மாசுகள் உருவாகும் வகைகள்! (Post No 2685)

plastic rubbish

Written by S NAGARAJAN (for AIR talk)

Date: 1 April 2016

 

Post No. 2685

 

Time uploaded in London :–  5-55 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Plastic-Bottles-Trash-waste-460x250

    சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதன் காரணங்கள் பல!

    தீங்கு பயக்கும் அல்லது நச்சு கலந்த பொருள்கள் காற்றிலோ நதிகள், கடல்களிலோ கலக்கும் போது அவை மாசுபடுகின்றன. விலங்குகள், தாவரங்கள் ஏன் மனிதர்கள் கூட இதற்கு விலக்கு அல்ல. அவர்களிடமிருந்தும் கூட சூழல் மாசுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

 

   சூழலில் ஏற்பட்டுள்ள மாசினால் இங்கிலாந்தில் பதினோரு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

   சூரிய ஒளியின் ஆற்றலினாலும் காற்றுச் சுழலிகள் மூலமாகவும் மின் சக்தி உருவாவது இன்றைய காலகட்டத்தின் அவசரத் தேவையாகிறது.

 

   நமது வாகனங்களில் நாம் பயன்படுத்தும் டீஸல் மற்றும் பெட்ரோல் சுற்றுப்புறச் சூழலில் மாசை ஏற்படுத்துகிறது. ஆகவே அவற்றின் பயன்பாட்டை முடிந்த அளவு ஒவ்வொருவரும் குறைத்தல் வேண்டும்.  

   ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நதி, கடலில்     கலந்தால் அவை பல மைல் தூரம் உடனடியாக கொண்டு செல்லப்படுவதால் அபாயம் வெகு விரைவில் எங்கும் பரவும் நிலை ஏற்படுகிறது.    

 

  பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பல்வேறு பொருள்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை உடனடியாக ஒவ்வொருவரும் நிறுத்தி விட்டால் சுற்றுப்புறச் சூழலில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.     பிளாஸ்டிக் பைகள் கடலில் மிதக்கும் போது அவற்றை தனது உணவாக எண்ணி அவற்றை உட்கொள்ளும் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பரிதாபமாக உயிரை இழப்பது பெருமளவில் பெருகி வருகிறது.  

வீட்டில் சுத்தப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் திட மற்றும் திரவ வடிவிலான இரசாயனப் பொருள்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே அவற்றைச் சிறிய அளவில் பயன்படுத்ல் வேண்டும். சூழலுக்கு உகந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.  

 

   சுற்றுப்புறச் சூழல் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் அறிந்து பிறருக்கும் அவற்றைக் கூறுதல் பெரிய சமுதாய சேவை ஆகும்!

–Subham–

 

 

Attention Narendra Modi! Vyasa and Manu on Rulers (Post No. 2684)

Modi_1938656f

picture of Prime Minister Narendra Modi; I am sure he has not got the 18 vices listed by Manu!

Compiled  by london swaminathan

Date: 1 April, 2016

 

Post No. 2684

 

Time uploaded in London :–  17-15

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Vyasa says:

“A king should be

farsighted like a vulture,

patient like a crane,

vigilant like a dog,

valiant like a lion,

fearful like a crow,

and penetrate the territories of his foes

like a snake with ease and without anxiety.

 

Sama, Dana, Beda, Danda and Pancha Tantra

A king should win over a hero

By joining his palms,

A coward by inspiring him with fear,

And a covetous man by gifts of wealth

While with an equal he should wage a war.

 

He should be mindful of producing disunion among the leaders of sects and of conciliating those that are dear to him. He should protect his ministers from disunion and destruction.

 

If he becomes stern, the people feel it an affliction. The rule is that he should be stern when the occasion requires sternness and mild when the occasion requires mildness.

 

By mildness should the mild be cut. By mildness one may destroy that which is fierce. There is nothing that mildness cannot effect. For this reason mildness is said to be sharper than fierceness. That king who becomes mild when the occasion requires mildness and who becomes stern when some sternness is required succeeds in accomplishing all his objects, and putting down his foes.

XXX

 

IMG_1485

Manu says,

 

In Chapter 7 of Manu Smrti he explains the duties of kings in detail. Some of the important points are as follows:

(7-2) A ruler should protect all the people under his rule

(7-3) When the world was without a king, people lived in fear. And so the Lord created the kingship to protect his people.

(7-4) a king should be like Yama, Indra, Vayu, Agni, Surya/sun, Chandra/moon, Kubera.

(each one stands for one good quality)

Respect even a little boy!

(7-8) A king should not treat even a little boy with disrespect. He must think that he is a human being; for this is a great deity standing there in the form of a man.

(7-43)From those who have the triple learning he should acquire triple learning, the eternal science of politics and punishment, philosophy, and the knowledge of the soul; and from the people he should learn the trades and enterprises.

 

(7-44) Day and night he should make a great effort to conquer his sensory powers. Then only he can keep his subjects under control.

 

(7-45) He should avoid the ten vices that arise from desire and eight that are born of anger.

They are

Hunting,

Gambling

Sleeping by day

Malicious gossip

Women

Drunkenness

Music

Singing

Dancing

Aimless wandering (Ten vices)

Slander,

Physical violence

Malice

Envy

Resentment

Destruction of property

Verbal abuse

Assault (eight vices born out of anger)

It is very interesting to read Manu’s views on kings. He gives the examples of fallen kings from the mythology. The list makes very interesting reading. I will give them separately with the commentaries of famous commentators.

–Subam-

 

பேரழகி சித்தூர் ராணி பத்மினியின் தியாகம்! (Post No. 2683)

alauddin 3a

Compiled  by london swaminathan

Date: 1 April, 2016

 

Post No. 2683

 

Time uploaded in London :–  11-23 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

புறநானூற்றில் கணவன் சிதையில் தீக்குளித்த பூதப் பாண்டியன் தேவியைக் கண்டோம். சோழ மன்னன் கிள்ளிவளவன் மனைவியர் தீப்பாய்ந்து இறந்ததைக் கோவூர்க் கிழார் பாடக் கண்டோம். சிலப்பதிகாரத்தில், மாதரி என்னும் இடைக்குலப் பெண் தீயில்  பாய்ந்ததையும் எழுதிவிட்டேன். ஆயினும் சித்தூர் ராணி பத்மினி, நூற்றுக் கணக்கான பெண்களுடன் தீப்பாய்ந்ததைப் படிக்கையில் உடம்பில் புல்லரிக்கும்.

 

அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்தக் கதை:–

ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டுவந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.

 

அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக்க விரும்பினான். ஆகவே பெரும்படையுடன் புறப்பட்டு ராஜஸ்தானுக்கு வந்து சித்தூரை முற்றுகையிட்டான். சித்தூரை வெல்ல முடியாதென்று தெரிந்தது. ‘கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற கதையாக, “நான் சித்தூரை வெல்ல வரவில்லை என்றும், பத்மினியின் அழகை ஒரே ஒரு முறை பார்த்துச் செல்லவே வந்ததாகவும்” பீம சிங்கனுக்குச் செய்தி அனுப்பினான்.

 

பீம்சிங்கன், அவன் வார்த்தையை நம்பி, ஓரிரு வீரர் துணையுடன் கோட்டைக்குள் வரலாமென்றும், ரஜபுத்ரப் பத்தினிப் பெண்கள் வேறு ஆடவரைப் பார்க்கக் கூடாதாகையால் நிலைக் கண்ணாடியில் மட்டும் அவள் உருவத்தைப் பார்க்கலாம் என்றும் நிபந்தனை போட்டான். உடனே அலாவுதீனும் இரண்டொரு வீரருடன் வந்து கண்ணாடியில், பேரழகி பத்மினியைப் பார்த்தான். ஏதேனும் சதி செய்து அவளைக் கவரவேண்டும் என்று எண்ணி, மனதில் சதித்திட்டம் தீட்டினான்.

 

“நான் உன்னை நம்பி, உன் கோட்டைக்குள், தனியே வந்தேனே. நீயும் என்னை நம்பி என் கூட வந்து வழியனுப்பக்கூடாதா?” என்று பீம சிங்கனிடம் அலாவுதீன் சொன்னான். ரஜபுத்ர இந்துக்கள், சத்ய சந்தர்கள்; உண்மை விளம்பிகள்; டில்லித் துலுக்கர்கள் போல உடல் முழுதும் விஷ ரத்தம் ஓடுபவரல்ல. ஆகவே அலாவுதீனை நம்பி அவன் கூட குதிரையில் செல்லுகையில், அலாவுதீன் உத்தரவிட்டவுடன் ஆப்கானியப் படைகள், பீமசிங்கனைச் சூழ்ந்து கொண்டன. அவனைக் கைது செய்து டில்லிக்குக் கொண்டு சென்றான் அலாவுதீன்.

 

“உன் மனைவியை என்னிடம் ஒப்புவித்தால் நான், உன்னை விடுவித்து, மீண்டும் சித்தூரின் மன்னனாக்குவேன்” என்று அலாவுதீன் சொன்னான். ஆனால் பீம சிங்கன் இணங்கவில்லை. இந்தச் செய்தி சித்தூர் வரை சென்றது.

 

பீமசிங்கனின் மனிவியான பத்மினி மஹா புத்திசாலி; வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும், முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்; வஞ்சனையை வஞ்சனையால்தான் வெல்ல வேண்டும் என்று கருதி, அலாவுதீன் கில்ஜிக்குச் செய்தி அனுப்பினாள். என் கணவனை நீ விடுவிப்பாயானால், நான் உன்னிடம் வரத்தயார். ஆயினும் ரஜபுதனப் பெண்கள், எல்லோரும் காணும்படி வெளியே உலவ மாட்டார்கள். ஆகவே என் பரிவாரம் புடை சூழ மூடிய பல்லக்குகளில் வருவோம்” என்றாள். அலாவுதீனும் ஆவலுடன் காத்திருந்தான்.

 

சித்தூர் கோட்டையிலிருந்து 70 மூடு பல்லக்குகள் புறப்பட்டன. ஒன்றில் கூட பெண்கள் கிடையாது. அத்தனையிலும், தேர்ச்சிபெற்ற 70 வீரர்கள் மறைந்திருந்தனர். ஆறு பல்லக்குத் தூக்கிகள், ஒவ்வொரு பல்லக்கையும் சுமந்தனர். அவர்கள் அனைவரும் வீரர்கள். பல்லக்குகளில் ஆயுதங்களை மறைத்து வைத்தனர். பாந்தால் என்பவன் அவர்களை டில்லியை நோக்கி அழைத்துச் சென்றான். அவன், “பத்மினி, கடைசியாக ஒரு முறை கணவனைப் பார்த்துவிட்டு உன்னிடம் வருவாள்” என்று அலாவுதீனிடம் சொன்னவுடன் “பத்மினியின் பல்லக்கை” கூடாரத்துக்குள் அனுப்பினான். அதிலிருந்த வீரன் வெளியே குதித்து பீமசிங்கனை குதிரையின் மேல் வைத்து தப்பிக்கச் செய்தான். உடனே பெரும் சண்டை நிகழ்ந்தது. இரு தரப்பும் வீரர்களை இழந்தன.

 

ஓரிரு ஆண்டுகள் உருண்டோடின. அலாவுதீனின் வெறி அடங்கவில்லை. எப்படியும் பத்மினியை அடைந்தே தீருவதென்று முடிவு செய்து, மீண்டும் படையெடுத்து சித்தூரை முற்றுகையிட்டான். இப்பொழுது பீமசிங்கன் பலவீனமான நிலையில் இருந்தான்; ஏனெனில் முந்தைய போர்களில் முக்கியப் படைத் தலைவர்களை இழந்துவிட்டான். ஒரு கட்டத்தில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்தது. தன் மகனை அருகாமையிலுள்ள ரஜபுதன ராஜ்யத்துக்கு அனுப்பி பாதுகாப்பாக இருக்கும்படி சொல்லிவிட்டு வீரதீரப் போரில் ஈடுபட்டு உயிர்துறந்தான் பீம சிங்கன்.

 

ரஜபுதனப் பெண்கள் வீராங்கனைகள்; அரண்மனையின் அந்தப் புரத்தில் மாபெரும் தீ வளர்த்தனர். அதில் நூற்றுக் கணக்கானோர், பேரழகி பத்மினியுடன் குதித்து சாம்பலாயினர். வெற்றிக் களிப்புடன் கோட்டைக்குள் நுழைந்த அலாவுதீனுக்கு, வீரர்களின் பிணங்களும், வீரத்தாய்மார்களின் சாம்பலுமே கிடைத்தது!

பாரத நாடு உள்ள வரை, பத்மினியின் புகழும் நீடிக்கும்! ரஜபுதனக் கோட்டை கொத்தளங்களும், பாலைவன மணல் துகள்களும் இன்றும் கூட பத்மினியின் புகழைப் பாடிக்கொண்டிருக்கின்றன!!

-சுபம்-

எனது முந்தைய கட்டுரை:

1.சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்)

கட்டுரை எண்:–1108; தேதி 15 ஜூன் 2014.

 

-subham–

சுற்றுப்புறச் சூழலைக் காக்கச் சில வழிகள்! – 2 (Post No 2682)

bucket

Written by S NAGARAJAN (for AIR talk)
Date: 1 April 2016

 

Post No. 2682

 

Time uploaded in London :–  8-25 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

சுற்றுப்புறச் சூழலைக் காக்க வேண்டியது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகும். இதைக் காக்க எளிய வழிகள் பல உள்ளன. நீரைத் தூய்மையாக வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படும் சில வழிகள் இதோ:

 

நீரை பக்கெட்டுகளில் பிடித்து வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவு நீரைச் சேமிக்க முடியும். திறந்து வைத்துள்ள குழாய் நீரைப் பயன்படுத்தும் போது நிறைய நீர் வீணாக ஏதுவாகிறது.   

 

boy_tap

வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்தும் போது அதன் முழு கொள்ளளவிலான துணிகள் சேர்ந்த பின்னரே பயன்படுத்தல் வேண்டும். ஓரிரு துணிகளை சுத்தம் செய்ய மட்டுமே அவற்றைப் பயன்படுத்தினால் மின்சக்தியும் நீரும் அனாவசியமாகப் பயன்படுத்த நேரிடும்.    

வீட்டு தோட்டத்தில் மிகக் குறைவான உரங்களைத் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்தல் வேண்டும்.    

 

கழிவாக உள்ள எண்ணெயை ஒரு போதும் கழிவு நீருடன் கலக்கக் கூடாது.    டிஷ் வாஷர்களைப் பயன்படுத்துவோர் அதன் முழுப் பயன்பாட்டிற்கான பாத்திரங்கள் சேர்ந்த பின்னரே அதைப் பயன் படுத்தல் வேண்டும். மின் ஆற்றலும் நீரும் இதனால் சரியான பொருத்தமான பயன்பாட்டிற்கு உள்ளாகும்.              பல் துலக்கும் போதோ, குளிக்கும் போதோ குழாயைத் திறந்து விடக் கூடாது. மாறாக தேவைப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்தல் வேண்டும்.                           ஒழுகும் குழாய்களை உடனடியாகச் சரி செய்யல் வேண்டும்.                    சிறு துளி பெரு வெள்ளம் என்பதோடு சீரைத் தேடின் நீரைத் தேடு என்பதை மறக்க வேண்டாம்.

 

 

மேல்நிலைத் தொட்டி மற்றும் கீழ் நிலைத் தொட்டிகளை உரிய முறையில் அவ்வப்பொழுது சுத்தப்படுத்தல் மிகவும் அவசியம். இதனால் நமது ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்படும். நீரும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக அமையும்.

 

மழைநீர் சேகரிப்புக்கான அரசு குறிப்பிட்ட ஆலோசனைப் படி மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒவ்வொரு வீட்டிலும் அமுல் படுத்தல் இன்றியமையாதது. தொடர்ந்த பயன்பாட்டிற்கான நீர் உறுதி செய்யப்படுவதோடு நிலத்தடி நீர் மட்டமும் இதனால் உயரும்.

தேங்கிய சாக்கடை நீர் கொசுக்களை உற்பத்தியாக்கும். கழிவு நீர் உரிய  முறையில் அகற்றப்படுகிறதா என்பதை அவ்வப்பொழுது கண்காணித்தல் வேண்டும்.

–Subham–

 

Four Benefits of Breath control/ Pranayama! (Post No 2681)

_pranayam

Compiled  by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2681

 

Time uploaded in London :–  15-16

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

There are some slokas/couplets to explain the benefits and types of Yoga in Sanskrit. When one reads it in verse form, it is easily remembered and retained.

pranayama

1.Types of Breath Control (Pranayama):

Recaka – Exhalation

Puuraka – Inhalation

Kumbhaka – Retention

Suunyaka – only Retention

Recaka Puurakascaiva Kumbhaka Suunyakastathaa

Evam caturvidhah proktah Praanaayaamo maniishibhih

–Brhannaradiya Puranam

Xxx

2.Effects of Pranayama

Saanti – Peace

Prasaanti – Tranquility

Diipti – Splendour

Prasaada – Calmness

Prayojanaani catwaari  praanaayaamasca viddhi vai

Saanti Prasaantirdiipti sca prasaadasca cathustayam

Xxx

 

krishnamacharya-pranayama

3.Four types of Yoga

Mantrayoga,

Layayoga

Raajayoga

Hathayoga

Mantrayogo layascaiva raajayogastritiiyakah

Hathayogascaturthah syaat praaninaam mokshadaayakah

–Hatharatnaavali

Xxx

4.Krishna on True Yogi

Arjuna, he who looks on all as one, on the analogy of his own self, and looks upon he joy and sorrow with a similar eye – such a Yogi is deemed the highest of all (Bhagavad Gita 6-32)

Aatmaupamyena sarvatra samam pasyati yoarjuna

Sukham vaa yadi vaa dukham ca yogii pramo mathah (B G 6-32)

Xxx

113474-299x401-Pranayama4

5.Yoga is Difficult

Yoga is difficult of achievement for one whose mind is not subdued; by him, however, who has the mid under control, and is ceaselesley striving, it can be easily attained through practice. Such is my conviction ( B G 6-36)

Asamyataatmanaa yogo duspraapa ite me matih

Vasyaatatmanaa tu yatataa sakyo vaaptumupaayatah

-Bhagavad Gita 6-36)

–subham–

 

 

 

 

மகனைத் தியாகம் செய்து இளவரசனைக் காப்பாற்றிய வீரத்தாய்! (Post No 2680)

 

panna2 (2)

Written by london swaminathan

Date: 31 March,2016

 

Post No. 2680

 

Time uploaded in London :–  8-56 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

akbar7 (2)

ராஜஸ்தானில், மேவாரில் சங்க ராஜா என்ற ஒரு ரஜபுத்ர வீரன் ஆண்டுவந்தான். அவனுக்கு உதயசிம்மனென்ற சிறு குழந்தை இருந்தது. சங்கராஜா திடீரென்று இறந்துபோகவே, அரசவைப் பெரியோர்கள் கூடி, பான்பீர் என்னும் ஒரு இளவரசனை அழைத்து, உதய சிம்மன் பெரியவானாகும் வரை நீ நாட்டை ஆண்டு வா என்று உத்தரவிட்டனர்.

 

பான்பீர் முதலில் நன்றாகவே அரசாட்சி செய்து வந்தான். சில காலத்துக்குப் பின்னர் தானே மேவாருக்கு அரசனாக வேண்டும் என்ற பேராசை உண்டாயிற்று. உடனே பல வகைகளிலும் அரசாட்சியை நீட்டிக்கத் திட்டமிட்டான்.

 

 

பன்னா என்னும் தாதிதான் உதய சிம்மனைப் பாதுகாப்பாக வளர்த்து வந்தாள். அவளுக்கும் அதே வயதில் ஒரு குழந்தை இருந்ததால் இரண்டு குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள். ரஜபுத்ரப் பெண்கள், அந்நாட்டு ஆண்களைப் போலவே வீரமிக்கவர்கள். அவளுக்கு பான்பீரின் துர்புத்தி நன்றாகத் தெரியும். உதய சிம்மனை சிறு வயதிலேயேக் கொல்ல, பான்பீர் திட்டமிட்டதும் அவளுக்குத் தெரியவந்தது. உடனே பாரி என்ற பெயருள்ள நாவிதனை வீட்டுக்குக் காவலாகப் போட்டாள்.

 

ஒருநாள் பான்பீர், வாளும் கையுமாக, பன்னாவின் வீட்டு வாயிலில் வந்து இறங்கினான். உடனே நாவிதன் பாரி, ஓடிப்போய் அவளிடம் தகவல் சொல்லவே, அவள் வீட்டின் பின்புறமாக உள்ளே நுழைந்து, தன் கையிலிருந்த பழக்கூடையில் ராஜகுமாரன் உதயசிம்மனை வைத்து பழக்கூடையை நாவிதனிடம் கொடுத்து ஊர்க்கடைசியிலுள்ள மரத்தடியில் காத்திருக்கச் சொன்னாள்.

 

வீட்டிற்குள் மீண்டும் வந்து, ராஜ குமாரனின் உடைகள், அணிகலன்களைத் தன் மகனுக்கு அணிவித்தாள்; பின்னர் கதவைத் திறந்துவிட்டாள். ஆவேசத்துடன் நுழைந்த பான்பீர், தொட்டிலில் அரசனுக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்திருக்கும் சிறுவன் தான் உதயசிம்மன் என்று எண்ணி ஒரே குத்தில் கொன்றுவிட்டான். உடனே பன்னா வீறிட்டழுதாள். அக்கம்பககத்திலுள்ள பெண்கள் ஓடிவந்து அரசன் பான்பீர் நிற்பதைப் பார்த்துவிட்டு, பயந்து பிரமையுடன் நின்றனர். அவன் கொக்கரித்துவிட்டு வெளி ஏறினான்.

தந்நாட்டு அரசகுமாரனைப் பாதுகாப்பதற்காக தன் மகனையே தியாகம் செய்த பன்னா, சிறிதும் தாமதியாமல் மரத்தடிக்கு ஓடிச் சென்று நாவிதனின் கையிலிருந்த கூடையை வாங்கினாள். அதிலுள்ள ராஜகுமாரனை அருகாமை நாட்டிலுள்ள சிற்றரசனிடம் ,நடந்த கதை அனைத்தும் கூறி, உதய சிம்மன் பெரியவனாகும் வரை பாதுக்காக்க வேண்டினாள்.

 

உதயசிம்மன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, நல்ல வாலிபப் பருவம் எய்திய பின்னர் முழுக் கதைகளையும் கேட்டறிந்து படை திரட்டிச் சென்று பான்பீரைக் கொன்றான். மேவாரின் ஆட்சியை மீண்டும் ஏற்றான்.

 

ஒரு தாதி, ரஜபுத்ர அரசனுக்கு விசுவாசமாக இருந்து தன் மகனையே தியாகம் செய்த கதையை ரஜபுத்ர கிராம மக்கள் இன்றும் கிராமம்தோறும் பாடிப்பரவி வருகின்றார்கள்.

அவள் ஒரு வீரத்தாய்!

வேதத்திலும், புறநானூற்றிலும் வரும் வீரத் தாய்கள் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அவ்வரிசையில் காலத்தால் வெல்ல முடியாத பகழ் படைதுவிட்டாள் பன்னா என்னும் சாதாரணப் பணிப்பெண்!!!

–subam–

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்! (Post No.2679)

china-sequence_1559762b

Written by S NAGARAJAN

Date: 31 March 2016

 

Post No. 2679

 

Time uploaded in London :–  6-09 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

பாக்யா 1-4-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை

 

சூரிய கிரகணம் தந்த அறிவியல் வெற்றிகள்!

 

ச.நாகராஜன்

 

(This article is written for Bhagya Magazineby my brother S NAGARAJAN- londonswaminathan)

 eclipse solar

“கிரகணத்தின்போது சூரியனைப் பார்க்காமல் இருப்பது நல்லது”. – ஜெஃப் கோல்ட்ப்ளம்

 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து சூரிய ஒளி மறைக்கப்படுவதை சூரிய கிரகணம் என்கிறோம். 2016ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இதை ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடிந்தது.

 

 

சூரிய கிரகணம் பற்றி அறிவியலும் ஆன்மீகமும் ஒரு சேர ஆர்வம் கொண்டிருப்பது வியப்பான செய்தி.

சூரிய கிரகண காலத்தில் பொதுவாக பாரதம் முழுவதும் யாரும் உணவு உண்பதில்லை; பிரார்த்தனைக்கான நேரம் கிரகண காலம் என்பர்.

பொதுவாக சூரிய கிரகண காலத்தில் ஆளும் மன்னருக்கு ஆகாது என்பது உலக நாடுகள் பலவற்றிலும் நிலவி வரும் நம்பிக்கை.

கிரகணம் பற்றிய சில சுவையான அறிவியல், சமூக மற்றும் ஆன்மீகத் தகவல்களைப் பார்ப்போம்:

 

 

1919ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி உலகில் மிக முக்கியமான கிரகணம் ஒன்று ஏற்பட்டது. உலகின் மிக பிரபலமான மேதை ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தத்துவப் படி புவி ஈர்ப்பு விசை ஒளியை வளைக்க வேண்டும். முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு பிரிட்டன் இந்த சூரிய ஒளி பற்றிய ஆய்வுக்கு இரு இடங்களைத் தேர்ந்தெடுத்தது. அங்கு பார்வையாளர்களை அனுப்பியது. சூரியனின் ஒளி தற்காலிகமாகத் தடைப்பட்ட போது வானவியல் விஞ்ஞானியான சர் ஆர்தர் எடிங்டனும் அவரது குழுவினரும் தொலைதூரத்திலுள்ள நட்சத்திரங்களிலிருந்து கிளம்பும் ஒளி சூரியனின் ஈர்ப்பு விசையால் வளைந்ததைக் கண்டனர், வியந்தனர். இதன் மூலம் ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி கொள்கை சரியே என்பது நிரூபிக்கப்பட்டது.

 

 

இந்த கிரகணம் உலகின் மிக பிரம்மாண்டமான அறிவியல் கொள்கையை மெய்ப்பித்தது. ஒரே நாளில் உலகமே ஐன்ஸ்டீனைக் கொண்டாடியது.

 

 

1868ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதியன்று இந்தியாவில் ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. வானவியல் நிபுணர் ஜூல்ஸ் ஜன்ஸென் (Jules Janssen) அப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஸ்பெக்ட்ரோகிராப் கருவியைச் சூரியனை நோக்கித் திருப்பிப் பார்த்தார். சூரியனின் க்ரோமோஸ்பியரில் ஒரு அசாதாரண சிறப்பு அலைமாலையைக் (spectral signature) கண்டார். இது கிரகணத்தின் போது மட்டுமே காணப்பட்ட ஒரு நிகழ்வு. இதில் ஒரு புதிய மூலகத்தை அவர் கண்டு  பிடித்தார். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பை உலகம் லேசில் ஏற்கவில்லை. இது மிக மிக இலேசான வாயு. இதன் பெயர் தான் ஹீலியம். கிரேக்க புராணங்களில் வரும் சூரியனுக்கான பெயர் ஹீலியோஸ். அதிலிருந்து இந்தப் பெயர் இந்த வாயுவுக்குச் சூட்டப்பட்டது.

annular-eclipse

 

கிரகணத்தினால் அறிவியலுக்குக் கிடைத்த ஆதாயங்கள் இவை என்றால் பல சரித்திர சம்பவங்கள் கிரகணத்தின் பாதகமான விளைவுகளைச் சுட்டிக் காட்டுகின்றன!

 

 

முதலில் மஹாபாரதத்தை எடுத்துக் கொள்வோம். பீஷ்ம பர்வத்திலும் உத்யோக பர்வத்திலும் ஏராளமான வானவியல் குறிப்புகள் வருகின்றன.

 

 

மஹாபாரத யுத்தம் வருவதைச் சுட்டிக் காட்டும் மோசமான வானியல் நிகழ்வுகளில் முக்கியமான ஒன்று பதின்மூன்றாம் நாளே அமாவாசை வருவது.

 

 

ஒரு சந்திர கிரகணமும் அதைத் தொடர்ந்து ஒரு சூரிய கிரகணமும் வருவது உலகில் நடைபெறாத ஒரு சம்பவம். அத்தோடு கிரகங்கள் வக்கிர நிலையை அடைகின்றன. இவை அனைத்தும் உலகில் இதுவரை நிகழாத ஒரு மாபெரும் போர் நிகழ இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டும் நிகழ்வுகள்.

இதைத் தொடர்ந்து இன்னும் பல துர் சகுனங்களை மஹாபாரதம் விளக்குகிறது. ஆக, அசாதாரணமான இரு கிரகணங்கள் பெரும் போரை உலகில் விளைவித்ததை மஹாபாரதம் தெளிவாக்குகிறது.

 

 

அடுத்து மிகவும் சிக்கலான ஒரு கிரகணத்தை புனிதர்கள் மார்க், மாத்யூ, ல்யூக் ஆகியோர் பூடகமாக சுட்டிக் காட்டுகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தன்று உலகம் இருளில் மூழ்கியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது சூரிய கிரகண நிகழ்வா என்ற விவாதம் இன்றளவும் தொடர்கிறது. ஆனால் புனிதர் ஜான் இதைப் பற்றிக் குறிப்பிடவில்லை. வானியல் வல்லுநர்கள் கி.பி. 29ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி மத்திய கிழக்கில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்ததையும் கி.பி. 33ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி ஒரு சந்திர கிரகணம் நிகழ்ந்ததையும் கணக்கிட்டுள்ளனர். இந்த நிகழ்வுகள் சிலுவையில் அறையப்படும் தினத்துடன் பொருந்தவில்லையே என்ற விவாதம் தொடர்வதால் சிலுவையில் ஏசு அறையுண்டதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பு உண்டா இல்லையா என்ற முடிவுக்கு வர முடியவில்லை.

total-solar-eclipse-2015-svalbard-totality

அடுத்து கொலம்பஸை கிரகணத்துடன் தொடர்பு படுத்தும் சுவையான நிகழ்வு ஒன்று உண்டு. புது நாடு காணப் புறப்பட்ட கொலம்பஸுக்கு வானியல் அறிவு நிறையவே உண்டு. வானில் உள்ள கிரக சஞ்சாரம், நட்சத்திர இயக்கம் ஆகியவற்றை வைத்தே அவர் தன் பயணத்தைத் தைரியமாக மேற்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது கப்பல் 1509 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி  ஜமைக்கா அருகே விபத்திற்குள்ளாக சுமார் எட்டு மாதங்கள் தன் குழுவினருடன் ஒரு தீவில் அவர் தங்க வேண்டி நேர்ந்தது. சாப்பாட்டிற்கு வழி?

 

 

அங்கிருந்த பூர்வகுடிகள் அவரது குழுவினருக்கு உதவ முன் வந்தனர். இதற்குக் காரணம் அவரது வானியல் அறிவு தான். அதன் மூலம் பூர்வ குடிகளின் தலைவனை அவர் மிகவும் கவர்ந்தார். ஆனால் இந்த இலவச சாப்பாடு தொடர்ந்து நடக்கவில்லை. ஆறு மாதங்கள் கழித்து ஒரு நாள் அவர்கள் உணவு கொடுப்பதை நிறுத்திக் கொண்டனர். தனது வானியல் அறிவால் கொலம்பஸ் அன்று சந்திர கிரகணம் ஏற்படுவதைக் கணக்கிட்டார்.பூர்வ குடியினரின் தலைவனை அழைத்த கொலம்பஸ் அவர்கள் தனது குழுவினருக்கு உணவு அளிப்பதை நிறுத்தி விட்டதால் கடவுளின் சாபம் அவர்கள் மீது ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அன்று சந்திரன் மறைந்தே போவான் என்றும் கூறினா. சற்று நேரத்தில் சந்திரனை முழுவதுமாகக் காணோம்!

 

 

 

பூர்வ குடிகளின் தலைவன் தன்னை மன்னிக்குமாறு கூறவே அதை கொலம்பஸ் கடவுளிடம் “எடுத்துச் சொல்லி” சந்திரனை சற்று நேரத்தில் மீட்டுக் கொண்டு வரவே தீவே ஒரே உற்சாகமயமாக ஆனது! கொலம்பஸ் குழுவினருக்கு உணவும் பூர்வ குடிகளுக்கு சந்திரனும் கிடைத்தன! இந்த உண்மை நிகழ்ச்சியை பல்வேறு எழுத்தாளர்கள் தங்கள் கதையில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிடத்தக்க ஒரு பிரபலமான நாவல் மார்க் ட்வெய்ன் எழுதிய ‘எ கனெக்டிகட் யாங்கி இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட் (A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற நாவலாகும்!

 

 

இனி கிரகணத்தால் மன்னர்களுக்கு ஏற்பட்ட அபாயங்களைப் பார்ப்போம்.

 

Basic RGB

 

அறிவியல் அறிஞர் வாழ்வில்

மைக்கேல் ஷெர்மர் உலகப் பகுத்தறிவுக் கழகத்தின் தலைவர். விஞ்ஞானபூர்வமாக இல்லாத எதையும் நம்பக் கூடாது என்று வலியுறுத்தி வருபவர். இவரது கழகத்தில் சுமார் 55000 உறுப்பினர்கள் உள்ளனர். ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகையில் 2001 ஏப்ரல் மாத இதழிலிருந்து பகுத்தறிவுப் பகுதியை எழுதி வருபவர் இவர்.இவரது பகுத்தறிவை ஆட்டுவிக்கும் ஒரு சம்பவம் இவரது திருமண தினமான 2014 ஜூன் 25ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அதை இவரே தனது ஸயிண்டிபிக் அமெரிக்கன் பத்திரிகை பகுதியில் பகிர்ந்து கொண்டது தான் சுவாரசியமான விஷயம்!

 

 

ஜெர்மனியைச் சேர்ந்த ஜென்னிபர் க்ராபை அவர் மணமுடிக்க முடிவு செய்தார். ஜென்னிபருக்கு அவரது தாத்தா என்றால் உயிர். ஆனால் அவரது 16ஆம் வயதில் அவரது தாத்தா மரணமடைந்தார்.  தாத்தா பயன்படுத்திய 1978ஆம் வருட பிலிப்ஸ் டிரான்ஸிஸ்டரை அவர் போற்றிப் பாதுகாத்து வந்தார்.

அது இயங்கவில்லை. எவ்வளவோ முயன்ற போதும் கூட அதை ரிப்பேர் செய்ய முடியவில்லை.

 

கல்யாண நாளன்று திடீரென்று அந்த ரேடியோ பாட ஆரம்பித்தது!

பகுத்தறிவுக் கழகத் தலைவர் அசந்து போனார். ஜென்னிபரும் அதே அளவு பகுத்தறிவுவாதி தான்!! அவரும் திகைத்தார். கூடியிருந்தோர் குதூகலப்பட்டனர்.

 

மணநாளன்று மட்டும் ஒலித்த அந்த ரேடியோ மறு நாளிலிருந்து இயங்கவில்லை.

தன் தாத்தா தன்னுடன் எப்போதும் இருக்கிறார் என்பதற்கான அடையாளம் அது என்கிறார் பகுத்தறிவுக் கொள்கையைக் கழட்டி  விட்ட ஜென்னிபர். ஆமாம் ஆமாம் அது உண்மையே என்கிறார் ஷெர்மரும்.

 

“என் பகுத்தறிவுக் கொள்கைக்குப் பலத்த அடி அது. எப்படி அந்த ரேடியோ ஒரே ஒரு நாளன்று மட்டும் அதுவும் ஜென்னிபரின் திருமண தினத்தன்று மட்டும் இயங்க முடியும். என்னால் நம்பவும் முடியவில்லை; விளக்கமும் கொடுக்க முடியவில்லை” என்று ஸயிண்டிபிக் அமெரிக்கன் இதழில் பகிரங்கமாக தன் நிலையை அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்!

அற்புதங்கள் என்றும் நிகழும்!

*********

In India Rain drops turn into Pearls and Rubies! (Post No.2678 )

rubies-article-8688364

Compiled by london swaminathan

Date: 30 March,2016

 

Post No. 2678

 

Time uploaded in London :–  18-43

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

Arab writers praised India sky high; here are two notes:–

ruby_plain

India is a land where when rain falls it turns into pearls and rubies for those who have no ornaments; from here come musk camphor, amber and aloe wood, and various kinds of perfumes for those who require them; here grow all sweet smelling substances and nutmeg and andropogonnadus; here are found ivory and jai-phal, and aloe wood and sandal, and here is found in abundance the mineral tutia; here are found lions, leopards, elephants and bears; and here are found cranes and parrots, and peacocks and pigeons; and here grow the coconut tree and ebony tree and pepper plant; and here are made the unparalleled swords which need not be polished, and the lances which when wielded, large armies are routed; who can deny the excellence of such a land except fools?

Arabic writer Atharul Bilad, Al-Qazvini

1280-pearl-farming

Indians are the Most Advanced

The Indians are the first (most advanced), very large in number and belonging to a noble country. All the ancient peoples have acknowledged their wisdom and accepted their excellence in the various branches of knowledge. The kings of china used to call the Indian kings the kings of wisdom because of their great interest in sciences. The Indians, therefore according to all the nations throughout the ages had been the mines of wisdom, and the fountains of justice and administration. But on account of the great distance of india from our country, few of their compositions reached us. And, therefore only a small portion of their sciences was received by us.

 

We learnt of only a few of their scholars. In astronomy, for example there are three schools of thought in India

1.The school of Siddhanta

2.The school of Arjbar (Aryabhatta)

3.The school of Arkand (Khandakhadyaka)

But in spite of our efforts we received only the theory of Siddhanta. And this is the theory which is followed by a group of Muslim scholars who based their astronomical tables on it.

In music we have received from them the book called Yafar(?) it literally means ‘the fruits of wisdom’. It contains the principles of modulation and the collections of tunes. And what reached us of their science of ethics is the book “Kalila Wa Dimna’’(Panchatantra stories) which is widely known. And what reached us of their works on arithmetic is the one which has been collaborated by Abu Jafar Muhammed b. Musa al- Khawrizmi. This is the shortest process of calculation easiest to learn. It proves the sharp intelligence of Indians, their creative genius and their excellence in invention.

golden-pearls.jpg

Arabic writer Abu Mashar al –Balkhi

–subham–

 

“எங்க அப்பன் ஒரு கைநாட்டு, ஆனால் அவர் சிங்கம்டா!” (Post No 2677)

Jahangir_with_portrait_of_Akbar

Picture: Jehangir holding a portrait of his father Akbar.

Compiled by london swaminathan

Date: 30 March,2016

 

Post No. 2677

 

Time uploaded in London :–  8-39 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

மொகலாய மன்னன் ஜஹாங்கீர் எழுதிய நினைவுக் குறிப்பில், அவரது தந்தையான அக்பர் குறித்து எழுதியிருப்பது படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது. அதைப் படிக்கையில் அக்பர் பற்றிய உண்மையான சித்திரம் நம் மனக் கண்கள் முன் வருகிறது. இதோ ஜஹாங்கீரின் எழுத்துக்கள் – லண்டன் சுவாமிநாதன் மொழியாக்கத்தில், படியுங்கள்:–

 

“என் தந்தை எப்போதும் எல்லா மதங்களைச் சேர்ந்த கற்றறிந்த சான்றோர்களுடந்தான் இருப்பார். குறிப்பாக இந்திய பண்டிதர்களுடன்தான். அவர் ஒரு எழுத்தறியாத கைநாட்டு. ஆயினும் அறிஞர்களுடன் விவாதித்து நிறைய விஷயங்களை அறிந்திருந்தார். எல்லோருடனும் கலந்துரையாடுவார். யாருக்குமே அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்பது தெரியாது. கவிதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் கேட்டறிந்திருந்ததால் அவரது குறை வெளியே தெரியவில்லை.

 

அவர் தோற்றத்தில் கொஞ்சம் குட்டைதான்; உயரமாக ஆசைப்பட்டார். ஆள் கோதுமை நிறம். கண்களும் புருவமும் கன்னங்கரேல் என்று நல்ல கறுப்பு. அவரை சிவப்பு என்று சொல்ல முடியாது. மாநிறம்தான். சிங்கம் போன்ற அகன்ற மார்பு; ஆஜானபாஹு (நீண்ட கைகள்). அவருக்கு இடது புற மூக்கில் ஒரு பெரிய மச்சம் சதை போல வளர்ந்திருந்தது. அரைப் பட்டாணி அளவுக்கு இருந்தபோதிலும் அவருடைய முகத்துக்கு அழகாகத்தான் இருந்தது. சாமுத்ரிகா லக்ஷணம் அறிந்தவர்கள் இது பேரதிர்ஷ்டத்தைத் தரும் என்று சொன்னார்கள். லட்சுமீகரமானது என்றனர். அவருடைய குரல் வளம் கம்பீரமாக இருக்கும். எதைப் பேசுவதிலும், விளக்குவதிலும் ஒரு தனி அழகு இருந்தது.

 

அவருடைய செயல்பாட்டில் அவர் ஒரு அசாதரண மனிதராகத் திகழ்ந்தார். அவருக்கு தெய்வத்தின் கடாக்ஷம் (இறை அருள்) கிடைத்தது. ராஜபோகத்தில் திளைத்தார்; பெரும் செல்வம் வைத்திருந்தார். போர்த்திறமை மிக்க பெரிய யானைகளையும், அராபிய குதிரைகளையும் வைத்திருந்தார். ஆயினும் கடவுளின் சிம்மாசனத்திற்கு முன்பாக ஒரு மயிரிழைகூட தவறு செய்ததில்லை. ஆண்டவனை ஒரு நொடிகூட மறந்தாரில்லை.

the-nav-ratna-of-akbar

எல்லா மதங்கள், வகுப்புகள், பிரிவுகள் ஆகியவற்றிலுள்ள நல்லோருடன் இணங்கினார். அவர்களுக்கு அருள் பாலித்தார். இரவு நேரத்தில் தூங்குவது குறைவு. பகலிலும் தூங்க மாட்டார். ஒரு நாளில் அவர் தூங்கியது ஒன்றரை ஜாமம்தான் (ஒரு இரவில் நான்கு ஜாமங்கள் உண்டு). இரவில் எவ்வளவு நேரம் விழித்திருப்பாரோ அவ்வளவுக்கு ஆயுள் அதிகரிக்கும் என்பது அவரது நம்பிக்கை. அவர் மிகவும் தைரிய சாலி. மதம்பிடித்த யானைகள் மீது துணிச்சலாக ஏறுவார். கொல்லவரும் யானைகளை அடக்குவார்.”

–ஜஹாங்கீர் நினைவுக் குறிப்பு

இந்த நூல் எது? – 1 (Post No.2676)

VectorToons.com

Written by S NAGARAJAN
Date: 30 March 2016

 

Post No. 2676

 

Time uploaded in London :–  8-04 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

தெரிந்து கொள்ள வேண்டிய நூல்

 

இந்த நூல் எது? – 1

.நாகராஜன்

 

QuestionMark

மாபெரும் மன்னன் இவன். பெரும் அறிவாளி. சகல கலா வல்லவன்.

சுமார் 84க்கும் மேற்பட்ட இவனது நூல்கள் உலகினரை பிரமிக்க வைப்பவை.

காதலை பிரதானமாகக் கொண்டு இவன் எழுதிய இந்த நூலுக்கு ஈடு இணை இல்லை.

அபிலாஷா, ஆகாங்க்ஷா, அபேக்ஷா, உத்கந்தா உள்ளிட்ட 64 வகைகள் காதலில் உண்டு.

இந்த 64 வகைகளில் ஒவ்வொன்றுக்கும் எட்டு வடிவங்கள் உண்டு.

 பரத முனிவரின் பரத சாஸ்திரத்தில் உள்ளது போல இவனது நூலிலும் 36 அத்தியாயங்கள் உள்ளன.

ரஸம் என்பது வாழ்க்கையின் பிரதானமான அம்சம். அதனால் தான் ரஸிகன் என்று  மனிதன் அழைக்கப்படுகிறான்.

சப்தம், அர்த்தம், சாஹித்யம் ஆகிய மூன்றிற்கும் இவன் தரும் விரிவான விளக்கங்கள் அற்புதமானவை.

சாஹித்யம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கான இலக்கணத்தை இவன் தரும் பாங்கே தனி! வாக்ய தர்மம் என்பதை எடுத்துக் கொண்டால் அதில் மட்டும் 48 வகை உண்டு.

அவற்றிற்கான இவனது விளக்கங்கள் அற்புதமானவை. சொற்களில் உள்ள தோஷங்கள் உள்ளிட்ட இவன் விளக்காத விஷயங்களே இல்லை.

கவிதையை அனுபவிக்கத் துடிப்பவர்கள் இவனது நூலைப் படித்த பின்னரே ஒரு கவிதையைத் தொட வேண்டும்.

சிருங்காரம் என்ற ரஸத்தைப் பிழிந்து அதன் சுவையை இவனைப் போல இன்னொரு கவிஞன் தந்ததில்லை என்பது மட்டும் உண்மை.

இவனது நூலைப் படிக்காதவர்களே இன்று திரைப்படத்தில் நாம் காணும்  மலினமான சில காதல் காட்சிகளை உருவாக்குகிறார்கள் என்றால் அது மிகையல்ல!

இந்திய நாட்டிற்கே, ஹிந்து தர்மத்திற்கே பெருமை தரும் இந்த மன்னன் எழுதிய நூலின் பெயர் என்ன?

  விடை: போஜ ராஜன் எழுதிய சிருங்கார ப்ரகாசா

–சுபம்–