திருமங்கையாழ்வார் இந்தத் தலத்தில் எம்பெருமானை ‘கள்வன்’ என்றே அழைத்து, அவர் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோவிலுக்குள், அஞ்சிலைவல்லி நாச்சியார் சமேதராகத் தென்கிழக்கு நோக்கி ‘ஆதிவராகப் பெருமாள்’ (கள்வப்பெருமாள்) ஆக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் என்பதைப் பாடியுள்ளார்.
சைவக் கோவில்களுக்குள் பாடல் பெற்ற பெருமாள் கோவில் (திவ்ய தேசம்) அமைந்திருப்பது சிதம்பரம் நடராஜர் கோவிலிலும், காஞ்சிபுரத்தில் உள்ள இந்தத் தலத்திலும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் மட்டுமே. முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
இந்த திவ்யதேசம் காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே ஒரு தூணுக்கு இடையில் சந்நிதி போன்ற ஒரு சிறிய இடத்தில் அமைந்துள்ளது. பூஜைகளை சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். மூலவர் ஸ்ரீ ஆதி வராகப் பெருமாள் (கள்வப்பெருமாள் ) நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கிய அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். தாயாருக்கு தனி சன்னதி இல்லை. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திரு நிலாத்திங்கள் துண்ட பெருமாள் தாயாருடன் இணைந்திருப்பதை போல், இத்தலத்திலும் தாயார் அஞ்சிலை வல்லி நாச்சியார் பெருமாளுடன் இணைந்திருக்கின்றார். முதலில் காமாட்சி அம்மனின் கருவறை சுவரில் உள்ள அரூப மகாலட்சுமியை வழிபட்ட பிறகே, கள்வப் பெருமாளையும் அஞ்சிலைவல்லி நாச்சியாரையும் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி, ஒருமுறை தனது அழகைப் பற்றி அகங்காரம் கொண்டபோது, விஷ்ணு அவளுக்கு சாபமிட்டார். சாபத்தால் தன் அழகை இழந்த மகாலட்சுமி, அதை மீண்டும் பெறுவதற்காக காமாட்சி அம்மனை நாடினாள். அப்போது, மகாலட்சுமியும் காமாட்சியும் பேசிக் கொண்டிருந்ததைக் கள்ளத்தனமாக விஷ்ணு மறைந்திருந்து கேட்டார். இதை அறிந்த காமாட்சி, விஷ்ணுவை ‘கள்வன்’ என்று செல்லமாக அழைத்தார். அதனால், இந்தக் கோவிலில் பெருமாள், கள்வப் பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
திருக்கள்வனூர் பெருமாளை வணங்குபவர்களுக்கு, இழந்த அழகு, செல்வம், கணவன்-மனைவி ஒற்றுமை ஆகியவை திரும்பக் கிடைக்கும். திருகள்வனூர் கள்வப் பெருமாளையும், காமாட்சி அம்மனையும் வேண்டிக் கொண்டால் அண்ணன் – தங்கை ஒற்றுமை சிறப்பாக அமையும் என்பத ஐதீகம். இங்கு காமாட்சி அம்மனே பிரதான தெய்வம் என்பதால், பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் ஏதும் கிடையாது. தனியாக விழாக்களும் கிடையாது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-5-2026 கல்கி ஆன்லைன்இதழில் வெளியான கட்டுரை!
மரணத்தைக்கண்டுஅஞ்சாதே –
புருஷனும்புருஷோத்தமனும் – ஶ்ரீசத்யசாயிபாபா
அருளுரை!
ச. நாகராஜன்
22-10-1963 அன்று பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய அருளுரை!
வயதான ஒரு மனிதன் மரணப்படுக்கையில் இருந்தான். அவன் கன்னட
தேசத்தைச் சேர்ந்தவன் என்று நினைக்கிறேன். கடைசி தருணம் வந்த போது
அவனால் ஏதோ வார்த்தைகளை உளறத்தான் முடிந்தது. அவனது மகன்களால்
அதை அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் உடனே ஒரு டாக்டரை
அழைத்து கொஞ்சம் ஆக்ஸிஜனைக் கொடுத்து அவர் பேசுவது என்ன என்பதைப்
புரிந்து கொள்ள வையுங்கள் என்று வேண்டினர். தான் சம்பாதித்த பணைத்தை
எங்கே வைத்திருக்கிறேன் என்பதை அவன் சொல்ல முயல்வதாக அவனது
பிள்ளைகள் அனுமானித்தனர். ஆகவே அவனது வார்த்தைகளைத் தெளிவாக
அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். அவர்களால் ஒரே ஒரு
எழுத்தை மட்டும் தான் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த எழுத்து ‘க’. ‘க’ என்றால் என்ன?
‘க’ என்றால் கனகாவா? அதாவது தங்கமா? அல்லது ‘கரு’வா? அதாவது
கன்றுக்குட்டியா? அல்லது ‘க’ என்பது கஞ்சாவா? அல்லது கஸப்ரிகாவா அதாவது விளக்குமாறா?
விளக்குமாறை அவர்கள் கொண்டு வந்து காண்பித்தபோது அவன் தலையை
அசைத்தான். இறந்தும் போனான். அவன் விளக்குமாறாகவே பிறப்பு எடுக்க
நேர்ந்தது!
அவனைப் போல் நீங்கள் இறக்கக் கூடாது. நீங்கள் பீஷ்மரைப் போல மரணம் அடைய வேண்டும். சாந்திபர்வத்தை அவர் பாண்டவர்களுக்கு உபதேசிக்கும் போது அவர் அம்புப்படுக்கையில் படுத்திருந்தார். கிருஷ்ணர் முன்னால் இருக்க அவர் மரணம் அடைந்தார். கிருஷ்ணரின் இதயத்தில் புகுந்தார். மரணம் என்பது
பயப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நல்ல சந்தோஷமான தருணங்களில் பேசக் கூடாத விஷயமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரணம் என்பது நல்லதோ
அல்லது கெட்டதோ இல்லை. உங்களுக்கு அதைப் பற்றிய விருப்பத் தேர்வே
கிடையாது. நீங்கள் அதை வரவேற்றால் அதைச் சீக்கிரம் பெற முடியாது. அதைக் கெட்டது என்று நினைத்துத் திட்டினால் அதைத் தவிர்க்கவும் முடியாது.
அது பிறந்து விட்ட தருணத்திலேயே தவிர்க்கமுடியாததாக ஆகி விட்ட ஒன்று.
பிறந்த தருணத்திலேயே சுடுகாட்டை நோக்கிய பயணமானது ஆரம்பித்து
விட்டது. சிலர் அதை சீக்கிரம் அடைகின்றனர். சிலர் சுற்றுப்பாதை வழியாகச்
சென்று சற்று தாமதமாக அடைகின்றனர். மனிதனுக்கு மனிதன் இது ஒன்று தான் வித்தியாசம். ஆனால் மனிதனோ மரணம் என்பது தூரத்தில் இருக்கும் ஒரு துயரம் என்று நினைத்து நடக்கிறான்.
அண்டைஅயலாரில் ஒருவரின் குழந்தை இறக்கும் போது அவரிடம் சென்று அது ஒரு கனவு என்றும், குழந்தைகள் பிறப்பதும் இறப்பதும் அவர்கள் நமது கொடுப்பினை என்றும் பழைய ஜென்ம கடன்களை உணரும் தருணம் அது என்றும் கூறித் தேற்றுகிறோம். ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையை இழந்து
தவிக்கும் போது இதே வாதங்களால் உங்களைத் தேற்றிக் கொள்ள
முடியவில்லை. இந்த ஆறுதல் மொழிகள் எல்லாம் மற்றவருக்கு மட்டுமே தான்!
அர்ஜுனன் கிருஷ்ணரை புருஷோத்தமா என்று அழைத்தான். ஏனென்றால் அவரே புருஷர்களில் உயர்ந்த புருஷராவார். புருஷா என்றால் உடல் என்ற – புரா- என்ற நகரிலே – உள்ளவன் என்று அர்த்தம். ஒவ்வொரு உடலிலும் புருஷன்
இருக்கிறான்.
பிரபஞ்சம் அனைத்துமே புருஷோத்தமனைத் தன்னுள் கொண்டிருக்கிறது.
ஆகவே இறப்பது எது என்றால் உடல் மட்டுமே தான்! அதன் உள்ளே இருக்கும் புருஷன் அல்ல. புருஷன் உங்களின் உள்ளே இருக்கிறான் என்ற நம்பிக்கை உங்கள் தீய எண்ணங்களையும்,தீய நாட்டங்களையும் புலன்களையும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
PDF Dream article is from the Ludwik Sternbach Felicitation Volume.
Lord Vishnu “sleeping” in Nepal
Recently I read an article about dreams in Milinda panha (Questions of Indo Greek King Menander/Milinda). I have translated it into Tamil and uploaded in these blogs. I am attaching the PDF English version here. Please see the attachments.
Hindus’ interpretation of dreams varies from Westerners like Sigmund Freud and Carl Jung (pronunciation Karl Young).
Tamils said that animals too dream in Sangam literature dated 2000 years ago. Sanskrit literature has prophetic dreams. Saivite literature like Periya Puranam has a lot of prophetic dreams. I post here the contents of My Book on Dreams to help research scholars.
***
Hindu tradition interprets dreams as significant, often prophetic messages derived from ancient literature like the Vedas and Tamil Sangam texts. These sources indicate that dreams are viewed as divine communication, omens for the future, and, as noted in 2000-year-old Tamil texts, experiences shared by animals.
MY ENGLISH BOOK ON DREAMS
Contents
First Part: Dreams in Hindu Literature
1.Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- 1
2.Dreams in Kalidasa Kavyas and Sangam Tamil Literature- Part 2
3.Tamil Hindus Explode Freudian Theory on Dreams
4. Dreams in Tamil Epic Silappadikaram
5.Dreams in Valmiki Ramayana
6. Role of Dreams in Tamil Saivite Literature
7.Ten “Inauspicious Deams”; Dreams in Vedas and Upanishads!
8.Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams
6.You will be born as a Dog Tamil Saint Tirumular Warns!
****
Book cover shows a painting of British painter Frederic Leighton. The painting of the sleeping beauty is in the Sydney Art Gallery.
*****
Foreword
Hindus and western scholars view dreams differently. Hindus believe that dreams come true under certain circumstances. They also find meaning in the dreams. Moreover, they believe that they foretell good or bad things. Vast literature in Hinduism supports these views. Western psycho analysts and psychologists think that they have no meaning, and they can’t predict future events. In their opinion dream is the reflection of suppressed desires or jumbled thoughts. Hindus were first in saying that no one can avoid dreams. So, they included a verse in their daily prayer to stop bad dreams.
Here is a collection of articles that I wrote in my two blogs in the past few years. I also believe that Carl Jung and Sigmund Freud are wrong in their conclusions. I have given reasons for this in my articles.
The second part of the book deals with Animals in Hindu literature. I have already published a few books in Tamil and English with many true animal stories and myths from Tamil and Sanskrit literature. These articles will be useful to researchers and religious believers
I welcome your comments on these topics.
S Swaminathan
(Pen Name- London Swaminathan)
May 2025
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
—subham—
Tags- Dreams, Milinda panga, my book on dreams, Ludwik Sternbach Felicitation Volume, Part two
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Picture: Mayadevi dream
மிலிந்த பன்ஹா என்ற நூல் பற்றி தமிழ்ப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, இலக்கிய உதயம் நூலில் விளக்கமாக எழுதியுள்ளார் ; இந்த நூலிலும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகள் உள்ளன. அதை இடைச் செருகல் என்று சிலர் சொல்லுவார்கள்.
மிலிந்த பன்ஹா = ‘மிலிந்தனின் கேள்விகள்’ என்று பொருள்படும்;
.உரையாடுபவர்கள்: மன்னர் மிலிந்தன் மற்றும் பௌத்த ஞானி நாகசேனர்.
நோக்கம்: பௌத்த தத்துவத்தின் கடினமான கருத்துக்களை, எளிமையான விவாதங்கள் மற்றும் உவமைகள் மூலம் விளக்குவது.
கனவு பற்றிய உரையாடல் பகுதியின் சில கருத்துக்களை இங்கு காண்போம் ; அதை ஆங்கிலத்தில் ஒருவர் எழுதியுள்ளார் இந்த நூலிலுள்ள 4, 5, 6, 7 ப்குதிகள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாக கருதப்படுகிறது; அதில்தான் கனவு பற்றிய உரையாடல் கிடைக்கிறது
***
இந்த நூலின் பின்னணி
மிலிந்த பன்ஹா (Milindapanha) ‘மிலிந்தனின் கேள்விகள்’ என்பது கி.மு. 100 – கி.பி. 200 காலகட்டத்தில் பாலி மொழியில் எழுதப்பட்ட மிக முக்கியமான பௌத்த இலக்கிய நூல். இது இந்தோ-கிரேக்க மன்னர் மிலிந்தன் (மெனாண்டர்) மற்றும் பௌத்த முனிவர் நாகசேனர் ஆகியோருக்கு இடையிலான உரையாடல் வடிவில் பௌத்த தத்துவங்களை விளக்குகிறது
மன்னரின் குழப்பங்களுக்கு நாகசேனர் தர்க்கரீதியான மற்றும் நகைச்சுவையான பதில்களை வழங்குகிறார், இது இறுதியில் மன்னரை பௌத்த மதத்தை ஏற்க வைக்கிறது.பௌத்த தத்துவங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த நூல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
***
1
மிலிந்தனின் கேள்வி :
மரியாதைக்குரிய நாக சேனர் அவர்களே ! இந்தப் பூவுலகில் ஆண்களும் பெண்களும் கனவு காண்கிறார்கள் ; கெட்ட கனவுகளும் நல்ல கனவுகளும் எல்லோருக்கும் வருகின்றன; முன்னால் ஒருவர் செய்த செயல்களையும், செய்யாத செயல்களையும் அதில் காண்கிறோம்; பல வடிவங்களில், பல வண்ணங்களிலும் கனவுகள் தோன்றுகின்றன. அருகிலும் தொலைதூரத்திலும் நடந்தவை தெரிகின்றன; சில இன்பம் பயக்கின்றன; சில அச்சுறுத்துகின்றன . கனவுகள் என்றால் என்ன ? இவைகளை யார் யார் காண்கிறார்கள் ?
நாகசேனர் பதில்
அவை நம் மனதில் தோன்றுபவை; ஆறு வகையான மனிதர்கள் கனவுகளைக் காண்கிறார்கள்; மன உறுதியில்லாதவர்கள்களும், கபம் உள்ளவர்களும், பித்தம் அதிகரித்தவர்களும், மனப்பயிற்சி செய்வோரும், தேவர் அருள்பெற்றோரும், எதிர்காலத்ததை அறிவோரும் கனவுகளைக் காண்கிறார்கள . வருங்காலத்தை உணர்த்தும் கனவுகளே உண்மையானவை; ஏனையவை பலிக்காத கனவுகளே !
எனது கருத்து – புத்தர் பிறக்கப்போவதை அவரது தாயார் பல சின்னங்கள் மூலம் அறிந்த கனவு மிகவும் பிரசித்தமானது ; பெளத்த சின்னங்களில் ஓவியமாகவும் சிற்பங்களாகவும் இடம்பெற்றுள்ளன ; ஆகவே அதை ஒட்டி இந்தப் பதில் அமைந்துள்ளது ; ஆனால் கனவுகளின் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் இந்துக்களே ; கடந்த சில நூற்றாண்டுகளில்தான் கனவுகள் பற்றி சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud: In his 1899 book, The Interpretation of Dreams), Carl Jund கார்ல யங் ஆகியோர் இது பற்றி விளக்கினார்கள்; அதற்கு முன்னர் கிரேக்க அறிஞர்கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் பேசினாலும் விஞ்ஞான விளக்கம் இல்லை. மனிதர்கள் எல்லோரும் கனவுகள் கண்டே ஆக வேண்டும் என்பது நவீன கொள்கை; இதை அறிந்த இந்துக்கள் வேத காலம் முதல் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்ற பிரார்த்தனையை தினசரிப் பிரார்த்தனையில் சேர்த்துள்ளார்கள்; பிராமணர்கள் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற துதிகளிலும் கெட்ட கனவுகளை அகற்றுங்கள் என்று வேண்டுகின்றனர் ;அதாவது நல்ல கனவுகள் வரட்டும் என்பதே பொருள்; ஆகவே கனவுகள் வந்தே தீரும் என்பதை முதலில் அறிந்தவர்கள் இந்துக்களே!
***
2
மிலிந்தனின் கேள்வி :
நீங்கள் சொல்லும் வருங்கலத்தை அறிவிக்கும் கனவுகளை யாராவது நமக்குக் கொண்டு வருகிறார்களா ? நாமாக அதை நாடுகிறோமா ? அல்லது அதுவாக நமக்கு ஏற்படுகிறதா ?
நாகசேனர் பதில்
மன்னனே ! கனவுகளை யாரும் நமக்கு கொண்டுவருவதில்லை; நாமாக அதை நாடி ஓடுவதும் இல்லை ; வருங்காலம் பற்றி ய செய்திகள் அதுவாக வருகின்றன; நீங்கள் கண்ணாடியில் முகத்தைப் பார்க்கிறீர்கள்; நீங்களாக அதற்குள் நுழையவில்லை ; யாரும் உங்களைக் கொண்டுபோய் நுழைக்கவும் இல்லை ; யார் பார்க்கிறார்க்ளோ அதன் பிரதிபலிப்பு அங்கே இருக்கிறது அது போலத்தான் கனவுகள்.
***
3
மிலிந்தனின் கேள்வி :
நாகசேனரே ! அப்படியானால் கெட்டது நடக்கப்போகிறது அல்லது நல்லது வரப்போகிறது என்று மனதுக்கு முன்னரே தெரியுமா?
நாகசேனர் பதில்
இல்லை மன்னா ! மனதுக்கு எதுவும் தெரியாது ; ஒருவர் காணும் நல்ல அல்லது கெட்ட கனவுகளை ஏனையோரிடம் சொல்கிறோம்; அவர்கள் அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள் .
***
4
மிலிந்தனின் கேள்வி :
மரியாதைக்குரிய நாக சேனர் அவர்களே !
உடலில் சில மச்சங்களும் வடுக்களும் தோன்றுகின்றன ; அவைகள் சாதகமானவை அல்லது பாதகமானவை, மகிழ்ச்சி தருபவை அல்லது துக்கம் விளைவிப்பவை, மானம் அல்லது அவமானத்தைக் கூறுபவை அல்லது புகழையோ இகழ்ச்சியையோ உண்டாக்குபவை என்றெல்லாம் சொல்கிறார்களே. அவைகளுக்கு அது தெரியுமா ?
நாகசேனர் பதில்
இல்லை மன்னா ! அவைகளை வருங்காலம் உரைக்கும் ஆரூடக்காரர் கர்களிடம் காட்டும்போது அவைகள் உடலில் தோன்றி ன்றியுள்ள இடத்தை வைத்துப் பொருள் கற்பிக்கிறார்கள் ; அது போலத்தான் கனவுகளும் ; மனதுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது; நல்லதோ கெட்டதோ நடக்கும் போதுதான் கண்ட கனவுகளையும் அவன் பிறரிடம் சொல்கிறான் ; அப்போது அவர்கள் அதற்கு விளக்கம் சொல்கிறார்கள்
***
5
மிலிந்தனின் கேள்வி :
கனவு காணும்போது ஒருவன் விழிப்பு நிலையில் உள்ளானா அல்லது தூக்கத்தில் இருக்கிறானா?
நாகசேனர் பதில்
கனவு காணும்போது விழிப்பும் இல்லை ; உறங்கவும் இல்லை ; தூக்கம் சொக்கும் நிலையில் சுய நினைவற்ற நிலையை அடைவதில்லை; தூங்கிய பின்னர் சுய நினைவற்ற நிலையை அடைகிறான் . அப்போது மனம் வேலை செய்யாது; அதனால் அவனுக்கு துன்பமோ இன்பமோ இல்லை; எளிதில் பாதிக்கும் மனம் இல்லாத, உறுதியான மனம், உடையோருக்கு இது பொருந்தாது . இருள் சூழ்ந்தவிடத்தில் கண்ணாடி யிலும் நிழல் விழாது ; முகம் தெரியாது ; அது போலவே மனதுக்கும் பாதிப்பு இல்லை ; அப்போதும் உடலுக்குள் மனம் இருக்கத்தான் செய்கிறது.
உடல்தான் கண்ணாடி;
உறக்கம்தான் இருள்;
மனம்தான் ஒளி ;
இன்னும் ஒரு உதாரணம்
மூடுபனி இருக்கும் பொது சூரிய கிரணங்கள் நுழைவத்தில்லை ஆனால் அப்போதும் சூரியன் ஒளியை வீசிக்கொண்டுதான் இருக்கிறான் ;அது போல மனம் சுயநினைவற்ற நிலையில் காண்பதில்லை .
உடல்தான் சூரியன் ;
உறக்கம்தான் மூடுபனி ;
மனம்தான் சூரிய ஒளி .
***
6
மிலிந்தனின் கேள்வி :
உறக்கத்துக்கு துவக்கம், இடை நிலை, முடிவு என்று ஏதேனும் இருக்கிறதா?
நாகசேனர் பதில்
பலவீனமும் களைப்பும் வேறு எதையும் நினைக்க முடியாத நிலையும் தூக்கத்தின் ஆரம்பம் ஆகும் .
பாதி உறக்கம் , பாதி விழிப்பு உள்ள நிலையானது குரங்குத் தூக்கம்ஆகும் — தமிழில் கோழித் தூக்கம்என்போம் – இது இடை நிலை ஆகும்.அப்போது கனவுகள் வரும். அந்த நிலையில் புலன் அடக்கமுள்ள ஞானமுள்ள மனிதன் பிரச்சனைகளை சிந்தித்து தீர்வு காண்கிறான் . விழிப்பு நிலையிலும் அரைத்தூக்கத்துக்குச் சென்று இதைச் செய்யலாம்.
எனது கருத்து
இங்கு மனம் என்று சொல்லும் இடத்தில் நாம் நமது உடல் என்று கொண்டால் எளிதில் பொருள் விளங்கும் ; அதாவது கனவுகள் உடலைப் பாதிப்பது இல்லை ; மிகவும் கஷ்டப்பட்டதாகக் கனவு கண்டுவிட்டு முழிப்பு வந்தவுடன் அப்பாடா ! நான் கண்டது கனவுதான் ; உண்மையில்லை என்று பெருமூச்சு விடுகிகிறோம்
இன்னுமொரு கருத்து:
இந்த அரைத்தூக்கம் என்பதை சிந்தனை என்று சொல்லலாம் ; நாம் பல நேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் சில சரியான முடிவுகளை எடுக்கிறோம்
வேறு விளக்கமும் இருக்கலாம் ; ஏனெனில் முற்காலம் அல்லது வருங்காலம் உரைப்போரிடம் கேள்வி கேட்டால் அவர்கள் தியான நிலைக்குச் சென்று நிகழப்போவதைச் சொல்வதை நானே கண்டுள்ளேன் ; இதை சிலர் விஷயத்தில் மட்டும் ஞானிகள் கையாளுகிறார்கள்
எடுத்துக்காட்டாக, காஞ்சி பரமாசார்ய சுவாமிகளிடம் எம் எஸ் சுப்புலட்சுமி விடை பெற்றுக்கொண்டபோது இப்போது போக வேண்டாம் என்று சொன்னவுடன் அவருக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது; சுவாமிகள் சொன்னதை மறுக்கவும் முடியாது; மறுநாள் கச்சேரிக்கு ஒப்புக்கொண்டதை மாற்றவும் முடியாது; ஆனால் மறுநாள் பத்திரிக்கைகளில் வந்த செய்தி இந்தியாவையே உலுக்கியது ; அரியலூரில் ஆற்றுவெள்ளத்தில் ரயில் அடித்துச் செல்லப்பட்டு பல நூறு பேர் ஜல சமாதி அடைந்தனர் ; உடனே ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி மந்திரி பதவியை ராஜினாமாச் செய்தார் ; அந்த ரயிலில்தான் எம் எஸ் சும் பயணம் செய்வதாக இருந்தது ; இது போல நூற்றுக் கணக்கான சம்பவங்கள் உண்டு ; ஞானி கள் தியானம் செய்யும்போது விழிப்பும் இல்லை; உறக்கமும் இல்லை ; வேறு எவர் என்ன சொன்னாலும் அவர்கள் காதில் விழுவதுமில்லை ; அவர்களுக்கு முன்னால் நாம் செய்யும் சேட்டைகளை அவர்கள் பார்ப்பதும் இல்லை ; இதைத்தான் நாக சேனர் விளக்குகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது
கனவு பற்றி பெரிய புராணம் முதலிய நூல்களில் கதைக்கு கதை வந்துகொண்டே இருக்கிறது. இந்துக்கள் போல கனவுகளை ஆராய்ந்தோர் இல்லை; மேலும் பிராய்ட் , யங் ஆகியோரின் கொள்கைகள் முழுவதும் சரி என்றும் சொல்வதற்கில்லை. இந்துக்களின் கனவு பற்றிய கொள்கையை யாரோ பிற்காலத்தில் நாக சேனர் உரையாடலில் சேர்த்துவிட்டார்கள்!!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 24
திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்) தலசயனப் பெருமாள்
பெயர்: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள்
அமைவிடம் ஊர்: மாமல்லபுரம்
தாயார் : ஸ்ரீ நில மங்கை நாயகி
மூலவர் : ஸ்தல சயனப் பெருமாள்
மண்டலம் : தொண்டை நாடு
உற்சவரின் திருநாமம் உலகுய்ய நின்றான்
***
இத்தலம், பல்லவ வேந்தர்களின் கலைக் களஞ்சியமான மகாபலிபுரத்தில் இருக்கிறது. சங்க காலத்திலேயே நீர்ப்பாயல், சலசயனம் என்று குறிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆலயத்தில் ஸ்தல சயனப் பெருமாள் கிடந்த திருக்கோலத்தில், நான்கு திருக்கரங்களுடன் தனது மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி என்ற தேவிமார்கள் எவரும் இல்லாமல், திருமார்பில் வக்ஷஸ்தல லக்ஷ்மி மட்டும் கொண்டு, தனது வலது, கீழ், மேல் என்ற இரண்டு திருக்கரங்களையும் மண்ணில் அழுத்தி வைத்து, ஆதிசேஷ பர்யங்கம் இல்லாமல், நிலத்தில் கிடந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
பொதுவாகப் பெருமாள் பாம்பணை மீது துயில் கொள்வார். ஆனால் இங்கு புண்டரீக மகரிஷியின் பக்திக்காக, வெறும் தரையில் பள்ளி கொண்டுள்ளார். இதனாலேயே இவருக்கு “ஸ்தலசயனப் பெருமாள்” என்று பெயர்.
108 திவ்ய தேசங்களில், உற்சவப் பெருமாள் தன் கையில் தாமரை மொட்டுடன் காட்சி தரும் ஒரே தலம் இதுதான்! இந்தத் தாமரையை அவர் மூலவரின் பாதத்தில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.
இங்கு பெருமாள் தனது வலது திருக்கரத்தை மார்பின் மீது வைத்து “உபதேச முத்திரை” காட்டியபடி தரிசனம் தருகிறார்.
பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் நிலமங்கைத் தாயார் சந்நிதியும் ஆண்டாள் சந்நதியும் உள்ளன. கோவில் வெளிச்சுற்றில், ராமர், ஆஞ்சநேயர், பூதத்தாழ்வார் , கருடன், ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர் என்று சந்நதிகள் உள்ளன.
ஒருகாலத்தில் மூன்று கோவில்கள் கட்டப் பட்டதாகவும், இரண்டு கோவில்கள் கடலில் மூழ்கிவிட்டதாவும் சொல்லப்படுகிறது. மூன்றாவது கோவில் இருந்த எம்பெருமான், சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன், பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினசரி பூஜை, திருவாராதனம் முதலியவை நடைபெறுகின்றன.
பூதத்தாழ்வார் அவதாரம் செய்தது இங்குதான்
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ விழாவில் ஐந்தாம் நாள் எம்பெருமான் அலங்கார பல்லக்கில் நாச்சியார் கோலத்தில் எழுந்தருளுகிறார். பூதத்தாழ்வார் சன்னிதியில் அவருக்கு மரியாதை நடக்கும். தொடர்ந்து, சுவாமியின் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.
புண்டரீக ரிஷி பாதம் பட்ட தீர்த்தத்தில், புஷ்கரணியில் மாசிமகம் அன்று தெப்பம் சிறப்பாக நடைபெறுகிறது. தை அமாவாசை, சரவண நட்சத்திரம், திங்கட்கிழமை மூன்றும் சேர்ந்து வரும் அன்று மஹோதன்ய தீர்த்தவாரி என்று எம்பெருமான் கடலில் சென்று தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்தலசயன பெருமாள் மற்றும் ஆதிவராகர் இருவருக்கும் திருமஞ்சனம் நடைபெற்று கடலுக்கு சென்று தீர்த்தவாரி வழங்குவார்கள்.
ஆதி வராக பெருமாள்
இந்த ஸ்தல சயன பெருமாள் கோவிலைத் தவிர, சிம்ம விஷ்ணு என்னும் பல்லவமன்னன் தனது பக்தியின் அடையாளமாக ஆதிவராஹருக்காக ஒரு குகைக் கோவில் அமைத்தான். இது மாமல்லபுரத்தில் உள்ள இன்னொரு வைணவ கோவிலாக இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த பத்து நூற்றாண்டுகளில், மாமல்லபுரத்தில், கடலின் சீற்றத்திற்குத் தப்பித்த இரண்டு வைணவ கோவில்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று ஸ்தலசயன பெருமாள் கோவில்.
இந்த திருக்கோவிலில் மூலவர் ஆதிவராஹர் வர்ண கலாப மூர்த்தியாக நின்ற திருக்கோலத்தில், மேற்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். இங்கு வராஹப் பெருமான் பிராட்டியை வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறார். ஆகையால் இவர் வலவெந்தை பெருமாள் ஆகிறார். இடது திருவடிகள் ஆதிசேஷன் மற்றும் ஆதிசேஷன் மனைவி மேலும் இருக்கிறது. எம்பெருமானின் இடது திருக்கரம் பூமிபிராட்டியின் மேல் அவரை ஆசுவாசப்படுத்தும் படியாக உள்ளது.
FOLLOWING PICTURES ARE TAKEN FRM OTHER WEBSITES; THANKS
ஸ்தல வரலாறு
புண்டரீக மஹரிஷி புஷ்பங்களைக் கொண்டு க்ஷீராப்தி நாதனை (திருப்பாற் கடல் எம்பெருமான்) பள்ளி கொண்ட கோலத்தை வழிபட எண்ணி ஒரு கூடை நிறைய பூக்களைப் பறித்து வைத்து கிழக்கு நோக்கிச் செல்கையில் சமுத்திரம் வழியை அடைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பக்தி மேலீட்டால் சமுத்திர நீரைக் கைகளால் இறைக்க ஆரம்பித்தார். இவரது பக்தியை மெச்சிய எம்பெருமான், காட்சி அளித்தார். புண்டரீக மஹரிஷி கை கூப்பியபடி எம்பெருமான் அருகில் உள்ளார். மல்லேஸ்வரன் என்ற ஒரு அரசன் ஸ்தல சயன பெருமாளுக்கு ஆயிரம் மலர்களைச் சார்த்தி வழிபட்டாபின்னர் அவன் சாபம் நீங்கியதாக இன்னொரு செவி வழி வரலாறும் உண்டு
ஸ்தல சயன பெருமாள் கோவில், ஆதிவராஹர் கோவில் என்று இரண்டு கோவில்கள் இருந்தும், இரண்டிற்கும் ஆழ்வார் பாசுரங்கள் இருந்தும் திருகடல்மல்லை என்று ஒரே திவ்யதேசமாக கருதப்படுகிறது.
திருச்சந்தவிருத்தம், நூற்று பத்தாவது பாசுரத்தில், திருமழிசையாழ்வார் நீர்பாயல் என்று குறிப்பிட்டு உள்ளார், ஆனால் அந்த பாசுரத்தை, மேல் உலகில் உள்ள திருப்பாற்கடல் திவ்யதேசத்திற்கு என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்.
பாசுரங்கள் (மங்களாசாசனம்): திருக்கடல் மல்லை தலசயனப் பெருமாள் மீது ஆழ்வார்கள் மொத்தம் 27 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
பூதத்தாழ்வார் அவதாரம்: இரண்டாம் ஆழ்வாரான பூதத்தாழ்வார் திருக்கடல் மல்லையில் (மாமல்லபுரம்) ஐப்பசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
இத்தலம் “சீதத்தார் முத்துக்கள் சேரும் கடல் மல்லை” எனப் போற்றப்படுகிறது. பூதத்தாழ்வார், புண்டரீக மகரிஷி, ஸ்தலசயனப் பெருமாள் ஆகிய மூவரையும் இந்த திவ்ய தேசத்தின் மூன்று முத்துக்கள் எனப் போற்றுவர்.
திருக்கடல் மல்லை பாசுரங்கள்
1088.
பார்ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணை* படு கடலில் அமுதத்தை பரி வாய் கீண்ட சீரானை*
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினை* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான்-கடல்மல்லைத் தலசயனத்தே. (2)
1089.
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு* பொய்ந் நூலை மெய்ந் நூல் என்று என்றும் ஓதி மாண்டு*
அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை*
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தை கரு முகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தை தொத்துஆர்சோலைக்*
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் ஏழாவது ரிஷி!
வீரத்துறவி இராம. கோபாலன் – சப்தரிஷிகளின் வரிசையில் ஏழாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியதோடு இந்து முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கி தமிழ்நாட்டில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியவர் வீரத்துறவி இராம. கோபாலன்.
1927ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி இராமசாமி-செல்லம்மாள் தம்பதியினருக்கு சீர்காழி சட்டநாதபுரத்தில் இராம.கோபாலன் பிறந்தார்.
இளமையிலேயே சங்கத்தின் பால் ஈடுபட்ட கோபால்ஜி சங்க பிரச்சாரக்காக ஆனார்; கும்பகோணத்திற்கு சங்கப் பணிக்காகச் சென்றார்.
1948ல் காந்திஜி கொலைப் பழி விணாக சங்கத்தின் மீது போடப்பட்டது. அப்போது திருநெல்வேலியில் பிரச்சாரக்காக இருந்த கோபால்ஜி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறந்த பேச்சாளராகவும் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்த கோபால்ஜி ஏராளமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர்; சிறந்த பாடகர். அத்தோடு சங்கத்திற்கே உரித்தான தனித்துவம் வாய்ந்த பாடல்களை, இசைக்குத் தக பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்து சரியான தமிழ் சொற்களை அமைத்து தமிழில் தந்துள்ளார் அவர்.
சங்க குடும்பங்களில் ஒன்றி குடும்பத்தில் தானும் ஒருவராக இணைவது அவரது பண்பு. தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்து 1008 முறை காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதை வாழ்நாள் பழக்கமாகக் கொண்டிருந்தார் அவர்.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் 300வது ஆண்டு விழாவை ஒட்டி 84 பள்ளிகளில் சிவாஜியின் வீரசரித்திரத்தைக் கூறி மாணவர்களின் மனதில் பதிய வைத்தார். அவர்.
தமிழ்நாட்டில் கன்யாகுமரியில் விவேகானந்தர் நினைவுப் பாறையில் மண்டபம் அமைக்கும் பணியில் ஏராளமான தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றை ஏக்நாத்ஜி ரானடேயுடன் உடனிருந்து தூள்தூளாக ஆக்கி மண்டபத்தை நிறுவுவதில் வெற்றியை நாட்டினார்.
1971ம் ஆண்டு திராவிடர் கழகம் தி.மு,கவின் பலத்தால் இராமர் படத்தை இழிவுபடுத்தும் ஊர்வலத்தை நடத்தியது. இதனை எதிர்த்து சேலம் திரு ராமசாமி உயர்நீதி மன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தார்.
சேலம் ராமசாமி அவர்களுக்கு உத்வேகமும் ஊக்கமும் ஊட்டி இந்து ஆலயப் பாதுகாப்பு மாநாட்டை மிகப் பெரிதாக நடத்த அவர் வழி வகுத்தார்.
இந்துக்களுக்காக ஒரு தனி அமைப்பு வேண்டும் என்பதை உணர்ந்த கோபால்ஜி 1980ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி கன்யாகுமரியில் பகவதி அம்மனைப் பிரார்த்தித்து ஒரு புதிய இயக்கத்தைத் துவக்கினார். அது தான் தமிழகத்தின் பேரியக்கமான இந்து முன்னணி ஆகும்.
1984ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி இரவு கோவையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு மதுரைக்கு ரயிலில் வந்தார் கோபால்ஜி.
அடுத்த நாள் ரயில் நிலையத்திலிருந்து வெளியில் வர மேம்பாலத்தில் ஏறி படிக்கட்டுகளில் இறங்கும் சமயத்தில் இஸ்லாமிய பயங்கரவாதி ஒருவன் அவர் பின் மண்டையில் கத்தியால் வெட்டினான். கோவை கோட்டைமேடு பாஷா என்று அறியப்பட்ட அவனால் வெட்டுண்ட கோபால்ஜி படிக்கட்டில் விழ உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தெய்வாதீனமாம உயிர் தப்பினார்.
தமிழ்நாட்டில் விநாயக சதுர்த்தி விழாவை பெரும் ஊர்வலங்களுடன் நடத்தி ஹிந்துக்களின் மத்தியில் ஒரு பெரும் விழிப்புணர்ச்சியை அவர் ஏற்படுத்தினார். காவல்துறை தந்த தடைகளை மீறி வீடு வீடாக, தெருத் தெருவாக பிரச்சாரம் செய்யும் உத்தியை அவர் மேற்கொண்டார்.
பல துறைகளிலும் நிபுணராக விளங்கிய அவரது நகைச்சுவை கலந்த பேச்சு, பளீர் பளீரென்ற பதில்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தின. அவரது புல்லாங்குழல் இசையைக் கேட்டு மயங்காதவரே இல்லை.
சங்க நிகழ்ச்சிகளிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும் அவரைப் பாடச் சொல்லும் போது உடனே இசைந்து பாட ஆரம்பிப்பார்.
‘என்று காண்போம் எங்கள் சிந்துவை’ என்ற அவரது பாடலைக் கேட்டு மனம் உருகாதவரே இருக்க முடியாது.
.துணிச்சலுடன் தேசப்பணிக்காக வாழ்நாளை அர்ப்பணம் செய்து கொண்ட அவரால் உத்வேகம் பெற்றோர் பல்லாயிரக்கணக்கானோர் என்றால் அது மிகையாகாது.
2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் காலமானார்.
இந்த நூலைப் படிப்போர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை
சங்கத்தின் சப்த ரிஷிகளைப் பற்றித் தொகுத்து ஏழு நூல்களையும் தமிழ் உலகிற்கு அளித்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
நாமக்கல்லைச் சேர்ந்த இவர் அங்கு சங்கம் வளர பல வருடங்களாக அரும் பணி ஆற்றி வருகிறார்.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 72 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Some scholars opined that Tiru Valluvar was a Jain, or a Buddhist; and even Christians tried to say that he was influenced by Jesus Christ; to explode the myth, Maraimalai Adigal and others organised a conference and fixed the date of Tiru Valluvar as 31 BCE. Though Tiru Valluvar belonged to fifth century CE, the Christian enthusiasts were silenced. That conference ended in heated exchanges and walk outs. Kural 50 is the nail in the coffin of those arguments.
Now Valluvar himself explodes the myth of Jain and Buddhist enthusiasts. He was a pukka Hindu and a great Sanskrit scholar. But it is true that he wanted to bring the Hindus, Jains and Buddhists together.
Jains and Buddhists never talked about God. But Tiru Valluvar placed invocation as the first chapter imitating Mr Mahadevan of Sangam literature. Mr Mahadevan ( his Tamil name is Bhaaratham paadiya Perunthevanaar) composed five poems on Lord Siva and placed them in the five Sangam books.
Here in the couplet 50, Valluvar says man becomes God in the Heaven. It proved he was an ardent Hindu. Moreover, he says man becomes God following Adi Sankara’s Advaita (Aham Brahmasmi. It is in the Upanishads dated 850 BCE).
Buddha and Mahavir are great philosophers. In the early stage, they never talked about God , rituals etc. But when Jainism and Buddhism started disappearing, scholars in those days included a lot from Hinduism. As a result, both the old religions split into many groups.
Hindus only believe Rama, Krishna ,Parasurama, even Buddha (Jayadeva made him ninth Avatar of Vishnu in Gita Govindam) were Gods. They all lived according to Smritis. So Kural 50 has several examples only from Hinduism.
Kural 47 also is against Buddhism and Jainism. In the early stages both Mahavir and Buddha hated Grihastasram (Householder status). They were against women joining the order in the beginning. Only Hindus support Sex, Family Life and House holder state. Valluvar follows Manu and says ‘staying as a Householder’ is the best because he supports Brahmachari, Vannaprastan and Sanyasin (Please Part 9 for this Kural).
**
Deivam is used two times in Chapter five, which is a Sanskrit word.
***
Part 10
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
************
Domestic Virtue Domestic Life
இல்லறவியல் – DOMESTIC VIRTUE இல்வாழ்க்கை – Married Life
*****
46.No need for a householder to yearn for other spheres of life, if he keeps the lustre of his soul undimmed amidst the ceaseless toil of his home — ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
46.Real happiness is achieved by following domestic virtues,
What then is gained by seeking any other path?— S M Diaz, I G of Police- Year 2000
***
46. If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain? What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?– GU Pope – GUP. Year 1886
***
46.Who turns from righteous family To be a monk, what profits he? — Suddhananda Bharathiyar- SB
***
46 If one could live virtuously in the house-holder’s state, what could one gainby preferring any other life – EVS
***
46.If home -life is lived always in Virtue’s way, what good is there in leaving house and home? – HAP
***
46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றிற் போஒய்ப் பெறுவது எவன்.
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
47.Among those who labour for thelife eternal the greatest are those who lead a virtuous family life– ANM+2
***
47.The householder who by right conduct has made a success of life
Is the best of all aspirants of virtue— SMD
*** 47. In nature’s way who spends his calm domestic days, ‘Mid all that strive for virtue’s crown hath foremost place. Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state. – GUP
***
47.Of all who strive for bliss, the great Is he who leads the married state. – SB
***
47.He who properly lives the life of a house-holder is the greatest among all those who strive for betterment – EVS
***
47.He who lives home -life worthily,
Shall first among all strivers be– HAP
*** 47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
48.Far holier and more patient than the recluse is the householder who helps the hermits in the observance of their duties, and himself swerves not from virtue— ANM+2
***
48.A virtuous householder who supports all other orders in their state,
Has more penance in him, than all the hermits— SMD
***
48. Others it sets upon their way, itself from virtue ne’er declines; Than stern ascetics’ pains such life domestic brighter shines. The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance. – GUP
***
48.Straight in virtue, right in living Make men brighter than monks praying. – SB
***
48.The – house-holder who swerves not from the path of virtue and helps those who perform penance in their right path deserves more praise than they?—EVS
***
48.Home-life that helps the saints and swerves from Virtue ne’er,
Endures more trials then lonely Hermit-life– HAP
*** 48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
49.Virtue rightly belongs to the married life; and other walks of life, if found blameless, due praise may claim– ANM+2
***
49.Family life is real virtue; it will be excellent too,
If it gives no room for adverse criticism— SMD
***
49. The life domestic rightly bears true virtue’s name; That other too, if blameless found, due praise may claim. The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it. – GUP
*** 49.Home-life and virtue, are the same; Which spotless monkhood too can claim– SB
***
49.It is the married state that is truly called a life of virtue. The other state is also good, if it is devoid of reproach from others – EVS
***
49.Home-life itself is virtue’s way;
The other two, is good, if men no fault can find– HAP
50. A God among men he will be looked upon, who fulfils the charities of home– ANM+2
***
50.A man who leads an ideal life in this world,
Will be ranked amongst the Gods in heaven — SMD
***
50. Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placed. He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven. – GUP ***
50.He is a man of divine worth Who lives in ideal home on earth– SB
***
50.A man leading his life as he ought to will be regarded as one of the deities in the heaven– EVS
***
50.He who lives home-life worthily on earth
Will win a place among gods who dwell in heaven – HAP
***
50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
To be continued…………………………….
Tags-neither Buddhist, nor a Jain, Tiru Valluvar, Tirukkural Encyclopaedia- Chapter Five (Kural 46 to 50)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சோளிங்கர்
மூலவர் : யோக நரசிம்மர் (அக்காரக்கனி )
உற்சவர் : பக்தவத்சலம், சுதாவல்லி
தாயார் : அமிர்தவள்ளி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
புராண பெயர் : திருக்கடிகை, சோளசிம்மபுரம்
ஊர் : சோளிங்கர்
திருமாலின் தசாவதாரங்களில் ஒப்பற்று உயர்ந்து நிற்பது நரசிம்ம அவதாரம். ஏனெனில் இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளார் என்ற உண்மையைக் கண் கூடாக வெளிப்படுத்திய அவதாரம் அது மட்டுமில்லாமல் சிறுவன் பிரகலாதனின் சொல்லை சத்தியமாக்க உதவிய அவதாரமும் ஆகும்.
பக்த பிரகலாதனுக்காக காட்சி கொடுத்த நரசிம்மரின் அவதாரத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென வாமதேவர் வசிஷ்டர் கஸ்யபர் அத்திரி மகரிஷி ஜமத்கனி கவுதமர் பரத்வாஜர் ஆகிய சப்த ரிஷிகளும் இங்கு வந்து தவமிருந்தனர். ரிஷிகளின் தவத்தினை மெச்சிய பெருமாள் அவர்களது விருப்பப்படி நரசிம்ம மூர்த்தியாக காட்சி கொடுத்தார்.
கோயில் சிறப்புகள் :
சோளிங்கர் சோளிங்கபுரம் என்று தற்போது வழங்கப் பெறும் இவ்வூர் பண்டைக் காலத்தில் திருக்கடிகை என்ற பெயரில் வழங்கப் பெற்றுள்ளது. இதனை பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதி பாசுரத்தின் மூலமும் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் மூலமும் அறியலாம்.
புராண நூலின் படி இம்மலையின் பெயர் கடிகாசலம் என்பதாகும். கடிகா என்பதும் கால அளவின் ஒரு கூறு. அசலம் என்றால் மாலை. நரசிம்ம பெருமாள் இரண்ய வதத்தை முடித்துக் கொண்டு பாற்கடலுக்கு செல்லும் வழியில் அகத்தியருக்கு கடிகை மாத்திரைப் பொழுது காட்சியளித்ததால் கடிகாசலம் எனப் பெயர் பெற்றது.
சிம்மபுரம் எனவும் அழைக்கப்பட்டது.
மலை மீது யோக நிலையில் நரசிம்மரும், அருகில் சிறிய மலையில் யோக ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்
1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் சந்நிதி உள்ளது . பெரிய மலை – 1,305 படிகள், சிறிய மலை – 400 படிகள்.
சோளிங்கர் ரோப்கார் வசதி :23 Mar 2024 — சென்னை அருகே சோளிங்கூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்வாமி கோவிலில் ரோப் கார் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுசோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ₹100 கட்டணத்தில் ரோப் கார் சேவை தொடங்கியதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருகை அதிகரித்துள்ளது
யோக நரசிம்மர் வீற்றிருந்த திருக்கோலத்தில் சாளக்கிராம மாலை அணிந்து கொண்டு சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன் இருகால்களையும் யோகாசனத்தில் மடித்து அமர்ந்தபடி யோகப் பட்டையுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு அக்காரக்கனி என்ற பெயரும் உள்ளது.
நாச்சியார் அம்ருதவல்லித் தாயார் என்ற திருநாமத்தோடு அழைக்கப் படுகிறாள். உலக உயிர்களைக் காப்பதற்கு உரிய முறையில் பெருமாளுக்கு உதவுவதால் அம்ருதவல்லி என வழங்கப்படுகிறாள். ஆரம்பத்தில் மலை ஏறும் வழியில் தாயாருக்கு தனிச் சன்னதி இருந்தது. சில காலத்திற்கு முன் அந்த சன்னதி சிதிலமடைந்த போது தாயார் மலை மீது கொண்டு தனி சன்னதியில் வைக்கப்பட்டாள். இங்கு தாயார், பெருமாள். பின்பு ஆஞ்சநேயர் என தரிசிக்க வேண்டும்.
அக்கார அடிசில் எனும் விசேஷப் பாயசம் நரசிம்மருக்கு படைக்கப் படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் பெருமாளுக்கும் தாயாருக்கும் பால் தயிர் தேன் சர்க்கரை நெய் ஆகியவற்றைச் சேர்த்து பஞ்சாமிர்தம் செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
இம்மலைக்கு கிழக்கே உள்ள சிறிய குன்றில் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்ல 406 படிகள் ஏறவேண்டும். இந்த ஆஞ்சநேயர் நரசிம்மரைப் போலவே யோக நிலையில் நான்கு திருக்கரங்களுடன் ஒரு கையில் சங்கு ஒரு கையில் சக்கரம் மற்ற இரு கைகளில் ஜெப மாலையுடன் அமர்ந்திருக்கிறார்.
தாயார் பெயரால் அம்ருத தீர்த்தம் என்றும் பெருமாள் பெயரால் தக்கான் குளம் மற்றும் பாண்டவ தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன.
உற்சவர் பக்தோசித பெருமாள் சுதாவல்லி அமிர்தவல்லி எனும் தனது இரு தேவியருடன் மலை அடிவாரத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் தனிக் கோவில் கொண்டுள்ளார்.
அமிர்த தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் ஆகியவை பக்தோசித பெருமாள் கோவில் அருகில் உள்ளன.
***
தொட்டாச்சார்யர்
இங்கு பிறந்த தொட்டாச்சார்யர் ஆண்டு தோறும் காஞ்சி சென்று வரதராஜப்பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை உடல் நிலை சரியில்லாத இவரால் காஞ்சி செல்ல முடியவில்லை. இங்கு உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி பெருமாள் கோயிலில் நடக்கும் கருட சேவையை நினைத்து பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். உடனே பெருமாள் கருட வாகனத்தில் இங்கு உள்ள நரசிம்ம குளத்தில் தரிசனம் தந்தார். இன்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் சோளிங்கர் தக்கான் குளத்திற்கு வருகிறார் .
***
திருவிழா:சித்திரை மாதம்: சித்திரை பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும். தங்க கருட சேவை திருத்தேர்.
***
சோளிங்கர் தலமானது திருத்தணி-சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணிக்கு 32 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்ல அரக்கோணத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. அரக்கோணம் புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. திருத்தணியில் இருந்து சுமார் 29 கி.மீ. தொலைவு. சென்னை, அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள கோயிலுக்கு உள்ளூர் வாகனங்களில் செல்லலாம்.
***
திவ்யதேச பாசுரங்கள்
1731.
மிக்கானை* மறைஆய் விரிந்த விளக்கை,* என்னுள்-
புக்கானை* புகழ்சேர் பொலிகின்ற பொன்மலையை*
தக்கானை கடிகைத்* தடங்குன்றின் மிசைஇருந்த*
அக்காரக் கனியை* அடைந்து உய்ந்து போனேனே. (2)
1736.
கண்ணார் கண்ணபுரம்* கடிகை கடிகமழும்*
தண்ணார் தாமரைசூழ்* தலைச்சங்கம் மேல்திசையுள்*
விண்ணோர் நாள்மதியை* விரிகின்ற வெம்சுடரை*
கண்ஆரக் கண்டுகொண்டு* களிக்கின்றது இங்கு என்றுகொலோ?
வரிசை எண்
கட்டண விளக்கம்
குறிப்புரை
கட்டணம்
1
திருமஞ்னம்
600.00
2
தளிகை புளியோதரை
200.00
3
தளிகை – சர்க்கரை பொங்கல்
400.00
4
அருள்மிகு ஆஞ்சநேயர் பிராத்தனை உற்சவம்
5750.00
5
தளிகை – ததியோதனம்
220.00
6
தளிகை – வெண்பொங்கல்
350.00
7
அருள்மிகு இராமர் பிராத்தனை உற்சவம்
5750.00
8
தளிகை – பானகம்
70.00
9
சுவாதி திருமஞ்சனம்
1500.00
10
வெள்ளிக்கிழமை அன்று அருள்மிகு அமிர்தவள்ளித்தாயார் பிராத்தனை உற்சவம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நர்த்தன விநாயகரைத் தரிசிக்கும்போது நமக்கு ஆனந்தம் ஏற்படுகிறது ;இவரைப் பற்றிய ஸ்லோகங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சோமாதேவர் எழுதிய கதைக்கடல் நூலில் இருப்பது பலருக்கும் தெரியாது. சோமதேவர் கதா சரித் சாகரத்தில் தொகுத்த கதைகள் அதற்கு முன்னரும் பாரத நாட்டில் இருந்தவைதான் ; அவர் அதை நமக்கு சம்ஸ்க்ருத மொழியில் தொகுத்தது நமது பாக்கியமே
அவர் நடனமாடும் கணபதியையும் சிவபெருமானையும் வருணித்துப் பாடியுள்ளார் . அதன் பெயர் ந்ருத்த கணபதி .
அதற்கு முன்னர் அவர் பாடிய கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் மாலை நேர சந்தியாகாலத்தில் நடனமாடியதைக் கண்ட விநாயகர் ஆனந்தமடைந்து துதிக்கையை உயரத்தூக்கி பிளிறல் சப்தத்தை உண்டாக்கி, தாளம் எழுப்பியதையும் சோமதேவர் நமக்கு ஒரு காட்சியாகத் தருகிறார்.
நடனமாடும் கணபதிக்கு எட்டு கைகள் ; அவற்றில் அவர் பாசம் அங்குசம், மோதகம், வளையம், தந்தம் முதலியவற்றை வைத்திருக்கிறார் ; சில கைகள் ஆயுதமின்றி இருக்கும்.
வங்களத்தையும் பீகாரின் பெரும்பகுதியையும் ஆண்ட பால வம்ச மன்னர்கள் பெளத்த மதத்தைப் பின்பற்றியபோதும் ஹிந்து தெய்வங்களையும் ஆதரித்தனர்; இதனால் அற்புதமான சிலைகளும் விக்கிரகங்களும் தோன்றின. இவைகளை தற்போது வங்க தேசத்தில் டாக்கா, ராஜசாஹி, மைநாமதி மியூசியங்களில் காணலாம் இவைகளில் நடனமாடும் கணபதி சிலை குறிப்பிடத்தக்கது ; பால வம்ச நர்த்தன கணபதி சிலை ஒன்று சென்னனை மியூசியத்தில் உள்ளது . தமிழ் நாட்டின் கோவில்களில் கூத்தனுர், சென்னை மயிலாப்பூர் கோயில்களிலும் நடனமாடும் வின்யாகரின் சிலைகள் இருக்கின்றன .
நர்த்தன விநாயகர் (நடனமாடும் கணபதி) விநாயகரின் 32 திருவுருவங்களில் ஒன்றாகும். இவர் மகிழ்ச்சியுடன் நடனமாடும் கோலத்தில், தனது வாகனமான மூஞ்சுறுவின் மீது அல்லது நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
நர்த்தன கணபதி ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும், கைகளில் பாசம், அங்குசம் மற்றும் அபய, வரத முத்திரைகளுடன் காட்சி தருவார்.
முருகப்பெருமான் சூரனை சம்கரிக்கச் செல்லும்போது, விநாயகர் நர்த்தன கோலத்தில் ஆசிர்வதித்ததாக தலபுராணம் கூறுகிறது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார்.
கங்கைகொண்ட சோழபுரம் ,திருச்சி மன்னார்புரம் நர்த்தன விநாயகர் கோயில், மற்றும் திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் சரஸ்வதி தேவி ஆலயத்தின் பிரகாரத்தில் ஸ்வயம்பு நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். மேலும், தருமபுரம் ஆலய கோஷ்ட மூர்த்தங்களிலும் நர்த்தன கணபதி இடம்பெற்றுள்ளார்; சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நர்த்தன விநாயகர் பெண் வடிவில் (கணேஷினி) ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளார்.
பல மாநிலலங்களிலும் நர்த்தன கணபதி சிலைகளும் விக்கிரககங்களும் உள்ளன .
கணபதி பற்றிய பாடல்கள் நமக்கு பக்தி இலக்கிய காலத்திலிருந்தான் கிடைக்கின்றன ; சம்பந்தரும் அப்பரும் கணபதி குறித்துப் பாடி இருப்பதால் 1400 ஆண்டுகளுக்கு மன்னரே தமிழ் நாட்டில் கணபதி வழிபாடு இருந்திருக்கிறது. காளிதாசானிலோ மாணிக்க வாசகரிலோ கணபதி இல்லை ;இவர்கள் காலத்தால் முந்தியவர்கள். அதற்காக கணபதி வழிபாடு இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. விநாயகரை முதலில் வணங்கும் கோட்பாடு இல்லை. சங்க இலக்கியத்திலும் கணபதி இல்லாவிட்டாலும் அவருடைய தந்தை சிவன் மீது ஐந்து கடவுள் வாழ்த்துப்பாக்கள் உள்ளன .
இத்துடன் நர்த்தன கணபதி படங்கள் இணைக்கப்பட்டுள்ளன .அவர் ஒரு காலைத்தூக்கிக்கொண்டு மூஞ்சுறு மீது தனியாகவோ ஆடுவதைப் பார்க்கலாம்; சம்ஸ்க்ருதத்தில் பவபூதி எழுதிய மாளவி மாதவ நாடகத்திலும் விநாயகர் இருப்பதால் தமிழுக்கும் முன்னரே அங்கு பிரபமாகிவிட்டதை அறியலாம் . முன் காலத்தில் பல நாடுகளிலும் கணபதி வழிபாடு இருந்தது. ஆயினும் அவை இந்தியாவைவிடக் காலத்தால் பிற்பட்டவைதான்.
Ganesh, Pala Dynasty, Bengal
–subahm—
Tags- நர்த்தன விநாயகர், தோன்றியது எங்கே?, நடனம் ஆடும், விநாயகர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சப்தரிஷிகள் வரிசையில் ஆறாவது ரிஷி!
ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி – அசாத்திய சாதகர் – சப்தரிஷிகளின் வரிசையில் ஆறாவது ரிஷி!
ச. நாகராஜன்
இன்று பாரத தேசத்தில் நாட்டுப்பற்றும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பு மனப்பான்மையும் கொண்ட ஆயிரமாயிரம் ஸ்வயம்சேவகர்களை உருவாக்கிய – உருவாக்கிவரும் அமைப்பு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்!
அற்புதமான இந்த அமைப்பை உருவாக்கியவர் பரமபூஜனீய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் அவர்கள்.
இந்தச் சங்கத்தில் வாழ்நாள் முழுவதும் பிரசாரக்காக இருந்து அரும் பணி ஆற்றியவர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி.
1924ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி கிருஷ்ணப்பா அவர்களுக்கும் சுந்தரம்மா அம்மையாருக்கும் மைசூரில் சூரியநாராயணராவ் பிறந்தார்.
பங்களூரில் ஶ்ரீராம் நகரில் சங்க ஷாகா ஆரம்பிக்கப்பட்ட போது அதில் சேர்ந்தார் சூரிஜி.
பரமபூஜனீய குருஜி கோல்வல்கர் 1942ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி பங்களூருக்கு சங்க நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகை புரிந்தார். அப்போது அவரைப் பார்த்த சூரிஜி அவரால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 1943ல் விஸ்தாரக்காகப் பொறுப்பேற்றார். 1946ல் பி.எஸ்.ஸி கணிதத்தில் பட்டம் பெற்றார். உடனே சங்க பிரச்சாரக்காக ஆனார். அன்றிலிருந்து அவர் மறையும் வரை சங்கம் வளர அரும்பாடு பட்டு பணியாற்றினார்.
1948ல் காந்திஜி கொலை வழக்கில் பொய் வழக்கு போடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் ஆகியோரின் உரைகளைக் கூறி சிறைச்சாலையை தவச்சாலையாக மாற்றினார் அவர்.
1969ல் உடுப்பியில் விஸ்வஹிந்துபரிஷத் சார்பில் பிரம்மாண்டமான மாநாடு நடைபெற்றது. அதில் செயலாளராகப் பணி புரிந்து மாநாட்டை பெரும் வெற்றிகரமான மாநாடாக ஆக்கினார் சூரிஜி.
1970ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தேதி தக்ஷிண க்ஷேத்ர சஹக்ஷேத்ர பிரசாரக்காக அவர் சென்னை வந்தார். அன்றிலிருந்து சென்னை நகரையே தலைமை மையமாகக் கொண்டு அவர் இயங்கலானார்.
1990ம் ஆண்டு சூரிஜி அகில பாரதீய சேவா பிரமுக்காகப் பொறுப்பேற்றார்.
சேவா பஸ்தி என்ற சேவை பெறும் பகுதிக்கான அமைப்பைத் தொடங்கி கிராமப்புறங்களிலும் சேவையைத் தொடங்க வைத்தார்.
ஸ்வாமி விவேகானந்தரின் நூல்களை ஆழப் படித்த காரணத்தினால் எந்தப் பகுதியையும் அவர் சுலபமாகச் சுட்டிக் காட்டி விளக்குவது அவர் பழக்கம்.
அவரிடம் கொடுக்கப்படும் ஆவணங்களை ஊன்றிப் படித்து பிழை திருத்தம் செய்வதில் அவர் வல்லவர்.
இத்தனை ஆண்டுகளில் சங்கத்தில் நீங்கள் கற்றது என்ன என்று ஒரு சிறுமி அவரைப் பார்த்துக் கேட்ட போது “இத்தனை ஆண்டுகளில் நான் கற்றது கீழ்ப்படிதல் தான்” என்றார் அவர்.
அனைவருக்கும் உத்வேகம் ஊட்டி ஒருவரைச் சிறந்த ஸ்வயம்சேவகராக ஆக்குவதே அவரது தனிச் சிறப்பாகும்.
அமெரிக்கா, டிரினிடாட், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, நார்வே, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்துள்ளார்.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரில் காலமானார்.
இந்த நூலைப் படிப்போர் ஶ்ரீ சூரியநாராயணராவ்ஜி அவர்களின் முழு வரலாற்றையும் படிக்க ஆவல் கொள்வர் என்பதில் ஐயமில்லை.
இந்த நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன் நமது பாராட்டுக்குரியவராகிறார்.
சப்தரிஷிகளில் முதல் ஆறு ரிஷிகளின் வரலாற்றைப் படித்தோர் அடுத்த ஏழாவது ரிஷியான இராம.கோபாலன் அவர்கள் பற்றியும் படிக்க முனைப்புடன் முயல்வர் என்பதில் ஐயமில்லை.
விஜயபாரதம் பிரசுரமாக வெளியாகியுள்ள இந்தச் சிறிய புத்தகம் 40 பக்கங்களைக் கொண்டுள்ளது. இதில் ஏராளமான படங்கள் ஆர்ட் பேப்பரில் அச்சாகி இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும்.
Picture– நூலைத் தொகுத்த திரு ஹரிஹரகோபாலன்
*****
நூல் பற்றிய விவரங்களை அறிய நாட வேண்டிய முகவரி:
விஜயபாரதம் பிரஸ்
12. எம்.வி.நாயுடு தெரு
சேத்துப்பட்டு, சென்னை – 31
விலை பற்றிய விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்; (Whatsapp) 89391 49466