சம்ஸ்கிருத காதல் கவிதைகள் (Post No.4593)

Date: 8 JANUARY 2018

 

Time uploaded in London- 6-00 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4593

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

சம்ஸ்கிருத காதல் கவிதைகள் : ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!!!

 

ச.நாகராஜன்

 

1

1955ஆம் ஆண்டு, பொங்கல் தினத்தன்று வெளியான படம் தமிழகத்தை ஒரு கலக்கு கலக்கியது.

மிஸ்ஸியம்மா.

அதில் ஒரு பாடல் காட்சி. மக்களை ஆட வைத்தது.

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும்

பொது சொந்தமன்றோ….

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் உள்ளமே

ஜில்லெனத் துள்ளாதா?

ராகத்திலே அநுராக மேவினால்

ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!

பாட்டுடன் மக்கள் ஆடினர்.

பாடலை ஜெமினி கணேசன் பாட ஜமுனா ராணி ஆடுகிறார்.

அதை ரங்காராவ் மனைவியுடன் ரசிக்கிறார். சாவித்திரியோ நடு நடுவில் வந்து பார்த்துக் குமுறுகிறார்.

தஞ்சை ராமையா தாஸின் பாடலுக்கு ராஜேஸ்வர ராவ் இசையமைத்துள்ள இந்தக் காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

சரி, ஒரு கேள்வி.

ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா?

ராகத்திலே அநுராக மேவினால் என்றால் அர்த்தம் என்ன?

உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

 

2

காதலை 64 வ்கையாக போஜ மன்னன் பிரித்தார். அதில் ராகமும் உண்டு; அநுராகமும் உண்டு.

இந்த அநுராகத்தை விளக்கும் பாடல்கள் ஆயிரக் கணக்கில் சம்ஸ்கிருதத்தில் உள்ளன.

வித்யாகரர் என்று ஒரு தேர்ந்த கவிதா ரஸிகர்.

நல்ல பாடல்களாகத் தொகுக்க ஆரம்பித்தார்.

சுமார் 275க்கும் மேற்பட்ட கவிஞர்களைத் தேர்ந்தெடுத்தார்.

அவர்களின் சிறந்த பாடல்களை மட்டும் தேர்ந்தெடுத்தார்.

1738 பாடல்கள் அவர் தேர்வில் வெற்றி பெற்றன.

அதை சுபாஷித ரத்னகோசம் என்ற பெயரில் நூலாகத் தொகுத்தார்.

அதில் 50 தலைப்புகள்.

அதில் ஒரு தலைப்பு: The Blossoming of Love. காதல் அரும்புதல்!

இந்த தலைப்பில்  மட்டும் 70 பாடல்கள் உள்ளன.

1738 பாடல்களும் அருமை என்றாலும் இந்தத் தலைப்பில் உள்ள சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

 

3

 

வித்யாகரரின் காலம் சரியாகத் தெரியவில்லை.அவரைப் பற்றிய விவரங்களையும் ஆதாரபூர்வமாக அறிய முடியவில்லை.

இருந்தாலும் இவரது பாடல்களை அரும்பாடு பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள டேனியல் ஹெச்.ஹெச்.இங்கால்ஸ் என்ற அறிஞர், இவர் புத்தமதத்தைச் சேர்ந்த பேரறிஞர் என்றும். பதினொன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இவர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்.

4

இங்கால்ஸின் An Anthology of Sanskrit Court Poetry என்ற நூலிலிருந்து The Blossoming of Love – காதல் அரும்புதல்

என்ற பகுதியிலிருந்து சில கவிதைகள்:

The glances of your eye,

Which stretches to your ear, darker than waterlily

Were enough to steal a heart.

What needs it, pretty lass,

With such ado pretending to bind up your loosened braid

To show your armpit, camphor dusted

And, marked with lover’s nail?

அடடா, உன் கண் பார்வை!

செவி வரை நீண்டிருக்கும் அது, அல்லி மலரை விடக் கறுத்திருக்கிறதே!

அது ஒன்று போதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள!

ஓ, அழகிய இளம் பெண்ணே,

பரபரப்புடன் தளர்ந்திருக்கும் உன் கேஸப் பின்னலைத் தூக்கி

முடிப்பது போலப் பாசாங்கு செய்கிறாயே!

அதன் தேவை தான் என்ன?!

வாசனை தூவப்பட்ட உனது அக்குளையும்

அங்கிருக்கும் காதலனின் நகக்குறியைக் காண்பிக்கவா?

*

Her body is a pond

Her face thereof a lotus and her arms the lotus stems,

Her loveliness the water and her triple fold the wave.

Therein a strong young elephant,

No other than my heart, has plunged,

But caught fast in love’s quicksand will never rise again.

 

அவள் மேனி ஒரு குளம்

அங்கிருக்கும் அவளது முகமோ தாமரை. அவளது கரங்களோ தாமரைத் தண்டுகள்.

அவளது பேரழகு தான் நீர்; அவளது மூன்று மடிப்புகளோ அலைகள்!

அங்கு ஒரு வலிமை வாய்ந்த யானை –

எனது இதயத்தைத் தான் சொல்கிறேன் – மூழ்கியது!

ஆனால் காதல் என்னும் புதைகுழியில் அது சிக்கி விட்டதால்

அது மீண்டும் எழுந்திருக்கவே எழுந்திருக்காது!

 

*

புதிதாக மணம் ஆகி விட்டது. கணவன் நெடு நாள் பிரிந்திருக்கப் போகிறான். வெளியூர் செல்ல இருக்கிறான். அவன் செல்ல வேண்டிய இடத்தை அடையவே நூறு நாள் பிடிக்கும்.

புது மணப்பெண்ணின் மனம் என்ன பாடுபடும்?

பார்க்கலாமா?

“You will return in an hour?                                                                                               Or at noon? Or after?

Or at least some time today!”

With such words the young bride,choked with tears,

Delayed her love’s departure for a land

Distant at hundred days.

 

“ நீ இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து விடுவாயா?

அல்லது நடுப்பகலில் வருவாயா? அல்லது சற்று நேரம் கழித்தா?

இன்றுக்குள் திரும்பி விடுவாய், இல்லையா!”

கண்ணீர அரும்ப தொண்டை அடைக்க இளம் மணப்பெண்

தன் கணவனிடம் கூறும் சொற்கள்… இவை

அவன் கிளம்பும் பயணத்தை சற்று நேரம் தள்ளி வைத்தது.

அவன் போக வேண்டிய இடத்தை அடையப் பிடிக்கும்

நூறு நாட்கள்.

*

மூன்று முத்தான கவிதைகளைப் பார்த்தோம்.

1738ஐயும் படிக்க வேண்டும் என்கின்ற ஆவல் எழுகிறதில்லையா?

வித்யாகரரின் ரஸனை அற்புதமானது. சுந்தரமான சுபாஷித ரத்ன கோஸத்தை நாடுங்கள். படியுங்கள். ரஸியுங்கள்

***

நன்றி : An Antholoty of Sanskrit Court Poetry translated by Daniel H.H.Ingalls

Cambridge, Massachusetts Harvard University Press, 1965

குறிப்பு: இதைப் படிப்பவர்கள், ‘காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசயமன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!’ என்ற கட்டுரையையும் படிக்கலாம்.

 

‘Women can keep One Secret’- Voltaire (Post No.4592)

 

Written by London Swaminathan 

 

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London- 16-59

 

 

 

Post No. 4592

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

SECRET QUOTATIONS ABOUT HINDU SECRET

You may find the title a bit puzzling. The reason I chose this title for the essay is no quotes are available from Hindus sources in the quotations websites. But the most interesting about secret is that it is in the oldest book in the world- The Rig Veda. Later we find this word in hundreds of places in Hindu books both in Sanskrit and Tamil. I will give some quotes below; please don’t keep them secret; let it spread to blogs and websites as well!

The Rig Veda has the word secret in the second Mandala (chapter):

Raha- suu

The meaning given in the Vedic index is ‘bearing in secret’. It is in RV 2-29-1

It is a hymn to Visvedevas

“Upholders of the Law, ye strong Adityas, remove my sin like her who bears in secret.

You, Varuna, Mitra and all gods who listen, I call to help me , I who know your goodness”

 

Bearing in secret is a term applied to an unmarried mother according to Vedic index.

 

xxx

The second reference about secret itself is secretive!

Rahasyu Deva-malimlue

is the name, in the Pachavimsa Brahmana (14-4-7), of a mythical person who at Munimarana slew the saintly Vaikhanases.

 

We don’t know much about the mythical person and the motive behind the murder. A typical secret story!

We have lot of references in the epics.

But the oft quoted Bhagavd Gita has a secret.

Lord Krishna says

“This same ancient Yoga has been today declared to thee by me; for thou art my devotee and my friend; and this is the Supreme Secret (rahasyam uttamam)

 

In most of the old Hindu scriptures they used the word Rahasyam (secret) for Veda and Upanishads.

Tamils are very clever that they translated the Veda (knowledge) it self Secret (Marai in Tamil); they knew very well that Vedas are not to be taken literal but understood through the hidden meaning!

xxx

 

Secret in Manu Smrti

The oldest law book in the world is Manu Smrti (older than the Hammurabi’s code). It used the word secret to denote Upanishads,the philosophical treatises of the Hindus.

Here are some quotes:

उपनीय तु यः शिष्यं वेदमध्यापयेद् द्विजः ।

च्/ सकल्पं सरहस्यं च तमाचार्यं प्रचक्षते

  1. They call that twice born who initiates a pupil and teaches him the Veda together with the Kalpa and the Rahasyas, the teacher (akarya, of the latter).

Rahsyas= Upanishads  Manu 2-140

 

तपोविशेषैर्विविधैर्व्रतैश्च विधिचोदितैः ।

वेदः कृत्स्नोऽधिगन्तव्यः सरहस्यो द्विजन्मना 2-165

  1. A twice born man must study the whole Veda together with the Rahasyas, performing at the same time various kinds of austerities and the vows prescribed by the rules (of the Veda).

rahasya= Upanishads

twice born = Brahmana, Kshatriya and Vaisya in the Vedic age; later only Brahmins

 

  1. The initial triliteral Brahman on which the threefold (sacred science) is based, is another triple Veda which must be kept secret; he who knows that, (is called) learned in the Veda.11-266
  2. Thus the acts which secure supreme bliss have been exactly and fully described; (now) the secret portion of these Institutes, proclaimed by Manu, will be taught.12-107
  3. Thus did that worshipful deity disclose to me, through a desire of benefiting mankind, this whole most excellent secret of the sacred law.12-117

xxx

 

SECRET in Later Literature

 

In the literature, the word used with the modern meaning, like we use it today

 

Chanakya Niti (3rd Century BCE):

One should not trust a bad friend, nor should repose too much of trust (even in good) friend lest the friend in a fit of rage were to lay bare all the secrets.

Chapter 2, Verse 6

 

na visvaset kumitre ca mitre caatiwa visvaset

kadaacit kupitamitram sarvam guhyaam prakaasayet

 

Never reveal Your Plans/ Ideas

 

One should not reveal through words (talk about) an action one has in mind. One should keep it secret in his counsel and apply it to one’s mission.

Chapter 2, verse 7

 

manasaa chintitam kaaryam vachasaa na prakaasayet

mantrena rakshayet guudam kaarye chaapi niyojayet.

 

Some of his instructions are valid even today.

Source for slokas: Chanakya Niti, translated by Satya Vrat Shastri, Kolkata.

 

Author’s name Chanakya alias Kautilya

 

xxx

 

WOMEN AND SECRET

 

Secret in Epics, Kalidasa, Panchatantra

 

A man should never disclose a secret to a woman if he longs for prosperity- Vishnusharman in Panchatantra Book3,97 (also in Katha Sarit Sagara)

 

This is repeated by all the English authors like Shakespeare and Tamil authors like Kamban and Vivekachudamani etc.

 

 

Constant you are, but yet a woman; and for secrecy, no lady closer; for I well believe thou wilt not utter what thou dost not know.

Shakespeare.

 

 

There is a secret drawer in every woman’s heart.

Victor Hugo.

 

  A woman can keep one secret,—the secret of her age.

Voltaire.

 

 

A man can keep another person’s secret better than his own; a woman, on the contrary, keeps her secret though she blabs all others.

La Bruyère.

 

 

xxx

He cannot keep a secret longer than the morning des drops on the grass- Kalidasa in Vikrama Uvasiiyam Act 2

 

Good is the secrecy of a secret, its revelation is not to be praised

–Jataka Tales VI, Book 22, No546

 

One should not disclose secrets to everyone; one should reveal some only to one’s wife, some to one’s friend and some to one’s son, for they cannot be trusted- Vishnusarma in Panchatantra Book 1

 

 

Whoever divulges secrets should be torn to pieces- Arthasastra of Chanakya/Kautilya Book 1 Chapter 15

 

It is always difficult to keep secrecy counsels secret when many are concerned.—Vyasa in Mahabharata, Shanti Parva

 

This is also repeated by umpteen English writers. Anything concerning two or more people is not at all a secret.

 

SECRET IN TAMIL

 

Ancient Tamil literature also has many quotations on Secret:-

 

Tamil Veda Tirukkural of Tiruvalluvar says,

 

“The mean are like the drum that is beaten, for they hear secrets and betray them” (Kural/ Couplet 1076)

 

Another translation of the same Tamil couplet is as follows:

 

“Like a tom-tom, the base ones will broadcast

Whatever information they come by”

 

The Bible  also has a parallel quotation:

A gossip gives away secrets,

But a trusty man keeps his own counsel (Proverbs 11,13)

 

xxx

Pazamozi Nanuru is another Tamil didactic work which has few quotations:-

 

Telling a secret to base one is like placing cotton on the top of a palmyrah tree. (It will be blown into all directions easily)

 

We may compare it with What Khalil Gibran said:

 

Kahlil Gibran — ‘If you reveal your secrets to the wind, you should not blame the wind forrevealing them to the trees.’

 

The same book says,

The wise ones never tell a secret to mean minded people.

 

There are hundreds of proverbs in Indian languages. I have to deal with it separately.

 

–Subham–

 

சாணக்கியன் எச்சரிக்கை- டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம் (Post No.4591)

Written by London Swaminathan 

 

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London-11-24 am

 

Post No. 4591

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

சாணக்கியன் மாபெரும் அறிவாளி; பெரிய அரசியல்வாதி; ராஜ தந்திரி; பொருளாதார நிபுணர்;  நூல்லாசியரும் கூட!

 

ஆயினும் அவர் சொல்லும் சில விஷயங்கள் வியப்பை ஏற்படுத்தும்; ஒருவேளை 2300 ஆண்டுகளுக்கு முன்னால் — அவர் காலத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் பொருள் விளங்கி இருக்கும்! இதோ அவரது ஸ்லோகங்கள்:–

 

மதியாதார் வாசல் மிதிக்க வேண்டாம்

 

யஸ்மின் தேசே ந ஸம்மானோ ந வ்ருத்திர்ந ச பாந்தவாஹா

ந ச வித்யாகமஹ கஸ்சித்தம் தேசம் பரிவர்ஜயேத்

 

பொருள்:-

மரியாதையோ வாழ்க்கைக்கான ஊதியமோ, சொந்த பந்தங்களோ, அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புக்களோ எந்த நாட்டில் இல்லையோ அந்த நாட்டில் வசிக்காதே.

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 8

 

xxxxxx

டாக்டர் இல்லா ஊரில் தங்க வேண்டாம்

 

தனிகஹ ஸ்ரோத்ரியோ ராஜா நதீ வைத்யஸ்து பஞ்சமஹ

பஞ்ச யத்ர ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்

 

பொருள்

கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது:

பணக்காரர், வேத பண்டிதர், அரசன், நதீ, டாக்டர்

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 9

xxxxxx

 

அச்சம், அடக்கம் இல்லாவிடில்….

 

லோகயாத்ரா பயம் லஜ்ஜா தாக்ஷிண்யம் த்யாகசீலதா

பஞ்ச யத்ர ந வித்யந்தே குர்யாத் தத்ர ஸம்ஸ்திதிம்

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 1, ஸ்லோகம் 10

பொருள்

கீழ்கண்ட ஐந்து இல்லாத இடங்களில் வசிக்கக் கூடாது:- வாழ்வதற்கான வழி/ வேலை, சட்டத்தைக் கண்டு அச்சம், அடக்கம், நாகரீகம், தர்ம சிந்தனை

 

xxxxx

நண்பனிடம் எல்லாவற்றையும் சொல்லாதே

ந விஸ்வஸேத் குமித்ரே ச மித்ரே சாதி ந விஸ்வஸேத்

கதாசித் குபிதம் மித்ரம் ஸர்வம் குஹ்யாம் ப்ரகாசயேத்

சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 6

 

பொருள்

கெட்ட நண்பனை நம்பாதே; நல்ல நண்பனையும் அதிகம் நம்பாதே; ஏனெனில் ஒரு நாள் கோபம் வந்தால் உன்னுடைய ரஹசியங்களை எல்லாம் பட்டவர்த்தனம் ஆக்கிவிடுவான்.

— சுபம், சுபம் —

 

 

காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை!! (Post No.4590)

Date: 7 JANUARY 2018

 

Time uploaded in London- 5-47 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4590

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

மன்மத லீலை

 

காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!

 

ச.நாகராஜன்

 

 

1

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பேயே மகாகவி பாரதியார் காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்

என்று அருமையாக காதலின் உச்சகட்ட நிலையை விளக்கி விட்டார்.

அந்தக் காலத்தில், காதலின் வேகமும் அழுத்தமும் இந்த நவீன யுகத்தில் இருக்கின்றார் போல இருந்ததா? தெரியவில்லை.

இருந்தாலும் அந்த நாளிலேயே அவர் இப்படி அழுத்தமாகச் சொல்லி விட்ட கவிதா வரிகள் சற்று அதிசயமாகவும் இருக்கிறது; ஆச்சரியமாகவும் இருக்கிறது!

2

சரி, காதல்மன்னர்களும், காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்களும், ரஸிகர்களும், காதலர்களும், காதலிகளும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?

காதலில் எத்தனை விதம், சொல்லுங்கள், பார்ப்போம்!

பதில் தெரியாமல் முழித்தால் இந்து நாகரிகத்திற்குத் தான் வர வேண்டும்.

ஆண்-பெண் உறவின் அற்புத இரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய ஒரே மதம் இந்து மதம் தான்.

காதலில் மொத்தம் 64 விதம் உள்ளது.

எங்கே 64-ஐயும் சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறீர்களா?

இதோ தருகிறோம், பட்டியலை!

3

01) Abhilasa – அபிலாஷா

02) Akanksa – அகாங்சா

03) Apeksa – அபேக்ஷா

04) Utkantha – உத்கந்தா

05) Ipsa – இப்ஸா

06) Lipsa – லிப்ஸா

07) Iccha – இச்சா

08) Vancha – வாஞ்சா

09) Trsna -த்ருஷ்ணா

10) Lalasa – லாலஸா

11) Sprha -ஸ்ப்ருஹா

12) Laulya – லௌல்யா

13) Gardha – கர்தா

14) Sraddha – ச்ரத்தா

15) Ruci – ருசி

16) Dohada – தோஹதா

17) Asa – ஆசா

18) Asis – ஆசிஸ்

19) Asamsa – அசம்ஸா

20 Manoratha – மனோரதா

21) Astha – ஆஸ்தா

22) Abhinivesa – அபினிவேசா

23) Anubandha – அனுபந்தா

24) Agraha –  ஆக்ரஹா

25) Vimarsa – விமர்சா

26) Manisa – மநீசா

27) Abhipraya – அபிப்ராயா

28) Paksapata – பக்ஷபாதா

29) Lobha – லோப்ஹா

30) Asanga – ஆஸங்கா

31) Abisvanga – அபிஸ்வங்கா

32) Sakti – சக்தி

33) Moha – மோஹா

34) Akuta – அகூடா

35) Kuthuhala – குதூகலா

36) Vismaya – விஸ்மயா

37) Raga – ராகா
38) Vega – வேகா

39) Adhyavasaya -அத்யாவாஸ்யா

40) Vyavasaya – வ்யவசாயா

41) Kamana – காமனா

42) Vasana – வாஸனா

43) Smarana -ஸ்மரணா

44) Sankalpa – சங்கல்பா

45) Bhava – பாவா

46) Rasa (Hasa) – ரஸா (ஹாஸா)

47) Rati – ரதி

48) Priti – ப்ரீதி

49) Dakshinya – தாக்ஷிண்யா

50) Anugraha – அனுக்ரஹா

51) Vatsalya – வாத்ஸல்யா

52) Anukrosa – அனுக்ரோஸா

53) Visvasa – விஸ்வாஸா

54) Visramba – விஸ்ரம்பா

55) Vasikara – வசீகரா

56) Pranaya -ப்ரணயா

57) Prapti – ப்ராப்தி

58) Paryapti – பர்யாப்தி

59) Samapti – சமாப்தி

60) Abhimanapti – அபிமானாப்தி

61) Sneha – ஸ்னேஹா

62) Prema – ப்ரேமா

63) Ahlada – ஆஹ்லாதா

64) Nirvrti –  நிவ்ருத்தி

 

 

3

அடேயப்பா, இத்தனை விதமா?

இதற்குள் மலைத்தால் எப்படி?

இந்த 64 விதத்தில் அனுராகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

 

 

நித்யானுராகா

நைமித்திகானுராகா

சமான்யானுராகா

விசேஷானுராகா

ப்ரகாசானுராகா

ப்ரச்சன்னானுராகா

அக்ருத்ரிமானுராகா

க்ருத்ரிமானுராகா

 

என இதில் எட்டு வகை உள்ளன. இவை காதலின் மஹார்தி எனச் சொல்லப்படுகிறது.

இவை ஒவ்வொன்றிலும் 24 வகை உண்டு.

ஆக அனுராக வகைகளில் மட்டும் எட்டு வகையில் உள்ள 24 உட்பிரிவு வகைகளையும் பெருக்கிப் பார்த்தால் வருவது 192. இந்த 192 ஐ 64-உடன் பெருக்கினால் வருவது 12288.

இவ்வளவு வகை உண்டு.

 

4

சரி, இதையெல்லாம் யார் சொல்கிறார்கள், எங்கே சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.

போஜ மஹாராஜன்,”ச்ருங்கார ப்ரகாசா” என்ற அலங்கார சாஸ்திர நூலைப் புனைந்துள்ளான்.

அதில் தான் ஒவ்வொன்றின் விளக்கத்துடனும் காதல் அதாவது  ச்ருங்காரம் மிக நுட்பமாக விளக்கப்படுகிறது!

 

 

5

இது இப்போது கிடைக்குமா? எப்படி இந்த தகவல்கள் கிடைக்கின்றன?

நல்ல கேள்வி.

பேரறிஞர் டாக்டர் வி. ராகவன் (நிஜமாகவே பேரறிஞர்!!!) சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச் சிறந்த விற்பன்னர்.

உ.வே.சாமிநாதையர் வாழ்நாள் முழுதும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தது போல, டாக்டர் ராகவன் நாடு நாடாக அலந்தார். பல்வேறு பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், சம்ஸ்கிருத சுவடி இருக்கும் இடங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

 

பல லட்சம் நூல்கள் அடங்கிய சம்ஸ்கிருத நூல்கள் பற்றி அறிந்து கொண்ட பின்னர் சம்ஸ்கிருத நூலுக்கான என்சைக்ளோபீடியாவைத் தயாரித்தார்.

அந்த மாபெரும் ஆராய்ச்சியாளர் தனது டாக்டரேட் டிகிரிக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் தான் போஜனின், “ச்ருங்கார ப்ரகாசா”

 

1931 செப்டம்பர் மாதத்திலிருந்து 1934 செப்டம்பர் மாதம் வரை அவர் செய்த அற்புதமான ஆராய்ச்சியின் பெருமையைச் சொற்களால் அளக்க முடியாது; விளக்க முடியாது!

 

1940ஆம் ஆண்டு இது  தொகுதிகளாகவும், பகுதிகளாகவும் வந்தது. (Karnakatk Publishing House, Bombay – 1940)

இப்போது இதை விளக்க இன்னொரு ராகவன் தான் வேண்டும். அப்படி ஒரு நுட்பமான ஆராய்ச்சியை அவர் செய்து உலகுக்கு அளித்திருக்கிறார்.

 

 

 

6

அற்புதமான மன்னன் போஜ மஹாராஜன். அவன் தொடாத துறையே இல்லை.

அதில் ஒன்று தான் “ச்ருங்கார ப்ரகாசா”.

 

36 அத்தியாயங்கள் இந்த நூலின் கைப்பிரதி மட்டும் 1908 பக்கங்கள் – ஃபூல்ஸ்கேப் பேப்பரில்!.

 

இதைத் தயாரித்து ஆராய்ந்தார் டாக்டர் ராகவன்.

போஜ மஹாராஜன் 84 நூல்களை எழுதியுள்ளான்.

விமானம் கட்டுவதிலிருந்து சிருங்கார ப்ரகாஸா வரை உள்ள அவனது நூல்கள் பிரமிக்க வைப்பவை.

 

அந்த மாபெரும் அறிஞனின் அறிவை அளக்க யாரால் முடியும்?!

ஒரு சிறிது அறிந்தாலும் கூட அந்த அளவுக்கு நமது அறிவின் வலிமை கூடும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : டாக்டர் வி. ராகவன் அவர்களுக்கு!

****

 

 

CHANAKYA’S WARNING: DON’T DO THE FOLLOWING THINGS! (Post No.4589)

CHANAKYA’S WARNING: DON’T DO THE FOLLOWING THINGS! (Post No.4589)

 

Written by London Swaminathan 

 

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London-13-31

 

 

 

Post No. 4589

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Chanakya was a great genius. He was a great statesman, astute politician, an author and an economist. But some of his ‘Dos and Donts’ look very strange. Probably there was a reason for it 2300 years ago. He lived during the days of Alexander. Following slokas (verses) are from his book Chanakya Niti.

1.Nails and Women

One should never trust those with nails and horns and those with arms in hand, (as also), the rivers, the women and the members of the royal households.

Chanakya Niti, Chapter 1, Sloka 15

nakhinaam ca nadiinaancha srunginaam sastrapaaninaam

visvaaso naiva kartavyah striishu rajakuleshu ca

 

xxx

2.Don’t live if there is no civility

One should not live there which does not have the following five:–

the means of livelihood, fear (about rules, regulations) , modesty, civility and charity (the nature to give or relinquish)

lokayaatraa bhayam lajjaa daakshinyam tyaagasiilataa

panca yatra na vidyante na kuryaat tatra samsthatim

Chapter 1, Sloka 10

xxx

3.Dont live in the country…………..

One should keep away from that country where there is no respect, no means of livelihood, no relatives, no acquisition of knowledge or skill.

Yasmin dese na sammaano na vruttirna ca bhandhavaah

na ca vidyaagamah kasichattam desam parivarjayet

Chapter 1, Sloka 8

xxx

4.Don’t live in a town if there is no Doctor

A place which does not have these five:- rich person, a Vedic scholar, a king, a river, and a doctor (Physician) – one should not stay even for a day!

dhanikah srotriyo raajaa nadii vaidhyastu pancamah

panca yatra na vidhyante na tatra divasam vaset

Verse 6 of Chapter 1

 

xxx

 

  1. Beware of Friends

One should not trust a bad friend, nor should repose too much of trust (even in good) friend lest the friend in a fit of rage were to lay bare all the secrets.

Chapter 2, Verse 6

na visvaset kumitre ca mitre caatiwa visvaset

kadaacit kupitamitram sarvam guhyaam prakaasayet

xxx

6.Never reveal Your Plans/ Ideas

One should not reveal through words (talk about) an action one has in mind. One should keep it secret in his counsel and apply it to one’s mission.

Chapter 2, verse 7

manasaa chintitam kaaryam vachasaa na prakaasayet

mantrena rakshayet guudam kaarye chaapi niyojayet.

 

Some of his instructions are valid even today.

Source for slokas: Chanakya Niti, translated by Satya Vrat Shastri, Kolkata.

–subham-

 

 

 

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

 

 

Written by London Swaminathan 

 

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 8-18 am

 

 

 

Post No. 4588

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-

 

அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.

 

வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்;  சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.

 

வீட்டில் தினமும் ரணகளம்தான்;  த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன் றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்

 

அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;

 

ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.

 

 

‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’

அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.

 

நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர்      ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.

‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.

 

காளி மொழிந்தாள்:

கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன்; அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.

அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.

 

இதற்குள்  அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்

 

இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.

 

ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!

 

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’,  என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.

அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.

அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.

 

அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா  இளம் குமரி  ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.

இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.

 

எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.

 

அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.

மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்

கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.

திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்

‘’கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்ணுக்கினியன கண்டேன்

ஊர் மக்கள் அனைவரும் வாரீர்

அரிய காட்சியைப்  பாரீர்’’ —

 

என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.

 

அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.

 

ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.

 

தமிழில் 20000–க்கும் மேலாகப் பழமொழிகள் உள; அவைகளில் சுமார் 2000 வரை எனது ‘பிளாக்’கில் சப்ஜெக்ட் வாரியாகக் – தலைப்பின் படி — கொடுத்துள்ளேன்; நிறைய பழமொழிக் கதைகளையும் தந்துள்ளேன்; ஆங்கிலத்திலும் வரைந்துள்ளேன்; கண்டு மகிழ்க- களிப்பு அடைக!!

 

-சுபம், சுபம் —

கடலிடம் கற்போம்! (Post No4587)

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 6-35 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4587

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாக்யா 5-1-2018 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 46வது) கட்டுரை

கடலிடம் கற்போம்!

ச.நாகராஜன்

 

“அனைவரையும் ஒருங்கிணைக்கும் கடல் தான் நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை! இதுவரை எப்போதும் இல்லாதபடி, பழைய சொற்றொடரான ‘நாம் அனைவரும் ஒரே படகில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்’ என்பது இப்போது பொருள் பொதிந்த ஒன்றாக ஆகி விட்டது!” – ஜாக்குவஸ் யூஸ் குஸ்டாவ், கடல் வள நிபுணர்

2017ஆம் ஆண்டு  முடிந்து விட்ட தருணம். உலகில் ஏராளமான நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன. அவற்றினுள் கடலில் நடந்த  நல்லதும் கெட்டதுமான மாபெரும் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் வரிசைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளனர்.

அவற்றுள் முதலிடத்தைப் பிடிப்பது வானிலை மாறுதல்களால் கடலில் ஏற்படும் சூறாவளிப் புயல் தான். அமெரிக்காவில் 2017, ஆகஸ்ட் மாத இறுதியில் ஏற்பட்ட ஹார்வி என்ற சூறாவளிப் புயல் 48 மணி நேரத்தில் பிரமிக்க வைக்கும் 60 அங்குல மழையைப் பெய்வித்தது. இந்தப் புயலால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட சேதத்தின் உத்தேச மதிப்பீடு சுமார் நூறு பில்லியன் டாலர் ஆகும்! (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி;  ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 64.). அடுத்து உடனடியாக கரிபியன் தீவுகளில் ஏற்பட்ட இர்மா என்ற சூறாவளிப் புயல் மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்றைத் தொடர்ந்து 37 மணி நேரம் வீசிக் கொண்டிருந்தது. பல தீவுகள் மூழ்கியே விட்டன.

இந்த ஒவ்வொரு புயலும் மனித குலத்திற்கு உணர்த்தும் செய்தி: பூமியை வெப்பமயமாக்கிக் கொண்டே போகாதீர்கள். இப்படியே போனால் பூமியில் பல நகரங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் என்பதைத் தான்!

அடுத்து வட அட்லாண்டிக்கில் ரைட் வேல் (Right Whale) எனப்படும் திமிங்கிலமும் வாக்விடா பார்பாய்ஸ்  (Vawuita porposes) என்ற அரிய வகை கடல் வாழ் உயிர்னமும் படாத பாடு படுகின்றன.  பிரம்மாண்டமான அது கொல்வதற்கு உகந்தது, லாபகரமானது என்பதாலும் கடற்கரைக்கு அருகில் இருப்பதாலும் அதன் பெயர் ரைட் வேல் என்பதாயிற்று. இந்த இனம் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது. நூறே நூறு பெண் திமிங்கிலங்கள் தான் இந்த இனத்தில் இப்போது இருக்கின்றன. இந்த வகை திமிங்கிலத்தை வமிச விருத்தி செய்ய நூறு பெண் திமிங்கிலங்கள் போதாது என்பது தான் வருத்தமூட்டும் செய்தி! வாக்விடா இனத்தில் இன்று இருப்பது வெறும் 30 மட்டுமே!

அடுத்து பவழப்பாறைகள் மிகவும் குறைந்து கொண்டே வருகின்றன. ‘சேஸிங் கோரல்’ என்ற டாகுமெண்டரி படம் இந்த அபாயத்தை உருக்கமாக விளக்குகிறது.  நச்சு வாயுவான கார்பன் டை ஆக்ஸைடை  மனித குலம் என்று குறைக்கிறதோ அன்று தான் பவழப் பாறைகளுக்கு நல்ல நாள். கடற்கரை பகுதிகளைக் காப்பதோடு ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஆதரவாக உள்ள பவழப் பாறைகளின் அழிவு உண்மையிலேயே வருத்தமூட்டும் ஒரு செய்தியாகும்.

அடுத்து பிளாஸ்டிக் கழிவுகளைப் பற்றிச் சொல்லவே  வேண்டாம்.. மரீனா பீச்சிலிருந்து உலகின் சகல கடற்கரைகளும் பிளாஸ்டிக் மயம். எவ்வளவு பிளாஸ்டிக் கழிவு உலகத்தில் இருக்கிறது என்பதை ஆராயப் போன விஞ்ஞானிகள் பயந்து நடுநடுங்கி விட்டனர்.அதாவது பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு இருக்கிறதாம். (பூமியின் ஜனத்தொகை 760 கோடி).

போகிற போக்கில் நாம் உண்ணும் உணவில் கூட பிளாஸ்டிக் இருக்கும் அபாயம் ஏற்பட்டு விடும் என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்! கடல் வாழ் ஆயிஸ்டர்களைச் சாப்பிடுவோரும் கடல் உப்பை உணவில் சேர்க்கும் ஒவ்வொரு மனிதரும் சிறிய மைக்ரோ பிளாஸ்டிக்கை உண்ணும் அபாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். பவழப் பாறைகளும் மீன்களும் கூட பிளாஸ்டிக்கைச் ‘சாப்பிட’ப் பழக்கப்பட்டு விட்டனவாம்! ‘பிளாஸ்டிக் டம்ளரையோ ஸ்டிராவையோ கையில் வைத்திருக்கும் போது நீங்கள் உலகத்திற்கு ஏற்படுத்தும் சேதத்தைத் தயவு செய்து ஒரு கணம் நினைத்துப் பாருங்கள்.பிளாஸ்டிக்கை எந்த விதத்தில் இருந்தாலும் தவிருங்கள்’ என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

london swaminathan in Greece

கடற்கரைக் காற்று அபரிமிதமான ஆற்றலை உருவாக்க வல்லது. விண்ட் டர்பைன்களை ஒவ்வொரு நாடும் அமைக்க ஆரம்பித்து அளப்பரிய ஆற்றலை உருவாக்குகிறது. அமெரிக்கா, நார்வே ஆகிய நாடுக்ள் இதில் நல்ல முன்னேற்றதைக் கண்டு விட்டன.

2017இல் கடல் வாழ் உயிரினங்களை நன்கு ஆராய்ந்து பல உத்திகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் ஒன்றைப் பிடித்தால் பிடித்தது தான். எப்படி அவ்வளவு அழுத்தமாக அது ஒன்றைப் பற்றிப் பிடிக்க முடிகிறது என்பதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதே உத்தியை ரொபாட்டுகளில் பயன்படுத்தி உள்ளனர். இதனால் கப்பலின் முகப்பில் பொருத்தப்படும் ரொபாட்டுகள்  தான் இருக்க வேண்டிய இடத்தை நன்கு பிடித்துக் கொள்ளும். அதே போல பெலிகன் இனத்தை ஆராய்ந்து கடலடி நீரில் ட்ரோன்கள் எப்படி வேகமாக நீந்திச் செல்ல முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டு  பிடித்துள்ளனர்.

கடல் வாழ் உயிரினத்தில் விசேஷ வகையான சன் ஃபிஷ் என்னும் மீன் ஒன்பது அடி நீளம் இருக்கும்,. அதன் எடையோ மலைக்க வைக்கும் இரண்டு டன். இந்த வருடம் நான்கு புது வித சன் ஃபிஷ் வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு மோலா டெக்டா (Mola Tecta) என்ற புதுப் பெயரை விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் ஆய்வு நடத்திய விஞ்ஞானிகளின் குழு ஒன்று இந்த 2017இல் பிரகாசமான ஆரஞ்சு நிற முகம் கொண்ட ஒரு புது சர்ஜன் மீனைக் கண்டு பிடித்துள்ளனர். நூறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்திய இந்தப் பகுதியில் விஞ்ஞானிகள் அடைந்த போனஸ் பரிசு இது!

கடல் செல்வம் உண்மையிலேயே மனித குலத்திற்கான பெரிய செல்வம். அதைப் பாழடித்து விடக் கூடாது என்ற விழிப்புணர்வையும், அதிலிருந்து கற்க வேண்டியவை ஏராளம் என்பதையும் உணர்த்திய ஆண்டாக 2017ஐ விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். அது சரிதானே!

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

அடிவயிற்றில் ஆபரேஷன் செய்வது இன்று சர்வ சகஜமாகி விட்டது. ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்னர் இது மிகவும் அபாயகரமான ஒன்றாக டாக்டர்களால் கருதப்பட்டு வந்தது. அடிவயிற்று ஆபரேஷன் நிச்சயம் மரணத்தில் கொண்டு விடும் என்பதால் அதை யாரும் செய்வதில்லை.

சரியாக 200 வருடங்களுக்கு முன்னர் 1817இல் நடந்தது இது. அந்தக் காலத்தில் அமெரிக்காவில் 40000 அடிமைகள் இருந்தனர். க்ராபோர்டு (Crawford) என்ற ஒரு அடிமைப் பெண் கர்ப்பமாக இருப்பதாக நினைத்திருந்தாள். ஆனால் அது கர்ப்பப் பை கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மக்டவல் (McDowell) என்ற பிரபல டாக்டர் பெண்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் நிபுணராக இருந்தார். அவர் அந்தப் பெணமணியை நோக்கி, “இந்தக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும். ஆனால் அது ஆபத்தான ஆபரேஷன். அதைச் செய்யாவிடிலோ மரணம் நிச்சயம் என்றார்.

க்ராபோர்டு அறுவைச் சிகிச்சை செய்து  கொள்ள சம்மதம் தெரிவித்தாள். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. ஆபரேஷன் செய்யும் நேரத்தில் பைபிளிலிருந்து பிரார்த்தனை தோத்திரங்களை அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

உலகின் முதல் அடிவயிற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அந்தப் பெண்மணி அதற்குப் பின்னர் 32 வருடங்கள் வாழ்ந்து தன் 78வது வயதில் மரணம் அடைந்தாள்.

மக்டவலின் நினைவாக அவரது கல்லறையில் இந்தியானா ஹாஸ்பிடல் அசோசியேஷன் சார்பில் இது பொறிக்கப்பட்டது. சரியாக 200 வருடங்கள் முடிந்த நிலையில் இப்போது அவர் நினைவு போற்றப்படுகிறது.

 

****

 

பாரதியார் நாமம் வாழ்க: பாரதிதாசன் (Post No.4586)

Date: 6 JANUARY 2018

 

Time uploaded in London- 6-13 am

 

Compiled by S NAGARAJAN

 

Post No. 4586

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 23

  பாடல்கள் 137 முதல் 141

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 பாரதியார் நாமம் வாழ்க

 

வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்

    புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்

தாளேந்திக்கா த்த நறுந் தமிழ் மொழியைத்

    தாய்மொழியை உயிரை இந்த

நாள் ஏந்திக் காக்குநர் யார்? நண்ணுநர் யார்?

    என அயலார் நகைக்கும் போதில்

தோளேந்திக் காத்த எழிற் சுப்ரமணிய

    பாரதியார் நாமம் வாழ்க!

 

கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்

      போல் நல்லின்பத்தை

விளைத்திடு தீந் தமிழிருந்தும் வேறு மொழியே

      வேண்டி வேண்டி நாளும்

களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்

      கனிந்தபடி தோலுரித்துச்

சுளைத் தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய

      பாரதியார் நாமம் வாழ்க!

 

 

தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை

      சுவையூட்டம் தந்து சந்த,

அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,

     நற்காதல் ஆழம் காட்டித்

தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்

     தமிழறிவில் தறுக் குண்டாக்கிச்

சுமப்பரிய புகழ் சுமந்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

 

 

மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு

     விடுதலையை மறுத்திருக்கும்

துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப்

     பெண்மை தன்னில்

தக்கதொரு தாய்த்தன்மை, சமத்துவ நிலை காட்டி

     உயிர் தளிர்க்கும் காதல்

துய்க்கும் விதம் எழுத்தளித்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

 

பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்பும்

     பெரியாரின் துணையும் வேண்டும்

விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கே

     உறக்கமில்லை கட்டாயத்தால்

வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற்

     சுவைக் கவியால் மனத்தை அள்ளித்

தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

                                                (கவிதை தொடரும்)

   

 

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

 

*****

 

Mother in Law becomes a Donkey! Tamil Folk Tale (Post No.4585)

Written by London Swaminathan 

 

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 20-56

 

Post No. 4585

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Related image

 

There are over 20,000 proverbs in Tamil language; hundreds of them have beautiful stories behind them. One interesting story about a mother in law is based on a popular proverb – ‘As the time went by Mother in Law became a donkey!’ (Vara vara maamiyaar Kazuthai pola Aaanaalam)

 

The story is as follows:

There lived a couple in a village. Ammanji had a wife by name Vallala Kandi. The very name of the woman shows that she was an unruly woman; a bad- tempered woman. There were always shouts and fights in the house. The man’s name show that he was a naïve man. Both of them had their mothers living with them. They also fought with one another.

Ammanji’s mother got fed up with what was happening inside the house. One day Amannji’s mother ran away from home and took shelter in a temple far away from the madding crowd. Since it was dark nobody noticed her departure.

 

During mid night, Goddess Kali in the temple started for a city round. She saw this old woman and asked what brought her to the temple. She explained everything happening at home. Kali was very kind towards her and told her she would be alright if she ate the mango fruit. Saying so Goddess gave her a mango fruit.

 

In the meantime, Ammanji got worried about her mother went in search of her at the first light of the day. Someone told him that he saw an old woman in the Kali temple. Ammanji ran to the temple and came to know everything happened in the night. Ammanji was given the fruit but he refused and insisted his mother should eat it. She ate it and had a piggy back ride on her son Ammaanji. He was feeling her rough skin; but as the time went by, he felt smoother and smoother skin. He turned back and was wonderstruck when he saw his mother. She looked younger now. When she went home, he saw her completely  changed and became a young woman. Ammanji, his wife and mother in law couldn’t believe their own eyes.

 

Ammanji’s wife was a bit jealous and planned something in her mind. Next day she told her mother—Ammanji’s mother in law – – to run away from home. She did so and took shelter in the same temple. Kali appeared before her asked her the reason. When she told Kali about her ‘sufferings’, Kali knew that it was a lie. But Kali gave her a mango fruit and told her everything would change  when she eat the fruit. She hurriedly ate the mango.

In the meantime Ammanji’s wife became very anxious and persuaded her son to go out and look for her mother. Ammanji came straight to the temple and met her mother in law. By the time he came there, she finished eating her mango fruit.

 

As before, Ammanji offered her a lift home. She had a piggy back ride. To Ammanji’s surprise the body weight of the lady slowly increased and her skin became rougher and rougher. When he turned back, he saw a lady with a donkey’s face; He tried very hard to supress his laughter. When they reached home, he didn’t see his mother in law at all, but only a donkey. Ammanji and his mother were happy. Ammanji’s wife and mother in law were sad.

 

This gave birth to a proverb, “As the time goes by mother in law became a donkey”.

 

–Subham–

 

பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் (Post No.4584)

Written by London Swaminathan 

 

Date: 5 JANUARY 2018

 

Time uploaded in London- 8-12 am

 

 

 

Post No. 4584

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் பெயர் வைக்கும் முறை (மநு நீதி நூல்- part 10)-

 

second chapter 149 (2-30)

  1. குழந்தை பிறந்த பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது நாள் தந்தையானவர் பெயர்சூட்டு (நாமதேயம்) வைபவத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது நல்ல நாளில் நல்ல திதியில் முகூர்த்த நாளன்றும் வைக்கலாம்.

 

150.பிராமணர் பெயரில் மங்களத்தையும், க்ஷத்ரியர் பெயரில் பலத்தையும், வைஸ்யர் பெயரில் பொருளையும் (செல்வம்) சூத்திரர் பெயரில் தாழ்வையும் கட்டும் சொற்கள் இருக்க வேண்டும்

 

 

151.பெயரின் இரண்டாவது பகுதி பிராமணர்களுக்கு சந்தோஷத்தைக் காட்டும் சொல்லும் (ஸர்ம), க்ஷத்ரியர்களுக்குப் பாதுகாப்பைக் காட்டும் சொல்லும் (வர்ம), வைஸ்யர்களுக்கு சுப வாழ்க்கை (பூதி) பற்றியும் சூத்திரர் பெயரில் சேவை (தாஸன்) தொடர்பான சொல்லும் இருக்கலாம்.

152.பெண்களுடைய பெயர் எளிதில் உச்சரிக்கத் தக்கதாகவும் சுபச் சொல் உடையதாகவும் , மங்களம் தருவதாகவும், நன்மை தரும் சொல்லாகவும், கெட்ட பொருள் தராததாகவும், உயிர் எழுத்தில் நெடிலில் முடிவதாகவும் இருக்க வேண்டும் (எ.க.கருணா, சீதா, கீதா)

153.குழந்தை பிறந்த நாலாவது மாதத்தில்  வீட்டை விட்டு வெளியே வந்து குழந்தையைச் சூரியனுக்குக் காட்டும் நிகழ்ச்சியும் ஆறாவது மாதத்தில் அன்ன ப்ராஸ்னம் எனப்படும் உணவூட்டும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யலாம்; இது தவிர அந்தந்த குடும்பத்தின் பழக்க வழக்ககங்களுக்கு உரித்தான சடங்குகளையும் மூன்றாவது மாதம் முதல் செய்யலாம்.

 

154.இருபிறப்பாளர் ஜாதிகளில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் முடி இறக்கல் முதல் ஆண்டிலோ மூன்றாவது ஆண்டிலோ செய்யப்பட வேண்டும் என்று வேத விதிகள் சொல்கின்றன. கருவுற்ற காலத்தில் இருந்து எட்டாவது ஆண்டில் பிராமண பையனுக்கும், பதினோராம் வயதில் க்ஷத்ரிய மாணவர்களுக்கும், 12-வது ஆண்டில் வைஸியப் பையனுக்கும் உபநயனம் (பூணூல்) செய்விக்க வேண்டும்

 

  1. பிரம்ம தேஜஸை விரும்பும் பிராமணக் குழந்தைகள் அதை 5 வயதிலும், பலத்தை விரும்பும் க்ஷத்ரியர் ஆறு வயதிலும், தனத்தை விரும்பும் (வணிகத்தில் வெற்றி பெற விரும்புவோர்) வைஸ்யர் எட்டு வயதிலும் பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ளலாம்.

 

  1. இவ்வாறு பூணூல் (உபநயனம்) போட்டுக்கொள்ள பிராமணனர், க்ஷத்ரியர், வைஸ்யருக்கு முறையே 16, 22, 24 வயது வரை அனுமதி உண்டு.(ஸாவித்ரியை வழிபடும் உரிமை)

 

157.மேலே குறிப்பிட்ட கால வரம் புக்குள் செய்யாவிடில் அவர்கள் விராத்தியர்கள் என்று அழைக்கப்படுவர்.

அவர்களுக்கு ஸாவித்ரியை வழிபடும் உரிமை இல்லை.

158.இவர்கள் மீண்டும் இரு பிறப்பாளராக சில சடங்குகளைச் செய்யலாம். அப்படிச் செய்து மீண்டும் வராதோருடன் ஏனையோர் திருமண உறவுகளையோ வேதச் சடங்கு செய்யும் உறவுகளையோ வைக்கக் கூடாது. துன்பம் வந்த காலத்தும் உதவக் கூடாது

வைதீக கார்யங்களில் இருந்து நீக்கிவைக்கப்பட வேண்டும் பெண் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.(2-40)

 

159.இனி எந்தெந்த வர்ணத்தார் என்ன மேலாடை, கீழாடை அணிய வேண்டும் என்பதைக் காண்க. பிராமண, க்ஷத்ரிய, வைஸ்யர் முறையே கருப்பு மான் தோல் (கிருஷ்ண சாரம்), புள்ளி மான் தோல், ஆட்டின் தோல் ஆகியவற்றை மேலாடையாகவும், சணல்,  பட்டு நூல், ஆட்டின் மயிர் (கம்பளியை) ஆகியவற்றால் ஆன உடைகளை கீழாடைகளாகவும் அணிக(2-41)

160.இடையில் சுற்றிக்கொள்ள இந்த மூன்று வர்ணத்தாரும் முறையே மிஞ்சிப் புல் (முங்கா புல்), வில்லின் ஞாணைப் போன்ற முறுவல் புல் (மூர்வா), சணல் நார் ஆகியவற்றை மேடு பள்ளமில்லாமல் பின்னி அரை ஞாண்  மேல் அரை ஞாண் கட்ட வேண்டும் 2-42

 

161.மேற்சொன்னவை கிடைக்கவில்லை என்றால் மூன்று வர்ண பிரம்மச்சாரிகளும் தருப்பை, நாணல், சவட்டைக் கோறை ஆகியவற்றினால் ஆன ஞாணை மூன்று அல்லது ஐந்து வடமாக, (குல வழக்கப்படி), ஒரு முடிச்சுடன் அணியலாம்

2-43

 

162.மூன்று வர்ணத்தாரும் போடும் பூணூல் முறையே வலதுபுறம் செல்லும்; பஞ்சு நூல், சணல் நூல், வெள்ளாட்டின் மயிர் ஆகியவற்றால் இருக்க வேண்டும். 2-44

 

 

எனது கருத்து

மனு சொல்லக்கூடிய பெயர் சூட்டும் முறை ஆய்வுக்குரியது. எப்போது வரை இந்த முறை பின்பற்றப்பட்டது என்பதை கிடைக்கும் நூல்களைக் கொண்டு ஆராயலாம். அம்புலி மாமா போன்ற சிறுவர் நூல்களில் கூட மானர் பெயர் என்றால் வர்மன் என்றும் வைஸ்யர் என்றால் தனஎன்ற சொல்லும் இருப்பதைக் காணலாம். ஆனால் இது அப்படியே பின்பற்றப்படவில்லை. மஹாபாரதப் பெயர்களை- சிந்து சம்வெளிப் பெயர்களுடன் (ஊகம் தான்) ஒப்பிட்டுக் காட்டிய எனது ஆய்வுக் கட்டுரையில் சேனன் என்று 24, வர்மன் என்று 13, கேது என்று 9 etc. முடிவதைக் காட்டினேன். ஆனால் அங்கும் கர்ணன், துரோணன் என்றும், கசாப்புக் கடைக்காரனுக்கு தர்மவியாதன் என்றும் பெயர் இருப்பது ஆய்வுக்குரியது. சங்க காலத் தமிழர் பெயர் கள் வேறு விதமாக உள்ளன. ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

 

மநு என்பவர் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் அல்ல; அதற்கு மிகவும் முந்திய காலத்தில் வாழ்ந்தவர். ஏனெனில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பல உப ஜாதிகள் தோன்றிவிட்டன. வெறும் 4 வர்ணம் மட்டும் இருக்கவில்லை!

 

இரண்டாவது சுவையான விசயம் மூன்று வர்ணத்தார் (சூத்திரர் தவிர) பூணுல் போட்டுக் கொண்டது, வெவ்வேறு வகையான ஆடைகளை அணிந்தது,  அரை ஞாண் கயிறு அணிந்தது என்பதெல்லாம் எக்காலம் வரை நீடித்தது?

 

மஹாராஷ்டிரத்திலும் (அம்பேத்கர் பூமி), தமிழ்நாட்டிலும் மட்டும் எப்படி அரசியல்வாதிகள் எல்லோருக்கும் சூத்திரர் முத்திரை குத்தினர் என்பதும் ஆராயப்பட வேண்டியது. மற்ற எல்லா மாநிலங்களிலும் நான்கு அல்லது அவர்களின் உட் பிரிவுகளுடன் ஜாதிகள் இருந்தன. இவ்விரு மாநிலங்களில் மட்டும், பிராமணர் அல்லாதார் அனைவரும் சூத்திரர் என்று சொல்லி அம்பேத்கர் கட்சி, திராவிடக் கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடின. இது ஜாதி வெறியை வளர்க்கவும் வேரூன்றச் செய்யவும் காரணமா? என்றும் ஆராய வேண்டும்

 

மநுதர்மம்—- ஜாதியின் பெயரால் வேற்றுமை பாராட்டியது தவறு என்று சொல்லும் தர்மவான்கள்’, இன்று ஜாதியின் பெயரால் சிலருக்கு விஷேச சலுகை தருவது எவ்வகையில் நியாயம் என்பதையும் இதயத்தைத் தொட்டு ஆராய வேண்டும்; பணக்காரர்களும் ஜாதியின் பெயரால் உரிமை பெறுவது நியாம என்றால் மநு ஆயிரம் மடங்கு மேலானவர் என்று ஆகிவிடும்; ஏனெனில் அவர் ஆரம்பதில் எழுதிய ஸ்லோகங்களிலேயே விருப்பு வெறுப்பற்ற காம க்ரோதம் இல்லாதவர்களுகே இந்த சாஸ்திரம் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார்.

 

அரசியல் சட்ட அமலாக்கத்தில் இருந்து 25 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த ஜாதிவாரிச் சலுகைகள் இருக்க வேண்டும் என்று சொன்ன புதிய மநுவையும் — அம்பேத்காரையும் — காற்றில் பறக்கவிட்ட அரசியல்வாதிகள் அல்லது அவரது கட்சியினர் மநுவைக் குறைகூறினால் உலகம் கைகொட்டிச் சிரிக்கும் என்பது எமது துணிபு.

 

to be continued………………………………….