WORLD HINDU NEWS IN TAMIL 17- 5 -2026 (Post No.15750)

Written by London Swaminathan

Post No. 15,750

Date uploaded in London –17 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

லண்டன் சுவாமிநாதன் தொகுத்து வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்

***

போஜ்சாலா வளாகம் சரஸ்வதி தேவிக்கான கோயில்தான்: நீதிமன்ற அமர்வு தீர்ப்பு

போபால்: மே 16, 2026
மத்​திய பிரதேசத்​தின் தார் மாவட்​டத்​தில் 11-ம் நூற்​றாண்​டில் கட்​டப்​பட்ட போஜ்சாலா வளாகம் உள்​ளது. இது சரஸ்​வதி தேவி கோயில் என்று இந்​துக்​கள் வாதிடு​கின்​றனர். அதேசம​யம் அது கமல் மவுலா மசூதி என்று முஸ்​லிம்​கள் நம்​பு​கின்​றனர். இதனால் ஏற்​பட்ட சர்ச்​சையை தொடர்ந்து அங்கு கடந்த 2003-ல் இந்​துக்​கள், முஸ்​லிம்​கள் ஆகிய இரு தரப்​பினரை​யும் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழிபட ஏஎஸ்ஐ அனு​மதி அளித்​தது.இதுதொடர்பான வழக்கில் ம.பி. உயர் நீதி​மன்​ற நீதிப​தி​கள் விஜய் குமார் சுக்​லா, அலோக் அவஸ்தி ஆகியோர் அடங்​கிய அமர்வு நேற்று தீர்ப்பு அளித்​தது. நீதிப​தி​கள் தங்​கள் தீர்ப்​பில் கூறியிருப்பதாவது: வரலாற்று இலக்​கி​யங்​களும் ஆவணங்​களும், சர்ச்​சைக்​குரிய பகு​தி​யின் இயல்பு – பார்​மர் வம்​சத்தை சேர்ந்த மன்​னர் போஜருடன் தொடர்​புடைய ஒரு சமஸ்​கிருத கற்​றல் மைய​மான போஜ​சாலை​யாகவே இருந்​ததை நிலை​நாட்​டு​கின்​றன.
மேலும் போஜர் காலத்​துடன் தொடர்​புடைய பல்​வேறு இலக்​கிய மற்​றும் கட்​டிடக்​கலை குறிப்​பு​கள், அங்கு சரஸ்​வதி தேவி கோயில் இருந்​ததை சுட்​டிக்​காட்​டு​கின்​றன. எனவே, அது சரஸ்வதி கோயில்தான். லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி தேவி சிலையை மீட்டு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மசூதி கட்டுவதற்கு வேறு நிலம் ஒதுக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து வழக்​கறிஞர் விஷ்ணு சங்​கர் ஜெயின் கூறுகை​யில், ‘‘ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க தீர்ப்பு வந்துள்ளது. இந்து தரப்​பினருக்கு வழிபடும் உரிமையை நீதி​மன்​றம் வழங்​கி​யுள்​ளது. இனிமேல், அங்கு இந்து வழி​பாடு மட்​டுமே நடை​பெறும்’’ என்​றார்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து தார் மாவட்​டத்​தில் காவல்​துறை பாது​காப்பை பலப்​படுத்​தி​யுள்​ளது. மக்​கள் அமைதி காக்க வேண்​டும், வதந்தி அல்​லது தவறான தகவல்​களை பரப்​புவதை தவிர்க்க வேண்​டும் என தார் மாவட்ட ஆட்​சி​யர்​ ராஜீவ்​ ரஞ்​சன்​ வேண்​டு​கோள்​விடு​த்​துள்​ளார்​.

***

பெங்களூரில் வாழும் கலை ஆஸ்ரம விழா

ரவிசங்கர் 70ஆவது பிறந்த நாள் விழா

பெங்களூருவில் உள்ள சர்வதேச வாழும் கலை‘ (Art of Living) மையத்தின் 45ஆவது ஆண்டு விழா மற்றும் அதன் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70 ஆவது பிறந்த நாள் விழா மே 2026-ல் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்தியாவை ஆன்மிக வல்லரசாக மாற்றும் பாதைக்கு குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழிகாட்டுகிறார் என்று மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் புகழாரம் சூட்டினார் .

. 182 நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த உலக அமைதிக்கான கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

பெங்களூரு: சர்வதேச வாழும் கலை மையத்தில் நடந்த, தியான நிகழ்ச்சியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர்..

பெங்களூரு கனகபுரா சாலையில் உள்ள, சர்வதேச வாழும் கலை மையத்தில் நிகழ்ச்சிகள் தினமும் நடந்து வருகிறது

உலகெங்கிலும் வசிக்கும் ரவிசங்கர் குருஜியின் பக்தர்கள், சர்வதேச வாழும் கலை மையத்திற்கு படையெடுத்து வருகின்றனர். ‘உலக அமைதிக்காக குருதேவுடன் இணைந்து உலகம் தியானிக்கிறது’ என்ற பெயரில், புதிதாக கட்டுப்பட்டு உள்ள தியான மண்டபத்தில் நேற்று தியான நிகழ்ச்சி நடந்தது. ஆன்லைன் மூலமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இணைந்தனர்.

பக்தர்கள் திரண்டதால், வாழும் கலை மையத்தின் சூழல் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை மகிழ்ச்சி, இசை, பக்தி, ஆழ்ந்த ஒற்றுமை உணர்வால் நிரம்பி வழிந்ததை காண முடிந்தது. மத்திய தொழிலாளர் நல இணை அமைச்சர் ஷோபா, இண்டோ ஆங்கிலேய திருச்சபை செபி மறைமாவட்ட பேராயர் டாக்டர் மார்வின் மேத்யூ, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, இழப்பீடுகளுக்கான ஜனாதிபதியின் சிறப்பு துாதர்கள் எக்வோ ஸ்பியோ, அரமன்சா என்டெஷி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

 இந்நிகழ்ச்சியில் வாழும் கலை மையத்தின் இலவச பள்ளிகளை சேர்ந்த 150 குழந்தைகள் வழங்கிய கலைநிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆலமரம், அரசமரம், வேப்பமரம், மாமரம், அத்திமரத்திற்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் புனித நீர் ஊற்றினார்.

***

உதயநிதியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சட்டமன்றத்தில் சனாதானத்தை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து மே 17 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது .தமிழ் நாட்டின் பல்வேறு நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது . ஏற்கனவே இப்படி பேசியதால் தி.மு.க. ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர் . இப்போது அவர் பேசுவதால் கட்சியே அழிந்து போகும் என்று ஆர்ப்பாட்டத்தினர் கூறினார்கள்.

சென்னை, மதுரை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 4 இடங்களில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் முன்னர் அறிவித்து இருந்தார். அதன்படி நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பதிவில், சட்டமன்றத்தில் தனது முதல் உரையிலேயே கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி பேசியிருப்பது, அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. தொடர்ந்து இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது என்று பதிவிட்டு இருந்தார்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தபோது, சனாதானத்தை ஒழிப்போம் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசி இருப்பது கண்டிக்க தக்கது. ஏற்கனவே ஜாமீனில் இருக்கும் அவர் இதுபோன்ற கருத்துக்களால் இந்துக்களின் வாக்குகளை இழந்து வருகிறார் என்றார்.

***

THF Dr Subhasini with the Copper Plates

ஆனைமங்கலம் செப்பேடுகள் இந்தியாவிடம் ஒப்படைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து விஜயத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் (லீடன் செப்பேடுகள்) அந்நாட்டு அரசால் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 14 ஆண்டுகால இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அரிய பொக்கிஷம் தாய்நாடு திரும்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் நெதர்லாந்து விஜயத்தின் போது, வரலாற்று சிறப்புமிக்க ஆனைமங்கலம் செப்பேடுகள் (லீடன் செப்பேடுகள்) அந்நாட்டு அரசால் முறைப்படி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. சுமார் 14 ஆண்டுகால இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த அரிய பொக்கிஷம் தாய்நாடு திரும்பியுள்ளது

***

.ஆனைமங்கலம் செப்பேடுகள்: சிறப்பம்சங்கள்

காலம்: 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தைச் சார்ந்தவை. முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்தவை. 

எடை மற்றும் அமைப்பு: சுமார் 30 கிலோ எடையுள்ள, 21 செப்புத் தகடுகளைக் கொண்ட தொகுப்பாகும்.மொழி: தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. சோழர்களின் அரச முத்திரையான அமர்ந்த நிலையில் உள்ள புலி மற்றும் பிற சின்னங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஹாலந்து நாட்டின் லெய்டன் நகரிலுள்ள அருங்காட்சியத்தில் இரண்டு சோழர்காலச் செப்பேடுகள் உள்ளன, 21 இதழ்களை கொண்ட செப்பேடு பெரிய லெய்டன் செப்பேடு என அழைக்கப்படுகிறது

(நாகை பெளத்த விகாரம் கட்ட ஆனைமங்கலம் என்னும் ஊரில் உள்ள நிலங்களை தானம் செய்ய இராஜராஜர் பிறப்பித்த ஆணை, இராஜேந்திரரின் காலத்தில் செப்பேட்டில் மாற்றிய விவரங்கள் இதில் உள்ளது)

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் (1700-களின் தொடக்கத்தில்) நாகப்பட்டினம் டச்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, ஃபுளோரென்டியஸ் கேம்பர் என்ற டச்சு மத போதகரால் இந்த செப்பேடுகள் நெதர்லாந்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்னர் இவை நெதர்லாந்தின் லைடன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) பாதுகாக்கப்பட்டு வந்தன.இந்தத் தொன்மையான பொக்கிஷங்களை மீட்டெடுக்க 2023-ல் இந்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. யுனெஸ்கோ (UNESCO) உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர் பேச்சுவார்த்தைகள் தற்போது முழு வெற்றி பெற்றுள்ளன.

****

3 இதழ்கள் கொண்ட சிறிய செப்பேடு, சிறிய லெய்டன் செப்பேடு என அழைக்கப்படுகிறது, இது முதலாம் குலோத்துங்கன் காலத்தை சேர்ந்தது, இதுவும் ஆனைமங்கலத்தில் உள்ள பெளத்த விகாரத்திற்கு நிலம் கொடுத்தது பற்றியதாகும், பெரிய லெய்டன் செப்பேட்டில் உள்ளது மாதிரியே இதிலும் முத்திரை உள்ளது, அதில் இராஜசேசரி வர்மன் ஶ்ரீ குலோத்துங்க சோழனின் ஆணை எனப் பொறிக்கப்பட்டுள்ளது,

கி.பி 1009 ஆம் ஆண்டு நாகையில் பெளத்த விகாரம் கட்டிக்கொள்ள நிலங்களை ஒதுக்கினார் மாமன்னர் இராஜராஜர், இதனை அவரது மகன் இராஜேந்திரர் செப்பு சாசனமாக மாற்றிக் கொடுத்தார்,

முதலாம் குலோத்துங்கனின் இருபதாவது ஆட்சியாண்டில் (1090) இந்த இடத்தில் சில பிரச்சனைகள் வந்துள்ளது, இந்த இடத்தை சிலர் ஆக்ரமித்துள்ளனர், இதனால் அந்த இடத்தில் வரிகள் (பள்ளிச்சந்தம்) வசூலிக்க பெளத்த துறவிகளால் இயலவில்லை, இந்த சூழ்நிலையை உணர்ந்த கடாரத்து அரசன் இதை தீர்த்து வைப்பதற்காக தமது இரு தூதர்களை குலோத்துங்க சோழனிடம் அனுப்பி, பெளத்த விகாரத்திற்கு வரி கட்டாமல் நிலங்களை ஆக்ரமித்தவர்களை வெளியேற்றவும், தங்கள் உரிமைக்கு ஒரு செப்பு சாசனத்தையும் கேட்டு உள்ளனர், இதற்கு குலோத்துங்க சோழன் அனுமதி கொடுத்துதான் இந்த சிறிய லெய்டன் செப்பேடு,

குலோத்துங்க சோழன் ஆயிரந்தளியான ஆகவமல்ல குல காலாபுரம் என்ற ஊரிலுள்ள அரண்மனையின் திருமஞ்சன சாலை மண்டபத்தில் பள்ளிப்பீடம் காலிங்கராயன் என்ற பெயருடைய நாற்காலியில் வீற்றிருந்த போது இந்தச் செப்பேட்டை வழங்க ஆணை பிறப்பித்துள்ளார், தூதுவராக வந்த இருவரது பெயர்கள் ராஜவித்தியாத்ர ஶ்ரீசமந்தா, அபிமானதுங்கா ஶ்ரீ சமந்தா என்பதாகும்,

குலோத்துங்க சோழனின் வாய்மொழி உத்தரவு, சோழ அதிகாரியான இராஜேந்திர சிங்க மூவேந்த வேளாணுக்கு தரப்படுகிறது, அவரும் ராஜ வல்லப பல்லவராயனும் உடனடியாக செயல்பட்டு பெளத்த விகாரத்திற்கு சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்படுகிறது, அதன்படி நிலத்தை தற்போது அனுபவித்து வரும் காணியாளர்கள் என்ற குத்தகைதாரர்கள் நிலத்திலிருந்து வெளியேற வேண்டும், வரிகளை பணமாகவோ, பொருளாகவோ வசூலித்து கொள்ள புத்த விகாரத்திற்கு அனுமதி தரப்படுகிறது, பெளத்த விகாரத்திற்கு ஒன்பது கிராமங்களில் நிலங்கள் ஒதுக்கப்பட்டதையும், பெளத்த விகாரத்தின் நான்கு எல்லைகளும் இச்செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

—subham—

Tags- உலக இந்துமத செய்தி மடல், 17-5-2026

தமிழ் நாட்டின் அதிசய சிற்பங்கள்- Part 3;  சிற்பத்தில் அதிபயங்கர சர்ப்ரைஸ் ! (Post.15,749)

Written by London Swaminathan

Post No. 15,749

Date uploaded in London –17 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Surprise in Tamil Temple sculptures by Artist Silpi from Thirubhuvanam temple near Kumbakonam.

Did the elephant kill the woman and her child?

Surprise! Surprise.

Period: Kulthunga Choza III

***

This is part 3

ஒரு யானை ஒருவனைக் காலடியில் போட்டு நசுக்கிவிட்டது ; இன்னொரு பெண்மணியைத் துரத்தி வருகிறது; அந்தப் பெண் பிழைத்தாளா ? அந்தக் குழந்தை பிழைத்ததா? இப்படி ஒரு திகில் கட்சியை திருபுவனம் கோயிலில் மூன்றாம் குலோத்துங்க கால சிற்பிகள் படைத்துள்ளனர் ; அவனது போர் வெற்றிக்குப் பின்னர் நகரத்தில் புகுந்த யானைகள் செய்த அட்டகாசம் இவை என்று ஓவியர் சில்பி எழுதுகிறார் ; இந்த சிற்பங்களை அவர் தனது தத்ரூப ஓவியங்களால் ஆனந்த விகடன் பத்திரிகையில் பிரசுரித்தார்; அவைகளை விகடன் பிரசுரம் தென்னாட்டுச் செல்வங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது  .

அண்மையில் பத்திரிகையில் வெளியான ஒரு செய்தி ஒரு சோகக் காட்சியை , உண்மைச் சம்பவத்தை, நமக்கு காட்டியது ; ஒரு பெண்மணியை காட்டு யானை ‘சட்னி’யாக்கிவிட்டு அருகில் உட்கார்ந்து இருந்த குழந்தையைத் தாக்காமல் சென்றுவிட்டது ; யானைக்கும் கூடப் பாசம் உண்டு!

யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும் என்னும் பழமொழி நாலடியார் செய்யுளில் வருகிறது ; இது போன்ற சம்பவமும் கேரளத்தில் ஒரு கோவிலில் நடந்தது .

நாலடியார் (பாடல் எண்: 213).

:”யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்

கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;–யானை

அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்

மெய்யதா வால்குழைக்கும் நாய்.”

யானை, தன்னை வளர்த்துப் பழக்கிய பாகன் என்பதை அறிந்திருந்தும், சில சமயங்களில் அவனையே கொன்றுவிடும் குணம் கொண்டது. அதுபோல, பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களின் நட்பு ஆபத்தானது, அவர்களை விட்டு விலகுவதே நல்லது. நாய்க்குத் தன் மீது எறியப்பட்ட வேல் பட்டு உடம்பில் காயம் ஏற்பட்டிருந்தாலும், அந்தத் துன்பத்தை மறந்து, தன்னை வளர்த்தவரைப் பார்த்தவுடன் வாலை ஆட்டிக்கொண்டு அவர் காலடியில் பணிந்து கிடக்கும்.

பல காலம் பழகியவரையே கொல்லும் யானை போன்றவர்களின் நட்பைக் கைவிட்டு, தமக்குத் தீங்கு செய்தவரையும் பொறுத்து அன்பு காட்டும் நாய் போன்றவர்களின் நட்பைத் தேடிப் பெற வேண்டும்

எவ்வளவு சிறு மனிதர்களாக இருந்தாலும், அன்பு காட்டி, துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்களின் நட்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்;.மனிதர்களின் புறத் தோற்றத்தையோ, அந்தஸ்தையோ பார்த்து நட்பு கொள்ளாமல், அவர்களின் உண்மையான அன்பையும் நன்றியுணர்வையும் அடிப்படையாகக் கொண்டு நட்பு கொள்ள வேண்டும் யானையும் நாயும் நமக்கு கற்றுத் தரும் பாடம் இது!

—subham—

Tags- அதிசய சிற்பங்கள், Part 3, அதிபயங்கர சர்ப்ரைஸ் , யானை தாக்குதல், ஓவியர் சில்பி ,யானை அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும்

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-26; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,748)

Written by London Swaminathan

Post No. 15,748

Date uploaded in London –17 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 26

திருக்காரகம்

திருக்காரகம் (காஞ்சீபுரம்)

பெரிய காஞ்சீயில் உலகளந்த பெருமாள் கோவில் ப்ராகாரத்திலேயே உள்ளது.

மூலவர் – கருணாகரப் பெருமாள் நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.

தாயார் – பத்மாமணி நாச்சியார் (ராமாமணி நாச்சியார்) .

தீர்த்தம் – அக்ராய தீர்த்தம்.

விமானம் – வாமன விமானம், ரம்யவிமானம்.

ப்ரத்யக்ஷம் – கார்ஹமஹரிஷி.

மங்களாசாஸனம் –

திருமங்கையாழ்வார் – 2059 – 1 பாசுரம்.

108 வைணவத் தலங்களில் ஒன்றான திருக்காரகம், காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இத்தல மூலவர் கருணாகரப் பெருமாள் ஆவார். திருமங்கையாழ்வார் இத்தலத்தை பாடியுள்ளார். காரகம், ஊரகம், நீரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேச பெருமாள்களையும் சேர்த்து ஒரே பாசுரமாக அவர் மங்களாசாசனம் செய்துள்ளார்.

இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இத்தல இறைவனை ஆணவம் நீங்கும் பொருட்டு பிரார்த்தனை செய்வதுண்டு, பிரார்த்தனை நிறைவேறியதும் இங்குள்ள பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர். இந்த பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம் ஆகும்

***

 பாசுரங்கள் 

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்

காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா

காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்

பெருமானுன் திருவடியே பேணினேனே.

~ திருமங்கையாழ்வார்

தல வரலாறு

கார்ஹ மகரிஷி என்னும் முனிவர் இந்த பெருமாளை குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றார். அவர் பெயராலேயே இந்த திவ்ய தேசம் “காரகம்’ எனப்பட்டது என்பர்.

ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசத்து பெருமாளையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

.திருங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்ய இங்கு எழுந்தருளிய போது இந்தக்கோயிலில் உள்ள திருநீரகம், திருக்கார்வனம் ஆகிய இந்த மூன்று தலங்களும் “திருஊரகத்துடன்’ வந்து விட்டதா? அல்லது வெவ்வேறு இடங்களில் இந்த திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்தாரா? அல்லது எந்த காலச்சூழ்நிலையில் இந்த மூன்று திவ்ய தேசங்கள் இங்கு வந்தது என்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என்ற மூன்று திவ்ய தேசங்கள் உள்ளது. அதாவது ஒரு கோயிலுக்குள்ளேயே 4 திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது. இதைப்போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. திருஊரகத்தை தவிர மற்ற மூன்றும் வேறு இடத்தில் இருந்ததாகவும் பிற்காலத்தில் ஒரே தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் கூறுவதுண்டு.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம். இத்தலத்தில் உள்ள உலகளந்த பெருமாள் வலது கால் ஊன்றி இடது கால் தூக்கிய நிலையில் இருப்பது காண்பதற்கரிய சிறப்பாகும். இக்கோயிலின் எதிரில் உள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜத்துடன் கையில் சங்கு, சக்கரத்துடன் குறிப்பிடத்தக்கது.

—subham—

Tags- திருக்காராகம், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-26; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள்

வள்ளுவர் கூறும் நீடித்து வாழ்வார் யார்? (Post No.15,747)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,747

Date uploaded in London – 17 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

9-5-26 தீபம் இதழில் வெளியான கட்டுரை!l

அறுபது வார்த்தைகளுக்குள் வள்ளுவர் இனம் பிரிக்கும் மனித வாழ்க்கை! –  வள்ளுவர் கூறும் நீடித்து வாழ்வார் யார்வாழ்வார் யார்இருந்தும் இறந்தவர் யார்? 

ச. நாகராஜன் 

அற்புதமான நூலான திருக்குறளில் வள்ளுவர் மனிதனைப் பற்றிய விளக்கத்தைக் கொடுத்து அவன் நீடித்து எப்படி வாழ முடியும் என்ற ரகசியத்தையும் கூறுகிறார். 

முதலில் கை, கால், கண் உள்ளிட்ட அவயவங்களுடன் உயிரோடு நடமாடிக் கொண்டிருந்தாலும் அவன் பிறருக்குச் சேவை செய்தாலே அவனை உயிரோடிக்கும் மனிதன் என்று கூற வேண்டும் என்று கூறுகிறார்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்     (குறள் எண் 214)

பிறருக்கு நன்மை செய்பவனே உயிர் வாழ்பவன். மற்றவர்கள் (உயிரோடு நடமாடினாலும் கூட) அவர்கள் செத்தவருடனேயே சேர்க்கப்படுவர்.

அடுத்து ஒரு விதமான பழியும் இல்லாமல் புகழுடன் வாழ்பவரே வாழ்பவர்கள் என்று தனது அடுத்த இலக்கணத்தைக் கூறுகிறார்.

வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய

வாழ்வாரே வாழா தவர்   (குறள் எண் 240)

அறநூல்கள் அனைத்தையும் இதனுள் அடக்கி விட்ட வள்ளுவர் இசை பட வாழ்; வசையுடன் வாழ்ந்தால் நீ வாழாதவனே என்கிறார்.

அடுத்து மனிதருள் சிறந்த வாழ்க்கையை வாழ்பவர் யார் என்பதற்கு இலக்கணம் கூறுகிறார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர்     (குறள் எண் 1033)

உழவர் பெருமக்களால் அல்லவா உலகம் உணவைப் பெறுகிறது. ஆகவே யார் உழுது பிறர்க்கும் தமக்கும் உணவைத் தர உழுவதை மேற்கொள்கிறாரோ அவரே வாழ்வார், மற்றவர் அவர் பின்னால் சென்று அவர் கொடுப்பதை வாங்கிச் செல்பவரே என்கிறார் வள்ளுவர்.

அடுத்து இல்வாழ்வான் என்று குடும்பஸ்தனைச் சுட்டிக் காட்டி அவனுக்கும் இலக்கணம் கூறுகிறார் வள்ளுவர்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை   (குறள் எண் 41)

இல்லறத்தை நடத்தும் ஒருவன் பிரம்மச்சாரி, வானப்ரஸ்தன், துறவி ஆகிய மூவருக்கும் நிலை பெற்ற துணையாக இருத்தல் வேண்டும் என்பது வள்ளுவரின் கட்டளை.

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை    (குறள் எண் 42)

அது மட்டுமல்ல, துறந்த துறவிகளுக்கு உணவு படைத்தல் வேண்டும். வறுமையாளர்க்கு உணவு வழங்கல் வேண்டும். இறந்தோருக்கு திதி என்னும் நீர்க்கடன் உள்ளிட்டவற்றைத் தவறாது செய்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

அடுத்து

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலான்

பெண்மை நயவாதவன்   (குறள் எண் 147)
என்று கூறுகிறார்.

அறத்தோடு கூடி வாழும் ஒருவன் இன்னொருவனின் மனைவியிடம் பெண் இன்பத்தை விரும்பாதவன் என்று கூறி இராமாயணத்தின் மையக் கருத்தை முன் வைக்கிறார்.

சரி, மனிதனாய்ப் பிறந்தவன் நீடித்து வாழ என்ன செய்ய வேண்டும்.

அதற்கும் வழி கூறுகிறார் வள்ளுவர்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

நிலமிசை நீடு வாழ வேண்டுமா?  அன்புடன் நினைப்பவரது உள்ளக் கமலத்தில் இருப்பவனின் பெருமை பொருந்திய பாதங்களை அடைந்தார் நிலமிசை நீடு வாழ்வார்.   (குறள் எண் 3)

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார் (குறள் எண் 6)

மெய், கண், மூக்கு, வாய், செவி என்ற ஐந்து புல்கன்களின் வழியாக வரும் ஆசையை அறுத்து பொய்யே இல்லாத ஒழுக்க நெறியில் யார் வாழ்கிறாரோ அவர் நிலத்தின் கண் நீடு வாழ்வார் என்பது வள்ளுவர் கூறும் உறுதி!

மனிதனில் உயிருடன் இருந்தாலும் இறந்தவர் யார்,  எப்படி வாழ வேண்டும்.மனிதரில் சிறந்தவர் யார், இல்வாழ்வானின் நெறி என்ன, ஒருவன் நீடு வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை அறுபது வார்த்தைகளுக்குள்ளேயே அடக்கிக் கூறும் வள்ளுவரைப்  பிரமிப்புடன் போற்றத்தானே வேண்டும்!

**

Women won’t Support Orthodox Valluvar-Tirukkural Encyclopaedia Chapter 6 (Kural 51-55) Post 15,746

Tiru Valluvar’s wife Vasuki was a chaste woman; she did miracles. So Valluvar thought all women can do miracles if they worship their husbands. Modern women laugh at Valluvar’s belief.

Written by London Swaminathan

Post No. 15,746

Date uploaded in London –16 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Couplet 55 is controversial one; Valluvar was superstitious. Modern women don’t support Valluvar. They question his statement that HUSBAND IS A SUPER GOD. WE see many more such superstition in Tirukkural. I will point it out when we take such Kurals. He thought that every woman could do miracles like his devoted wife Vasuki.

***

Part 11

Following Translations are used:

1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

2.S M Diaz, I G of Police- SMD Year 2000

3.GU Pope – GUP. Year 1886

4.Suddhananda Bharathiyar- SB

5.EVS Publishers, Singapore- EVS. Year 1986

6.H A Popley – HAP (not full book) Year 1931

7.Tamil Original

************

The Goodness of the Help to Domestic Life 6. வாழ்க்கைத் துணைநலம் – The worth of a wife

51.She is a good helpmate who possesses all the wealth of wifely virtues and spends not beyond the means of her husband –ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933 

***

51.A woman who maintains her family status and manages her household

Well within her husband’s resources, is an ideal wife S M Diaz, I G of Police- SMD Year 2000

***

51.
As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband’s wealth befit, she spends: help – meet is she.
She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state. –GUP. Year 1886

***

51.A good housewife befits the house,
Spending with thrift the mate’s resource —Suddhananda Bharathiyar- SB   
***

51.A wife of excellent virtues who is capable of managing the household within the means of her husband is real household help in home– EVS Publishers, Singapore- EVS. Year 1986

***
51.She is true helpmate of the home who having homely worth

Spendeth within her husband’smeans- HAP (not full book) Year 1931

***

51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX


52.All other blessings avail not, if the wife is devoid of household excellence –ANM+2

***

52.If the wife lacks nobility of character, family life will become bleak;

And then wealth, status and the rest, are of no avail –SMD

***

52.
If household excellence be wanting in the wife,
Howe’er with splendour lived, all worthless is the life.
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing. –GUP
***

52.Bright is home when wife is chaste.
If not all greatness is but waste.         – SB   

***

52. If a wife does not possess the virtues of household life that home will have no happiness, however splendid it may be in other respects– EVS

***

52.If homely worth be lacking in wife

Whatever worth there be, no homelife can be there- HAP

***

52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXX

53.What is there that is lacking in the home that is sweetened by a worthy mate, and what would profit it, were it to be devoid of the charm of virtuous womanhood–ANM+2

***

53. If the wife possesses a noble soul, what more does man want?

If she lacks this, what is there in the life for him?—SMD

***
53.
There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells.
If his wife be eminent (in virtue), what does (that man) not possess? If she be without excellence, what does (he) possess? –GUP

***

53.What is rare when wife is good.
What can be there when she is bad?         – SB   

***
53.If the housewife be of good character, what will the home look like? If she be not such of what use is the home? — EVS

***

53.If she be worthy, what doth ever lack?

If she be worthless, then what else remains?- HAP

***

53. இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

54.And what gift is more precious than a woman, who seeks strength in the citadel of her chastity? –ANM+2

***

54.What greater treasure can there be, than a woman,

Who has the abiding strength of chastity?—SMD

***

54.
If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain?
What is more excellent than a wife, if she possess the stability of chastit ? –GUP

***

54.What greater fortune is for men
Than a constant chaste woman?        – SB   

***

54.What possession of greater value can one have than a wife, if she can be firm in her loyalty to partner in life? — EVS

***

54.What is more precious than the wife

If rugged strength of chastity be hers? – HAP

***

54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

55.Even the clouds as they pass , the behests of a woman they obey, who rising with the sun, worships no other Gods than her Lord–ANM+2

***

55.Even the clouds will obey and pour out rain at the bidding of a wife

Who prefers to worship her husband rather than any other God – SMD

***

55.
No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!
If she, who does not worship God, but who rising worships her husband, say, “let it rain,” it will rain. –GUP

***

55.Her spouse before God who adores,
Is like rain that at request pours– SB   

***
55. A wife who may not worship God but wakes up with worshipful devotion to her husband has the  power to make rainfall at her bidding—EVS

***

55.She who on waking, bows before her spouse and before no other God,

May ask for rain, and rain it will—HAP

***

55. தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

To be continued………………….

Tags- Valluvar, Superstition, Kural 55, Husband is Super God, Women won’t Support Orthodox Valluvar-Tirukkural Encyclopaedia, Chapter 6, (Kural 51-55), Vasuki, Miracles 

Sad Story of Chera King Kanaikkal Irumporai-Purananuru wonders-26, Tamil Encyclopedia-66 (Post No.15,745)

Chera King inside jail was denied water.

Written by London Swaminathan

Post No. 15,745

Date uploaded in London –16 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Item 520 Similes

Puram verse 73 was composed by Choza king Chozhan Nalankilli; it has got two beautiful similes. Kings says if one comes and asks gently, I will give my kingdom and even my life. But if any idiot (enemy king) tried to take it by force, that fellow will suffer like a blind man going into the cave of tiger. He is sure to be mauled to pieces. Second simile is like that; an enemy will suffer like the thorn under the foot of an elephant. Both the similes show the force and conviction of the king

***

Item 521 Tamils’ great Virtue

Tamil kings were ready to give their kingdom, even their life if someone asked for it. We see this in the case of chieftain and great philanthropist Pari. Brahmin poet Kapilar told the three great Kings of Chera, Choza, Pandya kingdoms who laid a siege around Pari’s Parambu hills, that Pari had already donated all the 300 towns in his country. In Mahabharata we see King Karna giving away the life protecting magical shield to a Brahmin.

***

Item 522 Moral of Tamil King

All the Hindu kings from Himalayas to Kanyakumari were allowed to marry more than one woman. This was a must in ancient India to muster strength from as many countries as possible, during war time. They married princesses from neighbouring countries or powerful kingdoms. We see this in Ramayana and Mahabharata. Tamils also did this. But they never went to the prostitutes. Here the king says if he does not defeat the enemies let his garland be crushed by the hugging prostitutes.  This is the moral stature of Hindu kings.

***

Puranānūru 73, Poet: King Chozhan Nalankilli,

If they walk gently and bow down before my fine feet, and plead
with me to grant them gifts, then I will give the rights to my
kingdom embodied by this renowned royal drum.  If they were
to ask me for my sweet life, I would give it to them.  But that fool
who does not praise those with strength in this land and disrespects
me, like a blind man stumbling on a tiger that is clearly seen by
others, will not be able to escape me!

If I do not advance and assault him and cause him distress like
that caused by a thick, long thorn stuck in a foot of a mighty,
bamboo-eating elephant, may my garland be crushed in
the embraces of many women with thick, dark hair who do not
care for me and have no love for me in their faultless hearts!

***

புறநானூறு 73பாடியவர்: சோழன் நலங்கிள்ளிதிணை: காஞ்சிதுறை: வஞ்சினக் காஞ்சி
மெல்ல வந்து என் நல்லடி பொருந்தி,
ஈயென இரக்குவர் ஆயின், சீருடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்,
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்  5
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதேமைந்துடைக்
கழை தின் யானைக் கால் அகப்பட்ட
வன் திணி நீண் முளை போலச் சென்று அவண்  10
வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல் இருங்கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே.

*****

Item 523 Ancient custom of premature births

We already saw poems by Pandya and Choza kings. Here is poem by Chera king Cheraman Kanaikkāl Irumporai- Puram verse 74. He mentioned the ancient custom of Hindu kings followed when a child was born prematurely. Hindu smritis (law books) say that anyone dies before the age of five, must be buried without any ritual; cremation is not required. But if it is the child of a king, then it is buried with the ritual prescribed for an adult king. Kings are supposed to have battle injuries on their bodies; front of the body and not the back. If any one does not have such injury, then the body is cut with a sword symbolically and buried. This was followed even for the foetus. Puram verse 93 also confirms it.

***

Item 524 Honour is greater than life

Ancient kings never hesitated to commit suicide if they lose their respect due to a mistake or a misunderstanding. In the previous Purananuru wonders we saw two kings faced north and starved themselves to death. Here is another sad story in Puram verse 74. Chera king Kanaikkal Irumporai was defeated and imprisoned. He was suffering from thirst and so asked for water. The jailor delayed it just to disrespect. Then he starved himself to death; refused to take the water served late. Justice delayed is justice denied. This anecdote shows the moral calibre of Tamil kings

***

Item 525 Dog simile

Imprisoned Chera king rightly compared himself to a dog. It is a common saying among Tamils to say suffering like a dog (நாய் பட்ட பாடு Naay patta paadu in Tamil )

***

Puranānūru 74, Poet: King Cheraman Kanaikkāl Irumporai, Thinai: Pothuviyal, Thurai: Muthumozhikkānji

1
If an infant died or if a foetus was born as a mass of flesh,
even though they were not adults, my ancestors
treated them as such and cut them with swords. 

2

 It has
now come to this, and I’m sitting here suffering like a
dog in chains, not cut up like a hero, without any mental
strength, and having to plead for water to enemies without
generosity, to calm down the fire in my stomach.  Do parents
in royal families bear children in this world for this?  No
!

***

புறநானூறு 74பாடியவன்: சேரமான் கணைக்கால் இரும்பொறைதிணை: பொதுவியல்துறை: முதுமொழிக் காஞ்சி

1
குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்,

2
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய,
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்  5
தாம் இரந்து உண்ணும் அளவை,
ஈன்மரோ இவ் உலகத்தானே?

***

This is the only poem written by this king.  He wrote this after he was defeated by Chozhan Chenkanān at Kazhumalam.   Legend says that ‘Kalavali Nārpathu’ was written for him after he lost the battle and was imprisoned.  His friend Poykaiyār apparently wrote it as a way to free him from the Chozha king.  There is no mention of this in any of the Sangam poems. Poet Poykaiyār in Natrinai 18 describes the king Cheran Kanaikkāl Irumporai as having plucked the teeth of Moovan, a small-region king and had it embedded on his fortress gate.

***

Item 526 Taxation Policy

Hindu Kings’ taxation policy is mentioned here. In Purm verse 75 King Nalamkilli himself says too much taxation is the policy of inexperienced kings if anyone gets the kingship by sheer luck, that king will collect too much tax.

***

Item 527

Nalamkilli used a rare simile of Netti plant ; வெண்கிடை – sola pith plant, netti plant, கிடேச்சி, Aeschynomene aspera,

***

Puranānūru 75, Poet: King Chozhan Nalankilli,

If a small-minded man who has received sovereignty
since Kootruvan took his ancestors and destiny passed
to him the benefits of ancient victories,
lacks manliness and implores his subjects to pay heavy
taxes, his kingship is a very burdensome one.

But kingship is light as a small piece of delicate netti
twig,
 that dried in the hot sun, that floats in a pond with
scant water,


for a superior man who faces battles with bravery and puts
in great effort with strength.
That is the wealth of kings who own drums and faultless
white umbrellas that rise up to the sky.

*** 

புறநானூறு 75பாடியவன்: சோழன் நலங்கிள்ளிதிணை: பொதுவியல்துறை: முதுமொழிக் காஞ்சி


மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால் தர வந்த பழ விறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு என
குடி புரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின், அது சிறந்தன்று மன்னே,  5
மண்டு அமர்ப் பரிக்கும் மதனுடை நோன் தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், தாழ் நீர்
அறு கய மருங்கின் சிறு கோல் வெண்கிடை
என்றூழ் வாடு வறல் போல, நன்றும்
நொய்தால் அம்ம தானே, மையற்று  10
விசும்புற ஓங்கிய வெண்குடை
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே.

To be continued……………….

Tags- Item 527, Purananuru wonders-26, Tamil Encyclopedia-66  , animal and plant similes , Sad Story of Chera King, Kanaikkal Irumporai

Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-25; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள் (Post.15,744)

Written by London Swaminathan

Post No. 15,744

Date uploaded in London –16 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Part 25

திருக்கள்வனூர்

காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கள்வனூர் (கள்வப்பெருமாள் திருக்கோயில்) காமாட்சி அம்மன் கோவிலுக்குள் அமைந்துள்ளது.

திருக்கள்வனூர் (கள்வப்பெருமாள் கோயில்) 108 வைணவ திவ்ய தேசங்களில் 55-வது தலமாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற, ஆதிவராகப் பெருமாள் நின்ற கோலத்தில் அருளும்

மூலவர்: கள்வப்பெருமாள் (ஆதிவராகப் பெருமாள் – நின்ற திருக்கோலம்)

தாயார்: அஞ்சிலை வல்லி நாச்சியார் (சவுந்தர்யலட்சுமி)

தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி

விமானம்: வாமன விமானம்

சிறப்பு: காமாட்சி அம்மன் கருவறைக்கு அருகில், ஒரு சைவக்கோவிலுக்குள் அமைந்திருக்கும் வைணவத்தலம்

பெருமாள் மகா லட்சுமியின் அழகை ரசித்து “கள்வன்” (திருடன்) போல மறைந்திருந்து பார்த்ததால், இங்கு கள்வப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற, ஆதிவராகப் பெருமாள் நின்ற கோலத்தில் அருளும் இத்தலம், கணவன்-மனைவி ஒற்றுமை மற்றும் செல்வம் பெருக வழிபடப்படுகிறது.

இந்தத் திருத்தலத்தைப் பற்றி திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தை (பாசுரம்: 1018) மங்களாசாசனம் செய்துள்ளார்.

திருக்கள்வனூர் பாசுரம் (பெரிய திருமொழி 2.9.2):

“கலைதரு ஞானத் தொடும்அறி வான்கருத்துடை ஒருவனைநிலையுடை மூவுல கத்தவன் கள்வன்நீரகத் தாயவென் னாதேஅலைகடல் மாகட லுள்அன்று துயின்றஅப்பனை யெனக்கருள் செய்தமலையன தோள்மதன் காமக்கள்வனூர் அஞ்சிலை நாச்சியாரே.”

திருமங்கையாழ்வார் இந்தத் தலத்தில் எம்பெருமானை ‘கள்வன்’ என்றே அழைத்து, அவர் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோவிலுக்குள், அஞ்சிலைவல்லி நாச்சியார் சமேதராகத் தென்கிழக்கு நோக்கி ‘ஆதிவராகப் பெருமாள்’ (கள்வப்பெருமாள்) ஆக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் என்பதைப் பாடியுள்ளார்.

சைவக் கோவில்களுக்குள் பாடல் பெற்ற பெருமாள் கோவில் (திவ்ய தேசம்) அமைந்திருப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் தலத்திலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் மட்டுமே. முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த திவ்யதேசம் காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே ஒரு தூணுக்கு இடையில் சந்நிதி போன்ற ஒரு சிறிய இடத்தில் அமைந்துள்ளது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். மூலவர் ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள் (கள்வப்பெருமாள் ) நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கிய அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். தாயாருக்கு தனி சன்னதி இல்லை. ஏகாம்பரேஸ்வரர்   கோவிலில்  திரு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் தாயாருடன் இணைந்திருப்பதை போல், இத்தலத்திலும்  தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார் பெருமாளுடன் இணைந்திருக்கின்றார். முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

மகாலட்சுமி, ஒருமுறை தனது அழகைப் பற்றி அகங்காரம் கொண்டபோது, விஷ்ணு அவளுக்கு சாபமிட்டார். சாபத்தால் தன் அழகை இழந்த மகாலட்சுமி, அதை மீண்டும் பெறுவதற்காக காமாட்சி அம்மனை நாடினாள். அப்போது, மகாலட்சுமியும் காமாட்சியும் பேசிக் கொண்டிருந்ததைக் கள்ளத்தனமாக விஷ்ணு மறைந்திருந்து கேட்டார். இதை அறிந்த காமாட்சி, விஷ்ணுவை ‘கள்வன்’ என்று செல்லமாக அழைத்தார். அதனால், இந்தக் கோவிலில் பெருமாள், கள்வப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

திருக்கள்வனூர் பெருமாளை வணங்குபவர்களுக்கு, இழந்த அழகு, செல்வம், கணவன்-மனைவி ஒற்றுமை ஆகியவை திரும்பக் கிடைக்கும்.  திருகள்வனூர் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால் அண்ணன் – தங்கை ஒற்றுமை சிறப்பாக அமையும் என்பத ஐதீகம். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வம் என்பதால், பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் ஏதும் கிடையாது. தனியாக விழாக்களும் கிடையாது.

–subham—

Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-25; திவ்யதேசம்-லண்டன் சுவாமிநாதன் படங்கள், திருக்கள்வனூர்

மரணத்தைக் கண்டு அஞ்சாதே – சத்ய சாயிபாபா அருளுரை! (Post.15,743)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,743

Date uploaded in London – 16 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!

மரணத்தைக் கண்டு அஞ்சாதே –

புருஷனும் புருஷோத்தமனும் – ஶ்ரீ சத்ய சாயிபாபா

அருளுரை!

நாகராஜன்              

22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!

வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட 

தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது 

அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால் 

அதை அறிந்து கொள்ள முடியவில்லை.  அவர்கள் உடனே ஒரு டாக்டரை 

அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப் 

புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர்.  தான் சம்பாதித்த பணைத்தை 

எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது 

பிள்ளைகள் அனுமானித்தனர்.  ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக 

அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு 

எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?

‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது  

கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா? 

விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது  அவன் தலையை 

அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க 

நேர்ந்தது!

அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது.  நீங்கள் பீஷ்மரைப் போல மரணம்    அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும்   போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க  அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார்.  மரணம் என்பது 

பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ 

அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே 

கிடையாது.  நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது. 

அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று. 

பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து 

விட்டது.  சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச் 

சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம்.  ஆனால் மனிதனோ மரணம் என்பது  தூரத்தில் இருக்கும் ஒரு     துயரம் என்று நினைத்து நடக்கிறான். 

அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது           கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம  கடன்களை உணரும் தருணம் அது       என்றும் கூறித் தேற்றுகிறோம்.  ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து 

தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள 

முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!

அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான்.  ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற   நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன் 

இருக்கிறான்.

 பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.     

ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும்    புருஷன் அல்ல.  புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை      உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும் 

மனதிலிருந்து அகற்றி மனதைச் சுத்தமாக்குகிறது.  உள்ளிருக்கும் பானம் 

மட்டுமல்ல, பாத்திரமும் சுத்தமாக்கப்பட வேண்டும்.  அப்படி இல்லையென்றால்  எவ்வளவு நேரம் ஸ்மரணமும் தியானமும் செய்தாலும் கூட  அவை பலனைத் 

தராது.  

ஆகவே தான் வேதங்கள் பிராமணர்களிடம்  மிகக் கடுமையான 

விதிகளுடனும் ஒழுக்கக்கட்டுப்பாடுடனும் ஒப்படைப்பட்டது. அப்படிப்பட்ட 

ஒழுக்கக் கட்டுப்பாடுடன் மனம் சுத்தமாக்கப்படவில்லை என்றால் வேதங்களைக் கற்றுப் பயனில்லை.

My Research Articles on Dreams (Post No.15,742)

Written by London Swaminathan

Post No. 15,742

Date uploaded in London –15 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

PDF Dream article is from the  Ludwik Sternbach Felicitation Volume.

Lord Vishnu “sleeping” in Nepal

Recently I read an article about dreams in Milinda panha (Questions of Indo Greek King Menander/Milinda). I have translated it into Tamil and uploaded in these blogs. I am attaching the PDF English version here.  Please see the attachments.

Hindus’ interpretation of dreams varies from Westerners like Sigmund Freud and Carl Jung  (pronunciation Karl Young).

Tamils said that animals too dream in Sangam literature dated 2000 years ago. Sanskrit literature has prophetic dreams. Saivite literature like Periya Puranam has a lot of prophetic dreams. I post here the contents of My Book on Dreams to help research scholars.

***

Hindu tradition interprets dreams as significant, often prophetic messages derived from ancient literature like the Vedas and Tamil Sangam texts. These sources indicate that dreams are viewed as divine communication, omens for the future, and, as noted in 2000-year-old Tamil texts, experiences shared by animals.

MY ENGLISH BOOK ON DREAMS

Contents

First Part: Dreams in Hindu Literature

1.Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- 1

2.Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 2

3.Tamil Hindus Explode Freudian Theory on Dreams

4. Dreams in Tamil Epic Silappadikaram

5.Dreams in Valmiki Ramayana

6. Role of Dreams in Tamil Saivite Literature

7.Ten “Inauspicious Deams”; Dreams in Vedas and Upanishads!

8.Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams

9.More ( Dream) Secrets from Vishnu Sahasranama

10.Tamil Discovery! Do Animals Dream?

11.Do our Dreams Have Meaning?

12.Strange Dreams

****

Second Part: Animals in Hinduism

1.One More Frog Wedding, Now in Telangana

2.Ants in Hinduism- Part One

3.Ants in Hinduism – Part Two

4.What can Parrots teach You?

5.Tamil View on Biting Dogs and Barking Dogs!

6.You will be born as a Dog Tamil Saint Tirumular Warns!

****

Book cover shows a painting of British painter Frederic Leighton. The painting of the sleeping beauty is in the Sydney Art Gallery.

*****

Foreword

Hindus and western scholars view dreams differently. Hindus believe that dreams come true under certain circumstances. They also find meaning in the dreams. Moreover, they believe that they foretell good or bad things. Vast literature in Hinduism supports these views. Western psycho analysts and psychologists think that they have no meaning, and they can’t predict future events. In their opinion dream is the reflection of suppressed desires or jumbled thoughts. Hindus were first in saying that no one can avoid dreams. So, they included a verse in their daily prayer to stop bad dreams.

Here is a collection of articles that I wrote in my two blogs in the past few years. I also believe that Carl Jung and Sigmund Freud are wrong in their conclusions. I have given reasons for this in my articles.

The second part of the book deals with Animals in Hindu literature. I have already published a few books in Tamil and English with many true animal stories and myths from Tamil and Sanskrit literature. These articles will be useful to researchers and religious believers

I welcome your comments on these topics.

S Swaminathan

(Pen Name- London Swaminathan)

May 2025

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

—subham—

Tags- Dreams, Milinda panga, my book on dreams, Ludwik Sternbach Felicitation Volume, Part two

கனவு பற்றிய சுவையான உரையாடல் (Post No.15,741)

Written by London Swaminathan

Post No. 15,741

Date uploaded in London –15 May 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Picture: Mayadevi dream

மிலிந்த பன்ஹா  என்ற நூல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளைஇலக்கிய உதயம் நூலில் விளக்கமாக எழுதியுள்ளார் ; இந்த நூலிலும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அதை இடைச் செருகல் என்று சிலர் சொல்லுவார்கள்.

மிலிந்த பன்ஹா =  மிலிந்தனின் கேள்விகள்’ என்று பொருள்படும்;

.உரையாடுபவர்கள்: மன்னர் மிலிந்தன் மற்றும் பௌத்த ஞானி நாகசேனர்.

நோக்கம்: பௌத்த தத்துவத்தின் கடினமான கருத்துக்களை, எளிமையான விவாதங்கள் மற்றும் உவமைகள் மூலம் விளக்குவது.

கனவு பற்றிய உரையாடல் பகுதியின் சில கருத்துக்களை இங்கு காண்போம் ; அதை ஆங்கிலத்தில் ஒருவர் எழுதியுள்ளார் இந்த நூலிலுள்ள 4, 5, 6, 7 ப்குதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக கருதப்படுகிறது; அதில்தான் கனவு பற்றிய உரையாடல் கிடைக்கிறது

***

இந்த நூலின் பின்னணி  

மிலிந்த பன்ஹா (Milindapanha) மிலிந்தனின் கேள்விகள்’ என்பது கி.மு. 100 – கி.பி. 200 காலகட்டத்தில் பாலி மொழியில் எழுதப்பட்ட மிக முக்கியமான பௌத்த இலக்கிய நூல். இது இந்தோ-கிரேக்க மன்னர் மிலிந்தன் (மெனாண்டர்) மற்றும் பௌத்த முனிவர் நாகசேனர் ஆகியோருக்கு இடையிலான உரையாடல் வடிவில் பௌத்த தத்துவங்களை விளக்குகிறது

மன்னரின் குழப்பங்களுக்கு நாகசேனர் தர்க்கரீதியான மற்றும் நகைச்சுவையான பதில்களை வழங்குகிறார், இது இறுதியில் மன்னரை பௌத்த மதத்தை ஏற்க வைக்கிறது.பௌத்த தத்துவங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நூல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

***

1

மிலிந்தனின் கேள்வி :

மரியாதைக்குரிய நாக சேனர் அவர்களே ! இந்தப் பூவுலகில் ஆண்களும் பெண்களும் கனவு காண்கிறார்கள் ; கெட்ட கனவுகளும் நல்ல கனவுகளும் எல்லோருக்கும் வருகின்றன; முன்னால் ஒருவர் செய்த செயல்களையும், செய்யாத செயல்களையும் அதில் காண்கிறோம்; பல வடிவங்களில், பல வண்ணங்களிலும் கனவுகள் தோன்றுகின்றன. அருகிலும் தொலைதூரத்திலும் நடந்தவை தெரிகின்றன; சில இன்பம் பயக்கின்றன; சில அச்சுறுத்துகின்றன . கனவுகள் என்றால் என்ன ? இவைகளை யார் யார் காண்கிறார்கள் ?

நாகசேனர் பதில்

அவை நம் மனதில் தோன்றுபவை; ஆறு வகையான மனிதர்கள் கனவுகளைக் காண்கிறார்கள்; மன உறுதியில்லாதவர்கள்களும்,  கபம் உள்ளவர்களும், பித்தம் அதிகரித்தவர்களும், மனப்பயிற்சி செய்வோரும், தேவர் அருள்பெற்றோரும், எதிர்காலத்ததை அறிவோரும் கனவுகளைக் காண்கிறார்கள . வருங்காலத்தை உணர்த்தும் கனவுகளே உண்மையானவை; ஏனையவை  பலிக்காத கனவுகளே !

எனது கருத்து – புத்தர் பிறக்கப்போவதை அவரது தாயார் பல சின்னங்கள் மூலம் அறிந்த கனவு மிகவும் பிரசித்தமானது ; பெளத்த சின்னங்களில் ஓவியமாகவும் சிற்பங்களாகவும் இடம்பெற்றுள்ளன ; ஆகவே அதை ஒட்டி இந்தப் பதில் அமைந்துள்ளது ; ஆனால் கனவுகளின் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் இந்துக்களே  ; கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கனவுகள் பற்றி   சிக்மண்ட்  பிராய்ட் (Sigmund Freud: In his 1899 book, The Interpretation of Dreams), Carl Jund கார்ல யங் ஆகியோர் இது பற்றி விளக்கினார்கள்; அதற்கு முன்னர் கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் பேசினாலும் விஞ்ஞான விளக்கம் இல்லை. மனிதர்கள் எல்லோரும் கனவுகள் கண்டே ஆக வேண்டும் என்பது நவீன கொள்கை; இதை அறிந்த இந்துக்கள் வேத காலம் முதல் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்ற பிரார்த்தனையை தினசரிப் பிரார்த்தனையில் சேர்த்துள்ளார்கள்; பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளிலும் கெட்ட கனவுகளை அகற்றுங்கள் என்று வேண்டுகின்றனர் ;அதாவது நல்ல  கனவுகள் வரட்டும் என்பதே பொருள்; ஆகவே கனவுகள் வந்தே தீரும் என்பதை முதலில் அறிந்தவர்கள் இந்துக்களே!

***

2

மிலிந்தனின் கேள்வி :

நீங்கள் சொல்லும் வருங்கலத்தை அறிவிக்கும் கனவுகளை யாராவது நமக்குக் கொண்டு வருகிறார்களா ? நாமாக அதை நாடுகிறோமா ? அல்லது அதுவாக நமக்கு ஏற்படுகிறதா ?

நாகசேனர் பதில்

மன்னனே ! கனவுகளை யாரும் நமக்கு கொண்டுவருவதில்லை; நாமாக அதை நாடி ஓடுவதும் இல்லை ; வருங்காலம் பற்றி ய செய்திகள் அதுவாக வருகின்றன; நீங்கள் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கிறீர்கள்; நீங்களாக அதற்குள் நுழையவில்லை ; யாரும் உங்களைக் கொண்டுபோய் நுழைக்கவும் இல்லை ; யார் பார்க்கிறார்க்ளோ அதன் பிரதிபலிப்பு  அங்கே இருக்கிறது அது போலத்தான் கனவுகள்.

***

3

மிலிந்தனின் கேள்வி :

நாகசேனரே ! அப்படியானால் கெட்டது நடக்கப்போகிறது அல்லது நல்லது வரப்போகிறது என்று மனதுக்கு முன்னரே தெரியுமா?

நாகசேனர் பதில்

இல்லை மன்னா ! மனதுக்கு எதுவும் தெரியாது ; ஒருவர் காணும் நல்ல அல்லது கெட்ட கனவுகளை ஏனையோரிடம் சொல்கிறோம்; அவர்கள் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள்  .

***

4

மிலிந்தனின் கேள்வி :

மரியாதைக்குரிய நாக சேனர் அவர்களே  !

உடலில் சில மச்சங்களும் வடுக்களும் தோன்றுகின்றன ; அவைகள் சாதகமானவை அல்லது பாதகமானவை, மகிழ்ச்சி தருபவை அல்லது துக்கம் விளைவிப்பவை, மானம் அல்லது அவமானத்தைக் கூறுபவை அல்லது புகழையோ இகழ்ச்சியையோ உண்டாக்குபவை என்றெல்லாம் சொல்கிறார்களே. அவைகளுக்கு அது தெரியுமா ?

நாகசேனர் பதில்

இல்லை மன்னா ! அவைகளை வருங்காலம் உரைக்கும் ஆரூடக்காரர் கர்களிடம் காட்டும்போது அவைகள் உடலில் தோன்றி ன்றியுள்ள இடத்தை வைத்துப் பொருள் கற்பிக்கிறார்கள் ; அது போலத்தான் கனவுகளும் ; மனதுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது; நல்லதோ கெட்டதோ நடக்கும் போதுதான் கண்ட  கனவுகளையும் அவன் பிறரிடம் சொல்கிறான் ; அப்போது அவர்கள் அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்

***

5

மிலிந்தனின் கேள்வி :

கனவு காணும்போது ஒருவன் விழிப்பு நிலையில் உள்ளானா அல்லது தூக்கத்தில் இருக்கிறானா?

நாகசேனர் பதில்

கனவு காணும்போது விழிப்பும் இல்லை ; உறங்கவும் இல்லை ; தூக்கம் சொக்கும் நிலையில் சுய நினைவற்ற நிலையை அடைவதில்லை; தூங்கிய பின்னர்  சுய நினைவற்ற நிலையை அடைகிறான் . அப்போது மனம் வேலை செய்யாது; அதனால் அவனுக்கு துன்பமோ இன்பமோ இல்லை; எளிதில் பாதிக்கும் மனம் இல்லாத, உறுதியான மனம், உடையோருக்கு இது பொருந்தாது . இருள் சூழ்ந்தவிடத்தில் கண்ணாடி யிலும் நிழல் விழாது ; முகம் தெரியாது ; அது போலவே மனதுக்கும் பாதிப்பு இல்லை ; அப்போதும் உடலுக்குள் மனம் இருக்கத்தான் செய்கிறது.

உடல்தான் கண்ணாடி;

உறக்கம்தான் இருள்;

மனம்தான் ஒளி ;

இன்னும் ஒரு உதாரணம்

மூடுபனி இருக்கும் பொது சூரிய கிரணங்கள் நுழைவத்தில்லை ஆனால் அப்போதும் சூரியன் ஒளியை வீசிக்கொண்டுதான் இருக்கிறான் ;அது போல மனம் சுயநினைவற்ற நிலையில் காண்பதில்லை .

உடல்தான் சூரியன் ;

உறக்கம்தான் மூடுபனி ;

மனம்தான் சூரிய  ஒளி .

***

6

மிலிந்தனின் கேள்வி :

உறக்கத்துக்கு துவக்கம்இடை நிலை, முடிவு என்று ஏதேனும் இருக்கிறதா?

நாகசேனர் பதில்

பலவீனமும் களைப்பும் வேறு எதையும் நினைக்க முடியாத நிலையும்  தூக்கத்தின்  ஆரம்பம் ஆகும் .

பாதி உறக்கம் , பாதி விழிப்பு உள்ள நிலையானது குரங்குத் தூக்கம்ஆகும்  — தமிழில்   கோழித் தூக்கம்என்போம்  – இது இடை நிலை ஆகும்.அப்போது கனவுகள் வரும். அந்த நிலையில் புலன் அடக்கமுள்ள ஞானமுள்ள மனிதன் பிரச்சனைகளை சிந்தித்து தீர்வு காண்கிறான் . விழிப்பு நிலையிலும் அரைத்தூக்கத்துக்குச் சென்று இதைச் செய்யலாம்.

எனது கருத்து

இங்கு மனம் என்று சொல்லும் இடத்தில் நாம் நமது உடல் என்று கொண்டால் எளிதில் பொருள் விளங்கும் ; அதாவது கனவுகள் உடலைப் பாதிப்பது இல்லை ; மிகவும் கஷ்டப்பட்டதாகக் கனவு கண்டுவிட்டு முழிப்பு வந்தவுடன் அப்பாடா ! நான் கண்டது கனவுதான் ; உண்மையில்லை என்று பெருமூச்சு விடுகிகிறோம்

இன்னுமொரு கருத்து:

இந்த அரைத்தூக்கம் என்பதை சிந்தனை என்று சொல்லலாம் ; நாம் பல நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில்  சில சரியான முடிவுகளை எடுக்கிறோம்

வேறு விளக்கமும் இருக்கலாம் ; ஏனெனில் முற்காலம் அல்லது வருங்காலம் உரைப்போரிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தியான நிலைக்குச் சென்று நிகழப்போவதைச் சொல்வதை நானே கண்டுள்ளேன் ; இதை சிலர் விஷயத்தில் மட்டும் ஞானிகள் கையாளுகிறார்கள்

எடுத்துக்காட்டாக, காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம்   எம் எஸ் சுப்புலட்சுமி விடை பெற்றுக்கொண்டபோது இப்போது போக வேண்டாம் என்று சொன்னவுடன் அவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது; சுவாமிகள் சொன்னதை மறுக்கவும் முடியாது; மறுநாள் கச்சேரிக்கு ஒப்புக்கொண்டதை மாற்றவும் முடியாது; ஆனால் மறுநாள் பத்திரிக்கைகளில் வந்த செய்தி இந்தியாவையே உலுக்கியது ; அரியலூரில் ஆற்றுவெள்ளத்தில் ரயில் அடித்துச் செல்லப்பட்டு பல நூறு பேர் ஜல சமாதி அடைந்தனர் ; உடனே ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமாச்  செய்தார் ; அந்த ரயிலில்தான் எம் எஸ் சும் பயணம் செய்வதாக இருந்தது ; இது போல நூற்றுக் கணக்கான சம்பவங்கள் உண்டு ; ஞானி கள் தியானம் செய்யும்போது விழிப்பும் இல்லை; உறக்கமும் இல்லை ; வேறு எவர் என்ன சொன்னாலும் அவர்கள் காதில் விழுவதுமில்லை ; அவர்களுக்கு முன்னால்  நாம் செய்யும் சேட்டைகளை அவர்கள் பார்ப்பதும் இல்லை ; இதைத்தான் நாக சேனர் விளக்குகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது  

கனவு பற்றி பெரிய புராணம் முதலிய நூல்களில் கதைக்கு கதை வந்துகொண்டே  இருக்கிறது. இந்துக்கள் போல கனவுகளை ஆராய்ந்தோர் இல்லை; மேலும் பிராய்ட் , யங் ஆகியோரின் கொள்கைகள் முழுவதும் சரி என்றும் சொல்வதற்கில்லை. இந்துக்களின் கனவு பற்றிய கொள்கையை யாரோ பிற்காலத்தில் நாக சேனர் உரையாடலில் சேர்த்துவிட்டார்கள்!! 

–subaham—

Tags :கனவு , சுவையான உரையாடல்,மிலிந்த பன்ஹா  , நாகசேனர்