முல்லைப் பாட்டு),

‘மூவா முதலா உலகம்’ (சீவக சிந்தாமணி),

‘நீடாழி உலகத்து’ (வில்லி பாரதம்),

‘வையகம் பனிப்ப’ (நெடுநல் வாடை),

‘மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை’ (சிறு பாணாற்றுப்படை),

‘மாநிலஞ்சேவடியாக’ (நற்றிணை)

இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

மாநிலம், வையகம், உலகம் – ஆகியன ஒரு பொருளுடைத்து.

ஒரு நூலை மங்கலச் சொல்லுடனே துவங்க வேண்டும் என்பது,

“வழிபடு தெய்வ வணக்கம் கூறி, மங்கல மொழி முதல் வகுத்தெடுத்துக் கொண்ட, இலக்கண, இலக்கியம் இடுக்கணின்றி, இனிது முடியும் என்மனார் புலவர்” என்னும் சூத்திரத்தில் உளது.

 

 

swastik, om lamps, kotipali shivratri

பழங்கால சம்ஸ்கிருத, பிற்கால தமிழ் கல்வெட்டுகள் ‘ஸ்வஸ்தி’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும்.

பழைய தமிழ் திரைப்படங்கள், நூல்கள் எல்லாம் ‘சுபம்’, அல்லது ‘ஓம் சாந்தி’, ‘ஓம் தத்சத்’ என்று முடியும்.

பிரிடிஷ் லைப்ரரியில் நான் காணும் நூற்றாண்டுகளுக்கு முந்தைய நாவல்கள், நாடகங்களிலெல்லாம் இதைக் காண்கிறேன். வடமொழி நாடகம் அனைத்தும் ‘ஸ்வஸ்தி’ வாசகத்துடன் முடிவடையும். காளிதாசன் போன்ற உலக மகா கவிஞனும் கூட கடவுள் வாழ்த்துடன் துவங்கி, ஸ்வஸ்தி வாசகத்துடன் முடிக்கிறான்.

 

தமிழ் வேதமாகிய திருக்குறள் ‘அகர’ என்ற மங்கலச் சொல்லுடன் துவங்கும். ‘அ’ – என்ற சொல் அவ்வளவு புனிதமானது. உலகிலேயே மிகவும் பழைய சமய நூலான ரிக் வேதம் அக்னி – என்ற ‘அ’-காரத்துடன் துவங்கும்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்னும் காவியம், ‘திங்கள், ஞாயிறு, மாமழை’ — ஆகிய மூன்றையும் வாழ்த்தித் துவங்கும்.

தொல்காப்பிய சூத்திரத்தில் கடவுள் வாழ்த்து பற்றிக் கூறுகையில், “கொடிநிலை, கந்தழி, வள்ளியென்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” என்பார். அந்தக் ‘கொடிநிலை’, ‘கந்தழி’, ‘வள்ளி’ இதுதான் என்று சில உரையாசிரியர் பகர்வர். எப்படியாகிலும் இம்மூன்றும் மங்கலச் சொல் பட்டியலில் உள்ள சொற்களே!

உலகில் வேறு எங்குமிலாத இந்த மங்கலச் சொல் வழக்கு இந்து இலக்கியத்தில் மட்டும் இருப்பது பாரதீயப் பண்பாட்டின் தனிப்பெரும் முத்திரை ஆகும்!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

–சுபம்–

 

Auspicious Words in Sanskrit and Tamil Books (Post No.2825)

08.08.67.earth.med

Research article written by London swaminathan

 

Date: 20 May 2016

 

Post No. 2825

 

Time uploaded in London :–  13-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Ancient Hindu writers who wrote in Sanskrit and Tamil had some wrting traditions which were not found anywhere else in the world. They had a set of rules about the opening sentence or opening word of a great work in literature. They always started with some auspicious words or with the name of God. Either the prayer in the book or the first verse had that Mangala or auspicious words.

 

Here is a simple sloka which gives the rule:-

Omkaarascha atha sabdascha dvaavethau brahmanah puraa

Kandam bitwaa viniyaartau tasmaan maangalikaavubau

-Paatanjala darsanam

 

The sounds ‘Om’ and ‘Atha’ came first from the mouth of Brahma. So both these are considered auspicious words.

moon night

This ancient tradition lead the poets and compilers to begin a book with these words. The first letter of the alphabet in most of the old languages is ‘A’. Tamils and Sanskritists used this word as well.

Om or Aum has got a mystical meaning; it is the primordial sound from which everything came out/ originated

‘Atha’ means now

Here are some examples to illustrate the tradition:-

Atha yogaanusaasanam – Opening line of Patanjali Yogasutram

Atha Srimad Bhagavd Gita – Bhagavad Gita

Athaatho brahmajijnaasaa – Brahmasutra

Agni meele – Rig Veda (Om is also added with every mantra in the Vedas).

When the Guru opens the book in front of the students, he would say

Atha Valmiki Ramayana, Atha Rik Vedah etc. and then teaches the students.

Kalidasa, the greatest of Indian poets, prays to god with various words. If god is not directly referred to then the poets used words like ‘Viswa’, ‘Loka/world’.

 

Vishu Sahsranama begins with ‘Viswam’ vishnur Vashatkaro……..

tricolour om

But all the Sanskrit religious texts used Om or Atha in the beginning.

Amarakosa also says ‘Atha’ is an auspicious word. So we know that it has been in vogue for thousands of years.

Tamil Rule

Tamils have used the following words as the initial word in their works if it does not contain a direct Prayer to God:–

Siir(Sri), Ezuthu(word),Pon(gold), Puu(flower), Thiru (Sri/Lakshmi), Mani(Gem/Bell), Yaanai (Elephnt),Ther(chariot), Pari(horse), kadal(Sea), Malai(hill) Pukaz(fame), Mathi(Moon), Neer (water) Aaranam(Vedas) ,Sol(wprd), Puyal (rain/storm), Nilam (Earth), Ganga (Holy Ganges River), Ulakam(world),Parithi(Sun), Amirham (Ambrosia/Amrut).

Ulakam/World

Famous Tamil works such as Tirumurukatruppadai, Manimekalai, Valayapathy, Periya Puranam, Kamba Ramayanam, Mullaippaattu, Mudumozikanchi, Seevaka Chintamani, Villi Bharatam begin with the word ‘Ulakam’.

Other books such as Sirupaanatrupadai, Natrinai, Tirikaduka used the synonyms of world (Maanilam)

Oldest Tamil book Tokaappiam begins with Ezuthu(Word).

Tamil Epic Silappathikaram begins with Moon, Sun and Rain.

swastik, om lamps, kotipali shivratri

Tamil Veda Tirukkuran begins with ‘Akara’.

All the ancient Sanskrit and Tamil inscriptions begin with Swasti Sri, another auspicious word.

All the literary works ended with the word SUBHAM ( meaning Well, Good, Prosperity)

No other ancient culture except the Hindus had this literary tradition.

sheep, sun

–Subham_

 

Lateness Anecdotes (Post No. 2824)

 

392px-Young_Lincoln-1c

Compiled by London swaminathan

 

Date: 18 May 2016

 

Post No. 2824

 

Time uploaded in London :– 17-37

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

 

Charles Lamb

 

 

At the East India House the head of the office once reproved Charles Lamb for the excessive irregularity of his attendance

Really , Mr Lamb, you come very late!

Y..yes, replied Lamb with his habitual stammer, b..but con…sider how ear…..early I go!

 

Xxx

 

Slow Horse

 

On one occasion when Lincoln was going to attend a political convention, one of his rivals, a liveryan, provided him a slow horse, hoping that he wouldn’t reach his destination in time. Lincoln got there, however, and when he returned with the horse, he said, “You keep this horse for funerals, don’t you?”

 

Oh, no! Replied the liveryman.

 

Well, I am glad of that, for if you did you would never get a corpse to the grave in time for resurrection.

 

Xxx

 

 

A gentleman, having an appointment with another who was habitually unpunctual, to his great surprise found him waiting. He thus addressed him, “Why I see you are here first at last. You were always behind before, but I am glad to see you have become early of late”.

 

Xxx

 -INDIA lincoln

Gettysburg Address

 

On his way to Gettysburg, where he delivered his immortal address, Lincoln was urged by General Fry hurry in order not to hold up the train. To this Lincoln replied, I feel about this as the convict in one of our Illinois towns felt when he was going to the gallows. As he passed along the road in custody of the sheriff, the people eager to see the execution, kept crowding and pushing past him. At last he called out “Boys you need not be in such a hurry to get ahead. There won’t be any fun till I get there”.

 

…subham….

 

 

தமிழர்களின் கோழிச் சண்டை, ஆட்டுக் கிடாச் சண்டை!! (Post No.2823)

cockfighting

Research article written by London swaminathan

 

Date: 19 May 2016

 

Post No. 2823

 

Time uploaded in London :–  9-19 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சங்க காலம் முதல் இந்தக் காலம் வரை தமிழர்களின் பொழுது போக்காக சில விளையாட்டுகள் இருந்து வருவது சிறப்புக்குரியது. சேவல் கோழி, கவுதாரி முதலிய பறவைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பது, அதே போல ஆடு, மாடுகளை சண்டை போட வைத்து வேடிக்கை பார்ப்பது பற்றி சங்க இலக்கியங்களிலும், பிற்கால இலக்கியங்களிலும் சுவையான செய்திகள் உள்ளன. இங்கே ஒன்றிரண்டைத் தொட்டுக் காட்டுகிறேன்.

கம்பராமாயணத்தில் பால காண்டத்தில் அயோத்தி நகர மக்களின் பொழுதுபோக்குகளை கம்பன் வருணிக்கிறான். கோசல நாடு பற்றி கம்பன் கூறியது அனைத்தும் சோழ நாட்டை மனதிற்கொண்டு சொல்லப்பட்டவையே.

கறுப்புறு மனமும் கண்ணில் சிவப்புறு சூட்டும் காட்டி

உறுப்புறு படையின் தாக்கி உறுபகை இன்றி சீறி

வெறுப்பு இல களிப்பின் வெம்போர் மதுகைய வீர ஆக்கை

மறுப்பட ஆவிபேணா வாரணம் பொருத்துவாரும்

 

பொருள்:–

சினம் மிகுந்த மனமும், கண்களைப் போலச் சிவப்பு நிறமுள்ள உச்சிக் கொண்டையும் தோன்ற, தமது காலிலே கட்டப்பட்ட கத்தியால் தம்முடன் போரிடும் கோழியைத் தாக்கி, முன்பகை ஏதுமில்லாமலே கோபித்துப் போர் செய்வதில் வெறுப்பில்லாதனவாகி, செருக்கினால் அப்போரில் வலிமை பெற்று, வீர வாழ்க்கைக்கு களங்கம் உண்டானால், உயிர்துறக்கும் சேவற் கோழிகளை சிலர் போர் செய்யுமாறு செய்தார்கள்.

goat fight

எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து

உரும் இவை என்னத் தாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்

விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி

அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்

பொருள்:–

 

எருமைகள் பெற்றெடுத்த செந்நிறக் கண்களையுடைய ஒரு எருமைக் கடாவுடன், மற்றோர் எருமைக் கடா, இவை ‘உருமும் இடிகள்’ ஆகும், என்று சொல்லும்படி மோதி, இருட்டு, இரண்டு பகுதியாகிப் போர் செய்வது போல போரிட்டன. அந்தக் கடாக்களின் போரினை வேடிக்கை பார்த்து ஆரவாரித்து வண்டுகள் மேலே எழுந்தன. மக்களில் சிலர் வானம் வரை சப்தம் கேட்கும்படி ஆரவாரம் செய்தார்கள்.

தமிழர் நாகரீகமும் பண்பாடும் என்ற நூலில் அ.தட்சிணாமூர்த்தி பின்வருமாறு கூறுகிறார்:–

வீரவுணர்வு மிக்க தமிழர்கள் ஆட்டுக் கிடாய்களையும், காடை, கவுதாரி, கோழி முதலான பறவைகளையும் பழக்கிப் போரிடச் செய்து மகிழ்வதில் நாட்டம் கொண்டிருந்தனர். ‘குப்பைக் கோழி தனிப் போர் போல’ (பாடல் 305) என்று குறுந்தொகைப் புலவர் ஒருவர் அரிய உவமையை ஆள்கின்றார். இதனால் கோழியைப் பழக்கிப் போரிடச் செய்தலும் வழக்கிலிருந்தது என அறியலாம். புறப்பொருள் வெண்பா மாலையில் பூழ்ப்போரும் தார்ப்போரும் வாகைத் திணையில் பேசப்படுகின்றன.

 

பூழ்= காடை, கானாங்கோழி பறவை வகைகள், தார்=ஆட்டுக் கிடா

நமது இலக்கியங்களில், குறிப்பாக கம்பராமாயணம், பெருங்கதை போன்ற இடைக்கால நூல்களில், இது போன்ற நிறைய குறிப்புகள் உள.

 

goat fight 2

–சுபம்–

 

Melancholy Anecdotes (Post No. 2822)

grimaldi picture

Compiled  by London swaminathan

Date: 18 May 2016

Post No. 2822

Time uploaded in London :– 17-37

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Melancholy = feeling of sadness

I am Grimaldi !

 

A patient suffering from profound melancholy one day presented himself to Abernathy. After careful examination the celebrated practitioner said, “You need amusement, go and hear the comedian Grimaldi, he will make you laugh, and that will be better for you than any drugs.

“My God”, exclaimed the invalid, “I am Grimaldi!”

Xxx

Money is Medicine!!

Dr Goldsmith, having been requested by a woman to visit her husband who was melancholy, called upon the patient and told him that he would send some pills which he had no doubt would prove efficacious. He immediately went home, put ten guineas into a chip, and sent them to the sick man. The remedy had the desired effect.

 

Xxxx

philip of spain

Music is Medicine!!!

Philip of Spain was in such a deplorable state of despondency from ill health, that he refused to be shaved. On the arrival of the famous singer Farinelli, the queen ordered a concert in a room adjoining the Kings chamber.  Farinelli sang one of his best airs, which so overcame the King that he desired he might be brought into his presence, when he promised to grant him any reasonable request he might make. The performer, in the most respectful manner, then begged of the King to allow himself to be shaved to which request Philip graciously consented.

 

—Subham—-

 

 

 

 

சமயோசித புத்தி! நறுக்கென பதில்கள்!! (Post No 2821)

politics-clipart

Translated by London swaminathan

 

Date: 18 May 2016

 

Post No. 2821

 

Time uploaded in London :– 8-32 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

(இந்த சம்பவங்கள் ஏற்கனவே இங்கு ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்டன. மொழி பெயர்ப்பளர்- லண்டன் சுவாமிநாதன்)

அமெரிக்காவில் சென்ற நூற்றண்டில் பிரபல வணிகராக இருந்தவர் மார்க் ஹன்னா. அவர் அரசியலிலும் மிகவும் செல்வாக்கு பெற்றவர்.

 

ஒரு நாள் தனது கம்பெனியில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு இளம் தொழிலாளி இப்படிச் சொன்னார்:

“இதோ போகிறானே, நம்ம முதலாளி; இவன் நம்மைப் போல குடிசையிலும், நாம அவனைப் போல பங்களாவிலும் வாழனும்; நமக்கு அவனைப் போல நல்ல பணம் இருக்கனும்; அப்பத்தான் இந்தப் பயலுக்கு நாம படற கஷ்டமெல்லாம் தெரியும்”.

 

இது முதலாளி காதில் விழுந்திருக்காது என்று நினைத்து அவன் சொல்லிவிட்டான். ஆனால் இது மார்க் ஹன்னா காதிலும் விழுந்துவிட்டது.

 

மார்க் ஹன்னா தனது அலுவலகத்தில் உட்கார்ந்தபின்னர் அந்த இளைஞனை அலுவலகத்துக்கு அழைத்தார். அவன் நினைத்தான், “இன்றோடு நம்ம ‘சீட்டு’ கிழிந்துவிட்டது; வீட்டுக்கு அனுப்பப்போகிறார்” என்று.

முதலாளி: “நீ என்னைப் பற்றி சொன்னதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அது சரி, நான் உன் குடிசையில் வாழத் தயார்; நீ என் பங்களாவுக்கு வா; அந்தப் பணம் எல்லாம் எடுத்துக்கொள். அப்படிக் கிடைத்தால் என்ன செய்வாய்?”

இளைஞன்: “உங்களை முதலில் குடிசை வாழ்விலிருந்து உயர்த்தி மேலிடத்துக்கு வர வைப்பேன்”.

இதை கேட்டவுடன் முதலாளி மார்க் ஹன்னாவின் மனம் நெகிழ்ந்தது. உடனே அவனுக்கு சம்பள உயர்வு அளித்தார்.

 

சமயோசிதமான பதில்கள், ஒருவரின் அடி மனத்திலுள்ள நல்ல எண்ணத்தையோ கெட்ட எண்ணத்தையோ பளிச்செனக் காட்டிவிடும்.

 

Xxx

speech-clipart-1

கழுதை அல்ல; நீ ஒரு மிருகம்!

அமெரிக்க காங்கிரஸில் (பார்லிமெண்டின் ஒரு சபை) சாம்ப் கிளார்க் என்பவர் சபாநாயகராக இருந்த போது இந்தியானா மாகாண உறுப்பினர் ஜான்சன், மற்றொரு உறுப்பினர் பேசுகையில் குறுக்கிட்டு, “சீ, கழுதை, பேச்சை நிறுத்து” என்றார்.

 

கழுதை என்று திட்டுவது பார்லிமெண்டில் சொல்லக்கூடாத தகாத சொல் என்று அவர் உடனே ஆட்சேபனை எழுப்பினார். உடனே சபாநாயகர் அதைச் சபைக்குறிப்பிலிருந்து நீக்கினார். ஜான்சனும் மன்னிப்புக் கேட்டார். அப்படியும் விடாமல் தாக்குதலைத் தொடர்ந்தார்.

அந்த உறுப்பினரிடத்தில் கோளாறு இருக்கிறது; குறைபாடு இருக்கிறது என்றார்.

 

உடனே தாக்குதலுக்குள்ளான உறுப்பினர்,

என்ன கோளாறு, குறைபாட்டைக் கண்டீர்? தைரியம் இருந்தால் சொல்” – என்றார்.

உடனே ஜான்சன் சூடாக பதில் தந்தார், “அது எப்படி எனக்குத் தெரியும். மிருக வைத்திய சாலைக்குப் போய்ப் பார்; அவர் சொல்லுவார்” – என்றார்.

இப்பொழுது அந்த உறுப்பினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முதலில் கழுதை என்பதை நீக்குவதில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் மிருக (கால்நடை) மருத்துவ மனைக்குப் போய்ச் சோதனைக்குள்ளாக வேண்டும் – என்பதை நீக்க வைக்க முடியவில்லை. அப்படியே சபைக் குறிப்பேட்டில் பதிவாகியது.

கழுதை என்று நேரடியாகத் திட்ட காங்கிரஸ் (அமெரிக்க பார்லிமெண்ட்) அனுமதிக்காவிட்டாலும் ஒருவரை மிருக வைத்தியசாலைக்குப் போய் உன்னைச் சோதித்துக் கொள் என்று சொல்லுவதை அனுமதித்தது. இதுதான் சமயோசிதம்! அரசியல்வாதிக்கே உரித்தான பேச்சுத் திறமை!!

–சுபம்–

 

 

 

Three Tamil Kings fast unto Death! (Post No 2820)

bow arrow

Research article written by London swaminathan

Date: 17 May 2016

 

Post No. 2820

 

Time uploaded in London :– 20-49

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

Tamils who lived 2000 years ago valued good reputation and family honour. They thought that it was better to die than to live in disgrace. This is a typical Hindu thinking. Throughout Valmiki Ramayana we come across several references to losing one’s life just to save their name and fame. Rama, Lakshmana, Bharata and Hanuman thought of killing themselves once or twice because they couldn’t do what they were supposed to do. The popular method of losing one’s life was jumping into a ritual fire. Alternative method was fast unto death.

IMG_3325

Tamil literature has listed at least three kings who lost their lives by ritual fasting.

Popular Tamil poet Tiruvalluvar says in his

Tirukkural (970)

The world will admire the glory of men, who give up their life,

When overtaken by dishonour

Purananuru, part of Sangam literature, has a verse sung by the Chera king Kanaikal Irumporai (Puram 74). He was defeated by the Chola king Chenganan. After his defeat hhe was thrown into the prison. Suddenly he felt thirsty and he asked for some cold water. The prison guards delayed t under some false excuses. He fasted unto death and refused to take the water which was brought to him after a deliberate delay.

He sang the verse when he was insulted by the prison guards:–

“Royal babies that die and even moles delivered from the womb of queens, even though they are not men, are cut to pieces with swords (warriors are supposed to die in battle fields; so it is done symbolically as if they died in battle fields). When this is so, could any king beget a son, when tied like a chained dog, would be so weak to drink  water charitably offered by his jailor, for allying the  fire in his stomach?”

 

When he got the water after a long delay, he composed this poem, holding the water in his hand. He never drank it. He starved him to death.

Tiruvalluvar says in another couplet

Hair lost, the yak lives not

Honour lost, noble men leave their life(969)

Ike hair that is fallen from the head are men athat have fallen from their height (964)

Pandya_territories

Asi Dhara Vrata (Sharp Sword Edge Vow)

 

It is like standing on the sharp edge of a sword. The meaning is  it is difficult to maintain that balance or it would hurt if slipped. A bachelor can lie in the same bed with a beautiful girl but yet never swerve from the vow of chastity. It is said that a sword will be placed in between them in the bed according to the commentator (Raghuvamsa 13-67).

 

 

When Rama returned to Ayodhya after 14 year stay in the forest, he saw Bharata walking towards him. He praised Bharata as practising Asidhara Vratam, without enjoying the Rajyalakshmi  (Kingdom or Earth is praised as Lakshmi, Goddess of Wealth in Hindu scriptures).

 

 

Tamil Kings Kopperum Choza and Neduncheralatha

 

Tamil Kings Kopperum Choza and Neduncheralatha of Sangam age also followed similar type of vow. They sat facing North on the banks of a river and fast unto death. They were also holding a sword in their hands, probably meaning the same, i.e. sharp edged vow. Verses in Purananuru 65 (by Kazath thalaiyar) and Akananuru  55 (by Mamulanar) are about the Chera King Neduncheralathan who died facing North. When such a great person sacrificed his life, scholars and general public joined them and made it a “mass suicide”. We see it when Lord Rama drowned himself in the Sarayu River and in the Tamil Kings’ deaths. Lot of Tamil poets and scholars joined them in the fast unto death ceremony. In Tamil it is called “Vaal Vatakkiruthal”, meaning Facing North with a Sword.

 

When the greatest of the Chola kings, Karikalan fought with Chera King Nedunseralathan, Chera king was wounded on his back. No Tamil king tolerated a wound on his back. Those who were injured on the back were called cowards. So Chera king decided to die through fasting. Several poets sang in praise of both the kings ( see Puram verses 65 and 66).

 

In another episode we read about a family feud where the sons of Chola king Kopperuncholan revolted against their dad. Immediately a poet advised him to go into fasting. When he decided to die through fasting, several famous poets joined him and died with him. One of them, Pisiranthaiyar, has never met him but considered him as his best friend (see Puram 214 to 223).

 

IMG_3459

Apart from Jain’s Sallekhana we come across several examples in Sanskrit scriptures. Kishkinda Kanda of Valmiki Ramayana has one such episode. Angatha, son of Vali, went in search of Sita, but in vain. He decided to sit tight on Dharba grass and die. Only minor difference was he faced east but not north.

Alexander and Purushottama

When Alexander the Great conquered the valiant Hindu King Purushottama alias Porous, he asked him how he would like to be treated, Purushottama said,

“I am King. Treat me like a king”.

Alexander was greatly impressed with his bold answer and treated him like a king. When Alexander saw this little king fighting valiantly, he had second thoughts attacking the mighty Mauryan army.

Honour was valued and no king could live in disgrace. Chittor Queen Padmini jumped into fire with hundreds of her loyal servants just the avoid the disgrace from the cruel Alauddin Khilji.

 

Honour in Animal World

Sangam Tamil literature gives some interesting details about Tigers. Tamil poets say that the tigers wont eat their prey if it falls on its left side. It will eat the animal only when it falls on its right side. In Hindu culture left is inauspicious and right is auspicious. All the auspicious things are done in clockwise direction (right turn) and inauspicious or funeral rites are done in leftward direction/anti clockwise direction. This simile is always used to illustrate the greatness of honour.

Tiger_2504157f

–subham–

 

 

 

தமிழ் மொழி பற்றி கம்பன் (Post No.2819)

IMG_3212

Written by london swaminathan

 

Date: 17 May 2016

 

Post No. 2819

Time uploaded in London :– 15-15

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தமிழ் மொழி பற்றி கம்பன் பாடிய பாடல்கள், அவனுக்கு தமிழ் மீதுள்ள அன்பைக் காட்டுகிறது. ராமன் புகழ் பாட வந்த கம்பன், தமிழின் புகழ் பாட மறக்கவில்லை. எங்கெங் கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தமிழையும், தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியனையும் போற்றிப் புகழ்கிறான்.

agastyanepal-carole-r-bolon

‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

ஆரண்ய காண்டத்தில் ராமன், அகத்தியன் சந்திப்பு பற்றி வருணிக்கும் கம்பன்,

ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்

ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகம் எய்த

மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான்

நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’

 

பொருள்:– சக்கராயுதத்தை உடைய திருமாலைப் போல, பெரிய தமிழ் மொழியால் இவ்வுலகத்தை அளந்தவனாகிய அகத்தியன், ஆண்மை மிகுந்த ராம, லெட்சுமணர் அங்கே வந்ததை அறிந்தார். அதனால் மகிழ்ச்சிக் கடல் 14 உலகங்களையும் அடைந்தது. அந்த மகிழ்ச்சியுடன், மாட்சிமைப்பட்ட வரங்களை வழங்கும் ராமன், தன் திருவடிகளில் விழுந்து வணக்குமாறு, அவன்  எதிரே வந்தான்.

 

உழக்கும் மறை நாலினுமுயர்ந்து உலகம் ஓதும்

வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி

நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்

தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்’’

 

பொருள்:- அந்த அகத்தியன் நால் வேதங்களையும் பயின்று உயர்வு அடைந்தான். தமிழ் உலகம் பேசும் முரை, தமிழ்ப் புலவரின் செய்யுள் ஆகியவற்றை முறைப்ப்ட ஆராய்ந்து, சிவபெருமான் கற்றுத்தந்த தமிழுக்கு இலக்கணம் செய்து தந்தான். சிவன், ஒளிவீசும் மழு ஆயுதம்,நெற்றியில் நெருப்பை உமிழும் சிவந்த கண்ண்ணை உடையவன்.

 shiva at Dwaraka

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

“நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்

அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்

நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்

என்றுமுள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான்’’

 

பொருள்:– அங்கே நின்று கொண்டிருந்த அகத்தியனின் கால்களில் விழுந்து நெடியோனாகிய ராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் இயற்றிப் புகழ் பெற்றவனாகிய அகத்தியன், ராமனை அன்போடு அணைத்து, ஆனந்தக் கண்ணீர் விட்டு, உன் வரவு நல் வரவாகுக என்று பல உபசார மொழிகளைப் பகர்ந்தான்.

 

 

தமிழ்த் தலைவன் யார்? (எனது பழைய கட்டுரையிலிருந்து)

 

அலை நெடும் புனல் அறக் குடித்தலால் அகம்
நிலை பெற நிலை நெறி நிறுத்தலால் நெடு
மலையினை மண் உற அழுத்தலால் தமிழ்த்
தலைவனை நிகர்த்தது அத் தயங்கு தானையே

-கம்ப ராமாயணம், அயோத்தியா காண்டம், பாடல் 969

பொருள்: அலைகளை உடைய ஆறுகளின் (கடலில் போய்ச்சேரும்) நீரைக் குடித்தலாலும், பூமியைச் சம நிலையில் நிறுத்தியதாலும், போகும் வழியில் நீட்டிக் கொண்டிருந்த மலையை பூமிக்குள் அழுத்தியதாலும் பரதனின் படைகள் தமிழ்த் தலைவனான அகத்தியன் செய்த செயல்களைப் போல இருந்தது. அதாவது அகத்தியர் செய்த செயல்களும் பரதன் படைகள் செய்த செயலும் ஒரே மாதிரியாக இருந்தன.

 

இதைத் தொடர்ந்து வரும் இன்னொரு பாடலில்

அறிஞரும் சிறியரும் ஆதி அந்தமா
செறிபெருந் தானையும் திருவும் நீங்கலால்
குறியவன் புனல் எலாம் வயிற்றில் கொண்ட நாள்
மறிகடல் ஒத்தது அவ் அயோத்தி மா நகர்.

பொருள்: அகத்தியன் கடல் நீரை எல்லாம் குடித்து வயிற்றில் அடக்கிக் கொண்ட பின்னர், எப்படிக் கடல் வெறிச்சோடிக் கிடந்ததோ அப்படி இருந்தது அயோத்தி மா நகரம். ஏனெனில் பெரியோர் முதல் சிறியோர் வரை அறிஞர்களும், படைகளும் சீதையும் நீங்கிவிட்டனர்.

சொற்கலை முனிவன்

இன்னொரு செய்யுளில் அகத்தியனை “சொற்கலை முனிவன்” (பால காண்டம்) என்பான் கம்பன். தமிழுக்கு இலக்கணம் வகுத்ததால், அகத்தியனுக்குக் கிடைத்த அடைமொழி இது.

rama look

இராமபிரானுக்கு தமிழ் தெரியும்!

கம்பன் ஒரு அதிசயத் தகவலையும் தருகிறான். ராமனுக்கு தமிழும் சம்ஸ்கிருதமும் தெரியும் என்பான்:–

நன்சொற்கள் தந்து ஆண்டு எனை நாளும் வளர்த்த தாதை

தன் சொல் கடந்து எற்கு அரசு ஆள்வது தக்கது அன்றால்

என் சொல் கடந்தால் உனக்கு யாது உளது ஈனம் என்றான்

தென் சொல் கடந்தான் வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான்

பொருள்:- பரத கண்டத்தின் தென்பகுதியில் வழங்கும் தமிழ் மொழி எனும் கடலைத் தாண்டியவனும், வடக்கே வழங்கும் சம்ஸ்கிருத மொழியில் கூறப்பட்டுள்ள எல்லா கலைகளுக்கும் எல்லை கண்டவனுமான ராமபிரான், “இனிய சொற்கலைக் கூறி இந்நாள் வரை என்னைப் பாதுகாத்து வளர்த்த தந்தையின் சொல்லை மீறி அரசாள்வது எனக்குத் தகுந்தது இல்லை. ஆனால் என் சொல்லை நீ மீறி நடந்தாலோ உனக்கு இழிவு அல்லவோ” (நகர் நீங்கு படலம், அயோத்யா காண்டம்—லெட்சுமணனிடம் ராமன் சொன்னது)

 

 

எனது பழைய கட்டுரைகள்

 

தமிழ் தலைவன் யார்? கம்பன் பதில் (17 ஜூலை 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 2 (26 டிசம்பர் 2014)

தமிழுக்கு எத்தனை பெயர்கள்? – பகுதி 1 (9 ஜூன் 2014)

 

–சுபம்–

 

என் கணவர்: ராஜலக்ஷ்மி சந்தானம் (Post No 2819)

 

Damma i pad pictureate: 17 May 2016

Post No. 2818

Time uploaded in London :–5-36 AM

( Thanks for the Pictures)

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

Both my parents Sri Venkataraman Santanam and Srimati Rajalakshmi Santanam are no more; my brother S Nagarajan sent this old article, today being my mother’s thithi (death anniversary) day —London swaminathan.

 

 

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்காக

 

சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழ் பத்திரிக்கையாளரும். ஆன்மீகவாதியுமான தினமணி மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய திரு வெ.சந்தானம் அவர்களின் துணைவியார் தனது கணவரைப் பற்றிய எண்ணங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 

வெ.சந்தானம் தோற்றம்:4-9-1911 மறைவு:15-8-1998

 

என் கணவர்

—————–

ராஜலக்ஷ்மி சந்தானம்

 

சுதந்திரப் போர்

சுதந்திரப் போராட்ட காலம் ஒரு தனி சகாப்தம் என்றால் அது மிகையல்ல. சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மிகப் பெரிய அந்தஸ்தில் இருந்தவர்களும் ஒருங்கிணைந்து காந்திஜியின் தலைமையில் ஓரணியில் இணைந்து தங்களிடம் இருந்தவற்றையெல்லாம் தேசத்திற்காக அர்ப்பணித்த உன்னதமான காலம் அது. அந்தக் காலத்தில் தான் பெருங்கடலில் சிறு துளிகள் போல மணிக்கொடி இலக்கியகர்த்தாக்கள் ஓரணியில் சேர்ந்தனர். திருவாளர்கள் வ.ரா, பி.எஸ்.ராமையா, ஸ்டாலின் சீனிவாசன், ஏ.என்.சிவராமன் போன்ற இலக்கிய ஜாம்பவான்களின் குழுவில் என் கணவர் திரு வெ.சந்தானமும் ஒருவர். ஆனால் அவர் தன்னைப் பற்றி எந்தக் காலத்திலும் விளம்பரப்படுத்திக் கொண்டதே இல்லை. அதனால் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அவர் ஆற்றிய இலக்கியப் பணி. தேசப் பணி, ஆன்மீகப் பணி முழுவதுமாகத் தெரியாது.

 

 

திருமணம்

தஞ்சாவூரில் நான் பத்தாவது படித்து முடித்திருந்தேன். 1935ம் வருடம் அது. எனது அண்ணனின் நண்பர் ஒருவர் எனது கணவரிடம் தஞ்சாவூரில் ஒரு படித்த பெண் இருப்பதாகவும் சென்று பார்க்குமாறும் தூண்டினார். என்னைப் பெண் பார்க்க அவர் மட்டுமே தனியாக வந்தார்.

 

 

என் தந்தையார் கல்யாணராமையர் ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர். தஞ்சாவூரைச் சுற்றி உள்ள எல்லா இடங்களுக்கும் பயணம் செய்வது அவரது பணியின் ஒரு பகுதி. பட்டுக்கோட்டை. சேண்டாகோட்டை, கீவளூர் என பல இடங்களுக்கும் அவர் சென்றாலும் குடும்பத்தினராகிய நாங்கள் தஞ்சாவூரிலேயே இருந்தோம்.

 

நான் வயலின் லோயர், ஹையர் மற்றும் அதற்கு அடுத்து இருந்த வித்வான் ஆகிய அனைத்திலும் பாஸ் செய்ததைக் கேட்டதும் அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

 

எனது குரு திரு கே.ஸி. தியாகராஜன் மிகுந்த பிரபலமான சங்கீத மேதை. எனது கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு பட்டுக்கோட்டையில் நடந்தது. ரிஸப்ஷன் சென்னையில். ராஜாஜி நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். இப்படி மிகப் பெரிய தேசீயத் தலைவர்களைப் பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருந்தது.

இலக்கியப் பணியும் தேச சேவையும்

தினமும் உற்சாகமாக நண்பர்கள் குழு கூடும்.

 

இலக்கியம் சங்கீதம் பாரதி பாடல்கள் என ஏக அமர்க்களமாக விவாதங்கள் சுவையுடனும் நட்புடனும் நடைபெறும். அனைவரும் ஒவ்வொரு முறை ஒவ்வொருவர் வீட்டில் சாப்பிடுவது வழக்கமாக இருந்தது.

 

 

சென்னையில் நாங்கள் ஜாகை இருந்த இடம் திருவல்லிக்கேணி. கடற்கரையில் தினமும் நண்பர்கள் கூடுவது வழக்கமானது.

பாரதி உலகக் கவிஞர் தான் என்பதை நிலை நாட்ட  அங்கு தான் முடிவு எடுக்கப்பட்டது. ஆளுக்கு ஒரு கோணத்தில் பாரதியை அலசி ஆராய்ந்து கட்டுரைகளை எழுத முடிவும் அங்கே தான் எடுக்கப்பட்டது.

 

 

என் கணவர் முதலில் சுதந்திரச் சங்கு போன்ற சிறிய பத்திரிக்கையிலும் பணி ஆற்றியிருக்கிறார். மணிக்கொடியில் அவரது இலக்கியப் பணி சிறந்து விளங்கியது.பி.எஸ்.ராமையா மிக நெருங்கிய நண்பர். மணிக்கொடியை போஸ்ட் செய்வது ஈறாக அனைத்துப் பணிகளையும் இந்த இலக்கியக் குழாமே செய்தது.

 

 

இடையில் சைமன் கமிஷன் பகிஷ்காரத்தை ஒட்டி நாடெங்கும் கிளர்ச்சி எழுந்தது. அதில் வெள்ளையரை நாட்டை விட்டு விரட்டுமாறு கூறும் தீவிரமான ஒரு பிரசுரம் ஆயிரக்கணக்கில் அடிக்கப்பட்டு  எங்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. துண்டுபிரசுரங்களை கடற்கரையில் சென்று அனைவரிடமும் விநியோகம் செய்யும் பணி என் கணவருடையது.

 

 

இந்த பிரசுரங்களை என் வீட்டில் பார்த்த ஒரு நபர் போலீசிடம் இதைச் சொல்ல அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால் நல்ல வேளையாக உரிய நேரத்தில் பிரசுரங்கள் அகற்றப்பட்டன.என்றாலும் போலீசார் கடற்கரைக்குச் சென்று பிரசுரங்களைக் கட்டுக் கட்டாக வைத்து விநியோகம் செய்த என் கணவரை கைது செய்தனர். அவர் வேலூர் சிறையில் ஆறு மாத காலம் இருந்தார்.அங்கே காமராஜர் முதலான அனைவருடனும் நல்ல சினேகம் ஏற்பட்டது.

விடுதலையானவுடன் பத்திரிகைப் பணி தொடர்ந்தது.. மணிக்கொடி நின்றவுடன் தினமணியில் சேர்ந்தார்.

அப்போது லியோ டால்ஸ்டாயின் அன்னா கரீனாவை தமிழில் மொழி பெயர்த்தார்.பல கதை கட்டுரைகளை எழுதினார்.

 

 

மதுரையில் பணி

 

தினமணியின் மதுரைப் பதிப்பு 1950ல் தொடங்கியவுடன் இவரை மதுரைப் பதிப்புக்கு பொறுப்பாக நியமித்தனர். மதுரை வந்தோம். மீனாட்சி பட்டணம் இவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆன்மீகத்தில் மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது. காஞ்சி காமகோடி பெரியவாள், சிருங்கேரி பெரியவாள் ஆகியோரிடம் அளவற்ற ஈடுபாட்டினால் அடிக்கடி அவர்களை தரிசனம் செய்வது வழக்கமானது, அவர்களது அருளுரைகளை எல்லாம் தினமணி அப்படியே வெளியிடும். அந்த ஞான பொக்கிஷமே இன்று நமக்கு நூல்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. திருமுருக கிருபானந்தவாரியார், சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தரம தீக்ஷ¢தர்,திரு முத்துராமலிங்க தேவர் என ஆன்மீகவாதிகள் நூற்றுக் கணக்கானோரின் பழக்கம் இந்த கால கட்டத்தில் ஏற்பட்டது. இவர்கள் அனைவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் அனைத்தையும் முழுவதுமாக தினமணி பிரசுரிக்கும்.

அத்தோடு அனைத்து ஆன்மீக இலக்கிய சங்கங்களும் தலைமை வகிக்க இவரை அழைக்கவே இவற்றை ஊக்குவிக்க தனது வேலைப்பளுவிற்கு இடையேயும் செல்வார்.

 

 

தென் தமிழகமெங்கும் இவர் பங்கேற்காத இலக்கிய ஆன்மீக சங்கங்களே இல்லை எனலாம். திரு ஏ.கே.செட்டியார், திரு சா.கணேசன் திரு ஏ.சீனிவாசராகவன் உள்ளிட்டோர் வீட்டிற்கு வருவர்.வானொலியில் பத்திரிக்கையாளர் பணி பற்றி அடிக்கடி உரையாற்றியதும் உண்டு.

 

 

சுவாமிஜி கிருஷ்ணா

 

சுவாமிஜி கிருஷ்ணா அச்சன்கோவிலில் பரசுராமர் ஸ்தாபித்த ஐயப்பன் சிலையை நிறுவிய பெரிய மகான். அவர் கணபதி ஹோமத்தை தனது சிறுவயதிலிருந்தே தினமும் நடத்தி கணபதியை பிரத்யக்ஷமாகக் கண்டவர். அவருடன் ஈடுபாடு ஏற்பட்டு அவர் குருவாக மந்த்ரோபதேசம் செய்தார்.கணபதி ஹோமத்தைத் தொடங்கி வைத்தார். எனது இல்லத்திற்கு பிரவசனகர்த்தாக்கள் வந்து தங்கி ராமாயண மஹாபாரத உபந்யாஸத்தை கிருஷ்ணாராயர் கோவில் தெருவிலுள்ள ஹனுமார் கோவிலில் நடத்துவார்கள்.

 

புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளுக்கு அடிக்கடி பி¨க்ஷயிட்ட பாக்கியமும் எனக்கு உண்டு.

 

இந்து முன்னணி தலைவரான கோபால்ஜி உள்ளிட்டோர் அடிக்கடி எங்கள் இல்லத்திற்கு வருவர்.

 

 

இப்படி கடந்த ஐம்பது ஆண்டு கால ஆன்மீக தேசீய இலக்கிய வரலாறை எடுத்துக் கொண்டால் நல்லனவற்றைப் பரப்புவதையே தன் குறிக்கோளாகக் கொண்டு அவர் வாழ்ந்தார்.

 

 

சுதந்திர நாளன்று பேசிய இறுதிப் பேச்சு

1998 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றி ஆயிற்றா என்பதே அவர் பேசிய கடைசி பேச்சு. கொடி ஏற்றி ஆகி விட்டது என்ற பதிலைக் கேட்டு அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.

 

 

ஒரு பெரிய இயக்கம் வளர அடிக்கல்லாக இருப்பவர் பலர். அவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதே இல்லை. அதில் புகழ் பணம் எதையும் எதிர்பார்ப்பதும் இல்லை.இந்த வகையில் என் கணவரை முதல் வரிசையில் கூறலாம். எனது ஐந்து புத்திரர்களும் ஒரு பெண்ணும் இன்று நல்ல நிலைமையில் உள்ளனர்.நானும் தேக திடத்துடன் இறைவன் நாமத்தை உச்சரித்து வருகிறேன்.

ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை உற்றுக் கவனித்து இன்றைய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தேசத்திற்காகவும் ஆன்மீக வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே என் ஆசை. தேசமும் தெய்வீகமும் செழிக்கட்டும்.

 

**********************