சிகரத்தில் ஏறும் இயற்கை ஆர்வலர்களின் வாகனம்! (Post No.6554)

cycles in Bangalore

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 16 June 2019


British Summer Time uploaded in London – 7-23 am

Post No. 6554

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

கோகுலம் கதிர் ஜூன் 2019 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

சிகரத்தில் ஏறும் இயற்கை ஆர்வலர்களின் வாகனம்!

ச.நாகராஜன்

அதிசயம் ஆனால் உண்மை!

ஏழைகளின் வாகனம் எனப் போற்றப்படும் சைக்கிள் அதன் பெருமையை நிலை நாட்டுவதோடு அனைத்து நாடுகளின் பேராதரவையும் அதிகமாகப் பெற ஆரம்பித்து விட்டது.

காரணங்கள் பல.

மக்கள் இயற்கையை நேசிக்க ஆரம்பித்து பூமி வெப்பமயமாதலை நிறுத்த பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். வளி மண்டலத்தை நச்சு மயமாக்கும் வாகனப் புகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி சைக்கிள் தான் என்பது ஒரு காரணம். உடல் நலத்தைப் பேணிக் காக்க உதவும் உடல் பயிற்சிக்கு உறுதுணையாக இருப்பதும் சைக்கிளே என்பது இன்னொரு காரணம்.

இன்றைய வேக மயமான வாழ்க்கையில்  தேவைப்படும் பல நலன்களைத் தருவதும் சைக்கிளே.

செலவின்றி அனைவரின் பட்ஜெட்டுக்கும் உகந்ததாக அமைவதும் சைக்கிளே.

1817ஆம் ஆண்டு ஜெர்மனியில் முதன் முதலாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது.

ஆனால் அதன் இன்றைய வடிவத்தைத் தந்தவர் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் ஸ்டார்லி (James Starley) என்பவரே.

அவர் இங்கிலாந்தில் வெஸ்ட் சசெக்ஸில் உள்ள அல்போர்ன் என்ற இடத்தில் 1831ஆம் ஆண்டு பிறந்தார். இயற்கையிலேயே புதிய வடிவமைப்பில் ஆர்வம் கொண்டிருந்த அவர் தையல் மெஷினைத் தயார் செய்தார்.

ஒரு நாள் தனது பையனுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவர் தனது மகனுக்கு சுலபமாக ஓட்டும்படி தனது சைக்கிள் இல்லை என்பது புரிந்தது. அந்தக் காலத்திய சைக்கிளின் முன் சக்கரம் பெரிதாகவும் பின் சக்கரம் மிகச் சிறிதாகவும் இருக்கும். காரணம் அப்போது தான் வண்டியை வேகத்துடன் ஓட்ட முடியும் என்பது தான். அதில் ஏறி உட்காருவதும் எளிதல்ல; நீண்ட ஸ்கர்ட் உடை அணிந்திருந்த பெண்களால் அதில் ஏறி அமரவே முடியாது; ஆகவே பெண்கள் சைக்கிளை உபயோகிக்க முடியாமல் இருந்தது.

ஆனால் வேகத்தைக் கொள்வதோடு, எளிதில் ஏறி அமர்ந்து, சுலபமாக அனைவரும் ஓட்டும் வண்ணம் உள்ள சைக்கிளை ஸ்போக்குகளுடனும் கியருடனும் (Spokes and gear) அவர் அமைக்க எண்ணினார். அதைச் செய்தும் பார்த்தார். வெற்றி கிடைத்தது. உடனே அதற்கு பேடண்டையும்  (காப்புரிமை) எடுத்தார்.

பின்னர் இன்னும் சில திருத்தங்களுடன் அது வடிவமைப்பைப் பெற அது இன்றளவும் தொடர்ந்து உலக மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது.

2019 ஜனவரியில் 8 முதல் 11ஆம் தேதி வரை லாஸ்வேகாஸில் நடந்து முடிந்த,  உலகில் இனி வரும் மாற்றத்தைச் சுட்டிக் காட்டும் கண்காட்சியில், பறக்கும் காரை பிரபல நிறுவனமான ஊபர் அறிமுகப்படுத்தியுள்ளது. 2020 முதல் அனைத்து உலக நகரங்களிலும் இனி கார்கள் பறக்கும்!

கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோ நகரிலோ இன்று   டிரைவர் இல்லாமல் தானே இயங்கும் தனது காரை பிரபல் கூகிள் நிறுவனம் பல மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது.

ஆனால் அப்படிப்பட்ட சான்பிரான்ஸிஸ்கோ நகரிலேயே வேகமாகச் செல்லும் கார்களுக்கான பிரதான சாலைகளில் ஒரத்தில் சைக்கிளுக்கான தனிப் பாதைப் பிரிவு உண்டு. அதில் ஏராளமானோர் சைக்கிளை ஓட்டிச் செல்வதை இன்றும் பார்க்கலாம். அத்துடன் மட்டுமல்ல, வீட்டிலிருந்து பஸ் ஸ்டாப்பிற்கு சைக்கிளில் செல்வோர் பஸ்ஸின் முன் புறம் இதற்கென இருக்கும் இடத்தில் சைக்கிளை மாட்டி விட்டுக் கொண்டு செல்வர்.

ஆக பறக்கும் கார் யுகத்திலும் தன் செல்வாக்கை இழக்காமல் சைக்கிள் இருக்கிறது.

உலகின் இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளைப் பெரிதும் நேசிக்கின்றனர்; அதிகம் அதிகமாகப் பயன்படுத்த முன் வருகின்றனர்!

ஏனெனில் பூமியை வெப்பமயமாக்கும் காரின் நச்சுப் புகை சைக்கிளில் கிடையாது.

ஒரு கார் தனது ஆயுள் காலத்தில் வெளிப்படுத்தும் நச்சுப் புகை 1.3 பில்லியன் அதாவது 130 கோடி கியூபிக் கஜம் (1.3 billion cubic yards of pollutants) அளவு மாசுப் பொருளை வளி மண்டலத்தில் விடுகிறது. உலகெங்கும் உள்ள பல கோடிக் கார்கள் விடும் நச்சுப் புகையை எளிதில் நாமே மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்தித் திகைத்து பிரமிக்க முடியும்! அத்துடன் ஒரு காரை பெயிண்ட் அடிப்பதில் மட்டும்  400 லட்சம் பவுண்ட் மாசுப் பொருள்கள்  காற்றில் கலக்கிறது. இப்படிப் பல கோடி கார்களின் வண்ணத்தால் ஏற்படும் மாசை நினைத்துப் பார்த்தால் பகீரென்று மனம் நோகும்.

Desert Cycling

இது ஒரு புறமிருக்க கார் போன்ற வாகனங்களால் ஏற்படும் செலவைக் கணக்கிட்டு ஒப்பிட்டுப் பார்த்தால், ஒரு ஆண்டுக்கு காருக்கு ஆகும் மலைக்க வைக்கும் தொகையான சுமார் 4,20,000 ரூபாயிலிருந்து சைக்கிளுக்கு ஆகும் செலவு வெறும் 10, 500 ரூபாய் தான் என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்! அமெரிக்க அய்வு தரும் தகவல் இது!

அனைவருக்குமான வாகனம் சைக்கிளே என்று ஆகிறது.

சைக்கிளைப் பராமரிப்பதில் செலவே இல்லை; காற்று அடிப்பதும் சில சில்லறை வேலைகளும் நமது பட்ஜெட்டுக்குள் அடங்கக் கூடியது. ஆனால் காருக்கோ ஒரு கிலோ மீட்டருக்கு சுமார் 700 ரூபாய் ஆகிறது (முதலீடு, எரிபொருள், பராமரிப்புச் செலவு உள்ளிட்ட அனைத்தையும் கணக்கில் எடுத்தால்)

நடந்து செல்வதைப் போல சைக்கிளும் கூடச் செலவில்லாதது; அல்லது மிகக் குறைந்த செலவு உடையது.

உடல் நலம் பேண இன்று அனைத்து மருத்துவர்களும் சைக்கிள் ஓட்டுமாறு பரிந்துரைக்கின்றனர்.

ஏன்?

அது உடல் பருமனை வெகுவாகக் குறைத்து உடலைச் சரியான எடையுடன் இருக்கச் செய்கிறது.

உடலின் பாலன்ஸை – சமச்சீர் தன்மையை நிலை நிறுத்தி உடலில் மிடுக்கான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இரத்த அழுத்தத்தைக் குறைத்து சரியான அளவில் அதை நிலை நிறுத்துகிறது.

உடல் சக்தியை அதிகரிக்கிறது.

உடலில் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்துவதோடு தசைகளை வலுவுள்ளதாக ஆக்குகிறது.

மன அழுத்தத்தைக் குறைத்து சீரான மனநிலையை உறுதி செய்கிறது. மனம் இலேசாக ஆவதால் படைப்பாற்றல் திறன் கூடுகிறது!

தினமும் 30 நிமிடம் சைக்கிளை ஓட்டுவது சிறந்த உடல் பயிற்சியாக அமைகிறது என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இயற்கையின் உற்ற துணைவனாக இருக்கும் சைக்கிள் பசுமை வாயுக்கள் எனப்படும் நச்சு வாயுவை வெளியிடுவதில்லை.

கார்பன் டை ஆக்ஸைடால் வளி மண்டலத்தில் ஏற்படும் மாசை அறவே நீக்குகிறது சைக்கிள்.

வீதியில் கார், லாரிகளால் ஏற்படும் இரைச்சல் சைக்கிளில் இல்லை. அதாவது சைக்கிள் ஒலி மாசை அறவே இல்லாமல் செய்கிறது.

மேலை நாடுகளிலும் ஏன் இந்தியாவிலும் கூட இன்று வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் ப்ளேஸ் (வாகனம் நிறுத்துமிடம்) ஒரு பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.

 மேலை நாடுகளில் இதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் ஒரு மணிக்கு சுமார் 350 ரூபாய்கள்! சில இடங்களில் இது 900 ரூபாய்! (இந்தியாவில் 5 முதல் 50 ரூபாய் தான் என்று ஆறுதல் கொள்ளலாம்!)

சைக்கிள் நிறுத்துவதில் பிரச்சினையே இல்லை. குறைந்த இடம், நிறைந்த மகிழ்ச்சி.

உலகெங்கும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் வெவ்வேறு விழாக்களை நடத்தி மகிழ்கின்றனர். சமீபத்தில் 2019ஆம் ஆண்டில் நமது 70வது குடியரசு தினத்தை ஒட்டி கர்நாடகாவில் ஹூப்ளியில் ஹூப்ளி பை-சைக்கிள் சங்கம் ஒரு பெரிய சைக்கிள் விழாவை நடத்தியது. 1235 சைக்கிள் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஒரே வரிசையில் சைக்கிளை அணி வகுக்க அது சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நீண்டு அருகிலிருந்த கிராமம் வரை சென்றது.இவர்கள் அனைவரும் இந்தியாவின் பல இடங்களிலிருந்து வந்து இந்த அணியில் கலந்து கொண்டனர் என்பது ஒரு சுவையான செய்தி.

கின்னஸ் ரிகார்டை வழங்கும் நிபுணர்கள் இதைப் பார்த்து மகிழ, புதிய கின்னஸ் ரிகார்டு உருவாகியது.

இதற்கு முன்னர் பங்களா தேஷில் 2016ஆம் ஆண்டு 1186 சைக்கிள்கள் இதே போல அணிவகுத்து ஏற்படுத்தி இருந்த கின்னஸ் ரிகார்டை நமது இந்திய சைக்கிள் வீரர்கள் முறியடித்து புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

சைக்கிளில் ஸ்பீடாக ஓட்ட முடியாதே என்று ஒரு குறையை யாரும் முன் வைக்க முடியாது.

டெனிஸ் ம்யூலர் கொரினெக் (Denise Mueller Korenek) என்பவர் 16-9-2018 அன்று ஒரு வேக ரிகார்டை ஏற்படுத்தி உள்ளார். மலைக்க வைக்கும் அவரது சைக்கிள் ஓட்டத்தின் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா?

மணிக்கு 296.009 கிலோமீட்டர். அதாவது மணிக்கு 183.93 மைல்.

என்ன மலைப்பு வருகிறதா?

இயற்கை ஆர்வலர்கள் சைக்கிளை சிகரத்தில் ஏற்றி விட்டார்கள் இப்படி!

அட,சைக்கிளை எடுக்க கிளம்பீட்டிங்களா?

நல்லது – நமக்கும் நல்லது, நமது வாரிசுகளுக்கும் நல்லது, அவர்கள் வாழ இருக்கும் எதிர்கால உலகிற்கும் நல்லது.

****

ஆரம்ப கால சைக்கிளின் படம் இதோ:-

Cycling in Hubli

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி 15619 (Post No.6553)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 18-54

Post No. 6553

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

குறுக்கே

1. —  6  எழுத்துக்கள் – பிள்ளையாருக்குப் பிடித்தமாலை

4. – (3) – பொன்னி நதி

5.– (5) – நிபுணன்

6. –(3) – சித்திரம் எழுதுவோரின் எழுதுகோல்

7.– (2) – மலை

8. / இடது புறம் செல்க – (3) – போதைப் பொருட்கள்

9. – (3) – பெரியோரின் இறுதி; அவர் சடலத்தின் மீதுள்ள கட்டிடமும் கூட.

9..– (3) – கிரிக்கெட் காரர்கள் இந்த எண்ணிக்கை அடித்தால் தலைப்புச் செய்திதான்

11.– (5) – யானையைக் கவனித்துக் கொள்பவன்.

கீழே

1.– 5 எழுத்துக்கள் – ஒரு இசைக்கருவி; ஏளனம் செய்தாலும் இதைப் பயன்படுத்துவர்

2.– (6)- காஷ்மீரில் உள்ள அபூர்வ மிருகம்; வாசனைப் பொருளைத் தரும்

3. (2) – வேதத்தின் கிளை; பிரிவு

3. / மேலே செல்க (2) – ரோடு; பாதை

8.– (4)- அழகு; பெண்களின் பெயர்

10. / மேலே செல்க – (3)- சக்கரம்

—Subham–


SWAMI’S CROSS WORD 15619 (Post No.6552)

Written by London Swaminathan


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 16-09

Post No. 6552

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

ACROSS

1. – (5 letters) -Thirst

4.  –(7)  Snake ;Shiva is called ………..Bhusana

5. –  (7)Ignorance, illusion

7. – (5) paste in Ayur Veda; also name of a town in Haryana

7.– (7) Krishna beheaded him when he insulted Krishn100th time

8. –(6) king of Matsya Desa; Pandavas spent incognito period in his court in disguise

DOWN

1. – (5) donor; one who has sacrificed;  a martyr

2. –(6)  peace

3– (7) Gujaratis do this during Diwali by piling foods and sweets like a hill in the temple

6. A –(5)  particular part of a plough in Sanskrit

–SUBHAM —

சித்தன் வாழ்வைப் புகழ்ந்து பாடிய ஔவை! (Post No.6551)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 9–28 am

Post No. 6551

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

சிலைத் திருடனைக் கட்டிக்கொடுத்த கிளி! (Post No.6550)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 9-16 am

Post No. 6550

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

MANTRA TO REMOVE EYE DISEASES! (Post No.6549)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 15 June 2019


British Summer Time uploaded in London – 7-25 am

Post No. 6549

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

—subham—

TAMIL CROSS WORD 14619 (Post No.6548)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 June 2019


British Summer Time uploaded in London – 20-55

Post No. 6548

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

குறுக்கே

1.6 எழுத்துக்கள்- இந்துக்களின் புனித நூல்; 700 ஸ்லோகம் உடையது

5. (3) – இருள்

6. (3)- சங்கரன் கோவில் தேவி

8. (3) – மலை உச்சி, பொதியம், இமயம்

9. (7) – தாய்க்கு வணக்கம்

11. (5) – திருவண்ணாமலை, கோவர்த்தன மலையில் பக்தர்கள் செய்வது

12. / (5) வலமிருந்து இடம் செல்க – சங்க காலத்திலும் பின்னரும் இதே பெயரில் புலவர். அவர் பெயரில் இலக்கண நூலும் உளது

கீழே

1.– (5)- இரண்டு பேருடன் தூக்கில் தொங்கவிடப்பட்ட சுதந்திர வீரர்

2. (8)- பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய கதாபாத்திரம். எழுத்தில் துவங்கும் பெயர்.

3. (7) – ஜெயதேவர் எழுதிய அஷ்டபதி நூல்

4. (5) – ஆயுதம், அம்பு

7. / – (4) கீழிருந்து மேல் செல்க-  என்னுடையது என்னும் கர்வம்

10.—(3) – தண்டவாளத்தில் ஓடும்

Mighty Indian and Persian Armies! (Post No.6547)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 June 2019
British Summer Time uploaded in London –  18–3
7

Post No. 6547

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com

Here is the army of Persian King Suvarchas (Sanskrit name of Xerxes). He represented the whole country where as Mauryas, Pandyas aand othe dynasties ruled India at the same time. So we might have had bigger army (all put together):-

–subham–

ஆளுக்கு ஒரு மயிர் புடுங்கினால் அடியேன் தலை மொட்டை! (Post No.6546)

Written by LONDON SWAMINATHAN


swami_48@yahoo.com


Date: 14 June 2019


British Summer Time uploaded in London –  7- 24 am

Post No. 6546

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3 (Post No.6545)

Painting by Stephen Wiltshire

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 14 June 2019


British Summer Time uploaded in London –  6- 35 am

Post No. 6545

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co

.﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽﷽பாக்யா 1-6-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்துள்ள ஒன்பதாம் ஆண்டு ஒன்பதாம் கட்டுரை – அத்தியாயம் 425

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3

ச.நாகராஜன்

உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 3

ச.நாகராஜன்

அபூர்வ ஓவியர் – ஸ்டீபன் வில்ட்ஷைர் (Stphen Wiltshire)

ஒரே ஒரு முறை பார்த்தால் போதும் எந்த இயற்கை காட்சியாக இருந்தாலும் சரி, நகர்ப்புறத் தோற்றமானாலும் சரி, கட்டிடமானாலும் சரி அப்படியே துல்லியமாக வரைந்து விடும் ஆற்றல் கொண்ட அபூர்வ கலைஞர் ஸ்டீபன் வில்ட்ஷைர். லண்டனில் 1974, ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்த ஸ்டீபன் குழந்தையாக இருந்த போது ஊமை போல இருந்தார். ஆனால் எதையும் பார்த்தவுடன் வரையும் தன் அபூர்வ ஆற்றலை மூன்று வயதிலேயே வெளிப்படுத்தி விட்டார்.ஐந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள க்வீன்ஸ்மில் பள்ளிக்கு அனுப்பினர். அங்கு அவரது அபூர்வ ஓவியத் திறமை கண்டறியப்பட்டது. பள்ளியில் அவரிடம் அவரது ஓவியம் பற்றி அனைவரையும் கேட்க வைக்கவே இறுதியில் பேப்பர் என்ற வார்த்தையை முதன் முதலாகப் பேசினார். ஒன்பது வயதில் பேச ஆரம்பித்தார். உலகெங்கும் அவர் பெயர் பிரபலமானது. அமெரிக்க கார்களைப் பற்றிய என்சைக்ளோபீடியா என அவர் புகழப் படுகிறார். உலகெங்கும் அவரது ஓவியங்களைப் பார்க்காதவர்கள் இல்லை; பாராட்டாதவர்கள் இல்லை!

இசை மேதை – டெரிக் பரவிசினி (Derek Paravicini)

ஹ்யூமன் ஆர்கெஸ்ட்ரா என புகழப்படுபவர் டெரிக் பரவிசினி.

ஒரே ஒரு முறை ஒரு இசையைக் கேட்டால் போதும் அதை அப்படியே இசைப்பார் அவர். 1979, ஜூலை 26ஆம் தேதி பிறந்த பரவிசினி லண்டனில் வசித்து வருகிறார். பார்வையில்லாத இவர் பிரபல எழுத்தாளரான சாமர்செட் மாமின் கொள்ளுப் பேரன். இவரது அதிசயத் திறமை இளம் வயதிலேயே வெளிப்பட்டது. ஒன்பதாம் வயதில் லண்டனில் பொது அரங்கம் ஒன்றில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தினார். 2010, ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று ஹிஸ்டரி சேனலில் உலகப் புகழ் பெற்ற ஸ்டான் லீயின் சூப்பர் ஹ்யூமன்ஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பல சோதனைகளையும் எதிர்கொண்டு தன் திறமையைக் காண்பித்து அனைவரையும் அயரச் செய்தார். பி.பி.சியும் இவரது நிகழ்ச்சியை ஒலிபரப்பியது. இவரது அபாரத் திறமை இன்றும் தொடர்கிறது.

வேகமாகப் படிக்கும் பெண்மணி – ஆன்னி டோன்ஸ் (Anne Tones)

உலகின் அதி வேகமாகப் படிக்கும் பெண்மணி என்ற புகழைப் பெற்றவர் ஆன்னி டோன்ஸ்! பிரபல நாவல் தொடரான ஹாரி பாட்டர் தொடரில் ஏழாவது நாவல் 608 பக்கம் உடையது. அதை அவர் 47 நிமிடம் ஒரு வினாடியில் படித்து முடித்தார். இப்படியும் படிக்க முடியுமா என்ற வியப்பை உலகெங்கும் ஏற்பத்துபவர் இந்த அதிசயப் பெண்மணி.

 மாரத்தான் மன்னர் – டீன் கர்னாஸஸ் (Dean Karnazes)

லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் உள்ள இங்கிள்வுட் என்ற இடத்தில் 1962, ஆகஸ்ட் 23ஆம் தேதி பிறந்த டீன் கர்னாஸஸ் உலகின் அதிவேக ஓட்டக்காரர். இவரை ‘அல்ட்ரா மாரதான் மேன்’ என்று அழைக்கின்றனர். 50 மாரத்தான்களை 50 நாட்களில் அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் இவர் 2006இல் ஓடிக் காட்டவே உலகினர் பிரமித்துப் போனார்கள். இவரது திறமை எப்படிப்பட்டது தெரியுமா? 2005இல் 350 மைல்களை 80 மணி நேரம் 44 நிமிடங்களில் தூங்காமல் ஓடிக் காட்டினார்.

மூச்சைப் பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் – ஸ்டிக் செவெரின்ஸென் (Stig Severinsen)

டென்மார்க்கைச் சேர்ந்த ஸ்டிக் செவெரின்ஸென் 1973, மார்ச், 8ஆம் தேதி பிறந்தவர். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்டில் நான்கு முறை மூச்சைப் பிடித்து நீந்தும் ஆற்றல் உடையவராக அறிவிக்கப்பட்டவர். 22 நிமிடங்கள் மூச்சைப் பிடித்து இவர் தனது ஆற்றலைக் காட்டிய போது உலகமே வியந்தது.நல்ல ஆரோக்கியமான ஒருவர் இரு நிமிடங்களுக்கு மேல் மூச்சைப் பிடித்து நிறுத்த முடியாது. ஸ்டான் லீயின் சூப்பர்ஹ்யூமன் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது இவரைச் சோதித்துப் பார்த்தனர். அப்போது அவரது இந்த அபூர்வ ஆற்றலுக்குக் காரணம் அவரது இரத்தச் சிவப்பு அணுக்களை அவர் தனது மண்ணீரலில் சேமித்து வைத்திருப்பது தான் என்பதைக் கண்டறிந்தனர். இதே போல டால்பினும் செய்வது குறிப்பிடத் தகுந்த ஒரு விஷயம்!

பல் மொழி வல்லுநர் – ஹரால்ட் வில்லியம்ஸ் (Harold Williams) 

 இவர் (தோற்றம் 6-4-1876 மறைவு 18-11-1928) நியூஜிலாந்தைச் சேர்ந்தவர். ஒரு மொழியை நன்கு கற்பதிலேயே அனைவரும் படும் கஷ்டம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இவரோ 58 மொழிகளை நன்கு அறிந்திருந்தார்.  சிறந்த பத்திரிகையாளர்; தி டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியராகவும் பணியாற்றினார். சீன மொழி, ஜப்பானிய மொழி, எகிப்திய மொழி உள்ளிட்ட பல மொழிகளில் இவர் கொண்டிருந்த அறிவு திகைப்படையச் செய்யும் ஒன்று.

ரப்பர் பாய் – டேனியல் ப்ரௌனிங் ஸ்மித் (Daniel Browning Smith)

தன் உடலை ரப்பர் பந்து போல வளைத்து நெளித்து உலகின் மிகவும் நெகிழ்வான நபர் தான் என்பதை நிரூபிப்பவர் டேனியல் ப்ரௌனிங் ஸ்மித்! இவரது செல்லப் பெயர் ரப்பர் பாய்! 1979 மே மாதம் 8ஆம் தேதி பிறந்த இவர், தனது உடலை  முன்னும் பின்னுமாக வளைப்பார். கை கால்களை 180 டிகிரி சுழற்றிக் காட்டுவார். கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் இவரை வாழ்ந்து கொண்டிருக்கும் உலக மக்களில் உலகின் அதி நெகிழ்வான மனிதன் (most flexible man alive) என்று அறிவித்திருக்கிறது; ஏழு கின்னஸ் ரிகார்டுகளை வழங்கி இருக்கிறது.இவர் ஒரு நடிகர். காமெடியன்.விளையாட்டு வீரர். தொலைக்காட்சியில் பேட்டி எடுப்பவர். ஸ்டண்ட்மேன்.

இன்னும் சிலரை அடுத்துப் பார்ப்போம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

உலகம் கண்ட விசித்திரமான விஞ்ஞானிகளில் ஒருவர் ஜோஸா டெல்காடோ. (Josa Delgado). யேல் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாரக்ப் பணியாற்றினாலும் கூட அவர் ஆர்வம் கொண்டிருந்தது மனம் பற்றிய ஆராய்ச்சியில் தான். ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் டெல்காடோ உயர் விலங்குகளின் மூளையில் எலக்ட்ரோடுகளைச் செருகிப் பதித்தார். தன் கையில் ஒரு ரிமோட் கண்ட் ரோலை வைத்துக் கொண்டு அந்த விலங்குகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து தான் சொன்னபடி அவற்றை ஆட்டுவித்தார். கஷ்டமான இயக்கங்களை அவை செய்யுமாறு கட்டளையிட்டார். ஒரு காளையின் மூளையில் எலக்ட்ரோடைப் பதித்து அதை ஒரு ரிங்கில் தன்னுடன் சண்டை போடுமாறு செய்து அது தன்னை முட்ட வரும் போது டிரான்ஸ்மிட்டரை உபயோகித்து அது தன்னை முட்ட வருவதை நிறுத்தினார்.

25 மனிதர்களிடமும் இப்படி எலக்ட்ரோடுகளைப் பதித்தார். எப்படியேனும் அவர்களின் மனங்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆட்டிப் படைக்க வேண்டும் என்று நினைத்தார். வலுச்சண்டைக்குப் போவதில் தான் அவரது  ரிமோட் கண்ட்ரோல் வேலை செய்தது. ஒரு முறை அவர் இப்படிச் சொன்னார் : “நாம் மின்னணு ஆற்றலால் மூளையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் படைகளும் போர் தளபதிகளும் மூளையில் செய்யப்படும் மின்சக்தி தூண்டுதலால் கட்டுப்படுத்தப்படுவர்.”

மனக் கட்டுப்பாடு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது நோக்கம் நிறைவேறுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

***

Stephen Wiltshire