SILENCE IS THE ORNAMENT OF FOOLS- BHARTRUHARI AND VALLUVAR (Post No.5488)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 September 2018

 

Time uploaded in London – 12-31 (British Summer Time)

 

Post No. 5488

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Bhartruhari’s Niti Sataka 7,8,9 & 10 and Tirukkural

 

Tamil poet Tiruvalluvar in Tamil Veda Tirukkural says,

 

Even a man of no learning (fool) may be considered wise

If he holds his tongue in gatherings of learned- Kural 403

 

The Bible says,

A fool’s mouth is his own destruction- Proverbs 18-7

Even a fool, when he holdeth his piece, is counted wise- Proverbs 17-28

 

Sanskrit poet Bhartruhari says in Niti Sataka,

Brahma gave the boon of silence to fools;
This silence is a lid over one’s ignorance;
In the midst of learned people this silence
Become s an ornament for the fools 1-7

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

Parallel verses in Tirukkural

Be modest, restrained; do not argue before learned elders.
This modestly excels all other virtues.
Kural 715

To utter blundering nonsense before the learned wise like is like a fall from the height of virtue -Kural 716

 

XXX

Mad Elephant

When I knew only a little, I was arrogant like an elephant;
At that time, I thought I knew everything;
When I gradually learnt something from the wise
I realised I was a fool.
And my false pride melted away like a fever. 1-8

यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥
Tirukkural says
As one’s ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a well adorned female- Kural 1110

What is folly? It is the delusion which makes men say, we have wisdom -Kural 844

XXX

Ignorant Dog

A dog licks a dry, dirty and stinking bone with its own saliva 
Full of germs without any flesh, but he imagines that he is deriving a good taste. This dog will not care even if Indra standing near him
Similarly a mean- minded person follows his pursuits shamelessly 1-9

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

 

 
The pretensions of a fool to the learning that he does not possess begets doubts even about the false less learning that he does possess 
Kural 845

Petty minded fools cover their nakedness with a cloth; but they do not cover their glaring faults.
Kural 846

XXX

 

The River Ganga falls from the heavens on the head of Lord Shiva 
And then falls on the mountains and then on the earth.
Therefore Ganga goes further down to get immersed in the sea.


By thus descending, Ganga goes further and further downwards until she gets lost in the sea.Similarly any person who lose s his power of discretion has a continuous downfall in a hundred ways 1-10

 

शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

 

Tiruvalluvar in Tamil Veda Tirukkural says,

It is the hall-mark of wisdom to concentrate on the wise and the good

Instead of letting the mind wander aimlessly everywhere – Kural 422

 

Lord Krishna in Bhagavad Gita says,

Like a lamp, in a spot sheltered from the wind, does not flicker, this mind that is restrained by concentration on the good, is steadfast (BG 6-18)

 

XXX subham xxx

சில கதைகள்-மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் (Post No.5487)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 September 2018

 

Time uploaded in London – 7-30 am (British Summer Time)

 

Post No. 5487

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

 

சில கதைகள்மூடர்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு மௌனம் பர்த்ருஹரி நீதி சதகம் 7,8,9,10

 

பர்த்ருஹரி எழுதிய நீதி சதகத்தில் முட்டாள்கள் வாய் திறக்காமல் இருப்பது நலம் பயக்கும் என்று மொழிகிறார்.

 

வான் புகழ் வள்ளுவமுனும்  தமிழ் வேதம் என்று புகழப்படும் திருக்குறளிலும் அதையே செப்புவார்:-

 

கல்லாதவரும் நனிநல்லர் கற்றார் முன்

சொல்லாதிருக்கப் பெறின் (குறள் 403)

 

கற்றறிந்த மக்கள் முன்னிலையில், கல்லாத முட்டாள்கள் வாய் திறவாமல் மவுனம் காத்தால் அந்த இடத்தில் அவர்களும் நல்லவர்களாகத் தோன்றுவார்கள்.

 

स्वायत्तम् एकान्तगुणं विधात्रा
विनिर्मितं छादनम् अज्ञतायाः ।
विशेषा‌अतः सर्वविदां समाजे
विभूषणं मौनम् अपण्डितानाम् ॥ 1.7 ॥

 

ஸ்வாயத்தம் ஏகாந்த்ஹிதம் (குணம்) விதாத்ரா

விநிர்மிதம் சாதனமக்ஞதாயாஹா

விஷேஷதஹ ஸர்வவிதாம் ஸமாஜே

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம்

—பர்த்ருஹரி நீதி சதகம்1-7

 

 

ஒருவனுடைய அறியாமையை மறைப்பதற்காக மூடர்களுக்கு மௌனம் என்னும் வரத்தை பிரம்மா அருளியிருக்கிறார். விஷயம் தெரிந்த அறிஞர்களிடையே முட்டாள்களின் அணிகலன் (ஆபரணம்) இந்த மௌனம்தான் (1-7).

 

முட்டாள் கள் பேசினால் அவர்கள் குட்டு வெளிப்படும் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்று சொன்ன கதை ஆகிவிடும்.

xxx

यदा किञ्चिज्ज्ञो‌உहं द्विप इव मदान्धः समभवं
तदा सर्वज्ञो‌உस्मीत्यभवदवलिप्तं मम मनः
यदा किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा मूर्खो‌உस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ॥ 1.8 ॥

 

யதா கிஞ்சிஜ்ஜோஹம் கஜ (த்விப) இவ மதாந்தஹ ஸமபவம்

ததா ஸர்வஞோஸ்மீத்யபவதவலிப்தம் ம்ம மனஹ

யதா கிஞ்சித்கிஞ்சித்புதஜன ஸகாசாதவகதம்

ததா மூர்க்கோஸ்மீதி ஜ்வர இவ மதோ மே வ்யபகதஹ

–பர்த்ருஹரி நீதி சதகம் 1-8

எனக்கு கொஞ்சம் அறிவு இருந்த போது நான் யானை போல மதம் பிடித்து அலைந்தேன்;

அந்த நேரத்தில் நான் அனைத்தும் அறிந்தவன் என்று நினைத்தேன்;

ஆனால் அறிஞர்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைக் கிரஹித்தபோது, நான் அறிவிலி என்பது விளங்கியது;

காய்ச்சல் விலகுவது போல எனது கர்வமும் விலகி ஓடியது (1-8).

 

 

இதோ வள்ளுவரின் கூற்று

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு — குறள் 1110

 

நல்ல அணிகளை அணிந்த இந்தப் பெண்ணை பொருந்தும் தோறும்,

அந்த இன்பத்தின் மஹிமை தெரிவது எப்படி இருக்கிறதென்றால், நூல்களை படிக்கப் படிக்க இவ்வளவு காலம் நம் அறியாமையைக் காண்பது போல இருக்கிறது

xxx

 

कृमिकुलचित्तं लालाक्लिन्नं विगन्धिजुगुप्सितं
निरुपमरसं प्रीत्या खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिम् अपि श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ॥ 1.9 ॥

 

க்ருமிகுலசிதம் லாலாக்லின்னம் விக்ன்ந்திஜுகுப்ஸிதம்

நிருபமரஸ்ம்ப்ரீத்யா காதன்னராஸ்திநிராமிஷம்

ஸுரபதிம் அபி ஸ்வா பார்ஸ்வத்வம்  விலோக்ய ந சங்க்தே

ந ஹி கணயதி க்ஷுதோ ஜந்துஹு பரிக்ரஹFபலகுதாம் 1-9

 

கிருமிகள் உடைய , சதைப் பற்றில்லாத, காய்ந்த நாற்றமுள்ள அழுக்கான எலும்புத் துண்டை நக்கும் நாய் தனது எச்சிலை அதில் ருசித்துவிட்டு, எலும்புதான் சுவை தருகிறது என்று நினைப்பது போல(1-9).

xxx

 

शिरः शार्वं स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
म्हीध्रादुत्तुङ्गादवनिम् अवनेश्चापि जलधिम् ।
अधो‌உधो गङ्गेयं पदम् उपगता स्तोकम्
अथवाविवेकभ्रष्टानां भवति विनिपातः शतमुखः ॥ 1.10 ॥

 

சிரஹ சார்வம் ஸ்வர்காத் பசுபதி சிரஸ்தஹ க்ஷிதிதரம்

மஹீத்ராத்துங்காத் அவனேஸ்சாபி ஜலதிம்

அதோ அதோ கங்கா ஸேயம் பதம் உபகதா ஸ்தோயம்

விவேக ப்ரஷ்டானாம் பவதி விநிபாதஹ சதமுகஹ 1-10

 

கங்கை நதி ஆகாயத்திலிருந்து சிவன் தலையில் விழுந்து, பின்னர் மலையில் விழுந்து, பூமியில் விழுகிறத்து. கடலில் கலப்பதற்காக கங்கை நதி மேலும் மேலும் இறங்கி வருகிறது; அத்தோடு அதன் பெயர் மறைந்து ‘கடல்’ என்று ஆகிவிடும். இது போலவே ஒருவர் விவேகத்தை இழக்க, இழக்க நூறு வழிகளில்  கீழே விழுவார்.(1-10)

 

அதாவது புத்தி தடுமாறினால் 100 வழிகளில் வீழ்ச்சி நிச்சயம் என்பது பர்த்ருஹரியின் கூற்று.

 

வள்ளுவன் மனம் போன போக்கில் போகாதவனே அறிவாளி என்பார்:-

சென்ற இடத்தில் செலவிடா தீதொரீ இ

நன்றின் பால் உய்ப்பதறிவு – 422

 

பொருள்

மனம் போன போக்கில் போகாமல் தீயதிலிருந்து விலகி நின்று, நல்ல விஷயங்களில்  ஈடுபடுவதே அறிவு/ விவேகம்

 

 

XXX

 

எங்கப்பன் குதிருக்குள் இல்லை

 

கடன் கொடுத்த ஒருவன் கடனைத் திரும்பி வாங்குவதற்காக ஒரு கடன்காரனை தினமும் விரட்டிக் கொண்டிருந்தான். அவனும் கண்ணில் படாமல் முடிந்தவரை ஒளிந்து வந்தான். ஒருநாள் கடன்கொடுத்தவன், எதிர்பாராத நேரத்தில் கடன் வாங்கியவன் வீட்டை நோக்கி விரைந்து வந்தான். ஜன்னல் வழியாக இதைப் பார்த்துவிட்ட கடனாளி மகனை அழைத்து நான் குதிருக்குள் ஒளிந்து கொள்வேன். யாராவது வந்து உன் அப்பன் எங்கே என்று கேட்டால் சொல்லி விடாதே என்று அவசரம் அவசரமாக ஒளிந்து கொண்டான்.

 

கடன் கொடுத்தவன் கோபாவேசமாக உரத்த குரலில், எங்கே உன் அப்பா? என்று விரட்டியவுடன், எங்கப்பன் வீட்டில் இல்லை; கட்டாயமாக குதிருக்குள் ஒளிந்து கொள்ளவே இல்லை என்று உளறிக் கொட்டினான். இதனால்தான் முட்டாள்களுக்கு மவுனமே கடவுள் கொடுத்த பாதுகாப்புக் கேடயம் என்று ஆன்றோர் நவில்வர்.

xxx

‘உன் மனைவி ஊருக்கே மனைவி’ கதை

முட்டாள்களை எப்படிக் கண்டு பிடிப்பது? (31 அக்டோபர் 2015) என்று முன்னர் நான் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி:–

 

நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுபவன் மூடன், முட்டாள் என்று இந்திய இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. உலக மஹா கவி காளிதாசனும் இப்படி இருந்தவர் என்றும் பின்னர் காளிதேவியின் அருள் பெற்று சிறந்தவர் என்றும் செவி வழிக் கதைகள் செப்பும்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை

முட்டாள்கள் அர்த்தம் தெரியாமல் சொற் பிரயோகம் செய்வர். தமிழில் உள்ள கதை அனைவரும் அறிந்ததே. ஒரு ஊரில் ஒரு பெரியவரின் தாயார் இறந்தவுடன் பலரும் துக்கம் விசாரிக்கச் சென்றனர். ஒரு முட்டாள் ஏது சொல்வதென்று திகைத்திருந்த தருணத்தில் எல்லோரும் செல்வதைக் கவனித்தான். “உனது தாயின் இழப்பு உனக்கு மட்டும் இழப்பன்று; அவர் ஊருக்கே தாயாக விளங்கினார். ஆகையால் இன்று நாங்கள் எல்லோரும் தாயை இழந்த பிள்ளையாகி விட்டோம் என்று பலரும் கூறினர். இவனும் அப்படியே கூறிவிட்டு,  வீட்டுக்கு வந்தான். மற்றொரு நாள் ஊர்ப் பெரியவரின் மனைவி இறந்து போனாள். இவன் எல்லோருக்கும் முன் முந்திக் கொண்டு, முந்திரிக் கொட்டை போலச் சென்றான். ஊரே கூடியிருந்தது. இந்த முட்டாள் முன்னே சென்று, “உனது மனைவியை இழந்தது உனக்கு மட்டும் துக்கமன்று. அவள் உனக்கு மட்டும் மனைவியில்லை; ஊருக்கே மனைவியாகத் திகழ்ந்தாள் இன்று நாங்கள் அனைவரும் மனைவியை இழந்த கணவர் ஆகிவிட்டோம்” என்றான். பக்கத்தில் இருந்த பத்துப் பேர் அவனுக்கு அடி உதை கொடுத்து அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்!!

 

மஹாபாரதம் இதை இன்னும் அழகாகச் சொல்லுகிறது. ஒரு கிளியானது சொன்னதைச் சொல்லும்; அழகாகச் சொல்லும். ஆனால் அதையே ஒரு பூனை பிடிக்க வரும் போது அம்மா, என்னை பூனை பிடிக்கிறது என்று சொல்லத் தெரியாது. இதே கதைதான் முட்டாள்களின் கதையும்.

 

பல மொழிகளிலும் அறியாமை பற்றிய கருத்துகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன:

 

1.Ignorance is the night of the mind (Chinese proverb)

 

மனதின் இருண்ட நேரம் அறியாமை (சீனப் பழமொழி)

 

2.There is no blindness like ignorance.

அறியாமை என்பது அந்தகத்தன்மை (குருடு)

 

3.Thedevil never assails a man except he find him either void of  knowledge or  of the fear  of god.

அறிவு இல்லாதவனையும், கடவுளை நம்பாதவனையும்தான் பேய்கள் பிடிக்கின்றன

 

4.Scinece has no enemy but the ignorant.

விஞ்ஞனத்துக்கு ஒரே எதிரி அறிவற்றவனே

 

5.Art has no enemy but ignorance

கலையின் எதிரி அறியாமை

 

6.If the blind lead the blind, both shall fall into the ditch

குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் பள்ளத்தில் விழுவர் (உபநிஷத்திலும், பைபிளிலும் உள்ள உவமை)

 

இறுதியாக மத்திய கிழக்கில் அராபிய மொழியில் உள்ள பழமொழி

He who knows not, and knows not that he knows not, is a fool. Shun him.
He who knows not, and knows that he knows not, is simple. Teach him.
He who knows, and knows not he knows, is asleep. Wake him.
He who knows, and knows that he knows is wise. Follow him.

அறியான் அறியான் தான் அறியாதவன் என்று – அவன் ஒரு முட்டாள் – ஒதுக்குக

அறியான் அறிவான் தான் அறியாதவன் என்று – அவன் எளியவன் – கற்பிக்க

அறிவான் அறியான் தான் அறிந்தவன் என்று – அவன் உறங்குகிறான் – எழுப்புக

அறிவான் அறிவான் தான் அறிந்தவன் என்று – அவன் மேதாவி – பின்பற்றுக

–சுபம்–

 

 

ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் (Post No.5486)

WRITTEN BY S NAGARAJAN

Date: 29 September 2018

 

Time uploaded in London – 6-11 AM (British Summer Time)

 

Post No. 5486

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ஹென்றி ஃபோர்டின் வெற்றிக்குக் காரணம் மறுபிறப்பு நம்பிக்கையே!

ச.நாகராஜன்

1

எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை; இந்தியாவில் மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்று கிறிஸ்தவ பாதிரிகள் மும்முரமாக ஈடுபட்டு கோடிக் கணக்கில் டாலர்களைத் திரட்டுவதற்கான காரணம் அவர்களின் முதலுக்கே மோசம் வந்ததால் தான்!

 

மேலை நாடுகளில் இன்று ஏராளமானோர் மறுபிறப்பு நம்பிக்கை கொண்டு மறுபிறப்பு கொள்கை பற்றி அறிய மிகுந்த ஆவல் கொண்டு ஹிந்து மதத்தின் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

 

இது அடிப்படையையே ஆட்டம் காண வைப்பதால் ஹிந்து மதத்தின் மீது  ஒரு மோசமான வெறுப்பை கிறிஸ்தவ பாதிரிகள் கொண்டுள்ளனர்.

 

ஆனால் மறுபிறப்பு நம்பிக்கையை நூறாண்டுகளுக்கு முன்பேயே  மேலை நாட்டில் பல பிரபலங்கள் உட்பட ஏராளமானோர் கொண்டிருந்தனர் என்பதை ஆதாரபூர்வமாக  வரலாறு நிரூபிக்கிறது.

மறுபிறப்பு நம்பிக்கையே தனது வெற்றிக்குக் காரணம் என்று அழகுறச் சொன்னவர் ஹென்றி போர்ட். மோட்டார் மன்னன் என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படும் போர்ட் வாழ்க்கை சுவை தரும் ஒன்று.

 

 

2

 

ஹென்றி போர்ட் (பிறப்பு 30-7-1863 மறைவு 7-4-1947) தனது 26ஆம் வயது முதலே மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதை அவரே San Francisco Examiner என்ற பத்திரிகைக்கு 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அளித்த பேட்டியில் குறிப்பிடுகிறார் இப்படி:

 

I adopted the theory of Reincarnation when I was twenty six. Religion offered nothing to the point. Even work could not give me complete satisfaction. Work is futile if we cannot utilise the experience we collect in one life in the next. When I discovered Reincarnation it was as if I had found a universal plan I realised that there was a chance to work out my ideas. Time was no longer limited. I was no longer a slave to the hands of the clock. Genius is experience. Some seem to think that it is a gift or talent, but it is the fruit of long experience in many lives. Some are older souls than others, and so they know more. The discovery of Reincarnation put my mind at ease. If you preserve a record of this conversation, write it so that it puts men’s minds at ease. I would like to communicate to others the calmness that the long view of life gives to us.

 

 

“26ஆம் வயதில் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையைக் கொள்ள ஆரம்பித்தேன். மதம் ஒன்றும் தர முன்வரவில்லை. வேலை கூட பூரண திருப்தியைத் தரவில்லை. ஒரு பிறப்பில் நாம் பெற்ற அனுபவத்தை இன்னொரு பிறவியில் நாம் பயன்படுத்த முடியவில்லை எனில் அது மிக மோசம். மறுபிறப்பு பற்றி நான் கண்டுபிடித்த போது ஒரு பிரபஞ்ச திட்டத்தை கண்டுகொண்டது போல இருந்தது. எனது கருத்துக்களை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தேன். காலம் என்பது இனி ஒரு எல்லைக்குட்பட்டதாக இல்லை. கடிகாரத்தின் முள்களுக்கு நான் இனி அடிமை இல்லை. மேதைத் தனம் என்பது அனுபவம். சிலர் அதை ஒரு பரிசு என்றோ அல்லது ஒரு திறமை என்றோ நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது பல ஜென்மங்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவே. சிலர்  மற்ற ஆன்மாக்களை விட முதியவர்கள். ஆகவே அவர்களுக்கு அதிகம் தெரியும். மறுபிறப்பைக் கண்டுபிடித்ததிலிருந்து எனது மனம் தெளிவாக இருக்கிறது. இந்த உரையாடலை நீங்கள் பாதுகாத்தீர்கள் என்றால் இது மனித மனங்களை தெளிவாக இருக்கச் செய்கிறது என்று எழுதுங்கள். நான் மற்றவர்களுக்குச் சொல்ல விரும்புவது வாழ்க்கை பற்றிய நீண்ட நோக்கு நமக்குத் தரும் அமைதியைப் பற்றியே

போர்ட் கூறியதில் ஒரு சிறிய பகுதியையே மேலே நாம் படித்தோம்.

 

இன்னும் ஏராளமாக அவர் மறுபிறப்பு பற்றிக் கூறியிருக்கிறார்.

மனித வாழ்வில் ஒரு ஆறுதலையும் அர்த்தத்தையும் தரும் மறுபிறப்பு நம்பிக்கையே தன் வெற்றிக்குக் காரணம் என்று அவர் கூறியிருப்பது பொருள் பொதிந்த ஒன்று.

 

3

அமெரிக்காவின் 25வது ஜனாதிபதியான வில்லியம் மக் கென்லி (William McKinley) (பிறப்பு : 29-1-1843 சுடப்பட்டு மரணமடைந்த தேதி 14-9-1901) 1901ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி 50000 பேர் அடங்கிய ஒரு கூட்டத்தில் பங்கு கொண்டார். அவரைக் கொலை செய்ய முயன்ற ஜொல்காஸ் (Czolcosz) அது முடியாமல் போகவே மறுநாள் அவர் டெம்பிள் ஆஃப் மியூசிக் மைதானத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வந்த போது அவர் அருகில் வந்து அவரது அடிவயிற்றில் இரு முறை சுட்டான். மரண காயமடைந்த மக்கென்லி செப்டம்பர் 14ஆம் தேதி மரணம்டைந்தார்.

அவரது இறுதிச் ச்டங்கில் கலந்து கொள்ள வந்தார் போர்ட். அப்போது அவரது நண்பரான ஆலிவர் பார்தெல் (Oliver Barthel) என்பவர் அவரிடம் ஆர்லாண்டோ ஸ்மித் (Orlando Smith)  எழுதிய “A Short view of the Great Questions and Eternalism : A Theory of Infinite Justica”  என்ற புத்தகத்தை அளித்தார். இரு தொகுதிகள் அடங்கிய அந்த நூல் மறுபிறப்பு பற்றி நன்கு விளக்கும் ஒரு நூல். அதை நன்கு ஊன்றிப் படித்தார் போர்ட். அவரது மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை இன்னும் ஆழமானது. இதை போர்டின் வாழ்க்கை வரலாறை எழுதிய வின்செண்ட் கர்சியோ (Vincent Curcio) ‘ஹென்றி போர்ட்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.

 

4

இது போல ஏராளமான மேலை நாட்டு அறிஞர்களும், விஞ்ஞானிகளும், தொழிலதிபர்களும், சாமானியர்களும் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை கொண்டிருந்ததை நாம் பார்க்கலாம்.

நாளுக்கு நாள் ஏராளமானோர் அறிவுக்கு இணக்கமான, அறிவியலால் நிரூபிக்கப்பட்ட இந்த நம்பிக்கையைக் கொள்வதில் ஆச்சரியம் இல்லை!

 

இது கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேர் கொள்கையான, ‘பிறப்பு ஒன்றே; பின்னர் மீளாத் துயில் தான்’ என்பதை ஆட்டம் காணச் செய்வதால் பாதிரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதிலும் ஆச்சரியம் இல்லை!!

***

 

Krishna’s Friend died in ‘Wheel’ Accident! (Post No.5485)

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 September 2018

 

Time uploaded in London – 13-30 (British Summer Time)

 

Post No. 5485

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Krishna’s Friend died in ‘Wheel’ Accident! (Post No.5485)

 

Strange stories about Lord Krishna are available in Tamil literature which are not found in Sanskrit scriptures. I have already given the story about Dadhipandan who got Moksha (liberation) for him and his pot. Now there is another story told by Perialvar, a Vaishnavite saint, who lived 1400 years ago.

 

There was a cowherd by name Srimalikan who was great friend of Lord Krishna. He told Krishna that he would carry his Sudarsana wheel so that he could feel a bit relaxed. But Krishna told him that it would be dangerous, because it may cut his head off. But he was always nagging Krishna to leave the wheel with him. At last Krishna yielded to his demand and gave him the Wheel. As soon as he received the wheel it cut his head. We can guess that he would have reached heaven because it was the holy wheel and it happened in front of the Lord.

 

But there are some morals in the story:

Tamil poet Thiruvalluvar in the Tamil Veda Tirukkural says,

Consider the aim, the obstacle and the greatness of the ultimate gain and then resort to action- Kural 676

 

Curiosity Killed the Cat

We are reminded of the saying ‘Curiosity Killed the Cat’.

Be Johnson used the following in his drama ‘Every Man in His Humour’ and Shakespeare acted in it:

“Helter skelter, hang sorrow, care will kill a cat, up-tails all, and a pox on the hangman”.

 

Later Shakespeare also used this in his drama Much ado about Nothing:

What, courage man! what though care killed a cat, thou hast mettle enough in thee to kill care

-Much Ado about Nothing.

 

Thus, we learn that unnecessary curiosity is not good. Moreover, if great people like Lord Krishna say something, we must listen to them.

 

–subham–

 

 

 

சக்கராயுதம் சீமாலிகன் தலையை அறுத்த கதை (Post No.5484)

written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 September 2018

 

Time uploaded in London – 8-51 am (British Summer Time)

 

Post No. 5484

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

சக்கராயுதம் சீமாலிகன் தலையை அறுத்த கதை (Post No.5484)

 

“சீமாலிகவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய்

சாமாறவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்”

 

என்று பெரியாழ்வார் பாடியதற்கு வியாக்கியானக்காரர்கள் ஒரு கதையைச் சொல்லுவதை தமிழ் பேரறிஞர் மு. இராகவையங்கார் எடுத்துக் காட்டியுள்ளார். இது வட நாட்டு ஸம்ஸ்க்ருத நூல்களில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கதை இதுதான்:-

 

சீமாலிகன் என்பவன் ஒரு இடையன் . கண்ணனின் நண்பன். கண்ணன் சக்கர ஆயுதத்தைக் கொண்டு போகும் போதெல்லாம் ‘அண்ணலே, என்னிடம் கொடுங்கள் நான் கொண்டு வருகிறேன்’ என்று நச்சரிப்பான். கிருஷ்ண பரமாத்மா சொன்னார்,

 

‘வேண்டாமப்பா! உனக்கேன் ஏன் சிரமம். மேலும் அது உன் தலையை

அறுத்துவிடும்’ — என்று சொல்லிப் பார்த்தார். அவன் கேட்டபாடில்லை.

 

 

அண்ணலும் அவன் நச்சரிப்பு தாளாமல் சக்கர ஆயுதத்தை அவன் கையில் கொடுத்தார். அவன் தலை அறுந்தது.

 

வேண்டாத விஷயங்களுக்கு ஆசைப்படக் கூடாது என்பதும், பெரியோர் சொன்னால் அதைக் கேட்க வேண்டும் என்பதும் நீதி.

 

ஆயினும் கண்ணனின் சக்கர ஆயுதத்தால் கொல்லப்ப்ட்டவனுக்கு முக்தி உண்டு. அதுவும் கண்ணனுக்கு உதவுவதற்காகச் செய்த செயல்தானே!

அதிக உற்சாகம் ஆளைக் கொல்லும்!

curiosity killed the cat என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். இதை ஷேக்ஸ்பியர்

What, courage man! what though care killed a cat, thou hast mettle enough in thee to kill care

-Much Ado about Nothing.

என்று சொன்னார். அவருக்கும் முன்பாக பென் ஜான்ஸன் (Ben Johnson)

..Helter skelter, hang sorrow, care will kill a cat, up-tails all, and a pox on the hangman (Every Man in His Humour)

என்று எழுதி இருந்தார். அந்த நாடகத்தில் ஷேக்ஸ்பியர் நடித்தார்.

 

–subham–

கம்போடியாவில் மாளய பக்ஷம் (Post No.5482)

RESEARCH ARTICLE WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 28 September 2018

 

Time uploaded in London – 6-48 AM (British Summer Time)

 

Post No. 5482

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

இறந்துபோன முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விழா அல்லது புனிதச் சடங்கு புரட்டாஸி மாதத்தில் பௌர்ணமியில் துவங்கி அமாவாஸை முடிய நடைபெறும். அந்த அமாவாஸையை, மஹாளய (மாளய) அமாவாசை என்றும் அதற்கு முந்தைய 15 நாட்களை (பக்ஷம்), மாளய பக்ஷம் என்றும் இந்துக்கள் அழைப்பர்.

 

இதை கம்போடிய பௌத்தர்களும் கொண்டாடுகிறார்கள். இதன் ஒற்றுமையைக் காண்போம்

 

  1. இந்துக்கள் மாளய பக்ஷம் நடத்தும் காலத்தில் (செப்டம்பர், அக்டோபர், புரட்டாசி மாதம்) கம்போடியர்களும் முன்னோர்களுக்கு கடன் செலுத்துவர்.

 

2.இந்துக்களைப் போலவே சோற்றுப் (RICE BALLS) பிண்டங்களை இறந்தோருக்கு அளிப்பர்.

 

3.இந்துக்களைப் போலவே 15 நாள் (பக்ஷம் FORTNIGHT) கொண்டாடுவர்.

 

4.இந்துக்கள் மந்திரம் சொல்லிச் செய்வர். கம்போடியாவில் புத்த பிஷுக்கள் பாலி மொழி (PALI SUTTAS) சுத்தங்களை (சூக்தம்) சொல்லுவர்.

 

  1. இந்துக்கள் மாளய பஷம் என்பர்; கம்போடிய பௌத்தர்கள் ‘சம் பென்’ PCHUM BEN என்பர்.

 

  1. இந்துக்கள், முன்னோர்களை ‘பித்ருக்கள்’ என்று மரியாதையுடன் அழைப்பர். கம்போடியாவில் பாமர மக்களை நம்ப வைப்பதற்காக இறந்தோரின் ‘ஆவிகள்/பேய்கள்’ என்பர்.

 

  1. இந்துக்கள், இறந்தோர்கள் யமலோகத்தில் இருப்பார்கள் என்று சொல்லுவது போல கம்போடியர்களும் யம தர்மனை நினைவு கூறுகின்றனர்.

 

 

  1. ஒரே வேற்றுமை- கம்போடியர்கள், இறந்தோர் நரகத்தின் வாயில் திறந்தவுடன் ஆவிகளாக வெளியே வருவதாகச் சொல்லுவர். ஆனால் இந்துக்கள், அவர்களுடைய முன்னோர்கள் பரம மங்களகரமான ஆசிகளை வழங்குவதற்காக மேலுலகத்திலிருந்து பூவுலகிற்கு வருவதாக நம்புகின்றனர்.

 

ஒரு அதிகாரியோ, அமைச்சரோ நம்முடைய ஊருக்கு வரும்போது நாம் எளிதில் சிரமம் இன்றி மனு கொடுப்பது போல, நம் முன்னோர்கள், பூவுலகிற்கு வருகையில் நாம் எளிதில் ஆஸிகள் பெறும் காலம் இது.

 

  1. மநு தர்ம சாஸ்திரம் முதல் தமிழ் வேதமான திருக்குறள் வரை ஏழு தலைமுறை (எழுமை) பற்றிப் பேசும். இந்துக்களைப் போலவே கம்போடியர்களும் ஏழு தலைமுறைக்கு படைப்பு படைப்பதாக நம்புகின்றனர்.

 

10.இந்துக்கள், வெப்ப மண்டல நாடான இந்தியாவில் பிறந்து இந்தியாவில் வளர்ந்ததால் எல்லாவற்றிலும் அரிசி (பிண்டம்), எள், தண்ணீரைப் பயன்படுத்துவர். கம்போடியர்கள் ஊதுவத்திகளையும் மெழுகு திரிகளையும் பயன்படுத்துகின்றனர்.

11.கம்போடிய மாதமான போத்ர்பாத்ரில் (POTRBOTR) இதை அனுஷ்டிப்பதாகச் சொல்லுகிறார்கள். இது பாத்ரபத என்னும் ஸம்ஸ்க்ருத மாதப் பெயர். இதை தமிழர்கள் புரட்டாசி ஆக்கிவிட்டனர். கம்போடியர் போத்ர் போத்ர் ஆக்கிவிட்டனர்.

 

 

இந்தியாவில் பெரும்பாலோர்- காத்மாண்டு முதல் கண்டி வரை– ஏப்ரல் 14 புத்தாண்டு கொண்டாடுவது போல தென்கிழக்காசிய நாடுகள் அனைத்தும் கொண்டாடும். கம்போடியர்களுக்கு ஏப்ரல் 14ம் இந்த மாளய பக்ஷமும் தேசிய விடுமுறை. அவர்கள் வாழ்க்கையில் முக்கியமான பண்டிகை மாளய பக்ஷம். யாரும் புத்தமத கோவிலுக்குப் போகாமல் இருக்க மாட்டார்கள்.

 

இது போல இலங்கைப் பௌத்தர்களும் முன்னோர்களுக்கு படைப்பு படைக்கின்றனர். அவர்கள் எல்லோரும் இறந்துபோன முன்னோரை ‘பேய்’ என்று நினைக்கின்றனர். இந்துக்கள் மட்டும் இறந்தோரை தெய்வ நிலைக்கு உயர்த்தி நம்மை என்றும் ஆசிர்வதிக்கக் காத்திருப்பதாக நம்புகின்றனர்.

 

படங்கள் இன்றைய டெக்கான் க்ரானிக்கிள் DECCAN CHRONICLE பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டவை; நன்றி

 

–சுபம்–

விண்வெளி ஆயுதங்கள் – 2 (Post No.5481)

WRITTEN BY S NAGARAJAN

Date: 28 September 2018

 

Time uploaded in London – 5-35 AM (British Summer Time)

 

Post No. 5481

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 28-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு தாம்) கட்டுரை

விண்வெளி ஆயுதங்கள் – 2

ச.நாகராஜன்

 

 

விண்வெளியில் உள்ள அபாயகரமான ஆயுதங்களில் சிலவற்றைப் பார்த்தோம். மேலும் சில:

 

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள்

 

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தரும் தகவலின் படி கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் (Intercontinental Ballistic Missiles) தரையிலிருந்து ஏவி விடப்படுபவை. 3500 மைல்களுக்கும் அப்பால் பறந்து குறித்த இலக்கைத் தாக்கக் கூடியவை. முதலில் சோவியத் யூனியன் 1958இல் இதை வானில் செலுத்தியது. உடனே 1959இல் அமெரிக்கா தனது பங்கிற்கு ஒன்றை வானில் செலுத்தியது. இந்தியா, இஸ்ரேல், சீனா ஆகிய நாடுகளும் இந்த வகை ஏவுகணைகளை செய்து வருகின்றன. இது கணிணி மூலமாகவோ அல்லது சாடலைட் மூலமாகவே ஏவப்படக்கூடியது. ஒரு குறிப்பிட்ட நகரைத் தாக்கித் தரைமட்டமாக்க வேண்டுமா, இது தயாராக இருந்து அந்தப் பணியைச் செய்து விடும். இவை அணுகுண்டுகளை மட்டுமல்ல, அபாயகரமான கெமிக்கல் மற்றும் உயிரியல் ஆயுதங்களையும் கூட ஏந்திச் செல்லக் கூடியவை. 1991இல் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி அமெரிக்காவும் ரஷியாவும் இந்த வகை ஏவுகணைகளைக் குறைத்துக் கொள்வது என்று பரஸ்பரம் ஒப்புக்கொண்டன.

 

அமெரிக்க விமானப்படையின் எக்ஸ் – 37 பி கலம்

அமெரிக்காவின் இந்த விண்கல ஆயுதம் பற்றி சரியான தகவல் வெளிவரவில்லை. இது ஒரு விமானப்படை ஆயுதம் என்ற அளவில் மட்டும் விவரம் அறியப்படுகிறது.

 

நாஸா அமைக்கின்ற விண்கலம் போலக் காணப்படும் இது ரொபாட்டினால் இயக்கப்படும் ஒன்றாகும். ஒரு வருடத்திற்கும் மேலாக இது விண்ணில் நிலை கொண்டிருக்கும் வடிவமைப்பைக் கொண்டது. 2015ஆம் ஆண்டு வெளியான ஒரு தொழில்நுட்பத் தகவல் ஏடு இது பற்றிச் சில தகவல்களைத் தந்துள்ளது. இது விண்ணிலிருந்தவாறே குண்டு மழை பெய்யும் வல்லமை கொண்டது. எதிரி விண்கலங்களைத் தாக்கி அழிக்கக் கூடியது. ஆனால் அமெரிக்க இராணுவம் இதையெல்லாம் மறுத்து, இந்த விண்கலம் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான ஒரு சோதனைக் கலம் தான் என்று கூறி வருகிறது.

 

 

சாடலைட்டுகளை அழிக்கும் அமைப்புகள்

Anti- Satellite Systems எனப்படும் இவற்றில் ஒன்றை 1985ஆம் ஆண்டு அமெரிக்கா தனது F-15A ஜெட் விமானம் ஒன்றிலிருந்து ஏவிப் பார்த்தது. ஆனால் இதில் உள்ள சாதனங்கள் சரிவர இயங்காததால் இது அழிக்கப்பட்டது. சோல்விண்ட் பி 78 -1 என்ற இந்த விண்ணிலிருந்து ஏவப்படும் சிறிய கலம் சோதனைக் காலத்தில் 250 துண்டுகளை விண்ணில் சிதற அடித்தது. அமெரிக்க காங்கிரஸ் இந்தச் சோதனையை நிறுத்தச் சொல்லி உத்தரவிடவே இந்தத் திட்டம் 1987இல் நிறுத்தப்பட்டது.

 

இதை உருவாக்குவதில் அமெரிக்காவின் நோக்கம் என்னவெனில் எந்த வித உடன்படிக்கையையும் மீறாமல் ஆனால் அதே சமயம் எதிரி சாடலைட்டுகளை எப்படி அழிப்பது என்பதை சோதனை செய்து பார்ப்பது தான். இது பற்றி ஏராளமான சோதனைகள் நடந்து வருகின்றன.

எதிரி சாடலைட்டுகளை அழிக்கும் அமைப்புகள் பற்றி சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் ஆராய்ந்து அவற்றை உருவாக்கி வருகின்றன. சீனா 2007ஆம் ஆண்டு ஏவிய ஒரு கலம் விண்வெளியில் பெரிய விண்வெளிக் குப்பையை உருவாக்கி விட்டது. 2013இல் விண்வெளிக் குப்பை கூளங்களில் ஒன்று ஒரு ரஷிய விண்கலத்தின் மீது மோத ரஷிய விண்கலம் சுக்கு நூறாகி உடைந்தது.

 

 

விண்கல்லை ஆயுதமாக்கிப் பயன்படுத்துவது

 

விஞ்ஞானிகள் அனைவரும் விண்ணில் உலவும் விண்கற்கள் அபாயகரமான நாசத்தை விளைவிப்பவை என்பதை அறிவர். ஆறு மைல் அகலமுள்ள விண்கல் ஒன்று 660 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியிலிருந்த அனைத்து டைனோஸர்களையும் அழித்து ஒழித்ததை அனைவரும் அறிவோம். இந்த விண்கற்களால் மனித குலம் படும் பாட்டை மெடார் (1979), டீப் இம்பாக்ட் (1998) ஆர்மெகடான் (1998) ஆகிய ஹாலிவுட் படங்கள் சித்தரிக்கின்றன. சின்னச் சின்ன விண்கல் கூட பேரழிவை ஏற்படுத்தும். பயங்கர வேகத்தில் பறப்பவை இவை. இவற்றில் சிறிதான ஒன்று ரஷிய நகரான செல்யாபின்ஸ்க் மீது 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படவே ஆயிரக்கணக்கான ஜன்னல்கள் துண்டு துண்டாய்ச் சிதறின. 1200 பேர்கள் பறந்து வந்த கண்ணாடித் துண்டுகளால் காயமடைந்தனர். இந்தக் கல் சுமார் 66 அடி அகலம் கொண்ட ஒரு சிறிய துண்டு தான்.

 

நாஸா பூமிக்கு அருகில் பறக்கும் ஒரு விண்கல்லைச் சோதனைக்காக எடுத்துக் கொண்டு ஆய்வது என்று திட்டமிட்டது. இப்போது திட்டத்தைச் சிறிது மாற்றியுள்ளது. இன்னும் இரு ஆண்டுகளில் இந்தத் திட்டம் சரியாக உருவாகலாம்.

 

ஆனால் விஞ்ஞானிகளில் பலரும் விண்கற்கள் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூமிக்கு அருகில் பறந்து வரும் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே இதைப் பெரிய அபாயகரமான ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்பில்லை என்கின்றனர்.

 

இருந்தாலும் 1997இல் வெளியான ஸ்டார்ஷிப் ட்டரூப்பர்ஸ் என்ற ஹாலிவுட் படம், அயல்கிரகவாசிகள் போனஸ் அயர்ஸை அழித்துத் துடைத்து விடுவதைக் காண்பிக்கிறது. இதை நினைத்தாலே நடுக்கம் ஏற்படுகிறது, விண்கற்கள் செவ்வாய் கிரகத்தின் மீதும் கூட மோதி நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளன.

 

 

நமக்குத் தெரிந்த அளவில் உள்ளவை மேலே நாம் பார்த்த இந்த விண்வெளி ஆயுதங்களே. தெரியாமல் ரகசியமாக உருவாகி வருபவை எத்தனையோ!

 

தரை, கப்பல், விமானம் ஆகிய முப்படைகளை நினைத்து நடுங்கும் மனித நெஞ்சம் இனிமேல் விண்வெளிப் படை பற்றியும் நினைத்து பயப்பட வேண்டும். காலத்தின் கட்டாயம் இது!!

 

 

Paul Dirac

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

பெல்ஜியத்தைச் சேர்ந்த தொழிலதிபர் எர்னஸ்ட் சால்வே இயற்பியல் கொள்கைகளை விவாதிப்பதற்காக மாநாடு அமைப்பு ஒன்றை நிறுவினார். 1927இல் நடைபெற்ற ஐந்தாம் மாநாடானது, க்வாண்டம் தியரி பற்றி  விவாதிக்கப்பட்டதாலும், ஐன்ஸ்டீன் உள்ளிட்ட ஏராளமான மேதைகள் பங்கு பெற்றதாலும்  உலக பிரசித்தி பெற்ற மாநாடாகக் கருதப் படுகிறது..

 

இதில் கலந்து கொள்ள வந்த பிரிட்டனைச் சேர்ந்த பால் டிராக் சிறந்த இயற்பியல் விஞ்ஞானி. பெரிய நாத்திகவாதி.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சூடான சர்ச்சை ஒன்று ஆரம்பிக்க உரத்த குரலில் வாத பிரதிவாதங்கள் கிளம்பின.

பால் டிராக் கடவுள் நம்பிக்கையை எதிர்த்துப் பேசி தூள் கிளப்பினார்.

 

 

அதே மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிரபல மேதையும், பின்னால் நோபல் பரிசு பெற்றவருமான இயற்பியல் விஞ்ஞானி உல்ப்கேங் பாலி விவாதத்தில் கலந்து கொள்ளாமல் அமைதியாக ஒரு மேஜையருகில் அமர்ந்திருந்தார். ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருந்த அவரை நோக்கிக் கூட்டத்தினர், “இதில் உங்கள் கருத்து என்ன? விவாதத்தைக் கேட்டீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு பாலி, “ எனக்குப் புரிந்த மட்டில் நான் இப்போது அறிந்து கொண்டது கடவுள் இல்லவே இல்லை; பால் டிராக் தான் அவரால் நியமிக்கப்பட்ட தீர்க்கதரிசி என்பதைத் தான்” (“As I understand it: there is no God and Dirac is his prophet”) என்றார்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

 

 

மிக சூடான விவாதத்தையும் கூட ஒன்றுமில்லாமல் செய்ததோடு அனைவரின் மனமும் நோகாமல் நகைச்சுவை ததும்ப தன் கருத்தை எடுத்துக் கூறிய பாலியை அனைவரும் பாராட்டினர்; இன்றும் அனைவராலும் மேற்கோள் காட்டப்படும் சம்பவமாக இது பிரபலமாகி விட்டது!

***

 

350 Herbs in Charaka Samhita, 85 Plants in Matsya Purana (Post No.5480)

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 September 2018

 

Time uploaded in London – 18-37 (British Summer Time)

 

Post No. 5480

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

Hindu mythologies, known an Puranas, are encyclopedia of Hindu beliefs, thoughts, history and geography. Charaka Samhita, a medical treatise, has listed 350 herbs. Matsya Purana gave a list of 85 plants. Aruna Goel has given it in her book on environment. Another person has written about the usefulness of Neem tree. The towpage attachment will give you the full details:-

  

 

  

 

Useful Neem Tree

 

 

–subham–

STRANGE AND RARE STORIES OF LORD KRISHNA (Post No.5479)

 

Written by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 September 2018

 

Time uploaded in London – 13-29 (British Summer Time)

 

Post No. 5479

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

Tamil is a divine language. Probably it has more divine writings than any other language in the world except Sanskrit. Tamil Nadu is a land of the divinities. There are more Hindu temples in Tamil Nadu than any other state in India. Under Tamil Nadu Government control alone there are over 30,000 temples. One third of the 100,000 temples of the country are in Tamil Nadu. When north India suffered attack after attack from the time of Darius, South India was peaceful until fighting Pandya brothers invited Muslim invaders into Madurai in the 12th century. Until then Chozas, Pandyas and Chera Kings vied with one another in building bigger and bigger temples. Temples in Madurai, Thanjavur, Tiruvannamalai, Chidambaram and Rameswaram were touching the sky even before Americans contemplated sky scrappers.

Stranger is the Tamil literature which describes unknown stories of Lord Krishna and Lord Rama. Neither Valmiki nor Vyasa or Sukar touched those incidents which the Sangam literature described. Later the Alvars, Tamil Vaidhnavite saints gave more stories about Lord Krishna.

 

The oldest part of Sangam Tamil literature, Pura Nanuru, which is 2000 year old, has two Rama anecdotes that are not found in Valmiki Ramayana. Kamban who adapted Valmiki in Tamil also differed from Valmiki in various places. The reason being Kamban talked about three different Ramayanas that existed in his time. Unfortunately we lost two Ramayanas and Valmiki alone survived. So we may guess that Kamban and other Tamil saints borrowed some stories or anecdotes from those two extinct Ramayanas.The incidents mentioned in the hymns of Alvars (Vaishnavite Tamil saints) also serve as missing links.

 

The strangest story is about one devotee called Dhadipandan (Yogurt/ curd potter). Krishna, known as Kannan in Tamil was stealing butter and curd from every house of the Yadava community. He also belonged to that Yadava community. Neighbors started complaining about his mischief, pranks and thefts. Yasoda, his foster mother, was furious. She was chasing him from house to house. But the clever and cunning Krishna always found a way out. Once he was about to be caught. Then Krishna begged to a cowherd to hide him. He also obliged. But when she was too close, he begged the man to hide him under a pot. So the man also cupped him with a big pot. He sat over the pot as if he was doing some work. Yasoda was fooled one more time.

When Krishna came to know that the chaser had gone he asked the man to let him out. Clverer than Krishna, the man asked him a promise from Krishna. He did not demand money. But knowing that Krishna was an Avatar (incarnation of God) he asked him to give him liberation- Moksha from the cycle of Birth and Deaths.

 

Krishna said, ‘Granted’.

But that fellow still did not release Krishna.

Now Krishna started begging,

Hey Man, I gave you what you wanted. Please get me out. That fellow became cleverer and cleverer. “Look this pot only helped me to get liberation. I must be grateful to this pot. So give Moksha to the pot as well”. Krishna had to yield to get his release. Just to get normal release Krishna had to give ‘real release’ for TWO and one among them is a solid mud pot!

 

This story which is not found in Bhagavatha (Life Story of Lord Krishna) or the Maha Bharata (The Great War of India/Bharat) is sung by several saints.

 

This is not the only story. The Bhagavatha Purana ( Biography of Krishna) is dated around Gupta period. But even before that 2000 year old Tamil literature mentioned the boyish pranks of Krishna on the banks of holy river Yamuna. The river is mentioned with the Tamil name THOZUNAI, which is the corrupted form of Dohna in Sanskrit(Akam.59). If the date of Bhagavatha Purana is correct, then Tamils can be prouder to have mentioned the pranks of Krishna on the banks of River Jamuna/Yamuna. Later lierature like the Tamil epic Silappadikaram also mentioned this.

There are a few more stories in Tamil ( I will give them separately)

 

–subham–

அவ்வையாரின் ஆத்திச் சூடி பொன்மொழிகள் (Post No.5478)

COMPILED by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 September 2018

 

Time uploaded in London – 7-27 am (British Summer Time)

 

Post No. 5478

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

அக்டோபர் 2018 காலண்டர்

விளம்பி-புரட்டாசி/ஐப்பசி

அவ்வையாரின் ஆத்திச் சூடி பொன்மொழிகள்

பண்டிகை நாட்கள்:- அக்டோபர் 2 காந்தி ஜயந்தி ,  8 மஹாளய அமாவாசை,9  நவராத்ரி ஆரம்பம், 18 ஸரஸ்வதி பூஜை,  19 விஜய தஸமி/ துர்கா பூஜை

 

அமாவாஸை- அக்டோபர் 8; பௌர்ணமி- 24;

ஏகாதஸி விரத நாட்கள்-அக்டோபர்  5, 20; முஹூர்த்த நாட்கள்- அக்டோபர் 9, 28, 31

 

அக்டோபர் 1 திங்கட் கிழமை

அறம் செய விரும்பு

1.DESIRE TO DO VIRTUE / DESIRE TO DO CHARITY.

 

அக்டோபர் 2 செவ்வய்க் கிழமை

ஆறுவது சினம்

2.ANGER SHOULD BE SUBDUED.

 

அக்டோபர் 3 புதன் கிழமை

இயல்வது கரவேல்

3.DO NOT CONCEAL YOUR MEANS/ DO NOT REFUSE HELP WHERE IT IS PRACTICABLE.

 

அக்டோபர் 4 வியாழக் கிழமை

ஈவது விலக்கேல்

4.DO NOT PREVENT GIVING ALMS.

 

அக்டோபர் 5 வெள்ளிக் கிழமை

உடையது விளம்பேல்

5.DO NOT BOAST OF YOUR POSSESSIONS/ DO NOT SPEAK IN PRAISE OF YOUR GREATNESS.

 

அக்டோபர் 6 சனிக் கிழமை

ஊக்கமது கைவிடேல்

6.DO NOT LOSE YOUR COURAGE/ CEASE NOT TO PERSEVERE

 

அக்டோபர் 7 ஞாயிற்றுக் கிழமை

எண் எழுத்து இகழேல்

7.DO NOT DESPISE NUMBERS AND LETTERS/ DO NOT NEGLECT THE STUDY OF ARITHMETIC AND GRAMMAR

 

அக்டோபர் 8 திங்கட் கிழமை

ஏற்பது இகழ்ச்சி

8.BEGGING IS DISGRACEFUL

அக்டோபர் 9 செவ்வய்க் கிழமை

ஐயமிட்டு உண்

9.GIVE ALMS AND THEN EAT

 

அக்டோபர் 10 புதன் கிழமை

ஒப்புரவு ஒழுகு

10.CONDUCT YOURSELF CONSISTENTLY/ FOLLOW ESTABLISHED CUSTOMS

 

 

அக்டோபர் 11 வியாழக் கிழமை

ஓதுவது ஒழியேல்

11.CEASE NOT TO LEARN/ DO NOT NEGLECT THE STUDY OF THE VEDAS

 

அக்டோபர் 12 வெள்ளிக் கிழமை

ஔவியம் பேசேல்

12.DO NOT SPEAK ENVIOUSLY

 

அக்டோபர் 13 சனிக் கிழமை

கண்டு ஒன்று சொல்லேல்

13.DO NOT SAY ONE THING AFTER SEEING ANOTHER/ DO NOT SAY ONE THING TO A MAN’S FACE AND ANOTHER BEHIND HIS BACK

 

அக்டோபர் 14 ஞாயிற்றுக் கிழமை

ஙப் போல் வளை

14.BE UNITED TO YOUR RELATIVES LIKE THE LETTER OR BEND LIKE ‘NGA’

THERE ARE FOUR DIFFERENT READINGS FOR THIS SAYING.

LIKE THE SHAPE OF THE LETTER ’ ங ‘ SURROUND AND PROTECT YOUR RELATIVES.

DRAW UP YOUR FORCES ENCOMPASSING THE ENEMY IN THE FORM OF LETTER ‘ ங ‘

 

STAND LIKE THE LETTER ங ‘ ‘ AND FIGHT I.E. AS THE CONSONANT ‘ ங ‘ TAKES AN INTERMEDIATE POSITION IN WORDS TAKE A STAND BETWEEN THE VAN AND REAR OF YOUR ARMY AND FIGHT.

 

BUILD THE ENTRANCE OF THE FORT IN WINDINGS LIKE THE LETTER ங ‘ ‘

 

 

அக்டோபர் 15 திங்கட் கிழமை

சனி நீராடு

15.BATHE ON SATURDAY (WITH OIL)’ BATHE THE BODY IN SPRING WATER, FIRST BATHING THE DEFILED MIND IN TRUTH.

 

அக்டோபர் 16 செவ்வய்க் கிழமை

ஞயம்பட உரை

16.SPEAK SO AS TO GIVE PLEASURE

 

அக்டோபர் 17 புதன் கிழமை

இடம்பட வீடு இடேல்

17.DO NOT BUILD TOO LARGE A HOUSE

 

அக்டோபர் 18 வியாழக் கிழமை

இணக்கம் அறிந்து இணங்கு

18.BE FRIENDLY ON EXPERIENCING FRIENDSHIP

 

அக்டோபர் 19 வெள்ளிக் கிழமை

தந்தை தாய் பேண்

19.PROTECT YOUR FATHER AND MOTHER

 

அக்டோபர் 20 சனிக் கிழமை

நன்றி மறவேல்

20.FORGET NOT A BENEFIT

 

அக்டோபர் 21 ஞாயிற்றுக் கிழமை

பருவத்தே பயிர் செய்

21.SOW IN DUE SEASON

அக்டோபர் 22 திங்கட் கிழமை

மன்று பறித்து உண்ணேல்

22.DO NOT LIVE BY LAND WRESTED FROM YOUR NEIGHBOUR/ DO NOT GAIN A LIVELIHOOD BY MEANS OF BRIBES TAKEN IN A COURT OF JUSTICE

 

அக்டோபர் 23 செவ்வய்க் கிழமை

இயல்பு அலாதன செயேல்

23.DO NO IMPROPER ACTION/ DO NOT WANDER ABOUT DELUDED BY THE SENSES

 

அக்டோபர் 24 புதன் கிழமை

அரவம் ஆட்டேல்

24.DO NOT PLAY WITH A SNAKE/  DO NOT SPEAK VAINLY

 

அக்டோபர் 25 வியாழக் கிழமை

இலவம் பஞ்சில் துயில்

25.SLEEP ON A MATTRESS OF SILK COTTON

அக்டோபர் 26 வெள்ளிக் கிழமை

வஞ்சகம் பேசேல்

26.DO NOT SPEAK DECEITFULLY

 

அக்டோபர் 27 சனிக் கிழமை

அழகு அலாதன செயேல்

27.DO NO DISGRACEFUL ACTION

 

அக்டோபர் 28 ஞாயிற்றுக் கிழமை

இளமையில் கல்

28.LEARN FROM CHILDHOOD

 

அக்டோபர் 29 திங்கட் கிழமை

காப்பது விரதம்

29.FORGET NOT YOUR DUTY (CHARITABLE ACTIONS ARE INTENDED)

 

அக்டோபர் 30 செவ்வய்க் கிழமை

அனந்தல் ஆடேல்

30.DO NOT SLEEP TOO LONG

அக்டோபர் 31 புதன் கிழமை

கடிவது மற

31.AVOID UNKIND WORDS

 

—SUBHAM–