Homer 15,693 lines and Valmiki 48,000 lines! (Post No.5347)

 

 

Homer 15,693 lines and Valmiki 48,000 lines! (Post No.5347)

 

Compiled by London swaminathan

Date: 21 August 2018

 

Time uploaded in London – 8-26 AM (British Summer Time)

 

Post No. 5347

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Hindus have two great epics Ramayana and Mahabharata; of these two Ramayana is older and Mahabharata is larger. There is nothing in the world that is not touched by Veda Vyasa, author of Mahabharata. Ramayana is famous for its simplicity and superb story.

A comparison with other great epics of the old world will give an idea of their enormous size.
Mahabharata has 2,20,000 lines
Ramayana has. 48,000 lines
Homer’s Iliad has 15,693 lines
Virgil’s Aeneid has 9868 lines
Iliad + odyssey together contain 30,000 lines

Professor Monier Williams says, “ Ramayana is undoubtedly one of the greatest treasure in Sanskrit literature. The classical purity, clearness and simplicity of  its style, the exquisite touches of true poetic feeing with which it abounds, its graphic descriptions of heroic incidents, nature’s grandest scenes, the deep acquaintance it displays with the conflicting workings and most refined emotions of the human heart, all entitle it to rank among the most beautiful compositions that appeared at any period or any country”.
“There are many graphical passages in the Ramayana and Mahabharata, which for beauty of description cannot be surpassed by anything in Homer,… that the the diction f Indian epics is more polished, regular and cultivated, and the language altogether in a more advanced stage of development than that of Homer”.

 

“The battle fields of the Ramayana and Mahabharata are not made barbarous by wanton cruelties, and the description of Ayodhya and Lanka imply far greater luxury refinement than those of Sparta and Troy. Ramayana and Mahabharata rise above the Homeric poems also in the fact that a deep religious meaning appears to underlie all the narrative, and that the wildest allegory may be intended to conceal a sublime moral, symbolizing conflict between good and evil, teaching hopelessness of victory in so terrible a contest with purity of souls, self-abnegation and the subjugation of passions.

Did Homer copy Ramayana?

Some critics hold that the Ramayana is the original of Iliad that the latter is only an adaptation of the former to the local circumstances of Greece; that Homer’s description of the Trojan war is merely a mythological account of the invasion of Lanka by Ram Chandra. The main plot, of course, is the same. Troy stands for Lanka (Tabropane), Sparta for Ayodhya, Menelaus for Rama, Paris for Ravana, Hector for Indrajit and Vibhishan; Helen for Sita, Agamemnon for Sugriva, Patroclus for Lakshmana, Nestor for Jambavan. Achilles is a mixture of Arjuna, Bhima and Lakshmana.

 

Anterior to Homer, Greek literature has no existence, even no name, and it is difficult to believe that, without any previous cultivation whatever, some of the highest and the noblest work in the whole range of literature should come into existence. The English literature did not begin with Milton, nor the Roman with Virgil; nor does the Sanskrit with Valmiki or Vyasa, as the Greek does with Homer.

 

M.Hippolyte Fauch, in the French translation of the Ramayana, says that, “Ramayana was composed before the Homeric poems’ and that Homer took his ideas from it.”

 

Schlegel calls ‘Ramayana the noblest of epics’.

Sir William Jones says,
“The Ramayana is an epic poem on the story of Rama, which, in unity of action, magnificence of imagery and elegance of style far surpasses the learned and elaborate work of Nonnus” .

 

(Nonnus was an Egyptian poet of Hellenized Egypt of fifth century CE. His epic on Dionysus contain 20,426 lines in Greek language)
After giving the argument of the Ramayana, with his usual moderation, Professor Heeren says, “Such in few words, is the chief subject of Ramayana, while the development and method of handling this simple argument is so remarkably rich and copious as to suffer little from a comparison in this respect with the most admired productions of the epic muse.”

 

Professor Dowden says, “Juliet is but a passionate girl before this perfect woman meaning Brutus’ Portia, but what becomes of Portia herself before this heavenly woman, this ethereal being, this celestial Sita?”

        

Stamps on Homer and Virgil

Source Book:- Is Hindu A Superior Reality, Krishan Lal Jain, Akshat Publications, 1989

–subham–

 

பாபர் ஆட்சியில் பசுவின் கால் சடங்கு!! (Post No.5346)

WRITTEN by London swaminathan

Date: 21 August 2018

 

Time uploaded in London – 6-54 AM (British Summer Time)

 

Post No. 5346

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

மொகலாய மன்னர்களில் பாபர் (1483-1530) முதலாமவர். அவர் காலத்தில் துருக்கி இனத்தவர்கள் பழைய கால பழக்க வழக்ககங்களை அப்படியே பின்பற்றி வந்தனர். அவை எல்லாம் இஸ்லாமிய மதம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னமே இருந்தவை. பாபர், முஸ்லீமாக இருந்த போதும் அந்த வழக்கங்களைப் பின்பற்றியது அவர் பற்றிய பாபர் நாமா புஸ்தகத்தில் உள்ளது.

 

பாபர் தனது சுயசரிதையை அவரது சாகதாய் மொழியில் எழுதினார். அவர்  தைமூரின் கொள்ளுப்பேரன். அக்பரின் தாத்தா. இதனால் அக்பர் காலத்தில் பாபர் நாமாவை ஓவியமாக வரைந்து தர அக்பர் ஆணையிட்டார். அவை இப்பொழுது டில்லியில் தேசீய மியூஸியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் இந்துக்களின் புனித தெய்வமான பசுவைப் பற்றிய ஒரு அதிசயப் படம் உள்ளது. துருக்கி-இராக் பகுதிகள், வேத கால அரசர்களின் கீழ் இருந்ததால் இந்த வழக்கம் வேத கால வழக்கமாகவும் இருக்கலாம். கி.மு 1400 வாக்கில் துருக்கி வரை இந்துக்களின் ஆட்சி பரவி இருந்தது.

 

 

பாபர் நாமாவில் நாலாவது படத்திலுள்ள காட்சி இதோ:

 

“மன்னர் குதிரையிலிருந்து இறங்கினார். அவருக்கு முன்னால் ஒன்பது அலங்காரச் சின்னங்கள் இருந்தன. ஒரு மொகலாய வீரன் பசுவின் காலில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டி அதன் மறு முனையை தன் கையில் பிடித்திருந்தான். மேலும் மூன்று வெள்ளைத் துணிகள் ஒன்பது அலங்காரக் கம்பங்களில் மூன்றில் கட்டப்பட்டன. அவைகளில் ஒரு வெள்ளைத் துணியின் மீது பாபர் நின்றார். அப்பொழுது பசுவில் கால் துணியைப் பிடித்திருந்தவன், ஏதோ சில உச்சாடனங்களை அவனது பாஷையில் மொழிந்தான். அப்பொழுது அவன் அந்த ஒன்பது அலங்காரக் கம்பங்களைப் பார்த்து ஏதோ முத்திரைகளைக் காட்டினான். மன்னனும் மற்ற பெரியோர்களும் குதிரையின் பாலை அந்தச் சின்னங்கள் மீது ப்ரோக்ஷனம் செய்தனர் (தெளித்தனர்). உடனே பின்னால் நின்ற படை வீரர்கள் போர்க்கால வெற்றி முழக்கமிட்டனர். இதை அவர்கள் மூன்று முறை செய்தார்கள். அப்பொழுது வாத்தியக் காரர்கள் முரசுகளை அடித்து எக்காளமிட்டனர். இந்த வாத்ய கோஷத்துக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் கோஷமிட்டவாறே அந்தச் சின்னங்களைச் சுற்றி ஓடி வந்தார்கள்.”

இந்த சடங்கு புதிய மன்னர்களை வரவேற்று அங்கீகாரம் அளிக்கும் சடங்கு ஆகும்.

இந்த வழக்கம் செங்கிஸ்கான் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டதற்கான சான்று உளது.

 

எவ்வாறு கிறிஸ்தவ மதம் பரவிய நாடுகளில் எல்லாம் பழங்கால வழக்கங்கள் அந்த மதத்தில் இணக்கப்பட்டனவோ அவ்வாறே இன்றும் இஸ்லாமிய நாடுகளில் குறிப்பாக வேத கால மன்னர் ஆட்சி நடந்த துருக்கி-இராக்-ஈரான் பகுதிகளில் உள்ளன. முஸ்லீம் மதத் தலைவர்கள் கண்டிப்பதனால் மறைவாக அவைகளைச் செய்கின்றனர். அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

கிருஷ்ணனின் யாதவ குலத்தில் 12-ஆவது மன்னனான கஜன் என்ற மன்னன் ஸ்தாபித்த நகர்தான் ஆப்கனிஸ்தானத்திலுள்ள கஜினி. அங்கிருந்து முகமது என்ற மன்னன் குஜராத் மீது 17 முறை படையெடுத்து சோமநாத சிவலிங்கத்தை உடைத்து அதன் கீழேயிருந்த தங்கம் வைரம் எல்லாவற்றையும் கொள்ளை அடித்ததை நாம் அறிவோம். அந்த கஜினி நகரம் யாதவ குல மன்னர்களின் கீழ் 101 தலைமுறைக்கு மேல் இருந்தது. அதன் 74ஆவது மன்னன் கஜ சிங். அவனது காலத்தில் அவர்கள் கஜினியிலிருந்து வெளியேற்றப்பட்டு ஹிமாசலப் பிரதேசத்திலுள்ள ஜ்வாலாமுகிக்கு வந்தனர். அதில் ஒருவன் சாலிவாஹனன் என்ற மன்னன். அவன் சாலிவாஹனபுரத்தை ஸ்தாபித்தான். அதன் பெயர் சாலாபுரம் என்றும் சியால் கோட் என்றும் மருவின; இப்பொழுது சால்கோட் (டை) பாகிஸ்தானில் உள்ளது. சாலிவாஹனனனுக்கு பத்து மகன்கள். அவர்களில் ஒருவன் பட்டி.  அந்த பட்டி என்போன் மீண்டும் கஜினியை வென்று 101 தலைமுறை ஆட்சியைக் கொண்டாட ஹரோத் என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டினான்.

 

எவ்வாறு புத்த மதத்தினர், இலங்கையிலுள்ள ராமாயண சின்னங்களை மறைத்தனரோ அவ்வாறே முஸ்லீம்கள் ஆட்சி ஏற்பட்ட ஈரான் முதல்- இந்தோநேஷியா வரை இந்துச் சின்னங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவை அந்த நாடுகளின் மியூஸியங்களில் இன்றும் உள. அவைகளை அறவே ஒழித்தால் அந்த நாடுகளின் வரலாறு எல்லாம் முகமது நபிக்குப் பின்னர் என்று ஆகிவிடுமே என்று அஞ்சி, இன்னும் மியூஸியங்களில் பழம்பொருட்களை வைத்துள்ளனர். பாமியன் புத்தர் சிலைகளையும் இராக்கில் உள்ள புனிதச் சின்னங்களையும் சமீப காலங்களில் இஸ்லாமிய தீவிரவாதிகள் அழித்ததை நாம் பத்திரிக்கைகளில் படித்தோம். எஞ்சியுள்ளவைகளை விரைவில் புகைப்படம் எடுத்து அவற்றின் வரலாற்றை எழுதுவது இந்துக்களின் கடமை.

 

-சுபம்–

‘பாரதி கண்ட சித்தர்கள்’– பாரதியார் நூல்கள் – 56 (Post No.5345)

WRITTEN BY S NAGARAJAN

Date: 21 August 2018

 

Time uploaded in London – 4-56 AM (British Summer Time)

 

Post No. 5345

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 56

சி.எஸ்.முருகேசனின் ‘பாரதி கண்ட சித்தர்கள்

 

ச.நாகராஜன்

 

புதுச்சேரி வாழ் பாரதி அன்பர் சி.எஸ். முருகேசன் எழுதியுள்ளபாரதி கண்ட சித்தர்கள் மகாகவி தன் வாழ்வில் கண்ட சித்தர்களை அறிமுகம் செய்யும் அழகிய நூல்.

190 பக்கங்கள் கொண்ட இந்த நூலின் முதல் பதிப்பு 2002ஆம் ஆண்டில் குறிஞ்சி, சென்னை-49இன் வெளியீடாக வந்துள்ளது.

     பாரதி சித்தர், ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள், கோவிந்த ஞானி, யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகள்,குள்ளச்சாமி சித்தர், கடற்கரையாண்டி, மௌனச் சாமியார், மிளகாய்ப் பழச் சாமியார், மகான் அரவிந்தர், ஸ்ரீ அன்னை ஆகிய பத்து அத்தியாயங்களை இந்த நூல் கொண்டுள்ளது.

புதுச்சேரியில் பல இடங்களுக்கும் சென்று பலரையும் சந்தித்து பாரதி கண்ட சித்தர்களின் சுவை மிகு வரலாற்றை ஆசிரியர் நூலில் நயம்படத்தொகுத்துத் தருகிறார்.

பாரதியை, தேசியக் கவிஞன் பாரதியாக, கதாசிரியன் பாரதியாக, கட்டுரையாளன் பாரதியாக, அரசியல்வாதி பாரதியாக, ஆன்மீகவாதி பாரதியாக, சீர்திருத்த செம்மல் பாரதியாக,பெண் விடுதலை கோரும் புரட்சியாளராக, பத்திரிகையாளராகப் பல பேர் கண்டாலும் சித்தன் பாரதியாக காணவில்லை என்னும் குறையை இந்த நூல் போக்குகிறது.

‘எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா,

யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டிலே’                  என்ற வரிகள் மூலம் தன்னை சித்தனாக அறிவித்துக் கொள்ளும் பாரதியார் பல சித்தர்களைக் கண்டு பல சுவையான அனுபவங்களையும் உபதேசங்களையும் பெற்றுள்ளார்.

பாரதியாரின் ஆத்ம பலத்தை விளக்கும் வகையில் அவர் வாழ்வில் நடந்த சுவையான மூன்று சம்பவங்களை விவரமாக நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் தருகிறார்.

அதில் ஒரு பகுதி:

“விடிந்தால் பொங்கல் பண்டிகை. பாரதியின் கையிலோ பைசா கூட இல்லை. பண்டிகை நாளும் அதுவுமாக வீடு துடைத்துக்  கொண்டிருந்தது. பாரதியின் மனைவியான செல்லம்மாளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

 

கவிதைகளில் மூழ்கியிருந்த பாரதியாரிடம் தெரிவித்ததற்கு ‘எல்லாம் பராசக்தி பார்த்துக்குவாள்’ என்று சொல்லிவிட்டார்.

என்ன செய்வது. விதிப்படி ஆகட்டும் என்று அந்த அம்மாளும் சோர்வாக உட்கார்ந்து விட்டாள்.

அன்று மாலை புதுச்சேரி பிரபல ஜவுளிக் கடையின் முதலாளியான முதலியார் அனுப்பி வைத்ததாக பாரதியாருக்கு வேஷ்டி, துண்டு, குழந்தைகளுக்கான பாவாடை, சட்டை, அவர் மனைவிக்கான புடவை முதலியவற்றை ஒருவன் கொண்டு வந்து கொடுத்தான்,

இத்தனைக்கும் அந்த முதலியார் அவருக்குச் சாதாரண அறிமுகந்தான். நான் இப்படியொன்றும் கேட்கவில்லையேப்பா? என்று பாரதி சொல்லிப் பார்த்தார். ‘இது மாதிரி பெரியவங்களுக்கு எங்கள் முதலாளி அனுப்பி வைக்கிறது வழக்கமுங்க’ என்று சொல்லிக் கொண்டே போய் விட்டான்.

மற்றொரு கடைக்காரன் (கடற்கரை சிநேகம்) வெற்றிலை, பாக்கு, பழங்கள், இனிப்பு யாவும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போனான்.

இவைகளைப் பார்த்து வீட்டிலுள்ளோர் அதிசயப்பட்டுக் கொண்டு இருந்தனர். பாரதியாருக்கு வேறொரு கவலை வந்து விட்டது. பண்டிகை முடிந்ததும் பால் பொங்கிற்றா? என்று கேட்டு வருபவர்களை எப்படி வெறுங்கையுடன் அனுப்புவது? யோசனையில் அவர் உழன்று கொண்டிருந்தார்.

 

அன்றிரவு ஊரே உறங்கிக் கொண்டிருந்த வேளையில் பாரதியார்  உறக்கமில்லாமல் தவித்தார். நடுநிசி. யாரோ கதவைத் தட்டினார்கள். பாரதியார் தான் சென்று கதவைத் திறந்தார். அவருக்கு அறிமுகமில்லாத ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

“இப்பொழுது தான் சொப்பனத்தில் பராசக்தி வந்து, என் கையிலிருக்கும் சில்லறையை உங்களிடம் கொடுத்து வரச் சொன்னாள்’ என்று சொல்லி ஐந்நூறு ரூபாய் சில்லறைப் பொட்டணத்தைப் பாரதியாரின் பாதங்களில் வைத்து நமஸ்கரித்தெழுந்தார்.

இதைக் கண்டு பாரதியாருக்குப் புல்லரித்துப் போயிற்று. அந்த ஆளைப் பற்றி விசாரித்ததற்கு ஏதோ முத்தியால் பேட்டை நெசவாளி என்று சொல்லிக் கொண்டு போய் விட்டார்.

அதன் பிறகு பாரதியார் தூக்கம் கலைந்து விளக்கைப் பெரிதாக்கி வைத்துக் கொண்டு பராசக்தி மேல் பாட்டு எழுத உட்கார்ந்து விட்டார். மறு நாள் பொங்கல் பண்டிகை அவர் வீட்டில் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.’ (இந்த சம்பவத்தை திரு சம்பந்தம் எழுதிய ‘புதுவையில் பாரதி’ – பக்கம் 181-182 இலிருந்து எடுத்துத் தருகிறார் நூலாசிரியர்)

இதே போல சித்தபிரமை பிடித்த புதுச்சேரி தமிழ் வித்வான் பங்காரு பத்தரின் மகனைச் சரியாக்கிய சம்பவமும் நூலில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகள் வரலாறு பலரும் அறியாத ஒன்று. இவரைப் பற்றி பாரதியார் விளக்கமாக எழுதியுள்ளார். ஆனால் அவரது வாழ்க்கை வரலாறைச் சுருக்கமாக நூலாசிரியர் பல சம்பவங்களுடன் விவரிக்கிறார்.

1837ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுவாமிகள் ஜீவ சமாதி எய்தினார்.

இன்றும் அவரது குருபூசை ஆண்டு தோறும் வைகாசி மாதம் 15ஆம் தேதி அவரது சமாதியில்- சித்தர் கோவிலில் – நடை பெறுகிறது.

கோவிந்த ஞானி என்ற அத்தியாயம் பாரதியார் பாடிய

‘வன்மை திகழ் கோவிந்த ஞானி – பார்மேல்

யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்’ என்ற வரிகளில் உள்ள கோவிந்த சித்தரைப் பற்றி விளக்குகிறது.

ஒருநாள் கருவடிக்குப்பத்தில் தனிமையில் பாரதியார் தனது தந்தையைப் பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த கோவிந்தஞானி சித்தர் அங்கிருந்த குளத்து நீரில் அவரது தந்தையாரின் திருமுகத்தைக் காண்பித்தார். பின்னர் அவரது தாயாரின் வடிவத்தையும் பாரதியார் கண்டார்.

இதை அவர், “முனி ஒருநாள் இறந்த எந்தை தன்னுருவங் காட்டினான், பின்னே யென்னைத் தரணிமிசைப் பெற்றவளின் வடிவமுற்றான்” என்ற வரிகளால் குறிப்பிடுகிறார்.

 

யாழ்ப்பாணத்துச் சாமியார் ஸ்ரீ கதிர்வேலு சுவாமிகளைப் பற்றி நான்காம் அத்தியாயம் விவரிக்கிறது.

மாங்கொட்டைச் சாமி எனப்படும் குள்ளச்சாமி சித்தரின் தொடர்பு பாரதியாருக்கு அவர் புதுச்சேரியில் தங்கியிருந்த இறுதி நாட்களில் கிடைத்தது. ஸ்ரீ அரவிந்தரின் சீடர்கள் புதுச்சேரியில் அவருடன் கடற்கரையில் கூடியிருந்த ஒரு சமயத்தில் குள்ளச்சாமி பைத்தியத்துடன் உங்கள் நண்பர் பாரதியார் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று ஒரு சீடர் கூறிய போது அரவிந்தர், அவரை சாதாரண மானுடராக எண்ணாதீர்கள், அவர் ஒரு மகான் என்று கூறினார்.

அந்த சித்தர் பாரதியாருக்கு செய்த உபதேசம் பற்றிய சம்பவத்தை குள்ளச்சாமி சித்தர் என்ற அத்தியாயம் தருகிறது.

இன்னும் மௌனச் சாமியார் பற்றியும் பெண் சாமியாரான மிளகாய்ப் பழச் சாமியாரைப் பற்றியும் நூலில் காண்கிறோம்.

மகான் அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆகிய அத்தியாயங்களில் சுவை மிகு தகவல்களைப் பெறுகிறோம்.

பாரதியாரின் கவிதா ஆவேசத்திற்கு ஸ்ரீ அரவிந்தரின் நட்பும் ஒரு முக்கிய காரணம். ரிக் வேத சூக்தங்களில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவற்றை அவரிடமிருந்து பாரதியார் கற்றார். பாரதியாரிடமிருந்து அரவிந்தர் தமிழ் மொழியைக் கற்றார்.

இப்படி பல தகவல்களை நூல் முழுவதும் காண முடிகிறது.

பாரதியாரைச் சித்தர் என்ற நோக்கில் பார்க்கும் இந்த நூல் பாரதி இயலில் ஒரு முக்கிய நூல். ஆய்வு செய்து இதை எழுதியுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர்.

பாரதி அன்பர்கள் இதைத் தங்கள் பாரதி இயல் நூலகத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

***

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும் பெரிது… (5344)

WRITTEN by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 20-23 (British Summer Time)

 

Post No. 5344

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

பெரியது கேட்கின்….. ஏனிட் பெரிது, அதனினும் பெரிது இலியட், அதனினும்  பெரிது… (5344)

 

இன்று அவ்வையாரிடம் யாராவது அவ்வையே இதிஹாசங்களில் எது பெரிதோ? என்று கேட்டால்,

ஐயனே உலகில் பழமையானதும் பெரிதுமான நூல் ரிக் வேதம்; அதில் 40,000 வரிகள் உள்ளன.

ஆனால் நீவீர் இதிஹாசம் பற்றிக் கேட்டதால் அது பற்றி மட்டும் செப்புவேன் கேளீர்:

Image of Virgil

பெரிது பெரிது வர்ஜிலின் ஏனிட் (Aeneid of Virgil) ,

அதனினும் பெரிது ஹோமரின் இலியட்

(Iliad of Homer)அதனினும் பெரிது வால்மீகியின் ராமாயணம்;

அதனினும் பெரிது வியாஸரின் மஹாபாரதம்

 

அதனினும் பெரிது எங்கும் இல்லை, இப்போதும் இல்லை!

 

தாங்க்ஸ் (Thanks), அவ்வை என்று சொல்லி விடைபெற்றால் பல உண்மைகள் புலப்படும்.

 

வர்ஜில் என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரோமானிய புலவர். அவர் எழுதிய காவியம் ஏனிட். அது லத்தீன் மொழியில் உள்ளது அதிலுள்ள வரிகள்- 9868

 

இதற்கு முன், கி.மு 800-ஐ ஒட்டி கிரேக்க மொழியில் ஹோமர் இரண்டு இதிஹாசங்களை இயற்றினார். அவற்றில் இலியட்டின் வரிகள் 15,693. இத்தோடு ஆடிஸி (Odyssey)  என்ற அவரது காவியத்தையும் சேர்த்தால் சுமார் 30,000 வரிகள்தான் வரும். அதற்கு முன் கிரேக்க மொழியில் எந்தப் படைப்பும் இல்லை. ஆனால் இலியட் காவியத்துக்கெல்லாம் முன் மாதிரியாக விளங்கிய வால்மீகி ராமாயணத்தில் 48,000 வரிகள். இதை விட மஹாபாரதம் பெரிது. 2,20,000 வரிகள். அதில் வியாஸர் சொல்லாத, பேசாத விஷயம் எதுவும் இல்லாததால், ‘வியாச்சோசிஷ்டம் ஜகத் ஸர்வம்’ (வியாஸரின் எச்சில்தான் உலகம் முழுதும்) என்பர்.

 

இந்துக்களின் கணக்குப்படி வால்மீகி ராமாயணமே முதல் காவியம். அதில் புத்த மதம் பற்றி ஒரு குறிப்பு இருப்பதாகச் சொல்லி அதை பின்னுக்குத் தள்ளுவர் வெளிநாட்டு ‘அறிஞர்கள்’.

 

மஹாபாரதத்தில் புத்த மதம், சமண மதம் பற்றிய குறிப்புகள் இல்லாமையால் அதை முன் வைப்பர். ஆனால் உண்மையில் எளிமையான காவியமான ராமாயணமே முதல் காவியம். இந்துக்கள் பயன்படுத்தும் ஸ்லோகம் என்பதே வால்மீகியின் சோகத்திலிருந்து வந்ததாக கதையும் உண்டு.

மஹா    பாரதத்துக்குப் பெருமை சேர்க்கும் இரண்டு விஷயங்கள்-

அதிலுள்ள பகவத் கீதை

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

 

ராமாயணத்தைப் பார்த்து, அல்லது அதைக் கேட்டு, கிரேக்க நாட்டுக்கு ஏற்ப ஹோமர் ஒரு இதிஹாசம் எழுதினார் என்று சில இலக்கிய விமரிசகர்கள் பகர்வர்:-

ட் ரோ ஜன் யுத்தம்= ராம ராவண யுத்தம்

ட் ராய் நகரம் = லங்கா

ஸ்பார்டா = அயோத்யா

மெனெலஸ் = ராமா

பாரிஸ்= ராவணா

ஹெக்டர் = இந்திரஜித் அல்லது விபீஷணன்

ஹெலன் = சீதா

அகமெம்னன்= சுக்ரீவா

பட் ரோ ஸியஸ்=  லக்ஷ்மணன்

நெஸ்டர்= ஜாம்பவான்

அகில்லிஸ் = அர்ஜுனா+,,,,,,,,மா+ லக்ஷ்மணா

என்று ஒப்பிடுவர்.

இது ஒருவேளை மிகைப்படுத்தப்பட்டது என்று கருதுவோரும் ஒரு விஷயத்தை மறக்க மாட்டார்கள் லத்தீன், கிரேக்க மொழிகளில் காவியங்களோ இதிஹாசங்களோ தோன்றும் முன் இலக்கியம் கிடையாது. ஸம்ஸ்க்ருதத்திலோ இதிஹாஸத்துக்கும் முன்னதாக பிரம்மாண்ட வேத கால இலக்கியம் உண்டு.

ராமாயண, மஹாபாரத இதிஹஸங்களைப் புகழாத இந்தியவியல் (Indologists) அறிஞர் எவருமிலர்.

 

–சுபம்–

Mogul king Babar and Cow Goddess (Post No.5343)

Compiled by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 9-21 AM (British Summer Time)

 

Post No. 5343

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Mogul kings followed strange customs. Though they were Muslims they believed in local customs. Akbar did worship Sun God like Hindus. But not many people knew what Babar did.

Picture shows Babur standing on a strip of white cloth. In the foreground is an old mogul soldier holding a piece of cloth which he has tied to the leg of a cow. In the background trumpets are being sounded and drums beaten.

 

Turks worshiped goddess Shakti before waging a war. Akbar got Babar Nama painted during his reign. Some of the paintings were printed by the National Museum, New Delhi under the title, ‘Paintings of the Babar Nama’, and the plate no.IV has a note which runs as follows,

The moguls observed rules and ceremonies which were laid long ago by Chengiz Khan. For each clan, a place was fixed in battle array. One of the ceremonies was acclamation of nine standard s which is described by Babar thus,
“The standards were acclaimed in mogul fashion. The khan dismounted and nine standard s were placed in front of him. A mogul tied a long strip of white cloth to the thigh bone of a cow and the other end in his hand. Three other long strip of white cloths were tied to the staves of three of the nine standard s, just below the yak tails and their other ends brought for the khan to stand on one end for me and Sl. Muh. Khanika to stand each one of the two others. The mogul who had hold of the strip of cloth fastened to the cow’s leg then said something in Mughal while he looked at the standard s and made signs towards them. The khan and those present sprinkled Quntiz ( fermented mares milk) in the direction of the standards , hautbois and drums were sounded towards them, the army flung the war -cry out three times towards them, mounted and cried it again and rode at the gallop around them.

In the picture one can see two domes with Trisula on their top, which must have been a temple of goddess Shakti. This is the remnant of Bharatiya Yadhuvamsi rulers.

The whole ritual is un- Islamic and was prevalent among Chugatai Turks till Babar s period.
There is a belief that Maharajah Gaja was twelfth from Lord Krishna, the Yadava ruler, and he founded the city of Gazni after his name following the defeat of his enemies. He defeated the forces of Ruma and Khurasan ( Turkey and Iran ) . He ruled from Mathura to Kabul and Lahore was also under his rule. From Maharajah Gaja to Gaja Singh III , for 74 generations, they ruled Gazni under different vicissitudes.

Having been dislodged from Gazni, one of their descendents Shalivahana sent his family to Jvalamukhi in Himachal Pradesh and founded Shalivahanpur or Salpur, identified with modern Sialkot . He had ten sons and one of them Bhatti recaptured Gazni and constructed a fort at Haroth to celebrate 101 generations of their rule in the region. All these are recorded in their family history.

Even if we discard all the exaggerations we can see some glorious history of the Yadava rulers from the time of Krishna’s predecessors.

 

Source Book: Glimpses of Bharatiya History, R S Kushwaha


–Subham–

 

ரிக்வேத ஆராய்ச்சியில் கிடைத்த ஒன்பது விஷயங்கள்! (Post No.5342)

Research Article by London swaminathan

Date: 20 August 2018

 

Time uploaded in London – 7-44 AM (British Summer Time)

 

Post No. 5342

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

கடந்த 150 ஆண்டுகளாக வேதங்கள் பற்றி வெளியான புஸ்தகங்கள் எண்ணிலடங்கா. அவை பெரும்பாலும் ஆங்கிலம், ஹிந்தி மொழியிலோ ஜெர்மானிய பிரெஞ்சு மொழிகளிலோ இருக்கின்றன. கடல் போலப் பெருகிக் கிடக்கின்றன. தமிழில் இத்தகைய ஆராய்ச்சிப் புத்தகங்கள் மிகக் குறைவு; வேத மந்திரங்களின் மொழி பெயர்ப்பு மட்டுமே ஆர். ஜம்புநாதன் முதலியோரால் வெளியிடப் பட்டுள்ளன. ஆனால் அதை ஆராயாமல் அப்படியே மந்திர மொழி பெயர்ப்பையே கொடுத்துள்ளனர். நான் இது வரை படித்த புத்தகங்களில் கண்ட ஒன்பது சுவையான செய்திகளைத் தருகிறேன்.

 

1.மன்னர்களின் தம்பிமார்களில் ஓரிருவர் பிராஹ்மண ரிஷிகளாக மாறி , ரிஷி வம்ஸத்தை ஸ்தாபித்தனர் என்று

புருஷோத்தம் லால் பார்கவா எழுதிய நூலில் சொல்கிறார்:

!

தமிழிலும் இதற்கு உதாரணம் உண்டு; சேரன் செங்குட்டுவனின் தம்பி இளங்கோ, துறவியாக மாறி, நமக்கு சிலப்பதிகாரத்தைத் தந்துள்ளார்.

2.அடுத்த சுவையான செய்தி ஈரானிலும் சுமேரியாவிலும் பல வேதகாலப் பெயர்கள் காணப்படுவதாகும். ஸுமுகன் என்ற ஒரு கெட்ட மன்னனின் பெயர் இரண்டே இடங்களில்தான் காணப்படுகின்றது. தீய செயல்களினால் அரசாட்சியை இழந்த மன்னர் பட்டியலில் சுமுகன் என்றொரு மன்னனின் பெயரைச் சொல்கிறார் மநு. இது விநாயகர் முதலிய பல கடவுள்களைக் குறிப்பிடும் நாமம். ஆனால் புராதன இந்தியாவில் இப்படி ஒரு மன்னன் பெயர் கிடையாது! சுமேரியாவில் மட்டும் இந்தப் பெயர் காணப்படுகிறது!

 

பழங்காலத்தில் பெண் கொலை புரிந்த நன்னன் என்ற தமிழ் மன்னனைப் போற்றிப்பாட எல்லா சங்கப் புலவர்களும் மறுத்துவிட்டனர். அது போல சுமுகனையும் கிடப்பில் போட்டுவிட்டனர் ஸம்ஸ்க்ருதப் புலவர்கள்.

 

3.மற்றொரு மர்மமான பெயர் நாபாகநேதிஷ்டா. இந்தப் பெயரே ஒரு விநோதமான பெயர். ஸம்ஸ்க்ருத அர்த்தப்படி ‘மநுவுக்கு அடுத்தவன்’ என்பது பொருள். இவன் ஒரு மநுவின் புதல்வன். முறை தவறிய செயல்களில் ஈடுபட்டதால் இவனுக்கு மநுவும் நாபாகனின் சஹோதர்களும் சொத்து விஷயத்தில் பங்கு தர மறுத்து விட்டார்களாம். அந்தக் காலத்திலேயே இப்படி ஒரு குடும்பத் தகராறு!! இந்தப் பெயர் சுமேரிய,அஸீரியப் பெயர்களுடன் தொடர்புடையது. இவனைப் பற்றிய குறிப்புகள் ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் வருகிறது.

அக்நேதன் (Akhenaten of Egypt) போன்று நாபாகநேதிஷ்டானும் சமயப் புரட்சி செய்திருக்கலாம். ஏனெனில் இது போல எகிப்தில் அக்நதனும் (ஏக நாதன்) சுமேரியாவில் ஒரு மன்னனும் புரட்சி செய்தவுடன் அவர்கள் பதவி பறிபோனது அது போல நாபாக நேதிஷ்டன், சுமுகன் போன்றோரும் சமயப் புரட்சி செய்தனரா என்று ஆராய வேண்டும்.

 

4.ரிக் வேதத்தின் எட்டாவது மண்டலம் புதிர்கள் நிறைந்தது. இதில் வரும் பலபூதன் என்ற மன்னன் பிராஹ்மணர்களுக்கு பசுக்களோடு ஒட்டகங்களையும் தானம் செய்தான். இவன் ஈரான் பகுதியைச் சேர்ந்தவன். ரிக்வேதப் பாடல்கள் ஈரான், ஆப்கனிஸ்தான், துருக்கி, தற்போதைய பாகிஸ்தான், இந்தியாவில் விதர்ப தேசம்- கங்கைச் சம்வெளி, மங்கோலிய வம்ஸத்தினர் வசிக்கும் திபெத், சீனா வரையுள்ள விஷயங்களை விவாதிக்கிறது. இது மிகப்பெரிய பகுதி. இவ்வளவு பெரிய பகுதியை உலகில் வேறு எந்தப் பழைய நூலும் பிரஸ்தாபிக்கவில்லை!!!

 

  1. வேதத்தில் வரும் ‘தாஸ’, ‘அநாஸ’ ஆகிய சொற்களுக்கு வெளிநாட்டினர் தவறான பொருள் கொடுத்து, ஆரிய-திராவிடர் என்று பிரித்துப் பொய் சொன்னதால், சிந்துவெளி எழுத்தைப் படிக்க முடியவில்லை. தாசர் என்றால் அடிமை போல வேலை செய்வோர். இது கிரேக்க சாம்ராஜ்யத்தில் உண்டு. பெரிய புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் சரிதத்தில் உண்டு. இதற்கும் ஆரிய- திராவிட என்ற பிரசாரத்துக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. இதே போல ‘அநாஸ்’ என்றால் மூக்கு அற்றவர் என்று பொருள். ஜப்பானியர், சீனர் போன்ற மங்கோலிய இன மக்களுக்கு மூக்கு சப்பையாக இருக்கும்; மூக்கு இருப்பதாகவே தோன்றாது ஆகையல் இதை அநாஸ ( மூக்கு அற்றவர்) என்று வேதங்கள் சொல்லும். ஒரு பக்கம் திராவிடர்களுக்கு போண்டா மூக்கு என்று எழுதிய வெள்ளைக்கார்கள் ‘மூக்கற்ற’ என்ற சொல்லையும் திராவிடர் மேல் ஏற்றிவிட்டனர்.

 

  1. மற்றொரு அதிசயம் துருக்கி நாட்டில் கி.மு 1380-ஆம் ஆண்டு மிட்டனி நாகரீக(Mitanni Civilization) களிமன் கல்வெட்டில் வேத காலப் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதாகும்! வேத கால மன்னர்களின் பெயரில் உள்ள ‘பிரதர்தன’ என்ற மன்னர் பெயர் மிட்டனி மன்னர்களின் பட்டியலில் உளது. நாம் தினமும் படிக்கும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் ரிக் வேதத்திலும் உளது.

 

7.ரிக் வேதத்தில் ‘சிந்துத்வீப’ என்பது ஒரு ரிஷி/மன்னரின் பெயர். இந்த மாதிரி பெயர் மஹா பாரதத்திலும் வருகிறது. சிந்து தேச ராஜா ஜெயத்ரதன் பற்றி மஹாபாரதத்திலும் காணலாம். ஆக, வேத காலத்தில் இருந்த மன்னர்களின் பெயர்களை பிற்காலத்தவரும் பயன்படுத்தினர். இது ரிக்வேத- சிந்து சமவெளி நாகரீகத்தை உறுதிப் படுத்திகிறது.

8.ரிக் வேதத்தில் பல்வேறு வம்ஸாவளியைச் சேர்ந்த 160 மன்னர்களின் பெயர்கள் உளது. எனது ஆங்கிலக் கட்டுரையில் அனைவர் பெயரும் உள. இவர்களுக்கு வெள்ளைக்காரர் போல 20 ஆட்சி ஆண்டு வீதம் கொடுத்தால் 3000 ஆண்டுகளைக் கடந்து விடும்; ஆனால் ஒரே நேரத்தில் பல தேசங்களில் பல மன்னர்கள் ஆண்டிருக்கலாம். ஆக 500 முதல் 1000

ஆண்டுக் கால வரலாறு இது!

9.மீனவ மன்னன் , துமுசி, சம்மட போன்ற சுமேரியப் பெயர்கள், வெள்ளம் பற்றிய அதர்வன வேதக் குறிப்பு ஆகியனவும் ஒப்புநோக்கதக்கது.

–SUBHAM–

 

வாஸ்து சாஸ்திரம்- ஸ்ரீ கணபதி ஸ்தபதி! (Post No.5341)

WRITTEN BY S NAGARAJAN

Date: 20 August 2018

 

Time uploaded in London – 5-50 AM (British Summer Time)

 

Post No. 5341

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

ஹிந்து உன்னதம்

 

வாஸ்து சாஸ்திரத்தை உன்னத நிலைக்கு ஏற்றிய ஸ்ரீ கணபதி ஸ்தபதி!

 

ச.நாகராஜன்

 

 

 

வாஸ்து சாஸ்திரம் ஹிந்து வாழ்க்கை முறையின் உன்னத சாஸ்திரங்களுள் ஒன்று.

 

பூவுலகில் பிறந்தோர் அனைவரும் தங்கள் வாழ்க்கையைத் திறம்பட சிறப்பாக அமைத்துக் கொள்ள வைக்கும் இந்த சாஸ்திரம் காலம் காலமாக விஸ்வகர்மா குலத்தினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

 

 

இந்த குலத்தில் பிறந்து இந்தக் கலையின் உண்மையை உலகெங்கும் பறை சாற்றியவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் ஸ்ரீ கணபதி ஸ்தபதி ஆவார்.

 

1927ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி பிள்ளையார் பட்டியில் வைத்தியநாத சிற்பிக்கும் வேலம்மாளுக்கும் மகனாகப் பிறந்த கணபதி ஸ்தபதி தன் முன்னோர்களின் பாதையில் சென்று வாஸ்து கலையைச் செவ்வனே பயின்றார்.

இவரது முன்னோர்களில் ஒருவரான ராஜ ராஜ பெருந்தச்சன் பத்தாம் நூற்றாண்டில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் வேண்டுகோளுக்கு இணங்க பெரிய கோயிலை – பிரஹதீஸ்வரர் ஆலயத்தை – சிற்ப சாஸ்திரத்திற்கேற்ப அமைத்தவர்.

வாஸ்து சாஸ்திரத்தைத் தன் தந்தையாரிடமிருந்தும் தனது மாமா செல்லக்கண்ணு ஸ்தபதியிடமிருந்தும் இவர் பயின்றார்.

மாமல்லபுரத்தில் உள்ள கட்டிடம் மற்றும் சிற்பக் கலைக்கான அரசுக் கல்லூரியில் 27 வருடங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று  திறம்பட அதை நடத்தி வந்தார்.

 

 

சிற்பக் கலை நலிவடைந்திருந்த நிலையில் அதைக் காத்து அதன் சிறப்புக்களை உலகிற்கு உணர்த்த வேண்டிய கால கட்டத்தில் வாழ்ந்த அவர் இதை சவாலாக ஏற்று வாஸ்து சாஸ்திரத்தின் மாண்பை காலத்திற்கேற்ப புதிய உச்சத்தில் ஏற்றினார்.

1988இல் பணி ஓய்வு பெற்ற பின்னர் வாஸ்து சாஸ்திரத்தின் மூலநூல்களையும் முறைகளையும் ஆராய்ந்து அதற்காக வாஸ்து வேத ஆய்வு மையத்தையும் அமைத்தார்.

 

ஏராளமான கோவில்களை புராதன சாஸ்திரம் சற்றும் வழுவாது அமைத்தார்; பெரும் புகழைப் பெற்றார்.

 

இவரது அரிய சாதனையைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு இவருக்கு 2009ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை வழங்கிக் கௌரவித்தது. இன்னும் பல விருதுகள் இவரைத் தேடி வந்தன.

 

இவரது நுட்பமான திறமையை உலகில் உள்ள அனைவரும் மதித்தனர். அமெரிக்காவில் சிகாகோ, வாஷிங்டன் டி.சி. (சிவா – விஷ்ணு கோவில்), கெண்டுகி, போஸ்டன்,பால்டிமோர், சான்பிரான்ஸிஸ்கோ, ஹவாய் (சமரச சன்மார்க்க இறைவன் கோவில்) ஆகிய இடங்களில் கோவில்களை அமைக்க இவரை அங்குள்ளோர் அழைத்தனர். அவரும் இதை ஏற்று கோவில்களை சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைத்தார்.

 

பிரிட்டன், சிங்கப்பூர், மலாசியா, மரிஷியஸ், சீஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோவில்களையும் வடிவமைத்தவர் இவரே.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை,சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக வளாகம், ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை,முதல் சிற்பியான மயனுக்கு மாமல்லபுரத்தில் சிலை உள்ளிட்டவை இவரது மதிநுட்பத்தாலும் கைவண்ணத்தாலும் ஏற்பட்டவையே.

 

 

ஏராளமான வாஸ்து சாஸ்திர நூல்களை எழுதியுள்ள இவர் குறிப்பிடும் பழைய புராதன ஹிந்து சிற்ப சாஸ்திர நூல்கள் பல.

மானசாரம் குறிப்பிடும் 32 நூல்களின் பட்டியலை இவர் தந்துள்ளார்:

 

விஸ்வகர்மீயம், விஸ்வம், விஸ்வசாரம், ப்ரபோதம், விருத்தம்

மயமதம், த்வஷ்டா தந்த்ரம், மனுசாரம்,நலம், மானவிதி,

மானகல்பம், மானஸாரம், பேஹுஸ்ருதம், ஸ்ருஷ்டம், மான போதம்,

 

விஸ்வ போதம், ஆதிசாரம், விசாலாக்ஷம்,

விஸ்வகாஸ்யபம், வாஸ்து போதம்,

 

மஹா தந்த்ரம், வாஸ்து வித்யாபதி, பராசரீயகம்,

காலயூபம்,

 

சைத்யம், சித்ரம், ஆவர்யம், சாதக சார சம்ஹிதா,

பானுமதம்,  இந்த்ர மதம், லோகாகுவம், சௌரம்

ஆகியவை குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.

 

 

மனுசாரம் குறிப்பிடும் 18 நூல்கள் சிறப்பானவை:

 

ஈஸானம், சித்ர காயபம், ப்ரயோக மஞ்சரி, பெருஹிதம்,

புத்த மதம், கௌதமம், குலாலம், வாசிஷ்டம்,

மனோகல்பம், பார்கவம், மார்கண்டம், கோபாலம்,

நாரதீயம், நாராயணீயம், கஸ்யபம்,

சித்ரயாமளம்,

சித்ரஹாஹுல்யம், தேசிகம்

 

 

இது தவிர கீழ்க்கண்ட முக்கியமான நூல்களும் உள்ளன:

 

வாஸ்து வித்யா, மனுஷ்யாலய சந்த்ரிகா,

சாரஸ்வதீய சித்ர கர்மா சாஸ்த்ரம்,

ப்ராஹ்மீய சித்ரகர்ம சாஸ்திரம்

சகலாதிகாரம்,சில்ப ரத்னம்,

சனத் குமார வாஸ்து சாஸ்த்ரம்,

சில்ப ரத்னாகரம், சர்வார்த்த சில்ப சிந்தாமணி

 

வட இந்திய சிற்பிகளால் பயன்படுத்தப்படும் நூல்கள்:

 

வாஸ்து ராஜவல்லபம், சமராங்கன சூத்ரதாரம்,

ரூப மண்டனம்,

கோதண்டமண்டனம், சில்ப ப்ரகாசா, அபராஜிதா,

ப்ருச்சா, ப்ரதிமா, மான லக்ஷ்ணம், க்ஷீர நவம்,

தீபார்னவம்.

இவ்வளவு நூல்களையும் படித்தால் வாஸ்து விஞ்ஞானத்தின் பெருமையும் உண்மையும் புலப்படும்

 

 

தனது ஆராய்ச்சி வன்மையால் கணபதி ஸ்தபதி அடைந்த அதிசயமான அனுபவங்கள் ஏராளம். அதை அவரே எழுதியுள்ளார்.

காஞ்சி பரமாசார்யருடனான அவரது அனுபவங்கள் சிலிர்க்க வைப்பவை.

வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞான பூர்வமான ஒன்று என்பதை அவர் Vastu Shastra – A Scientific Treatise என்ற தனது நூலில் விளக்கியுள்ளார்.

 

நிறைவாழ்வு வாழ்ந்து 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்  5ஆம் தேதி அவர் இறைவனடி சேர்ந்தார்.

 

அவரது அதிசய அனுபவங்களையும், அவர் விளக்கும் நுட்பமான கருத்துக்களையும் இன்னொரு கட்டுரையில் காண்போம்.

***

THE CHAMELEON பச்சோந்தி (Tamil and English) (Post NO.5340)

Compiled by london swaminathan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 18-08 (British Summer Time)

 

Post No. 5340

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

THE CHAMELEON was written by English poet and scholar James Merrick (1720-1769). He translated the chameleon from Greek. His poems are featured in Oxford Religious Poetry anthologies.

The verse is translated into Tamil by Pundit M Gopalakrishnan of Madurai, Tamil Nadu and was published in his anthology in 1915.

Following is the original poem in English and the translation in Tamil.

It is similar to the story of a five blind men and an elephant found in Hindu and Buddhist literature.

 

ஜேம்ஸ் மெர்ரிக் (1720-1769) என்பவர் ஒரு சிறந்த ஆங்கிலக் கவிஞர்; ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கற்று ட்ரினிட்டி கல்லூரியில் பணியாற்றினார். கிறிஸ்தவ மத போதகராக மாறியும் கடும் தலைவலி காரணமாக அந்தப் பணியை ஆற்ற முடியவில்லை. ஆனால் இவர் எழுதிய பச்சோந்தி என்னும் கவிதை மிகவும் கருத்தாழம் மிக்கது. அந்தக் கவிதையை அவர் கிரேக்க மொழியில் இருந்து மொழி பெயர்த்தார். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்டின் சமயக் கவிதைகள் தொகுப்பில் வெளியாகியுள்ளன.

 

இந்து மத, புத்த மதப் புஸ்தகங்களில் உள்ள அந்தகர்கள் யானையைக் கண்ட கதையுடன் இதை ஒப்பிடலாம். ஆங்கிலக் கவிதையை மதுரை பண்டிதர் கோபால கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்த்து 1915ம் ஆண்டில் புஸ்தகமாக வெளியிட்டார்.

 

–subham–

Hindu Gods around the World! (Post No.5339)

 

Compiled by london swaminathan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 13-54  (British Summer Time)

 

Post No. 5339

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Comparative list of Hindu Gods

 

When Hindus migrated to different parts of the world, they took their religion and gods to other cultures. Those people adopted and adapted our Gods, customs and words. We find words of Sanskrit and Tamil origin around the world. Following list may contain some repetitions and contradictions. When a culture takes ours it always get mixed up and the tendency of any culture is to bring it closer to their existing beliefs. I have already shown this in my article ‘Sanskrit in Bible’. I have also shown how our Vahanas are used in Sumerian and Iraq and Mayan civilization.

 
The gods and goddesses of Europe are but copies of their Hindu originals

 

European version of Hindu Gods
Jupiter        Indra
Juno           Durga or Parvati or Indrani
Apollo         Krishna
Venus        Rati
Ceres         Sri
Cybele       Prithvi (Sri Bali in Kerala)
Neptune

and Uranus         Varuna
Minera        Sarasvati
Mars           Skanda
Pluto           Yama
Plutus         Kuvera
Vulcan        Visvakarma
Cupid                   Kama
Mercury      Narada
Aurora        Ushas
Aeolus        Vayu
Janus                   Ganesa
Dioscuri     Asvini Kumaras
Stys            Vaitarani
Ida              Kailas
Olympus    Meru


Comparison of Vedic Gods

 

India           Ireland                 Iceland       Italy

Mitra           Nuada                 Tyr              Jupiter

 

Varuna       Lugh                    Odin           Dius Fidus

Indra          Ogma                  Thor           Mars

Asvins        Bres                     Freyr          Quirinus

Sarasvati   Macha                 Freya          Juno

 

*My comments: Dius Fidus is Dyaus Pita in the Vedas, Zeus in Greek and Ptah in Egypt.

 

Indo- Japan Gods Comparison

 

Ganapathi                     Kangiten (Binayaka)

Sarasvati                       Benzaiten

Narayana                      Narendran

Uma Mahesvara           Umashi Dijizeiten

Brahma                         Bonten

Aditya                            Nitten

Vasishtha                     Basusen

 

xxxx

 

 

Greek Gods and Hindu Gods

 

Hindu – Slav
Varun – Perun
Haridasva Hors / sun
Surya Hors / sun
Moksha Mukosh / death

Roman or Greek Gods & Hindu Gods
Zeus – Indra (Taranis, Thor)
Jupiter – Indra
Saturnus – Brahma
Minas – Yama
Neptune – Varuna
Sol -Surya
Lunus – Chandra
Hercules – Krishna (Hari kula esa)
Janus – Ganapathy
Hephaestus/ Vulcan – Visvakarma /Tarkhan/Takshan
Plutarch – Kubera
Apollo – Krishna (also Hercules)
Mercury – Narada
Burgos – Rama
Mars – Skanda
Juno – Durga (also Diana & Artemis)
Minerva – Sarasvati (Also Athena)
Venus – Rambha
Aurora -Usha
Cybele -Prithvi
Ceres – Sree /Lakshmi
Cronos – Kashyap (Father of Asuras and Devas)
Zeus, Poseidon, Hades -Trimurti
Hera – Lakshmi
Hades -Yama
Poseidon – Varuna
Ares – Skanda
Kronos -Shiva


Pleiades – Kritika stars
Hera, Hestia, Demeter- Durga, Lakshmi, Sarasvati
Demeter – Devamata (same as Tiamath in Sumer)
Bacchus –Shiva
Hermes – Sarama
Cybele – Sribali
Gaiya – Jaya
Uranus – Varuna
Hestia – Vastu
Diana /Artemis – Durga


Other cultures:
Gilgamesh – Sri kamesa
River Congo/River Mekong – River (Ma) Ganga

 

xxxx

 

Some suggested correspondences for the deities who appear in the rituals

Deities -herbs -colours -runes -trees
Sun -juniper – red -siegel -bay
Moon -mugwort – white -lagu -willow
Sky -basil -blue -tyr -ash
Twins -vevain -orange -ehwaz – hazel
Thunder -leek -brown -thorn -oak
Maiden -mint -rose -gyfu -plane
Earth -crocus – green -odal -linden

 

sky– thunder– fire
dievas– perkumas– ugunsmate
nuada — taranis– aine

tyr — thor– loki
svarog — perun– istie

zeus — zeus– Hestia
dsius — teshub– –?

armazd — vagahn– -sister fire
dyaus — parjanya– agni

Sun — dawn — moon — twins
Saule — auszrine– menuo — dieva deli
Grian — der greine — manannan– emain macha

Sol — svanhild– mani — alcis

Solnste — zorya — myesyats– cosmas and
Damien

Heliosa — Helen — mene — dioscouroi
Arinitti– hulla and kushukh — sheri and hurri
Mezulla

Image of Sarasvati in ivory.

 

Arev– arevhat — amins — ?

Surya – suryaa– soma — Asvins

From the sun goddess page178

Hope these charts will help future researchers.

 

Contact swami_48@yahoo.com

roman,greek chart

Image of Vishnu

–Subham–

 

 

 

 

மனைவியின் நச்சரிப்பு! மார்க் ட்வைனின் குசும்பு! (Post No.5338)

Written by lonon swaminathan

Date: 19 August 2018

 

Time uploaded in London – 6-54 AM  (British Summer Time)

 

Post No. 5337

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

contact swami_48@yahoo.com

 

மார்க் ட்வைன் (Mark Twain) என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் எங்கு சென்றாலும், சரியான உடைகளை அணிந்து செல்ல மாட்டார்; இது அவரது மனைவிக்குப் பிடிக்காது.

 

‘வைர நெக்லஸ் வாங்கித் தா’, ‘மாங்கா மாலை பண்ணிப் போடு’, ‘கழுத்துக்கு காசு மாலை வேண்டும்’ என்றெல்லாம் கேட்கவில்லை; ஆனால் ஒழுங்காக ஆடை அணிந்து வாருங்கள் என்பார்.

 

“என்னாங்க, உங்களைத்தான், கல்யாணத்துக்கும் விருந்துக்கும் போகும்போது நல்ல கழுத்தில் காலரோடு நல்ல ‘டை’ ( Tie) கட்டிக் கொண்டு வரக்கூடாதா?” என்பார்.

 

மார்க் ட்வைனும் சளைக்காமல், “ம்ம் அடுத்த முறை பார்போம்” என்று புறப்பட்டு விடுவார்.

 

ஒருமுறை அடுத்த தெருவில் ஒரு  வீட்டில் பெரிய விருந்து நடந்தது.

 

ட்வைனின் மனைவியும் ஏற்கனவே பாடிய வழக்கமான பல்லவியைப் பாடினார்.

அவரும் ஆகட்டும் பார்க்கலாம் பதிலையே தந்தார்.

அடுத்த வீட்டு விருந்திலோ பல பிரமுகர்கள் வந்திருந்தனர். நல்ல கூட்டம்.

 

இருவரும் விருந்து முடிந்து வீடு  திரும்பினர். “நான் சொன்னேனே!” என்று ட்வைனைக் குத்திக் காட்டினார் மனைவி. உடனே ட்வைன்

 

“ஹலோ மை டார்ல்லிங், ஒரு நல்ல (Tie) டை எடுத்துவா என்றார். அவரும் அட, இனிமேல் போட்டுக்கொள்ள தயார் செய்கிறார் என்று எண்ணி ஆவலோடு கொண்டு வந்தார். அதை அழகாக ஒரு பெட்டிக்குள் வைத்து ஒரு கடிதமும் எழுதி வைத்தார்.

 

“அன்புடையீர்,

நானும் என் மனைவியும் சற்று நேரத்துக்கு முன்னர் உங்கள் வீட்டுத் தேநீர் விருந்துக்கு வந்திருந்தாம். அரை மணி நேரம் உங்களுடன் அமர்ந்திருந்தோம். நான் Tie டை கட்டிக்கொண்டு வரவில்லை. ஆகையால் இதை அரை மணி நேரம் உங்கள் வீட்டில் வைத்திருந்து விட்டு பத்திரமாகக் கொடுத்தனுப்பவும்”.

 

இப்படி எழுதிய கடிதத்துடன் அந்தப் பெட்டி சென்றது!

 

யார் இந்த மார்க் ட்வைன் ?

 

மார்க் ட்வைனின் வாழ்க்கையே சுவையானதுதான். அவருடைய உண்மைப் பெயர் சாமுவேல் லெக்ஹார்ன் க்ளெமன்ஸ் (Samuel Leghorne Clemens).

 

பிறந்த தேதி – 30 நவம்பர் 1835

 

இறந்த தேதி – 21 ஏப்ரல் 1910

 

இறந்தபோது வயது – 74

 

Publications
1867 The Celebrated Jumping Frog of Calaveras County and Other Sketches
1869 The Innocents Abroad
1872 Roughing It
1876 The Adventures of Tom Sawyer
1881 The Prince and The Pauper
1884 The Adventures of Huckleberry Finn
1894 Pudd’nhead Wilson A Tale

 

அமெரிக்காவின் நகைச் சுவை எழுத்தாளர்களில் பெயர் பெற்றவர். அவர் படைத்த டாம் சாயர், ஹக்கிள்பெரி பின் அகிய இருவரையும் அறியாதோர் இல்லை.

 

அமெரிக்காவில் ப்ளோரிடா (Florida) வில் பிறந்தார்; அவருடைய பெற்றோர்கள் ஈன்ற ஆறு குழந்தைகளில் இவர் ஐந்தாமவர். தந்தைக்கோ உடல்நலக் குறைவு; குடும்பமோ ஏழ்மையில் வாடும் குடும்பம். 1839ல் வேகமாக வளர்ந்து வரும் ஹான்னிபால் ஏன்ற நகருக்குக் குடிபோனார்கள் அங்கேதான் ட்வைனும் பள்ளிக்கூடம் சென்றார்.

 

ட்வைனுக்கு 12 வயதானபோது அவருடைய தந்தை காலமானார். இதனால் ட்வைன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போனார்.

 

22 வயதில் மிஸிஸிபி (Missisipi) நதியில் படகோட்டி ஆனார். அங்கே நாள்தோறும் சென்ற 1000 படகுகளில் இவரது படகும் ஒன்று. ஆயிரத்தில் ஒருவன்! நாலு ஆண்டுகள் உருண்டோடின; அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தம் (American Civil War) வெடித்தது. இதனால் படகுப் போக்குவரத்து நின்றது.

 

1862ல் பத்ரிக்கை நிருபர் ஆனார். அபோது முதல் மார்க் ட்வைன் (Mark Twain) என்ற பெயரில் எழுதத் துவங்கினார். கதையும் எழுதினார். 32 வயதில் முதல் கதை அச்சானது. 34வயதில் எழுதிய இன்னோசென்ட்  அப்ராட் (Innocents Abroad) என்ற நாவல் புகழை ஈட்டியது

 

1870ல் ஒலிவியா லாங்டன் (Olivia Langdon) என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. இதன் பின்னர் ‘டாம் சாயரின் வீரதீரச் செயல்கள்’, ‘ஹக்கில்பெரி பின்னின் சாகசங்கள்’ முதலிய கதைகளை வெளியிட்டார். அவை அமெரிக்கா எங்கும் படிக்கப்பட்டன.

 

40 வயதில் அவருக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. காரணம்; குடும்பத்தில் பேரிழப்பு; வாழ்க்கையின் நிலையாமை.

 

புத்தகங்கள்தான் பழங்கால பொற்காலத்தை நினைவுகூற உதவின. மிஸிஸிபி  நதியில் ஆடிப்பாடி படகோட்டி ஊழியம் செய்த நாட்களை நினைவு கூர்ந்தார் அவரது படைப்புகளில்.

அவரது இந்த இரண்டு புகழ்பெற்ற கதைகளும் மிஸிஸிபி நதியைச் சுற்றி சுழல்பவை. சாகசச் செயல்கள், நகைச் சுவை இரண்டும் கலந்தவை. குறிப்பாக ‘ஹக்கிள்பெரி பின்னின் சாகசச் செயல்கள்’ என்ற நூல் வாலிபப் பருவத்தின் உணர்ச்சிகளை வடித்துக் கொட்டும்; அப்படியே அக்கால வாழ்வை படம்பிடித்துக் காட்டும்.

 

இந்த அமெரிக்க எழுத்தாளரின் நினைவாக பல நாடுகள் தபால் தலைகளை வெளியிட்டுள்ளன.

 

–சுபம்–