தமிழ் பூதமும் கிரேக்க பூதமும்

Picture: Oedipus kills Sphinx

கிரேக்க நாட்டிலுள்ள டெல்பி ஆரக்கிளுக்கும் (ஒரு பெண் சாமி ஆடி குறி சொல்லுதல்) தமிழ் நாட்டிலுள்ள சாமி ஆடிகள், கோடங்கி அடிப்போர், குறி சொல்லுவோருக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது (இதைப் பற்றி தனி கட்டுரையில் தந்திருக்கிறேன்). இது போலவே கிரேக்க ஸ்பிங்ஸ் (SPHINX)  பூதத்துக்கும் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பல வகை பூதங்களுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. ஏற்கனவே அப்பர், சுந்தரர் ஆகியோருக்கு உதவிய பூதங்கள் பற்றி தனி கட்டுரையில் கூறிவிட்டேன். எகிப்திலும் ஸ்பிங்ஸ் சிலகள் உண்டு. ஆனால் கிரீஸ் நாட்டின் தீப்ஸ் நகரில் உள்ளது பற்றித்தான் இந்தக் கதை.

இதோ சிலப்பதிகார பூதக் கதைகள்:

இந்திரன் தலை நகரான அமராவதியை முசுகுந்தன் என்ற சோழ மன்னன் காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதத்தையும் ஐந்து வகை மன்றங்களையும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் எழுதியுள்ளார் (5: 65-67, 6:7-17). (முசுகுந்தன் என்ற மன்னன் பெயரை உரைகாரர்கள் தந்தனர்).

காவல் பூதம் அமராவதியில் அசுரர் விடுத்த இருள் அம்பினைப் போக்கியது. இந்திரன் அனுப்பியதால் பூம்புகாருக்கு வந்து நாளங்காடியில் தங்கி பலிகளை ஏற்றுவருகிறது என்று சிலம்பு கூறும் (7: 14)

ஐவகை மன்றம் பற்றி சிலப்பதிகாரம் மிகவும் விரிவான தகவல்களைத் தருகிறது (5: 111- 140). 1.) சுருக்கமாகச் சொன்னால், களவாட நினைப்போரை நடுங்க வைக்கும் வெளியிட மன்றம் 2.) நோயால் அழுகியவரைக் குணப்படுத்தும் மன்றம். அதாவது ஒரு பொய்கையில் குளித்தவுடன் நோய்கள் ஓடிவிடும். நம் ஊர் புஷ்கணிகள் போல 3.) நஞ்சாலும் பேயாலும் துன்புற்றாரின் துயர் நீக்க ஒளியை வீசும் மன்றம். அதாவது நவீன லேஸர் ஒளிக் கற்றை சிகிச்சை போல.4.) ஒழுக்கம் கெட்டவரை நிலத்தில் புடைத்துச் சாப்பிட்டு விடும் சதுக்க பூதம் ( இது உண்மையில் இருந்தால் ஜனத்தொகைப் பெருக்கப் பிரச்சினை பற்றி நாம் கவலையே பட வேண்டாம். அதுவே மக்கட் தொகையைக் குறைத்துவிடும்!! 5.) அரசன் செங்கோல் தவறி ஆட்சி புரியினும் சபையோர் நேர்மை குன்றினாலும் கண்ணீர் விட்டு அழும் பாவை மன்றம் ( இது இன்று இருந்தால் நித்திய அழுகைதான்!!)

இது தவிர அழற்படுகாதையில் ஆதி பூதம், அரச பூதம், வணிக பூதம், வேளாண் பூதம் ஆகிய நால் வருணப் பூதங்களும் மதுரை தீப்பற்றி எரிவதற்கு முன்னரே வெளியேறி விட்டதாகவும் இளங்கோ பாடுகிறார்.

அடைக்கலக் காதையில் பத்தினிப் பெண் ஒருத்தியைப் பற்றிப் பொய்யுரை உரைத்த ஒருவனை ஒரு பூதம் பாசக் கயிற்றால் பற்றிப் புடைத்து உண்டதாகவும் இருக்கிறது. பொய்க்கரி சொன்னவனுடைய தாயார் தனது மகனை விட்டுவிட்டு தன்னைப் பிடித்துக் கொள்ளலாம் என்று கெஞ்சிக் கேட்டபோதும் அதை பூதம் ஏற்கவில்லை. அந்த மனிதனை அவர்கள் கண் முன்னாலேயே அறைந்து கொன்று உண்டு விட்டது என்கிறார் இளங்கோ.

காடுகாண் காதையில் மதுரைக்கு வழி கேட்ட கோவலனுக்குப் பதில் கூறிய மறையவன், திருமாலிருஞ் சோலை பக்கத்தில் மூன்று பொய்கைகள் உள்ளதாகவும் அங்குள்ள தெய்வங்கள் என்ன என்ன கேள்விகள் கேட்கும் என்றும் என்ன பதில் கூறினால் நல்லது என்றும் சொல்லித் தருகிறான். இவை எல்லாம் கிரேக்க பூதக் கதையில் வரும் சில அம்சங்கள்.

புலவர் பெயர்களிலும் பூதம், பேய் உண்டு. சதுக்க பூதனார், பேய்மகள் இளவெயினி, காரைக்கால் பேயார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்—இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கிரேக்க பூதம்

எகிப்திலும் கிரீஸிலும் ஸ்பிங்ஸ் உண்டு. ஸ்பிங்ஸ் சிலை பாதி சிங்கமாகவும், பாதி பெண் ஆகவும் இருக்கும். இரண்டு நாடுகளிலும் தீப்ஸ் என்ற நகரும் உண்டு. ஆனால் பூதக் கதை கிரேக்க வீரன் ஈடிபஸ் பற்றியது. அவன் பாதி சிங்க உடலும் பாதி பெண் உருவமும் கொண்ட ஸ்பிங்ஸைப் பார்க்கிறான். அது கேள்விகள் கேட்கும். பதில் சொல்லாதவர்களைப் பிடித்துச் சாப்பிட்டு விடும். தீப்ஸ் நகர மக்களுக்கு இது ஓயாத கவலை தந்தது. வழிப்போக்கர்களைக் கேள்வி கேட்டு அச்சுறுத்தி வந்தது. இதைப் படிக்கும் போது மஹாபாரதத்திலுள்ள யக்ஷப் ப்ரஸ்னம் கதையும் ,விக்ரமாதித்தன் வேதாளம் கதைகளும் ஞாபகத்துக்கு வரும்.

ஈடிபஸ் போனபோது அவனிடம் கேட்ட கேள்விகள்: எது சில நேரம் இரண்டு காலகளோடும் சில சமயம் மூன்று கால்களோடும் சில சமயம் நான்கு கால்களோடும் நடக்கும். எது அப்படி 4 கால்களோடு நடக்கையில் பலவீனமாக இருக்கும்?

ஈடிபஸ் கொடுத்த விடை: மனிதன். குழந்தையாக இருக்கும் போது எழுந்து நிற்க முடியால் நாலு “கால்”களில் தவழ்ந்து செல்லுவான். பின்னர் இரண்டுடன் நடந்து கைத்தடியுடன் நடக்கையில் மூன்று கால்களோடு இருப்பான்.

ஒருவரை ஒருவர் பாதிக்கும் சகோதரிகள் யார்? பகலும் இரவும் என்று ஈடிபஸ் பதில் கொடுத்தான். இறுதியில் ஸ்பிங்ஸ் ஒரு மலையிலிருந்து விழுந்து இறந்தது.

ஆக கேள்விகள் கேட்டு அச்சுறுத்துவது, தவறிழைப்போரைச் சாப்பிடுவது ஆகிய அம்சங்களில் சிலப்பதிகார தமிழ் பூதத்துடன் ஒற்றுமையைக் காணலாம்.

***************************

 

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும்

கிரேக்க (Greece) நாட்டில் உள்ள டெல்பி ஆரூடம் ( Delphi Oracle ) உலகப் புகழ் பெற்றது. காரணம் என்னெவென்றால் கிரேக்க நாட்டின் அறிஞர்களும் ரோமானிய மன்னர்களும் இங்கு வந்து ஜோதிடம் கேட்டனர். அது மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் மக்கள் இதில் (கி.மு 800 முதல் கி.பி.300 வரை) நம்பிக்கை வைத்து அங்கே போனார்கள். இப்போதும் இது ஒரு பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது.

 

தமிழ் நாட்டில் குறிசொல்லும் குறத்திகள், சாமி ஆடுவோர், கோடங்கி அடித்து சோதிடம் சொல்லுவோர், நாடி சோதிடக் குறிப்புகள் எழுதுவோர் என்ன என்ன எல்லாம் செய்தார்களோ அத்தனையும் இங்கே செய்திருக்கிறார்கள். கிரேக்க நாட்டில் இது போல பல குறி சொல்லும் இடங்கள் இருந்தபோதும் பிதகோரஸ், ஹெரோடாட்டஸ், ஈடிபஸ், ப்ளூடர்ச், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், ரோமானிய மன்னர்கள்  மற்றும் பல தலைவர்கள் வந்த இடம் டெல்பியே. அங்கு இசைப் போட்டி நடத்தி பரிசு கொடுப்பதும் வழக்கம்.

 

பர்னாசஸ் மலைப் பகுதியில் ஒரு குகை போன்ற அறையில் ஒரு பெண் உட்கார்ந்திருப்பாள். அங்கு புகை வரத் துவங்கும். பின்னர் வந்திருப்பவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு தெளிவில்லாத, விளங்கிக் கொள்ள முடியாத வகையில் பதில்கள் கிடைக்கும். அம்மையார் ஓரிரு வரிகளில் பதில் தருவார். பல விஷயங்கள் இரு பொருள்பட இருக்கும். பக்கத்தில் உள்ள ஒரு பூசாரி, அந்த அம்மையார் கூறிய ஆரூடத்தை விளக்குவார். அங்கு பூமியிலிருந்து வந்த புகை “எதிலின்” என்ற ரசாயன வாயு என்றும் அது போதையை உண்டாக்கவே இப்படி அம்மையார் உளரத் துவங்கினார் என்றும் சில ஆராய்ச்சியாளர் சொன்னதெல்லாம் இது வரை நிருபணமாகவில்லை.

டெல்பியில் நடந்ததை ஒவ்வொரு அம்சமாகப் படியுங்கள். நீங்களே தமிழ் நாட்டில் நடந்த, நடக்கும் விஷயங்களுடன் ஒப்பிட முடியும். (சிலப்பதிகாரத்தில் இதே போல கேள்வி கேட்கும் பூதங்கள் பற்றி வருகிறது. அப்பர் பெருமானுக்கும் சுந்தரருக்கும் பூதங்கள் வந்து உதவி செய்தன. அவைகளை ஏற்கனவே தனிக் கட்டுரைகளில் கொடுத்துள்ளேன்).

1.இங்கே அபல்லோ தெய்வத்தின் கோவில் உள்ளது. அவர் பைதான் என்னும் பாம்பைக் கொன்று உலகைக் காப்பாற்றினார். அவர் டால்பின் வடிவு எடுத்து, முதுகில் கிரீட் தீவு பூசாரிகளை ஏற்றிக் கொண்டு வந்தார். (கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனமும் மச்சாவதரக் கதையும் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும்).

2.இங்கே மூன்று பொன்மொழிகள் எழுதப்பட்டிருக்கும் 1.உன்னையே நீ அறிவாய். 2.அளவுக்கும் மிஞ்சாதே (அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் 3. உறுதி எடு, விஷமம் செய்யாதே. இந்தப் பொன்மொழிகள் ஏழு முனிவர்கள் கொடுத்தது. (இப்போது சப்த ரிஷிக்களும், உபநிஷத வாக்கியங்களும் நம் நினைவுக்கு வரும்)

3. சாமி ஆடும் பெண் வேகமாகப் பேசுவார். அதை பூசாரிகள் விளக்கி அர்த்தம் சொல்லுவார்கள் (இதுவும் நம் ஊர் மாதிரிதான். நாடி சோதிடத்தில் அவர் ஒன்று செய்யுள் வடிவில் சொல்ல பக்கத்தில் உள்ளவர்கள் வேறு ஒன்று உரை நடை வடிவில் சொல்லுவார்கள்.)

4. பூசாரினி சொல்லுவதில் ஒரு சொல்லையோ, கமா (காற்புள்ளி) வையோ இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் அனர்த்தம் ஆகிவிடும். “Go Return Not Die in War”. என்று பூசாரினி கூறுவாள். இதில் ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்கு முன் காற்புள்ளியை (,,,,,) ப் போட்டால் போருக்குப் போ, திரும்பி வா, போரில் இறக்க மாட்டாய் என்று அர்த்தம் வரும். ஆங்கிலச் சொல் “நாட்” என்பதற்குப் பின்னால் காற்புள்ளியை வைத்தால் போருக்குப் போ,,திரும்பி வராதே, செத்துத் தொலை என்று பொருள் வரும். ஆக எப்படியும் பொருள் கொள்ளக் கூடிய நாட்ர்தாமஸ் எழுதிய செய்யுள் வடிவ சோதிடம் போல குழப்பத்தோடு வீடு திரும்புவார்கள் (இதுவும் நம் ஊர் ஜோதிடர்களையும் அவர்கள் கூறும் பரிகாரங்களையும் நினைவு படுத்தும்

5. பூசாரினி இருக்கும் இடத்துக்குக் கீழேயிருந்து நறுமணப் புகை வருவதாக அங்கே பூசாரியாக வேலை பார்த்த ப்ளூடார்ச் எழுதி வைத்துள்ளார். இது இயற்கையான ஊற்றிலிருந்து எழுந்த ரசாயன வாயு என்றும் செயற்கையாகப் போட்ட போதை ஊட்டும் பொருள் என்றும் கூறுவர் ( இதுவும் நம் ஊர் வேத கால சோம பானம் பற்றி மேல் நாட்டார் எழுதி வைத்தது போல எல்லோரையும் குழப்பும்).

6. பூசாரினிகளை இளம் வயதுப் பெண்களிலிருந்து தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் பிரம்மசர்ய விரதத்தைக் கடுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும். இது நம் ஊர் சந்யாசினிகளை நினைவுக்குக் கொண்டு வரும்.

7. ஒரு மன்னன் வந்து “நான் எதனால் சாவேன் என்று கேட்டானாம். பூசாரினி சொன்னாள்: மூஸ், மூஸ், மூஸ் என்று. பக்கத்தில் இருந்த பூசாரி எலி என்று மொழி பெயர்த்தானாம். கிரேக்க மொழியில் எலி (மூஷிகம்),தசை (மஸில்), மனிதனுடைய பெயர் (எடுத்துக் காட்டு: மோசஸ்) என்று பல பொருள்கள் உண்டு. ஆகையால் அந்த மன்னன் எலிகளை எல்லாம் ஒழித்தானாம். மூஸ் என்ற பெயருடையவர் எல்லோரையும் விரட்டிவிட்டானாம். கடைசியில் தசைப் (மஸில்) பிடிப்பால் இறந்தானாம். இதே போல கம்சன்–கிருஷ்ணன், இந்திரன் – விருத்தாசுரன், ஹிரண்யகசிபு—பிரஹ்லாதன் கதைகளில் நாம் படிக்கிறோம்.

8. ஒரு நாள் ஒரு ஆட்டிடையன் பர்னாசஸ் மலை அடிவாரத்துக்குப் போனான் என்றும் ஆடுகள் குகைக்குள் போகவே அவை வினோதமாகக் கூச்சலிட்டன என்றும் அவன் உள்ளே போனபோது சாமி ஆடி வருங்காலம் உரைக்கும் கணியன் ஆக மாறினான் என்றும் எழுதி வைத்துள்ளனர். (இது நம் ஊர் ஸ்தல புராணக் கதகள் போல இருக்கிறது!!)

சுருக்கமாகச் சொன்னால் கிரேக்க நாட்டு பழக்க வழக்கங்கள் இந்திய, அதிலும் குறிப்பாக, தமிழ் நடைமுறைகளை ஒத்து இருக்கும். (கிரேக்க—தமிழ் மொழி தொடர்பு பற்றிய வேறு இரண்டு கட்டுரைகளில் மேல் விவரம் காண்க)

 

 

Dravidian Queen (1320 BC) in North India

Picture shows gUpta Gold Coin With Queen Kumara Devi

A Puranic reference about an ancient queen DRAVIDA missed the attention of many research scholars. It is because we still read the ancient history written by the British 150 years ago. Indian history begins from the days of Buddhists, according to them. But Sumerian, Babylonian, Egyptian, Greek and Mayan histories have been vastly revised and newer and newer information is added every year. But our text books remain the same.

Dravida was a princess mentioned in the Hindu Puranas. Trnabindu’s daughter was Dravida, who was the mother of Visravas. His son was Visala.  Dravida was read as Idavida by some. The confusion arose because there was another girl Idavida mentioned elsewhere. It is easy to suggest that princess Dravida married an Aikshvaka.

Dravida—Visravas—Visala—Hemachandra—Sucandra—Dhumrasva—Srnjaya—Sahadeva—Krsasva—Somadatta—Janamejaya—Pramati is the line of kings and queens.

Pramati  is contemporary with Dasaratha Aja and Lomapada. This synchronism is important, as it places Trnabindu 12 generations up at 1320 BC says R .Morton Smith in his book “Dates and Dynasty in Earliest India” ( Motilal Banarsidas, 1973, pages 70-72).

Lines quoted by him from the Puranas (in Sanskrit):

Atha Dhuntumatah putro dharmatma Vegavan nrpah

Budho Vegavatah putras Trunabindur Bhudatmajah

Treat yugamukhe raja tritye sa babhuva ha

Kanya tu tasya Dravida mata visravas tu sa

 

Dasaratha’s daughter in Egypt

We have several references to Indian queens marrying even foreigners. Mittanni  king  Tushratta  1354 BC (Of Indian origin, but ruled Syria and Turkey) gave his sister Ghilukhipa and his daughter Tadukhipa in marriage to the Egyptian king Amenhotep III. He wrote ten letters to the Egyptian king and all are preserved in clay tablets in Cuneiform script. Anyone who needs the interesting letters can google and find them in websites like Wikipedia.(There were four or five Dasarathas who ruled various parts of India).

Early in the fifth century BC in South India, Pandyan girls were “exported” to Sri Lanka in hundreds. When the banished Indian king Vijayan landed in Sri Lanka, he or his ministers could not find girls of royal blood for marriage. They sent an SOS to the Pandyan king. He tomtomed and assembled all the girls and sent them in bulk to Sri Lanka. Mahavamsa  which gives the history of Sri Lanka narrated it with all the minute details.

The Pandava prince Arjuna also travelled widely and married women of different races according to Mahabharat. There are even folk dances in Tamil Nadu about his wedding to Alli Rani. Dridharashtra married Gandhari from Kandahar of Afganistan. Dasaratha’s wife Kaikeyi was from Iran –Afgan border. Rama’s wife  Mythili was from Mithila on the border of India-Nepal.

Ravana was called a Southerner (Thennavan) in Maduraikanchi written 2000 years ago. He married lot of women and wanted to marry Sita as well. It was the custom of Indian kings to marry from different countries or regions for political gains.

Chandra Gupta Maurya married daughter of Selucas Nicator, the Greek general. Agastya travelled to South East Asia and married a Cambodian girl and founded a Hindu empire which lasted for 1300 years.(Agastya of Rig Veda is different seer who married another princess Lopamudra).

The most famous Indian poet Kalidasa says that kings from various regions of India including the Pandyan King came for the swayamvaram of Indumati. Swayamvaram is the ceremony where a royal princess selects her future husband.

Gujarati-Pandya Contacts

The first king of modern Madurai , Malayadwaja Pandyan married the daughter of a Surasena king, probably from Gujarat. His consort’s name was Kanchanamala. She was the mother of great queen Meenakshi in whose name the world famous Meenakshi temple was built. (Please read my article The Wonder That was Meenakshi Temple). Lord Sundareswara married Meenakshi.

The Jain literature gives very realistic accounts of sea voyages. The “Avasya Churni” informs us that there were regular sailings from Madurai to Sourashtra (Gujarat). It is mentioned in the story that the ruler of Madurai PANDUSENA, had two daughters, who while sailing to Sourashtra, met with a shipwreck in a storm. They prayed to Lord Shiva and Lord Skanda for their protection (Ref. Trade and Trade Routes in Ancient India by Moti Chandra). It is interesting to note that Shiva and Skanda are believed to have sat at Tamil Sangam 2000 years ago. Commentators on Sangam Tamil literature gave us more details in their commentaries. More over 2300 year old inscriptions in and around Madurai confirms the historicity of Madurai.

Boat City and Matsyavatar

Tamil and Sanskrit literature confirm that the first Avatar of Lord Vishnu happened at the southern part of India in the remotest period of history. The Pandyan king who ruled at that time was Sathyvrata. The most famous seventh century Saivaite saint Gnana Sambhandhar also sang about the great floods happened in the past and his town Sirkazi survived this catastrophe giving the name Boat City (Thoni Puram/ Noah’s Ark) to his native place (Ref. Matsyapurana in Sanskrit and Thevaram In Tamil).

All the above facts demolish the fake Aryan-Dravidian divisions. Indians were free to move to any part of the country to marry and maintain unity of the country. There was no mention of Aryan, Dravidian conflicts in the Tamil and Sanskrit literature.

***********************

 

முதல் திராவிட ராணி:கி.மு.1320

Kerala Royal Lady-Painting by Raja Ravivarma

திராவிடா என்ற ஒரு பெண்ணின் பெயர் மிக மிகப் பழைய பெயராக சம்ஸ்கிருத இலக்கியத்தில் இடம்பெறுகிறது. இவர் திராவிட நாட்டிலிருந்து சென்ற அரச குலப் பெண்ணாக இருக்க வேண்டும். இவர் த்ருணபிந்து என்பவரின் மகள். விஸ்ரவஸ் என்பவரின் தாய். இந்த வம்சங்களை ஆராய்ந்து பர்ஜிட்டர் (parjiter)  போன்ற புராண ஆராய்ச்சியாளருடன் ஒப்பிடும்  ஆர்.மார்ட்டன் ஸ்மித் (R. Morton Smith: Dates and Dynasties in Ancient India, Motilal Banarsidas)  இப்படி வரிசைப்படுத்துகிறார்.

த்ராவிடா—விஸ்ரவஸ்—விசால—ஹேமசந்திர—உசந்திர—தூம்ராஸ்வ—ஸ்ரீஞ்சய—சஹதேவ—க்ர்சாஸ்வ—சோமதத்த—ஜனமேஜய—ப்ரமாதி

ப்ரமாதி என்ற மன்னன் தசரதனின் தந்தையான அஜன் காலத்தவன். மார்ட்டன் ஸ்மித் கணக்குப்படி த்ருண பிந்துவின் காலம் கி.மு.1320. இந்த அரசர் வரிசை புராணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் சுமேரிய, பாபிலோனிய, எகிப்திய கதைகளிலுள்ள மன்னர்களுக்கெல்லாம் காலம் கணித்த பின்னரும் நாம் மட்டும் புத்தர் காலம் (கி.மு ஆறாம் நூற்றாண்டு) முதல் வெள்ளைக்காரர் எழுதிய சரித்திரத்தையே இன்று வரை படித்து வருகிறோம். உண்மையில் ராமர், தசரதர் காலம் எல்லாம் இதற்கும் முன்னிருக்க வேண்டும். ஆனால் மார்ட்டன் ஸ்மித் , பர்ஜிட்டர் போன்றவர்கள் ஒவ்வொரு மன்னனுக்கும் 20 முதல் 30 ஆண்டு மட்டுமே ஒதுக்கியும் கூட அவர்கள் காலம் கி.மு.1300ஐ ஒட்டிச் செல்கிறது!

ஆனால் இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. விஜயன் என்ற மன்னன் இந்தியாவின் ஒரிஸ்ஸா/ வங்காளப் பகுதிலிருந்து நாடு கடத்தப் பட்டு இலங்கையை அடைந்தவுடன் அவனுக்கும் அவனுடைய மந்திரிகளுக்கும் மணம் முடிக்க பெண்கள் இல்லை. பாண்டிய நாட்டுப் பெண்கள்தான் அங்கு சென்று அவர்களைக் கல்யாணம் செய்துகொண்டனர் என்று இலங்கை வரலாற்றைக் கூறும் மஹாவம்சம் என்ற நூலில் உள்ளது. இது நடந்தது கி.மு ஐந்தாம் நூற்றாண்டு.

மன்னர்கள் பல நாட்டுப் பெண்களை மணப்பது தொன்று தொட்டு நடந்துவருகிறது. காந்தார (ஆப்கனிஸ்தான்) நாட்டுப் பெண்ணான காந்தாரியை திருதராஷ்ட்ரன் மணந்தான். கேகய (ஆப்கனிஸ்தான் /ஈரான்) நாட்டுப் பெண்ணான கைகேயியை தசரதன் மணந்தான். செல்யூகஸ் நிகடார் என்ற கிரேக்க மன்னனின் மகளை மௌர்ய சந்திர குப்தன் மணந்தான்.

மஹாபாரத வீரன் அர்ஜுனன் மணக்காத இனமே இல்லை. அர்ஜுனன் பாண்டிய குமாரியை மணந்ததாக நாட்டுபுற பாடலும் உண்டு. (அர்ஜுனனும் வந்துவிட்டார் அல்லி ராணி).

2000 ஆண்டுகளுக்கு முன் அகத்திய மகரிஷி தென்கிழக்காசிய ( நாக நாட்டு) மங்கையை மணந்து அங்கு இந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். அது முஸ்லீம்கள் வரும் வரை 1300 ஆண்டுகளுக்கு நீடித்தது. ஆனால் லோபமுத்ரா என்ற பெண்ணை மணந்த ரிக் வேத அகத்தியர் வேறு. மணி மேகலை கதையிலும் இதே போல நாகநாட்டு மங்கை பீலிவளையைச் சோழ மன்னன் கிள்ளிவளவன் மணந்த வரலாறு வருகிறது.

பாண்டியர் –குஜராத்தி தொடர்பு

“ஆவஸ்யக சூர்னி” என்ற சமண மத நூல் ஒரு அரிய தகவலைத் தருகிறது. மதுரைக்கும் சவுராஷ்ட்ர தேசத்துக்கும் (குஜராத்தின் ஒரு பகுதி) இடையே தொடர்ந்து கப்பல் போக்குவரத்து இருந்ததாகவும் பாண்டு சேனன் என்ற மதுரை மன்னன் தனது இரண்டு மகள்களுடன் சென்றபோது புயல் காற்று வீசி கப்பல் உடைந்தவுடன் முருகனையும் சிவனையும் வேண்டிக் கொண்டதாகவும் கூறுகிறது. முருகனும் சிவனும் தமிழுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதோடு அவர்கள் இருவரும் தமிழ் சங்கத்தில் தமிழ் ஆராய்ந்ததாகவும் நாம் படிக்கிறோம். ஆக, இது சங்க காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்றும் கருதலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற மன்னன் கடல் பயணத்தில் இறந்ததையும் நினைவிற்கொள்ள வேண்டும்.

மதுரை மன்னன் மலயத்வஜ பாண்டியன் சூர சேன (குஜராத்) மன்னன் மகளான காஞ்சன மாலாவை மணந்து மீனாட்சியைப் பெற்றெடுத்தான். இதிலிருந்துதான் தற்கால மதுரையின் வரலாறே துவங்குகிறது. மதுரையைச் சுற்றி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகள் இருப்பதைக் கருத்தில் கொண்டால் மலயத்வஜன் காலமும் 2000 ஆண்டுகளுக்கு முந்தியதே.

(திராவிடம் என்பதை இப்போது அரசியல்வாதிகள் பயன்படுத்தும் சொல்லுடனும், வெளிநாட்டார்,  நம் மீது திணித்த ஆரிய திராவிடவாதச் சொல்லுடனும் குழப்பிக் கொள்ளக் கூடாது. சங்க இலக்கியத்திலும் பழைய வடமொழி நூல்களிலும் ஆரியர் என்பது முனிவர்கள் வாழும் பகுதி, வட நாடு, பண்பாடுமிக்கவர்கள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. திராவிடம் என்பது தென் பகுதியைக் குறிக்கும் சொல். இப்போது ஆங்கிலத்தில் மத்திய கிழக்கு, தூரக் கிழக்கு என்றெல்லாம் பெயரிட்டது போல இது ஒரு நிலவியல் சொல்.)

தசரதன் எழுதிய கடிதங்கள்

எகிப்து நாட்டு அரசனுக்கு இரண்டு பெண்களை மணம் முடித்த தசரதன் (Tushratta கி.மு.1354) என்ற மன்னனின் கடிதங்கள் மிகவும் புகழ் வாய்ந்த கடிதங்கள். அவை 3500 ஆண்டுகளுக்கு முன் எகிப்திய மன்னனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள். இவை விக்கி பீடியா போன்ற தளங்களில் முழு விவரங்களுடன் கிடைக்கும். மிட்டன்னி மன்னனான தசரதன் தனது சகோதரி ஜிலுகிபாவையும்(Gilukhipa), மகள் ததுகிபாவையும்(Tadukhipa) எகிப்பதிய மன்னன் மூன்றாம் அமணதேவனுக்கு( Amenhotep III)  மணம் முடித்தான். இதற்குப் பின் அவன் எழுதிய 10 கடிதங்கள் மிகவும் சுவையானவை. இப்பொது கியூனிபார்ம் எழுத்தில் மியூசியத்தில் உள்ளன. நமக்குத் தெரிந்து 4, 5 தசரதன்கள் இருப்பதால் இவர் ராமாயண தசரதனுக்கு முந்தியவரா பிந்தியவரா என்பது ஆய்வுக்குரிய விஷயம். மிக மிகப் பழமையான கலப்பின கல்யாணம் இதுதான். எகிப்து நாட்டுக்கே மிஸ்ரம் (கலப்பின) நாடு என்றுதான் பெயர்.

வட மொழி தென் மொழி நூல்கள் ஒரு உண்மையை மறைக்காமல் ஒத்துக் கொள்கின்றன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்சாவதாரம் தென்னாட்டில்தான் நடந்தது என்ற கதை வடமொழிப் புராணங்களிலேயே உள்ளது. திருஞான சம்பந்தரும் அவர் பிறந்த சீர்காழியைத் “தோணிபுரம்” (Boat City) என்றும் பிரளய காலத்தில் தோனி (Noak’s Ark) ஒதுங்கிய இடம் என்றும் பாடுகிறார். கடல் கோளும் சுனாமியும் சங்க இலக்கியத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில் தென்னாட்டு / திராவிட ராணிகள் பல நாடுகளுக்குச் சென்றது உண்மையே என்று அடித்துக் கூறலாம்.

தமிழ் இலக்கியங்களில் தென்னவன் என்ற சொல் யமனையும் பாண்டியனையும் ராவணனையும் குறிக்கும். இலங்கை ராவணன் , மிதிலைப் (பீஹார்- நேபாள எல்லை ) பெண்ணான சீதையைக் குறிவைத்ததும் இதனால் அன்றோ. ராமனுக்கெல்லாம் முன்னோனான அஜன் — இந்துமதி ஸ்வயம்வரத்துக்கு பாண்டிய மன்னனும் வந்ததாக புகழ் பெற்ற கவிஞன் காளிதாசனும் பாடுகிறான். அவனும் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன். ஆக இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு வழக்குதான்.

*****************************

தாவரங்களின் அறிவு!- Part 2

தாவரங்களின் அறிவு! -2

ச.நாகராஜன்

பேராசிரியர் மங்குசா தாவரங்கள் தங்களுடைய தகவல் தொடர்பை இரசாயனப் பொருள்கள் மூலம் பரிமாறிக் கொள்கின்றன என்கிறார்!  எச்சரிக்கை அறிவிப்பு,ஆரோக்கிய உணர்வு போன்றவற்றை அறிவதற்கு நம்மிடம்   அகராதிச் சொற்கள் இருப்பது போல அவைகளிடமும் உள்ளன என்பது அவரது கணிப்பு!

ஆனால் மங்குசாவிற்கு முன்னாலேயே சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே நம் நாட்டைச் சேர்ந்த சர் ஜகதீஸ் சந்திர போஸ் தாவரங்களுக்கும் உயிர் உண்டு, உணர்ச்சிகள் உண்டு என்பதைச் சோதனைகள் வாயிலாகச் செய்து காட்டி நிரூபித்திருக்கிறார்!

வங்காளத்தில் பிறந்த ஜகதீஸ் சந்திர போஸ் (பிறப்பு 18-11-1858 மறைவு 23-11-1937) இங்கிலாந்தில் படித்தவர். தாய்நாடு திரும்பியவுடன் கல்கத்தா பிரஸிடென்ஸி கல்லூரியில் விரிவுரையாளரானார். 1894ல் கல்லூரியில் பாத்ரூமுக்கு அருகில் இருந்த ஒரு சிறிய அறையைத் தன் சோதனைச்சாலையாக மாற்றித் தன் ஆராய்ச்சிகளைத் தொடங்கலானார். மார்க்கோனி ரேடியோ அலைகளைக் கண்டுபிடிக்கும் முன்னரே 1895ம் ஆண்டு அவர் இதைப் பொதுமக்களிடம் பகிரங்கமாக செயல்முறை வடிவில் நிரூபித்துக் காட்டினார்.

இiதற்காக அவர் ஒரு விசேஷ கருவியை உருவாக்கினார். இதற்கு ரெஸோனேட் ரிகார்டர் (Resonate Recorder) என்று பெயர். இந்தக் கருவி தாவரங்களுக்கும் நாடித்துடிப்பு உண்டு என்பதைத் துல்லியமாக நிரூபித்துக் காட்டியது! இந்தச் சோதனையை நடத்துவதற்காக மிகுந்த கவனத்துடன் அவர் ஒரு செடியை வேருடன் தோண்டி எடுத்து அதைத் தன் கருவியுடன் இணைத்தார். செடியை புரோமைட் அடங்கிய ஒரு பாத்திரத்தில் அப்படியே தண்டுடன் வைத்தார்.

கடிகாரப் பெண்டுலம் அங்கும் இங்கும் ஊசலாடுவது போல ஆடிய அந்தக் கருவியின் முள் திடீரென்று சீரற்றதாக மாறி வேகமாக அங்கும் இங்கும் ஆடியது. பிறகு வேகமாக நடுநடுங்கி ஆடத் துவங்கியது. சடக்கென ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நின்றது. அதன் உயிர் போனதை இவ்வாறு அது தெரிவித்தது! விஷத்தால் அதன் உயிர் போனது.

1900ம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒரு மகாநாட்டிலும் பிறகு இங்கிலாந்திலும் தனது சோதனைகளை அவர் நடத்திக் காட்டினார்.செடிகள் வெட்டப்பட்ட போது அவைகள் துடிதுடித்து அழுவதை அவர் காண்பித்த போது உலகமே அதிசயித்தது!

போஸ் காட்டிய வழியில் இப்போது அறிவியல் வெகுவாக வளர்ந்து விட்ட இன்றைய உலகில் பல்வேறு விதமான அதிசய சோதனைகளை இன்னொரு விஞ்ஞானிச் செய்து காட்டி வருகிறார். இவர் பெயர் க்ளீவ் பாக்ஸ்டர். (Cleve Backster)இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.

லை டிடெக்டர் (Lie detector) என்ற பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவி பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஒரு நாள் இந்த லை டிடெக்டரை ட்ராகன் ட்ரீ (Dracaena)எனப்படும் அரக்க மரத்துடன் அவர் இணைத்துப் பார்த்தார். வேரில் தண்ணீர் ஊற்றப்படும் போது இலைகள் அதை எவ்வளவு நேரத்தில் உணர்கின்றன என்று கண்டுபிடிப்பதே அவர் ஆய்வின் நோக்கம்.

கொள்கை ரீதியாகப் பார்த்தால் ஒரு தாவரமானது நீரை உறிஞ்சியவுடன் தடையைத் (Resistance) தளர்த்திக் கடத்தலை (Conductivity) அதிகரிக்க வேண்டும். ரிகார்டரில் இதற்கான வளைவு மேல் நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால் உண்மையில் நடந்ததோ வளைவு ரிகார்டரில் கீழ் நோக்கிச் சென்றது!

அதாவது லை டிடெக்டரை ஒரு மனிதனுடைன் இணைத்துச் சோதனை செய்யும் போது அது அவனது மூட் எனப்படும் நிலைகளுக்கு ஏற்றார் போல கருவியில் வெவ்வேறு வளைவுகளைக் காண்பிக்கும்.

ட்ராகன் ட்ரீயில் ஏற்பட்ட விளைவு  மனிதனிடம் ஏற்படும் நிலை மாற்றத்தால் உருவாகும் வளைவுகளைப் போல அமைந்திருப்பதைக் கருவி உணர்த்தியது! நீரை உறிஞ்சியவுடன் அது சந்தோஷமாக இருப்பதை அது காட்டியது!

ஈ.எஸ்.பி. (ESP- Extra Sensory Perception) எனப்படும் அதீத புலன் உணர்வு கூட தாவரத்திற்கு உண்டு. இதையும்  நிரூபிக்கும் வகையில் அவர் பல சோதனைகளை நடத்திக் காட்டினார்!

ஒரு மனிதனை திடீரென பயமுறுத்தினால் அவனிடம் அது ஏற்படுத்தும் விளைவு அவனை நிலைகுலையச் செய்வதன் மூலம் காண்பிக்கும். உடனடி எதிர்விளைவைக் காண பயமுறுத்திப் பார்ப்பது ஒரு சிறந்த வழி என்பதை பாக்ஸ்டர் உணர்ந்திருந்தார்.

ஆகவே செடியினுடைய இலைகளை சூடான காப்பியில் அமுக்கிப் பார்த்தார். ஆனால் விளைவுகள் ஏதும் உடனடியாகத் தெரியவில்லை. சரி, இன்னும் சற்றுக் கடுமையான சோதனையைச் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.

இலைகளை எரித்து விட்டால் என்ன என்று எண்ணி அவர் ஒரு தீப்பெட்டியை எடுத்தது தான் தாமதம், லை டிடெக்டருடன் இணைக்கப்பட்டிருந்த கிராப் பேப்பரில் ஒரு வளைவு வேகமாகத் தோன்றியது! கொளுத்தப்பட்ட தீக்குச்சியுடன் அவர் இலைகளை நெருங்கியவுடன் இன்னொரு வளைவு இன்னும் வேகமாக உருவானது!

நிச்சயமாக ஒரு மனிதன் தன்னை எரிக்கப்  போகிறான் என்ற உணர்வு செடிக்கு ஏற்பட்டு உறுதியானவுடன் அது தன் பயத்தை வேகமாகக் காட்டியது.

ஆனால் எரிப்பது போல பாவனை செய்தாலோ அல்லது சற்று தாமதப்படுத்தினாலோ அது தன் பயத்தைக் காண்பிக்கவில்லை! ஆகவே மனித மனதில் தோன்றும் உண்மையான எண்ணத்தை புலன் கடந்த அதீத புலனாற்றலால் அது உணர்கிறது என்பதை அவர் கண்டார். இந்த அதிசய அனுபவம் அவரை மேலும் பல சோதனைகளைச் செய்ய வழி வகுத்தது!

மேலும் சோதனைகள் தொடரும்!

 

தாவரங்களின் அறிவு!

ச.நாகராஜன்

 

பேராசிரியர் ஸ்டீபனோ மங்குசா இன்று உலகிலுள்ள தாவரங்களுக்கான ஒரே சோதனைச்சாலையை நடத்தி வருபவர்!

 

தாவரங்களுக்கான ‘ப்ளாண்ட் நியூரோ பயாலஜி’ எனப்படும் தாவர மூளை அறிவியல் துறையில் உள்ள இந்தப் பன்னாட்டுச் சோதனைச்சாலை இத்தாலியில் ப்ளோரென்ஸ் நகருக்கு அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளது. மங்குசாவும் அவரது ஒன்பது சகாக்களும் தாவரங்களைப் பற்றிய பல மர்மங்களை விடுவிக்கும் ஆராய்ச்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உடலியல், தாவர மூளை உயிரியல்,சுற்றுப்புறச்சூழல் இயல் ஆகிய மூன்று துறைகளையும் கலந்து செய்யும் அபூர்வமான ஆய்வு இவர்களுடையது.

 

“பிரச்சினைகளைத் தீர்ப்பது தான் அறிவு” என்று அறிவிற்கான இலக்கணம் வரையறுக்கப்படுமானால்  தாவரங்கள் நமக்குக் கற்பிக்க ஏராளமானவற்றைத் தங்கள் வசம் கொண்டுள்ளன என்கிறார் மங்குசா!

 

“மூளை என்ற ஒரு அங்கம் இல்லாமலேயே அவை ஸ்மார்ட்டாக அற்புதமாக உணர்கின்றன! எப்படி வளர்வது, எப்படி சூழ்நிலைக்கேற்ப மாறிக்கொள்வது,எப்படி முன்னேறுவது என்பதையெல்லாம் இவைகள் காண்பிப்பது அலாதி ஆச்சரியத்தை நமக்குத் தருகின்றன” என்று மேலும் அவர் கூறுகிறார்!

 

அறிவு என்பது மூளையினால் மட்டுமே அளக்கப்படும் ஒன்று இல்லை என்பது அவரது திடமான நம்பிக்கை.

 

வெறும் கறிகாய் வகைத் தாவரம் தானே என்று செடிகொடிகளை அனைவருமே அலட்சியம் செய்கின்றனர்.அவற்றிற்கு உரிய மரியாதையைத் தருவதில்லை.ஆனால் நவீன தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் ரொபாட்டுகளுக்கு இன்று எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ அந்த அளவு முக்கியத்துவம் வயல்வெளிகளில் அதேபோல தாவரங்கள் அதிசய செயல்களைப் புரிவதால் உண்டு என்பது மங்குசா தரும் புதிய விவரம்.

 

உதாரணமாக இன்று இவர்களது சோதனைச்சாலையில் நடைபெறும் ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம்.தாவர ஆராய்ச்சியின் விளைவாக இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ‘ப்ளாண்டாய்ட்’ தான்  செடியின் தண்டானது தகவலை அனுப்புவது போல இயந்திர வகையில் ஒன்றான பாட்ஸ் என்பவை  செவ்வாய் கிரகத்தின் தரையில் போடப்பட்டு அங்கிருந்து பூமிக்கு தகவலை அனுப்ப முடிவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

 

பல் டாக்டர்களின் வாசல் அறைகளை அலங்கரிக்கும் வெறும் அலங்காரப் பொருளாக செடிவகைகள் இருந்த காலம் மலையேறிப் போனது என்று கிண்டலடிக்கிறார் மங்குசா.

 

சார்லஸ் டார்வினின் தாவரங்களின் இயங்கு சக்தி என்ற போட்டோட்ராபிஸம் பற்றிய பேப்பர் 1880ல் வெளியிடப்பட்டது.ஆனால் தாவரங்களின் இந்த அறிவு பற்றிய விஷயத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் மெதுவாகத்தான் உலகில் பரவலாயிற்று.

 

மனிதர்களுக்கு உள்ளது போன்ற உணர்வுகள் தாவரங்களுக்கு உள்ளதா என்பது பற்றி மங்குசா தெளிவாக விளக்குகிறார்.

 

‘தி சீக்ரட் லைப் ஆ·ப் ப்ளாண்ட்ஸ்’ என்ற திரைப்படம்  ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் வெளியிடப்பட்ட போது உலகமே வியந்தது.தாவரங்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும்  உள்ளன என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டிய போதிலும் அறிவியல் விஞ்ஞானிகள் ‘அறிவுள்ள தாவரங்கள்’ பற்றிப் பேசுவதைக் கூடுமான வரையில் தவிர்த்தே வந்தனர்!

சிக்னல் அனுப்புவது, அனுப்பியதை உணர்வது ஆகியவை பற்றிய விஷயங்கள் மூளைக்கு இருக்கும் திறனில் உள்ள அறிவு போல தாவரங்களுக்கும் உள்ளது என்பது பற்றிய ஏராளமான ஆராய்ச்சி முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன!

 

மங்குசா சர்ச்சைக்குரிய தாவர மூளை உயிரியல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ‘ப்ளாண்ட் நியூரோபயாலஜி’ என்ற இந்த வார்த்தையை அவர் பயன்படுத்துவதற்குக் காரணம் மனித நரம்பு அமைப்பில் உள்ளது போலவே தாவரங்களுக்கும் அமைப்பு உள்ளது தான் காரணம்!

 

பத்து லட்சம் யூரோக்கள் ( ஒரு யூரோ என்பது சுமார் ஐம்பத்தைந்து ரூபாய்கள்) இதுவரை இந்த ஆய்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐந்து லட்சம் யூரோக்கள் வழங்கப்பட உள்ளது. இவ்வளவு பணம் இந்த ஆராய்ச்சிக்குக் கொட்டப்படுவானேன்?

 

இயற்பியல் விஞ்ஞானியான பேராசிரியர் போலோ ப்ளாஸி,” இந்த ஆராய்ச்சி ஒரு போலி அறிவியல் ஆராய்ச்சியாக இதுவரை (சிலரால்) கருதப்பட்டு வந்த போதிலும் இனிமேல் அப்படி கருதப்பட நிச்சயமாக முடியாது” என்கிறார்.

 

செடிகளின் மீது இசையின் தாக்கம் நிரூபணமான ஒன்று!  இப்போது புவி ஈர்ப்பு விசையை உணர்வது, தொலைதூர தகவல்களை சிக்னல் மூலம் அனுப்புவது ஆகியவற்றில் தாவரங்களின் திறன் வியக்க வைக்கும் அளவில் உள்ளது நிரூபணமாகி விட்டது.

 

அடுத்த ஆண்டு ஜப்பானில் பன்னாட்டு விஞ்ஞானிகளின் குழு தாவரங்களின் அறிவு பற்றி உலகளாவிய அளவில் கூடி விவாதிக்கப் போகிறது!இந்த ஒன்றே இதன் முக்கியத்துவத்திற்குச் சரியான சான்று ஆகும்!

 

-தொடரும்

(என் சகோதரர் ச. நாகராஜன் எழுதும் கட்டுரைகளும் இங்கே தொடர்ந்து வரும்)

 

 

 

நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்

இந்தியா ஒரு அதிசிய நாடு. செல்வக் கொழிப்பும் ஆன்மீகச் சிறப்பும் கொடிகட்டிப் பறக்கும் நாடு என்று கேள்விப்பட்டவுடன் மாமன்னன் அலெக்ஸாண்டருக்கு ஒரே துடிப்பு. எப்படியாவது இந்தியாவுக்குப் போக வேண்டும். அங்குள்ள சந்யாசிகளின் காலடியில் உட்கார்ந்து ஆன்மீகப் பாடம் கற்க வேண்டும். முடிந்தால் சந்யாசிகளைக் கூடவே அழைத்து வர வேண்டும் என்று திட்டமிட்டான். வரும் வழியில் உள்ள நாடுகளை ஒவ்வொன்றாக வென்றான். வட மேற்கு இந்தியாவில் போரஸ் என்ற புருஷோத்தமனை வெல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மகதப் பேரரசின் மாபெரும் படை வளத்தை ஒற்றர்களின் மூலம் அறிந்தவுடன் செய்ய முடியாத ஒரு செயலில் இறங்கிவிட்டோமே என்று எண்ணி கிரேக்க நாட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தான்.

இந்திய சந்யாசிகளைக் கூட்டிக்கொண்டு போக அவன் பல முயற்சிகள் செய்ததை அவனுடன் வந்த , அவனுக்குப் பின் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். மிகவும் அற்புதமான, சுவையான விஷயங்கள் அவை.

அலெக்ஸாண்டர் சந்தித்த சாமியார்களை அவர்கள் அம்மண சாமியார்கள் ஜிம்னோசோபிஸ்ட்(Gymnosophists) என்று எழுதிவைத்தனர். இவர்கள் யார்?

 

இவர்கள் சமணர்களில் ஒரு பிரிவினரோ என்று நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வந்தனர். ஆனால் இவர்கள் நாகா சாது சன்யாசிகள் என்பது இப்போது உறுதியாகிவிட்டது. உலகிலேயே பெரிய திருவிழாவான கும்பமேளாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இமய மலைக் காட்டுக்குள் இருந்து வெளியே வரும் அபூர்வ நிர்வாண சாமியார்கள் இவர்கள். மன்னருக்கு எதிராக சபா (Sabhas)என்பவரை எழுப்பி புரட்சி செய்யச் சொன்ன இந்து சந்யாசிக்கள்.

2300 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடந்த அற்புதமான உரையாடலை ப்ளூடார்ச்(Plutarch கி.பி 46-120) என்பவர் எழுதிவைத்தார். அலெக்ஸாண்டர் முதலில் கலனஸ் (Calanus) என்ற சாதுவைச் சந்தித்தார். மன்னன் கூறியதை ஏற்க மறுத்து வேத மந்திரங்களை உச்சரித்தவாறு அந்த சாது தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார். இறப்பதற்கு முன் பாபிலோனில் அலெக்ஸாண்டர் இறந்துபோவார் என்று ஆரூடமும் கூறினார். அலெக்ஸாண்டருக்கு பயம் வந்துவிட்டது. கலனஸின் குருவான டண்டாமிஸ் (Dandamis) காலடியில் விழுந்தார். கிரேக்க யாத்ரீகர்களுக்கு நம்முடைய சம்ஸ்கிருத பெயர்கள் பரிச்சயம் இல்லாததால் பெயர்கள் உரு மாறிவிட்டன. டண்டாமிஸ் என்பது தண்டி சுவாமிகள் என்று அறிஞர்கள் ஊகிக்கின்றனர்.

 

மன்னரின் சுவையான 10 கேள்விகள்

மஹா பாரதத்தில் ஒரு சுவையான கதை “பேயின் கேள்விகள்” எனப்படும் “யக்ஷப் ப்ரஸ்னம்” ஆகும். தர்மபுத்திரன் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறவே பேயாக மரத்திலிருந்த யக்ஷன் ஏனைய நான்கு பாண்டவர் களையும் உயிர்ப்பிக்கிறான். இதே பாணியில் அலெக்ஸாண்டரும் பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லாதவர்கள் இறக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார். இதோ ப்ளூடார்ச் (கி.பி 46-120) சொல்லுவதைப் படியுங்கள்:

“பத்து அம்மண சாமியார்களை மன்னர் பிடித்துவரச் சொன்னார். நான் இப்பொழுது கேள்விகள் கேட்பேன். யார் முதலில் தவறான விடை சொல்லுகிறீர்களோ அவர்களை முதலில் கொல்லுவேன். உங்களுக்குள் வயதில் மூத்தவரே இந்தப் போட்டிக்கு நீதிபதி.”

அலெக்ஸாண்டரின் முதல் கேள்வி : உலகில் அதிகமான எண்ணிக்கை எது. உயிர் வாழ்கின்றவர்களா? இறந்தவர்களா?

இந்து சந்யாசியின் பதில்: உயிர் வாழ்கின்றவர்களே, ஏனெனில் செத்தவர்கள்தான் இப்போது இல்லையே!

கேள்வி 2: பூமியில் பெரிய மிருகத்தை உடையது கடலா? நிலமா?

பதில்: நிலமே. ஏனெனில் பூமி என்னும் நிலப் பரப்பின் ஒரு பகுதிதானே கடல்!

கேள்வி 3: மிகவும் தந்திரமுள்ள பிராணி எது?

பதில்: இது வரை மனிதனால் கண்டுபிடிக்க முடியாதது! (அவ்வளவு தந்திரம் இருப்பதால் இதுவரை மனிதன் கையில் அகப்படவில்லை!)

கேள்வி 4: சபாவை புரட்சி செய்யும்படி ஏன் தூண்டிவிட்டீர்கள்?

பதில்: வாழ்ந்தாலும் இறந்தாலும் மானத்துடன் இருக்கவேண்டும் என்பதால்!

கேள்வி 5: முதியது எது? இரவா? பகலா?

பதில்: நாள், ஒரு நாள் !

பதில் புரியாதபடி புருவத்தை நெறித்தார் அலெக்ஸாண்டர். கடினமான கேள்விகளுக்குக் கடினமான பதில்தான் வரும் என்றார் சந்யாசி.

கேள்வி 6: ஒரு மனிதன் அதிகமாக நேசிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?

பதில்: சக்தி வாய்ந்தவனாக இருந்தும் மற்றவர்கள் மனதில் அச்சத்தை உண்டுபண்ணாதவனே நேசிக்கப்படுவான் (அலெக்ஸாண்டருக்குப் புரிந்திருக்கும்!!!)

கேள்வி 7: மனிதன் கடவுள் ஆவது எப்போது?

பதில்: மனிதனால் செய்ய முடியாத செயற்கரிய செயல்களைச் செய்யும்போது !

கேள்வி 8: எது வலியது? வாழ்வா? சாவா?

பதில்: வாழ்வே. எத்தனை நோய்களை வளர்க்கிறது !

கேள்வி 9: ஒரு மனிதன் எத்தனை ஆண்டுகள் வாழ வேண்டும்?

பதில்: வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணாத வரைக்கும்.

கடைசி கேள்வி: ஓ, நீதிபதி சாமியாரே, இவர்களில் யார் தவறான விடை கூறியவர்?

பதில்:ஒருவரை விட ஒருவர் மிக மோசமான பதிலைக் கொடுத்தார்கள் !

அலெக்ஸாண்டர்: அப்படியா? இப்படி ஒரு திர்ப்பை வழங்கியதால் நீர்தான் முதலில் சாகப் போகிறீர்.

சந்யாசியின் பதில்: மன்னா ! முடியாது. நீ என்ன சொன்னாய்? முதலில் தவறான பதில் சொன்னவன் தானே கொல்லப்படுவான் என்று!!

 

இதை ப்ளூடார்ச் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவைத்தது நாம் செய்த புண்ணியமே!

 

எலிஸ் என்ற இடத்தைச் சேர்ந்த பைரோ என்பவர் அலெக்ஸாண்டருடன் வந்ததாகவும் நிர்வாண சாமியார்களிடம் பாடம் கற்று கிரேக்க நாட்டுக்குச் சென்று அவர்களைப் போல வாழ்க்கை நடத்தியதாகவும் டயோஜெனிஸ் லேர்சியஸ் (3 ஆம் நூற்றாண்டு கிரேக்க ஆசிரியர்) என்பவர் எழுதிவைத்தார். (இவர் ஆதி சங்கரர் அடிக்கடி பயன்படுத்தும் கயிறு-பாம்பு உவமையைப் பயன்படுத்தியதால் சங்கரரின் அத்வைதத்தை அறிந்திருந்தார் என்று “ஆதி சங்கரரின் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் என்ற கட்டுரையில் எழுதி இருக்கிறேன்).

***************

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு -பகுதி 2

Oicture shows Asoka’s Greek-Aramaic inscription at Kandahar,Kabul Museum

(Please read the first part of Greek-Tamil Connection before reading this)

கிரேக்க மொழியும் தமிழ், சம்ஸ்கிருத மொழிகள் போல அ-வில் துவங்கி ஒ-வில் முடிகிறது. முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பெரிய புலவர்களுக்கு தெய்வ என்ற அடைமொழியைக் கொடுப்பார்கள். இலக்கண மா மேதை பாணிணியை பகவான் என்ற அடைமொழி போட்டு பதஞ்சலி அழைக்கிறார். நாமும் தெய்வப் புலவன் என்று வள்ளுவனை அழைக்கிறோம். ஹோமரையும் தெய்வ ஹோமர் (Homer Theis) என்று கிரேக்கர் புகழ்வார்கள்.

 

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வலது பக்கத்தைப் புனிதமாகக் கருதுவார்கள். கடிகாரச் சுற்று முறையைக் கண்டு பிடித்தவர்களே இந்தியர்கள் என்பது எனது ஆய்வில் கண்ட முடிவு. கோவிலை வலமாகச் சுற்றவேண்டும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைய வேண்டும் ( மண மகளே மண மகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்ற சினிமா பாட்டை இப்பொழுதும் எல்லா திருமண அரங்குகளிலும் போடுகின்றனர்).

 

வலப் பக்கம் விழுந்த உணவைத்தான் புலி சாப்பிடும், இடப்பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் படிக்கிறோம். காளிதாசனும் தீ வலப் பக்கமாகச் சுழித்து எரிந்தது நல்ல சகுனம் என்று பாடுகிறான். ஹோமர் எழுதிய ஆடிசியிலும் வலது பக்கம் புனிதம் என்று (2-172) உள்ளது. லத்தீன் மொழியில் சினிஸ்டர் Sinister (இடது) என்றாலே தீயது என்று பொருள்.

 

பாண்டியோன் என்ற குழந்தையின் தலைமையில் வந்த ஒரு குழு ஏதென்ஸ் நகரில் குடி ஏறியதாக வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் ஹெரொடோட்டஸ் (Herodotus) கூறுகிறார். அவர்கள் கிரீட் (Crete) என்னும் தீவிலிருந்து வந்ததாகவும் கூறுகிறார். கிரேக்க நாட்டின் பழங்குடி மக்கள் டெர்மிலை (Termilai) என்றும் அவர் கூறுவார். இது த்ரமிளர்=தமிழர் என்ற சொல்லைப் போல உள்ளது

 

பழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தனிதனி பண்கள் இருந்தன. இவ் வழக்கம் கிரேக்கரிடையேயும் இருந்தது. அப்பண்களை தமிழ்ப் பண்களோடு ஒப்பிட்டவர்கள் சில ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். வாணிகத் தொடர்பினால் தமிழ்ப் பண்களைத் தழுவி அவர்கள் எட்டுக்கட்டி இருக்கலாம்.

 

இவை எல்லவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆங்கிலம்- தமிழ் மொழி ஒற்றுமையைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான சொற்கள் ஒரே மாதிரி இருப்பதை அறியலாம். ஆங்கிலமோ சம்ஸ்கிருதம் தொடர்புடைய இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தமிழுடன் எப்படி தொடர்பு வர முடியும்?

 

தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரே மூலம் இருந்தால்தான் இது நடக்க முடியும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்தால் பழைய மொழிக் கொள்கைகள் தகர்ந்துபோகும்.

(சாத்தூர் சேகரன் என்பவர் இது குறித்து ஆராய்ந்து பல புத்தகங்களில் எழுதியுள்ளார். அவரை 20 ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டி கண்டேன். அப்போது இது பற்றி எழுப்பிய கேள்விகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வருகிறது.)

 

உலகில் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசிய மொழியின் மிச்ச சொச்சங்கள் இப்பொழுதும் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன. இதனால் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சில சொற்களாவது ஒரே மதிரியாக இருக்கும். ஆனால் எண்கள். உறவு முறைகள், நான், நீ, அவன் அவள் போன்ற சொற்கள், முக்கியமான வினைச் சொற்கள் ஆகியன ஒன்றாக இருந்தாதான் நெருக்கம் அதிகம் என்று கருத முடியும்.

 

ஹிப்பொக்ரடீஸ், பிதகோரஸ் (Hippocrates, Pythagoras)  ஆகியோர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்திய மருத்துவ கணித சாத்திரங்களை அறிந்திருந்தனர். இதற்கான நல்ல ஆதரங்கள் கிடைத்துள்ளன.

பிதகோரஸ் மறு பிறப்பிலும் ஆத்மாவிலும் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் புத குரு என்று ஈ. போகாக் என்னும் அறிஞர் கூறுவார். அவர் எழுதிய ஆங்கிலப் (India in Greece by E Pococke published in 1851) புத்தகத்தில் நிறைய ஒப்புமைகளைக் காட்டுகிறார். அவர் இந்தியாவிலுள்ள பழங்கால இடப் பெயர்களை அதிகமாக ஒப்பிடுகிறார்.

 

ஒலிம்பிக்ஸ் (Olympics) போட்டி 2750 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் துவங்கியது. ஆனால் அதற்கு முன்னரே நாம் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசு கொடுத்தோம். இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரம் போன்ற இடங்களில் அரசர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போட்டிகள் நடந்தன. மகாபாரதத்தில் இது பற்றி விரிவான செய்திகள் இருக்கின்றன.

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸின் (Socrates) சீடர் பிளாட்டோ (Plato). அவருடைய சீடர் அரிஸ்டாடில்(Aristotle) . அரிஸ்டாடிலின் சீடர் அலெக்ஸாண்டர் (Alexander) . அவர் இந்தியா மீது படை எடுத்ததற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பும் தத்துவ ஞானச் சிறப்பும் தான் காரணம். இவை இரண்டிலும் அலெக்சாண்டருக்கு ஆர்வம் அதிகம். ஒரு சன்யாசியையாவது தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தலை கீழாக நின்றார். ஆனால் முடியவில்லை.

போரஸ் என்னும் மன்னனர் புருஷோத்தமனை வெல்லுவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு அவன் கொடுத்த பதில் அலெக்ஸாண்டாரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. போரஸின் வேண்டுகோளின்படியே அவரை மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தினார். இந்தியாவின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.

**************

கிரேக்க – தமிழ் மொழி தொடர்பு

உலகில் உள்ள பழைய மொழிகளில் கிரேக்க மொழியும் ஒன்று. தமிழை விட பழமையான நூலை உடையது. ஆனால் சம்ஸ்கிருதத்துக்கு மிகவும் இளைய தம்பி. தமிழில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் தொல்காப்பியம். அது கி.மு. முதல் நுற்றாண்டைச் சேர்ந்தது. கிரேக்க மொழியில் கிடைக்கும் பழமையான நூல்கள் ஹோமர் எழுதிய இலியட், ஆடிசி என்னும் இரண்டு இதிஹாசங்களாகும் அவை கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. சம்ஸ்கிருதத்தில் கிடைக்கும் மிகவும் பழைய நூல் ரிக் வேதம். அதன் காலம் கி.மு. 1500.

 

கிரேக்க மொழி இந்தோ- ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதாவது சம்ஸ்கிருத மொழியுடன் நெருங்கிய தொடர்புடைது. தமிழோ அதற்குச் சிறிதும் தொடர்பில்லாத திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. மஹா அலெக்சாண்டர் கி. மு.326-ல் இந்தியா மீது படை எடுத்த பின்னர்தான் கிரீஸ் நாட்டுக்கும் நமக்கும் தொடர்பு ஏற்பட்டதாக சிலர் எழுதிவைத்தனர். அது தவறு. அதற்கு முன்னரே தமிழ் சொற்கள் அந்த மொழியில் கலந்துவிட்டன. வட மொழிச் சொற்களும் உள்ளன. ஆனால் கிரேக்கமும் சம்ஸ்கிருதமும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால் சம்ஸ்கிருதத்தை யாரும் பெரிது படுத்துவதில்லை.

மொழி ஒரு புறம் இருக்க, பழக்க வழக்கங்களிலும் இதிஹாசக் கதை விஷயங்களிலும் இந்தியா கிரேக்க ஒற்றுமை பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதலில் மொழித் தொடர்புகளைக் காண்போம். இவைகள் அலெக்ஸாண்டர் படை எடுப்புக்கு முன்னரே கிரேக்க மொழியில் உள்ள்வை. பல சொற்கள் இலியட், ஆடிசி நூல்களில் காணப்படுகின்றன.

 

இதற்கு கீழ்கண்டவாறு விளக்கங்கள் கூறலாம்:

  1. நாம் வட மொழி, தென் மொழி சொற்கள் என்று கருதுவன எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை. அதனால்தான் கிரேக்க மொழியில் பழந்தமிழ் சொற்களும் பழைய சம்ஸ்கிருத சொற்களும் உள்ளன.
  2. அல்லது நாம் பழந்தமிழ் சொற்கள் என்று கருதுபவையும் சம்ஸ்கிருத சொற்களே. அதனால்தான் நீர் என்ற சொல் கூட ரிக் வேதத்திலும் கிரேக்க மொழியிலும் உள்ளது.
  3. அல்லது இரு வேறு மொழி பேசுவோர் வாணிபம் செய்யச் சென்றதால் அங்கே மொழிக் கலப்பு ஏற்பட்டிருக்கலாம்.

நான் முதலில் உள்ளதையே நம்புகிறேன். தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திருந்து வந்தவையே. கிரேக்க நாட்டில் பல நாட்டு மக்கள் குடி ஏறி இருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

 

இந்திய-கிரேக்க உறவு, மொழியோடு மட்டும் நிற்கவில்லை என்பதை பல கோணங்களில் விளக்குவேன்.

PALEO: (Palaeo botany, Palaeontology ).இது பழைய என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

TELE: தொலை தூரம், தொலைக் காட்சி, தொலை பேசி என்பதெல்லாம் டெலி என்பதுடன் தொடர்புடையவை. டெலி என்பதை நாம் தொலை(வு) என்று சொல்கிறோம்.

NEREIDS: நெரைட்ஸ் என்பது நீர்த் தேவதைகளைக் குறிக்கும். நாராயணன் என்பவன் நீரில் மிதப்பதால் அப் பெயர் பெற்றான். விஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது கடலில் மிதப்பதாக இந்து மத புராணங்களும் வேதமும் கூறும். நீர் என்னும் சொல் ரிக் வேதத்திலும் கிரேக்கத்திலும் உள்ளது. இதை தமிழிலிருந்து சம்ஸ்கிருதம் கடன் வாங்கியதாக சிலர் எழுதிவைத்தனர். அது தவறு.

தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்திருந்து வந்ததால் இரு மொழிகளில் மட்டும் இன்றி கிரேக்க மொழியிலும் நீர் உள்ளது. ஒரு சொல் கிரேக்கத்திலும் சம்ஸ்கிருதத்திலும் இருந்தால் அது இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று மொழிநூலார் முத்திரை குத்தி விடுவார்கள். இனி இதை திருத்தி எழுத வேண்டும்.

ORYZA SATIVA: அரிசியின் (botanical term) பெயர். இது அலெக்ஸாண்டர் காலத்துக்கு முன்னமே கிரேக்கத்தில் உள்ளது.

CLEPTO: க்லெப்டோ என்பது களவு என்றாகும். ப –வும் வ- வும் உலகிலுள்ள ஏராளமான மொழிகளில் இடம் மாறும். (இது பற்றி தமிழன் காதில் பூ என்ற கட்டுரையில் மேல் விவரம் காண்க.)

ODOMETER: ஓடு என்ற தமிழ் சொல்லுடன் தொடர்புடையது. எவ்வளவு தூரம் பயணம் செய்தது என்பதைக்காட்டும் மீட்டர்.

SYRINX: சுரங்கம் என்பதுடன் தொடர்புடைய சொல்.சுருங்கிய இடம்.

DOLIA (sthali-sanskrit)=தாழி= நீண்ட என்று பொருள். நீளமான ஜாடி.

PENELOPE: நப்பின்னை,Nappinnai= பின்னல் pinnal=பின்னு செஞ்சடையாள்

AMPHORAE: ampanam, அம்பணம் padi படி, barani பரணி, amparam அம்பாரம் போன்ற கொள்கலன்

ALPHA: First letter of Greek Alphabet: AA (Cow) ஆ/ பசு (பழைய மொழிகளில்)

BETA: veedu வீடு (பழைய மொழிகளில்).

 

1954 ஆம் ஆண்டில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து: I am adding a few more points from “Tamil Loan Words in Greek” by F.Legrand (Tamil Culture, Volume III, No 1, January 1954):

Oryza=oriza அரிசி (Latin) = Riz (French) = Rice (English) = Riso (Italian) = Arrez (Spanish)

PEPPER=பிப்பலி=pippali (Tamil)=Piperi (Greek)= Piper (Latin) ஆனால் இந்தச் சொல் சங்கத் தமிழில் கிடையாது. Milaku மிளகு and Kari கரி என்ற சொற்களே உண்டு.

GINGER = இஞ்சி வேர் inji+ver (Tamil)= Zinziberi (Greek)=Gingiber (Latin),

MALABATHRUM= மலபத்ரம் cinnamon leaf from Malabar is Malabathrum (Latin). (My opinion is it is a Sanskrit word Malabar/Malaya + Pathram) இது வடமொழிச் சொல்.

SANDAL = சாந்து Santalon (Greek)= Santhu சாந்து (Tamil)= Chandana (Sanskrit)

F.Legrand says that the Hebrew word Almug Trees (Old Testament, Bible) identified with Valgu வல்கு for Sandal is a Sanskrit word. எபிரேய மொழியில் அல்மக் மரம் என்பது வடமொழிச் சொல்லான வல்கு என்று லெக்ராந்த் சொல்லுகிறார்.

(He pointed out that the word Palais (Paleo) for old pazaiya in Tamil is found in Homer.

Legrand also pointed out that Nereus, God of the Sea, is found in Hesiod’s Theogony.)

TYRANNES (Powerful)=Thiran திறன்  (Tamil)

PATHOS (suffering)=படு Legrand compares it with Patu in Tamil. But I think it is a Sanskrit word similar to Vathai வதா/ வதை (vatha). But it is possible that both Tamil Patu and Sanskrit Vatha come from same source.

AROO (cultivate, plough)= அறு/ ஏரு Legrand says it is similar to Aru (cut, harvest). But I think it is closer to ERU (plough)

Legrand argues that Pagu, Paguthi, Pangu are all cognates of Pagos (greek) pagus (Latin). Probably he did not know that Pagam பாகம் is a Sanskrit word.

He argues Gynae<Gune for woman is Tamil. He points out it Pen பெண் in Tamil becomes Hennu ஹன்னு in Kannada and Gyne in European languages. But the linguists will see Kanya கன்யா / கன்னி in Sanskrit and Gynae closer.

ANTHROPOS = ANER (Greek)= aan ஆண் in Tamil (Anthropology= மானுடவியல்)

CHEIR (Gk) =kai கை in Tamil Kara கர in Sanskrit. Probably both have some common root.

PAIDI (Gk) =Boy=Page= paiyan பையன்

GALA = Gala காலா means milk. He argues that Halu ஹாலு in Kannada is similar to Pal பால் in Tamil. He says that if we understand G=H=P changes then we can trace many more words.

Megas= மஹா Great / Big. But it is Sanskrit (Maha). Tamil use Ma மா for big;May be from a common source.

 

மயிலை சீனி வேங்கடசாமியும் சில சொல் ஒற்றுமைகளை அவரது கட்டுரையில் எழுதியிருக்கிறார்:

மத்திகை= குதிரை ஓட்டும் சம்மட்டி, சுருங்கை=பாதாள சாக்கடை, கலம்=படகு, கன்னல் (கடிகாரம்)=க்ரோனோஸ், ஓரை/ஹோரை=Hour

எழினி=யவனிகா-எவினி=திரைச் சீலை

ட்ராய் (Troy) என்பது கிரேக்க இதிஹாசத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நகரம். இது துறை என்பதன் மாற்று வடிவம்.

 

(பகுதி இரண்டில் பண்பாட்டு ஒற்றுமைகள் விளக்கப்படும்)

Animal Einsteins- Part 2

Picture of Grieving ape that lost it’s baby in Amsterdam Zoo

(This is Part-2. Please read the first part of the article under the title “Animal Einsteins in Sanskrit and Tamil Literature)

Animals are intelligent and they do think and act. They even learn new techniques according to the scientific advancements. Crows and other birds previously dropped nuts and other food items on rock from heights to break them. Now they use cars and trucks!! They simply drop the hard food items on roads and wait for the vehicles to pass. When they are broken by the vehicles, they come and eat them. How intelligent they are!!

Tool using animals

Animals using tools is a new subject for biologists (who study Evolutionary Anthropology) in western countries. But there are innumerable references in Tamil and Sanskrit literature to show we knew about it two thousand years ago. Following are among the many references in Tamil:

Narrinai 57: Pothumbil kizar presents an interesting scene where a female monkey gestures to its colleagues to keep quiet and milks a wild cow. It distributes the milk in the hands of its little ones. Though it is day light robbery, we can’t stop appreciating the robber monkey.

Animals know astrology!! Pandyan king Ukkira Peruvazuthu says that a porcupine on its new venture, after listening to the sound of a lizard, went back to its home because it was a bad omen to hear that sound from a lizard (Narrinai verse 98, also Akam 88). Tamils believed in omens based on lizards and birds.

Monkeys are playing with sticks: Ainkuru. 275-277 by Kapilar. Monkeys are breaking the water bubbles by beating with the sticks. We know children enjoy breaking air bubbles or water bubbles.

Narrinai 95: Kottampalavanar sings about an acrobat’s feats and monkeys playing on the sticks.

Monkeys are playing on the drums: Puram. 128 Mutamosiyar.

Sirupa.60-62: The salt vendors’ children play with the monkeys accompanying them. They go from town to town selling salt. The monkeys play with rattle.

Akam.8 by Perum kundrur kizar: A female elephant is helping her spouse to get out of the mud where it was trapped. The elephants use the broken tree branches to build some steps. This shows that they sympathize with the affected ones and help them as well. The Gajendra Moksha story in Hindu mythology is a typical example for animal love.

Animal love

Shakuntala, the heroine of Kalidasa’s  Shakuntalam, was very fond of plants and animals. She gave them special names. So when she departed from Kanva’s house (asram), they all were very sad and blocked her way. Kaliadasa says this through sage Kanva’s mouth:

“It is the little fawn,your adopted sun

Whom you fondly reared with handful of millet,

———————–

It is he who will not move out of your path (Shak. IV -14/16

Akam .59, 85; (also Thirukkovaiyar by Manikkavasagar): Maruthan Ilanagan (5) sings about the love between the male and female elephants. The heroine was convinced by her friend that her husband will abandon his business trip half way through as soon as he sees the male elephant caring for his spouse. Kuruntokai verse 37 also depicts the same scene. Kattur Kizar Kannan sings (85) about love and affection found in the elephant family (Also Kalidasa’s Ragu.16-16). We read about such things in Gath Sapta Sati and Pratima drama (I-5-25)

Puram. 320-Veerai veliyanar- says deers were mating when the husband who was a hunter was sleeping. His wife was so careful not to wake her husband or disturb the mating deers. So she stayed put. We can compare it to Kalidasa’s Shaknuthala . Shakunthala was very careful not to disturb the bird drinking water in the garden. She would always watch them from a distance.

Dasaratha did not kill deer because both male and female deer were together. (Ragu.9-56/57)

Kalitokai 11: Perunkatunko depicts a male dove relieving the sufferings of its mate in the scorching heat by gently fanning its soft wings over it.

Narrinai verses 383, 384: Just to satisfy the hunger of a female tiger, its mate attacks an elephant says Seziyanar. A pigeon brings food to its mate from a long distance.

Animals dream like human beings

Pathirru. 11: Kumattur Kannanar sings about the beautiful dream of deer. The deer dreamt of the grass it ate in the day time and the beautiful waterfalls where it was growing. So it must be a colourful dream.

Akam.170: Madurai Vennakanar describes a dream of a sea gull. It dreamt of eating tasty prawns.

Kurinji kali 13 describes a dream of an elephant. A tiger that stood against the attack of a tiger went to sleep. It dreamt of an attacking tiger and started attacking a Vengai tree. Vengai means both tiger and a kind of tree in Tamil. When the Vengai tree is in bloom it looks like a tiger.

Nar 87. sung by Nakkannaiyar  describes a bats’ dream:   The sharp teethed bat is imagined to dream in its sleep. The bat dreams of the sour taste of the gooseberry fruits (Nelli in Tamil).This theme of bat’s dream is repeated by other poets as well.

A beetle’s dream is portrayed in Akam. 132. It dreamt of elephants rut while sleeping in a bunch of Kantal flowers.

Pet Birds

We already saw the parrots kept as pet birds in Mandanamishra’s house and Tamil Perumpanatruppatai. Kalidasa speaks of pet birds, mostly parrots, in Megadutam.90, Vikrama Urvasiyam II-22, IV-17,Shakuntalam I-13,14,III-14. Peacocks were also raised V-13. People erected poles just for the peacocks to rest.

Akam.34,Maruthan Ilanakan sings about the stags and swans raised in the house and their love and affection. Nar. 376,Kapilar speaks of flocks of parrots coming to cultivated lands and the girl talking to them (so that her lover would hear it).

******************