Date: 7 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 18-19
Post No. 7069
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average
hits per day for both the blogs 12,000.
Date: 7 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 9-18 am Post No. 7068
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
‘சரஸ்வதி தேவியின் புகழ்’ என்ற கவிதையில் இப்படிக் கூறும் மஹாகவி பாரதியார் கலைமகளைக்
கொண்டாடிப் பாடிய பாடல்கள் நிறைய உள்ளன.
‘ஆணி முத்தைப் போலே அறிவு முத்து
மாலையினாளைத்’ தொழுதால் என்னென்ன பெறலாம்
என்று அவரே பட்டியலிட்டுத் தருகிறார்.
தான் என்னும் பேய் கெடும்.
பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படும்.
வான் என்னும் ஒளி பெறலாம்.
நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடும்.
ஊனங்கள் போக்கிடலாம்.
நல்ல ஊக்கமும் பெருமையும் பெறலாம்.
இதை விட வேறு என்ன வேண்டும்,
ஒரு மனித வாழ்க்கையில்?
அவ்ள் எங்கிருப்பாள் என்பதையும்
அவரே அருமையாக விளக்கி விடுகிறார்:
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்.
கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு
பாவலர் உள்ளத்து இருப்பாள்,
வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்.
முனிவர்கள் கூறும் கருணை வாசகத்தின்
உள் பொருளில் இருப்பாள்.
சாஸ்த்ர புராண நாடக மஹா காவ்யாதி
சஞ்சாரிணீம் என இலக்கியங்களில் சஞ்சரிக்கும்
அவளைப் புகழ்கிறது சரஸ்வதி ஸ்தோத்திரம்.
கவிஞர் தெய்வம் என்று பாரதியார்
கூறியதை அப்படியே பலர் வாழ்க்கையிலும் கண் கூடாகக் காணலாம்.
காலம் – பதினேழாம் நூற்றாண்டு.
ஸ்ரீ வைகுண்டத்திலே
பிறந்த குமரகுருபரருக்கு ஐந்து வயது வரை பேச்சு வரவில்லை. திருச்செந்தூர் முருகனைத்
தொழ அவர் நாவிலிருந்து கவி மழை அருவியெனப் பொழியத் தொடங்கியது. கந்தர் கலி வெண்பாவைப்
பாடினார்.
பின்னர் தல யாத்திரை மேற்கொண்டு
வட தேசம் சென்று காசியை அடைந்தார். அங்கு ஒரு மடத்தை நிறுவி இறைப்பணி செய்ய நினைத்தார்.
அதற்கென காசியை ஆண்ட பாதுஷாவைச் சந்திக்க விரும்பினார்.
பாதுஷாவிற்கோ ஹிந்துஸ்தானி மொழி
மட்டுமே தான் தெரியும்.
குமரகுருபரர் கலைமகளை வேண்டி
மனமுருகிப் பாடினார். பத்துப் பாடல்களைக் கொண்ட சகலகலாவல்லி மாலை மலர்ந்தது.
சகலகலாவல்லி ஆயிற்றே, அவள் அருளால்,
ஒரு கணத்தில் ஹிந்துஸ்தானி பாஷையில் வல்லவரானார் குமரகுருபரர்.
பாதுஷாவின் அவையில் நுழைந்தார்.
அரியாசனத்தில் அமரிந்திருந்த பாதுஷா அவரை நிற்க வைத்துப் பேசுவதைக் கண்ட குமரகுருபரர்
அரியாசனத்திற்கு நிகரான சரியாசனமாக ஒரு சிங்கத்தை வரவழைத்து அதன் மேலேறி அமர்ந்தார்.
பாதுஷா திகைத்தார்; பிரமித்தார்.
அவரது பல சந்தேகங்களைத் தீர்த்த குமரகுருபரர் அவருக்கும் அருள் பாலித்தார்.
பாதுஷா அவரது இறைப்பணிக்கு உதவிகள்
செய்ய முன் வந்தார். காசித் திருத்தலத்தில் காசி மடம் உதித்தது.
தென்னாடு வந்த அவர் திருப்பனந்தாளில் மடத்தை நிறுவினார்;
அது இப்போதும் செய்யும் இறைத்தொண்டை அனைவரும் அறிவர்.
திருமலை நாயக்கரின் அரசவையிலே
குமரகுருபரர் ஆற்றிய அற்புதங்கள் பல.
என்று அவர் சகல கலாவல்லியைத்
தொழுத பாடல் உள்ளிட்ட சகல கலாவல்லி மாலையின் பத்துப் பாடல்களையும் தினமும் ஓதினால்
அன்னை கலைமகள் அருளைப் பெறலாம் என்பது திண்ணம்.
சரஸ்வதி தேவியைத் துதித்தால்
அவள் அருளால் ‘தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகும்’ என்பது அவரது சத்திய வாக்கு..
கம்பரோ ‘ஆய கலைகள் அறுபத்து
நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை’யைத் துதித்தால் ‘கல்லும் சொல்லாதோ கவி’ என்று கேட்கிறார்.
30 பாடல்கள் கொண்ட சரஸ்வதி அந்தாதியைப்
பாடிய கம்பர் கலைமகளைத் துதித்தால் எதையும் ‘துணிந்து சாதிக்கலாம்’ என்ற பெரிய ரகசியத்தைப் பாடலிலேயே கூறுகிறார்.
அவர் பத்தாயிரம் பாடல்களால்
இராமாயணம் பாடித் துணிந்து சாதித்தது சரஸ்வதி அருளாலேயே என்பது இதனால் பெறப்படுகிறது.
தமிழகத்தில் சரஸ்வதிக்கு உள்ள
ஒரே கோவில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் கூத்தனூரில் உள்ளது.
ஒட்டக்கூத்தர் என்னும் பெரும்
தமிழ்ப் புலவர் இங்கு வழிபட்டு அன்னையின் அருளைப் பெற்று பெரும் கவிஞராகி ‘கவி ராட்சதன்’ என்ற பட்டப் பெயரையும் பெற்றார். அவரே பூந்தோட்டம் என்னும்
ஊரில் சரஸ்வதிக்குக் கோவில் அமைத்தார்; அதனால் இந்த ஊர் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆலயத்தில் வெண்ணிற ஆடையுடன்
வெண்தாமரையில் பத்மாசனத்தில் சரஸ்வதி தேவி வீற்றிருக்க அவர் வலது கீழ் கையில் சின்
முத்திரை உள்ளது. இடது கையில் புத்தகமுள்ளது. வலது மேல்கையில் அட்சர மாலையும் இடது
மேல் கையில் அமிர்தகலசமும் உள்ளது.
பழம் பெரும் புனித நூலான ரிக்
வேதத்தில் சரஸ்வதியைப் பற்றிய் பல குறிப்புகளைக் காணலாம்.
யாக்ஞவல்க்யர் என்ற பெரும் முனிவர்
சரஸ்வதியைத் துதிக்க அவர் முன் தோன்றி ஓம் என்பதைச் சொல்லி அனைத்து அட்சரங்களையும்
சரஸ்வதி அருளினாள் என மஹாபாரதம் சாந்தி பர்வம் தெரிவிக்கிறது.
சரஸ்வதி என்ற சொல்லுக்கு என்ன
பொருள்?
சரஸ் என்றால் நீர். ஆக சரஸ்வதி
என்பது தெய்வீக நதியான சரஸ்வதி நதியைக் குறிக்கிறது. அத்துடன் மட்டுமன்றி பெரும் நீர்நிலைகளையும்
குறிக்கிறது.
இன்னொரு பொருள் சரஸ் என்றால்
வாக்கு அல்லது பேச்சு;
வதி என்றால் தரித்திருப்பவள்.
ஆக சரஸ்வதி என்ற சொல்லுக்கு வாக்தேவி அல்லது வாணி என்ற பொருளும் ஏற்படுகிறது.
ஸ்வாமி சின்மயாநந்தர், ‘ஸ்வ’ என்றால் ஒருவரின் ஆன்மா என்றும் ‘சார’ என்றால் சாரம் என்றும் அர்த்தம் கூறி சரஸ்வதி என்றால் ஒருவரின்
ஆன்மாவின் சாரத்தைத் தருபவள் (She
who gives the essence (Saara) of our own Self (Sva)) என்று விளக்குகிறார்.
சரஸ்வதியின் வாகனம் ஹம்ஸம்.
சரஸ்வதியின் பூஜைக்கு உகந்த மலர்கள் வெண்தாமரை மற்றும் செந்தாமரை மலர்கள்.
தேவியின் ஆயிரம் திரு நாமங்களை
சரஸ்வதி சஹஸ்ரநாமமும் சரஸ்வதி அஷ்டோத்திரம் தேவியின் 108 திருநாமங்களையும் தருகின்றன.
சரஸ்வதிக்கு ஸ்ரீ என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இதனால் அனைத்தும் அருள்பவள் சரஸ்வதி என்பது பெறப்படுகிறது.
சகல கலாவல்லி மாலை, சரஸ்வதி
சஹஸ்ரநாமம், அஷ்டோத்திரம், சரஸ்வதி அஷ்டகம், சரஸ்வதி சூக்தம், சரஸ்வதி கவசம் மற்றும்
சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் ஏராளம் உள்ளன. இவற்றால் சரஸ்வதி தேவியை வழிபடலாம்; சுடர் விடும்
அறிவைப் பெறலாம்.
பாரத நாடெங்கும் சரஸ்வதி தேவிக்கான
ஆலயங்கள் பல உள்ளன. அவற்றில் குறிப்பித் தகுந்த சிலவற்றைப் பார்க்கலாம்.
பெஹோவா : ஹரியானா மாநிலத்தில்
குருக்ஷேத்திர மாவட்டத்தில் உள்ள ஊர் இது. இதன் பழைய காலப் பெயர் ப்ரூதக்.
மன்னன் ப்ருது, தான் இறக்கும்
சமயம் சரஸ்வதி நதிக் கரையில் இறக்க விரும்பியதால் அவனது மகன் அவரை அங்கு அழைத்துச்
சென்றான். அவர் இறந்தவுடன் அவரது சிரார்த்ததையும் அங்கேயே செய்தான்.
விஸ்வாமித்திரர் இங்கு தான்
பிரம்ம ரிஷி என்ற பட்டத்தைப் பெற்றார். இங்குள்ள சரஸ்வதி தேவியின் ஆலயம் மிகவும் புகழ்
பெற்றது.
மஹாபாரத காலத்திற்கும் முற்பட்ட
காலத்தில் அமைந்த நகர் இது.
பிலானியில் உள்ள சரஸ்வதி ஆலயம் : 1959ஆம் ஆண்டு ராஜஸ்தானில்
ஜி.டி. பிர்லாவினால் அமைக்கப்பட்ட ஆலயம் இது. ஐந்து பகுதிகளைக் கொண்ட இந்த ஆலயம்
70 தூண்களின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரா : உத்தரபிரதேசத்தில் மதுரா
நகருக்கு மேற்கே ஒரு சரஸ்வதி ஆலயம் உள்ளது. மஹாவித்யா தேவி ஆலயம் என அழைக்கப்படும்
இதன் அருகில் சரஸ்வதி குண்ட் என்ற குளமும் உள்ளது.
சிருங்கேரியில் உள்ள பெருமை
மிக்க சாரதா பீடம் விளக்க முடியா மஹிமை கொண்ட சரஸ்வதியின் பீடம்.
இன்னும் குஜராத், மஹராஷ்டிரம்,
பீஹார், காஷ்மீர், கர்நாடகம், மத்ய பிரதேஷ் உள்ளிட்ட மாநிலங்களில் சரஸ்வதி தேவிக்கெனவே
பிரத்யேக ஆலயங்கள் உள்ளன.
சரஸ்வதி தேவியை வசந்த ருதுவில்
மாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் பஞ்சமியில் நாடெங்கும் கோலகலமாகக் கொண்டாடுகின்றனர்.
இது சரஸ்வதி தேவி தோன்றிய தினமாக கருதப்படுகிறது.
ஒரிஸாவில் இந்த தினம் சரஸ்வதி
பூஜை தினமாகவும் ஆந்திர பிரதேச்த்தில் ஸ்ரீ பஞ்சமியாகவும் கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி தேவியின் சிறப்பு வழிபாடு
நவராத்ரியில் அமைகிறது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை கொண்டாடப்படும் பண்டிகை நவராத்ரி.
புரட்டாசி மாதம் அமாவாசை கழிந்த
பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடிய ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
காளி, லக்ஷ்மி, சரஸ்வதி ஆக மூன்று
தெய்வங்களும் மூன்று நாட்கள் வீதம் முறையே வழிபடப்பட்டு ஒன்பதாம் நாளான நவமி அன்று
சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.
துர்க்கா தேவி மகிஷாசுரனை எட்டு
நாட்கள் போரிட்டு ஒன்பதாம் நாளன்று நவமியில் வதம் செய்தாள்.
அடுத்த நாள் வெற்றிக்கான விஜய
தசமி நாளாக அமைகிறது
இசை, நாடகம் உள்ளிட்ட 64 கலையைப்
பயில்பவர்களும் தமக்கு உரிய சாதனங்களுடன் ஆய கலைகள் அறுபத்திநான்கினுக்கும் அதி தேவதையான
சரஸ்வதியை வழிபடுகின்றனர்.
விஜய தசமித் திருநாளை, அடுத்த மேல் நிலையை அடைவதற்கான
துவக்க நாளாகக் கொள்கின்றனர்.
மண்கண்ட வெண்குடைக்
கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்டளவிற் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல் கோடி உண்டேனும்
விளம்பில் உன் போல்
கண்கண்ட தெய்வம்
உளதோ சகல
கலாவல்லியே
என வாக் தேவியைத் துதித்து
வளம் பெறுவோமாக!
Date: 7 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 8-23 am Post No. 7067
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 7 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 7-56 am Post No. 7066
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 6 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 19-38 Post No. 7065
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 6 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 17-31 Post No. 7064
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 6 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 10-55 Post No. 7063
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Date: 5 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 20-50 Post No. 7062
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
Correction – change 4 into 4a; insert 4 in the column under No.2
ACROSS
1. -4 –
CULTURED, CIVILIZED
4.—5— A BIG
COMMUNITY IN KERALA; THEY ARE NOT BRAHMINS
6. – 8—
VISHNU+SHIVA NAME TOGETHER
7.—7—SPOON
THAT BRAHMINS USE FOR DAILY OBLATIONS
9. -5–
VILLAGE
DOWN
1.—7—FAMOUS
NAME OF VISHNU WITH WHICH HINDUS DO ACAMANAM
2. – 8— NAME
OF KRISHNA’S GRANDSON; PRADYUMNA’S SON.UNSTOPPABLE IS THE MEA NING.
Date: 5 OCTOBER 2019 British Summer Time uploaded in London – 18-51 Post No. 7061
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
அடைப்புக்குறிக்குள் உள்ள எண், அந்தச் சொல்லில் எத்தனை எழுத்துக்கள் என்பதைக் குறிக்கும்.
குறுக்கே
1. –4 எழுத்துக்கள்–பெண்கள் தலையில் அணிந்துகொள்ளும் வில்லை வடிவ ஆபரணம்
5.—2– சூரியன்
;ஆண்களின் பெயர்
6.—7– சொத்துக்களைப்
பங்கு போடுவது
9.—4—யு U வடிவ நாமம் போடும் ஐயங்கார்கள்
11. -4– ஒய்
Y வடிவ
நாமம் போடும் ஐயங்கார்கள்
12.—5– சோதனைச்சாலையில்
செய்வது.
XXX
கீழே
1. –5 எழுத்துக்கள்– ஏழு மராமரங்களியும்
துளைக்கும், புஸ்தகங்களிலும்
துளை போடும்
2.—4– ரத்தம் இப்படியானால் மாத்திரை தருவர்; மனம் இப்படியானால் வன்முறை வெடிக்கும்; மண் இப்படியானால் சாலையில் நடக்க
முடியாது
3.—3– குதிரை
4.—3– நல்வினையின் எதிர்ப்பதம்
7.—4– வலது நாசி
8.—3– இலைகளால் ஆன கோப்பை; பெரும்பாலும் புரோகிதர்கள்
பயன்படுத்துவர்.
10. -2– அடுப்பும் எரிக்கலாம்; தோல்வி அடைந்தவர்களின் முகத்திலும் பூசலாம்
12.—3– தோணி, பரிசல்
13.—2– பூங்கா, மரம்,கொடி, பூச்செடிகள் நிறைந்த இடம்
Date: 5 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 15-59
Post No. 7060
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use
them without permission; this is a non- commercial, educational blog; posted in
swamiindology.blogspot.com and
tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs
12,000.
Vedic Hindus
were predominantly agriculturists. The Rig Veda, the oldest religious book in
the world, was transmitted unaltered from generation to generation simply
through oral traditions. It furnishes us with a picture of the earliest Hindu
culture. Vedic people domesticated cows, horses and sheep. They knew the uses
of bronze, gold , copper and silver.
The Rig Veda
is regarded as a genuine document belonging to 1500 BCE or before that. Scholars
like Herman Jacobi and BG Tilak even place it between 4000 and 6000 BCE
In the RV,
we find mention of gold, silver, copper and bronze among metals. A hymn (1-162)
gives an account of the bronze cauldron slung over the fire by pot-hooks for
the cooking of meat. Gold was used for
ornaments like anklets, rings etc. Mention of metal vessels, tools and armour,
made mainly of bronze, affords evidence of the knowledge of metal working.
Some writers
believe that iron was known during the time of the Rig Veda . For according to
them the word ayas in the hymns of the Rig Veda definitely refers to iron in certain
instances. But many other scholars pointed out that AYAS is a generic term for
metals in the Vedic age and sometimes for gold.
In Tamil
also PON refers to gold, iron and five metals in gods’ (Pancha loka= Aim Pon) idols.
Even in Tamil Veda Tirukkural, it is used for both iron and gold.
Then again
in the Brahmanas and Upanishads, which were of later date than the Vedas we
find that the word ayas has been differentiated into lohita ayas or red metal
and Krishna ayas or black metal, representing copper and iron respectively. So Rig
Veda ayas is not iron and in the Indus valley civilization we don’t find
iron. It may be early Vedic
civilization.