சாக்லெட் நாடு பெல்ஜியம்! (Post No.7097)

  சாக்லெட் நாடு பெல்ஜியம்! (Post No.7097)     Written by  S Nagarajan
swami_48@yahoo.com
Date: 15 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 14-19
Post No. 7097

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
  ச.நாகராஜன்     கோகுலம் கதிர் அக்டோபர் 2019 இதழில் உலக உலா பகுதியில் வெளியாகியுள்ள கட்டுரை!     பெல்ஜியத்திற்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு உண்டு. பெல்ஜியம் அறத்திற்காகப் போராடி வீழ்ந்த போது அதைப் பாராட்டிக் கவலைப்படாதே என்று சொன்னது ஒரு தமிழ்க் கவிதை தான்! பாடியவர் மஹாகவி சுப்ரமண்ய பாரதியார். ‘பெல்ஜியத்திற்கு வாழ்த்து’ என்ற தலைப்பில் கவிதை புனைந்த பாரதியார் ஆரம்பத்திலேயே அற்புதமாக பெல்ஜியத்தை இப்படிப் புகழ்ந்தார்:     “அறத்தினால் வீழ்ந்து விட்டாய்; 
  அன்னியன் வலிய னாகி
மறத்தினால் வந்து செய்த 
  வன்மையைப் பொறுத்தல் செய்யாய்
முறத்தினால் புலியைக் தாக்கும் 
  மொய்வரைக் குறப்பெண் போலத்
திறத்தினால் எளியை யாகிச் 
  செய்கையால் உயர்ந்து நின்றாய்” இந்தப் பாட்டின் பின்னணி என்ன?   மிகப் பெரும் பழைய சரித்திரத்தைக் கொண்ட பெல்ஜியம் 1830இல் சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்னால் ஜூலியஸ் சீஸர் அங்கு வந்த போது அதன் பெயர் பெல்கே. 1839இல் பிரிட்டனுடன் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையின் படி அதன் மீது யாரேனும் வலியப் போர் தொடுத்தால் பிரிட்டன் உதவிக்கு வரும் என்ற ஷரத்து ஏற்பட்டது. போரை விரும்பாத பெல்ஜியம் தனது நடுநிலைத் தன்மையை எப்போதுமே உறுதிப் படுத்தி வந்தது.     1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி திடீரென்று ஜெர்மானியப் படை பெல்ஜியத்தின் வழியே தன் படை செல்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றது. 3ஆம் தேதி இதை பெல்ஜியம் உறுதியாக மறுத்தது. 4ஆம் தேதி ஜெர்மனி பெல்ஜியத்தின் மீது போர் தொடுத்தது. அன்று தான் முதலாம் உலகப் போர் தொடங்கியது. அதன் விளைவு பெரும் விபரீதத்தில் பெல்ஜியத்தை அழிக்கும் அளவு சென்றது. The Rape of Belgium -பெல்ஜியத்தின் கற்பழிப்பு என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுமளவு அந்த தேசம் பாதிக்கப்பட்டது. அறத்திற்கென தலை நிமிர்ந்து நின்று, ஜெர்மனியின் படையை உள்ளே வரக் கூடாது என்று துணிந்து சொல்லி அதன் விளைவாக அல்லல் பட்ட நாட்டை வியப்புடன் பார்த்துத் தான் மஹாகவி இந்தப் பாடலைப் புனைந்தார்..     முறத்தினால் புலியை விரட்டி செய்கையால் உயர்ந்து நின்ற புறநானூற்றுத் தமிழ்ப் பெண்ணை உவமையாகக் காட்டி ‘முறத்தினால் புலியைக் தாக்கும் 
  மொய்வரைக் குறப்பெண் போலத்  திறத்தினால் எளியையாகிச் 
  செய்கையால் உயர்ந்து நின்றாய்” என்று பாராட்டினார். பாரதியாரின் அருமையான முழுப் பாடலையும் படித்தால் பெல்ஜியத்தின் பெருமை விளங்கி விடும்.   ‘லீஜ் போர்’ எனப்படும் Battle of Liege  லீஜ் நகரில் தொடங்கி பல  இடங்களுக்குப் பரவியது. போர், போர், போர்!   அந்தப் போரில் அடிபட்டுத் துவண்டு மீண்டும் எழுந்து இன்று கம்பீரமாக நிற்கும்  பெல்ஜியம்.இன்று உலகின் பணக்கார நாடுகளில் இருபதாவது இடத்தை வகிக்கிறது. மக்கள் இயல்பாகப் பழகும் தன்மை உடையவர்கள். இதன் தலைநகரான ப்ரஸ்ஸல்ஸின் (Brussels) தெற்கே உள்ள வாட்டர்லூ நகரில் தான் நெப்போலியன் தோல்வியுற்றான்.   இதே ப்ரஸ்ஸல்ஸில் தான் வாஷிங்டனில் இருக்கும் அளவு பல நாடுகளின் ராஜதந்திரிகள் இன்று உள்ளனர். வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் உலகின் எந்த நகரில் ஏராளமாக உள்ளனர் என்று கேட்டால் ப்ரஸ்ஸல்ஸ் என்ற பதிலே வரும். அப்படிப்பட்ட புகழைக் கொண்டது ப்ரஸ்ஸல்ஸ்!      உலகின் முதல் இரு செய்தித்தாள்களை 1605இல் அச்சிட்டது பெல்ஜியம் தான்! டச்சு, ப்ரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகளை அதிகாரபூர்வ மொழிகளாகக் கொண்டுள்ளது பெல்ஜியம்.     உலகின் எல்லா நாடுகளின் நகர்களிலும் – சென்னை உட்பட – ஓய்வெடுக்க என இயங்கும் – Spas – ஸ்பாக்கள் அந்தப் பெயரைக் கொள்ளக் காரணம் பெல்ஜியமே. பெல்ஜிய நகரான ஸ்பாவிலிருந்து உருவானவையே இந்த ஸ்பாக்கள்! ஒரு சதுரகிலோமீட்டர் பரப்பு என்று எடுத்துக் கொண்டாலும் கூட உலகின் அதிக கோட்டைகளைக் கொண்டதும் பெல்ஜியமே. குழந்தை இல்லையா, அதிகம் வருமானவரி செலுத்த வேண்டும். உலகின் அதிக வருமானவரி இவர்களுக்குத் தான்!     பொழுது போக்கு அம்சங்களும் விளையாட்டுக்களும் அதிகம் உள்ள இந்த நாட்டில் தான் டின் டின் போன்ற பல காமிக் புத்தகங்கள் உருவாயின. அகில உலக கால்பந்தாட்டப் போட்டியும் 1904இல் ப்ரஸ்ஸல்ஸில் தான் முதன் முதலில் நடந்தது.     இந்தக் குட்டி நாடு ஒரு முறை தனது அரசை அமைக்க, அனைத்துக் கட்சிகளும் 541 நாட்கள் ஆலோசனை நடத்தவும் இன்னும் ஒரு 200 நாட்களை 65 நிர்வாக வேலைப் பொறுப்புக்கான நபர்களை நியமிக்கவும் எடுத்துக் கொண்டது அதிசயமே! இப்போது இங்கு ஓட்டுப் போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 1953இல் டி.வி. நிகழ்ச்சிகளைத் தொடங்கியது பெல்ஜியம். 97 சதவிகிதம் வீடுகளில் கேபிள் டி.வி. உண்டு. நம் தமிழ்நாட்டுப் பெண்மணிகள் போலவே சீரியல்களுக்கு இங்குள்ள பெண்களும் அடிமைகள்.     முக்கியமான சீரியல் முடிந்த பிறகு தான் சாப்பாடு – இங்குள்ளது போலவே! பெண்களுக்குப் பிடித்த இன்னொரு விஷயமான வைரத்தின் உலகத் தலைநகரமான அன்ட்வெர்ப்பும் பெல்ஜியத்தில் தான் உள்ளது. பெல்ஜியம் கண்ணாடி என்றால் கேட்கவே வேண்டாம். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம்பளத்தில் இங்கு வேறுபாடே இல்லை. சமத்துவமான சம்பளம் தான்!   உலகில் ஆயிரக்கணக்கில் சுவையான உணவு வகைகளை அறிமுகப்படுத்துவதும் பெல்ஜியமே!   நமது காமராஜரை நினைவு படுத்தும் படி அனைவரும் படிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட இந்த நாட்டில் 18 வயது வரை கல்வி என்பது அனைவருக்கும் கட்டாயமான ஒன்று.     குளிர் மிகுந்த நாட்களில் நாம் பேசினாலே புகை வரும். அப்படி ஒரு நடுக்கும் குளிர். தொழிலகமெல்லாம் நன்கு அடைக்கப்பட்ட கட்டிடங்களில் வெப்பமூட்டும் சாதனங்கள் பொருத்தப்பட்டே இயங்குகின்றன. தொழிலாளிகள் ஜாலியாக ரிலாக்ஸாக, ஆனால் திறம்பட, கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் தரத்துடன் முடிக்கின்றனர்.     பெல்ஜியம் பெண்களின் நாடு மட்டுமல்ல; குழந்தைகளுக்கும் பிடித்த நாடு. ஏனெனில் இங்கு தான் வருடத்திற்கு 2,20,000 டன்கள் சாக்லட் உற்பத்தியாகிறது. ப்ரஸ்ஸல்ஸில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தில் தான் உலகில் அதிக அளவு சாக்லட் விற்பனை ஆகிறது.     பெல்ஜியம் பீருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உண்டு. 800 வகையான பீர்கள் இங்கு தயாராகின்றன. சில பீர் பிரியர்களோ, இது தப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பீர்கள் இங்கு தயாராகின்றன என்கின்றனர். ஒவ்வொரு பீரின் வகைக்கும் தக்கபடி ஒவ்வொரு வகையான பாட்டில் தயாரிக்கப்படுகிறது!   டுமாரோலேண்ட் என்ற இடத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் எலக்ட்ரானிக் இசை மற்றும் நடனத் திருவிழா உலகினரைப் பெருமளவில் கவர்கிறது; அத்தோடு பெல்ஜியத்திற்கு திருவிழாக்களின் நாடு என்ற செல்லப் பெயரும் உண்டு! ஏனெனில் அன்றாடம் தெருக்களிலும் அரங்கங்களிலும் இசை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும்.     உலகின் முதல் லாட்டரிச் சீட்டை அறிமுகப்படுத்தியதும் பெல்ஜியமே. ஆனால் இந்த லாட்டரியில் கிடைக்கும் நிதியை ஏழைகளுக்குக் கொடுக்கவே அது லாட்டரியை நடத்தியது!     இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டைத் தயாரித்த அமெரிக்கா அதில் எந்த நாட்டு யுரேனியத்தைப் பயன்படுத்தியது தெரியுமா? சமாதானத்தை என்றும் நிலை நிறுத்த விரும்பும் பெல்ஜியத்திலிருந்து வந்த யுரேனியத்தைத் தான்! காங்கோ அதன் காலனியாக இருந்த போது பெல்ஜியம் தரவழைத்தது இந்த யுரேனியம்.   இங்குள்ள எஞ்ஜினியர்கள் திறமைசாலிகள். ஆகவே தான் உலகின் பெரிய கட்டிடமான  பர்ஜ் துபாய் கட்டிடத்தைக் கட்ட துபாய் தேர்ந்தெடுத்த நான்கு கம்பெனிகளுள் பெல்ஜியம் கம்பெனியும் ஒன்றாக அமைந்தது.   இங்குள்ள நீதி மன்றம் போல பெரிய அளவிலான கட்டிடம் கொண்ட ஒன்று உலகிலே எங்குமே இல்லை. 26000 சதுர மீட்டர் பரப்புள்ள கட்டிடம் நீதியை நிலை நாட்டுவதில் குறியாக உள்ளது.     ஐரோப்பாவின் யூரோ கரன்ஸியை முன் வைத்தது முதன் முதலில் பெல்ஜியம் தான். அது மட்டுமல்ல, அதற்கான யூரோ சின்னத்தை – € – வடிவமைத்துத் தந்ததும் அது தான்!     இந்த நாட்டைப் பற்றி ஒரு வரி சொல் என்று சின்னக் குழந்தையைக் கேட்டால் கூட அது சொல்லும் – சாக்லெட் நாடு என்று! ***  

HINDU TEMPLES IN VIETNAM (Post No.7096)

Vishnu in Viet Nam

Written by  London Swaminathan
swami_48@yahoo.com

Date: 14 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 21-35
Post No. 7096

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Pedestal with Ramayana Scenes

Hindu temples in Vietnam can be broadly classified into two groups. They are modern and ancient. The modern temples are constructed by the migrant business community in the last few hundred years. The ancient temples were constructed when the Hindu rule began in Vietnam about 2000- years ago.

In the modern temples we see continuous worship and in the ancient temples only occasional worship. Most of the ancient temples are dilapidated. Many of the statues decorate the museums around the world. In the olden days Vietnam was called Champa. Hindus ruled several South East Asian countries for 1500 years from the first century of modern era. Hindu influence is found more in South and Central Vietnam. Northern part has more Chinese influence.

The names of towns and regions are in Sanskrit –

Indrapura

Amaravati

Vijaya

Panduranga

Kauthara – Kedar nath

The river name is Ma Ganga –Mekong

Let us look at two important temples now:-

Latest excavations in two places have given lot of new information. The statues and artefacts collected from these sites are displayed in Danang Museum. Old statues were taken to Paris and stored in Guimet Museum in Paris. So one has to see all the statues and inscriptions in all the museums to piece together the history of Viet Nam. The oldest Sanskrit Inscription of South East Asia, known as Vo Canh Inscription  is in the History Museum in Hanoi. ( I have identified the King Sri Maran in the inscription as Tamil Pandya King).

My son Temple

The ancient Cham temple is in My Son which is 70 kilometers from Da Nang. It is dated to 4th century of modern era.  The materials displayed in the Da Nang museum will throw some light on the historical places. (At the same time Mula Vraman’s Yupa Sanskrit inscription is found in the remote forest of Borneo! This shows the spread of Sanskrit and Hindu religion from Vietnam to Indonesia)

Da Nang museum has

52 objects from Tra Kieu

30 objects from My Son

17 objects from Chan Lo.

But there are 43 Cham sites.

My Son was the most sacred place of the Champa kingdom with over 70 structures of brick and stone. Epigraphic evidence indicates that construction began around 4th century. In 2012 the staff at My Son discovered an Eka mukha linga.

The My Son temple pedestal is the most written about Cham piece  of art. 1500 years ago this place was called Deva devalaya, meaning abode of god of gods, that is Lord Shiva.  Since king Bhadravarman constructed it , the Shivalinga there was called Bhadreswara . The king has t donated almost the entire valley for the upkeep of the temple.

Next comes the Tra Kieu site which is 50 kilometres from  Da Nang. There are three shrines one each for Shiva, Kubera and Poet Valmiki . King Prakasa dharman and Vikranta varman constructed them . The shrines were called pujasthana.

Later inscriptions used many Sanskrit terms in the temple inscriptions.

Tra Kieu temple

We find a big pedestal for Shiva linga here. On the pedestal beautiful scenes from Ramayana and Bhagavatam are portrayed . Wedding scenes of Sita and Rama are beautifully sculpted.

ascetic
Lord Shiva
Eka Danta Ganesa from Viet Nam Museum

முதலையைக் கொலுசினால் கன்னத்தில் உதைத்த பெண்! (Post No.7095)

Written by  S. Nagarajan
swami_48@yahoo.com

Date: 14 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-36
Post No. 7095

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

தமிழ் இன்பம்

முதலையைக் கொலுசினால் கன்னத்தில் உதைத்த பெண்! (Post No.7095)

ச.நாகராஜன்

குலோத்துங்க சோழன் சிறந்த தமிழ்ப் புலவன். புலவர்களை ஆதரித்த மாபெரும் மன்னவன். ஒட்டக்கூத்தர் அவனது அரசவைப் புலவர்.

ஒட்டக்கூத்தர் பால் அவனுக்குப் பெரும் மரியாதை உண்டு.

ஒரு நாள் குலோத்துங்கன் ஒரு செய்தியைக் கேட்டான். அதிசயமான செய்தி.

ஒரு பெண் தன் சோர நாயகனைக் காண விரும்பினாள். அவன் இருப்பதோ அக்கரை. இவள் இருப்பதோ இக்கரை.

ஆனால் காம வெப்பம் தாங்கவில்லை இளம் பெண்ணுக்கு.

அவனை உடனே சந்திக்க விரும்பினாள்.

ஆனால் நீர் வெள்ளம் பெருக்கோடியது. என்ன செய்வது. துணிந்தாள்.

நீரில் மிதந்தோடும் ஒரு பிணத்தைப் பிடித்தாள். அதைத் தெப்பமாகக் கொண்டு அக்கரை சேர்ந்தாள்.

தன் காதலனொடு கூடி மகிழ்ந்தாள்.

பின்னர் இக்கரை வர வேண்டுமே! நீந்தி வர ஆரம்பித்தாள்.

அவளது காலை ஒரு முதலை பிடித்துக் கொண்டது.

தன் காலில் இருந்த கொலுசினால் அதன் கன்னத்தில் ஓங்கி உதைத்தாள்.

முதலைப் பிடியிலிருந்து மீண்டு வந்தாள்.

இந்த செய்தியைக் கேட்ட குலோத்துங்கன் ஒட்டக்கூத்தரை வினவ அவர் பாடிய கண்டசுத்தி இது:

கரண்டகண் டத்தொனிக் கஞ்சிய மான்கருங் கங்குலிலே

திரண்ட வெள்ளத்திற் பிணமீது சென்றனள் செர்ந்தவளை

அரண்டலின் பங்கொடி மீளக்கராப் பற்றவங் கொலுசால்

குரண்டி கன்னத்தி  லுதைத்தனன் காணங்கு லோத்துங்கனே

பொருள் : அம் குலோத்துங்கனே – அழகிய குலொத்துங்க அரசனே!

கரண்டம் – நீர்க்காக்கையின்

கண்டத் தொனிக்கு – குரல் ஓசைக்கு

அஞ்சிய – பயந்த

மான் – பெண்ணானவள்

கருங் கங்குலிலே – கருமையாகிய இருள் படர்ந்த இராக்காலத்தில்

திரண்ட வெள்ளத்தில் – பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில்

பிணமீது சென்றனள் – பிணத்தைத் தெப்பமாகக் கொண்டு சென்றால்

சேர்ந்தவளை – சோரநாயகனைக் கூடி

அரண்ட இன்பம் கொடு – வெருட்சியாகிய இன்பத்தை அனுபவித்து

மீள – மீண்டு வரும் போது

கரா பற்ற – அவளது காலை ஒரு முதலை பற்ற

அம் கொலுசால் – அழகிய தன் காலில் அணிந்த கொலுசினால்

குரண்ட கன்னத்தில் உதைத்தனள் –  திரைந்த கன்னத்தில் உதைத்தாள்

பாடலைக் கேட்ட மன்னன் மகிழ்ந்தான்.

ஒருநாள் இருவரும் பயணம் மேற்கொண்ட போது ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்ந்து பாட ஆரம்பித்தார்.

இரண்டு அடிகளை முடித்தவுடன் கையை அசைத்து அவரை நிறுத்திய குலோத்துங்கள் மீதி இரண்டு அடிகளைத் தானே பாடி பாடலை முடித்தான்.

பாடல் இது தான்:

ஆடுங் கடைமணி நாவசையா மகில மெங்கும்

நீடுங் குடையைத் தரித்தபிரா னிந்த நீணிலத்தில்

பாடும் புலவர் புகழொட்டக் கூத்தன் பதாம்புயத்தைச்

சூடுங்கு லோத்துங்க சோழனென்றே யென்னைச் சொல்லுவரே.

பொருள் : ஒட்டக்கூத்தர் பாடியது:

ஆடும் கடைமணி நாவசையாமல் – அசையும் இயல்புள்ளதான மணியானது நாவசையாமல்

அகிலம் எங்கும்  – உலகம் எங்கும்

நீடுங் குடையைத் தரித்த பிரான் – பெரிய குடையைத் தரித்து நிழலைச் செய்கின்ற பெருமான்

இங்கு அவரை நிறுத்திய குலோத்துங்கன் தான் பாட ஆரம்பித்தான் பொருள் கெடாமல்!

நீணிலத்தில் – இந்தப் பெரிய நிலத்தில்

புலவர் பாடும் புகழ் – புலவர் புகழ்ந்து பாடும்

ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தை – ஒட்டக்கூத்தரின் திருவடித் தாமரையை

சூடும் – சிரசில் அணிகின்ற

குலோத்துங்க சோழன் என்றே என்னைச் சொல்லுவரே – குலோத்துங்க சோழன் என்று என்னைச் சொல்லுவர்.

ஒட்டக்கூத்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இருக்குமா என்ன?

****

குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே….. (Post No.7094)

Written by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 14 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 7-45 am
Post No. 7094

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

சந்துல தானா சிந்துகள் பாடி
தந்திரம் பண்ணாதே
நீ மந்திரத்தாலே மாங்காயைத் தானே
பறிக்க எண்ணாதே

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

ஜம்பர் பட்டும் தாவணி கட்டும்
சலசலக்கையிலே
என் மனம் தொட்டு ஏக்கமும்பட்டு
என்னமோ பண்ணுதே

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு
உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம்
எனக்குப் புரியுமா

போக்கிரி போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா
போதுமே போதுமே போதுமே போதுமே தாஜா
குங்கும குங்கும குங்கும குங்குமப் பூவே
கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் கொஞ்சும் புறாவே

செண்பக மொட்டும் சந்தனப் பொட்டும்
சம்மதப்பட்டுக்கனும்
தாளமும் தட்டி மேளமும் கொட்டி
தாலியைக் கட்டிக்கனும்

(குங்குமப் பூவே)

YashikushiAug 22, 2010

MEDICINAL PROPERTIES OF SAFFRON (Post No.7093)

Written by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 20-55
Post No. 7093

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

Kashmir is known for its saffron cultivation. Chinese writers say that Kashmir is the home of saffron. Hindus use this in the worship of their gods and goddesses. Pregnant women also use it in their drinks, particularly milk. They believed that the children born to them will be healthy and fair. Latest researches show the benefits of such use. It is a medicine to cure hyperactivity of children.

Latest research in Tehran (Iran) University gives the result:-

NEW YORK—Saffron capsules appear to be as effective as methylphenidate for treating children with attention-deficit/hyperactivity disorder (ADHD), researchers from Iran report.

“My research group at Roozbeh Psychiatric Hospital has worked on the psychotropic effects of saffron since early 2000, and we have documented the antidepressant effects of saffron,” Dr. Shahin Akhondzadeh from Tehran University of Medical Sciences told Reuters Health by email.

“On the other hand, many antidepressants have been used as alternative for stimulants in patients with ADHD that cannot tolerate Ritalin (methylphenidate) or do not respond to Ritalin. Therefore, from this preliminary study, the main point is that we can consider saffron just as an alternative in the above mentioned patients,” he said.

Saffron (Crocus sativus L.) and its active constituents are thought to increase the reuptake inhibition of dopamine and norepinephrine and are NMDA-receptor antagonists and GABA-alpha agonists.

Leaving the medical jargon to one side, we can safely say that it boosts one’s mental power and cures depression.

Other interesting facts about saffron are:-

Saffron is seen 50,000 year old cave paintings in Iraq. It is seen in ancient Greek legend.

Alexander the Great used it to heal his wounds.

Cleopatra bathed in it.

It was spread along the streets in advance of Nero’s (Roman emperor 37-68 CE) entry to Rome.

Sumerians used it in magical potions.

King Solomon revered it in love poetry.

Plague sufferers coveted it.

Pirates stole it.

14 week war broke out between Austria and Basel over saffron in 1374 after nervous nobles seized vast quantities of saffron from a rising merchant class.

Saffron is extracted from flower stamens of Crocus sativus plant. Iran, Spain, Afghanistan, Italy and India grow saffron.

It is one of the most expensive spices.

Indians use it in milk and drinks. But westerners use it in buns and cooked foods such as saffron Risotto.

Golden brown saffron buns are traditionally served in Scandinavian countries on St Lucia day.

Saffron plays an important role in the food traditions of Mediterranean region.

Latest Costco magazine has given saffron recipes. Saffron is made from dried stigmata and styles, known as threads, hand harvested from the delicate saffron flowers.

Crocus sativus (saffron plant) is an autumn flowering plant. The etymology and the place of origin are not certain. Crete, Iran and India are considered as the place of origin. Though it has been used for thousands of years the name saffron is attributed to Arabic or Latin. Now Iran generates 94 percent of global supplies. Kashmir (India), Spain, Greece and Morocco are the next largest suppliers.

A good gatherer harvests 1000 flowers per hour. We need over one lakh flowers to make one kilo of saffron. There are over 150 volatile chemicals in the flower. Saffron has only three stamens in one flower. So one can easily differentiate saffron from other similar coloured flowers.

Though there are different types of crocus flowers  , crocus sativus is the only one used as spice.

Source – Costco magazine and gardening magazine, U.K.

—subham–

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி131019 (Post No.7092)

Written by London Swaminathan
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-07
Post No. 7092

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் த்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.

குறுக்கே

1.4 எழுத்துக்கள்– ரிக் வேதத்துக்கு  வான சாத்திரம் மூலம் தேதி நிர்ணயித்த சுதந்திரப் போராட் வீரர்

4.3- வலிமை

5.6- இடதுகரத்தின் எதிர்ப்புறம்

7.5- உக்கிரமான பாண்டிய மன்னன்

9.2- கன்னட நாட்டில் பேசப்படும் மற்றொரு மொழி/ வலமிருந்து இடம் செல்க.

9.3- கயிறு

10.3– தெரு முக்குகளில் நடக்கும்

12.4– படகு, படகு புறப்படும் மாநிலம்

13.3– கல்யாணத்துக்காக தேடும் ஆள்/ வலமிருந்து இடம் செல்க.

14.3– காவிரி கடலில் கலக்கும் இடம்/ வலமிருந்து இடம் செல்க.

14.4 — பூமி; 3 7 , 14 ண்களுடனும் வரும் நில அமைப்பு

கீழே

1.7  எழுத்துக்கள் — உலகப் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர்

2.5- பந்து

3.3- ஒருவர் பிறந்த குழு

6.4- பர்மாவின் தலைநகர்

8.4- எந்த ரிஷி வழி வந்தவர் என்பதை அறிவிக்கும்

114- இன்பத்தின் மறு பகுதி/ கீழிருந்து மேலே செல்க.

15.3- கிணற்றடி, திண்ணை, ஆலமரத்துக்கு அடியில் பேசப்படுவது/ கீழிருந்து மேலே செல்க.

செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 2 (Post No.7091)

Written by S NAGARAJAN
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 14-48
Post No. 7091

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

12-10-2019 மாலைமலர் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை

செல்வமும் புகழும் தரும் வைரங்கள் – 2

ச.நாகராஜன்

எல்லையில்லா மஹிமை கொண்ட வைரத்தை ஆலயங்களிலிருந்து அருள் பாலிக்கும் தெய்வத்திடம் சமர்ப்பித்தனர் நமது முன்னோர்.

அரிய ரத்தினங்கள் அனைத்தும் தேவியை அலங்கரிக்க அருள் ஒளியுடன் ரத்னங்களிலிருந்து வரும் ஒளி அலைகளும் சேர்ந்து துதிப்போரின் மீது வெள்ளமெனப் பாய்ந்து சௌபாக்கியத்தைக் கொடுப்பது பாரம்பரியப் பழக்கமானது.

நீலத்திரைகடலின் ஓரத்தில் நின்று தவம் செய்யும் குமரியம்மனின் மூக்குத்தியின் ஒளி வெள்ளம் கடலில் தொலை தூரத்தில் வரும் கப்பல்களுக்கு வழி காட்டியாக அமைந்ததைச் சரித்திரம் கூறும்.

திருப்பதியில் குடி கொண்டிருக்கும் வெங்கடாசலபதிக்கு 1986ஆம் ஆண்டு வைர கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் சுமார் 26 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. இதில் 28369 வைரங்கள் பதிக்கப்பட்டன.27 ½ அங்குலம் உயரமும் 13 அங்குல குறுக்களவும் கொண்டது இந்த கிரீடம். இதில் உள்ள வைரங்களின் அப்போதைய மதிப்பு 430 லட்சம் ரூபாய் ஆகும். பெல்ஜிய வைரங்களை ரஷியாவில் பட்டை தீட்டி இதில் பயன்படுத்தியுள்ளனர்.

இதை விட அதிகமாக 70000 வைரங்களுடன் 34 கிலோ எடை தங்கமுள்ள கிரீடம் ஒன்றை 2009 ஜூனில் ஒரு பக்தர் வெங்கடாஜலபதிக்குச் சமர்ப்பித்தார்.

ஒரு வைரத்திலிருந்து வீசும் ஒளிக்கதிர்களே எல்லையற்ற நன்மைகளை உருவாக்கும் என்று கூறும் போது இத்தனை ஆயிரம் வைரங்களின் கதிர்கள் ஏழுமலையானின் அருள் கதிர்களுடன் கலந்து பக்தர்களின் மீது படும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை எளிதில் ஊகிக்கலாம். இதே போல மதுரை மீனாட்சி அம்மனின் வைர கிரீடமும் எல்லையற்ற மகிமையைக் கொண்டுள்ள ஒன்று.

இந்தியாவிற்குச் சொந்தமான மஹிமை வாய்ந்த கோஹினூர் வைரம் இன்று இங்கிலாந்தில் உள்ளது.

இதன் கதையே தனி. ஒரு வைரம் என்னென்ன செய்யும் என்பதற்கு கோஹினூரின் வரலாறே ஒரு சிறந்த சான்று.

கோஹினூர் என்றால் பாரசீக மொழியில் ஒளி மலை என்று பொருள்.

இது எவ்வளவு பழமையானது என்பது யாருக்கும் தெரியாது.

இதன் பழைய காலப் பெயர் ஸ்மயந்தக மணி.சம்ஸ்கிருத நூல்கள் பலவற்றிலும் இதன் புகழ் மற்றும் அருமை பெருமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பகவான் கிருஷ்ணர் உள்ளிட்டோரால் இந்த மணி மதிக்கப்பட்டது என்பது பரம்பரையாக வழங்கி வரும் ஐதீகம்.

   அத்துடன் இந்த கோஹினூருடன் கூடவே ஒரு சாபமும் உண்டு என்று நம்பப்படுகிறது.

   ஆண்களிடம் இது இருந்தால் அது அவர்களுக்கு ஆபத்தையே தரும். பெண்கள் இதை அணியலாம், அவர்களுக்கு இது பெருமை தரும். இது தான் சாபம்.

  இதன் பழைய கால எடை 793 கிராம். இன்றோ வெட்டப்பட்டு வெட்டப்பட்டு சுமார் 106 கிராமாகச் சுருங்கி விட்டது.

   காகதீய வம்சம் இந்தியாவில் ஆட்சி புரிந்த போது ஆந்திர பிரதேசத்தில் கோல்கொண்டா பிரதேசத்தில் இது மீண்டும் கிடைத்ததாக ஒரு வரலாறும் உண்டு.

    முகலாய அரசரான ஷாஜஹான் 1628ஆம் ஆண்டு தனது சிம்மாசனத்தில் வைரங்களைப் பதித்தார். இதைச் செய்ய சுமார் ஏழு ஆண்டுகள் பிடித்தது.

இதன் விலையோ தாஜ்மஹாலுக்கு ஆன செலவைப் போல நான்கு மடங்கு அதிகம்! தாஜ்மஹால் கட்டப்பட்டு வந்த அதே காலகட்டத்தில் தான் இந்த சிம்மாசனமும் உருவாகிக் கொண்டிருந்தது. இந்தச் செய்தியை அரசவை குறிப்புகளை எழுதி வந்த அஹ்மத் ஷா எழுதி வைத்துள்ளார்.

 கோஹினூர் வைரம் பற்றி அஹ்மத் ஷா எழுதி வைத்த குறிப்பு தான் முதன் முதலாக ஆதார பூர்வமாக எழுதப்பட்ட குறிப்பாகும். 

அதில் அவர் கூறியிருப்பது :- சிம்மாசனத்தின் வெளிப்புற குடை, எனாமல் பூச்சில் ரத்தினங்கள் பதிப்பிக்கப்பட்டதாகவும் உட்புறத்தில் மாணிக்கக் கற்கள் மற்றும் செம்மணிக்கல் (கார்னெட்) மற்றும் இதர ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும் இருந்தது. இதை மரகதத் தூண்கள் தாங்கி இருந்தன.

ஒவ்வொரு தூணின் மேலும் நெருக்கமாக இழைக்கப்பட்ட ரத்தினக் கற்களால் ஆன இரண்டு மயில்கள் இருந்தன. இப்படி அமைக்கப்பட்ட ஒவ்வொரு இரண்டு மயில்களுக்கு இடையிலும் மாணிக்கம், வைரம், மரகதம். முத்துக்கள் ஆகியவற்றினால் ஆன மரம் ஒன்று இருந்தது.

இந்த அழகிய மயிலாசனத்தில் அபார மதிப்புடைய இரண்டு ரத்தினக் கற்கள் இருந்தன. ஒன்று,தைமூர் மாணிக்கக் கல் – முகலாயர்களால் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று, ஏனெனில் அவர்கள் வண்ணம் சார்ந்த கற்களைப் பெரிதும் விரும்பினர் – இன்னொன்று கோஹினூர் வைரம்.

இந்த கோஹினூர் வைரம் சிம்மாசனத்தில் உச்சியில  ரத்தினக்கற்களால் ஆன மயிலின் தலையில்  பதிக்கப்பட்டிருந்தது.

  இப்படி ஒய்யாரமாக கம்பீரமாகப் பதிக்கப்பட்டிருந்த கோஹினூர் வைரம் உலகளாவிய அளவில் அனைவரது வியப்பையும் (இதர மன்னர்களின் பொறாமையையும்) சம்பாதித்தது.

இந்த மயில் சிம்மாசனம் செய்யப்பட்டு ஒரு நூற்றாண்டுக் காலம் வரை முகலாய வமிசத்தின் தலைமையை அது இந்தியாவிலும் அதற்கப்பால் உலகெங்கிலும் பறை சாற்றிக் கொண்டிருந்தது.

‘ஆசியாவே செல்வக் களஞ்சியம்; அதன் தலைமையகம் டில்லி’ என்று அனைவரும் மனமார ஒப்புக்கொண்டு புகழ்ந்தனர்.

ஆனால் அபரிமிதமான இந்தச் செல்வமே அனைவரின் கண்ணையும் உறுத்தியது. பார்த்தான், பெர்சியாவைச் சேர்ந்த நாதிர் ஷா.

இந்தச் செல்வத்தைக் கவர, அவன் 1739ஆம் ஆண்டு டில்லியின் மீது படையெடுத்தான். பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.

நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வம் எவ்வளவு? அதைச் சுமந்து செல்ல மட்டும் 700 யானைகள். 4000 ஒட்டகங்கள், 12000 குதிரைகள் தேவையாய் இருந்தன. அதாவது இந்த மிருகங்கள் இழுப்பதற்குத் தேவைப்பட்டது; சுமப்பதற்கு அல்ல! அப்படியானல் இழுத்துச் செல்லப்பட்ட வண்டிகளுக்குள் இந்தியச் செல்வம் எவ்வளவு இருந்திருக்கும்!

இப்படிப்பட்ட கொள்ளையில் நடுநாயகமாக அமைந்தது ஷாஜஹானின் மயிலாசனம். அதில் ஒய்யாரமாக இருந்தது கோஹினூர் வைரம்.

நாதிர்ஷா, தான் கொள்ளையடித்ததில் தைமூர் ரூபியையும் கோஹினூர் வைரத்தையும் மயிலாசனத்திலிருந்து எடுத்துக் கொண்டான் – அவற்றைத் தன் கை கங்கணத்தில் அணிவதற்காக!

இந்தியாவை விட்டு இப்படியாகக் கொள்ளையடிக்கப்பட்ட்ட கோஹினூர் வைரம் சொந்த நாட்டை விட்டு ‘கொள்ளை யாத்திரை’ போக ஆரம்பித்தது.

இதை எப்படியாவது மீட்க வேண்டும் என்று இந்திய ராஜாக்கள் ஒரு புறம் சபதம் எடுத்தனர். நாதிர் ஷாவிடமிருந்து இதை அபகரிக்க வேண்டும் என்று அண்டை நாடுகளின் அரசர்கள் தங்கள் பங்கிற்குத் தங்கள் ஆசையை வளர்த்தனர்.

ஆப்கனிஸ்தான் என்று பின்னால் அழைக்கப்பட்ட நாட்டில் கோஹினூர் வைரம் சென்றவுடன் ஏராளமான ரத்த ஆறு ஓடியது பல போர்களின் வாயிலாக. ஒவ்வொரு ஆட்சியாளரின் கையிலிருந்தும் இன்னொருவருக்கு இது மாறியது.

இவர்கள் பற்றிய வரலாறு மிகவும் சோகமயமானது. ஒரு மன்னன் தன் சொந்த மகனின் கண்களையே குருடாக்கினான். இன்னொருவனோ பண ஆசைப் பைத்தியத்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொண்டு தங்கத்தை உருக்கித் தன் தலையில் தடவிக் கொண்டு ‘தஙக மொட்டையன்’ ஆனான்.

பல போர்களைப் பார்த்த கோஹினூர் வைரம் கடைசியாக இந்தியாவில் ரஞ்சித் சிங் அரசாண்ட போது அவரால் மீட்கப்பட்டது. 1813இல் கோஹினூர் வைரத்தை மீட்ட ரஞ்சித் சிங் அதை மிகவும் நேசித்தார். ஒருவழியாக இந்தியாவின் கௌரவம் மீட்கப்பட்டதாக அவர் கருதியதை மக்களும் ஆமோதித்தனர்.

1801ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் 1780ஆம் ஆண்டு பிறந்தவர்.

மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமன்னராக விளங்கிய அவர்.1839ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி மறைந்தார்.

மஹாராஜா இறந்த மறு நாள் அவரது மகன் முடி சூட்டப்பட்டார். அவரோ போதை மருந்துக்கு அடிமையானவர்.

ஆறு வருடங்கள் சரியான தலைமை இல்லாமல் பஞ்சாப் அல்லோல கல்லோலப் பட்டது.

வெள்ளைக்காரன் பஞ்சாபின் மீது கண்ணை நன்கு பதித்தான்.நடப்பதை தனக்குச் சாதகமாக எப்படி ஆக்குவது என்பதே ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஒரே நோக்கமாக ஆனது.

  ரஞ்சித் சிங்கை அடுத்து அரியணை ஏறிய மூவரும் கொல்லப்பட்ட சூழ்நிலையில் ரஞ்சித் சிங்கின் இளைய ராணி ஜிண்டானின் குமாரரான துலிப் சிங் பட்டம் சூடினார். அப்போது அவருக்கு வயது 5 தான்.

தொடர்ந்து ஏற்பட்ட போர் ஒன்றில் சீக்கிய ராணுவம் பெருமளவு அழிந்தது.

     அதைத் தொடர்ந்து ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையை அடுத்து பிரிட்டிஷ் பிரதிநிதி அரசுப் பொறுப்பை ஏற்க மகாராஜா துலிப் சிங் (பெயருக்கு) அரசாட்சி செய்தார்.

1848ஆம் ஆண்டு நடந்த இன்னொரு போரில் கவர்னர் ஜெனரலான லார்ட் டல்ஹௌஸி,  மகாராஜாவின் பெரும் பகுதிச் சொத்தை விற்று விட்டார்.

 தனது பட்டங்கள், உரிமைகள், அதிகாரம் அனைத்தையும் படிப்படியாகத் துறக்குமாறு செய்யப்பட்டார் துலிப் சிங். சொத்தெல்லாம் பிரிட்டிஷார் வசம் போக வைக்கப்பட்டது.

அந்த சொத்தில் ஒன்று தான் கோஹினூர் வைரம்!

  வஞ்சக சூழ்ச்சிக்கு இரையான துலிப் சிங் இங்கிலாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது பதினொன்று. பல இன்னல்களுக்கு ஆளான அவர் 1893ஆம் ஆண்டு பாரிஸில் இறந்தார்.

     கோஹினூர் வைரத்தை டல்ஹௌசி பிரபு தன்னுடனேயே தனது இடுப்பு பெல்ட்டில் எப்போதும் வைத்திருந்தார். குளியலறை போகும் போது மட்டும் அதைத் தன் உதவியாளரிடம் கொடுப்பாராம்.

ஈஸ்ட் இந்தியா கம்பெனி கோஹினூர் வைரத்தை மஹாராணி விக்டோரியாவுக்கு அளிக்க முடிவு செய்ய, டல்ஹௌசி அதை இங்கிலாந்திற்கு அனுப்பினார்.

ராணியோ அதைப் பெற்று மனம் மிக மகிழ்ந்தார். அது அவரது மேலாடை அணிகலன்களில் ஒன்றாகச் (Brooch) சேர்ந்தது. 

பின்னர் அதை ராஜ கிரீடத்தில் நடுவில் பதித்தார்.

விக்டோரியா மஹாராணியாரின் கணவரான பிரின்ஸ் ஆல்பர்ட் கோஹினூர் வைரத்தை மீண்டும் அறுத்து பாலிஷ் செய்தார். இப்போது வைரத்திலிருந்து அதிக பிரகாசமான ஒளி பிரதிபலித்து அனைவரையும் மயக்கியது

விக்டோரியாவின் மூத்த புதல்வரான ஏழாம் எட்வர்ட் மன்னரின் ராணியான க்வீன் அலெக்ஸாண்ட்ரியாவின் மகுடத்தில் அது பிரகாசித்தது. பின்னர் விக்டோரியாவின் பேரரான ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியான க்வீன் மேரியின் மகுடத்தில் 1937இல் அது ஒளி வீசியது. க்வீன் மேரி தான் இரண்டாம் எலிஸபத்தின் தாயார். 

2002ஆம் ஆண்டு க்வீன் மதர் இறக்கவே அந்த இறுதிச் சடங்கில் சவப்பெட்டியின் மீது கோஹினூர் வைரம் வைக்கப்பட்டது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்தனர். கோஹினூரை அனைவரும் கடைசியாகப் பார்த்த தருணம் அது தான்!.

1947இல் இந்தியா சுதந்திரம் அடையவே எப்படியேனும் கோஹினூரை இந்தியாவிற்கு மீட்பது குறித்துப் பலரும் ஆலோசித்தனர்.

இந்தியாவிற்கு மட்டுமே உரிமையான இதை, இப்போது பாகிஸ்தான், ஆப்கனிஸ்தானில் தாலிபான் ஆகியவையும் உரிமை கொண்டாடுகின்றன.

      2010இல் இந்தியா வந்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரான் கோஹினூர் இங்கிலாந்தில் தான் இருக்கும் என்றும் ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைப் பொருளைத் திருப்பிக் கொடுக்க இசைந்தால் எல்லாப் பொருள்களையும் இழந்து பிரிட்டிஷ் மியூசியமே காலி ஆகி விடும் என்று கூறினார்.

இருப்பினும் நீதி மன்றத்தில் வாத பிரதிவாதங்கள் அவ்வப்பொழுது நடந்து கொண்டே இருக்கின்றன. 

வரலாற்று ரீதியாக கோஹினூரை ஆராய்ந்து ஆனந்த் மற்றும் டால்ரிம்பிள் ஆகியோர் எழுதிய “கோஹினூர்: தி ஹிஸ்டரி ஆஃப் தி வோர்ல்ட் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட் (Koh-i-noor: The History of the World’s Most Infamous Diamond by Anand and Dalrymple) என்ற நூல் கோஹினூர் வைரத்தின் சரித்திரத்தைத் தந்துள்ளது.

ஒரு வைரத்தின் வரலாறே அதன் சாபத்தின் வாயிலாக இப்படி பல சாம்ராஜ்யங்களை ஆட்டி வைத்து, பல மன்னர்களுக்குத் துன்பங்களைத் தந்ததையும் பெண்மணிகளுக்குப் பெருமையைத் தந்ததையும் பார்க்கின்ற போது வைரத்தின் மகிமை நமக்கு நன்கு புலப்படுகிறது அல்லவா?

நமக்கென ஒரு வைரத்தைத் தேர்வு செய்வதில் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்த உண்மை வரலாறு ஒரு சான்று.

வைரம் பற்றிய இன்னும் சில உண்மைகளை அடுத்துக் காண்போம்.

***

வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! (Post No.7090)

Research Article written by London swaminathan
swami_48@yahoo.com

Date: 13 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 10-36 am
Post No. 7090

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

BIG HINDU FESTIVAL IN VIETNAM (Post No.7089)

Research Article written by London swaminathan
swami_48@yahoo.com

Date: 12 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 19-20
Post No. 7089

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

கீதை: மனித குலத்திற்கான அற நூல்: பைபிள் ஆஃப் ஹ்யூமானிடி! (Post No.7088)

Written  by S Nagarajan
swami_48@yahoo.com

Date: 12 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 13-31
Post No. 7088

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.