வசுதைவ குடும்பகம்! (Post No.15,985)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,985

Date uploaded in London – 16 July 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

வசுதைவ குடும்பகம்!

ச. நாகராஜன்

ஒருவன் உலகில் எப்படி இருக்க வேண்டும்?

நாதிக்ரௌர்யம் நாதிஷாட்யம் தாரயேன்னாதிமார்தவம் |

நாதிவாதம் நாதிகார்யாசக்திமத்யாக்ரஹம் ததா || 

ஒருவன் இரக்கமற்ற அரக்கனாகவும் இருக்கக் கூடாது; மூர்க்கனாகவும் இருக்கக்கூடாது, மிகவும் சாந்தமாகவும் இருக்கக் கூடாது; விவாதங்களில் அதிக விருப்பமுடையவனாகவும் இருக்கக் கூடாது. அனைத்தையும் பெறுவதில் ஆர்வமுள்ளவனாகவும் இருக்கக் கூடாது. அதிக பற்று கொண்டவனாகவும் இருக்கக் கூடாது.

ஆசாரத்தை எப்படி அனுஷ்டிக்க வேண்டும்?

ஸ்வக்ருஹே பூர்ண ஆசார: பரரோஹே ததர்தக: |

ததர்கக: பரக்ராமே பதி சூத்ரவதாசரேத் || 

சொந்த வீட்டில் ஆசாரத்தை பூரணமாக அனுஷ்டிக்க வேண்டும். அடுத்தவர் வீட்டில் அதில் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். அடுத்த கிராமத்திலோ அதிலும் பாதியை அனுஷ்டிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் போதோ மிகச் சுருக்கமான முறையில் அனுஷ்டிக்க வேண்டும்.

பித்தளை பித்தளை தான்; தங்கம் தங்கம் தான்! 

நிஸ்ஸாரஸ்ய பதார்தஸ்ய ப்ராயேணாடம்பரோ மஹான் |

ந சுவர்ணே த்வனிஸ்தாதுத்ருக் யாதுக் காந்ஸ்யே ப்ரஜாயதே ||

மதிப்பே இல்லாத ஒரு பொருள் மிகுந்த ஆடம்பரத்தைக் காட்டும். ஆனால் தங்கமோ பித்தளை ஓசை எழுப்பும் அளவிற்கு ஓசை எழுப்பாது. 

உற்சாகத்தால் எதையும் அடைய முடியும்! 

உத்ஸாஹோ பலவானார்ய நாஸ்த்யுஸாஹாத்பரம் பலம் |

ஸோத்ஸாஹஸ்ய ஹி லோகேஷு ந கிஞ்சிதபி துர்லபம் ||

ஓ, பிரபுவே! உற்சாகமே மிக மதிப்பு வாய்ந்தது. உற்சாகத்தைத் தவிர பலமுடையது வேறு எதுவும் இல்லை. உற்சாகம் உள்ளவர்களுக்கு இந்த உலகத்தில் அடைய முடியாதது எதுவும் இல்லை!

வசுதைவ குடும்பகம்! 

அயம் நிஜ: பரோ வேதி கணனா லகுசேதசாம் |

உதாரசரிதாணாம் து வசுதைவ குடும்பகம் || 

இது என்னுடையது, இது இன்னொருவருடையது – இப்படிப்பட்ட வேறுபாடுகள் சாமான்யர்களுக்கே உண்டாகும். பெரிய மனது உள்ளவர்களுக்கு உலகமே  குடும்பம் (வசுதைவ குடும்பகம்)

என்றாகும்

தூங்கும் சிங்கத்தின் வாயில் தானாக மான்குட்டி நுழையாது! 

உத்தமேன ஹி சிந்தயந்தி கார்யாணி ந மனோரதை: |

நஹி சுப்தஸ்ய சிம்ஹஸ்ய ப்ரவிஷந்தி முகே ம்ருகா: || 

உற்சாகத்தினாலேயே ஒருவன் அனைத்தையும் அடைவான். வெறும் மனோரதத்தால் அடைய முடியாது. தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தின் வாயில் தானாக மான்குட்டி நுழையாது.

**

Leave a comment

Leave a comment