கடலில் மிதந்த இரும்பு குண்டுகள்! (Post.16,051)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 16,051

Date uploaded in London – 4 August 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2-8-2026 தினமணி கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

கடலில் மிதந்த இரும்பு குண்டுகள்! 

ச.நாகராஜன்

ஆஸ்திரேலியாவில் க்வீன்ஸ்லாந்தில் வடகிழக்குக் கடற்கரையில் வழக்கம் போல மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது. திடீரென்று அங்கு கடலில் பல இரும்பு குண்டுகள் மிதந்து வந்தன.

அவற்றைப் பார்த்த மக்கள் பிரமித்தார்கள். அவை நேரம் ஆக ஆக பெரிதாக வீங்க வேறு ஆரம்பிக்கவே அனைவரும் பயந்தனர்.

ஃபாரஸ்ட் பீச் அருகே வாழ்ந்து வந்த உள்ளூர்வாசியான ட்ரெவார் கைல் என்பவர் தான் ஜூன் 2026ல் அவற்றை முதன் முதலாகப் பார்த்தவர். “மூன்று குண்டுகளைப் பார்த்தேன். அவை எம்பிக் குதித்தவாறே கடலின் மீது பாய்ந்து வந்தன” என்றார் அவர்.

உடனடியாக ஓடோடிப் போய் அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் தெரிவிக்க அவர்கள் அங்கு வந்து ஒரு தடுப்புப் பகுதியை நிர்மாணித்தனர். மீன் பிடிக்கச் சென்ற ஒரு மீனவரிடம் அவரது சாதனங்கள் மற்றும் கூடை உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். யாரும் எல்லையைத் தாண்டி கடலுக்குள் போகக் கூடாது என்று அறிவித்த அவர்கள் ஸ்பெஷலிஸ்ட் க்வீன்ஸ்லாந்து ஃபயர் அண்ட் ரெஸ்க்யூ பிரிவிற்கு தகவலைத் தெரிவிக்கவே விசேஷ தீ அணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு வந்தனர்.

பின்னர், ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனத்தினர் வந்து இதை ஆராய்ந்தனர். பின்னர் அவர்களால் அவை விண்வெளிப் பந்துகள் என்று அறிவிக்கப்பட்டன.

ஃப்ளின்டர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆலிஸ் கார்மன், “ஏராளமான ராக்கெட்டுகளும் விண்கலங்களும் திரவ எரிபொருள் அமைப்பைக் கொண்டுள்ளன. அவை இந்த வலிமை வாய்ந்த உலோகக் குண்டுகளில் மிக அதிக அழுத்தத்துடன் வைக்கப்படுவது வழக்கம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில் “இவை ராக்கெட்டுகளின் கழிவுப் பொருள்கள். ராக்கெட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட இவை வானிலேயே எரிந்து விடும். எரியாத சில பகுதிகள் இப்படி பூமியில் விழுவது வழக்கம். இவை மிக அதிக உஷ்ணநிலையில் தான் எரியும். அது இல்லாத போது வளி மண்டலத்திருந்து கீழே வந்து விழுந்து விடும்” என்றார்.

எந்த ராக்கெட்டிலிருந்து இவை கீழே விழுந்தன என்பது யாருக்கும் தெரியவில்லை. இப்படி இன்னும் பல கழிவுப் பொருள்களும் பூமியில் அவ்வப்பொழுது விழுவது வழக்கம் தான்!

இவை ஆபத்தானவை இல்லை என்றாலும், உள்ளூர் அதிகாரிகள், “யாரும் இதன் அருகே போக வேண்டாம்” என்று மக்களை எச்சரித்தனர்.

‘இவை ராக்கெட்டிலிருந்து தான் விழுந்தது என்பது என்ன நிச்சயம்? ராணுவத்தில் உருவாக்கப்பட்டு சோதனைக்காக வீசப்பட்ட அபாய ஆயுதங்கள் தாம் இவையா? அல்லது ஒருவேளை அயல்கிரகவாசிகள் இதைப் போட்டிருந்தால்?’…. என்று அவர்கள் கேட்பதில் நியாயம் இருக்கிறது என்றனர் மக்கள்.

2026, ஜூலை 4ம் தேதி க்வீன்ஸ்லாந்து தீயணைக்கும் பிரிவு அதிகாரிகள் சமூக ஊடகங்களை அழைத்து இந்த குண்டுகள் தீங்கு விளைவிப்பவை என்பதால் யாரும் அவற்றை எடுத்து ஆராய வேண்டாம். இது போன்ற குண்டுகளைக் கடலில் கண்டவுடன் அதிகாரிகளிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும்” என்ற வேண்டுகோளை முன் வைத்தனர்.

மீன் பிடிப்பவர்களும், உல்லாசப்பயணிகளும் கடலில் இறங்கவில்லை.

இந்த மூன்று குண்டுகளை அடுத்து மேலும் பல இரும்புக் குண்டுகள் பல்வேறு கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட்டுள்ளன. அங்குள்ள மக்களுக்கு இப்போது, சுவையான சூடான பேசுபொருள் வானிலிருந்து விழுந்த இந்த மர்ம குண்டுகள் தான்!

***

Leave a comment

Leave a comment