காலம் சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.க்கு ‘ஞானமயம்’ அஞ்சலி(8776)

MRS HARINI RAGHU ON ZOOM BROADCAST

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8776

Date uploaded in London – –5 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

5-10-2020அன்று ஞான மயம் ஒளி /ஒலி பரப்பில் லண்டன் திருமதி ஹரிணி ரகு , பெங்களூர் திருமதி சத்திய நாராயணன் ஆகிய இருவரும் பாட கர் எஸ் .பி.பாலசுப்ரமண்யத்துக்கு அஞ்சலி செலுத்தினர். ஹரிணி உரை எழுத்து வடிவில் ல்லை. ஆனால் FACEBOOK.COM/GNANAMAYAM ல் கேட்கலாம். பிரஹந்நாயகி உரை இதோ எழுத்து வடிவில் :–

உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்! (Post No.8776)

5-10-2020 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அஞ்சலி உரை
உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்!
பிரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் சார்பில் உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறுவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN


காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில்
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம் அன்றோ!
ஆம் மஹாகவி பாரதியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான்.
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு எதுவும் ஈடாகுமா?
லட்சோபலட்சம் மக்கள் பல்லாண்டுகளாகக் கேட்டு மெய்மறந்து இருந்த இசை அதிசயத்தைத் தந்தவர் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி என்ற இந்த மூன்றெழுத்து, இசை உலகில் விளைவித்த அற்புதங்கள், ஏராளம், ஏராளம்.
பதினாறு மொழிகளுக்கும் மேலான மொழிகளில், ஆயிரம் ஆயிரம் பாடல்களை தன் அமுத கானக் குரலால் அள்ளி வழங்கியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும் போது உள்ளமெலாம் கனக்கிறது.


அவர் பாடிய பாடல்களில் இழைந்தோடிய ராகங்கள் ஏராளம்; அவை தந்த உணர்ச்சிகளோ நவ ரஸ உணர்ச்சிகள்.
இருப்பினும் ஆன்மீகத்தில் மனதை மேம்படுத்தி அனைவரையும் உயர ஏற்றிய அவரது பக்திப் பாடல்களை யாராலும் மறக்கவே முடியாது.


மனதை இதமாக வருடும் இனிய குரல், எஸ்.பி.பி.யின் குரல்!
அது ஆன்மாவின் குரலாக அவரது பக்திப் பாடல்களில் கோடானு கோடி இல்லங்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது; ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ப்ரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் என்று லிங்காஷ்டகத்தை இனிய குரலில் பக்தியைக் குழைத்து, சொல்லுக்குச் சொல் இடம் விட்டு, பொருள் புரியும் படி, இசையாக அவர் வழங்கிய விதம் உவமை இலா ஒன்றாகும்.
கோடி கன்யா தானத்தை விட ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பது மேலாகும் என்ற அவரது வில்வாஷ்டக பாடலைக் கேட்போருக்கு மெய் சிலிர்க்கும். என்ன ஒரு அபூர்வமான Presntation!
சங்கரா நாத சரீராபரா என்று மத்யமாவதி ராகத்தில் அவர் வழங்கிய பாடல் அவருக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித் தரவில்லை, பக்தர்களின் ஆழ்மனது அன்பையும் வாங்கித் தந்தது. சங்கராபரணம் பாடல்களைப் பாட முதலில் தயங்கியவர், பின்னர் மிகுந்த உழைப்புடன் கடின பயிற்சி எடுத்துப் பாடினார். வெற்றியும் பெற்றார்.


‘சிவன் எனும் ஒசை அல்லது அறையோ, உலகில் திரு நின்ற செம்மை உளதே’ என்று அப்பர் பெருமான் சிறப்பித்துக் கூறும் அந்த சிவ நாமம் அவரை உயரத்தில் ஏற்றியது!
வரணும் அம்மா வரணும் அம்மா, மூகாம்பிகை தாயே சரணம் அம்மா’ என்ற அவரது தேவியின் பாடல்கள் தாயின் அருளை யாருக்குத் தான் பெற்றுத் தரவில்லை.
நாராயணா என்று பக்தி இழையோடும் அவரது பாடல்கள், ‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்ற ஆழ்வாரின் ரகசியத்தை அல்லவா நமக்குக் கற்றுத் தந்தது!
ஸ்ரீ கணேச பக்தி புஷ்பாஞ்சலியை நாற்பது லட்சம் பேர் இதுவரை கேட்டிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
காவடி பற்றிய அவரது பாட்டு முருக பக்தர்களைக் கவர்ந்ததில் தான் வியப்பேது?

S P B


உள்ளம் உருக்கும் குரலில் அவர் பாடிய ஐயப்ப பக்திப் பாடல் ஒன்றை லட்சோப லட்சம் மக்கள் கேட்டதில், இன்றும் கேட்டு வருவதில் என்ன அதிசயம் இருக்கிறது?
ஐயப்பனைப் பற்றிய அந்தப் பாடலைக் கேட்காதவர், பாடாதவர் யார் உள்ளார்?


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரி விமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா என்ற பாடலுக்கு இணை உண்டா என்ன? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பூவுலகில் இருந்து இசை சேவை செய்து ஓயாமல் உழைத்தது போதும், இவரை நம்மருகில் வைத்துக் கொண்டு இனிய இசையை எந்நாளும் கேட்போம் என்று அனைத்து தெய்வங்களும் எண்ணி அவரைத் தம் அருகில் அழைத்துக் கொண்டனவோ!


உவமை இல்லா ஓசை தரும் இன்பத்தை என்றும் நீ வழங்குவாய், எஸ்.பி.பி உன் புகழ் ஓங்குக என்று கூறி, என் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்தி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி , வணக்கம்!

TAGS – எஸ்.பி.பி , S P B, ஞானமயம், அஞ்சலி ,

BRAHMIN WONDER IN PANINI’S GRAMMAR! (Post No.8775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8775

Date uploaded in London – –5 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Years ago, I wrote in my two blogs that Brahmins of India are “LIVING FOSSILS” of the world and they deserve an entry into Guinness Book of Records. I gave umpteen reasons including ‘thrice a day Sandhyavandana water ritual’ shows they are sons of the soil and they did not come from outside India. I also showed that they worship Sun, God of Death, Water, Directions, Prosody, Goddess Gayatri, Sapta Rishis/  Seven Stars in Ursa Major constellation, 100 year full life, River Narmada and all Vedic deities. There is a rare combination of Nature and God in their three times worship every day (Sorry to say that I do only two times a day in London on the banks of River Thamasa called Thames. Guinness Book on Names says that it is similar to River Thamasaa of Valmiki)

Now I have got one more point to prove my case. Brahmin’s daily ceremony includes Gayatri worship. It is the second and most important part. Before the actual recitation of Gayatri Mantra, they invocate Goddess Gayatri from the hilltop in to their hearts/mind. While inviting Goddess to enter his mind/heart he worships seven seers (Sapta Rishis in Northern Great Bear/ Ursa Major constellation), Sanskrit Grammar (Vedic Prosody with seven main meters) and All Vedic Gods.

The wonder of wonders is that a Panini Sutra gives the names of Rishis in the same order as I say it in London. What does it mean?

At least for 2700 years Brahmins are doing this recitation. I was surprised to find the same order in a grammar book where he explained only to teach grammar and not religion or ritual.

A brahmin who does Sandhya Vandana (Sun Worship) every day, touching his forehead, says the names of Seven Seers:-

Atri, Brhu, Kutsa, Vasistha, Gautama, Kashyapa, Angirasa.

Some Brahmins use one or two different names but they belong to the same clan (Gotra). So it is not considered a deviation.

And the referred sutra is in Ashtadhyayi of Panini:-

2-4-65 atribrhukutsavasistha gotamaangirasobhyas ca

Here he explains the rules about elision .

We are not concerned about the grammatical rules here.

What I want to show is that the same order is in grammatical rule and Brahmin’s say it in day to day ritual!

So we know that it has been there from Panini’s time or even before that.

Xxx

NUMBER NAMES FOR TAMIL BOOKS

Tamils followed Panini in naming women and  in forming feminine names from masculine ones. (Please read my article posted here yesterday ).

Tamils also named books after numbers . Some of the Sangam Age Tamil books are  ‘Five short hundreds’ (Ainkurunuru), ‘Ten tens ‘(Pathitrupathu); Post Sangam books have Tirukkural (Holy Couplets=2), Naaladiyaar (Four Lines). Then we see a lot of Ten Verses (Pathikam), 100 verses (Satakam).

All these originated from Sanskrit which are explained in Panini Sutras (aphorism or crispy rules)

The earliest NUMBER  books in Sanskrit is Satapata Brahmana (100 chapters). Those who read the first 60 chapters are named students ‘who mastered 60 chapter’s. The book is called Sixty, Shastipathaa in Sanskrit,  is the word used for it.

Panini’s own work is called Ashtakam (Eight Chapters) by his followers and the popular name of the book is ASHTA +ADHYAYII (8 chapters).

Tamils also collected the 18 books of Sangam Age into Eight Collections (Ettuthokai)  and Ten Long verses (Pathuppaattu) .

The Kaushitaki Brahmana book has 30 chapters and the Aitareya Brahmana book has 40 chapters.

Panini gave them as examples in5-1-62

Trimsach- chatvarimsator brahmane samjnayam

Triamsa- 30

Chatvarimsa-40

This is also followed by the ancient Tamils.

XXX

TAMILS followed Sanskrit grammar in naming the books after authors.

Most famous Tamil book is Tolkaappiyam , the oldest grammar book in Tamil.

Like Panini’s work is called Paaniniiyam after him, Tolkaappiyam is named after its author Tolkaappian.

In Tamil we see many ancient book names such as KaakkaipaatiniiYAM, AvinaYAM etc.

This YA ending is  in lot of Sanskrit books which are shown as examples in the commentaries on Panini.

In short, Tamils followed NAMING rules explained in Paniniyam. May be the custom is older than Panini and Tolkappian.

—Subham–

tags – 7 seers, sapta rishis, Paniniyam, Tolkappiam, Tamils,

ஜோதிடர் இல்லாத ஊரில் வசிக்காதே! (Post No.8774)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8774

Date uploaded in London – – 5 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு நாள் கூட வசிக்காதே!

ச.நாகராஜன்

ஜோதிடத்திற்கு ஹிந்து வாழ்க்கை முறை ஒரு தனி இடத்தைத் தந்துள்ளது.

யோகம், கரணம், திதி, வாரம், நக்ஷத்திரம் ஆகிய ஐந்து விஷயங்களை அன்றாடம் பார்த்து உன் வாழ்க்கை வழியை வகுத்துக் கொள்; அதற்கு உதவியாக இருக்கும் ஜோதிடரை அணுகி அறிவுரை பெறு என்பதை அது வலியுறுத்துகிறது.

சுபாஷிதங்களில் ஒரு சுபாஷிதம் ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு நாள் கூட வசிக்காதே என்று அறிவுரை – அன்புரை – கூறுகிறது.

ருணதாதா ச தைவக்ஞ: ஸ்ரோத்ரிய: சுஜலா நதி; |

யத்ர ஹோதே ந வித்யதே ந தத்ர திவசம் வஸேத் ||

கடனைத் தருபவன், ஒரு ஜோதிடர், வேதங்களை நன்கு அறிந்த ஒரு பண்டிதர், நல்ல ஜலத்தைக் கொண்டிருக்கும் நதி – எங்கு இவை இல்லையோ அங்கு ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.

One who accommodates a loan, an astrologer, a priest well versed in the Veda-s and a river having good water – where these are not available one should not live even a single day there (Translation by A.A.R.)

அதுமட்டுமல்ல, ஜோதிடத்தின் முக்கியத்துவத்தை ஒரு சுபாஷிதம் இப்படி நன்கு வலியுறுத்துகிறது – அனைத்தையும் துறந்த ஒரு முனிவர் கூட கிரக சஞ்சாரம் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு ஜோதிடரை அணுகுவர்! ஒரே ஒரு ஆசனத்தில் அமர்ந்து, ஜலத்தையும் வாயுவையும் மட்டுமே ஆகாரமாகக் கொண்டு வாழ்ந்து எந்த ஒரு பொருளையும் பெறுவதையும் துறந்து முக்தி ஒன்றையே விரும்புவோர் (அனைத்தையும் துறந்தவர்) கூட, ஒரு ஜோதிடரை நாடி ஆகாயத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பற்றிக் கேட்பர்; அப்படி இருக்க, செல்வத்தை விரும்புவரைப் பற்றி என்ன சொல்வது?

ஏகாசனஸ்யா ஜலவாயுபக்ஷா

   முமுக்ஷவஸ் த்யக்தப்ரிக்ரஹாஷ்ச |

ப்ருச்சந்தி தேப்யம்பரசாரிசாரம்

   தைவக்ஞமன்யே கிமுதார்த்தசித்தா: ||

Seated constantly in one seat, sustained by air and water (alone), desiring liberation and giving up the receiving of all gifts – even these people ask of an astrologer the movements of the planets in the sky; What then of those who are desirous of wealth? (Translation by A.A.R.)

‘The Astrological Primer’ என்ற அருமையான நூலை (வெளியீடு 1892ஆம் ஆண்டு, பெல்லாரி) எழுதியுள்ள திரு B. சூர்யநாராயண் ராவ், “கிரகங்களின் மொழியை அறிந்து அதைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை எடுத்துக் கூறுகிறார் ஜோதிடர் என்கிறார். (இவர் பிரபல ஜோதிடரான திரு பி.வி.ராமனின் தாத்தா ஆவார்).

(An Astrologer interprets the language of the planets by the symbols used and predicts the future events by their light.)

மேலும் அவர் கூறுகையில், “ எதிர்காலத்தை அறிந்து கொள்வதால் நமக்கு எந்த விதமான நஷ்டமும் இல்லை. அதை எதிர்கொள்வதில் பொருத்தமான ஏற்பாடுகளை செய்து கொள்வதோடு  நம்முடைய மன உறுதியைப் பண்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் முடிந்தால், நிச்சயமாக எப்போதும் முடியும்,  நமது உறுதியான மதி வலிமையாலும் ஹிந்து சாஸ்திரங்களில் கூறப்படும் இதர பரிகாரங்களாலும், எதிர்காலத்தை வழி நடத்தும் இயற்கை சக்திகளை, எவற்றின் செல்வாக்கினால் நாம் இருக்கிறோமோ அவற்றின் கெட்ட செல்வாக்கை எதிர்த்து அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.” என்கிறார்.

(“There could possibly be no loss by knowing our future, by making or attempting to make suitable arrangements to meet it and to cultivate our “will force” to a greater extent so that if it is possible, as it is always possible,

to overcome all evil influences by strong will force and other remedies prescribed in the Hindu Shastras, we may try to counteract or control the natural forces which guide our future  and under whose influence we have been called into existence.”)

ஆக ஜோதிடத்தின் முக்கியத்துவத்தை மேலே கண்ட சொற்களால் அறிந்து கொள்ள முடிகிறது.

London Advertisements on Roads

3

அடுத்து அதே நூலில் அவர்  பிறிதோரிடத்தில், “தங்கள் ஜாதகங்களைக் கொடுத்து பலன்களைத் தெரிந்து கொள்வதில் ஜோதிடருக்கும் பணம் கொடுக்க நன்கு படித்தவர்கள் பலரும் கூட மறந்து விடுகின்றனர். இது  மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு இரு காரணங்கள் உண்டு. 1) வருவாயை ஈட்டித் தரும் தொழில் ஜோதிடம் என்ற திறனை இது வெகுவாகக் குறைத்து விடுகிறது 2) ஜோதிடர்களை கவனமற்றவர்களாகவும் இது ஆக்குகிறது; தங்களது கணிதத்திலும் பலன் கூறுதலிலும் ஒரு அலட்சிய மனோபாவத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனெனில் மனதை மிகவும் தீவிரமாக ஈடுபடுத்தி செய்யப்படும் இதில் போதுமான வருவாய் இல்லை என்பதால் தான். ஜோதிடம் மருத்துவம் போல ஒரு நடைமுறை விஞ்ஞானமாகும். அது வாழ்க்கை முழுவதும் பயன்படும் ஒன்று.” என்கிறார்.

(Many who consult their horoscopes forget that they have to pay for the work they expect the astrologer to do. This conduct on the part of educated and intelligent men is highly reprehensible, and must be condemned for two reasons, (1) because it considerably lowers the efficiency of astrology as a praying profession, and (2) because it makes the astrologers careless and indifferent in their calculations and predictions, since they see no sufficient remuneration for very serious mental work. Astrology like Medicine is a practical science and must be useful all along.)

ஆகவே தகுந்த ஜோதிடர்களை நாடி நமக்கு தேவையானவற்றைத் தெரிந்து கொள்வதோடு, உரிய முறையில் அவர்களுக்கு நல்ல தக்ஷிணை கொடுப்பதும் அவசியமே!

***

tags- ஜோதிடர், அவசியமே!

தமிழா! இது திருக்குறளடா ! கோபப்படாதே! (Post.8773)

div class=”separator” style=”clear: both;”>

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8773

Date uploaded in London – –4 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கட்டத்தில் இரண்டு குறள்கள் உள ; கண்டுபிடியுங்கள் .

விடைகள் கீழே உள்ளன . கூடிய மட்டிலும் சொற்களைப் பிரிக்காமல் கொத்துக் கொத்தாகக் கொடுத்துள்ளேன்.

விடைகள்

தன்னைத்தான் காக்கின் சினங் காக்க காவாக்கால்

தன்னையே கொல்லும் சினம் — திருக்குறள் 305

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப்  புணையைச் சுடும் — திருக்குறள் 306

பொருள் —

உன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோபம் வராமல் பார்த்துக் கொள் ; அல்லது அதுவே உன் மரணத்துக்குக் காரணமாகிவிடும் –திருக்குறள் 305

கோபம் என்னும் தீ  ஒரு மரத்துடன் நட்புகொண்டு அதைத் தழுவினால் மரமும் அழியும்; மரத்துக்குப் பக்கத்திலுள்ள காடே அழியும்.

அது போல கோபம் நெருப்பு போல உன்னுடன் சேர்ந்தால் அது உன்னை மட்டும் கொல்லாமல் உனக்கு ‘சப்போர்ட்’ support

கொடுத்த அத்தனை பேரையும் அழிக்கும் — –திருக்குறள் 306

TAGS– திருக்குறள் 306,கோபம், சினம்

–subham–

TAMILS FOLLOWED PANINIAN GRAMMAR (Post No.8772)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8772

Date uploaded in London – –4 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

There are very interesting similarities in Panini’s grammar and Tamil literature. Let us look at some of them today.

(I have already given the Tamil examples in my Tamil article)

Naming women is explained in several sutras of Ashtadhyayi of Panini. It is a common knowledge that feminine names in Sanskrit which are used by all the Hindus from Kanyakumari to Kashmir, end with ‘ee’ or ‘aa’.

Examples :

Savitrii , Gayatrii , Smrtii, Sruthii, Gitaa, Lathaa, Maayaa, Vidhyaa

Numerology and lack of knowledge in Sanskrit changed the spellings in many cases. But the original spellings are intact in our Tamil and Sanskrit literature.

Tamils’ names also ended with ‘e’ or ‘ee’ sounds.

Examples :

Aadhimanthi ,Kannaki ,Madhavi , Punithavathy, Tilkavathy ,Vasuki , Bhagavathy, Angayar kanni( Goddess Minaakshii) , Paandimaadevii (Pandya Queen), Kaamakkannii (Goddess Kamakshii)

Though some of these are Sanskrit names they are attested in the oldest Sangam book Purananuru. Other names were used from second century CE.

Even when Tamils used ‘aa’ ending names, they followed a rule to change them in to ‘ai’ ending names.

Examples :

Giitaa  becomes Gitai; Siataa becomes Siitai,

Even Sangam Tamil literature have Nachellai, Nappasalai, Nappinnai etc.

The ‘E’ ending names do not stop there ; it goes deeper and deeper which shows the deep connection between Tamil and Sanskrit. Here we go with more examples

Panini shows us the way to create feminine names from masculine names; Panini gives us examples:-

Bhava – Bhavaanii

Rudra – Rudraanii

Indra – Indraanii

Shiva – Shivaanii and so on.

Tamils follow the same rule in Sangam Tamil literature which is at least 2000 year old. And Panini is 2700 years old according to Goldstucker.

Kuravan – Kurathi

Kizavan – Kizathi

Maravan – Marachi

Idaiyaan- Idaichi

Aayan – Aaychi

The list goes on and on.

What does it show?

Tamil and Sanskrit came from one source , that is Lord Shiva, and it is attested from 1400 year old Thevaram and the latest  Bharati poems.  It is natural that a language will be influenced by another language spoken in the neighbourhood. But Tamil and Sanskrit do not fall under that category. The connection is deeper. The Sandhi (joining and combining) rules are followed in Tamil and Sanskrit even today. These are the only two ancient languages that follow sandhi rules. More similarities are seen in case suffixes. And I have discovered 30 Tamil words in Pre-Alexander Greek literature. These things torpedo all the theories put forward by our so called linguists.

The very classification of Tamil and its sister languages as Dravidian family is wrong. It is part of Indian languages. If linguistic idiots can argue Brahui and Tamil are related to one another, one can say Tamil and Sanskrit are one and the same.

No scholar can show us more than three Tamil words in Brahui. In all the so called Northern, Middle and Sothern Dravidian languages there are more than 90 percent Sanskrit based words. If there is anything new, that is very minimal. Suppose one decides to remove all Sanskrit based words from these so called Dravidian languages, the languages would disappear. Only Tamil would survive; but like virus affected software or looking  like a severely wounded soldier. No two clocks agree, and similarly no two languages are similar. The differences will always be there. And one can show some similarities between any two languages in the world. That wouldn’t mean that they belong to same group.

I will show more NEW similarities between Tamil and Sanskrit in another article.

-Long Live Tamil–

tags– Panini, naming

பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!(Post.8771)

<a href=”https://1.bp.blogspot.com/-

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8771

Date uploaded in London – – 4 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பதினெட்டு புராணங்களின் சாரம் இரண்டே வரிகளில்!

ச.நாகராஜன்

புராணங்கள் 18. இவற்றைப் படிப்பதென்பது சாதாரணமாக முடியாத காரியம். தக்க ஒருவரிடமிருந்து பாடம் கேட்டால் தான் இந்த 18 புராணங்களின் உட்பொருளை உள்ளது உள்ள படி அறிய முடியும்.

ஆனால் இந்த 18 புராணங்களில் வேத வியாஸர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை இரண்டே வரிகளில் சுருக்கமாகச் சொல்லி விடலாம் என்கிறது ஒரு சுபாஷித ஸ்லோகம்.

அஷ்டாதச புராணேஷு வ்யாஸஸ்ய வசனத்வயம் |

பரோபாகார: புண்யாய பாபாய பரபீடனம் ||

பதினெட்டு புராணங்களிலும் வியாசர் சொல்லி இருப்பது இரண்டு வரிகளைத் தான்! பிறருக்கு நல்லது செய்வது புண்யம்; பிறருக்குத் தீமை செய்வது பாவம்.

In the whole of the eighteen Puranas, Vyasa has observed only two sentences – doing good to others is meritorious, and hurting others is sinful.

               -Translation by Dr N.P.Unni

*

ஸ்ரோத்ரம் ஸ்ருதேனைவ ந குண்டலேன தானேன பாணீனம் ச கங்கணேன |

விபாதி காய: குணாபராணாம் பரோபகாரைனம் து சந்தனேன ||

காதுக்கு அழகாவது கற்றலே; குண்டலங்கள் அல்ல. கைக்கு அழகாவது தானம் கொடுத்தலே; கங்கணம் அல்ல! உடலுக்கு அழகூட்டுவது சந்தனம் அல்ல, மற்றவருக்கு செய்யும் பரோபகாரமே!

The ear is embellished by the learning and not by ear rings, the hands by the acts of donation and not by the bangles and the body is serving others and not by sandal pastes  – all this relates to the compassionate one.

Translation by Dr N.P.Unni

ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும்

என்றார் வள்ளுவரும்.

இதையே ஸ்வாமி விவேகானந்தர்,

They alone live for others, the rest are more dead than alive

என்றார். (பிறருக்காக உயிர் வாழ்பவனே வாழ்பவன் மற்றவர் எல்லாம் உயிரோடு இருந்தாலும் இறந்ததற்குச் சமமே)

*

பிபந்தி நத்ய: ஸ்வயமேவ நாம்ப: ஸ்வயம் ந காதந்தி பலானி வ்ருக்ஷா: |

பயோமுசாம்ப: கிவசிதஸ்தி பாஸ்யம் பரோபகாராய சதாம் விபூதய: ||

நதிகள் தண்ணீரைத் தானே குடிப்பதில்லை, மரங்கள் தமது பழங்களைத் தாமே உண்ணுவதில்லை, மழைத் தண்ணீர் நீரைத் தனக்குத் தானே அடக்கி வைத்துக் கொள்வதில்லை. நல்லோர்களின் உடைமைகள் மற்றவருக்கு உதவி புரிவதற்காகவே உள்ளன.

Rivers never drink the water themselves, the trees never eat their fruits, the rain water never restrained, the properties of the good are for serving others.

Translation by Dr N.P.Unni

*

பவந்தி நம்ராஸ்தரவ: பலோத்கமைர்நவாம்புபிர்தூரவிலம்பினோ தனா: |

அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி: ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம் ||

மரங்கள் பழுத்தவுடன் கிளைகளைத் தாழ விடுவதைப் பார்க்கிறோம், நீரை ஏந்தி இருக்கும் மேகங்கள் நீரின் கனத்துடன் மெதுவாக நகருகின்றன, நல்ல மனிதர்கள் செல்வத்துடன் இருக்கும் போது கர்வப்படுவதில்லை. இதுவே பிறருக்கு உதவி செய்பவரின் இயல்பாகும்.

Trees are seen bending their boughs when they put forth fruits, rain clouds move slowly with the weight of water, good people are devoid of pride when they are endowed with richness, this is the nature of men who are prone to helping others.

Translation by Dr N.P.Unni

tags — புராணங்களின் சாரம்

***

Swami Crossword 31020 (Post No.8770)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8770

Date uploaded in London – –3 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ACROSS

  1. -6 LETTERS— FLAG IN SANSKRIT
    5.—5—STORY IN SEVERAL INDIAN LANGUAGES
    8.—5—NO ORIGIN, NO BEGINNING
    9.—5— COLOUR; CASTE SYSTEM

DOWN

  1. – 5 LETTERS—INITIATION IN SANSKRIT
  2. – 6–GHOST IN VIKRAMADITYA STORY
  3. 5—WISDOM
  4. –8– ‘I’NESS; EGO, EGOISM
  5. – 6– PERPETUAL, ATTACHMENT
    7– 5—OLDEST RELIGION BASED ON VEDAS

–subham–

கந்தைத் துணி பற்றிய 6 பழமொழிகள் என்ன ? (Post. 8769)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8769

Date uploaded in London – –3 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1.கந்தை ஆனாலும் கசக்கிக்கட்டு , கூழ் ஆனாலும் குளித்துக்குடி

2.கந்தையைக்  கட்டி வெளியே  வந்தால் கண்ணாட்டி

வெள்ளையைக்  கட்டி வெளியே  வந்தால் வெள்ளாட்டி 

3.கந்தைக்கு ஏற்ற பொந்தை , கழுவுக்கு ஏற்ற கோமுட்டி

4.கந்தைக்குச் சரடு ஒட்டுகிறது எல்லாம் பலம்

5.கந்தைத் துணியும் கரிக்கோலமும் ஆனான்

6.கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்.

tags- கந்தை

–subham–

பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள் ! (Post No.8768)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8768

Date uploaded in London – –3 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள்

2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு, உலகம் முழுதும் போற்றப்படும் பாணினீயத்தில் தமிழர்கள் மெச்சக் கூடிய பல அதிசய செய்திகள் உள்ளன.

கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதை போன்ற ஒரு கேள்வி தமிழில் உண்டு. தொல் காப்பியன் என்பவன் எழுதியதால் அந்தப் புஸ்தகத்துக்கு தொல்காப்பியம் என்ற பெயர் வந்ததா? அல்லது தொன்மையான ஒரு காப்பியத்தைச் செய்ததால் அந்த ஆசிரியருக்கு தொல்காப்பியன் என்ற பெயர் வந்ததா? என்ற ஒரு கேள்வி விவாதிக்கப்படுவதுண்டு. பாணினி ஆசிரியரும் உரைகாரர்களும் தெளிவாகச் சொல்லுகின்றனர். பாணினி எழுதியதால் அந்த நூலுக்கு பாணினீயம் என்று பெயர். அதில் எட்டு அத்தியாயங்கள் இருப்பதால் அதற்கு அஷ்டகம் என்றும் பெயர். ஆகையால் காப்பியக்குடியில் பிறந்த தொல்காப்பியர் என்பவர் எழுதியதால் இந்தப் பெயர் என்பது தெளிவாகிறது.

இப்படித்தான் பெயர் வைக்கவேண்டும் என்று பாணினி ஒரு சூத்திரமும் செய்துவிட்டார்

க்ரிதே க்ரந்தே 4-3-116

2700 ஆண்டுகளுக்கு முன்னர் புஸ்தகம்/கிரந்தம் இருந்ததற்கும் இது ஒரு சான்று பாணினி காலத்திலேயே பல புகழ்மிகு புஸ்தகங்கள் இருந்தன.

வரருசி எழுதிய ஸ்லோகங்கள் தொகுப்பு ‘வாரருசா ஸ்லோகாஹா’ ;

சுபத்ராவின் கதை –‘செளபத்ரா’ ;

யயாதியின் கதை –‘யாயாத’

கண்ணன் என்னும் குழந்தையின் அழு குரல் – ‘சிசுகண்டீய’

யமன் சபை பற்றிய கதை – ‘யம ஸபீய’

இந்திரனின் பிறப்பு பற்றிய கதை- ‘இந்திர ஜனநீய’

நூலின் ஆசிரியர் பெயரில் அமைந்தவை , நூல் சொல்லும் விஷயம் பெயரில் அமைந்தவை, நூலின் அத்தியாயம்/அளவின்  பெயரில் அமைந்தவை என்று நீண்ட பட்டியல் தருகிறார்

காண்க 4-3-68 முதல் 4-3-72 வரை .

காசியில் எழுதப்பட்ட நூல் – காசிகா ; இது மிகவும் புகழ்பெற்ற உரை.

XXXXX

ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து , நாலடியார், திருக்குறள்

எட்டு அத்தியாயம் இருப்பதால் பாணினி நூலை அஷ்டகம் என்று அழைத்ததை அவருக்குப்பின்னர் வந்த உரைகாரர்கள் கூறினர். தமிழிலும் பதிகம் (10), சதகம் (100) என்பதை நூல் பெயர்களில் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்திலேயே ஐங்குறு நூறு (5×100) , பதிற்றுப்பத்து (10X10) என்று எண்களின் பெயரில் நூல் செய்தனர். சங்ககாலத்துக்குப் பின்னர், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நாலடியார் (4 LINES) , திருக்குறள் (TWO LINES) என்று செய்யுள் அடிகளின் எண்ணிக்கை பெயரில் நூல்களை யாத்தனர் அல்லது தொகுத்தனர்  . இதற்கெல்லாம் மூலம் பாணினீயத்தில் உள்ளது.

வேதகாலத்திலேயே 100 அத்தியாயங்களைக் கொண்ட நூலை ‘சதபத பிராஹ்மணம்’ என்று அழைத்தனர்.

பாணினி இரண்டு நம்பர் நுல்களைக் குறிப்பிடுகிறார் 5-1-62

30 அத்தியாய நூல் – ‘த்ரைம்ச’

40 அத்தியாய நூல்- ‘சாத்வாரிம்ஸ’.

கௌசீதகி பிராஹ்மண  நூலில் 30 அத்தியாயங்கள் ;

ஐதரேய  பிராஹ்மண  நூலில் 40 அத்தியாயங்கள் ; ஆயினும் நம்பர் மூலமே அதைக் குறிப்பிட்டனர்

100 அத்தியாயங்களைக் கொண்ட சதபத பிராமண நூலிலும் கூட முதல் 60 அத்தியாயங்களை அறுபது என்று – ‘ஷஷ்டிபத’ — என்று அழைத்தனர். அதுமட்டுமல்ல நீ 40 படித்தவனா, அவன் 60 படிக்கும் மாணவன் என்ற பேச்சு வழக்குகளும் உண்டு.

பிற் காலத்தில் நாம் மாணிக்க வாசக சுவாமிகள் போன்றோரும் ‘எட்டும் இரண்டும்’ அறியவில்லையே என்று புலம்புவதை பார்க்கிறோம் .

ஆக எண்களைக் கொண்டு நூலுக்குப் பெயரிடுவது வேத கால வழக்கம். அதைத் தமிழரும் பின்பற்றினர் என்பதைப் பார்க்கையில் இமயம் முதல் குமரி வரை  ஒன்னு; அதை அறியாதவன் வாயிலே மண்ணு  என்று சொல்லத் தோன்றுகிறது.

XXXX

கண்ணகி, ஆதிமந்தி , மாதவி,புனிதவதி, திலகவதி

சம்ஸ்கிருதத்தில் பெண்கள் பெயர்கள் எல்லாம் ‘ஈ’ அல்லது ‘ஆ’- என்ற நெடில் எழுத்துக்களில் முடியும்.

தமிழில் பெண்கள் பெயர்கள் எல்லாம் ‘இ’ அல்லது ‘ஐ’ என்னும் குறிலில்  முடியும்.

சங்க கால ஆதிமந்தி, நப்பசலை, நச்செள்ளை , காமக் கண்ணி என்று அடுக்கிக்கொண்டே போகலாம் . சங்க காலப் பெயர்கள் என்று தமிழர்கள் கருதும்  கண்ணகி, மாதவி, மாதரி, ஐயை, (சிலப்பதிகாரம் கி.பி 132) வாசுகி பெயர்களிலும் இதைக் காணலாம். தேவார காலத்தில் புனிதவதி, திலகவதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்களிலும் இதைக் காணலாம்.

பாணினி இரண்டு அதிசயங்களை நமக்குச் சொல்கிறார்.

பெண்பால் பெயர்கள் பற்றிச் சொல்கையில் இந்த ‘ஈ’ ஓட்டுக்களை விளக்குகிறார்.

அதிசயமான ஒற்றுமை தமிழிலும் பெண்கள் பெயர்கள் ‘இ’- யில் முடிவது! தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தைக் கொண்ட மொழிகள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று . ஏனைய ‘வேற்றுமை’, ‘சாந்தி விதி’ ஒற்றுமைகளை முன்னமே விளக்கிவிட்டேன்.

இதில் இரண்டாவது அதிசய ஒற்றுமை என்னவென்றால் ஆண்களின் பெயர்களை பெண்களின் பெயராக மாற்றுவது எப்படி என்பதாகும் :-

பவ – பவானி , சிவ – ஷிவானி , ருத்ர- ருத்ராணி, , இந்திர – இந்திராணி , யவன – யவனானி

தமிழர்களும் இதே ‘இ’ முடிவைப் பின்பற்றுகிறார்கள்

குறவன்-குறத்தி, கிழவன் – கிழத்தி, ஆயன்- ஆய்ச்சி , இடையன்- இடைச்சி, உழவர்- உழத்தி, கடையர்- கடைசியர், நுளையன் – நுளைச்சி , மறவன்- மறத்தி

இப்படி  அடுக்கிக்கொண்டே போகலாம்.

பழைய மொழிகளில் தமிழுக்கும்- சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள ‘வேற்றுமை’, ‘சந்தி /புணர்ச்சி’ விதி, ‘பெயரிடும் ஒற்றுமை’யை உலகில் வேறு எந்த இரண்டு மொழிகளிலும் காண முடியாது. ஆகையால் மீண்டும் எனது ‘தியரி’ theoryயை அடித்துச் சொல்கிறேன் —

தமிழும் சம்ஸ்கிருதமும் இரண்டு வேறு மொழிகள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் திராவிட மொழிக்குடும்பம் என்பது பெரிய பித்தலாட்டம். இந்திய மொழிக் குடும்பத்தில் தமிழும் சம்ஸ்கிருதமும் இரண்டு கண்கள். ஒரே மூலத்தை உடையவை.

திராவிட மொழிக்குடும்பம் என்று கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் பிதற்றியதை எவனாவது திரும்பிச் சொன்னால் “உடல், (Body parts and numbers)எண்கள், போ, வா சாப்பிடு , தூங்கு முதலிய முக்கிய (verbs) வினைச் சொற்கள் , நிறங்கள், (colours, pronouns) நான், நீ, அவன், அவள்” முதலிய  சொற்களில் 100 ஒற்றுமைகளைக் காட்டச் சொல்லுங்கள். பிராஹுய் (Brahui) என்னும் மொழி தமிழுடன் தொடர்புடையது என்று சொல்லும் ஆட்கள் மூன்று சொற்களுக்கு மேல் காட்ட முடியவில்லை. அதைவிட ஆயிரம் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.அவர்கள் ஆங்கிலமும் தமிழும் ஒரே குடும்பம் என்று ஏன் சொல்லவில்லை? அலெக்சாண்டர் படை எடுப்புக்கு முன்னரே கிரேக்க மொழியில் உள்ள சுமார் 30 சொற்களை நான் பட்டியலிட்டேனே . கிரேக்கமும் தமிழும் ஒன்றா?

பாணினீயத்தில் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன! அதை இன்னும் ஒரு கட்டுரையில் தருகிறேன்.

tags– பாணினி, நான் கண்ட, தமிழ் அதிசயங்கள்,

–சுபம் —

Index of Articles of S.Nagarajan- September 2020 (Post .8767)

MORE PICTURES FROM SIVA PURANA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8767

Date uploaded in London – – 3 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Index of Articles of S.Nagarajan -September 2020

 1-9-20    8606  உதவிக் குறிப்புகள் – 13 (151-170)

 2-9-20     8611  பாரத ஸ்தலங்கள் – 11 

 3-9-20     8617 தீபாவளி பற்றி பாரதியார்! – 1 (ஞானமயம் 31-8-20 உரை)

 4-9-20     8623  தீபாவளி பற்றி பாரதியார்! – 2 (ஞானமயம் 31-8-20 உரை)

 5-9-20     8629  அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள்! – 1

 6-9-20     8634   அவதூதர் கொண்டிருக்கும் 24 குருக்கள்! – 2

 7-9-20     8640  Index of articles of S.Nagarajan – August 2020

 8-9-20     8644  தமிழ் அபிமானி  – மஹாகவி பாரதியாரின் விளக்கம்  – 1

            (ஞானமயம் 7-9-20 உரை)

 9-9-20     8650   தமிழ் அபிமானி  – மஹாகவி பாரதியாரின் விளக்கம்  – 2

            (ஞானமயம் 7-9-20 உரை)

10-9-20    8656  நுண்ணறிவு நான்கு வழிகளில் கிடைக்கும் – சுபாஷிதம்!

11-9-20    8661  பாரதியாருடன் ஒரு சந்திப்பு!

12-9-20    8668  மஹாபாரதம் எத்தனை வருடங்களில் இயற்றப்பட்டது?

13-9-20    8673  அற்புத சிகிச்சை முறை அகுபிரஷர் – 2

14-9-20    8679  புத்தர் வழியில்!

15-9-20    8684  காயத்ரி மந்திர மஹிமை என்ன – 1 (ஞானமயம் 14-9-20 உரை)

16-9-20    8689  காயத்ரி மந்திர மஹிமை என்ன – 2 (ஞானமயம் 14-9-20 உரை)

17-9-20    8694  அழகிய பெண்ணுக்கு எது ஆபரணம்? (சிந்தூர விதவா லலாடே)

18-9-20    8700  காயத்ரி மந்திர மஹிமை – 24 அக்ஷரங்களின் மஹிமை

19-8-20    8705  லட்சம் புதிர்கள் – 12 (201-250 சைவம்)

20-9-20    8710  புனர்வசு நக்ஷத்திர மஹிமை (ஞானமயம் 14-9-20 உரை)

21-9-20    8715  பிரார்த்தனையின் மூலம் கிடைத்த இனிய குரல்

22-9-20    8718  தாஜ்மஹால் தேஜோ மஹாலயமாக இருந்ததா? (ஞானமயம்   

             21-9-20 உரை)

23-9-20    8724  வேதங்கள் எத்தனை? இன்று அவை உள்ளனவா? (ஞானமயம்

             21-9-20 உரை)

24-9-20    8729  திருமூலர் யோகமும், பதஞ்சலி யோகமும்! (ஞானமயம்

             21-9-20 உரை)

25-9-20    8733   போதிசத்வர் – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!

26-9-20    8738  தெய்வீகப் பெண்களின் சாமுத்ரிகா லக்ஷணங்கள்!

27-9-20    8742  பழம் நீ அப்பா! (கொங்குமண்டல சதகம் பாடல் 22)

28-9-20    8746 18ஆம் நாள் போர் : சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!

29-9-20    8751  சங்க இலக்கியங்களுக்கு யார் எழுதிய விரிவுரை சரியானது?

            (ஞானமயம் 28-9-20 உரை)

30-9-20    8754   மஹரிஷி ஆபஸ்தம்பர் – 1

TAGS– INDEX NAGARAJAN, SEPTEMBER 2020,