மர்தனம் குணவர்தனம்: குணங்கள் பற்றிய சம்ஸ்கிருத பழமொழிகள் (Post No. 2479)

cleaning saints

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 11 January 2016

 

Post No. 2479

 

Time uploaded in London :– காலை  9-32

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

1.குணேஷு க்ரியதாம் யத்ன: கிம் ஆடோபை: ப்ரயோஜனம் – சார்ங்கதர பத்ததி.

நற்குணங்களை அடைய முயற்சி செய்க. ஆடம்பரத்தால் என்ன பயன்?

 

2.குணேஷு யத்ன: புருஷேண கார்யோ ந கிஞ்சித்  அப்ராப்யதமம் குணானாம்- மிருச்சகடிகம்

மனிதர்கள் நற்குணங்களை அடைய முயற்சிசெய்ய வேண்டும். நல்ல குணங்களால் அடைய முடியாது என்ன?

 

3.குணேஷ்யேவ கர்தவ்ய: ப்ரயத்ன: புருஷை: சதா – மிருச்சகடிகம்

நற்குணங்களை அடைய எப்போதும் முயற்சி செய்க.

 

4.குணைர் உத்தமதாம்  யாந்தி ந உச்சைர் ஆசனம் ஸ்தித: – சாணக்ய நீதி, பஞ்ச தந்திரம்

குணங்களால்தான் உயர்ந்த நிலையை அடைய முடியும். உயர்ந்த ஆசனத்தால் அல்ல.

 

dalai's 80th BD in california

5.குணோ பூஷயதே ரூபம்- சாணக்ய நீதி

நற்குணங்களே ஒருவனுக்கு அழகு தரும்.

 

6.குணோ ஹி கௌரவஸ்தானம் ந ரூபம் ந தனம் ததா

குருதாம் நயந்தி ஹி குணா ச சம்ஹதி: – கிராதார்ஜுனீயம்

நற்குணங்கள் ஒருவனுக்கு பெருமை சேர்க்கும் (உயர்வு தரும்)

வெளித்தோற்றத்தால் அல்ல.

 

7.தத் ரூபம் யத்ர குணா: – காதா

நற்குணங்கள் எங்கோ, அங்கே அழகு (ஒளிரும்)

 

8.நம்ரந்தி குணினோ ஜனா: நம்ரந்தி பலினோ வ்ருக்ஷா:

பழுத்த பழங்கள் உடைய மரங்கள் தாழ்ந்து இருக்கும். நற்குணங்கள் உடையோர் அதுபோல பணிந்திருப்பர்.

 

9.நிர்குணஸ்ய ஹதம் ரூபம் – சாணக்ய நீதி

குணமில்லாத இடத்தில் அழகு பாழ்.

 

10.ந ஏகத்ர சர்வோ குண சந்நிபாத:

ஒரே இடத்தில் எல்லா குணங்களும் சேருவதில்லை.

 

11.பதம் ஹி சர்வத்ர குணைர் நிதீயதே – ரகுவம்சம்

ஒருவனுடைய நிலையை நிர்ணயிப்பது அவனது குணங்களே.

 

12.ப்ராயேன சாமக்ரயவிதௌ குணானாம் பராங்முகி விஸ்வஸ்ருஜ: ப்ரவ்ருத்தி:- குமார சம்பவம்

 

13.கடவுள் பெரும்பாலும், எல்லா குணங்களையும் ஒரே இடத்தில் வைக்காமல் பிரித்துவைக்கவே செய்கிறார்.

(ஒப்பிடுக: துர்கா, லெட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்து வசிப்பதில்லை)

 

14.மர்தனம் குணவர்தனம்சு.ர.பா. (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

நல்ல குணங்கள், தொடர்ந்து கடைபிடிப்பதால்தான், வளரும்.

(ஒப்பிடுக: சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம்)

baba laddu

15.யத்ரா க்ருதிஸ் தத்ர குணா வசந்தி- சு.ர.பா.

எங்கு உடற்கட்டு இருக்கிறதோ அங்கே குணங்கள் இருக்கும்.

(ஒப்பிடுக: பலமுள்ளவனே ஆன்மாவை அறிவான்: உபநிஷத்)

 

16.யதா நாம ததா குண:

எப்படிப் பெயரோ அப்படி குணம் (பெயருக்கேற்ற குணம்)

 

17.யதி சந்தி குணா: பும்சாம் விகசந்த்யேவ தே ஸ்வயம் – சம்யோ

நற்குணங்கள் இருக்கும் மனிதர்கள், தாமாகவே உயர்வடைவர் ( குணங்களே ஒருவர் உயர உதவும்)

 

18.ரூபஸ்யாபரணம் குண: — சாணக்யநீதி

குணங்களே நல்ல அணிகலன்.

 

19.வசந்தி ஹி ப்ரேம்ணி குணா ந வஸ்துனி – கிராதார்ஜுனீயம்

அன்பில்தான் குணங்கள் இருக்கும்; பொருட்களில் அல்ல.

 

20.சத்ரோரபி குணா க்ராஹ்யா தோஷா வாச்யா குரோரபி – மஹாபாரதம்

எதிரிகளிடத்தில் நற்குணங்கள் இருந்தாலும் அவைகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

21.சத்ரோரபி சுகுணோ க்ரஹ்ய:- சாணக்யசூத்ரம்

சந்த: ஸ்வத:ப்ரகாசந்தே  குணா ந பரதோ நூணாம் –சு.ர.பா

நற்குணங்கள் தாமாகவே பிரகாசிக்கும்; பிறர் காட்டத் தேவையில்லை.

 

22.சுலபா ரம்யதா லோகே துர்லபம்ஹி குணார்ஜனம் – கிராதார்ஜுனீயம்

அழகானது மலிவாகக் கிடைக்கும்; நற்குணங்களோ கிடைப்பதரிது.

(தமிழ் மொழிபெயர்ப்பு:லண்டன் சுவாமிநாதன்)

 

 

 

Subham–

 

திருமூலர் சொன்ன கதை: முதலைக்குப் பயந்து கரடியிடம் அகப்பட்டவன்! (Post No. 2478)

bear_with_cubs_-_original-1 

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 11 January 2016

 

Post No. 2478

 

Time uploaded in London :–  7- 41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

தேவார சுகம்

முதலைப் பாடல்கள் – 2

ச.நாகராஜன்

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

முதலை வாய்ப்பட்ட குழந்தையை மீட்ட சுந்தரர்

 

அவிநாசி தலம் புகழ் பெற்ற ஒரு சம்பவத்தைக் கொண்ட ஆன்மீகத் தலம்.

 

 

இதை அறிவியல்  நோக்கில் பார்த்தால் டைம் மெஷின் என்னும் கால இயந்திரத்தில் பின்னோக்கிச் சென்று இறந்திருந்த குழந்தை மீட்கப்பட்ட  தலம் என்று சொல்லி அதிசயிக்கலாம்.

 

 

ஆன்மீக நோக்கில் பார்த்தால் அருளாளர் சுந்தரர் இறைவனைத் தொழுது வேண்டி சிவபிரான் அருளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருந்த குழந்தையை உயிர்ப்பித்த ஆன்மீக அருள் தலம் என்று கொள்ளலாம்.

 

croc, bear

வரலாறு இது தான்.

 

 

சிவ தலங்கள் தோறும் வழிபட்டு வந்த சுந்தரர் அவிநாசி வந்தார். அங்குள்ள தெருவில் ஒரு வீட்டில் விழா ஒலி எழும்ப இன்னொரு வீட்டிலோ அழுகைக் குரல் ஒலித்தது.

ஏழு வயது அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணம் நடந்த

 

வீட்டில் விழா ஒலி.

 

இன்னொரு வீட்டிலோ..

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இரு குழந்தைகள் மடுவிலே குளிக்கப் போயிருந்த சமயம் முதலை ஒன்று ஒரு குழந்தையை இழுத்துச் சென்றது.

 

முதலையிடம் பறி கொடுத்த தங்கள் குழந்தைக்கு இப்போது ஏழாம் வயது நடந்து கொண்டிருக்கும். அக்குழந்தைக்கு பூணூல் கல்யாணம் நடத்திப் பார்க்கும் பாக்கியம் நமக்கு இல்லையே என்று குழந்தையை இழந்த தம்பதிகள் இன்னொரு வீட்டில் தவித்து அழுது கொண்டிருந்தனர்.

அந்த அன்பரது வீட்டினுள் நுழைந்த சுந்தரர் காரணத்தை அறிந்து கண்ணீர் சிந்தினார்.

 

 

நேராகக் குளத்திற்குச் சென்றார். அங்கு ‘எற்றான் மறக்கேன்’ எனத் தொடங்கும் பதிகத்தைப் பாட ஆரம்பித்தார்.

இரண்டாவது பாடலில் உன்னை வணங்க வந்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் என்ன (புக்கொளியூரில் குளத்து இடை இழியாக் குளித்த மாணி என்னைக் கீறி செய்ததே?) என்று வினவினார். சிவபிரானைத் தோழனாகக் கொண்ட வன்தொண்டர் இல்லையா அவர்!

 

நான்காவது பாடலில், ‘காலனையும் முதலையையும் சிறுவனைத் தருமாறு ஆணையிடுக’ என சிவனை வேண்டி நின்றார்.

 

“உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்   அரைக்கு ஆடு அரவர் ஆதியும் அந்தமும் ஆயினாய்         புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவினாசியே         கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே

 

 

பாடலின் பொருள் :

“உன்னைத் தோத்திரம் செய்பவர் உரையை உகப்பவனே! உன்னை நினைப்பவர் தலை மேல் இருப்பவனே! அரையில் ஆடும் பாம்பை அணிந்தவனே! ஆதியும் அந்தமுமாய் இலங்குபவனே! சிறந்த முல்லை நிலமும் சோலைகளையும் கொண்ட திருப்புக்கொளியூர் அவிநாசியில் எழுந்தருளியிருப்பவனே!

காலனையும் முதலையையும் பிள்ளையைக் கொண்டுவந்து தருமாறு ஆணையிடுக”

 

connected English article: TIME TRAVEL by TWO TAMIL SAINTS posted in swamiindology.blogspot.com on 14th February 2012.

Five beautiful Stories on Hindu Concept of Time; posted on 16 May 2015 in tamilandvedas.com

 

உடனே மடுவிலிருந்து வெளிப்பட்ட முதலை தன் வாயில் சிறுவனைக் கொண்டு வந்து தந்தது.

அப்போது அவன் (இரண்டு ஆண்டுகள் வளர்ந்த) ஏழு வயதுச் சிறுவனாக உயிர் மீண்டு வந்தான்.

 

 

அவிநாசியப்பர் சந்நிதியிலேயே அந்த அந்தணச் சிறுவனுக்கு பூணூல் கல்யாணமும் நடந்தது. இன்றும் இந்த உற்சவம் அவிநாசியில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத்தில், ‘முதலை வாய்ப் பிள்ளை உற்சவம்’ என்று விமரிசையாக நடக்கிறது. அவிநாசியப்பர் கோவிலின் தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் குளம் உள்ளது. இங்கு சுந்தரரர் பாடல் பாட, முதலை தன் வாயிலிருந்து குழந்தையை உமிழும் விழாவும், சுந்தரர் கோவிலில் உபநயனம் செய்விப்பதும் ஐதீகத்தை விளக்கும் விதமாக நடைபெறுகிறது.

 

விஞ்ஞானிகளின் பார்வையிலும் முக்கியமானதாக விளங்குகிறது இந்தச் சம்பவம். காலத்தில் பின்னோக்கிச் சென்று இறந்தவனை மீட்க முடியும் என்பதை அதிசயமாக நிரூபிக்கும் விழா அல்லவா இது!

 

 

மயிலையில் பூம்பாவையை திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததையும் இங்கு நினைந்து மகிழலாம்.

 crocodile_vs_bear_

முதலைக்குப் பயந்து கரடியிடம் அகப்பட்டவன் கதை!

 

அடுத்து இன்னொரு பாடல் பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தில் இடம் பெறும் பாடல்!

 

ஆற்றிற் கிடந்த முதலைக் கண்டஞ்சிப்போய் 

ஈற்றுக்கரடிகெதிர்ப்பட்ட தன்னொக்கும்                     

நோற்றுத் தவஞ்செய்வார் நூலறியாதவர்      

சோற்றுக்கு நின்று சுழல்கின்றவாறே

(ஆறாம் தந்திரம் தவநிந்தை- பத்தாம் பாடல்)

 

 

ஒருவன் ஆற்றைக் கடக்க எண்ணி ஆற்றில் இறங்கினான். பார்த்தால் எதிரே முதலை ஒன்று ஆவென்று வாயைத் திறந்து இவனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. பயந்து போனவன் தலைதெறிக்க காட்டு வழியில் ஓடினான்.

 

ஓடியவனை ஒரு கரடி பிடித்துக் கொண்டது. அதுவோ ஈற்றுக் கரடி, அதாவது குட்டிகளை ஈன்ற கரடி. குட்டிகளை ஈன்ற கரடியின் கோபம் எல்லைக்கடங்காத ஒன்றாக இருக்கும். அது அவன் மீது பாய்ந்தது.

 

 

இது எதைப் போல உள்ளது? ஆகமம் உள்ளிட்ட நூல்களை அறிதல், கடினமாக நோற்றுத் தவம்  செய்தல் ஆகியவற்றிற்கு அஞ்சி பிறப்பு இறப்பு என்ற வலையில் அகப்பட்டு சோற்றுக்கு அலைகின்றவரைப் போல இருக்கிறது!

 

(Written by S Nagarajan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com)

திருமுறைகளில் மட்டுமல்ல, இதர சங்க இலக்கியம் உள்ளிட்ட நூல்களிலும் முதலைப் பாடல்கள் உள்ளன,

 

அவிநாசி மட்டுமல்ல, இதர முதலை ஸ்தலங்களும் தமிழ்நாட்டில் உள்ளன.

 

முதலை வழிபட்ட தலம் திருமுல்லை வாயில்!

 

கொண்டதை விடாத முதலையைப் பற்றி “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்ற பழமொழியும் உள்ளது.

முதலைப் பாடல்கள் சுவையாக அறிவுரை தருவதாக இருக்கிறதல்லவா?

 

contact: swami_48@yahoo.com

 

******

SPEECH PROVERBS: Tongue talks at Head’s cost! (Post No. 2477)

tongue1

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 10 January 2016

 

Post No. 2477

 

Time uploaded in London :– 15-40

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

tongue-clip-art-cartoons08f

Let him say what is true, let him say what is pleasing, let him utter no disagreeable truth.

Let him utter no agreeable falsehood. This is the Santana Dharma, the Eternal Law – Manu smrti

Xxx

The ancients were guarded in their speech, and like them we should avoid loquacity. Many words invite many defeats. Avoid also engaging in many businesses, for many businesses create many difficulties.

–Inscription on statue in the ancestral temple of Lo

Xxx

When you find a person worthy to talk to and fail to talk to him, you have missed your man.

When you find a man unworthy to talk to and you talk to him, you have missed (wasted) your words. A wise man neither misses his man nor misses his words.

–Confucius, China

 

Xxx

All meanings, ideas, intentions, desires, emotions, items of knowledge are embodied in speech, are rooted in it and branch out of it. He who misappropriates, misapplies, and mismanages speech, mismanages everything.

–Manu smriti

Xxx

If one answers harshly, for instance a father or a mother, or a brother, or a sister, or a teacher, or a Brahmin, people say to him: ‘Shame on you! Verily you are a slayer of your father! Verily you are a slayer of your mother! Verily you are a slayer of your brother! Verily you are a slayer of your sister! Verily you are a slayer of your teacher! Verily you are a slayer of a Brahmin!

–Chandogya Upanishad.

 

Darts, barbed arrows, iron-headed spears,

However deep they penetrate the flesh

May be extracted, but a cutting speech,

That pierces, like a javelin, to the heart,

None can remove; it lies and rankles you.

–Mahabharata

xxx

 

A dog is not considered a good dog because he is a good barker. A man is not considered a good man because he is a good talker.

–Chuang Tzu

xxx

Compiled by London swaminathan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

 

Tongue-Facts

1.Birds are entangled by their feet, and men by their tongues.

2.He that strikes with his tongue, must ward with his head.

3.The tongue talks at the head’s cost.

4.The ass that brays most eats least.

5.A bleating sheep loses her bit.

6.Many words, many buffets.

7.Much babbling is not without offence.

8.He who says what he likes shall hear what he does not like.

9.A man may say too much, even upon the best subjects.

10.When all men speak, no man hears.

 

 

11.Let not thy tongue run away with thy brains.

12.Let not your tongue run at rover (At rover means unrestrained)

13.Little can a long tongue lein (conceal).

14.Talk much and err much.

15.Better the foot slip than the tongue.

16.Words have wings, and cannot be recalled

17.A word and a stone let go cannot be called back.

18.While the word is in your mouth, it is your own; when its once spoken it is another’s.

19.Words bind men.

20.The lame tongue gets nothing.

21.Dumb men get no lands.

RStongue

—SUBHAM–

 

பழைய ஜோக்குகள்:ஸ்ரீதேவிக்கும், மூதேவிக்கும் சம்வாதம்! (Post No. 2476)

lakshmi

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 10 January 2016

 

Post No. 2476

 

Time uploaded in London :– 11-44 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(விநோத விகட சிந்தாமணி என்ற பழைய நகைச்சுவை புத்தகத்திலிருந்து; உதவியவர் சென்னை சந்தானம் சீனிவாசன்)

 

நிரட்சரக்குக்ஷி நீலகண்டமய்யன்

ஒருநாள் ஒரு கோர்ட்டு விசாரணையில் கக்ஷிக்காரராகிய நீலகண்ட ஐயரை வக்கீல் பார்த்து, விவாத வேலி எத்தனை அடி நீளமிருக்கும், என்றார்.

கக்ஷிக்காரரகிய ஐயர் சொன்னதாவது,

“ஐயா! என் வீட்டுக் குட்டிச் சுவரிலிருந்து பாழுங்கிணறு வரையிருக்கும்” என்றார். இங்கே அந்தத் தூரத்தை அளந்து காட்டும் பார்ப்போம் என்று வக்கீல் கேட்க அவர் நீதிபதியைக் காண்பித்து “எசமான்கள்தான் பாழுங்கிணறு என்றால் வக்கீலய்யர்தான் குட்டிச் சுவரு” என்றார். சகலரும் புன்னகையோடிருந்தனர்கள்

Xxx

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

 

lakshmi in kshetras

ஸ்ரீதேவி x மூதேவி

ஒரு காலத்தில் ஸ்ரீதேவியும் மூதேவியும் “நான்தான் பெரியவள், நான் தான் பெரியவள்”- என்று சச்சரவு செய்துகொண்டு இதைப்பற்றி பூலோகத்தில் யாரிடத்திலாவது விசாரித்துத் தெரிந்துகொள்ளுவோம் என்று ஊரூராய்ச் சுற்றிவருகையில் வழியில் ஒரு செட்டியைக் கண்டு, “ஓய், வணிகரே! உலகத்தில் ஸ்ரீதேவியகிய நான் பெரியவளா, மூதேவியாகிய என் அக்காள் பெரியவளா? என்று கேட்க, செட்டி நகைத்துப் பின்வருவதறியாமல் மூதேவிதான் நல்லவள் என்றான்.

 

காரணம் என்னவென்று இருவரும் கேட்க செட்டியானவள், “ஸ்ரீதேவி வஞ்சகக்காரி.எங்கும் நிலயாதிருப்பதில்லை. அவள் மோசக்காரி ஒருவனைச் சீமானாகவும், மற்றொருவனைப் பேதையாகவும் செய்கிறாள். மூதேவியானவள் அப்படியில்லை. உலகத்திலுள்ள ஜீவராசிகள் யாவற்றிலும் வியாபகமாயிருக்கிறாள்” என்று சொல்லக்கேட்டு ஸ்ரீதேவி சினமுற்று, “சீ, போ! இன்று முதல் நான் உன்னிடத்திருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் செல்ல, மூதேவி, செட்டியாரைத் தொத்திக்கொண்டாள். செல்வம் முழுதும் தொலைந்து அவன் ஏழையானான்.

 

அதன்பின் இருவரும் தர்க்கித்துக்கொண்டு, மற்றொரு கிராமத்தில் புகுந்த தருணம் ஒரு பிச்சையெடுக்கும் பிராமணன் எதிர்வர இருவரும் பிராமணரையழைத்து, “ஐயா, வேதியரே! உலகத்தில் சீதேவி, மூதேவி- ஆகிய இருவரில் யார் வந்தால் உலகத்தார் சந்தோஷப்படுகிறார்கள்?” என்று கேட்டனர். அதைக்கேட்ட பிராமணன் யோசித்து, சீதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாள் அவள் நம்மை அணுகுவாள், மூதேவியைச் சிலாக்கியமாகச் சொன்னாலோ, சீதேவி போய்விடுவாள் என்று நினைத்து, “அம்மா! இவ்வுலகில் சீதேவியின் வருகையைப் பற்றி சந்தோஷிக்கிறார்கள்; மூதேவி போதலைப் பற்றிச் சந்தோஷிக்கிறார்கள், ஆகையால் இருவர் விஷயத்திலும் மக்கள் சந்தோஷம் சமமே என்றார். அதைக்கேட்டு இருவரும் பிராமணனின் வாக்கு சாதுர்யத்தை மெச்சிச் சென்றுவிட்டனர்.

Compiled by London swaminathan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

-சுபம்-

 

சிவனடியார்கள் பாடிய முதலைப் பாடல்கள் – 1 (Post No. 2475)

sankara croc

Picture: Adi Shankara and Crocodile

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 10 January 2016

 

Post No. 2475

 

Time uploaded in London :–  7- 15 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

தேவார சுகம்

முதலைப் பாடல்கள் – 1

ச.நாகராஜன்

 crocodile-4

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact swami_48@yahoo.com)

 

முதலைகள் ஐந்திடம் மாட்டிக் கொண்டால் ..

 

ஒரு குளம். அதிலே ஒன்பது துறைகள். ஒரு முழக் குளம் அதன் அகலமோ அரை முழம் தான். அதற்குள் ஐந்து முதலைகள்.அவைகள் உங்களை, என்னையும் தான், படாத பாடு படுத்துகின்றன.

 

தப்ப வேண்டுமே, வழி என்ன?

 

என்ன, புதிர் ஏதாவது போடப்படுகிறதா?

விடுங்கள், அப்பரே, “நான் பிதற்றுகின்றேன் என்று சொல்கின்ற பாடலுக்கு நேரடியாகப் போவோம்.

திரு ஏகம்பத்தில் பாடிய ‘நம்பனை எனத் தொடங்கும் பதிகத்தில் இரண்டாம் பாடல் (4ஆம் திருமுறை):

 

 

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறை உடைத்தாய்       

அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து  பெருமுழைவாய்தல் பற்றிக் கிடந்து நான் பிதற்றுகின்றேன் கருமுகில் தவழும் மாடக் கச்சி ஏகம்பனீரே

 

 

ஒரு முழம் நீளமும் அரை முழம் அகலமும் கொண்டுள்ள உடல் என்னும் குளத்தில் ஐந்து முதலைகள் வாழ்கின்றன. இந்த குளத்திற்கு நீர் வரும் வழிகள் ஒன்பது. அதாவது ஒன்பது துவாரங்கள். இதில் அகப்பட்டுள்ள நான் ஐம்பொறிகளுக்கும் பயந்து பெரிய குகை போன்று காணப்படும் நீர் வரும் வழியைப் பற்றிக் கொண்டு எப்படித் தப்புவது என்ற பயத்தில் வாய்க்கு வந்தபடி பிதற்றுகின்றேன். கருமுகில் தவழ்கின்ற மாடங்களை உடைய கச்சி ஏகம்ம்பத்தில் உறையும் ஏகம்பனே, என்னை ஐந்து முதலைகளிடமிருந்து (ஐம்பொறிகளிலிருந்து) காப்பாற்றுவீராக!

 

 

அப்பரா பிதற்றுகிறார். அவர் அருளாளர். அவர் நமக்கு வழிகாட்டப் பிதற்றுகிறார். ‘

 

‘ஏகம்பம் மேவினாரைக் கையினால் தொழ வல்லார்க்குக் கடுவினை களையலாமே’ என்ற இரகசியத்தை ஐந்தாம் பாட்டில் அறிவித்து நமக்கு உய்யும் வழியைக் காட்டுகிறார்.

ஐந்து  முதலைகள் பிடித்ததை விடாது. அதைப் பிடித்து அகற்ற சிவபிரான் அருள் அல்லவா, வேண்டும். அதைத் தான் சுட்டிக் காட்டுகிறார் அருளாளர்.

 

 

திருமூலர் காட்டும் குளமும் வலை வீசும் சிவனும்

 

இதே கருத்தைத் திருமூலரும் சொல்கிறார்:

திருமந்திரம் பாடல் எண் 2031 (ஐந்திந்திரயம் அடக்கு முறைமை)

 

குட்டம் ஒரு முழம் உள்ளது அரை முழம்

வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன

பட்டன மீன் பல பரவன் வலை கொணர்ந்து

இட்டனன் யாம் இனி ஏதம் இலோமே

 

திருமூலர் பாடலின் பொருள்: நமது உடல் ஒரு முழம் (தலை

முதல் கழுத்தின் கீழ் இதயம் வரை) அகலம் அரை முழம். காதுக்குக் காது உள்ள அகலம். இந்தக் குளத்தில் ஐந்து மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. இந்த ஐந்து பொறிகளை வலை வீசிப் பிடிக்க பரவன் (மீனவன்) ஒருவனின் அருளினால் மட்டுமே முடியும். அந்த சிவபிரானின் அருள் கிடைத்தால் துன்பமே இல்லை!

 

மனித முயற்சியால் ஐம்புலன்கள் அடக்குதல் கடினம். ஆனால் அதே முயற்சியால் சிவனை நினைந்து பணிந்தால் அவன் அருள் கிடைக்கும். அப்போது ஐந்து பொறிகளும் அடங்கும்.

croc2

மணிவாசகர் காட்டும் முதலை

 

 

அப்பரைப் போலவே மாணிக்கவாசகரும் முதலை பயத்தைக் கொண்டவர் தான்! ஆனால் இது வேறு விதமான முதலை.

பாடலைப் பார்ப்போம்:

 

முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி   விதலைச் செய்வேனை விடுதி கண்டாய் விடக்கூன் மிடைந்த சிதலைச் செய் காயம் போறேன் சிவனே முறையோ முறையோ திதலைச் செய்பூண்முலை மங்கை பங்காவென் சிவகதியே

(நீத்தல் விண்ணப்பம் பாடல் 41)

 

மகளிரின் காம நீரில் மூழ்கி நடுங்கிய என்னைக் கைவிட்டு விடாதே என இறைஞ்சுகிறார் மணிவாசகர்.

 

முதலைச் செவ்வாய்ச்சியர் – முதலை போலக் கொண்டதை விடாது பற்றி நிற்கும் மகளிர்

 

வெந்நீர் – சுடுகின்ற காம நீர் (இளமைக்காலத்தில் அது விருப்பமாக இருந்தது. இப்போது வெறுப்பாக இருக்கிறது)

வெம்+நீர் = வெந்நீர் என்பதை விருப்பம் மற்றும் கொடுமை ஆகிய இரு அர்த்தங்களில் நோக்க வேண்டும்.

கடிப்ப என்ற வார்த்தைக்கும் இரு பொருள் உண்டு. ஒன்று மணப்ப என்ற பொருளைத் தரும் இன்னொரு பொருள் வெறுக்க என்பதாகும்.

 

விதலை – நடுக்கம்; விடக்கு ஊன் – தசைத் திரள் சிதலை – நோய் திதலை – தேமல்

 

மங்கையர் மயக்கிலிருந்து என்னை விடுவித்து ஆட்கொண்டருள். ஆட்கொண்டு விடாமல் விடுதல் முறையோ முறையோ என வேண்டுகிறார் மணிவாசகர்.

 

இப்படிப் பல முதலைப் பாடல்கள் உண்டு பன்னிரு திருமுறைகளில்.

 

Written by S Nagarajan; posted by tamilandvedas.com and swamiindology.blogspot.com

 

இரண்டைப் பார்த்தோம்; இன்னும் இரண்டை அடுத்துப் பார்ப்போம்!

*******

‘எல்லாம் நன்மைக்கே’- சுவாமி ராமதாஸ் சொன்ன கதை (Post No. 2474)

ramdas

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 9 January 2016

 

Post No. 2474

 

Time uploaded in London :– 12-06

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஒரு நாட்டில் ஒரு மன்னனிடம் மந்திரி ஒருவர் வேலை பார்த்தார். அவர் இறைவன் மீது அபார பக்தி கொண்டவர். எது நடந்தாலும் எல்லாம் , ‘இறைவன் கொடுத்த வரம்” என்று நினைப்பார். யாராவது வந்து “எனக்கு அந்தக் கஷ்டம், இந்தக் கஷ்டம்” என்று முறையிட்டாலோ,முனகினாலோ, “கவலைப் படாதே, எல்லாம் நன்மைக்கே, கடவுள் எதையும் யாருக்கும் காரணமின்றி தரமாட்டார்” என்று ஆறுதல் சொல்லுவார். இவ்வாறு இந்த ‘எல்லாம் நன்மைக்கே’ மந்திரியின் புகழ் திக்கெட்டும் பரவியது.

ramdas book

ஒரு நாள் அரசனும் மந்திரியும் வேட்டையாட காட்டுக்குச் சென்றனர். இருள் சூழும் வேலையில், அவர்கள் கூட வந்த பரிவாரம், வேறுதிசையில் போய்விட்டது. மந்திரியும் மன்னனும் தனித்து இருந்தனர். அரசனுக்கு ஒரே பசி. அமைச்சரிடம் சொல்லவே அவரும் ஒரு மரத்தில் பழங்கள் இருப்பதைப் பார்த்து அதைப் பறித்து மன்னைடம் கொடுத்தார்.

மன்னனோ பசி, அவசரத்தில் பழங்களை வெட்டும்போது ஒரு விரலையும் வெட்டிக்கொண்டு விட்டார். ரத்தம் குபுகுபு என்று வழிந்தோடியது. வலியில் துடித்தார். மந்திரியிடம் பொறுக்கமுடியாத வலி பற்றிச் சொல்லி கதறினார். மந்திரியோ, “மன்னரே! கவலைப் படாதீர்கள்; எல்லாம் நன்மைக்கே” என்றார்.

 

அரசனுக்கு அதி பயங்கர கோபம் வந்தது. “நான் துடியாய்த் துடிக்கிறேன். ஆறுதல் சொல்வதற்குப் பதில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய்” என்று சொல்லி மந்திரியை ஓங்கி ஒரு உதை விட்டு, இனிமேல் என்முகத்தில் முழிக்காமல் ஓடிவிடு என்றார். மந்திரியோ, அதற்கும்’ எல்லாம் நன்மைக்கே’ என்று காரணம் கற்பித்துவிட்டு அவர்முகத்தை திருப்பிக்கொண்டு, வேறு ஒரு மரத்தடியில் போய் அமர்ந்தார். மன்னன் தனது மேலாடையில் ஒரு ஓரத்தைக் கிழித்து கையில் விரல் துண்டித்த இடத்தில் ஒரு கட்டுப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தார்.

 

 

ramdas2

கொஞ்ச நேரத்தில் அந்த வழியே இரண்டு தடியர்கள் வந்தனர். மன்னர்கள் மீது பாய்ந்து அவரைக் கட்டி, அலாக்காகத் தூக்கினர். அவரோ குய்யோ முறையோ என்று கத்தினார். தான் இந்நாட்டு மன்னர் என்றும், யாது காரணத்தாலவர்கள் இப்படிச் செய்கின்றனர் என்று ம் வினவினார். அந்த தடியர்களுக்கு மேலும் சந்தோஷம் வந்தது. உடனே சிரித்துக் கொண்டே சொன்னார்கள்: “நாங்கள் ஆண்டுதோறும் ஒரு ஆடவனை காளிதேவிக்கு உயிர்பலி தருவோம். இந்த தடவை மன்னே உயிர்ப்பலிக்கு கொடுக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது. காளிதேவி எங்களுக்கு கூடுதல் அருள் பொழிவாள்”.

 

மன்னனுக்கு ஒரே துன்பம்! என்னை விட்டு விடுங்கள் என்று கதறினான்.

 

காளிதேவியின் பீடத்தில் அவனைக் கிடத்தி பூசாரியை அருவாளுடன் வர அழைத்தனர். அவரும் வந்தார். ஆடைகளையெல்லாம் ஒன்றொன்றாக உருவிவிட்டு வெட்டச் செல்லும் போது அந்தப் பூசாரி, மன்னனின் கையில் ஒரு கட்டு போடப் பட்டிருப்பதைப் பார்த்தான். அது என்னவென்று வினவினான். உடனே விரல் துண்டுப்பட்ட இடத்தை மன்னன் காட்டினான்.

 

“அடக் கடவுளே! முழு உடலிருக்கும் மனிதனைத் தான் காளிக்குப் பலி தரவேண்டும். இவனுக்கோ ஒரு அங்கம் பழுது. இவனை உடனே எடுத்துச் செல்லுங்கள். காளிதேவி கோபித்துக்கொள்வாள்” என்றார் பூசாரி. உடனே இரண்டு தடியர்களும் மன்னரை அலாக்காகத் தூக்கி பழைய இடத்திலேயே போட்டுவிட்டு போய்விட்டனர்.

 

மன்னனுக்கு மந்திரி சொன்னது நினைவுக்கு வந்தது: எல்லாம் நன்மைக்கே – என்று அமைச்சர் சொன்னாரே. கை விரல் வெட்டுப்பட்டதற்கு கோபப்பட்டு அவரை எட்டி உதைந்தேனே. கைவிரல் வெட்டுப்பாடாமல் முழு அங்கத்துடனிருந்தால் இவ்வளவு நேரம் காளிக்குப் பலி கொடுத்திருப்பார்களே என்று எண்ணி வருத்தப்பட்டார். மந்திரியின் பெயரை உரத்த குரலில் சொல்லி அழைத்துக் கொண்டே போனார்.

 

தொலைவில் மரத்தடியில் அமர்ந்திருந்த மந்திரி ஓடோடி வந்து மன்னா! என்ன வேண்டும்? ஏன் அழைத்தீர்கள்? என்றார். மன்னன் முழுக் கதையையும் சொல்லி மந்திரி சொன்னது உண்மைதான். கடவுள் கஷ்டத்தைக் கொடுத்தால் அதுவும் நன்மைக்கே என்றார். மந்திரியிடம் மன்னிப்பும் கோரினார்.

 

மந்திரி சொன்னார்: மன்னரே, மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்கள் என்னை எட்டி உதைந்தபோது நானும் எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிவிட்டுப் போனேன். நீங்கள் என்னை விரட்டாமலிருந்தால், இவ்வளவு நேரம் அந்தத் தடியர்கள் நம்மிருவரையும் கொண்டுபோய் பூசாரியிடம் ஒப்படைத்திருப்பர். உமக்கு அங்கக் குறைவு இருந்ததால் என்னைத்தான் பலியாக்கி இருப்பர். நீங்கள் என்னை எட்டி உதைத்து விரட்டிவிட்டதும் இறைவன் செயலே. எல்லாம் நன்மைக்கே” என்று சொன்னார். பின்னர் இருவரும் காட்டிலிருந்து நாட்டுக்குப் புறப்பட்டனர்.

bhavan book

நீதி: ஏதேனும் துன்பம் நேரிட்டாலும், அது ஏதோ ஒரு நன்மைக்கே என்று ஆண்டவனை நம்பி வாழ வேண்டும்.

 

“நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு” (பாரதியார் பாடல் வரிகள்).

தமிழ் மொழி பெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன்

–சுபம்–

 

 

God does everything for good! (Post No. 2473)

bhavan book

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 9 January 2016

 

Post No. 2473

 

Time uploaded in London :– 8-41 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(I have translated this story in Tamil as well).

liramdas

Once a King, with his minister, followed by his retinue went into the depths of a forest on a hunting expedition. Now the minister was well known for his wisdom. He held the motto, God does everything for the best, and whenever anyone went to him for advice in his trouble, woe or misfortune, the minister would console the distressed party by convincing him of the wisdom of submission to the will of God.

 

The King and the minister in their hunt for game were separated from the followers and roamed far into the interiors of the forest and eventually lost their way. The sun rose to the meridian. The King was oppressed with fatigue and hunger. They rested in the shade of a tree.

 

“Minister”, said the exhausted King, “I am sorely upset through pangs of hunger. Can you get me something to eat?”

 

The minister looked around and discovered fruits on a tree. Climbing up the tree, he plucked some fruits and presented them to the King. The King in a haste to eat the fruit, while cutting it with a knife chopped off a bit of his finger. With a cry of pain, he dropped both the fruit and the knife, his injured finger streaming with blood.

 

Ho, he cried out, how it pains, minister

 

“God does everything for the best”, put in the minister quietly.

 

These words tended only to rouse the already petulant King. He flew into a rage and cried out,

 

“Fool, truce to your philosophy. l have had enough of it. While I am suffering from excruciating agony, the only consolation you can tender is God does everything for the best. How can this be for the best, when the pain is intense and real? I will have nothing to do with you in future. Get out of my sight, and never show me your face again”. Unable to control himself, he kicked the minister furiously and commanded him to take himself off at once. While the minister was leaving the King, he calmly reiterated, “God does everything for the best.”

 

Now the King was left alone. He tore a strip of his garment and bandaged his injured finger. When he was musing over the sad event, two stalwart men approached him.  They instantly fell on the King and bound his hand and foot. Struggle or resistance was utterly useless, as the men were strong and sturdy.

ramdas book

The frightened King now asked, “What are you going to do with me?” They replied, “We want you to be sacrificed at the altar our goddess Kali. It is the custom to offer to her a human sacrifice once a year. The time has arrived for it and we were on the lookout for a human being. We are fortunate in having found you”.

 

These words of his captors thoroughly alarmed the King. He remonstrated, “Let me go. I am the King of a province. You cannot, therefore, kill me for the sacrifice.”

 

 

The men laughed and said, “Then this year’s sacrifice is going to be unique, and our goddess will be highly pleased when she finds that we bring to her altar this time an exalted personage as an offering.  Come along”.

 

 

They dragged the victim to the Kali shrine, not far away from the spot. He was duly placed on the sacrificial altar. Things were ready for the death blow, when the priest, observing the bandage on his left hand forefinger removed it, and discovered that a portion of it was cut off. He said to the men, “This man is not acceptable for our goddess. Set him free. The goddess wants a whole man, while the man here has a defect in his body. A bit of his finger is gone. Let him go”.

 

Accordingly untying the ropes with which he was bound, the men set the King free and allowed him to depart in peace.

 

 

Now the King remembered the words of the minister, uttered when his finger was cut “God does everything for the best”. Indeed had it not been for the cut of the finger he would have by now been a dead man. He felt keenly for the ill treatment he had meted out to his friend. He was anxious to remedy the blunder by begging his forgiveness. So he rambled in the woods, called aloud the name of the minister, and at last found him. The minister was resting beneath a tree. Going up to him the King embraced him with extreme love and said, “Friend, I seek your forgiveness for the cruel treatment accorded to you. The truth of your golden saying is brought home to me.”

 

ramdas

Then he narrated the incident of the intended sacrifice to the goddess, and how he was set free on account of the defect in his hand, caused by the knife cut.

 

“Sire, replied the minis, you have done me no harm. So there is nothing to forgive. In truth you have saved me while you kicked and drove me away. You may remember I repeated the same words, ‘God does everything for the best’. Now in my case as well it has come true. For if you have not driven me a away, I would have been in your company when the men of Kali captured you and, when they have discovered that you were unfit for sacrifice, they would have offered me for it instead, since I had no cut in my body as the one you had providentially got. So ‘God does everything for the best’.

Story told by Swami Ramdas of Anandashram, North Kerala.

 

-Subham-

 

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம் (Post No. 2472)

Shri-Kuzhandhaiyanandha-Swamigal

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 9 January 2016

 

Post No. 2472

 

Time uploaded in London :–  5-45 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆன்மீக இரகசியம்

 

லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் ஒரு இரகசியம்

 

ச.நாகராஜன்

 

குழந்தையானந்த ஸ்வாமிகள்

 

பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.

 

ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.

 

சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.

 

1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள். ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.

இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.

ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.

‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.

 

நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.

“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.

om tamil

 

கரை கட்டி ஸஹஸ்ர நாமத்தைச் சொல்

 

லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.

 

ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய ஓம் என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.

 

ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தை.

 

தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.

 

 om swasik

ஓம் என்னும் உயரிய மந்திரம்

தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.

 

அதே போல காத்யாயனர் ப்ரண்வத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.

தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.

 

முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

 

இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.

 

பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.

ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார். அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!

 

*****

 

A proverb is an ornament to language (Post No. 2471)

apple a day

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 8 January 2016

 

Post No. 2471

 

Time uploaded in London :–  9-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Proverbs: What are they? Sayings on Proverbs

1.A good maxim is never out of season.

2.The genius, wit and spirit of a nation are discovered in its proverbs (Francis Bacon 1561-1626).

3.Great consolation may grow out of the smallest saying.

4.A proverb is an ornament to language

5.The proverb cannot be bettered.

 

6.Common proverb seldom lies.

7.Old saws speak truth.

8.There is no disputing a proverb, a fool and the truth.

9.Proverbs cannot be contradicted.

10.Though the proverb is abandoned, it is not falsified.

 

11.Proverbs are the children of experience.

12.Maxims are the condensed good sense of nations.

13.Proverbs are the wisdom of the streets.

14.A proverb is the wit of one and the wisdom of many.

15.A proverb comes not from nothing.

tamil book proverb

16.Death and proverbs love brevity.

17.A proverb is shorter than a bird’s beak.

 

18.Time passes away, but sayings remain.

 

19.Proverbs are like butterflies, some are caught, others fly away.

 

20.Hold fast to the words of your ancestors.

 

21.Wise men make proverbs and fools repeat them.

 

 

There are over 100 articles on proverbs and sayings ‘subject wise’ in my blogs, both in Tamil and English; posted from 2012. If you are interested in Proverbs, please go to my blogs:-

Tamilandvedas.com

Swamiindology.blogspot.com

herman

A few of the articles are listed here:–

20,000 Tamil Proverbs | Tamil and Vedas

tamilandvedas.com/2012/06/01/20000tamilproverbs/

 

1 Jun 2012 – Tamil is one of the richest languages in the world. It has a collection of more than 20,000 proverbs. This collection is an Encyclopaedia of Tamil …

 

Stories behind Five Tamil Proverbs – Swami’s Indology Blog

swamiindology.blogspot.de/…/stories-behind-five-tamilproverbs.html?…

3 Jun 2015 – Tamil language is rich in proverbs. There are more than 20,000 proverbs. Percival, Rev.J.Lazarus and Herman Jensen had compiled and  …

 

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள் …

tamilandvedas.com/…/இருபதாயிரம்-தம

 

31 May 2012 – ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் … 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி  …

பழமொழிகள் | Tamil and Vedas

tamilandvedas.com/tag/பழமொழிகள்/

8 Nov 2015 – ஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 201520,000 Tamil Proverbs (English article). Tamil – English Proverb Book (108 தமிழ்-ஆங்கிலப் பழமொழிகள்), posted 17  …

 

 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் …

swamiindology.blogspot.com/2013/…/blog-post_31.ht…

31 May 2013 – தமிழில் அருமையான 20,000 பழமொழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆழமான பொருள் உடையவை. ‘இளமையில் கல்’ என்பது ஒரு பொன்மொழி.

 

 

 

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்

tamilandvedas.com/…/பெண்கள்பற்றி3

 

26 Jun 2012 – பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்– Part 1 பெண்களைப் பற்றிய பழமொழிகள் பெரும்பாலும் அவர்களுக்கு எதிரானதாகவும், .

 

 

யானை பற்றிய நூறு பழமொழிகள் …

tamilandvedas.com/…/யானைபற்றிய-ந…

Translate this page

5 Jun 2012 – உலகில் தமிழ் மொழியில் உள்ளதைப் போல வேறு எந்த மொழியிலாவது பழமொழிகள் இருக்குமா என்பது சந்தேகமே. வளமிக்க மிகப் …

 

lazarus

 

Swami’s Indology Blog: June 2012

swamiindology.blogspot.de/2012_06_01_archive.htm…

பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்– இறுதி பகுதி … பழமொழிகளில்இந்துமதம் ஆகிய மூன்று கட்டுரைகளையும் (4) Amazing Collection of 20,000Tamil Proverbs  …

 

பாரதி பாட்டில் பழமொழிகள்

அப்பர் தேவாரத்தில் பழமொழிகள்

கடவுள் பற்றிய பழமொழிகள் and more………………….

–Subham–

விஷ்ணு ஓடி ஒளிந்த இடம்! நாரதர் கேள்வி!!(Post No. 2470)

narshimha1

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 8 January 2016

 

Post No. 2470

 

Time uploaded in London :–  காலை 8-04

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

அசுரர் குல மன்னன் ஹிரண்யகசிபு மூவுலகமும் நடுநடுங்க ஆட்சி செய்தான். ஈரேழு லோகங்களையும் வெல்ல ஆசை கொண்டான். நேரம் கிடைத்த போதெல்லாம் தேவர்களைத் தாக்கி ஓட ஓட விரட்டினான். இவ்வளவு பலம் எப்படி வந்தது? கடும் தவத்தினால் பெற்ற பலம் இது. ஆகையால் தேவர்கள் ஏது செய்வதென்று அறியாது திகைத்தனர். தேவ லோகத்தையும், விஷ்ணு வசிக்கும் வைகுண்டத்தையும் வசப்படுத்த எண்ணினான்.

 

ஹிரண்யகசிபு, ஒரு நாள் வைகுண்டத்தின் மீது தாக்குதல் தொடுக்கவே, விஷ்ணு உள்பட எல்லா  தேவர்களும் ஓடி ஒளிந்தனர். அவன், எப்படியாவது விஷ்ணுவைப் பிடித்து தனது சக்தியைக் காட்டவேண்டுமென்று தேடோ தேடென்று தேடினான். பூலோகம், புவர் லோகம் சுவர்லோகம் – எங்கு தேடினும் விஷ்ணுவைக் காணவில்லை. அவனுக்கு ஒரு புறம் ஏமாற்றம்- மறுபுறம் பெருமிதம்; விஷ்ணுவையே ஓடி ஒளிய வைத்துவிட்ட இறுமாப்பு.

narasimha

விஷ்ணு ஓடி, ஒளிந்த செய்தி ஈரேழு 14  லோகங்களிலும் காட்டுத் தீ போல பரவியது. நாரதர் காதிலும் விழுந்தது. ‘வெறும் வாயையே மெல்லுபவருக்கு அவல் கிடைத்தது போல’ ஆயிற்று. அட, ‘பழம் நழுவிப் பாலில் விழுந்துவிட்டது’. விடக்கூடாது என்று விஷ்ணுவின் இருப்பிடத்தை அறிந்து அங்கே சென்றார். இந்த தடவை, விஷ்ணுவின் குடுமி, தன் கையில் சிக்குவது உறுதி என்ற இறுமாப்புடன நாரதர் சென்றார்.

 

முதலில் உரிய வணக்கங்களைச் செலுத்திவிட்டு, கிண்டல் தொனியில், “ஐயா,பெரியவரே! ஹிரண்யகசிபு படையெடுத்து வந்தபோது, தேவலோகமே, காலியாமே! நீரும் ஓடிப் போய் ஒளிந்தீராமே! ஹிரண்யகசிபு கண்டுபிடிக்கமுடியாத இடத்தில் ஒளிந்து கொண்டுவிட்டு இப்போது நடமாடுகிறீரே! என்ன விஷயம்? எங்கு ஒளிந்தீர்? என்று நக்கல் செய்தார்.

 

நாரதரைப் பார்த்து ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, விஷ்ணு சொன்னார்: “ஐயா, மஹா பக்தர் நாரதரே! நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை. ஹிரண்யகசிபுக்கு வெகு அருகில்தான் இருந்தேன். அவனுக்குத் தெரியவில்லை!

 

நாரதர்: என்ன? அவனருகில் இருந்தால், எப்படி ஐயா, உம்மைக் கண்டுபிடிக்காமல் போனான்?

 

விஷ்ணு: நான் அவனது இதயத்தில் உட்கார்ந்திருந்தேன். எல்லோர் இதய கமலத்திலும் நான் வீற்றிருப்பதை நீர் அறிவீரே! இதில் என்ன வியப்பு? ஹிரண்யகசிபு, அகந்தையே வடிவெடுத்தவன். அவனது தலைக் கனத்தால், அவன் என்றும் குனிந்ததும் இல்லை; பணிந்ததுமில்லை. ஆகவே அவனால் என்னைக் கண்டு பிடிக்க முடியவில்லை. கொஞ்சம் குனிந்து என்னைத் தேயிருந்தால்கூட கண்டுபிடித்திருக்கலாம். அடக்கமும் பணிவும் இருந்திருந்தால் அவனுள்ளேயே நான் இருப்பதை அறிந்திருப்பான் – என்றார்.

 

நாளை காலை பத்திரிக்கைகளுக்குச் சூடான செய்தி தரலாம் என்று ஆர்வத்துடன் போன நாரதருக்கு விஷ்ணுவின் பதில் நல்ல பாடமாக அமைந்தது.

இந்தக் கதையின் நீதி என்ன வென்று இக்கதையை விளம்பிய ஆனந்தாஸ்ரம சுவாமி ராமதாஸ் சொல்கிறார்:- அகந்தையை விட்டால் இதய கமலத்தில் வீற்றிருக்கும் இறைவனை உணரலாம், காணலாம்.

–சுபம்–