Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-63; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,907)

Written by London Swaminathan

Post No. 15,907

Date uploaded in London –23 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 63

கோகுலம் திருவாய்ப்பாடி

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தலம்  ;இங்குதான்   கண்ணன் குழந்தைப் பருவத்தில் தனது  விளையாட்டுகள் மூலம் எல்லோரின் அன்பையும் பெற்றார் ; இன்றும் வீடுகளில் சேட்டை செய்யும் சிறுவர்களைக் கண்ணனுக்கு ஒப்பிடுவதைக் காணலாம்.

மதுரா ஜங்ஷனிலிருந்து 3 மைல் தூரமுள்ள யமுனைப் பாலத்தைக் கடந்து அங்கிருந்து 5 மைல் பஸ்ஸில் சென்று இவ்வூரை அடையலாம்.

மூலவர் – நவமோஹன கிருஷ்ணன், நின் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் – ருக்மிணி ஸத்யபாமா பிராட்டியார்கள்.

தீர்த்தம் – யமுனா நதி.

விமானம் – ஹேமகூட விமானம்.

ப்ரத்யக்ஷம் – நந்தகோபர்.

ஆழ்வார்கள் பாடிய கோவில்களோ மூர்த்திகளோ ஒன்றும் இப்போது இல்லை. இப்போது உள்ளவை எல்லாம் பிற்காலத்தவை. கோகுல் என்ற இடத்துக்கு சுமார் முக்கால் மைல் தூரத்தில் “புராணா கோகுல்” (பழைய கோகுலம்) என்று ஓர் ஆலயத்தை ஸ்தாபித்துள்ளனர். கோவில் வாசலிலேயே யமுனை ஓடுகிறது. நந்தகோபர், யஸோதா, பலராமர் விக்ரஹங்களுக்கடியில் குழந்தை கிருஷ்ணன் ஒரு சிறிய மரத்தொட்டிலில் ஸேவை ஸாதிக்கிறார். இவை எல்லாம் மர விக்ரஹங்கள். இந்த இரண்டு கோகுலங்களில் எது உண்மையானது என்று தெரியாது.

மங்களா சாஸனம் –

பெரியாழ்வார் – 14, 16, 132, 145, 231, 235, 237, 239, 263, 281

ஆண்டாள் – 474, 618, 630, 636, 638.

திருமங்கையாழ்வார் – 1021, 1392, 1435, 1993, 1994, 1995, 2673 (28)

மொத்தம் 22 பாசுரங்கள்.

கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் , நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள பல பாசுரங்களில் போற்றப்பட்டுள்ளன. ஆண்டாள் அருளிய திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி மற்றும் நம்மாழ்வார் பாசுரங்கள் கோகுலத்தின் அழகையும் கண்ணனின் லீலைகளையும் விவரிக்கின்றன.

திருப்பாவை (ஆண்டாள்):ஆயர்பாடியில் அவதரித்த கண்ணனின் பெருமைகளையும், கோகுலத்துப் பெண்களின் மார்கழி நோன்பையும் விவரிக்கும் முப்பது பாசுரங்களின் தொகுப்பு இது. “கீசுகீசென்றெங்கும்” எனத் தொடங்கும் பாசுரம், கோகுலத்தில் பறவைகள் எழுப்பும் ஓசையையும், பெண்களின் விடியலையும் அழகாகக் கூறுகிறது.

பெரியாழ்வார் திருமொழி:கண்ணனைத் தன் குழந்தையாக பாவித்து, கோகுலத்தில் அவன் செய்த குறும்புத்தனங்களை (வெண்ணெய் திருடியது, உரலில் கட்டியது, ஆய்ச்சிகளிடம் வம்பு செய்தது) பெரியாழ்வார் மிகச் சுவையாகப் பாடியுள்ளார். “மாணிக்கம் கட்டுண்டாய்” மற்றும் “கண்ணன் பிறந்த அணிமணி அரங்கத்து” போன்ற பாசுரங்கள் ஆயர்பாடியின் சிறப்பைப் போற்றுகின்றன.திருவாய்மொழி (நம்மாழ்வார்):கண்ணனின் மீது அதீத அன்பு கொண்டு, அவனது லீலைகளை வியந்து பல பாசுரங்களை நம்மாழ்வார் அருளியுள்ளார். கோகுலத்தில் கண்ணன் ஆடிய லீலைகள் இப்பாசுரங்களில் சிறப்பிடம் பெறுகின்றன.

திவ்யதேச பாசுரங்கள்

துவாபரயுகத்தில் திருமாலின் ஒரு அவதாரமான கண்ணனின் குழந்தைப்பருவ லீலைகள் நடந்த இடமே கோகுலம். கண்ணன் சின்னஞ்சிறுவனாக இருந்து இந்த ஆயர்பாடியில் செய்த லீலைகள் எல்லாம் எண்ணற்ற நூல்களில் வருணிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் வெண்ணெய் உண்டது, இளங்கன்னிமார்களை ஏய்த்தது, சிற்றில் சிதைத்தது. நந்த கோபாலனாக வளர்ந்தது, மாடு மேய்க்கப் போனது என்றிவ்வாறான பலவித லீலைகளை நடத்திய இந்த கோகுலம் முழுவதையும் ஆழ்வார்கள் தம் பாக்களில் பாடியுள்ளனர்.

132.  

தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 

மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*

தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா*

ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே

145.  

முலை ஏதும் வேண்டேன் என்று ஓடி*  நின்காதிற் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு*

மலையை எடுத்து மகிழ்ந்து கல்-மாரி காத்துப்*  பசுநிரை மேய்த்தாய்*

சிலை ஒன்று இறுத்தாய்! திரிவிக்கிரமா!*  திரு ஆயர்பாடிப் பிரானே!*

தலை நிலாப் போதே உன்காதைப் பெருக்காதே*  விட்டிட்டேன் குற்றமே அன்றே?

231.  

தாய்மார் மோர் விற்கப் போவர்*  தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்*

நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை*  நேர்படவே கொண்டு போதி*

காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து*  கண்டார் கழறத் திரியும்*

ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்*  உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே*

235.  

பற்றுமஞ்சள் பூசிப்*  பாவைமாரொடு பாடியிற்*

சிற்றில் சிதைத்து எங்கும்*  தீமை செய்து திரியாமே*

கற்றுத் தூளியுடை*  வேடர் கானிடைக் கன்றின் பின்*

எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன்?*  எல்லே பாவமே!*

237.  

வண்ணக் கருங்குழல்*  மாதர் வந்து அலர் தூற்றிடப்*

பண்ணிப் பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

கண்ணுக்கு இனியானைக்*  கான் -அதரிடைக் கன்றின்பின்*

எண்ணற்கு அரியானைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

239.  

மிடறு மெழுமெழுத்து ஓட*  வெண்ணெய் விழுங்கிப் போய்ப்*

படிறு பல செய்து*  இப் பாடி எங்கும் திரியாமே*

கடிறு பல திரி*  கான் -அதரிடைக் கன்றின் பின்*

இடற என்பிள்ளையைப் போக்கினேன்*  எல்லே பாவமே!*

263.  

விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே*

கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற-

வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*

பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2) 

281.  

புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து*

அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப*

அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்*

செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.* 

474.  

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*  நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்*

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*

ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்*  கார் மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்*

நாராயணனே நமக்கே பறை தருவான்*  பாரோர் புகழப் படிந்து-ஏலோர் எம்பாவாய் (2)

618.  

நாணி இனி ஓர் கருமம் இல்லை*  நால்அயலாரும் அறிந்தொழிந்தார்*

பாணியாது என்னை மருந்து செய்து*  பண்டு பண்டு ஆக்க உறுதிராகில்*

மாணி உருவாய் உலகு அளந்த*  மாயனைக் காணிற் தலைமறியும்*

ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில்*  ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின்*.  

630.  

ஆரே உலகத்து ஆற்றுவார்*  ஆயர் பாடி கவர்ந்து உண்ணும்*

காரேறு உழக்க உழக்குண்டு*  தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை*

ஆராவமுதம் அனையான் தன்*  அமுத வாயில் ஊறிய*

நீர்தான் கொணர்ந்து புலராமே*  பருக்கி இளைப்பை நீக்கீரே*

636.  

அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை*

வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை*

வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்*

சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2) 

638.  

அனுங்க என்னைப் பிரிவு செய்து*  ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்*

குணுங்கு நாறிக் குட்டேற்றைக்*  கோவர்த்தனனைக் கண்டீரே?*

கணங்களோடு மின் மேகம்*  கலந்தாற் போல வனமாலை*

மினுங்க நின்று விளையாட*  விருந்தாவனத்தே கண்டோமே*.         

1993.  

தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி-

நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*

நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்*

தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.

1994.  

ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்-

தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*

தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்-

ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.

1995.  

அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி-

உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*

உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,*

எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே

2685.  

ஆரால் கடைந்திடப் பட்டது*–அவன் காண்மின்*

ஊரா நிரை மேய்த்து உலகுஎல்லாம் உண்டுஉமிழ்ந்தும்*

ஆராத தன்மையனாய் ஆங்கு ஒருநாள் ஆய்ப்பாடி*

சீரார் கலைஅல்குல் சீரடிச் செந்துவர்வாய்*

வாரார் வனமுலையாள் மத்துஆரப் பற்றிக்கொண்டு*

ஏரார் இடைநோவ எத்தனையோர் போதும்ஆய்*

சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை*

வேரார் நுதல் மடவாள் வேறுஓர் கலத்துஇட்டு*

நாரார் உறிஏற்றி நன்குஅமைய வைத்ததனைப்*

போரார் வேல்கண்மடவாள் போந்தனையும் பொய்உறக்கம்*

ஓராதவன்போல் உறங்கி அறிவுஉற்று*

தாரார் தடம்தோள்கள் உள்அளவும் கைந்நீட்டி*

ஆராத வெண்ணெய் விழுங்கி* — அருகுஇருந்த

கொண்டல் வண்ணனைக் * கோவல னாய்வெண்ணெய்

உண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை, *

அண்டர் கோன் அணி அரங்கன் * என் அமுதினைக்

கண்ட கண்கள் *, மற்றொன்றினைக் * காணாவே. *

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-63; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் , கோகுலம் , திருவாய்ப்பாடி

—subham—

எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி! (Post No.15,906)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,906

Date uploaded in London – 23 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சுபாஷிதச் செல்வம் 

எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி! 

ச. நாகராஜன்

 எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானவை சுபாஷிதங்கள். தனது அரசியல் ஆதாயத்திற்காக எதிரி முகாமிற்குச் செல்பவர்களின் கதியை நாம் இன்று அப்பட்டமாகக் காண்கிறோம், இல்லையா!

இதோ சில சுபாஷிதங்கள்

 பிடிக்காத உண்மைகளைக் கேட்பவர் அரிது!

 சுலபா: புருஷா ராஜன், சததம் ப்ரியவாதின: |

அப்ரியஸ்யாபி பதயஸ்ய, வக்தா ஸ்ரோதா ச துர்லப: ||

ஓ, ராஜனே! எப்போதும் இனிமையாகப் பேசுபவர்களை (மந்திரிகள், ஆலோசகர்கள் உள்ளிட்டவர்கள்)க் காண்பது மிகவும் சுலபம்.  ஆனால் மனதுக்குப் பிடிக்காத சத்யத்தைப் பேசுகின்றவர்களைக் காண்பது கஷ்டம். அது போலவே அவற்றை காது கொடுத்துக் கேட்பவர்களையும் காண்பது கஷ்டமே!

  ஆத்மாவிற்காக தேசத்தையே தியாகம் செய்யலாம்!

 த்யஜேதேகம் குலஸ்யார்தே, க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |

க்ராமம் ஜனபதஸ்யார்தே, ஆத்மார்தே ப்ருதிவீம் த்யஜேத் ||

ஒருவன் தனது குடுபத்திற்காக ஒருவரைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்திற்காக ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு தேசத்திற்காக ஒரு கிராமத்தையே தியாகம் செய்யலாம். ஆத்மாவிற்காக ஒரு தேசத்தையே தியாகம் செய்யலாம்.

புத்திசாலி ஒரு தேசத்தையே அழிக்கும் வல்லமை படைத்தவன்!

 ஏகம் ஹன்யான்ன ஹன்யாத் வா இஷுர்முக்தோ தனுஷ்மதா |

புத்திர்புத்திமதா யுக்தா ஹந்தி ராஷ்ட்ரம் சனாயகம் ||

 ஒரு வில்லாளியின் அம்பானது வில்லிலிருந்து விடுபட்டவுடன் ஒருவரைக் கொல்லலாம் அல்லது கொல்லாமல் போகலாம். மாறாக, ஒரு நல்ல புத்திசாலியின் (ராஜதந்திரியின்) புத்தி, ஒரு பெரும் ராஷ்ட்ரத்தை அதன் தலைவர்களுடன் அழிக்க முடியும்.

 சொந்தக் குழுவை விட்டு எதிரி முகாமிற்குச் செல்பவனின் கதி!

 ய: ஸ்வபக்ஷம் பரித்யஜ்ய, பரபக்ஷம் நிஷேவதே |

ஸ: ஸ்வபக்ஷே க்ஷயம் யாதே, பஸ்சாத் தைரேவ ஹன்யதே ||

 தனது சொந்த குழுவை விட்டு விட்டு எதிரியின் குழுவிற்குச் செல்லும் ஒருவனது  விதி இரண்டு மடங்கு அழிவைத் தரும். முதலில் அவனது குழுவானது வலுவிழந்து தோல்வியை அடையும். பிறகு எதிரிகளால் அவனும் அழிக்கப்படுவான்.

 செல்வந்தனும் தொழிலாளியும்!

 ஶ்ரீமந்த: ஸ்ரமவந்த:  ச நைவ துல்யா: கதாசன |

பாந்தி ரத்னோபலை: ஏகே ஸ்ரமவாரிகணை: பரே ||

 ஒரு செல்வந்தனுடன் ஒரு தொழிலாளியை எப்போதுமே ஒப்பிட முடியாது. செல்வந்தனானவன் ரத்னங்களால் ஜொலிக்கப்படுவான். தொழிலாளியோ வேர்வைத் துளிகளால் ஜொலிக்கப் படுவான்.

**

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-62; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,905)

Written by London Swaminathan

Post No. 15,905

Date uploaded in London –22 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திரு வட மதுரை (மதுரா)

தாயார் : ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்

மூலவர் : கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)

மூலவர் பாலகிருஷ்ணன், நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். தீர்த்தத்தின் பெயர் கோவர்த்தன தீர்த்தம்.

108 வைணவ திவ்ய தேசங்களில், நூறாவது திருத்தலமாக அமையும் இது, டெல்லியிலிருந்து சுமார் 161 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஒருத்தி மகனாய் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர, தருக்கிலான் ஆகி, தான் தீங்கு நினைந்த, கருத்தைப் பிழைப்பித்துக், கஞ்சன் வயிற்றில், நெருப்பென்ன நின்ற நெடுமால், கண்ணனாக அவதரித்த இந்தத் திருத்தலம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளது.

பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என ஐந்து ஆழ்வார்கள் 50 பாசுரங்கள் பாடிப் போற்றி வணங்கிய தலம் மதுரா.

மதுரா நகரம் தோன்றியது பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. ஒரு சமயம் இலவணாசுரன் என்னும் அரக்கன் கொடுமைகள் பல செய்து வரவே முனிவர்கள் இராமபிரானை அணுகினர். இராமர் தனது இளவலான சத்ருக்னரை அனுப்பி மது என்னும் நகரத்தின் அரசனாக இருந்த இலவணாசுரனை அழிக்கச் செய்தார்.  அசுரனை வதம் செய்த சத்ருக்னர் அங்கு யமுனா நதி தீரத்தில் அர்த்த சந்திர வடிவத்தில் மதுரா நகரை உருவாக்கினார். இந்த நகரத்தை சத்ருக்னரின் வமிசாவளியினர் ஆண்டு வந்தனர். பின்னர் யது வம்சத்தினர் இதை ஆளத் தொடங்கினர்.

***

அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா

புரி த்வாராவதி சைவ சப்தைதே மோக்ஷதாயிகா:

என்று குறிப்பிடப்படும் ஏழு மோக்ஷம் அருளும் தலங்களில் மதுராவும் ஒன்று.

இங்கிருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பிருந்தாவனில் தான் கிருஷ்ணரின் இளமைப் பருவம் கழிந்தது. 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இன்னொரு புனித யாத்திரை தலம் கோவர்தன் ஆகும். ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

ரிக் வேதம் குறிப்பிடும் ஐந்து வமிசங்களில் யது வம்சமும் ஒன்று. அதில் அவதரித்தவர் கிருஷ்ணர்.

கிருஷ்ணரின் ஜென்ம பூமியில் கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம், துவாரகாநாத் ஆலயம், கீதா மந்திர் உள்ளிட்ட பல ஆல்யங்கள் உள்ளன.

   உலகில் உள்ள மிகப் புனிதமான இடங்களில் தலையாய இடமான இங்குள்ள கர்பக்ருஹத்தில் தான் சிறையில் கிருஷ்ணர் அவதரித்தார். காலப் போக்கில் இந்த  ஜென்மஸ்தானம் ஒரு அழகிய ஆலயமாக உருவாகி விட்டது.

    கம்ஸனுக்கும் கிருஷ்ணருக்கும் நடந்த இறுதிப் போர் நடந்த இடமும் இங்கு தான் உள்ளது.

    யமுனை நதி தீரத்தில் அமைந்துள்ள விஷ்ராம் கட்டில் (Vishram Ghat) தான் கம்சனை வதம் செய்த பின்னர் கிருஷ்ணர் வந்து ஓய்வு எடுத்தார்.

    ஆண்டு தோறும், ஜென்மாஷ்டமி எனப்படும் கிருஷ்ணரின் அவதாரத் திருநாள், இங்கு வெகு விமரிசையாக, கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது.

முன்னதாக இந்தக் கோவில் இருந்த இடத்தில் முகலாயர் காலத்தில் அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக ஓர் சர்ச்சை நிலவி வருகிறது .

******

திவ்யதேச பாசுரங்கள்

264.  

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்*  தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்-

பொட்டத் துற்றி*  மாரிப் பகை புணர்த்த*  பொரு மா கடல்வண்ணன் பொறுத்த மலை*

வட்டத் தடங்கண் மட மான் கன்றினை*  வலைவாய்ப் பற்றிக் கொண்டு*  குறமகளிர்-

கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.* (2)

 265.  

வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்*  வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட*

மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப*  மதுசூதன் எடுத்து மறித்த மலை*

இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி*  இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்*

குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

 274.  

அரவிற் பள்ளிகொண்டு அரவம் துரந்திட்டு*  அரவப்-பகை ஊர்தி அவனுடைய* 

குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்* கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடைமேல்*

திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்- திகழ்*  பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்*

பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)

478.  

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*  தூய பெருநீர் யமுனைத் துறைவனை *

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்*  தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை*

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*  வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க*

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*  தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.

 538.  

மாட மாளிகை சூழ்*  மதுரைப் பதி*

நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு*

ஓடை மா*  மத யானை உதைத்தவன்*

கூடுமாகில்* நீ கூடிடு கூடலே!*   

539.  

அற்றவன்*  மருதம் முறிய நடை-

கற்றவன்*  கஞ்சனை வஞ்சனையிற்*

செற்றவன் திகழும்*  மதுரைப் பதிக்*

கொற்றவன் வரில்*  கூடிடு கூடலே!*

 560.  

கதிர் ஒளித் தீபம்*  கலசம் உடன் ஏந்திச்*

சதிர் இள மங்கையர்*  தாம் வந்து எதிர்கொள்ள*

மதுரையார் மன்னன்*  அடிநிலை தொட்டு*

எங்கும் அதிரப் புகுதக்*  கனாக் கண்டேன் தோழீ! நான்*      

617.  

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா*  மாதவன் என்பது ஓர் அன்புதன்னை*

உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்*  ஊமையரோடு செவிடர் வார்த்தை*

பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப்*  பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி*

மற் பொருந்தாமற் களம் அடைந்த*  மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்*. (2)  

646.  

பருந்தாள்களிற்றுக்கு அருள்செய்த*  பரமன்தன்னைப்*

பாரின் மேல் விருந்தாவனத்தே கண்டமை*  விட்டுசித்தன் கோதை சொல்*

மருந்தாம் என்று தம் மனத்தே*  வைத்துக் கொண்டு வாழ்வார்கள்*

பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ்ப்*  பிரியாது என்றும் இருப்பாரே* (2)    

1512.  

வில் ஆர் விழவில் வட மதுரை*  விரும்பி விரும்பா மல் அடர்த்து*

கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்*  பாய்ந்தான் காளியன்மேல்*

சொல் ஆர் சுருதி முறை ஓதிச்*  சோமுச் செய்யும் தொழிலினோர்*

நல்லார் மறையோர் பலர் வாழும்*  நறையூர் நின்ற நம்பியே.     

 1527.  

மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை*

நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்

கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்*

பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2) 

3675.  

பொருள்கைஉண்டாய்ச் செல்லக்காணில்*  போற்றிஎன்றுஏற்றுஎழுவர்*

இருள்கொள்துன்பத்து இன்மைகாணில்*  என்னே என்பாரும்இல்லை*

மருள்கொள்செய்கை அசுரர்மங்க*  வடமதுரைப் பிறந்தாற்கு*

அருள்கொள் ஆளாய் உய்யல்அல்லால்*  இல்லைகண்டீர்அரணே.

3676.  

அரணம்ஆவர் அற்றகாலைக்கு*  என்றென்று அமைக்கப்பட்டார்*

இரணம்கொண்ட தெப்பர்ஆவர்*  இன்றியிட்டாலும் அஃதே*

வருணித்துஎன்னே?*  வடமதுரைப்பிறந்தவன் வண்புகழே*

சரண்என்றுஉய்யப் போகல்அல்லால்*  இல்லைகண்டீர் சதிரே.

Tags-Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-62; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்,திரு வட மதுரை ,மதுரா.

–subham–

Kick the trees, Hug the trees, Spit on the trees! They will blossom! (Post No.15,904)

Written by London Swaminathan

Post No. 15,904

Date uploaded in London –22 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

HINDU MONALISA IN SCULPTURE.

Indians from very early times have discovered and realised the mysterious link of sympathy and attraction which exists between plant life and human life. They know that plants also have feelings like human beings.

A well-known verse in Sanskrit illustrates how human reacts with plants:

“The Priyangu creeper  blossoms when touched by a woman, the  Bakula tree flowers when sprinkled by a mouthful of wine by a woman, the Asoka when struck by a damsel’s foot adorned with anklets, the Tilaka by a mere glance, the Kurabaka when embraced, the Mandara by the cracking of a joke, the Campaka by  a meaning and soft smile, the Cuta/mango tree by the breeze blown from the mouth, the Nameru by a song and Karnikara by a woman dancing  in front of it. It is however , always a young and beautiful woman alone can exert this benign influence.”

It is also noteworthy that the five arrows of the God of Love (Manmata) with which he subjugates the whole universe are fashioned out of five flowers.

Aravindamasokascha cuusaayakaah tam cha navamallikaa

Nilotpalam cha panchaite panchabaanasya

The Five Flower Arrows

Each arrow represents a specific flower and governs a particular state of emotion or sensory experience:

1.     Aravinda (Lotus)

o    Associated Emotion: Fascination, exhilaration, or a sense of youthful cheer.

2.     Aśoka (Ashoka Flower)

o    Associated Emotion: Disturbance or excitement, sometimes causing an outpouring of emotion.

3.     Cūta (Mango Blossom)

o    Associated Emotion: Delusion or infatuation; “losing one’s mind” to desire.

4.     Navamālikā (Jasmine)

o    Associated Emotion: Burning desire, anguish, or restlessness.

5.     Nīlotpala (Blue Lotus)

o    Associated Emotion: Stupor, immobility, or deep, absorbing love.

DEVI HOLDING FIVE FLOWERS.

Thus the human world and the plant world are said to act and react on each other in various ways. This is called Dohada.

***

What is Dohada?

Dohada literally refers to the cravings of a pregnant woman and in this context the desire of trees, just before they bloom, for some kind of contact with a woman.  Women can thus trigger their flowering by a sort of ritual that varies for each tree. 

In classical Sanskrit literature, the Ashoka tree (Saraca asoca) and its relationship with women is a famous motif.

Following  verse describes the beautiful, ancient poetic belief that the tree requires the touch of a woman’s foot to bloom.

Apakrīṇāśokaḥ sahate caraṇāhatiṃ sarojadṛśām |Vilasitabakulo vanitāmukhavāsī madyapāta iva ||

“Even the sorrow-less Ashoka tree endures the kick from the lotus-eyed lovely woman’s feet; just like an intoxicated person who is delighted by the fragrance of a woman’s breath.”

***

Dohada (दोहद).—[dohamākarṣa dadāti dā-ka] in Sanskrit Dictionary:

1) (a) The longing of a pregnant woman; प्रजावती दोहदशंसिनी ते (prajāvatī dohadaśaṃsinī te) R.14. 45; उपेत्य सा दोहददुःखशीलतां यदेव वव्रे तदपश्यदाहृतम् (upetya sā dohadaduḥkhaśīlatāṃ yadeva vavre tadapaśyadāhṛtam) 3.6,7. (b) The desired object itself.

2) Pregnancy.

3) The desire of plants at budding time (as, for instance, of the Aśoka to be kicked by young ladies, of the Bakula to be sprinkled by mouthfuls of liquor &c.); महीरुहा दोहदसेकशक्तेराकालिकं कोरकमुद्गिरन्ति (mahīruhā dohadasekaśakterākālikaṃ korakamudgiranti) N.3.21;R.8.63; Meghadūta 78; see अशोक (aśoka).

***

Kalidasa on Trees

1. The Meghaduta (Kalidasa)


In his famous Khanda-Kavya (lyric poem), Kalidasa uses the dohada of the Ashoka tree to express the sorrow and separation of the Yaksha’s beloved in Alaka.

raktāsokam̉ namayati patāduttamāyāsahastāt
“The red Ashoka bends down under the touch of the foot of the best of women…”

2. The Vikramorvashiyam (Kalidasa)


In this celebrated play, Kalidasa mentions the kurabaka tree which requires the embrace of a woman to bloom. The text is also noted for its early use of Doha (or Duha) verse forms, which are closely related metrical couplets used in Prakrit and Apabhramsha.

 ASOKA TREE

3. The Classical Poetic Paradox
In classical Sanskrit drama and poetry, the ultimate wonder for a poet is when spring arrives but these beloved trees bloom naturally, without the instigation of a woman’s foot, voice, or embrace. A well-known anonymous sloka encapsulates this dohada tradition:

nāliṅgitaḥ kurabakas tilako na dṛṣṭo
no tāḍitaś ca caraṇaiḥ sudṛśām aśokaḥ |
sikto na vaktram adhunā bakulaś ca caitre
citram tathāpi bhavati prasavāvakīrṇaḥ ||


नालिङ्गितः कुरबकस्तिलको न दृष्टो

नो ताडितश्च चरणैः सुदृशामशोकः।

सिक्तो न वक्त्रमधुना बकुलश्च चैत्रे

चित्रं तथापि भवति प्रसवावकीर्णः॥

Meaning: The Kurabaka was not embraced, the Tilaka was not looked at, nor was the Ashoka struck by the feet of beautiful-eyed women. The Bakula was not sprinkled with the nectar of a mouth in the month of Chaitra (spring), and yet it is astonishingly covered in blossoms.

8th verse in the vasanta section of the 18th chapter of the Kavirahasya in the Kavyamimamsa – Rājaśekhara

***

Kalidasa in Raghuvamsa

Remembering the favour you have done by trampling this Ashoka tree to blossom perfectly, to the chime of jingling anklets, that too impossible to get for other trees, it is mourning for you by shedding flower-tear-rain. [8-63]

स्मरतेव सशब्दनूपुरम् चरणानुग्रहमन्यदुर्लभम्|

अमुना कुसुमाश्रुवर्षिणा त्वमशोकेन सुगात्रि शोच्यसे॥ ८-६३

smarateva saśabdanūpuram caraṇānugrahamanyadurlabham|

amunā kusumāśruvarṣiṇā tvamaśokena sugātri śocyase || 8-63

***

Shalabhanjika

This literary concept of the dohada is intimately tied to the Shalabhanjika motif—the depiction of women engaging in garden sports and interacting gracefully with tree branches. It symbolizes the sacred bond of woman and nature.

Tags- Shalabhanjika, Dohada, Plants and women, Five flower arrows,

Kick the trees, Hug the trees, Spit on the trees! They will blossom!

–subham—

முக்கிய உபநிஷத மந்திரங்கள் – Part 3 (Post No.15,903)

Written by London Swaminathan

Post No. 15,903

Date uploaded in London –22 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 3 (English version posted separately with meaning in English)

21

த்வம் ஸ்த்ரீ த்வம் புமானசி  த்வம்  குமார

உத  வா குமாரீ

த்வம்  ஜீர்ணோ தண்டேன வம்சஸி

த்வம்  ஜாதோ பவஸி விச்வதோ முக :

–ச்வேதாச்வரோபநிஷத்

நீதான் பெண், ஆண் , குமாரன், குமாரி , தடி பிடித்து நடுங்கும் கிழவன்   ; நீ விஸ்வரூபம் உடையவன் .

त्वं स्त्री त्वं पुमानसि त्वं कुमार उत वा कुमारी।
त्वं जीर्णो दण्डेन वञ्चसि त्वं जातो भवसि विश्वतोमुखः॥

tvaṁ strī tvaṁ pumānasi tvaṁ kumāra uta vā kumārī |
tvaṁ jīrṇo daṇḍena vañcasi tvaṁ jāto bhavasi viśvatomukhaḥ ||

****

22

யதோ வாசோ நிவர்த்தந்தே

அப்ராப்ய மனஸா ஸஹ 

ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான்

ந பிபேதி கதா சனேதி  

-தைத்ரீயோபநிஷத் 2-4

எந்தப் பிரம்மத்தை அடையப்பெறாது  வாக்கம் மனதும் பின்வாங்குகிறதோ , அந்தப் பிரம்மத்தின் ஆனந்தத்தை அறிகிற வித்வான் எதற்கும் அஞ்சுவதில்லை ; இது உண்மை .

यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कुतश्चनेति ॥ १ ॥ तैत्तिरीयोपनिषद्ब्रह्मानन्दवल्लीनवमोऽनुवाकः

yato vāco nivartante | aprāpya manasā saha| ānandaṁ brahmaṇo vidvān| na bibheti kutaścaneti |

****

அஜாமேகாம் லோஹித சுக்ல க்ருஷ்ணாம்

பஹ்வீ: ப்ரஜா: ஸ்ருஜமானாம் ஸரூபா:

அஜோ ஹ்யேகோ ஜூஷமாணோ (அ)னுசேதே

ஜஹாத்யேனாம் புக்தபோகாமஜோ(அ)ன்ய:

—-ச்வேதாச்வரோபநிஷத் 4-5

பிறவாத பிரக்ருதியானவன்  சிவப்பு, வெள்ளை, கருப்பு நிறம் உடைவனாக இருக்கிறான். தன்னைப் போல பல வடிவங்களை அவன் உண்டு பண்ணுகிறான் . பிறவாத ஒரு ஜீவன் அவளில் கட்டுண்டு அவளைச் சார்ந்து கிடக்கிறான்; பிறவாத இன்னும் ஒரு ஜீவன்அனுபவித்துப் பார்த்துவிட்டு அவளைத் துறந்து விடுகிறான்.

ajām ekāṁ lohita-śukla-kṛṣṇāṁ bahvīḥ prajāḥ sṛjamānāṁ sarūpāḥ |
ajo hy eko juṣamāṇo ’nuśete jahāty enāṁ bhukta-bhogām ajo ’nyaḥ || [1]

–Shvetashvatara Upanishad (Verse 4.5)

अजाम् एकाम् लोहितशुक्लकृष्णम् बह्वीः प्रजाः सृजमानां सरूपाः
अजो ह्येको जुषमाणोनुशेते जहात्येनां भुक्तभोगाम् अजोन्यः

****

24

நைவ ஸ்த்ரீ ந புமானேஷ ந சைவாயம் நபும்ஸக:

யத்யத்சரீரமாதத்தே  தேன தேன ஸ யுஜ்யதே

—  ச்வேதாச்வரோபநிஷத் 5-10

ஈசன் ஆணல்ல, பெண்ணல்ல அலியுமல்லன்; எந்தச் சரீரத்தை அவர் எடுக்கிறாரோ , அந்தச் சரீரமயமாக அவர் மிளிர்கிறார்.

naiva strī na pumāneṣa na caivāyaṃ napuṃsakaḥ |
yadyćcharīramādatte tene tene sa yujyate ||Shvetashvatara Upanishad (Chapter 5, Verse 10)

****

25

ஓம் மதுவாதா ரிதாயதே
மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ்ஸந்த்வோஷதீ:
மது நக்தமுதோஷஸி
மதுமத் பார்த்திவக்ம் ரஜ:
மது த்யௌரஸ்து ந: பிதா
மதுமான் நோ வனஸ்பதிர்
மதுமாகம் அஸ்து ஸூர்ய:
மாத்வீர் காவோ பவந்து ந:

–மஹா நாராயண உபநிஷத் 39-4

பிராமணர்கள் அமாவாசை தர்ப்பணத்திலும் இந்த மந்திரத்தைப் பயன்படுத்துகின்றனர்.

காற்று இனிது அடிக்கட்டும் .நதிகள் இனியவைகளாக ஓடட்டும். மூலிகைகள் நமக்கு இன்பம் தருபவைகள் ஆகுக. இரவிலும் பகலிலும் இனிமையே நிறைந்திருக்கட்டும் ; நிலத்தின் மண்ணின் இன்பம் பொலிக . நம் தந்தையாகிய வானுலகில் இன்பம் ஓங்குக ; கனி கொடுக்கும் மரங்களில் இன்பம் ததும்புக.சூரியன் இன்பத்தைத் தோற்றுவிப்பானாக. பசுக்களிடத்திலிருந்து நமக்கு இன்பம் சுரப்பதாகுக .

मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः ।
माध्वीर्नः सन्त्वोषधीः ॥
मधु नक्तमुतोषसो मधुमत् पार्थिवं रजः ।
मधु द्यौरस्तु नः पिता ॥
मधुमान्नो वनस्पतिर्मधुमानस्तु सूर्यः ।
माध्वीर्गावो भवन्तु नः ॥

–Rig Veda 1.90.6

[oṃ madhu vātā ṛtāyate madhu kṣaranti sindhavaḥ | mādhvīrnaḥ santvoṣadhīḥ | madhu
naktamutoṣaso madhumat pārthivaṃ rajaḥ | madhu dyaurastu naḥ pitā | madhumānno
vanaspatirmadhumāṃ astu sūryaḥ | mādhvīrgāvo bhavantu naḥ |

 To be continued………………..

Tags- முக்கிய உபநிஷத மந்திரங்கள், Part 3, Tamil Upanishad

Important Upanishad Mantras in English and Devanagari- Part 3 (Post.15,902)

Written by London Swaminathan

Post No. 15,902

Date uploaded in London –22 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 3

21

त्वं स्त्री त्वं पुमानसि त्वं कुमार उत वा कुमारी।
त्वं जीर्णो दण्डेन वञ्चसि त्वं जातो भवसि विश्वतोमुखः॥

tvaṁ strī tvaṁ pumānasi tvaṁ kumāra uta vā kumārī |
tvaṁ jīrṇo daṇḍena vañcasi tvaṁ jāto bhavasi viśvatomukhaḥ ||

“You are the woman, You are the man; You are the youth and the maiden too. You are the old man who totters along with a staff, and You are the boy facing all directions.”- Shvetashvatara Upanishad ,Chapter 4, Verse 3

***

22

यतो वाचो निवर्तन्ते । अप्राप्य मनसा सह । आनन्दं ब्रह्मणो विद्वान् । न बिभेति कुतश्चनेति ॥ १ ॥ तैत्तिरीयोपनिषद्ब्रह्मानन्दवल्लीनवमोऽनुवाकः

yato vāco nivartante | aprāpya manasā saha| ānandaṁ brahmaṇo vidvān| na bibheti kutaścaneti |

The Bliss of the Eternal from which words turn back without attaining and mind also returneth baffled, who knoweth the Bliss of the Eternal? He feareth not for aught in this world or elsewhere– Taittiriya Upanishad, Anuvaka IX, Ananda valli.

****

23

ajām ekāṁ lohita-śukla-kṛṣṇāṁ bahvīḥ prajāḥ sṛjamānāṁ sarūpāḥ |
ajo hy eko juṣamāṇo ’nuśete jahāty enāṁ bhukta-bhogām ajo ’nyaḥ || [1]

–Shvetashvatara Upanishad (Verse 4.5)

अजाम् एकाम् लोहितशुक्लकृष्णम् बह्वीः प्रजाः सृजमानां सरूपाः
अजो ह्येको जुषमाणोनुशेते जहात्येनां भुक्तभोगाम् अजोन्यः

ajām ekām lohita-śukla-kṛṣṇām
bahvīḥ prajāḥ sṛjamānāṁ sarūpāḥ
ajo hy eko juṣamāṇo ‘nuśete
jahāty enāṁ bhukta-bhogām ajo ‘nyaḥ 

This verse uses the metaphor of a goat (Aja/Ajā) to explain the relationship between the individual soul, the supreme soul, and material nature:

  • The Material World: The unborn, singular Prakriti is red, white, and black (representing the three gunas), and she continuously creates a multitude of living beings that resemble her.
  • The Bound Soul: One unborn soul (the Jiva) becomes attached to this material nature, gets entangled in it, and enjoys its experiences.
  • The Liberated Soul: Another unborn soul (the Supreme or liberated soul) disengages from Prakriti once her purpose (experience and eventual liberation) has been fulfilled.– Shvetashvatara Upanishad (Verse 4.5)

Or

There is one beginningless entity who is clear-white when she transmits conscious perception, reddish-hued when she inspires creativity, and dark-blue when she coagulates and destroys. There is another beginningless entity who wants to procreate with her. Yet another beginningless entity forsakes her after enjoying her.

***

24

naiva strī na pumāneṣa na caivāyaṃ napuṃsakaḥ |
yadyćcharīramādatte tene tene sa yujyate ||Shvetashvatara Upanishad (Chapter 5, Verse 10)

“He is neither female, nor male, nor is he neuter. Whatever body he takes, with that he is joined.” Shvetashvatara Upanishad (Chapter 5, Verse 10)

****

25

मधु वाता ऋतायते मधु क्षरन्ति सिन्धवः ।
माध्वीर्नः सन्त्वोषधीः ॥
मधु नक्तमुतोषसो मधुमत् पार्थिवं रजः ।
मधु द्यौरस्तु नः पिता ॥
मधुमान्नो वनस्पतिर्मधुमानस्तु सूर्यः ।
माध्वीर्गावो भवन्तु नः ॥

–Rig Veda 1.90.6

[oṃ madhu vātā ṛtāyate madhu kṣaranti sindhavaḥ | mādhvīrnaḥ santvoṣadhīḥ | madhu
naktamutoṣaso madhumat pārthivaṃ rajaḥ | madhu dyaurastu naḥ pitā | madhumānno
vanaspatirmadhumāṃ astu sūryaḥ | mādhvīrgāvo bhavantu naḥ |

 The mantra calls for sweetness and harmony in all aspects of life

Winds, rivers, and herbs bring sweetness, aligning with cosmic law (Rta).

Nights, dawns, the earth’s dust, and the sky (Father Heaven) are sweet.

Trees, the sun, and cows (offering milk) are full of sweetness.

Or

Rivers bliss us with sacred water and provide us; health, night, morning, vegetation. Sun bliss us with peaceful life. Our cows provide us milk.

To be continued………………..

Tags- Important, Upanishad mantras, Part 3

என் புருஷன் தான் ஒசத்தி! (Post No.15,901)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,901

Date uploaded in London – 22 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷிதச் செல்வம்

என் புருஷன் தான் ஒசத்தி!

ச. நாகராஜன்

என் புருஷன் தான் ஒசத்தி! 

சதுர் சகி மே பர்த்தா யத் லிகதி தத் பரோ ந வாசயதி |

தஸ்மாத் அபி அதிக: மே ஸ்வயம் அபி லிகிதம் ஸ்வயம் ந வாசயதி ||

இரண்டு பெண்மணிகள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முதலாமவள் சொன்னாள்: என் புத்திசாலி புருஷன் எழுதுவதை அவரைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு பதிலாக அடுத்தவள் சொன்னாள்: என் புருஷன் தான் இதுல ஒசத்தி. அவர் எழுதுவரை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது.

இது எப்படி இருக்கு!

இந்த சுபாஷிதத்தின் பொருள்: ஒரு பெண்மணி அடுத்தவளிடம் சொன்னாள்: “என் பிரியமான தோழியே!  என் கணவரானவர், அவர் எழுதுவதை அடுத்தவர் யாரும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதும் திறமைசாலி!”  இதற்கு அடுத்த பெண்மணி கர்வத்துடன் பதில் கூறினாள்: “எனது புருஷன் இன்னும் அதிக திறமைசாலி. ஏனெனில் அவர் எழுதுவதை அவராலேயே புரிந்து கொள்ள முடியாது!”

இலக்கியம், இசை ஆர்வம் இல்லாதவன் மிருகம் தான்!

சாஹித்யசங்கீதகலாவிஹீன: சாக்ஷாத் பசு: புச்சவிஷானஹீன: |

த்ருணம் ந காதன் அபி ஜீவமான: தத் பாகதேயம் பரமம் பசூணாம் ||

எந்த ஒரு மனிதனுக்கு இலக்கியம், சங்கீதம் மற்றும் இதர கலைகளில் ஆர்வம் இல்லையோ அவன் கொம்புகளும் வாலும் இல்லாத மிருகத்திற்குச் சமானம். அந்த மனிதன் புல்லைத் தின்னாமல் இருப்பது மிருக உலகத்தின் அதிர்ஷ்டம் தான்!

பதினாறு வயது மகனை நண்பனாக பாவித்து நடத்து!

லாலயேத் பஞ்சவர்ஷாணி தச வர்ஷாணி  தாடயேத் |

ப்ராப்தே து ஷோடஷே வர்ஷே புத்ரம் மித்ரமிவாசரேத் ||

ஐந்து வருடங்கள் வரை குழந்தையை அன்புடன் வளர்க்க வேண்டும். அடுத்த பத்து வருடங்கள் தேவையென்றால் கண்டித்து தண்டனை கொடுத்து வளர்க்க வேண்டும். ஆனால் எப்போது அவன் பதினாறு வயதை அடைகிறானோ அப்போது மகனை நண்பனாக மதித்து நடத்த வேண்டும்.

குழந்தையைப் படிக்க வைக்காத தாயும் தந்தையும் எதிரிகளே!

மாதா சத்ரு: பிதா வைரீ யேன பாலோ ந பாடித: |

ந ஷோபதே சபாமத்யே ஹம்ஸமத்யே பகோ யதா ||

தங்கள் குழந்தைகளை சரியாகப் படிக்க வைக்காத தாய் குழந்தைக்கு எதிரி; தந்தை ஒரு பகைவன். அப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்த நிலையில் நல்ல அன்னங்களுக்கு இடையே அவலட்சமாண குஞ்சுகளாகக் காட்சியளிப்பது போல (சமுதாயத்தில்) இருக்கும்.

தர்ம வழியில் நின்று பொருள் சம்பாதிக்கும் ஒரு புத்திரனே உத்தமம்!

பஹுபிர்பத கிம் ஜாதை: புத்ரைதர்மார்தவர்ஜித: |

வரமேகம் பதி தரு: யத்ர விஸ்ரமதே ஜன: ||

தர்மத்தைக் கடைப்பிடிக்காமலும், பொருளைச் சம்பாதிக்காமலும் பல புத்திரர்கள் இருந்து என்ன பிரயோஜனம்? அதற்கு பதிலாக ஒரே மரமாகத் தனித்து சாலையோரத்தில் இருந்து வழிப்போக்கர்களுக்கு நிழலுடன் தங்குமிடம் அளிக்கும் மரமாக (தர்மத்தைக் கடைப்பிடிக்கும் பொருளைச் சம்பாதிக்கும்) ஒரே புத்திரன் இருப்பது சாலச் சிறந்தது.

**

Oldest Skanda -Kartikeya- Murugan Coins! (Post No.15,900)

Written by London Swaminathan

Post No. 15,900

Date uploaded in London –21 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Yaudheyas who ruled Northwest part of India had issued Skanda- Kartikeya -Murugan Coins 2000 years ago. They ruled Sapta Sindhu area (Punjab, Haryana regions) from 200 BCE to 300 CE. They issued various types of Skanda coins. The surprising thing is that they were the one who issued Skanda (Murugan in Tamil) coins with his Six Heads and his vehicle peacock. Later Gupta rulers issued such coins. Six Headed Skanda is called Shanmukha in Sanskrit and Aarumukham in Tamil. Adi Sankara who formed six groups of worship called Skanda worship Kaumaram because Kalidas made that name (Kumaara) popular 2200 years ago.

Sangam Tamil literature has one whole work written by a Brahmin poet named Nakkirar on Skanda and it is called Tiru Murugatruppadai. Anti God Dravidians dubbed it as a later interpolation, but Yaudheya coins explode such arguments. Added to this Patanjali’s Mahabhashya reference to Skanda, a commentary on world’s first grammar book by Panini known as Ashtadhyayi. In the 2200-year-old Mahabhasya, Patanjali gives us information about selling Murtis/figures of Skanda -Vishaka. This also gives credence to Sangam book Tiru Murugatruppadai.

Through this we come to know that the Skanda worship was popular from Himalayas to Kanyakumari 2000 years ago.

***

Who are Yaudheyas?

Panini  refers to them specifically as an Ayudhajivin Sangha—a community of warriors who lived by the profession of arms. He explains that the suffix “-ya” was used in Sanskrit to signify martial and warrior tribes, a linguistic detail that fits the Yaudheyas’ historical reputation as a formidable military force

The tribal republics or Janapadas like Audumbara, Kuninda and Yaudheya issued their coins in the name of their presiding deities-Mahadeva. Chitresvara and Brahmanya. The early tribal republics of the 2nd century B.C.E, refer to their names and places in Brahmi script. Some republics issued coins with their names and title Raja or Maharaja. Copper was used as the prime metal for such issues. A few tribes issued coins in silver too.

Monarchies like Surasena and Panchala that sprang up during this period were located in the Ganga-Yamuna plain. The kingdom of Panchala issued copper coins bearing the names of no less than 35 kings.

***

Gupta Coins on Skanda

The golden age of Indian history was the rule of Guptas. They were great worshippers of Vishnu and they called themselves Parama Bhagavatas. But the world famous poet Kalidasa changed them into Saivites. Kalidasa lived in the first or second century BCE. His work Kumarasambhava on the birth of Kumara/ Skanda made Guptas to name their children Skanda Gupta, Kumara Gupta etc.  They issued coins with Skanda with peacock.

Even Asvagosha , author of Buddha Carita in Sanskrit, compared Skanda with Buddha! According to Hindu literature in Tamil and Sanskrit, Skanda was a war god. He was the commander in chief of the Divine army. He married Indra’s daughter Devasena. In spite of his association with war, red colour and planet Mars, Asvagosha compared him to Buddha because of Kalidasa. In Raghuvamsa, Kalidasa compared three kings to Skanda. Tamils of Sangam age also followed Kalidasa and compared the kings with Muruga. Such was the influence of Kumarasambhava Kavya. Not only this, Tamil Sangam poets used the first ten slokas on Himalayas in Kumarasambhava, in their poems.

The greatest Art Historian of India Mr Sivaramanurti (Curator of Madras Museum) was a Sanskrit scholar. He argued Literature comes first Sculptures follow it like the Tamil saying Literature comes first Grammar follows it. He placed Kalidasa in Pre Gupta period,because Gupta coins show whatever Kalidasa said in his seven works.

***

Other coins on Muruga/Skanda/Kartikeya

Huvishka,successor of Kanishka, issued coins on all Hindu gods including Kartikeya around first century CE. Earlier rulers used pictures of Siva only. Huvishka used names in Mahabhashya such as Masena/ Mahasena , Skandakumaro Vizaka . His coins show that Skanda holding Trisula/trident like Shiva.

They spelt the names in strange ways

Shiva – oeso, uma – ommo

***

Yaudheya coins showed Skanda holding a spear; Vel in Tamil.

Kumara Gupta 415-450 CE issued beautiful Skanda coins in gold. The legend on his coin was Mahendrakumarah.

Gold coin issued by Chalukya Vikramaditya of Badami/Vatapi 655-681 CE has the figure of Kartileya. Peacock feather and snake are also seen.

Though  kanda Murugan is called Tamil God, we don’t have any ancient coin with Muruga!

As late as seventeenth century, king Ragunatha Nayak of Thanjavur displayed standing figure of Kartikeya in his coin.

Later Kanthirava Narasaraja Wodeyar (1638-56) of Mysore issued coins with Kartikeya seated on a peacock.

***

Maurya dynasty was named after Peacock (Mayura) growers. Asoka was very fond of peacock meat. Even after spreading Buddhism, he never stopped killing peacocks for food, but he ordered to kill lesser number of the birds. Their coins show peacock with its feather. Since India made peacock its national bird, we can even say that India’s national God is Lord Skanda, Mahasenatipati, Commander in Chief!

–Subham—

Tags- Oldest coin, on Muruga, Kartikeya, Skanda, Visaka, Shanmuka, Yaudheya, Gupta, Chalukya, Peacock ,

மிகப்பழைய முருகன்- கந்தன் -ஷண்முகன் நாணயம்! (Post.15,899)

Coins of Yaudheyas

Coin of Kumara Gupta

Written by London Swaminathan

Post No. 15,899

Date uploaded in London –21 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Research Article

உலகப் புகழ்பெற்ற முதல் இலக்கண நூலை எழுதிய  பாணினி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் யாதேயர் குடியரசினைக் குறிப்பிட்டுள்ளார் ; அவர்கள் யுத்தத்தினால் வாழ்ந்தவர்கள் என்பதால் யாதேயர்கள்

(யுத்தம் =போர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஆறு தலைகளைக் கொண்ட ஆறுமுகன் உருவம் உள்ளது அந்த நாணயங்கள் 2000 ஆண்டுப் பழமையானவை .

பண்டைய இந்தியாவில், தற்கால பஞ்சாப்,ஹரியானா  (சப்த சிந்து) மற்றும் ராஜஸ்தான் பகுதிகளை மையமாகக் கொண்டு கி.மு 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 4-ஆம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்த ஒரு சுதந்திரமான போர்வீரர் குடியரசு (Ganasangha) ஆகும்.

‘யோதா’ (Yodha) என்றால் போர்வீரன் என்று பொருள். மகாபாரதத்தில் நகுலனால் வெல்லப்பட்ட பகுதியான ‘பஹுதன்யகா’ (Bahudhanyaka) என்பது யாதேயர்களின் நிலப்பரப்பைக் குறிப்பதாகும்.

அக்கால மன்னராட்சிகளுக்கு மாறாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது பழங்குடி தலைவர்களால் நிர்வகிக்கப்பட்ட குடியரசு முறையைக் கொண்டிருந்தனர்.

2-ஆம் நூற்றாண்டு ஜுனாகத் பாறைக் கல்வெட்டில் (ருத்ரதாமன் கல்வெட்டு), யாதேயர்கள் “அனைத்து க்ஷத்திரியர்களிலும் வீரர்கள்” என்றும், எளிதில் அடிபணியாதவர்கள் என்றும் புகழப்பட்டுள்ளனர்.

இவர்களின் கடவுள் முருகன் (கார்த்திகேயன்) ஆவார். ரோதக் (Rohtak) பகுதி இவர்களின் நாணயங்களை அச்சடிக்கும் மையமாகத் திகழ்ந்தது. இவர்களின் நாணயங்களில் “யாதேய கணஸ்ய ஜய” (யாதேயர்களின் வெற்றி) என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.

***

திருமுருகாற்றுப்படை என்னும் சங்க கால நூல் முருகனின் முழு வரலாற்றினைக் கூறுகிறது அதை நக்கீரன் என்ற பிராமணன்  எழுதினான் . சாமி பற்றி எழுதியதால் இது பிற்கால நூல் என்று சில திராவிட அசடுகள் – அரை வேக்காடுகள் -எழுதின ; ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே யாதேயர்கள் (Yaudheyas) ஆறுமுகன் வடிவத்தை நாணயத்தில் பொறித்தார்கள்; இது நக்கீரரின் வருணனையை நிரூபிக்கிறது . ஆயினும் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின்  பழங்காலச்  சிலைகளோ பழைய ஓவியங்களோ, காசுகளோ நமக்கு கிடைக்காதது துரதிர்ஷ்டமே; வேல்போன்ற ஈட்டிகள் மட்டுமே கிடைத்தன ; அது உலகில் இல்லாத இடமே இல்லை.

மேலும் பாணினியின் அஷ்டாத்யாயீ இலக்கண நூலுக்கு உலகம் வியக்கும் உரையை 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பதஞ்சலி முனிவரும் அவருடைய மகா பாஷ்ய நூலில் ஸ்கந்த, விசாகர் சிலைகள் விற்பனை பற்றிக் குறிப்பிலிட்டுள்ளார் ; இதுவும் நக்கீரர் நூலை சங்க கால நூல் என்பதைக் காட்டுகிறது .

****.

இந்தியாவின் பொற்காலம் எனப் புகழப்படும் குப்தர்காலத்தில் மன்னர்கள் ஸ்கந்த குப்தன்குமார குப்தன்(CE 415-450)

 என்று பெயர் வைத்துக் கொண்டனர். இவ்வளவுக்கும் குப்தர்கள் வைஷ்ணவர்கள் ; பரம பாகவதர்கள் ! இதற்குக் காரணம் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் எழுதிய குமார சம்பவம் நூலாகும். அவர் முருகனின் புகழைத்  திக்கெட்டும் பரப்பினார் ; அதற்குப் பின்னர் புத்தசதரித்ததை முதல் முதலில் சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய புத்த கோஷரும் கூட புத்தரை முருகனுடன் ஒப்பிட்டார் அந்த அளவுக்கு காளிதாசன் முருகன் புகழைப்  பரப்பினார் ; அது மட்டுமல்ல குமார சம்பவத்தில் முதல் பத்து சுலோகங்களில் அவர் இமய மலையைப் புகழ்ந்த இயற்கை வருணனையை சங்க காலப் புலவர்கள் அப்படியே தமிழ்ச் சங்கப் பாடல்களில் பயன்படுத்தினார்கள். 

***

பிற்கால முருகன் நாணயங்கள் —

கனிஷ்கருக்குப் பிறகு ஆட்சி செய்த ஹுவிஸ்கா, எல்லா இந்து தெய்வங்களுக்கும்  நாணயங்கள் வெளியிட்டார். அவர் முதல் நூற்றாண்டினைச் சேர்ந்தவர் சிவா – உமா நாணயங்கள்    வெளியிட்டார் அவர்க்கு முன்னர் கனிஷ்கார் சிவ பெருமான் நாணயங்கள் வெளியிட்டார்.

இவர்கள் சொல்லும் பெயர்கள் விநோதமானவை

சிவா – ஓசோ உமா – ஓம் மோ

ஹுவிஸ்கா அச்சடித்த நாணயங்களில் மாசேன = மஹாசேனஸ்கந்த குமாரோ- விசாகா – ஸ்கந்த குமாரவிசாகன் என்ற எழுத்துக்கள் உள. மேலும் அவர்கள் ஒரு மேடை மீது ஆபரணங்களைப் பூண்டு நிற்கிறார்கள்;  காலில் கைகளில் வளையங்கள், கழுத்தில் மாலை, தலைப்பாகை, இவற்றுடன் மெல்லிய ஆடைகளை அணிந்துள்ளனர்; முருகனின் ஒரு கை இடுப்பிலும் இன்னொரு கை, திரிசூலத்தை ஏந்திய வண்ணமும் உள்ளன ; சில நாணயங்களில் இடுப்பில் வாள், கதை காணப்படுகிறது ; ஈட்டியும் உளது; அதை நாம் வேல் என்று சொல்கிறோம்

யாதேயர்கள் மயிலையும் காட்டியுள்ளனர் .

யாதேயர்களைப் போல ஒளதும்பரர்களும் முருகன் நாணயங்கள் வெளியிட்டார்கள் ; குப்தர் கால தங்க நாணயங்களில்தான் அழகான முருகன் காணப்படுகிறார் ; மஹேந்திர குமார என்ற எழுத்துக்களை பொறித்துள்ளார்கள் ; முருகன் இந்திரன் படைகளுக்கு COMMANDER-IN-CHIEF கமாண்டர் இன் சீப் – சேனாபதி– என்பதும் இந்திரன் புதல்வி தெய்வானையை – தேவசேனா — மணந்தவர் என்பதும் புராணக்கதை .

பாதாமியை- வாதாபியைத் – தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் விக்ரமாதித்யன் (சாளுக்கிய விக்ரமாதித்ய – CE 655-681) வெளியிட்ட தங்க நாணயத்தில் முருகன் பாம்பு, மயில் தோகையுடன் காட்சி தருகிறார் ; பிற்கால கர்நாடக அரசர் கல்வெட்டுகளில் இந்த தங்க நாணயத்தை மயூர கத்யான என்று குறிப்பிட்டுள்ளார்கள்

பதினேழாம் நூற்றாண்டு ரகுநாத நாயக்கர் காசில் மயி டன் முருகன் உள்ளார் .

மைசூர் நரசராஜா உடையார் – 1638-1656 CE வரை முருகன், மயில் நாணயங்களை பார்க்க முடிகிறது . மயிலை வளர்த்தவர்களை அரசன் ஆக்கி நந்த வம்சத்தை அடியோடு அழித்தான் சாணக்கியன் என்ற பிராமணன் ;இந்த மயிலை சந்திர குப்த மெளரியன் காலம் முதல் PUNCH MARKED COINS /முத்திரைக் காசுகளில் காண்கிறோம்; மயிலை இந்திய தேசீயப் பறவையாக அறிவித்ததன் மூலம் இந்தியாவின் தேசீயக் கடவுள் முருகன்தான் என்றும் சொல்லலாம் !

—SUBHAM—

TAGS- பழைய, முருகன், கந்தன், ஷண்முகன், நாணயம், யாதேயர்கள், ஆறுமுகன்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-61; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள்(Post.15,898)

Written by London Swaminathan

Post No. 15,898

Date uploaded in London –21 June 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 61

பத்ரிநாத்

அருள்மிகு பத்ரி நாராயணன் கோயில்

மூலவர்   பத்ரி நாராயணன்

தாயார்    அரவிந்தவல்லி

திருக்கோலம்   வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்

தீர்த்தம்   தப்தகுண்ட தீர்த்தம்

விமானம் தப்தகாஞ்சன விமானம்

தல விருட்சம்  பத்ரி (இலந்தை) மரம்

மங்களாசாசனம்     திருமங்கையாழ்வார், பெரியாழ்வார்

இருப்பிடம்- ‘பத்ரிநாத்’ ரிஷிகேசத்திலிருந்து சுமார் 297 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலைப் பகுதியில், அலக்நந்தா நதிக்கரையில் அமைந்துள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

இங்கு நாராயணனே குருவாகவும், சீடனாகவும் இருந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தார் என்றும், அவர் பத்ரி (இலந்தை) மரத்தடியில் அமர்ந்ததால் ‘பத்ரிகாசிரமம்’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். தப்தகுண்டம் என்னும் வெந்நீர் ஊற்றுக்கு எதிரே பத்ரி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 11000 அடி. ஆதி சங்கராச்சாரியார் அலக்நந்தா நதியில் பத்ரிநாராயணனின் கருங்கல் சிலையைக் கண்டுபிடித்து அதை கோயிலில் பிரதிஷ்டை செய்தார். நிறுவப்பட்டது: கி.மு.500 ஆம் ஆண்டு .

கோயிலுக்கு வடக்கே கங்கைக் கரையில் பிரம்ம கபாலம் என்ற இடம் உள்ளது. இங்கு பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகளும் மோட்சமடைவதாக நம்பப்படுகிறது. கோயிலுக்கு எதிர்புறம் நரநாராயண பர்வதங்களும், வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் உள்ளது.

நாரதர் எட்டெழுத்து (அஷ்டாக்ஷரம் = ஓம் நமோ நாராயணா ) மந்திரத்தால் மகாவிஷ்ணுவை பூஜித்து அருள்பெற்ற ஸ்தலம். பீமனும், ஹனுமனும் சண்டையிட்ட கந்தமாதன பர்வதம் (தற்போது ஹனுமான்சட்டி) இங்கு உள்ளது.

பனிசூழ்ந்த இடத்தில் உள்ளதால் இக்கோயில் சித்ரா பௌர்ணமியன்று திறக்கப்பட்டு 6 மாத காலம் வழிபாடு நடைபெறும். பின்னர் தீபாவளி அன்று கோயில் மூடப்படும். இந்த 6 மாத காலத்தில்

திருமங்கையாழ்வார் 21 பாசுரங்களும், பெரியாழ்வார் 1 பாசுரமுமாக மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளனர்.

பாசுரம்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான பத்ரிநாத் (திருவதரியாச்சிரமம்) எம்பெருமான் மீது திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி பாசுரங்கள் பாடப்படுகின்றன.

ஆழ்வார் பாடியருளிய புகழ்பெற்ற பத்ரிநாத் பாசுரம் மற்றும் அதன் பொருள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உறிகள் போல் மெய்நரம்பு எழுந்து, ஊன் தளர்ந்து உள்ளம் எள்கி,நெறியை நோக்கிக் கண் சுழன்று நின்று நடுங்கா முன்,அறிதியாகில் நெஞ்சம் அன்பாய் ஆயிர நாமம் சொல்லி,வெறிகொள் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே.

பாடலின் விளக்கம்:நம் உடலில் உள்ள நரம்புகள் வெளியே புடைத்து, சதைப்பற்று குறைந்து, உள்ளம் தளர்ந்து, முதுமை காரணமாக கண்கள் சுழன்று உடல் நடுங்கும் காலம் வருவதற்கு முன்பே, மனமே! எம்பெருமானின் திருநாமங்களை ஆயிரமும் சொல்லி, வண்டுகள் ரீங்காரம் செய்து பண்கள் பாடும் திருவதரி (பத்ரிநாத்) சென்று வணங்குவோம்.

 பெருமாள் தியானத்தில் இருந்தபோது, அவருக்கு நிழல் தருவதற்காக லட்சுமி தேவி ‘பத்ரி’ (இலந்தை) மரமாக மாறியதாக நம்பப்படுகிறது. இதன் தலைமை அர்ச்சகராக (ராவல்) கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரி பிராமணர் நியமிக்கப்படுவது 1,200 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமாகும்.

பத்ரிநாத் கோயிலுக்கு அருகே பக்தர்கள் புனித நீராடும் வெந்நீர் ஊற்று உள்ளது. தப்த குந்த் என்ற இயற்கையான வெந்நீர் ஊற்று, குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டது. பக்தர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு அதன் நீரில் குளிக்கின்றனர்.

மேலும், இந்தியா-சீனா எல்லைக்கு அருகில் உள்ள கடைசி இந்திய கிராமமான மனா கிராமம், பத்ரிநாத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் கம்பீரமான இமயமலையின் மத்தியில் அமைந்துள்ளது. பனி மூடிய சிகரங்கள் மற்றும் அலக்நந்தா நதியால் சூழப்பட்ட இந்த புனித தலம் இயற்கை அழகு உடையது.

சார் தாம் யாத்திரை

சார் தாம் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முக்கிய இடமாகும். சார்தாம் – நான்கு புனிதத் தல யாத்திரை — என்பதில் இமய மலையிலுள்ள 4 புனிதத்தலங்கள் அடக்கம் .

சார் தாம் : பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி

பாண்டவர்கள் இமயமலைக்குச் செல்லும் இறுதிப் பயணத்தில் பத்ரிநாத் வழியாகச் சென்றனர்.

17 ஆம் நூற்றாண்டில், கர்வால் மன்னர்கள் சிலையை அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றினர், 1803 ஆம் ஆண்டு பூகம்பத்திற்குப் பிறகு ஜெய்ப்பூர் மன்னரால் இந்த கோயில் மீண்டும் கட்டப்பட்டது.

கல் மற்றும் மரத்தால் ஆன பாரம்பரிய கர்வாலி பாணி

அமைப்பு: கோயில் சுமார் 50 அடி உயரம் கொண்டது, தங்க கூரையுடன் உள்ளது.

: சிங்த்வார் என்று அழைக்கப்படும் பிரதான வாயில் பிரகாசமாக வர்ணம் பூசப்பட்டுள்ளது மற்றும் நுழைவாயிலில் விஷ்ணுவின் வாகனமான கருடன் என்ற பறவையின் சிலை உள்ளது.

ஏப்ரல்/ மே முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் கோயில் வழிபாட்டிற்காக திறந்திருக்கும். குளிர்கால மாதங்களில் சிலை ஜோஷிமத்தில் உள்ள நரசிம்மர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

TO BE CONTINUED…………………..

TAGS- பத்ரிநாத், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-61; திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 61