Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
PART 1 WAS
POSTED YESTERDAY
(வைஷ்ணவத்
தமிழில் மணிப்ரவாள நடையில் எழுதப்பட்ட விஷயங்களை நேரம் கிடைக்கும்போது பழகு
தமிழில் புதுக்கித் தருவேன்.)
ஸ்ரீ
வேதாந்த தேசிகர் பிறந்த 700
ஆவது ஆண்டு விழாவில் – 1968-ல்- சென்னையில் ஒரு மலர்
வெளியிடப்பட்டது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்- பகுதி-2 (நூல் இருக்குமிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்).
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கவிஞர் கண்ணதாசன் கேட்கும் கேள்விக்கு யாராலாவது மறுத்துப்
பேச முடியுமா?
ஆம், கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகாது.
மாணிக்கத்தின் குணாதிசயங்களும் பலன்களும்!
ரூபி (Ruby)
என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மாணிக்கம் நவரத்தினங்களுள்
அற்புதமான ஒரு ரத்தினம்.
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனுடன்
தொடர்பு கொண்ட ரத்தினம் இது. எண் கணிதத்தில் ஒன்று என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டதும்
இதுவே தான்!
சூரிய காந்த மணி,கெம்பு, சீயம்
என்று அழைக்கப்படும் இந்தக் கல் சூரியன் தரும் பிரகாசம், புகழ், மேன்மை, வெற்றி ஆகியவற்றை
தரும்!
சூரியன் ஒரு ஜாதகத்தில் ஐந்து
மற்றும் ஒன்பது ஸ்தானங்களில் இருக்கும் போது மாணிக்கம் அணிவது சிறந்த மேன்மையை ஜாதகருக்குத்
தரும்.
மாணிக்கத்தில் எந்த மாணிக்கத்தை
அணிவது என்ற கேள்விக்கு பல காலமாகச் சொல்லும் பதிலைத் தான் இன்றும் சொல்ல முடியும்!
பர்மாவிலிருந்து கிடைக்கும் சிவப்பு வண்ண மாணிக்கம் மிகவும் சிறந்தது.
மாணிக்கம் வைரத்திற்கு அடுத்தபடி
மிகவும் கடினமானது.
பிரடரிச் மோ என்ற ஜெர்மானிய
அறிஞர் ஒவ்வொரு கல்லுக்கும் உள்ள கடினத்தன்மையை வரையறுத்தார். அவர் கூறும் அளவு அவரது
பெயாராலே மோ அலகு எனக் கூறப்படுகிறது.
இதன் படி மிகவும் கடினமான வைரம்
10 என்ற அலகைப் பெறுகிறது. அதற்கு அடுத்தபடியாக 9 என்ற மோ அலகைப் பெறுவது மாணிக்கம்.
மாணிக்கத்தின் ஒப்படர்த்தி
3.99லிருந்து 4.05 வரை இருக்கும். இதன் ஒளி விலகல் எண் 1.756 ஆகும்.
பலவித நிற வேறுபாடுகள் கொண்ட
மாணிக்கம் கிடைக்கப்பெறுகின்றன.
புறா ரத்த வண்ணம் எனப்படும்
(Piegeon Blood Red) மாணிக்கமே மதிப்பு மிக்கது, அணிவதற்கு ஏற்றது.
கண்களில் நோய் உள்ளவர்கள் மாணிக்கம்
அணிந்தால் அந்த நோய்கள் விலகும்.
உடலின் வலிமை கூடும்.வீரிய விருத்தி
உண்டாகும்.
ஆயுளைக் கூட்டும்.
மனதிற்கு சாந்தியைத் தரும்.
அதிகாரத்தைக் குறிக்கும் கல் என்பதால் பழைய காலத்தில் மன்னர்கள் இதை அணிவது வழக்கம். இன்றைய நாட்களில் தலைமை அதிகாரி (CEO) க்கு உரிய கல் இது.
ARGENTINA’S PRESIDENT WITH HER RUBY NECKLACE
தலைமை பீடத்தில் இல்லாதவர் இதை
அணிந்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவர். அரசியலிலும் ஏற்றம் தரும் கல் இது.
வைத்திய சாஸ்திரங்களில் மாணிக்கத்தின்
பெருமை பலவாறாகப் புகழப்படுகிறது.
பதார்த்த குணசிந்தாமணி என்ற
புகழ்பெற்ற பண்டைய வைத்திய நூல் இதைப் பற்றிக் கூறும் போது,
‘சுர ரோகம் சன்னிகளின் தோஷம்
அதிதாகம்
உரமான மேகம் ஒழியும் – திரமாக
ஊணிக்கொள் நேத்திரநோய் ஓடும்
அரவீன்ற
மாணிக்கத்தால் வசியமாம்’ என்று கூறுகிறது.
இதன் பொருள் ; சுர நோய் தீரும். அதி தாகம், மேக நோய் ஒழியும். கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் போகும். வசியம் உண்டாகும்.
பண்டைய நாகரிகங்களில் மாணிக்கம்!
பண்டைய நாகரிகங்களில் எகிப்திய
நாகரிகம் உள்ளிட்ட நாகரிகத்தில் இது செய்வினை மற்றும் தீய சக்திகளிடமிருந்து காத்துக்
கொள்ள அணியப்பட்டது. மாணிக்கத்தை நனைத்து விட்டு அந்த நீரை வயிற்று வியாதிகளுக்கு அருந்துமாறு
வைத்தியர்கள் அறிவுறுத்தினர். அத்தோடு இதன் பொடியை ரத்த சம்பந்தமான நோய்கள் தீர்க்கவும்
இதர மருந்துப் பொருள்களுடன் சேர்ந்து பயன்படுத்தினர்.
எப்போது முதல் முறையாக அணிவது?
சுக்ல பக்ஷ ஞாயிற்றுக்கிழமை
அன்று சூரிய ஹோரையில் இதை அணிவது நலம்.
தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட
மோதிரத்தில் இதைப் பதித்து அணியலாம்.
முதல் முறை அணியும் போது பாலில் இதை அமிழ்த்திப் பின்னர் நீரால் அலம்பி விட்டு அணிதல் வேண்டும்.
நான்கு வகை நல்ல மாணிக்கக் கற்கள்!
மிகப் பழைய நூலான ரஸ ஜல நிதி
மாணிக்கத்தைப் பற்றிய ஏராளமான விவரங்களைத் தருகிறது:
மாணிக்கம் நான்கு வகைப்படும்
1) பத்மராகம் 2) குருவிந்தஜா 3)சௌகந்திகா 4) நீல காந்தி
இதில் தாமரை வண்ணத்தில் (வெள்ளையுடன்
கூடிய சிவப்பு வண்ணம்) கண்ணுக்கு விருந்தாகும் ஒளி பொருந்திய ஒளி ஊடுருவும் வட்ட வடிவமான மிருதுவான ஆனால் கனமான மாணிக்கமே சிறந்தது.இதுவே
பத்மராகம்.
கோரண்டம் (Corundum) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது
சம்ஸ்கிருதத்தில் குருவிந்தம் என அழைக்கப்படுகிறது.
லலிதாம்பிகையின் தலையில் அணியப்பட்டுள்ள
கிரீடம் குருவிந்தத்தால் ஆனது என்பதிலிருந்தே இதன் சிறப்பை அறியலாம். செக்கச் செவேலென
இருக்கும் அழகிய கல் இது.
சௌகந்திகம் மஞ்சள் கலந்த சிவப்பு
வண்ணத்துடன் இருக்கும்.
நீல கங்கா நதியிலிருந்து கிடைப்பது
நீல காந்தி. சிவப்புடன் நீல வண்ணம் உள்ளிருந்து ஒளிர இரண்டு வண்ணமும் கலந்த கல் இது.
இந்த நான்கு வகைகளும் அதன் தரத்தின் படி மேலே வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
குறைபாடுகள் எவை?
மாணிக்கத்தில் உள்ள குறைகள்
பின் வருமாறு:
துளைகள் உள்ளது, அழகில்லாமல்
இருப்பது, ஒளியில்லாமல் இருப்பது, கரடுமுரடாக இருப்பது, ஓளி புகாத தன்மையுடன் இருப்பது,
தட்டையாக இருப்பது, மிகவும் லேசாக இருப்பது, வடிவமைப்பில் ஒழுங்கற்ற தன்மையுடன் இருப்பது.
இவையிருப்பின் அந்தக் கல்லை
வாங்கக் கூடாது.
ஒரு மாணிக்கத்தில் இரு வேறு
ஒளிகள் அதன் இரு வேறு பக்கங்களிலிருந்து வந்தால் அது அழிவைத் தரும். வாங்கக் கூடாது.
காகத்தின் கால் போல உள்ள தோற்றம்
அளிக்கும் மாணிக்கம் தோல்வியைத் தரும்.
விரிசல் இருப்பின் அதை அணிந்தால்
ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
மாணிக்கத்தின் உள்ளே சிறு கூழாங்கல்
இருப்பின் நண்பர்கள் அழிவர்; மாடு உள்ளிட்ட கால்நடைகள் அழிந்து படும்.
மாணிக்கத்தின் உள்ளே பால் போன்ற
ஒரு பூச்சு இருப்பின் அதை அணியக் கூடாது. அது துன்பத்தைத் தரும்.
தேனின் நிறத்தைப் போல இருக்கும்
மாணிக்கமும் அணிவதற்குத் தக்கதல்ல. இதை அணிந்தால் ஆயுள் குறையும். துரதிர்ஷ்டம் வரும்.
புகழ் குறையும்.
ஒளி இல்லாத மாணிக்கம் பண இழப்பை உண்டாக்கும்.
புகை போன்ற வண்ணம் உடைய கல் மின்னலினால் விபத்தை ஏற்படுத்தும்.
இவை எல்லாம் ரஸ ஜல நிதி தரும் அறிவுரை!
PICTURE OF RUBY EAR RINGS
நல்ல
மாணிக்கம் எது?
அருமையான மாணிக்கக் கல்லை எப்படி அறிவது?
சூரிய ஒளி அதன் மேல் படப்பட சுற்றுப்புறம் எல்லாம் பிரகாசிக்கும்.
இளங்காலை நேரத்தில் உதய சூரியனின் கிரணங்கள் பட்டவுடன் சிவப்பு ஜூவாலை
போன்ற ஒளியை எந்தக் கல் கக்குகிறதோ அது சிறந்தது.
தூரத்திலிருந்து பார்க்கும் போது சிவப்புத் தீ போல ஜொலிப்பது வம்ச காந்தி
என்று அழைக்கப்படுகிறது. அது உடனடியாக செல்வத்தைத் தரும்.
இருளில் ஒரு மாணிக்கத்தை வைத்தால் அது தன் ஒளியால் சுற்றுப்புறத்தில்
ஒளியைத் தருமாயின் அது நல்ல கல்லாகும்.
கடவுளுக்குக் கூடக் கிடைக்காத மாணிக்கம் அல்லது கடவுளரே ஆவலுடன் விரும்பி
ஏற்கும் மாணிக்கம் எது எனில். அதை ஒரு தாமரை மலரின் உள்ளே வைத்தவுடன் அது விகசித்து
உடனே இதழ் விரித்து மலரும். அதுவே அற்புதமான மாணிக்கக் கல்!
மாணிக்கத்தின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
இரண்டு கேரட் சாதாரணமாக அணியப்படுகிறது.
RUBY STAMP FROM VIETNAM
பிரபலமான மாணிக்கக் கற்கள்!
இது வரை உலகம்
கண்ட புகழ் பெற்ற மாணிக்கக் கற்கள் வருமாறு:
ப்ளாக் ப்ரின்ஸின்
ரூபி (Black Prince’s Ruby)
தைமூர் ரூபி (Timur Ruby)
ரோஸர் ரீவ்ஸ் ஸ்டார் ரூபி (Rosser Reeves Star Ruby)
எட்வர்ட்ஸ் ரூபி
(Edwardes Ruby)
உலகின் பிரபலமான நடிகையும் பேரழகியுமான
எலிஸபத் டெய்லர் 1968 ஆம் ஆண்டு ஒரு மாணிக்கம் பதித்த மோதிரத்தை அணிந்தார். அது உலகினரின்
கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
அதன் எடை 8.24 கேரட். அது 2011இல்
42 லட்சம் டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
(ஒரு டாலரின் இன்றைய ரூபாய் மதிப்பு 70) அதாவது ஒரு கேரட்டின் விலை சுமார் ஐந்து லட்சம்
டாலர்!
உலகின் அதிக எடையுள்ள ரூபி ஹோப் ரூபியாகும். இதன் எடை 32.08 கேரட்.
RUBY FROM THAILAND
மாணிக்கம் கிடைக்கும் இடங்கள்!
பர்மாவைத் தவிர அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரேலியாவிலும் மாணிக்கம் கிடைக்கிறது.
ஒரு முக்கியமான விஷயம், நமது
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாணிக்கம் உள்ளிட்ட பல கற்கள் உள்ளன.
ரத்தினக் கலையில் நிபுணர்களாக
உள்ள வல்லார் இந்தப் பகுதியில் ஆய்வு நடத்தினால் தமிழகம் மாணிக்க நாடாக ஆகி விடும்.
சிலம்பில் மாணிக்கம்!
தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம்
மாணிக்கத்தையும் முத்தையும் மையமாகக் கொண்டு முடிகிறது.
பாண்டிமாதேவி என் பொற்சிலம்பில்
முத்துப் பரல்கள் உள்ளது என்று கூற கண்ணகி தன் காற்சிலம்பை உடைத்துக் காண்பிக்க அதிலிருந்து
மாணிக்கப் பரல்கள் தெறித்து விழுந்தன.
“கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு
உடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என அழகுற அந்தக் காட்சியை அமைக்கிறார் இளங்கோவடிகள்.
கண்ணகியின் மாணிக்கக் கற்கள்
மன்னனின் வாயில் தெறிக்க, மதுரை பற்றி எரிந்ததையும் பின்னர் நடந்ததையும் அனைவரும் அறிவர்.
மாணிக்கம் இல்லாத இலக்கியம்
ஒளி இல்லாத இலக்கியம்.
ஆங்கில இலக்கியத்தில் ரால்ஃப்
வால்டோ எமர்ஸன் உள்ளிட்ட கவிஞர்கள் மாணிக்கத்தைத் தங்கள் கவிதையில் இழைத்துள்ளனர்.
தமிழில் மாணிக்கத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டும் நூற்றுக் கணக்கான பாடல்கள் உள்ளன.
பெரியாழ்வார்,
“மாணிக்கம் கட்டி வயிரம் இடை
கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச்
சிறு தொட்டில்”
என்று வர்ணிப்பதிலிருந்து ஆரம்பித்தால்
மாணிக்கப் பட்டியல் நீளும்.
அருளாளர்கள் அனைவரும் மாணிக்கமே
என இறைவனை அறைகூவி அழைக்கும் போது மாணிக்கத்தின் உண்மையான மதிப்பு தெரிய வருகிறது,
இல்லையா?
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
In ancient China the number nine wasimportant in tne I Ching
and in the Book of Rituals ( (Li Chi), which speaks o nine ceremonies and they are-
Puberty rite for men
Wedding
Audience
Ambassadorship
Burial,
Sacrifice
Hospitality
Drinking and
Military rituals
In the Han dynasty a nine based cosmology was
for favoured.
The ninth day of the ninth month was a men’s festival of ‘yang raised to a
higher power.
There were nine earthly provinces, nine
mountains, nine fields of heaven and so on.
The center of Beujing had 8 roads leading in to
it , and these added to the one central point, made for a similar nonary
structure.
In the West, there were nine orders of angels,
nine cosmic spheres in medieval
cosmology, nine muses.
Greeks
have also chosen Goddesses for the arts and poetry like Hindus.
The
Muses are the nine goddesses of the arts, history and astronomy in Greece. The
muses were not highlighted in mythologies, but writers and poets invoke them
like Hindus before writing a book or performing dance and music. They are the
source of inspiration for them like Goddess of Knowledge Saraswati or Goddess
of wisdom, Ganesh.
Muses
were among the retinue of the god Apollo, the patron of music and the arts.
They were said to reside on Mount Helicon near Thebes or on Mount Parnassus
near Delphi (Like Kailash or Mount Meru of Hindu Mythology).
Their
names and branches of arts they preside over are as follows:
Name
Meaning
Arts
Calliope
Beautiful
voice
Epic Poetry
Clio
Fame
History
Erato
Lovely
Lyric Poetry
Euterpe
Joy
The Flute
Melpomene
Singing
Tragic Drama
Polyhymnia
Many
Songs
Mime
Terpsichore
Joyful
dance
Dance
Thalia
Good
Cheer/Plenty
Comic Drama
Urania
Celestial
Astronomy
xxx
Idioms and phrases
We say that a cat has nine lives
and a person who is ‘dressed to the nines’ in wearing his or her most elaborate
finery.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் பிறந்த 700
ஆவது ஆண்டு விழாவில் – 1968-ல்- சென்னையில்
ஒரு மலர் வெளியிடப்பட்டது. அதிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள்- பகுதி 1 (நூல் இருக்குமிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்).
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பிரிட்டனில் ஆர்தர் (King Arthur) மன்னரிடம் ஒன்பது வைரங்கள் இருந்தனவாம்.
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
முன்னொரு காலத்தில் ஒரு மனிதன்
தனது தோட்டத்தில் நிறைய மாதுள மரங்களை வளர்த்தான். அதிலிருந்து கிடைத்த நிறைய மாதுளங்கனிகளை
ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் எடுத்து வெள்ளித் தட்டுகளில் வைத்தான்.
அவனது வீட்டு வாசலில் வைக்கப்பட்ட
வெள்ளித் தட்டுகளில் இருந்த மாதுளங்கனிகளுடன் அவன் ஒரு குறிப்பையும் வைத்தான்.
“உங்களுக்கு நல்வரவு. ஏதாவது
ஒரு கனியை எடுத்துக் கொள்ளலாம்.”
ஆனால் அங்கு செல்வோர் யாரும்
அந்தக் கனிகளில் ஒன்றைக் கூடத் தொடவில்லை.
அந்த மனிதன் சற்று நினைத்துப்
பார்த்தான்.
அடுத்த இலையுதிர்காலத்தில் வெள்ளித்
தட்டுகளில் மாதுளங்கனிகளை வைத்த போது அவன் கூடவே ஒரு குறிப்பையும் வைத்தான்.
“இதோ, இங்கே பூமியில் கிடைப்பதிலேயே
சிறந்த மாதுளங்கனிகள் உள்ளன. ஆனால் இவற்றை மற்ற எல்லா இடத்திலும் விற்கும் வெள்ளிப்
பணத்தை விட அதிகமாகவே விற்கிறோம்.”
என்ன ஆச்சரியம், அண்டை அயலில்
இருந்தோர், வருவோர் போவோர் எல்லாம் அலறி அடித்துக் கொண்டு வந்து அங்கு வந்து அதை வாங்குவதற்காக
நின்றனர்!
***
செம்மண் பூமி (The
Red Earth)
அந்த மரம் மனிதனிடம் சொன்னது
: “ஓ! மனிதா!! எனது வேர்கள் செம்மண் பூமியின் ஆழத்தில் உள்ளது.நான் உனக்கு எனது பழங்களைத்
தருகிறேன்.”
மனிதன் உடனே மரத்திடம் சொன்னான்
: “ஓ! மரமே!! நாம் எப்படி ஒன்று போல இருக்கிறோம்! எனது வேர்களும் செம்மண் பூமியில்
ஆழத்தில் தான் உள்ளது. செம்மண் பூமி உனக்கு பழங்களை எனக்குத் தரும் சக்தியைத் தந்துள்ளது.
அந்த செம்மண் பூமி உனக்கு நன்றி சொல்லி விட்டு அந்தப் பழங்களை வாங்கிக் கொள்ள கற்பிக்கிறது!”
***
பரிமாற்றம் (The
Exchange)
முன்னொரு காலத்தில் ஒரு சாலை
சந்திப்பில் ஒரு கவிஞனும் ஒரு முட்டாளும் சந்தித்தனர். இருவரும் பேச ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்கள் பேசியது அனைத்தும் ஒருவருக்கொருவரிடம் அதிருப்தியையே ஏற்படுத்தியது.
அப்போது அந்த சாலையின் தேவதை
அங்கே வந்து தனது கரங்களை அந்த இருவர் மீதும் வைத்தது.
அட, என்ன ஆச்சரியம், இருவரும்
தங்கள் உடைமைகளை மாற்றிக் கொண்டு விட்டனர்.
இருவரும் பிரிந்தனர். ஆனால் சொல்வதற்கே விசித்திரமாக இருக்கிறது, கவிஞன் தனது
கையில் ஒன்றுமே இல்லாதிருப்பதை உணர்ந்தான்; வெறுங்கையை மணலில் அளைந்தான்.
அங்கே அந்த முட்டாளோ தன் கண்களை
மூடிக்கொண்டு ஒன்றுமில்லாதிருப்பதை உணர்ந்தான். அவன் இதயத்தில் நகரும் மேகங்கள் இருப்பதைக்
கண்டான்.
***
கலில் ஜிப்ரானின் கவிதைகள் ஆழ்ந்த
பொருளைக் கொண்டதாக இருக்கும்; சிந்திக்க வைக்கும். ஏராளமான உருவகச் சித்திரங்களை வசன
நடையில் அவர் படைத்துள்ளார்.
Picture of Nine (Nava Graha) planets in dance drama Nine Gems (Nava Ratna)
WRITTEN BY
London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 OCTOBER 2019
Time in London – 16-53
Post No. 7146
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Number Nine is used in religion for its magical qualities. Hindus call their long hymns ‘Sahasranama’ (1000 names) but in reality it is 1008 names. In the same way 108 names for shorter hymns. The added number will be magical Nine. Nine has some rare qualities which other numbers haven’t got. Look at the attachments for more information. It explains the way number NINE is used in different cultures.
Nava Ratri Dance ( Nava= Nine)
The list of Nine Siddhars is:
Sathyanathar
Sadhoganathar
Aadhinathar
Anadhinathar
Vegulinathar
Madhanganathar
Machaendranathar
Gadaendranathar
or Gajendranathar
Korakkanathar
Xxxxx
NINE CELESTIAL BODIES (NAVAGRAHAS) & THEIR
SHRINES
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பிரான்ஸிஸ் பேகன் என்பவர் ஆங்கில இலக்கிய இலக்கிய மேதை. லண்டனில் 1561-ல் பிறந்து 65 வயதில் இறந்தார். அவர் வாழ்க்கையைப் பற்றி பல மர்மங்கள் உண்டு. பல பதவிகளை வகித்தார். நீதிபதியாக இருந்த காலத்து பலர் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டதற்காக சிறைவாசமும் அனுபவித்தவர். ஆங்கில இலக்கியம் பயிலுவோர் இவரது பொன்மொழிகளை அடிக்கடி பயன்படுத்துவர். அவர் புதைத்து வைத்த புதையல் பற்றி 27-9-1992ல் நான் தினமணிக் கதிரில் எழுதிய செய்தி இதோ:-
8 Apr 2014 – வித்யாரண்யருக்கு கிடைத்த தங்கப் புதையல் … இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் … கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் …
23 Feb 2015 – Written by London
swaminathan. Research Article No.1669; Dated 23 February 2015. வராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக்
குருவிகள் ஆரூடம். சகுனம் என்றால் …
கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி! (Post No.7144)
WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 27
OCTOBER 2019
Time in London – 5-08 AM
Post No. 7144
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அரசன் கம்பரை நோக்கி,”கொங்கு மண்டலமும்
சோழ மண்டலமும் காப்பாற்றப்பட்டது. இதற்கு யாது கைம்மாறு செய்வேன்”
என்று கேட்டான்.
கம்பர் புன்னகையுடன், “அரசே! எப்பொழுதும் அரசனும்
குடிகளும் நினைக்கத்தக்கதாக இருக்க வேண்டும். ஆதலின் கலியாண வரி என்று ஒரு வரியை ராஜ்யத்துக்கு
மக்கள் செலுத்தி வருகிறார்கள். அதை இதற்கு உதவுங்கள். அது போதும்”
என்றார்.
உடனே சோழன் ஒரு சாசனம் எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தான்.
கதுவி வருபொன்னி கரைகடவா வண்ணம்
பதுமமுகக் கம்பனவர் பாட – வதுவைவரி
மாடை யரைக்கழஞ்சு வண்கம்பர்க் கீந்தபரி
சேடர் குலோத்துங்க னெழுத்து.
என்ற பாடல் குலோத்துங்கன் ஓலையில் சாசனம் எழுதிய நிகழ்ச்சியைக்
குறிப்பிடுகிறது.
‘கம்பர்க்கு ஈந்த பரிசு ஏடர் குலோத்துங்கன் எழுத்து’
என்பதில் ஏடர் என்றால் ஏடு அல்லது ஓலை. ஆகவே
சாசனம் என்றாகிறது.
கம்பர் உடனே, “இது என் வல்லமையால் நிகழ்ந்த ஒன்று
அல்ல; தெய்வத் தமிழால் நடந்தது. ஆகவே வதுவை வரி எனப்படும் இந்த கலியாண வரியை அத்தமிழுக்கே
உரிமை ஆக்குகின்றேன்”
என்றார்.
பின்னர் அரசனையும் குடிமக்களையும் நோக்கி அவர், “அரசே!
குடிமக்களே! இந்தத் தமிழ்நாட்டின் குடிகளான புலவர் பெருமக்கள் இந்தக் கொங்கு நாட்டில்
வாழையடி வாழையாக வாழ்ந்து வருகின்றனர். அரசர்களாலும் குடிகளாலும அவர்கள் ஆதரிக்கப்பட்டு
தமிழை நன்கு வளர்த்து வந்தார்கள். இப்போது அவர்களின் செழிப்பு சற்று மலினப்பட்டது போல
இருக்கிறது. ஆகவே இந்தக் கொங்கு மண்டலத்தில் கல்யாண காலத்தில் மணமகன் மணமகளை ஆசீர்வதித்து
வாழ்த்தும் சமயம் எனக்குக் கொடுத்த கலியாண
வரியை அவர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்” என்றார்.
அரசனும் குடிமக்களும் கம்பரின் இந்தப் பெருங்குணத்தை
வியந்து போற்றி, அப்படியே ஆகுக என்றனர்.
கம்பர் வாழி பாடி அப்புலவர்களிடம் சாசனத்தைக் கொடுத்துத்
தலைமுறை தலைமுறையாக, காலங்களில் வாழி கூறி வரிப்பணத்தைப் பெற்றுத் தமிழை வளர்த்து வாருங்கள்
என்று கூறினார்.
கொங்கு நாட்டில் சோழர்களின் ஆதிக்கம் இருந்ததை வரலாறு
மூலம் நன்கு அறியலாம்.
கரூர் சோழர்களது ஐந்து முடிசூட்டும் தலங்களின் ஒன்றாக
இருந்தது.
ஜயங்கொண்ட சோழேச்சுரம்
கரிகாலச் சோழேச்சுரம்
பராக்கிரம சோழேச்சுரம்
விக்கிரம சோழேச்சுரம்
குலோத்துங்க சோழேச்சுரம்
குலோத்துங்க விண்ணகரம்
என இப்படிப் பெயர் பெற்ற பல சிவ, விஷ்ணு ஆலயங்களும்
இங்கு உள்ளன.
பல சிலாசாசனங்களும் உள்ளன. பிரபந்தங்களும் உள்ளன.
குலோத்துங்கன் காலத்தில் காவேரி கரை கடந்தது என்றும்
கம்பர் பாட அது அடங்கிற்றென்றும் கூறும் பல பிரபந்தங்களும், சாசனங்களும் உள்ளன.
கம்பர் காலத்தில் இருந்தவன் இரண்டாம் குலோத்துங்கன்
என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு.
இந்த அழகிய வரலாற்றைக் கொங்கு மண்டல சதகத்தின் முப்பதாவது
பாடல் இப்படி விளக்குகிறது :-
கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள் கண்ணின்முனே
பொன்னி கரைகடந் தாளெனு நிந்தை புவியிலுளோர்
பன்னி யிகழா தமரெனக் கம்பரோர் பாச்சொலச்செய்
மன்னிய கங்கைக் குலத்தாரும் வாழ்கொங்கு மண்டலமே
பொருள் : ‘கன்னியழிந்தனள்’
என்று தொடங்கும் பாட்டை கம்பர் பாடும் படி செய்த கங்கா குலத்தவர்கள் வசிப்பதும் கொங்கு
மண்டலமே!
***
Kambar Samadhi, Nattarasankottai, picture sent by Venkat Kannan
Date: 26 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 21-21
Post No. 7143
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Translate this page15 Nov 2015 – DIWALI AT NO.10 DOWNING STREET, LONDON (Post 2332) … Hindu festival Diwali in his house for the sixth year on 10th November 2015.
From CanadaFrom United NationsFrom U S A From Sri Lanka From MalaysiaFrom IndiaFrom SingaporeFrom SingaporeFrom GuyanaFrom AustraliaFrom FijiHAPPY DEEPA AVALI- subham