DRINK COFFEE, LIVE 100 YEARS! SECRET OF LONG LIFE (Post No.4603)

Compiled by London Swaminathan 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London  11-34 am

 

 

Post No. 4603

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

Longevity Anecdotes 

Fontenelle was continually being told by his doctors that what he liked to eat was bad for him. Towards the end of his life, one warned him that he must give up coffee, explaining at great length in most appalling medical terms, that it was a slow poison and would eventually ruin his system. In a tone of deep conviction the nonagenarian-replied

Doctor, I am inclined to agree with you that it’s a slow poison– very slow , for I have been drinking it for the past 80 years.

Coffee lovers may derive some comfort from the fact that Fontanelle came within a month of to be a hundred years old.

 

Xxx

NEVER WALK, DRIVE!

Joseph Chamberlain

Until Joseph Chamberlain, British prime minister was seventy, he seemed to hold the secret of perpetual youth. Someone asked him what the secret of his good health was. He smiled and said,

“Never walk if you can drive; and of two cigars always choose the longest and the strongest”.

 

Xxxx

 

Maxim Gorky: Relaxation Anecdote

   

When Maxim Gorky visited America he was taken to Coney Island by friends who wanted him to behold this huge playground swarming with holiday throngs. They took him through the crowded concessions, where he saw one dizzy contraption after another, swinging people through the air, swirling them in eccentric curves, shooting them down breath-taking inclines.

 

They took him under ground and over ground, into bewildering mazes, museums of freaks, palaces of jugglers , theatres of dancing ladies and living statuary. They were giving Maxim Gorky the time of his life.

 

Finally, at the end of what may have seemed to them a perfect day, they asked him how he liked it. He was silent for a moment. Then he said very simply,

“What a sad people you must be! “

 

Xxxx Subham xxxxx

 

மூன்று பொம்மை கதை, சாணக்கியன் எச்சரிக்கை – (Post No.4602)

Written by London Swaminathan 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London  7-53 AM

 

 

 

Post No. 4602

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால்இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

மூன்று பொம்மை கதை

விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவ ராயர் சபைக்கு ஒரு வணிகன் மூன்று பொம்மைகளைக் கொணர்ந்தான். அவற்றின் ரஹசியங்களைக் கண்டு பிடிக்கும் அறிவாளி யாரேனும் அந்தச் சபையில் உண்டா என்று வினவினான். எல்லோரும் பொம்மைகளை வாங்கிப் பார்த்துவிட்டு திரு திரு என முழித்தனர். விடை காண இயலாமல் தவித்தனர். அரசனும் சில நாட்கள் கழித்து அந்த வியாபாரியை திரும்பி வரும்படி சொல்லி அனுப்பினன். தெனாலி ராமன் கையில் அந்த பொம்மையைக் கொடுத்தவுடன் அவனுக்கு அதன் சூக்ஷ்மம் புரிந்தது.

Masks sold in Bangalore; newspaper picture

மறு நாள் எல்லோரும் ராஜ சபையில்  இருக்கையில் ஒரு சிறு கம்பியைக் கொண்டுவருமாறு தெனாலி ராமன்

வேண்டினான்.

 

கம்பி என்ன? தம்பி; உனக்குத் தங்கக் கம்பியே தருகிறேன் என்றான் மன்னவன்

 

தம்பி கையில் கம்பி வந்தது.

 

முதலில் ஒரு பொம்மையை எடுத்து காதின் ஒரு புறத்தில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே செலுத்தினான். அது மறு புறமுள்ள செவி வழியே வெளி வந்தது.

 

யாரும் பார்க்காத  துளைகளை அவன் மட்டும் பார்த்தது முதலில் எல்லோருக்கும் வியப்பு அளித்தது.

 

இரண்டாவது பொம்மையை எடுத்தான். இப்போது காது வழியே சென்ற கம்பி வாயின் வெளியே வந்தது. எல்லோரும் அதன் ‘தாத்பர்யம்’ விளங்காமல் விழித்தனர்

 

இதற்குள் தெனாலி ராமன் மூன்றாவது பொம்மையை எடுத்தனன் ; தங்கக் கம்பியை நுழைத்தனன்;  எங்கே கம்பியின் மறு புறம் என்று  வியந்தனர்.

 

தெனாலி ராமன் சொன்னான்; அது அதன் நடுப்பகுதியில் உள்ள மனதுக்குள்—இதயத்துக்குள்– சென்று விட்டது என்று சொன்னான்.

 

இதன் பொருள் என்ன என்றும் செப்பினான்:

 

முதல் பொம்மை ‘அதமர்’களுக்குச் சமம்; கீழ் மட்ட மக்கள்; எதைச் சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டார்கள் இந்தப் பக்கம் செவியில் விழுவது அடுத்த பக்க செவி வழியே வந்து விடும் ; மனதில் அடங்காது.

 

இரண்டாவது பொம்மை ‘மத்யமர்’; இடைத் தர மக்கள்; சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி விடுவர்; ரஹஸியம் தங்காது.

 

மூன்றாவது பொம்மை ‘உத்தமர்’களைக் குறிக்கும்; உயர் மட்ட மக்கள்; அவர்கள் காதில் வாங்குவதை மனதில் பதிப்பர்; எந்த ரஹஸியத்தையும் வெளியே விடாது காப்பர் என்றான்.எல்லோரும் அவன் பதிலைக் கேட்டு ஆரவாரம் செய்து பாராட்டினர்.

 

அகம் மகிழ, உளம் குளிர, மாமன்னனும் பரிசு மழை பொழிந்தான்.

 

இது ரஹஸியத்தின் பெருமைதனைக் கூறும் ஒரு நிகழ்வு.

இதையே புலவர்களும் பாடி வைத்தனர்.

XXXX

சாணக்கியன் எச்சரிக்கை – ரஹஸியம், பரம ரஹஸியம்!!

 

மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாசயேத்

மந்த்ரேண ரக்ஷயேத் கூடம் கார்யே சாபி நியோஜயேத்

 

பொருள்

உன் மனதில் உள்ள விஷயங்களை எல்லாம் வார்த்தைகளில் வடிக்காதே; அதை ரஹசியமாக வைத்திருந்து செயல் வடிவில் காட்டுக.

சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 7

 

 

இது நல்ல புத்திமதி; ஏன்?

1.ஒருவன் சொன்னபடி செய்ய முடியாமல் போனால் உலகம் அவனைப் பார்த்து சிரிக்கும்

2.முன் கூட்டிச் சொன்னால் அதற்கு யாரேனும் தடை போட முடியும்

 

3.படை எடுப்பு, தாக்குதல்போன்ற விஷயங்களைச் சொன்னால், எதிரி நம்மையும் விட ஒரு படி மேலே போய்விடுவான்

  1. ஆராய்ச்சி, கல்வி முதலிய விஷயங்களை முன்கூட்டிச் சொன்னால் வேறு ஒருவர் அதைச் சொல்லி புகழ் பெறுவர்.

 

  1. பேடண்ட் PATENT வாங்கும் முன் யோஜனைகளை வெளியிட்டால் நம்மைவிட வேறு ஒருவர் செயலில் இறங்கி நம்மைப் பின்னுக்குத் தள்ளக் கூடும்.

 

விவேக சிந்தாமணி என்னும் நூலும் எதில் எதில் ரஹஸியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லும்:-

 

குருவுபதேச மாதர்கூடிய வின்பத் தன்பால்

மருவிய நியாயங் கல்வி வயதுதான் செய்த தருமம்

அரிய மந்திரம் விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்

ஒருவருந்தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே

 

பொருள்

ஆசிரியர் செய்த உபதேசம்,

ஸ்த்ரீயிடத்தில் தான் அனுபவித்த இன்பம்,

தான் எவ்வளவு நியாயவான்,

எவ்வளவு படித்தவன்,

எவ்வளவு தருமம் செய்தனன்,

என்ன வயது ஆகியவற்றையும்

பரமரஹஸியமாக வைத்திருக்க வேண்டும்.

தனக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரம்,

தனது பலம்,

பலவீனமிவைகள் எல்லாம் ஒருவருக்கும் தெரியக் கூடாது;

அப்படித் தெரிந்தால் அதனால் கிடைக்கக் கூடிய பலன் கிடைக்காமற் போய்விடும்.

 

திருவள்ளுவனும் திருக்குறளில் ரஹஸியம் பரம ரஹஸியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார்:-

அறை பறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் – குறள் 1076

 

பொருள்

சிலர்,  தாம் கேட்ட ரஹசியச் செய்திகளையும் பல இடங்களுக்குச் சென்று வெளியிடுவர். இப்படிச் செய்பவர்கள் கயவர்கள்;  அவர்கள் அறையப்[படும் டமாரம்- அறை- போன்றவர்கள் ஆவர்.

xxx

பழமொழி நானூறு என்னும் நூலிலும் ரஹசியத்தின் பெருமை விதந்து ஓதப்படுகிறது:

 

பெருமலை நாட! பிறரறியலாகா

அருமறையை ஆன்றோரே காப்பர் – அருமறையை

நெஞ்சிற் சிறியார்க்குரைத்தல் பனையின் மேல்

பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று

 

பொருள்

பெரிய மலை நாட்டுக்கு உரிமையுடையோனே! சான்றோர்கள், பிறர் அறியக்கூடாத விஷயத்தை ரஹஸியமாகக் காப்பர்; அதை சிறுமனம் படைத்தோருக்கு — சிற்றறிவு படைத்தோருக்குச்— சொன்னால் அது பனை மரத்தின் மீது பஞ்சு வைத்து அதைப் பறக்கவிட்டது போலாகும்; அதாவது மரத்தின் மீது பஞ்சு மூட்டையைக் கொண்டு வைத்தால் அது எப்படி எல்லாத் திசைகளிலும் எளிதில் பரவுமோ அப்படி ரஹஸியமும் அம்பலத்துக்கு வந்துவிடும்.

 

 

இன்னொரு பாடலில் பழமொழி ஆசிரியர் முன்றுரை அரையனார் பகர்வதாவது:-

 

நயவர நட்டொழுகுவாரும் தாம் கேட்ட

துயவாதொழிவார் ஒருவருமில்லை

புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்

கயவர்க் குரையார் மறை

 

பொருள்

மேகம் போன்ற கரிய கூந்தலையும் தங்க வளையல்களையும் அணிந்த பெண்ணே, கேள்! அன்போடு உள்ள நண்பரிடமும் கூட ஆராயாது எல்லா விஷயங்களையும் சொல்பவர் எவரும் இல்லை. ஆகவே அறிவுடையோர், கீழ் மக்களுக்கு ரஹஸியத்தைச் சொல்ல மாட்டார்கள்

 

Earlier Article……………….

ரகசியம் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/ரகசியம்/

 

TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர். இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–. போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் … https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…. 2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி …

 

— சுபம், சுபம் —

 

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை! (Post No.4601)

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால்தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால்எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்நீயே கவனித்துக்கொள்!))

 

 

 

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London- 6-51 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4601

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

புத்த சரிதம்

 

மஹாராஜா புக்குசாதியின் ஆசை!

 

ச.நாகராஜன்

Buddha in Bangladesh; picture sent by Lalitha Malar Maniam

ராஜக்ருஹத்தின் மஹாராஜா பிம்பசாரனுக்கும், தக்ஷசீல மன்னனான மஹாராஜா புக்குசாதிக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது.

 

இரு நாடுகளுக்கும் இடையே நல்ல வர்த்தக உறவு ஆரம்பித்து, மேம்பட்டது.

 

பிம்பசாரன் அந்த நாட்டு வணிகர்கள் மூலமாக தன் நண்பனுக்கு பல பரிசுப் பொருள்களை அனுப்பினான். அந்தப் பரிசுப் பொருள்களுடன் கூடவே ஒரு கடிதமும் சென்றது.

கடிதம் தங்கத் தகட்டில் எழுதப்பட்டிருந்தது.

“அன்பு நண்பரே!, எனது நாட்டில் மூன்று ரத்தினங்கள் உள்ளன. புத்தம், தர்மம், சங்கம்!”

 

கடிதத்தின் வாசகத்தைப் படித்த புக்குசாதிக்கு அதைப் பற்றி அறிய ஆவல் மிகுந்தது.

 

புத்தரைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் சங்கத்தைப் பற்றியும் நன்கு அறிந்து கொண்டான்.

 

புத்தம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

புத்தரை மானசீகமாகச் சரணடைந்தான்!

 

Picture by Puvana Sarma

எப்படியாவது வாழ்நாளில் ஒரு முறையாவது புத்த தரிசனத்தை அடைய வேண்டுமென்று அடங்காத ஆவல் ஏற்பட்டது அவனுக்கு.

இளவரசன் சித்தார்த்தன் எப்படி ராஜ்யம், பட்டம் ஆகியவற்றைத் துறந்தானோ அதே வழியைக் கடைப்பிடிக்க எண்ணிய அவன், தன்  மகுடத்துடன் அனைத்தையும் துறந்தான். மஞ்சள் ஆடையை அணிந்தான்.

 

நேராக ராஜக்ருஹம் நோக்கிக் கிளம்பினான்.

அவனது உற்றாரும் சுற்றமும், மக்களும் அழுது புலம்பினர்.

ஆனால் புக்குசாதி தன் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் பின்னால் பலரும் கூடவே வரலாயினர்.

 

சில நாட்களில் 192 யோஜனை தூரத்தைக் கடந்து ராஜக்ருஹத்தை வந்து அடைந்தான்.

புத்தர் எங்கிருக்கிறார் என்று கேட்டான்.

அங்கிருந்த மக்களோ, புத்தர் 45 யோஜனை தூரத்தில் உள்ள சாவட்டி என்னும் இடத்தில் இருப்பதாகக் கூறினர்.

 

அன்றிரவே அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை என்பதால் இரவைக் கழிக்க ஏதேனும் இடம் இருக்கிறதா என்று கேட்டான்.

ஒரு குயவனின் குடிசை இருப்பதாகத் தெரிய வந்தது.

குயவனின் அனுமதியைப் பெற்று அவன் அங்கு தங்கினான்.

 

அங்கோ சாவட்டியில் புத்தர் அன்றைய தினத்தில் தன் கருணையை அனுக்ரஹிக்க சத்பாத்திரமான ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார்.

 

தக்ஷசீல மன்னனான புக்குசாதி தன் அரசையும் சுக போகங்களையும் துறந்து தன்னப் பார்ப்பதற்காக நெடுந்தொலைவு கடந்து வந்துள்ளான் என்பதை அவர் அறிந்தார்.

மறு நாள் காலை அவன் ஒரு விபத்தில் இறக்கப் போவதையும் அவர் அறிந்தார்.

 

என்ன செய்வது? கருணை உள்ளம் ஒரு முடிவுக்கு வந்தது.

சாவட்டியிலிருந்து கிளம்பிய புத்தர் நேராக ராஜக்ருஹத்தை நோக்கி விரைந்து அதை அடைந்தார்.

 

புக்குசாதி தங்கியிருந்த குயவனின் குடிசையை அணுகினார்.

குயவனின் தான் அங்கு தங்க முடியுமா என்று  கேட்டார்.

குயவன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான்.

குடிசைக்குள் நுழைந்த புத்தர் புழுதி நிறைந்த குடிசையின் தரையைப் பார்த்தார்.

Picture from Deccan Herald; Budhdha Gaya/Bodhgaya

அதே தரையில் தான் புக்குசாதி அமர்ந்திருந்தான்.

அவரும் அமர்ந்தார்.

 

இப்போது அந்த புழுதித் தரையில் இரண்டு பெரும் சாம்ராஜ்யங்களைத் துறந்த மன்னர்கள் அமரிந்திருந்தனர்.

சித்தார்த்தனாக இருந்து புத்தராக ஆனவர். இன்னொருவர் தக்ஷசீல மன்னன் புக்குசாதி.

 

இருவரும் நெடுதூரம் நடந்திருந்தனர். இருவருக்கும் களைப்பு;

இருவரும் பேச ஆரம்பித்தனர். அர்த்தமுள்ள உரையாடல் ஒன்று ஆரம்பித்தது.

 

புத்தர்: நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?

புக்குசாதி : நான் புக்குசாதி. தக்ஷசீல மன்னன்.

புத்தர்: மஞ்சள் ஆடை அணிந்திருக்கிறீர்கள்! யாரிடம் துறவறம் பெற்றீர்கள்? ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள்?

 

புக்குசாதி: எனது நண்பர் மஹாராஜா பிம்பசாரன் ஒரு தங்கத் தகட்டில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில் இந்த ராஜ்யத்தில் மூன்று ரத்தினங்கள் இருப்பதாகவும் அவை புத்தம், தம்மம், சங்கம் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக் கேட்டவுடன் என் ராஜ்யத்தை நான் துறந்தேன். ஒரு கடையிலிருந்து இந்த துவராடையை வாங்கி அணிந்தேன். புத்தரைத் தேடி இங்கு வந்தேன். அவரோ சாவட்டியில் இருப்பதாக அறிகிறேன். இரவு நேரமாகி விட்டது. ஆகவே இங்கு தங்கி இருக்கிறேன். நாளை காலை அவரைத் தரிசிப்பேன்.

 

புத்தர்: அவரை இதற்கு முன்னர் பார்த்திருக்கிறீர்களா?

புக்குசாதி: இல்லை

புத்தர்: அவரைப் பார்த்தால் அவர் தான் புத்தர் என்பதை நீங்கள் உணர முடியுமா?

புக்குசாதி: முடியாது.

அவ்வளவு தான். உரையாடல் முடிந்தது.

 

Picture from Singapore; posted by Puvana Sarma

இருவரும் மௌனமாயினர்.

புலர்காலைப் பொழுது மலர்ந்தது.

புத்தர் புக்குசாதிக்கு உபதேசித்தார்.

அப்போது தான் புக்குசாதிக்குத் தெரிய வந்தது, முதல் நாள் இரவு தன்னுடன் உரையாடிய மகான் புத்தரே தான் என்று!

எல்லையற்ற ஆனந்தம் கொண்ட அவன், புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் முந்திய  இரவு அவரை ‘ஆயுஷ்மத்’ என்று அழைத்தமைக்காக! ஆயுஷ்மத் என்றால் நண்பன் என்று பொருள்.

 

தனக்கு உரிய முறையில் சங்கத்தில் சேர்க்குமாறு அவன் வேண்டினான்.

புத்தரும்  கருணையுடன் அவ்னிடம், ஒரு துவராடையையும் ஒரு பிக்ஷா கலயத்தையும் கொண்டு வரப் பணித்தார்.

புக்குசாதி வெளியில் சென்று குப்பைக் குவியல் ஒன்றில் துவராடை ஒன்றைத் தேடலானான்.

 

 

அநத சமயத்தில் புத்தர் ஜேடவனம் என்ற மடாலயத்திற்குச் சென்றிருந்தார்.

 

குப்பைத் தொட்டியில் துவராடையையும் கலயத்தையும் அவன் எடுக்கும் போது காளை ஒன்று தன் இரு கொம்புகளால் அவனைக் கூர்மையாகக் குத்தியது.

 

அதே இடத்தில் உடனே அவன் மரணமடைந்தான்.

ஏற்கனவே புத்தரின் உபதேசத்தால் அனாகாமி என்ற உயரிய நிலையை அடைந்த அவன் திரும்பி வராத ஒரு உயரிய நிலையைப் பெற்றிருந்தான்.

 

அவிஹா ப்ரம்ம உலகத்திற்குச் சென்ற அவன் அர்ஹாந்த் என்ற அற்புதமான நிலையை அடைந்து விட்டான்.

 

நடந்ததை எல்லாம் கேட்ட மஹாராஜா பிம்பசாரன் புக்குசாதியின் உடலை எடுத்து தக்க மரியாதைகள் செய்து தகனம் செய்தான்.

அவனது அஸ்தியைச் சேர்த்து ஒரு நினைவிடத்தை அமைத்தான்.

 

புத்தரின் எல்லையற்ற கருணை எப்படி இறக்கப் போகும் விதியுடைய ஒருவ்னையும் சென்று சேரும் என்பதற்கு புக்குசாதியின் வாழ்க்கை நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

தன்னை அண்டி வந்த எவரையும் புத்தர் கைவிட்டதே இல்லை!

***

பாரதி போற்றி ஆயிரம் – 25 (Post No.4600)

Date: 10 JANUARY 2018

 

Time uploaded in London- 6-34 am

 

Compiled  by S NAGARAJAN

 

Post No. 4600

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 25

  பாடல்கள் 147 முதல் 152

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

பாரதியார் பட்டினி உபதேசம்

 

கேளென்று சொன்னாலும் கேளாத நெஞ்சத்தை

வாளொன்று கொண்டு வருத்தாமல் நீ தம்பி

தந்திரத்தாலே சரிப்படுத்தலாம் கண்டாய்!

வந்த வறுமையிலே செம்மை வரச் செயலாம்.

 

அந்த விவரம் அறைகின்றேன் நீ கேட்பாய்

முந்தா நாள்நீ உண்ட மொச்சை விதைக் குழம்பு

நேற்றுப் புசிப்பதற்கு நெஞ்சு கசந்திருக்கும்

மாற்றிப் புசிக்க வழிதேடித் தானிருப்பாய்

இன்று முருங்கைக்காய் இட்டுப் பருப்பிட்டு

நன்று குழம்பிட்டு நாலு பிடி சோறுண்டால்

நாளைக்கு கத்தரிக்காய், நாளன்று பீர்க்கங்காய்

வேளைக்கு மாங்காய், விடிந்தால் புடலங்காய்

நித்தம் விதவிதமாக நீ உண்பாய்; ஆனாலும்

அத்தனையும் தெவிட்டும்; ஆசைவிடும் மேற்கொண்டே

 

அண்டை அயலகத்தில் ஆமைவடை மோர்க்குழம்பு

கண்டால் அதுபோற் கறியுண்ண ஆசைவரும்

ஆமைவடை மோர்க்குழம்புக்கு அப்பாலோ நாகரிகச்

சீமை அவரைக்காய் சேமியாப் பாயாசம்

வீட்டில் பதார்த்த விழா நடத்த ஆசையுண்டு

மூட்டைப் பணம் வேணும் முள்ளங்கிப் பத்தையைப் போல்

இட்டகூழ் இன்றைக்கு நன்றா யிராவிட்டால்

பட்டினியாய்ப் போட்டு விடு; நாளைக்குப் பார்ப்பாய் நீ

இட்டதொரு கூழில் இனிமை கிளம்புவதை,

பட்டினியால் இலாபம் பல.

 

அலங்காரக்குறும்பு

 

ஊராரே கேளுங்கள் இந்த ஒரு சேதி

பாரதியார் என் மகனைப் பார்த்துப் பரிகசித்தார்

ஏன் பாரதியாரே, என் மகன் உம் காரியத்தில்

தான் வந்து வீணில் தலையிட்டுக் கொண்டதுண்டா?

இல்லையென்று சொல்கின்றீர் அவ்வாறிருக்கையிலே

தொல்லை தரும் வார்த்தை என் மாமனைச் சொன்னதேன்?

 

ஏழ்மைக் கிழத்தன்மை நோய்கள் இவற்றையெல்லாம்

ஆழக் குழித்தோண்டி அப்படியே புதைத்துத்

தேசத்தை மேல் நிலையிற் சேர்ப்பதெனும் உங்கள்

ஆசையோ பேராசை! அப்படித்தான் ஆகட்டும்

அச்செயலை நான் ஒன்றும் ஆட்சேபம் பண்ணவில்லை?

கச்சை கட்டி ஆடுங்கள்! கை தட்டிக் கூவுங்கள்!

எங்கள் செயலுண்டு யாமுண்டு, மற்ற விதம்

 

உங்களிடம் யாரையா ஓடிவந்தார்? சொல்லும்!

‘இளம் பையன் வீதியிலே சொன்னான் எனில், நீர்

முதுமையில்  மணி முதுமையில் மணி என்றே

எதிர் வந்து சொன்னீரே! எல்லாரும் கேட்டுக்

குலுங்க நகைத்தாரே ஐயா குறும்பில்

அலங்காரம் சேர்த்தீரோ அங்கு?

 

குறிப்பு : பையனின் தந்தை, பாரதியாரிடம் பேசியதாகக் கூறியது கற்பனை.

 

 

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

 

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

 

பிராமணர்கள் ஜாக்கிரதை! தமிழ் கவிஞர் எச்சரிக்கை! (Post No.4599)

Written by London Swaminathan 

 

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London 11-13 AM

 

 

 

Post No. 4599

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

((எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக் கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))

 

பிராமணர்கள் தீ போன்றவர்கள்; மிகவும் பக்கத்தில் போனால் சுடும்; மிகவும் விலகிச் சென்றால் குளிரும்; நீங்கள் கஷ்டப்படுவீர்கள்- என்று ஒரு தமிழ்க் கவிஞர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எச்சரித்தார்.

உலக மஹா புத்திமான், பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன், சாணக்கிய நீதி, அர்த்த சாஸ்திரம் முதலிய நூல்களை யாத்த பெரு மகன், மகத சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பின்னரும் குடிசையில் வாழ்ந்த உத்தமன், ஏழைப் ப்ராஹ்மணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி இதை விட ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.

 

இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!

 

பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே.

 

இதோ தமிழ், ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!!

 

விப்ரயோர்விப்ரவஹ்ன்யோஸ்ச தம்பத்யோஹோ ஸ்வாமிப்ருத்யர்யோஹோ

அந்தரேண ந கந்தவ்யம் ஹலஸ்ய வ்ருஷபஸ்ய ச

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 5

 

பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும்   அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.

 

பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச

நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா

சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6

 

பொருள்

அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே.

சாணக்கியன் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் ஆராய்ந்து பார்க்கில் பல விஷயங்கள் நமக்கே புரியும்; உதாரணங்கள் மனக் கண் முன் சித்திரம் போலச் செல்லும்.

 

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!

 

அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர். சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.

 

‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது.

 

இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்:

சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;

அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;

உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.

 

வேளான்குடிக்கு அழகாவன

 

 

கழகத்தால் வந்த பொருள் காமுறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு

–திரிகடுகம், நல்லாதனார்

 

முற்காலத்தில் இதே தீ உவமையை வள்ளுவர், அரசர் பெருமக்களுக்கு உவமித்தார். தமிழ் வேதமாகிய திருக்குறள் சொல்லும்:–

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்– குறள் 691

 

அரசர் கூட வேலை செய்வோர், ராஜாவை மிகவும் நெருங்காமலும், விலகிப் போகாமலும், குளிர் காய்பவன் போல, தம் கடமையைச் செய்ய வேண்டும்.

 

பிற்காலத்தில் நன்னூல் எழுதிய பவணந்தி போன்றோரும் இதைப் பயன் படுத்தினர்.

 

 

உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது.

 

பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்:

அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்‌ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்- சங்கரர்

விஷ்ணுஸர்மன் எழுதிய பஞ்ச தந்திரத்திலும் இந்த தீ உவமையைக் காணலாம்.

 

–Subham–

TAMIL POET AND CHANAKYA WARN ABOUT BRAHMINS! (Post No.4598)

Written by London Swaminathan 

 

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London-8-09 AM

 

 

 

Post No. 4598

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

Don’t Walk In between Two Brahmins- Chanakya’s Advice; Tamils Agree!

 

Chanakya, the genius of ancient India, gives some strange advice. But It is found in later Tamil literature as well. Chanakya alias Kautilya lived 2300 years ago.

 

Here is the sloka/verse:

One should not walk in between two Brahmins, a Brahmin and fire, husband and wife, master and servant, the plough and the bull

 

Viprayorvipravahnyoho swamibhtyayoho

antarena nagantavyam halasya vrushabhasya ca

Chanakya Niti, Chapter 7,verse 5

 

xxx

 

One should not point feet towards fire, teacher, a Brahmin, a cow, a maiden, an old man and a child.

paadaabhyaam na sprusedagnim gurum braahnameva ca

naiva gaam wa kumariim ca vrudhdham na sisum tathaa

Chanakya Niti, Chapter 7,verse 6

 

xxx

Don’t be Over simple! Be crooked!

People should not be over simple; go to a forest and see. Straight trees are lumbered there while the crooked ones stay put.

naatyantam saralairbhaavyam gatvaa pasya vanasthaliim

chidhyante saralaastatra kubjaastishtanti paadapaahaa

Chanakya Niti, Chapter 7,verse 12

 

xxx

 

If the following seven are asleep, one should awaken them: a student, a servant, a wayfarer, one tormented by hunger, one tremulous in fear, the store keeper and a gate keeper .

vidhyarthii sevakah paantha; kshudhaartaa bayakaatarah

bhandaari ca pratihaari sapta suptaan prabhodhayet

Chanakya Niti, Chapter 9,verse 6

 

xxxx

These seven, if asleep, one should not wake up: a snake, a king, a tiger, a boar, a child, somebody else’s dog and a fool.

arhi nrupam ca saarduulam kiti ca baalakam  tathaa

parasvaanam ca muurkham ca sapta suptaan na bhodhayet.

Chanakya Niti, Chapter 9,verse 7

XXX

TAMIL VERSES

 

TIRIKADUKAM (Tri Kaduka) is one of the 18 minor didactic works. The author Nallaathanaar warns that one should deal with Brahmins carefully. One should treat a Brahmin like fire; don’t close too near; it will burn you; don’t go too far; you will feel cold and suffer. The message is treat them with due respect. Since Brahmins of the golden days—Krta Yuga—and the olden days  were pure in character, their words came came true; and if it was a  good word it  benefitted one; if it was a curse it harmed one.

Nallaathanaar says,

Oh, farmers! Wise men say three things are good for you—

1.Dont try to get money through gambling

2.Even if you know a Brahmin for long, fear him like fire

3.Do farming with interest

 

Tiruvalluvar, the author of Tamil Veda Titukkural use the same for a king

 

How to move with a king? It is just like one who warms oneself in the fire, neither going too near, nor too far – kural couplet 691

 

Adi Shankara was the one who used this fire imagery first. Later Tiruvalluvar, Nallaathanaar, Kamban,  Bhavananthi of Nannul and several authors used it.

 

Adi Shankara used it in the context of devotees; Lords says that he does not discriminate; those who are nearer to him get the benefits of his warmth; those who go away from him lose his grace.

 

It is very interesting to compare all of them.

 

–subham–

 

கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்! (Post 4597)

Date: 9 JANUARY 2018

 

Time uploaded in London- 6-49 am

 

Written  by S NAGARAJAN

 

Post No. 4597

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

அத்வைத ஸார விளக்கம் – கட்டுரை எண் 8

முந்தைய கட்டுரைகள்: முதல் கட்டுரை எண் 4388- வெளியான தேதி: 12-11-17

இரண்டாம் கட்டுரை எண் 4406 -வெளியான தேதி : 18-11-17

மூன்றாம் கட்டுரை எண் 4445 – வெளியான தேதி : 30-11-17

நான்காம் கட்டுரை எண்  4472  – வெளியான தேதி :    9-12-17

ஐந்தாம் கட்டுரை எண் 4511 – வெளியான தேதி : 18-12-17

ஆறாம் கட்டுரை எண் 4546 – வெளியான தேதி : 26-12-2017

ஏழாம் கட்டுரை எண் 4574 – வெளியான தேதி : 2-1-2018

 

கோசம், ஆத்மா சித் ரூபன், விளக்கம்!

ச.நாகராஜன்

 

 

 

இனி கோசம், ஆத்மா பற்றித் தெரிந்து கொள்வோம்

*

ஐயா, கோசம் என்றால் என்ன?

சொல்கிறேன்.

கத்திக்கு உறை இருப்பது போல,

மாம்பழத்திற்கு தோல் இருப்பது போல,

மனிதனை சட்டை மறைப்பது போல,

ஆத்மாவை, அன்னமய கோசம், பிராணமய கோசம்,  மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம். ஆனந்த மய கோசம் என்று ஐந்து கோசங்கள் மறைக்கிறது.

 

இந்த கோசங்களுக்கு ஆத்மா அன்னியன் என்பது எப்படி?

அக்கினியை அனுசரித்திருக்கும் புகைக்கு அந்த அக்கினியைத் தவிர வேறு இருப்பு இல்லை.

 

என்றாலும் கூட அந்தப் புகை அக்கினியை மறைக்கிறது.

அதே போல ஆத்மாவின் இருப்பையே இருப்பாகக் கொண்ட கோசங்கள் ஆத்மாவை மறைப்பதாக ஆரோபிக்கப்படுகின்றன.

ஆனால் மண்ணினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட ஒரு குடத்தினுடைய ரூபமும், பெயரும் பாதிக்கப்படும் போது  வாஸ்தவமாய் மண் மாத்திரம் எப்படி மிஞ்சுகிறதோ, அதே போல ஆத்மாவினிடத்தில் ஆரோபிக்கப்பட்ட  ஐந்து கோசங்களும் ஆத்ம ஞானத்தினால் பாதிக்கப்படுகிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபமான ஆத்மா ஒருவனே மிஞ்சுகிறான்.

 

நல்லது, ஐயா, ஆத்மாவின் சச்சிதானந்த ரூபத்துவம் என்னும் ஸத் ரூபம், சித் ரூபம், ஆனந்த ரூபம்  ஆகியவற்றிற்கான லக்ஷணம் எது?

முக்காலத்திலும், ஒன்றினாலும் பாதிக்கப்படாமல் இருந்து கொண்டு ஒரே ரூபமாக இருப்பது தான் ஸத் லக்ஷணம்.

 

 

ஆத்மா சித் ரூபன் என்பதற்கு என்ன பிரமாணம்?

தனது இருப்பை வெளிக்காட்ட சூரியன் முதலான சாதனங்களை நாடாமல், தானே விளங்கிக் கொண்டும் தன்னிடத்தில் ஆரோபிக்கப்பட அனைத்து ஜட பதார்த்தங்களையும் பிரகாசிப்பித்துக் கொண்டும் இருக்கின்றபடியால் சித் ரூபன் எனப்படுகிறான்.

 

 

இனி ஆனந்த ரூபத்துவம் எது?

நித்தியமாயும், நிருபாதிகமாயும், நிரசதியமாயும் இருக்கின்ற சுகம் எதுவோ அதுவே

ஆனந்த ரூபத்துவம்.

 

அதெப்படி ஐயா?

சுஷூப்தி ஆநந்தத்தில் சுக லக்ஷணம் இருப்பதனால் அந்த ஆனந்தமே “நான்” என்று அறிந்து கொள்ளத்தக்கது.

 

சுஷூப்தியில் துக்க நிவர்த்தி மட்டும் காணப்படுகிறதேயன்றி ஆனந்தத்துவத்தை அனுபவிப்பதைக் காணவில்லையே?

நல்ல தூக்கத்தில் இருந்த ஒரு மனிதன் எழுந்திருந்த பின்னர், “நான் சுகமாகத் தூங்கினேன்” என்று சொல்கிறான் இல்லையா, அப்படிச் சொல்வதால், ஆத்மாவுக்கு சுஷூப்தியில் சுகத்தின் இருப்பைச் சொல்கிறான்.

 

நிருபாதிக்கத்துவம் எது?

புஷ்பம், சந்தனம், பெண் ஆகியவை உபாதிகள்.இவற்றால் உண்டாகும் சுகம் ஔபாதிகம். சுஷூப்தியில் இந்த உபாதிகள் எதுவும் காணப்படுவதில்லை.

அப்படியிருந்தும் சுகமானது எல்லோராலும் அனுபவிக்கின்றபடியால் சுஷூப்தியில் நிருபாதிகத்வ ஆனந்தம் இருக்கிறது.

 

நிரதிசயத்துவமாவது எது?

மனுஷ்ய ஆனந்தம் முதல் ஹிரண்யகர்ப்ப ஆனந்தம் வரை பதினோரு ஆனந்தம் இருக்கிறது.

ஆகையால்  அவற்றிற்கு அதிசயத்துவம் உண்டு.

ஆனால் பிரம்மானந்தம் ஒன்றே எல்லையற்றதாயும், ஒப்புயர்வு அற்றதாயும் உள்ளபடியால் சுஷூப்தி ஆனந்தமாகிய பிரம்மானந்தமே நிரதிசயம் ஆகும்.

 

நித்தியத்துவமாவது எது?

ஜாக்ரத ஸ்வப்னங்களில் அநேக விஷயங்களில் அநேக ரூபமான  சுகத்தைத் தனித்தனியாக அனுபவிக்கலாம்.

ஆனால் சுஷூப்தி சுகம் மாத்திரம் ஒரே ரூபமுடையதாகவும் பூர்ணமாயும் இருக்கிறது.

 

சச்சிதானந்த ஸ்வரூபம் என்ற அனுபவம் எப்படி வரும்? அது எப்படிப்பட்டது?

வேதாந்த, சாஸ்திர தாத்பரிய நிச்சய ரூபமாகிய சிரவணத்தை (சிரவணம் = கேட்பது) குரு முகத்தால் கேட்டும்,

அதற்கு அனுசாரமாய் மனனமும்,

மனனனுக்கு அனுசாரமாய் நிதித்யாசனமும் செய்தால்,

பிறகு சச்சிதானனந்த பிரம்மமே “நான்” என்ற ஞானம் உண்டாகும்.

இதுவே பரோக்ஷ ஞானம்.

இந்த பரோக்ஷ ஞானத்தைப் பற்றிய காரியங்களைச் செய்யாதவனாகவும்,

 

 

நான் கர்த்தா என்றாதி அபிமானத்தை விட்டவனாகவும்,

பிரம்மமே நானாக இருக்கிறேன் என்ற அனுபவத்தையும், அது விஷயமான முயற்சியையும் கர்த்ருவத்தையும் விட்டவனாயும், சகலத்திலும் சுஷூப்தியில் இருப்பது போல பற்றற்ற சுபாவமாகிய தூஷணீம் அவஸ்தையில் நீரில் உப்பு கரைந்தால் எப்படியோ அப்படி பிரம்மத்தில் கலந்து போன அந்தக்கரணத்தை உடையவனாகியும், நிர்விசேஷ நிலையில் இருப்பவனுக்கு நிர்விசேஷ ஞானம் எதுவோ அது தானாகவே உண்டாகிறது.

 

இது தான் அபரோக்ஷானுபவம்.

இந்த அனுபவம் எப்போது உண்டாகிறதோ அப்போது அவன் சுவானுப ரூபன்.

அப்போது தான் ஆனந்த ரூபன்.

அந்த ஆனந்த வைபவத்தை அவனேஅறிவானன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்.

அந்த ஆனந்தத்தை அறிவிக்க எந்த வேத, வேதாந்த சாஸ்திரங்களினாலும் முடியாது.

மனோ வாக்குகளினாலும் முடியாது.

இப்படி வாக்கு, மனதுக்கு எட்டாத அகண்டானந்த பிரம்ம சுவரூபானுபவத்தில் இருக்கின்றபடியால் தன்னுடைய ஆனந்தத்தைத் தானே அனுபவிக்க சக்தியை உடையவனாகிறான்.

 

ஆத்மாவின் அகண்டார்த்தத்தைச் சொல்லுங்களேன்.

தேக பரிச்சேதம்,

கால பரிச்சேதம்,

வஸ்து பரிச்சேதம்

என்கின்ற மூன்று பரிச்சேதங்கள் அற்றதாகிய அபரிச்சின்னார்த்தம் தான் ஆத்மாவின் அகண்டார்த்தம்.

 

ஐயா, மிக்க நன்றி, நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டோம். என்றாலும் பரிச்சேதம் என்று சொன்னீர்களே அது பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்.

கேட்கலாமா?

தாராளமாகக் கேளுங்கள். பதில் சொல்கிறேன்.

***

அடுத்த கட்டுரையுடன் இந்த அத்வைத ஸார விளக்கம் முடியும்.

 

பாரதி போற்றி ஆயிரம் – 24 (Post No.4596)

Date: 9 JANUARY 2018

Time uploaded in London- 6-39 am

Written  by S NAGARAJAN

Post No. 4596

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

பாரதி போற்றி ஆயிரம் – 24

  பாடல்கள் 142 முதல் 146

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

பாரதிதாசன் பாடல்கள்

 பாரதியார் நாமம் வாழ்க (தொடர்ச்சி)

நிதி பெருக்கும் மனிதர்களும், நெடுந்தேச

    பக்தர்களும், தலைவர் தாமும்

கதி பெருக்க ஏடெழுதும் ஆசிரியர்

    என்பவரும் கவிதை யென்றால்

மிதி என்பார்! தமிழ்க் கவியைப் புதுவகையில்

    மேலெழுப்பிக் கவிகள் நம்மைத்

துதி புரியும் வகை தந்த சுப்ரமணிய

    பாரதியார் நாமம் வாழ்க!

பேசுகின்ற தமிழினிலே சுவைக் கவிதை

    தரவறியாப் பெரியோ ரெல்லாம்

பேசுகின்ற தமிழினிலே தமிழரெல்லாம்

    வேண்டுவன பெறுதல் கண்டும்

ஏசிநின்றார், அவர் நாணத் தமிழ்க் கவிதை

    உலகினிலே எசமான் ஆன

தூசகன்ற தமிழ்ப்புலவர் சுப்ரமணிய

    பாரதியார் நாமம் வாழ்க!

அயர்லாந்தில் வெர்ஹேரன் எனுங் கவிஞன்

    ஐரிஷ் மொழி வளரச் செய்தான்!

அயர்லாந்தில் அதன் பிறகே உணர்வுபெற

    லாயிற்றென்றறிஞர் சொல்வார்!

பெயர்பெற்ற கவிதைகளின் சுடர்க் கவிஞர் சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

எல்லையற்ற ஆதரவும் பொருள்வலியும்

     இசைந்திருந்த ஷேக்ஸ்பியரும்,

சொல்லும் விக்டர் யூகோவும், டால்ஸ்டாயும்

     நவீ ந்திரனும் சொந்த நாட்டில்

நல்லசெயல் செய்தார்கள்! நடைப் பிணங்கள்

     மத்தியிலே வறுமை என்னும்

தொல்லையிலும் தொண்டு செய்த சுப்ரமணிய

     பாரதியார் நாமம் வாழ்க!

வாழ்க எழிற் பாரதியார் திருநாமம்

     வையமிசை எந்த நாளும்

வாழ்க தமிழ்! தமிழ்க் கவிதை!

     தமிழ் நாட்டார் மகாவீ ரராக எங்கும்

வாழ்க அவர் வகுத்த நெறி வருங் கவிதா

     மண்டலமும் கவிஞர் தாமும்!

வாழ்க நனி சமத்துவ நல் லிதயமதி வாய்ந்த

     புகழ் நிலவு நன்றே.

                               (முற்றும்)

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம். 

***

RAMAYANA & MAHABHARATA QUIZ- SEERS, SAINTS AND RISHIS (Post No.4595)

Written by London Swaminathan 

 

Date: 8 JANUARY 2018

 

Time uploaded in London-11-08 AM

 

Post No. 4595

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

1.We all know that Vyasa muni wrote Mahabharata with the help of Lord Ganesh. What is the full name of Vyasa?

2.Ashtavakra was the Rishi (seer) who was born with eight bends in his body because of the bad sound effect; his father recited the Vedas with mistakes; who told this story to Yudhisthira?

3.Who was the rishi that visited the Pandavas in the Dwaitya forest and advised them to surround themselves with Brahmanas?

  1. What is Dronacharya’s father’s name?

5.Which Muni (saint) gave Dronacharya the Agni Astra (fire weapon)?

 

6.Who was the one who told Yudhisthira the story of Nala and Damyanti in the forest?

7.Who was the chief priest of Pandavas who advised them on religious ceremonies?

8.What is the name of the Rishi who gave boons to Kunti for serving him?

9.Name the rishi learned in astrology and astronomy who visited Balarama during the Mahabharata war.

10.Name the Inter Galactic traveller (rishi) who advised Dhritarashtra  to keep Duryodhana in check.

11.Parikshit, posthumous son of Abimanyu, was cursed by whom for throwing a dead snake on a seer?

Kalakshetra Picture

 

 

 

12.Who was Shrungi’s father on whose neck the dead snake fell?

  1. Who taught Sanatsujatiyam to Dhritarashtra to come out of ignorance or wordly attachment?

 

RAMAYANA SEERS SAGES AND RISHIS

 

14.Who performed the Pattabisheka (coronation ceremony) of Lord Rama?

 

15.where did Sita Devi live when Lakshmana left her in the forest?

16.Who taught Rama the famous Surya Hymn Aditya Hrudaya ?

  1. When young who gave the miraculous Bala, Abala mantras to Rama Lakshmana?

18.Who did Putra Kameshiti Yajna for Dasaratha?

19.Rama met a seer before going to the Ashrama of Agastya. He Gave all his taposakti (austerity earned by doing penance). Who was he?

20.Who was the Guru of Janaka?

21.Who was the seer who turned down the invitation of Indra and entered fire after worshipping Rama?

22.Who gave a big feast to the army of Bharata by his power earned through penance?

23.Anasuya gave lot of jewels to Sita/ Who was her husband?

24.Rama’stouch turned Ahalya into a woman from stone. What is the name of Ahalya’s husband?

25.Who wrote Ramayana in Sanskrit?

 

ANSWERS

1.Krsihna Dwaipayana, 2. Lomana rishi, 3. Bakadalbhya, 4. Bharadwaja, 5 Agnivesha Muni, 6. Brihadashwa, 7.Dhaumya Rishi, 8. Durvasa, 9. Gargacharya, 10. Narada 11.Shrungi, 12. Shamika, 13. Sanatsujata, 14.Vasishtha, 15.Valmiki’s Ashram/hermitatge, 16. Agastya, 17.Viswamitra 18.Rishya shrnga 19. Sutikshna, 20.Sadananda 21.Sarabhanga, 22.Bharadwaja,  23.Atri,  24. Gautama and 25. Valmiki

 

–Subham–

 

 

 

ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594)

ராமாயண, மஹா பாரத முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ) (Post No.4594)

 

Written by London Swaminathan 

 

Date: 8 JANUARY 2018

 

Time uploaded in London-7-50 AM

 

 

 

Post No. 4594

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

((எனது பிளாக்கில் கடந்த 7 ஆண்டுகளில் 600-க்கும் மேலான கேள்விகளும் பதிலும் பதியப்பட்டுள்ளன. இவைகளைத் தமிழ் இலக்கியத்திலிருந்தும் ஸம்ஸ்க்ருத இலக்கியத்தில் இருந்தும் எடுத்துள்ளேன். ஆங்கிலத்திலும் அவைகளைத் தந்துள்ளேன். படித்துப் பயன் பெறுக.))

 

கீழேயுள்ள 25 கேள்விகள் ராமாயண மஹாபாரதத்தில் வரும்  முனிவர்கள், ரிஷிகள் பற்றிய கேள்விகளாகும்; எங்கே உங்கள் இதிஹாஸ அறிவைச் சோதித்துப் பாருங்கள் பார்ப்போம்! விடைகள் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளன.

1.மஹாபாரதத்தை எழுதியவர் வியாஸர்; அதை எழுத்து வடிவில் ஆக்க அவருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாஸரின் பெயர் என்ன?

 

 

2.அஷ்டாவக்ரர் கதையை யுதிஷ்டிரன் என்னும் தருமனிடம் யார் சொன்னார்? ( அஷ் டாவக்ரன் என்றால் எட்டு கோணல் என்று அர்த்தம்; அவரது தந்தை வேதத்தைத் தவறாக உச்சரித்ததால் கருவிலேயே அஷ்டாவக்ரர் கோணிக் குறுகிப் போனார்)

 

3.பாண்டவர்கள் ‘த்வைத்ய’ வனத்தில் வசித்த காலத்தே, ஒரு ரிஷி விஜயம் செய்து, பிராமணர்கள் சூழ வாழுங்கள் என்று அறிவுரை வழங்கினார்; யார் அவர்?

 

4.துராணாச்சார்யாரின் தந்தை யார்?

 

5.துரோணருக்கு அக்னி அஸ்திரத்தை வழங்கியவர் யார்?

6.பாண்டவர் வனவாச காலத்தில் அவர்களுக்கு நள-தமயந்தி கதையைச் சொன்னவர் யார்?

 

7.பாண்டவர்களுக்குச் சமயச் சடங்குகள் பற்றி ஆலோசனை வழங்கும் ரிஷியின் பெயர் என்ன?

 

8.சேவை செய்தமைக்காக இஷ்டப்பட்ட கடவுளை அழைக்கும் மந்திரத்தை குந்தி தேவிக்கு உபதேசித்த முனிவர் யார்?

 

9.மஹாபாரத யுத்தம் நடந்தபொழுது பலராமரைச் சந்தித்த வானசாஸ்திர , ஜோதிட நிபுணர் யார்?

 

 

10.துர்யோதணனைக் கட்டுக்குள் வைக்கும்படி திருதராஷ்டிரனுக்கு புத்திமதி சொன்ன முனிவர் யார்?

 

  1. செத்துப்போன நாகப் பாம்பை ஒரு முனிவர் மீது வீசியமைக்காக பரீக்ஷித் மஹாராஜனைச் சபித்த முனிவர் யார்?

 

 

  1. யார் மீது செத்த பாம்பை பரீக்ஷித் வீசி எறிந்தார்?

 

13.சொந்த பந்தம் என்ற தளைகளில் இருந்து விடுபட திருதராஷ்டிர மன்னனுக்கு உபதேசித்த முனிவர் பெயர் என்ன? அந்த உபதேசம் அடங்கிய நூலின் பெயர் என்ன?

XXX XXX  XXXX

ராமாயண முனிவர்கள், கேள்வி-பதில் (QUIZ)

14.ராம பிரானுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்த முனிவர் யார்?

 

15.எந்த முனிவரின் ஆஸ்ரமத்தில் சீதை வசித்தாள்?

 

16.ராம பிரானுக்கு புகழ் மிகு சூர்ய ஸ்துதியை சொல்லிக் கொடுத்த முனிவர் யார்?

 

17.ராம லெட்சுமணர்களுக்கு பலா, அபலா (பலை, அபலை) என்ற அதிசய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தவர் யார்?

 

18.தசரதனுக்கு வாரிசு உருவாக  எந்த முனிவர் வந்து புத்ர காமேஷ்டி யாகம் செய்தார்?

 

19.அகஸ்த்யரின் ஆஸ்ரமத்துக்குச் செல்லும் முன் ராமனுக்கு தனது தவத்தை எல்லாம் அளித்த முனிவர் யார்?

20.ஜனக மன்னனின் குரு யார்?

21.இந்திரனுடைய அழைப்பை மறுத்துவிட்டு, ராமனையும் ஸீதையையும் தரிசித்து அக்னியில் (தீ) புகுந்து உயிர்நீத்த முனிவர் யார்?

 

22.பரதனுடன் வந்தவர்களுக்கு தன் தவ வலிமையால் பெரும் விருந்தளித்த முனிவர் யார்?

 

23.ஸீதைக்கு அணிகலன்கள் அளித்த அநசூயை யாருடைய மனைவி?

  1. ராமன் கால்பட்டவுடன் பெண்ணாக உருமாறிய அஹல்யாவின் கணவர் பெயர் என்ன?

25.ஸம்ஸ்க்ருதத்தில் ராமாயணத்தை எழுதிய மஹரிஷி யார்?

 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

 

ANSWERS

1.கிருஷ்ணத் த்வைபாயனர், 2.லோமண ரிஷி, 3.பகதல்ப்ய ரிஷி, 4.பரத்வாஜ மஹரிஷி, 5.அக்னிவேஷ முனிவர், 6. பிருஹதஸ்வ மஹரிஷி, 7. தௌம்ய ரிஷி, 8. துர்வாஸர், 9. கார்காசார்யா, 10. நாரதர், 11.ச்ருங்கி   முனிவர், 12.ஷமிக முனிவர், 13. ஸனத்சுஜாதர்; நூலின் பெயர்- ஸநத் சுஜாதீயம், 14.வசிஷ்டர், 15. வால்மீகி முனிவர், 16. அகஸ்த்யர், துதியின் பெயர்- ஆதித்ய ஹ்ருதயம், 17. கௌஸிகன் எனப்படும் விஸ்வாமித்ரர், 18. கலைக்கோட்டு முனிவர். ஸம்ஸ்க்ருதப் பெயர் ரிஷ்ய ஸ்ருங்கர், 19.சுதீக்ஷ்னர், 20.சதானந்தர்தர், 21.சரபங்கர், 22.பரத்வாஜர், 23.அத்ரி மஹரிஷி, 24. கௌதம முனி, 25.வால்மீகி

 

–SUBHAM–