

Written by London Swaminathan
Post No. 16,206
Date uploaded in London – 17 September 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில அரிச்சுவடியின்படி வி V எழுத்தில் வரும் சொற்கள்
வாகனங்கள்
கடவுள் பவனி வரும் வாகனங்கள் உண்மையில் ஆழ்ந்த மறை பொருளை கொண்டுள்ளது; அவைகள் குணங்களின் அடையாள பூர்வ சின்னங்கள் ; இதனால்தான் எலி மீது பவனிவரும் யானை முகக்கடவுளைக் காண்கிறோம். முன் காலத்தில், உலகம் முழுதும் இந்துக்களைப்போல கடவுளரை வாக்கங்களில் காட்டியதை எகிப்து, இராக் துருக்கி ஆகிய இடங்களில் இன்றும் காணலாம் ; அனால் அந்தக் கடவுள்கள் எல்லாம் செத்துப் போய் மியூசியங்களில் முடங்கிக்கிடக்கின்றனர் . இந்துக்களின் கடவுள்களோ இன்றும் பல லட்சம் மக்கள் புடைசூழ பவனி வருகின்றனர் . முதலில் கொடியில் இருந்த சின்னங்களே பிற்காலத்தில் வாகனமாக பரிணாம வளர்ச்சி பெற்றன. இதை இலக்கியக் குறிப்புகளில் இருந்து தெளிவாகப் பெறலாம்.
காளிதாசனின் காலத்தைக் கணக்கிட சங்க இலக்கியம் எப்படி துணை செய்கிறது என்பதை ஏற்கனவே ஐந்தாறு கட்டுரைகளில் விளக்கினேன். அவன் சங்க காலத்துக்கு முன்னால் கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இப்போது அவன் அளித்த வாகனக் குறிப்புகள் தமிழ் இலக்கியத்திலும் வருவது அவன் காலத்தால் முந்தியவன் என்பதை மேலும் உறுதி செய்கிறது.
புறநானூற்றின் கடவுள் வாழ்த்தில் சிவனின் வாகனமும் கொடியும் ரிஷபம் (ஏறு) என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் (மஹாதேவன்) பாடுகிறார்.
ரிஷபக் கொடி: காளிதாசனின் ரகு வம்சம்11-44;
விஷ்ணுவின் கருட வாகனம்: ரகு 10-13;10-61
இந்திரன் வாகனம் 4 மருப்புடைய யானை- திரு முருகாற்றுப்படை 155-159
நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலியில் யமதர்ம ராஜனின் எருமை வாகனம் பாற்றிப் பாடுகிறார்- பாடல் 1- வரி 25/26
முருகப் பெருமானின் பிணிமுக (யானை) ஊர்தி: புறம் 56;முருகு 247;பரிபாடல் 5-2, 8-10, 17-49, சிலம்பு 24-8-3;
முருகப் பெருமானின் யானையை பிணிமுகம் என்று அழைப்பர்:
பிணிமுக ஊர்தி வெல்போர் இறைவன் (பரி.17-49)
பிணிமுக ஊர்தி ஒண்செய்யோன்-புறம் 56
மயில் வாகனம் : மேகதூதம் பாடல் 46 (காளிதாசன்); பாடல் 54ல் சிவ பெருமானின் விடை ஏறு (ரிஷபம்). மகாபாரதத்திலும் இதே குறிப்பு வருகிறது (8-24)
மணிமயில் உயரிய மாறாவென்றி (புறம் 56)
முருகன் மஞ்ஞையன் (முருகு 210)
விரைமயில் மேல் ஞாயிறு (பரி 18-26)
சேவலங்கொடியோன் (குறுந்தொகை கடவுள் வாழ்த்து)
சேவலங்கொடியன் (முருகு 210)
கலித்தொகையில் சிவபெருமானின் காளைவாகனம் வருகிறது (150-13; 26-5)
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஒரே பாடலில் (புறம் 56) நான்கு கடவுளரின் கொடி வாகனங்கள் பற்றிப் பாடிப் பரவுகிறார்.
காளிதாசனும் கொடியும் வாகனமும் சிவனுக்கு ஒன்றுதான் என்று சொல்லி வ்ருஷபத்வஜன், வ்ருஷாங்கன், வ்ருஷபாருடன் என்று ரகு வம்சம் ,குமார சம்பவம் ஆகியவற்றில் புகழ்கிறார். இதைத் தமிழ் புலவர்களும் பாடியதை மேலே கண்டோம்.
காளிதாசன் இந்திரனின் வஜ்ரக் கொடி, வாகனம் ஐராவதம் ஆகியன பற்றியும் பாடுகிறார் ( ரகு3-56; 1-36. ரகு வம்சத்தில் முருகனின் மயில் பற்றி ‘மயூரப் ப்ருஷ்ட ஆஸ்ரயினா குஹேன’ என்று சொல்கிறார்.
திருமாலின் சேஷ வாகனம்: பெரும் பானாற்றுப்படை-372/5
பரிபாடல் 8-2: புள்மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும்
பரி 13ல் : சேவல் ஓங்கு உயர்கொடிச் செல்வ (திருமால்)
புறம் 58- பலராமனின் பனைக்கொடியைக் குறிக்கும், தொல்காப்பியமும் பனைக் கொடியைக் குறிப்பிடுகிறது.
ஆக கொடியையும் வாகனத்தையும் மாறி மாறி ஒரே கடவுளருக்கு தமிழ் ,சம்ஸ்கிருத இலக்கியங்கள் பகர்வதாலேயே கொடியிலிருந்து வாகனம் தோன்றியதாக நான் கூறினேன்.
பிற்காலத்தில் தோன்றிய தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்கள் வாகனம் பற்றிய மேலும் பல சுவையான கதைகளைக் கூறுகின்றன. திரு ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் துர்க்கைக்கு மான் வாகனம் இருப்பதை ‘கலையதூர்தி’ என்ற சொல்லால் விளக்குகிறார்.
“திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வம் ஆன பலவும்”– (பதிகம் 921, இரண்டாம் திருமுறை)
வேதத்தில் பல மிருகங்கள் குறிப்பிடப்படுகின்றன. புராண இதிகாசங்களில் வாகனங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் இருக்கின்றன. சிந்து சமவெளியில் ஒரு முத்திரையில் யானை மீது ஒரு ஆணோ பெண்ணோ நிற்கும் காட்சி இருக்கிறது. இந்து வாகனங்கள் உலகம் முழுதும் இருந்ததற்கான சான்றுகள் இதோ:
எகிப்தில் துதன்காமுன் (கி.மு. 1333) என்ற மன்னனை கருஞ்சிறுத்தை மீது நிற்பதாகக் காட்டியுள்ளனர். எகிப்திய பாரோக்கள் (மன்னர்கள்) இறைவனுக்குச் சமமாகக் கருதப்பட்டனர். அவனுடைய தாத்தா, கொள்ளுத் தாத்தா காலத்தில் இருந்து இந்துப் பண்பாட்டில் இருந்த தொடர்பு இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். மிட்டன்னி (சிரியா/துருக்கி/இராக் பகுதியை ஆண்ட இந்து மன்னர்கள்) மன்னர் தசரதன், தன் பெண்களை எகிப்திய மன்னனுக்கு மணம் முத்துவிட்டு எழுதிய கடிதங்கள் இன்றும் எகிப்தில் உள்ளன. துதன்காமுனுக்குப் பின் சேதி என்ற மன்னர் ஓவியங்களிலும் வாகனத்தைப் பார்க்கலாம்.
இந்துக் கடவுள்களில் துர்க்கா தேவி, அய்யப்பன், புத்த மதத்தில் பத்மசம்பவர் ஆகியோர் புலி வாகனத்தில் செல்வதாகக் காட்டப்பட்டிருக்கின்றனர்.
சிம்ம வாகனம்
வாகனங்களில் மிகவும் பழைய வாகனம் சிம்ம வாகனம். இன்றும் துர்கா தேவியின் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது. எங்கெல்லாம் தேவி, காளி வழிபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் சிம்ம வாகனம் இருக்கிறது.
கதேஸ் என்று சிரியா நாட்டிலும் ஹதோர் என்று எகிப்திலும் வழிபடப்பட்ட தேவியின் வாகனம் சிங்கம். நிர்வாணமாக நிற்கும் இந்தக் கடவுளின் ஒரு கையில் பாம்பு இருக்கும். இனவிருத்திக்கான தேவதை.ஹீப்ருக்கள் வணங்கிய லிலித் என்ற தேவதை இரண்டு சிங்கங்களின் மீது நிற்பதாகக் காட்டப்படுகிறது. லிலித், முதல் மனிதன் ஆன ஆதாமின் மற்றொரு மனைவி. ஜில்காமேஷ் கதையிலும் லிலித் வருகிறாள். அவர் தாக்கியவுடன் லிலித் பாலைவனத்துக்குள் ஓடியதாக கதை.
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று அசீரிய காதல்-போர் அதி தேவதையான இஷ்டாரையும் சிம்ம வாகினியாகக் காட்டுகிறது.
கி.மு 133 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழிலிகாயாவில் அரின்னா, சுர்ருமா ஆகிய தெய்வங்களும் சிம்ம வாகனத்தில் நிற்கின்றனர்.
காளை வாகனம்
காளையை இந்திரனுக்கும் ஏனைய தெய்வங்களுக்கும் உவமையாகக் கூறுவதை வேதத்தில் படிக்கிறோம். பிற்காலத்தில் காளையை சிவனுக்கு வாகனமாக்கினர்.5500 ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் ஒருகாளை மீது தெய்வம் உட்காரும் ஆசனம் போடப்பட்டிருக்கிறது
கி.மு.எட்டாம் நூற்றாண்டு சிற்பம் ஒன்று புயலுக்கு அதிபதியான பாபிலோனிய அதாத் என்னும் கடவுளை காளை வாகனத்தில் நிற்கும்படி செதுக்கியுள்ளது. அதாத் இந்திரன் போல கையில் வஜ்ராயுத்தை தாங்குகிறார்.
இந்திய வாகனங்களுக்கும் முற்கால வெளிநாட்டு வாகனங்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு அந்த கடவுள்கள் வாகனங்கள் மீது நிற்பார்கள். இந்துக் கடவுளோவெனில் வாகனத்தில் அமந்திருப்பார்கள்.
பாபா இயாகா என்ற ஸ்லாவ் இனக் கடவுள் பன்றியின் மீது பயணம் செய்கிறார்.

இதோ முக்கிய வாகனங்களின் பட்டியல் :
1.ஸ்ரீ மஹா கணபதி—மூஞ்சுறு Ganesh/Vinayaka=Mouse
2.வேல் முருகன் —மயில் Kartikeya/Skanda/Murugan–Peacock
3.சிவ பெருமான் காளை, நந்தி Shiva=Bull/ Nandhi
4.ராஜ ராஜேஸ்வரி—சிம்மம் Raja Rajeswari= Lion
5.மஹா விஷ்ணு— கருடன் Vishnu= Garuda/Eagle
6.பைரவர்— நாய் Bhairava=Dog
7.சாஸ்தா—குதிரை Sastha= Horse
8.அய்யப்பன்— புலி Ayyappa= Tiger
9.சனைச்சரன்–காகம் Sani/Saturn= Crow
10.கல்கி—- குதிரை Kalki Avatar=Horse
11.இந்திரன்—ஐராவதம் யானை Indra= Airavata/ Elephant
12.லெட்சுமி—செந்தாமரை, ஆந்தை Lakshmi= Red Lotus, Owl
13.சரஸ்வதி— வெண் தாமரை, அன்னம் Sarasvati=White Lotus, Swan
14.கங்காதேவி—மகரம்/முதலை Ganga Devi= Crocodile
15.மன்மதன், ரதி—கிளி Manamatha & Rathi= Parrot
16.குபேரன்—மனிதன், கிளி, குதிரை, கீரி Kubera= Man,Parrot or Horse
17.விஷ்ணு— சேஷ (பாம்பு) வாகனம் Vishnu= 7 headed Snake/ Sesha
18.கண்ணன் —ஆல இலை Krishna=Banyan leaf
19.பிரம்மா— அன்னம் Brahma= Swan
20.கார்த்திகேயன்- காண்டாமிருகம் (வியட்நாம்) Kartikeya=Rhino (Vietnam)
21.சண்டி தேவி—பன்றி/வராஹம் (சுஜனாகாட்) Chandi= Pig
22.சிந்தி இன மஹான்—மீன் Sindhi saint= Fish
23.கண்டபேரண்ட பட்சி— மன்னார்குடி ராஜகோபாலசுவாமி
Ganda Beranda Bird= Mannarkudi Rajagopalswamy
24. வருணன் — மகரம் Varuna= Makara (Shark or Crcodile)
25. அக்னி— ஆடு Agni / Fire= Ram
26.துர்க்கை—கலைமான் Durga= Antelope
27. மருத்— மான் Marut= Deer
28.நேபாளத்தில் லெட்சுமி— ஆமை, வங்காளத்தில் —ஆந்தை
Lakshmi in Nepal=Turtle, In Bengal=owl
29.tதுர்க்கை—புலி அல்லது சிங்கம் Durga= Lion or Tiger
30.சாமுண்டி—ஆந்தை Chamundi- Owl
31.கழுதை—அஸ்வினிதேவர்கள், இந்திரா, அக்னி
Asvini Devas= Donkey (also for Indra and Agni)
32.பிண வாகனம்—நிருதி Dead Body= Niruthi
33. சூரியன்—ஏழு குதிரைகள் Sun= 7 Horse Chariot
34.ராகு, சஷ்டி— பூனை Rahu/ Shasti= Cat
35.ரதி- புறா Rathi= Pigeon

கீழ்கண்ட (36 to 43) வாகனங்கள் பொதுவாக கோவில்களில் எல்லா தெய்வங்களையும் உலா விடப் பயன்படுத்துகின்றனர்
36.சூரிய பிரபை—வட தமிழ்நாட்டு தெய்வங்கள்
Surya Prabha (SUN)= Northern Districts of Tamil Nadu
37.சந்திர பிரபை– வட தமிழ்நாட்டு தெய்வங்கள்
Chandra Prabha (MOON)= Northern Districts of Tamil Nadu
38. கற்பக விருட்சம் Karpaka Vrksha= (Wish fulfilling Tree)
39. காமதேனு Kamadenu= Wish fulfilling Cow
40. கைலாச வாகனம் Kailash Vahana= Siva
41.பூபால வாகனம் Bhupala Vahanam= Vishnu
42.புருஷாமிருக வாகனம் Purusha Mrugam
43.பூத வாகனம் Bhuta Vahanam= Shiva
44.புன்னைமர வாகனம் Punnai Tree Vahana= krishna
45.காராம்பசு வாகனம் Karampasu Vahanam (See Kamadhenu)
46.ஆடுகள் பூட்டிய ரதம்—பூஷன் Goat Chariot=Pushan
47.ஏழு பசுக்கள் பூட்டிய ரதம்—உஷஸ் 7 Cow Chariot=Ushas
48.காளி—யாளி Kali= Yali (Yali is a mythical animal)
48.பாம்பு—மானசா தேவி Snake= Manasa Devi
49.சீதளா தேவி– கழுதை Seetala= Donkey
50.விஸ்வகர்மா—யானை Viswakarma= Elephant
நவக்ரஹ வாகனங்கள் (Nine Planets)
சூரியன்- ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் Sun=Horse Chaiot
சந்திரன்- மான்கள் பூட்டிய ரதம், Antelope chariot= Moon
செவ்வாய்—ஆட்டுக் கிடா/ Mars=Ram
புதன்- குதிரை Bhudan/ Mercury= Horse
வியாழன்/பிருஹஸ்பதி—யானை Jupiter= Elephant
சுக்ரன்/வெள்ளி—குதிரை/ முதலை Venus= Horse/ Crocodile
சனி—காகம் Saturn / Saniswarea= Crow
ராகு— சிங்கம் அல்லது பூனை அல்லது புலி Rahu= Lion/ Cat/Tiger
கேது— மீன் Ketu=Fish
சப்த மாதாக்களின் (ஏழு தெய்வீகத் தாய்மார்கள்) வாகனங்கள் பின்வருமாறு :
- பிராம்மி (Brahmi): அன்னப் பறவை (Swan/Anna)
- மகேஸ்வரி (Maheswari): ரிஷபம் / காளை (Rishaba/Bull)
- கௌமாரி (Kaumari): மயில் (Peacock/Mayura)
- நாராயணி / வைஷ்ணவி (Narayani/Vaishnavi): கருடன் / கழுகு (Garuda/Eagle)
- வராகினீ / வராகி (Varahi): பன்றி (Pig/Varaha)
- இந்திராணி (Indrani): யானை (Elephant/Gaja)
- காளி / சாமுண்டி (Kali/Chamunda): எருமை (Mahisha/Buffalo)
xxx
அஷ்ட பைரவர் வாகனங்கள்
அசிதாங்க பைரவர் – அன்ன வாகனம் (Swan)ருரு பைரவர் – காளை வாகனம் (Bull / Vrushabha)சண்ட பைரவர் – மயில் வாகனம் (Peacock)குரோத பைரவர் – கருட வாகனம் (Garuda)உன்மத்த பைரவர் – குதிரை வாகனம் (Horse)கபால பைரவர் – யானை வாகனம் (Elephant)பீஷண பைரவர் (Bitchana) – பேய் / பிரேத வாகனம் (Pretha) (சில குறிப்புகளில் சிம்ம வாகனம் என்றும் கூறacknowledgeப்படுகிறது) சம்ஹார பைரவர் – நாய் வாகனம் (Dog / Swana)
Please read my other articles on Vahanas in my blogs:
Iraq: 7 Gods Procession on Vahanas
Deer Chariot: Rig Veda to Santa Claus
Hindu Vahanas around the World
Vahanas in Kalidasa and Tamil Literature
உலகம் முழுதும் இந்து தெய்வ வாகனங்கள்
சங்கத் தமிழ் இலக்கியத்தில் வாகனங்கள்
வாகனங்கள் தோன்றியது எங்கே?ஏன்? எப்போது?
எந்தக் கடவுளுக்கு என்ன வாகனங்கள்?
Who Rides What Vahanas?
***
வாமன அவதாரம்
திருக்குறளிலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் 2000 ஆண்டுகளாகப் பாடப்பட்ட வாமன அவதாரம் விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரம் ஆகும்; வாமன என்றால் குள்ளம் குட்டை; அவரே மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண் தானம் கேட்டு ஓங்கி உலகளந்த த்ரிவிக்ரமன் ஆனார் . மஹாபலி சக்ரவர்த்தியின் கர்வத்தை அடக்க அவர் செய்த யாகத்தின்போது குள்ள பிராமணச் சிறுவனாக வந்து மூன்றே அடி மண் கேட்டபோது அந்த அசுர சக்கரவர்த்திக்கு ஆசிரியராக இருந்த பிராமண ஆசிரியர் சுக்ராச்சார்யார் அவரை எச்சகரித்தார்; அதையும் மீறி மஹாபலி தருகிறேன் என்று வாக்கு கொடுத்த போது, வானத்தையும் பூமியையும் இரண்டே அடிகளால் அளந்த வாமனன், முன்றாவது அடி எங்கே என்று கேட்டவுடன் , வந்தவர் விஷ்ணு என்றுஅறிந்து என் தலை மீது மூன்றாவது அடியை வையுங்கள் என்று காட்டினான் . அதன் மூலம் அவரை பாதாள உலகத்துக்கு அனுப்பிய விஷ்ணு , உனது பணிவு காரணமாக ஒவ்வொரு ஆண்டு ம் என்னுடைய திருவோண நட்சத்திரத்தன்று இந்த பூமிக்கு வா என்று ஆசீர்வதித்தார் . இப்பொழுது கேரளத்தில் மட்டும் அந்த ஓண விழாவைப் பெரிதாகக் கொண்டாடுகிறார்கள்.
வாமன (वामन).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற, உலகத்தின் முதல் இலக்கண நூலான அஷ்டாத்யாயிக்கு பதஞ்சலிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ப்பின்னர் வாமனர் என்பவரும் ஜயாதித்ய जयादित्य (jayāditya). என்பவரும் உரை எழுதினார்கள்; அதற்கு காசிகா என்று பெயர்; இருவர் எழுதிய இந்த பாஷ்யத்தில் வாமனர் எழுதிய பகுதி எது என்று சொல்ல முடியாது இவர்களைத் தவிர காஷ்மீரில் ஒரு வாமனர் பத்தாம் நூற்றாண்டில் சில நூல்களை எழுதினார்.
***
வாமாசாரம்
சிவனின் வாம / இடது பாகத்தில் இருப்பவள் சக்தி/ பார்வதி/ உமை; அவளை தாந்திர முறைகளில் வழிபடுவது வாமாசாரம் எனப்படும்; இதைப் பின்பற்றுவோர் மது, மாது, மாமிசம் என்பதையும் வழிபாட்டு முறைகளில் பயன்படுத்தி அபூர்வ சக்திகளைப் பெறுவார்கள் இவையல்லாமல் யாக யக்ஞங்களை செய்தோ அல்லது பக்தி முறையில் பூஜைகளை செய்தோ வழிபடும் முறை பழைய சம்பிரதாய முறை ஆகும் ; அவர்களை வாமாசாரத்தை ஆதரிப்பதில்லை ; பிரிட்டிஷ் நீதிபதி Arthur Avalon (the pen name of British high court judge Sir John Woodroffe) ஆர்தர் ஆவலோன் இந்த முறை பற்றியும் இதன் பின்னுள்ள தத் துவங்களைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய நூல்கள் பிரபலமான நூல்கள் ஆகும்.
***
வரருசி
Vararuci (वररुचि).—பாணினியின் உலகப் புகழ்பெற்ற இலக்கண நூலுக்கு வார்த்திகா என்னும் குறிப்புகளை எழுதியவர் வரருசி; இவரை காத்யாயனர் என்றும் சொல்லுவார்கள். இவர் சுமார் 4000 ‘அப்டேட்’களை செய்தார்; அதாவது பாணினி எழுதியதைத் திருத்தி, தனது காலத்தில் வழங்கிய மொழியைக் காட்டினார் . இவர் விக்ரமாதித்தன் அவையில் இருந்த நவரத்தினங்களில் ஒருவர்.
***
வார்த்திக
Vārtika (वार्तिक).—பாணினியின் அஷ்டாத்யாயீ நூலுக்கு வரருசி எழுதிய திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இவை ; பிரபல சம்ஸ்க்ருத அறிஞர் தியோடர் கோல்ட்ஸ்டாக்கர் prominent 19th-century German Sanskrit scholar Theodor Goldstücker, மொழியியல் வல்லுநர் ஆவார்; அவருடைய கணக்குப்படி பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார்; அவருக்கு 200 ஆழ்ந்து 300 ஆண்டுகளுக்குப் பின்னர் வரருசி வாழந்தார் என்பதாகும் . ஏனெனில் ஒரிஜினல் நூலில் 4000 மாற்றங்களை செய்வதானால் பாணினிக்கும் இவருக்கும் பல நூற்றாண்டு இடை வெளி இருக்க வேண்டும் தமிழிலும் தொல்காப்பியத்து க்கு அப்டேட் குறிப்புகள் எழுதிய பவணந்தி சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே மாற்றங்களைச் செய்தார் .இவருக்குப்பின்னர் மஹாபாஷ்யம் எழுதியா பதஞ்சலி முனிவர் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததை உறுதியான வரலாறு காட்டுகிறது; இந்த மூ வரையும் வணங்கும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதம் பயில்வோர் சொல்லும் ஸ்லோகம்
வாக்கியகாரஞ் வரருசிஞ் பாஷ்யகாரஞ் பதஞ்சலிம் |
பாணினிஞ் சூத்ரகாரஞ் ச ப்ரணதோஸ்மி முனித்ரயம் ||
சுலோகத்தின் பொருள்:வாக்யகாரம் வரருசிம்: பாணினியின் சூத்திரங்களுக்கு ‘வார்த்திகம்’ என்னும் விளக்க வாக்கியங்களை எழுதிய வரருசி (காத்யாயனர்).பாஷ்யகாரம் பதஞ்சலிம்: அந்த சூத்திரங்களுக்கும் வார்த்திகங்களுக்கும் ‘மஹாபாஷ்யம்’ என்னும் விரிவுரை எழுதிய பதஞ்சலி முனிவர்.பாணினிம் சூத்ரகாரம் ச: சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையான ‘அஷ்டாத்யாயி’ சூத்திரங்களை இயற்றிய பாணினி மகரிஷி.ப்ரணதோஸ்மி முனித்ரயம்: சமஸ்கிருத இலக்கணத்தை நமக்கு அருளிய இந்த மூன்று சிறந்த முனிவர்களையும் (முனித்ரயம்) நான் வணங்குகிறேன்.
***
வருணன்
வேதகால முக்கியக்கடவுளான வருணன் தமிழர்களின் நெய்தல் நிலக்கடவுள் என்று தொல்காப்பியம் கூறுகிறது பார்சி மத நூலான ஜெண்ட் அவஸ்தா வர்ண பகவானை புகழ்கிறது. துருக்கி நாட்டில் 3400 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கியூனிபார்ம் களிமண் கல்வெட்டில் வருணன் புகழப்பட்டுள்ளான்; பிராமணர்கள் தினமும் செய்யும் சந்தியா வந்தன கிரியைகளில் வருணனை பயபக்தியுடன் வணங்கித் துதிக்கின்றனர் .
ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.
மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.
வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்
தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.
தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)
‘’ மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’
தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.
பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:
‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலிந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும் பரதவர்
பனிதழை மா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா
துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)
பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.
வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.
மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.
வள்ளுவன் போற்றிய வருணன்
இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :
‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)
‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)
பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;
மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.
மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.
தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?
ஒரு இந்துக் கடவுள் உலகில் உள்ள மிகப் பெரிய உளவு அமைப்புகளான சி.ஐ.ஏ . கே.ஜி.பி. எம் ஐ 5, எம் ஐ 6, மொசாத்.இந்தியாவின் ‘ரா (RAW=Research and Analysis Wing) ‘ உளவாளிகளையும் ஜேம்ஸ்பாண்ட், மிஸ் மார்பிள் , ஷெர்லாக் ஹோம்ஸ் ஆகியோரையும் விடப் பெரியவர்; திறமையானவர் என்று அதர்வண வேத மந்திரம் சொல்கிறது. ஏன் ?எப்படி?
இதோ கணக்கு
ஒரு மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 10 முறை கண் சிமிட்டுகிறான் (மன்னிக்கவும்; அழகான பெண்களைப் பார்த்து கண் சிமிட்டுவதையும், அவள் அழகில் மயங்கி, சொக்கிப் போய் , கண்களை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்ததையும் அதர்வ வேதம் சேர்க்கவில்லை!)
சரி, அப்படியானால் ஒரு மணிக்கு ஒரு மனிதன் சராசரியாகக் கண் சிமிட்டுவது 60X 10 =600 முறை
ஒரு நாளில் அவன் 16 மணி நேரம் விழித்து இருப்பான் . அப்போது அவன் கண் சிமிட்டுவது
600x 16 மணி = 9600 முறை
உலகின் ஜனத்தொகை , இதை நான் எழுதிய போது………..
7.9 பில்லியன் , அதாவது 7,906,132,700
இதை நான் எழுதும்போது லட்சக் கணக்கில் கூடிக்கொண்டே இருக்கும்.
உலக ஜனத் தொகை கடிகாரம் என்பதை கூகுள் மூலம் பார்த்தீர்களானால் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு கூடுகிறது என்பதைக் காணலாம்; வியக்கலாம் .
நம் கணக்கிற்கு 7,906,132,700 என்று வைத்துக் கொண்டால் கண் சிமிட்டுதலின் எண்ணிக்கை
9600 X 7,906,132,700 (ஒரு நாளில் மட்டும்!!!!!!!)
இதை வானத்திலிருந்து வருணன் கணக்கிட்டுக் கொண்டே இருக்கிறானாம்; இப்படிச் சொல்கிறது அதர்வண வேதம் . தள்ளிப்போன வெள்ளைக்காரப் பயல்கள் கூட, அதர்வண வேதத்துக்கு கி.மு.1000 என்று தேதி குறிக்கிறான் அதாவது இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர்!
இந்த வருண பகவானை தொல்காப்பியம் தமிழர் கடவுள் என்று விஷ்ணு, இந்திரன், வேல் முருகன், துர்க்கை ஆகியோருடன் பட்டியலில் சேர்த்து இருக்கிறது .
பார்ப்பனர்கள் தினமும் மாலை நேரத்தில் சொல்லும் சந்தியாவந்தன மந்திரத்தில் இவனிடம் மன்னிப்புக் கேட்கிறார்கள் ; அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இன்று நீ பார்த்ததை நான் அறிவேன் ; ப்ளீஸ், ப்ளீஸ், மன்னிச்சுக்கோ.- என்று
துருக்கி- சிரியா எல்லையில் உள்ள பொகஸ்கொய் Bogazkoy களிமண் படிவ க்யூனிஃபார்ம் எழுத்துக் கல்வெட்டிலும் இந்திரன் மித்திரனுடன் வருணன் பெயர் உள்ளது. அதன் தேதி கி.மு 1340. அதாவது 3360 ஆண்டுகளுக்கு முந்தியது. இதெல்லாம் தள்ளிப்போன உதவாக்கரை அரைவேக்காடுகள் சொன்ன தேதி. அதாவது இந்து மதத்தை நக்கல் செய்யும், இந்து மதத்தைப் பின்பற்றாத, தன மதம் ஒன்று மட்டுமே கடவுளிடம் அழைத்துச் செல்லும் என்ற குருட்டு நம்பிக்கை கொண்ட வெள்ளைத் தோல்கள் சொன்ன சேதி . நம்முடைய பஞ்சாங்கமும் தமிழ்க் கல்வெட்டும் வியாசர் என்பவர் வேதத்தை நான்காகப் பிரித்ததையும் அது கலியுகம் துவங்குவதற்கு 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் வியாசர் செய்த வேலை என்றும் சொல்கிறது. அதாவது இற்றைக்கு சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர்!
இப்போது அதர்வண வேத கவிதையைப் படியுங்கள்; அதற்குப் பின்னர் இன்னும் சில சுவையான செய்திகளைச் சொல்கிறேன்:–
அதர்வண வேதம் – காண்டம் 4, சூக்தம் 16 (சூக்தம் 118 வருணன் என்றும் சொல்லுவர் )
1.அவன் பெரிய அதிகாரி; பக்கத்தில் இருந்து பார்ப்பது போல உன்னிப்பாக நம்மையே பார்க்கிறான் ; எல்லோரும் ரஹசியம் பேசுவதாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; அது எல்லாம் தேவர்களுக்கு நன்கு தெரியும்
2. ஒருவன் நிற்பது, உட்காருவது, வளைந்து வளைந்து கோணலாக ஓடுவது, மறைவாக ஒளிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் எதையாவது செய்வது, இருவர் மட்டுமே தனி இடத்தில் அமர்ந்து கிசு கிசு பேசுவது அத்தனையும் வருணனுக்குத் தெரியும்.எப்படித் தெரியுமா? அவன் உங்கள் அருகில் மூன்றவது ஆளாக நைசாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறான்!!
3.இந்தப் பூமி அவனுக்கு சொந்தம்; அதற்கு மேல் நாம் பார்க்கும் வானமும் அவனுக்குச் சொந்தம் . பூமியில் உள்ள கடலும், கடல் போன்ற ஆகாயமும் அவனுடையதே.
நாலாவது மந்திரம்
4.((சப்போஸ்suppose ; நீ ஆகாயத்துக்கு அப்பால் ஸ்பேஸ் ஷட்டிலில் போகிறாய் என்று வைத்துக்கொள்வோம்)). அப்போதும் நீ அவன் எல்லைக்கு அப்பால் சென்றதாக நினைத்துவிடாதே . அவனுடைய ஒற்றர்கள் அங்கிருந்துதான் பூமிக்கே வருகிறார்கள் . அவர்களுக்கு 1000 கண்கள். பூமியை பார்த்துக கொண்டே இருக்கிறார்கள் (அதாவது அவர்கள் ஸிஸிடி வி CCTV காமெராக்கள்; கூகுள் மேப் GOOGLE MAP )
ஐந்தாவது மந்திரம்
வருணன் பெரிய ராஜா ; பூமி, ஆகாயம், அதற்கு இடையிலுள்ள அந்தரம், வானத்துக்கும் அப்பால் உள்ள இடம் அத்தனையையும் பார்க்கிறார்.இந்த ஜனங்களின் இமைச் சிமிட்டுகளையும் அவன் எண்ணியுள்ளான். சூதாடுபவன் காய்களை உன்னிப்பாக எண்ணுவது போல அவன் எண்ணிக்கொண்டே இருக்கிறான்!!!!
ஆறாவது மந்திரம்
6.ஏ வருணா ! பொய் சொல்ற பயல்களை 3X 7= 21 பாஸக் கயிற்றால் கட்டி, அடித்து விட்டு விளாசு; ஆனால் உண்மை பேசுவோரைத் தொடாதே
ஏழாவது மந்திரம் 7.
ஏ வருணா ! விடாதே; அவர்களை 100 பாசக்கயிற்றால் கட்டு ; மனிதர்களைக் கவனிக்கும் வருணா! பொய் சொல்ற பயல்களை நல்லாக் கட்டு. ((நீ அடிக்கிற அடியிலே )) அவன் வயிறு தொங்கி மஹோதர நோயுள்ளவன் (போல) ஆகட்டும்
எட்டாவது மந்திரம்
8.நீயே அகலம்; நீயே நீளம்; நீயே மனிதன் , நீயே தெய்வமாக நிற்கிறாய் நீ முன்னைப் பழமைக்கும் பழமையானவன். பின்னைப் புதுமைக்கும் புதுமையானவன்
ஒன்பதா வது மந்திரம்
9.இன்னாரே ! நான் அந்த எல்லாப் பாசங்களுடன் உன்னைக் கட்டுகிறேன்.இந்த இந்த குடும்பத்தைச் சேர்ந்தவனே ! இந்த இந்தத் தாயின் மகனே ! அவர்களின் அனைவரையும் உனக்கு நான் அனுகூலமாய் நான் ஆக்ஞாபிக்கிறேன்.
ஜெர்மானியன் வான் ராத் VON ROTH வியக்கிறான் : வேதத்தில் கடவுளைப் பற்றிய கவிதையில் இதை வீட உன்னதமான கவிதையை கண்டதே இல்லை. இறைவன் சர்வ வியாபி, எல்லாம் வல்லவன் , எங்கும் நிறைந்தவன் , எல்லாம் அறிந்தவன் என்பதை இந்த அளவுக்கு விளக்கும் கவிதையை நான் கண்டதே இல்லை; இதில் கடைசி மந்திரம் எதிரிகளுக்கு எதிரான சாபம் போல இருப்பது ஒன்று மட்டுமே குறை.
xxx
லண்டன் சுவாமிநாதன் வியாக்கியானம்
இது ஒரு அற்புதமான கவிதை; வருணனைப் பற்றிய வருணணைகள் அனைத்தும் ரிக் வேதத்தில் இதே தொனியில் அமைந்திருப்பது உண்மையே. ஆனால் இங்கே புலவர் வருணிக்கும் மூன்று விஷயங்கள் வேறு எங்கும் இல்லை
1.அவன் மனிதனின் கண் சிமிட்டல்களையும் எண்ணிக்கொண்டே இருக்கிறான். அதாவது NASA நாஸா , PENTAGON பெண்டகன் முதலிய இடங்களில் உள்ள சூப்பர் கம்பியூட்டர்களை விட வருணன் பெரிய கம்ப்யூட்டர். அவன் சிசி டிவி CCTV காமெரா போல பார்த்துக் கொண்டிருப்பதோடு பாவ புண்ணியங்களை கணக்குப் போ ட்டுக் கொண்டே இருக்கிறான். இதனால் தினமும் மாலை வேளை மந்திரத்தில் பிராமணர்கள் வருண பகவானிடம் பாவ மன்னிப்பு கேட்கின்றனர் .
2.அவனுடைய தூதர்கள் உளவாளிகள் ; அவர்களுக்கு ஆயிரம் கண்கள் . இப்போது கூகிள் மேப் GOOGLE MAP மூலம் நாம் யார் வீட்டின் வாசலில் யார் நிற்கிறார் என்பதைக் காண முடியும். அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குள் யார் நுழைகிறார், வெளியே வருகிறார் என்று காண முடியும். இதை வருணன் ஒற்றர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.
3. வருணன் இன்விஸிபிள் மேன் ; அதாவது நாம் இருவர் மட்டுமே ரஹசியம் பேசுகிறோம் என்று நினைக்கிறோம். புலவர் சொல்கிறார்; டேய் மக்கு, மடையா; உன் பின்னால் வருணனும் உனக்குத் தெரியாமல் கேட்டுக் கொண்டு இருக்கிறாண்டா. என்று
இறைவனின் மஹிமையை இதைவிட எவனாவது வருணிக்க முடியுமா ?
பாரதியார் சொன்னார் சுவை புதிது, பொருள் புதிது, சோதிமிக்க நவ கவிதை; எந்நாளும் அழியாதா மா கவிதை என்று ; அந்த வரிகள் இந்தக் கவிதைக்கு நன்கு பொருந்தும்.
மாணிக்க வாசகர் இறைவனை வருணிக்கையில் முன்னைப் பழமைக்கும் பழமை, புதுமைக்கும் புதுமை என்றார் ; அற்புதமான வாசகம்; அதுவும் இந்த துதியில் தொனிக்கிறது
நோய்கள் வருவது ஒருவருடைய பூர்வ ஜென்ம பாவத்தால் என்பது இந்துக்களின் கருத்து. இதை ஏற்காத வான் ராத் அதை ஒரு குறையாக கருதுகிறார். ஏனெனில் பாவம் செய்தொரின் மகா உதர (மஹோதர = பெரு வயிறு) நோய் பற்றி வருகிறது.
பொய் சொல்வோரை கட்டி அடித்து நொறுக்கு; உண்மை சொல்வோரைக் காப்பாற்று என்பது அற்புதமான கருத்து. கந்த சட்டி கவசத்தில் வரம் வரிகளை நினைவு படுத்துகிறார் புலவர் (கட்டி உருட்டி கால் முறியக்கட்டு, குத்துக் குத்துக் கூர் வடிவேலால்)
மந்திரம் ஆறில் மூவேழ் 3x 7=21 என்ற எண் வருகிறது புற நானூற்றின் 166 ஆவது பாடலிலும் இது வருகிறது..
கடவுள் என்பவன் வானத்தில் ஒரு மாளிகையில் உட்காரவில்லை எங்கும் நிறைந்தவன் என்பதை வருணனே நீ இறைவன் நீ மனிதன் என்ற மந்திரம் காட்டுகிறது.
–சுபம்—–
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-116 ; இந்து மத கலைச்சொல் அகராதி-116, வசிஷ்டர், வாகனங்கள், வருணன் , வரருசி வார்த்திக , வாமன